<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T01:52:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் ; பல காலம் இளைஞன் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125"></link>
            <id>https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதுபற்றி தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42990249-3bf7-41d5-b187-fdc720932de1/26-6a5d6af7151de.webp' /></p><h2 style="text-align: justify; ">விளம்பரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு&nbsp; இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T01:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019"></link>
            <id>https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p>

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fdb6f57-224b-4a0d-a4d4-29b5ff9f8bf2/26-6a5d76444c9b0.webp' /></p><p> </p><h2>அது எந்தெந்த ராசிகள் </h2><p><b>
ரிஷபம்: </b>ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.</p><p></p><p>
</p><p><b>

சிம்மம்:</b> சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.</p><p></p><p> </p><p><b>

துலாம்:</b> துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p><b>
மகரம்:</b> மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091"></link>
            <id>https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"> ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e82a05-7ac8-479d-a26e-7f56a674a2ee/26-6a5d66ed61e95.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு குழுவினர், மது அருந்திவிட்டு வாகனத்தில் கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், அதே பாதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது மோதியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> விபத்தில் சிக்கிய துவிச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த நபர் அருகிலுள்ள காட்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர், ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருந்தது.</p><p style="text-align: justify;">இருப்பினும், விபத்து நடந்த இடத்தில் கிடந்த வாகனத்தின் உடைந்த உதிரிப்பாகங்களைக் கைப்பற்றிய பொலிஸார், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையின் பயனாக, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "> விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.&nbsp; இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T00:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு இளைஞர்களின் உயிரை பறித்த வாடகை வாகனம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defender-crash-death-toll-rises-1784504000"></link>
            <id>https://jvpnews.com/article/defender-crash-death-toll-rises-1784504000</id>
            <summary type="text">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">
விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa626ee2-0822-4dfd-a82d-147ce6f44243/26-6a5d5ec26b589.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிஃபெண்டர் ரக வாகனமும், எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

விபத்தில் டிஃபென்டர் வாகனத்தைச் செலுத்தியதாகக் கருதப்படும் மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 36 வயதுடைய&nbsp; இருவருமே உயிரிழந்தனர்.
</p><p style="text-align: justify; ">
விபத்தின் போது டிஃபென்டர் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும், பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
விபத்துக்குள்ளான டிஃபெண்டர் ரக வாகனம் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மாத்தறை பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T23:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கிண்ணம் ; 16 வருடங்களின் பின் வாகை சூடியது ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499859"></link>
            <id>https://jvpnews.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499859</id>
            <summary type="text">23-வது FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 16 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">23-வது FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 16 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,</p><p style="text-align: justify; ">&nbsp;அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cb976b6-3b6d-423b-a10a-60aad1f10807/26-6a5d576561923.webp' /></p><h2 style="text-align: justify; ">உலகக் கோப்பை</h2><p style="text-align: justify;"> போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fb95e6-c2f4-4c35-8d88-30e3dc1ce4eb/26-6a5d51dd352fa.webp' /></p><p style="text-align: justify;">தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p style="text-align: justify;">

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp; தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p style="text-align: justify;">இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-19T22:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுக்காக வெடித்த சண்டை ; நான்கு பிள்ளைகளின் தாயிற்கு கணவன் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-brutal-act-against-mother-of-four-1784494519"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-brutal-act-against-mother-of-four-1784494519</id>
            <summary type="text">காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில்&amp;nbsp; இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில்&nbsp; இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>



இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e31169-27fa-4e7b-a21d-b8d9c4cdb9d4/26-6a5d39b8a6673.webp' /></p><p>



இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,



</p><p>இரவு மதுபோதையில் வீட்டுக்குத் திரும்பிய கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இரவு உணவு தயாரிப்பது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p> ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார், கொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளனர்.</p><p>


மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது மயானத்தில் துப்பாக்கிச்சூடு ; மேலதிக தகவல்கள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fresh-updates-on-public-cemetery-shooting-1784493855"></link>
            <id>https://jvpnews.com/article/fresh-updates-on-public-cemetery-shooting-1784493855</id>
            <summary type="text">தெஹிவளை - கல்கிசை &#039;நிசல செவன&#039; பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த துப்பாக்கிச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கல்கிசை 'நிசல செவன' பொது மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. </p><p>

குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (19) பிற்பகல் 03.25 மணியளவில் நடத்தப்பட்டிருந்தது. 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் "சண்டோ" என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c404d4ba-a9e9-4197-b2a3-a3dd40a7aec9/26-6a5d37215ce0b.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> </p><p>

இவர் தெஹிவளை, ஓபன் சைட் மீனவர் குடியிருப்பில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பொது மயானத்திற்குள் நுழைந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். </p><p>

9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

துப்பாக்கிச் சூட்டினால் அவரது இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காணொளிகளின் ஊடாக வௌிவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T21:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1000 பஸ்கள் அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ; கெமுனு விஜேரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443"></link>
            <id>https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cd19d2-4623-4459-8fb7-e693f842295e/26-6a5d2db57c6f6.webp' /></p><p style="text-align: justify; ">இவ்வாறான பஸ் இயக்கத்தினால் முறையான அனுமதிப் பத்திரங்களை பெற்று சட்டப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுவதுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இதுவொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேலும், பெருந்தொகை முதலீடுகளைக் கொண்ட தனியார் பஸ் நிறுவனங்கள் ஒரே அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி பல சேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-19T20:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியை விட்டு கவிழ்ந்த கார் ; அதீத வேகத்தால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884"></link>
            <id>https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884</id>
            <summary type="text">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு, கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணிக்கும் மற்றைய மருங்குக்குள் நுழைந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9e181b-c339-4196-8ec2-62fb9cc24f4a/26-6a5d279defa9b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த போது அதில் நான்கு பேர் பயணித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

விபத்தில் அவர்கள் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்து காரணமாக அந்த வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T20:00:26+00:00</updated>
        </entry>
    </feed>
