<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T03:23:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சந்திர கிரகணத்தைப் போல் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734"></link>
            <id>https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734</id>
            <summary type="text">எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. 

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p> 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9a9d8-5ff5-4e12-a6b5-4cd534a43b1e/26-6a8bb8e78fc35.webp' /></p><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.</p><p>எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர். 

சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். </p><p>

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது.</p><p> வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும். </p><p>

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p> 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. 

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. </p><p>காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். </p><p>

இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலைச் சம்பவம் ; மேலும் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944"></link>
            <id>https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கொலை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aecbb5-ea60-4c37-88c8-8885c05d3b91/26-6a8bb5d15cffb.webp' /></p><p>இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T03:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளம் பொறியியலாளரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&amp;nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">&nbsp;நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a9bd65-7887-4f55-8cd1-0f6d3c714022/26-6a8b95c48321a.webp' /></p><p style="text-align: justify; ">&nbsp;நேற்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">


விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையும் சனிபகவான் ; சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676</id>
            <summary type="text">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.</p><p style="text-align: justify; ">தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் நிலைபெற்றுள்ள சனிபகவான், ஏப்ரல் 17 அன்று ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தது. இப்போது அது ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53545906-8d15-4bf1-95a5-931690553f6b/26-6a8b9d569fc73.webp' /></p><h2 style="text-align: justify; ">அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> இது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் :</b>இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும்.&nbsp; உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.



வேலையில் இருக்கும் நபர்களுக்குப் பணியிடத்தில் ஆதரவு கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முக்கிய இலக்குகளை அடைய உதவும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும், மேலும் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>மிதுனம் :</b>&nbsp;ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம்,&nbsp; நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம், இது திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்,&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம் :&nbsp;</b>ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை எதிர்பார்க்காத சில வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். இந்த காலகட்டத்தில் சில நற்செயல்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களின் நற்பெயரை அதிகரிக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9179da6b-2e2b-4bc3-a64d-e0963ab43cca/26-6a8b8f73c157f.webp' /></p><h2 style="text-align: justify;">அபராதம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் மற்றும் மதுபான விற்பனையகம் ஒன்றுக்கு 300,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 268,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">&nbsp;வர்த்தக அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் அறிவிக்க முடியும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-24T00:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போலி மருத்துவர்கள் இருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923"></link>
            <id>https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923</id>
            <summary type="text">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான்&nbsp; உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa07c6ac-ef29-4628-959e-b629283ed6d1/26-6a8b8516a2ec9.webp' /></p><h2 style="text-align: justify;">விசேட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது தெரியவந்தது.</p><p>
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T23:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடுபுகுந்து நடத்தப்பட்ட சம்பவம்; பெண்ணுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079"></link>
            <id>https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து <a href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280" target="_blank">கொள்ளைச் சம்பவங்களில்</a> ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைதான சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea060171-f577-47a4-be1b-e95f6d7361a3/26-6a8b6451275c0.webp' /></p><h2>விளக்கமறியல்&nbsp;உத்தரவு</h2><p>கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். </p><p>

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்தன.</p><p> 

ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>

கைதான சந்தேகநபர்கள்&nbsp; சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p> 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T23:05:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றிவளைப்பில் சிக்கிய 1,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582</id>
            <summary type="text">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரும், கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மற்றோரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சனிக்கிழமை (22) ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமகல பகுதியில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8b81a2-6bb2-42df-b83e-9bf81f1a5011/26-6a8b6a3057828.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது, 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபரும், 54,096 கஞ்சாச் செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஹம்பகமுவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதம்பலாவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T22:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான SLS முத்திரை ; 8,500 குடிநீர்ப் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116"></link>
            <id>https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116</id>
            <summary type="text">அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இந்தப் போத்தல்கள் தயாரிக்கப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aacf8c-efbd-492b-a2d4-43f4c01bb662/26-6a8b608e49d00.webp' /></p><h2>ஆரம்பக் கட்ட விசாரணை</h2><p>
</p><p>


அத்துடன், பல்வேறு அளவிலான குடிநீர்ப் போத்தல்களில் போலியான முறையில் SLS தரச் சான்றிதழ் முத்திரையும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் இடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p>இந்தத் குடிநீர்த் தொகுதி இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. எனினும் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



சுற்றிவளைப்பின்போது, சுமார் 8,500 போத்தல்களையும் சீல் வைத்து அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
</p><p>


மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:30:49+00:00</updated>
        </entry>
    </feed>
