<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T03:30:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501</id>
            <summary type="text">துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கங்கொடவில பகுதியில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கங்கொடவில, நுகேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d43669-935e-46ed-80fa-fc697f6a2509/26-6a97970eb0ff6.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவியாகந்த வீதிப் பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு இச்சந்தேகநபர் உதவி புரிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகநபரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இக்குற்றச்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள், கடந்த ஜூலை 19ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள மயானத்தில் வைத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கும், ஜூலை 21ஆம் திகதி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விகாரை வீதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவத்திற்கும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414"></link>
            <id>https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><h3>

முதற்கட்ட விசாரணை</h3><p>கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b4eec2-727c-4d83-903f-6c6e0659b422/26-6a9792d07067a.webp' /></p><p> 

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857"></link>
            <id>https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இலங்கை இசைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த பிரியங்கர பெரேரா, பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தார்.</p><p>

மறைந்த பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தந்தையின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து இலங்கை இசைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2aeefe-785c-40f9-af56-144626865b33/26-6a9790a2ca85b.webp' /></p><p>அவரது குரலில் வெளியான ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
</p><p>
பாடகராக மட்டுமன்றி, பிரியங்கர பெரேரா ஒரு திறமையான நடிகராகவும் கலைத்துறையில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார். </p><p>இசை மற்றும் நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிய அவர், பல ஆண்டுகளாக கலைத்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரது மறைவு இலங்கை கலைத்துறையினருக்கும், அவரது இசையை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
அன்னாரின் மறைவுக்கு கலைத்துறையினர், சக பாடகர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால்,&nbsp; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eaa7f16-bdfe-47d5-a76c-c01b1c6205f9/26-6a97710ea8765.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:13:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச ராஜயோகத்தில் சனி பகவான் ; உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536</id>
            <summary type="text">&amp;nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.</p><p style="text-align: justify; ">சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c3a1b7-892d-407c-bc03-c4ad582df10c/26-6a9777f21db79.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்தெந்த ராசிகள்</h2><p style="text-align: justify; "><b>ரிஷபம்:
</b>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:
</b>சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறை தொட்டியில் பச்சிளம் சிசுவை கைவிட முயன்ற இளம்பெண் ; பொதுமக்கள் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841</id>
            <summary type="text">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
30 வயதுடைய குறித்த பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c164ac59-2d19-4d69-9c84-64a5f55e511c/26-6a976d6b25b19.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; ">

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன், அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண், குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T00:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பரீட்சைக்கு அழைத்து சென்ற தந்தையின் உயிரை பறித்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493"></link>
            <id>https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493</id>
            <summary type="text">அநுராதபுர தலைமையக பொலிஸ்&amp;nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&amp;nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுர தலைமையக பொலிஸ்&nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8308a68-4403-465d-97dc-79b60b5f0d6a/26-6a97643e9ce4e.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T23:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய நான்கு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689"></link>
            <id>https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 பொலிஸாரால் முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

</p><p> பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட புகைக் குழாய்களைப் பொறுத்தி, அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1a97faa-90ce-4e6d-99fc-6103cbfb2b00/26-6a97517b0901d.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 18, 19, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் நிக்கவெரட்டிய, சித்திகுலிய, கொபேகனே மற்றும் சுத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;அத்துடன், கைது செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களும் போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திச் செலுத்தப்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில் நான் கைது செய்யப்படலாம்..காரணம் இது தான் ; நாமலின் ஆருடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936"></link>
            <id>https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். </p><p style="text-align: justify; ">எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe5eca2-be32-4504-9bb3-ef1ca5b9a99a/26-6a974b3d26d24.webp' /></p><h2 style="text-align: justify;">போதைப்பொருள் கொள்கலன்கள்</h2><p>
</p><p style="text-align: justify;">
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p style="text-align: justify;">
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு கிடையாது. நீதியமைச்சர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் தற்போது முரண்படுகிறார்.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் இரண்டு தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">இதற்கு முன்னர் எவ்வித பரிசோதனைகளுமின்றிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம்.</p><p style="text-align: justify;">


அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் எங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்காகவே நாங்கள் செயற்படுவதால் மக்களுக்காகவே எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T22:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டிற்குள் 23 சடலங்கள் ; நொடியில் முடிந்துபோன வாழ்க்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300"></link>
            <id>https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300</id>
            <summary type="text">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி நேபாளத்தில் உள்ள ஆறுகளின் பாய்ந்ததால் வடக்கு நேபாளத்தில் உள்ள 4 ஊர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.</p><p style="text-align: justify;">அந்த ஊரிலிருந்த வீடுகள், கட்டிடங்கள், கார் மற்றும் கனரக வாகங்கள் என எல்லாமே நீரில் அடித்து செல்லப்பட்டன. பெரு வெள்ளத்தில் பல மனிதர்களும் சிக்கினார்கள்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/614c5e8e-d503-4c27-93e7-d2323ead08f5/26-6a97194ae5359.webp' /></p><h2 style="text-align: justify;">மீட்பு பணிகள்</h2><p style="text-align: justify;">அவர்களில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம். அதேபோல், 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். </p><p style="text-align: justify;">அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரே வீட்டில் 23 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"> இதையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p style="text-align: justify;">மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T21:44:49+00:00</updated>
        </entry>
    </feed>
