<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-31T16:23:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் சென்றடைந்தார் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114</id>
            <summary type="text">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72553fc-7ff4-4f9e-b741-6e281a6a2af2/26-6a95a5746f03e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விமான நிலையத்தில் வரவேற்பு</h2><p style="text-align: justify; ">அவரை பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T16:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089</id>
            <summary type="text">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் வரை சாரதிகள் தற்போதைய கட்டணங்களையே அறவிடுவார்கள் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb849c0d-cbc4-4c03-ba3c-3591996db85c/26-6a95a17309afb.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற தற்போதைய உத்தியோகபூர்வ கட்டண முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T15:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலையில் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd42ab4-7f8e-4fff-b4c4-ec9c2d78c736/26-6a95820b2e1da.webp' /></p><h2>காவலர்களின் பாதுகாப்புடன்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>


இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311"></link>
            <id>https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>
 
கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் ஆகஸ்ட் 26-ம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61f601e-dc63-4173-b524-2b1c33cc967d/26-6a957b40ea12f.webp' /></p><h2>&nbsp;இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய&nbsp;&nbsp;இளம் பெண்</h2><p>
</p><p> 
மஞ்சீத்தின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது தோழி, “அவர் விரைவில் நடந்ததை அவருடைய வார்த்தைகளிலேயே உங்களிடம் சொல்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
</p><p> 
அவரது தாயார் அளித்த புகாரின்படி, ஜூலை 3-ம் தேதி சண்டிகரின் செக்டர் 34 பகுதியில் இருவரை சந்திக்க சென்ற மஞ்சீத்தை, ஷுபி மற்றும் பிண்டா ஆகியோர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>பின்னர் பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் மொரிந்தாவுக்கு அழைத்து சென்று தாக்கி, மரத்தில் கட்டி தீ வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அங்கு வந்த நண்பர் ஒருவர் போர்வையை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மஞ்சீத், ஆகஸ்ட் 5-ம் தேதி சிறிது நேரம் சுயநினைவு பெற்று குடும்பத்தினரிடம் சம்பவத்தை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.
 
இந்த வழக்கில் கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 பவுண் நகை.... ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288"></link>
            <id>https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288</id>
            <summary type="text">70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5df4364-6d86-450f-8a11-7315993b6ae0/26-6a957f11dc514.webp' /></p><h2>தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை</h2><p>கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புவனேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p> 
எம்.எஸ்சி., பி.எட். படித்திருந்த புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், 50 சவரன் தங்க நகைகள் வழங்கியதாகவும், மணமகனுக்கு 20 சவரன் நகைகள் கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
 
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் தங்கச்சங்கிலி வழங்கியதை தொடர்ந்து பிரச்சினை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டெய்னருக்குள் சிக்கிய 420 கிலோ 'ஐஸ்; மாட்டினார் பிரபல தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486"></link>
            <id>https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052" target="_blank">&nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்</a> ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedf3a17-9f88-400d-88d6-a36e1f5b2bd0/26-6a957808487ba.webp' /></p><p>
</p><p>
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8665cf96-66ff-402d-912a-fd5e76084d03/26-6a95805ddce85.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து அடாவடி ; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166"></link>
            <id>https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166</id>
            <summary type="text">&amp;nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p>

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10bd686-b9b6-4202-a936-a1781315dabb/26-6a95345fd6910.webp' /></p><h2>கைது செய்த&nbsp; பொலிஸார்&nbsp;</h2><p>அத்துடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். </p><p>

பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.</p><p></p><p> 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனெல்ல பகுதியில் விபத்து; நால்வர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594</id>
            <summary type="text">&amp;nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


அரநாயக்க திசையிலிருந்து இன்று (31) பிற்பகல் மாவனெல்ல நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்ல நகரத்திலிருந்து உஸ்ஸாப்பிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab944d8-80fe-4ff3-bf89-4128625f77a1/26-6a9568d3874d8.webp' /></p><p>
</p><p>
 

வேனில் பயணித்த நால்வரே விபத்தில் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p>


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் உரிய அனுமதியுடன் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



விபத்து தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T11:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

 

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76369583-e6b5-431a-8c79-313ce3e3c746/26-6a955d64741c6.webp' /></p><h2>&nbsp;இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p></p><p>

 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><p></p><p>
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

 

மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும் (279,328 பயணிகள்).</p>]]></content>
            <updated>2026-08-31T10:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு படகு வழங்கிய யாழ்ப்பாண நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986"></link>
            <id>https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986</id>
            <summary type="text">&amp;nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214e2746-a384-40a7-9ed3-55fb3d0fcb5f/26-6a955abc37b8a.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
மேலும், இஷாரா செவ்வந்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள்; வெளிநாட்டில் இருந்து வந்த கொள்கலனால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.

 

கைப்பற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.</p><p>

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c820dfdd-1f9f-4d13-b66d-e519a668fab4/26-6a95571628528.webp' /></p><p>

 

பாகிஸ்தானில் இருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:24:39+00:00</updated>
        </entry>
    </feed>
