<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T09:42:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788773682"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788773682</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (07) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .அமெரிக்க டொலரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (07) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .</p><p>அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 323.7691 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 332.7567 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d36dc7-ea36-4d04-9402-5ae1027398e1/26-6a9e853468a79.webp' /></p><p> </p><p>



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


இன்றைய தினத்திற்கான முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் பின்வருமாறு:</p>]]></content>
            <updated>2026-09-07T09:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவை தொடர்ந்து சிறைசாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ச !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துள்ளார்.
</p><p>


ஷிராந்தி ராஜபக்ச சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421b0b23-3cec-4cf4-9cce-fb3a4bab3b2c/26-6a9e71c0902ca.webp' /></p><p></p><p>



இதேவேளை, நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சாப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/home-cooked-food-for-namal-rajapaksa-in-prison-1788773013"></link>
            <id>https://jvpnews.com/article/home-cooked-food-for-namal-rajapaksa-in-prison-1788773013</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f369d81-f3af-4c06-9df7-e53980a9b2db/26-6a9e82971d242.webp' /></p><h2>&nbsp;விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்&nbsp;&nbsp;</h2><p> 

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.</p><p></p><p>இதற்கமைய, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தங்கியுள்ள வளாகத்தில் விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறினார்.</p><p> 

மேலும், அவரைப் பார்ப்பதற்கு நாளொன்றுக்கு மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.</p><p></p><p>

அதேசமயம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கை வாபஸ் பெற்ற யோஷித ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-withdrew-the-case-1788771988"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-withdrew-the-case-1788771988</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டை இன்று (07) உயர் நீதிமன்றத்தில் அவர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290672e-047c-451b-93b6-6a684b331581/26-6a9e7e961b3ac.webp' /></p><p></p><p> </p><p>

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பநிலை; யால தேசிய வனத்தை மூட தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-temporarily-close-yala-national-park-1788769666"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-temporarily-close-yala-national-park-1788769666</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று (07) வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc1f002-e32d-4d82-9757-f73adfa4b37e/26-6a9e758482f12.webp' /></p><h2>&nbsp;விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை</h2><p> </p><p>

நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p> 

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p> 

இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p></p><p> 

அதேசமயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247"></link>
            <id>https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247</id>
            <summary type="text">&amp;nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3866da1-34a3-4f22-9f5f-a99400159b39/26-6a9e650645d0a.webp' /></p><h2>&nbsp;சார்ஜரை&nbsp; இணைக்க முற்பட்டவேளை உயிரிழப்பு</h2><p>
 வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,&nbsp; சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.</p><p></p><p>இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788767996"></link>
            <id>https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788767996</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினரால் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினரால் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளின் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயேஅம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைதானதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0174bed-eb52-4b45-be85-a84007597799/26-6a9e6efe0e541.webp' /></p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு சலுகை விசா ரத்து ; தாய்லாந்து அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-concessions-sri-lankans-cancelled-thailand-1788766648"></link>
            <id>https://jvpnews.com/article/visa-concessions-sri-lankans-cancelled-thailand-1788766648</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாகத் தாய்லாந்து அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

தாய்லாந்து வெளியுறவு அமைச்சு ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இலங்கை உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 'விசா விலக்கு சலுகை' முற்றிலுமாக இரத்து செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a7ac11-9ba4-4f8a-92f1-93077a5924f1/26-6a9e69ba415e7.webp' /></p><h2>விசா விலக்கு சலுகை&nbsp; முற்றிலுமாக இரத்து</h2><p>
</p><p>
இதன்படி, இனி தாய்லாந்திற்குப் பயணம் செய்யும் இலங்கை குடிமக்கள் பயணத்திற்கு முன்னதாகவே தகுந்த விசாவைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
தாய்லாந்து பயணத்திற்கான விசாவிற்கு இணையவழி (E-Visa) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம், நேரடியாக நேரில் வந்து சமர்ப்பிக்கப்படும் விசா விண்ணப்பங்களை ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

எனினும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் (14 வரை) தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் இலங்கை பயணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 60 நாட்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படும்.</p><p>

தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர விசா நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்து அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:34:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்திலிருந்து சென்ற வாகனம் கோர விபத்து; தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-on-the-southern-expressway-1788756018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
</p><p>


