<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T13:40:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாகிச்சூட்டு; பெண் உட்பட நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863"></link>
            <id>https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p>


கைது செய்யப்பட்டவர்கள், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018fb4df-cbcf-455f-a91f-38c6db9cc812/26-6a63691890d1a.webp' /></p><p>
</p><p>
 வத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள் ; நெட்டிசன்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646"></link>
            <id>https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7839559-8e26-48f3-a2ec-a058adffd97a/26-6a6322975572e.webp' /></p><p></p><h2>சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள&nbsp;&nbsp;திருமணம்</h2><p>&nbsp;சரோஜ்(20), சாவித்ரி(19), சந்தோஷ் கடக்வன்ஷி(18) ஆகிய மூன்று பெண்களும் தங்களின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். அவர்களுக்கு கேமராமேனாக கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவரையே தற்போது அவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.&nbsp;</p><p>
</p><p>
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f66994-f86e-4875-842d-ecec7a31db9f/26-6a63229836f8d.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>சிறு வயது முதலே நாங்கள் மூவரும் சகோதரிகளாகவும், தோழிகளாகவும் இருக்கிறோம். பெற்றோர் பார்த்த யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்களால் பிரிந்து வாழ முடியாது.

 அதனால்தான் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுத்து விகாசை திருமணம் செய்து கொண்டோம்’ என அந்த பெண்கள் சொல்லியிருக்கிறார்கள்</p><p>&nbsp;இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-justice-minister-defeated-1784897615"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-justice-minister-defeated-1784897615</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைசாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பத்தில்&amp;nbsp; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைசாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பத்தில்&nbsp; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
</p><p>நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8219a3b3-b589-4c1d-b30d-d7617b79c363/26-6a63605110f81.webp' /></p><p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம்,&nbsp; &nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T12:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கும் தாயுள்ளம்; ஸ்பெயின் கால்பந்து வீரர் குகுரெல்லாவின் சுருள் முடிக்குப் பின் இப்படி ஒரு கதையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/marc-cucurella-with-kids-sad-story-his-hair-1784896243"></link>
            <id>https://jvpnews.com/article/marc-cucurella-with-kids-sad-story-his-hair-1784896243</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரான (Defender) மார்க் குகுரெல்லாவின் (Marc Cucurella) நீண்ட சுருள் முடி, கால்பந்து உலகிலும் இணையத்திலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டின் முன்னணி தற்காப்பு ஆட்டக்காரரான (Defender) மார்க் குகுரெல்லாவின் (Marc Cucurella) நீண்ட சுருள் முடி, கால்பந்து உலகிலும் இணையத்திலும் அவரது மிக முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

 சமீபத்தில் இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான தகவல் பரவியது. ஆட்டிசம் (Autism) குறைபாடு உடைய அவரது மூத்த மகன் மாதியோ (Mateo), மைதானத்தில் விளையாடும் 22 வீரர்களில் தனது தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே அவர் முடியை வெட்டாமல் வைத்துள்ளார் என்ற செய்தி உலகளவில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e12845f-9963-495f-bb52-b87a43cbc39f/26-6a635af4b38c0.webp' /></p><h2>தந்தையை உடனே அடையாளம் காண வேண்டும்&nbsp;</h2><p>
</p><p>
செல்சி மற்றும் ஸ்பெயின் கால்பந்து அணியின் பாதுகாப்பு வீரரான மார்க் குகுரெல்லாவின் நீண்ட சுருள் முடி, அவரது தனித்துவமான தோற்றத்தின் ஓர் அங்கமாக மட்டுமல்லாமல், மகன் மீதான அன்பின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
</p><p>
குகுரெல்லாவின் மூத்த மகன் மாதியோ ஆட்டிசம் நிலையுடன் வாழ்ந்து வருகிறார். போட்டியின்போது மைதானத்தில் இருக்கும் பல வீரர்களுக்கு மத்தியில் தனது தந்தையை அவர் எளிதாக அடையாளம் காண வேண்டும் என்பதற்காகவே குகுரெல்லா தலைமுடியை நீளமாகவும் சுருளாகவும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401a6462-2702-4a74-bab1-1d24901fe85c/26-6a635af573366.webp' /></p><p>

