<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T02:33:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335"></link>
            <id>https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335</id>
            <summary type="text">இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca93679-b81a-4cad-8947-d9e032bfc6e6/26-6a5ac8010836f.webp' /></p><p>ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>இதன்போது சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், வனப்பகுதியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>அதன் பின்னர், மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நாயுடுப்பேட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தலைமறைவாக உள்ள சந்தேகநபர் ராகேஷை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம் ; பணமழையில் நனையப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-be-drenched-in-money-rain-1784335278"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-be-drenched-in-money-rain-1784335278</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் மன உறுதியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16 அன்று தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p>இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, வணிக முடிவுகள் மற்றும் கல்வியில் சாதகமான முடிவுகளை வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97da7673-74db-4459-9490-01058906d20a/26-6a5acbafc12b5.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசியில் செவ்வாய் அமைந்திருப்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் ஆசியால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.</p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அடைய முடியும். இந்த யோகம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.</p><h4>மகரம்
</h4><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலத்தில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். குறிப்பாக அவர்கள் நிதிரீதியாக சிறப்பான பலன்களை அடைவார்கள். அவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.</p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மகத்தான நன்மைகளை வழங்கப்போகிறது. வணிகர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்யலாம் அல்லது ஏற்கனவே உள்ள முயற்சிகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வுகள் அல்லது சிறந்த வாய்ப்புகளை உறுதியளிக்கும் புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-18T00:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765</id>
            <summary type="text">சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்காரர்கள் பிடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர்.</p><p>

கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது அஞ்சல் உறைகள் சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4099a5d4-bf2f-4dc9-8fd6-bf0e5f843cb8/26-6a5ac1de93662.webp' /></p><p>தினமும் அதிகப்படியான சர்வதேச அஞ்சல்கள் நாட்டுக்கு வருவதால், அனைத்து பொதிகளையும் ஆய்வு செய்ய முடியாது.
</p><p>
எனவே, சந்தேகத்திற்குரிய பொதிகளைக் கண்டறிய சுங்கத்துறை ஆய்வுக் கருவி தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது.</p><p>

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய அஞ்சல்; உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
</p><p>
தனித்தனி உறைககளில் உள்ள போதைப்பொருட்களின் அளவு குறைவாகத் தோன்றினாலும், அவை இறுதிப் பயனாளியைச் சென்றடைந்து, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna Kings அணியைச் சூழ்ந்த சர்ச்சை ; இந்திய இளையோர் அணி வீரர் மன்ஜோத் கல்ரா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e95bbc6-c52f-426c-8e19-58b6d9d39fcf/26-6a5abe1f9598d.webp' /></p><p>போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.
</p><p>
சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.</p><p> பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. </p><p>பரிசோதனை முடிவில் அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டதுடன், போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்ற உரிமையாளர் தொடர்பான தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என விசாரணையில் தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e67a50-ca65-4495-ad4f-9f58c3d973c9/26-6a5a9ad377f68.webp' /></p><p>இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p>

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
</p><p>
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய் போத்தல்கள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927</id>
            <summary type="text">நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f54b97-b49f-4167-805f-1f11ef1e08c1/26-6a5a9788d89c8.webp' /></p><p>தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு ; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157"></link>
            <id>https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157</id>
            <summary type="text">இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>

இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd6afe3-3efb-48ff-9dc9-396bc94301ae/26-6a5a948688946.webp' /></p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:48:19+00:00</updated>
        </entry>
    </feed>
