<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T04:53:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கைப் பெண்ணை கட்டாய உழைப்புக்கு உட்படுத்திய இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-woman-to-forced-labor-in-malaysia-1784782347"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-woman-to-forced-labor-in-malaysia-1784782347</id>
            <summary type="text">மலேசியாவில் இலங்கைப் பெண் ஒருவரை கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 38 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் இலங்கைப் பெண் ஒருவரை கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 38 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>அதேவேளை, பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
சிலாங்கூர் மாநிலத்தின் ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில், மலேசிய குடிவரவுத் திணைக்களத்தின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவு, பணமோசடி எதிர்ப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965904b1-5502-4722-8840-732fbf1ce244/26-6a619e0d0d261.webp' /></p><p>

இலங்கைப் பெண் ஒருவர் கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டு சுரண்டப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சோதனையின் போது, சட்டப்பூர்வமான பயண ஆவணங்கள் மற்றும் செல்லுபடியாகும் வீசா இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 21 முதல் 51 வயதுக்குட்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலைவாய்ப்பும் வேலை அனுமதிப் பத்திரமும் பெற்றுத் தருவதாக உறுதியளித்து மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகத்தில் எந்தவித சம்பளமும் வழங்காமல் அவரிடம் வேலை வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை என்றும், உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கும் அவர் உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட 38 வயதுடைய இலங்கையர், மலேசியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து நீண்டகால சமூக விஜய வீசாவில் அந்நாட்டில் தங்கியிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் மீது மலேசியாவின் 2007 ஆம் ஆண்டின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1959/63 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொழிலாளர் சுரண்டல், கட்டாய உழைப்பு மற்றும் மனித வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மலேசிய குடிவரவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[El Niño முன்கூட்டியே இலங்கையில் முன்கூட்டியே தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-impacts-sri-lanka-early-1784782204"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-impacts-sri-lanka-early-1784782204</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார். </p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் துறை அமைச்சர், 'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92c042af-2562-485f-930b-668cc531cdf1/26-6a619d7de6375.webp' /></p><h2>இலங்கையில் வறண்ட வானிலை&nbsp;</h2><p> </p><p>

 ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கலாநிதி பட்டபெந்தி குறிப்பிட்டார்.</p><p> 

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும் எனவும், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:48:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் இன் ஜனநாயகன்; உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jana-nayagan-fans-celebrate-grand-style-1784781697"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jana-nayagan-fans-celebrate-grand-style-1784781697</id>
            <summary type="text"> முதலமைச்சர் ,&amp;nbsp; &amp;nbsp; தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் &#039;ஜனநாயகன்&#039; திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p> முதலமைச்சர் ,&nbsp; &nbsp; தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள்,

இந்திய அளவில்: 3,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகள்,
உலகம் முழுவதும்: 8,000 திரையரங்குகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ec4b0-8c16-4966-8b69-cbac1089d6dd/26-6a619b82a2ce1.webp' /></p><h2>சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டம்</h2><p>

'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடவுள்ளதை முன்னிட்டு, குமரி - கேரள எல்லைப் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.</p><p>

குறித்த திரையரங்கில் வர்ண விளக்குகளில் அலங்காரத்துடன், சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே திரையரங்கிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், ஆடல் பாடலுடன் திரைப்படத்தின் வருகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் ; யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019</id>
            <summary type="text">தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.</p><p> 

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f583057b-8258-4873-8612-f636ac2d9a79/26-6a61893c90845.webp' /></p><p>இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. </p><p>

இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p> 

மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p> 

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு சோதனையின் போது வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360"></link>
            <id>https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360</id>
            <summary type="text">தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6287ad-621d-41c3-9bf8-0e9d1ba1d85e/26-6a619a31eb3b8.webp' /></p><p>இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உற்பத்திச் செலவு அதிகரிப்பு ; சாராய விலையில் புதிய திருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187"></link>
            <id>https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187</id>
            <summary type="text">உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefb591-4ef7-4f9e-b2b5-03f2d5de3f46/26-6a61959ce9d64.webp' /></p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சியை அகற்ற முடியாது ; அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751</id>
            <summary type="text">எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ecfbf6-c745-41a0-aed2-e1eb1664e4c5/26-6a6193e8750ba.webp' /></p><p>

பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார்.
</p><p>
அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதாகவும், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் புதிய மோசடி ; வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340"></link>
            <id>https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340</id>
            <summary type="text">பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>

வட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பண மோசடிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அண்மைக் காலமாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மோசடிகளில் ஈடுபடுவோர், இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/600e4c8a-0feb-4fd9-b8fc-88d5ea89b564/26-6a61924d9165c.webp' /></p><p>அதன்போது, வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்குத் தொடரப்படும் அல்லது கணக்குகள் முடக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர். </p><p>பின்னர், "இரகசிய விசாரணை" நடைபெற்று வருவதாகக் கூறி, அதற்கு ஒத்துழைத்தால் பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும் என நம்பவைத்து, வட்ஸ்அப் மூலம் போலியான பொலிஸ் அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை அனுப்புகின்றனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீளச் செயல்படுத்த வேண்டும் என்ற பெயரில் OTP (One-Time Password) இலக்கங்களை கேட்பதுடன், வங்கிக் கணக்கில் உள்நுழைய தேவையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். </p><p>மேலும், பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறோ அல்லது USDT உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் அனுப்புமாறோ அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், வங்கி அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e09250-2a75-427e-a896-e2e5111677c7/26-6a61924e3f9e7.webp' /></p><p>

மேலும், "கணக்கு முடக்கப்படும்", "வழக்குத் தொடரப்படும்" போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அழைப்போ அல்லது தகவலோ கிடைத்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, இலங்கைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை. மேலும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யுமாறு கோருவதும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
அறியாத நபர்களிடமிருந்து வரும் இணைய இணைப்புகள் (Links), இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலிகள் (Apps) ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
தொடர்புக்கு,</p><p>
கணினி குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர்: 071 859 2918
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 859 1765
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 230 0756
</p><p>
மேலும், இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு ; தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971"></link>
            <id>https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971</id>
            <summary type="text">மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கார் திக்வெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நேற்று புதன்கிழமை (22) இரவில் புதிய பெலியத்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றைச் சோதனையிட முயன்ற போது, அதன் சாரதி காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தித் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் ஒன்றில் விழுந்து வீதியை விட்டு விலகி நின்றுள்ளதுடன், அதிலிருந்த சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6941b1be-22b5-4014-af47-2e83bc03576a/26-6a618cf46da48.webp' /></p><p>

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குறித்த காரே தெவிநுவரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

நேற்று அதிகாலை வேளையில் காரில் வந்த குழுவொன்று, பிஸ்டல் ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தெவிநுவர, கந்தர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தது.
</p><p>

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தெவிநுவர பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
துப்பாக்கிதாரிகள் காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கெமாராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/goes-missing-after-going-swimming-mahaweli-river-1784776361"></link>
            <id>https://jvpnews.com/article/goes-missing-after-going-swimming-mahaweli-river-1784776361</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.மேலதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>மூன்று சிறுவர்கள் இணைந்து ஆற்றில் நீராட சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e801f50c-8ea4-4320-90d4-f84fe31c0d17/26-6a6186aadecf2.webp' /></p><p>ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> 

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில், பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:12:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இலங்கை வைத்தியர் செய்த தகாத செயல் ; கணினியில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-doctor-s-shocking-act-in-canada-1784768843"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-doctor-s-shocking-act-in-canada-1784768843</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி &#039;குழந்தைகள் நல மருத்துவமனையில்&#039; பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி 'குழந்தைகள் நல மருத்துவமனையில்' பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53afd78c-209a-4bce-a512-52a8bc4c69e8/26-6a61694ce9f3a.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p style="text-align: justify;">

டொராண்டோ பொலிஸாரின் இணையவழி குழந்தை துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify;">
இந்த விசாரணை 2026 ஜனவரியில் தொடங்கியது என்று தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">பின்னர், பிப்ரவரி மாதம், பொலிஸார் சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும் சந்தேக நபரின் சொந்த வீட்டிலும் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தனர். அங்கு, அவர் பணியிடத்தில் பயன்படுத்திய கணினி உட்பட பல மின்னணு சாதனங்களை அவர்கள் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த மற்றும் அவற்றை இணையம் மூலம் பெற்ற குற்றச்சாட்டுகளின் பேரில், சந்தேக நபர் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தார்.
</p><p style="text-align: justify;">
இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify;">
இந்தக் குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்குரிய மருத்துவரின் தொழில்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என டொராண்டோ காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட குழந்தைகள் மருத்துவமனை, இந்தச் சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

