<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T05:34:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலன் ஒன்று கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-along-horana-colombo-road-blocks-1787981167"></link>
            <id>https://jvpnews.com/article/accident-along-horana-colombo-road-blocks-1787981167</id>
            <summary type="text">&amp;nbsp; ஹொரணை - கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹொரணை - கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837c002d-ebcc-4073-ac73-dab8c498cbf8/26-6a926d716ccaa.webp' /></p><p> </p><p>

கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T05:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T05:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-hike-in-wheat-flour-prices-starting-today-1787978880"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-hike-in-wheat-flour-prices-starting-today-1787978880</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. 

இதற்கமைய, கோதுமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. </p><p>

இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80287ec2-bbd9-41c8-bf8d-af2d9c9e027e/26-6a9264821990c.webp' /></p><p> 

இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் ; சகோதரன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/verbal-altercation-ends-murder-brother-loses-life-1787978635"></link>
            <id>https://jvpnews.com/article/verbal-altercation-ends-murder-brother-loses-life-1787978635</id>
            <summary type="text">&amp;nbsp; தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாகொட பகுதியில் தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தடியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாகொட பகுதியில் தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தடியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>


நேற்று (28) இரவு இடம்பெற்ற தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbac00ba-627e-4a80-883e-eedd68f60f18/26-6a92638d25d70.webp' /></p><h2>28 வயதுடைய சந்தேகநபர் கைது&nbsp;</h2><p>
</p><p>


உயிரிழந்தவர் மஹாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



தங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>



உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:41:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடி கைதான இளம் சீன பெண் தொழிலதிபர்கள் ; அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059</id>
            <summary type="text">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்கிழமை (28) விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய சீன நாட்டுத் தொழிலதிபர்களாக உள்ள பெண்களாவர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34041fa7-b013-456e-a539-cb6b50ab6259/26-6a922b8d908a3.webp' /></p><h2 style="text-align: justify; ">சிகரெட்&nbsp;கொள்வனவு </h2><p style="text-align: justify; ">

இவர்கள் சீனாவில் இந்த சிகரெட்டுகளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">


சந்தேக நபர்கள் கொண்டுவந்த 4 பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட இரு சீனப் பெண்களையும் சுங்கப் பொறுப்பில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் இரட்டை பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288</id>
            <summary type="text">&amp;nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அதாவது செப்டம்பர் 7ஆம் திகதி புதன் பகவான் கன்னி ராசியிலும் அடுத்து இருபது நாட்களில் செப்டம்பர் 26 ஆம் திகதி&nbsp; துலாம் ராசிக்கும் இடம் இடம் மாறுகிறார்.</p><p>


இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். இதில் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில்&nbsp; வாழ்க்கையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7dbc9-3862-4a0c-b9d6-da4e777e7abc/26-6a922f6a92aea.webp' /></p><h2>&nbsp;எந்த ராசிகள்</h2><p>

</p><p><b>

மேஷம்:
</b>மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. அதிலும் தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத வழியில் இவர்களுக்கு பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
</p><p><b>
சிம்மம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டம் புதன் பகவானுடைய இரட்டை பெயர்ச்சி பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவர்களுக்கு தகவல்கள் மற்றும் நினைத்த காரியங்கள் கைகூடிவரும். திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி இவர்கள் செய்து முடிப்பார்கள்.

</p><p><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு பல வகைகளில் நன்மையை வழங்கப்போகிறது. செயல் திறன் அதிகரிப்பதோடு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. நீண்ட நாட்கள் நீங்கள் திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள்.</p>]]></content>
            <updated>2026-08-29T01:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த தந்தையின் நண்பருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437</id>
            <summary type="text">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரவக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5890a7f0-a9ea-4858-b9f6-d04098b06563/26-6a92244766969.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">குறித்த சிறுவன் தனது வீட்டின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு பட்டம் விடச் சென்ற போது&nbsp; &nbsp;சந்தேகநபரான தந்தையின் நண்பரால்&nbsp; துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை&nbsp; விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊருபொக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-29T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரில் கடத்தி, கொல்லப்பட்ட சீன நாட்டவர் ; சீகிரியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-killed-in-port-city-1787961459"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-killed-in-port-city-1787961459</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) சீகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் சீன நாட்டின் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர், சீன நாட்டவர் ஒருவர் பலவந்தமாக கடத்தப்பட்டதுடன், பின்னர் அவரது சடலம் எஹலியகொட பகுதியில் உள்ள வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc086e8-4b26-494f-beed-64f51af30d95/26-6a922074a0cb7.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதுடன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த ஏனைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதற்கமைய, சீகிரியா பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சீன நாட்டவர்களிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T23:57:46+00:00</updated>
        </entry>
    </feed>
