<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T07:28:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' நிறுவனத்தின் கடற்படையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் திட்டில் நபர் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12109707-4025-468e-a403-f9f1bc2eecd5/26-6aa4fbd1a35a2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p style="text-align: justify;">தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அச்சிறுவன் தென்னிந்தியப் பகுதியிலிருந்து படகு மூலம் வருகை தந்து, வழியறியாமல் மணல் திட்டில் சிக்கியது கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify;">

மீட்கப்பட்ட சிறுவன் கடற்படையினரால் 'தம்மென்னா' முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அச்சிறுவனை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி ஆலயத்தில் நள்ளிரவில் சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று&nbsp; இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3308bc-c33e-407d-afc0-9b008a0ac8b0/26-6aa4d61906cf4.webp' /></p><h2 style="text-align: justify; ">இரவு பூஜை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify;">

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். </p><p style="text-align: justify;">

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T07:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய பங்களதேஷ் இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665"></link>
            <id>https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தீர்வையின்றி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e6ea68-2ab3-430e-96b9-c481cd4ed364/26-6aa4f592e8c93.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து தீர்வையின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10,200 சிகரெட்டுகள் (51 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் பங்களதேச நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T06:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-expected-in-jaffna-and-nearby-areas-1789194618"></link>
            <id>https://jvpnews.com/article/changes-expected-in-jaffna-and-nearby-areas-1789194618</id>
            <summary type="text">பாதுகாப்பான, மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நகர்ப்புறங்களை உருவாக்கும் நோக்கில், புதிய “வாழ்வாதார நகரங்கள்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதுகாப்பான, மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நகர்ப்புறங்களை உருவாக்கும் நோக்கில், புதிய “வாழ்வாதார நகரங்கள்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 65 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.</p><p style="text-align: justify; ">நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பிரத்தியேகத்திற்கு இணங்க, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இத்திட்டம் கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a517ee06-7dc7-49b2-a737-a915f650b1b6/26-6aa4f17c4675e.webp' /></p><h2 style="text-align: justify; ">10 நகரங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

முதல் கட்டத்தின் கீழ், மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹலியகொட ஆகிய 10 நகரங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
நாடு முழுவதும் உள்ள 26 நகரங்களின் அபிவிருத்திக்காக ரூ. 65 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னேற்றத்தின் அடிப்படையில் மேலதிக ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">

"தேவையான நிதியை நாங்கள் ஏற்கனவே ஒதுக்கிவிட்டோம். நாளைய தினம் முதல் பணிகளைத் தொடங்குங்கள்," என்று உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம் ரத்நாயக்க கூறினார். மேலும், மேயர்கள் வெளிப்படுத்தும் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நகர மேம்பாடு என்பது கட்டிடங்களைக் கட்டுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது என்றும், நகரங்கள் விலங்குகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பையும், தாங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் அமரசூரிய வாதிட்டார்.</p><p style="text-align: justify; ">

இலங்கையின் நகர்ப்புறங்கள் பெரும்பாலும் முறையான திட்டமிடல் இன்றி வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மக்கள் தொகையில் 44.5% அத்தகைய பகுதிகளில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.
</p><p style="text-align: justify; ">
இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வெளிப்படையான மதிப்பெண் வழங்கும் முறையின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு நகரத்தின் தனித்துவமான அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

"ஒரு நகரம் என்பது கான்கிரீட் காடு அல்ல," என்று கூறிய அவர், நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இருவரையும் வளர்ச்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
தொடக்க விழாவின்போது, ​​முதல் 10 நகரங்களுக்கான திட்ட வரைவுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

இந்தத் திட்டம் மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும். மேலும், ஒவ்வொரு நகரத்திற்குமான தனிப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T06:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இணையும் தமிழக முதல்வர் விஜய், நடிகர் அஜித் ; சினிமா வரலாற்றில் நடக்காத நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-and-ajith-to-reunite-in-london-1789192697"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-and-ajith-to-reunite-in-london-1789192697</id>
            <summary type="text">லண்டனில் இன்று நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இந்தப் போட்டியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனில் இன்று நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். </p><p style="text-align: justify; ">இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c34da9b-1ce9-43fc-9e6b-6b8eaf323f6c/26-6aa4e9fb590eb.webp' /></p><h2 style="text-align: justify;">அரசுமுறைப் பயணம்</h2><p>
</p><p style="text-align: justify;">


தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நேற்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.
</p><p style="text-align: justify;">


அவருக்கு விமான நிலையத்தில் பிரிட்டன் தமிழ் சங்கத்தின் தலைவர்&nbsp; உள்ளிட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">&nbsp;தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே அவரது பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


இந்நிலையில், இன்று சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்குச் செல்லும் விஜய், அங்குள்ள பந்தயச் சுற்றுப்பாதை, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நேரில் பார்வையிடவுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்தப் போட்டி இன்று இரவு 9.45 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 11.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கு முன்னால் அரங்கேறிய படுகொலை ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-unfolds-right-outside-the-home-1789191013"></link>
            <id>https://jvpnews.com/article/murder-unfolds-right-outside-the-home-1789191013</id>
            <summary type="text">மஹியங்கனை, அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹியங்கனை, அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

10 ஆம் திகதி இடம்பெற்ற இக் குற்றச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b55e44b-f8a3-43b9-84d2-11ecb39cb492/26-6aa4e366d6ac8.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
10 ஆம் திகதி அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் வைத்து நபரைத் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுச் சந்தேகநபர் தப்பியோடியிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T05:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262"></link>
            <id>https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6835ed0-58b6-47bb-8d74-1e4e2a7cfa91/26-6aa4e0782943c.webp' /></p><h2>போராட்டம்</h2><p> </p><p>

அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. </p><p>

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T05:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-issued-for-teachers-1789188564"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-issued-for-teachers-1789188564</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்கள், வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6121687-4d81-4e9f-9c4b-a054115f668c/26-6aa4da3f5c587.webp' /></p><h2 style="text-align: justify; ">தடைத்தாண்டல் பரீட்சை</h2><p style="text-align: justify; "> 

இருப்பினும், இந்தத் தடைத்தாண்டல் பரீட்சையை அடுத்த தரமுயர்வைப் பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

தான் தரம் உயர்த்தப்பட்ட தரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய வினைத்திறன் தடைத்தாண்டலை அடுத்த தரமுயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தரமுயர்வு பெற்ற அதிகாரிகளை, அத்தகைய முந்தைய தரத்தின் வினைத்திறன் தடைத்தாண்டலைப் பூர்த்தி செய்யும் தேவையிலிருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

2025/06/30 திகதி முதல் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தாம் சார்ந்த தரத்திற்குரிய வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தரமுயர்வைப் பெறும் அதிகாரிகளுக்கும், தொகுதிகள் (Modules) / வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதைக் கவனத்திற் கொள்ளாது தரமுயர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;முதலாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2494 மற்றும் 2026/06/19 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும்,</p><p style="text-align: justify; "> இரண்டாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2498 மற்றும் 2026/07/17 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும்,</p><p style="text-align: justify; ">

 

மூன்றாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2503 மற்றும் 2026/08/21 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் பரீட்சைகள் நடைபெறும். </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்தி கல்விச் சுற்றறிக்கையொன்று எதிர்காலத்தில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. </p><p style="text-align: justify; ">

இலக்கம் 2444/21 மற்றும் 2025/07/08 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T04:49:28+00:00</updated>
        </entry>
    </feed>
