<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T13:04:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வங்கி அதிகாரி பிரபல ஹோட்டலில் செய்த காரியம்; பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.</p><p>

கடந்த 03 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டலுக்கு வருகை தந்த நபரொருவர், தான் ஒரு முன்னணி தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ec5568-ba92-40ce-a2a0-373b1a7c4da7/26-6a8843d98b721.webp' /></p><h2>பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு ஓட்டம்</h2><p>
</p><p>
 தனது வங்கி ஊழியர்கள் இரவு விருந்திற்காக வருகை தரவுள்ளதாகக் கூறி, பெருமளவிலான உணவுகளை ஓடர் செய்ததை தொடர்ந்து, ஹோட்டலில் ஊழியர்கள் பணியில் தீவிரமாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p> 

இச் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், இச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கருவாத்தோட்டம், பேலியகொடை மற்றும் நுகேகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதே பாணியில் மோசடிகளைச் செய்து திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>

சந்தேகநபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளடன், இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (கொம்பனிவீதி): 071-8591561

கொம்பனிவீதி பொலிஸ் நிலையம்: 011-2433829&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ர தங்கம் பாவம்; யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334"></link>
            <id>https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3c31ff-b7f2-4225-ba50-2667664ab443/26-6a8838d02f835.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452"></link>
            <id>https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது.</p><p>
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910deef-2b2a-44c8-8dbd-ff8acea46d1d/26-6a87feae4d898.webp' /></p><p>
</p><h2>&nbsp;கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்</h2><p>இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.</p><p>
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083bad8-0591-43ff-a5be-7c09f2afc38a/26-6a8819a638212.webp' /></p><p></p><p>
</p><p>
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9460aa-bcd0-40f5-b8f2-2bdee99fcca0/26-6a882fa75c52b.webp' /></p><p>
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>அதேவேளை&nbsp; ஆலய திருவிழாக்கள்&nbsp; தற்போது&nbsp; கேளிக்கை கூடமாக மாறி வருவதாக&nbsp; சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f19575-ed0e-4587-95e0-7f7ce4d44099/26-6a882fa839241.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகாளுக்கு இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது. </p><p>

இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeb11805-f070-48c9-b3ec-4be3e13c491b/26-6a8836d4877c7.webp' /></p><h2>&nbsp;அக்ஹார காப்பீட்டுத் தொகை</h2><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p> 

இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது. </p><p>

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, இவ்வாறான எதிர்பாராத சந்தர்ப்பங்களில், குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தையும் முழுமையாகப் பெறாமல், இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை மிக விரைவாகவும் துரிதமாகவும் வழங்க காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.</p><p> 

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மாத்திரமன்றி, மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T11:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6d1da-b07c-47e9-b6c8-49a9842a3ea9/26-6a8823beca16d.webp' /></p><p> </p><p>

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86c828c-38eb-4529-b83e-f050220a1eb1/26-6a882ffca7165.webp' /></p><h2>&nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்&nbsp;&nbsp;அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc3a2f3-d94d-48ad-ba98-fba942116361/26-6a882ffd979b0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T10:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் தொடர்பில் தற்காலிக நடைமுறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282"></link>
            <id>https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹுருபாய' கட்டிடத்தின் 17வது மாடியில் இயங்கி வரும் சான்றளிப்புப் பிரிவின் கணினி முறைமை, நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயலிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49df860a-1700-492a-91a0-4a533580d06c/26-6a88212bbeb09.webp' /></p><p>
</p><p>
இக் கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை பொதுமக்கள் பின்வரும் தற்காலிக நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk என்ற முகவரிக்குச் சென்று, "Download Application" என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p></p><p>இலங்கை அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் ஒளிப்ப பிரதிகளை clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
இத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது தற்போதைக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இவ்வாறாக மின்னஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்குரிய பின்னணி அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
முறைமை சீரமைக்கப்பட்ட பின்னர், இத் தற்காலிக வழியில் விண்ணப்பித்த அனைவரும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இணையவழி மூலமாக மீண்டும் ஒருமுறை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளவர்களில், சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளவர்களின் குறிப்பு எண்கள் பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.</p><p></p><p>
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17வது மாடிக்குச் சென்று வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினி அமைப்பு சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
</p><p>

