<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T06:31:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/722da6e8-594b-44aa-b05a-438a95630d0b/26-6a6ee37f68340.webp' /></p><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591"></link>
            <id>https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேலையில்லா பட்டதாரியான டிலெக்ஸன், பகுதி நேர தச்சுத் தொழிலாளியாக பணியாற்றியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0051ab-20d9-4f32-89dd-abc381660d32/26-6a6ed9b94658d.webp' /></p><p>இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றது நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்திற்கு அண்மையில் என்பதனால், பள்ளி நிர்வாகத்தின் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் திகதி உயிரிழந்தவரின் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. </p><p>அத்துடன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும், கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனத்தின் சார்பிலும் ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் யசீர் அரபாத் (B.A), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
</p><p>
நிகழ்வில் கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குரு, இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், பள்ளி நிர்வாகத்தின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829"></link>
            <id>https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p><p>எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளன. </p><p>

 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f38159d-8e70-43fd-b4da-cd7126d3ec87/26-6a6ed2d723b5e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5542aa70-65be-4ef5-85c7-26d4dcb35f0e/26-6a6ecf30de1a3.webp' /></p><p>இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. </p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>

2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-02T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T04:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் செய்த விபரீத செயல் ; காரணத்தில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-shocking-act-in-jaffna-1785631691"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-shocking-act-in-jaffna-1785631691</id>
            <summary type="text">யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab936c8b-71b8-48a5-997d-f6008eb7d505/26-6a6e93cd0fdb0.webp' /></p><p>

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி ; ராஜயோகத்தை தட்டித்தூக்கும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-in-gemini-brings-major-changes-1785633120"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-in-gemini-brings-major-changes-1785633120</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான்&amp;nbsp; சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான்&nbsp; சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார்.
</p><p style="text-align: justify; ">

அவர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை மிதுனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மையாக அமையப்போகிறது என பார்ப்போம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa397422-d7fb-4612-833e-acb03c5e57c6/26-6a6e99626a0c9.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நன்மை கிடைக்கும் இராசிகள்</h2><p>
</p><p style="text-align: justify;"><b>
மேஷம்:</b> இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்க போகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக கூடிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்கின்ற பயணம் மிகச்சிறந்த லாபத்தையும் வெற்றியும் கொடுக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
</p><p style="text-align: justify; "><b>
மிதுனம்:</b>
இவர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பு உருவாகும்.இவர்களுடைய திறமை இந்த காலகட்டங்களில் எல்லோரும் கவனிக்கும் படியாக வெளிப்படும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, திடீர் இடம் மாற்றம் போன்ற அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>

கன்னி: </b>இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த உச்சத்தை தொடக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது.உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இவர்கள் எந்த தடையும் இல்லாமல் பெறப்போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்பை விட மிக சிறந்த பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
</p><p style="text-align: justify; "><b>
தனுசு:</b>இதனால் இவர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான ஆற்றல் வரப்போகிறது. எதிர்பாராத லாபம் உண்டாகும்.மறைமுக எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T01:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்கு சட்டம் ; இவர்களுக்கு வீடுகளில் தஞ்சமளிக்க வேண்டாம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">Update:&amp;nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Update:</b>&nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.</p><p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p></p><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-02T00:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவம் ; விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-appeal-after-mahara-prison-incident-1785630940"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-appeal-after-mahara-prison-incident-1785630940</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது உள்ளதால், எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அங்கு ஒரு விசேட குழுவை அனுப்பி வைக்குமாறு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது உள்ளதால், எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அங்கு ஒரு விசேட குழுவை அனுப்பி வைக்குமாறு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் (HRCSL) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify;">

ஆயுதமேந்திய படையினர் மஹர சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6277d43e-a393-44f6-abb4-686a1feb7a06/26-6a6e90de3c146.webp' /></p><h2 style="text-align: justify;">பாதுகாப்பு</h2><p>
</p><p style="text-align: justify;">
மஹர சிறைச்சாலை பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை முன்பாக பிரதேசவாசிகள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் பாதுகாப்பு தரப்புடன் தர்க்கம்.
</p><p style="text-align: justify; ">
சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான பணிப்பாளர் சந்திக லொகுஹெட்டி ஆகியோரின் அவசரக் கவனத்திற்கும் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், நிலைமையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செயற்பட வேண்டும் என அக்குழு வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T00:37:17+00:00</updated>
        </entry>
    </feed>
