<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T16:45:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறுவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012"></link>
            <id>https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012</id>
            <summary type="text">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f089624-aeac-46f2-a3a1-0e0739b34b4d/26-6a60f0de50eb7.webp' /></p><h2 style="text-align: justify; ">டிஜிட்டல் கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0486d194-c9ac-42fe-a901-f7979591ebfd/26-6a60f210e96f0.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T16:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இரண்டு பெண்கள் உட்பட 7 இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914"></link>
            <id>https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914</id>
            <summary type="text">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0b6ec7-90ed-49de-b2eb-f1e124553f41/26-6a60e8ac5e0d9.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆட்கடத்தல் நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify; ">

தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவியுள்ளன. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரைத் தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இல்லாத காரணத்தினால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) ஆகியவற்றின் புலனாய்வு மற்றும் பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே 38 வயதுடைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவராக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் தலைமைப் பணிப்பாளர் டாதுக் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">

வேலை வாய்ப்புகள் மற்றும் பணி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணிபுரிவதற்காகவே பாதிக்கப்பட்ட பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">பாதிக்கப்பட்ட பெண் சம்பளம் வழங்கப்படாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், போதிய உணவு வழங்கப்படாமல் அவரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தலாக உடலிரீதியான வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாததால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102"></link>
            <id>https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102</id>
            <summary type="text">தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f1cbfc-d391-475b-a765-be92eaba6a09/26-6a60e5800ff73.webp' /></p><p> </p><p>

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது. </p><p>

அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு; 6 மாதங்களில் 9 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க,
</p><p>2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், பொருட்கள் மற்றும் சேவை ஆகிய இரு துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9,012.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9645bc-8fc2-4a6a-8127-6de5dd47c267/26-6a60c071a571a.webp' /></p><h2>அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம்</h2><p> </p><p>

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும். 

2026 இன் முதல் அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,073.31 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.95% அதிகரிப்பாகும். 

இக்காலப்பகுதியில் சேவை ஏற்றுமதித் துறையும் 4.49% வளர்ச்சியைப் பதிவு செய்து 1,938.94 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

2026 ஜூன் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,658.62 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12.53% வளர்ச்சியாகும். </p><p>

இதில் பொருட்கள் ஏற்றுமதி 1,314.10 மில்லியன் டொலர்களாகவும் (15.09% வளர்ச்சி), சேவை ஏற்றுமதி 344.52 மில்லியன் டொலர்களாகவும் (3.75% வளர்ச்சி) பதிவாகியுள்ளது.</p><p></p><p> 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மாணம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற அறிவுசார் சேவைத் தொழில்கள், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பல்வகைப்படுத்துவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. </p><p>

 உலகச் சந்தையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்தும் போட்டித்தன்மையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-22T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசா; கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424"></link>
            <id>https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.
</p><p>


இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:



மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61711919-6d55-4380-bae3-c21cd4fddb69/26-6a60c39a0e278.webp' /></p><p></p><p>
</p><p>


விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.</p><p>



பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.
</p><p>


எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகனுக்கு தடுப்பு காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033"></link>
            <id>https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன நாட்டுப் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க<a href="https://jvpnews.com/article/200-million-robbery-shantha-bandara-son-in-court-1784698325" target="_blank"> அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள்</a> தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சாந்த பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebb5f2f-752a-4050-9b69-6b1aa76dd639/26-6a60be2b78755.webp' /></p><p></p><p>

இன்னிலையில் சந்தேக நபரை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதோ 22 .... ஆனால் 14 திருமணங்கள்; கல்யாண ராணியால் அதிர்ந்த பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992"></link>
            <id>https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bda548-fe67-46f0-a47b-1c16e81d376c/26-6a60ba1aec411.webp' /></p><p></p><h2>முதல்&nbsp; திருமணம் முறிந்ததால்&nbsp; தொடர் திருமணம்</h2><p>அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.</p><p></p><p> </p><p>

அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார். </p><p>

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a066d2-a33b-41ef-aa13-61db62ee5c04/26-6a60ba1ba0ee8.webp' /></p><p> 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். </p><p>

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். 

திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.</p><p></p><p> 

 ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.</p><p>மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.</p><p>இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.</p><p></p><h3>வெப் சீரியஸ்களைப் பார்த்து வந்த யோசனை</h3><p> </p><p>

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. </p><p>

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். </p><p>

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். </p><p>விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த&nbsp; &nbsp;பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76392451-15c0-4069-9ae1-179e8a5a9d37/26-6a60856b7c687.webp' /></p><p></p><h2>இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது</h2><p>
</p><p>


 இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

 அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புதிய அடிக்கல் நாட்டு நிகழ்வு; அவிழ்த்து விடப்பட்ட கதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-foundation-ceremony-kanniya-hot-springs-area-1784712587"></link>
            <id>https://jvpnews.com/article/new-foundation-ceremony-kanniya-hot-springs-area-1784712587</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.
</p><p>


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42899798-77da-4189-8d66-0cbd157f7b82/26-6a608d8cb83f0.webp' /></p><h2>&nbsp;கட்டுமானப் பணிகள்</h2><p>
</p><p>
வரலாற்றுத் தகவல்களின்படி, சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியின் மூலம் தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டதாகவும், பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


இதற்கிடையில், இக்காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 2002ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முயன்ற போது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் காணி உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e85176-75b9-434e-99cd-b7333c53ec06/26-6a60920f0b765.webp' /></p><p>

பராமரிப்பின்றி இக்கோயில் அழிவடைந்த நிலையில், புதிய ஆலய அமைப்புப் பணிகள் காணி உரிமையாளரால் தொடங்கப்பட்டபோதிலும், அங்கு புராதன தொல்பொருள் படிவங்கள் உள்ளன என்ற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உரிமையாளர் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



நிகழ்வில் பேசிய திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா, அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்துப் புராதன கட்டுமானத்தைப் பாதுகாப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றார்.



மேலும் அவர் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2efe208-421f-420b-abe3-e1cd2dc9a8b9/26-6a60920fe41cc.webp' /></p><p> "கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல; இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும். இதற்குச் சிலர் இன, மத சாயங்களைப் பூச நினைக்கின்றனர்.</p><p></p><p>



தற்போதைய 100 தொல்லியல் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவிலை பிரதேச செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள சோழர்கால ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5401c583-7893-427d-8f86-d82cd1cd9b1e/26-6a609210bd063.webp' /></p><p>



எனவே, தொல்லியல் திணைக்களம் மத, இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.</p><p>



நேற்றைய நிகழ்வில் மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மதகுரு மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசாசனம் வழங்கினார்.</p>]]></content>
            <updated>2026-07-22T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/healthcare-worker-was-sentenced-to-death-by-court-1784720247"></link>
            <id>https://jvpnews.com/article/healthcare-worker-was-sentenced-to-death-by-court-1784720247</id>
            <summary type="text">கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.</p><p></p><p> 

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a7d325-6bca-41d2-a5cd-81ba270c272e/26-6a60ab7908ffd.webp' /></p><p>இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த, சுகாதார திணைக்களத்தில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார். </p><p>

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரால் கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. </p><p>

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜரானார். </p><p>

எப்பாவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ்.அபேசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் சார்ஜன்ட் (61421) விஜேரத்ன விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். </p><p>

அத்துடன், அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் வழக்கு ஒருங்கிணைப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச வடிமுன பொலிஸ் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார். </p><p>

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அன்றைய தடயவியல் மருத்துவ அதிகாரி எச்.ஏ.கருணாதிலக்க உள்ளிட்ட சிலர் இவ்வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132"></link>
            <id>https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.</p><p>

கடந்த 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த எதிர்பாராத சம்பவத்தில் கீறல் காயங்களுக்குள்ளான அந்தச் சிறுவன், உடனடியாக மத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec91b66-576a-4472-af53-51dc687f7cc1/26-6a608bc650dfc.webp' /></p><h2>&nbsp;சிறுவனின் திடீர் அலறல் சத்தம்</h2><p>

வீட்டுத் தோட்டத்தில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் திடீர் அலறல் சத்தம் கேட்டதும், அவனது தந்தை உடனடியாக வெளியே ஓடிவந்தார்.

