<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T17:30:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139"></link>
            <id>https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139</id>
            <summary type="text">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f47d590-e527-4d5f-bb70-2abf08f5adbd/26-6a99acccb3d0b.webp' /></p><h2 style="text-align: justify; ">தவறான உரையாடல்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T17:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705"></link>
            <id>https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705</id>
            <summary type="text">&amp;nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் &#039;காவ் வாய் காதல் சந்தை&#039; (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907adc64-37ba-46ee-a95d-7c88ffaa628e/26-6a99785311a1f.webp' /></p><h2>எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத&nbsp; &nbsp;சந்தை</h2><p> 

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.</p><p></p><p>
</p><p>
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
</p><p>
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.

திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.</p><p>

3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p></p><p>
</p><p>
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாயம் இன்னும் நீங்கவில்லை ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990"></link>
            <id>https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990</id>
            <summary type="text">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdaf295-e6c4-4da8-b924-6b0631134611/26-6a99a467b9ca6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528"></link>
            <id>https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறையில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d93bbab-bd11-4ef5-a065-e4efd98368cf/26-6a999eb61926a.webp' /></p><p> </p><p>

இதற்கான உரிய திகதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[02 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173</id>
            <summary type="text">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதை பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef444e4-c840-4e19-83ec-bee62379604f/26-6a999966ae419.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் பாவனை</h2><p style="text-align: justify; ">

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161"></link>
            <id>https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.</p><p style="text-align: justify; "> 

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f66977a7-cc03-41cb-b14b-3d2c902e518e/26-6a99918acbe8f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மேயர் முசம்மிலின் மகனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431c39cf-fa87-4d9c-8381-edde7b1dcc35/26-6a9974e89228d.webp' /></p><p>


எனினும், சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; மேள​தாளங்​கள் முழங்க கொண்டாடும் குடும்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475"></link>
            <id>https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது பிறந்த குழந்​தைக்கு ‘கார்​கி’ எனப் பெயரிட்டுள்​ளனர்.
</p><p>
 நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளதை குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868365a1-d2f9-4ade-8cf0-1f99c1beb1ea/26-6a996bb55a909.webp' /></p><h2>&nbsp;சாரட் வண்டியில்&nbsp; ஊர்​வல​மாக&nbsp; வந்த தாய், குழந்​தை&nbsp;</h2><p> </p><p>

மருத்​து​வ​மனை​யில் பிரசவம் முடிந்து வீடு திரும்​பிய தாய் மற்​றும் குழந்​தையை அவர்​களு​டைய குடும்​பத்​தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்​றனர்.</p><p> குறிப்​பாக, மேள​தாளங்​கள் முழங்க, கிராமிய நடனங்​களுக்கு நடுவே அலங்​கரிக்​கப்​பட்ட சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்.

குழந்​தை​யின் தாத்தா லிம்​பாஜி தஹி​பாலே உணர்ச்​சிவசப்​பட்டு கூறும்​போது,</p><p></p><p> “குடும்​பத்​தில் ஒரு பெண் குழந்தை பிறப்​பது பெரும் பாக்​கி​யம். பல ஆண்​டு​களாக பெண் இல்​லாத குறை இருந்​தது, இன்று அது நிறைவேறி​யுள்​ளது” என்​றார்.</p><p>

தன்​னுடைய இரு மரு​மகள்​களை​யும் சொந்த மகள்​களைப் போலவே நடத்தி வந்​த​தாக​வும், பேத்​தியை தேரில் இசை​யுட​னும் நடனத்​துட​னும் வீட்​டுக்கு அழைத்து வந்​த​தில் மகிழ்ச்சி அடைவதாக​வும் அவர் தெரி​வித்​தார்.</p><p></p><p> குழந்​தை​யின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறும்​போது, “இன்று எங்​கள் வீட்​டுக்கு லட்​சுமி வந்திருக்​கிறாள் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.</p><p>

குழந்​தை​யின் தந்தை கூறும்​போது, “பொது​வாக மக்​கள் ஆண் குழந்​தையையே விரும்​பு​வார்​கள், ஆனால் பெண் குழந்தை பெறும் உணர்​வும் மகிழ்ச்​சி​யும் வேறு வித​மானது. மகள்​கள் தந்தை​யிடம் அதிக பாசம் கொண்​ட​வர்​கள். எங்​கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்​போம்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விட வேண்டாம்; மின் விநியோகம் தடைப்படும் அபாயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய முறைமை இயக்குநர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


 இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் மற்றும் அவற்றின் நூல்கள் மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மின்சார பரிமாற்றக் கம்பிகள் செயலிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db2664d-5843-4ec1-b4ef-58bb67d0f2e2/26-6a9973535a814.webp' /></p><h2>மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள்</h2><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், மின்சார பரிமாற்றக் கம்பிகள் தானியங்கி முறையில் துண்டிக்கப்படுவதற்கும் காரணமாக அமையக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள் மற்றும் நூல்கள் தற்போது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகளின் கீழ் மனிதர்களால் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
</p><p>


