<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T21:46:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732"></link>
            <id>https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50abf134-0f55-407c-b346-8ce49e23e712/26-6a593b1dc3893.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T21:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவர்க்கார பொதிகளில் புதிய தகவல்கள் கட்டாயம் ; நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189</id>
            <summary type="text">சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf8cf91d-ce61-4f1b-aa73-6efc554a3fbe/26-6a594c86b9723.webp' /></p><p>இதன்படி, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிமுறைகளுக்கு அமைய, சவர்க்காரத்தின் உற்பத்திப் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளிலும் பிரதான சட்டகத்தில் (Main Panel) தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
மூன்றாவது மொழியில் உள்ள தகவல் பொதியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பொதியிடப்படும் போது குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த புதிய விதிமுறைகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடலுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல வகையான சவர்க்காரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு தயாரிப்பு தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குவதையும், சந்தையில் தரநிலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தான் தூக்கிய குழந்தையே தனக்கு எதிராக களமிறங்கும் என மெஸ்ஸி நினைத்திருப்பாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235"></link>
            <id>https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235</id>
            <summary type="text">கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கிய குழந்தை இன்று அவருக்கே எதிராக களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>2007 ஆம் ஆண்டு 20 வயதான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற ஒரு தொண்டு நிகழ்வின் போது ஐந்து மாத குழந்தையான லமின் யமாலை கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்த சம்பவம் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அந்த புகைப்படங்கள் உண்மையானவை எனவும், அவை 2008 ஆம் ஆண்டுக்கான தொண்டு நாட்காட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b71598-6bc4-470a-b342-9b951573246e/26-6a5948cc31ba4.webp' /></p><p>உள்ளூர் ஸ்பெயின் செய்தித்தாளான டயாரியோ ஸ்போர்ட், யுனிசெஃப் (UNICEF) உடன் இணைந்து இந்த தொண்டு முயற்சியை முன்னெடுத்திருந்தது. நிதி திரட்டும் நோக்கில் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களை உள்ளூர் குழந்தைகளுடன் இணைத்து புகைப்பட அமர்வு நடத்தப்பட்டது.
</p><p>
அந்த நிகழ்வில் பங்கேற்க லமின் யமாலின் குடும்பமும் வாய்ப்பு பெற்றது. மியாட்டரோவின் ரோகாஃபோண்டா பகுதியைச் சேர்ந்த யமாலின் குடும்பம், சீரற்ற முறையில் நடைபெற்ற தெரிவு முறையின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமால், எதிர்பாராத விதமாக மெஸ்ஸியுடன் இணைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸிக்கு குழந்தையுடன் எவ்வாறு பழகுவது என்பது தெரியாமல் சற்று தயக்கமாக இருந்ததாக புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் பின்னர் தெரிவித்திருந்தார்.</p><p>

மெஸ்ஸி அப்போது மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததாகவும், குழந்தையை எவ்வாறு தூக்குவது என்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p> பின்னர் யமாலின் தாயார் ஷீலா எபானா உதவி செய்து அந்த தருணத்தை எளிதாக்கியுள்ளார்.

காலப்போக்கில் அந்த புகைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் போது அவை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானது.
