<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T04:29:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857"></link>
            <id>https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்சரிப்பார் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்தின் வழியாக குரு பகவான் பயணிப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e9a036-93e0-4de2-9336-f7f68877ba92/26-6a839b4daaca1.webp' /></p><p>இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சாதகமான முன்னேற்றங்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78bf976-2158-4c8b-8aa5-4459bbeac8ce/26-6a839b4e5b4fd.webp' /></p><h3>மிதுனம்</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, ஆயில்ய நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவது தொழில் மற்றும் நிதி நிலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றத்தால் வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளோ கிடைக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொடப்போகிறது. </p><p>ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது நீங்கள் நீண்ட காலமாகத் தள்ளிப்போட்டு வந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கவோ இது ஒரு மிகச் சிறந்த காலமாகும்.

இந்த பெயர்ச்சியால் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மிகவும் இணக்கமானதாக மாறும். மேலும், உங்களுக்குப் பயன் தரக்கூடிய குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பயன்படுத்துங்கள், தற்போதைய சூழலில் அதுவே உங்கள் மிகச்சிறந்த சொத்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ab6d3b-302d-4334-a31c-308d95779a05/26-6a839b4fb4015.webp' /></p><h3>கன்னி
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நுழைவது கன்னி ராசியினருக்கு, குறிப்பாக வருமானம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கலாம். அதேவேளையில், சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை மாற்றத்தை விரும்பும் நபர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையக்கூடும்.
</p><p>
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18453439-91a0-4cba-ae7d-c91ba26fc22d/26-6a839b4f0dc72.webp' /></p><h3>மீனம்
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவது மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் கல்விக்குச் சாதகமான ஒரு காலகட்டமாகக் கருதப்படுகிறது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது சிறந்த நேரம். அவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.</p><p>இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் அவர்கள் கடின உழைப்பிற்கான பலனை இரட்டிப்பாகப் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, இது மிகவும் சாதகமான நேரம். எதிரிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்ட இது சரியான காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c8dd44-0ff2-4afa-8862-b0c50e239167/26-6a839b50666f0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223"></link>
            <id>https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf19818-a344-44b3-a7a0-823ca9fa93c7/26-6a8371b8e6377.webp' /></p><p>இந்நிலையில், நிறுவனத்தின் தலைவருடன் ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவர், எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
</p><p>
கையடக்கத் தொலைபேசியின் மின்கலன் தீர்ந்திருந்ததால், தான் வீட்டிற்கு வருவது தொடர்பில் மனைவிக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவரால் முடியவில்லை.
</p><p>
இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், கதவைத் தட்டியபோது மனைவி கதவைத் திறப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டதுடன், வீட்டின் பின்பக்கக் கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்து சத்தம் கேட்டுள்ளது.

மின்கல விளக்கை எடுத்துக்கொண்டு தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>
அந்த நேரத்தில் மரத்திலிருந்து சில பலாக்காய்கள் கீழே விழுந்த சத்தமும் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உடனடியாக அருகில் வசித்த மனைவியின் சகோதரர்களை அழைத்த அவர், மரத்தில் திருடன் ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adf44f4f-66a8-4e8a-b902-4a2839a7d9e4/26-6a8371b99d1c6.webp' /></p><p>அங்கு வந்த உறவினர்கள் மரத்தில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, கணவன் தனது மனைவியை அந்த நபருடன் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மனைவியின் சகோதரர்களும் குறித்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரு பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பில் தொடர்ந்தும் பணியாற்றுவதைத் தவிர்த்து, தனது இரு பிள்ளைகளையும் தானே பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[களைகட்டும் யாழ். உணவுத் திருவிழா ; மூன்றாவது நாளிலும் மக்கள் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776"></link>
            <id>https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” முற்றவெளி மைதானத்தில் மூன்றாவது நாளாகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.</p><p>
</p><p></p><p>வட மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்திருவிழாவில் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5addf363-65f6-466d-8a70-36275077574a/26-6a83aa91ecd47.webp' /></p><p>

விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்ததுடன், இந்நிகழ்வு வடக்கின் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது எனத் தெரிவித்தார்.</p><p>

விழாவில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். </p><p>பெருமளவான மக்கள் பங்கேற்றுள்ள இத்திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு ; மரணத்திற்கான காரணம் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-dies-while-advanced-level-exams-jaffna-1787011866"></link>
            <id>https://jvpnews.com/article/student-dies-while-advanced-level-exams-jaffna-1787011866</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரசடி வீதி, கந்தர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவின் இரண்டாவது நாள் பரீட்சைக்குத் தோற்றியபோது திடீரென மயக்கமடைந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b85ad8-424f-4c2e-865d-d1f39ee03cc3/26-6a83a31c5bc7f.webp' /></p><p>சிகிச்சையின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். பின்னர் கடந்த 12ஆம் திகதியும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p>

இந்நிலையில், நேற்று (16) இரவு உணவு அருந்திய பின்னர் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மாணவனின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனையின் போதும் மரணத்திற்கான காரணம் உறுதியாக கண்டறியப்படாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-found-hiding-ice-drug-in-anus-1787010753"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-found-hiding-ice-drug-in-anus-1787010753</id>
            <summary type="text">கண்டி பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த கைதி தனது ஆசனவாயில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18788e98-609c-4b88-a695-dc12408f0894/26-6a839ec3b001d.webp' /></p><p>இவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பிலேயே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் சிறைக்குள் இருக்கும் இந்த நபருக்கு 'ஐஸ்' போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:52:43+00:00</updated>
        </entry>
    </feed>
