<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T23:56:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-from-private-land-1788133761"></link>
            <id>https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-from-private-land-1788133761</id>
            <summary type="text">திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e25240e-8999-41a6-b375-67aa7a2e98cf/26-6a94c1830445e.webp' /></p><p>கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ; நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540</id>
            <summary type="text">இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0654cfb8-4752-4ebe-818d-423d5ae0d3d4/26-6a9466cdb238d.webp' /></p><p>அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். </p><p>

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் பாய்ந்த நாசாவின் புதிய அதிநவீன தொலைநோக்கி ; பிரபஞ்ச ரகசியங்களை தேடுகிறது ‘ரோமன்’]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nasa-s-new-state-art-telescope-launched-into-space-1788132826"></link>
            <id>https://jvpnews.com/article/nasa-s-new-state-art-telescope-launched-into-space-1788132826</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விண்வெளித் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள் மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>‘ரோமன்’ தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லாக்ரேஞ்ச் பொயின்ட் 2 (L2) எனப்படும் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa7e19d7-282b-48a9-9822-aad00b14515e/26-6a94bddbd4bcf.webp' /></p><p>ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிகளை விட அதிகமான பரந்த பார்வைத்திறனைக் கொண்டுள்ள ‘ரோமன்’, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குவதற்கும் உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
குறிப்பாக, ஹப்பிள் தொலைநோக்கியால் நீண்ட காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பெருமளவிலான விண்மீன் மண்டல ஆய்வுகளை, ‘ரோமன்’ தொலைநோக்கியால் குறுகிய காலத்திலேயே மேற்கொள்ள முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளித் தொலைநோக்கி, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் விரிவாக்கம் மற்றும் புதிய உலகங்கள் தொடர்பான மனிதகுலத்தின் புரிதலில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாப திருஷ்டி யோகம் ; செல்வத்தை அள்ளிக் கொடுக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-give-away-wealth-1788131942"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-give-away-wealth-1788131942</id>
            <summary type="text">ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகின்றன. செப்டம்பர் 1 ஆம் திகதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் சந்திக்கும் போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது.</p><p> லாப திருஷ்டி யோகம் சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகும். செவ்வாய்-புதன் உருவாக்கும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bd6f0c-8439-46e6-93df-6ac3f055e198/26-6a94ba67e9267.webp' /></p><h3>மேஷம்</h3><p>
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதாரரீதியாக இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது வெற்றிகரமாக தொடங்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.அந்த பொறுப்புகள் சற்றுச் சவாலாகத் தோன்றினாலும், அவை அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360e5e5-d04c-4005-9940-151d5f6d82f3/26-6a94ba689f110.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபைவிக்கப்போகிறார்கள். இந்த யோகத்தால் சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03b85d9-39a9-4ca6-a49a-b7acefdeedce/26-6a94ba6950fa1.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0417b049-801a-4ef2-8886-12fc8c706c47/26-6a94ba6a037c1.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T23:19:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸில் உருவான குட்டி யாழ்ப்பாணம் ; தமிழர்களின் போராட்டக் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/little-jaffna-created-paris-story-struggle-tamils-1788129040"></link>
            <id>https://jvpnews.com/article/little-jaffna-created-paris-story-struggle-tamils-1788129040</id>
            <summary type="text">பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள லா சப்பல் (La Chapelle) பகுதி, 1970களின் இறுதியிலும் 1980களிலும் இலங்கையில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள லா சப்பல் (La Chapelle) பகுதி, 1970களின் இறுதியிலும் 1980களிலும் இலங்கையில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் சென்ற ஈழத்தமிழர்களின் முக்கிய வாழ்விடமாகவும் வணிக மையமாகவும் உருவெடுத்தது.</p><p>
</p><p></p><p>தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி மாவு, கறித்தூள், கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்த முயற்சிகள், பின்னர் மளிகைக் கடைகளாகவும் தேநீர்க் கடைகளாகவும் வளர்ந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68eb7f5e-3cc9-4c45-a4d0-39c27c3a6986/26-6a94af127be79.webp' /></p><p>காலப்போக்கில் மட்டன் ரோல்ஸ், பருப்பு வடை, கொத்துரொட்டி உள்ளிட்ட ஈழத்தமிழர் உணவுகள் பாரிஸில் பிரபலமடைந்து, உணவகங்களும் பெருகின.</p><p>

ஆரம்பகாலத்தில் மொழிப் பிரச்சினை, இனரீதியான பாகுபாடு, வன்முறைக் குழுக்களின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தமிழர்கள் தங்களது வணிகங்களை நிலைநிறுத்தினர்.
</p><p>
இன்று பட்டுச் சேலைகள், தங்க நகைகள், மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் என லா சப்பல் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோல் விலை குறைப்பு தொடர்பில் லங்கா IOC நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-ioc-announces-petrol-price-reduction-1788127641"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-ioc-announces-petrol-price-reduction-1788127641</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c87fa61-22b5-4096-a5bb-6dbe92a1f428/26-6a94a99b49339.webp' /></p><p>அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788124706"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788124706</id>
            <summary type="text">நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d81dbdd-500c-404a-a90d-38afef523f11/26-6a949e248cf58.webp' /></p><p>தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:07:42+00:00</updated>
        </entry>
    </feed>
