<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T08:23:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை சீருடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170"></link>
            <id>https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170</id>
            <summary type="text">&amp;nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை<a href="https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944" target="_blank"> ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினை</a>க்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வு வழங்குவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

</p><p>அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5d5cb6-8c9b-4aac-b721-2ff8c9a20510/26-6a84159381a34.webp' /></p><p>

கடந்த சில நாட்களாகக் கவனத்தை ஈர்த்து வரும் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களும் விரிவாகக் கேட்கப்பட்டன.</p><p></p><p>

மருத்துவமனை அமைப்பின் சீரான செயல்பாட்டையும், அனைத்து சேவைப் பயனாளிகளின் ஒற்றுமையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகளையும் உறுதிசெய்யும் அமைதியான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடனடி குறுகிய கால நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வும் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடசாலைக்கு மகளுடன் சென்ற தந்தைக்கு அதிர்ச்சி; பாலியல் லஞ்சம் கோரிய பெண் அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879"></link>
            <id>https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360c41e-5b6b-40f3-8bdd-f2a34a89f7a3/26-6a83fd00d8fb7.webp' /></p><p></p><h2>&nbsp;பாலியல் லஞ்சம்&nbsp;&nbsp;</h2><p>

 இன்னிலையில் , மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே&nbsp; பாலியல் லஞ்சம் கோரியதாக&nbsp; &nbsp; தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a80c39fe-a770-449a-b86a-bed34747c5ee/26-6a841113e9d79.webp' /></p><p> </p><p>

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-rajitha-senaratne-brother-arrest-1787038208"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-rajitha-senaratne-brother-arrest-1787038208</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


நாடு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவி பராமரிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகளில் முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf4b1c39-ce7f-4aea-ae84-ce32c2fb7533/26-6a840a0191049.webp' /></p><p>முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரரான&nbsp; மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012 வரை சிலோன் மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசா வரை முதலமைச்சர் விஜய்யின் சைகை; சமூக வலைத்தளங்களில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nasa-don-thomas-praised-our-cm-vijay-s-efficient-1787037272"></link>
            <id>https://jvpnews.com/article/nasa-don-thomas-praised-our-cm-vijay-s-efficient-1787037272</id>
            <summary type="text">&amp;nbsp;நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியான மருத்துவர் டோன் தோமஸ் (Dr. Don Thomas), தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தீவிர ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியான மருத்துவர் டோன் தோமஸ் (Dr. Don Thomas), தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தீவிர ரசிகர் என்றும், அவரது திறமையான நிர்வாகத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளமை சமூக வலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.</p><p>


தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா வில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93842376-088c-4be4-8bc1-77ba9bbc5e77/26-6a84065a3b750.webp' /></p><h2>சமூக வலைத்தளங்களில் வைரல்</h2><p>
</p><p>
 நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் திறமையான நிர்வாகத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.</p><p></p><p>

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் வைரலான கை சைகையை மேடையில் செய்து காட்டி அங்கு கூடியிருந்த மாணவர்களையும், பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-18T07:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pillayan-further-remanded-over-eastern-murder-1787036349"></link>
            <id>https://jvpnews.com/article/pillayan-further-remanded-over-eastern-murder-1787036349</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b2cae3-c09b-4f1d-a942-6af9b9a5dd2e/26-6a8402bf13caf.webp' /></p><h2>&nbsp;05 கொலைச் சம்பவங்கள்</h2><p>
</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுள்ளார்.</p><p>


ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-injured-in-shooting-incident-1787035947"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-injured-in-shooting-incident-1787035947</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; &amp;nbsp;புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; &nbsp;புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
காயமடைந்தவர் உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02016dfc-f089-4b0e-940c-cde3ae579dd3/26-6a84012d2e3cf.webp' /></p><p>
</p><p>
உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423"></link>
            <id>https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p> 


யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) எனும் மாணவனே திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9ca243-595a-4bce-8838-f44491ee61f5/26-6a83e3c92e0f5.webp' /></p><h2>&nbsp;பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த&nbsp;மாணவன்</h2><p>குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும் போது, பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த நிலையில் , அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p></p><p>

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் 12 ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p> 

இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு இருந்தவேளை திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>

உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>யாழ் இந்துக் கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு வைஸ்ணா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T06:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்நிதியான் ஆலய சூழலில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி; அகற்றப்பட்ட வியாபாரி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394"></link>
            <id>https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட வியாபாரி ஒருவர் தும்பு மிட்டாய் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த தும்பு மிட்டாய் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e08680-7600-4483-b565-a2c0fb0a976b/26-6a83f73425db9.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><p> </p><p>இந்நிலையில் 16/08/2026 அன்று ஆலய சூழலில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அறிவுறுத்தலை மீறி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்பு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>இதனை அவதானித்த வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் அவர்களை விசாரித்தபோது மருத்துவ சான்றிதழ் இன்றி தும்பு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33414ce-56c3-45f9-9770-6829872fa848/26-6a83f77adfdbe.webp' /></p><p>
அத்துடன், அறிவுறுத்தல்களை மதிக்காது வியாபார நடவடிக்கைக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபார நடவடிக்கையினை தொடர்ந்த காரணத்தினால் தும்பு மிட்டாய் உள்ளிட்ட விற்பனை தொகுதி பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T06:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமானில் கைதான சமிட்புர சது CCD யிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/oman-arrest-summitpura-chathu-in-ccd-custody-1787030099"></link>
            <id>https://jvpnews.com/article/oman-arrest-summitpura-chathu-in-ccd-custody-1787030099</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'மோதரை சது' அல்லது 'சமிட்புர சது' குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d322766-88fe-4e2a-b3c6-75aba94c70a3/26-6a83ea551aad2.webp' /></p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை</h2><p> </p><p>

கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.</p><p></p><p> </p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார்.</p><p></p><p> </p><p>

அதன்படி, ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-18T05:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-for-those-who-have-money-in-banks-1787023997"></link>
            <id>https://jvpnews.com/article/warning-for-those-who-have-money-in-banks-1787023997</id>
            <summary type="text">இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது. மத்திய வங்கி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது. </p><p>மத்திய வங்கி, பொலிஸ் நிதிக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவு போன்ற அமைப்புக்களின் அதிகாரிகளைப் போன்று வேடம் தரித்து ஆட்களை ஏமாற்றும் மோசடி பற்றி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சேர்ட் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d714e5-a958-4b2d-bc18-9afd48c248cc/26-6a83eb3bcc368.webp' /></p><p> </p><p>இந்த மோசடியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வங்கிக் கணக்குகளை சார்ந்த சேமிப்புக்களை இலக்கு வைப்பதாக தெரிகிறது.</p><p>கையடக்க தொலைபேசிகள், சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கிகளில் சேமிப்பிலுள்ள தொகை பற்றி விசாரித்து, இந்தத் தொகை சட்டவிரோதமான முறையில் திரட்டப்பட்டதாக முதலில் எச்சரிக்கப்படுகிறது.</p><p></p><p>இதனைத் தொடர்ந்து அரச நிறுவனங்களின் கடித தலைப்புக்களை பயன்படுத்தி சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை எச்சரித்து பணம் பறிக்கும் முயற்சியில் மோசடியாளர்கள் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா சேர்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T05:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-of-kanjipani-imran-s-uncle-five-arrested-1787029570"></link>
            <id>https://jvpnews.com/article/murder-of-kanjipani-imran-s-uncle-five-arrested-1787029570</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் பிரபல பாதளகுழு உறுப்பினர் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் பிரபல பாதளகுழு உறுப்பினர் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p> 
கடந்த 10ஆம் திகதி ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் உயிரிழந்தார்.
</p><p>
இந்த துப்பாக்கிப்பிரயோகம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T05:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி கணிவிடுவிப்பு போராட்டம்; ஐவர் மீது பாய்ந்த வழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palaly-land-release-protest-case-filed-police-1787028878"></link>
            <id>https://jvpnews.com/article/palaly-land-release-protest-case-filed-police-1787028878</id>
            <summary type="text">&amp;nbsp; வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளனர். </p><p>

கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de83a6d-8570-4086-8383-a857233e110b/26-6a83e58fdc2db.webp' /></p><h2>&nbsp;வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு</h2><p>
</p><p>
காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பலாலி பிரதான வீதியின் T சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T04:52:09+00:00</updated>
        </entry>
    </feed>