</p><p>
லமின் யமாலின் தந்தை மௌனீர் நஸ்ராவி, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதன் பின்னர் ரசிகர்கள், மெஸ்ஸி அப்போது அந்தக் குழந்தைக்கு தனது கால்பந்து திறமையின் "ஆசீர்வாதத்தை" வழங்கியதாக நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.</p><p>

இன்று ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள லமின் யமால், தனது இளம் வயதிலேயே உலக கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.</p><p> மறுபுறம், அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

ஒரு காலத்தில் மெஸ்ஸியின் கைகளில் இருந்த குழந்தை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கால்பந்து மேடையில் அவருக்கு எதிரான போட்டியாளராக நிற்பது, விளையாட்டு உலகின் மறக்க முடியாத சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குற்றச்சாட்டு ; முல்லைத்தீவு செய்தியாளர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569</id>
            <summary type="text">வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff745788-1e63-45a6-bd3b-0f245e250ed1/26-6a593a7aa6fee.webp' /></p><p>வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
</p><p>
இதற்கமைய, முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் மற்றும் மற்றைய நபர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306"></link>
            <id>https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abe9254-c557-444c-b040-84f447d3e18c/26-6a591a343eb29.webp' /></p><p>இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
</p><p>
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.</p><p>

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை மாவட்ட மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affe9873-e035-4cba-8dc3-a6e719dbccef/26-6a591a34e6707.webp' /></p><p>ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் காலதாமதத்தையும் வள விரயத்தையும் குறைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
</p><p>
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடிய வகையில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
சுற்றுலா அமைச்சின் கீழ் காணப்படும் நிர்மாணத் துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக விசேட தலையீடுகளை மேற்கொண்டு செயல்முறைகளை விரைவுபடுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
</p><p>
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்கள் மாநாடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>
</p><p></p><p>அத்துடன், தூதரக சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கடந்த காலங்களில் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. </p><p>அதற்கமைய, ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே இப்படியா... பெண் பொலிஸுக்கு ஆண் பொலிஸ் பாலியல் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893"></link>
            <id>https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்&nbsp; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 தம்புள்ளை 'கம் உதாவா' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது. சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலும்&nbsp; தெரியவருகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04da5904-f5b7-4a7f-9023-3c3b65672287/26-6a58b6ef50235.webp' /></p><p></p><h2>மது போதையில் வந்த மற்றுமொரு காவலர் பாலியல் தொல்லை</h2><p>
பாதுகாப்புப் பணியின் போது, அந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மற்றுமொரு காவலர், பெண் காவலரின் மடியில் வலுக்கட்டாயமாக அமர்ந்து அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.</p><p></p><p>

 இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலரும் அதே மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.</p><p> 

 கைது செய்யப்பட்ட காவலர், நீதிமன்ற மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடும் மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சக பணியாளருக்கே இத்தகைய இழிவான செயலைச் செய்த அந்த காவலர் மீது தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறும் இத்தகைய செயல்கள், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;</p><p>பாதுகாப்புப் பணியின் போது சக பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய்க்கும் அப்பால் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலானது உரத்தில் தொடங்கி உணவை அடைந்து, ஃபாரெக்ஸ் வரையில் எவ்வாறு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/oil-how-conflict-middle-east-having-ripple-effect-1784221329"></link>
            <id>https://jvpnews.com/article/oil-how-conflict-middle-east-having-ripple-effect-1784221329</id>
            <summary type="text">Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21e6669-b6b0-4671-954f-5e31ae0163ba/26-6a590e933f87a.webp' /></p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a>-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில்கொண்டு சந்தைகள் விலைகளை நிர்ணயித்தபோது,
​​எண்ணெய் சார்ந்த விஷயங்கள் பற்றியே அதிக விவாதம் நடந்தது.
</p><p>இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை கச்சா எண்ணெயைவிட மேலும்
அதிகமானவற்றைக் கொண்டு செல்கிறது, மேலும் எரிசக்தி மீதான ஒரு
குறுகிய பார்வை, அந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி உருவாகும்
பரந்த பேரியல் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறுகிறது.
</p><p>நைதரசன் அடிப்படையிலான உரங்களுக்கும் அவற்றை உற்பத்தி
செய்வதற்கான மூலப்பொருளான இயற்கை எரிவாயுவுக்கும்
மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகவும் இந்த
நீரிணை திகழ்கிறது. </p><p>உரச் சரக்குகளிலிருந்து உணவுப்பொருள்
விலையேற்றத்திற்கும், உணவுப்பொருள் விலையேற்றத்திலிருந்து DXY-
க்கும் ஏற்படும் பரிமாற்றத்தில்தான், சில்லறை மற்றும் பேரியல்
கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கான
உண்மையான பேரியல் கதை மறைந்திருக்கிறது.</p><h4>கச்சா எண்ணெய்க்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதி
</h4><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறத்தாழ 20% முதல் 30% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் போக்குவரத்தைச் செய்கிறது.
இதில், உலகளாவிய யூரியா ஏற்றுமதிகளில் சுமார் 35%, நைதரசன்
அடிப்படையிலான உரங்களுக்கான முதன்மை மூலப்பொருளான கடல்
வழியாகச் செல்லும் LNG-இல் சுமார் 20% ஆகியவை அடங்கும்.
</p><p>சந்தையின் கவனத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றாலும், அது&nbsp;யூரியாவையும் அமோனியாவையும் கச்சா எண்ணெய்க்கு இணையான
அபாயப் பிரிவில் வைக்கிறது.
</p><p>சவூதி அரேபியா, கத்தார், ஈரான், பஹ்ரைன், ஓமான் ஆகியவை இந்த
நீரிணை வழியாக ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடுகளாகும்.
