<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T13:40:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு: பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ag-appeals-against-bail-in-sarath-fonseka-case-1789304529"></link>
            <id>https://jvpnews.com/article/ag-appeals-against-bail-in-sarath-fonseka-case-1789304529</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு பிணை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27db14c3-b562-4c14-b713-6b08bc10b7a8/26-6aa69ed291446.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்கு விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சட்டமா அதிபர் தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தம்பையா பிரகாசனுக்கு 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், நான்கு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">



2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தம்பையா பிரகாசனுக்கு எதிராக, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் நாய்களை வளர்ப்போருக்கு முக்கிய தகவல் ; வெளியான வர்த்தமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-information-for-dog-owners-at-home-1789303783"></link>
            <id>https://jvpnews.com/article/important-information-for-dog-owners-at-home-1789303783</id>
            <summary type="text">நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் வெறிநோயை முற்றிலும் ஒழிப்பதையும், நாய் தொகையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போதைய விசர்நாய் கடி ஒழிப்பு அவசரச்சட்டம் மற்றும் நாய் பதிவு அவசரச்சட்டம் ஆகியவை இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டக் கட்டமைப்பு அமுலுக்கு வரும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c3aabd-d1a3-45e3-b2e4-917ed98e5908/26-6aa69be8efc7c.webp' /></p><h2 style="text-align: justify; ">தண்டப்பணம்</h2><p>
</p><p style="text-align: justify;">
06 வாரங்களுக்கு மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள், தங்கள் நாய்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை விசர்நாய் கடி தடுப்பூசி போடுவதையும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தில் பதிவு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
</p><p style="text-align: justify; ">

கட்டணம் செலுத்தி பதிவு செய்த பின், உள்ளூராட்சி சபையில் பதிவு எண் மற்றும் சான்றிதழை வழங்கும்.</p><p style="text-align: justify;">

அதிகாரம் பெற்ற அதிகாரி கேட்கும்போது செல்லுபடியாகும் தடுப்பூசி அல்லது பதிவு சான்றிதழைக் காட்டத் தவறினால், 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தகுந்த காரணம் இருந்தால் மேலும் 14 நாட்கள் வழங்கப்படும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றாவிட்டால், பதிவு கட்டணத்துடன் ரூ. 2,000 தண்டப்பணம் விதிக்கப்படும்.
</p><p style="text-align: justify;">
உள்ளூராட்சி சபைகள் விசர்நாய்களைப் பிடித்து கருத்தடை/ஸ்டெர்லைசேஷன் செய்து, அவை குணமடைந்த பிறகு பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் விட வேண்டும்.
</p><p style="text-align: justify;">
வர்த்தக ரீதியாக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் மையங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் உரிமம் பெற வேண்டும். விதியை மீறினால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 2 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

</p><p style="text-align: justify; ">பொது இடங்களில் நாய்களைக் கைவிட்டால் ரூ. 10,000 வரை தண்டப்பணம், 3 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும்.
</p><p style="text-align: justify;">
நாய்கள் நபர்களையோ அல்லது பிற விலங்குகளையோ தாக்கினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காயங்களுக்கு நாய் உரிமையாளரே சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
</p><p style="text-align: justify;">
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு முழுமையாக அமுலுக்கு வரும்.</p>]]></content>
            <updated>2026-09-13T12:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்குள் அரங்கேறிய வெறிச்செயல் ; இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-act-on-bus-leaves-two-youths-injured-1789302634"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-act-on-bus-leaves-two-youths-injured-1789302634</id>
            <summary type="text">புத்தளம் - சிலாபம் நகரின் பண்டாரவத்தை பகுதியில் தனியார் பஸ்ஸுக்குள் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் - சிலாபம் நகரின் பண்டாரவத்தை பகுதியில் தனியார் பஸ்ஸுக்குள் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


காயமடைந்த இருவரும் மதம்பை – மெதகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eae5181-366f-46a0-91b9-10a72f0e7699/26-6aa697fce5c0b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; ">


தாக்குதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் முதலில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


மற்றைய இளைஞர் பாதுகாப்புத் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதுடன், அவர் தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p style="text-align: justify; ">



கடந்த 10ஆம் திகதி மாலை, தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு அன்றாட பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸுக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

</p>]]></content>
            <updated>2026-09-13T12:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடு வீதியில் இளைஞனுக்கு அரங்கேறிய சம்பவம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-youth-unfolds-in-middle-of-road-1789299760"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-youth-unfolds-in-middle-of-road-1789299760</id>
            <summary type="text">அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இன்று (13) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இன்று (13) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7815351d-968e-4840-9071-c534861e4d06/26-6aa68c318542a.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">



பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற வேளையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


விபத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T12:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வெளியுறவுச் சேவையின் முதல் பெண் அதிகாரி காலமானார்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-female-envoy-dies-1789299059"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-female-envoy-dies-1789299059</id>
            <summary type="text">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p style="text-align: justify; "> இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335edbb1-23a2-4640-aac1-3639db2739dc/26-6aa68975345e8.webp' /></p><h2 style="text-align: justify; ">முதல் பெண்</h2><p style="text-align: justify; ">

1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.
</p><p style="text-align: justify; ">
அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.
</p><p style="text-align: justify; ">
ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.

1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
</p><p style="text-align: justify; ">
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T11:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871</id>
            <summary type="text">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். </p><p style="text-align: justify; ">
 
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7407d0c2-dc15-4590-87b7-1897dedd42b3/26-6aa684d683463.webp' /></p><h2 style="text-align: justify; ">திட்டமிட்ட கொலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; "> 
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
வினீத்தின் முன்னாள் ஊழியரான&nbsp; மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T11:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகும் வரை ஈழம் கேட்க மாட்டேன் ; அர்ச்சுனா எம்.பியின் பேச்சுக்கு விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771"></link>
            <id>https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e738b9-67d0-44ee-9909-836c4cf97f7b/26-6aa67c9d37a49.webp' /></p><h2 style="text-align: justify; ">அரசியல் தீர்வு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தனக்கு "கருநாக்கு" இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p style="text-align: justify; ">அர்ச்சுனா எம்.பியின் இந்த கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T10:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் கரையொதுங்கிய இனந்தெரியாத ஆணின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unidentified-man-s-body-washes-ashore-1789294585"></link>
            <id>https://jvpnews.com/article/unidentified-man-s-body-washes-ashore-1789294585</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.</p><p>

சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1502204-b4bb-4792-a65d-169d9f90cfdd/26-6aa677fabd10f.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
</p><p>
மேலும், இச்சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளில் காரைதீவு பொலிஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T10:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு பெண்களுடன் கைதான 5 பேர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-arrested-along-with-two-women-1789292770"></link>
            <id>https://jvpnews.com/article/five-arrested-along-with-two-women-1789292770</id>
            <summary type="text">கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 5 பேர் போதைப்பொருட்களுட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 5 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99d681a-4ddc-4cf8-a922-843cd30c64fe/26-6aa670e36094a.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன்போது 7 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 32 கிராம் ஹஷிஷ், 4 கிராம் ஹெரோயின், 20 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.108,400 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி தெஹிவளை, நெதிமல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T09:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞன் ; இரவில் அரங்கேறிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391</id>
            <summary type="text">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5002ede-8c36-47a3-a537-172e4ecad19a/26-6aa66b86c7a12.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலைச் சம்பவம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த இளைஞனுக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T09:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கடைகளில் அரங்கேறிய சம்பவம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-unfolds-at-shops-in-tamil-area-1789289073"></link>
            <id>https://jvpnews.com/article/incident-unfolds-at-shops-in-tamil-area-1789289073</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98986182-67c9-43c3-bcf3-8846099a813f/26-6aa66273381fd.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">

கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பணிப்பாளர்&nbsp; தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T08:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543</id>
            <summary type="text">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7478c07-9f1c-49e2-bde8-97bd0b4c931b/26-6aa65c793a427.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T08:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2724bcef-0b19-4f20-9419-6322d79805d3/26-6aa62cf3b0bdd.webp' /></p><h2 style="text-align: justify; ">வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397"></link>
            <id>https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இரவில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர்கள் ஆவார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் மாலை 06.00 மணியளவில் டுபாயிலிருந்து 'எமிரேட்ஸ்' விமானச் சேவைக்குச் சொந்தமான EK-654 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf6f317-b461-45f1-a036-6dd1b3bce86b/26-6aa657fff01de.webp' /></p><p>
</p><p>
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 1,06,600 சிகரெட்டுகளைக் கொண்ட 533 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>மேலும், கைது செய்யப்பட்ட இரு வர்த்தகர்களையும் சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-over-severe-lightning-strikes-1789285007"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-over-severe-lightning-strikes-1789285007</id>
            <summary type="text">கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


குறித்த பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ce52da-d982-4d49-a52c-edba9250d9f6/26-6aa653030646c.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்னெச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இன்று (13) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><p style="text-align: justify; ">


இதன்படி, கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T07:42:42+00:00</updated>
        </entry>
    </feed>
