<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T06:36:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயும் தந்தையும் கொலை ; மகன் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-murdered-son-arrested-embilipitiya-1784010415"></link>
            <id>https://jvpnews.com/article/parents-murdered-son-arrested-embilipitiya-1784010415</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76337a4-dfc6-4bac-8cae-ee650d575ab3/26-6a55d6b07960a.webp' /></p><p> </p><p>

 சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இச்சம்பவம் குறித்து எம்பிலாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656"></link>
            <id>https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c731986-290b-485d-9a32-2c7d2cedc4b1/26-6a55bc4a43166.webp' /></p><h2>60 மில்லியன் ரூபாய் பெறுமதி</h2><p> 

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:08:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-386-shampoo-sachets-seized-in-mannar-1784009289"></link>
            <id>https://jvpnews.com/article/5-386-shampoo-sachets-seized-in-mannar-1784009289</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட 'தம்மென்னா' கப்பலுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த சாம்பூ பக்கெட்டுகள் கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7922815f-1f0a-4bda-839b-fbc182ab1993/26-6a55d24b01e87.webp' /></p><p>



கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பறிமுதல் செய்யப்பட்ட 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-14T06:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதின்ம வயது பேத்தியை தொடர்ச்சியாக வன்புனர்ந்த தாத்தா; சிறுநீரகத் தொற்றால் அம்பலத்துக்கு வந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051</id>
            <summary type="text">&amp;nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கம்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

54 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐந்து புதல்வர்களின் தந்தை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபரின் புதல்வர்களில் ஒருவரின் மகள் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8efc140-d683-49ab-9d20-dbb41d61c295/26-6a55c98d3c1a5.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயார்&nbsp; வெளிநாட்டில்</span></p><p>
</p><p>
 

வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளைப் பொலிஸார், சிறுமியின் தாத்தாவைக் கைது செய்து கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். </p><p>அவரை ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,</p><p></p><p> </p><p>சிறுமியின் தாயார் சுமார் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாகச் சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது, அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p> 
இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, தனது தாத்தா நீண்டகாலமாகத் தன்னைத் துன்புறுத்தி வருவதாகச் சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் பணிப்புரையின் பேரில், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T05:54:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள டெங்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



அதன்படி, நேற்று (13) வரை மொத்தமாக 69,951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> கடந்த 12ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கை 68,672 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a009cd05-c458-4703-8ace-1f8d45d3b0c5/26-6a55cb8305978.webp' /></p><p>



இந் நிலையில் டெங்கு பாதிப்பு அதிகளவில் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு மொத்தம் 33,127 நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>



மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,464 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அதன்படி 21,538 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-14T05:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரை ; ஒரே வாரத்தில் மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880</id>
            <summary type="text">&amp;nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட 'கஜபா வெட்டை' எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

சம்பவத்தில் ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb992652-ca1a-4dd6-aa06-80e16b04473f/26-6a55c4fa42edb.webp' /></p><p>
மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற யாத்திரிகர் உயிரிழந்திருந்த நிலையில் , கடந்த 8ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் பொத்துவில், குண்டுமடு பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்றுள்ள மூன்றாவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஐஸ் வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐஸ்&#039; போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&amp;nbsp; மன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐஸ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&nbsp; மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8841afbd-6096-4753-bece-a51477920707/26-6a55c2ae7b694.webp' /></p><p>

மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் போது, குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர். </p><p>

அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p>

வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். 

 தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்</p>]]></content>
            <updated>2026-07-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்; மீண்டும் அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a2172-1218-42e1-8555-b1341446a8ae/26-6a55bdd6e41ab.webp' /></p><h2>சவுதி அரேபியா&nbsp; வான்வழித் தாக்குதல்</h2><p> </p><p>

இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது.</p><p> 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423"></link>
            <id>https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423</id>
            <summary type="text">இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60d2c22d-c10e-44fd-bcbd-c6c099da5585/26-6a557ce184a50.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சம்பவம் தொடர்பாக இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T01:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழக போராசியர் தொடர்பான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பேராசிரியர் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது எனவும் இடைக்கால கட்டளை வழங்கி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குறித்த வழக்கின் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b82c7a-9fa0-4e6b-a3d2-ae85235b79e8/26-6a559085af6b3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
இதன்போது முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரைக்கும் அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றில் முன்னிலையாகி, தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் குற்றவாளிகளாக அவர்கள் கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை மனுதாரருடைய சட்டத்தரணி முன்வைத்த வாதத்தில் மூன்றாவது எதிர்மனுதாரரான பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த முகப்புத்தகத் தளத்தில் நீதவான் நீதிமன்றினையும், நீதவானையும் அவதூறு செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தமையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த எதிர் மனுதாரரின் பதிவு நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன் நீதவானின் இறையாண்மையை பாதிப்பதாகவும் கருதிய மன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரரின் சட்டத்தரணி குற்றவியல் சட்டத்தின் கீழ் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-14T01:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124"></link>
            <id>https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac80c9ad-6203-4768-8a37-a829812ec3c2/26-6a558d06d24d0.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-14T01:12:42+00:00</updated>
        </entry>
    </feed>
