<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T16:47:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 1200 கைதிகளிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70f31df-74c7-4151-877f-2f8d73547359/26-6a6394df3a5f0.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify;">விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. </p><p style="text-align: justify;">கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல,


போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.

</p><p style="text-align: justify;">
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. </p><p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 ஆயிரத்தை கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை ; ஆபத்தாகும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131"></link>
            <id>https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8c903-dfd2-49ed-ba4c-d1262efbc39b/26-6a638d4ca6229.webp' /></p><h2 style="text-align: justify; "><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நோயாளர்கள் எண்ணிக்கை</span></p></h2><p> </p><p style="text-align: justify; ">இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மாத்திரம் 198 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம். டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலை நாடி சிகிச்சை பெறுவதும் அவசியம்.
</p><p style="text-align: justify; ">
வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-notice-for-gce-a-l-exam-candidates-1784907754"></link>
            <id>https://jvpnews.com/article/special-notice-for-gce-a-l-exam-candidates-1784907754</id>
            <summary type="text">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c8793a-4a33-4f31-8fe2-61705570d0b5/26-6a6387ebbbd13.webp' /></p><h2 style="text-align: justify; ">அனுமதி அட்டைகள்</h2><p style="text-align: justify; "> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும்<a href="gcealexamsl@gmail.com" target="_blank"> gcealexamsl@gmail.com </a>என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T15:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 கிலோவுக்கும் அதிக போதைப்பொருளை தீயிட்டு அழிக்க நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/destroy-99-kg-of-narcotics-by-burning-puttalam-1784898620"></link>
            <id>https://jvpnews.com/article/destroy-99-kg-of-narcotics-by-burning-puttalam-1784898620</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாளை சனிக்கிழமை (25) தீயிட்டு அழிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாளை சனிக்கிழமை (25) தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.
</p><p>

புத்தளம், வனாத்தவில்லு - லாக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு எரியூட்டியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1111a8d-e048-4998-8e76-c8b4d69542b4/26-6a63643e1541f.webp' /></p><p>
</p><p>
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தவாறு நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்ட வழக்கு, முடிவடைந்த ஏனைய போதைப்பொருட்களுமே தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

நாளை காலை வேளையில் குறித்த போதைப்பொருட்கள் அனைத்தும் மாரவில நீதிமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, வனாத்தவில்லு எரியூட்டியில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாக நூதன மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relationship-recovery-lost-love-scam-china-1784897047"></link>
            <id>https://jvpnews.com/article/relationship-recovery-lost-love-scam-china-1784897047</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்லைன் சேவைகள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்லைன் சேவைகள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>

'உறவியல் வல்லுநர்கள்' (Relationship coaches) எனத் தங்களை அழைத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மன உளைச்சலைப் பயன்படுத்தி இத்தகைய பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd471ede-53e5-408a-bcb1-57dd4be90261/26-6a635e1892485.webp' /></p><p></p><h2>ஆயிரக்கணக்கான யுவான்கள் கட்டணம்</h2><p>
</p><p>
பிரிந்த காதலனை மீட்டெடுப்பதற்கான முதல் விதியாக, 21 நாட்களுக்கு அவனுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.</p><p>

தோற்றத்தை மாற்றுவது, உரையாடல் நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் தங்களது முன்னேற்றத்தைக் காட்டுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 90% வெற்றி நிச்சயம் என உறுதியளித்து ஆயிரக்கணக்கான யுவான்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.</p><p></p><p>


இத்தகைய ஆலோசனைகளைப் பின்பற்றிய பின்னரும், முன்னாள் காதலர்கள் தங்களை நிரந்தரமாகத் துண்டித்துக்கொண்டதாகப் (Block) பல பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ddfee4a-6d61-4388-91eb-223281a032db/26-6a635e1946e7c.webp' /></p><p>
</p><p>
இதில் தோல்வியடையும் பட்சத்தில், உயர்நிலை நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி மீண்டும் அதிக அளவில் பணம் பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
 அதேசமயம் சீனாவில் இது போன்ற உளவியல் ஆலோசனை நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த நிலையில், தற்போது 1,60,000 ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>

 மேலும் , பயனர்கள் குறைதீர்க்கும் தளங்களில் இத்தகைய போலி ஆலோசனைகள் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் குவிந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது .</p><p>இது, இந்த துறைக்கான முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இல்லாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-excavation-work-halted-as-of-today-1784897923"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-excavation-work-halted-as-of-today-1784897923</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் , புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a92e58-996e-4c22-83c8-b9aa4b646ab3/26-6a63618491c41.webp' /></p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாகிச்சூட்டு; பெண் உட்பட நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863"></link>
            <id>https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p>


