<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T05:30:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் போதைப்பொருள்; ஷாக்கான பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965</id>
            <summary type="text">கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f35bed-4030-493e-bea9-63cf5154154b/26-6a9e4bb692a63.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 350 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது</p><p>.

கைது செய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-07T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517"></link>
            <id>https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517</id>
            <summary type="text">&amp;nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள்ளன.
</p><p>


இதன்படி, ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734a944a-9af8-4b0f-a312-59d0660cdcd9/26-6a9e460ed0a40.webp' /></p><p>



இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.



குறித்த பரீட்சை டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T05:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து இந்தியா சென்ற 13 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249"></link>
            <id>https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p> 

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd8f59d-7274-4b03-8dbb-36536cd16f40/26-6a9e4502b5637.webp' /></p><h2>&nbsp;13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...</h2><p> </p><p>

ஒரு பெண் மற்றும் 12 ஆண்கள் உட்பட 13 பேர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> </p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>&nbsp; &nbsp; கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T04:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசான் விமான விபத்து ; ஐவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/amazon-flight-crashes-miami-airport-five-dead-1788756556"></link>
            <id>https://jvpnews.com/article/amazon-flight-crashes-miami-airport-five-dead-1788756556</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f06e6-29d6-4dcf-be88-4120b8d4d262/26-6a9e424d7be0a.webp' /></p><h2>மாணவர் விடுதி இடிந்து விபத்து</h2><p>
</p><p>
இதேவேளை. இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
விமான விபத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு 11 பேரை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-07T04:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்திலிருந்து சென்ற வாகனம் கோர விபத்து; தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
</p><p>


 இந்த விபத்து தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a37d0fb-8bca-4100-a012-5e950d111f35/26-6a9e4034908ea.webp' /></p><h2>தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்</h2><p>
</p><p>


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார், வீதி பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதிய பின்னர் மையப் பாதுகாப்பு வேலியில் மோதியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>


விபத்தில் பாதுகாப்பு வேலி மற்றும் வீதி பராமரிப்புத் தடுப்புகள் சேதமடைந்ததுடன், சொகுசு காரும் பலத்த சேதமடைந்துள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T04:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-in-number-plates-in-sri-lanka-1788754180"></link>
            <id>https://jvpnews.com/article/changes-in-number-plates-in-sri-lanka-1788754180</id>
            <summary type="text">இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அவ்வாறு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமானவை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களிலான இலக்கத் தகடுகள் வழங்கப்படும். மேலும் பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2><b>வாகன இலக்கத் தகடுகள்</b></h2><p>ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 56,233 இலக்கத் தகடுகளும் அவற்றுள் அடங்கும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65c2b99c-14c6-4583-9a0f-4a3f8308b6ea/26-6a9e3c33bd165.webp' /></p><p>மேலும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களின் இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகன உரிமையாளர்கள் நாராஹேன்பிட்டி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு வந்து தமது வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T04:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய 10 கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் ; அசுர வளர்ச்சியை காணப்போகும் ராசிக்காரங்க இவங்க தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180"></link>
            <id>https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9861d4-00be-4230-bb8f-47ec7f397588/26-6a9e0256b0bbe.webp' /></p><p>இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506918e0-7967-4179-acfb-192d1e4e1a40/26-6a9e025608ded.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e19356-1d12-416d-8bdf-78c80216eb36/26-6a9e0258d2bae.webp' /></p><h3>தனுசு</h3><p>
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788672a3-c94e-4215-a685-8822eaec39a2/26-6a9e0258192bd.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c5f1e9-1cce-4410-aef2-0ca0c78734c9/26-6a9e0257639b9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:07+00:00</updated>
        </entry>
    </feed>
