<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T08:38:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறையை தூண்டிய குழுக்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981"></link>
            <id>https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981</id>
            <summary type="text">குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், வன்முறையின் போது கைதிகளால் சிறைச்சாலைக் கூரைகள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சிறைகளில் கைதிகளைத் தங்கவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இரத்தினபுரிப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் இன்று (08) சிறைச்சாலையில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, வன்முறையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், குறித்த சிறைச்சாலையில் பார்வையாளர் அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tunisian-tourist-dies-while-surfing-1786263092"></link>
            <id>https://jvpnews.com/article/tunisian-tourist-dies-while-surfing-1786263092</id>
            <summary type="text">வெலிகம கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>இன்று (09) காலை வெலிகம பழைய கடை கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் சடலம் கரை ஒதுங்கியதாக வெலிகமப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>பழைய கடை கடற்கரையில் நேற்று (08) துனிசிய சுற்றுலாப் பயணிகள் குழு அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் பலத்த காற்று காரணமாக கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது கடல் அலையில் சிக்கி குறித்த சுற்றுலாப் பயணி காணாமல் போனதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>காணாமல் போன சுற்றுலாப் பயணியைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர் காப்பாளர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தனியார் மூழ்குநர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.</p><p>இதனைத் தொடர்ந்து, இன்று காலை பழைய கடை கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>இச்சம்பவம் குறித்து வெலிகம தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் 22 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-year-old-man-killed-in-accident-1786262389"></link>
            <id>https://jvpnews.com/article/22-year-old-man-killed-in-accident-1786262389</id>
            <summary type="text">கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.</p><p>மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உச்சம் தொட்ட டெங்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-reaches-a-peak-in-sri-lanka-1786262003"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-reaches-a-peak-in-sri-lanka-1786262003</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.</p><p>அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T07:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தலைவர் மொஜ்தபா கமேனி; சர்வதேசத்திற்கு ஈரான் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-leader-mojtaba-khamenei-fine-iran-1786260256"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-leader-mojtaba-khamenei-fine-iran-1786260256</id>
            <summary type="text">ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.&amp;nbsp;அவரது உடல்நிலை மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><h2>ஈரான் ஊடகம்&nbsp; &nbsp;காணொளி</h2><p>இவ்வாறு செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து ஈரான் ஊடகம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்ததிலிருந்து கமேனி ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை.</p><p>இந்த குறுகிய, காணொளியில் கமேனி தனது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காணொளியில் அவர் அமைதியாகவும் நல்ல உடல்நிலையுடனும் தோற்றமளிக்கிறார்.</p><p>இந்த காணொளியை பகிர்ந்த மெஹர் செய்தி நிறுவனம், உயர்மட்டத் தலைவரின் இத்தகைய காட்சிகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.</p><p>இந்த காணொளி எப்போது அல்லது எங்கு படமாக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-09T07:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&amp;nbsp; கடந்த&amp;nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;கண்டி மாவட்டத்தைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&nbsp; கடந்த&nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.</p><p>இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.&nbsp;</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.மாணவியின் மரணம்அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T07:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் தொடர் நிலநடுக்கங்கள்; அச்சத்தில் வீதிகளில் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/series-of-earthquakes-in-maharashtra-1786259941"></link>
            <id>https://jvpnews.com/article/series-of-earthquakes-in-maharashtra-1786259941</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, நேற்று (08) இரவு 10 மணியளவில் நாசிக் மாவட்டத்தில் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. </p><h2>வீடுகளின் சுவர்களில் விரிசல்கள்&nbsp;</h2><p>இதனைத் தொடர்ந்து நேற்று (09) அதிகாலை 5.33 மணியளவில் 3.3 ரிச்டர் அளவிலான நில அதிர்வும் பதிவாகியுள்ளது.</p><p>மகாராஷ்டிரா – குஜராத் எல்லைக்கு அருகிலுள்ள ஹட்காட் மலைத்தொடரை அண்டிய பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நாசிக் நகரம் மற்றும் சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி, நிபாட் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.</p><p>சுர்கானா தாலுகாவில் உள்ள பாதர் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நானாஷி ஆகிய கிராமங்களில் சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. அப்பகுதியில் உள்ள அணைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், வதந்திகளை நம்பாமல் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவர்ச்சிகரமான பெண்களில் மயங்க வேண்டாம்; சமூக ஊடகங்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216"></link>
            <id>https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216</id>
            <summary type="text">இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>பாதிக்கப்படுபவர்களின் விபரங்களை முன்னதாகவே திரட்டும் மோசடிக்காரர்கள், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் 'Hi' என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி பேச்சை ஆரம்பிக்கின்றனர்.</p><p>சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.</p><p>எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகள் பழமையான முறைமையை மாற்றும் நிதி அமைச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956"></link>
            <id>https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.ஆங்கில ஊடகம்&amp;nbsp; ஒன்று வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.</p><p>ஆங்கில ஊடகம்&nbsp; ஒன்று வெளியிட்டுள்ள தகவல்படி, அரச நிறுவனங்களுக்கான வேதன முறைமையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கான கொள்முதல்" (Procurement of Design&gt; Development and Implementation of a Payroll System for Government Organizations) என்ற கேள்விப்பத்திர அறிவிப்பை நிதியமைச்சின் மாநிலக் கணக்குகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>தற்போதைய ஜி.பி.எஸ் முறைமை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>இது அமைச்சகங்கள், திணைக்களங்கள், சிறப்புச் செலவின அலகுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சில சட்டபூர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p>தற்போதைய முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.</p><p>இதன் பலவீனமான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளுதல்கள் மற்றும் வேதனம் தொடர்பான மோசடி அபாயங்களுக்கு உட்படுத்துகின்றன, இது அரசு நிதிக்கூறுகளின் நம்பகத்தன்மையை மற்றும் செயல்திறனைக் குலைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், தற்போதைய முறைமையில் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் வேதன முகாமைத் தளமாகச் செயற்படத் தேவையான நெகிழ்வுத்தன்மையும் அளவிடக்கூடிய தன்மையும் இல்லை, இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் தடைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வேதன செயலாக்க முறைமைக்கு மாறுவதற்கான தேவை அவசரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சூரிய கிரகணம் ;121 ஆண்டுகளுக்குப் பின் இருளில் மூழ்கும் நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/totalsolar-eclipse-europe-darkness-after-121-years-1786252967"></link>
            <id>https://jvpnews.com/article/totalsolar-eclipse-europe-darkness-after-121-years-1786252967</id>
            <summary type="text">ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக&amp;nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.1905ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக&nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு, வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:44:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டும் மழைக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-exam-amidst-pouring-rain-1786251576"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-exam-amidst-pouring-rain-1786251576</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p>நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை முதலே கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாது, மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.&nbsp;</p><p>மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். </p><p>மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட 'சிசு செரிய' பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-08-09T04:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-warning-for-fishermen-weather-alert-1786251247"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-warning-for-fishermen-weather-alert-1786251247</id>
            <summary type="text">நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert)...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><br></p><p><br></p><p><br></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் தற்காலிகமாகக் கொந்தளிப்பாக மாறக்கூடும். எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-09T04:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-2026-1786250400"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-2026-1786250400</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை&amp;nbsp; &amp;nbsp;(9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை&nbsp; &nbsp;(9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.</p><p>பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.</p><p>பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.</p><p>அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக&nbsp;&nbsp;இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, 0113 - 66 81 19, 0113 - 66 80 26, 0113 - 66 80 32 மற்றும் 0113 - 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-09T04:55:41+00:00</updated>
        </entry>
    </feed>
