<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T05:37:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு; 17 வயது மாமா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846"></link>
            <id>https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

சிறுமியை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற மாமா, மீன் காட்டுவதாக கூறி, ஆட்களற்ற பற்றைக்குள் அழைத்து சென்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4131ca4-e0c6-4ac4-8316-f3fc0a164291/26-6a6c2b37b6831.webp' /></p><p>
</p><p>
சிறுமி இது பற்றி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணக் கொள்ளை வழக்கு ; முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-former-police-officers-sentenced-to-prison-1785473342"></link>
            <id>https://jvpnews.com/article/two-former-police-officers-sentenced-to-prison-1785473342</id>
            <summary type="text">தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>

நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08abb574-ba41-4c76-b91c-4281f84ee8ef/26-6a6c29404cca9.webp' /></p><p>
</p><p>
கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியன் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-secretly-records-video-of-prison-bus-1785473209"></link>
            <id>https://jvpnews.com/article/woman-secretly-records-video-of-prison-bus-1785473209</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்த இரு குழந்தைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்த இரு குழந்தைகளின் தாயை வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உடுகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹிதும ஹல்விட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce54fa8f-cd69-438f-954e-a898653b11f3/26-6a6c294340533.webp' /></p><h2>&nbsp;பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்</h2><p>
</p><p>


உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று தனது கைப்பேசியைக் காகிதத்தினால் மறைத்துக்கொண்டு இரகசியமாகச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்&nbsp; &nbsp;பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக&nbsp; &nbsp;சிறைச்சாலை பேருந்தைக் கைப்பேசியில் காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>&nbsp;பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



உடுகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த கன்னங்கரவின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-31T04:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதியோர்களுக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் ; அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக முந்நூற்று பத்து கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபா (3,108,190,000) நிதியும், 



இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக முப்பத்து எட்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சத்து இருபதாயிரம் ரூபா (386,620,000) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51f08ab-a3f7-4346-bdec-fef041e71ff7/26-6a6c259be3be6.webp' /></p><p>



இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்து எட்டு இலட்சத்து பத்தாயிரம் (3,494,810,000) ரூபா வழங்கப்படவுள்ளது.
</p><p>


பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ; தலைமை அதிகாரியின் சாட்சிக்கு நீதிமன்றம் இரகசிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை சிறை அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><p></p><p>



நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.
</p><p>


சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46e9568-e4d4-4e82-853c-6417c16d2daf/26-6a6c22bcbb41f.webp' /></p><p>பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை நீடித்துள்ளது.</p><p>சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவித்த நீதவான், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>


அத்தகவல்கள் வெளிவரக் கூடுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அச்சாட்சியின் உள்ளடக்கங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



மேலும், அச்சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற 89 சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>



இவற்றுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான அறிக்கையொன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை துறைமுகம் வருவாயில் புதிய சாதனை ; ரூ.958 மில்லியன் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.</p><p></p><p>

இதன்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் துறைமுகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை துறைமுக இருப்பிட முகாமையாளர் சரத் குமார, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் துறைமுகத்தின் செயற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78af8d88-2956-4e8b-8331-becd414a2b06/26-6a6c1f905d19a.webp' /></p><p>அவரது விளக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் திருகோணமலை துறைமுகம் 1,192 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 958 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.
</p><p>
துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் வருவாய் உயர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073</id>
            <summary type="text">மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e71b1d0-7bba-4822-9428-c89392ed43db/26-6a6c1c7aa2ecb.webp' /></p><p>

அதன்படி, இன்று உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைகள் உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு பீப்பாய் (Barrel) பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 89.69 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 84.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417"></link>
            <id>https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e9f63a9-34f9-4ee4-a2c3-2d0359303bf5/26-6a6c19eaa7a8e.webp' /></p><p>பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
</p><p>
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இருவேறு காலநிலை ; மழையும் வெயிலும் ஒரே நாளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874"></link>
            <id>https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c1d8c2-a03b-44ae-b7ce-03cc82fcaa1b/26-6a6c13e406ec1.webp' /></p><p>அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, பலத்த மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் உணவகத்தில் தங்கியிருந்த இருவரிடம் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.
</p><p>
 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,</p><p>கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a297782-052d-42f0-9dc4-04273cc3f694/26-6a6c11165d5ec.webp' /></p><p>

 

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p>

 

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>
 

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
</p><p>
 

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார். </p><p>

 

