<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-20T07:16:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் சென்ற விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் விவகாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ltte-training-camp-reaches-parliament-1787210175"></link>
            <id>https://jvpnews.com/article/ltte-training-camp-reaches-parliament-1787210175</id>
            <summary type="text">கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்த நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்த நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது கூற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>



குறித்த விவகாரன் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், குறித்த நபர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515dcc28-dbc3-41a2-b961-9376ff695add/26-6a86a9c1649b1.webp' /></p><p>
</p><h2>&nbsp;14 நாட்கள் விளக்கமறியலில்..&nbsp;</h2><p>


விசாரணைகளின்போது, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் இருந்ததும், அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். </p><p>மோசடி உள்ளிட்ட மூன்று தனித்தனி குற்ற வழக்குகளிலும் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



 குறித்த நபர் தன்னை வைத்தியரென பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். </p><p>அவர் முன்னர் சில அமைச்சுப் பணியாளர்களுடன் ஆலோசகராகப் பணியாற்றியதாகவும், அந்த நியமனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள குறித்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். </p><p>மாறாக, அந்த இடம் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



இதனிடையே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த இடம் கண்ணகிபுரம், பகுதியில் அமைந்துள்ளதாகவும், அது 1919ஆம் ஆண்டு வனக் காப்பகமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>



அரச காணியில் சட்டவிரோத விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


2025ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் வன அழிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தியாகராசா குலதீபன் என்பவருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>



குறித்த பகுதியில் ஆரம்பத்தில் 10 ஏக்கர் காணி கற்றாழை மற்றும் காய்கறி செய்கைக்காக அழிக்கப்பட்டு, பின்னர் அது 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், அங்கு ஆடை உற்பத்தி நிறுவனமொன்றுக்காக மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p>



அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், சாகுபடி மற்றும் மணல் அகழ்வு ஆகியவையே இந்த விவகாரத்துடன் தொடர்புடையவை எனவும், விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பான விவகாரம் அல்ல எனவும் அரசாங்கம் விளக்கியுள்ளது .&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:13:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பெற நினைத்தால் விசா இல்லை; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001"></link>
            <id>https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001</id>
            <summary type="text">&amp;nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் , 

ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e739de4-64de-4ebd-9d51-5826a423cb45/26-6a8689d351124.webp' /></p><h2>&nbsp;விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்</h2><p>
</p><p>
இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>.

அத்துடன், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:02:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவனொளி பாதமலைக்கு சென்ற வாகனம் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய கிளிநொச்சி, வவுனியா நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-bound-for-adam-s-peak-meets-accident-1787208272"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-bound-for-adam-s-peak-meets-accident-1787208272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குழுவினர் நேற்று (19) இரவு சுமார் 11 மணியளவில் நல்லதண்ணி பொலிஸாரை அணுகி, தாங்கள் ஸ்ரீ பாத யாத்திரை செல்ல விரும்புவதாகத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b7bb8bc-1b03-4717-95b1-24640cdb8862/26-6a86a251d9e48.webp' /></p><h2>தெய்வாதீனமாக தப்பிய கிளிநொச்சி, வவுனியா நபர்கள்</h2><p>
அங்குள்ள பொலிஸ் அதிகாரிகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக இரவில் பயணம் செய்வது உகந்ததல்ல என்றும், அதற்காக இன்று காலை வருமாறும் அந்தக் குழுவினரிடம் கூறினர்.</p><p></p><p>
</p><p>
பின்னர், அந்தக் குழுவினர் குளிப்பதற்காக காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​(19) நள்ளிரவு சுமார் 12 மணியளவில், மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் கார் சாலையிலிருந்து விலகிச் சென்றதில் விபத்து ஏற்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

விபத்து நடந்தபோது காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். விபத்தில் அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், கார் பலத்த சேதமடைந்தது.

நல்லத்தண்ணி பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T06:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர் தலைமையிலான குழு செம்மணி அகழ்வாய்வு களத்தை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e887b541-9a1a-4bd3-a7be-2bf9e6feab02/26-6a86a0f44ebfa.webp' /></p><h2>அனுமதி கிடைக்க காலதாமதம்</h2><p>
</p><p>
அதன் போது அவர்களிடம், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள், நீதிமன்ற அனுமதியினை கோரிய வேளை, தாம் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்ட நிலையில் , எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நங்கள் இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு , செல்வதற்கு முயற்சி செய்தோம் என கனடா நாட்டின் தூதுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

