<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T21:34:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140"></link>
            <id>https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140</id>
            <summary type="text">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76cef57-75b6-48f8-9676-2bbae4aeb2e1/26-6a8e00865bc4a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T21:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிழ் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581"></link>
            <id>https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581</id>
            <summary type="text">இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். </p><p>

இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஒஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b06a54-40db-4548-ada1-5dafe462f4b6/26-6a8dfe56af078.webp' /></p><p> </p><p>

அதன்படி, இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு, </p><h3>

தூதுவர்களாக:</h3><p>&nbsp;Jorge Geraldo Kadri - பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர், Wei Huaxiang - சீன மக்கள் குடியரசின் தூதுவர், கலாநிதி Robert Zischg - ஆஸ்திரிய குடியரசின் தூதுவர், Eric S. Meyer - அமெரிக்கத் தூதுவர், Francisco Manuel Comprés Hernández - டொமினிகன் குடியரசின் தூதுவர், கலாநிதி Mohammed Abdalla Ali Eltom - சூடான் குடியரசின் தூதுவர், Nubiela Yanarith Ayala - பனாமா குடியரசின் தூதுவர்</p><p></p><h3> 

உயர்ஸ்தானிகர்களாக 

</h3><p> D.M. Salahuddin Mahmud - பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர், பேராசிரியர் Kwasi Obiri-Danso - கானா குடியரசின் உயர்ஸ்தானிகர், Siti Arnyfariza Md Jaini - புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர், Dharamkumar Seeraj - கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகையான இஞ்சி மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862"></link>
            <id>https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862</id>
            <summary type="text">மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> 

கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்த இஞ்சி தொகையானது&nbsp; கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047416f7-0bbd-4183-95f8-7c905aa17b3b/26-6a8df3b7ceb72.webp' /></p><h2>சோதனை</h2><p> 

அதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் இருந்த சந்தேகத்திற்கிடமான 2 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.</p><p> 

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கடத்தல்காரர்களால் அந்த கடற்கரைப் பகுதிகளில் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமிற்கும் அதிகமான உலர் இஞ்சித் தொகை கடற்படையினால் மீட்கப்பட்டது.</p><p></p><p> 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் இஞ்சித் தொகை முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T19:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை புசித்த விருந்துபசாரம் ; அயல் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024"></link>
            <id>https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024</id>
            <summary type="text">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10094622-59eb-49e2-a8e8-f9e519d0aafe/26-6a8de4ba19300.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது, குறித்த நபருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">

இதன்போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T19:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரிடம் வசமாக பிடிபட்ட இளம்பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-red-handed-by-police-1787682923"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-red-handed-by-police-1787682923</id>
            <summary type="text">கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் மொறட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெரேரா மாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06b3413-b871-4f38-a8bf-26ac4fae7566/26-6a8de06d1bd22.webp' /></p><h2 style="text-align: justify; ">கைது நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T19:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fisherman-drowns-to-death-at-sea-in-kalpitiya-1787681593"></link>
            <id>https://jvpnews.com/article/fisherman-drowns-to-death-at-sea-in-kalpitiya-1787681593</id>
            <summary type="text">கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கடலில் வலையை வீசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கடலில் வலையை வீசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">ஜனசவிபுர கடற்கரை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (24) காலை குறித்த மீனவர் மேலும் சில மீனவர்களுடன் இணைந்து, மீன்பிடி படகு ஒன்றில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d93d8f4-a96b-4945-912d-c978d58331d1/26-6a8ddcd2bfcd7.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பக்கட்ட விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இதன்போது அம்மீனவர் மீன்களைப் பிடிப்பதற்கு வலை வீசிக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"> இதன்போது விரைந்து செயற்பட்ட சக மீனவர்கள் அவரை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

விபத்தில் உயிரிழந்த மீனவர் 56 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-25T18:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 பேர் இதுவரை இலங்கைக்கு ;பொலிஸ் ஊடகப் பேச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608"></link>
            <id>https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608</id>
            <summary type="text">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் ஊடகப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c5fc6e-4acf-4b31-a1be-4e16aae0da7a/26-6a8dcc951ab36.webp' /></p><h2 style="text-align: justify; ">சிவப்பு எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">
நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர அரச பொறிமுறை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மாஅதிபரின் நேரடி மேற்பார்வையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">அதன்படி, சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
மேலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேக நபர்களையும் எதிர்வரும் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765"></link>
            <id>https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>


குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527fcd05-9958-49f3-a26d-57530dd13326/26-6a8d77f0313e7.webp' /></p><h2>அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறை&nbsp;</h2><p> 

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர்கள் மிகுந்த அவதானம் ; குழந்தைகளுக்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்யுள்ளார்</p><p style="text-align: justify;">
 

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdbc85-d2e5-4396-a208-cf4a2d252f8a/26-6a8dc5b41526b.webp' /></p><h2 style="text-align: justify;">பாதுகாப்பு நடவடிக்கை</h2><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p style="text-align: justify;">

 

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p style="text-align: justify;">

 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.
</p><p style="text-align: justify;">
 

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-25T16:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி சாரதிக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் ; அமைச்சரின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719"></link>
            <id>https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719</id>
            <summary type="text">&amp;nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/950970b4-f9c6-407a-83de-d9f4bdb888c3/26-6a8dbc792b19d.webp' /></p><h2 style="text-align: justify; ">தொழிற்கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த நிலையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.</p><p style="text-align: justify; ">

அரசாங்கம் உரிய பரிசீலனைகளை மேற்கொண்டதன் பின்னர், நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T16:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; கோரப்பட்ட விண்ணப்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்தப் பரீட்சைக்காக இன்று (25) முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3cff23-da60-4400-abe3-0800a986bc4e/26-6a8db79629eba.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T15:37:23+00:00</updated>
        </entry>
    </feed>
