<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T05:31:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559"></link>
            <id>https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; <a href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473" target="_blank">பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா</a>வின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத 'திறந்த தீர்ப்பு' (open verdict) வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரேதப் பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உட்புறக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், மேலதிக விசாரணைகளுக்காக அவரது உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c236e02-2deb-4975-bcfa-c5eccad50144/26-6a97aeb8ad167.webp' /></p><h2>உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை</h2><p>
</p><p>
மாடல் அழகியான சுலா பத்மேந்திரா குமாரபதிரன, ஆகஸ்ட் 31 அன்று பிலியந்தலை, தும்போவில, கங்காராம வீதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இறப்பு தொடர்பான விவரங்களை பிலியந்தலை பொலிஸார் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பதில் நீதவான் சுனேத்ரா பெரேரா சம்பவ இடத்தையும் சடலத்தையும் பார்வையிட்டார்.</p><p></p><p> மேலும், சடலத்தை கலுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி (JMO) மூலம் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதற்கிணங்க, நீதிமன்ற மருத்துவ அதிகாரி மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார்.

முந்தைய நாள் இரவு பத்தரமுல்ல பகுதியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31 அன்று அதிகாலை 5.00 மணியளவில் அந்தத் தொழிலதிபருடன் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அன்று மதியம் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காததால் '1990' அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரைப் பரிசோதித்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். </p><p>இருப்பினும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறை இருந்ததால், அந்தத் தொழிலதிபர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இறந்த மாடல் அழகியின் தாயாரும் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்; </p><p>பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அவரது மரணத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளும் பதிவுகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> இவை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, கண்ணியத்தைக் காக்குமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-02T05:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கொலைகள்; லண்டனில் உள்ள பிள்ளையான் சகாவிற்கு பிடிவிறாந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767" target="_blank">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை</a> செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி கட்டளையிட்டுள்ளது.</p><p>

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8047d0-aab0-42d7-bc96-9f0896ea3472/26-6a97ac34b98aa.webp' /></p><h2>&nbsp;லண்டனில் வசிக்கும் காத்தான்குடி ‘பொலிஸ் பாய்ஸ்’</h2><p>

கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.</p><p></p><p>ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.</p><p></p><p>மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p></p><p>

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீர்த்தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634"></link>
            <id>https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.</p><p> </p><p></p><p>கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>

நேற்று (02) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். </p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d7884c0-7c18-451f-be41-de7b0242f18c/26-6a97a733d4e9e.webp' /></p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் நிவைவு தூபியை சேதப்படுத்திய விசமிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/miscreants-thanthai-selva-memorial-pillar-jaffna-1788323609"></link>
            <id>https://jvpnews.com/article/miscreants-thanthai-selva-memorial-pillar-jaffna-1788323609</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>



தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை - அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e0de29-37fa-433d-a1af-3bbdf501777b/26-6a97a71a9b9d9.webp' /></p><p>



போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.</p><p>இந்த நிலையில், தற்போது திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் வலி.வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>


நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், அதனை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டமூலம் ; மீண்டும் தொடங்குறது மனுக்கள் மீதான விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22nd-amendment-bill-hearing-on-petitions-resumes-1788323133"></link>
            <id>https://jvpnews.com/article/22nd-amendment-bill-hearing-on-petitions-resumes-1788323133</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது.</p><p></p><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d50b1f45-cbde-4bfa-96d1-187e4d2a7306/26-6a97a53e58bf6.webp' /></p><p>

மனுதாரர் தரப்பின் வாதங்கள் நேற்று இரவு சுமார் 10.30 அளவில் நிறைவடைந்தன.
</p><p>
அதன்படி, மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் இன்று மீண்டும் தொடங்குகின்றது.
</p><p>
மேலும் இன்று இடைநிலை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் தரப்பின் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு ; சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-seizure-colombo-port-international-network-1788322697"></link>
            <id>https://jvpnews.com/article/drug-seizure-colombo-port-international-network-1788322697</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>
</p><p></p><p>துபாயில் இருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படும் "பரவி சுதா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரே, இந்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.
</p><p>
அத்துடன் "அங்கொட பிரியந்த" மற்றும் "ரூபன்" என்ற நபர்களும் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6bc26d-6921-486e-b786-cff0e0c63bb1/26-6a97a38aec0ab.webp' /></p><p>கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முன்றலில் கடந்த 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட தகவல் வழங்குநரிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்துஇ சிரேஷ்ட காவல்துறை மாஅதிச்சரகத்தின் ஊடாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவைப் பெற்றுஇ காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கைச் சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.</p><p>

