<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T09:23:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3c9325-4398-4412-b75e-b85f591cf032/26-6a65ccf67bd52.webp' /></p><h2>இலவசமாக விசாக்கள்&nbsp;</h2><p> </p><p> 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்தியாவிலுள்ள புனித பௌத்த யாத்திரைத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்குப் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுக்களாகப் பயணிக்கும் பட்சத்தில் இலவசமாக விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. </p><p>சேவை வழங்குனரில் ஏற்பட்ட இடைக்கால மாற்றத்தினால் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த இச்செயற்பாடு, புதிய மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p></p><p> 


முன்னர் காணப்பட்ட நடைமுறையைப் போலவே, இலவச விசா வசதியைப் பெற விரும்பும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யாத்திரிக் குழுக்களின் விண்ணப்பங்கள், இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p> 

இந்திய அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 12 வயது முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். </p><p>குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும்.</p><p></p><p> </p><p>இது பயணிகள் இந்தியாவில் இறங்கும்போது குடிவரவு நடைமுறைகளை எளிதாகவும் சிரமமின்றியும் கடந்துசெல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

ஐ.சி.ஏ.சி. மையங்களுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் காத்திருக்கும் நேரத்தைச் சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேற்கண்ட நடைமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசு எவ்வித விசா கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இருப்பினும், ஐ.சி.ஏ.சி. சேவைக்கான கட்டணமாக விண்ணப்பதாரி ஒருவர் இலங்கை 1,855 ரூபா மாத்திரம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலப்பனையில் காட்டுத் தீ ; 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782"></link>
            <id>https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p style="text-align: justify; ">


இன்று (26) ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3258e8e-b813-4028-b613-21f2e7a22cd4/26-6a65c2576f655.webp' /></p><h2 style="text-align: justify; ">தீ பரவல்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத்துறையினர் கோரியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தீ பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T08:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களுக்கு நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-after-hitting-two-women-1785052862"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-after-hitting-two-women-1785052862</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5322abb0-546c-402b-b355-812ec8a96109/26-6a65bec00de42.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T08:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T07:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a604e864-eadb-4335-8fcd-c8b88e76c91d/26-6a65b7ce3e126.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T07:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200</id>
            <summary type="text">காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00cccabe-5b85-4ba1-aced-cf6acf76ca4b/26-6a65b45a3650b.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேரியகுலம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.</p><p>&nbsp;சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உடலத்தை மீட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செட்டிகுளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தாக மாறும் டெங்கு நிலைமை ; அதிகரிக்கும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324</id>
            <summary type="text">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;">

 

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa578645-daf2-44fa-99b1-ca8add5db89e/26-6a65ad0596411.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;டெங்கு நோயாளர்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;இக்காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">அந்த எண்ணிக்கை 43,132 ஆகும்.

 

அவற்றுள் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். </p><p style="text-align: justify;">கம்பஹாவில் 17,280 நோயாளர்களும், கொழும்பில் 16,213 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6cf51f-a53e-4993-86c5-3d701075067f/26-6a65a9bae884d.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வரித் தொகை</h2><p> </p><p style="text-align: justify;">குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">
 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">&nbsp;விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
 

இருப்பினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolboy-drowns-while-bathing-in-river-1785046294"></link>
            <id>https://jvpnews.com/article/schoolboy-drowns-while-bathing-in-river-1785046294</id>
            <summary type="text">கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த&nbsp; 16 வயதுடைய பாடசாலை மாணவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9adddb01-7aed-4a96-bca5-45a4271e5653/26-6a65a517b9ba2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T06:20:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் வீட்டிற்குள் கைதான 'குடு அசங்க' ; அதிகாலையில் பொலிஸாரின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-suspect-kudu-asanga-arrested-in-ampara-1785045889"></link>
            <id>https://jvpnews.com/article/drug-suspect-kudu-asanga-arrested-in-ampara-1785045889</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த &#039;குடு அசங்க&#039; எனப்படும் போதைப்பொருள் விய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த 'குடு அசங்க' எனப்படும் போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (26) சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c98757f-6154-4ab3-8e8a-bf1a81332fe2/26-6a65a383480b0.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வியாபாரி</h2><p>
</p><p style="text-align: justify; ">
உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'குடு அசங்க' இரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

குறித்த சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T06:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை ; குழந்தைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-warning-issued-for-sri-lankan-parents-1785045173"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-warning-issued-for-sri-lankan-parents-1785045173</id>
            <summary type="text">காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.


...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/664c53cb-a7b9-464c-b89e-935856ce1ae4/26-6a65a0b6bfe63.webp' /></p><h2 style="text-align: justify;">பெற்றோருக்கு அறிவுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">


அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்நிலைமை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், வீடுகளில் வைத்து சுயமாக சிகிச்சையளிப்பதைத் தவிர்த்து, தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


வீட்டிலேயே கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான முக்கியமான நேரம் வீணாகக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர, குழந்தைகளின் உயிரை தேவையற்ற ஆபத்தில் ஆழ்த்தாமல் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify;">



இந்நிலையில் நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது



அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-26T05:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த மகனின் தோஷத்தை போக்க நினைத்த தாய்க்கு மகன்களின் கண்முன்னே நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-killed-after-being-trapped-under-lorry-1785044161"></link>
            <id>https://jvpnews.com/article/mother-killed-after-being-trapped-under-lorry-1785044161</id>
            <summary type="text">சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.
</p><p style="text-align: justify;">
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/619c1541-bff0-40ab-bc03-54b25a26187b/26-6a659cc3773b0.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify; ">
விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடையவராவார்.
</p><p style="text-align: justify; ">
அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
</p><p style="text-align: justify;">
மூத்த மகனின் தோசத்துக்குச் செய்யவேண்டிய நேர்த்தியை நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் பிற பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-26T05:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நடுவீதியில் பறிபோன 4 வயதுச் சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-year-old-boy-dies-in-early-morning-1785043137"></link>
            <id>https://jvpnews.com/article/4-year-old-boy-dies-in-early-morning-1785043137</id>
            <summary type="text">நேற்று அதிகாலை வேளையில் வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹ சந்தி மற்றும் ராஜகிரிய இடைப்பட்ட வீதியில், ராஜகிரிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று அதிகாலை வேளையில் வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹ சந்தி மற்றும் ராஜகிரிய இடைப்பட்ட வீதியில், ராஜகிரிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
 

 இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் ஒருவன் எதிர் திசையில் வந்த கார் ஒன்றில் மோதியதில் படுகாயமடைந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20595f9a-50d0-42a0-8f1e-aef7ca6ae065/26-6a6598c32d3da.webp' /></p><p> 

 

இவ்வாறு உயிரிழந்தவர் மீகொட பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>விபத்தையடுத்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்த கனேடியர் அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041197"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041197</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் &#039;ஹசீஸ்&#039; போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e655fca1-45c3-4b18-94e8-fc4844a8688f/26-6a65912ef0b2e.webp' /></p><p>
</p><p>
 

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:46:38+00:00</updated>
        </entry>
    </feed>
