<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T15:32:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178"></link>
            <id>https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178</id>
            <summary type="text">குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18ad013-d173-4c2f-9738-67e771a50db9/26-6a75dcfc09d56.webp' /></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்&nbsp;</h2><p>&nbsp;நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.</p><p>பல்லன்சேன சிறைச்சாலை கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பின்னர், பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முதியவர் செய்த விபரீத செயலால் வந்த வினை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த இரவு குடும்பத்தில் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி திரவத்தைக் குடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf6db2-4f2d-4654-bb0b-33b17ee921c0/26-6a75d8c9cecff.webp' /></p><h2>&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>&nbsp;மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் ; விவகாரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p style="text-align: justify;">பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p style="text-align: justify;">
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T13:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸ் மா அதிபருடன் வாக்குவாதம் ; இறுதியில் வசமாக பிடிபட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argument-with-police-chief-in-ampara-1786106909"></link>
            <id>https://jvpnews.com/article/argument-with-police-chief-in-ampara-1786106909</id>
            <summary type="text">அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f91a78-18c5-42a5-b840-3972298e9206/26-6a75d41f27d9d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்காமல் ஆவணங்களை மட்டும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "> சட்டமீறல் தொடர்பில் அபாரதப் பத்திரம் வழங்க பொலிஸார் முற்பட்டபோது, சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அங்கிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலையிட்டு, பொலிஸாரிடம் தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமல் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்குமாறு அறிவுறுத்திய போதிலும், சாரதி பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனையடுத்து, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குறித்த சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; ">சந்தேகநபரின் சீரற்ற நடத்தையை அடுத்து, அவர் அம்பாறை பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T13:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லங்களை வீடியோ பதிவு செய்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-for-filming-top-officials-homes-1786105432"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-for-filming-top-officials-homes-1786105432</id>
            <summary type="text">கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
சந்தேக நபர் வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்திய கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0337c5d0-cf0d-4f89-b9e3-1d4f406bd08d/26-6a75ce59459e7.webp' /></p><h2 style="text-align: justify; ">வீடியோ பதிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நேற்று (6) பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர், சொகுசு வாகனமொன்றில் வந்த நபரொருவர் வீதியோரத்தில் நின்றவாறு இல்லத்தை வீடியோ பதிவு செய்வதை அவதானித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பின்னர், சந்தேக நபரின் செயற்பாடு குறித்து அருகில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகபூர்வ அதிகாரியிடம் தெரிவிக்கவே, அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குருந்துவத்தை பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைப்பேசியைச் சோதனையிட்டபோது, பொலிஸ் மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம், அதனைச் சுற்றியுள்ள வீதி, பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சூழல் ஆகியவற்றை வீடியோ எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, பொழுதுபோக்கிற்காகவே தான் இவ்வாறு வீடியோ பதிவு செய்ததாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளின்போது தனது வசிப்பிடம் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து அவர் முரணான தகவல்களை வழங்கி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் அழுபோமுல்ல - அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குருந்துவத்தை பொலிஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T13:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடிக்கும் மோதல்கள் ; யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tight-security-measures-at-jaffna-prison-1786104337"></link>
            <id>https://jvpnews.com/article/tight-security-measures-at-jaffna-prison-1786104337</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e0cc2e-f616-46f6-94e8-55ceec49ae8a/26-6a75ca1363db9.webp' /></p><h2>அமைதியின்மை&nbsp;</h2><p>
</p><p>
அண்மையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அவற்றின் தாக்கம் ஏனைய சிறைச்சாலைகளிலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T12:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; சந்தேகநபர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-suspect-count-rises-further-1786103043"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-suspect-count-rises-further-1786103043</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (07) நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/386ab277-330a-44e0-905b-6b0286152283/26-6a75c5050cbb3.webp' /></p><h2 style="text-align: justify; ">பெயர் பட்டியல்</h2><p style="text-align: justify; ">

 

இதற்கமைய, ஏற்கனவே பெயரிடப்பட்ட 38 சந்தேகநபர்களுடன் இன்று பெயரிடப்பட்ட 24 பேரையும் சேர்த்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான பெயர் பட்டியலையும் 'பி' அறிக்கையையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேரடியாக நீதவானிடம் ஒப்படைத்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், சந்தேகநபர்களான 38 பேரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; ">

 

