<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T10:43:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி; ஜீவனாம்ச தொகையும் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996"></link>
            <id>https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் தொகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதற்குப் பதிலாக, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சம் ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந் நிலையில் ரவி மோகன் தனது மகன்களை சந்திப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ab5656-cb24-4978-9b51-66ab54230956/26-6a688635cdc2a.webp' /></p><p>

வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பான தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T10:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527"></link>
            <id>https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கப் வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ec0a0b-43af-4495-83e4-22dac8b016e9/26-6a688078800e4.webp' /></p><p>
</p><p>
மஹிந்திரா Bolero ரக கப் வாகனம் குறித்த வாகனங்களில் மோதிய பின்னரும், அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

விபத்தின் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளன.</p><p>

குறித்த CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச்சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T10:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-two-killed-in-elephant-attack-1785233136"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-two-killed-in-elephant-attack-1785233136</id>
            <summary type="text">&amp;nbsp;ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந்த 68 வயதான எச்.எம். காமினி சத்துகுமார ஆவார்.
</p><p>
 ஒரு யானை தனது தோட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்த அவர், யானையை விரட்டுவதற்காக தனது வீட்டின் முன்பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c3538f-52ac-4b5e-9130-a7dd6cb2a733/26-6a687ef246307.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வீட்டுக்காரர் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் இருந்த யானை, திடீரென வீட்டை நோக்கிப் பாய்ந்தது.
</p><p>
அந்த நேரத்தில், யானை அவரைத் தாக்கி, சுமார் 100 அடி தூரம் இழுத்துச் சென்று மிதித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
யானையின் தந்தங்களால் அவரது உடல் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக ஆனமடுவ , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் குறித்து ஆனமடுவ பொலிஸார், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் ரிட் மனு மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-saley-s-writ-petition-adjourned-again-1785230905"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-saley-s-writ-petition-adjourned-again-1785230905</id>
            <summary type="text">&amp;nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb696e1-7234-4c21-9def-ea29523f6778/26-6a68763aefe2b.webp' /></p><p> </p><p>

இந்த மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. 

அதன்படி அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெரும் துயரம்; குழந்தைக்கு எமனான ஊஞ்சல் தடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-swing-bar-proves-fatal-for-child-1785229831"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-swing-bar-proves-fatal-for-child-1785229831</id>
            <summary type="text">&amp;nbsp; வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p>
நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce114b7-4e33-43d0-bfe6-4b12109b1b39/26-6a687208d7bd3.webp' /></p><p> 

இதன்போது படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.</p><p></p><p> </p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக (பிரேத பரிசோதனை) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T09:08:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சமூக ஊடக பதிவால் இலங்கையருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தகவல்களின்படி, கல்முனையில் இந்து பக்தர்களுடன் கதிர்காமம் நோக்கிப் பயணித்த நாயொன்றை நபரொருவர் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199f7a02-9f9b-4c04-8596-c9e3bf2c2076/26-6a6840df29131.webp' /></p><h2>இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்து</h2><p>

அதன் பின்னணியில், அனோஜன் என்ற தமிழர் ஒருவர் மற்றொரு மதத்தின் இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவூதி அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

இந்தத் தீர்ப்பு தொடர்பான தகவலை, அனோஜனின் சகோதரர் திங்கட்கிழமை (27) நண்பகலில் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 இந்தத் தீர்ப்பால் அனோஜனின் குடும்பத்தினர் கடும் மனவேதனையிலும் பாதிப்பிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் சவூதி நீதிமன்றம் அல்லது அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-28T08:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 இந்தச் சம்பவம் ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeed1c79-d613-4018-abc2-e6a614730c5d/26-6a686c3deda1d.webp' /></p><h2>வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் , அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p> 
இந் நிலையில் , பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானம் மக்களே; பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/40-50-km-h-strong-wind-several-areas-srilanka-1785227830"></link>
            <id>https://jvpnews.com/article/40-50-km-h-strong-wind-several-areas-srilanka-1785227830</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

 தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4bb70cf-ebab-494d-ad4e-dca80fe7f3db/26-6a686a37cd29f.webp' /></p><h2>&nbsp;40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று</h2><p> 

 அதன்படி ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த எச்சரிக்கை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடலுக்கு அப்பாலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

 எனவே அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T08:35:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரஹெராவிற்கு சென்ற யானை விபத்தில் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-participating-perahera-injured-accident-1785226858"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-participating-perahera-injured-accident-1785226858</id>
            <summary type="text">&amp;nbsp; பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.</p><p> 

இந்த யானை கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fefe7a6c-161b-470c-bdad-4cff90395324/26-6a68666c604ce.webp' /></p><p> 

யானையைக் கொண்டு சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, யானையை அந்த வாகனத்தில் இருந்து இறக்கி வீதியோரத்தில் நிறுத்த முற்பட்டபோது , தம்புள்ளையில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.</p><p></p><p> 

டிப்பர் வாகனத்தில் மோதிய யானை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

 இந் நிலையில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a1589bc-3375-4951-a63c-5fbd2508e89a/26-6a6873986fd3c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T08:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர காவடி குழு உறுப்பினர்கள் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devinuwara-kavadi-troupe-arrested-with-narcotics-1785226419"></link>
            <id>https://jvpnews.com/article/devinuwara-kavadi-troupe-arrested-with-narcotics-1785226419</id>
            <summary type="text">&amp;nbsp; தெவிநுவர காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெவிநுவர காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த பெரஹெரா ஊர்வலம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (28) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ae334b2-f237-4fa6-b6d2-668c09bf7bd7/26-6a6864b540572.webp' /></p><h2> பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள்</h2><p> 

இந்த பெரஹெரா ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதில் கலந்துகொள்ளும் அனைத்து காவடி குழுக்களும் உடனடிப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.</p><p></p><p> </p><p>

தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவில் காவடி குழுக்களைப் பங்கெடுக்கச் செய்வது தொடர்பில் இரு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவு தீவிரமடைந்தது.</p><p> 

உருவான இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பதைத் தற்காலிகமாகக் இரத்துச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>

எனினும் இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது. </p><p>

கடந்த ஆண்டுகளில் காவடி நடனங்களில் ஈடுபட்ட அனைத்துக் குழுக்களுக்கும் இம்முறையும் அனுமதி வழங்குவதற்கு அங்கு தீர்மானிக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T08:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-arrested-accepting-a-bribe-of-20-lakh-1785223483"></link>
            <id>https://jvpnews.com/article/2-arrested-accepting-a-bribe-of-20-lakh-1785223483</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;20 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவருருமாக இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;20 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவருருமாக இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
</p><p>
பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு, 2027 ஆம் ஆண்டுக்காக உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு, தமது தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காகவும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்காகவும் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாவை முதலாவது சந்தேக நபர், முறைப்பாட்டாளரிடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27ac8d38-103a-46f2-b0c5-25a2dd29d671/26-6a68593cbe373.webp' /></p><p></p><h2>30 நிமிட இடைவெளிகளில் கைது</h2><p>
</p><p>
பின்னர் இந்த தொகை 25 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாய் கையூட்டலாக பெறப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து கையூட்டல் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவரும் சுமார் 30 நிமிட இடைவெளிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனை உத்தியோகத்தர் மீது தாக்குதல்; சந்தேக நபர் தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hospital-staff-member-attacked-suspect-escapes-1785220745"></link>
            <id>https://jvpnews.com/article/hospital-staff-member-attacked-suspect-escapes-1785220745</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவின் உத்தியோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சிகிச்சை பிரிவில் மருத்துவருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, அவரை வெளியேறுமாறு பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96ab064-5568-4aa1-8e10-7364a72c1dba/26-6a684e8b8b466.webp' /></p><p>
</p><p>

 இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் குறித்த நபர் தாக்கியுள்ளதுடன், அதைத் தடுக்க வந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தள்ளிவீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்; இரு இளைஞர்கள் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-jumps-into-the-river-in-batticaloa-1785219269"></link>
            <id>https://jvpnews.com/article/woman-jumps-into-the-river-in-batticaloa-1785219269</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு - ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு - ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
</p><p>
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியுடன் கேட்டுள்ளார்.

