<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T19:27:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து அபராதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6701c0b7-3feb-4f8b-9406-bf57a22b3686/26-6a85fa64af620.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கிசை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mount-lavinia-shooting-main-suspect-arrested-1787159182"></link>
            <id>https://jvpnews.com/article/mount-lavinia-shooting-main-suspect-arrested-1787159182</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>நேற்று (18) மாலையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதன்படி, இதுவரை இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9818fc-1fa3-40a4-ae71-f0f50411446e/26-6a85e2904a6d9.webp' /></p><p>கடந்த 15 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். </p><p>

அன்றைய தினம் இரவே, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் ரீவோல்வர் ரகத் துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள் மற்றும் 6 வெற்றுத் தோட்டாக்கூடுகளுடன் கைது செய்யப்பட்டனர். </p><p>

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 32, 35 மற்றும் 28 வயதுடைய கொழும்பு 14, கொழும்பு 12, தளுபொத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் சந்தேகநபர் 28 வயதுடைய குரண பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலிகளின் பயிற்சி முகாம் என கதையளந்தவர் கம்பி எண்ணுகிறார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766"></link>
            <id>https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/ltte-training-camp-kilinochchi-person-spread-false-1787114482" target="_blank">&nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம்</a> அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b26ad0-77e1-4578-bf44-3456623cffb5/26-6a85a65801b81.webp' /></p><p>
</p><p>
 கிளிநொச்சியில் ,LTTE பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-set-to-get-married-dies-in-accident-1787145610"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-set-to-get-married-dies-in-accident-1787145610</id>
            <summary type="text">&amp;nbsp; திருமணத்திற்கு இரு நாட்களும் வெளிநாடு செல்ல மூன்று நாட்களுமே இருந்த நிலையில் விபத்தில்&amp;nbsp; &amp;nbsp;இளைஞன் உயிரிழந்த&amp;nbsp; சம்பவம்&amp;nbsp; பெரும்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருமணத்திற்கு இரு நாட்களும் வெளிநாடு செல்ல மூன்று நாட்களுமே இருந்த நிலையில் விபத்தில்&nbsp; &nbsp;இளைஞன் உயிரிழந்த&nbsp; சம்பவம்&nbsp; பெரும்&nbsp; துயரத்தை எற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;மாத்தறை, அக்குரஸ்ஸயில் சம்பவித்த விபத்தில் 25 வயது லக்மால் என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efbfe576-d74d-4d79-8e7c-c185b8ebbb74/26-6a85ad8ca0031.webp' /></p><p>உயிரிழந்த&nbsp; இளைஞசன் ,திருமணப் பதிவுக்காக 2 நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு 3 நாட்களும் மட்டுமே இருந்த நிலையில்&nbsp; &nbsp;விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><p>
தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>
மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/project-set-to-be-launched-at-vavuniya-university-1787144590"></link>
            <id>https://jvpnews.com/article/project-set-to-be-launched-at-vavuniya-university-1787144590</id>
            <summary type="text">&amp;nbsp; 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, குறித்த திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff3f785-3f00-4f2a-bfde-abd39c294ba1/26-6a85a98f9cd66.webp' /></p><p>



கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி மணல் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sand-theft-in-kilinochchi-by-bribing-the-police-1787142607"></link>
            <id>https://jvpnews.com/article/sand-theft-in-kilinochchi-by-bribing-the-police-1787142607</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பரந்தன் வீதிச் சோதனைச்சாவடியில், இன்றைய தினம் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் வாகன சாரதிகள் ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced0053a-f15e-4c06-9a8b-46ec3631189e/26-6a85a1d14f3be.webp' /></p><p> 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிக்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-media-centre-cannot-be-released-1787144947"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-media-centre-cannot-be-released-1787144947</id>
            <summary type="text">&amp;nbsp; பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



கிளிநொச்சி ஏ9 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>



கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5880241d-6cc7-46be-b2ad-78867c91df6b/26-6a85aaf5aa089.webp' /></p><p>
</p><p>


இக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியிருந்தது அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திறகு வழங்கிய பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும் கட்டடத்தையும்

விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.

வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p>



2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும் கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>


இந்த காணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா

வித்தியாலயத்திற்கு விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும் விடுவிக்கப்பட்டது.



இந்நிலையில், ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே

விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