எனவே, இவ்வாறான சம்பவங்கள் தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மின்சார உற்பத்தி அலகுகள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கலாம்.</p><p></p><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நேற்று (2) தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாகவும், முறைமையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான அவசர நடவடிக்கையாக தெரிவுசெய்யப்பட்ட சில மின்சார விநியோக வழித்தடங்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதன் விளைவாக, குறித்த மின்சார விநியோக வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டிருந்த சில நுகர்வோரின் மின்சார விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த பிரதேசங்களில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்த்து, தேசிய மின்சார முறைமையின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006"></link>
            <id>https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. </p><p> 

அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70154aa3-f7a6-4162-8a08-684daa448886/26-6a994a9f9b348.webp' /></p><h2>பதில் சொல்கிறேன் ...&nbsp; யாரும் ஓடக்கூடாது</h2><p> 


இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p></p><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.</p><p> இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. 

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.</p><p></p><p>அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். </p><p>வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.</p><p>

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.</p><p></p><p>ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியை கொலை;குற்றவாளிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612"></link>
            <id>https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612</id>
            <summary type="text">&amp;nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி சிகிரீ ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகரவினால் புதன்கிழமை (02) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
மொனராகலை சொரோம்புவ பேரமண்டியவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அருண சாந்த என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72faef2c-4cd0-4367-b15c-c7f0c6734a8c/26-6a99702585984.webp' /></p><h2>நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின் மரண தண்டனை</h2><p>

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்தே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, காட்டில் இழுத்துச் செல்லப்பட்டு அவரது சேலையால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அவரை வன்புணர்ச்சி செய்யும் நோக்கத்துடன் காட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அது தோல்வியடைந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

பிரதிவாதிக்கு கொலைக் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்ததுடன், வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகக் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு SJB ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sjb-protest-in-front-of-the-fort-railway-station-1788438072"></link>
            <id>https://jvpnews.com/article/sjb-protest-in-front-of-the-fort-railway-station-1788438072</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41b7a83a-1f06-44a6-8b72-bb6e7c9bc7b9/26-6a99663a0e4d6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-individuals-deported-from-abu-dhabi-arrested-1788437271"></link>
            <id>https://jvpnews.com/article/two-individuals-deported-from-abu-dhabi-arrested-1788437271</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த இருவர், அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு 09/03 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
</p><p>


ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஏவுகணைகள் மற்றும் அவை இலக்குகளைத் தாக்கிய விதம் தொடர்பான காணொளிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்திருந்தமைக்காகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72d7e843-0ae3-4ce9-8d32-aa941e76c6b5/26-6a9963195997c.webp' /></p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது</h2><p>



</p><p>திசநாயக்க முதியன்செலகே பந்துல திசநாயக்க: அசோகபுராவின் துங்கன்னாவப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான இவர், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p>



சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார: கொழும்பு, பொரெல்லாவைச் சேர்ந்த 36 வயதான இவர்,ரேவி சூடாவின் நெருங்கிய ஆதரவாளரும், பூசா சிறைச்சாலைக் கலவரச் செயல்களில் ஈடுபட்டவரும் ஆவார்.</p><p>



அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானமான EY-392 மூலம் 09/03 அன்று காலை 10.15 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரையும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பந்துல திசாநாயக்க மேலதிக விசாரணைக்காகக் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T12:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு நீண்ட நாளாக போக்கு காட்டிய கொம்பனித்தெரு குடு நோனா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479"></link>
            <id>https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>


செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a398e9b4-27d3-4f22-91bb-5979248d4295/26-6a992950a9395.webp' /></p><h2>நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்த நோனா</h2><p>
</p><p>


கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொம்பன்னவீதி மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் முன்னர் வசித்து வந்த சந்தேகநபர், கடந்த காலத்திலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p>முன்னதாக, 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><p>



நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பிலும் கிரிபத்கொட பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சுட்டி உக்குங்’ என்பவரின் சிறிய தாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அவரது கணவரான ‘கூம்பிகெலே சுட்டி’, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியால் இலங்கைக்கு குவியும் வருமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/revenue-pouring-into-sri-lanka-vehicle-imports-1788436469"></link>
            <id>https://jvpnews.com/article/revenue-pouring-into-sri-lanka-vehicle-imports-1788436469</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலமே இந்த வரி வருவாய் பெறப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378a5e81-d140-4205-a208-426c1350137e/26-6a99607f06b93.webp' /></p><h2>316,000 வாகனங்கள் -512,547 மில்லியன் வரி வருவாய் </h2><p> </p><p>



இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான ரூபாய் 386,726 மில்லியன் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.</p><p></p><p>



அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை' 1,000சிசி இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.</p><p></p><p>



அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:51:45+00:00</updated>
        </entry>
    </feed>
