<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T11:34:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு ; பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149"></link>
            <id>https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149</id>
            <summary type="text">இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக இருந்த இந்தத் தொகை, ஜூலை மாதத்தில் 87 ரூபாய் அல்லது 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1,195 ரூபாய் அல்லது 7.2 சதவீத அதிகரிப்பாகும். </p><p>அதேவேளை, 2026 ஜனவரி மாதத்தில் 16,730 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு, தற்போது 949 ரூபாய் அல்லது 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாவட்ட ரீதியில், ஜூலை மாதத்தில் அதிகபட்ச அதிகாரபூர்வ வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33e9d92-b952-435f-9fac-3db3af09f4da/26-6a96b31edf679.webp' /></p><p>அங்கு ஒருவருக்கான மாதாந்தத் தொகை 19,067 ரூபாயாக உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 18,969 ரூபாயாகவும், நுவரெலியா மாவட்டத்தில் 18,592 ரூபாயாகவும் வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
</p><p>
குறைந்தபட்ச வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் 16,904 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 17,080 ரூபாயாகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 17,177 ரூபாயாகவும் உள்ளது.
</p><p>
இதன்படி, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மாவட்ட வறுமைக் கோடுகளுக்கு இடையிலான வித்தியாசம் ஒருவருக்கு மாதம் 2,163 ரூபாயாகும்.

வறுமைக் கோட்டின் அதிகரிப்பு, நுகர்வோர் விலைகள் உயர்வுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 223.4 ஆக உயர்ந்ததுடன், வருடாந்த பணவீக்கமும் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அதிகாரபூர்வ வறுமைக் கோடு என்பது ஒரு குடும்பத்தின் சராசரி மாதச் செலவையோ அல்லது சாதாரண வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்குத் தேவையான வருமானத்தையோ பிரதிபலிக்கும் அளவுகோல் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c016c2-860a-45dc-abe2-a96d66cf130c/26-6a96b31f90bef.webp' /></p><p>

மாறாக, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவைப் பிரதிபலிக்கும் புள்ளிவிபர ரீதியான அளவுகோலாக இது பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டுக்கான குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் 31 முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான வறுமைக் குறியீட்டு அறிக்கை ஒக்டோபர் 30 முதல் டிசம்பர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய தரவுகள் மூலம் தற்போதைய குடும்பங்களின் செலவினங்கள், நுகர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அழுத்தங்கள் குறித்து மேலும் துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326"></link>
            <id>https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dda028f-a585-4d1e-9c93-32e9573cd41c/26-6a9681081597a.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p> </p><p>இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.</p><p></p><p>


பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காட்டிக்கொடுத்த காணொளி&nbsp;&nbsp;</span></p><p> 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.</p><p>]</p><p>
</p><p>
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

 இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவிரி தாயை மலர் தூவி வணங்கி மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை <a href="https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496" target="_blank">தமிழக முதல்வர் ஜோசப் விஜய்</a> இன்று (01) திறந்து வைத்தார்.
</p><p>

முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7592244-0f5b-40ac-8eef-48d645e75fbb/26-6a96b1549b0d4.webp' /></p><h2>காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி வழிபட்ட முதல்வர் விஜய்</h2><p>
</p><p>
டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p> 

 

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.</p><p>

 


நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்ட நிலையில் பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T11:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-of-rockfall-on-hatton-colombo-main-road-1788260038"></link>
            <id>https://jvpnews.com/article/danger-of-rockfall-on-hatton-colombo-main-road-1788260038</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f105176e-d643-4b0d-a1bc-4d6528ebfc88/26-6a96aec781b82.webp' /></p><p>பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:54:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனுடன் இந்த உணவுகளை சேர்த்தால் உடல்நலத்திற்கு பாதிப்பா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071"></link>
            <id>https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071</id>
            <summary type="text">தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு ஆற்றலை வழங்குவது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது போன்ற பலன்களை அளிக்கும்.</p><p> தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. மேலும், இதில் கொழுப்பு மற்றும் புரதம் எதுவும் இல்லை.&nbsp;தேனை சில குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து உட்கொள்வது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். அவ்வாறு தீங்கு விளைவிக்கும்&nbsp; உணவுகளை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d0e067-f275-408f-84d7-50e6f3fa6dd6/26-6a96ab00b3964.webp' /></p><h4>சூடான நீர்</h4><p> பலர் காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தேனை 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்துவது நல்லதல்ல. அதிக வெப்பநிலையில் தேனில் ஹைட்ராக்ஸி மெத்தில் ஃபர்ஃபியூரல் (HMF) எனப்படும் ஒரு பொருள் உருவாக வாய்ப்புள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயுர்வேதத்தின்படி, தேனை அதிகமாக சூடுபடுத்துவது அதன் இயற்கையான பண்புகளை மாற்றிவிடுகிறது. அதனால்தான், தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதோ அல்லது அது முழுமையாக ஆறிய பிறகு குடிப்பதோ சிறந்தது.</p><h4>நெய்</h4><p>ஆயுர்வேதமும் தேனையும் நெய்யையும் சம அளவில் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அவ்விரண்டின் தன்மையும் வெவ்வேறானது என்றும், அவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்வது செரிமானத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அது கூறுகிறது. எனவே, நீங்கள் இவ்விரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள விரும்பினால், முதலில் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><h4>புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்</h4><p> புளிக்கவைக்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. தயிர் மற்றும் மதுபானம் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுடன் தேனைக் கலப்பது சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளையும் வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். தேனில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் புளிக்கும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும்.</p><h4>இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்</h4><p>சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆயுர்வேதமும் மீனுடன் தேனை உட்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அது செரிமானத்தைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><h4>முள்ளங்கி மற்றும் வெங்காயம்</h4><p>முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை தேனுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன. இந்தக் கலவையானது செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுத்து வயிற்று உபாதை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், தேனுடன் அதிகப்படியான வெங்காயத்தைச் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T10:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d3d337-df98-44df-8a89-b949f5baab61/26-6a96a5e87cad0.webp' /></p><h2>5 கொலைச் சம்பவங்கள்</h2><p>



குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>



2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் ரி-56 துப்பாக்கியால் சுட்டு மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இந்த 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



வழக்கு விசாரணையின்போது, லண்டனில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approve-donation-one-million-dollars-nepal-1788256509"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approve-donation-one-million-dollars-nepal-1788256509</id>
            <summary type="text">திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p> 

வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc69c10c-d7ce-4025-81f0-a4a1cfd4dd45/26-6a96a0feade90.webp' /></p><p> 

இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை ஏற்பட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளல், தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படும் அபாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றமை போன்ற காரணங்களால் நிவாரணங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு ஆதரவுகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளது. </p><p>

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஆழமான கலாச்சார, சமய மற்றும் பரஸ்பர வெகுசனத் தொடர்புகளின் அடிப்படையில் நீண்டகால நட்புகள் மற்றும் மோசமான இயற்கை அனர்த்தத்தால் இடம்பெற்ற மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்காதீங்க.... பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775</id>
            <summary type="text">&amp;nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.
</p><p>
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம். 

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்த பொருளாதார வளர்ச்சி நமக்கு கிடைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb81e9ff-5251-421d-a927-548b7dff9e4f/26-6a969e2084e86.webp' /></p><h2>Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்</h2><p>

இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்.. வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள்.</p><p></p><p>
சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. 2020 கொரோனாக் காலம் முதல் இப்போது வரை ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.

 ஆனபோதும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.</p><p></p><p> எங்கு பார்த்தாலும் போர் பற்றிய செய்திகளாக இருக்கிறது.. உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது’ என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 20 ஏக்கர் காணியில் இந்திய ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் ... மக்கள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த 20 ஏக்கர் காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[OD1Q2வ்]</p><h2>கலாச்சார&nbsp; சீர்கேடு&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
தங்களது மண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல தியாகங்களைச் சுமந்த மண் என்பதால், இளைய தலைமுறையை சீரழிக்கும் வகையிலான கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>

குறித்த திட்டத்தின் ஊடாக சுமார் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேதத்தை சுற்றுலாத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
தொழிற்துறைசார் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும், குறித்த நிலையம் கொழும்பில் இயங்கும் ஸ்பா நிலையங்களைப் போன்று அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் வெற்றிலைக்கேணி மற்றும் தாழையடி பகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

எனினும், குறித்த திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியானவை எனவும், பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்காத தரப்பினரே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768"></link>
            <id>https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
பின்னர் சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbce29f4-d75d-480e-b182-33f078032061/26-6a969261bea28.webp' /></p><p>இதன்போது இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தியதாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம், பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சிறார்களுடன் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், குறித்த அதிகாரி இவ்வாறான கடமைகளில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் அவருக்கு எதிராக உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலியே பயிரை மேய்ந்த கதை; மாணவி துஸ்பிரயோகம்; ஆசிரியரை பாதுகாத்த பாடசாலை சமூகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959</id>
            <summary type="text">&amp;nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக குளுநாகல தலைமையகக் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில் அறிவியல் பாடம் கற்பிக்கும் 52 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். 
 

