<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T06:42:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு படையெடுத்த நாடாளுமன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliamentary-officials-under-ciaboc-investigation-1788417268"></link>
            <id>https://jvpnews.com/article/parliamentary-officials-under-ciaboc-investigation-1788417268</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று (03) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று (03) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
</p><p>


முன்னாள் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் CIABOC ஆஜராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f8f5d7-2efb-4b49-8bec-4c90e5e91471/26-6a9914f5d0005.webp' /></p><p></p><p>



குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் பாராளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இந்த விவகாரம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புழக்கத்திற்கு வந்த ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trump-s-face-is-now-on-money-with-1-coins-1788416809"></link>
            <id>https://jvpnews.com/article/trump-s-face-is-now-on-money-with-1-coins-1788416809</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.</p><p>

அமெரிக்க நாணயத் துறை (US Mint) வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பு நாணயங்களை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c474ed4d-2147-4277-b3dd-a9dd5d0b77d7/26-6a99132ac83e6.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க நாணய வரலாற்றில் இதுவொரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படும் அதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க இந்த நாணயங்கள் சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன</p>]]></content>
            <updated>2026-09-03T06:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/israel-employme-website-new-opportunity-sri-lankan-1788416495"></link>
            <id>https://jvpnews.com/article/israel-employme-website-new-opportunity-sri-lankan-1788416495</id>
            <summary type="text">இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணைய முகப்பு இன்று வியாழக்கிழமை (03) காலை திறக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, இன்று 10,000 விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க முடியும். </p><p>இதில் 8,000 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 2,000 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6751c2f-40c9-49c0-8f81-e61daf538273/26-6a9911f0de1c5.webp' /></p><p>

இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகார சபையான பீபா அமைப்பின் அறிவிப்புக்கு அமைய, இந்த இணைய முகப்பு திறக்கப்படுவதோடு, குறிப்பிடப்பட்ட 10,000 விண்ணப்பதாரர்கள் பூர்த்தியானதும் இணைய முகப்பு தானாகவே மூடப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட, ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறனுடைய மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கொண்ட ஆண்களும் பெண்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
</p><p>

தோட்ட அலங்காரம் , மீள்சுழற்சி சேகரிப்பு சேவைகள், பொருட்கள் பொதியிடல், உணவு உற்பத்தி சார்ந்த பணிகள், பொருட்கள் கையாளுநர்கள் உட்பட மேலும் பல பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. </p><p>இந்த பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பணி அனுபவம் இருப்பது அவசியமாகும். </p><p>மேலும், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக முன்னர் ஏதேனும் இரண்டு துறைகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விபரங்களை பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திலும் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள குழுவினருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-providing-motorcycle-underworld-gang-1788414457"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-providing-motorcycle-underworld-gang-1788414457</id>
            <summary type="text">பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் &quot;போம்புவல சுத்தா&quot; என்ற புனைப்பெயரில் அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><p> 

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7216a0b0-6ff1-4bdd-9214-ab84f4cd5a76/26-6a9909facbe37.webp' /></p><p>கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p> 

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி உத்தரவைத் தொடர்ந்து யாழ் வலி வடக்கில் காணி விடுவிப்புக்கு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-for-land-release-jaffna-valley-north-1788413285"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-for-land-release-jaffna-valley-north-1788413285</id>
            <summary type="text">யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடத்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p> </p><p></p><p>அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>
 மேலும் தெரிவிக்கையில் 


காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f246f0fc-bf33-49d6-9428-313ed6dbf7b9/26-6a99056734a25.webp' /></p><p>அண்மையில் ஜனாதிபதி அனுர தலைமையில இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.
</p><p>
அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இம்மாதம் செப்டம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. </p><p>

எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம் போதை ஒழிப்பு போன்ற விடயங்கள் கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். </p><p>

நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
நாட்டை குழப்பம் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில் செயற்பட்டுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது தோழர் அனுரா குமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக செயற்பட்டு வருகிறார். </p><p>

நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். </p><p>

இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43abc0ba-69b1-4f78-b5f3-39161a3f0cd2/26-6a9905667fb4b.webp' /></p><p>

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள். </p><p>

அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.</p><p> 

 இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல.
</p><p>
மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. </p><p>

ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.

வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dbb8594-7018-45cf-8c31-7ebbecb73cd6/26-6a99042860ccd.webp' /></p><h2>கடந்த வருடம் 10 லட்சத்திற்கு&nbsp; ஏலம்</h2><p> 

கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூசு தட்டப்படும் மிக் விமான கொள்வனவு; கிலியில் ராஜபக்சர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/purchase-mig-aircraft-gotabaya-rajapaksas-panic-1788411586"></link>
            <id>https://jvpnews.com/article/purchase-mig-aircraft-gotabaya-rajapaksas-panic-1788411586</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகின்றதாக கூறப்படும் நிலையில் ராஜபக்சர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகின்றதாக கூறப்படும் நிலையில் ராஜபக்சர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் வகையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc74b150-88b3-468c-b218-f6da5d2e86f9/26-6a98fec3d8d00.webp' /></p><h2>கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் நோக்கம்&nbsp;</h2><p>

ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்டவர்கள் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் செய்யாது; சுரேன் ராகவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-repeating-historical-mistake-suren-1788411065"></link>
            <id>https://jvpnews.com/article/without-repeating-historical-mistake-suren-1788411065</id>
            <summary type="text">&amp;nbsp;முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 

இலங்கை சுதந்திர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். </p><p>

இலங்கை சுதந்திர கட்சியின் 75 ஆவது நிறைவை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123a8ec1-65f5-43d0-99e3-3c9a51fa6864/26-6a98fcbb6dd4b.webp' /></p><p> </p><p>

இலங்கை சுதந்திர கட்சி தமிழுக்கும் தமிழர்களுக்குமான கனவுகளை சுமந்த கட்சியாகும். 

ஆம், நாங்கள் வரலாற்று ரீதியிலான தவறிழைத்தோம். ஆனால் அது மன்னிக்க கூடியது.</p><p></p><p> </p><p> குற்றம் செய்யாத ஒரு கட்சி இல்லை. 

காந்தியடிகள் கூட குற்றம் இழைத்தார். இலங்கை சுதந்திர கட்சி இழைத்த தவறுக்கு தமிழன் என்ற வகையில் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். </p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ministry-energy-announcement-regard-coal-shortage-1788410516"></link>
            <id>https://jvpnews.com/article/ministry-energy-announcement-regard-coal-shortage-1788410516</id>
            <summary type="text">நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d31d739d-ea45-4966-b7d8-d40b64458a28/26-6a98fa95e2204.webp' /></p><p>இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது.</p><p> 

மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், குறித்த கப்பல்களிலிருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் நிலக்கரி மூலம் முறையான மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். </p><p>

தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

எவ்வாறாயினும், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். </p><p>

எதிர்காலத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-filed-against-159-npp-members-parliament-1788409668"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-filed-against-159-npp-members-parliament-1788409668</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக &#039;தினன தகுண&#039; (Dhinana Dakuna) அமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக 'தினன தகுண' (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அவர்கள் அந்த நிதியை மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25ac61db-a3b4-4127-9abd-1136106bd0fd/26-6a98f746294dc.webp' /></p><p>

