<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T10:45:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/textbooks-worth-8-lakh-rupees-go-missing-1786704067"></link>
            <id>https://jvpnews.com/article/textbooks-worth-8-lakh-rupees-go-missing-1786704067</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவராலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முதலாம் தரத்திற்கான 19,892 தமிழ் பயிற்சிப் புத்தகங்கள்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae60d167-f803-464e-8a63-9d03955187e1/26-6a7ef0c558fbc.webp' /></p><p> மற்றும் பாடப்புத்தகங்கள் உரிய முறையில் விநியோக மையங்களுக்கு கையளிக்கப்படாத சம்பவம் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. </p><p>

குறித்த புத்தகத் தொகுதியைக் கொண்டு செல்வதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல கடந்த மே மாதம் 4 ஆம் திகதி அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், அப்புத்தகங்கள் விநியோகிக்கப்படவிருந்த கிழக்கு மாகாணத்திலுள்ள 12 மையங்களுக்கு அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை. </p><p>

இவ்வாறு உரிய முறையில் விநியோகிக்கப்படாத புத்தகங்கள் முதலாம் தரத்தின் மூன்றாம் தவணைக்குரிய புத்தகத் தொகுதியாகும் என்பதுடன், இதன் பெறுமதி சுமார் 8 இலட்சம் ரூபாயாகும். 

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T10:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையும் , தாத்தாவும் தலைமறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harassment-girl-father-grandfather-absconding-1786694648"></link>
            <id>https://jvpnews.com/article/harassment-girl-father-grandfather-absconding-1786694648</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக பொலிஸாரிடம் இரண்டு வெவ்வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக பொலிஸாரிடம் இரண்டு வெவ்வேறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
</p><p>
குறித்த சிறுமி, கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் சந்தித்த துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0d687ca-e38d-463f-b5ce-43e9fdf2dbbf/26-6a7ecbf9dd44e.webp' /></p><h2>பாட்டி முறைப்பாடு</h2><p>

இதனையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டி முறைப்பாடு அளித்துள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p>

சந்தேகநபரான தாத்தா மற்றும் தந்தை, சிறுமியிடம் பல சந்தர்ப்பங்களில் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என இரு சந்தேகநபர்களும் அச்சுறுத்தியதாக சிறுமி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இரு சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அம்பாலாந்தோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T09:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் அழகிற்கு மெருகூட்டும் ஓமம் தண்ணீர் ; உங்களுக்கு தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ajwain-water-enhances-women-s-beauty-carom-seed-1786700347"></link>
            <id>https://jvpnews.com/article/ajwain-water-enhances-women-s-beauty-carom-seed-1786700347</id>
            <summary type="text">&amp;nbsp; ஓமம் தண்ணீர் பெண்களின் ஒட்டுமொத்த அழகுப் பராமரிப்பிலும், கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஓமம் தண்ணீர் பெண்களின் ஒட்டுமொத்த அழகுப் பராமரிப்பிலும், கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது யாருக்கெல்லாம் தெரியும்? </p><p>

ஓமத்தில் 'தைமால்' எனப்படும் சக்திவாய்ந்த கிருமிநாசினிப் பொருள் நிறைந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/286db721-21ed-4be2-9a87-69f8332318d9/26-6a7ee23d23de3.webp' /></p><p><b>&nbsp;சக்திவாய்ந்த கிருமிநாசினிப் பொருள்</b></p><p>இது சருமத்தில் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. 

ஓமம் தண்ணீரைத் தினமும் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள் குறைவதோடு, அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளும் படிப்படியாக மறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d9676b-83b9-401d-80fc-5a2c4375d499/26-6a7ee23dd129d.webp' /></p><p> 

வெப்பம் மற்றும் தூசிகளால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி மற்றும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாகும். </p><p>

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்சலைத் தணித்து, தோலுக்கு மென்மையையும் இயற்கையான பளபளப்பையும் தருகிறது.</p><p><b>ஓமத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்</b></p><p> </p><p>ஓமத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தல் வேர்க்கால்களுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன. 

தொடர்ந்து ஓமம் தண்ணீரைத் தலைமுடிக்குக் குளித்து வர, நரைமுடி தோன்றுவது தடுக்கப்பட்டு கூந்தல் கருமையாக வளரும்.</p><p> 

ஓமம் தண்ணீர் கூந்தலின் வறட்சியைப் போக்கி, வேர்க்கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. கூந்தலைக் கழுவிய பிறகு, இறுதியாக ஓமம் தண்ணீரைக் கொண்டு அலசி வர, தலைமுடி சிக்கின்றி மென்மையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6908c2a4-a24b-4ffc-a65d-511a225b1c78/26-6a7ee23e89ee4.webp' /></p><p> 

இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகச் செயல்பட்டு கூந்தலுக்குப் பிரகாசத்தைத் தருகிறது. 

