<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T06:29:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்நிதியான் ஆலய சூழலில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி; அகற்றப்பட்ட வியாபாரி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394"></link>
            <id>https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட வியாபாரி ஒருவர் தும்பு மிட்டாய் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த தும்பு மிட்டாய் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e08680-7600-4483-b565-a2c0fb0a976b/26-6a83f73425db9.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>இந்நிலையில் 16/08/2026 அன்று ஆலய சூழலில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அறிவுறுத்தலை மீறி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்பு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33414ce-56c3-45f9-9770-6829872fa848/26-6a83f77adfdbe.webp' /></p><p>

இதனை அவதானித்த வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் அவர்களை விசாரித்தபோது மருத்துவ சான்றிதழ் இன்றி தும்பு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டது.
</p><p>
அத்துடன், அறிவுறுத்தல்களை மதிக்காது வியாபார நடவடிக்கைக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபார நடவடிக்கையினை தொடர்ந்த காரணத்தினால் தும்பு மிட்டாய் உள்ளிட்ட விற்பனை தொகுதி பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T06:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமானில் கைதான சமிட்புர சது CCD யிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/oman-arrest-summitpura-chathu-in-ccd-custody-1787030099"></link>
            <id>https://jvpnews.com/article/oman-arrest-summitpura-chathu-in-ccd-custody-1787030099</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'மோதரை சது' அல்லது 'சமிட்புர சது' குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d322766-88fe-4e2a-b3c6-75aba94c70a3/26-6a83ea551aad2.webp' /></p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை</h2><p> </p><p>

கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.</p><p></p><p> </p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார்.</p><p></p><p> </p><p>

அதன்படி, ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-18T05:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-for-those-who-have-money-in-banks-1787023997"></link>
            <id>https://jvpnews.com/article/warning-for-those-who-have-money-in-banks-1787023997</id>
            <summary type="text">இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது. மத்திய வங்கி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது. </p><p>மத்திய வங்கி, பொலிஸ் நிதிக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவு போன்ற அமைப்புக்களின் அதிகாரிகளைப் போன்று வேடம் தரித்து ஆட்களை ஏமாற்றும் மோசடி பற்றி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சேர்ட் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d714e5-a958-4b2d-bc18-9afd48c248cc/26-6a83eb3bcc368.webp' /></p><p> </p><p>இந்த மோசடியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வங்கிக் கணக்குகளை சார்ந்த சேமிப்புக்களை இலக்கு வைப்பதாக தெரிகிறது.</p><p>கையடக்க தொலைபேசிகள், சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கிகளில் சேமிப்பிலுள்ள தொகை பற்றி விசாரித்து, இந்தத் தொகை சட்டவிரோதமான முறையில் திரட்டப்பட்டதாக முதலில் எச்சரிக்கப்படுகிறது.</p><p></p><p>இதனைத் தொடர்ந்து அரச நிறுவனங்களின் கடித தலைப்புக்களை பயன்படுத்தி சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை எச்சரித்து பணம் பறிக்கும் முயற்சியில் மோசடியாளர்கள் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா சேர்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T05:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-of-kanjipani-imran-s-uncle-five-arrested-1787029570"></link>
            <id>https://jvpnews.com/article/murder-of-kanjipani-imran-s-uncle-five-arrested-1787029570</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் பிரபல பாதளகுழு உறுப்பினர் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் பிரபல பாதளகுழு உறுப்பினர் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p> 
கடந்த 10ஆம் திகதி ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் உயிரிழந்தார்.
</p><p>
இந்த துப்பாக்கிப்பிரயோகம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T05:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி கணிவிடுவிப்பு போராட்டம்; ஐவர் மீது பாய்ந்த வழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palaly-land-release-protest-case-filed-police-1787028878"></link>
            <id>https://jvpnews.com/article/palaly-land-release-protest-case-filed-police-1787028878</id>
            <summary type="text">&amp;nbsp; வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளனர். </p><p>

கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de83a6d-8570-4086-8383-a857233e110b/26-6a83e58fdc2db.webp' /></p><h2>&nbsp;வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு</h2><p>
</p><p>
காலை 9.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை, உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பலாலி பிரதான வீதியின் T சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பலாலி காவல்துறையினரால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, குறித்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆகியோரும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T04:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423"></link>
            <id>https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p> 


யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) எனும் மாணவனே திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9ca243-595a-4bce-8838-f44491ee61f5/26-6a83e3c92e0f5.webp' /></p><h2>&nbsp;பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த&nbsp;மாணவன்</h2><p>குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும் போது, பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த நிலையில் , அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p></p><p>

