<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T01:42:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp; அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411d3db-eab1-491c-9230-307035f1a00b/26-6aab2e69377a6.webp' /></p><p> </p><p>குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் திகதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a287e1-fa6d-4887-8094-66d4bf50ca29/26-6aab2e6880701.webp' /><br><h3>சிம்மம்
</h3></p><p>சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1bd01a-75ff-47e5-98ef-9c38bfe8d22c/26-6aab2e69e19ad.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407e1da4-dedc-4ba8-8526-45e2751afada/26-6aab2e6a9fd83.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82fda47f-e9df-4c81-8020-5f3cc0d264f0/26-6aab2e6b53b6f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு ; 8 பேர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p> </p><p></p><p>விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bde9773-b5cf-4b4d-8232-039f59438daf/26-6aab373a339bc.webp' /></p><p>வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p> 

இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல மாகாணங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான மழை ; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708</id>
            <summary type="text">இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>
</p><p></p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42eed6d3-fc9c-4374-8a27-25bf11c887df/26-6aab3b370d52f.webp' /></p><p>

மேலும், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6c4ad8-27a0-43b0-b7bf-d6fdcb7498b9/26-6aab1ec71e5a1.webp' /></p><p>

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு உண்ட பின் மறந்தும் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145"></link>
            <id>https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145</id>
            <summary type="text">உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.&nbsp;அதுவும் உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f9e257-a6c4-4bb9-8b65-bb6a00b692eb/26-6aab31342d4df.webp' /></p><p>சொல்லப்போனால் இப்படியான பழக்கங்கள் செரிமானத்தை சீராக்குவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தான் சீர்குலைக்கும். இப்போது உணவு உண்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள் குறித்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5a4ad4-886d-4f87-bf4b-97440fe32f5a/26-6aab313378210.webp' /></p><h4>உணவு உண்டதும் காபி/டீ குடிப்பது</h4><p>
நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டதும் காபி/டீயைக் குடித்தால், அது செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. அதுமட்டுமின்றி, இப்படி காபி/டீயை குடிக்கும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்கு பின் காபி/டீ குடிக்க நினைத்தால், குறைந்தது 1 மணிநேரம் கழித்து அருந்துங்கள்.</p><h4>சாப்பிட்டதும் பழங்களை உண்பது
</h4><p>உணவு உண்ட பின் சிலருக்கு பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். என்ன தான் பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் அது நொதித்தலை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உங்களுக்கு பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ, வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது.</p><h4>சாப்பிட்ட உடனே தூங்குவது</h4><p> அல்லது படுப்பது
உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.&nbsp;</p><h4>அதிகளவு நீரை அருந்துவது
</h4><p>தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான். ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரை குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப் போக செய்து, உணவை செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க நினைத்தால், 30 நிமிடம் கழித்து குடிப்பது நல்லது.</p><h4>உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது
</h4><p>உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியை செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்கு பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாமே தவிர, தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதாக இருந்தால், குறைந்து 1 மணிநேரம் கழித்து செய்யலாம்.</p>]]></content>
            <updated>2026-09-17T00:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246"></link>
            <id>https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் நின்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பிணையில் உள்ளவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என அரசாங்கம் சித்தரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb49ddd-af63-4fd2-965d-e4a7c0cb2496/26-6aab1a2755d75.webp' /></p><p>அதேவேளை, அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலையில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகநபரா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.
</p><p>
தங்களுக்கு அரசியல் ரீதியாக சவால் விடுக்கக்கூடியவர்களை பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையில் அடைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையதாகத் தாம் கூறும் ‘கிரிப்டோகரன்சி சொத்துக்கள்’ மற்றும் ‘மூன்று மாடி வீடுகள்’ தொடர்பிலும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><p>

விமல் வீரவன்ச முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் கருத்துக்களாகும். அவை தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பிலான பதில் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027"></link>
            <id>https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் டெல்லியின் கேசவ்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த புவனி (30) என்பவர் தனது நண்பரான ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b803b2-5e39-481d-bd7f-04cd760a60d6/26-6aab15655859c.webp' /></p><p>இதன்போது, மதுபானக் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்காக புவனியிடம் தீப்பெட்டி கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புவனி தீப்பெட்டியை வழங்க மறுத்துள்ளார்.</p><p>இதனால் அவருக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
</p><p>
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
</p><p>
விசாரணையின் அடிப்படையில் நரேஷ், தருன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 9ஆம் திகதி இரவு பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p> இந்தக் கொலை, துன்னாலை தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையிலான நீண்டகால மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad17ff0-e578-445f-be67-fd007da9fe2b/26-6aab130764530.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி நேற்று பருத்தித்துறை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p>
அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
CCTV காட்சிகளின் அடிப்படையில், நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இருவர் வாள்களுடன் இறங்கி தாக்குதல் நடத்தியமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:07:09+00:00</updated>
        </entry>
    </feed>
