<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T03:27:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c490340-73b4-41d6-8aea-d5e126cf3cdc/26-6a8a4409b6f9d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.</p><p style="text-align: justify; "> இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf07ce-1306-402b-ab1d-c4a8b82a6824/26-6a8a4a5398410.webp' /></p><h2 style="text-align: justify; ">நட்சத்திர பெயர்ச்சி</h2><p style="text-align: justify; ">சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். </p><p style="text-align: justify; "><b>&nbsp;மேஷம் :</b>&nbsp;நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.</p><p style="text-align: justify; "><b>

விருச்சிகம் : </b>வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.&nbsp; அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>
மீனம்:</b>&nbsp; இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c9170-f00c-40d2-8395-6bb325f32907/26-6a8a3d6f8760e.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். </p><p style="text-align: justify; ">அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானி போல நடித்து பெண் அரங்கேற்றிய செயல் ; பேருந்தை விற்று வழங்கப்பட்ட பல இலட்சம் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207"></link>
            <id>https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d73460c-dfa0-44b7-af0f-aac55918733d/26-6a8a3808a5c3b.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடு</h2><p style="text-align: justify;">

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.</p><p style="text-align: justify;">

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify;">

தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;">

அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் முறைப்பாடு செய்தார்.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.</p><p style="text-align: justify;">

மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? இதையும் கவனிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100"></link>
            <id>https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100</id>
            <summary type="text">&amp;nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.



தினமும் 1 அல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.</p><p style="text-align: justify;">



தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f471949-7aa8-490e-9583-56bccf131109/26-6a8a33b6b1c0d.webp' /></p><h2 style="text-align: justify; ">இதை எவ்வாறு சாப்பிடலாம்.</h2><p style="text-align: justify; ">



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
</p><p style="text-align: justify;">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.
</p><p style="text-align: justify; ">
தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify;">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த இடியாப்ப வியாபாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247"></link>
            <id>https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை&nbsp; அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a410fa8f-72ed-4423-9ad9-c027a8113846/26-6a8a218d0899f.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; ">



அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,&nbsp; மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-female-athlete-sets-javelin-record-1787432740"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-female-athlete-sets-javelin-record-1787432740</id>
            <summary type="text">இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டிற்கான World Athletics Silver Level Continental Tour 2026 பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டிற்கான World Athletics Silver Level Continental Tour 2026 பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தில்ஹானி லேகம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
 

இப்போட்டியில் அவர் 58.98 மீற்றர் தூரம் எறிந்து திறமையை வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acce1f27-e621-498d-af56-7b2a3a21c245/26-6a8a0f25d32e6.webp' /></p><p>

 

இப்போட்டியின் தங்கப் பதக்கத்தை ஜூசிலீன் சேல்ஸ் டி லிமா (Jucilene Sales de Lima) வென்றார்.&nbsp;</p><p style="margin-left: 25px;"></p><p>
 

இதேவேளை, இத்தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சுமேத ரணசிங்க 80.29 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் வென்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T21:30:17+00:00</updated>
        </entry>
    </feed>