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் 12 ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p> 

இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு இருந்தவேளை திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p>

உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>யாழ் இந்துக் கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு வைஸ்ணா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T04:44:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857"></link>
            <id>https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்சரிப்பார் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்தின் வழியாக குரு பகவான் பயணிப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e9a036-93e0-4de2-9336-f7f68877ba92/26-6a839b4daaca1.webp' /></p><p>இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சாதகமான முன்னேற்றங்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78bf976-2158-4c8b-8aa5-4459bbeac8ce/26-6a839b4e5b4fd.webp' /></p><h3>மிதுனம்</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, ஆயில்ய நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவது தொழில் மற்றும் நிதி நிலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றத்தால் வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளோ கிடைக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொடப்போகிறது. </p><p>ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது நீங்கள் நீண்ட காலமாகத் தள்ளிப்போட்டு வந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கவோ இது ஒரு மிகச் சிறந்த காலமாகும்.

இந்த பெயர்ச்சியால் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மிகவும் இணக்கமானதாக மாறும். மேலும், உங்களுக்குப் பயன் தரக்கூடிய குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பயன்படுத்துங்கள், தற்போதைய சூழலில் அதுவே உங்கள் மிகச்சிறந்த சொத்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ab6d3b-302d-4334-a31c-308d95779a05/26-6a839b4fb4015.webp' /></p><h3>கன்னி
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நுழைவது கன்னி ராசியினருக்கு, குறிப்பாக வருமானம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கலாம். அதேவேளையில், சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை மாற்றத்தை விரும்பும் நபர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையக்கூடும்.
</p><p>
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18453439-91a0-4cba-ae7d-c91ba26fc22d/26-6a839b4f0dc72.webp' /></p><h3>மீனம்
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவது மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் கல்விக்குச் சாதகமான ஒரு காலகட்டமாகக் கருதப்படுகிறது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது சிறந்த நேரம். அவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.</p><p>இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் அவர்கள் கடின உழைப்பிற்கான பலனை இரட்டிப்பாகப் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, இது மிகவும் சாதகமான நேரம். எதிரிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்ட இது சரியான காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c8dd44-0ff2-4afa-8862-b0c50e239167/26-6a839b50666f0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223"></link>
            <id>https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf19818-a344-44b3-a7a0-823ca9fa93c7/26-6a8371b8e6377.webp' /></p><p>இந்நிலையில், நிறுவனத்தின் தலைவருடன் ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவர், எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
</p><p>
கையடக்கத் தொலைபேசியின் மின்கலன் தீர்ந்திருந்ததால், தான் வீட்டிற்கு வருவது தொடர்பில் மனைவிக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவரால் முடியவில்லை.
</p><p>
இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், கதவைத் தட்டியபோது மனைவி கதவைத் திறப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டதுடன், வீட்டின் பின்பக்கக் கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்து சத்தம் கேட்டுள்ளது.

மின்கல விளக்கை எடுத்துக்கொண்டு தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>
அந்த நேரத்தில் மரத்திலிருந்து சில பலாக்காய்கள் கீழே விழுந்த சத்தமும் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உடனடியாக அருகில் வசித்த மனைவியின் சகோதரர்களை அழைத்த அவர், மரத்தில் திருடன் ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adf44f4f-66a8-4e8a-b902-4a2839a7d9e4/26-6a8371b99d1c6.webp' /></p><p>அங்கு வந்த உறவினர்கள் மரத்தில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, கணவன் தனது மனைவியை அந்த நபருடன் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மனைவியின் சகோதரர்களும் குறித்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரு பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பில் தொடர்ந்தும் பணியாற்றுவதைத் தவிர்த்து, தனது இரு பிள்ளைகளையும் தானே பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[களைகட்டும் யாழ். உணவுத் திருவிழா ; மூன்றாவது நாளிலும் மக்கள் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776"></link>
            <id>https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” முற்றவெளி மைதானத்தில் மூன்றாவது நாளாகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.</p><p>
</p><p></p><p>வட மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்திருவிழாவில் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5addf363-65f6-466d-8a70-36275077574a/26-6a83aa91ecd47.webp' /></p><p>

விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்ததுடன், இந்நிகழ்வு வடக்கின் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது எனத் தெரிவித்தார்.</p><p>

விழாவில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். </p><p>பெருமளவான மக்கள் பங்கேற்றுள்ள இத்திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:43:47+00:00</updated>
        </entry>
    </feed>