இவற்றில், சவூதி அரேபியா மட்டும் உலகளாவிய அமோனியா
ஏற்றுமதியில் ஏறத்தாழ 16% பங்களிப்பை அளிக்கிறது. ஹோர்முஸைச்
சார்ந்துள்ள ஐந்து வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய உர
ஏற்றுமதியில் 8 முதல் 10 சதவீதம் வரை விநியோகம் செய்கின்றன.
</p><p>இது, இறக்குமதி செய்யும் 43 நாடுகள் வழியாக நடைபெறும் ஏறத்தாழ
13.5 பில்லியன் USD மதிப்பிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்குச்
சமமாகும்.
ஃபெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, நீரிணை
வழியாகச் செல்லும் போக்குவரத்தானது நெருக்கடிக்கு முந்தைய
காலத்தில் இருந்த அளவுகளைக் காட்டிலும் 95%-க்கும் மேலாகக்
குறைந்துள்ளது, மேலும் பிராந்திய யூரியா உற்பத்தி 55%-இலிருந்து 60%-
ஆகச் சரிந்துள்ளது.</p><h4>உரச் சரக்குகளிலிருந்து உணவு விலையேற்றம் வரை&nbsp;</h4><p>அதிக நைதரசன் தேவைப்படும் பயிர்களே முதலில் இந்த
நெருக்கடியால் முதலில் பாதிப்படைகின்றன. கோதுமை,
மக்காச்சோளம், அரிசி ஆகிய அனைத்தும் யூரியா மற்றும் அமோனியா
உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்துள்ளன, மேலும் இவற்றில் ஏற்படும்
எந்தவொரு பற்றாக்குறையும் பாவனையைக் குறைக்கும்படியோ
அல்லது சிறிய பரப்பளவில் பயிரிடும்படியோ விவசாயிகளைத்
தூண்டுகிறது. </p><p>இதன் விளைவாக, அடுத்த அறுவடைச் சுழற்சியில்
விளைச்சலில் ஏற்படும் மாற்றம் தாமதமாகவே வெளிப்படுகிறது; இது
நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பண்டங்களின்
விலைகளில் எதிரொலிக்கிறது.</p><p>எண்கள் ஏற்கனவே மாறத் தொடங்கிவிட்டன. ஃபெப்ரவரி மற்றும் மார்ச்
2026-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யூரியாவின் விலை மாதந்தோறும்
சுமார் 46% உயர்ந்துள்ளது என்றும், சில அளவுகோல்கள் ஒரு மெற்றிக்
தொன்னுக்குச் சுமார் 700 USD-ஐ எட்டியது என்றும் உலக வங்கி
தெரிவித்துள்ளது. </p><p>பெஞ்ச்மார்க் எகிப்திய கிரானுலர் யூரியாவும் அதே
காலகட்டத்தில், ஒரு மெற்றிக் தொன்னுக்கு சுமார் 400 USD-இலிருந்து
490 USD-ஆக உயர்ந்தது. கோதுமை விலை 13 சதவீதம் உயர்ந்தது,
மேலும் உலகளாவிய தானிய விலைக் குறியீடு 7 சதவீதம்
அதிகரித்தது.
</p><p>உலகளவில் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான Yara, நெருக்கடி
தொடங்கியதிலிருந்து யூரியா விலை 60%-இலிருந்து 70% வரை
அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆப்பிரிக்க இறக்குமதியாளர்கள்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இந்த
அதிர்ச்சிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள்
முழுவதிலும் உள்ள முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பயிரிடும்
கால அட்டவணைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்றன.</p><h4>உணவு அதிர்ச்சி கடுமையாகத் தாக்கும் இடம்&nbsp;</h4><p>
உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு
பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள
முடியாத பிராந்தியங்களே இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளன.
தெற்காசியா மிகவும் பாதிப்புக்குள்ளான தொகுதியாகத் திகழ்கிறது.
</p><p>இதில் இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 20%-ஐ வளைகுடா
நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான் தனது நாட்டில் நைதரசனை
உற்பத்தி செய்யக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் LNG-ஐ
ஏறக்குறைய முழுமையாகச் சார்ந்துள்ளது.
