<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T07:13:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனை உத்தியோகத்தர் மீது தாக்குதல்; சந்தேக நபர் தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hospital-staff-member-attacked-suspect-escapes-1785220745"></link>
            <id>https://jvpnews.com/article/hospital-staff-member-attacked-suspect-escapes-1785220745</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவின் உத்தியோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சிகிச்சை பிரிவில் மருத்துவருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, அவரை வெளியேறுமாறு பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96ab064-5568-4aa1-8e10-7364a72c1dba/26-6a684e8b8b466.webp' /></p><p>
</p><p>

 இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் குறித்த நபர் தாக்கியுள்ளதுடன், அதைத் தடுக்க வந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தள்ளிவீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்; இரு இளைஞர்கள் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-jumps-into-the-river-in-batticaloa-1785219269"></link>
            <id>https://jvpnews.com/article/woman-jumps-into-the-river-in-batticaloa-1785219269</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு - ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு - ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
</p><p>
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியுடன் கேட்டுள்ளார்.

அதற்கிணங்க முச்சக்கர வண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad883c01-23b0-4195-ac5d-3988e65d8f65/26-6a6848c803d43.webp' /></p><p></p><p>
</p><p>
இதனைக் கண்ட இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றினை எடுத்துக் கொண்டு பெண்ணை மீட்டுள்ளனர்.</p><p></p><p>மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad883c01-23b0-4195-ac5d-3988e65d8f65/26-6a6848c803d43.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T06:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-chaminda-wijesiri-sentenced-in-prison-1785219578"></link>
            <id>https://jvpnews.com/article/mp-chaminda-wijesiri-sentenced-in-prison-1785219578</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f896abd-6819-4a06-917f-a50843546a65/26-6a6849fb4a151.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:17:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-prices-fell-international-market-1785218891"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-prices-fell-international-market-1785218891</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளன.

அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளன.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,049.69 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.41 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1da7ff-937e-44dd-b841-e97eff03717f/26-6a68474c842b2.webp' /></p><p>&nbsp;இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் உள்நாட்டுத் தங்க விலையிலும் பிரதிபலிக்கக்கூடும் எனச் சந்தைத் தரப்புகள் எதிர்பார்க்கின்றன.
</p><p>
இருப்பினும், உள்நாட்டுத் தங்க விலைகளில் ஏற்படும் மாற்றம், நாணய மாற்று விகிதம் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அமையும்.</p>]]></content>
            <updated>2026-07-28T06:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் தாயும் மகளும் செய்த மோசமான செயல் - அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-and-daughter-arrested-1785210914"></link>
            <id>https://jvpnews.com/article/mother-and-daughter-arrested-1785210914</id>
            <summary type="text">அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மேலதிக விசாரணை</b></h2><p>மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சமூக ஊடக பதிவால் இலங்கையருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தகவல்களின்படி, கல்முனையில் இந்து பக்தர்களுடன் கதிர்காமம் நோக்கிப் பயணித்த நாயொன்றை நபரொருவர் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199f7a02-9f9b-4c04-8596-c9e3bf2c2076/26-6a6840df29131.webp' /></p><h2>இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்து</h2><p>

அதன் பின்னணியில், அனோஜன் என்ற தமிழர் ஒருவர் மற்றொரு மதத்தின் இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவூதி அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

இந்தத் தீர்ப்பு தொடர்பான தகவலை, அனோஜனின் சகோதரர் திங்கட்கிழமை (27) நண்பகலில் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 இந்தத் தீர்ப்பால் அனோஜனின் குடும்பத்தினர் கடும் மனவேதனையிலும் பாதிப்பிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் சவூதி நீதிமன்றம் அல்லது அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-28T05:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி; மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-vel-silver-chariot-procession-in-colombo-1785216086"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-vel-silver-chariot-procession-in-colombo-1785216086</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது ஆண்டின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி காரணமாக , வாகன சாரதிகளும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152 ஆவது ஆண்டின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி காரணமாக , வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
</p><p>

இன்று (28) காலை 7.30 மணிக்கு புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி , இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aecec7b-531e-4e1c-a22f-2087b2d32d84/26-6a683c5830b2c.webp' /></p><h2>மாற்று வீதிகளைப் பயன்படுத்த அறிவிப்பு</h2><p>
</p><p>
 ஆடிவேல் வெள்ளி ரத பவனி கொழும்பு செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, பிரதான வீதி, மணிக்கூட்டு கோபுரம் சந்தி, லைடன் பெஸ்டியன் வீதி , யோர்க் வீதி, பரன் ஜயதிலக்க மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியை சென்றடையும்.
</p><p>
அத்துடன் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி வழியே காலி வீதியில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி பயணிக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643dc9db-01cf-40a3-9a42-fb1a5b049abe/26-6a683c58e4593.webp' /></p><p>

பின்னர் இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

திரும்பிச் செல்லும் ஆடிவேல் வெள்ளி ரத பவனி ஜூலை 31 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை கடற்கரை வீதியில் உள்ள கதிரேசன் கோவிலை நோக்கிப் பயணிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab39d1d-d7fc-4cf7-a6b5-1adb1171be2c/26-6a683c59a377f.webp' /></p><p> </p><p>

இந்த ஆடிவேல் வெள்ளி ரத பவனி நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

எனவே குறிப்பிட்ட இந்த நேரங்களில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி செல்லும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T05:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attorney-rakitha-rajapaksha-bail-granted-1785215728"></link>
            <id>https://jvpnews.com/article/attorney-rakitha-rajapaksha-bail-granted-1785215728</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


அத்துடன் ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
</p><p>

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுள் ஒருவரான அருண வருணஹெண்ணதிகே ஆகிய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45c6984f-485d-48d5-a88e-220e13767a5a/26-6a683af2520fe.webp' /></p><p>

 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T05:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-one-fastest-growing-countries-world-1785215194"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-one-fastest-growing-countries-world-1785215194</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c85a1b3-3739-4032-b016-4ed06c2bf620/26-6a6838dba270b.webp' /></p><p> </p><p>

குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. </p><p>

இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சஜின் வாஸ் குணவர்தன முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajin-vas-gunawardena-summoned-to-corruption-1785212728"></link>
            <id>https://jvpnews.com/article/sajin-vas-gunawardena-summoned-to-corruption-1785212728</id>
            <summary type="text"> இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான சஜின் வாஸ் குணவர்தன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான சஜின் வாஸ் குணவர்தன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகியுள்ளது.</p><p> 

 இலஞ்ச ஆணைக்குழுவால் நடத்தப்படும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் நேற்றைய தினம்(27.07.2026) அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, இலஞ்ச ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு இணங்க சஜின் வாஸ் குணவர்தன நேரில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p>
</p><p>
கொழும்பு காலிமுகத்திடல் அருகே ஷங்ரிலா ஹோட்டல் அமைந்துள்ள நிலம் தொடர்பாக நடத்தப்படும் ஒரு விசாரணையின் தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:25:57+00:00</updated>
        </entry>
    </feed>