கைது செய்யப்பட்டவர்கள், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018fb4df-cbcf-455f-a91f-38c6db9cc812/26-6a63691890d1a.webp' /></p><p>
</p><p>
 வத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள் ; நெட்டிசன்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646"></link>
            <id>https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7839559-8e26-48f3-a2ec-a058adffd97a/26-6a6322975572e.webp' /></p><p></p><h2>சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள&nbsp;&nbsp;திருமணம்</h2><p>&nbsp;சரோஜ்(20), சாவித்ரி(19), சந்தோஷ் கடக்வன்ஷி(18) ஆகிய மூன்று பெண்களும் தங்களின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். அவர்களுக்கு கேமராமேனாக கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவரையே தற்போது அவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.&nbsp;</p><p>
</p><p>
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f66994-f86e-4875-842d-ecec7a31db9f/26-6a63229836f8d.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>சிறு வயது முதலே நாங்கள் மூவரும் சகோதரிகளாகவும், தோழிகளாகவும் இருக்கிறோம். பெற்றோர் பார்த்த யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்களால் பிரிந்து வாழ முடியாது.

 அதனால்தான் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுத்து விகாசை திருமணம் செய்து கொண்டோம்’ என அந்த பெண்கள் சொல்லியிருக்கிறார்கள்</p><p>&nbsp;இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-justice-minister-defeated-1784897615"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-justice-minister-defeated-1784897615</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைசாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பத்தில்&amp;nbsp; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைசாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பத்தில்&nbsp; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
</p><p>நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8219a3b3-b589-4c1d-b30d-d7617b79c363/26-6a63605110f81.webp' /></p><p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம்,&nbsp; &nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T12:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கும் தாயுள்ளம்; ஸ்பெயின் கால்பந்து வீரர் குகுரெல்லாவின் சுருள் முடிக்குப் பின் இப்படி ஒரு கதையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/marc-cucurella-with-kids-sad-story-his-hair-1784896243"></link>
            <id>https://jvpnews.com/article/marc-cucurella-with-kids-sad-story-his-hair-1784896243</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரான (Defender) மார்க் குகுரெல்லாவின் (Marc Cucurella) நீண்ட சுருள் முடி, கால்பந்து உலகிலும் இணையத்திலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரான (Defender) மார்க் குகுரெல்லாவின் (Marc Cucurella) நீண்ட சுருள் முடி, கால்பந்து உலகிலும் இணையத்திலும் அவரது மிக முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

 சமீபத்தில் இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான தகவல் பரவியது. ஆட்டிசம் (Autism) குறைபாடு உடைய அவரது மூத்த மகன் மாதியோ (Mateo), மைதானத்தில் விளையாடும் 22 வீரர்களில் தனது தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே அவர் முடியை வெட்டாமல் வைத்துள்ளார் என்ற செய்தி உலகளவில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e12845f-9963-495f-bb52-b87a43cbc39f/26-6a635af4b38c0.webp' /></p><h2>தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும்&nbsp;</h2><p>
</p><p>
செல்சி மற்றும் ஸ்பெயின் கால்பந்து அணியின் பாதுகாப்பு வீரரான மார்க் குகுரெல்லாவின் நீண்ட சுருள் முடி, அவரது தனித்துவமான தோற்றத்தின் ஓர் அங்கமாக மட்டுமல்லாமல், மகன் மீதான அன்பின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
</p><p>
குகுரெல்லாவின் மூத்த மகன் மாதியோ ஆட்டிசம் நிலையுடன் வாழ்ந்து வருகிறார். போட்டியின்போது மைதானத்தில் இருக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் தனது தந்தையை அவர் எளிதாக அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே குகுரெல்லா தலைமுடியை நீளமாகவும் சுருளாகவும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401a6462-2702-4a74-bab1-1d24901fe85c/26-6a635af573366.webp' /></p><p>

ஒரே நேரத்தில் 22 வீரர்கள் விளையாடும் கால்பந்து மைதானத்தில், குகுரெல்லாவின் தனித்துவமான தலைமுடி அவரை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனால் மாதியோ தனது தந்தை எங்கு விளையாடுகிறார் என்பதை உடனடியாகக் கண்டறிய முடிகிறது.</p><p>

வெளிப்பார்வைக்கு இது ஒரு சாதாரண தோற்றத் தேர்வாகத் தோன்றினாலும், குகுரெல்லாவின் குடும்பத்திற்கு இதன் பின்னால் ஆழமான உணர்வும் அன்பும் நிறைந்துள்ளது.</p><p>

