<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-19T06:37:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366"></link>
            <id>https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366</id>
            <summary type="text">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a473efb-2817-43ca-9adc-7705b664fa12/26-6aadf51942d3a.webp' /></p><h2 style="text-align: justify; ">சமூக ஊடக பதிவு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்தக் கருத்தை சில நிமிடங்களில் நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், நீதியுடன் கருணையும் இணைந்திருக்க வேண்டும் என்றும், அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T05:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடன்பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brother-s-brutal-act-against-his-elder-brother-1789797291"></link>
            <id>https://jvpnews.com/article/brother-s-brutal-act-against-his-elder-brother-1789797291</id>
            <summary type="text">அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்குருவாதொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80b0e93-9a9c-4660-8be4-0c05177b375c/26-6aae23acea926.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஹல்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், உயிரிழந்த நபரின் சகோதரரே இக் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T05:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான ஒருவர் ; படகில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-arrest-shock-discovery-in-waiting-boat-1789796350"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-arrest-shock-discovery-in-waiting-boat-1789796350</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேந்தான்குளம் பகுதியில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25747c8d-e937-4aea-b5b1-5a2af5a2ad37/26-6aae20001f976.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரைக் கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளும், ஆமைகளைக் கரைக்குக் கொண்டு வரப் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகளையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T05:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் மழையுடனான வானிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainy-weather-to-increase-over-next-few-days-1789795872"></link>
            <id>https://jvpnews.com/article/rainy-weather-to-increase-over-next-few-days-1789795872</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bbb7bd5-fee8-430c-9175-0f75b5bf01dc/26-6aae1e22ada61.webp' /></p><p style="text-align: justify; ">

மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p style="text-align: justify; ">

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T05:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் ஆபத்தான 712 இடங்கள் அடயாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/712-dangerous-locations-identified-nationwide-1789794562"></link>
            <id>https://jvpnews.com/article/712-dangerous-locations-identified-nationwide-1789794562</id>
            <summary type="text">நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய மற்றும் ஆபத்தான 712 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய மற்றும் ஆபத்தான 712 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">

பொலிஸ் மா அதிபரின் கூற்றுப்படி, வீதி விபத்துகள் அடிக்கடி நிகழும் இடங்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953de351-f65c-421e-be09-3a5300e64b0a/26-6aae19037f992.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;712 இடங்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
நாடு முழுவதும் விபத்து ஏற்படக்கூடிய 712 இடங்கள் கண்டறியப்பட்டு, அது தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.</p><p style="text-align: justify;">

இது தொடர்பில் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிக்கையில், 

மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,849 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எட்டு விபத்துகள் அதிகம்.</p><p style="text-align: justify;"> 

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

</p><p style="text-align: justify;">மேலும் , வீதி விபத்துகளால் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் குழுக்களாகத் தொடர்கின்றனர்.
</p><p style="text-align: justify;">
பாதசாரி உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, வீதியோரமாக நடந்து செல்பவர்கள் அல்லது நின்று கொண்டிருப்பவர்களுக்கே நேரிடுகின்றன.
</p><p style="text-align: justify;">
மோட்டார் சைக்கிள் தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இத்தகைய விபத்துகள் பிற வாகனங்களுடன் மோதுவதை விட, வீதியோர நிலையான தடைகள் அல்லது பிற பொருட்கள் மீது மோதும்போதே அடிக்கடி நிகழ்கின்றன என்று வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-19T05:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம் ; இன்று முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789792475"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789792475</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c969efee-c335-4fe1-90b4-0a24bed944f9/26-6aae10dd39a88.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, பின் இருக்கைகளிலும் ஆசனப்பட்டிகளை பொறுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T04:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த ரயில் வேலைநிறுத்தம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166"></link>
            <id>https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166</id>
            <summary type="text">ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. 

நேற்று (18) நள்ளிரவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. </p><p>

நேற்று (18) நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3e6600-36c4-4286-ba80-1ac7712b9255/26-6aae0bc03b82f.webp' /></p><p>ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தமிழர் பகுதியை அதிர வைத்த துப்பாக்கிசூடு ; மதுபானக் கடை அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812fb664-349e-496e-b451-dc60b9a2cf9d/26-6aae05f769636.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p style="text-align: justify; ">

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணைய வழியில் பெண் செய்த சம்பவம் ; இரண்டு வருடங்களின் பின் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657</id>
            <summary type="text">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1284780-d146-4869-a94b-2f9a68d5ccb9/26-6aadfe0ad8e46.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> 

இதற்கமைய, நேற்று (18) காலை சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.</p><p style="text-align: justify; "> 

இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன் ; வைரலான காணொளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf2d2dc-7c92-4049-8515-dea084f31fd0/26-6aadfb94207dc.webp' /></p><h2 style="text-align: justify; ">அடுத்தகட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி,&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில்,பொலிஸ் அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரபல பாடசாலை மாணவி போதைப்பொருளுக்கு அடிமையா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640"></link>
            <id>https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரை உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தாது குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>

குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் பாவிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6c53ce-1d2b-42e9-8321-4bc097d12b49/26-6aadb3c225be4.webp' /></p><p>குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விடுதி ஊழியர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த இளம் பெண் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக குறித்த விவகாரம் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>எனவே, சம்பவம் தொடர்பில் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த பின்னரே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
</p><p>
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பெற்றோர் மற்றும் பொறுப்பான தரப்பினர் உரிய முறையில் தலையிட்டு தேவையான மருத்துவ மற்றும் புனர்வாழ்வு உதவிகளை வழங்குவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:03:58+00:00</updated>
        </entry>
    </feed>