அப்போது ஒரு பெரிய கழுகு அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டு மேலே பறக்க முயன்றதைக் கண்டார்.</p><p></p><p> உடனடியாகச் செயல்பட்ட தந்தை, அந்தக் கழுகை அடித்துச் சிறுவனை அதன் பிடியிலிருந்து விடுவித்தார்.

 பின்னர் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இச்சம்பவம் குறித்து மாத்தறை பொது மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><p> </p><p>கழுகின் தாக்குதலால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்டார். மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து முதலுதவி மற்றும் மருந்துகளைப் பெற்ற பிறகு, சிறுவன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தாத்தா, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் தனது மகன் உடனடியாக வெளியே ஓடிவந்து செயல்பட்டதாலேயே அவனது உயிர் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டதாகக் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 தனது வாழ்நாளில் இது போன்ற பெரிய கழுகை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், இச்சம்பவத்திற்குப் பிறகும் அச்சிறுவன் இன்னும் கடும் பயத்துடனும் காய்ச்சல் போன்ற நிலையிலும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-carrying-religious-sisters-meets-accident-1784720168"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-carrying-religious-sisters-meets-accident-1784720168</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.
</p><p>
 

 விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3d6617-f88b-4d8a-b530-7ab54f37dca8/26-6a60ab29e0957.webp' />]</p><p>
</p><p>
 

 ஒரு அருட்சகோதரி பலத்த காயமடைந்துள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

 

மன்னாரைச் சேர்ந்த 'மாசற்ற அமலோற்பவ அன்னை' சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் சென்ற வாகனமீ விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904"></link>
            <id>https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904</id>
            <summary type="text">கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

 உயிரிழந்தவர் களுத்துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p>
 உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வாகனப் பொறிமுறைக் (ஆட்டோமொபைல்) கற்கை நெறியைப் பயின்று வருபவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42827a8-e7ee-451a-b24a-e2e8c7b70807/26-6a60aa2219dee.webp' /></p><p> </p><p>

அவர் நேற்று (21) பிற்பகல் களுமுல்லை தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள கடலில் குளிக்கச் சென்றபோது, நீரோட்டத்திற்கு (அலைக்கு) சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸார், உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் களுத்துத்துறை - கட்டுக்குருந்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தலைமையகப் பொலிஸார் மீலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக் குட்டிகளுக்குப் பெயரிட அருமையான வாய்ப்பு ; மக்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724"></link>
            <id>https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724</id>
            <summary type="text">எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடுவதற்காகப் பொதுமக்களுக்கான திறந்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விலங்குப் பிரியர்கள் இந்த இளம் பூனைகளுக்குச் படைப்பாற்றல் மிக்க மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38828b5d-e85e-41f0-b702-5d7a07e04e61/26-6a60a19d91775.webp' /></p><p>சிறந்த பெயர்ப் பரிந்துரைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புக் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பின்னவளை மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் (<a href="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf-FN9kem0-fBAkcS7EsdyqnOyCC6JF9xbwBCEcBQlW4-R2Wg/formResponse" target="_blank">Google Form</a>) ஊடாகத் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். </p><p>இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7, 2026 அன்று நிறைவடையவுள்ளன.
</p><p>
அரிதான மீன்பிடிப் பூனைக் குட்டிகளின் தனித்துவமான ஆளுமைக்குப் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றின் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு குடும்பங்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சூரியன் தட்டில் எலி; வாடிக்கையாளர் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258"></link>
            <id>https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258</id>
            <summary type="text">குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p> வீடியோ இணையத்தில் வைரலாகி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உணவகத்திற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/854bbfce-6fbf-467b-89c1-d8a7098ad25a/26-6a60a3b44bcef.webp' /></p><p>&nbsp;இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில், வாடிக்கையாளர் வாங்கிய மஞ்சூரியன் தட்டில் எலி இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, உரிய உரிமம் இன்றி உணவகம் இயங்கியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:02:39+00:00</updated>
        </entry>
    </feed>
