<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T17:35:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு ; போராடி தப்பிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fff588-39c4-4e65-a33e-70872111ad69/26-6a721f22d2d07.webp' /></p><p>

 

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
</p><p>
 

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
</p><p>
 

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி பல மணி நேரத்தின் பின் விடுதலையான உதயநிதி ஸ்டாலின் ; வெளியில் வந்து கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487</id>
            <summary type="text">&amp;nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உதயநிதி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு திசை திருப்பியுள்ளது என கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8e1c3af-4b33-46ec-86b3-9a58664b7efb/26-6a721d40c5403.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்டனம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,</p><p style="text-align: justify; ">
திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.

நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை பரப்பி உள்ளனர். </p><p style="text-align: justify; ">திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். .

தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை.

எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது.&nbsp;</p><p style="text-align: justify; ">அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T17:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511"></link>
            <id>https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் <a href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725" target="_blank">சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து</a> விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02d4423-7327-479f-b699-f6a4319d119f/26-6a71ded8c8c12.webp' /></p><p>
சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கபோகும் முட்டை விலை ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egg-prices-set-to-rise-in-sri-lanka-1785861129"></link>
            <id>https://jvpnews.com/article/egg-prices-set-to-rise-in-sri-lanka-1785861129</id>
            <summary type="text">உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify;">

தற்போதைய நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலையானது 47 ரூபாவுக்கும் 48 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலைக்கு உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94829925-e594-4d01-9a0b-2be4290c6197/26-6a72140aaddf2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;முட்டை உற்பத்தி</h2><p style="text-align: justify; ">

விலங்குகளின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் சந்தையில் முட்டையிடும் கோழிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு, அவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க அளிக்கப்படும் உணவு குறைவடைந்துள்ளமையும் முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,
</p><p style="text-align: justify;">
கோழிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் உணவுகள் சந்தையில் குறைவடைந்துள்ளதால் விலங்குகளுக்கு முறையான உணவு வழங்க முடியாதுள்ளதுடன், இதனால் எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி மேலும் குறையக்கூடும். மேலும், இத்தொழில் துறை மீது அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">அத்துடன், மக்காச் சோளம் இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் விலங்கு உணவுக்காக மக்காச்சோளத்தை பெற்றுக்கொள்வது நெருக்கடியாகியுள்ளதுடன், அவற்றின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

இலங்கையின் தினசரி முட்டைத் தேவை 95 இலட்சமாக உள்ளபோதிலும், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தற்போதைய தினசரி முட்டை உற்பத்தி 70 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-04T16:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801</id>
            <summary type="text">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf3f41b-c171-45d3-8b55-96b250519f5d/26-6a720edb3fed9.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிவிசேட வர்த்தமானி</h2><p> </p><p style="text-align: justify; ">இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிடப்பட்ட 2494/05 எனும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

 

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் கடமையாற்றும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை உயர்த்துவது, புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.</p><p style="text-align: justify; ">

 

இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறானதொரு ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதால் அரச சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதில் அரச சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T16:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forces-holiday-for-selected-schools-1785858156"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forces-holiday-for-selected-schools-1785858156</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர்&amp;nbsp; தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து<a href="https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788" target="_blank"> பாடசாலைகளும்</a> நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0c5bb5-b608-41bb-81ac-bb25f0b3f4ba/26-6a7208d7a43fb.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T15:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு திரும்பினார் தங்க மகன் ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070"></link>
            <id>https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.

ஸ்காட்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.
</p><p>
ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் அவரது சாதனை 89.75 மீட்டராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6406ea36-47e9-47e5-964a-a3cb5b21d450/26-6a71e4efc2817.webp' /></p><p>
</p><p> 

23 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரர் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதலில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
</p><p>
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களைப் பின் தள்ளி அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த பொதுநலவாயத் தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p>

மேலும், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் மெய்வல்லுநர் பிரிவிலிருந்து இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையும் இதன் மூலம் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா அனுப்புவதாக யாழ், வவுனியா , கிளிநொச்சி நபர்கள் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
</p><p>
கடந்த 27.05.2026 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் ஆட்கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c0a40b-a3c9-4958-924f-80d13246c6b0/26-6a71e2f155abd.webp' /></p><h2>​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி&nbsp;நபர்கள்</h2><p>
</p><p>
இதற்காக, எத்தியோப்பிய தூதரகம் மற்றும் எத்தியோப்பிய பொலிஸ் பிரிவிடமிருந்து தேவையான ஒத்துழைப்பை வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது.

விசாரணையின் போது, ​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் வசிக்கும் 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்கள், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் இந்த மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
விமான டிக்கெட்டுகள் மற்றும் விசாக்களைப் பெறுவதற்காக சந்தேக நபர் அவர்களிடம் இருந்து 6.4 மில்லியன் ரூபாயைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.

 அவர்களை கனடாவிற்கு அனுப்பிய பின்னர், அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பெறும் அடிப்படையில், துபாய் வழியாக அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
</p><p>
துபாய் வழியாக வெளிநாடு சென்ற பின்னர், எத்தியோப்பியாவில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால், இந்த மோசடியில் சிக்கிய மூன்று நபர்களும் கடத்தப்பட்டனர்.

பின்னர், அவர்களை விடுவிப்பதற்காக அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் 30,000 அமெரிக்க டொலர் பிணைப்பணம் கோரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களுக்கு சுமார் ரூ. 20 லட்சம் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது .</p><p>மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த, மேற்கூறிய கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களை மீட்க எத்தியோப்பிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், மீட்கப்பட்ட மூன்று இலங்கையர்களையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பாகிஸ்தான் நாட்டினரும், ஒரு எத்தியோப்பிய நாட்டினரும் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கும், எத்தியோப்பியாவில் செயல்படும் குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய, குற்றப் புலனாய்வுத் துறையின் கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686</id>
            <summary type="text">&amp;nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
</p><p>
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ என்கி|ற திருக்குறளை பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322c44ba-e102-4d05-88ac-b896a52e72ce/26-6a71e757b5ec1.webp' /></p><p>

இதற்கு அர்த்தம் ‘ஒருவரை நேரில் பார்க்கும் போது புகழ்ந்து பேசி விட்டு, அவர் இல்லாத சமயத்தில் அவதூறாக பேசுவது என்பது மிகவும் இழிவானது. அதற்கு உடனடியாக இறந்து போவதே மேல்’ என்பதே அர்த்தம்.</p><p></p><p> </p><p>எனவே, நிவேதா பெத்துராஜ் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

 உதயநிதியையும், நிவேதா பெத்துராஜையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது.</p><p> நிவேதாவுக்கு துபாயில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தியை நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T12:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரரை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-bribe-to-release-drug-smuggler-1785844697</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம் வழங்க முறபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது பொலிஸ் அதிகாரிக்கு 500,000 ரூபாய் கையூட்டல் கொடுக்க முயன்ற ஒருவரை காவல் நிலையத்தினுள்ளேயே வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19bae5fb-0944-42d5-8b0f-4de4b6410903/26-6a71d3da786db.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, நுவரெலிய பாடசாலைகள் மீண்டும் நாளை திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788"></link>
            <id>https://jvpnews.com/article/schools-in-kandy-and-nuwara-eliya-to-reopen-1785843788</id>
            <summary type="text">&amp;nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157aefb8-551b-497b-a2cb-a5ae97a2d21e/26-6a71d04e0040f.webp' /></p><p>
</p><p>
தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:41:06+00:00</updated>
        </entry>
    </feed>