</p><p>சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்காவின்
சில பகுதிகளிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும்
இந்தச் சந்தைகளில் பலவற்றில் 90%-க்கும் அதிகமான உரம் இறக்குமதி
செய்யப்படுகிறது. </p><p>சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, குறைந்த&nbsp;வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் குடும்பச் செலவினங்களில்
உணவுக்காக ஏறக்குறைய 36% செலவிடப்படுகிறது; வளர்ந்த
பொருளாதாரங்களில் இது சுமார் 9%-ஆக உள்ளது. </p><p>இதன்
காரணமாகவே, மிதமான உள்ளீட்டு அதிர்ச்சிகள் கூட மிகப் பெரிய
விலையேற்றப் பதிவுகளாக மாறுகின்றன.
இதன் பேரியல் விளைவு நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான்.
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரிக்கும்போது, ​​மத்திய
வங்கிகள் பலவீனமான வளர்ச்சிக்கு ஏற்ப இறுக்கமான
கொள்கைகளைக் கையாளும் இக்கட்டான நிலையை
எதிர்கொள்கின்றன; இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் நடப்புக்
கணக்குகள் மோசமடைகின்றன.</p><p>மேலும், உள்ளூர் நாணயங்களின்
மீதான நம்பிக்கையும் சிதைகிறது. அதிக உணவு இறக்குமதி
விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி இருப்புகளின் காரணமாக,
எகிப்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை ஆகியவை
மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன.</p><p>
"சந்தை இதை ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறது,
ஆனால், இந்தத் தடையினால் ஏற்படும் பாதிப்புகளில் உர விநியோகம்
தொடர்பான அம்சம் தான், பல அறுவடைச் சுழற்சிகளிலும் தொடர்ந்து
தீவிரமடையக்கூடிய ஒன்றாக உள்ளது," என்கிறார்.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>நிறுவனத்தின் நிதி உள்ளடக்கத் தலைவர்
மைக்கேல் ஸ்டார்க். "இரண்டாம் வரிசை விளைவுகள் வளர்ந்து வரும்
சந்தைத் தரவை அடையும் நேரத்தில், மறுவிலை நிர்ணயம் விரைவாக
நடக்கும் மற்றும் அது அந்த நாணயங்களுக்குச் சார்பாக இருக்காது."&nbsp;</p><h4>வயல்களிலிருந்து DXY-க்கு
</h4><p>இங்குதான் பகுப்பாய்வுச் சங்கிலியானது அந்நியச் செலாவணிச்
சந்தையுடன் மீண்டும் இணைகிறது. இறக்குமதி செய்யப்படும் பிரதான
பொருட்களைச் சார்ந்திருக்கும் வளரும் சந்தைகளில் உணவுப்பொருள்
விலையேற்றம் துரிதமையும்போது, ​​டொலரின் மீது மூன்று விதமான
தாக்கங்கள் ஒன்றிணைகின்றன. </p><p>கொள்கை ரீதியான நடவடிக்கைகள்
விலை மாற்றத்திற்குப் பின்னரே செயல்படுவதால், மூலதனம் USD

ஆதிக்கம் செலுத்தும் சொத்துகளை நோக்கிச் சுழல்கிறது, நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை விரிவடைகிறது, மற்றும் மத்திய வங்கியின்
நம்பகத்தன்மை அழுத்தத்திற்கு உள்ளாகிறது. கடந்தகாலப் போக்கு சீராக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a14a0e0-985d-48e5-97f5-18178ff583d9/26-6a594733cb443.webp' /></p><p>2007-2008 ஆம் ஆண்டில் கச்சாப்
பொருட்களால் ஏற்பட்ட உணவுப்பொருள் விலை மாற்றத்தின்போது,
​​FAO உணவு விலைக் குறியீடு சுமார் 57% உயர்ந்தது, மேலும்
இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரங்கள் அந்தப் பாதிப்புகளைத்
தாங்கிக்கொண்டதால், டொலர் அவ்வப்போது பாதுகாப்பான
வலிமையைக் கண்டது. </p><p>2010-2011 காலகட்டச் சுழற்சியும் இது போன்ற
ஒரு போக்கைப் பின்பற்றியது; உணவுப் பொருட்களின் விலையில்
ஏற்பட்ட 40% உயர்வு, MENA முழுவதும் அரசியல் ஸ்திரமற்ற
தன்மையை ஊக்குவித்ததுடன், பாதுகாப்பான முதலீடுகளை நாடி
மக்கள் மீண்டும் USD சொத்துகளுக்குள் செல்லவும் வழிவகுத்தது.
