<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T13:27:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் வழக்கு ; முதலமைச்சர் விஜய்க்கு அபராதம் ; நீதிமன்றம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648"></link>
            <id>https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648</id>
            <summary type="text">&amp;nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956435be-4826-4b34-b940-175b90124ef8/26-6a8d85823c4ac.webp' /></p><h2>&nbsp;உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு</h2><p> 

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.
</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது. கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.</p><p></p><p>
</p><p>
இதைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், 'எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>

அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-25T13:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை; புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770"></link>
            <id>https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் அதீத ஒளி மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளால் 500க்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ba57183-c247-4eb3-974e-b9767deae7d0/26-6a8d8213e9851.webp' /></p><h2>500க்கும் அதிகமானோர் கண் பாதிப்பு</h2><p>
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக தேவையான விதிமுறைகளை உருவாக்குவதுடன், மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கும்போது மின்விளக்குகள், ஒலியமைப்புகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423"></link>
            <id>https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a684f2cd-3182-40f5-a454-e11bf305d86b/26-6a8d88885c028.webp' /></p><p>இவ்வருடத்தில் நாடாளுமன்றத்தினால் சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். </p><p>

தேர்தலை நடத்துவதற்கான சட்டமொன்று இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கமைய விரைவாகச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.</p><p> 

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். 

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்​ என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் ; இலங்கையில் QR எரிபொருள் முறைமை தொடருமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056"></link>
            <id>https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
மத்திய கிழக்கு நெருக்கடியும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் உலகளாவிய எரிபொருள் விலைகளிலும் விநியோகத்திலும் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3d7786-c106-4424-9f69-041d824ab6b0/26-6a8d83314867a.webp' /></p><p>பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கே இந்த QR முறைமை தொடர்ந்து பராமரிக்கப்படும்.
</p><p>
QR முறைமையின் அமுலாக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் நுகர்வு ஓரளவு மட்டுமே குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய டீசல் நுகர்வு சுமார் 10 வீதமும், பெட்ரோல் நுகர்வு சுமார் 9 வீதமுமே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
அத்தியாவசியத் துறைகளுக்குத் தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் சூழல் சீரடையும் வரை இந்த QR முறைமை தற்காலிகமாகத் தொடர்ந்து செயற்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் - அரச பேருந்துகள் போட்டி; A/L பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் திண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897"></link>
            <id>https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce24c3ba-a8bc-43a5-bdda-08f4447c8c32/26-6a8d72f26c411.webp' /></p><h2>மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் திண்டாட்டம்&nbsp;</h2><p>

இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
</p><p>
 இன்றைய தினம் (25) குறித்த பேருந்தானது வளமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதரா உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப் பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>

அதேவேளை நேற்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T11:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765"></link>
            <id>https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>


குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527fcd05-9958-49f3-a26d-57530dd13326/26-6a8d77f0313e7.webp' /></p><h2>அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறை&nbsp;</h2><p> 

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321"></link>
            <id>https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321</id>
            <summary type="text">இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலக் கோரிக்கையான தங்களது உறவுகளின் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd22dc59-83f9-4b77-9a03-81f0e395c602/26-6a8d7c6a76e9b.webp' /></p><p>குறிப்பாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களும் தங்களுக்கு தேவையில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.</p><h3>

“எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?”
</h3><p>
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறி, அவர்களின் தற்போதைய நிலை குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
</p><p>
தமது உறவுகள் தொடர்பில் உண்மை மற்றும் நீதியே தங்களுக்கு தேவை எனவும், இழப்பீடு அல்லது மரணச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>
இதன்போது, தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி சிலர் கதறி அழுததால் போராட்டம் நடைபெற்ற பகுதியில் உணர்வுபூர்வமான சூழல் ஏற்பட்டதுடன், சிறிது நேரம் பதற்றமான நிலையும் காணப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சர்வதேச ரீதியிலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>
இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த மாநாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அவர்களின் உறவுகளின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘அஸ்வெசும’ நிதி மோசடி ; இருவரின் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-financial-fraud-remand-of-two-extended-1787656533"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-financial-fraud-remand-of-two-extended-1787656533</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த இருவரையும் இன்று (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94587f4d-353b-4e26-a8f5-73c81451978f/26-6a8d7957012cd.webp' /></p><p> எனினும், ஹட்டன் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
</p><p>


இதனையடுத்து, ஹட்டன் மாவட்ட நீதிபதி இருவரையும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், முறைகேடாக அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததாக நோர்வூட் பிரதேச செயலாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>



ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனை மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுன்னவின் மேற்பார்வையில், ஹட்டன் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் ; அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715</id>
            <summary type="text">அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ed3baa-eff8-403f-85a6-eca3c6cef6a1/26-6a8d6a6c9af8f.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மொடல்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அப்பிளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், புதிய ஐபோன் மொடல்களின் விலை உயர்வு தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171</id>
            <summary type="text">&amp;nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. 

இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefc8735-7517-48c9-bfbe-158224aaf566/26-6a8d607d1a0ae.webp' /></p><h2>&nbsp;90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு</h2><p> </p><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவற் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் லலித் இற்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435"></link>
            <id>https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர என்ற &quot;பஸ் லலித்&quot;, 72 மணி நேரம் தடுப்புக் காவலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட<a href="https://jvpnews.com/article/police-release-background-information-onbus-lalith-1787640968" target="_blank">, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர </a>என்ற "பஸ் லலித்", 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பஸ் லலித்க்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1448b1-2d61-4015-9a4a-d06d63b99cd3/26-6a8d656c7704c.webp' /></p><h2>மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்</h2><p>&nbsp; அதேவேளை துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஹங்வெல்ல, வட்டரெக்க, மீகொட மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
இதனை முன்னிட்டு, குறித்த பகுதிகளில் பல்வேறு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த அரசாங்கத்துக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

அத்துடன், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T09:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகருக்கு சர்வதேச கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252"></link>
            <id>https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுக நகரில் ஏற்கனவே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதன் கீழ் இரண்டு பாரிய குடியிருப்புத் திட்டங்கள், நவீன உணவகங்கள் மற்றும் மாநாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5661a1b-93e6-45ea-ab9a-09a226351a13/26-6a8d64b5dedc0.webp' /></p><p>அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் சில முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வரிச் சலுகைகள் மாத்திரம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர் நம்பிக்கை, சிறந்த தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் கெஹெல்பத்தர பத்மே நீதிமன்றில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420"></link>
            <id>https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420</id>
            <summary type="text">தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d325e253-ebe8-4d5a-a358-d5b764cc5184/26-6a8d61755eab7.webp' /></p><p>சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/training-aircraft-crashes-in-ratmalana-airport-1787649284"></link>
            <id>https://jvpnews.com/article/training-aircraft-crashes-in-ratmalana-airport-1787649284</id>
            <summary type="text">ரத்மலானை விமான நிலையத்தில் இன்று, பயிற்சி விமானி ஒருவர் இயக்கிய சிறிய பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

கடினமான தரையிறக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரத்மலானை விமான நிலையத்தில் இன்று, பயிற்சி விமானி ஒருவர் இயக்கிய சிறிய பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.</p><p>

கடினமான தரையிறக்கத்திற்குப் பிறகும், அந்த விமானி எவ்விதக் காயமுமின்றித் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c12491e1-a94b-4b75-9dd2-e7a1e2e35a82/26-6a8d5d0615219.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், விமானம் சேதமடைந்ததுடன், விபத்தைத் தொடர்ந்து ரத்மலானை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

விமானத்தை அகற்றி, ஓடுபாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. </p><p> மேலும் விமான விபத்துச் சம்பவத்தையடுத்து இரத்மலானை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச வழக்கில் சிக்கிய முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-technical-officer-acquitted-in-bribery-case-1787648254"></link>
            <id>https://jvpnews.com/article/former-technical-officer-acquitted-in-bribery-case-1787648254</id>
            <summary type="text">&amp;nbsp; ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், நெல் களஞ்சியசாலையை நடத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், நெல் களஞ்சியசாலையை நடத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 ரூபா இலஞ்சம் கோரி, பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a21d908-37a0-48c5-b1e1-8f32fa3363b6/26-6a8d58ffec1a8.webp' /></p><h2>சாட்சியங்களில் முரண்பாடுகள்</h2><p> </p><p>

இது தொடர்பில் வழக்கு தொடர்ந்த தரப்பினர் வலுவான ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, முறைப்பாட்டாளர், வர்த்தகர் மற்றும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதி சட்டத்தரணி தர்ஷன குருப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், சாட்சிகளை அழைக்காமலேயே குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்துள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன்படி, 2022 நவம்பர் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 20,000 ரூபா வீதம் மொத்தமாக 40,000 ரூபா இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p></p><p>


வழக்கு விசாரணையின்போது குறித்த வர்த்தகர் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சியமளித்திருந்தனர்.
</p><p>
எனினும், சாட்சியங்களில் போதிய ஒற்றுமை இல்லாததுடன், குற்றம் சாட்டப்பட்டவரை தற்காப்பு வாதத்தை முன்வைக்கப் பணிக்கும் அளவுக்கு வலுவான வழக்காக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி கூறி இவ்வழக்கை நிறைவு செய்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்து தொழிலாளி செய்த கொடூர செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cruel-act-committed-by-a-prostitute-prostitute-1787647901"></link>
            <id>https://jvpnews.com/article/cruel-act-committed-by-a-prostitute-prostitute-1787647901</id>
            <summary type="text">இந்தியா கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா செங்காவி கிராமத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்து எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா செங்காவி கிராமத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