நேற்று (2) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாட்டில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரைவான விசாரணையை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
</p><p>
ஐந்து முக்கிய காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும், கட்சியின் வங்கிக் கணக்குகளைப் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commonwealth-bar-association-deeply-dissatisfied-1788409062"></link>
            <id>https://jvpnews.com/article/commonwealth-bar-association-deeply-dissatisfied-1788409062</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (Commonwealth Lawyers' Association) தலைவர் ஸ்டீவன் திரு, வழக்கின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அவதானிப்புகளின் அடிப்படையில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களுக்கு வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கான உரிமையை மறுத்து (Right of Reply), எழுத்துப்பூர்வமாக மட்டும் சமர்ப்பிப்புகளை வழங்குமாறு கோரப்பட்டமையானது பெரும்பாலான நீதித்துறை வரம்புகளில் வழக்கமாக இடம்பெறாத ஒன்று எனக் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9280a164-11dc-4ad4-863b-c53bf9fe444c/26-6a98f4e7cea61.webp' /></p><p>இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் வாய்மொழி மூல பதிலளிப்புக்கான உரிமை கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் சார்ந்த இந்த முக்கிய வழக்கை விசாரிப்பதற்கு பூரண நீதியரசர்கள் ஆயம் (Full Bench) அல்லது விரிவான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்படாமையும், உயர்நீதிமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட நீதியரசர்கள் இந்த ஆயத்தில் இடம்பெறாமையும் சட்டத்தரணிகள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

ஏனைய நாடுகளில் இவ்வாறான முக்கிய வழக்குகளின் போது மிக சிரேஷ்ட நீதியரசர்கள் இணைந்து அமர்வில் பங்கேற்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்குவது தொடர்பில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் இந்த வழக்கிலிருந்து விலகி வேறு தரப்புக்கு வாய்ப்பளித்திருக்கலாமா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், வழக்கின் சட்டப்பூர்வமான வாதங்களை விட நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது என அவர் அழுத்தமாகக் கூறினார்.
</p><p>
நீதித்துறை சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், சட்டக் கோட்பாடுகள் பற்றி வாதிடுவதில் பலனில்லை என்றும், குடிமக்களின் கடைசி அரணாக விளங்கும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்பப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் எச்சரித்தார்.</p><p>

எனவே, இந்த முழுமையான செயன்முறையின் பின்னர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதா அல்லது சீர்குலைந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-that-took-place-colombo-short-while-ago-1788408480"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-that-took-place-colombo-short-while-ago-1788408480</id>
            <summary type="text">கொமும்பு பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (3) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 
மேலதிக விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொமும்பு பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (3) பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 
</p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>பொலிஸாரின் தகவலின்படி, சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர்.</p><p> எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியை தொடர்ந்து செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857c8691-cdba-4cef-9343-75092b7122c7/26-6a98f2a258031.webp' /></p><p>இதனையடுத்து, முச்சக்கர வண்டியை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
பின்னர் முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வரர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு ; திலினி பிரியமாலிக்கு மீண்டும் பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-issued-again-for-thilini-priyamali-1788407798"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-issued-again-for-thilini-priyamali-1788407798</id>
            <summary type="text">கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது பிணையில் உள்ள தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது பிணையில் உள்ள திலினி பிரியமாலியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கோட்டை நீதிபதி பாசன் அமரசேன நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff48dc8-3bcd-4dc5-9ee6-da851a5eef0b/26-6a98eff848280.webp' /></p><p>இதனையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி, சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மேலும், சந்தேகநபர் இல்லாத நிலையிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 192ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரணையை முன்னெடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இதற்கிடையில், திலினி பிரியமாலியின் பிணைதாரர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34ஆவது மாடியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த திலினி பிரியமாலி, திட்ட முதலீடுகளுக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பல கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T03:58:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-illegal-electronic-cigarettes-1788405314"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-illegal-electronic-cigarettes-1788405314</id>
            <summary type="text">இலங்கை கடற்படையும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீ லங்கா கடற்படை கப்பலான ரங்கலவின் அதிகாரிகளும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கடந்த (01) ஆம் திகதி வெல்லம்பிட்டியில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571a1a3e-0ade-4f65-b3a9-d20350bf881f/26-6a98e643f05b4.webp' /></p><p>இதன்போது, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p>

