<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-27T06:40:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367"></link>
            <id>https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367</id>
            <summary type="text">&amp;nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a9cd9f-45e7-48fa-9b93-404d63ee60ec/26-6a8fda10ab4aa.webp' /></p><h2>இருக்க வசிப்பிடமின்றி&nbsp; வீதிக்கு வந்த&nbsp; பெற்றோர்கள்</h2><p> மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.</p><p></p><p> 

அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.</p><p>

குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரம்&amp;nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரம்&nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f40fe7-1944-42e7-9bf3-34ad30ea291a/26-6a8fd332b9336.webp' /></p><p> </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

 விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T06:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முயற்சி ; துரத்திப் பிடித்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர்&amp;nbsp; கடந்த 24 ஆம் திகதி&amp;nbsp; பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர்&nbsp; கடந்த 24 ஆம் திகதி&nbsp; பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p></p><p>பொதுமக்களின் துரிதமான முயற்சியினால் குறுகிய நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின்படி, சபாபதிப் பிள்ளை வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c198b2d5-a02f-4726-842e-8a9aec171d8a/26-6a8fbaf558316.webp' /></p><p>அப்போது சிவப்பு நிற ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மேற்கொண்ட முயற்சியின் மூலம் சிறுமி குறுகிய நேரத்திலேயே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் பாடசாலை மாணவிகளைத் தொந்தரவு செய்து வருவதாக முன்னதாகவே அப்பகுதியில் முறைப்பாடுகள் எழுந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முடிவுகளே இறுதியானவை எனக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
குறித்த நபர் பாடசாலை முடிவடையும் நேரங்களில் பாடசாலை வளாகத்திற்கு அருகில் நின்று மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> எனினும், இதுகுறித்து பொலிஸாரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சுன்னாகம் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலை மற்றும் அச்சம் நிலவி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் தொடருந்து மோதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-dies-being-hit-train-while-trying-cross-tracks-1787809365"></link>
            <id>https://jvpnews.com/article/man-dies-being-hit-train-while-trying-cross-tracks-1787809365</id>
            <summary type="text">புத்தளம் வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று (26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று (26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 55 வயதுடைய நபர் ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து கடந்து செல்வதற்காக, குறித்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ad9139-9b8d-4d89-b721-2cd72ee89e51/26-6a8fce56c327e.webp' /></p><p>இந்நிலையில், பாதுகாப்பு கேட் மூடப்பட்டிருந்த போதிலும், குறித்த நபர் தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது வேகமாக வந்த தொடருந்து அவர் மீது மோதியதில், பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின்படி, அவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்...ஆய்வாளர்கள் எச்சரிக்கை! பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092"></link>
            <id>https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை நேபாள மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/066b13b1-5e17-424d-9b0c-24a65b2bac56/26-6a8fcd466e657.webp' /></p><p> </p><p>

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2>&nbsp;நேபாளத்தை புரட்டிப்போட்ட இயற்கை&nbsp; பேரழிவு</h2><p> </p><p>

காத்மாண்டுவில் இயங்கி வரும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

நேபாள-சீன எல்லைக்கு அருகே ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு ஒன்று இன்னும் நீங்காமல் இருக்கிறது. பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் இந்த அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. </p><p>இது திடீரென உடைந்தால் ஆற்றில் இரண்டாவது முறையாக பெரும் வெள்ளம் ஏற்படும். 

இதனால் போட் கோசி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

ஏற்கெனவே முதல் வெள்ளத்தில் சிக்கி 150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. 

