<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-26T05:23:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் படுகையில் பெட்ரோலியம் ; இலங்கைக்கு அடிக்கபோகும் அதிஸ்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315"></link>
            <id>https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னார் படுகையில் இவ்வருடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
மன்னார் படுகையில் இவ்வருடத்திற்கான பெட்ரோலிய ஆய்வு உரிமங்களை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,&nbsp; (25) கொழும்பிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abae7e1d-de36-4593-86fb-7ae0e8e385c2/26-6a8e766597c29.webp' /></p><h2>அதிகார பூர்வ&nbsp; அறிவிப்பு</h2><p> </p><p>

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சரும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><p>
</p><p>
இதன்படி சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு பிரதான கடல் தொகுதிகள் (Blocks) ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
</p><p>
முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவக் கசிவுகள் கண்டறியப்பட்டதன் மூலம், மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா, ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பரப்பளவில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளைச் சேகரிக்க வாய்ப்புப் பெறும் எனக் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மன்னார் படுகையிலிருந்து சுமார் 2 பில்லியன் பேரல் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அகழ்ந்தெடுக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-26T05:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி , குரும்பசிட்டி காணிகள் விடுவிப்பு; வங்குரோத்து அரசியல் செய்யும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்; அமைச்சர் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து , தமது போராட்டங்கள் ஊடாகவே காணி விடுவிக்கப்பட்டது போன்றதான வங்குரோத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் (25) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1fc3c3b-5ffa-4875-beea-16b12ade7a05/26-6a8e732620708.webp' /></p><h2>வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி</h2><p>
</p><p>
 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
இதன்போது பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது. </p><p>

மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பிட்டின்படி இழப்பீடு வழங்கப்படுவதுடன், அவர்கள் அக்காணிகளைப் பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
 எதிர்வரும் ஆண்டில் தேவைப்படும் 13,000 வீடுகளையும் முழுமையாகக் கட்டிமுடித்து "மீள்குடியேற்ற வீடுகள்" எனும் நாமத்தையே நாட்டின் வரலாற்றில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பைப் பற்றிப் பேசினால் தென்னிலங்கை கொதித்துவிடும் என்று கூறி அமைதி காத்த தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் போன்ற தலைவர்கள், தற்போது காணி விடுவிப்பு அரசாங்கத்தால் உறுதியாகியுள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகமாடுகின்றனர்.</p><p> 

மக்கள் இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T04:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-for-drivers-traveling-on-expressways-1787718957"></link>
            <id>https://jvpnews.com/article/notice-for-drivers-traveling-on-expressways-1787718957</id>
            <summary type="text">தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் பகுதி, அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த வெளியேறும் பகுதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மிரிகம நுழைவுப் பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதி ஆகிய இடங்களில் வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61cf255d-c35e-4f07-afe3-084e4b42d1a0/26-6a8e6d2ea7ecb.webp' /></p><p>இதனால் குறித்த பகுதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும், போக்குவரத்து நெரிசலை கருத்திற்கொண்டு பயண நேரத்தை திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்கள் மற்றும் நிலைமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T04:36:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் மர்ம மரணம் ; விடுதி அறையில் அழுகிய உடல் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/old-man-decomposed-body-recovered-from-hostel-room-1787717684"></link>
            <id>https://jvpnews.com/article/old-man-decomposed-body-recovered-from-hostel-room-1787717684</id>
            <summary type="text">காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51db845-a561-4f1e-9228-150bb7814638/26-6a8e68362f12d.webp' /></p><p>இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
</p><p>
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T04:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்பும் அமைதியும் போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/today-is-the-birthday-of-the-prophet-muhammad-1787716738"></link>
            <id>https://jvpnews.com/article/today-is-the-birthday-of-the-prophet-muhammad-1787716738</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26). 

இஸ்லாமிய நாட்காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26). 

இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது.</p><p></p><p> 

கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. </p><p>

தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. 

பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ada52de-4b8e-4e9c-a906-0ac41d53bba4/26-6a8e64838b986.webp' /></p><p> 

காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது. </p><p>

மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும். </p><p>

இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். 

அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். </p><p>அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்திருந்தார். </p><p>

பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற, சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபிகள் நாயகம் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். </p><p>

இந்நிலையிலேயே அவரது பிறந்த நாளை நினைவுகூறும் இந்த புனித நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T03:59:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் உழவு இயந்திரம் மோதி 7 வயது சிறுமி பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-tragically-dies-after-being-hit-by-a-plow-1787715852"></link>
            <id>https://jvpnews.com/article/girl-tragically-dies-after-being-hit-by-a-plow-1787715852</id>
            <summary type="text">மன்னார் விடத்தல்தீவு பகுதியில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் விடத்தல்தீவு பகுதியில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த விபத்து நேற்று (25) மாலை, அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவில் அமைந்துள்ள கிளை வீதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448963da-1dff-4427-bd45-a51eafc2cac2/26-6a8e610de070a.webp' /></p><p>

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
உயிரிழந்த சிறுமி விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்திய 32 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T03:44:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522"></link>
            <id>https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522</id>
            <summary type="text">காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> 

இதற்கமைய, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219e477d-a430-4862-a97f-245977d0a8d0/26-6a8e5bdc6408d.webp' /></p><p>தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி நபர் ஒருவர் குறித்த பொலிஸ் நிலையத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. </p><p>