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T03:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் கருக்குளவி தாக்குதல் ; 67 வயது முதியவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/67-year-old-man-dies-a-stabbing-attack-in-jaffna-1785466664"></link>
            <id>https://jvpnews.com/article/67-year-old-man-dies-a-stabbing-attack-in-jaffna-1785466664</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>
</p><p>
கிடைத்த தகவல்களின் படி, சம்பவத்தன்று அவர் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு பனை வெட்டும் பணிக்காகச் சென்றிருந்தார். அப்போது கருக்குளவி கூட்டின் தாக்குதலுக்கு உள்ளாகி பல இடங்களில் கொட்டுக்காயங்களுக்கு ஆளானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e01f8d-0e9f-4478-bc1c-04584fb5c3eb/26-6a6c0f299be34.webp' /></p><p>

இதையடுத்து, அவரது மகன் உடனடியாக அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்தார். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
</p><p>
எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காமல், அவர் நேற்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனையும் மரண விசாரணையும் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-31T02:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் சுக்கிர திசை ; இந்த ராசிகளுக்கு அமோக வாழ்வு காத்திருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-opens-a-lucky-phase-for-these-signs-1785459848"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-opens-a-lucky-phase-for-these-signs-1785459848</id>
            <summary type="text">ஆகஸ்ட் ஒன்றாம் திகதி சுக்கிர பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் உடைய இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வத்தை கொடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் ஒன்றாம் திகதி சுக்கிர பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் உடைய இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வத்தை கொடுக்க போகிறது.</p><p> 

ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். மேலும், சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றிக் கொண்டிருக்கிறார். சுக்கிர திசை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்க போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc511bcd-7d36-4c9a-87c4-9babc66596c0/26-6a6bf489ded18.webp' /></p><p>
</p><h2> எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
</h2><p><b>
ரிஷபம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் இருந்த கவலைகள் விலகப் போகிறது. முகம் பொலிவாக தோற்றமளிக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரம் அமையும்.</p><p></p><p>
</p><p><b>
மிதுனம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவி மற்றும் வாழ்க்கை துணையுடன் நல்ல நேரம் செலவழிப்பார்கள். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். தந்தை முழு ஆதரவு கொடுப்பார்.</p><p></p><p>
</p><p><b>

தனுசு:
</b>இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பணியில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு நகை மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியே நல்ல உதவியை பெறுவீர்கள். நீண்ட நாட்கள் மனதில் இருந்த மந்த தன்மை விலகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T01:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் ஈழத்தமிழ்ப் பெண் மதுபோதையில் மீட்கப்பட்டதாகப் பரவும் செய்தி ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117"></link>
            <id>https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117</id>
            <summary type="text">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்கள்&nbsp; பகிரப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify;">இதன் உண்மைத்தன்மை பற்றி பிரெஞ்சு பொலிஸாரிடம் இருந்து பல தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b770e7-4c5f-4da1-ae72-d64ea69229a9/26-6a6be20e8d64d.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify;"> 

இந்தச் செய்தி பிரெஞ்சு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும் இது தொடர்பாக பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது துலூஸ் (Toulouse) நகர பிரதான ஊடகங்களோ (La Dépêche, Actu Toulouse போன்ற தளங்கள்) எந்தவொரு உத்தியோகபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை&nbsp;என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
இந்தச் செய்தி வதந்தியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.பிரான்ஸில் இத்தகைய உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் நடக்கும்போது,
 பாதிக்கப்பட்டவர் தொடர்பில் எது வித தகவல்களையும் பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது ஊடகங்களோ ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒருபோதும் பகிரங்கப்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">எனவே, சமூக வலைத்தளங்கள் அல்லது வெளிநாட்டு புலம்பெயர் ஊடகங்களில் மட்டுமே பரவி வரும் இந்தச் செய்திக்கு நம்பகத்தன்மை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> 

சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் புனையப்பட்டதாக கருதப்படும் இத்தகைய செய்திகளைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி ; காதலால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307"></link>
            <id>https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307</id>
            <summary type="text">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60656991-ed79-4090-8dde-c121e742183c/26-6a6be6b4673cb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனைப் பயன்படுத்தி சிறுமியுடன் நெருக்கமாகப் பழகிய சந்தேகநபர், அவரை காதல் வலையில் சிக்கவைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


கடந்த ஜூலை 5ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது, மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய இளம் ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் ; கடுமையாக்கப்படும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263</id>
            <summary type="text">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95b4513-378e-4411-a1bf-14275ee236ee/26-6a6b7f2b07a70.webp' /></p><h2 style="text-align: justify;">வர்த்தமானிப் பத்திரிகை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
 

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த ஷாக் ; பின்னணியில் பிரபல கட்சியின் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810"></link>
            <id>https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810</id>
            <summary type="text">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது,</p><p style="text-align: justify;">
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7e9f88-15c3-40b3-a9f5-96d469452ceb/26-6a6bec93dec28.webp' /></p><h2 style="text-align: justify;">சட்ட விரோத பொருள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p>

</p><p style="text-align: justify;">இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p style="text-align: justify;">
அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T00:55:14+00:00</updated>
        </entry>
    </feed>
