<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T07:37:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார். </p><p> 

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையிட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d717c762-a879-45d7-9084-c88d0e3cb457/26-6aacea160e7e6.webp' /></p><h2>தீவிரமாக முயற்சிப்போம்</h2><p>
</p><p>
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்,</p><p> சவுதிக்கு பணிக்குச்சென்ற தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோன்று, '2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் குழந்தையொன்றைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். </p><p>அக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடு மிகப்பலவீனமானதாகவே இருந்தது. </p><p>அந்தச் சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் காணப்படுகின்ற தற்காலத்துக்குப் பொருந்தாத, மனிதநேயமற்ற தண்டனைகளிலிருந்து எமது தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் சவுதி அரேபிய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படாத நிலையிலும், நாம் எமது தொழிலாளர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவந்தோம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
</p><p>
மேலும், நாம் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமாக முயற்சிப்போம் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்‌ஷ தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-remanded-again-court-oder-1789715317"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-remanded-again-court-oder-1789715317</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-in-handcuffs-1789706122" target="_blank">&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ</a>வை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4714471e-bd3b-4cc2-8c45-05b8524d5fdb/26-6aace3773a5ac.webp' /></p><p>பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்யும் சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் அனோஜனின் மரண தண்டனை; கஜேந்திரகுமார் எம்பி அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046"></link>
            <id>https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&amp;nbsp; &amp;nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&nbsp; &nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்குச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் இன்று காலை (செப்டம்பர் 18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efeadfd-7b81-463c-bb01-8d1f653357fb/26-6aacc71037c5f.webp' /></p><h2>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
</p><p>
 அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்துச் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கடலில் விழுந்த கப்பல் மாலுமி ; விரைந்து செயற்பட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sailor-falls-overboard-navy-rushes-to-rescue-1789713916"></link>
            <id>https://jvpnews.com/article/sailor-falls-overboard-navy-rushes-to-rescue-1789713916</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார். 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.</p><p> </p><p style="text-align: justify; ">

கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c035fa-0502-4bb5-96ed-83976d12796d/26-6aacde055be90.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து நேற்று (17) இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T06:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/development-at-jaffna-point-pedro-base-hospital-1789713516"></link>
            <id>https://jvpnews.com/article/development-at-jaffna-point-pedro-base-hospital-1789713516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. </p><p>



212 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போதிய தாதியர் குடியிருப்புகள் இன்மையால் தாதியர் உத்தியோகத்தர்கள் நீண்டகாலமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அதற்கு தீர்வாக இந்த தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edbf5779-d6c4-49be-a814-08b1c6a3b0ad/26-6aacdc6d85853.webp' /></p><h2>தாதியர் குடியிருப்புகள்&nbsp;</h2><p> 



சுகாதாரத் துறையில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், வடமாகாண சபையின் நிதியைப் பயன்படுத்தி இந்த நிர்மாணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>



 வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களின் சேவை வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் இலங்கை மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p> </p><p>



வடமாகாண ஆளுநர் உட்பட பிராந்திய அரசியல் பிரதிநிதிகள், மாகாண பிரதம செயலாளரின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T06:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடுகளுக்குள் புகுந்த நச்சுப்புகை ; நள்ளிரவில் வீதிக்கிறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-smoke-invades-jaffna-homes-1789712302"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-smoke-invades-jaffna-homes-1789712302</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று (17) தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவியதால்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று (17) தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.</p><p style="text-align: justify; ">



மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பராமரிக்கப்படும் குப்பைமேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e547c65e-66ba-4e91-9175-9cceaecba965/26-6aacd7aff0965.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நச்சுப்புகை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன் காரணமாக யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சுமார் இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு புகைமண்டலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


அத்துடன், நவாலி மற்றும் கல்லூண்டாய் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சுப்புகை சென்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குப்பைமேடு பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c0ee70-d940-4224-a38f-550d9e54d7e9/26-6aacd9959f42a.webp' /></p><p style="text-align: justify; ">



சம்பவ இடத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்த போதிலும், தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.</p><p style="text-align: justify; ">



