<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T01:42:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ; கடற்படை முகாம் குறித்து CID தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-the-kidnapping-case-11-missing-youths-1786929042"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-the-kidnapping-case-11-missing-youths-1786929042</id>
            <summary type="text">2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையின் ‘கன்சைட்’ (Gunsite) முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த முகாமின் சுவரில் எழுதப்பட்டிருந்த முகவரி, கடத்தப்பட்டவர்களில் ஒருவரான சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ff50ad-52bd-47e0-8f02-23ffac283ae9/26-6a825f93d62ab.webp' /></p><p>இந்த விசாரணைகளின்போது, குறித்த கடற்படை முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சில வழக்குகள், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f255e41f-9cdc-40af-9513-cf78799c8c28/26-6a826075c33b1.webp' /></p><p>கடற்படைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் கப்பம் பெறும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சட்டமா அதிபரால் மொத்தம் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தகவல் இருந்ததாகவும், தெஹிவளையில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T01:10:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாக பஞ்சமியில் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-are-going-jackpot-on-naga-panchami-1786915675"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-are-going-jackpot-on-naga-panchami-1786915675</id>
            <summary type="text">இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் நாக பஞ்சமி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d24ae72-f977-4873-9557-9c668d9225e7/26-6a822b5cf407d.webp' /></p><p> இப்படியான அபூர்வமான நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகைல் காணப்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p>அதுவும் சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலில் வளர்ச்சி, வியாபார விரிவாக்கம், வேலை வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது நாக பஞ்சமி நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab7baa93-b6dc-4846-8fe0-febbb573daa9/26-6a822b5fc1a61.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a38a2c-fc7c-497f-9cf9-ddbfc5f3ff89/26-6a822b5f0fb48.webp' /></p><h3>கன்னி</h3><p>
நாக பஞ்சமி நாளானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் நாளாக இருக்கும். இந்நாளில் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை அல்லது தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6163a99f-b979-463f-9fde-ae4790ba5652/26-6a822b5e5d2f8.webp' /></p><h3>மகரம்</h3><p>
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இக்காலத்தில் வேலை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a0006b9-b35b-49aa-8502-d84ca5530424/26-6a822b5da8feb.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T00:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலுள்ள தமிழர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி ; ஹாரோவில் பார்க்கிங் அபராதங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795"></link>
            <id>https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795</id>
            <summary type="text">லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் அப்பகுதிக்கு சென்ற பல தமிழர்கள் தொடர்ச்சியான அபராதச் சீட்டுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் குரல் கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9e0069-a623-4b5f-9f60-1d19f7e8ea35/26-6a82107cc982d.webp' /></p><p>இதனையடுத்து, ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், அதிகாரிகளுடன் விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
தமிழ் சமூகத்தினர் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை ஹாரோ நகரசபை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, தெற்கு ஹாரோ பகுதியில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்றுள்ளவர்களில், தங்களுக்கு நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்காக ஹாரோ நகரசபை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பூங்காக்களில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? சஜித் முன்வைத்த புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ending-congestion-national-parks-sajith-new-idea-1786925619"></link>
            <id>https://jvpnews.com/article/ending-congestion-national-parks-sajith-new-idea-1786925619</id>
            <summary type="text">பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>காலநிலை மாற்றம் குறித்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இத்தகைய குறைந்த கட்டண நடைமுறை மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஈர்க்க முடியும் என்றும், இதன் மூலம் தேசிய பூங்காக்களின் நுழைவாயில்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d43e385-e92a-4312-a90a-2361fa86225f/26-6a825234d42b5.webp' /></p><p>மேலும், வனஜீவிகள் திணைக்களத்தில் நிலவும் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார்.
</p><p>
திணைக்களத்துக்கு 33 கால்நடை மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 17 பேர் மட்டுமே சேவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மனித-விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்துவதிலும், யானை மற்றும் சிறுத்தைகளுக்குச் சிகிச்சையளிப்பதிலும் இவர்கள் முக்கிய பங்காற்றுவதால், வனத்தாவரங்கள் மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கான சட்டபூர்வ அதிகாரங்களையும் பதவி உயர்வுகளையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
</p><p>
அதேநேரம், நாட்டின் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி, அவற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், இரவு பகலாகப் பணியாற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; பக்தி பரவசத்தில் களைகட்டும் நல்லூர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-devotion-rapture-1786906918"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-devotion-rapture-1786906918</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஆலயத்தின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) பக்திபூர்வமாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் நல்லூர் செம்மணி பகுதியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, நல்லூரின் தெற்கு மற்றும் வடக்கு வாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் சிறப்பாக நாட்டப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd5f58cd-37f3-4d48-b9c2-4f6afc7d57fc/26-6a82092886d7f.webp' /></p><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தைச் சூழவுள்ள வெளி வீதிகளை திருவிழாக் கோலத்தில் அலங்கரிக்கும் வகையிலும் இந்த சேவல் கொடி நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் திருவிழா ஏற்பாடுகளுடன் களைகட்டத் தொடங்கியுள்ளன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றுமுதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மிக மற்றும் பக்தி உணர்வுடன் விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா? அரசாங்கத்திடம் புதிய மானியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-fuel-prices-increase-again-in-sri-lanka-1786921820"></link>
            <id>https://jvpnews.com/article/will-fuel-prices-increase-again-in-sri-lanka-1786921820</id>
            <summary type="text">எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றம் இறக்குமதிச் செலவை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இதுகுறித்த மீளாய்வை மேற்கொள்வது அவசியமானது எனக் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f915c44f-02f9-4d3d-82c0-68f4e80bce68/26-6a82435de7805.webp' /></p><p>

