<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T13:40:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-rupee-depreciates-further-1784122138"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-rupee-depreciates-further-1784122138</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.



இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>


இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 331.50 இலிருந்து ரூ. 331.62 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c4e5d6-d473-4c1d-af37-8838721b27be/26-6a578b1b718dd.webp' /></p><p>
</p><p>


அதேபோல், அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் ரூ. 340.92 இலிருந்து ரூ. 340.98 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

வளைகுடா நாட்டு நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசிக்காரர்கள் கூட இருந்தால் பணமும், அதிர்ஷ்டமும் கொட்டுமாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358</id>
            <summary type="text">&amp;nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். </p><p>

அப்படி மற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e009dc9f-c96c-4f8a-a1d2-3620999c3dfc/26-6a57498fecbce.webp' /></p><h2>அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள்&nbsp;</h2><p> </p><p><b> 

ரிஷபம் (சுக்கிரனின் குபேர வரம்)
</b></p><p>சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசியினர், தங்களின் பேராற்றலால் செல்வத்தை ஈர்க்கும் காந்தமாகச் செயல்படுவார்கள். இவர்களது குடும்பத்தினர் அல்லது தொழில் கூட்டாளிகள் மிகக் குறைந்த உழைப்பிலேயே அசுர வளர்ச்சியை எட்டுவார்கள். இவர்களது கை பட்ட பொருட்கள் யாவும் தங்கமாக மாறும் விசித்திர அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு.
</p><p><b>
சிம்மம் (சூரியனின் ஆளுமைப் பார்வை)
</b></p><p>சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இந்த ராசியினர், தங்களைச் சார்ந்தவர்களை ஒருபோதும் நடுத்தெருவில் விடமாட்டார்கள். இவர்களது ராசிப் பலன் உடன் இருப்பவர்களின் தடைகளைத் தவிடுபொடியாக்கும்.</p><p>இவர்களுடன் நட்பாகவோ அல்லது வர்த்தகத் தொடர்பிலோ இருப்பவர்களுக்கு, சமூகத்தில் மதிப்பும், எதிர்பாராத வழிகளில் பெரும் பணவரவும் வந்து சேரும்.</p><p></p><p><b>

விருச்சிகம் (செவ்வாயின் மறைமுக புதையல் யோகம்)</b></p><p>
கால புருஷ தத்துவத்தின் எட்டாம் ராசியான இவர்களுக்கு, ஆன்மிக ரீதியாகவே மற்றவர்களின் கர்ம வினைகளைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. </p><p>இவர்களது யோக திசைகள் தொடங்கும் போது, இவர்களுடன் இருப்பவர்களுக்கும் சேர்த்து அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும். முடங்கிக் கிடக்கும் தொழில்கள் கூட இவர்களது ஆலோசனையால் கோடிகளை அள்ளும்.
</p><p><b>
தனுசு (குருவின் ஞான தனப் பிராப்தி)
</b></p><p>குரு பகவானின் ஆசி பெற்ற இந்த ராசியினர், நடமாடும் அதிர்ஷ்டப் பெட்டகமாகத் திகழ்வார்கள். இவர்களது இருப்பு மட்டுமே ஒரு வீட்டின் வாஸ்து தோஷங்களையே போக்க வல்லது. </p><p>இவர்களைத் தங்களின் வாழ்க்கைத் துணையாகப் பெறுபவர்களுக்கு, வறுமை என்ற சொல்லே வாழ்வில் இருக்காது. தொடர் நஷ்டங்களைச் சந்திப்பவர்கள் கூட இவர்களின் வருகைக்குப் பின் பணமழையில் நனைவார்கள்.
</p><p><b>
மீனம் (அமுதக் கடலின் தன லாபம்)
</b></p><p>நீர் தத்துவத்தின் உச்ச ராசியான மீனம், அள்ள அள்ளக் குறையாத லக்ஷ்மி கடாட்சத்தைக் குறிக்கும். இவர்களது பிரார்த்தனைகளுக்குப் பிரபஞ்சத்தில் தனிச் சக்தி உண்டு. </p><p>தங்களின் சுய லாபத்தைக் கருதாமல் பிறர் வாழ நினைக்கும் இவர்களது குணமே, இவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தொடர் யோகங்களையும், எதிர்பாராத சொத்துச் சேர்க்கைகளையும் அள்ளித் தரும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devotees-reached-kataragama-traversing-forest-1784119770"></link>
            <id>https://jvpnews.com/article/devotees-reached-kataragama-traversing-forest-1784119770</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று சிறப்பு வாய்ந்த கதிர்காம கந்தனின் ஆடி வேல் விழாவை முன்னிட்டு பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று சிறப்பு வாய்ந்த கதிர்காம கந்தனின் ஆடி வேல் விழாவை முன்னிட்டு பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p> கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97dae181-5df2-43a6-9198-16161d9a087b/26-6a5781dc6db6e.webp' /></p><h2>வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை&nbsp;</h2><p>
</p><p>
முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர்.
</p><p>
வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் இன்று ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா பெரஹரா இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
</p><p>
தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, ஆடி வேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T12:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடைகளைத் தாண்டி ஜூலை.23 ஆம் திகதி ஜன நாயகன் ! ரசிகர்கள் கொண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jananayagan-release-on-july-23rd-1784117888"></link>
            <id>https://jvpnews.com/article/jananayagan-release-on-july-23rd-1784117888</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் னடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் ஜூலை.23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் னடிப்பில் உருவான ஜன நாயகன் படம் , நீண்ட இழுபறியின் பின்னர் ஜூலை.23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5629ec0-f57d-4596-b807-fdae9476e566/26-6a577a81af6e3.webp' /></p><p> </p><p>

