<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T10:49:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே இப்படியா... பெண் பொலிஸுக்கு ஆண் பொலிஸ் பாலியல் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893"></link>
            <id>https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 தம்புள்ளை 'கம் உதாவா' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04da5904-f5b7-4a7f-9023-3c3b65672287/26-6a58b6ef50235.webp' /></p><h2>மது போதையில் வந்த மற்றுமொரு காவலர் பாலியல் தொல்லை</h2><p>
பாதுகாப்புப் பணியின் போது, அந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மற்றுமொரு காவலர், பெண் காவலரின் மடியில் வலுக்கட்டாயமாக அமர்ந்து அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.</p><p>

 இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலரும் அதே மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.</p><p> 

 கைது செய்யப்பட்ட காவலர், நீதிமன்ற மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடும் மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சக பணியாளருக்கே இத்தகைய இழிவான செயலைச் செய்த அந்த காவலர் மீது தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறும் இத்தகைய செயல்கள், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;</p><p>பாதுகாப்புப் பணியின் போது சக பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T10:46:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஆனைவிழுந்தான் புகையிரத நிலயம் மீண்டும் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anawilundawa-railway-sub-station-reopen-1784197298"></link>
            <id>https://jvpnews.com/article/anawilundawa-railway-sub-station-reopen-1784197298</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த உப-நிலைய அதிபர் இராஜினாமா செய்ததை அடுத்து, புகையிரத திணைக்களம் அண்மையில் தற்காலிகமாக மூடத் தீர்மானித்திருந்தது. 

தற்போது அங்கு தற்காலிக நிலைய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பயணியர் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50bc34a-6c84-462e-b4bb-f60d4b2be598/26-6a58b0b3c4940.webp' /></p><h2> மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைகள்</h2><p>
</p><p>
கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த அக்குரல மற்றும் அன்ததொல ஆகிய புகையிரத உப-நிலையங்களின் சேவைகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. 

இன்றைய தினம் அல்லது நாளைய தினத்திற்குள் தற்காலிக நிலைய அதிபர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
</p><p>
இந்த தற்காலிக நியமனங்கள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>

நாட்டின் 25 உப-நிலையங்களுக்கு புதிய உப-நிலைய அதிபர்களை நியமிப்பதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. </p><p>எனினும், ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை.

திணைக்களத்தின் உயர் நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாகவே இந்த நியமனங்கள் தாமதமாகி வருகின்றன.</p><p></p><p>
</p><p>
 இதன் விளைவாக, தற்போது பணியில் உள்ள நிலைய அதிபர்களைக் கொண்டு கூடுதல் செலவில் இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-16T10:20:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; ஜூலை 30 வரை கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-teachers-1784196587"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-teachers-1784196587</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. 

இதற்கமைய, தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை <a href="http://nstt.moe.gov.lk" target="_blank">http://nstt.moe.gov.lk</a> என்ற இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85fa8b9-2bb7-4855-afb9-2f2d45b03acf/26-6a58adec9dfc1.webp' /></p><h2 style="text-align: justify; ">இடமாற்றம் விண்ணப்பம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை 2026 ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T10:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாய் புற்றுநோயால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பு ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-die-daily-from-oral-cancer-in-sri-lanka-1784195376"></link>
            <id>https://jvpnews.com/article/three-die-daily-from-oral-cancer-in-sri-lanka-1784195376</id>
            <summary type="text">வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86e13058-2f74-4301-a386-360ab981e5b1/26-6a58a931a7243.webp' /></p><h2 style="text-align: justify; ">வாய் புற்றுநோய்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன், இலங்கையில் ஆண்களுக்கு மத்தியில் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோய் வகையாக வாய் புற்றுநோய் காணப்படுவதோடு, இலங்கைப் பெண்களுக்கு மத்தியில் அதிகளவில் பதிவாகும் 10 புற்றுநோய் வகைகளுக்குள்ளும் வாய் புற்றுநோய் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானப் பயன்பாடு ஆகியவை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதோடு, குறிப்பாக வெற்றிலை மெல்லும்போது பயன்படுத்தப்படும் பாக்கில் அடங்கியுள்ள புற்றுநோய் காரணி மிகவும் ஆபத்தானது மற்றும் சக்தி வாய்ந்தது என வைத்தியர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தினசரி தொழில்களில் ஈடுபடும் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த சமூகத்தினர் இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்கள், மீனவச் சமூகம், மாணிக்கக்கல் மற்றும் சுரங்கத் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் இவர்களுள் அடங்குவர். </p><p style="text-align: justify; ">

தங்களது பணிச் சூழலில் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம், சோர்வு மற்றும் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக இவர்கள் பெருமளவில் வெற்றிலை மெல்லுதல், புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடுகளுக்குப் பழகியிருப்பதே இதற்கான அடிப்படைக் காரணம் என வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