அதற்கிணங்க முச்சக்கர வண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad883c01-23b0-4195-ac5d-3988e65d8f65/26-6a6848c803d43.webp' /></p><p></p><p>
</p><p>
இதனைக் கண்ட இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றினை எடுத்துக் கொண்டு பெண்ணை மீட்டுள்ளனர்.</p><p></p><p>மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad883c01-23b0-4195-ac5d-3988e65d8f65/26-6a6848c803d43.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T06:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-chaminda-wijesiri-sentenced-in-prison-1785219578"></link>
            <id>https://jvpnews.com/article/mp-chaminda-wijesiri-sentenced-in-prison-1785219578</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f896abd-6819-4a06-917f-a50843546a65/26-6a6849fb4a151.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:17:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-prices-fell-international-market-1785218891"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-prices-fell-international-market-1785218891</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளன.

அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளன.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,049.69 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.41 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1da7ff-937e-44dd-b841-e97eff03717f/26-6a68474c842b2.webp' /></p><p>&nbsp;இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் உள்நாட்டுத் தங்க விலையிலும் பிரதிபலிக்கக்கூடும் எனச் சந்தைத் தரப்புகள் எதிர்பார்க்கின்றன.
</p><p>
இருப்பினும், உள்நாட்டுத் தங்க விலைகளில் ஏற்படும் மாற்றம், நாணய மாற்று விகிதம் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அமையும்.</p>]]></content>
            <updated>2026-07-28T06:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் தாயும் மகளும் செய்த மோசமான செயல் - அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-and-daughter-arrested-1785210914"></link>
            <id>https://jvpnews.com/article/mother-and-daughter-arrested-1785210914</id>
            <summary type="text">அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மேலதிக விசாரணை</b></h2><p>மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி; மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-vel-silver-chariot-procession-in-colombo-1785216086"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-vel-silver-chariot-procession-in-colombo-1785216086</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது ஆண்டின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி காரணமாக , வாகன சாரதிகளும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது ஆண்டின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி காரணமாக , வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
</p><p>

இன்று (28) காலை 7.30 மணிக்கு புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி , இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aecec7b-531e-4e1c-a22f-2087b2d32d84/26-6a683c5830b2c.webp' /></p><h2>மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு</h2><p>
</p><p>
 ஆடிவேல் வெள்ளி ரத பவனி கொழும்பு செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, பிரதான வீதி, மணிக்கூட்டு கோபுரம் சந்தி, லைடன் பெஸ்டியன் வீதி , யோர்க் வீதி, பரன் ஜயதிலக்க மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியை சென்றடையும்.
</p><p>
அத்துடன் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி வழியே காலி வீதியில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி பயணிக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643dc9db-01cf-40a3-9a42-fb1a5b049abe/26-6a683c58e4593.webp' /></p><p>

பின்னர் இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

திரும்பிச் செல்லும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி ஜூலை 31 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலை நோக்கிப் பயணிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab39d1d-d7fc-4cf7-a6b5-1adb1171be2c/26-6a683c59a377f.webp' /></p><p> </p><p>

இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனி நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

எனவே குறிப்பிட்ட இந்த நேரங்களில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி செல்லும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T05:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attorney-rakitha-rajapaksha-bail-granted-1785215728"></link>
            <id>https://jvpnews.com/article/attorney-rakitha-rajapaksha-bail-granted-1785215728</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


அத்துடன் ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
</p><p>

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுள் ஒருவரான அருண வருணஹெண்ணதிகே ஆகிய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45c6984f-485d-48d5-a88e-220e13767a5a/26-6a683af2520fe.webp' /></p><p>

 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T05:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-one-fastest-growing-countries-world-1785215194"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-one-fastest-growing-countries-world-1785215194</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c85a1b3-3739-4032-b016-4ed06c2bf620/26-6a6838dba270b.webp' /></p><p> </p><p>

குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. </p><p>

இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:04:43+00:00</updated>
        </entry>
    </feed>