 இந்த விபத்து தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a37d0fb-8bca-4100-a012-5e950d111f35/26-6a9e4034908ea.webp' /></p><h2>தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்</h2><p>
</p><p>


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார், வீதி பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதிய பின்னர் மையப் பாதுகாப்பு வேலியில் மோதியதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>


விபத்தில் பாதுகாப்பு வேலி மற்றும் வீதி பராமரிப்புத் தடுப்புகள் சேதமடைந்ததுடன், சொகுசு காரும் பலத்த சேதமடைந்துள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் விலை இன்று சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-dropped-today-1788764117"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-dropped-today-1788764117</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) மேலும் 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) மேலும் 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்று முன்தினம் (05) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 376,000 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df2dc1c7-2383-4549-9082-b18dbdeeef96/26-6a9e5fd751570.webp' /></p><p>

</p><p> தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று மாம்பழ திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-festival-at-nallur-kandaswamy-temple-1788762788"></link>
            <id>https://jvpnews.com/article/mango-festival-at-nallur-kandaswamy-temple-1788762788</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றது.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று, சிறப்புமிக்க மாம்பழத் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23917b7b-ebcf-4421-b7f9-547cd606da17/26-6a9e5aa638203.webp' /></p><h2>புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதை</h2><p>

முருகப்பெருமானும் விநாயகப் பெருமானும் அற்புதமான அலங்காரங்களில் எழுந்தருளி, ஆலயத்தின் வெளிவீதியில் ஒன்றாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.</p><p>

புராணங்களில் கூறப்படும் மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நிகழ்வு, நல்லூர் ஆலய முன்றலில் கண்முன்னே நிகழ்த்திக் காட்டப்பட்டது.

உலகைச் சுற்றி வருமாறு கூறப்பட்டபோது, முருகப்பெருமான் தனது மயிலில் உலகை வலம் வரச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f919d48-44f9-4046-b2d5-f524d4c9dee5/26-6a9e5aa6e9677.webp' /></p><p> அதேவேளை, விநாயகப் பெருமான் தனது தாய் தந்தையரான சிவபெருமானையும் பார்வதி தேவியையும் சுற்றி வணங்கி, “தாய் தந்தையே உலகம்” என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார்.</p><p>

அதன்பின் ஆலய பிரதம குருவினால் விநாயகப் பெருமானுக்கு மாம்பழம் வழங்கப்பட்டது.

மயிலில் வலம் வந்த முருகப்பெருமான் மீண்டும் ஆலய முன்றலுக்கு திரும்பியபோது, அண்ணனான விநாயகப் பெருமானின் கையில் இருந்த மாம்பழத்தைக் கண்டு கோபமுற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95bc473-58f6-4ab6-9995-2f02ebfe4d93/26-6a9e5aa7a50e5.webp' /></p><p>
</p><p>
அந்த வேளையில், அலங்கரித்திருந்த ஆடைகளைத் துறந்து, ஆண்டிக் கோலத்தில் முருகப்பெருமான் அருள்காட்சி வழங்கிய , புராணமும் தத்துவமும் கலந்த இந்த அரிய நிகழ்வு காண, பல ஆயிரம் பக்தரகள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த வருவார்....... பேச மாட்டார்....! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-attending-anuradhapura-meeting-1788749744"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-attending-anuradhapura-meeting-1788749744</id>
            <summary type="text">ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகக் கட்சியின் செயற்பாட்டுத் தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், அவர் மக்களுடன் உரையாற்றுவதற்காகப் பிரதான மேடையில் ஏற மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80206ea-afc5-4fe8-8876-f82ec749a4af/26-6a9e5b1248e69.webp' /></p><p>
அவர் மேடைக்கு முன்னால் மக்களிடையே அல்லது வேறு இடத்தில் அமர்ந்து பேரணியில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மக்கள் பேரணி 12 ஆம் திகதி உறுதியாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>

இலஞ்ச ஊழல் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T06:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID க்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cid-reveals-premalal-jayasekara-leaves-country-1788761708"></link>
            <id>https://jvpnews.com/article/cid-reveals-premalal-jayasekara-leaves-country-1788761708</id>
            <summary type="text">&amp;nbsp; கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a752a2a-086d-46cf-92f0-fe47ea625d86/26-6a9e566db25fa.webp' /></p><h2>கொலைக் குற்றச்சாட்டில்&nbsp; &nbsp;மரண தண்டனை</h2><p>
</p><p>
கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p>