குறித்த காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் முதியவர், நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டமையினால் அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அந்த நேரத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேகநபர் ஓட முயன்றதாகவும், ஓட முடியாமல் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

எவ்வாறாயினும், அந்த நபரை அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p> 

இதன்போது, குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T03:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913"></link>
            <id>https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913</id>
            <summary type="text">புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்டனின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் (Bryan Seaver) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத் துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி (Grammy) விருதுகளை வென்றுள்ளதுடன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06507f1c-f734-4406-996b-fd5159d6faf9/26-6a8e55936b6da.webp' /></p><p>அவர் "Jolene", "I Will Always Love You" மற்றும் "9 to 5" போன்ற உலகப் புகழ்பெற்ற பல பாடல்களை உருவாக்கிய பாடலாசிரியரும் ஆவார். </p><p>

டோலி பார்ட்டன் தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டதுடன், பாடல் எழுதுவதை தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வழியாகவும், தனக்கான ஒரு "சிகிச்சையாகவும்" கருதியதாகப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். </p><p>

இசைக்கு மேலாக நடிப்பு, வணிகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் அவர் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார். </p><p>

அவர் தொடங்கிய Imagination Library என்ற திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை விநியோகித்தது உட்பட பல சமூக நலப்பணிகளில் அவர் பங்காற்றியுள்ளார்.</p><p> 

டோலி பார்ட்டனின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், அவர் குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். </p><p>

உலகளவில் "கன்ட்ரி இசையின் ராணி" என்று அழைக்கப்படும் டோலி பார்ட்டனின் மறைவு இசைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T02:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதிக்குள் வீசிய துர்நாற்றம் ; அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் ; மர்ம மரணத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936"></link>
            <id>https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936</id>
            <summary type="text">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f94e9eb-0967-42d0-b612-3922256f150b/26-6a8e3a585735f.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிரமாகும் விசாரணை</h2><p style="text-align: justify; ">
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-jackpot-luck-awaits-these-zodiac-1787707062"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-jackpot-luck-awaits-these-zodiac-1787707062</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் செவ்வாய் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

</p><p>அதுவும் செப்டம்பர் 02&nbsp; செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான்.&nbsp; செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் விளைவு 3 ராசிக்காரர்களுக்கு&nbsp; மங்களகரமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdf4d0a-9fc8-42b8-a05c-bf5e02388326/26-6a8e3eb830509.webp' /></p><h2>அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்</h2><p>

</p><p><b>
மேஷம் : </b>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.</p><p></p><p><b>
தனுசு :&nbsp;</b>மன தைரியம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு எடுத்த வேலை ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p></p><p><b>மிதுனம் : </b>குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றையும் சிறப்பாகவும், வெற்றிகரகமாகவும் செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.</p>]]></content>
            <updated>2026-08-26T01:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தரவின் தொலைபேசியில் நடிகைகளின் தகவல்கள் ; புகைப்படத்துடன் சிக்கிய அரசியல் தலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actresses-data-found-on-kehelpathara-s-phone-1787704121"></link>
            <id>https://jvpnews.com/article/actresses-data-found-on-kehelpathara-s-phone-1787704121</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் 'கூடு நிலங்க' ஆகிய சந்தேகநபர்கள் முதன்முறையாக&nbsp; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவிக்கையில், கெஹெல்பத்தர பத்மே 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாக தொலைபேசி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88d20c8-af3d-4ee1-970c-52c426442dad/26-6a8e333b8eb58.webp' /></p><h2 style="text-align: justify; ">மனிதக் கொலைகள்</h2><p style="text-align: justify; "> 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினர்.7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. </p><p style="text-align: justify; "> 

கணேமுல்ல சஞ்சீவ கொலை உட்பட பல மனிதக் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கொமண்டோ சலிந்த உட்பட 5 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகிய சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு முன்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

பின்னர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேங்காயை சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது தெரியுமா...?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-eating-coconut-1787701821"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-eating-coconut-1787701821</id>
            <summary type="text">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம்.</p><p style="text-align: justify; "> ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து என்றாவது சிந்தித்திருப்போமா?



தேங்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e70f55-4270-457e-970f-9219a6cb111f/26-6a8e2b4f0dac9.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ பயன்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதயம், சருமம், தலைமுடி, வயிறு என அனைத்துக்கும் நல்லது.</p><p style="text-align: justify; ">



உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சமிபாட்டுப் பிரச்சினைகளை சரி செய்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfcb548-0359-42ec-adfe-a6022fcd2d6a/26-6a8e2b5025163.webp' /></p><p style="text-align: justify;">



தேங்காயில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
</p><p style="text-align: justify; ">


வாழைப்பழம், அப்பிள் பழங்களில் உள்ள சத்துக்களை விடவும் தேங்காயில் அதிகப்படியான புரதம் உள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 



இது சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்யும். </p><p style="text-align: justify;">



எனவே காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க உதவும்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140"></link>
            <id>https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140</id>
            <summary type="text">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76cef57-75b6-48f8-9676-2bbae4aeb2e1/26-6a8e00865bc4a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை புசித்த விருந்துபசாரம் ; அயல் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024"></link>
            <id>https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024</id>
            <summary type="text">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10094622-59eb-49e2-a8e8-f9e519d0aafe/26-6a8de4ba19300.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது, குறித்த நபருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">

இதன்போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:21:53+00:00</updated>
        </entry>
    </feed>