தீயை அணைக்குமாறு மக்கள் வலியுறுத்தியபோது, தீயணைப்பு வாகனம் உள்ளே செல்வதற்கான பாதை சீராக இல்லை என மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுடன் முரண்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து, எரியும் பகுதியை பார்வையிட்டனர். தீ ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்வதற்கான பாதை சீராக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், உடனடியாக தீயை அணைக்குமாறு மாநகர சபை பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொலிஸார் கடும் தொனியில் அறிவுறுத்திய பின்னரே தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, குறித்த குப்பைமேடு வாராந்தம் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபையோ அல்லது மானிப்பாய் பிரதேச சபையோ இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



தொடர்ச்சியாக குப்பைமேடு தீப்பற்றி எரிவதால் ஏற்படும் புகை மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">]</p>]]></content>
            <updated>2026-09-18T06:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் ஈராண்டு வெற்றி கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/celebration-of-two-year-success-of-npp-government-1789712135"></link>
            <id>https://jvpnews.com/article/celebration-of-two-year-success-of-npp-government-1789712135</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்குரஸ்ஸவில் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்குரஸ்ஸவில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38dd86a9-c612-470a-9a5f-ad484de1e451/26-6aacd708a0a22.webp' /></p><p></p><p>
</p><p>
"எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள். நாட்டிற்கு ஆசிர்வாதம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணி இடம்பெறவுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறி ஷாப்பிங் செய்யும் ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-spotted-at-singapore-shopping-mall-1789711122"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-spotted-at-singapore-shopping-mall-1789711122</id>
            <summary type="text">மருத்துவத் தேவைக்காகச் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மருத்துவத் தேவைக்காகச் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான <a href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681" target="_blank">ஷிரந்தி ராஜபக்ச</a>, சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அதிகாலை நாட்டைவிட்டு வான் வழியாகச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/263a0220-562c-4c34-8a9b-2b269924e8e1/26-6aacd313eb391.webp' /></p><h2 style="text-align: justify; ">வைரலாகும் புகைப்படம்</h2><p style="text-align: justify; "> இதயம் தொடர்பான மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p style="text-align: justify; ">

எனினும், நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த பின்னணியில், அவர் அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் சூழலில், அவர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றதாகக் கூறப்பட்டாலும், சிங்கப்பூரில் ஷாப்பிங் மால் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அவர் ஷாப்பிங்கில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. </p><p style="text-align: justify; ">இது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T06:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்; ஒப்பந்த கொலை பகீர் தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-lot-of-information-murder-children-in-dehiwala-1789710130"></link>
            <id>https://jvpnews.com/article/a-lot-of-information-murder-children-in-dehiwala-1789710130</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு தெஹிவலா, சிறிசங்க போ மாவத்தாவில் 11ஆம் தேதி அதிகாலை ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக பல விவரங்கள் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு தெஹிவலா, சிறிசங்க போ மாவத்தாவில் 11ஆம் தேதி அதிகாலை ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக பல விவரங்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்தத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார். துபாயில் பதுங்கியிருக்கும் "கோஸ் மல்லி" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b9a342c-b3a5-4766-9278-7001eddf86db/26-6aaccf34677cd.webp' /></p><h2>தாக்குதலுக்காக ரூ. 1,20,000 வழங்கப்பட்டது&nbsp;</h2><p> 

மேலும், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தயாரித்த அறிக்கைகளின்படி, தாக்குதல் நடத்திய "மது" என்ற "கோஸ் மாமா" என்பவருக்கு இந்தத் தாக்குதலுக்காக ரூ. 1,20,000 வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.</p><p>

மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விசாரணையின் போது, ​​தாக்குதலுக்காகப் பெற்ற பணத்தை ஐஸ் போதைப்பொருள் உட்கொள்வதற்கும் மற்றும் பிற செயல்களுக்கும் செலவழித்ததாகக் கூறினார்.</p><p></p><p>

