<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T23:32:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தி ; பளை வனப்பகுதி குறித்து அரசு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-explains-about-palai-forest-area-fake-1787092944"></link>
            <id>https://jvpnews.com/article/government-explains-about-palai-forest-area-fake-1787092944</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d8ca85-af7d-4355-a2df-ccf6d1725b2f/26-6a84dfd1a1820.webp' /></p><p>குறித்த பகுதி 1919ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 7064ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக காடழிப்பு இடம்பெற்று வருவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. </p><p>தியாகராஜா குணதீபன் என்பவர் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பையும் பின்னர் 20 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் அப்பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது நான்கு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
குறித்த கட்டடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் நடத்தப்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனம் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், வனவள திணைக்களம் மற்றும் பொலிஸாரால் குறித்த பகுதியில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் குறித்த சந்தேகநபர் அந்தக் காணிக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. பின்னர், அந்தத் தடையை நீக்குமாறு பெப்ரவரி 17ஆம் திகதி அவர் முன்வைத்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நீதிமன்றத் தடையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை எடுத்துச் சென்றதாகவும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, கடந்த ஜூலை 24ஆம் திகதி வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தியாகராஜா குணதீபன் உள்ளிட்ட ஒன்பது பேர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், குறித்த காணி தமக்குச் சொந்தமானது எனக் கூறி சம்பந்தப்பட்ட நபர் சில ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவ்வாறான பின்னணியிலேயே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆடைத் தொழிற்சாலை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T22:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மஹோற்சவ காலத்தில் பக்தர்கள் அமைதியாகவும், தூய்மையாகவும் வழிபடுவதற்கு ஏதுவாக ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p><p>அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்களும் பக்தர்களும் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த வாகனத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
அத்துடன், இது உரிய அனுமதியுடன் இடம்பெற்றதா அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04aaad95-b599-4e9d-a793-2caabc986d31/26-6a84abbe95ffd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af556116-e9bc-4e3f-b4fd-266396f9c7b2/26-6a84abbf54f88.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f8560a-7f1f-49eb-9bfc-6e88e44da827/26-6a84abc007b0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T22:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904"></link>
            <id>https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fc1623-a6e8-455d-bf0f-88412f0b9a8d/26-6a84b4b1e1760.webp' /></p><p>இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240"></link>
            <id>https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240</id>
            <summary type="text">நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>
</p><p>இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5:30 மணி வரை அமுலில் இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388025c8-9fc8-4396-b797-f20b840d3536/26-6a84b21995a8e.webp' /></p><p>பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அந்த பகுதிகளில் செயற்படும் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903"></link>
            <id>https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903</id>
            <summary type="text">வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
</p><p>
 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் (Shannon Cowlin) ஆகியோருக்கு இடையில் இன்று (18) கொழும்பு பொதுத் திறைசேரியில் இக்கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff172a1-b336-4330-875f-e35c52bb1bb8/26-6a84a511825e6.webp' /></p><p>இவ்முதலீடு மற்றும் கைத்தொழில் திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
</p><p>
 

இத்திட்டம் கடந்துபோன 2025 தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>

 

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகளாக இருப்பதுடன், அம்முன்னுரிமைகள் 2026-2028 காலப்பகுதிக்கான பிரதான அரச முதலீட்டுத் திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றன என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
 

நாட்டின் பிரதான அபிவிருத்தி சவால்களுக்குத் திட்டமிட்ட அணுகுமுறை மூலம் தீர்வுகளை வழங்குவதற்காக வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும் என்பதால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae5bdb3-1adb-41e8-96b9-a7091a2964c2/26-6a84a0d93958e.webp' /></p><p>மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>
 

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
</p><p>
 

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524</id>
            <summary type="text">விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p>

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71f8f54-e196-43e0-b73c-458276f755ba/26-6a849bc610cee.webp' /></p><p>இலக்கியம் மற்றும் இசைத்துறைகளில் தனது ஆக்கங்கள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு, கலை மற்றும் இலக்கியத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:52:15+00:00</updated>
        </entry>
    </feed>
