<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T06:51:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938"></link>
            <id>https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938</id>
            <summary type="text">&amp;nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார்.


சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/211b812b-442d-4895-a1b8-ca5ee5ce58af/26-6a58789bb6959.webp' /></p><h2>நாக்கின் கீழ் ஏற்பட்ட&nbsp; கொப்புளம்</h2><p>

பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.</p><p></p><p>
</p><p>
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>

மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகின்றது.</p><p>]</p>]]></content>
            <updated>2026-07-16T06:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்; பொலிசார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112"></link>
            <id>https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. </p><p>

சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfaa8a-f226-4423-a8a2-a9daac70cf31/26-6a58756250b2b.webp' /></p><h2>இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை</h2><p> </p><p>

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது. </p><p>

சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது. </p><p>

புகாரின் பேரில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட குருநாகல் பொலிஸாருக்கு, அந்தக் காணொளிக் காட்சியில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் ஒருவன், அந்த காருக்கு அருகில் நடந்து செல்கின்றமை தெரியவந்தது. </p><p>

இருப்பினும், சம்பந்தப்பட்ட சிறுவன் தான் காருக்குத் தீ வைத்தது என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். 

குருநாகல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதோடு, மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். </p><p>

காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அரச தடவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகமும் எடுத்துள்ளது. </p><p>

எனவே, அதிகாரப்பூர்வ விசாரணைகள் முடிவடையும் முன், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸ் ளஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் வரை அதி அபாயகரமாக மாறும் நிலைமை ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843"></link>
            <id>https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843</id>
            <summary type="text">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"> 

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f493562b-e7d8-4361-b2ac-e0547fd71b41/26-6a587455bf68b.webp' /></p><h2 style="text-align: justify;">நோயாளர்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p style="text-align: justify;"> 

தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

டெங்கு பரவல் அதிகமாகப் பதிவாகும் வலயங்களை இனங்கண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T06:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை மிரள வைத்த ஆபத்தான நபருக்கு நேர்ந்த கதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974</id>
            <summary type="text">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


உப்புவெளி மின்சார நிலைய வீதியில் வைத்து&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ff38a-a1bf-42e6-99fd-aba6b4ff1244/26-6a5845fce7722.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify;">இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">


ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இக்குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">&nbsp;சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T05:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமானின் இழப்பை தாங்காது உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்; இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823"></link>
            <id>https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்பவர் டுகி என்ற குறித்த நாயை கடந்த 15 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471061d7-0675-4294-871b-0222c7fb218a/26-6a587058971ba.webp' /></p><h2>&nbsp;இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்</h2><p>
</p><p>
இந் நிலையில் உடல்நலக்குறைவால் பிரதீப் ஜெயின் காலமான நிலையில், அவரது உடலைப் பார்த்ததிலிருந்தே அந்த நாய் மிகுந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், இறுதிச் சடங்கின் போது, தனது எஜமானரின் அருகே அமைதியாக நின்றிருந்த அந்த நாய், ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , பிரதீப் ஜெயின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே, அவரது செல்ல நாயான டுகியும் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலர்ச் செடிகளுடன் இலங்கை வந்த பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999</id>
            <summary type="text">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8819e23c-fc70-451c-9c34-76fb1964e343/26-6a586d207877d.webp' />&nbsp;</p><h2 style="text-align: justify; ">மலர்ச் செடிகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
விமான நிலையத்தின் பசுமைப் பிரிவு வழியாக அவர் வெளியேற முயன்ற போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை மேற்கொண்டனர். </p><p style="text-align: justify; ">இதன்போது அவரது பைகளிலிருந்து மலர்ச் செடிகள் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு நிதிய அபராதமும் விதிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

 கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T05:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிச் செயல்களை நியூசிலாந்து ஒருபோதும் சகித்துக்கொள்ளாது ; இலங்கை நிறுவனத்திற்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-carporium-company-fraud-in-new-zealand-1784179905"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-carporium-company-fraud-in-new-zealand-1784179905</id>
            <summary type="text">&amp;nbsp; நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு இலங்கை நிறுவனம் இழப்பீடு வழங்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba487e5-1642-4c2c-b73a-f7f32189b408/26-6a586cc32ec08.webp' /></p><h2>மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது</h2><p>

கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
</p><p>
குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.</p><p></p><p>

 வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று நியூஸிலாந்து வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை விபத்தில் அரச ஊழியர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-employee-killed-in-ampara-accident-1784179282"></link>
            <id>https://jvpnews.com/article/government-employee-killed-in-ampara-accident-1784179282</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>



கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079cd391-23fa-43c4-859c-d8cdf61be176/26-6a586a5424ac4.webp' /></p><p>
</p><p>
 உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் எனஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