கடந்த ஜூன் மாதத்தில் இந்தத் துஷ்பிரயோகம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f9e2a3-6ee4-4673-a16f-747939d90595/26-6a967bb11f90d.webp' /></p><h2>முன்பும் பாலியல் குற்றச்சாட்டில்&nbsp; சிக்கிய ஆசிரியர்</h2><p> </p><p>அதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அது குறித்துப் பாடசாலை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைப் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர், அது குறித்துக் குருநாகல் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு, சந்தேக நபர் குருநாகல் பகுதியிலேயே அமைந்துள்ள மற்றொரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் பதிவாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்த போதிலும், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகம் தொடர்பாகச் சந்தேகத்திற்கிடமான ஆசிரியருக்கு எதிராக அதிகாரிகள் எந்தக் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை, குருநாகல் தலைமையகக் காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
 அதேபவேளை கைதான ஆசிரியர் இதற்கு முன்னரும் குருநாகல் நகரில் உள்ள மற்றொரு பிரதான கலவன் பாடசாலையில் பணியாற்றியபோது, மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பதும் , சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் தாக்கியதில் 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8th-grade-student-dies-being-attacked-by-teacher-1788251379"></link>
            <id>https://jvpnews.com/article/8th-grade-student-dies-being-attacked-by-teacher-1788251379</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹர்தோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஹர்தோய் மாவட்டம், பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த ஷாமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h4>மேலதிக விசாரணை</h4><p>

கடந்த 20ஆம் திகதி பரீட்சைக்காக பாடசாலைக்கு சென்றிருந்த மாணவிக்கும் அவரது வகுப்புத் தோழிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594bca14-83f9-4277-9e98-c1b7fb3c03ef/26-6a968cf559c8f.webp' /></p><p>இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மாணவி வகுப்பு ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். </p><p>எனினும், மாணவியிடம் உரிய காரணங்களை கேட்டறியாமல் ஆசிரியர் அவரை கடுமையாக தாக்கியதாக மாணவியின் தந்தை பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி, பரூக்காபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலை அதிபர் அக்‌ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் மாணவியின் வகுப்புத் தோழி ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>

இதனிடையே, பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை ; துபாயில் கைதான மற்றுமொரு இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interpol-red-notice-dehibale-malli-arrested-dubai-1788251074"></link>
            <id>https://jvpnews.com/article/interpol-red-notice-dehibale-malli-arrested-dubai-1788251074</id>
            <summary type="text">&amp;nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய படபெதிகே துஷான் சத்சர என்ற &#039;களு மல்லி&#039; என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய படபெதிகே துஷான் சத்சர என்ற 'களு மல்லி' என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில்,படபெதிகே துஷான் சத்சர என்ற 25 வயதுடைய இச்சந்தேகநபருக்கு எதிராக, இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dffb04d-7e2a-4ca6-8688-e8c5df33e333/26-6a968bc3d8881.webp' /></p><h2>இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை</h2><p>
</p><p>


இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


'களு மல்லி' என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே"வின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-minister-piyankara-jayaratne-sentenced-7-years-1788250428"></link>
            <id>https://jvpnews.com/article/ex-minister-piyankara-jayaratne-sentenced-7-years-1788250428</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f248e-837f-441c-9dae-76947881a2c1/26-6a96893deebe0.webp' /></p><h2>&nbsp;ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன&nbsp; ஊழல் </h2><p>
</p><p>
இந்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><p>முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
</p><p>


அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் 'ஊழல்' குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


2014ஆம் ஆண்டு மே தின பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக பிரதிவாதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 320,000 ரூபாய் தொகையை விடுவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T08:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899"></link>
            <id>https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>


தனியார் வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d90a26-c1a5-4a19-a4bc-d1e42242f339/26-6a965c34efdcc.webp' /></p><h2>&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p> </p><p>கெளசல்யா, சர்மிளா, சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், மூவருக்கும் 17 வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p>

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்களுக்கு 0767070913, 0771658788 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்டெய்னர் போதைப்பொருள்; மேலும் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-container-drug-case-3-more-arrested-1788247722"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-container-drug-case-3-more-arrested-1788247722</id>
            <summary type="text">&amp;nbsp; கன்டெய்னர் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பாரியளவு &#039;ஐஸ்&#039; (கிரிஸ்டல் மெத்தபெட்டமின்) போதைப்பொருள் தொடர்பில், பாகிஸ்தானியர்கள் இருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486" target="_blank">கன்டெய்னர் ஒன்றிற்குள் </a>மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பாரியளவு 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தபெட்டமின்) போதைப்பொருள் தொடர்பில், பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான கன்டெய்னர் ஒன்றைச் பரிசோதித்தபோது கண்டெடுக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c2e4d1-f466-4351-b81d-ce10e615350c/26-6a967eabbd70c.webp' /></p><p>இதையடுத்து, இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளின் பெறுமதி 1500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[52 ஆலயங்களில் இன்று முதல் அமுலாகும் தடை; ஆன்மீக சுற்றுலா செல்வோர் அவதானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-1788244272"></link>
            <id>https://jvpnews.com/article/ban-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-1788244272</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14da4330-46cd-4e67-899a-d675767619f6/26-6a96713247baa.webp' /></p><h2>பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு மையங்கள் அருகில் பிரத்தியேகப் பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசாமி கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p>