அமைப்பை விரைவாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சீரமைக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T09:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584</id>
            <summary type="text">&amp;nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099" target="_blank">நாமல் ராஜபக்ஷ </a>அங்கிருந்து வௌியேறியுள்ளார். </p><p>

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (21) முற்பகல் அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeec952-5b06-49b4-a4d0-a2d1c6b17e23/26-6a881e7224338.webp' /></p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T09:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்; சோகத்தில் திரையுலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-sowcar-janaki-passes-away-1787303794"></link>
            <id>https://jvpnews.com/article/actress-sowcar-janaki-passes-away-1787303794</id>
            <summary type="text">&amp;nbsp; பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) காலமாகியுள்ள நிலையில் அவரது மறைவு திரையுலகில் பெரும் துரத்தை ஏற்படுத்தியுள்ளது.பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) காலமாகியுள்ள நிலையில் அவரது மறைவு திரையுலகில் பெரும் துரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fec8ad-3883-42e7-a7e5-2860ec5c1408/26-6a88177409960.webp' /></p><h2>சினிமாவில் கோலோச்சிய நடிகை</h2><p>ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய நடிகை தான் சௌகார் ஜானகி.</p><p>‘வளையாபதி’ என்கிற படத்தில் 1952ல் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றிவிழா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.</p><p></p><p>
</p><p>94 வயதாகும் அவருக்கு சில தினங்கள் முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இன்னிலையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T09:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத நிகழ்வுகளுக்கு யானை வழங்குவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gazette-notification-elephants-religious-events-1787303194"></link>
            <id>https://jvpnews.com/article/gazette-notification-elephants-religious-events-1787303194</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தலதா பெரஹர மற்றும் பிற மத நிகழ்வுகளுக்கு வளர்ப்பு யானைகளை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தலதா பெரஹர மற்றும் பிற மத நிகழ்வுகளுக்கு வளர்ப்பு யானைகளை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
</p><p>


பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர், எந்தவொரு கலாசார நிகழ்விற்கும் யானைகளை வழங்குவது தொடர்பில் எத்தகைய தடைகளையும் அல்லது கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66a24845-75b6-406b-bb40-8c7b4c7ce515/26-6a88151b7d11b.webp' /></p><p>


குறித்த கலாசார நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் வசதிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இது தொடர்பாக எதிர்காலத்தில் நிபுணர் குழுவொன்றுடன் இணைந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்</p>]]></content>
            <updated>2026-08-21T09:03:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியை தாக்கியதில் சிறுவன் பரிதாப உயிரிழப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-boy-dies-slapped-by-teacher-1787300379"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-boy-dies-slapped-by-teacher-1787300379</id>
            <summary type="text">&amp;nbsp; ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பரிதாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 வியாழக்கிழமை காலை மிகுந்த உற்சாகத்துடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், மதிய வேளையில் திடீரென மயங்கி விழுந்ததாகக் இந்திய ஊடகங்க்காள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafa3df1-5bfa-41ea-9a73-cfd31d69bad3/26-6a880a1ccf5ba.webp' /></p><h2>அதிர்ச்சியிலும் பயத்திலும்&nbsp; &nbsp;சரிந்து விழுந்த&nbsp;சிறுவன் </h2><p> 

 "பாடசாலை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, ஆசிரியர் தடியால் மிரட்டித் தாக்கியது பதிவாகியுள்ளது. அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் அவன் சரிந்து விழுந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அந்த ஆசிரியர் இதுபோன்று ஏனைய மாணவர்களையும் அடித்துத் துன்புறுத்துவதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p></p><p>
உயிரிழந்த சிறுவனின் உடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச கல்வித்துறை, இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p>

சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, பிராந்திய இணை இயக்குநர் (RJD), மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T08:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வீடு இருக்க .. ஏன் அரசு பங்களாவில் இருக்கிங்க.. சபையில் உதயநிதி மீது விளாசல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-assembly-live-udhayanidhi-aadhave-clash-1787301513"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-assembly-live-udhayanidhi-aadhave-clash-1787301513</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக சட்டசபையில், உங்களுக்கு 3 சொந்த வீடு இருக்கே , எதற்காக வீங்க்கள் அரசு பங்களாவில் இருக்கிறிங்க்க என உதயநிதியிடம் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக சட்டசபையில், உங்களுக்கு 3 சொந்த வீடு இருக்கே , எதற்காக வீங்க்கள் அரசு பங்களாவில் இருக்கிறிங்க்க என உதயநிதியிடம் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் வந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659da1a3-5174-4589-886e-2ef1d7179d38/26-6a880e8af3499.webp' /></p><p>அவர்கள் பலரிடமும் கார் வசதி இல்லை என்பதுடன் உதவியாளரை வைத்துக் கொள்ளவும் வசதி இல்லை.
 
 இன்னிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு புதிய கார் வாங்கி கொடுக்கப்படும் எனவும், கார் மற்றும் உதவியாளர் வைத்துக் கொள்ள நீதி உதவியையும் அறிவித்தார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">திமுக 59 எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டாம்&nbsp;</span></p><p>

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே திமுக கஜானாவை காலி செய்துவிட்டது என்று சொன்னார்கள்.</p><p></p><p> </p><p>ஆனால் தற்போது இலவசமாக கார்களை கொடுக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.. ஆனால் திமுகவை சேர்ந்த 59 எம்.எல்.ஏக்களுக்கும் கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு எனக் கூறினார்.

அதன்பின் கார் தொடர்பாக பல திமுக எம்.எல்.ஏக்களும், தவெக எம்.எல்.ஏக்களும் கருத்து தெரிவித்தார்கள்.</p><p></p><p> </p><p>

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு மூன்று வீடுகள் உள்ளது. ஆனால் அரசு பங்களாவில் இருக்கிறார்.. உங்களுக்கு சொந்த வீடு உள்ளதே எதற்கு அரசு பங்களா வேண்டும் என கேள்வி எழுப்ப முடியுமா?’ அதுபோலத்தான் இதுவும்’ என பதிலடி கொடுத்தார்.</p>]]></content>
            <updated>2026-08-21T08:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீர் கலந்த தண்ணீரைக் மாணவிகளுக்கு குடிக்க கொடுத்த மாணவன்; சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776"></link>
            <id>https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அரோன் வட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிநீரில் ஏதோ கலந்திருப்பதை அறிந்து சிறுமிகள் இருவரும் உடனடியாகப் பாடசாலை அதிபரிடம் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8525891e-e83f-449d-b7ba-a334f1cf7eb2/26-6a87e88239af5.webp' /></p><h2>சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்</h2><p> </p><p>

எனினும் அதிபர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "வாய் ஒருமாதிரியாக இருந்தால் 10 ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து பாடசாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த மாணவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்த அதிபருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அரோன் துணைப் கோட்டாட்சியர் மஞ்சுஷா கத்ரி தகவலின்படி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கனத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் மேலும் சில ஆண் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-21T07:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-the-2027-school-timetable-1787296753"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-the-2027-school-timetable-1787296753</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் 2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையை உள்ளடக்கிய சுற்றறிக்கை இலக்கம் 31/2026 ஐ கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

2027 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை நாட்களைக் கருத்தில் கொண்டு மொத்தம் 197 நாட்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இயங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd8c6a6-ed0c-427b-a334-b3708c61ef3e/26-6a87fbf30d30f.webp' /></p><h2>197 நாட்கள் கற்றல் நடவடிக்கை</h2><p>

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி வரையும், இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரையும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரையும் நடைபெறும்.</p><p></p><p>
</p><p>

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகள் பிரத்யேகக் நாட்காட்டியின்படி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

2027 ஆம் ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>
ஏதேனும் விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாள் இரத்துச் செய்யப்பட்டால், குறித்த 197 பாடசாலை நாட்களையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில் ஈடுசெய்யும் வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T07:16:56+00:00</updated>
        </entry>
    </feed>
