<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T22:56:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–கண்டி வீதியில் கோர விபத்து ; மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-killed-while-riding-a-motorcycle-1783798971"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-killed-while-riding-a-motorcycle-1783798971</id>
            <summary type="text">கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4487383f-ec45-4056-90a1-fed9b22ef13e/26-6a529cbcc0886.webp' /></p><p>பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். </p><p>அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வா புயலின் பின் பேராதனையில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/train-service-begins-renovation-works-peradeniya-1783797026"></link>
            <id>https://jvpnews.com/article/train-service-begins-renovation-works-peradeniya-1783797026</id>
            <summary type="text">டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக கொண்டுவரப்பட்ட ஓர் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட தொடருந்தே இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6796e24-0fe3-47dc-9641-fc3c56ed26b8/26-6a5295244192b.webp' /></p><p>

டிட்வா புயலால் சேதமடைந்த தொடருந்து தண்டவாளங்களைச் சீரமைக்கத் தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த தொடருந்து பயன்படுத்தப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜித்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jitma-wins-bronze-medal-in-400m-race-1783795710"></link>
            <id>https://jvpnews.com/article/jitma-wins-bronze-medal-in-400m-race-1783795710</id>
            <summary type="text">சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜித்மா ஷெனாரி விஜேதுங்க வெண்கலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜித்மா ஷெனாரி விஜேதுங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p> </p><p></p><p>அவர் குறித்த போட்டியை 53.10 வினாடிகளில் நிறைவு செய்தார். 

ஜித்மா விஜேதுங்க தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80013870-c285-4e1c-8e40-7ec22bbb10c9/26-6a528fffbd099.webp' /></p><p>

இதற்கிடையில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அயோமல் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். </p><p>

அவர் குறித்த போட்டியை நிறைவு செய்ய 49.03 வினாடிகளை எடுத்துக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egombo-prison-inmates-to-attack-officers-recovered-1783794345"></link>
            <id>https://jvpnews.com/article/egombo-prison-inmates-to-attack-officers-recovered-1783794345</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26358d96-55fa-4051-8bfc-b91ffd3f7c87/26-6a528aab3a054.webp' /></p><p>முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.</p><p>

மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதட்டு காயத்திற்கு சிகிச்சை ; 18 மாத குழந்தை பலி ; விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-month-old-baby-dies-investigation-underway-1783793277"></link>
            <id>https://jvpnews.com/article/18-month-old-baby-dies-investigation-underway-1783793277</id>
            <summary type="text">இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அதன் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த 5 ஆம் திகதி, வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9adbd655-7dc0-4fe5-9817-60aa9141db12/26-6a52867ead42f.webp' /></p><p>இதையடுத்து, சிகிச்சைக்காக பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>எனினும், மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானதாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. </p><p>இருப்பினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தது.
</p><p>
தமது குழந்தையின் உயிரிழப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் அலட்சியம் இடம்பெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ayomal-wins-silver-medal-with-national-record-1783792199"></link>
            <id>https://jvpnews.com/article/ayomal-wins-silver-medal-with-national-record-1783792199</id>
            <summary type="text">23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p>
</p><p></p><p>இறுதிப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்த அவர், தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்ததுடன், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த இலங்கையின் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489369ed-f0c2-4a8e-be65-c0dea8ea01d2/26-6a52824924820.webp' /></p><p>இதற்கு முன்னர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க பதிவு செய்த 49.44 வினாடிகளே இலங்கையின் தேசிய சாதனையாக இருந்து வந்தது.
</p><p>
அயோமால் அகலங்கவின் இந்தச் சாதனை, இலங்கை மெய்வல்லுனர் வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T17:50:07+00:00</updated>
        </entry>
    </feed>