விதியை மீறி கைபேசிகளைக் கொண்டுவருபவர்களிடம் இருந்து அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T06:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/roshan-amarasinghe-appointed-as-cid-director-1788244860"></link>
            <id>https://jvpnews.com/article/roshan-amarasinghe-appointed-as-cid-director-1788244860</id>
            <summary type="text">&amp;nbsp; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட காவல்துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f29ff4b0-a32b-4ac5-bd54-9454133b50a2/26-6a968ee79c866.webp' /></p><p>இலங்கை காவல்துறை தலைமையகத்தினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788244418"></link>
            <id>https://jvpnews.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788244418</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/071797ae-2029-4a4e-81d7-1ee514950259/26-6a9671c3ced5e.webp' /></p><p>அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.
</p><p>
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரோஷியாவில் இலங்கை வீரர் தாவி சமரவீரவுக்கு வெள்ளிப் பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-tavi-samaraweera-wins-silver-medal-1788243094"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-tavi-samaraweera-wins-silver-medal-1788243094</id>
            <summary type="text">இலங்கை மேசை டென்னிஸ் பந்து வீரர் தாவி சமரவீர மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

குரோஷியாவில் நடைபெற்ற மேசை டென்னிஸ் பந்து தரவரிசைப் போட்டியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மேசை டென்னிஸ் பந்து வீரர் தாவி சமரவீர மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p>

குரோஷியாவில் நடைபெற்ற மேசை டென்னிஸ் பந்து தரவரிசைப் போட்டியில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.</p><p>

11 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தாவி சமரவீர வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e16fde21-3b8f-454b-961b-2df99aed6efb/26-6a966c980f617.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தலைக்கவசமின்றிப் பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-filed-against-those-traveling-without-helmets-1788242698"></link>
            <id>https://jvpnews.com/article/case-filed-against-those-traveling-without-helmets-1788242698</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை (31)&nbsp; இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a861be2-3061-45b5-883d-97ef8e379f0a/26-6a966b0c56205.webp' /></p><p> மேலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
</p><p>
இதன்போது, பிரதான வீதிகளில் ஹெல்மட் அணியாமல் அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ; முன்னாள் மேயர் CCID-யில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thanasiri-amaratunga-appears-before-ccid-1788241950"></link>
            <id>https://jvpnews.com/article/thanasiri-amaratunga-appears-before-ccid-1788241950</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p>அக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d31020-34e5-4631-9617-221a7c489f21/26-6a96681fc8ef8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T05:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம் ; பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-member-committee-appointed-to-recommend-1788241523"></link>
            <id>https://jvpnews.com/article/six-member-committee-appointed-to-recommend-1788241523</id>
            <summary type="text">மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவினால், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a9e595-e982-42b8-a18c-60090e8ec71e/26-6a96667459a30.webp' /></p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் செயலாளராக மருத்துவர் அமில சுரங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் டப்ளியூ.கே. விக்ரமசிங்க, மருத்துவர் சமிந்த சமரக்கோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத்த மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள இடைநிலைத் தரத்தை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, அவர்களின் சேவைக்காலம், அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இடமாற்ற நடைமுறைமை என்பன குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்தக் குழுவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பௌதிகவியல் வினாத்தாளில் புதிய சர்ச்சை ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-controve-advanced-level-physics-question-paper-1788240908"></link>
            <id>https://jvpnews.com/article/new-controve-advanced-level-physics-question-paper-1788240908</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை என்றும், அவற்றுக்கு சரியான பதில்களைத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae7cab9-ed67-4e50-8e22-f65fb23f7564/26-6a96640dc2b8e.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வினாத்தாளில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் ஒரு இலவசப் புள்ளியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், நான்கு வினாக்களும் பிழையானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் இலவசப் புள்ளி வழங்குவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, பிழையானதாகக் குறிப்பிடப்படும் 17, 18, 19 மற்றும் 46 ஆகிய நான்கு வினாக்களுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் மொத்தம் நான்கு புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் மாணவர்களின் உரிமைகள் மற்றும் பரீட்சை நடைமுறைகளில் சமத்துவம் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:35:14+00:00</updated>
        </entry>
    </feed>
