<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T20:54:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான 19 வயது இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-dies-in-tragic-accident-1783974837"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-dies-in-tragic-accident-1783974837</id>
            <summary type="text">வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் பியகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, மற்றொரு முச்சக்கர வண்டியுடன் மோதி, பின்னர் காரொன்றில் மோதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் பியகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, மற்றொரு முச்சக்கர வண்டியுடன் மோதி, பின்னர் காரொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; ">

இவ்விபத்தில் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, முச்சக்கரவண்டி சாரதியான, கடுவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3937f9b8-ed98-4f7c-89f3-b5e54d1b5a76/26-6a554bb6a8fbb.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
மேலும், காரின் சாரதி காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய முச்சக்கரவண்டியின் சாரதி வெலிவேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மேலும், இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T20:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/northern-railway-services-return-to-normal-1783971301"></link>
            <id>https://jvpnews.com/article/northern-railway-services-return-to-normal-1783971301</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, இன்று (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருந்தது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689ca62-a0a3-4536-b7dc-71bbfcfa7c07/26-6a553de764aed.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;வடக்கு ரயில் பாதை</h2><p style="text-align: justify; "> 

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன. </p><p style="text-align: justify; ">

விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி ரயிலை நாளை முதல் அமலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T19:35:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை ; வியாபாரிக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthukudiyiruppu-trader-fined-1783969904"></link>
            <id>https://jvpnews.com/article/puthukudiyiruppu-trader-fined-1783969904</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நீர்கொழும்பிலிருந்து அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை கொண்டுசென்று மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (10) சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937d985a-8a62-454d-a34d-1b3665217fc3/26-6a55387242dee.webp' /></p><h2 style="text-align: justify; ">மிளகாய்த்தூள் கலப்படம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
அந்த பரிசோதனை முடிவுகளில், மிளகாய்த்தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பொருட்கள் நீர்கொழும்பிலிருந்து மொத்த விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டமை தெரியவந்தது.</p><p style="text-align: justify; ">

மேலும், பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி உரிய அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதனையடுத்து குறித்த வியாபாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த வியாபாரிக்கு 15,000 ரூபா அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன், தேவையான ஆவணங்கள், உற்பத்தி நிலையத்துக்கு உள்ளூராட்சி அமைப்பின் அனுமதி உள்ளிட்ட விடயங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T19:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ; அபராதம் வசூலித்து மதுவிருந்து நடத்தி கொண்டாடிய கிராமத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146"></link>
            <id>https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146</id>
            <summary type="text">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 இது குறித்து அந்த குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae59f98-4681-4220-ba91-68bdb3e18a5d/26-6a553194c6cd2.webp' /></p><h2 style="text-align: justify; ">மது விருந்து&nbsp;</h2><p style="text-align: justify; "> ஆனால் பஞ்சாயத்தை சேர்ந்த சில நபர்கள், இந்த விவகாரத்தை காவல்துறை வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், சந்தேகநபருக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனை கிராம பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்படி குற்றவாளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் 20,000 பணத்தை உடனடியாக செலுத்திய அவர், மீதம் உள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அவர் கொடுத்த 20,000 ரூபாய்பணத்தில் கிராமத்தினர் சிலர் மதுபானங்களையும், அசைவ உணவுகளையும் வாங்கி வந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> இதை அறிந்து பொலிஸார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மது விருந்து படுஜோராக நடந்து கொண்டிருந்தது. </p><p style="text-align: justify; ">இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடம் நேரடியாக புகாரைப் பெற்ற பொலிஸார், அந்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T18:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் ; இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/use-water-wisely-public-urged-1783965197"></link>
            <id>https://jvpnews.com/article/use-water-wisely-public-urged-1783965197</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1776cf71-8ab3-471e-a0c1-6aec58d5965a/26-6a55260f3b121.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் தட்டுப்பாடு</h2><p> </p><p style="text-align: justify; ">

எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

இதேவேளை, இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவில் உள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T18:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-sees-sharp-drop-in-birth-rate-1783963734"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-sees-sharp-drop-in-birth-rate-1783963734</id>
            <summary type="text">கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் பாரியளவில் குறைவடைந்துள்ளதுடன், மறுபுறம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் பாரியளவில் குறைவடைந்துள்ளதுடன், மறுபுறம் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
</p><p>
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற '2026 ஆரம்ப பிள்ளைப் பருவ தேசிய வாரம்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b1cf43-03e8-4ba8-9bb8-32cb322379ba/26-6a5520582e3bf.webp' /></p><h2>&nbsp;புதிய வேலைத்திட்டம்&nbsp;</h2><p>

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,



"நாட்டில் தற்போது ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, திருமணமாகாத பாடசாலை மாணவிகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் கணிசமாக உயர்வடைந்துள்ளது.</p><p></p><p>

