<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T19:46:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641"></link>
            <id>https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641</id>
            <summary type="text">வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் தரும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. </p><p>குறிப்பாக, செல்வம், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அடையாளங்களைக் கொண்ட படங்களை வீட்டில் வைத்திருப்பது மனநிறைவு மற்றும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b407a14b-a9c2-4b6d-a6cc-980183d169ea/26-6a650e1c16a9e.webp' /></p><h3>

நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் நீர்
</h3><p>ஓடும் நீர் அல்லது நீர்வீழ்ச்சி காட்சியைக் கொண்ட படங்கள், பணப்புழக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் படங்களை வீட்டின் வடக்கு திசையில் மாட்டுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இது செல்வ வளத்தை ஈர்த்து, பணப்பற்றாக்குறையை குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2524f57f-1281-41b2-ae50-36a30197aff1/26-6a650e1ab27ee.webp' /></p><h3>

ஓடும் 7 குதிரைகள்
</h3><p>ஏழு குதிரைகள் ஒன்றாக ஓடும் படம் வெற்றி, வேகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம் மற்றும் பணியில் வெற்றியை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e006f018-4a30-4e80-a80e-45621faba839/26-6a650e1b65e5d.webp' /></p><h3>

உதிக்கும் சூரியன்
</h3><p>உதயமாகும் சூரியனின் படம் புதிய தொடக்கம், நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆற்றலைக் குறிக்கிறது. இதனை வீட்டில் வைத்திருப்பது வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.</p><p>


<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7911e2-e5b9-41d9-a9d7-760674a547b7/26-6a650e1e2d77e.webp' /></p><h3>
தங்க நாணயங்கள்
</h3><p>தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ (Money Tree) படங்கள் நிதி வளர்ச்சி, சேமிப்பு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக கருதப்படுகின்றன. செல்வ வளத்தை ஈர்க்கும் சின்னங்களாக இவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a87c9ca7-1e80-425a-9140-0300612f5a74/26-6a650e1d77d2c.webp' /></p><h3>

கொய் மீன் (Koi Fish)
</h3><p>கொய் மீன் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை வீட்டில் வைத்திருப்பது பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை வாஸ்து மற்றும் ஃபெங் ஷுய் மரபுகளில் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e497b657-f1dc-45d0-bd33-96f2e0e34593/26-6a650e1cc377f.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T19:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[7.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d47a96-6c69-4f8d-bf8f-f8e49dcfa7bd/26-6a6500f55b098.webp' /></p><p>இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.</p><p>
</p><p></p><p>இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய அவர், பல தசாப்தங்களாக வணிக நிர்வாகத் துறையில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தார்.</p><p> நாட்டின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அவர், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2743386b-76db-497f-a9c0-87c387d35dfe/26-6a64fc990eb4a.webp' /></p><p>

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCSL) தலைவராகவும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராகவும் பணியாற்றிய அவர், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்ததுடன், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
</p><p>
அத்துடன், இலங்கை காப்பீட்டு கூட்டுத்தாபனம் (SLIC) நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
</p><p>
வணிகத் துறையில், நவாலொக்க குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக நீண்டகாலம் செயற்பட்ட அவர், நவாலொக்க பைலிங் லிமிடெட், நவாலொக்க டிம்பர் ஸ்டோர்ஸ் லிமிடெட், நவாலொக்க பாலிசாக்ஸ் லிமிடெட், நவாலொக்க இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நியூ நவாலொக்க டிரேடிங் கோ லிமிடெட் மற்றும் நவாலொக்க டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.</p><p>

உபாலி தர்மதாசவின் மறைவு, இலங்கையின் கிரிக்கெட் மற்றும் வணிகத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் 250 முறை ஏற்பட்ட திடீர் நில அதிர்வு ; இஸ்ரோ ஆய்வில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-earthquakes-occurred-250-times-on-the-moon-1784999316"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-earthquakes-occurred-250-times-on-the-moon-1784999316</id>
            <summary type="text">நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்டு, நிலவின் தென் துருவப் பகுதியான 'சிவசக்தி' களத்தில் தரை இறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.</p><p>

குறித்த ஆய்வின் படி, நிலவின் சிவசக்தி பகுதியில் சுமார் 250க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9901ba87-282b-4b53-abfe-82f00da453ee/26-6a64ed9681528.webp' /></p><p>இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றபோதிலும், சில அதிர்வுகள் பல மணிநேரம் நீடித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
நிலவின் மேற்பரப்பிலிருந்து 10 சென்டிமீற்றர் ஆழம் வரை உள்ள மண் பகுதியானது வெப்பத்தைக் கடத்தாத கவசமாகத் தொழிற்படுவதை சந்திரயான்-3 உறுதி செய்துள்ளது.</p><p>

