<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T16:38:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி ; சாரதிக்கு நேர்ந்த கதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321"></link>
            <id>https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321</id>
            <summary type="text">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நபரொருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' புகையிரதத்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19739fdc-0de4-404b-ac92-d1776308a9fe/26-6a8b1ef3caec5.webp' /></p><h2 style="text-align: justify; ">போராட்டத்தில் மக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்பு கடவை இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் புகையிரதப் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதித் புகையிரதப் பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "> 

பின்னர் பொலிஸார் தலையிட்டு, புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டதுடன், தற்போது அந்தப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹபரனையில் காட்டுத்தீ ; 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643"></link>
            <id>https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643</id>
            <summary type="text">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே தீ மூட்டியிருக்கலாம் என வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c4e804-e436-474c-a652-c544b798e09a/26-6a8b186620780.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஹபரணை வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபரனை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பணவீக்கத்தில் பதிவான அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138"></link>
            <id>https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138</id>
            <summary type="text">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜூலையில் 0.7 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59768d7d-f832-412a-90df-e041a0d1121a/26-6a8b1283f123c.webp' /></p><h2 style="text-align: justify; ">உணவுப் பணவீக்கம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், ஜூலையில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, உணவல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 9.3 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உணவுப் பணவீக்கம் அதிகரித்த போதிலும், ஜூலை மாதத்தில் பதிவான ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு உணவல்லாத பொருட்களே பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T15:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438"></link>
            <id>https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h3>மேலதிக தீவிர விசாரணை</h3><p>
</p><p>
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47657e31-b95f-49be-8782-5c407fec0fd0/26-6a8ae8b83bdad.webp' /></p><p>

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p>

மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
</p><p>
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி ஓட்டும் வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? ; அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772"></link>
            <id>https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772</id>
            <summary type="text">முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். 

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p><p> 

பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c865481-bd30-41f7-9aff-723214b79d66/26-6a8ade4e144ba.webp' /></p><p>மேலும், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே தங்கியுள்ளது என்றும், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே சுட்டிக்காட்டுகிறார். </p><p>

அதற்கமைய, ஒரு அரசாங்கமாக மனித வள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். </p><p>

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, 

எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே உள்ளது.</p><p>அபிவிருத்தியடைந்த மனித வளமே என்றாவது ஒருநாள் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும். ஒரு அரசாங்கமாக நாம் மனித வள மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறோம்.</p><p></p><p> </p><p>

அதற்காகவே கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். 

இந்த கல்வியில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் நம்புகிறோம்.</p><p> 

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்தும் வயதையும் 40 ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். </p><p>

பாடசாலை சென்று முடிந்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வர முடியாது எனக் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-circular-of-management-service-officers-1787485035"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-circular-of-management-service-officers-1787485035</id>
            <summary type="text">முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2026 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdd4199-496f-447b-b957-ab42baa58af9/26-6a8adb6cccaef.webp' /></p><p>விருப்பமான சேவை இடத்தில் 05 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுவர் என்பதுடன், வேறு சேவை இடத்தில் 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கும் இடமாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர். </p><p>

2027 வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறைமை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அதற்காக misco.pubad.gov.lk/misco என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் அடிப்படை விபரங்கள் மற்றும் முந்தைய சேவை இடங்கள் பற்றிய விபரங்களும் சரியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். </p><p>

சுற்றறிக்கையின்படி, 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடைக்கால/வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு அக்கட்டளை அதிகாரிக்குக் கிடைத்த திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வருடாந்த இடமாற்ற முறைமையின் கீழ், குறித்த அதிகாரிகளின் சேவைக்காலம், சேவை இடம் மற்றும் இடமாற்றக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084"></link>
            <id>https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084</id>
            <summary type="text">முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.</p><p>

 

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7718c0c8-be23-426f-bda0-26d81b8ad44b/26-6a8ad7b56398b.webp' /></p><p>இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மேலும் கோரியுள்ளது.
</p><p>
 

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம்:

 

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.</p><p>

 

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63-இல் இருந்து 65 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்மூலம் மாகாண மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574</id>
            <summary type="text">இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86521d5a-46af-418c-9a4c-671ef613669e/26-6a8ad1cfd20f0.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:56:23+00:00</updated>
        </entry>
    </feed>
