<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T18:36:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; மோதல்களின் பின்னணி குறித்து நீதி அமைச்சர் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483"></link>
            <id>https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dedd99ba-1f46-4450-a33a-499935d27f36/26-6a6f8cfcd36d4.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">பதற்ற நிலைமைகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். </p><p style="text-align: justify; ">அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T18:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்திற்கு வந்திருந்த 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830</id>
            <summary type="text">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (01) இரவு 7.30 மணியளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

நேற்று (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d90b15-5ae7-462d-8c78-9a5757856911/26-6a6f7eb7ca804.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">&nbsp;மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

அவ்வாறு மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை அவர் தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ; பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157"></link>
            <id>https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள &#039;செண்டோ&#039; என்ற குற்றவாளியின் தந்தையை &#039;நிசல செவன&#039; மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை 'நிசல செவன' மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca54c280-bec9-4e33-bd99-9144f9e6162f/26-6a6f782f6085f.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபருக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இவர் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பிணையில் வந்தநிலையிலேயே, கடந்த 17 ஆம் திகதி இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவர் 2015 ஆம் ஆண்டு இராணுவ விசேட படையணியில் இருந்து விலகிய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத முடிவால் பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.



நே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



நேற்று (01) வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறித்த இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133b5efb-1b89-4c2d-b156-19c96a864918/26-6a6f67c3779ea.webp' /></p><h2 style="text-align: justify; ">வாழ்வதற்கு விருப்பமில்லை</h2><p>
</p><p style="text-align: justify;">


இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968</id>
            <summary type="text">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9e063b-39e1-4e6c-9af6-be4490a507b3/26-6a6f73895d875.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, குறித்த கடற்பிரதேசங்களில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் சட்டமூலம் ; சட்டமா அதிபர் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565"></link>
            <id>https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. 

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07ec23d-0d8e-4379-8e7e-1209a754bb83/26-6a6f6e0f78fec.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f241aa13-8cdd-4c35-b2ff-5ce9d48a551e/26-6a6f65eac24bb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புனரமைப்புப் பணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477"></link>
            <id>https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477</id>
            <summary type="text">கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p>

தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9908046-b1e5-472e-b753-3f77ca1beb1d/26-6a6f37072e939.webp' /></p><p>

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார். </p><p>வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தர நியமனம் குறித்து விமல் வீரவங்ச புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wimal-allegations-regarding-pujith-appointment-1785677880"></link>
            <id>https://jvpnews.com/article/wimal-allegations-regarding-pujith-appointment-1785677880</id>
            <summary type="text">நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93759f78-a523-4796-9873-7fa4bcb4b004/26-6a6f483aadd7f.webp' /></p><p>இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டு, முடியுமாயின் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திற்குச் சென்று நேரடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச, அவர்களுக்கு இடையே நெருங்கிய அரசியல் தொடர்பு நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்ததன் மூலம் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்குப் பூரண அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
</p><p>
எனினும், பூஜித் ஜயசுந்தர அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாததால் அத்தகைய பாதுகாப்பு எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befda1a9-0e57-442c-acb6-cf15813150dd/26-6a6f429bec2f1.webp' /></p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p> 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சார்ஜில் இருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று (02) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



முறைப்பாட்டின்படி, தனது வீட்டில் சுமார் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கைத்தொலைபேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715a66fd-fc2a-4de3-a3c1-e3dff6440dd9/26-6a6f3e9fcd6db.webp' /></p><p>



இதையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு எதிரில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>விசாரணைகளின் போது, திருடப்பட்ட கைத்தொலைபேசியை சந்தேகநபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர். </p><p>மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் அவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>



கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:57:11+00:00</updated>
        </entry>
    </feed>