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p>

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் விளாசிய முதலமைச்சர் விஜய்! எழுந்து ஓடிய திமுகவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-slams-speech-dmk-assembly-1788759535"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-slams-speech-dmk-assembly-1788759535</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய்ய தமக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
</p><p>


சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12bb8c3-4c96-4623-9131-ee7e13a1872c/26-6a9e4df0cbe24.webp' /></p><h2>மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்...</h2><p>
</p><p>


தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதல்வர், கடந்த கால ஆட்சிகளின் குற்றங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
</p><p>


அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றாலும், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>


சட்டப்பேரவையில் சில உறுப்பினர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் சுட்டிக்காட்டிய விஜய், மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.</p><p></p><p> இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.



கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் மோதல்களை மீண்டும் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும், “துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.</p><p>

முதலமைச்சர் விஜய் உரியின்போது கூச்சலிட்டு கத்திய திமுகவினர், சபானாயகர் தமக்கு பேச வாய்ப்பு தரவில்லை என கூறி வெளிநடப்பு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:04:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; கொழும்பு–ஜகார்த்தா விமான சேவைகள் ரத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-jakarta-flight-services-cancelled-volcano-1788761111"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-jakarta-flight-services-cancelled-volcano-1788761111</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா–கொழும்பு) ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.</p><p>

இலங்கையை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலான விமானப் போக்குவரத்தையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96adab19-b206-487e-b86e-70ab9076e07a/26-6a9e5419c18b5.webp' /></p><h2>மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட&nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் </h2><p>

பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக, சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று இரவு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பல விமான நிறுவனங்களும் தங்கள் பயணப் பாதைகளை மாற்றிக்கொண்டன.</p><p>

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் போதைப்பொருள்; ஷாக்கான பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965</id>
            <summary type="text">கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f35bed-4030-493e-bea9-63cf5154154b/26-6a9e4bb692a63.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 350 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது</p><p>.

கைது செய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-07T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517"></link>
            <id>https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517</id>
            <summary type="text">&amp;nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள்ளன.
</p><p>


இதன்படி, ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734a944a-9af8-4b0f-a312-59d0660cdcd9/26-6a9e460ed0a40.webp' /></p><p>



இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.



குறித்த பரீட்சை டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து இந்தியா சென்ற 13 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249"></link>
            <id>https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p> 

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd8f59d-7274-4b03-8dbb-36536cd16f40/26-6a9e4502b5637.webp' /></p><h2>&nbsp;13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...</h2><p> </p><p>

ஒரு பெண் மற்றும் 12 ஆண்கள் உட்பட 13 பேர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> </p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>&nbsp; &nbsp; கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T04:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசான் விமான விபத்து ; ஐவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/amazon-flight-crashes-miami-airport-five-dead-1788756556"></link>
            <id>https://jvpnews.com/article/amazon-flight-crashes-miami-airport-five-dead-1788756556</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f06e6-29d6-4dcf-be88-4120b8d4d262/26-6a9e424d7be0a.webp' /></p><h2>மாணவர் விடுதி இடிந்து விபத்து</h2><p>
</p><p>
இதேவேளை. இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
விமான விபத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு 11 பேரை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-07T04:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-in-number-plates-in-sri-lanka-1788754180"></link>
            <id>https://jvpnews.com/article/changes-in-number-plates-in-sri-lanka-1788754180</id>
            <summary type="text">இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அவ்வாறு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமானவை என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களிலான இலக்கத் தகடுகள் வழங்கப்படும். மேலும் பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2><b>வாகன இலக்கத் தகடுகள்</b></h2><p>ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 56,233 இலக்கத் தகடுகளும் அவற்றுள் அடங்கும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65c2b99c-14c6-4583-9a0f-4a3f8308b6ea/26-6a9e3c33bd165.webp' /></p><p>மேலும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களின் இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகன உரிமையாளர்கள் நாராஹேன்பிட்டி மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு வந்து தமது வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T04:31:56+00:00</updated>
        </entry>
    </feed>