அத்துடன் அங்குள்ள மண் அமைப்பில் மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், நிலவு உருவான காலகட்டத்தில் மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயற்பட்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
நிலவின் தென் துருவப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்வுகள் மற்றும் மண் கட்டமைப்பு தொடர்பான தரவுகள், நிலவின் தோற்றம் மற்றும் அதன் உள்வடிவமைப்பு குறித்த மேலதிக ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு; பிரான்ஸ் வாழ் நபருக்கு கடுங்காவல் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128"></link>
            <id>https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938b26a3-f58b-427b-9176-f485d7ac9d93/26-6a648b3174313.webp' /></p><p></p><h2>சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு&nbsp;</h2><p>
</p><p>
 சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய சந்தேகநபர், தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.</p><p></p><p>
</p><p>
 வழக்கில் அரச தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மூவர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து சந்தேகநபருக்குக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளது.</p><p>


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு,&nbsp; சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; யாரும்&nbsp; தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/are-there-outsiders-staying-at-presidential-palace-1784997344"></link>
            <id>https://jvpnews.com/article/are-there-outsiders-staying-at-presidential-palace-1784997344</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.</p><p></p><p>

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில், கடமை நிமித்தம் பாதுகாப்புப் படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831ed0c4-d79f-451a-8bd6-3c4f96d0ceca/26-6a64e5e20df56.webp' /></p><p>அத்துடன், குறித்த அதிகாரிகளில் எவரும் பிரதான ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கவைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201</id>
            <summary type="text"> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>பொலிஸார் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 55 வயதுடைய உணவக உரிமையாளர் கடுமையாக காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0e0c88-aca7-4fed-b128-2307c2a49010/26-6a64e16a8c03c.webp' /></p><p> </p><p>சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகள் பலனளிக்காததால், அவர் சிகிச்சை பெற்று வந்தபோதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, அதில் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகைக்காகப் பெண்ணை கொலை செய்து ஜனநாயகன்' பார்த்த தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582"></link>
            <id>https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு &#039;ஜனநாயகன்&#039; திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>

 இந்தச் சம்பவத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருணொருவரே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d743af9f-3038-4ac8-a52c-bae5f392018a/26-6a64ac3807995.webp' /></p><h2>&nbsp;6 பவுண் தங்க நகை&nbsp; கொள்ளை</h2><p>
</p><p>
 உயிரிழந்த அணிந்திருந்த 6 பவுண் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியொன்றைக் கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
 பெண்ணிடம் பரிசொன்றைத் தருவதாகக் கூறி, அவரைக் தாக்கிய தம்பதியினர் , நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தத் தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>அதன்பின்னர், தம்பதியினர் எதுவுமே நடக்காதது போல் திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள லாஸ்பேட்டை காவல்துறையினர்,&nbsp; &nbsp;கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டில் வாழ்ந்தும் 20 ஆண்டுகள் பேசாத தம்பதி ; பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்த காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403"></link>
            <id>https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா (Otou Katayama) மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா (Yumi Katayama) ஆகியோர், தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db30253c-2cf1-4361-b67d-4c1df67a9e5e/26-6a64b35533f0e.webp' /></p><h2>மனைவி,பிள்ளைகள் மீது அன்பு செலுத்தியதால் பொறாமை&nbsp;</h2><p>


குடும்ப வாழ்க்கை வழக்கம்போல தொடர்ந்த போதிலும், கணவர் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியுடன் நேரடியாகப் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவி ஏதேனும் கேள்வி கேட்டால், தலையசைப்பதன் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ மட்டுமே அவர் பதிலளித்து வந்துள்ளார். </p><p>இருப்பினும், குடும்பத்தில் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பெற்றோர் இருவரும் ஒருவருடன் ஒருவர் உரையாடுவதை தாம் ஒருபோதும் பார்த்ததில்லை எனக் கூறிய அவர்களது இளைய மகன், இந்த நிலையை மாற்றுவதற்காக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியை நாடியுள்ளார்.
</p><p>
இதையடுத்து, தம்பதியர் முதன்முதலில் சந்தித்த பூங்காவில் மீண்டும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்த சந்திப்பில், நீண்டகால மௌனத்திற்கான காரணத்தை விளக்கிய கணவர், மனைவி,பிள்ளைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால், தனக்குள் பொறாமை உணர்வு ஏற்பட்டதாகவும், அந்த உணர்வின் காரணமாகவே மனைவியிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மனைவியிடம் பேசிய அவர்,
"நாம் பேசி நீண்ட காலமாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை சிறப்பாக வளர்த்ததற்கு நன்றி. இனி மீண்டும் பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்"
என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அந்த தம்பதியரின் மீள்சந்திப்பு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி, உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரை ; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e3b03b-1a00-409e-9388-a7c792d4d2b5/26-6a64ae5a89fe9.webp' /></p><p>

அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றவில்லை எனின், அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இதற்கமைய, தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