 விபத்துக்கான காரணம் குறித்துப் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-16T05:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக விளம்பரங்களால் இலங்கை இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-ads-pose-youth-risks-1784176691"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-ads-pose-youth-risks-1784176691</id>
            <summary type="text">தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான பிரசாரங்களே இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f22d95-d711-4b9a-b390-6180ed303582/26-6a586034ed6c3.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருட்களின் விலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இலங்கையில் தற்போது இரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை போதைப்பொருட்களின் (Synthetic Drugs) பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
செயற்கை போதைப்பொருட்களின் விலை உயர்வால், ஒரு நாளில் இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்கு சுமார் 8,000 ரூபா வரை செலவாகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்படி மாதத்திற்கு சுமார் 240,000 ரூபா தேவைப்படுவதால், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்தல், பெண்களின் நகைகளைத் திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப் பாகங்களைத் திருடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், போதைப்பொருள் பாவனை குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக எச்சரித்த அஜித் ரொஹன, இதனால் எப்போது வேண்டுமானாலும் பாரிய சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T04:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் மூன்று அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ; அதிகாரிகளின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mannar-legal-action-against-three-institutions-1784175511"></link>
            <id>https://jvpnews.com/article/mannar-legal-action-against-three-institutions-1784175511</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c2ad-de1a-4947-9852-bc7ca85d7250/26-6a585b98d3c18.webp' /></p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>
</p><p>
"சட்டம் அனைவருக்கும் சமமானது" என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதார துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735ff10a-0504-477a-96d6-8a41a1eaf842/26-6a585db07b387.webp' /></p><p>

மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,பொது சுகாதார பரிசோதகர்கள் ,முப்படையின் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>

நேற்றைய தினம் அரச அலுவலகங்கள் , விடுதிகள்,வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போது டெங்கு நுளம்பு பெறுகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-mayor-resigns-from-office-1784174797"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-mayor-resigns-from-office-1784174797</id>
            <summary type="text">நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்றைய தினம் பகல், நீர்கொழும்பு மாநகர சபையில் மாநகர சபை உறுப்பினர்களுடன் மேயர் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7524677-e0ac-4ebe-884f-2a9dcf4e0c85/26-6a5858ce84d7e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீர்மானம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஜூட் பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.</p><p style="text-align: justify; ">

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளர் நுவனி சுதுசிங்க மற்றும் மாநகர சபையின் அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேயர் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
</p><p style="text-align: justify; ">
அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேயர் ரொபர்ட் ஹின்கெந்த, தனது இராஜினாமா ஒரு தனிப்பட்ட தீர்மானம் என்று தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அதிகார அமைப்பினால் தான் எவ்வாறு மேயராக நியமிக்கப்பட்டாரோ, அதேபோன்று எதிர்காலத்தில் நீர்கொழும்பு நகரத்திற்கு புதிய மேயர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

தாம் பதவியேற்றபோது இருந்த நிலையை விட, மக்கள் நலன் சார்ந்த பாரிய மாற்றங்களை நகரத்தில் ஏற்படுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">தான் மேயராக பணியாற்றிய ஒரு வருடம் மற்றும் ஒன்றரை மாதங்கள் (13.5 மாதங்கள்) காலப்பகுதிக்குள், மாநகர சபையிலும் ஒட்டுமொத்த நீர்கொழும்பு நகரத்திலும் பல மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்க முடிந்தமை குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.

</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T04:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று தீவுகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-three-islands-face-major-change-1784172275"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-three-islands-face-major-change-1784172275</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை &#039;பசுமை சக்தித் தீவுகளாக&#039; (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை 'பசுமை சக்தித் தீவுகளாக' (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System - HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acd93fd-19c6-44a7-9db2-ff1dec749af4/26-6a584ef471c80.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T03:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் இரு இளைஞர்கள் செய்த செயல் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-on-expressway-in-sri-lanka-1784170913"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-on-expressway-in-sri-lanka-1784170913</id>
            <summary type="text">2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபரெக்க கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேக நபர்கள் அந்த இடத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கு முயன்றபோது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64d5433-491e-4bd5-b56f-03fabdc7cea2/26-6a5849a36eb65.webp' /></p><p style="text-align: justify; ">மேலதிக விசாரணை</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி, 2 சந்தேக நபர்களும், போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மேலதிக விசாரணைக்காக திஹகொடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய பொரெல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

திஹகொடா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-16T03:01:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757"></link>
            <id>https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுவதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa1d100-6328-4531-b741-e8d46fed5264/26-6a5831974e948.webp' /></p><p>
</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். </p><p>இதன்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காரின் அருகே நடந்து சென்றதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், அந்த சிறுவனே காருக்கு தீ வைத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நேரடி சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:19:28+00:00</updated>
        </entry>
    </feed>
