<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T17:45:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது வளைவுப் பாலத்தில் வெடிப்பு ; சமூக ஊடக செய்தி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203</id>
            <summary type="text">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற &#039;ஒன்பது வளைவுப் பாலத்தில்&#039; புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஒன்பது வளைவுப் பாலத்தில்' புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி முற்றிலும் தவறானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அண்மைய நாட்களில் ஒன்பது வளைவுப் பாலத்தில் புதிய வெடிப்புகளோ அல்லது ஆபத்தான நிலைமையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a757119-8c44-407a-adff-483ebddbec15/26-6a8b2a3585f18.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலத்தில் நீர் கசிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இப் பாலத்தில் நீர் கசிவு மற்றும் வெடிப்பு தொடர்பான தகவல்கள் பரவிய போது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள நிபுணர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலத்தின் கட்டமைப்பில் எந்தவிதமான வெடிப்புகளோ அல்லது ஆபத்தான குறைபாடுகளோ இல்லை என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஆண்டு நிலவிய ஒரு செய்தியை மையமாக வைத்து, புதிதாக வெடிப்பு ஏற்பட்டுப் பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T17:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி ; சாரதிக்கு நேர்ந்த கதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321"></link>
            <id>https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321</id>
            <summary type="text">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நபரொருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' புகையிரதத்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19739fdc-0de4-404b-ac92-d1776308a9fe/26-6a8b1ef3caec5.webp' /></p><h2 style="text-align: justify; ">போராட்டத்தில் மக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்பு கடவை இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் புகையிரதப் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதித் புகையிரதப் பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "> 

பின்னர் பொலிஸார் தலையிட்டு, புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டதுடன், தற்போது அந்தப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹபரனையில் காட்டுத்தீ ; 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643"></link>
            <id>https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643</id>
            <summary type="text">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே தீ மூட்டியிருக்கலாம் என வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c4e804-e436-474c-a652-c544b798e09a/26-6a8b186620780.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஹபரணை வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபரனை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பணவீக்கத்தில் பதிவான அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138"></link>
            <id>https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138</id>
            <summary type="text">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜூலையில் 0.7 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59768d7d-f832-412a-90df-e041a0d1121a/26-6a8b1283f123c.webp' /></p><h2 style="text-align: justify; ">உணவுப் பணவீக்கம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், ஜூலையில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, உணவல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 9.3 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உணவுப் பணவீக்கம் அதிகரித்த போதிலும், ஜூலை மாதத்தில் பதிவான ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு உணவல்லாத பொருட்களே பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T15:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438"></link>
            <id>https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h3>மேலதிக தீவிர விசாரணை</h3><p>
</p><p>
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47657e31-b95f-49be-8782-5c407fec0fd0/26-6a8ae8b83bdad.webp' /></p><p>

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p>

மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
</p><p>
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி ஓட்டும் வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? ; அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772"></link>
            <id>https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772</id>
            <summary type="text">முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். 

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p><p> 

பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c865481-bd30-41f7-9aff-723214b79d66/26-6a8ade4e144ba.webp' /></p><p>மேலும், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே தங்கியுள்ளது என்றும், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே சுட்டிக்காட்டுகிறார். </p><p>

அதற்கமைய, ஒரு அரசாங்கமாக மனித வள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். </p><p>

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, 

எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே உள்ளது.</p><p>அபிவிருத்தியடைந்த மனித வளமே என்றாவது ஒருநாள் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும். ஒரு அரசாங்கமாக நாம் மனித வள மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறோம்.</p><p></p><p> </p><p>

அதற்காகவே கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். 

இந்த கல்வியில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் நம்புகிறோம்.</p><p> 

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்தும் வயதையும் 40 ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். </p><p>

பாடசாலை சென்று முடிந்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வர முடியாது எனக் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:49:40+00:00</updated>
        </entry>
    </feed>