எனவே, இந்த அழிவுகரமான பழக்கவழக்கங்களில் இருந்து விலகியிருக்குமாறும், வாயில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T09:50:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆடிப்பிறப்பு; தமிழர்களின் விசேட பண்டிகை நாள்! சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-pirappu-special-tamils-kolukattai-kul-1784194722"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-pirappu-special-tamils-kolukattai-kul-1784194722</id>
            <summary type="text">&amp;nbsp; ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும்.
</p><p>
இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் , கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார் உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணல் என்பன வழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a322fe5-5d54-475c-8ad3-c63abc923c1f/26-6a58a6a3e8fb0.webp' /></p><h2>அனைத்து இடங்களிலும், தமிழர்களின் பண்டிகை</h2><p>
</p><p>

 ஆடிப்பிறப்பானது வீடுகளில் மாத்திரமன்று ஆலயங்கள், பாடசாலைகள், வேலை செய்யும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும், தமிழர்களின்&nbsp; &nbsp;பண்டிகை&nbsp; கொண்டாடப்படுகிறது.</p><p>

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். </p><p>இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். 

தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.
</p><p>
அந் தவகையில் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என யாழ்ப்பாணம் மானிப்பாய், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய பாடல் தமிழ் மக்களிந் ஆடிப்பிறப்பு கொண்டாத்தின் இனிமையை எடுத்து சொல்கின்றது.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f478922f-976b-4c12-a6d0-d965f9ba6123/26-6a58a84b0a9f2.webp' /></p><h3>சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை
</h3><p><b>
ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்</b></p><p> 750 கிராம் பனங்கட்டி

 1 ¼ கப் </p><p>சிவப்பு பச்சை அரிசி

 ½ கப் </p><p>முழுப் பயறு

 ½ கப் </p><p>வறுத்த உளுத்தம் மா

 ½ கப் </p><p>தேங்காய் சொட்டு ,&nbsp; தேங்காய்ப்பால் , தேவையான&nbsp; அளவு தண்ணீர் ,&nbsp; சிறிது&nbsp; மிளகு,&nbsp; தேவையான அளவு&nbsp; உப்பு</p><p><b>

 செய்முறை,&nbsp;</b></p><p>அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 

மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c237418-c6de-4ec6-8a8f-7413abd286dd/26-6a58aba89cc75.webp' /></p><p> </p><p>தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும்.

 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். </p><p>பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும்.

 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f876ebd-89ee-4aee-b730-0e9eb6b53955/26-6a58a91751002.webp' /></p><p> </p><p>

 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். </p><p>பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 

அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். </p><p>சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். சுவையான ஆடிக் கூழ் தயார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T09:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான இலங்கை மக்களின் நம்பிக்கை ; ஆய்வில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-trust-in-president-anura-revealed-1784191815"></link>
            <id>https://jvpnews.com/article/public-trust-in-president-anura-revealed-1784191815</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75.5% எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது 29.4% மக்கள் நம்பிக்கை உள்ளது எனவும், மா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75.5% எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது 29.4% மக்கள் நம்பிக்கை உள்ளது எனவும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான சமூகக் குறிகாட்டி இணைந்து நடத்திய அண்மைக்கால “ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை பற்றிய சுட்டெண்” எனும் மக்கள் கருத்துக்கணிப்பின் முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcc0e0f1-3993-42f4-a435-53ea0b12105f/26-6a589bfd71e93.webp' /></p><h2 style="text-align: justify; ">நிதி நெருக்கடிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அதன்படி, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தனிப்பட்ட நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும், திருப்தியும் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த மே 23 முதல் ஜூன் 18, 2026 வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,240 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;ஜனாதிபதிக்கு 18–29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடமிருந்து 81.6% என்ற மிக உயர்ந்த பொது அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், கிராமப்புற மக்களில் 76.4% பேர் அவரது செயல்பாடுகளில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டை திறம்பட ஆட்சி செய்யும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை 62.8% ஆகக் காணப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T08:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-allegations-cm-vijay-warns-ministers-1784189820"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-allegations-cm-vijay-warns-ministers-1784189820</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (16) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a9054da-b368-4e8d-a037-7341f7d62c3b/26-6a58937e5c079.webp' /></p><p></p><h2>முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்</h2><p> </p><p>

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. </p><p>

அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> 

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். 

கூட்டத்தில் அவர்,"ஊழல் லஞ்சம் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>பதவிகள் பறிக்கப்படும். 