ஒரே நேரத்தில் 22 வீரர்கள் விளையாடும் கால்பந்து மைதானத்தில், குகுரெல்லாவின் தனித்துவமான தலைமுடி அவரை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனால் மாதியோ தனது தந்தை எங்கு விளையாடுகிறார் என்பதை உடனடியாகக் கண்டறிய முடிகிறது.</p><p>

வெளிப்பார்வைக்கு இது ஒரு சாதாரண தோற்றத் தேர்வாகத் தோன்றினாலும், குகுரெல்லாவின் குடும்பத்திற்கு இதன் பின்னால் ஆழமான உணர்வும் அன்பும் நிறைந்துள்ளது.</p><p>

கோல்கள், வெற்றிகள் மற்றும் கிண்ணங்களுக்கு அப்பாலும், குடும்பத்திற்காக வீரர்கள் மேற்கொள்ளும் சிறிய செயல்களே கால்பந்தின் மிக அழகான தருணங்களாக மாறுகின்றன என்பதற்கு குகுரெல்லாவின் இந்தச் செயல் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-07-24T12:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI அச்சத்தால் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kayadu-lohar-mamitha-baiju-quit-social-media-1784884193"></link>
            <id>https://jvpnews.com/article/kayadu-lohar-mamitha-baiju-quit-social-media-1784884193</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம் தவறாக மாற்றப்பட்டு பரப்பப்படுவது, அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை தங்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிப்பதாக நடிகைகள் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06d8ac91-d145-4a51-8487-f65ccc7751b5/26-6a632be276d52.webp' /></p><h2>&nbsp;தனிநபர் தாக்குதல்கள் , வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள்</h2><p>
</p><p>
அந்தவகையில்,&nbsp; ஜன&nbsp; நாயகன் பட&nbsp; நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

இனி தனது திரைப்படங்கள் மற்றும் தொழில் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தனது நிர்வாகக் குழுவே ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e38a479-1bba-424d-a0f2-a05c4d1d4c48/26-6a632dccde9c0.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இதயம் முரளி' பட நடிகை கயாடு லோஹரும் மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
</p><p>
ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக இருந்து வரும் நிலையில் முன்னனி நடிகைகள் இவ்வாறு விலகி வருவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-24T11:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-7-low-floor-buses-to-sri-lanka-1784893342"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-7-low-floor-buses-to-sri-lanka-1784893342</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
</p><p>
இந்த பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கடந்த மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து&nbsp; குறித்த&nbsp; பேருந்துகள்&nbsp; இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8763f625-9b8d-48ec-a56b-09e9b52e0ec1/26-6a634fa07003c.webp' /></p><p>
பொதுப்போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பானின் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றப் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடலின் பயனாகவே இந்த உதவி கிடைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த தாழ்தளப் பேருந்துகள் மூலம், குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகப் பயணிக்க முடியும் .

அத்துடன் நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T11:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577"></link>
            <id>https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577</id>
            <summary type="text">தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>2019ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.16.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28c1dc2-d3a3-45db-9bfe-fc8df588ff66/26-6a6348ba25438.webp' /></p><p>



தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் பொது தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தேர்வு செய்து, அதற்கு சாதகமாக செயற்பட்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



இதுதொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எல் நினோவால் ஆபத்து ; யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-climate-impact-jaffna-university-professor-1784891004"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-climate-impact-jaffna-university-professor-1784891004</id>
            <summary type="text">எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p>

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில், எல்நினோ காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (24) காலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e52f08-730a-436f-a70b-c5e9184e384f/26-6a634681c4372.webp' /></p><p>
</p><p>
அதில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் பரவி வருவதால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவித்தார்.</p><p>கடல் வழியாக வெப்பம் பரவும் வேகம், நிலத்தின் வழியாக பரவும் வேகத்தை விட சுமார் 16 மடங்கு அதிகம் என்பதால், இந்து சமுத்திரத்தில் ஏற்படும் வெப்ப உயர்வு சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் விரைவாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
</p><p>
இதன் விளைவாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும், குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மேலும், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வறட்சி நிலவும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b9bb092-d462-40a1-9788-03dfdf2489c9/26-6a6346828fa1a.webp' /></p><p>அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு காணப்படுவதால், அதுவரை அதிக வெப்பமும் வறட்சியான காலநிலையும் நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
</p><p>
எதிர்வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, நீர்வளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார்.</p><p>

இந்த நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு – மன்னார் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-mannar-train-services-resume-1784890374"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-mannar-train-services-resume-1784890374</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன.

இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இன்று (24) மீண்டும் தொடங்குகின்றன.</p><p>

இதன்படி, இந்த ரயில் தினமும் பிற்பகல் 3.50 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு தலைமன்னார் ரயில் நிலையத்தை சென்றடையும்.

‘</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c489fd1-ef62-49fb-b1f5-f4ae2cb4e411/26-6a634407a99d5.webp' /></p><p>டித்வா’ (Ditwah) சூறாவளியால் ரயில் பாதைக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தலைமன்னார் வரையான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p></p><p>எனினும், அனுராதபுரம் புதிய நகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, இந்த ரயில் அங்கு நிறுத்தப்படாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் 600 கிலோ கேரளக் கஞ்சா தீயிட்டு அழிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-kg-of-kerala-cannabis-destroyed-by-fire-jaffna-1784890025"></link>
            <id>https://jvpnews.com/article/600-kg-of-kerala-cannabis-destroyed-by-fire-jaffna-1784890025</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.</p><p></p><p>



கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd648c5d-0551-4e58-ac97-0f092d904973/26-6a6342aa51d7f.webp' /></p><p> 



அவை தொடர்பான வழக்குகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த கஞ்சா பொதிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>


அதன்படி, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த எரித்தழிப்பு நடவடிக்கை நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார், ஊர்காவற்துறை பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>


போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவுக்கு உடல்நலக்குறைவு; பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-money-laundering-case-adjourned-1784888553"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-money-laundering-case-adjourned-1784888553</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.
</p><p>
 வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், விசாரணையின்போது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a48121-e7b5-4074-b1d0-bfe95bf747fd/26-6a633ceb13171.webp' /></p><p></p><h2>&nbsp;கட்சிக்காரருக்கு உடல்நலக்குறைவு</h2><p> </p><p>அவருக்குப் பதிலாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததுடன், விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.</p><p></p><p>
</p><p>
விடயங்களை ஆராய்ந்த பின்னர், வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>

 இன்றையதினம் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகள் அனைவரும் அடுத்த விசாரணையின்போதும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி பணித்தார்.</p><p></p><p>
</p><p>
தெஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் , சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T10:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் கறுப்பு யூலை நினைவேந்தல் ; நீதிக்காக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/black-july-commemoration-london-tamils-call-justic-1784888254"></link>
            <id>https://jvpnews.com/article/black-july-commemoration-london-tamils-call-justic-1784888254</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (23) லண்டனில் நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03005d8-db92-4499-a852-b8714987fd20/26-6a633bbf53016.webp' /></p><p>1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இடம்பெற்ற இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p>

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து, நீதிக்கான கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
</p><p>
ஈழத்தமிழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான நீதி நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தெமட்டகொடை துப்பாக்கிச் சூடு ; வெளியான புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-dematagoda-shooting-new-information-releas-1784887564"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-dematagoda-shooting-new-information-releas-1784887564</id>
            <summary type="text">கொழும்பு தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் &#039;வனாத்தே சது&#039; என்ற குற்றவாளியின் தரப்பினரால் திட்டமிடப்பட்டிருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 'வனாத்தே சது' என்ற குற்றவாளியின் தரப்பினரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>நேற்று (23) மாலை 6.35 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. </p><p>

பொரளை, வனத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என்பவரே துப்பாக்கிதாரியின் இலக்காகியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e5899e-441b-4369-b1c6-d31c29d70b08/26-6a63390e10c3e.webp' /></p><p>குறித்த நபர் கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, துப்பாக்கியை வழங்கிய நபராவார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

அச்சம்பவத்திற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ள 'வனாத்தே துமிந்த' என்ற குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

துப்பாக்கிச் சூட்டில் அவரது மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தும் விதம் சி.சி.டி.வி (CCTV) கெமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. </p><p>

இதன்போது, அவர்களின் இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஓடும்போதும் அவரைத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. </p><p>