</p><p>இவ்வாறான பின்னணியில், எவ்வித பாதுகாப்பும் இன்றி பிறக்கும் இந்த அப்பாவிப் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும்.</p><p> எனவே, இத்தகைய குழந்தைகளுக்குத் தேவையான விசேட பாதுகாப்பை வழங்குவதற்கென பிரத்தியேகமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சு மட்டத்தில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-s-death-brings-grief-to-tamil-area-1783962721"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-s-death-brings-grief-to-tamil-area-1783962721</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மன்னார் வீதியின் பள்ளிக்குடா சந்தியில் மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மோட்டார் சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் - மன்னார் வீதியின் பள்ளிக்குடா சந்தியில் மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85393a55-a504-459f-9e53-c03e2702ead8/26-6a551c638985e.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
அங்கு சிகிச்சை பலனின்றி தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T17:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடலில் சீன பிரஜை அதிரடி கைது ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-at-galle-face-1783960179"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-at-galle-face-1783960179</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டு சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 3,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc9625fe-c388-4ff8-8d69-f10ade1f527f/26-6a551274c0b23.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை ஆவார்.
</p><p>
மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் கோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T16:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் கைபேசியால் கணவர் மரணம் ; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810"></link>
            <id>https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொபைல் போன்) கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கைபேசியை கணவர் மீது வீசியுள்ளார். அது அவரது தலையில் பலமாக தாக்கிதில், அவர் படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72d5c2a-d0da-4acb-a883-10d4b9a79137/26-6a54d2845adcb.webp' /></p><h2>&nbsp;மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய&nbsp;சம்பவம் </h2><p>
</p><p>
காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமடைந்தது.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினர் அவரை அவசர சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றபோதிலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T16:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-brings-good-news-for-farmers-1783959140"></link>
            <id>https://jvpnews.com/article/government-brings-good-news-for-farmers-1783959140</id>
            <summary type="text">விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய வங்கி ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19dd24e-e1bd-4851-b25b-8de4c55c3551/26-6a550e658fd83.webp' /></p><p> </p><p style="text-align: justify;">

இந்த வங்கியின் ஊடாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரு இலட்சம் ரூபா உற்பத்திச் செலவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "> 

மேலும், சீனாவுடன் கலந்துரையாடி ஒவ்வொரு விவசாயத் திட்டத்திற்கும் 'விவசாய உபகரண மத்திய நிலையம்' ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T16:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hiv-cases-rise-sharply-across-sri-lanka-1783957586"></link>
            <id>https://jvpnews.com/article/hiv-cases-rise-sharply-across-sri-lanka-1783957586</id>
            <summary type="text">இலங்கையில் வருடத்திற்கு வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வருடத்திற்கு வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக விசேட நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பு சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்யும்போது புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதைக் காண முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c609e0e-451e-4d47-87f1-454efc726500/26-6a5508547b6db.webp' /></p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p> </p><p>ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே கூடுதலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், பெண்களை விட ஆண்களிடையேயே இந்தத் தொற்றின் வீதம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. </p><p>பாதுகாப்பற்ற உடலுறவு நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகள் போன்ற உபகரணங்களைப் பகிர்ந்துகொள்வதே இதற்கான முக்கிய காரணங்கள்.
</p><p>
எச்.ஐ.வி வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டால் அதனை 100 சதவீதம் முழுமையாகக் குணப்படுத்த முடியாது, குறிப்பாக இளம் வயதிலேயே இத்தொற்றுக்குள்ளாகுபவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் முறையான மருந்துகளையும், நீண்டகால மருத்துவ சிகிச்சைகளையும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
</p><p>

இவ்வாறான பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற தொற்றுகளைக் கண்டறிந்து, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு விசேட நடமாடும் வைத்தியசாலைத் திட்டமொன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முன்னோடி நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

பொதுமக்களின் தனியுரிமை மற்றும் விருப்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடமாடும் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அங்கு நிகழ்த்தப்படும் பரிசோதனை அறிக்கைகளின் இரகசியத்தன்மை 100 சதவீதம் பாதுகாக்கப்படும். </p><p>மேலும், இந்த நடமாடும் வைத்திய முகாம்களின் மூலம் ஏதேனும் தொற்று கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான வைத்திய ஆலோசனைகளையும், முறையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குவதற்குச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-13T15:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நம்ப வேண்டாம்; குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-text-messages-and-whatsapp-traffic-fines-1783948248"></link>
            <id>https://jvpnews.com/article/warning-text-messages-and-whatsapp-traffic-fines-1783948248</id>
            <summary type="text">போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்துமாறு அறிவுறுத்தும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் குறித்து பொலிஸ் வாகன சாரதிகளுக்கு எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து அபராதங்களை இணையவழியில் செலுத்துமாறு அறிவுறுத்தும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் செய்திகள் குறித்து பொலிஸ் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரில் அனுப்பப்படுவதாகத் தோன்றும் இந்தச் செய்திகள், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு தெரிவித்து, சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளையும் இணைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a07e13a-d1a1-4baf-92bc-62012f919426/26-6a54e3d97a78c.webp' /></p><h2>திணைக்களம்&nbsp; எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை&nbsp;</h2><p>
</p><p>


எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இவ்வாறான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளரான பிரதி பொலிஸ் பிரிவின் தலைவர் டபிள்யூ.பி.ஜே. செனதீரா தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


இந்த போலி இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை வழங்கவோ, அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.</p><p>



இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்படுவோர் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
