<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-19T11:36:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[245 முறைப்பாடுகள் ; இரு இளம் பெண் உயரதிகாரிகள் செய்த செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339</id>
            <summary type="text">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறித்த நிறுவனம் தொடர்பாக 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்த மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த இரு யுவதிகள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e3aae8-c973-4f33-9f20-de0d1340b0f2/26-6aae6e147c6ef.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்ட இருவரும் அந்நிறுவனத்தின் முதன்மை விற்பனை முகாமையாளராகவும், செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களிடம் இருந்த 04 சொகுசு கார்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இவர்கள் இருவரையும் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரும் வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிகான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T11:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஓயாவில் 3 யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372"></link>
            <id>https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372</id>
            <summary type="text">படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de98442d-23db-4701-b624-8f638c09462c/26-6aae6a4deb860.webp' /></p><p>
</p><p>
 

இவர்கள் அனைவரும் 25 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

 

காணாமல் போனவர்களைத் தேடி பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முயற்சி ; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137"></link>
            <id>https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7793291d-6b7b-44df-a087-be5d8e718201/26-6aae61931e38a.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;பல கட்ட பேச்சுவார்த்தைகள்</h2><p style="text-align: justify; ">

 

இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவூதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் சவூதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டுப் போட்டி ; இன்று ஜப்பான் பயணமாகும் ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/asian-games-rumesh-tharanga-heads-to-japan-today-1789808973"></link>
            <id>https://jvpnews.com/article/asian-games-rumesh-tharanga-heads-to-japan-today-1789808973</id>
            <summary type="text">ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


ருமேஷ் தரங்கவுக்காக விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஈட்டித் தொகுதி விரைவில் ஜப்பானைச் சென்றடையும் என அவரது பயிற்றுவிப்பாளர் ரொனி பிரசன்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba91f679-8fe1-4709-99ca-cf42e1569b6f/26-6aae514edef34.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் முதற்கட்டச் சுற்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி ; அதீத வேகத்தால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881</id>
            <summary type="text">ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49181735-947d-4510-98cb-5e36c0619daf/26-6aae4d0b02655.webp' /></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p>
பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இவ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனினும், முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.</p><p>

அதிக வேகம் காரணமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்துபச்சாரத்தில் பரபரப்பை கிளப்பிய துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308</id>
            <summary type="text">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18)...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றபோதே, விருந்தக ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள்&nbsp; துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b89286-feac-4ff3-a98f-adb7121b010a/26-6aae4ace72b64.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை ; ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-arrest-warrant-for-basil-rajapaksa-1789806466"></link>
            <id>https://jvpnews.com/article/international-arrest-warrant-for-basil-rajapaksa-1789806466</id>
            <summary type="text">வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்டர்போலின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்டர்போலின்&nbsp; கோரப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>


மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் செலவில் 12,000 டீ-ஷெர்ட்களை விநியோகித்தமை தொடர்பான விவகாரங்களில் பசில் ராஜபக்ஷ மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14ef9b4-a117-4769-9355-a4645f96dbf1/26-6aae47842cf18.webp' /></p><p>
</p><p>


இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படும் அவரைக் கண்டறிவதற்கும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்டர்போலின் நீல அறிவிப்பை கோரியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரம் ; சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-mp-to-appeal-to-saudi-king-over-anojan-case-1789801957"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-mp-to-appeal-to-saudi-king-over-anojan-case-1789801957</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். </p><p style="text-align: justify; ">

இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79f4b2a-965c-461a-bb6c-dab5ffc50a90/26-6aae372cdfa54.webp' /></p><h2 style="text-align: justify; ">சவுதி அரேபியாவில் தண்டனை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T07:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலுக்கு சென்ற இளம் பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-young-woman-s-life-1789800981"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-young-woman-s-life-1789800981</id>
            <summary type="text">நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


தொழில் நிமித்தம் நானுஓயாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


தொழில் நிமித்தம் நானுஓயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb10bd0-899d-4092-9124-77d0f2a7828b/26-6aae3216f322b.webp' /></p><h2 style="text-align: justify; ">பிரேத பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T06:56:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற விபத்து ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-accident-leaves-one-seriously-injured-1789800185"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-accident-leaves-one-seriously-injured-1789800185</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c42e3d-8925-4c6e-b002-daa73ef5f9c6/26-6aae2efaaa5f3.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T06:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366"></link>
            <id>https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366</id>
            <summary type="text">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a473efb-2817-43ca-9adc-7705b664fa12/26-6aadf51942d3a.webp' /></p><h2 style="text-align: justify; ">சமூக ஊடக பதிவு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்தக் கருத்தை சில நிமிடங்களில் நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், நீதியுடன் கருணையும் இணைந்திருக்க வேண்டும் என்றும், அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T05:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடன்பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brother-s-brutal-act-against-his-elder-brother-1789797291"></link>
            <id>https://jvpnews.com/article/brother-s-brutal-act-against-his-elder-brother-1789797291</id>
            <summary type="text">அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்குருவாதொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80b0e93-9a9c-4660-8be4-0c05177b375c/26-6aae23acea926.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஹல்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், உயிரிழந்த நபரின் சகோதரரே இக் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T05:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான ஒருவர் ; படகில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-arrest-shock-discovery-in-waiting-boat-1789796350"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-arrest-shock-discovery-in-waiting-boat-1789796350</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேந்தான்குளம் பகுதியில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25747c8d-e937-4aea-b5b1-5a2af5a2ad37/26-6aae20001f976.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரைக் கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளும், ஆமைகளைக் கரைக்குக் கொண்டு வரப் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகளையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T05:39:16+00:00</updated>
        </entry>
    </feed>
