<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T19:39:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போரின் கவனத்திற்கு ; விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665</id>
            <summary type="text">இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், உலக அமைப்பு மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' ஆகியவற்றுடன் இணைந்து நான்கு நாள் செயலமர்வு ஒன்றைக் கட்டுநாயக்கவில் ஏற்பாடு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57fce4-0318-4fda-9750-6e7cd3cac867/26-6a568b5b0c598.webp' /></p><h2>பராமரிப்பு</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சக பெரேரா, வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவளிப்போர் குறித்த முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
</p><p>
வீதிகளில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அந்த நாய்களின் முழுப் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு முறையாகப் பராமரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
</p><p>
1973இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால், அந்த காலத்தில் 370ஆக இருந்த வருடாந்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த 14 மரணங்கள் கூட அதிகம் என்பதால், நோய்த்தொற்றின் அடிப்படை ஊற்றையே கட்டுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
விஷர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாய்களுக்கே தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் இந்த நோயைச் சுமையின்றி ஒழிக்க முடியும் என்றார்.
</p><p>
எனவே, மனிதர்களுக்கு நோய் வராமல் தடுப்பதை விட, விலங்குகளிடமே நோயைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த முன்னெடுப்பின் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை விஷர் நாய்க்கடி அற்ற நாடாக மாற்றுவதே தங்களின் இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445</id>
            <summary type="text">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது.</p><p style="text-align: justify; ">


இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c281ec-3ef0-4760-8c2d-b9cf44a0aa3b/26-6a5682af1a021.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 16,610 ஆகும்.</p><p style="text-align: justify; ">

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (பிரித்தானியா) வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும்.


இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆக பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p>]]></content>
            <updated>2026-07-14T19:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732"></link>
            <id>https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732</id>
            <summary type="text">நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742553aa-356a-485d-ba9f-fdc9fb0f0408/26-6a567fe5d115b.webp' /></p><h2>சிறை தண்டனை</h2><p>
</p><p>
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதத்தில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.</p><p></p><p>
</p><p>
இது தவிர, கந்துவட்டி மற்றும் மிரட்டல் வழக்குகளிலும் இவருக்கு தனித்தனியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. </p><p>இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
</p><p>

அதேசமயம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ; பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-l-exam-notice-issued-by-exams-department-1784049997"></link>
            <id>https://jvpnews.com/article/a-l-exam-notice-issued-by-exams-department-1784049997</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509d9014-04e5-4283-91f4-62e430d92b1c/26-6a56714eecac2.webp' /></p><p style="text-align: justify; ">

 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-14T17:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; நண்பனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-night-incident-in-tamil-area-1784048834"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-night-incident-in-tamil-area-1784048834</id>
            <summary type="text">கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

A32 நெடுஞ்சாலையில் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

A32 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35641c27-ed64-465d-a263-3a51f192543d/26-6a566cc3c9282.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இத்துயரச் சம்பவம்&nbsp; இரவு 10.00 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் A32 நெடுஞ்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பூநகரி பள்ளிக்குடா" சந்தியில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p></p><p>
</p><p>
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பூநகரி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுறோட்டில் பொலிஸ் அதிகாரியின் வெறிச்செயல் ; பிறந்தநாளன்று துடிதுடித்து பிரிந்த மனைவியின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>

டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாநது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4749da60-e0fe-4f79-8ae6-6b6b47e97e19/26-6a562ba26edf5.webp' /></p><p></p><h2>அடிக்கடி குடும்ப தகராறு&nbsp;</h2><p>
</p><p>
 எனினும் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார். </p><p>

இந்நிலையில், நேற்று (13) பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்றபோது&nbsp; கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வைத்தியசாலை அருகே கடுமையான வாக்குவாதம்&nbsp; ஏற்பட்டது.</p><p></p><p>
</p><p>
இதன்போது , மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். </p><p>

இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பயணமானார் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406"></link>
            <id>https://jvpnews.com/article/pm-dr-harini-amarasuriya-departs-for-qatar-1784046406</id>
            <summary type="text">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். </p><p style="text-align: justify;">

 

இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கவுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7951814-032f-4d78-a927-a848b595eefd/26-6a566348b6fc8.webp' /></p><h2 style="text-align: justify;">நட்புறவு</h2><p> </p><p style="text-align: justify;">

 

மேலும், இந்த விஜயமானது இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. </p><p style="text-align: justify;">

 

அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதே விமானத்தில் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

 

