<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T16:22:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வெப்பம் ; மனநல மருத்துவர் விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-heatwave-psychiatrist-issues-warning-1786809210"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-heatwave-psychiatrist-issues-warning-1786809210</id>
            <summary type="text">தற்போது நிலவி வரும் எல் நினோ காரணமாக ஏற்படும் கடுமையான வெப்பமான காலநிலையால், மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவி வரும் எல் நினோ காரணமாக ஏற்படும் கடுமையான வெப்பமான காலநிலையால், மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது மனிதர்களின் மனநலத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதிக வெப்பமான சூழல் கோபத்தைத் தூண்டுவதுடன், சகிப்புத்தன்மையைக் குறைத்து, மோதல் போக்கை அதிகரிக்கக்கூடும் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d3526e6-4928-4d9c-b980-97c2434d6b29/26-6a808b7c46fd2.webp' /></p><p>இவ்வாறான பாதிப்புகள் காலப்போக்கில் தீவிரமான உளவியல் சிக்கல்களாக மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளிடையே வீதி கோபம் (Road Rage), குடும்பங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>


மேலும், ஏற்கனவே மனநலச் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை இந்த வெப்பமான காலநிலையால் மேலும் மோசமடையக்கூடும் எனவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


எனவே, இந்த அபாயத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T15:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பெண் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-who-attempted-to-attack-the-bus-driver-1786801012"></link>
            <id>https://jvpnews.com/article/woman-who-attempted-to-attack-the-bus-driver-1786801012</id>
            <summary type="text">திவுலப்பிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திவுலப்பிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிற்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பேருந்து மறித்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்றுள்ளனர்.</p><p>பேருந்தில் இருந்த பயணியொருவர் இச்சம்பவத்தை தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்திருந்த நிலையில், அந்த காணொளி சமூக வலைதளங்களிலும் பரவியது.</p><p>அந்த காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த காரில் பயணித்த சந்தேகநபர்களை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்தனர்.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 18 வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்</p>]]></content>
            <updated>2026-08-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இண்டிகோ விமானம் ரத்து; ஊழியர்களுடன் பெண் பயணி ரகளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indigo-flight-cancelled-female-passenger-creates-1786794439"></link>
            <id>https://jvpnews.com/article/indigo-flight-cancelled-female-passenger-creates-1786794439</id>
            <summary type="text">இந்தியாவின் ஒடிசா மாநில&amp;nbsp; புவனேஸ்வர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமான நிலைய ஊழியர்களுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஒடிசா மாநில&nbsp; புவனேஸ்வர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமான நிலைய ஊழியர்களுடன் தகராாரில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், லக்கேஜ் பெல்ட் மீது ஏறி மேசையிலிருந்த ஆவணங்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.</p><p> அவரின் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பயணி தெரிவித்த போதிலும், மற்றவர்கள் கொடுத்த தண்ணீரை அவர் மறுத்துவிட்டார். விமான நிலைய சொத்துகளை சேதப்படுத்தியதால் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தினர்.</p><p>&nbsp;இதற்கிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;மேலும், விமான நிலைய சொத்துகளை சேதப்படுத்திய அந்த பெண் விதிமுறைகளின்படி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வது தவறு என்றும், விமான சேவை ரத்து குறித்த கோபத்தை ஊழியர்கள் மீது காட்டக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/successive-earthquakes-in-indonesia-people-in-fear-1786800021"></link>
            <id>https://jvpnews.com/article/successive-earthquakes-in-indonesia-people-in-fear-1786800021</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுப் பகுதியில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுப் பகுதியில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>ஒரே நாளில் அந்த நாட்டைத் தாக்கிய இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.</p><p>இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமாத்திராவின் மேடான் (Medan) நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 126 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெமடாங்சியந்தார் (Pematangsiantar) பகுதியில், பூமிக்கு அடியில் 183 கிலோமீற்றர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.</p><p>முன்னதாக, இன்று பதிவான 7.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் அக்குளை மோப்பம் பிடிக்கும் பாலிவுட் நடிகர்! சமூகவலைத்தளத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gauahar-khan-and-zaid-darbar-personal-journey-1786799518"></link>
            <id>https://jvpnews.com/article/gauahar-khan-and-zaid-darbar-personal-journey-1786799518</id>
            <summary type="text">பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார்.இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார்.</p><p>இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை&nbsp; &nbsp;பகிர்ந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><h2>அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது</h2><p>இதன்போது கணவரின் சில வித்தியாசமான பழக்கங்களை கௌஹர் கான் வெளிப்படையாக கூறியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p>தனது கணவருக்கு இருக்கும் வித்தியாசமான பழக்கம் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். சைத் தர்பாருக்கு தனது அக்குள்களின் வாசனையை மோப்பம் பிடிப்பது பிடிக்கும் என கௌஹர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;"சைத்திற்கு எனது அக்குள்கள் எப்போதுமே நல்ல வாசனையுடன் இருப்பதாகத் தோன்றும். அவர் அடிக்கடி அதைத் தொட்டு மோப்பம் பிடிப்பார். அதன்பிறகு தனது சகோதரியிடம் சென்று, 'பார், அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது' என்று சொல்வார் என கௌஹர்&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கௌஹர் கான் மற்றும் சைத் தர்பார் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p>இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்ப வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இந்த ஜோடி, தற்போது தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T13:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T13:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை நகைக்கடையில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-a-jewelry-shop-in-wattala-1786795644"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-a-jewelry-shop-in-wattala-1786795644</id>
            <summary type="text">வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-15T12:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/our-lady-of-madhu-s-august-festival-2026-1786793548"></link>
            <id>https://jvpnews.com/article/our-lady-of-madhu-s-august-festival-2026-1786793548</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி&amp;nbsp; இன்று&amp;nbsp; &amp;nbsp;(15) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி&nbsp; இன்று&nbsp; &nbsp;(15) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.</p><p>மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.&nbsp;</p><p>திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.</p><p>இத்திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார்,&nbsp; மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று நடைபெற்றது</p>]]></content>
            <updated>2026-08-15T11:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அறுவை சிகிச்சைகளுக்காக 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615"></link>
            <id>https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615</id>
            <summary type="text">இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள்&nbsp; காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்&nbsp; வெளியாகியுள்ளது.</p><p>அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>அவர்களில் , சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.</p><p>அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T10:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T10:36:08+00:00</updated>
        </entry>
    </feed>