தற்போதைய அமைப்பு அந்த வார்ப்புருவைப் பிரதிபலிக்கிறது. </p><p>ஃபெடரல்
ரிசர்வ் மேலும் வட்டி குறைப்புகளைச் சந்தைகள் விலக்கியதால், ஏப்ரல்
2026-இல் US நுகர்வோர் விலைக் குறியீடு -CPI 3.8%-ஆக உயர்ந்தது
மற்றும் டொலர் குறியீடு 98 மற்றும் 99-க்கு இடையில் நிலைபெற்றது.
</p><p>FAO எச்சரித்துள்ளபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில்
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரித்தால், குறிப்பாக USDINR,

USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
</p><p>ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><h4>வர்த்தகர்கள் கவனிக்க வேண்டியவை
</h4><p>இந்த இயங்கமைவை மையமாகக் கொண்டு வர்த்தகர்கள் தங்களை
நிலைநிறுத்திக் கொள்ளும்போது, ​​ஆரம்பகட்டச் சமிக்ஞைகள்
பண்டங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் மத்திய வங்கித் தரவுகளின்
குறுக்குச் சந்திப்பில் அமைகின்றன. எண்ணெயின் மீது மட்டும் ஒரு
கண் வைத்திருப்பது, உணவு மற்றும் நாணயச் சந்தைகளில் மெதுவாக
நகரும் மறுவிலை நிர்ணயத்தை வர்த்தகர்கள் கடந்து செல்ல
வழிவகுக்கும், இது வரலாற்று ரீதியாகத் தாமதமாக வந்தாலும்
செறிவான தாக்கங்களாக வெளிப்படும். கவனிக்க வேண்டியவற்றை
இங்கே காண்க:</p><ul><li>யூரியா, அமோனியா, DAP ஆகியவற்றின் ஒப்பீட்டு
விலைகளில், எகிப்திய கிரானுலர் யூரியா மிகவும்
கண்காணிக்கப்படும் நைதரசன் ஒப்பீட்டு அளவாக உள்ளது.
</li><li>நீரிணை வழியாகப் போக்குவரத்தில் உள்ள எண்ணிக்கை
மற்றும் ஏற்றப்பட்ட கப்பல் சரக்கு உட்பட பாரசீக
வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் கொள்கலன்
தரவுகள்.</li><li>உலக வங்கி மற்றும் FAO உணவுப் பண்டக் குறியீடுகள்,
குறிப்பாகத் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் துணைக்
குறியீடுகள்.</li><li>இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளின்
மத்திய வங்கி அறிக்கைகள்; இவற்றில் உணவுப் பொருட்களைச்
சார்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - CPI பதிவுகள்,
வழக்கத்திற்கு மாறான கொள்கை நகர்வுகளை மேற்கொள்ள
நிர்பந்திக்கக்கூடும்.</li><li>EM CPI வெளியீடுகளுக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தை
நாணயங்களுக்கு எதிரான DXY-இன் நடத்தை, இதில் எதிர்வினைச்
செயல்பாடு பெரும்பாலும் அடுத்த கட்டத்திற்கான சமிக்ஞையை
அளிக்கிறது.</li></ul><p>அந்நியச் செலாவணிக்குள்ளேயே, இறக்குமதியை அதிகம்
சார்ந்திருக்கும் வளரும் சந்தை நாணயங்கள், தங்கம் மற்றும் பரந்த DXY
ஆகியவற்றுக்கு எதிரான டொலர் ஜோடிகளில் இந்தக் கோட்பாட்டின்
மிகத் தெளிவான வெளிப்பாடுகளைக் காணலாம். கச்சா எண்ணெய்
தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது, ஆனால் பல
பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தின் ஒரு பாதையை மட்டுமே
அது பதிவு செய்கிறது.</p><p>செயலாக்கம் பல பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தைச் சந்திக்கும்
இடத்தில்
குறுகிய கால விநியோகமானது உற்பத்தித் திறனைக் காட்டிலும்
அரசியல் மற்றும் ஏற்பாட்டியல் அணுகலால் வடிவமைக்கப்படும்போது,
​​பாரம்பரிய விநியோக-தேவை மாதிரிகளைச் சார்ந்திருக்கும்
வர்த்தகர்கள் எதிர்பாராத விதமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்
அபாயத்தை எதிர்கொள்கின்றனர். </p><p>அணுகல் நிலைமைகள் விரைவாக
நிலை மாறக்கூடும், மேலும் எண்ணெய் மற்றும் உணவுடன்
தொடர்புடைய நாணய ஜோடிகள் குறுகிய, சீரற்ற ஏற்ற
இறக்கங்களுடன் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யலாம், இதனால் ஒரு
மாற்றத்தைக் கண்டறிவதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
இடையில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும்.</p><p>ஒரு மாற்றத்தை விளங்கிக்கொள்வது ஒரு விஷயம் எனில்,
உண்மையான சந்தை நிலவரங்களின்படி செயல்படுவது முற்றிலும்