 "கோஸ் மல்லி" என்ற பாதாள உலகத் தலைவனின் உறவினர்களான அவரது பெற்றோரும், அவரது குடும்பத்தினரும் பலாப்பழம் வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அவருக்கு இந்தப் புனைப்பெயர் கிடைத்தது. </p><p>மேலும் அவருக்கு ரூ. கடந்த ஆண்டு மே 19 அன்று நெடிமலை பகுதியில் நடந்த கொலை தொடர்பாக, "அவிஷ்கா" என்றழைக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் மூலம் 500,000 கைமாற்றப்பட்டது, மேலும் அந்தப் பணத்தின் பெரும்பகுதி ஐஸ் போதைப்பொருளுக்காக செலவிடப்பட்டது.</p><p></p><p> </p><p>அந்தக் கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
மொனராகலையின் பிபில பகுதியிலிருந்து வியாபாரத்திற்காக பலாப்பழம் கொண்டு வந்த ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது, ​​கொழும்பு தெற்கு குற்றப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் குமார (84762) பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். </p><p>பொலிஸ் விசாரணையின் போது, ​​அடுத்த வீட்டில் வசிக்கும் ஹெட்டி அரச்சிங்கே நலின் குசந்தா என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநரின் வீட்டை தவறுதலாகக் குறிவைத்து கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.</p><p></p><p>
</p><p>
கொல்லத் திட்டமிட்ட நபரின் வீட்டிற்குப் பதிலாக, அடுத்த வீட்டில் உள்ள தனது சகோதரனின் வீட்டை தவறுதலாகச் சுட்டிக்காட்டிய தெஹிவளையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரும் கொழும்பு தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கேள்விக்குட்பட்ட வீட்டைச் சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு ரூ. 20,000 வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், அவ்விருவரையும் சங்கபோதி மாவத்தாவிற்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும், ரூ. 6,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் தெஹிவலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேக நபர்களிடமிருந்து 'ஐஸ்' என்ற போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திலித் ஜயவீரவின் ரிட் மனு தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-verdict-on-dilith-jayaweera-writ-petition-1789711356"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-verdict-on-dilith-jayaweera-writ-petition-1789711356</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) அறிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, இம்மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec7ab023-f402-4206-875e-0e992c811306/26-6aacd3fe333f8.webp' /></p><p>
</p><p>


குறித்த ரிட் மனுவானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சாலை பணிக்குச் சென்றவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/factory-worker-found-dead-norwood-1789709042"></link>
            <id>https://jvpnews.com/article/factory-worker-found-dead-norwood-1789709042</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நோர்வூட் சாமிமலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைப் பணிக்குச் சென்றவர் மரணித்த நிலையில், தொழிற்சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நோர்வூட் சாமிமலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைப் பணிக்குச் சென்றவர் மரணித்த நிலையில், தொழிற்சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் வியாழக்கிழமை(17) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலைப் பகுதியில் உள்ள, ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டொக்ஹொம் தோட்டத்தின் நூத்திபிரிவில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798cf9b2-009f-473c-82b3-90cb66e6470d/26-6aaccaf372ffa.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மரணமடைந்தவர், அதே தோட்டத்தில் வசிக்கும் பெரியமுத்துசாமி ஆறுமுகம் (வயது 69) என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>அவரது உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>&nbsp;பல வருடங்களாக அதே தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; மரணம் சம்பந்தமாக நோர்வூட் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-18T05:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844</id>
            <summary type="text">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 

கெற்பேலி பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56327309-2d5d-491b-8c49-614927e844b6/26-6aaca31e41d99.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p style="text-align: justify; ">

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T05:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர் ; சாமியறைக்குள் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-breaks-into-house-at-midnight-1789707409"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-breaks-into-house-at-midnight-1789707409</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92fa58dd-99dd-48e6-8180-ba9a24c10bd4/26-6aacc5ef0b303.webp' /></p><h2 style="text-align: justify; ">நகைகள் திருட்டு</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் மதிலேறி உள்நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணி வரை வீட்டினுள் நுழையப் பலமுறை முயற்சித்துள்ளார். </p><p style="text-align: justify; "> இதற்கான சான்றுகள் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.
</p><p style="text-align: justify; ">
பின்னர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா ரொக்கப் பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் திருடியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது வீட்டினுள் நபர் ஒருவரின் நடமாட்டத்தை உணர்ந்த வீட்டார்கள் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் குறித்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

</p><p style="text-align: justify; ">சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T05:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்க்ஷ மற்றும் ரேணுகா பெரேரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-renuka-perera-got-set-in-prison-1789707508"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-renuka-perera-got-set-in-prison-1789707508</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்காள் தெரிவிக்கின்றன.
</p><p>
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளருமான ரேணுக பெரேரா, தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23caea26-dd40-4abb-8f33-74b63ad6d4b3/26-6aacc4f5c20fc.webp' /></p><h2>&nbsp;அரச ஊழியர்கள் உட்பட சுமார் 10 கைதிகள்</h2><p> </p><p>