செங்காவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
திருமணமான லட்சுமி தேவம்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6261f27e-2569-44e6-b3a5-d94925c6103c/26-6a8d579ee9c4f.webp' /></p><p>இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையிலான தொடர்பு நெருக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, லட்சுமி தேவம்மாவுக்கு 29 வயதுடைய இளைஞர் ஒருவருடனும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த நாகராஜ் அவரைக் கண்டித்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், இளைஞருடனான தொடர்பை அவர் தொடர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த நாகராஜ், ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி இடம்பெற்ற தோட்டப் பகுதிக்கு லட்சுமி தேவம்மாவை வருமாறு அழைத்துள்ளார்.
</p><p>
அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நாகராஜ் உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, சடலத்தை தோட்டத்தின் மறைவான பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மறுநாள் காலை தோட்டத்தின் உரிமையாளர், பாதி எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
</p><p>
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துமகூரு அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், நாகராஜை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. செங்காவி கிராமத்தில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/measures-prevent-chemicals-mixing-drinking-water-1787647325"></link>
            <id>https://jvpnews.com/article/measures-prevent-chemicals-mixing-drinking-water-1787647325</id>
            <summary type="text">தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, நேற்று (24) மாலை இது குறித்துத் தெரியவந்ததாகவும், அதற்கமைய உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b72fa-a03d-48d0-8c40-f4280191d882/26-6a8d555f07d21.webp' /></p><p>எவ்வாறாயினும், குறித்த இரசாயனப் பொருட்கள் நச்சற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் மேலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
 

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த இந்த அவசர நிலைமை காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p>

 

எனினும், பின்னர் முப்படையினரின் ஒத்துழைப்புடன் அந்தச் நிலைமை சீர்செய்யப்பட்டதாகவும், அதற்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைக்கு அமைவாக, ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787647117"></link>
            <id>https://jvpnews.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787647117</id>
            <summary type="text">&amp;nbsp; 2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
</p><p>
 

இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e141b1e6-0dff-41e4-a318-305857c197dc/26-6a8d548f44fd1.webp' /></p><p>

 

புத்தாண்டுப் பிறப்பு, புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு உட்கொள்ளல் மற்றும் கைவிஷேடம் பரிமாறல் உள்ளிட்ட பாரம்பரிய சுப நேரங்கள் அடங்கிய பட்டியல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T08:36:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்பினால் ...புறக்கோட்டையில் 1,029 பேருக்கு நடந்த தரமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spitting-betel-pettah-bus-stand-punishment-1787645465"></link>
            <id>https://jvpnews.com/article/spitting-betel-pettah-bus-stand-punishment-1787645465</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் அடையாளம் காணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வான்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வேவக்கும்புர தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் வினவியபோது, அடையாளம் காணப்பட்டவர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்யும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2717547-9423-4e67-9e25-3af6e72550bc/26-6a8d4e1ad6148.webp' /></p><h2>வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல்</h2><p>
</p><p>
வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் சில பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை வான்படையினரால் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>

இதன் காரணமாகவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடிந்துள்ளதாக வான்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சராக விஜய் கிடைத்தது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் ; நடிகர் யாஷ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-yash-highly-praised-tamil-nadu-cm-vijay-1787643917"></link>
            <id>https://jvpnews.com/article/actor-yash-highly-praised-tamil-nadu-cm-vijay-1787643917</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் என பிரபல நடிகர் யாஷ் கூறியுள்ளமை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் என பிரபல நடிகர் யாஷ் கூறியுள்ளமை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . </p><p>

டாக்ஸிக் படத்தின் முன்னோட்ட விழாவில் பீசிய நடிகர் யாஷ், 

முதலமைச்சர் விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b30cb0-afe6-4eb2-97eb-1106e64463d8/26-6a8d480f9d2e8.webp' /></p><p> </p><h2> முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சி&nbsp; வியப்பாக இருக்கிறது</h2><p>அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது. </p><p>

மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். </p><p></p><p>

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. </p><p>எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது. 

எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது.</p><p></p><p> </p><p>

தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p> விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்றும் நடிகர் யாஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-25T07:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக ரயில் பாதைக்கு மீண்டும் சிக்கல் ; சீரமைப்பு பணிகளில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-again-for-the-upland-railway-line-delay-1787643088"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-again-for-the-upland-railway-line-delay-1787643088</id>
            <summary type="text">டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதமடைந்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா வரையிலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மலையக ரயில் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b224df49-5b7e-4a2a-81a7-394fda879b02/26-6a8d44d1e0739.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ஹட்டன் முதல் நானுஓயா வரையிலான பகுதிகளில் பல்வேறு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>

கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக பணிகளின் வேகம் குறைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானிலை சீரடைந்தால், கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பகுதியின் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள ஏனைய சேதங்களையும் சீரமைக்கும் பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், காலநிலை சீரடைந்தவுடன் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான ரயில் சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:31:46+00:00</updated>
        </entry>
    </feed>