இச்சோதனையின் போது சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகள் 130 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகநபர், கார் மற்றும் சட்டவிரோத சிகரெட் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T03:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-with-drug-pills-in-colombo-1788404615"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-with-drug-pills-in-colombo-1788404615</id>
            <summary type="text">கொழும்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73da0eb2-a482-4809-bad9-b8290bb33b51/26-6a98e3891630b.webp' /></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. </p><p>

கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T03:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அஸ்வெசும தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-the-elderly-regarding-aswesuma-1788404187"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-the-elderly-regarding-aswesuma-1788404187</id>
            <summary type="text">2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f564c769-e7de-43a9-93d7-5718910993f8/26-6a98e1dca3ed0.webp' /></p><p>மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T02:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகள் ; அதிரஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913"></link>
            <id>https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913</id>
            <summary type="text">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் பல முக்கியமான கிரகங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; ">குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியிலும்,&nbsp; சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பர். சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அமைந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fa267d-31e3-4296-9303-4f9335cd5737/26-6a98c95ab28ed.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உள்ள கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p style="text-align: justify; "><b> ரிஷபம் :</b> தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>கடகம் :&nbsp;</b>தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; "><b>
கன்னி :</b>&nbsp;குருவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கு நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடைந்து மன திருப்தியைத் தரும்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு : </b>&nbsp;தொழிலதிபர்கள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வேனுடன் பிடிபட்ட நபர் ; சிசிரிவி காணொளிகளால் நீண்டகாலம் அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924</id>
            <summary type="text">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை, சிறிய ரக வேனில் வந்த நபரொருவர் பிடித்து ஏற்றிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314c581-16f9-4ce6-bdee-ed086e1086e8/26-6a98c57f33c2b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">
முறைப்பாட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

</p><p style="text-align: justify; ">இதன்போது, சிசிரிவி காணொளிகளின் உதவியுடன் ஆடு கடத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை (01) காத்தான்குடி பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக வாகனங்களைப் பயன்படுத்தி ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளா ; நீரிழிவு வரை செல்லும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641"></link>
            <id>https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641</id>
            <summary type="text">நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.அப்படி பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p>அப்படி படுக்கும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689635e0-f8cd-4b6f-9a93-34b2ca945e27/26-6a98b8ac00f2c.webp' /></p><h2>காத்திருக்கும் ஆபத்து&nbsp;</h2><p>

</p><p>சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லவதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல் நோக்கி வரக்கூடும். இது கடுமையான நெஞ்சு எரிச்சல், உணவு செரிமானம் தாமதமாவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடலில் அசௌகரியம் ஏற்படும்.</p><p> உணவில் உள்ள கலோரிகள் சரியாக எரியாமல் கொழுப்பாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும்.</p><p> வயிறு முட்டல் காரணமாக ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படும்.. இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p></p><p>
</p><p>
எனவே இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது உடலுக்கு நல்லது.</p><p>முக்கியமாக இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634</id>
            <summary type="text">சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01bbe79e-c230-4b04-8b1c-c84e534c0a8c/26-6a98a1339d59a.webp' /></p><h2>சந்தைப் பெறுமதி</h2><p>

சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

</p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; அகில இலங்கையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616</id>
            <summary type="text">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார்.</p><p style="text-align: justify;">குறித்த மாணவன்&nbsp;புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094d239a-2d57-4e64-b656-444943d10528/26-6a98c06188b97.webp' /></p><p style="text-align: justify; ">

யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலைக்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக&nbsp; மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T01:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302</id>
            <summary type="text">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aefc306-c1d3-4ca0-bb42-f76d9f6ece68/26-6a987107f36be.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆடை வியாபாரம்&nbsp;</h2><p style="text-align: justify; "> இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.</p><p style="text-align: justify; "> வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். </p><p style="text-align: justify; ">தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-03T01:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca6bf7e-c120-4da4-b678-4ef547b230b6/26-6a9859e1ed5da.webp' /></p><h2 style="text-align: justify; ">வெட்டுப்புள்ளி</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:13:31+00:00</updated>
        </entry>
    </feed>