வேறொரு விஷயம். புவிசார் அரசியல் சமிக்ஞைகள், கச்சா
எண்ணெய்க்கான அபாயக் கட்டுப்பாட்டில் செயல்பாட்டு
நிலைத்தன்மையை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன.</p><p>மேலும்
இதே தர்க்கம், அதே தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் தங்கம்,
பண்டங்களுடன் இணைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும்
சந்தைக் குறுக்கு நாணய ஜோடிகளுக்கும் பொருந்தும்.</p><p>
இங்குதான் <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> இந்த விவாதத்திற்குள் நுழைகிறது. பல பாதைகளைக்
கொண்ட மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ​​CFD வர்த்தகர்கள் கச்சா
எண்ணெயை மட்டும் கண்காணிப்பதில்லை. இதே விநியோக நிலைமை
அனைத்துச் சொத்து வகைகளிலும் பரவி வருவதால், அவர்கள் தங்கம்,
DXY, பண்டங்களுடன் தொடர்புடைய நாணயங்கள் மற்றும் வளர்ந்து
வரும் சந்தை ஜோடிகளையும் கண்காணித்து வரலாம்.</p><p> ஒரே நேரத்தில்
பல சந்தைகள் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யும்போது, ​​வர்த்தகச்
செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பரவல் ஸ்திரத்தன்மையும் ஒரு
வர்த்தகர் தனது அபாயத்தைக் கையாளும் முறையின் ஒரு
பகுதியாகின்றன. </p><p>வர்த்தகச் சூழல், நுழைவு அல்லது வெளியேறும்
புள்ளியில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தினால், ஒரு துல்லியமான
பேரியல் கணிப்பு கூட அதன் மதிப்பை இழக்கக்கூடும்.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> Terminal இந்தப் பணிப்பாய்வுக்குப் பங்களிக்கிறது. எண்ணெய்
விலையேற்றத்திலிருந்து உணவு விலையேற்றத்திற்கும், பின்னர்
நாணய மதிப்புகளுக்கும் பரவும் ஒரு மாற்றத்தைப் பின்பற்றி வரும் CFD
வர்த்தகர்களுக்கு, தொடர்பில்லாத கருவிகளுக்கு இடையில் மாறாமல்,
தொடர்புடைய கருவிகளைக் கண்காணிக்கவும், விலை மாற்றங்களை
ஒப்பிடவும், வர்த்தகங்களை மேற்கொள்ளவும் மற்றும் திறந்த வணிக
வாய்ப்புகளை நிர்வகிக்கவும் ஒரு தெளிவான வழி தேவைப்படுகிறது.</p><p>
பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், நிலை மேலாண்மை மற்றும்
கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒரே இணைய மற்றும்மொபைல் சூழலில் இருப்பதால், சந்தை நிலவரங்கள் வேகமாக
மாறும்போது, ​​பகுப்பாய்விலிருந்து செயலுக்குச் செல்வதற்கான
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதையை<a href="https://www.exness.com/" target="_blank"> Exness</a> Terminal ஆதரிக்கிறது.
</p><p>பரந்த நோக்கில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், விநியோக
மாற்றங்கள் ஒரே ஒரு சந்தைக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை.</p><p>
அவை பண்டங்கள், விளையேற்ற எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிக்
கொள்கை, FX ஆகியவற்றின் ஊடாகப் பயணிக்கின்றன. CFD
வர்த்தகர்களைப் பொறுத்தமட்டில், அந்தத் தொடர் சங்கிலியை
முன்கூட்டியே கண்டறிவது மட்டும் சவாலாக இல்லை. அந்த வர்த்தகச்
சங்கிலி நகரத் தொடங்கும்போது, ​​அவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட
உதவும் ஒரு வர்த்தகச் சூழலை உருவாக்குவதே அந்தச் சவாலாகும்.</p>]]></content>
            <updated>2026-07-16T17:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-colombo-suburbs-1784219044"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-colombo-suburbs-1784219044</id>
            <summary type="text">கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மேலதிக விசாரணை

காயமடைந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99367a14-51d5-4ce8-a8b2-837e4006844d/26-6a5905a5b4a99.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் செய்தி புதுப்பிக்கப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:24:14+00:00</updated>
        </entry>
    </feed>