விசாரணை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் திஸாநாயக்கவை உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">இந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவரது மருத்துவ சேவைக்கும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T01:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் யுவதி உட்பட ஐவரின் உயிரை பறித்த தீ விபத்து ; பணியில் இணைந்து சில நாளிலேயே 19 வயது இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-kills-five-including-tamil-young-woman-1784767142"></link>
            <id>https://jvpnews.com/article/fire-kills-five-including-tamil-young-woman-1784767142</id>
            <summary type="text">ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p style="text-align: justify; ">

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad566ddc-0d01-45d0-945f-7cb05cfc140a/26-6a6163a506356.webp' /></p><h2 style="text-align: justify; ">உடைமைகளால் அடையாளம் காணப்பட்ட உடலம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவ்விபத்தில் ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய வரதராஜ் தமயந்தி, தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 24 வயதுடைய கொதாகொட சிதுகே சஹன் உதார ,கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த மரியோ எட்வர்ட், தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய வதுகல கமகே திலீப் மதுசங்க மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த 24 வயதுடைய சசின் தில்ஷான் ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;இந்த சம்பவத்தில் உயிரிழந்தகமகே திலீப் மதுசங்க என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; ">


மேலும், தீ விபத்தின் போது நச்சுப் புகையை சுவாசித்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தொழிற்சாலையின் உட்பகுதியை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியதுடன், அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


கோட்டை, தெஹிவளை, ஹொரானா தீயணைப்பு பிரிவுகள் மற்றும் விமானப்படையின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">ஹோமாகம ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சில உடல்களை, உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டை, தோடு மற்றும் கழுத்து மாலை போன்ற அடையாளங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">தொழிற்சாலையின் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T00:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ; காவடி ஆட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு ; பலத்த பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-at-devundara-perahera-festival-1784766184"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-at-devundara-perahera-festival-1784766184</id>
            <summary type="text">&amp;nbsp;மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, தற்போது துப்பாக்கிச் சூடு வரை தீவிரமடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னரே இந்த தகவல் வௌியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc480840-03dd-4b70-bf2a-782faa5c5ab4/26-6a615eea32860.webp' /></p><h2 style="text-align: justify;">கொலை மிரட்டல்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட குற்றவாளிகளே இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p style="text-align: justify;">

இவ்வாறான பின்னணியில், நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹராவிற்காக விசேட பாதுகாப்பு வழங்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify;">

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் குற்றவாளியின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">


தேவேந்திரமுனை விகாரை பெரஹெரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக் குழுக்களைக் குறைப்பது தொடர்பாகக் கடந்த 20 ஆம் திகதி அந்த விகாரையின் பஸ்நாயக்க நிலமேக்கு நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கஞ்சிபானை இம்ரானுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் குரல் பதிவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. </p><p style="text-align: justify;">

இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T00:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு துண்டு தேங்காய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/coconut-benefits-for-a-healthy-heart-1784763779"></link>
            <id>https://jvpnews.com/article/coconut-benefits-for-a-healthy-heart-1784763779</id>
            <summary type="text">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். </p><p>ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து என்றாவது சிந்தித்திருப்போமா?



தேங்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25e07d70-6a94-4483-b274-8fa724e69774/26-6a6155849d7df.webp' /></p><h2>ஆரோக்கிய நன்மைகள்</h2><p>
</p><p>


வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதயம், சருமம், தலைமுடி, வயிறு என அனைத்துக்கும் நல்லது.
</p><p>


உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சமிபாட்டுப் பிரச்சினைகளை சரி செய்கிறது.



தேங்காயில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. </p><p>இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.</p><p></p><p>
</p><p>


வாழைப்பழம், அப்பிள் பழங்களில் உள்ள சத்துக்களை விடவும் தேங்காயில் அதிகப்படியான புரதம் உள்ளது.</p><p> 



இது சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்யும்.</p><p> 



எனவே காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க உதவும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:43:05+00:00</updated>
        </entry>
    </feed>
