<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T14:48:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம்; சுற்றி வளைத்த பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774"></link>
            <id>https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774</id>
            <summary type="text">&amp;nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc6f139-adb0-4286-9c7a-ab61ef71a737/26-6a918d4046c5c.webp' /></p><h2>&nbsp;238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம்</h2><p> </p><p>



''கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> 



அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p></p><p> 



இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை. </p><p>



இந்நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்களிடம் விடயத்தை வினவிய போது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>


நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்கள்.


காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
அந்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட உள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.</p><p>

ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89141911-6eb9-4eb3-b2d8-7f737806dcd5/26-6a9187d57a18c.webp' /></p><h2>கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ,ஐரோப்பா</h2><p> 

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும்.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது.</p><p></p><p> 

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

அத்துடன் வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409"></link>
            <id>https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05dc0ae5-41d1-4d1a-b24e-4c027c19b286/26-6a917462d5e80.webp' /></p><p></p><h2>&nbsp;உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது</h2><p>



பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888"></link>
            <id>https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹ_ருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/004122c2-504f-4ac5-b7ce-7b4ff71785b5/26-6a9189c9db55b.webp' /></p><p>
</p><p>
அதேநேரம், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், இன்றைய நாளிலும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை செல்சியஸ் 39 முதல் 45 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.92 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 20,207 நோயாளர்களும், கொழும்பில் 18,794 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eee746e-9220-41f6-8abe-0cc23e3910cd/26-6a91805f5c5a7.webp' /></p><p>



மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 நோயாளர்கள் பதிவாகியுள்ளது.



நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T12:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T11:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலை விட அதிக கால்சியம் உள்ள சூப்பர் உணவுகள்; உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/muts-superfoods-with-more-calcium-than-milk-1787915123"></link>
            <id>https://jvpnews.com/article/muts-superfoods-with-more-calcium-than-milk-1787915123</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கின்றன. </p><p>இந்த உணவுகளில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd09acd3-f8d0-4c78-80ea-cbdcb3a8514f/26-6a916b7459400.webp' /></p><p> </p><p><b>

சியா விதைகள்</b> - கிராம் சியா விதைகளில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. </p><p><b>

பாதாம்</b> - 100 கிராம் பாதாமில் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஒரு சிறந்த, சத்தான ஸ்நாக்ஸ்.</p><p><b> 

மத்தி மீன்</b> - அவுன்ஸ் மத்தி மீனில் 351 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனுடன், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன.</p><p><b> 

கேல்</b> - 100 கிராம் கேல் கீரையில் 254 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.</p><p><b> 

டோஃபு </b>- கால்சியம் சல்பேட் சேர்க்கப்பட்ட கெட்டியான டோஃபுவில், ஒரு கப்பில் 506 மில்லிகிராம் வரை கால்சியம் உள்ளது. இது ஒரு சிறந்த புரோட்டீன் நிறைந்த உணவு தேர்வாகும்.</p>]]></content>
            <updated>2026-08-28T11:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி தொடர்பில் சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permission-ccd-court-regarding-ishara-sewwandi-1787912881"></link>
            <id>https://jvpnews.com/article/permission-ccd-court-regarding-ishara-sewwandi-1787912881</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என கொழும்பு குற்றப்பிரிவு இன்று (28) கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.
</p><p>
சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் போது, ​​கொழும்பு குற்றப்பிரிவு இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b7d4db-8514-4a03-8823-472c550f753b/26-6a9162b289d49.webp' /></p><p>
</p><p>
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் மேலும் எடுத்துரைத்த விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக இந்த சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், 2ஆம் திகதி அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், சிசிடி கோரிக்கை தொடர்பாக உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-28T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 கிழமையில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் மரணம்! சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deaths-of-60-newborns-at-the-hospital-west-bengal-1787911595"></link>
            <id>https://jvpnews.com/article/deaths-of-60-newborns-at-the-hospital-west-bengal-1787911595</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.</p><p> 

மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50de2861-1c12-49ce-b96b-413b271ca677/26-6a915dad24aaa.webp' /></p><p> 

இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p><p></p><p>இன்னிலையில் ,&nbsp; இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு&nbsp; மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T10:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மரத்துப்போன மனிதம்; உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215"></link>
            <id>https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3febe628-d183-43c4-aa29-d1936b8225bd/26-6a913909889e9.webp' /></p><h2>பொலிஸார் கைது நடவடிக்கை</h2><p>



விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோரே நகை திருடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த காணொளியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற 2 பேர், மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர்</p><p>. 



பின்னர், பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதை அங்கு கூடியிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இந்த மனிதாபிமானமற்ற செயலை நேபாள பொலிஸார் மற்றும் பொதுமக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
</p><p>


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 500 ஐ நெருங்க்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து விலகிச் சென்று முன்வரிசையில் இருந்த அமைச்சர்களுக்கு அருகில் அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. </p><p>


வழக்கமாக முதலமைச்சர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகிலேயே தனி இருக்கையில் அமர்வது வழக்கம் என்பதால், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb237e3f-1875-41df-9297-ace74a5df372/26-6a91570250adb.webp' /></p><h2>கவனம் ஈர்த்த&nbsp; செயல்</h2><p> </p><p>

அமைச்சர்கள் முதலமைச்சருடன் இணைந்து முதல் வரிசையில் தனித்தனியாக அமர்வார்கள்.&nbsp; இவர்களது இருக்கைகள் பொதுவாக மூப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு நேர் எதிரே உள்ள வரிசையில் எதிர்க்கட்சியினர் அமர்கின்றனர்.

234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அமர்த்தப்படுகின்றனர்.</p><p></p><p>

அவர்களுக்குப் பின்னால் கட்சி உறுப்பினர்கள் அமர்கின்றனர்.

இன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நடவடிக்கைகளின்போது, ​​சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வலதுபுறம் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையிலிருந்து சாதாரணமாக எழுந்த விஜய், அவையின் முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.</p><p></p><p>
</p><p>
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சக உறுப்பினர்களுடன் சுருக்கமாகப் பேசுவதற்காக அவ்வப்போது இருக்கைகளை மாற்றுவதுண்டு என்றாலும், முதலமைச்சர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T09:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடர்; இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-sri-lanka-provides-1-million-aid-1787907828"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-sri-lanka-provides-1-million-aid-1787907828</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69263f4-a94d-42ed-82d6-9416242d1e4b/26-6a914ef5b4c71.webp' /></p><p>
</p><p>
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
</p><p>
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.</p><p>

இதன்போது நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், நேபாள அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கையால் வழங்கக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T09:00:59+00:00</updated>
        </entry>
    </feed>
