<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T02:35:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மீதுஅமெரிக்கா விதித்த புதிய வரி ; ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-us-tariff-imposed-on-sri-lanka-1784856612"></link>
            <id>https://jvpnews.com/article/new-us-tariff-imposed-on-sri-lanka-1784856612</id>
            <summary type="text">தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efafc7a4-4fa1-4513-8eb3-d6c67151deee/26-6a62c025b43d2.webp' /></p><h2>புதிய வரி</h2><p> 

அதன்படி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.</p><p> 

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p> 

</p><p>த்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது.</p><p> 

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. </p><p>

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uma-kumaran-appointed-uk-minister-1784855738"></link>
            <id>https://jvpnews.com/article/uma-kumaran-appointed-uk-minister-1784855738</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1474333e-f2bb-49c0-b9c8-25c9ad526e97/26-6a62bcbb9513a.webp' /></p><h2>உயரிய அங்கீகாரம்&nbsp;</h2><p> </p><p>

இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.</p><p></p><p>

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மனைவியுடன் சென்ற இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த அசம்பாவிதம் ; எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-attacked-while-with-wife-1784854498"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-attacked-while-with-wife-1784854498</id>
            <summary type="text">திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளதுடன் அதனை செலுத்தி சென்றவர்,காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e131f1b3-b7fa-4ac3-bcc4-dd1d5d3c02af/26-6a62b7e4af37b.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>



திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்தியத் தம்பதியினர் பயணித்த காரும், கபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக வந்த உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>


காரில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி, கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


விபத்தில் பலத்த காயமடைந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;லேசான காயங்களுக்கு உள்ளான அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p>



இவ்விபத்துக்கான முதன்மை காரணம் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தின் முக்கிய வரலாற்று பொக்கிஷம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் ; அமைச்சரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decision-made-on-jaffna-s-historic-treasure-1784851616"></link>
            <id>https://jvpnews.com/article/decision-made-on-jaffna-s-historic-treasure-1784851616</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">


அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf7d900-f529-4677-abbb-e3308d6d0644/26-6a62aca20be08.webp' /></p><p style="text-align: justify; ">யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்டேன்.</p><p style="text-align: justify;">பழைய கச்சேரி கட்டடம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து. அதனை மிகவும் விரைவாகப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; ">

அதேபோன்று யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் என இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T00:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல் குவியலுக்குள் சடலமாக கிடந்த சீனப்பிரஜை ; துறைமுக நகரில் அதிகாலையில் அரங்கேற்றப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-found-dead-in-forest-area-1784848616"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-found-dead-in-forest-area-1784848616</id>
            <summary type="text">துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை - கரந்தனை காட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை - கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">அதிகாலை கொழும்பு கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக கெப் வாகனம் ஒன்றில் மூன்று சீனப் பிரஜைகள் வந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d6bb2dd-730b-442c-a8af-181208a28cd8/26-6a62a0e9efebe.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மோதலுக்கான காரணம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பின்னர் இரண்டு வாகனங்களில் குறித்த இடத்திற்கு வந்த வேறு சில சீனப் பிரஜைகள் குழுவொன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது தாக்குதல் நடத்திய குழுவினர் சீனப் பிரஜை ஒருவரைக் கடத்திச் சென்றதுடன், அவர்கள் வந்த வேன் ஒன்றையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சம்பந்தப்பட்ட வேனில் இருந்து வாயு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் கரந்தனை - கேட்டுக்கடைப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்ற எஹலியகொடை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி குழுவொன்று காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கல் குவியல் ஒன்றைக் கண்டறிந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதனுள் மனிதக் கையின் ஒரு பகுதி இருந்ததை கண்ட பொலிசார் உடனடியாக குறித்த பகுதியைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இதன்போது குறித்த கல் குவியலுக்குள் நபரின் சடலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. </p><p style="text-align: justify; ">

அது ஒரு சீனப் பிரஜைக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டதோடு, பின்னர் குறித்த சடலம் கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜையினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, சடலம் மேலதிக விசாரணைகளுக்காக இன்று பிற்பகல் அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான சீனப் பிரஜைகள் குழுவினர் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக அதைப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் சந்தேகிக்கப்படும் இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோடுவதற்காக முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான எப்.யூ. வுட்லர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "> 

