<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T03:46:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாநகரசபை ஊழல் விசாரணை ; ரோசி சேனாநாயக்க வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118"></link>
            <id>https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். </p><p style="text-align: justify; ">ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமையவே அவர் சமூகமளித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd2b917-6d2f-4826-b4b0-a37502bdbfb3/26-6a5af220179ff.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; "> 

2022 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேவையுடைய மக்களுக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை விநியோகித்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வெளியில் வந்து இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அந்த வேலைத்திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தனர் என்றார்.</p><p style="text-align: justify; ">

கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்பட்ட பாரிய நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது ஸ்தாபிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">கொழும்பு 3. காலி வீதியில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதும் விசாரணை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்காக அதன் சேவைக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142"></link>
            <id>https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142</id>
            <summary type="text">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். 

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08eaabe9-b3c9-4ee4-841a-f50bf20d2a43/26-6a5aee503acbd.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் திருமண வாழ்க்கையால் விரக்தி ; மார்பில் சுட்டு உயிர் மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; வெளிவந்த பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385"></link>
            <id>https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p style="text-align: justify; ">
விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327447eb-c391-442a-a507-45dc97ce98df/26-6a5aeb5b9229e.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p style="text-align: justify; ">விக்ரமரத்னவின் மகனின் மனைவி, பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T02:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335"></link>
            <id>https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335</id>
            <summary type="text">இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca93679-b81a-4cad-8947-d9e032bfc6e6/26-6a5ac8010836f.webp' /></p><p>ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>இதன்போது சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், வனப்பகுதியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>அதன் பின்னர், மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நாயுடுப்பேட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தலைமறைவாக உள்ள சந்தேகநபர் ராகேஷை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம் ; பணமழையில் நனையப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-be-drenched-in-money-rain-1784335278"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-be-drenched-in-money-rain-1784335278</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் மன உறுதியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16 அன்று தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p>இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, வணிக முடிவுகள் மற்றும் கல்வியில் சாதகமான முடிவுகளை வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97da7673-74db-4459-9490-01058906d20a/26-6a5acbafc12b5.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசியில் செவ்வாய் அமைந்திருப்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் ஆசியால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.</p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அடைய முடியும். இந்த யோகம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.</p><h4>மகரம்
</h4><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். குறிப்பாக அவர்கள் நிதிரீதியாக சிறப்பான பலன்களை அடைவார்கள். அவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.</p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மகத்தான நன்மைகளை வழங்கப்போகிறது. வணிகர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்யலாம் அல்லது ஏற்கனவே உள்ள முயற்சிகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வுகள் அல்லது சிறந்த வாய்ப்புகளை உறுதியளிக்கும் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-18T00:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765</id>
            <summary type="text">சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்காரர்கள் பிடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர்.</p><p>

கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது அஞ்சல் உறைகள் சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4099a5d4-bf2f-4dc9-8fd6-bf0e5f843cb8/26-6a5ac1de93662.webp' /></p><p>தினமும் அதிகப்படியான சர்வதேச அஞ்சல்கள் நாட்டுக்கு வருவதால், அனைத்து பொதிகளையும் ஆய்வு செய்ய முடியாது.
</p><p>
எனவே, சந்தேகத்திற்குரிய பொதிகளைக் கண்டறிய சுங்கத்துறை ஆய்வுக் கருவி தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது.</p><p>

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய அஞ்சல்; உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
</p><p>
தனித்தனி உறைககளில் உள்ள போதைப்பொருட்களின் அளவு குறைவாகத் தோன்றினாலும், அவை இறுதிப் பயனாளியைச் சென்றடைந்து, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna Kings அணியைச் சூழ்ந்த சர்ச்சை ; இந்திய இளையோர் அணி வீரர் மன்ஜோத் கல்ரா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e95bbc6-c52f-426c-8e19-58b6d9d39fcf/26-6a5abe1f9598d.webp' /></p><p>போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.
</p><p>
சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.</p><p> பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:48:08+00:00</updated>
        </entry>
    </feed>