அழகு என்பது வெளிப்புறச் சருமம் மட்டுமல்ல, உடல் கட்டமைப்பும் சேர்ந்ததே ஆகும்.</p><h2>வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீர்</h2><p> </p><p>ஓமம் தண்ணீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீர் குடித்து வர, தேவையில்லாத சதை குறைந்து உடல் கச்சிதமான வடிவத்தைப் பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8037a335-c26e-4650-a48d-fd1a9148dc52/26-6a7ee23f3e34c.webp' /></p><p> </p><p>

அழகுப் பராமரிப்புடன் சேர்த்து, ஓமம் தண்ணீர் குடிப்பது அஜீரணம், வயிற்று உப்பசம், சளி, இருமல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-14T09:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலில் கடுமையான எரிச்சல் ; ஒரு மாதமாக நீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்! விசித்திர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-boy-has-been-staying-in-water-for-a-month-india-1786697872"></link>
            <id>https://jvpnews.com/article/a-boy-has-been-staying-in-water-for-a-month-india-1786697872</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் விசித்திர சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.
</p><p>

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு நீரில் முழ்கியபடி வாழ்ந்து வருகிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c688f24-5a48-4fc0-a7ef-d028a7a712fe/26-6a7ed8926781d.webp' /></p><h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p> நீரிலிருந்து வெளியே வந்தவுடனே தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோவொரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டது போன்று உணர்வதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.</p><p></p><p>

இதன் காரணமாகவே சிறுவன் குளத்திலிருந்து வெளியேற மறுத்துத் தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறான்.</p><p></p><p> </p><p>சில நேரங்களில் சிறுவன் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் இக்கட்டான நிலை குறித்து அவனது பெற்றோர் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 
சிறுவனை ஏற்கனவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அவனது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>

நீண்ட நாட்களாகத் தண்ணீரிலேயே இருந்து வருவதால் இக்பாலின் கை மற்றும் கால்களில் உள்ள தோல்கள் வெளிறிய நிலைக்கு மாறியுள்ள போதிலும், சிறுவன் தண்ணீரை விட்டு வெளியே வரத் தொடர்ந்து மறுத்து வருகிறான்.
</p><p>
சிறுவன் நீண்ட நேரம் தண்ணீரிலேயே இருப்பதால் தோலின்கீழ் பூஞ்சைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T09:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் அனாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004" target="_blank"> வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை</a> முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af3b08f7-5f23-46a7-896a-1d8c3545be6b/26-6a7ed1a7126da.webp' /></p><p>
</p><p>


சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் தாயாரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p></p><p>



இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி; சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்கிக்கொண்ட பிரிட்டிஷ்-இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரிட்டிஷ் ஊடகங்களின் தகவல்படி, நீரில் சிக்கிக்கொண்ட மூவருக்கு உதவ அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயதுடைய அந்த இளைஞர் கடலிலிருந்து மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e822b1-a1c3-4ac1-98c4-0ba5277af7ec/26-6a7eac812bf1d.webp' /></p><h2>லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்&nbsp;</h2><p> மருத்துவக் குழுவினரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்டவர் 24 வயதுடையவர் என்று காவல்துறை முதலில் தெரிவித்திருந்தாலும், பின்னர் அவரது வயது 18 என்று தெளிவுபடுத்தியது. 16 வயது சிறுவன் மற்றும் 24 வயதுடைய நபர் என மற்ற இருவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பினர்.</p><p></p><p>
</p><p>
ஒருவருக்கொருவர் அறிமுகமான அந்த மூவரும் லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.

கடலோரக் காவல் படை, பெட் லெவல் (Pett Level) உயிர்காக்கும் படகுப் பிரிவு மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் இந்தச் சம்பவத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.</p><p>

அந்தப் பகுதியில் அவசர சேவைக் குழுவினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இறப்பில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான சூழலும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி (coroner) மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-08-14T08:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-power-cuts-will-be-implemented-sri-lanka-1786695092"></link>
            <id>https://jvpnews.com/article/no-power-cuts-will-be-implemented-sri-lanka-1786695092</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். </p><p>

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் அநுர கருணாதிலக்க குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51eb011e-9af5-4715-a368-169ee7faf459/26-6a7ecdb5ce44d.webp' /></p><p></p><p> </p><p>

அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 கிலோவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T08:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு வந்த பெண் விமான நிலையத்தில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-woman-arrested-katunayake-airport-1786692856"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-woman-arrested-katunayake-airport-1786692856</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக சிகரெட் தொகையை கொண்டுவர முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய பெண்ணொருவர் இன்று (14) சுங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக சிகரெட் தொகையை கொண்டுவர முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய பெண்ணொருவர் இன்று (14) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பிய கண்டியைச் சேர்ந்த குறித்த பெண், காலை 6.15 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9cb667-3998-4452-8f51-a6bfd50c9987/26-6a7ec4fa3c83a.webp' /></p><p>
</p><p>


குறித்த பெண் வெளியேற முற்பட்டபோது சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.