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட&nbsp; ரேணுக பெரேரா, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கியமை தொடர்பிலேயே அவர் மீது இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகள் மற்றும் 2014 செப்டம்பர் 19 ஆம் திகதிய அமைச்சரவை முடிவின் பரிந்துரைகளுக்கு முரணாகச் செயற்பட்டு, சட்டக் கட்டமைப்பிற்கு அப்பாலும் வருடாந்தக் கட்டணங்களை முன்கூட்டியே அறவிடாமலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதே&nbsp; ரேணுக பெரேரா மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.</p><p></p><p>
</p><p>
 ரேணுக பெரேரா அச்சிறைச்சாலையின் 'N' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் உட்பட சுமார் 10 கைதிகள் அந்த வார்டில் உள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அதே வார்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்யும் செயல்முறையின் போது சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 
 

அதேவேளை நாமல் ராஜபக்ச இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T04:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்குடன் நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-in-handcuffs-1789706122"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-in-handcuffs-1789706122</id>
            <summary type="text">கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">சிறைச்சாலை அதிகாரிகளால் சற்றுமுன்னர் அவர் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13cd014-c655-4efa-89af-913c63cc425b/26-6aacc05f5a4b9.webp' /></p><p style="text-align: justify; ">

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T04:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083"></link>
            <id>https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b706cd45-5a76-4e56-b318-0c99860da12a/26-6aacbb7c680ee.webp' /></p><p> </p><p>

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் கடுமையாக அமுலாக்கபடவுள்ள சட்டம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147"></link>
            <id>https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஆசனப்பட்டி அணிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (18) நிறைவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82796ce-7307-4a7d-8a27-7538b9b6eca1/26-6aacb7d513010.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; ">

இதன்படி, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், ஆசனப்பட்டி வசதி இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் முன் மற்றும் பின் ஆசனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

</p><p style="text-align: justify; ">இதேவேளை, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் உற்பத்தியாளர்களால் ஆசனப்பட்டி பொருத்தப்படாதிருந்ததால் வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் , அவ்வாறான வாகனங்களுக்கு ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக பல தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இறுதியாக வழங்கப்பட்ட கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் ; அதிர்ச்சி கொடுக்கும் பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186"></link>
            <id>https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186</id>
            <summary type="text">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார். 

இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdee946-9f9d-4a56-b3fc-c5a9b5ed0efd/26-6aacb413a2b21.webp' /></p><h2 style="text-align: justify; ">சொத்துக்கள் விபரம்</h2><p> </p><p style="text-align: justify; ">

மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம் </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

ஸ்பேசியா ரக கார் (சுமார்: ரூ. 80 இலட்சம்)</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

விசாரணையின் படி, இச்சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த இச்சொத்துக்களை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த நபரும் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

அவ்விசாரணையின் படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் உழைத்த சட்டவிரோதப் பணத்தில் கொள்முதல் செய்த சொகுசு ஜீப் வண்டியை (சுமார்: ரூ. 350 இலட்சம்) விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையோ தடுப்பதற்காக நேற்று (16) முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T03:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை ; ஆரம்பமான கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153"></link>
            <id>https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153</id>
            <summary type="text">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b2c5fa-e76b-4236-b0d1-9b76e1b75157/26-6aacad3be057a.webp' /></p><h2 style="text-align: justify; ">நேரடி விமானங்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.
</p><p style="text-align: justify;">
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T03:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியில் சென்ற இளம் தம்பதியரின் தவறான செயல் ; வாடகை வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879</id>
            <summary type="text">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது &#039;பாணந்துறை குடு சலிந்து&#039; என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

கல்கிசை தலைமையக பொலிஸார் நடத்திய சோதனையின் போது, சந்தேகநபர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749d2866-b783-4bed-8b99-c60a87cf5ee5/26-6aaca8df0c556.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியரிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் வருவதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர்&nbsp; தகவல் கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை மறித்து பரிசோதித்த போது, அதன் பின் இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த போது, அவர் பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவருடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் காரணமாக அவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்த போது, அதற்குள் இருந்து பெருந்தொகை பணம் கண்டெடுக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கணவன்-மனைவி எனத் தெரியவந்ததுடன், பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 1,50,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை - ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், அந்த வீட்டைப் பரிசோதித்த போது பணத்தை எண்ணப் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

26 மற்றும் 34 வயதுடைய இத் தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T02:51:27+00:00</updated>
        </entry>
    </feed>
