<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T18:42:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a31f59-0005-469c-8bbb-6cd91a7937c7/26-6a610bf5430c4.webp' /></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:29:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714</id>
            <summary type="text">சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண்&nbsp; சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51b129d-866a-4cfe-9315-59f7115bc5b8/26-6a60ff53b1133.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் உயிரிழந்தவர் சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்காவின் கணவருடன் தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020</id>
            <summary type="text">&amp;nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.


ஜார்க்கண்ட் மாநிலம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">


ஜார்க்கண்ட் மாநிலம்&nbsp; ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753382e-0913-4c4e-9787-4db3e94f863c/26-6a60fc9e65790.webp' /></p><h2 style="text-align: justify;">கொடூரமாக&nbsp;கொலை </h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்,இளம் பெண்ணுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
</p><p style="text-align: justify;">

எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் இருக்க முடியாது என நினைத்து கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து எதிர்கால கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அதன்படி இளம் பெண் தனது வருங்கால கணவர் பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

இதை நம்பிய இளைஞன் குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து, குறித்த இளைஞனை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். 

பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர். </p><p style="text-align: justify;">

இதற்கிடையே காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T17:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதோ 22 .... ஆனால் 14 திருமணங்கள்; கல்யாண ராணியால் அதிர்ந்த பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992"></link>
            <id>https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bda548-fe67-46f0-a47b-1c16e81d376c/26-6a60ba1aec411.webp' /></p><p></p><h2>முதல்&nbsp; திருமணம் முறிந்ததால்&nbsp; தொடர் திருமணம்</h2><p>அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.</p><p></p><p> </p><p>

அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார். </p><p>

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a066d2-a33b-41ef-aa13-61db62ee5c04/26-6a60ba1ba0ee8.webp' /></p><p> 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். </p><p>

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். 

திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.</p><p></p><p> 

 ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.</p><p>மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.</p><p>இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.</p><p></p><h3>வெப் சீரியஸ்களைப் பார்த்து வந்த யோசனை</h3><p> </p><p>

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. </p><p>

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். </p><p>

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். </p><p>விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் 2 பெண்களுடன் கைதான நபர்கள் ; தங்கத்துடன் கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/men-arrested-with-two-women-at-hotel-1784739312"></link>
            <id>https://jvpnews.com/article/men-arrested-with-two-women-at-hotel-1784739312</id>
            <summary type="text">மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வத்தேகம ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வத்தேகம பொலிஸாரினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302d2735-7c81-4c40-a682-cd2b1a876a8b/26-6a60f5f2557b1.webp' /></p><p> 

கைதானவர்களில் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> 

இந்நிலையில் அவர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:55:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறுவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012"></link>
            <id>https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012</id>
            <summary type="text">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f089624-aeac-46f2-a3a1-0e0739b34b4d/26-6a60f0de50eb7.webp' /></p><h2 style="text-align: justify; ">டிஜிட்டல் கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0486d194-c9ac-42fe-a901-f7979591ebfd/26-6a60f210e96f0.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T16:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இரண்டு பெண்கள் உட்பட 7 இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914"></link>
            <id>https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914</id>
            <summary type="text">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0b6ec7-90ed-49de-b2eb-f1e124553f41/26-6a60e8ac5e0d9.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆட்கடத்தல் நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify; ">

தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவியுள்ளன. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரைத் தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இல்லாத காரணத்தினால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) ஆகியவற்றின் புலனாய்வு மற்றும் பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே 38 வயதுடைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவராக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் தலைமைப் பணிப்பாளர் டாதுக் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">

வேலை வாய்ப்புகள் மற்றும் பணி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணிபுரிவதற்காகவே பாதிக்கப்பட்ட பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">பாதிக்கப்பட்ட பெண் சம்பளம் வழங்கப்படாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், போதிய உணவு வழங்கப்படாமல் அவரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தலாக உடலிரீதியான வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாததால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102"></link>
            <id>https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102</id>
            <summary type="text">தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f1cbfc-d391-475b-a765-be92eaba6a09/26-6a60e5800ff73.webp' /></p><p> </p><p>

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது. </p><p>

அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு; 6 மாதங்களில் 9 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க,
</p><p>2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், பொருட்கள் மற்றும் சேவை ஆகிய இரு துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9,012.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9645bc-8fc2-4a6a-8127-6de5dd47c267/26-6a60c071a571a.webp' /></p><h2>அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம்</h2><p> </p><p>

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும். 

2026 இன் முதல் அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,073.31 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.95% அதிகரிப்பாகும். 

இக்காலப்பகுதியில் சேவை ஏற்றுமதித் துறையும் 4.49% வளர்ச்சியைப் பதிவு செய்து 1,938.94 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

2026 ஜூன் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,658.62 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12.53% வளர்ச்சியாகும். </p><p>

இதில் பொருட்கள் ஏற்றுமதி 1,314.10 மில்லியன் டொலர்களாகவும் (15.09% வளர்ச்சி), சேவை ஏற்றுமதி 344.52 மில்லியன் டொலர்களாகவும் (3.75% வளர்ச்சி) பதிவாகியுள்ளது.</p><p></p><p> 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மாணம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற அறிவுசார் சேவைத் தொழில்கள், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பல்வகைப்படுத்துவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. </p><p>

 உலகச் சந்தையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்தும் போட்டித்தன்மையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-22T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசா; கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424"></link>
            <id>https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.
</p><p>


இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:



மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61711919-6d55-4380-bae3-c21cd4fddb69/26-6a60c39a0e278.webp' /></p><p></p><p>
</p><p>


விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.</p><p>



பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.
</p><p>


எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகனுக்கு தடுப்பு காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033"></link>
            <id>https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன நாட்டுப் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க<a href="https://jvpnews.com/article/200-million-robbery-shantha-bandara-son-in-court-1784698325" target="_blank"> அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள்</a> தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சாந்த பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebb5f2f-752a-4050-9b69-6b1aa76dd639/26-6a60be2b78755.webp' /></p><p></p><p>

இன்னிலையில் சந்தேக நபரை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த&nbsp; &nbsp;பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76392451-15c0-4069-9ae1-179e8a5a9d37/26-6a60856b7c687.webp' /></p><p></p><h2>இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது</h2><p>
</p><p>


 இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

 அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:27:28+00:00</updated>
        </entry>
    </feed>