அவரது நான்கு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 35,200 சிகரெட்டுகள் அடங்கிய 176 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் ரூ.5.28 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.



சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து சிகரெட் தொகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப வன்முறையில் பறிபோன 23 வயது பெண்ணின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-of-a-23-year-old-woman-domestic-violence-1786691239"></link>
            <id>https://jvpnews.com/article/murder-of-a-23-year-old-woman-domestic-violence-1786691239</id>
            <summary type="text">&amp;nbsp; கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடபாத பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) இரவு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடபாத பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) இரவு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

சம்பவத்தில் பொல்ஹேன பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be3acdd-8977-4310-a5bd-c22716dbc207/26-6a7ebea8b27a1.webp' /></p><p>

 பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் ஆடிப்பூரம் இன்று; பெண்கள் இதை செய்ய மறக்காதீர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409"></link>
            <id>https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்படுகிறது.
</p><p>
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c04f2-e7da-4198-8461-d5a34624121a/26-6a7ea3fb3a80d.webp' /></p><h2>&nbsp;அம்மனுக்கு வளைகாப்பு&nbsp;</h2><p> </p><p>

பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.</p><p> 

ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e35a20-effc-4b5b-be4f-93b61f06419e/26-6a7ea3fbe94c0.webp' /></p><p> </p><p>உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். 

சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். </p><p>

அது மட்டுமல்லாமல் ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9abb61-7fa4-4420-af95-3583ec01e867/26-6a7ea3fca1204.webp' /></p><p>
</p><p>
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
</p><p>
 பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்</p>]]></content>
            <updated>2026-08-14T07:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது துப்பாகிச்சூடு; 20 வயதுடைய இளைஞர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weeraketiya-house-gun-fired-youth-injured-1786690047"></link>
            <id>https://jvpnews.com/article/weeraketiya-house-gun-fired-youth-injured-1786690047</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அம்பாந்தோட்டை வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அம்பாந்தோட்டை வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
காயமடைந்த நபர் உடனடியாக வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8962e28-d864-49cf-9a83-c083d0ff5416/26-6a7eba0196280.webp' /></p><p> </p><p> 

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வீரகெட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை பகிர்ந்த நபர் ; செய்த மோசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-nude-photography-whatsapp-man-arrest-1786689100"></link>
            <id>https://jvpnews.com/article/woman-nude-photography-whatsapp-man-arrest-1786689100</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வட்ஸ்அப் ஊடாகப் பகிர்ந்த சந்தேகநபர் ஒருவர் ஆணமடுவை பொலிஸ் பிரிவில் வைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வட்ஸ்அப் ஊடாகப் பகிர்ந்த சந்தேகநபர் ஒருவர் ஆணமடுவை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, அப்பிரிவின் அதிகாரி குழுவினால் நேற்று (13) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693f202e-3c58-4680-8435-f2c596d4b84d/26-6a7eb64d93d55.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் மாம்பூரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spider-woman-hopped-around-selling-drugs-ampara-1786688540"></link>
            <id>https://jvpnews.com/article/spider-woman-hopped-around-selling-drugs-ampara-1786688540</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
40 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், நீண்டகாலமாக 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266e3257-d928-4b2b-aaf6-76528d4d24fc/26-6a7eb41ddb258.webp' /></p><h2>&nbsp;மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர்&nbsp;</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்ய முற்பட்டபோது, மாடிகளிலிருந்து தொடர்ச்சியாகக் குதித்ததன் காரணமாக பெண்ணின் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணை போதைப்பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T06:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599"></link>
            <id>https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றின் திறந்த நீதிமன்றக் கூண்டிற்குள் வைத்து, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5169610d-f830-488e-8fa7-e2b5b030ab70/26-6a7eacb9b8bd6.webp' /></p><p>

இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த அவரை, விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்தது. </p><p>

அதன் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T05:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333"></link>
            <id>https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>

இதன்போது உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/261182ce-9cc2-4de8-b59b-96214c581ff0/26-6a7ea796db117.webp' /></p><p>



புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகநேசனின் ஏற்பாட்டில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
</p><p>


 உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>


நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T05:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

நணபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.</p><p>

நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97417d93-a68d-45e7-be45-c68d30e491ad/26-6a7ea6795e030.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தியாவின் பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T05:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வேலை செய்து சொத்து குவித்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343"></link>
            <id>https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e58f20-db79-4c35-821f-4e477f254778/26-6a7e9fd18d707.webp' /></p><p>
குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள்,</h2><p>&nbsp; &nbsp;ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி- 14 இலட்சம் ரூபாய்</p><p> 

06 வங்கிக் கணக்குகளில் இருந்த பணம்- 59 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் 03 கடைகள்- 225 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மேலும் ஒரு கடை- 75 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணி - 200 இலட்சம் ரூபாய் </p><p>

இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலேயே பெறப்பட்டவை என விசாரணைகளில் தெரிவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:53:20+00:00</updated>
        </entry>
    </feed>