அதன்பின்னர் துப்பாக்கிதாரிகள் அவ்விடத்திலிருந்து தப்பியோடும் காட்சியும் அதில் காணப்படுகிறது. </p><p>

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற பிடியாணையால் சபையில் வெடித்த அர்ச்சுனா இராமநாதன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-mp-erupts-assembly-court-arrest-warrant-1784876008"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-mp-erupts-assembly-court-arrest-warrant-1784876008</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
</p><p>


இன்று பாராளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபையில் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, இதனால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46cb5385-2183-448a-8a53-7e3a9cdb5540/26-6a630be978d9b.webp' /></p><h2>பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் - சஜித் பிரேமதாச</h2><p>



அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் விவாதமொன்றில் கலந்துகொண்டிருக்கும்போது அவரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பது மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>


பிரதியமைச்சர் சுனில் வட்டகல இதன்போது குறுக்கிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் தவிர அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><p>



எதிர்க்கட்சி எம்.பி சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிட்டு , இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும் இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை பாராளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.</p><p></p><p>
</p><p>


 இன்னிலையில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உறுதி வழங்கினார்.</p><p>கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் திருடர்கள் அகப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-thieves-caught-police-1784886906"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-thieves-caught-police-1784886906</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள், மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள், மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்த மற்றொரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec688621-c960-4978-853d-86a3878e3510/26-6a63367c26de5.webp' /></p><p></p><p>
</p><p>


கடவத்தை, எல்தெனியா பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபர்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டதுடன், அங்கிருந்து 14 கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p>



இவ்வழக்கின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மற்றொருவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-those-waiting-buy-gold-in-sri-lanka-1784886729"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-those-waiting-buy-gold-in-sri-lanka-1784886729</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) அதன் விலை ரூ.3,000 குறைந்து ரூ.374 ,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da8676bd-58a5-4fb7-8290-59b85469ffad/26-6a6335ca86f68.webp' /></p><p>இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2,800 குறைந்து ரூ.344 ,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல் மறந்துவிட்டதா? ; கணக்கை மீட்கும் புதிய கூகுள் வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forgot-your-password-google-feature-recove-account-1784886139"></link>
            <id>https://jvpnews.com/article/forgot-your-password-google-feature-recove-account-1784886139</id>
            <summary type="text">கடவுச்சொல் (Password) உள்ளிட்ட வழக்கமான முறைகள் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலைகளில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக அடையாள தொழில்நுட்பம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவுச்சொல் (Password) உள்ளிட்ட வழக்கமான முறைகள் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலைகளில், பயனர்கள் தங்களது அடையாளத்தை முக அடையாள தொழில்நுட்பம் (Facial Biometrics) மூலம் உறுதிப்படுத்தும் புதிய 'செல்ஃபி காணொளி' (Selfie Video Verification) வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி காணொளிகள் (Deepfakes) மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், கணக்குகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மீட்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h3>Selfie Video Verification</h3><p>
</p><p>
இந்த வசதியின் கீழ், பயனர்கள் தங்களது கைப்பேசியின் கெமராவைப் பயன்படுத்தி ஒரு குறுகிய செல்ஃபி காணொளியை பதிவு செய்ய வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e99190-f0aa-4119-bbf1-4fc269708814/26-6a63341e542cf.webp' /></p><p>பதிவின் போது, பல்வேறு கோணங்களில் முகத்தை பதிவு செய்யும் வகையில், தலையை குறிப்பிட்ட திசைகளில் அசைக்குமாறு திரையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.</p><p>

எதிர்காலத்தில் கணக்கை அணுக முடியாத நிலை ஏற்பட்டால், பயனர் மீண்டும் ஒரு புதிய செல்ஃபி காணொளியை பதிவு செய்ய வேண்டும்.</p><p> பின்னர், முன்பே பதிவு செய்யப்பட்ட காணொளியுடன் அதை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே கணக்கை மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்படும்.
</p><p>
இந்த செயல்முறையில் நேரலை சரிபார்ப்பு (Liveness Detection) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், புகைப்படங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் மூலம் கணக்கை சட்டவிரோதமாக மீட்டெடுப்பது சாத்தியமற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது</p><p>