தற்போது இரண்டாவது வெள்ள அபாயம் இருப்பதால், சீன எல்லையில் உள்ள ஜலாங் துறைமுகப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. </p><p>

மேலும் நுவாகோட், தாடிங் போன்ற கீழ் நிலை மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலை பகுதிகளில் இத்தகைய திடீர் வெள்ளப்பெருக்குகள் மற்றும் பனிச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.</p><p></p><p>

 நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை தாண்டிய முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது இத்தகைய பேரிடர் காலங்களில் பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். </p><p>

இப்போதுதான் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை சொகுசு காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல் ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034"></link>
            <id>https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034</id>
            <summary type="text">வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

சந்தேக நபர்கள் இருவருடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டி பகுதியில் வைத்து இந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f858b7a-bdc2-4a48-a015-b57fed2a7f84/26-6a8fc9236e8d5.webp' /></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மதுபானம் ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மதுபான கடத்தல்காரரான 'சலா' என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை கல்துடே (Galthude) மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். </p><p>

சந்தேக நபர்கள் இருவரையும் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் தம்மை குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்தமையால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004"></link>
            <id>https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004</id>
            <summary type="text">நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f932fc-0772-4924-9725-426b860df4b5/26-6a8fc51e2d976.webp' /></p><p>இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்வதற்காக, தேவைப்படும் எந்தவொரு குறிப்பிட்ட உதவிகள் தொடர்பாகவும் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

எமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடும் ஆகிய நேபாளத்துடனான தமது ஒருமைப்பாட்டிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T05:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ; மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822"></link>
            <id>https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது 'நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552e1637-b38e-45fa-beb6-e5e25ce5d67a/26-6a8fc4685dbc4.webp' /></p><p>
</p><p>
வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடிய சூறாவளியில் இருந்து மீண்டு வருமொரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
</p><p>
நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் இலங்கையும் என்னுடன் இணைந்துகொள்கிறது' என்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேரில் பவனி வந்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thondamanaru-selva-sannithi-murugan-chariot-1787805823"></link>
            <id>https://jvpnews.com/article/thondamanaru-selva-sannithi-murugan-chariot-1787805823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்று பெருமளவான பக்தர்களின் விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
</p><p>
அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83176639-0d6f-4c1c-962b-8f6fd3d708f3/26-6a8fc0812f2d1.webp' /></p><p>
</p><p>
அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வெளிச்சத்துக்கு வந்த மருந்து மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732"></link>
            <id>https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732</id>
            <summary type="text">கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a966964-5317-4862-9fa8-9fbaa10e2838/26-6a8fb855b4969.webp' /></p><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-circular-for-railway-employees-1787802971"></link>
            <id>https://jvpnews.com/article/special-circular-for-railway-employees-1787802971</id>
            <summary type="text">கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe83cc1-83a6-48a2-b2eb-e0a290ed5d91/26-6a8fb55c9a9c9.webp' /></p><p>தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787802128"></link>
            <id>https://jvpnews.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787802128</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20894b2d-9c7d-4f9b-8528-ec65c5418eb3/26-6a8fb2114253a.webp' /></p><p> 

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p> 

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T03:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் ; சமூக ஊடக மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370"></link>
            <id>https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519a6fd3-5bf4-4469-9ff2-f690c6625def/26-6a8fab346905a.webp' /></p><p>மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவ்விடயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்த அபாயகரமான நிலைமை குறித்துப் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T03:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பெரும் அனர்த்தம் ; 150 பேரை பலியான துயரம் ; நிலைக்குலைந்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951</id>
            <summary type="text">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய <a href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888" target="_blank">திடீர் வெள்ளப்பெருக்கின்</a> காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412b1069-336d-45b5-a086-1e78aa2487ef/26-6a8f8a516d5b2.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்தில் வக்ரமடையும் சனி; இவர்களுக்கு இனி ஜாக்பாட்.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
</p><p style="text-align: justify; ">கும்ப ராசியின் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். இந்த சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதுடன், மீன ராசியிலும் வக்ரமாக சஞ்சரிக்கிறார். இந்த கிரக அமைப்பு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12fe88a5-6fb1-4eb9-a262-43714c359520/26-6a8f933aae28b.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்பாராத அதிர்ஷ்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திர கிரகண நாளில் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் படைப்பாற்றலும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படுவதுடன், புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் அமையும். உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு அல்லது நிதி நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மீனம்: </b>சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கும் உயர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு, அந்த உறவு மேலும் ஆழமடையும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p>]]></content>
            <updated>2026-08-27T01:30:42+00:00</updated>
        </entry>
    </feed>