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சீனப் பிரஜைகளுக்கிடையிலான மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p style="text-align: justify; ">

சீனத் தூதரகம் இச்சம்பவம் தொடர்பில் நெருக்கமாக அவதானம் செலுத்தி வருவதுடன், உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உடனடியாக விரிவான விசாரணை ஒன்றை நடத்துமாறும், சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாக்குமாறும் இலங்கைப் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புத் தொடர்பில் மிகவும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும், அவசர காலங்களில் உடனடியாகப் பொலிசாருக்கு அறிவிக்குமாறும், உதவிக்காகத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் தூதரகம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. </p><p style="text-align: justify; ">

சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாக்குமாறும் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T23:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-drugs-in-police-raid-1784842904"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-drugs-in-police-raid-1784842904</id>
            <summary type="text">அநுராதபுரம் மற்றும் வீரம்பு கெதர பொலிஸ் பிரிவுகளில்&amp;nbsp; புதன்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மற்றும் வீரம்பு கெதர பொலிஸ் பிரிவுகளில்&nbsp; புதன்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத வீடமைப்பு வீதியில் நேற்றுமுன்தினம், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசேட சுற்றவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c050c-7f4d-4d4b-bd90-43e7c45a2681/26-6a628a9a2522f.webp' /></p><h2>போதைப்பொருள்</h2><p>
</p><p>
இதன்போது, 100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 90 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இதேவேளை, வீரம்பு கெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிதுருவெல்ல பகுதியில் வீரம்பு கெதர பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றவளைப்பில் 80 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
</p><p>
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T22:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/23-private-hospitals-and-labs-face-legal-action-1784840900"></link>
            <id>https://jvpnews.com/article/23-private-hospitals-and-labs-face-legal-action-1784840900</id>
            <summary type="text">காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p> 

அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83401f0b-d711-4360-bceb-6cb1522555a5/26-6a6282c6127a9.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

பொது சுகாதாரத்திற்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p> 

பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்தகங்களை இலக்கு வைத்து விசேட விசாரணைகளும் சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p> 

இந்த விசாரணைகளின் போது பொதுமக்களின் வாழ்க்கையிலும் சுகாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல தீவிர முறைகேடுகள் நுகர்வோர் சேவை அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635</id>
            <summary type="text">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423236e5-2a29-424b-9014-ecc1bd072bfd/26-6a626285680ed.webp' /></p><h2 style="text-align: justify; ">விபரீத முடிவு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

இந்த நிலையில் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்த போது நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, தொழிலதிபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T21:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 மாத பெண் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து ; வைத்தியசாலையில் 3 சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-accident-kills-9-month-old-baby-girl-1784839498"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-accident-kills-9-month-old-baby-girl-1784839498</id>
            <summary type="text">தம்புள்ள - ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தம்புள்ள - ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">&nbsp;விபத்தில் சிக்கிய வாகனத்தில்&nbsp;சாரதி உட்பட 10 பேர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920bd55b-5ca0-4894-b1c3-a4e2b1665ce2/26-6a627d4c3126d.webp' /></p><p style="text-align: justify; ">இவ்விபத்தில் காயமடைந்த மூவர் மற்றும் 3 சிறுமிகள் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T21:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாதங்களில் 5,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/000-child-abuse-complaints-in-6-months-1784838130"></link>
            <id>https://jvpnews.com/article/000-child-abuse-complaints-in-6-months-1784838130</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (23) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcd1480-436c-4bcf-9f72-7eee05278a46/26-6a6277f394405.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரின் தகவலின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
</p><p style="text-align: justify; ">
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் கீழ் இயங்கும் 47 காவல் துறை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகங்களுடன் இணைந்து விசாரணைகளை விரைவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பான சூழலில் காணொளி மூலம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒன்பது மாகாணங்களிலும் வீடியோ சாட்சியப் பதிவு அலகுகளை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T20:45:18+00:00</updated>
        </entry>
    </feed>
