<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T15:38:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு திரும்பினார் தங்க மகன் ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070"></link>
            <id>https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.

ஸ்காட்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.
</p><p>
ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் அவரது சாதனை 89.75 மீட்டராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6406ea36-47e9-47e5-964a-a3cb5b21d450/26-6a71e4efc2817.webp' /></p><p>
</p><p> 

23 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரர் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதலில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
</p><p>
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களைப் பின் தள்ளி அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த பொதுநலவாயத் தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p>

மேலும், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் மெய்வல்லுநர் பிரிவிலிருந்து இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையும் இதன் மூலம் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா அனுப்புவதாக யாழ், வவுனியா , கிளிநொச்சி நபர்கள் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
</p><p>
கடந்த 27.05.2026 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் ஆட்கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c0a40b-a3c9-4958-924f-80d13246c6b0/26-6a71e2f155abd.webp' /></p><h2>​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி&nbsp;நபர்கள்</h2><p>
</p><p>
இதற்காக, எத்தியோப்பிய தூதரகம் மற்றும் எத்தியோப்பிய பொலிஸ் பிரிவிடமிருந்து தேவையான ஒத்துழைப்பை வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது.

விசாரணையின் போது, ​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் வசிக்கும் 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்கள், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் இந்த மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
விமான டிக்கெட்டுகள் மற்றும் விசாக்களைப் பெறுவதற்காக சந்தேக நபர் அவர்களிடம் இருந்து 6.4 மில்லியன் ரூபாயைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.

 அவர்களை கனடாவிற்கு அனுப்பிய பின்னர், அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பெறும் அடிப்படையில், துபாய் வழியாக அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
</p><p>
துபாய் வழியாக வெளிநாடு சென்ற பின்னர், எத்தியோப்பியாவில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால், இந்த மோசடியில் சிக்கிய மூன்று நபர்களும் கடத்தப்பட்டனர்.

பின்னர், அவர்களை விடுவிப்பதற்காக அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் 30,000 அமெரிக்க டொலர் பிணைப்பணம் கோரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களுக்கு சுமார் ரூ. 20 லட்சம் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது .</p><p>மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த, மேற்கூறிய கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களை மீட்க எத்தியோப்பிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், மீட்கப்பட்ட மூன்று இலங்கையர்களையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பாகிஸ்தான் நாட்டினரும், ஒரு எத்தியோப்பிய நாட்டினரும் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கும், எத்தியோப்பியாவில் செயல்படும் குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய, குற்றப் புலனாய்வுத் துறையின் கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686</id>
            <summary type="text">&amp;nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
</p><p>
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ என்கி|ற திருக்குறளை பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322c44ba-e102-4d05-88ac-b896a52e72ce/26-6a71e757b5ec1.webp' /></p><p>

இதற்கு அர்த்தம் ‘ஒருவரை நேரில் பார்க்கும் போது புகழ்ந்து பேசி விட்டு, அவர் இல்லாத சமயத்தில் அவதூறாக பேசுவது என்பது மிகவும் இழிவானது. அதற்கு உடனடியாக இறந்து போவதே மேல்’ என்பதே அர்த்தம்.</p><p></p><p> </p><p>எனவே, நிவேதா பெத்துராஜ் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

 உதயநிதியையும், நிவேதா பெத்துராஜையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது.</p><p> நிவேதாவுக்கு துபாயில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தியை நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511"></link>
            <id>https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் <a href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725" target="_blank">சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து</a> விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02d4423-7327-479f-b699-f6a4319d119f/26-6a71ded8c8c12.webp' /></p><p>
சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T12:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரரை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம் வழங்க முறபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது பொலிஸ் அதிகாரிக்கு 500,000 ரூபாய் கையூட்டல் கொடுக்க முயன்ற ஒருவரை காவல் நிலையத்தினுள்ளேயே வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19bae5fb-0944-42d5-8b0f-4de4b6410903/26-6a71d3da786db.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788"></link>
            <id>https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788</id>
            <summary type="text">&amp;nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157aefb8-551b-497b-a2cb-a5ae97a2d21e/26-6a71d04e0040f.webp' /></p><p>
</p><p>
தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன்வைக்க அனுமதி கோரியும் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சாலெவின் இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942475a3-1410-430c-9061-7bf684fd4940/26-6a71cb70e6b39.webp' /></p><p>
</p><p>


இதன்போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><p>



இதையடுத்து, குறித்த இடைக்கால மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் நிலவும் வெள்ள அபாயம்; வெளியேற்றப்படும் வாவி நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854"></link>
            <id>https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.</p><p>



பெய்துவரும் தொடர் மழையினால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் , அணையின் பாதுகாப்பைக் கருதியும், நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதன் காரணமாகவும் கிரகரி வாவியின் வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4d745d-5d0a-47eb-869c-c9d02d099511/26-6a71c8bfb101b.webp' /></p><p>
</p><p>

நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.



நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம் போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474"></link>
            <id>https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.
</p><p>

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக காலை மற்றும் மாலை வேளையில் வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42da6d82-622d-4f80-a312-ec79cc543b18/26-6a71c743c1d68.webp' /></p><p>
</p><p>


நுவரெலியா - பதுளை பிரதான வீதி ,நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன .</p><p> 



இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறும் , ஆபத்தான பகுதிகளில் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pillayan-remand-extended-further-1785837907"></link>
            <id>https://jvpnews.com/article/pillayan-remand-extended-further-1785837907</id>
            <summary type="text">&amp;nbsp; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 இதன்போது, பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59423772-2def-44ad-b487-4fd4711d47a0/26-6a71b95563ef2.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:03:07+00:00</updated>
        </entry>
    </feed>
