<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T04:17:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&amp;nbsp;இன்று செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&nbsp;இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய கைதி ஒருவர் உடல் சுகயீனமடைந்த நிலையில், சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a7d82d-7e18-4e15-b0d7-8cfb0db931c5/26-6a964e9244090.webp' /></p><p>இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) 03.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>அதனடிப்படையில் அவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் ; வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட 15ஆம் திருவிழா சிறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553"></link>
            <id>https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a9b259-ec9c-43b5-8d2c-bd098cce0716/26-6a964b3aef752.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a5910-ca0e-4fc4-9ad6-96fce4ceb24a/26-6a964b3bb4df3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T03:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917"></link>
            <id>https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இலங்கையின் வரலாற்றில் ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98cbf32-2b54-4ad3-9f73-b6474669fc92/26-6a9648bf46b9f.webp' /></p><p>இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று (1) முற்பகல் 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>

இந்தச் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியலமைப்புக்கு முரணானதா என்பதையும் அவ்வாறாயின் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் சேர்த்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் இந்த உயர்நீதிமன்ற அமர்வு ஆராய்ந்து அறிவிக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079</id>
            <summary type="text">வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

இதன்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 32 கிலோகிராம் 400 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81b57b2f-7e72-496a-8d44-8a663b6dbc71/26-6a9645791ed07.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கடும் வெப்பம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671"></link>
            <id>https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
திறந்த வெளியில் வேலை செய்வோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனமாகப் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2485fa-7b77-4738-b94e-c4ad0149f85d/26-6a9643e10de58.webp' /></p><p>அத்துடன் குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, லேசான வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
</p><p>
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்கள் முற்றாக வறண்டுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர்மட்டம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு 7 மாவட்டங்களில் 81 ஆயிரத்து 929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T03:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190"></link>
            <id>https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190</id>
            <summary type="text">22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.

 

பிரதம நீதியரசர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.</p><p>

 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளது.</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f9370a-430f-43cd-a7bc-3b72ffba99e3/26-6a9642003f741.webp' /></p><p>நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், </p><p>இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.</p><p>
 

 அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T03:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சொந்த மகளுக்கு தந்தை செய்த தகாத செயல் ; 18 வருடத்தின் பின்னர் கிடைத்த அதிரடி தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221"></link>
            <id>https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af98b951-4b9c-44f9-80f6-6eebc6ef499d/26-6a961b0f458e0.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T00:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு பெரும் அதிஸ்டம் காத்திருக்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974</id>
            <summary type="text">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. </p><p style="text-align: justify; ">அந்த வகையில் இவரது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணிப்புகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மாதத்தின் முதல் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9516097-27ad-4b31-a881-18618517a479/26-6a9621e7a66da.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுப யோகங்கள்</h2><p style="text-align: justify; ">&nbsp;பாபா வாங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு :</b> செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

</p><p style="text-align: justify; "><b>சிம்மம் : </b>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களின் முக்கியமான பெரிய வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வாரத்தில் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் : </b>&nbsp;மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



</p><p style="text-align: justify; "><b>துலாம் : </b>தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் சில நட்புகள் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
மிதுனம் : </b>முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T00:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களுடன் சேர்ந்து இருபெண்கள் அரங்கேற்றிய சம்பவம் ; பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733"></link>
            <id>https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733</id>
            <summary type="text">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹொரனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள், இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a83c8b-8e24-4028-9513-45bfe7cfc80e/26-6a96153f60355.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காகவே குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
ஹொரனை பகுதியிலுள்ள கடை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்தமை, இரண்டு நாட்களுக்குள் ஹொரனை, வெலிகல பகுதியில் இரு பெண்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்தமை, ஹொரனை, கோணப்பல பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கொள்ளையடித்தமை மற்றும் ஹொரணை, முணகம பகுதியில் கடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் தங்கச்சங்கிலியைக் கொள்ளையடித்தமை போன்ற கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">கைதான பிரதான சந்தேகநபர்கள் இருவரும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
அதேபோன்று, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய இரு பெண்களும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரு ஜோடி தங்க நகைகள், அடகுப் இரசீது ஒன்று மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">மேலும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் ஹொரனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T23:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நோய்களை தவிடுபொடியாக்கும் சின்ன வெங்காயம் ; நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062"></link>
            <id>https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062</id>
            <summary type="text">&amp;nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். </p><p style="text-align: justify;">ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5cf95ec-6031-4d4c-a1ee-812430c56119/26-6a960acfd1be3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அருமருந்து&nbsp;</h2><p style="text-align: justify; ">
ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். </p><p style="text-align: justify; ">சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16273137-6d0f-46d4-a1f7-0539ff22cbeb/26-6a961171a2695.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. </p><p style="text-align: justify;">மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.
</p><p style="text-align: justify;">
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயம் சாறை தேய்த்தால் உடலில் விஷம் ஏறாது. மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.


அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக சின்ன வெங்காயத்தில் இன்சுலின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சின்ன வெங்காயத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும்.</p><p style="text-align: justify;"> தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T23:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T23:05:35+00:00</updated>
        </entry>
    </feed>