இந்த மீளாய்வுக்குப் பின்னர், அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டுப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் கோரவுள்ளதாகவும், அல்லது நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விலைத் திருத்தம் போன்ற மாற்று வழிகளை நாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, அது ஜூலை மாதம் அமுலுக்கு வந்த போதிலும், நடப்பு மாதத்தில் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, மத்திய கிழக்கு போர் வெடித்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றபோதிலும், தொடர்ந்து அதிகரிக்கும் உலகச் சந்தை விலை பெரும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T23:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[GSP+ சலுகையை மீண்டும் பெற இலங்கை தீவிர முயற்சி ; அமைச்சரவை உபக்குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-makes-serious-regain-gsp-concession-1786923009"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-makes-serious-regain-gsp-concession-1786923009</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைத் தலைமைகளாகக் கொண்டு இந்த உபக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75079f5b-064a-4689-be0e-c4c1103d74d8/26-6a8248037a39a.webp' /></p><p>இந்தச் சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றாடல்/காலநிலை பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய நான்கு முக்கிய வகைகளின் கீழ் 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை இணங்க வேண்டியிருந்தது.
</p><p>
இருப்பினும், அடுத்த சுழற்சிக்காக மேலும் 5 மேலதிக உடன்படிக்கைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.</p><p>போதைப்பொருள்கள் தொடர்பான ஐ.நா.வின் தனி உடன்படிக்கை, மனோவசியப் பொருட்கள் மீதான உடன்படிக்கை, போதைப்பொருள் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உடன்படிக்கை, ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை என்பனவே அவையாகும்.
</p><p>
தற்போதைய திட்டம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதால், இலங்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

GSP+ சலுகையானது தகுதியுள்ள வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கு முன்னுரிமையுடன் கூடிய பிரவேசத்தை வழங்குகின்ற போதிலும், சர்வதேச உடன்படிக்கைகளைத் தொடர்ந்து திறம்பட நடைமுறைப்படுத்துவதிலேயே அந்தச் சலுகையின் தொடர்ச்சி தங்கியுள்ளது.
</p><p>
இந்த வருட இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியுள்ள நிலையில், சர்வதேச விதிமுறைகளை இலங்கை பூர்த்தி செய்கிறதா என்பதை ஆய்வு செய்யவே வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைவாக இந்த உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவில் மேலும் 8 அமைச்சுகளின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T23:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்தின் பின்னர் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plan-to-hold-appeal-court-level-after-22-amendment-1786920732"></link>
            <id>https://jvpnews.com/article/plan-to-hold-appeal-court-level-after-22-amendment-1786920732</id>
            <summary type="text">அரசியலமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>வழமையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பிலேயே தனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b03bc6f-9a30-4e75-9441-e52d1f5a3914/26-6a823f1dd1d15.webp' /></p><p>இதற்கு நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதால், 22 ஆவது திருத்த வரைவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தும் ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>புதிதாக 4 நீதியரசர்கள் சேர்க்கப்படுவதன் மூலம், சில மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகள் ஒரு வருடம் வரை தொடரக்கூடும் என்றும், சில மாகாணங்களில் காலவரையறையின்றி நடைபெறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஒவ்வொரு மாகாணத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இந்த அமர்வுகளின் கால அளவு தீர்மானிக்கப்படும்.
</p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதையும், உச்ச நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலமும் (18) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514"></link>
            <id>https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.</p><p></p><h3>இலங்கை மத்திய வங்கி</h3><p>

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad8e6b1-8013-4964-a175-13f6ad714653/26-6a823a5bdc966.webp' /></p><p>நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது ஓரளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்ற போதிலும், அனுராதபுரம், பொலன்னறுவை, வெல்லவாய, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வறட்சியான நிலையே நிலவுவதுடன் சிறிய குளங்கள் வற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாகப் பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடலில் கரை ஒதுங்கிய மர்ம சடலம் ; கொலையா? தற்கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171</id>
            <summary type="text">கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>இன்று (16) ஞாயிற்றுக்கிழமைகாலை கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3892896c-391c-4e0e-9d62-037e423d1bb6/26-6a82351d74c78.webp' /></p><p>கரை ஒதுங்கிய சடலம் சிதைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும் மற்றும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார்.
</p><p>
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவும் கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439</id>
            <summary type="text">மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மிகுந்த விழிப்புணர்வு பெற்றுள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.</p><p>மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை உள்ளிருந்து சுத்தமாக வைத்திருக்கவும், பல கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.&nbsp;வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c3266-9fe9-4ad8-ad77-568588d3797c/26-6a8232429973a.webp' /></p><h3> உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது</h3><p>இன்றைய தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் வீக்கம் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இந்த வீக்கம் உங்கள் முகம் முதல் மூட்டுகள் வரை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கப் பிரச்சனையை கட்டுப்படுத்துகின்றன.</p><h3>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது</h3><p>உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் அதை வலுப்படுத்த மஞ்சள் தண்ணீர் அருந்துங்கள். மஞ்சளில் உள்ள குர்குமின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த சேர்மமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97aaba3a-9ab3-4774-8a90-73d248e475d7/26-6a823241e425e.webp' /></p><h3>இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது</h3><p>நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் நீர் மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது, எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d21b2ae-a5c9-4abe-8558-d81ea7213dcc/26-6a8232413dc63.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T21:57:28+00:00</updated>
        </entry>
    </feed>