இந்தக் கொள்கலன் மொரோக்கோவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்துவதே உண்மையான நோக்கமாகும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>

கொழும்பைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் உட்பட பாகிஸ்தானிய நாட்டவர்கள் இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-next-24-hours-notice-fishermen-1788321958"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-next-24-hours-notice-fishermen-1788321958</id>
            <summary type="text">சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படக்கூடும்.
</p><p>
இதனிடையே, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc354fa4-ff9b-49b9-b4b2-9fb51da9fb3b/26-6a97a0a79bd94.webp' /></p><p>மேலும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
</p><p>
இதன் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பரப்புகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை ; இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888</id>
            <summary type="text">காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி தனது பாட்டியுடன் கதிர்காமத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது பேருந்தில் சந்தேகநபரை சந்தித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c178b16-832d-48fb-b26e-19bbb9f00c0c/26-6a979c79a2cfc.webp' /></p><p> இதனையடுத்து இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், சந்தேகநபர் சிறுமியை தலவாக்கலை நகரத்திற்கு அழைத்துச் சென்று, திம்புல பகுதியில் உள்ள குயிங்கிரி தோட்டத்தில் தனக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அங்கு சிறுமியை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி நன்னடத்தையின் அடிப்படையில் அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>சந்தேகநபர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501</id>
            <summary type="text">துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கங்கொடவில பகுதியில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கங்கொடவில, நுகேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d43669-935e-46ed-80fa-fc697f6a2509/26-6a97970eb0ff6.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவியாகந்த வீதிப் பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு இச்சந்தேகநபர் உதவி புரிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகநபரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இக்குற்றச்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள், கடந்த ஜூலை 19ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள மயானத்தில் வைத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கும், ஜூலை 21ஆம் திகதி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விகாரை வீதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவத்திற்கும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414"></link>
            <id>https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><h3>

முதற்கட்ட விசாரணை</h3><p>கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b4eec2-727c-4d83-903f-6c6e0659b422/26-6a9792d07067a.webp' /></p><p> 

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857"></link>
            <id>https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இலங்கை இசைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த பிரியங்கர பெரேரா, பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தார்.</p><p>

மறைந்த பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தந்தையின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து இலங்கை இசைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2aeefe-785c-40f9-af56-144626865b33/26-6a9790a2ca85b.webp' /></p><p>அவரது குரலில் வெளியான ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
</p><p>
பாடகராக மட்டுமன்றி, பிரியங்கர பெரேரா ஒரு திறமையான நடிகராகவும் கலைத்துறையில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார். </p><p>இசை மற்றும் நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிய அவர், பல ஆண்டுகளாக கலைத்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரது மறைவு இலங்கை கலைத்துறையினருக்கும், அவரது இசையை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
அன்னாரின் மறைவுக்கு கலைத்துறையினர், சக பாடகர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால்,&nbsp; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eaa7f16-bdfe-47d5-a76c-c01b1c6205f9/26-6a97710ea8765.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:13:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச ராஜயோகத்தில் சனி பகவான் ; உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536</id>
            <summary type="text">&amp;nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.</p><p style="text-align: justify; ">சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c3a1b7-892d-407c-bc03-c4ad582df10c/26-6a9777f21db79.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்தெந்த ராசிகள்</h2><p style="text-align: justify; "><b>ரிஷபம்:
</b>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:
</b>சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறை தொட்டியில் பச்சிளம் சிசுவை கைவிட முயன்ற இளம்பெண் ; பொதுமக்கள் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841</id>
            <summary type="text">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
30 வயதுடைய குறித்த பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c164ac59-2d19-4d69-9c84-64a5f55e511c/26-6a976d6b25b19.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; ">

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன், அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண், குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T00:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பரீட்சைக்கு அழைத்து சென்ற தந்தையின் உயிரை பறித்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493"></link>
            <id>https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493</id>
            <summary type="text">அநுராதபுர தலைமையக பொலிஸ்&amp;nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&amp;nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுர தலைமையக பொலிஸ்&nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8308a68-4403-465d-97dc-79b60b5f0d6a/26-6a97643e9ce4e.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T23:48:21+00:00</updated>
        </entry>
    </feed>