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-217 என்ற விமானத்தின் மூலம் இன்று இரவு 6.50 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T16:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு ; நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380"></link>
            <id>https://jvpnews.com/article/special-security-for-key-figures-confirmed-1784045380</id>
            <summary type="text">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (14) விளக்கமளித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28321edc-ad86-4ed5-8e31-766866cbd783/26-6a565f468b200.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட பிரமுகர் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p style="text-align: justify; ">

 

அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-announced-for-a-l-students-1784043909"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-announced-for-a-l-students-1784043909</id>
            <summary type="text">ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;">

இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f788c06-7e8a-419d-bd64-d8292320dbde/26-6a565987e4ddb.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இது கடனல்ல, மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
</p><p style="text-align: justify;">
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலை 3, 4 மற்றும் 5க்கு உட்பட்ட 100 தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் பயன்பெறலாம்.</p><p style="text-align: justify;">

மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">

மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்த நிதியுதவி குறித்த விரிவான தகவல்களை www.etfb.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகரெட் வரி குறைப்பால் ரூ. 25 பில்லியன் இலங்கைக்கு வருமான இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-loses-rs-25-billion-cigarette-tax-reduction-1784031131"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-loses-rs-25-billion-cigarette-tax-reduction-1784031131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. 

இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. 

இலங்கை இறுதியாக 2018 ஆம் ஆண்டில் (74%) இந்த இலக்கை நெருங்கியது. </p><p>ஆனால், அதன் பின்னர் அந்த இலக்கைத் தக்கவைக்கத் தவறியதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் வரிப் பங்கு 67 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014cd449-9041-4ad5-b814-859dd7fd8ceb/26-6a56279cf0d44.webp' /></p><p>
</p><p>
சிகரெட்டுகளுக்கான வரிகள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயத்தை விடக் குறைவாக விதிக்கப்பட்டதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சாத்தியமான வரி வருமானத்தை இழந்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த வரி வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்பட்டது.</p><p>

 நிதி இழப்புகளை நிமிட அடிப்படையில் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Cigarette Tax Leakage Tracker’ (சிகரெட் வரி கசிவு கண்காணிப்பான்) என்ற புதிய இணையவழி டாஷ்போட் (online dashboard) மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதிகளில் மக்கள் இருக்க ... காணிகளில் பணம் அள்ளும் இராணுவத்தினர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/military-engages-farming-on-people-lands-in-jaffna-1784030530"></link>
            <id>https://jvpnews.com/article/military-engages-farming-on-people-lands-in-jaffna-1784030530</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903c62cf-f93a-4025-b1b4-f296f144789a/26-6a5625449ce56.webp' /></p><h2>மக்களை&nbsp; ஏமாற்றும்&nbsp; அரசாங்கம்</h2><p> </p><p>

அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.
</p><p>
பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும் , எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி , அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adb3b55-f740-4ca9-9411-fb3123401aa3/26-6a562543e47c9.webp' /></p><p> </p><p>

நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.</p><p></p><p> </p><p>

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது. 

வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>



மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் எனவும் வலிவடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிக்க 7.26 மில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/7-26-million-to-expand-bandaranaike-airport-1784032562"></link>
            <id>https://jvpnews.com/article/7-26-million-to-expand-bandaranaike-airport-1784032562</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படு முனையத்தை விஸ்தரிக்கும் பணிகளை நிறைவு செய்வதற்காக, மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படு முனையத்தை விஸ்தரிக்கும் பணிகளை நிறைவு செய்வதற்காக, மெஸ்ஸர்ஸ் மேகா இன்ஜினியரிங் (M/s Maga Engineering (Pvt.) Ltd) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>


இந்தத் திட்டத்தின் கீழ், 36 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் பயணிகள் முனையத்தை விமான அணுகல் பகுதிகளுடன் இணைக்கும் ஆறு நடைபாதைகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22602243-301e-4727-9e97-241ace1fec28/26-6a562d3443afc.webp' /></p><h2>&nbsp;ஆறு நடைபாதைகளைக் கொண்ட புதிய கட்டிடம்</h2><p>
</p><p>


இதன் மூலம் புறப்படும் பயணிகளுக்கான வசதிகளை விஸ்தரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.



சர்வதேச போட்டித்தன்மை கொண்ட கொள்முதல் முறைமைக்கமைய, மூன்று ஏலங்கள் பெறப்பட்டன. </p><p>உயர் மட்ட நிரந்தர கொள்முதல் குழுவின் மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளைத் தொடர்ந்து, மிகக் குறைந்த தகுதியான ஏலதாரராக மேகா இன்ஜினியரிங் நிறுவனம் அடையாளப்படுத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>


இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (VAT நீங்கலாக) மற்றும் 3.77 பில்லியன் ரூபாவாகும் (VAT நீங்கலாக). இதற்கான யோசனையை துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
