<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T23:52:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் ருமேஷ் தரங்க வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.</p><p> </p><p></p><p>இதில் அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த திறமையை வெளிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e0c778-c110-46e2-9fd1-f87a8d325750/26-6a9c8e669fe89.webp' /></p><p>இப்போட்டியின் இரண்டாம் இடத்தை போலந்தின் டேவிட் வேக்னர் 87.47 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 116 நாட்களில் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd56e38-f01b-4744-9328-37e0e8424cea/26-6a9c5ff607762.webp' /></p><p>தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய நிலையில், “இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது; நன்றாகத் தயாராகி வரச் சொல்லுங்கள்” என உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குரல் எழுப்பியதாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். </p><p>குறிப்பாக, தவெக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உதயநிதி அமைதியாகத் தண்ணீர் அருந்திய காட்சியை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
</p><p>
மறுபுறம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் எவ்வாறு பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பதிலளிப்பாரா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,600 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f1a94-e66e-4141-a9ab-98f14983b12b/26-6a9c7bd1a4e9c.webp' /></p><p>இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக இதே சுரங்கத்திலிருந்து நேற்று முன்தினம் இரண்டு நேபாளிகள் வியத்தகு முறையில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஆற்றின் மேல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக, ஆறு நீர்வழங்கல் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440"></link>
            <id>https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440</id>
            <summary type="text">இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். 

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். </p><p>

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) வெற்றியாளருக்குரிய கிரீடத்தைச் சூட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3344c7f-033e-471b-8853-77a01dfeed30/26-6a9c80a1d72d6.webp' /></p><p>வியட்நாமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முறையே ஸ்பெயின் மற்றும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர். 

இப்போட்டித் தொடர் இம்முறை அதன் 73ஆவது பதிப்பாக நடைபெற்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T20:50:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது, போதைப்பொருட்களுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-drugs-at-events-featuring-school-emblems-1788630804"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-drugs-at-events-featuring-school-emblems-1788630804</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.</p><p></p><p>

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9510a579-73d2-4009-b627-5fbcbc32a53e/26-6a9c5716032d1.webp' /></p><p>‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.</p><p>

நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' (Big Matches) தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T17:53:34+00:00</updated>
        </entry>
    </feed>
