<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T07:21:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-the-2027-school-timetable-1787296753"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-the-2027-school-timetable-1787296753</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய சுற்றறிக்கை இலக்கம் 31/2026 ஐ கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

2027 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை நாட்களைக் கருத்தில் கொண்டு மொத்தம் 197 நாட்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இயங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd8c6a6-ed0c-427b-a334-b3708c61ef3e/26-6a87fbf30d30f.webp' /></p><h2>197 நாட்கள் கற்றல் நடவடிக்கை</h2><p>

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையும், இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரையும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரையும் நடைபெறும்.
</p><p>

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகள் பிரத்யேகக் நாட்காட்டியின்படி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

2027 ஆம் ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
ஏதேனும் விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாள் இரத்துச் செய்யப்பட்டால், குறித்த 197 பாடசாலை நாட்களையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில் ஈடுசெய்யும் வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T07:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிசாருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-remanded-for-accepting-a-bribe-1787295372"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-remanded-for-accepting-a-bribe-1787295372</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 



ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக 20,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை குறித்த இரு அதிகாரிகளும் கோரிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/923a394d-916d-4cc2-abe5-93789d2a37eb/26-6a87f68ee854b.webp' /></p><h2>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது</h2><p>


சந்தேகநபரிடம் இருந்த முழுமையான அளவிலான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட இடமளிப்பதற்குமாகவே இந்தப் பணம் கோரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>



 இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். 



2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள்ளும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனையிலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>



இதனையடுத்து, சந்தேக நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578"></link>
            <id>https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p>மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ac9bfbb-370e-458b-9001-b63d19847a24/26-6a87dc035d215.webp' /></p><h2>&nbsp;மூன்று நாள் தேசிய துக்க காலம் </h2><p> </p><p>&nbsp;மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdaaa352-7fde-4d9c-a364-b6c79f4eeaf3/26-6a87dcdbc5533.webp' /></p><h3>&nbsp;பாராளுமன்றத்தில்&nbsp; அஞ்சலி</h3><p>&nbsp;அதேவேளை காலஞ்சென்ற பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.



சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><p> பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர். 



இதன்பின்னர் அரசாங்கத்தின் அனுதாப அறிக்கையை பிரதமர் ஹரிணி சபையில் வாசித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அஞ்சலி உரையாற்றினார்</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீர் கலந்த தண்ணீரைக் மாணவிகளுக்கு குடிக்க கொடுத்த மாணவன்; சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776"></link>
            <id>https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அரோன் வட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிநீரில் ஏதோ கலந்திருப்பதை அறிந்து சிறுமிகள் இருவரும் உடனடியாகப் பாடசாலை அதிபரிடம் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8525891e-e83f-449d-b7ba-a334f1cf7eb2/26-6a87e88239af5.webp' /></p><h2>சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்</h2><p> </p><p>

எனினும் அதிபர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "வாய் ஒருமாதிரியாக இருந்தால் 10 ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து பாடசாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த மாணவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்த அதிபருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அரோன் துணைப் கோட்டாட்சியர் மஞ்சுஷா கத்ரி தகவலின்படி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கனத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் மேலும் சில ஆண் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் இரவு நேர இணைய பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f514da99-026f-45d8-a8bd-36e6e69707d6/26-6a87f13cd7d7b.webp' /></p><h2>சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள்</h2><p>

சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளிப்படையாக உலா வருகின்றன.

இதை பார்க்கும் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். </p><p>ஒரு சிலர் வழி தவறி செல்லவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, 13 வயதுகுட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
</p><p></p><p>அதோடு இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமுல் செய்யவேண்டும் என்று கோரி குறித்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p></p><p>
இந்த மனுவை விசாரித்த டில்லி மேல் நீதிமன்றம், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும் தடை விதிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p>

இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. எனினும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய தீவிரமான சிக்கல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று டில்லி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811"></link>
            <id>https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e043c5a-14e1-4736-9b53-c9d3439c316a/26-6a87ec8d2c8d0.webp' /></p><p>
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்</p><p>
தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-21T06:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கு காணி விடுப்விப்பு; ஜனாதிபதி விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><p>
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272c908c-7547-4db9-a3a7-bfcc36ab5b05/26-6a87e41ed1131.webp' /></p><h2>&nbsp;விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை</h2><p>தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணியாகும்.</p><p></p><p>&nbsp; &nbsp; அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.</p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p></p><p>
</p><p>
அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் , கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T05:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சொகுசு கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354"></link>
            <id>https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.</p><p>

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல் இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce36d479-51c7-470e-8e5b-3c96bd6ed3e1/26-6a87e2f9551c1.webp' /></p><p>

இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.</p><p> இலங்கைதேநீர்

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T05:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.



நிதிக்குற்றப் புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
</p><p>


நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c318ff80-bf1d-4f97-8653-e57182cc850d/26-6a87de0c8455b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:09:09+00:00</updated>
        </entry>
    </feed>