மேலும், பயனர்களின் வெளிப்படையான அனுமதியுடன் மட்டுமே இந்த காணொளிகள் சேமிக்கப்படும்.</p><p> அவை அனைத்தும் என்க்ரிப்ட் (Encrypted) செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவதுடன், பயனர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்களது கூகுள் கணக்கிலிருந்து அவற்றை நீக்கிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய வசதி, தற்போது பயன்பாட்டில் உள்ள பாஸ்கீ (Passkeys) மற்றும் இரு-அடுக்கு அங்கீகாரம் (Two-Factor Authentication – 2FA) போன்ற பாதுகாப்பு முறைகளுக்கு மாற்றாக அல்ல என்றும், கைப்பேசி தொலைந்து போதல் அல்லது பழுதடைவது போன்ற அவசர சூழ்நிலைகளில் கணக்கை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாகவே செயல்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-school-2d-term-activities-conclude-today-1784885283"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-school-2d-term-activities-conclude-today-1784885283</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இயங்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான இரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இயங்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன்(24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
</p><p>
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb566e05-79b0-49c7-ab26-d4ccb846d6a1/26-6a63302467e79.webp' /></p><p>
</p><p>முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

 அதேசமயம் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோடி பெறுமதியான ராவண கல் மீட்பு ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ravana-stone-worth-crores-recovered-in-kinniya-1784885163"></link>
            <id>https://jvpnews.com/article/ravana-stone-worth-crores-recovered-in-kinniya-1784885163</id>
            <summary type="text">திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2212904-a1ca-4b8b-ad22-9ea2a7a11689/26-6a632fac48a66.webp' /></p><p>இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (23) இரவு 10 மணியளவில் கிண்ணியா – கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


இதன்போது குறித்த அபூர்வ கல் மீட்கப்பட்டதுடன், அதனை விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



மீட்கப்பட்ட கல் 550 கிராம் நிறையுடையது எனவும், இது 4 அங்குல நீளமும், சுமார் 6.5 அடி சுற்றளவும் கொண்டதாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட கல்லையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபோக நெல் கொள்முதல் தீவிரம் ; 5,390 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/small-scale-paddy-procment-5-390-metric-tons-paddy-1784883200"></link>
            <id>https://jvpnews.com/article/small-scale-paddy-procment-5-390-metric-tons-paddy-1784883200</id>
            <summary type="text">இந்த ஆண்டு சிறுபோக பருவத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கையின் கீழ், நெல் சந்தை சபையினால் இதுவரை 5,390 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு சிறுபோக பருவத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கையின் கீழ், நெல் சந்தை சபையினால் இதுவரை 5,390 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்முதல் நடவடிக்கையின் மூலம் இந்த அளவு நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தை சபையின் பிரதி பொது மேலாளர் சமன் பாலித பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92202ad8-19d0-4a4d-b114-0a7d2acd595d/26-6a63280218602.webp' /></p><p>அதிகபட்சமாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3,148 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெட்ரிக் தொன்னும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெட்ரிக் தொன்னும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.</p><p>



மேலும், நெல் அறுவடைக்கு ஏற்ப எதிர்காலத்தில் நாடு முழுவதும் 148 நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தை சபை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:53:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்கறைகளுடன் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-s-body-recovered-from-a-house-in-tamil-area-1784880745"></link>
            <id>https://jvpnews.com/article/man-s-body-recovered-from-a-house-in-tamil-area-1784880745</id>
            <summary type="text">கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>



நேற்று (23) வியாழக்கிழமை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427b3219-da06-49c5-abf6-aaed5c37b828/26-6a631e6ad570e.webp' /></p><p>உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



சடலத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த நபரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-leaky-production-plant-blockaded-1784879232"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-leaky-production-plant-blockaded-1784879232</id>
            <summary type="text">மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p></p><p>



வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20a0487-d85d-4bfd-8a58-9ce18e764b92/26-6a631881a971e.webp' /></p><p>வவுணதீவு பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>



இதற்கமைய, வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
</p><p>


இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும், அங்கிருந்த கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான கோடா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



கைப்பற்றப்பட்ட பொருட்களை வவுணதீவு பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:47:23+00:00</updated>
        </entry>
    </feed>