அதன் போது அங்கிருந்த சட்டத்தரணிகள் , செம்மணி அகழ்வாய்வு தளத்தை பார்வையிடுவதற்கு , அனுமதி கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்து , நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டாலே பார்வையிட முடியும் என எடுத்து கூறினார்கள்.</p><p></p><p>
</p><p>
அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T06:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/varalakshmi-vratam-pooja-amman-blessings-1787205504"></link>
            <id>https://jvpnews.com/article/varalakshmi-vratam-pooja-amman-blessings-1787205504</id>
            <summary type="text">&amp;nbsp; 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. </p><p>

இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து வேண்டிய வரங்களை கேட்டு பெறும் அற்புதமான நாளாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c92dab6-fdf2-4553-a8fd-9eb5c2447a23/26-6a8697822b781.webp' /></p><h2>செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம்</h2><p> 

பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையிலோ கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1c3d89-517b-4491-aa41-90959c4548a3/26-6a869782dab61.webp' /></p><p> 

பக்தர்கள் வேண்டும் வரங்களை தரும் லட்சுமியின் வடிவமான வரலட்சுமியை வழிபடும் நாளாகும். </p><p>செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை தொடர்பான வரங்களையும், மகாலட்சுமியின் அருளையும் பெறுவதற்காக வழிபடும் நாளாகும். 

கோவில்களிலும், வீடுகளிலும் வரலட்சுமி விரதம் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58013299-d199-4aa5-bd97-d38d00383426/26-6a86978396b2c.webp' /></p><p> </p><p>கலசம் அமைத்து, அதை அம்மனை போல் அலங்கரித்து, பூஜைகள் செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.
</p><p>
திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்</p>]]></content>
            <updated>2026-08-20T06:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச - வசந்த கரன்னாகொட குற்றப்பத்திரிகை கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-karannagoda-indictment-served-1787206106"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-karannagoda-indictment-served-1787206106</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165e58c2-84d4-49b2-9478-79b69b64f2dd/26-6a8699dba0c08.webp' /></p><p> நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ச - வசந்த கரன்னாகொட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியருக்கு உதவிய இலங்கையர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-document-used-to-secure-bail-indian-national-1787204112"></link>
            <id>https://jvpnews.com/article/fake-document-used-to-secure-bail-indian-national-1787204112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc92f3fc-0a94-4dbd-82c3-b07f2998c681/26-6a869212485f7.webp' /></p><h2>சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை</h2><p>

இந்தநிலையில் சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.

இதன்போது. தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.</p><p></p><p>
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். </p><p>எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-20T05:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் முற்றுகை இடப்பட்ட வீடு; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cannabis-plants-on-the-rooftop-house-in-kalmuna-1787202842"></link>
            <id>https://jvpnews.com/article/cannabis-plants-on-the-rooftop-house-in-kalmuna-1787202842</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கல்முனை பிரதேசத்தில் வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கல்முனை பிரதேசத்தில் வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
</p><p>
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb141c3-ce1e-4da1-9342-8699d04132cc/26-6a868d1bad7ab.webp' /></p><h2>&nbsp;சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில்&nbsp; கஞ்சா&nbsp;</h2><p>
</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், பிட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb38637-840e-40c0-b46c-5803fa1c350a/26-6a868ec87018b.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.


இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T05:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பலாம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787201349"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787201349</id>
            <summary type="text">&amp;nbsp; யுத்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக வெளிநாடு செல்லாதவர்கள், நாட்டுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யுத்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக வெளிநாடு செல்லாதவர்கள், நாட்டுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
</p><p>
 அந்தத் தீர்மானத்துக்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd9f540-1b25-44ac-b294-f0d967fe3abe/26-6a86874758200.webp' /></p><h2>இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கை</h2><p>
</p><p>


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
</p><p>

யுத்தக் காலத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
</p><p>


அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.</p><p><br></p><p> </p><p>அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அங்கீகரிக்கப்பட்ட வகையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்கள்.</p><p> குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டது. தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின், அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து தாம் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். </p><p>அதனைத்தொடர்ந்து அரசப்புலனாய்வு சேவை பிரிவினூடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p> அதனைத் தொடர்ந்து அவர்களால் இலங்கைக்கு வருகை தர முடியும்.



பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த பல கேள்விகளுக்கு நீதியமைச்சுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது. </p><p>ஆகவே இதற்கு பதிலளிக்க இரண்டு வாரகால அவகாசம் வேண்டும். அதனைத் தொடர்ந்து முழுமையான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-20T04:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/806bb031-3987-4582-8680-ed9ce352cb80/26-6a86594e81943.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. </p><p>

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். </p><p>

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:33:09+00:00</updated>
        </entry>
    </feed>
