<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T03:35:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஹினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கர வண்டி விபத்து ; இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-accident-at-mohini-falls-two-dead-1784691231"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-accident-at-mohini-falls-two-dead-1784691231</id>
            <summary type="text">நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
 

அந்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058a6dd5-5b59-409d-8b86-bdbd7ebcf442/26-6a603a20674db.webp' /></p><p>
 

காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T03:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ரூ. 2 கோடிக்கும் அதிக பணத்துடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-over-rs-2-crore-in-cash-colombo-1784690858"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-over-rs-2-crore-in-cash-colombo-1784690858</id>
            <summary type="text">கொழும்பில் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
நேற்று (21) மாலை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த ரூ.2.70 கோடி பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f12476e-2021-4f33-bb7b-e1031be2b901/26-6a6038abca72f.webp' /></p><p>குறித்த பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ சந்தேகநபர்கள் வழங்கத் தவறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 59 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதை கண்டறியும் நோக்கில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T03:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நான்கு பாடசாலை மாணவர்கள் கைது ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061"></link>
            <id>https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779f3bf5-5d92-47fe-82b6-c631bc8dd91f/26-6a6012d53464a.webp' /></p><h2>பிணையில் விடுதலை</h2><p>
</p><p>
இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறுவர் என்ற காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; காரில் வந்தவர்கள் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547</id>
            <summary type="text">தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019723ff-ae26-45d0-8c41-796e7d4ec6a1/26-6a6018348898b.webp' /></p><p>
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

 

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் குடும்பத்தினர் செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297"></link>
            <id>https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297</id>
            <summary type="text">&amp;nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் தலா 300 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0f869c-17e3-4dc8-9de9-7a86ef84bc18/26-6a600c4f64409.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இதன்பின், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அவர்களை தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;">



அப்போது, பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தோரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனைத் தொடர்ந்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையத்திலுள்ள இரு தனித்தனி சிறைக்கூடங்களில் தடுத்து வைத்தார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும்&nbsp; கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p style="text-align: justify;">விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன், சமாதானமாகச் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T00:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 பேரை பலியெடுத்த தீ விபத்து ; அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919"></link>
            <id>https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919</id>
            <summary type="text">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/386f7e6a-9e05-4631-b4f8-1ebf8b127092/26-6a6006215a57f.webp' /></p><h2 style="text-align: justify; ">முழுமையான விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

உரிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பல சந்தர்ப்பங்களில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக கடந்த ஜூலை 2 ஆம் திகதியும் இது தொடர்பாக நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

காலை 9:50 மணியளவில் ஏற்பட்ட தீ, பின்னர் விரைவாகத் தொழிற்சாலை முழுவதும் பரவியதுடன், சுற்றியுள்ள பகுதி அடர்ந்த கருப்பு புகையால் சூழப்பட்டது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, கோட்டே, தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபைகள், ஹோரணை நகர சபை மற்றும் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

தொழிற்சாலையின் உட்பகுதியைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

தீ விபத்து ஏற்பட்ட போது தலைக்கவச தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட பெருமளவிலான இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T23:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுகிறீர்களா ; அப்போ இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-mangoes-at-night-good-or-bad-1784676366"></link>
            <id>https://jvpnews.com/article/eating-mangoes-at-night-good-or-bad-1784676366</id>
            <summary type="text">&amp;nbsp;முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.



காரணம், மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
</p><p>


காரணம், மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி அதிக சத்துக்கள் நிறைந்ததும் கூட.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82830648-9855-460b-a43a-1202f84b97ab/26-6a600010206e3.webp' /></p><h2>இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்</h2><p>
</p><p>


ஆனால், இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனும் கருத்தும் நிலவுகின்றது. அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.</p><p>


இயற்கையாகவே உடல் ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மாம்பழம். </p><p>எனவே மாம்பழத்தை இரவு நேரங்களில் சாப்பிடும்பொழுது உடல் ஓய்வு பெற முடியாமல் உறக்கத்தின் தரம் குறையும்.</p><p></p><p>
</p><p>


இனிப்பான மாம்பழத்தை இரவில் சாப்பிடும்பொழுது சமிபாட்டு பிரச்சினை ஏற்படுவதோடு, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
</p><p>


இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடும்பொழுது கலோரிகள் எரிக்கப்படாமல் சேமிக்கப்படும்.
</p><p>


இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை உயர்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-for-2026-gce-o-l-exam-applicants-1784670322"></link>
            <id>https://jvpnews.com/article/notice-for-2026-gce-o-l-exam-applicants-1784670322</id>
            <summary type="text">&amp;nbsp;2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதது ஒரு தடையாக இருக்காது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதது ஒரு தடையாக இருக்காது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் சமர்ப்பிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eac7174e-d39b-4864-a0b3-f8c2a7fc2f2d/26-6a5fe8742a655.webp' /></p><h2 style="text-align: justify; ">பரீட்சை விண்ணப்பங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் 23ஆம் திகதி வரை இணையவழி மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. </p><p style="text-align: justify; ">விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, உத்தியோகபூர்வ பரீட்சை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எந்தச் சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; ">


மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்களுக்கு, 1911 என்ற அவசர உதவி இலக்கம் அல்லது 011-2784537, 011-2786616, 011-2784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், 011-2784422 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளலாம்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T22:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல ரெப் பாடகர் கைது ; தமிழக முதல்வர் விஜய் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163"></link>
            <id>https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
</p><p>
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45489ec1-a3ed-40ba-b2ec-a69e84f6a7a8/26-6a5fa2928c6a0.webp' /></p><h2>கடும் கண்டனம்</h2><p>

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.</p><p>
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே&nbsp; சந்திப்பு நடைபெற்றது.</p><p></p><p> </p><p>நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>ரெப் பாடகர் "அறிவு" கைது செய்யப்பட்டமைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:46:20+00:00</updated>
        </entry>
    </feed>