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸுக்கு தயாரான இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி தற்போதுவரை வெளியாகவில்லை.

 இதனிடையே முழு படமும் இணையத்திலும் வெளியானது. </p><p>இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது. 

விஜய்யின் கடைசிப் படம் இது என கூறப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்து ஏமாந்து போயினர்.</p><p> இதனையடுத்து ஒருவழியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு 'ஏ'சான்றிதழ் வழங்கியது. 

தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துவந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T12:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-at-katunayake-police-checkpoint-1784117211"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-at-katunayake-police-checkpoint-1784117211</id>
            <summary type="text">கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110f3afc-8496-4ad2-bcac-dc875f1c1b6a/26-6a5777dcbec52.webp' /></p><p>சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சித்தபோது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T12:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவங்சவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wimal-weerawansa-brother-arrested-1784116416"></link>
            <id>https://jvpnews.com/article/wimal-weerawansa-brother-arrested-1784116416</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் இன்று (15) செய்யப்பட்டுள்ளார். 

அரச பொறியியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் இன்று (15) செய்யப்பட்டுள்ளார். </p><p>

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e2b418-fd00-4358-bc57-a636b8d79a71/26-6a5774c22061b.webp' /></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p> 

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்ப ஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.</p><p></p><p> 

இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். </p><p>

இந்நிலையில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255"></link>
            <id>https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eefe4c0-226f-4c02-80ca-09aba08b9e37/26-6a57260172f9a.webp' /></p><p></p><h2>சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவனின் வசம் 1 கிலோகிராம், 6 கிராம், 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையின் வசம் 149 கிராம், 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
வேனொன்றின் முன்பகுதியில் வைத்து மாதம்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நளின் ஸ்ரீயந்தவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் தம்பதியினர் மாதம்பிட்டிய உள்ள ஒரு மதஸ்தலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 சந்தேக நபர் தம்பதியினர் பயணித்த வேனைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
</p><p>
 அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவை வத்தளை (வெலிசர) பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T11:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விட வேண்டாம் ; பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-fly-kites-in-areas-surrounding-airports-1784111549"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-fly-kites-in-areas-surrounding-airports-1784111549</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடவேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடவேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையின் கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சீனக்குடா , அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய இடங்களில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி இத்தகைய பரவலான பட்டம் விடுதல் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a31209-ce72-4f8c-987a-6ab01e7ab758/26-6a5761bf520d1.webp' /></p><p></p><h2>ஆபத்தை எதிர்கொண்ட&nbsp;Y-12 ரக விமானம்&nbsp;&nbsp;</h2><p>



இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (2026.07.15) பயிற்சிக்காக ரத்மலான விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று,காத்தாடி விடப்பட்ட நூலில் சிக்கியதில் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது.</p><p></p><p> 

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம்,மீண்டும் ரத்மலான விமான நிலையத்திற்கே மீண்டும் தரையிறங்கியுள்ளது. 



பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் காத்தாடி நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.</p><p></p><p>



காத்தாடி நூல்களோ அல்லது அதன் பாகங்களோ எஞ்சினுக்குள் அல்லது அதன் இயக்க முறைமைக்குள் நுழைந்தால், விமானம் முழுவதற்கும் கடுமையான சேதம் ஏற்படடக்கூடிய நேரடி அபாயம் உள்ளது. இதனால் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p>



எனவே, விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய பகுதிகளில் காத்தாடி விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T11:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தும் PHI!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-collected-kilinochchi-by-fake-phi-1784112372"></link>
            <id>https://jvpnews.com/article/money-collected-kilinochchi-by-fake-phi-1784112372</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, வர்த்தகர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, வர்த்தகர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி நகரில் கடமையாற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் பெயரையே மோசடி நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255cbfeb-1c0f-45c2-9e05-f5d16ee4c0cc/26-6a5764f58d629.webp' /></p><h2>பணம் அனுப்பிய வர்த்தகர்கள்</h2><p> 

நான் மாவட்டத்திற்கு வெளியே இருக்கிறேன் எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் அல்லது அவசரத் தேவைக்காகப் பணம் தேவைப்படுகிறது. பெரிய தொலைபேசியை வீட்டில் விட்டுவிட்டு சிறிய தொலைபேசியை எடுத்து வந்துள்ளேன்.</p><p></p><p> இதிலிருந்தே உங்களை அழைக்கிறேன் எனப் பொய் கூறி, பணத்தைக் கோரி வங்கி கணக்கு இலக்கங்களை அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, 0760493771 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து தொடர்பு கொள்ளும் நபர், கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தகர்களிடம் இவ்வாறு பணம் கோரியுள்ளார்.</p><p></p><p> 

கடந்த சில நாட்களில் ஆறுக்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் இந்த நபர் தொடர்புகொண்டுள்ளார். இதில் சில வர்த்தகர்கள் குறித்த வங்கி கணக்கிற்குப் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.
</p><p>
பணம் அனுப்பிய வர்த்தகர்கள், குறித்த பொது சுகாதார பரிசோதகரைத் தொடர்பு கொண்டு, "பணம் கிடைத்துவிட்டதா? மேலும் உதவி தேவையா?" எனக் கேட்ட போதே, இவ்வாறான ஒரு மோசடி நடப்பது குறித்த பரிசோதகருக்குத் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கின் விவரங்களை ஆராய்ந்ததில், அதன் உரிமையாளர் கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T10:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கள்ள உறுதிகளோடு சுற்றிவரும் கும்பல்; அவதானம் மக்களே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526"></link>
            <id>https://jvpnews.com/article/gang-seizing-lands-jaffna-using-forged-documents-1784106526</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194c86f8-d7d7-41a4-bfde-e6ea1e2fba67/26-6a574e1fceaa4.webp' /></p><p></p><h2>வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல்</h2><p> 


இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மிரட்டியுள்ளனர்.</p><p> 

இதனையடுத்து தான் பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.</p><p> 

அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர் சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டிய போது , அவர் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:47:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA கால்பந்து போட்டி ; சொந்த நாட்டு உணவுகளை இறக்குமதி செய்த ஆர்ஜென்டினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-bringing-half-a-ton-beef-2026-world-cup-1784107505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;FIFA கால்பந்து கிண்ண தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள ஆர்ஜென்டினா அணி, தங்கள் வீரர்கள் சொந்த நாட்டு உணவுகளை உண்பதை உறுதிப்படுத்த தமது நாட்டிலிருந்து பிரத்தியேக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளன.
</p><p>
ஆர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கால்பந்து கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c54909ca-d58c-4ded-ae8f-6df4da2bd945/26-6a5751f30f31f.webp' /></p><h2>&nbsp;500 கிலோ மாட்டிறைச்சி&nbsp;அமெரிக்காவிற்கு இறக்குமதி </h2><p>
</p><p>
இந் நிலையில் , வீரர்கள் சோர்வின்றி இருக்கவும், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வைப் பெறவும் சுமார் 500 கிலோ மாட்டிறைச்சியை ஆர்ஜென்டினாவிலிருந்து கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

இதில் லோமோ, வாசியோ, என்ட்ரனா போன்ற பாரம்பரிய இறைச்சி வகைகள் உள்ளடங்கும்.</p><p></p><p> </p><p>
கடுமையான சுங்க மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பல மாதத் திட்டமிடலுக்குப் பின்னரே இந்த உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f173a86c-03f4-4e44-b46e-ae16995061f1/26-6a57529933d75.webp' /></p><p>
</p><p>
போட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளியில், வீரர்கள் விரைவாக மீண்டு வருவதற்கு இந்த ஊட்டச்சத்துமிக்க உணவுகள் பெரிதும் உதவுவதாக அணிகளின் மருத்துவ மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

