<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T21:47:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் நிகழ்ந்த மருத்துவ சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-ai-assisted-medical-breakthrough-1784064370"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-ai-assisted-medical-breakthrough-1784064370</id>
            <summary type="text">கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக&nbsp; செய்தி வெளியாகியுள்ளது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d71ece6-d45e-4b59-8256-7f53133214b5/26-6a56a97481349.webp' /></p><h2>சத்திர சிகிச்சைகள்&nbsp;</h2><p>
இந்த ரோபோடிக் முறைத் தானாக இயங்காது, மாறாக சத்திர சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும்.
</p><p>
நிபுணர்கள் விசேட கன்சோல் மூலம் ரொபோவின் கைகளை இயக்கி, துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்த நவீனத் தொழில்நுட்பத்தினால் இரத்த இழப்பு குறைதல், சிறிய கீறல்கள், தொற்று அபாயம் குறைதல் மற்றும் சத்திர சிகிச்சை பிழைகள் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு விசா மறுக்கப்பட்டதா? வதந்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-denies-president-visa-rumours-1784062897"></link>
            <id>https://jvpnews.com/article/minister-denies-president-visa-rumours-1784062897</id>
            <summary type="text">ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e200f5e9-a254-4d48-8250-46dd5e184646/26-6a56a3b33e1d8.webp' /></p><h2>&nbsp; பிரான்ஸ் விஜயம்&nbsp;</h2><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><p>
ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கான விசா நிராகரிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் சில தரப்பினர் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய தகவல்களை யார், என்ன நோக்கத்திற்காகப் பரப்புகிறார்கள் என்பதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p></p><p>

பொதுமக்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் வகையிலான இத்தகைய போலியான தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் திட்டமிட்டு அவற்றைச் சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே 'இணையவழி பாதுகாப்புச் சட்டம்' தற்போது வரைவு செய்யப்பட்டு வருகின்றது. </p><p>சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இத்தகைய போலியான செய்திகளே காரணமாக அமைகின்றன.</p><p></p><p>
</p><p>

பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>இரு தரப்பினருக்கும் மிகவும் வசதியானதொரு திகதி மற்றும் காலப்பகுதி வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அத்துடன், இந்த விஜயம் தொடர்பாக எம்மாலோ அல்லது பிரான்ஸ் தூதராலயத்தினாலோ உத்தியோகபூர்வமாகத் திகதிகள் எதுவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-with-luxury-vehicle-1784061211"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-with-luxury-vehicle-1784061211</id>
            <summary type="text">மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
திங்கட்கிழமை (13) பகல் வேளையில் மாதம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்த இச் சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்ணின் வசம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e5ad1f-4363-4da2-9bce-e301050a7150/26-6a569d1d0f229.webp' /></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prasanna-ranatunga-travel-ban-temporarily-lifted-1784058235"></link>
            <id>https://jvpnews.com/article/prasanna-ranatunga-travel-ban-temporarily-lifted-1784058235</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daa84e8c-bd52-495d-968f-e511b46cfa29/26-6a56917d8607a.webp' /></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>


இதன்போது, பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>



இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரி, நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


இதனை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணையின் அடிப்படையில் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டதுடன், பிரசன்ன ரணதுங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போரின் கவனத்திற்கு ; விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665</id>
            <summary type="text">இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், உலக அமைப்பு மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' ஆகியவற்றுடன் இணைந்து நான்கு நாள் செயலமர்வு ஒன்றைக் கட்டுநாயக்கவில் ஏற்பாடு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57fce4-0318-4fda-9750-6e7cd3cac867/26-6a568b5b0c598.webp' /></p><h2>பராமரிப்பு</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சக பெரேரா, வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவளிப்போர் குறித்த முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
</p><p>
வீதிகளில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அந்த நாய்களின் முழுப் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு முறையாகப் பராமரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
</p><p>
1973இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால், அந்த காலத்தில் 370ஆக இருந்த வருடாந்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த 14 மரணங்கள் கூட அதிகம் என்பதால், நோய்த்தொற்றின் அடிப்படை ஊற்றையே கட்டுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
விஷர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாய்களுக்கே தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் இந்த நோயைச் சுமையின்றி ஒழிக்க முடியும் என்றார்.
</p><p>
எனவே, மனிதர்களுக்கு நோய் வராமல் தடுப்பதை விட, விலங்குகளிடமே நோயைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த முன்னெடுப்பின் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை விஷர் நாய்க்கடி அற்ற நாடாக மாற்றுவதே தங்களின் இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445</id>
            <summary type="text">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது.</p><p style="text-align: justify; ">


இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c281ec-3ef0-4760-8c2d-b9cf44a0aa3b/26-6a5682af1a021.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 16,610 ஆகும்.</p><p style="text-align: justify; ">

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (பிரித்தானியா) வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும்.


இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆக பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p>]]></content>
            <updated>2026-07-14T19:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732"></link>
            <id>https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732</id>
            <summary type="text">நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742553aa-356a-485d-ba9f-fdc9fb0f0408/26-6a567fe5d115b.webp' /></p><h2>சிறை தண்டனை</h2><p>
</p><p>
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதத்தில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.</p><p></p><p>
</p><p>
இது தவிர, கந்துவட்டி மற்றும் மிரட்டல் வழக்குகளிலும் இவருக்கு தனித்தனியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. </p><p>இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
</p><p>

அதேசமயம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ; பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-l-exam-notice-issued-by-exams-department-1784049997"></link>
            <id>https://jvpnews.com/article/a-l-exam-notice-issued-by-exams-department-1784049997</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509d9014-04e5-4283-91f4-62e430d92b1c/26-6a56714eecac2.webp' /></p><p style="text-align: justify; ">

 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-14T17:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; நண்பனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-night-incident-in-tamil-area-1784048834"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-night-incident-in-tamil-area-1784048834</id>
            <summary type="text">கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

A32 நெடுஞ்சாலையில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

A32 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35641c27-ed64-465d-a263-3a51f192543d/26-6a566cc3c9282.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இத்துயரச் சம்பவம்&nbsp; இரவு 10.00 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் A32 நெடுஞ்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பூநகரி பள்ளிக்குடா" சந்தியில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p></p><p>
</p><p>
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பூநகரி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுறோட்டில் பொலிஸ் அதிகாரியின் வெறிச்செயல் ; பிறந்தநாளன்று துடிதுடித்து பிரிந்த மனைவியின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>

டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாநது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4749da60-e0fe-4f79-8ae6-6b6b47e97e19/26-6a562ba26edf5.webp' /></p><p></p><h2>அடிக்கடி குடும்ப தகராறு&nbsp;</h2><p>
</p><p>
 எனினும் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார். </p><p>

இந்நிலையில், நேற்று (13) பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்றபோது&nbsp; கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வைத்தியசாலை அருகே கடுமையான வாக்குவாதம்&nbsp; ஏற்பட்டது.</p><p></p><p>
</p><p>
இதன்போது , மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். </p><p>

இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பயணமானார் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406"></link>
            <id>https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406</id>
            <summary type="text">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். </p><p style="text-align: justify;">

 

இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கவுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7951814-032f-4d78-a927-a848b595eefd/26-6a566348b6fc8.webp' /></p><h2 style="text-align: justify;">நட்புறவு</h2><p> </p><p style="text-align: justify;">

 

மேலும், இந்த விஜயமானது இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. </p><p style="text-align: justify;">

 

அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதே விமானத்தில் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

 

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-217 என்ற விமானத்தின் மூலம் இன்று இரவு 6.50 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T16:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு ; நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380"></link>
            <id>https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380</id>
            <summary type="text">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (14) விளக்கமளித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28321edc-ad86-4ed5-8e31-766866cbd783/26-6a565f468b200.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட பிரமுகர் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p style="text-align: justify; ">

 

அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:09:45+00:00</updated>
        </entry>
    </feed>
