<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T15:43:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈவிரக்கமின்றி 12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்; கடும் கொந்தளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-pushes-cat-off-12th-floor-outrage-erupts-1785329952"></link>
            <id>https://jvpnews.com/article/man-pushes-cat-off-12th-floor-outrage-erupts-1785329952</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியிலிருந்து பூனையைத் கீழே தள்ளிய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியிலிருந்து பூனையைத் கீழே தள்ளிய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 கட்டிடத்தின் குழாய்ப் பகுதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து குறித்த நபர் பூனையைத் கீழே தள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது கடந்த திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9333ffa-450f-4c33-a2b3-c56217e7dd72/26-6a69f9223d82d.webp' /></p><p>
</p><p>
சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் இந்தச் செயலால் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நல அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவாண்டஸ் புதிய சாதனை ; 24 மணி 24 நிமிடங்கள் தொடர்ச்சியாக பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-qantas-continuous-fly-24-hours-24-minutes-1785330451"></link>
            <id>https://jvpnews.com/article/record-qantas-continuous-fly-24-hours-24-minutes-1785330451</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் , உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் , உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளது.</p><p>



பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த எயார்பஸ் ஏ350 ரக விமானம், கடந்த கடந்த 27ஆம் திகதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, நேற்று (28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48095cd-d9a3-4423-a768-14e4c07ded70/26-6a69fb14e42cc.webp' /></p><h2>&nbsp;மெல்போர்னில் இருந்து பிரான்சின் டுலூஸ் நகருக்கு ....</h2><p> </p><p>



மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, பசிபிக் பெருங்கடல், அமெரிக்கா, கனடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து 23,075 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. சுமார் 24 மணிநேரம் 24 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்துள்ளது.

 இதன்மூலம், அதிக தூரம் வானத்தில் பறந்து சாதனையை அது படைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>


அதேவேளை 2005ஆம் ஆண்டு ஹொங்கொங் - லண்டன் சோதனைப் பயணத்தின்போது, போயிங் 777-200எல்ஆர் விமானம் படைத்த 22 மணி நேரம் 42 நிமிடங்கள் என்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.
</p><p>


அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் நீண்ட விமான சேவையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட குவாண்டஸ் நிறுவனத்தின் 'புராஜெக்ட் சன்ரைஸ்' திட்டத்திற்கு இச்சாதனைப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


 எயார்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் (Ultra Long Range) என்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில், தொலைதூர பயணங்களை சாத்தியப்படுத்தும் விதமாக, கூடுதலாக 20,000 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrivals-cross-the-1-3-million-mark-1785328631"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrivals-cross-the-1-3-million-mark-1785328631</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d093161-5e8d-447c-ab1c-5cbcf5652774/26-6a69f3f8dbb3b.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 38,785 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, முதன்மைச் சந்தையாகத் திகழ்கிறது. 

இந்த ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 310,000க்கும் அதிகமான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டிடம் விழுந்து காத்தான்குடி இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kattankudy-youth-dies-after-building-collapses-1785332305"></link>
            <id>https://jvpnews.com/article/kattankudy-youth-dies-after-building-collapses-1785332305</id>
            <summary type="text">&amp;nbsp;காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207d761d-5162-4ac1-8fef-5286caae9030/26-6a6a0252bd875.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடைபெறும் சீனத் தூதுவருடன் கொஞ்சி குலாவிய ராஜபக்ஸாக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rajapaksas-dinner-departing-chinese-ambassador-1785332017"></link>
            <id>https://jvpnews.com/article/rajapaksas-dinner-departing-chinese-ambassador-1785332017</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு விடைபெறும் முகமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3ce0831-2d20-4bd1-a05b-b0674cae8d40/26-6a6a01333a24f.webp' /></p><p>

அத்துடன், தூதுவரின் பதவிக் காலத்தில் இலங்கைக்கு அவர் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் மற்றும் அவர்களின் நட்புறவுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>.

 தூதுவர் கீ சென்ஹொங்கின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, , இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T13:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suicide-of-a-kilinochchi-schoolgirl-1785325324"></link>
            <id>https://jvpnews.com/article/suicide-of-a-kilinochchi-schoolgirl-1785325324</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

பாடசாலையில் கற்றல் அடைவுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்ந்து வந்த குறித்த மாணவியின் திடீர் மரணம் பாடசாலைச் சமூகத்தையும், கிராம மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfb97562-87a0-444d-98a1-db5c9d795e64/26-6a69e70e61073.webp' /></p><p></p><p>
</p><p>

 உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.</p><p></p><p>
</p><p>
 இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச் சிகிச்சைக்கான திகதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மாணவி மன உளைச்சலால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-29T13:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கீரிமலை குப்பை மேட்டில் இரு நாட்களாக பற்றி எரியும் தீ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-jaffna-keerimalai-garbage-dump-1785331272"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-jaffna-keerimalai-garbage-dump-1785331272</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
வலி. வடக்கு பிரதேசத்தில் , மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் , 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71629517-3998-422d-aa4d-b5ed78e6d8e1/26-6a69fe49b8bc4.webp' /></p><h2>அத்துமீறி நுழைந்த கும்பல்&nbsp; தீ வைப்பு</h2><p>

அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி , ” சுகாதார நில நிரவுகை திட்டம்” என குழிகளை மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் , அது கைவிடப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.</p><p>

இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து , குழிகளுக்குள் குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் , கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p>


இந்நிலையில் தமது சபை தீர்மானத்தையும் மீறி , வலி. தெற்கில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்து நேற்று முன்தினம் அப்பகுதி சென்ற போது அங்கு கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p>

இந்நிலையில் , குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம் காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.

குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் , அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்கோவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:19:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி. சமிந்த விஜேசிறி மேன்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appeal-mp-chaminda-wijesiri-sentence-in-prison-1785329614"></link>
            <id>https://jvpnews.com/article/appeal-mp-chaminda-wijesiri-sentence-in-prison-1785329614</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யுமாறு கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யுமாறு கோரி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
</p><p>


அத்துடன் இந்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறும், வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வெளியாகும் வரை தனக்கு பிணை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56044baf-9923-45e7-a66e-28a53c241093/26-6a69f7d726fcd.webp' /></p><p>
</p><p>


பொது வீதியை சட்டவிரோதமாக மறித்தது, இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது மற்றும் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளி என பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து, நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.</p><p>



2019ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை, பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதன் பின்னரே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>. இந்தச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.



விஜேசிறி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T12:51:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[X செயலி மூலமாகவும் பணம் அனுப்பும் வசதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061"></link>
            <id>https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது. </p><p>முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக app கள் மட்டுமே இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6bf499-288d-44c7-8044-1e01c89de8f6/26-6a69e21e642b5.webp' /></p><p>
</p><p>
ஆனால், தற்போது பல வகையான மொபைல் ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் வசதிகள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான் முன்பு டிவிட்டராக இருந்து தற்போது X என மாறியிருக்கும் தளத்திலும் பணம் அனுப்பும் வசதியை அதன் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.</p><p></p><p>

இதன் மூலம் பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என அவர் அறிவித்திருக்கிறார். 

சமூக ஊடக தளத்தை எல்லாவற்றுக்குமான ஒரே செயலியாக மாற்றும் நோக்கத்தில் இந்த அதிரடி வசதி கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவணை முறையில் வீடு அமைத்து தருவதாக பாரிய நிதி மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/housing-installment-scheme-financial-fraud-1785327996"></link>
            <id>https://jvpnews.com/article/housing-installment-scheme-financial-fraud-1785327996</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.
</p><p>

கைதான சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபர், சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த பெறுமதியின் 60% தொகையை முன்பணமாக பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa0b8c0-1109-4f98-a49c-2be2a26447e1/26-6a69f17e19449.webp' /></p><h2>&nbsp;எந்தவொரு வீடும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை</h2><p> </p><p>

எனினும், அத் தொகையைப் பெற்ற பின்னர் வாக்குறுதியளித்தபடி எந்தவொரு வீடும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. 

பின்னர் பணத்தை மீளக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவம் தொடர்பாக இதுவரை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

 இந்த மோசடிக்கு இலக்கான இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் முறைப்பாடுகள் கிடைக்கக்கூடும் என அப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சந்தேகநபர் நேற்று (28) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T12:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கட்டணம் வசூலிப்பு; வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0088d4de-014f-4fef-9ee3-6603f47f44a8/26-6a69ba8371594.webp' /></p><p></p><h2>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ.400 ஐ விட அதிகமாக ரூ.550 வசூலித்தமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு ரூ.500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T12:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், <a href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245" target="_blank">சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான</a> சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரமுனவுடன் இணைய வாருங்கள்; நாமல் ராஜபக்ச அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187"></link>
            <id>https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>

ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b56773-2fb8-43c2-9169-a703b3627fab/26-6a69deb538929.webp' /></p><p>
</p><p>
அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே முன்னெடுப்பதாக தெரிவித்த அவர், தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.</p><p>

கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் எவரும் இணைந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்த அவர், கடந்த காலங்களில் பலர் விலகிச் சென்றாலும், புதியவர்கள் இணைந்துள்ளதாகவும், கட்சியை பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T11:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயினாதீவு குறிகாட்டுவானில் கடல் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174"></link>
            <id>https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59db7b4-f7ed-4f4f-a3b1-6aefa46ce3e7/26-6a69dac067a94.webp' /></p><p>
</p><p>


தீவக கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.&nbsp;&nbsp;</p><p></p><p>தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகப் பகுதிகளைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
</p><p>


இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நாளாந்த வருமானமும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/946a8445-0862-423f-bcee-47b0d1bf5812/26-6a69dac1236d5.webp' /></p><p>



</p><p>, இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>


“கடலுக்காக நீதி வேண்டும்; எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏராளமான கடற்தொழிலாளர்கள் இந்தக் கடல் போராட்டத்தில் பங்கேற்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T10:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தின் கழிவுநீரில் விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி! ஆண்டுதோறும் 43 கிலோகிராம் தங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது Eawag மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff8db04-5c4f-4a05-8b30-9816c2902d40/26-6a69cfcce6aac.webp' /></p><h2>ஆண்டுதோறும்&nbsp; 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும்</h2><p>
</p><p>


அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.



அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
 இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.



கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


 ஈனெனில் , கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>அதேசமயம் சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-29T10:00:57+00:00</updated>
        </entry>
    </feed>
