<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T17:44:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278</id>
            <summary type="text">தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da7c166c-b345-4d81-b440-42964f768e1c/26-6aad73d75ce7b.webp' /></p><p>தொடருந்து திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், தொடருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு உத்தரவிற்கான திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நீண்ட பரிசீலனைகளின் பின்னர் வாய்மொழிச் சமர்ப்பணங்களை முன்வைப்பது இன்று (18) நிறைவுற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49205dbf-e3dc-40e4-894a-44d258d1f7b2/26-6aad710e26d46.webp' /></p><p>இன்றைய தினம் மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் பதில் வாய்மொழிச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டன.</p><p> 

அதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> 

அதன் பின்னர், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற உத்தரவும் இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் தொடர்பான உத்தரவும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T16:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு ; இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226"></link>
            <id>https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ae1c6e-db96-414c-9196-b928f2d5e9c4/26-6aad640472f8e.webp' /></p><p> </p><p>

இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. </p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் புதிய பள்ளம்; நூற்றாண்டில் ஒரு முறை! நாசா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-crater-moon-once-century-event-nasa-1789736506"></link>
            <id>https://jvpnews.com/article/new-crater-moon-once-century-event-nasa-1789736506</id>
            <summary type="text">&amp;nbsp; நிலவின் மேற்பரப்பில் 222 மீட்டர் அகலம் கொண்ட புதிய விண்கல் பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி Research அமைப்பான நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நிலவின் மேற்பரப்பில் 222 மீட்டர் அகலம் கொண்ட புதிய விண்கல் பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி Research அமைப்பான நாசா கண்டுபிடித்துள்ளது.
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டில் விண்கல் ஒன்று நிலவின் மீது மோதியதன் காரணமாகவே இந்தப் பள்ளம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918eccab-bc6c-406d-89dc-78a5fa8cc104/26-6aad363ba9ced.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய நிகழ்வாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

நிலவில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த விண்கல் பள்ளத்திற்கு 'McGetchin' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவுக்கு புதிய அஞ்சல் அலுவலக கட்டடம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-post-office-building-opened-in-mullaitivu-1789737792"></link>
            <id>https://jvpnews.com/article/new-post-office-building-opened-in-mullaitivu-1789737792</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்தவகையில் அஞ்சல் அலுவலகத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், புதிய கட்டடமும் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcebe1c-bd36-450a-9f35-2d70d9f20ba2/26-6aad3b43012e2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து புதிய அஞ்சல் அலுவலக கட்டடத்தில் மக்களுக்கான அஞ்சல் சேவைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e713087-80d7-47de-b513-520fa072cf96/26-6aad3b423fa33.webp' /></p><p></p><p> </p><p>

மேலும் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a395037-06c1-48ec-b3a5-6589f35af8a0/26-6aad3b43c303d.webp' />]</p>]]></content>
            <updated>2026-09-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை றிஷாட் பதியுதீனிடம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928</id>
            <summary type="text">&amp;nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நாளை (19) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b04152-d2d1-4f6d-a54f-f53e5547703e/26-6aad14ba36809.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை; மனோ கணேசன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-migrant-anojan-sentenced-saudi-1789738445"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-migrant-anojan-sentenced-saudi-1789738445</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கபட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கபட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்க்கு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661b68fe-802f-4022-bd91-48ea8d04f4ab/26-6aad3dceb0d47.webp' /></p><p> இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) அங்கத்தவ சகோதர கட்சி தலைவர்களிடம் கோரி உள்ளேன்.</p><p></p><p> </p><p>



இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். 



