<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T19:04:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997"></link>
            <id>https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997</id>
            <summary type="text">இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f6442f-f277-45b7-af2a-19b23c9d85c6/26-6a513d46c9bdc.webp' /></p><p>இதன்போது, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் ; அரசின் உடனடி தலையீட்டை கோரும் ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040</id>
            <summary type="text">மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன் திருட்டுச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eec4f84-0cc8-4c02-b477-7938caba3f8c/26-6a51398a6fe34.webp' /></p><p>
கடலில் சட்டவிரோதமான முறையில் நிகழும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளையினால் இந்த மூன்று மாவட்ட கடற்றொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

வாகரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மீன் திருட்டுச் சம்பவங்கள் இதற்கு சான்றாகும்.</p><p>
கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே நின்றிருந்த இளைஞரை கார் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, நாவற்குழி பகுதியில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72a7651-5fa1-4045-b77c-f3506a73ab4b/26-6a51350abbb08.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞரை மீண்டும் காரில் அழைத்து வந்து, யாழ்ப்பாணம் போஸ்கோ கல்லூரி அருகே வீதியோரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தை அருகில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவதானித்ததைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
</p><p>
காரைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு கூரிய வாள்கள், இரத்தக் கறை படிந்த டி-ஷர்ட் மற்றும் சுமார் 2.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd4aa17-780b-42e6-b39b-d65ec5d3b870/26-6a51350c1cde8.webp' /></p><p> </p><p>மேலும், காரின் உட்பகுதியிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, வீதியோரத்தில் காயமடைந்த நிலையில் கிடந்த இளைஞரை பொலிஸார் மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை உருவாக்க வேண்டும் ; ஜனாதிபதி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-western-province-next-two-weeks-dangerous-1783705674"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-western-province-next-two-weeks-dangerous-1783705674</id>
            <summary type="text">நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் புதிய நீர் திட்டமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். </p><p>

கடந்த காலங்களில் நாட்டின் நெல் உற்பத்தி குறைந்த மட்டத்தில் இருந்ததால், அரிசியிலிருந்து ஏனைய உற்பத்திகளை மேற்கொள்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், தனது அரசாங்கம் அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d56e9aaf-824a-442e-b344-8b39470e90f9/26-6a51304c3c736.webp' /></p><p>நெல் உபரி காணப்படும் காலங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தவிர்த்து, சந்தையில் நெல்லுக்கான அதிக போட்டித்தன்மையையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார். </p><p>

எதிர்காலத்தில் நாட்டில் சோறு தவிர, கால்நடைத் தீவனம், பியர், வைன், பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு அரிசியைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். </p><p>

அறுவடைக்குப் பிந்தைய விரயத்தைத் தடுக்கும் நிறுவனங்கள், அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய பல உணவு மற்றும் பான வகைகளை ஏற்கனவே ஆராய்ச்சி மட்டத்தில் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றை விரைவில் வணிக ரீதியாகச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.</p><p> 

இதன் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்கு சாதாரண ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிகமாக, வைன், பிஸ்கட் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களும் போட்டித்தன்மையுடன் சந்தைக்கு வருவதால், விவசாயிகளுக்குத் தமது அறுவடைக்கு மிகவும் நியாயமான மற்றும் அதிக விலையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p> 

அதன்படி, பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறனையும் உழைப்பையும் மேலும் அதிகரித்து, இந்த புதிய சந்தையை இலக்காகக் கொண்டு நெல் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இன்று (10) பிற்பகல் இந்த மோதல் சம்பவ,ம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1ec8d3-1006-44a5-a23d-7792c4e2afea/26-6a50e02e035ef.webp' /></p><p></p><p> சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் 28 பேர் உயிர்ழந்ததுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-10T17:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு டெங்கு அபாயம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-risk-to-increase-for-next-two-weeks-1783703735"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-risk-to-increase-for-next-two-weeks-1783703735</id>
            <summary type="text">மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியாக இருக்கும் என டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p>

'தெரண பிக் ஃபோகஸ்' (BIG FOCUS) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய டெங்கு பரவல் நிலை 2017ஆம் ஆண்டு பதிவான மோசமான டெங்கு பரவலையும் விட தீவிரமடையக்கூடும் என சுட்டிக்காட்டினார்.
</p><p>
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண வைத்தியசாலைகளின் கொள்ளளவு ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f59222a1-467d-408b-a44f-e5a69074cc78/26-6a5128ba1886d.webp' /></p><p> சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, டெங்கு பரவலுக்கான முன்னறிகுறிகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே தென்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
தென்மேற்குப் பருவமழைக் காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமானதாக இருப்பதாகவும், இத்தகைய சூழ்நிலைகளுக்கு சுகாதாரத் துறை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நிலவிய கடும் வெப்பம் காரணமாக டெங்கு நுளம்புகள் உருவாகும் வேகம் குறைவாக இருந்ததாகவும், தற்போது காலநிலை மாற்றத்தால் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dac1b96-f012-43e8-bb57-1c74857f3c0d/26-6a5128b9646b7.webp' /></p><p>

டெங்கு தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மூன்று வகையான டெங்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
</p><p>
எனினும், இலங்கையில் அவற்றை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் உடனடியாக நோய்த் தொற்றைக் குறைக்க முடியாது என்றும் அவர் விளக்கினார். </p><p>இரண்டு டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி முழுமையாக செயல்பட குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதுடன், ஏற்கனவே ஒருமுறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் பாதுகாப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officers-killed-in-negombo-prison-clash-promoted-1783699538"></link>
            <id>https://jvpnews.com/article/officers-killed-in-negombo-prison-clash-promoted-1783699538</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.</p><p> </p><p></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df0e7f2-cbeb-42ae-b0f5-40eb62fe6f5d/26-6a51185476f3a.webp' /></p><p>அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

அவர்களில் உள்ள அனைத்துக் கைதிகளும் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

இருப்பினும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. 

சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்குப் போதுமான ஆரோக்கியமான நிலையில் இல்லாததே இதற்குக் காரணமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56dcaf-a773-4a0d-9d44-aec3d0ebd8bd/26-6a511853bee29.webp' /></p><p>இதனிடையே, மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கொல்லப்பட்ட இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாகவும், ஏனைய காவலர்கள் சார்ஜன்ட் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்துக் கைதிகளும் இன்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். </p><p>

சிறைச்சாலை மோதலில் பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜன்ட் கமகே உபாலியின் உடல், இன்று கம்புறுபிட்டியவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.</p><p> 

இந்த மோதலில் உயிரிழந்த சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் அம்பகஹவெவ பொது மயானத்தில் நடைபெற்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T16:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக யாழில் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-measures-in-jaffna-for-the-safety-tourists-1783699149"></link>
            <id>https://jvpnews.com/article/special-measures-in-jaffna-for-the-safety-tourists-1783699149</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c14ceb-eed7-4768-bb0b-c7489424132e/26-6a5116cf44cb3.webp' /></p><p>தூய்மையான சுற்றுச்சூழலை பேணுவதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
</p><p>
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யாழ் கோட்டை சுற்றுவட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
இதன்போது, வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து யாசகத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>மேலும், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Zoo-க்கு போய் அழு; இனவெறியை சந்தித்த பிரபலம் Speed]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429</id>
            <summary type="text">&amp;nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடியூபர் Speed .

 இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 51.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். </p><p>இந்நிலையில்தான் இவர் அர்ஜென்டினா நாட்டு கால்பந்து ரசிகர் ஒருவரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காக Speed சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84298bc-bf11-413a-b5df-48f940b2da4d/26-6a50e51f23d49.webp' /></p><p> அப்போது அர்ஜென்டினா ஜெர்ஸி அணிந்திருந்த ஒருவர் கருப்பினத்தனவரான ஸ்பீடை பார்த்து மோசமாக சைகை செய்தார்.</p><p>

 மேலும், ஸ்பீடை பார்த்து ‘குரங்குகள் இருக்கும் Zoo-க்கு போய் அழு’ என ஸ்பானிஷ் மொழியில் நக்கலடித்தார். 

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாக சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் FIFA இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் காணொளிகளை 'லைக்' செய்தால் 500 ரூபாய் பணம் வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732"></link>
            <id>https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732</id>
            <summary type="text">&amp;nbsp; யூடியூப் காணொளிகளுக்கு &#039;லைக்&#039; செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிருக்கும் இத்தகைய மோசடிக்காரர்களிடம் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc2a9e2-6fed-4602-b2c2-25264aad2ab3/26-6a50ee1dd33a7.webp' /></p><p></p><h2>500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி&nbsp;</h2><p>
</p><p>
எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும், மக்கள் தமது பொது அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துச் செயற்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு யூடியூப் காணொளிக்கு 'லைக்' இடுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி என்பதைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; அரசாங்கத்தை பாராட்டிய ரஞ்சன் ராமநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> 


 இன்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, 

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81b49df-14e6-4fd9-b47c-f25432782081/26-6a50e83a6146d.webp' /></p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்&nbsp; யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை</h2><p> </p><p>

இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், தானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவதாகவும், தானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

 சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்று வாதிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

 இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><p>


இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், "நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்" என்று தைரியமாக முன்வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம் என கூறிய ரஞ்சன் ராமநாயக்க, உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; பிரபாஷ் மண்டல் உடலை பெற தாய் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435"></link>
            <id>https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/13-year-old-girl-32-men-4-hotels-rajasthan-crime-1783593062" target="_blank">&nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் </a>செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1bfb5b-14f2-49ec-aebd-35104a638d59/26-6a50d5855f4f6.webp' /></p><h2>&nbsp;அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனை</h2><p>

 மகனின் மரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகனின் செயலைத் தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும், அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துவிட்டது என்றும் ஆவேசமாகக் கூறினார்.</p><p></p><p>

காவல்துறையினர் இருவர் தங்கள் வீட்டிற்கு வந்து தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறினர். தன் கணவர் சுகவீனமாக இருப்பதால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையை அனுபவித்துவிட்டான்.</p><p></p><p>
அவனது உடலை தான் வீட்டிற்கு எடுத்து வரமாட்டேன். அவன் எவ்வித நன்மையும் செய்யவில்லை. அவன் செய்தது பெரும் குற்றம், அதற்கான தண்டனையை அவன் பெற்றுவிட்டான். </p><p>அவனுக்கு எதைச் செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை," என உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரபாஷ் மண்டலின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் &quot;கொமோண்டோ&quot; பங்களா முன்பாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687"></link>
            <id>https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ&quot; பங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (10) 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதிகளில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad65b075-2fe3-4c5d-b31e-95c470231169/26-6a50f1d9a02dc.webp' /></p><p> </p><p>

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:04+00:00</updated>
        </entry>
    </feed>