இது குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளிகளில், ஆர்ஜென்டினா வீரர்கள் பயிற்சியின் போதும், ஓய்வு நேரங்களிலும் பார்பிக்யூ முறையில் இந்த உணவுகளை ரசித்து உண்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T09:26:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிருந்து வந்தவர்களின் கனேடிய டொலர்கள் , யூரோக்கள், கடவுச்சீட்டு களவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2c5306-ce8f-4d23-8bf9-d774ac52978c/26-6a571d7caeb8d.webp' /></p><p></p><h2>திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள்&nbsp;</h2><p> 

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p> விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T08:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா போருக்குள் சிக்கிய 02 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்; பயணிகள் நிலை என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-airlines-planes-caught-in-the-gulf-war-1784103978"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-airlines-planes-caught-in-the-gulf-war-1784103978</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், வளைகுடாவில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் போருக்குள் சிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், வளைகுடாவில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் போருக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>
எனினும் இன்று காலை குறித்த விமானங்க்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற விமானங்க்களே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec0e5e5-a6d8-4cec-b099-ca6eef9e7a5c/26-6a57442c60f27.webp' /></p><h2>நாட்டுக்கு&nbsp; வந்த&nbsp; விமானங்கள்</h2><p>
 
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் குறிப்பிட்ட வலயத்திற்கு அருகில் உள்ள வான்பரப்பில் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்ததுடன், பின்னர் விமானங்களை பாதுகாப்பாக விமான நிலையங்களில் தரையிறக்குவதற்கு விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

இன்று (15) காலையாகும் போது அந்த இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.</p><p></p><p>

 

நேற்று (14) மாலை 5:10 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல்.-229 (UL-229) இலக்க விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், இரவு 6:36 மணிக்கு யூ.எல்.-253 (UL-253) இலக்க விமானம் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தன.</p><p>

 

A-321 நியோ (A-321neo) ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை நெருங்கிய வேளையில், ஈரான் நாட்டின் மூலம் அந்த வலயத்தை நோக்கி தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.</p><p></p><p>
</p><p>
 

அதனைத் தொடர்ந்து குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p> 

 

இதனால் அந்த நாடுகளை நோக்கிப் பயணித்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்புவதற்கான போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால், அந்த வலயத்திற்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் பறந்து கொண்டிருந்தன.</p><p></p><p> </p><p>

 

பின்னர் வான்பரப்பு திறக்கப்பட்டதும் அவை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

 

இதே போன்று மேலும் பல வெளிநாட்டு விமானங்களும் இந்த போர்ச் சூழல் காரணமாக தரையிறக்க முடியாமல் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-15T08:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் ஊடாக விற்பனை செய்து பின் தொடர்ந்து கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicles-sold-via-facebook-advertisements-a-scam-1784103041"></link>
            <id>https://jvpnews.com/article/vehicles-sold-via-facebook-advertisements-a-scam-1784103041</id>
            <summary type="text">&amp;nbsp; முகநூல் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்து , பின்னர் அந்த வாகனங்களை கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் மேல் மாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முகநூல் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்து , பின்னர் அந்த வாகனங்களை கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 
 கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

 

ரூபாய் 40 இலட்சம் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் வண்டியொன்றை, ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக ஜூலை முதலாம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4ca7e2-c7d8-4557-8dc9-bc78d1b8f06b/26-6a574082ae74f.webp' /></p><h2>விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்பு</h2><p>
</p><p>
 அந்த முறைப்பாடு தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

 
 இந்த மோசடிச் சம்பவத்துடன் பெலும்மஹர, முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுத முனையில் கொள்ளையடித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
</p><p>
 

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.</p><p>

 

இதேபோன்ற முறையில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T08:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-dep-meteorology-wind-warning-1784101096"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-dep-meteorology-wind-warning-1784101096</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கையானது நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe89fed-ab6f-429c-8395-417bdd0ceaa1/26-6a5738e9c9969.webp' /></p><p>
</p><p>
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றின் தீவிரத்தன்மை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
</p><p>
இந்த காலப்பகுதியில் 12 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு 'அம்பர்' எச்சரிக்கையையும் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:36:53+00:00</updated>
        </entry>
    </feed>