இது தவிர, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களையும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் 62 சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றம், நெரிப்படைச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T12:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22nd-amendment-bill-published-in-official-gazette-1786102121"></link>
            <id>https://jvpnews.com/article/22nd-amendment-bill-published-in-official-gazette-1786102121</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/913f6bdd-4f72-4dc0-9c35-d4a65fefd5e1/26-6a75c16b74195.webp' /></p><h2 style="text-align: justify; ">அரசியலமைப்புத் திருத்தம்</h2><p> </p><p style="text-align: justify; ">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை அடையும் போது அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் போது (எது முந்துகிறதோ அதற்கேற்ப) ஓய்வுபெறுவார் என்றும் இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T11:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை ; நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/landslide-warning-issued-for-four-districts-1786100207"></link>
            <id>https://jvpnews.com/article/landslide-warning-issued-for-four-districts-1786100207</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளைப் புது...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளைப் புதுப்பித்துள்ளது. </p><p style="text-align: justify;">


அதன்படி, மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தின் கீழும், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய பிரதேசங்கள் முதல் கட்டத்தின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502afd3e-f46e-446c-8807-176dc12afcbb/26-6a75b9f2700e2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மண்சரிவு எச்சரிக்கை</h2><p style="text-align: justify;"> 

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரல பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் தொளுவ, பன்வில, மெததும்பறை, உடபலாத்த, கங்க வட்ட கோரளை, உடுதும்பறை மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகங்களும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களும் முதல் கட்ட எச்சரிக்கையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

எனவே, இப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானத்துடன் செயற்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T11:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்ற வளாகத்தினுள் பொலிஸார் செய்த செயல் ; தவிசாளருக்கு மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-activity-inside-court-raises-questions-1786099573"></link>
            <id>https://jvpnews.com/article/police-activity-inside-court-raises-questions-1786099573</id>
            <summary type="text">தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்பட்டால் , ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்பட்டால் , கைது செய்வோம் என தவிசாளரை பொலிஸார் மிரட்டியுள்ளனர். </p><p>

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e84c087e-9a59-41c0-b87c-835c90add740/26-6a75b776e6099.webp' /></p><h2>முறைப்பாடு</h2><p> </p><p>

அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் மன்று வழக்கில் இருந்து முற்றாக விடுவித்துள்ளது.
</p><p>
அந்நிலையில் தவிசாளர் நீதிமன்றுக்கு வெளியே வந்த போது, காங்கேசன்துறை பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் , வீதியை விடுவிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். </p><p>மீறி அதற்கான நடவடிக்கையை எடுத்தால் , கைது செய்வோம் என தவிசாளரை மிரட்டியுள்ளனர். </p><p>

பொலிஸார் தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து , எதிர் தரப்பினரை வழக்கில் இருந்து விடுவித்த போதிலும் , நீதிமன்றுக்கு வெளியே தவிசாளரை குறித்த வழக்கு தொடர்பில் மிரட்டியுள்ளமை , நீதிமன்ற அவமதிப்பாகவும் , நீதித்துறையில் பொலிசாரின் தேவையற்ற தலையீடு தொடர்பில் விசனம் எழுந்துள்ளது.</p><p> 

அதேவேளை தன்னை மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் விரைவில் வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704"></link>
            <id>https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704</id>
            <summary type="text">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 ஆம் திகதி 11 பத்திரிகைகளை மேலதிகமாக வெளியிடுவதுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 1,748,877.76 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e21f0d-f109-44a7-8977-effc68e7bfdb/26-6a75b02a2b2c8.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, 17 இலட்சத்துக்கும் அதிக தொகையை அரசாங்கத்திற்கு நட்டப்படுத்தியமை ஊடாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-07T10:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெளிநாட்டவரின் மோசமான செயல் ; விரட்டி பிடித்த பொது மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1459ba0-a70f-45ca-8a08-3b52e58d9962/26-6a75a81885cb8.webp' /></p><p style="text-align: justify;">சந்தேகநபர் வீதியில் சென்ற ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனினும், அவரை துரத்திச் சென்ற உள்ளூர் நபர் ஒருவர் பிடித்து, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



குறித்த நபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்து நிற்கும் காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது.&nbsp; </p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் செய்த விபரீத செயல் ; இதற்காகவா இப்படி? துயரில் கதறும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea718b1d-fc2d-4d5c-af5e-c070ba750299/26-6a757c1260baa.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p style="text-align: justify; ">
தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:19+00:00</updated>
        </entry>
    </feed>
