<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T02:27:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் ஆசியால் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-will-enjoy-wealth-by-rahu-s-grace-1789521955"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-will-enjoy-wealth-by-rahu-s-grace-1789521955</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார்.&amp;nbsp; தற்போது ராகு கும்ப ர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார்.&nbsp; தற்போது ராகு கும்ப ராசியிலும், அவிட்டம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். </p><p style="text-align: justify; ">இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரமானது மங்களகரமானதாக கருதப்படுவதோடு, இது செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது.&nbsp; இந்த நட்சத்திரத்தில் ராகு பயணிப்பது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியைத் தரப்போகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a777703-b17c-44ed-8871-6dfbc0f5ed6f/26-6aa9f0252df47.webp' /></p><p style="text-align: justify; ">இப்போது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஏப்ரல் 2027 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.</p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>
கன்னி :</b>அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>


கும்பம் :</b>அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T01:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659"></link>
            <id>https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659</id>
            <summary type="text">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69c6493-0607-4c30-8da0-0513507f0138/26-6aa97db4ef1ae.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-16T01:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிய ஆசிரியைக்கு காத்திருந்த பேரிடி ; பட்டப்பகலில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-awaits-teacher-returning-home-from-school-1789519653"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-awaits-teacher-returning-home-from-school-1789519653</id>
            <summary type="text">வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று(15) பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று(15) பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>&nbsp;இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b21fa4e-845d-4dcf-bb37-fc8949d5e55b/26-6aa9e726de09b.webp' /></p><h2>&nbsp;விசாரணைகள் தீவிரம்</h2><p>
</p><p>
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில் புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த அலுமாரிகளை உடைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/935f765e-832c-493e-9953-58122de12757/26-6aa9e72794958.webp' /></p><p>
அதன் பின்னர், அதற்குள் இருந்த பெறுமதியான சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.</p><p>

</p><p>


காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சகோதரர்களை பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் ; சந்தேக நபர்களின் வாக்குமூலத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-claims-lives-of-two-brothers-1789517797"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-claims-lives-of-two-brothers-1789517797</id>
            <summary type="text">தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

சந்தேக நபர்கள் இருவரிடமும் தற்போது தடுப்புக் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fb3bc7-d22d-48d9-919d-f8b083556fa0/26-6aa9dfe729e81.webp' /></p><h2 style="text-align: justify; ">இறுதிச் சடங்குகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தாக்குதல் நடத்தப்பட்ட வீடும், தாம் இலக்கு வைத்த வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், இரு வீடுகளையும் தங்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என குண்டு வீசிய சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார்.</p><p style="text-align: justify; ">

 

தந்தையின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதுடன், உயிரிழந்த இரு சிறுவர்களின் இறுதிச் சடங்குகள்&nbsp; கண்ணீருடன் நடைபெற்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

 

கைக்குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக கராஜில் ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்தக் கராஜின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
 

கடந்த 10 ஆம் திகதி இரவு 9 மணியளவில் நபர் ஒருவர் வந்து அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 'ஹிருத்ம ஷஷ்மிக' அல்லது 'ஹிரு மல்லி' எனப்படும் நபர் என சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

ஹிரு மல்லி என்பவருடன் சேர்ந்து, குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் 'மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ' அல்லது 'மது' என்ற நபர் சென்றிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மேல் மாகாண தெற்குப் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் வழிகாட்டலில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்ன.

 

இதனடிப்படையில், இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த குண்டுத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் தாக்குதல் நடத்த நினைத்த வீடும், தாக்குதல் நடத்திய வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், சரியான வீட்டை அடையாளம் காண முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தமது உறவினரின் மகனான 'கொஸ் மல்லி' மற்றும் போதியாவத்த அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

குண்டு வீசியதாகக் கூறப்படும் 'மது' என்ற நபர், கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற 'ஜாதுங்க பிரியந்த' என்பவரின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவராகச் செயற்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இந்த இரண்டு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T01:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் பிடித்ததாக கூறி மாணவியை தோழிகள் செய்த சம்பவம் ; விசாரணையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230"></link>
            <id>https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230</id>
            <summary type="text">மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொறியியல் கல்லூரியில்&nbsp; மாணவி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை 2 மாணவிகள்,&nbsp; பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58319077-4ec3-4a33-b7c2-2fb6703513dc/26-6aa9975fb8f40.webp' /></p><p> </p><h2> பொலிஸார் விசாரணை</h2><p>மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். </p><p>தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.</p><p></p><p> அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த உடல் பிரச்சினைகள் இருக்கா? அப்போ கொத்தமல்லியை அதிகம் சாப்பிடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-issues-avoid-too-much-coriander-1789515816"></link>
            <id>https://jvpnews.com/article/health-issues-avoid-too-much-coriander-1789515816</id>
            <summary type="text">அன்றாட சமையலில் சுவைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அன்றாட சமையலில் சுவைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுவதாகக் கூறப்படுகின்றது.
</p><p style="text-align: justify; ">


எனினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிக அளவில் உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a8c216-7ee1-40eb-9e41-789937a414ce/26-6aa9d82a6b5e6.webp' /></p><h2 style="text-align: justify; ">உடல்நலப் பிரச்சினைகள்</h2><p style="text-align: justify;"><b>



சிறுநீரக நோயாளிகள்:</b>



சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அதிகரிக்கும் பொட்டாசியத்தை வெளியேற்றுவது சிரமமாக இருக்கலாம். கொத்தமல்லியில் பொட்டாசியம் உள்ளதால், அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p style="text-align: justify; "><b>


குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:</b>



கொத்தமல்லி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக அளவில் அல்லது சாறு வடிவில் எடுத்துக்கொண்டால் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"><b>


நீரிழிவு நோயாளிகள்:
</b>


நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் கொத்தமல்லியை உட்கொள்ளும்போது இரத்தச் சர்க்கரை அளவு மேலும் குறையக்கூடும். எனவே, அளவோடு பயன்படுத்துவது அவசியம்.
</p><p style="text-align: justify;"><b>


கல்லீரல் நோயாளிகள்:
</b>


கடுமையான கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்:
</b>


சிலருக்கு கொத்தமல்லி ஒவ்வாமையை ஏற்படுத்தி தோலில் சிவத்தல், தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அரிதாக, சிலருக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.



</p><p style="text-align: justify;">


மேற்கண்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பச்சைக் கொத்தமல்லி சட்னி அல்லது சாறு போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்த்து, உணவில் குறைந்த அளவில் பயன்படுத்துவது குறித்து வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானதாகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-16T01:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447</id>
            <summary type="text">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6005784b-b69d-4242-b0c8-a72b2b4b8e52/26-6aa9abc0e32b7.webp' /></p><h2 style="text-align: justify; ">எரிபொருள் விலை திருத்தம்</h2><p style="text-align: justify; ">

இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. </p><p style="text-align: justify; ">முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றனர். இது குறித்து அரசாங்கமும் இன்னும் கலந்துரையாடவில்லை.

</p><p style="text-align: justify; ">
எவ்வாறிருப்பினும் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறது.</p><p style="text-align: justify; ">

இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-16T01:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உளவாளியை கொலை செய்ய திட்டம் ; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plot-to-kill-police-informant-uncovered-1789510052"></link>
            <id>https://jvpnews.com/article/plot-to-kill-police-informant-uncovered-1789510052</id>
            <summary type="text">&amp;nbsp; பொலிஸ் தகவலாளர் ஒருவரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், செல்ல கதிர்காமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொலிஸ் தகவலாளர் ஒருவரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், செல்ல கதிர்காமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>&nbsp;தகவலாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு கிரிந்த பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் இந்த விவகாரம் தொடர்புடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a8d3e6-13c2-498c-8c10-78ab8e8d62ae/26-6aa9c1a656a5c.webp' /></p><p>
</p><p>
குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கிய பொலிஸார் தகவலாளரை இலக்கு வைத்து, குறித்த மரணம் தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T22:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத்தில் பரவிய காணொளி ; பேருந்தின் சாரதிக்கு வந்த சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/viral-video-causes-trouble-for-bus-driver-1789502981"></link>
            <id>https://jvpnews.com/article/viral-video-causes-trouble-for-bus-driver-1789502981</id>
            <summary type="text">கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்தின் சாரதிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b38d2d-52ac-46f7-a4d1-e208ff180bd3/26-6aa9a606973da.webp' /></p><h2 style="text-align: justify; ">காணொளி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் காணப்பட்டபோது, பேருந்து அந்தச் சந்தியின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

பின்னர், பிரதான வீதியில் உள்ள சிவப்பு சமிக்ஞையைத் தவிர்த்து குறுக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் பிரதான வீதியில் இணையும் வகையில் பேருந்து செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் மிரிஹான போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; ">&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேருந்தைச் செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; ">அத்துடன், குறித்த சாரதி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக, போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T20:45:01+00:00</updated>
        </entry>
    </feed>