கோல்கள், வெற்றிகள் மற்றும் கிண்ணங்களுக்கு அப்பாலும், குடும்பத்திற்காக வீரர்கள் மேற்கொள்ளும் சிறிய செயல்களே கால்பந்தின் மிக அழகான தருணங்களாக மாறுகின்றன என்பதற்கு குகுரெல்லாவின் இந்தச் செயல் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-07-24T12:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI அச்சத்தால் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kayadu-lohar-mamitha-baiju-quit-social-media-1784884193"></link>
            <id>https://jvpnews.com/article/kayadu-lohar-mamitha-baiju-quit-social-media-1784884193</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம் தவறாக மாற்றப்பட்டு பரப்பப்படுவது, அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை தங்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிப்பதாக நடிகைகள் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06d8ac91-d145-4a51-8487-f65ccc7751b5/26-6a632be276d52.webp' /></p><h2>&nbsp;தனிநபர் தாக்குதல்கள் , வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள்</h2><p>
</p><p>
அந்தவகையில்,&nbsp; ஜன&nbsp; நாயகன் பட&nbsp; நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

இனி தனது திரைப்படங்கள் மற்றும் தொழில் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தனது நிர்வாகக் குழுவே ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e38a479-1bba-424d-a0f2-a05c4d1d4c48/26-6a632dccde9c0.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இதயம் முரளி' பட நடிகை கயாடு லோஹரும் மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
</p><p>
ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக இருந்து வரும் நிலையில் முன்னனி நடிகைகள் இவ்வாறு விலகி வருவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-24T11:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-7-low-floor-buses-to-sri-lanka-1784893342"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-7-low-floor-buses-to-sri-lanka-1784893342</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
</p><p>
இந்த பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கடந்த மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து&nbsp; குறித்த&nbsp; பேருந்துகள்&nbsp; இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8763f625-9b8d-48ec-a56b-09e9b52e0ec1/26-6a634fa07003c.webp' /></p><p>
பொதுப்போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பானின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றப் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாகவே இந்த உதவி கிடைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த தாழ்தளப் பேருந்துகள் மூலம், குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகப் பயணிக்க முடியும் .

அத்துடன் நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T11:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577"></link>
            <id>https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577</id>
            <summary type="text">தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>2019ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.16.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28c1dc2-d3a3-45db-9bfe-fc8df588ff66/26-6a6348ba25438.webp' /></p><p>



தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் பொது தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தேர்வு செய்து, அதற்கு சாதகமாக செயற்பட்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



இதுதொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எல் நினோவால் ஆபத்து ; யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-climate-impact-jaffna-university-professor-1784891004"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-climate-impact-jaffna-university-professor-1784891004</id>
            <summary type="text">எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p>

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில், எல்நினோ காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (24) காலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e52f08-730a-436f-a70b-c5e9184e384f/26-6a634681c4372.webp' /></p><p>
</p><p>
அதில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் பரவி வருவதால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவித்தார்.</p><p>கடல் வழியாக வெப்பம் பரவும் வேகம், நிலத்தின் வழியாக பரவும் வேகத்தை விட சுமார் 16 மடங்கு அதிகம் என்பதால், இந்து சமுத்திரத்தில் ஏற்படும் வெப்ப உயர்வு சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் விரைவாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
</p><p>
இதன் விளைவாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும், குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மேலும், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வறட்சி நிலவும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b9bb092-d462-40a1-9788-03dfdf2489c9/26-6a6346828fa1a.webp' /></p><p>அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு காணப்படுவதால், அதுவரை அதிக வெப்பமும் வறட்சியான காலநிலையும் நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
</p><p>
எதிர்வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, நீர்வளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார்.</p><p>

இந்த நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு – மன்னார் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-mannar-train-services-resume-1784890374"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-mannar-train-services-resume-1784890374</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன.

இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன.</p><p>

இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு தலைமன்னார் ரயில் நிலையத்தை சென்றடையும்.

‘</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c489fd1-ef62-49fb-b1f5-f4ae2cb4e411/26-6a634407a99d5.webp' /></p><p>டித்வா’ (Ditwah) சூறாவளியால் ரயில் பாதைக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p></p><p>எனினும், அனுராதபுரம் புதிய நகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, இந்த ரயில் அங்கு நிறுத்தப்படாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் 600 கிலோ கேரளக் கஞ்சா தீயிட்டு அழிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-kg-of-kerala-cannabis-destroyed-by-fire-jaffna-1784890025"></link>
            <id>https://jvpnews.com/article/600-kg-of-kerala-cannabis-destroyed-by-fire-jaffna-1784890025</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.</p><p></p><p>



கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd648c5d-0551-4e58-ac97-0f092d904973/26-6a6342aa51d7f.webp' /></p><p> 



அவை தொடர்பான வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த கஞ்சா பொதிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>


அதன்படி, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த எரித்தழிப்பு நடவடிக்கை நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், ஊர்காவற்துறை பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>


போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:48:22+00:00</updated>
        </entry>
    </feed>
