<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T06:31:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563"></link>
            <id>https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>

சந்தேக நபர்களிடம் சுமார் ரூ.5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b13c24-b646-4fbf-974d-b1b0cd61e20a/26-6a9fa9b57020c.webp' /></p><h2>இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய&nbsp;தாய்லாந்து பிரஜைகள்</h2><p>
</p><p>


தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (08) விமானம் மூலம் இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரும், விமான நிலைய வருகை முனையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக போதைப்பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



அவர்களது இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்,&nbsp; கறுப்பு திராட்சைத் துகள்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T06:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p> 

 கைதான அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.</p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-09-08T06:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986"></link>
            <id>https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda7366f-e821-4687-8631-f8217f670c38/26-6a9fa38c37c48.webp' /></p><h2>&nbsp;விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14,&nbsp; முதல்&nbsp; &nbsp;18&nbsp; வரை</h2><p> </p><p>

இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது.</p><p>

 இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
</p><p>
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது.
</p><p>
 இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. </p><p>

விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T05:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் அமளிதுமளி; திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/marshals-forcibly-removed-dmk-members-assembly-1788845711"></link>
            <id>https://jvpnews.com/article/marshals-forcibly-removed-dmk-members-assembly-1788845711</id>
            <summary type="text">நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து &amp;nbsp; முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து &nbsp; முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். </p><p>ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bbbae6-d17c-4fef-89e0-8ce12c85199a/26-6a9f9e909d161.webp' /></p><h2>தர்ணாவில் ஈடுபட்ட&nbsp; திமுக உறுப்பினர்கள் </h2><p> </p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து&nbsp; திமுக உறுப்பினர்கள்&nbsp; தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.</p><p></p><p>
</p><p>
 

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும் ஏ.வா. வேலு குற்றம்சாட்டினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: <br><br>Assembly marshals arrived and escorted the protesting DMK members out of the House. <a href="https://t.co/GAW99uRnuK">pic.twitter.com/GAW99uRnuK</a></p>&mdash; Actor Vijay Team (@ActorVijayTeam) <a href="https://x.com/ActorVijayTeam/status/2097188571677692205?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>உடனடியாக அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.</p>]]></content>
            <updated>2026-09-08T05:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096"></link>
            <id>https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>

இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35cd1de0-106c-4903-9b97-065d70689495/26-6a9f9c29e4ed8.webp' /></p><p>

குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p><p>

எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302"></link>
            <id>https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d95733-eb09-4412-bbc3-f724448be747/26-6a9f991069233.webp' /></p><p>அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18, 2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் போர்க் குற்றவாளி அல்ல; சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692"></link>
            <id>https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692</id>
            <summary type="text">&amp;nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
</p><p>
அத்துடன் தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da394b57-565f-4704-85e6-1767ec5f6bea/26-6a9f96ae09300.webp' /></p><h2>இலங்கை அரசாங்கங்கள் சரியானபடி விளக்கமளிக்கவில்லை</h2><p>
</p><p>
இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
</p><p>
அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>

புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சாடினார்.
</p><p>
 இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.</p><p>

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவன் கொலை சம்பவத்தில் மனைவி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601"></link>
            <id>https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.</p><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8812b318-862d-4162-afca-af675a344a73/26-6a9f926abf70b.webp' /></p><h2>எட்டு வருடங்களின் பின் கைதான&nbsp; மனைவி</h2><p> </p><p>

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

 சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724"></link>
            <id>https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார்.</p><p style="text-align: justify;"> சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். எனவே அடுத்து வரும் 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593ae5eb-3d99-4074-a17c-561a79f656bf/26-6a9f640603982.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;உங்கள் ராசி உள்ளதா ?</h2><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; "><b>

ரிஷபம் :</b>புதிய தொழிலை தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>


சிம்மம் :</b>புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>மகரம் :</b>வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் நண்பரை/உறவினரைச் சந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். மொத்தத்தில் அடுத்த 3 மாத காலம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எம்.பி கள் மீது ஊழல் மோசடி விசாரணை ; கந்தசாமி பிரபு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p style="text-align: justify; ">எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210df6db-cff6-41bb-b16d-8b8b3437ab11/26-6a9f58a720c79.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுக் கும்பல்</h2><p style="text-align: justify; ">
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (7) ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p style="text-align: justify; ">

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.</p><p style="text-align: justify; ">
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136"></link>
            <id>https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136</id>
            <summary type="text">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.  

வவுனியா மாவட்ட குற்றவிசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; "> 

வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a3fff4-f9ce-4952-9d46-ef9c473d8b94/26-6a9f560204a9e.webp' /></p><p style="text-align: justify; ">அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வீடு ; அரங்கேறிய தகாத செயல் அம்பலம் ; வசமாக சிக்கிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194"></link>
            <id>https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்க்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (7) ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee7017-358b-4d4c-a4bd-6f793ceef0d5/26-6a9f5e0c36187.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792</id>
            <summary type="text">நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 



குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 



குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e61886-f4c5-4b77-9387-2465ea43c0a7/26-6a9f48f19feb9.webp' /></p><h2>இரத்தச் சர்க்கரை</h2><p>சில ஆய்வுகளின்படி, நாவல் கொட்டையில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p>



எனினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>



நாவல் கொட்டைப் பொடியில் உள்ள நார்ச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும்.</p><p></p><p> </p><p>



நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கும் துணையாக அமையலாம்.
</p><p>


இதய ஆரோக்கியம், குடல் செயல்பாடு மற்றும் உடலின் வளர்சி மாற்றத்தை ஆதரிக்கும் தன்மையும் இதில் இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p><p>



நாவல் கொட்டைப் பொடியை பயன்படுத்த விரும்புபவர்கள், வெதுவெதுப்பான நீரில் சிறிய அளவு கலந்து அருந்தலாம்.</p><p></p><p> </p><p>ஆனால் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், இதை பயன்படுத்துவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. </p><p>உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936"></link>
            <id>https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936</id>
            <summary type="text">திருப்பத்தூர் அருகே &quot;என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்&quot; எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&amp;nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


</p><p style="text-align: justify; ">இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeed6db-6cb8-4680-af2c-90775a49900e/26-6a9f0eea0d6a6.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த&nbsp; பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். </p><p style="text-align: justify; ">&nbsp;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு மெட்ரோ பேருந்து சேவை ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774a4229-f2a6-463f-b8d3-2d844a4444d0/26-6a9ef1b2b7a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மெட்ரோ பேருந்து சேவை</h2><p style="text-align: justify; "> 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "> 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:27:56+00:00</updated>
        </entry>
    </feed>