மேலும், இவ்விடயத்தை நமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தை சவூதி அரேபியா அரசிடம் எடுத்து செல்லுமாறும் கோருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் மரணதண்டனை ; கண்ணீருடன் மன்றாடும் அனோஜனின் தாயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739"></link>
            <id>https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனச் கதறி அழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (18) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். இதன் போது அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f92128-3c8c-4800-9047-19110a9da38c/26-6aad007568f60.webp' /></p><p></p><h2>எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான்</h2><p> </p><p>

 

"அவர் செய்தது தவறுதான்&nbsp; அதற்காக அவரும்&nbsp; மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை மன்னித்து, எனது மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம்" என்று கதறி அழுது கூறினார்.</p><p></p><p>

"எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில்தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம். அவருக்கு இந்த கதி என்றால் நாங்கள் நிர்க்கதியாகிவிடுவோம். செய்த தவறுக்கு இது மிகவும் பெரிய தண்டனையாக நினைக்கிறோம். தயவுசெய்து அவர் செய்த தவறை மன்னித்து, அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்துத்தாருங்கள்" என அனோஜனின் சகோதரர் கூறினார்.</p><p>


 ஊடக சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சகம் என்பவற்றோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகள் பற்றிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டன.
</p><p>
 அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், 

"இது மிகவும் வேதனைக்குரிய தருணமாகப் படுகின்றது.</p><p></p><p> </p><p>இது ஓர் உயிருக்கான போராட்டம். இதனையிட்டு நாங்கள் ஏற்கனவே எமது சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அமைச்சர் என்று பலருடனும் பேசியிருக்கின்றோம்; அவர்களும் இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த வேளையில் தேவையற்ற முகநூல் பதிவுகள், கூட்டங்கள், போராட்டங்களைத் தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே கோரிக்கை விடுத்து, அனோஜனை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். </p><p>இதற்காக எங்களது உச்சகட்ட ஆதரவைத் தருவோம்" என்றார்.

அச்சமயம், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஆலயத் தலைவர்கள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கை மாறியது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191"></link>
            <id>https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் இன்று (18) கையொப்பமிட்டனர் .</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. 

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f6572b-cde7-4f9a-9cab-03bc5166ba95/26-6aad2949542e7.webp' /></p><h2>அமைச்சரவை&nbsp; அனுமதி</h2><p> 

இலங்கை பாராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன்&nbsp;யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்&nbsp; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a9c680-472f-49d5-888c-6a643d8445e1/26-6aad294a0dbdd.webp' /></p><p> 

மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன், எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள் கையாளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32de268-9be9-43b5-8f52-04692a0dba45/26-6aad294abd7c6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T12:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் கடற்படை முன்னாள் வீரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-navy-sailor-arrested-narcotics-worth-10-million-1789734725"></link>
            <id>https://jvpnews.com/article/ex-navy-sailor-arrested-narcotics-worth-10-million-1789734725</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன், கடற்படையின் முன்னாள் வீரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன், கடற்படையின் முன்னாள் வீரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p><p>&nbsp; வெளிநாட்டில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய முக்கிய நபராகச் செயல்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a51054-0982-4ddd-b7dd-60b03501cf58/26-6aad2f46b6a1e.webp' /></p><p> </p><p>வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த சந்தேகநபர் பிடிபட்டார்.

விசேட அதிரடிப்படைக்கு&nbsp; கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​சந்தேகநபரிடமிருந்து 716 கிராம் ஹெராயின் மற்றும் 255 கிராம் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.</p><p></p><p> </p><p>

அத்துடன், ரஷ்யத் தயாரிப்பு 'மைக்ரோ' (Micro) ரக கைத்துப்பாக்கி, அதற்கான மேகசின் (magazine) மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டன.
</p><p>
கைது செய்யப்பட்ட 43 வயதான நபர், முன்னர் இலங்கை கடற்படையில் பணியாற்றி பின்னர் பணியிலிருந்து விலகிச் சென்றவர் ஆவார்; எனினும், 2025-ல் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் அவர் சட்டப்பூர்வமாக அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். </p><p>

பொலிஸாரின் விரிவான விசாரணையின் போது, ​​தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள "துபாய் பிரியங்கர" (Dubai Priyankara) என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவராக இவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (Police Narcotics Bureau) ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T12:28:42+00:00</updated>
        </entry>
    </feed>
