<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T02:04:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சொந்த மகளுக்கு தந்தை செய்த தகாத செயல் ; 18 வருடத்தின் பின்னர் கிடைத்த அதிரடி தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221"></link>
            <id>https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af98b951-4b9c-44f9-80f6-6eebc6ef499d/26-6a961b0f458e0.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T00:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு பெரும் அதிஸ்டம் காத்திருக்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974</id>
            <summary type="text">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. </p><p style="text-align: justify; ">அந்த வகையில் இவரது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணிப்புகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மாதத்தின் முதல் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9516097-27ad-4b31-a881-18618517a479/26-6a9621e7a66da.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுப யோகங்கள்</h2><p style="text-align: justify; ">&nbsp;பாபா வாங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு :</b> செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

</p><p style="text-align: justify; "><b>சிம்மம் : </b>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களின் முக்கியமான பெரிய வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வாரத்தில் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் : </b>&nbsp;மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



</p><p style="text-align: justify; "><b>துலாம் : </b>தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் சில நட்புகள் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
மிதுனம் : </b>முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T00:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களுடன் சேர்ந்து இருபெண்கள் அரங்கேற்றிய சம்பவம் ; பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733"></link>
            <id>https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733</id>
            <summary type="text">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹொரனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள், இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a83c8b-8e24-4028-9513-45bfe7cfc80e/26-6a96153f60355.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காகவே குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
ஹொரனை பகுதியிலுள்ள கடை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்தமை, இரண்டு நாட்களுக்குள் ஹொரனை, வெலிகல பகுதியில் இரு பெண்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்தமை, ஹொரனை, கோணப்பல பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கொள்ளையடித்தமை மற்றும் ஹொரணை, முணகம பகுதியில் கடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் தங்கச்சங்கிலியைக் கொள்ளையடித்தமை போன்ற கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">கைதான பிரதான சந்தேகநபர்கள் இருவரும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
அதேபோன்று, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய இரு பெண்களும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரு ஜோடி தங்க நகைகள், அடகுப் இரசீது ஒன்று மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">மேலும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் ஹொரனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T23:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நோய்களை தவிடுபொடியாக்கும் சின்ன வெங்காயம் ; நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062"></link>
            <id>https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062</id>
            <summary type="text">&amp;nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். </p><p style="text-align: justify;">ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5cf95ec-6031-4d4c-a1ee-812430c56119/26-6a960acfd1be3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அருமருந்து&nbsp;</h2><p style="text-align: justify; ">
ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். </p><p style="text-align: justify; ">சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16273137-6d0f-46d4-a1f7-0539ff22cbeb/26-6a961171a2695.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. </p><p style="text-align: justify;">மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.
</p><p style="text-align: justify;">
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயம் சாறை தேய்த்தால் உடலில் விஷம் ஏறாது. மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.


அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக சின்ன வெங்காயத்தில் இன்சுலின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சின்ன வெங்காயத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும்.</p><p style="text-align: justify;"> தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T23:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T23:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காருக்குள் இளைஞன் அரங்கேற்றிய செயல் ; சோதனையில் அதிர்ந்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-s-shocking-act-inside-car-1788210320"></link>
            <id>https://jvpnews.com/article/youth-s-shocking-act-inside-car-1788210320</id>
            <summary type="text">ஹோகந்தர, வனகுரு மாவத்தை பகுதியில் காரில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான &#039;குஷ்&#039; போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோகந்தர, வனகுரு மாவத்தை பகுதியில் காரில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9316f564-353d-495a-b035-9500243558c9/26-6a95ec91d2ea5.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது போதைப்பொருளுடன் சந்தேகநபரிடமிருந்த 39,290 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்டவர் கலல்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலபே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T22:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமெடுக்கும் வறட்சி ; பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293f0220-50f6-4f1b-a025-5b79d6c256dc/26-6a95e63f3db3e.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் தட்டுப்பாடு&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது தேவைகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T21:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம் ; சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469</id>
            <summary type="text">ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் குறித்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877ddefd-ada5-4a4c-ad5e-edcc91d054af/26-6a95e16e92a29.webp' /></p><p>இவ்வாறு கடலில் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் பெண்ணின் சடலமும் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆவர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:19:04+00:00</updated>
        </entry>
    </feed>
