<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T15:00:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502</id>
            <summary type="text">நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>


அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffa74ff-8842-42bf-badc-a7b2bc36060a/26-6a9437c7a37d1.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>



இந்த மொத்த எண்ணிக்கையில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை அங்கு 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p> 



தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p>



கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 72 மரணங்கள் பதிவாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-30T14:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492"></link>
            <id>https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492</id>
            <summary type="text">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

கடந்த 16 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகங்களினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b7ab4f-71ce-4b66-a9e0-26e50b38d28c/26-6a94149687358.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது 18 டிங்கிப் படகுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

திருகோணமலை இலக்கந்தை, நிலாவெளி, கல்குடா, கொக்குத்தொடுவாய், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளிட்ட பல கரையோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் கடற்படையினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிலாய், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித தொழிற்சாலையில் தீ விபத்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>


தீ பரவுவதைத் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beeab37-faec-4b8c-96f5-7a1d2c32491f/26-6a9427412dcd6.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
காகித தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
</p><p>
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T14:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T13:49:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tea-saves-five-lives-in-nepal-floods-1788096954"></link>
            <id>https://jvpnews.com/article/tea-saves-five-lives-in-nepal-floods-1788096954</id>
            <summary type="text">நேபாளத்தில்&amp;nbsp; தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.
&amp;nbsp;திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில்&nbsp; தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.
</p><p style="text-align: justify;">&nbsp;திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7d4358-4d62-40f3-936d-8869378191b6/26-6a9431bc1632c.webp' /></p><h2 style="text-align: justify;">தேநீர் இடைவேளை</h2><p style="text-align: justify;">இருப்பினும், ஒரு சிறு தேநீர் இடைவேளையால் இந்தப் பெரு வெள்ளத்தில் சிக்காமல் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்.</p><p style="text-align: justify;">
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர், நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர்.
</p><p style="text-align: justify; ">
நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 5-வது நாளில்தாடிங் என்ற மாவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">இந்த நிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதையும் இவர்கள் பார்த்துள்ளனர்.</p><p style="text-align: justify;">

அதிருஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தேநீர் இடைவெளி எடுத்துக் கொண்டதால் உயிர் தப்பியதாகக் கூறினர். 5 - 10 நிமிடங்கள் முன்சென்றிருந்தாலோ விரைவாகக் கிளம்பியிருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும்.


</p><p style="text-align: justify;">அவர்கள் 5 பேரும் இரு நாள்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த இரு நாள்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தையும் மேலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-30T13:36:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629c8904-38f8-4c9a-8db9-62718c59a8b7/26-6a942e8f7e6f0.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் கடல் அலைகள் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904"></link>
            <id>https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904</id>
            <summary type="text">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">
இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரை உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e9c463-171d-4724-af0d-cbe0ce0afaa6/26-6a9421e97eb34.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">இதன் காரணமாகச் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.</p><p style="text-align: justify; ">

எனவே, இக் கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினரும், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் இது குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை (31) ஆம் திகதிக்காகச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788</id>
            <summary type="text">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்காக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தலைமையில் ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11271297-85e2-4b35-8499-57df66018425/26-6a941d8d85b18.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது பல முக்கிய அபிவிருத்தி யோசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

ஹக்கல பிரதேசத்திற்கு உரித்தான விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக விசேட மையமொன்றையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அடிப்படை ஆய்வகமொன்றையும் (Basic Laboratory) நிறுவுவதற்கும், அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகள் அடங்கிய புதிய சூழலியல் வலயமொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அடையாளங்காணப்பட்ட அரிய மற்றும் உரித்தான தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காகப் பசுமைக்குடில்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அத்தாவர மற்றும் விலங்கு இனங்கள் பற்றிய தகவல்களைக் கற்றறிவதற்குப் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். </p><p style="text-align: justify; ">

இயற்கைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இயற்கையின் அமைதியை அனுபவித்துச் சுதந்திரமாக நேரத்தைக் கழிக்கக்கூடிய 'பூஜ்ய உமிழ்வு' (Zero Emission) வலயமொன்றாக இந்த வளாகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இயற்கைச் சூழலமைப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலையகப் பல்லுயிர் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-30T12:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inappropriate-act-by-two-youths-in-tamil-area-1788090205"></link>
            <id>https://jvpnews.com/article/inappropriate-act-by-two-youths-in-tamil-area-1788090205</id>
            <summary type="text">கந்தளாய், சீனிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கந்தளாய், சீனிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கந்தளாய், அக்போபுர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dae3f14-f1b3-44fb-b6f9-a22437363a63/26-6a94175e6704d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திகம்பதான மற்றும் சீனிபுர பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 33 வயதுடைய நபர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றைய நபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p style="text-align: justify; ">மேலும், சந்தேகநபர்கள் இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது</p>]]></content>
            <updated>2026-08-30T11:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259"></link>
            <id>https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259</id>
            <summary type="text">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார்&nbsp; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8efb59-5c80-4232-9da9-8bf1a0a28439/26-6a940fc543cbf.webp' /></p><h2 style="text-align: justify; ">அனுமதிப்பத்திரம்</h2><p style="text-align: justify; ">

உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.</p><p style="text-align: justify; ">

எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T11:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த மனித தலை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062"></link>
            <id>https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062</id>
            <summary type="text">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; ">


உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட தலை, தச்சர் பட்டறை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/685ac326-02c2-47f0-80c5-be7d93f5c0de/26-6a94072f7d305.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 8 மணியளவில் குறித்த தச்சர் பட்டறையின் உரிமையாளர் இத் தலையைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனைத் தொடர்ந்து மொரட்டுமுல்லை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.

</p><p style="text-align: justify; ">
மீட்கப்பட்ட மனித தலை பெரிதும் அழுகிய நிலையில் மிருகங்களால் கடிக்கப்பட்டவாறு காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T10:34:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8687c614-329e-4347-918e-33b0b15cd391/26-6a93d15b86352.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் படை</h2><p style="text-align: justify; "><br></p><p>
</p><p style="text-align: justify; "> 
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. </p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.</p><p style="text-align: justify; "> உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "> மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிக்கான நீள் பயணம் ; உறவுகளுக்கான உணர்வுபூர்வ பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (30) நடைபெற்றது.
</p><p style="text-align: justify; ">
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4b2736-7362-4c23-a3b1-4ff38a818ba2/26-6a93f916815e7.webp' /></p><h2 style="text-align: justify; ">பேரணி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
</p><p style="text-align: justify; ">
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
</p><p style="text-align: justify; ">
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054"></link>
            <id>https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054</id>
            <summary type="text">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழமை (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/584a9c33-aa43-4c97-9e7a-fc4cd95f1953/26-6a93f3a01e12f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

இதன்போது, இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

குறிப்பாக, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சுகாதாரமான சேவைகளை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify; "> பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T09:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
