<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T15:21:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியுதவியில் 3 புதிய பாலங்கள் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714"></link>
            <id>https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திறந்து வைக்கப்பட்டன.
</p><p>
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f5bece-dc01-4613-b7d3-021c837a1256/26-6aa15fcc63252.webp' /></p><p>
</p><p>
பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589"></link>
            <id>https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589</id>
            <summary type="text">&amp;nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சவர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7144d3d4-c624-4678-9498-00c528ef9276/26-6aa153970135e.webp' /></p><h2>&nbsp; AI&nbsp; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>
எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> 

தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08219b70-b7bd-4b0d-a201-592cb16bdc53/26-6aa15de3c2fcb.webp' /></p><h2>&nbsp;குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p> </p><p>

ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p> 

எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p> 

குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364ae4cf-8f30-4212-b56d-d6e5dcc81690/26-6aa15bbf586b3.webp' /></p><p>
</p><p>
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 கிராம் தேயிலைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233"></link>
            <id>https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233</id>
            <summary type="text">&amp;nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d3d6c-8bdd-4182-9072-4ce821f41462/26-6aa1561a951f0.webp' /></p><h2>&nbsp;குற்றத்தை ஒப்புக்கொண்ட&nbsp; நிறுவனம் </h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594"></link>
            <id>https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22314474-3191-4079-b8c8-f34dec547cdf/26-6aa14fb3a177e.webp' /></p><p> </p><p>

குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956"></link>
            <id>https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு புதன்கிழமை (9) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்&nbsp; &nbsp;.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f3bc14-6a55-4d1f-b999-57a49df0e2c2/26-6aa158ed8d504.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T12:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடையூறு விளைவித்தால் தண்டனை ; அர்ச்சுனா எம்.பிக்கு நாடாளுமன்றில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-warns-mp-archuna-1788954589"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-warns-mp-archuna-1788954589</id>
            <summary type="text">சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என குழுக்களின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என குழுக்களின் பிரதித் தலைவரான ஹேமாலி வீரசேகர, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நோக்கி எச்சரித்தார்.</p><p style="text-align: justify; ">

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcc8c51-ef50-4b2e-ad31-9e6c3a15f6ed/26-6aa147df38232.webp' /></p><h2 style="text-align: justify; ">சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு</h2><p style="text-align: justify; ">இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, அவரை இவ்வாறு எச்சரித்தார்.
</p><p style="text-align: justify; ">
பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது,அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா&nbsp; ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T11:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[54 இடங்களில் குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-underweight-bread-at-54-locations-1788954669"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-underweight-bread-at-54-locations-1788954669</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு முறையான எடையில் பாண் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெதுப்பகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe58df1-ac70-4bb3-a14f-30ca52428e84/26-6aa1482ed026c.webp' /></p><h2>&nbsp;செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை&nbsp;</h2><p>
</p><p>
முதற்கட்ட ஆய்வுகளின்படி, 54 இடங்களில் தெளிவான எடை விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் எடைக் குறைவான பாண் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
76 கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் பாணின் எடையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும், 65 இடங்கள் அதன் விலையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் முற்றுகையின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 81 வெதுப்பகங்கள் முற்றுகைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு முழு பாணின் எடை 450 கிராமும், அரை பாணின் எடை 225 கிராமும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 அதேசமயம் பாணிண் எடை, விலைகள் அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக நுகர்வோர் தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T11:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-the-reservoir-1788954173"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-the-reservoir-1788954173</id>
            <summary type="text">&amp;nbsp; தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று(08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று(08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


நீர்த்தேக்கத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பயணப் பை, கைபேசி மற்றும் பணப் பை என்பன பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்த்தேக்கத்தின் அடியில் சேற்றில் புதைந்திருந்த நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3adf3c39-4d62-40e9-b8ee-7c0d982732c8/26-6aa1463f1b85c.webp' /></p><p> 



 சடலம் ஹப்புத்தளை, கஹகல்ல தோட்டத்தில் வசித்து வந்த எஸ்.பிரான்சிஸ் (46 வயது) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
ஹப்புத்தளை பகுதியிலிருந்து தலவாக்கலையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த இவர், பின்னர் தலவாக்கலை நகரத்திற்கு வந்து, நகரத்திற்கு அருகிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>



நீதிவான் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p>



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588"></link>
            <id>https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். 

அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். </p><p>

அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும் அர்ச்சுனா MP வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e698543-a0f5-471d-a519-eab291976e26/26-6aa1400d7a59e.webp' /></p><p></p><p>

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அர்ச்சுனா MP மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



விழாவோடை பகுதியில் மோட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>


விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6ffb3d-ea4e-494e-9be3-87a2fef88934/26-6aa13b355c841.webp' /></p><h2>சரணடைந்த கார் சாரதி</h2><p>
</p><p>


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 



விபத்தையடுத்து, கார் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:59:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.</p><p>



சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாததை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdc6aa3-13f4-48ac-818e-cb970d9cb04b/26-6aa1379673b32.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெண்கள் இருவர் விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846"></link>
            <id>https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846</id>
            <summary type="text">&amp;nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9ac26b-6be7-41cc-8e64-33761eb1499c/26-6aa12d885970a.webp' /></p><p></p><h2>&nbsp;தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து&nbsp;&nbsp;குஷ்' போதைப்பொருள்</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி ; 6 ஆசிரியர்கள் இடைநிறுத்தம் ; பெண் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2559ae3e-4042-4fbf-bed6-89ed2360ea29/26-6aa12b55354d3.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p style="text-align: justify;">
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T09:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503"></link>
            <id>https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16086760-6984-498d-bbb7-fb916200ebb3/26-6aa12848e685b.webp' /></p><h2>புதிய நிர்வாகக் குழு&nbsp;</h2><p>&nbsp;கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தனது மையமாகக் கொண்டு, சுமார் 35 இடங்களுக்கு 23 விமானங்களைக் கொண்ட தொகுப்பை இயக்கும் 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines), 'ஒன்வேர்ல்ட்' (oneworld) கூட்டணியின் ஓர் உறுப்பினராகவும், இந்தியச் சந்தையைத் தனது முதன்மை வருவாய் ஆதாரமாகவும் கொண்டுள்ளது.</p><p></p><p>

 நீண்ட காலமாகத் தலைமைத்துவ வெற்றிடம் நிலவிய சூழலில், மார்ச் 2025 முதல் யசந்த திஸாநாயக்க தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO), மார்ச் 2026-இல் தலைவர் சரத் கணேகொட பதவி விலகியதைத் தொடர்ந்து திமல் அரந்தர தற்காலிகத் தலைவராகவும் பணியாற்றினர்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7-8 தேதிகளில் சரத் கணேகொட தலைமையில் புதிய நிர்வாகக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சுமார் 340 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான திரண்ட நஷ்டத்துடன் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசுக்குச் சொந்தமான இந்த விமான நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான ஒரு முக்கியத் திட்டத்தின் பின்னணியிலேயே இந்தத் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது. </p><p>

இதற்காக, ஜூன் 2026-இல் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.</p><p></p><p>இக்குழுவில் டுமிந்த ஹுலங்கமுவ, தேஷால் டி மெல், டுமித் பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.</p><p>

 சர்வதேச நிதிக் கழகத்தின் (IFC) ஆலோசனை ஆதரவைப் பெறும் இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-09T09:32:13+00:00</updated>
        </entry>
    </feed>