தவெக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம்" எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T08:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பி ; இழுத்து வெளியேற்றிய பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-archuna-expelled-from-the-kilinochchi-1784183845"></link>
            <id>https://jvpnews.com/article/mp-archuna-expelled-from-the-kilinochchi-1784183845</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை&nbsp; பொலிஸார்&nbsp; கூட்டத்தில் இருந்து&nbsp; &nbsp; &nbsp;இழுத்து வெளியேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5022d5f-bccd-41a7-a64e-9d881683d65f/26-6a58838061d98.webp' /></p><h2>அமைச்சரை அடிக்க முயன்ற அருச்சுனா எம்பி</h2><p>&nbsp; &nbsp;இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
</p><p>
திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகத்தார்.</p><p></p><p>
</p><p>
 கூட்டத்தில் இருந்த சிறிதரன் எம்பி வெளியேஏரிய நிலையில் , அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரிசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
</p><p>&nbsp;கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள். அமைச்சர் இராமலிங்க்கம் சந்திரசேகருடன், அர்ச்சுனா எம்பி முரண்பட்டுள்ளார்.</p><p></p><p>அதோடு அமைச்சரை அடிக்கவும் அருச்சுனா எம்பி கை ஓங்கியாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சமபையில் இருந்தவர்கள் அருச்சுனாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனையடுத்து அர்ர்சுனா எம்பி பொலிஸாரால் கூட்டத்தில் இருந்து அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநிறுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1669790280743469%2F&show_text=false&width=560&t=0" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-16T08:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவுக்கு குறுக்கே சென்றார் பேராயர் கார்டினல் ரஞ்சித்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cardinal-mranjith-filesuresh-salay-s-writ-petition-1784190748"></link>
            <id>https://jvpnews.com/article/cardinal-mranjith-filesuresh-salay-s-writ-petition-1784190748</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
 இந்த நிலையில் சுரேஷ் சலேவின் மனுவை ரத்து செய்யுமாறு கோரி, கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறுக்கீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2994f76-4d94-45ea-b359-d45ec8e03a91/26-6a58971da1475.webp' /></p><p></p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்னிலையில், எதிர்வரும் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T08:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/petition-filed-to-postpone-a-l-examination-1784187284"></link>
            <id>https://jvpnews.com/article/petition-filed-to-postpone-a-l-examination-1784187284</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39b3316-88d8-4773-8fb5-0e86815c9047/26-6a588995803f0.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T07:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-sailors-banned-from-ships-strait-of-hormuz-1784187372"></link>
            <id>https://jvpnews.com/article/indian-sailors-banned-from-ships-strait-of-hormuz-1784187372</id>
            <summary type="text">&amp;nbsp; வளைகுடாவில் மீண்டுல் தொடரும் தாக்குதல்களினால் மறு அறிவித்தல் வரும் வரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வளைகுடாவில் மீண்டுல் தொடரும் தாக்குதல்களினால் மறு அறிவித்தல் வரும் வரை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தக் கூடாது என கப்பல் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>



ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல்களால், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12952363-f1a0-49cd-96e8-779342a3324b/26-6a5889ee24822.webp' /></p><h2>இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p> </p><p>



இந்த நீர்வழிப் பாதை தற்போது வணிகக் கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கவுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>


பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அவசர காலங்களில் MMDAC மற்றும் IFC-IOR ஆகிய அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


அண்மையில், ஓமன் கடற்பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புனேவைச் சேர்ந்த ஹெராம் கர்மார்கர் உட்பட இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>



உலகளவில் மாலுமிகளை வழங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாடு இத்தகைய தடையை விதித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T07:34:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-elder-homes-1784186513"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-elder-homes-1784186513</id>
            <summary type="text">நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என முதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என முதியோர் செயலகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது குறித்து முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும், விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53fa2bf6-f66f-4dd3-83b9-8cdf6073a70e/26-6a588692845fd.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்படி பதிவு&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
நாடளாவிய ரீதியில் தற்போது 459 முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன.அவற்றில் இதுவரை 148 இல்லங்கள் மட்டுமே முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
பதிவு செய்யப்படாத ஏனைய முதியோர் இல்லங்கள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யத் தவறும் முதியோர் இல்லங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T07:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938"></link>
            <id>https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938</id>
            <summary type="text">&amp;nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார்.


சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/211b812b-442d-4895-a1b8-ca5ee5ce58af/26-6a58789bb6959.webp' /></p><h2>நாக்கின் கீழ் ஏற்பட்ட&nbsp; கொப்புளம்</h2><p>

பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.</p><p></p><p>
</p><p>
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>

மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகின்றது.</p><p>]</p>]]></content>
            <updated>2026-07-16T07:11:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-hearing-update-1784184810"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-hearing-update-1784184810</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, பூர்வாங்க விசாரணைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ee7fc7-79a7-420d-835b-32c7ec409da1/26-6a587fec0c438.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;பூர்வாங்க விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்கான திகதியொன்றை ஒதுக்குமாறு கோரினார்.</p><p style="text-align: justify;"> 

இவ்வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டெய்ஸி ஃபொரஸ்ட் தொடர்பில் முறைப்பாட்டாளர்களின் நிலைப்பாட்டை இதன்போது அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"> 

முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சுமார் 59 மில்லியன் ரூபா பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் ஊடாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரினால் இந்த இரு பிரதிவாதிகளுக்கும் எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T06:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்; பொலிசார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112"></link>
            <id>https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. </p><p>

சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfaa8a-f226-4423-a8a2-a9daac70cf31/26-6a58756250b2b.webp' /></p><h2>இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை</h2><p> </p><p>

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது. </p><p>

சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது. </p><p>

புகாரின் பேரில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட குருநாகல் பொலிஸாருக்கு, அந்தக் காணொளிக் காட்சியில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் ஒருவன், அந்த காருக்கு அருகில் நடந்து செல்கின்றமை தெரியவந்தது. </p><p>

இருப்பினும், சம்பந்தப்பட்ட சிறுவன் தான் காருக்குத் தீ வைத்தது என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். 

குருநாகல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதோடு, மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். </p><p>

காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அரச தடவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகமும் எடுத்துள்ளது. </p><p>

எனவே, அதிகாரப்பூர்வ விசாரணைகள் முடிவடையும் முன், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸ் ளஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் வரை அதி அபாயகரமாக மாறும் நிலைமை ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843"></link>
            <id>https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843</id>
            <summary type="text">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"> 

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f493562b-e7d8-4361-b2ac-e0547fd71b41/26-6a587455bf68b.webp' /></p><h2 style="text-align: justify;">நோயாளர்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p style="text-align: justify;"> 

தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

டெங்கு பரவல் அதிகமாகப் பதிவாகும் வலயங்களை இனங்கண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T06:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை மிரள வைத்த ஆபத்தான நபருக்கு நேர்ந்த கதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974</id>
            <summary type="text">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


உப்புவெளி மின்சார நிலைய வீதியில் வைத்து&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ff38a-a1bf-42e6-99fd-aba6b4ff1244/26-6a5845fce7722.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify;">இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">


ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இக்குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">&nbsp;சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T05:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமானின் இழப்பை தாங்காது உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்; இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823"></link>
            <id>https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்பவர் டுகி என்ற குறித்த நாயை கடந்த 15 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471061d7-0675-4294-871b-0222c7fb218a/26-6a587058971ba.webp' /></p><h2>&nbsp;இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்</h2><p>
</p><p>
இந் நிலையில் உடல்நலக்குறைவால் பிரதீப் ஜெயின் காலமான நிலையில், அவரது உடலைப் பார்த்ததிலிருந்தே அந்த நாய் மிகுந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், இறுதிச் சடங்கின் போது, தனது எஜமானரின் அருகே அமைதியாக நின்றிருந்த அந்த நாய், ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , பிரதீப் ஜெயின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே, அவரது செல்ல நாயான டுகியும் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலர்ச் செடிகளுடன் இலங்கை வந்த பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999</id>
            <summary type="text">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8819e23c-fc70-451c-9c34-76fb1964e343/26-6a586d207877d.webp' />&nbsp;</p><h2 style="text-align: justify; ">மலர்ச் செடிகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
விமான நிலையத்தின் பசுமைப் பிரிவு வழியாக அவர் வெளியேற முயன்ற போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை மேற்கொண்டனர். </p><p style="text-align: justify; ">இதன்போது அவரது பைகளிலிருந்து மலர்ச் செடிகள் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு நிதிய அபராதமும் விதிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

 கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T05:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிச் செயல்களை நியூசிலாந்து ஒருபோதும் சகித்துக்கொள்ளாது ; இலங்கை நிறுவனத்திற்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-carporium-company-fraud-in-new-zealand-1784179905"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-carporium-company-fraud-in-new-zealand-1784179905</id>
            <summary type="text">&amp;nbsp; நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு இலங்கை நிறுவனம் இழப்பீடு வழங்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba487e5-1642-4c2c-b73a-f7f32189b408/26-6a586cc32ec08.webp' /></p><h2>மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது</h2><p>

கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 (Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
</p><p>
குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.</p><p></p><p>

 வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று நியூஸிலாந்து வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை விபத்தில் அரச ஊழியர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-employee-killed-in-ampara-accident-1784179282"></link>
            <id>https://jvpnews.com/article/government-employee-killed-in-ampara-accident-1784179282</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>



கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079cd391-23fa-43c4-859c-d8cdf61be176/26-6a586a5424ac4.webp' /></p><p>
</p><p>
 உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் எனஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

 விபத்துக்கான காரணம் குறித்துப் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-16T05:19:51+00:00</updated>
        </entry>
    </feed>
