<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T11:36:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரஹெராவை முன்னிட்டு 10 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-shops-closed-for-10-days-ahead-of-perahera-1787139247"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-shops-closed-for-10-days-ahead-of-perahera-1787139247</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல மஹா பெரஹெராவை முன்னிட்டு, நேற்று (18) முதல் கண்டியிலுள்ள பல மதுபானக் கடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல மஹா பெரஹெராவை முன்னிட்டு, நேற்று (18) முதல் கண்டியிலுள்ள பல மதுபானக் கடைகளை மூட கலால் வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

</p><p>, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பத்து நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்டி கடவத் சத்தர மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையம் வரை அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T11:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935"></link>
            <id>https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவின் மூலம் அது 365 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4744694b-731f-4291-993a-1fda162554be/26-6a858f914bbd9.webp' /></p><p>
</p><p>
சட்டப்பேரவையில் மனிதவள முகாமைத்துவ துறை தொடர்பான மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் டி. சரத்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
தற்போது தமிழ்நாட்டில் அரச பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
</p><p>
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுமுறை கிடைக்கப்பெறும்.

சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி தமிழக அரசு செயற்படுத்தி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T11:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587"></link>
            <id>https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


காங்கேசன்துறையில் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>


காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c88d236-7525-40d2-a6e8-81047b013c43/26-6a858a4cb5d00.webp' /></p><p>
</p><p>
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
</p><p>
குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T10:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493"></link>
            <id>https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
</p><p>
 பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb4533e-11e9-4b26-8feb-36112d9846d4/26-6a8557276d3eb.webp' /></p><p></p><h2>வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்</h2><p>
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.</p><p></p><p>

இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகசிய திருமணம் செய்து இல்வாழ்க்கை; பிரபல விகாராதிபதியின் நாடகம் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-marriage-monk-s-charade-exposed-1787133211"></link>
            <id>https://jvpnews.com/article/secret-marriage-monk-s-charade-exposed-1787133211</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும், கணவராகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும், கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
</p><p>
விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில்&nbsp; இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது. 

ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் கணவராகவும் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f2ed38-767e-481b-bd20-b6f8d3ca3614/26-6a857d1c9700b.webp' /></p><p>
</p><h2>2 ஆண்டுகளுக்கும் மேலாக&nbsp; &nbsp; இரட்டை வேடம்</h2><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக&nbsp; இரட்டை வேடம் .

சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார்.</p><p></p><p> இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><p>



குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 

எனினும் தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.
</p><p></p><p>

 குறித்த துறவி , குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>


ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><p>



மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p></p><p>



பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார்.



அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். </p><p>அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.



இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T10:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 பெண்களுடன் டேட்டிங் சென்ற 67 வயது முதியவர்.. நடந்த விபரீதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-allegedly-honey-trapping-2-women-arrested-1787132543"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-allegedly-honey-trapping-2-women-arrested-1787132543</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியா டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் முதியவர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இரண்டு இளம் பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியா டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் முதியவர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இரண்டு இளம் பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தெற்கு டெல்லியில் உள்ள டிபன்ஸ் காலனி பகுதியில் நடந்துள்ளது.
 
 
ஜோத்ஸ்னா மற்றும் மான்சி என்ற இரு பெண்கள் போலி அடையாளத்துடன் டேட்டிங் செயலியில் கணக்கு தொடங்கி, 67 வயது முதியவரை இரவு உணவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a68d8a-adee-4716-b418-8e6033cf5466/26-6a857a80cfa15.webp' /></p><h2>1.30 லட்ச ரூபா&nbsp; ஆன்லைன் மூலமாக திருட்டு</h2><p>
</p><p>
 பின்னர் அவரது செல்போனை திருடி, யுபிஐ மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.30 லட்ச ரூபாயை ஆன்லைன் மூலமாக திருடியுள்ளனர்.
</p><p> 
வங்கி பரிவர்த்தனை தடயங்கள், கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p> 
இதுபோன்று டேட்டிங் செயலிகள் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T09:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தீ விபத்தில் வீடொன்று முற்றாக சேதம்! பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-completely-destroyed-in-vavuniya-fire-1787131423"></link>
            <id>https://jvpnews.com/article/house-completely-destroyed-in-vavuniya-fire-1787131423</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>

இந்த தீ விபத்து இன்று (19) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேப்பங்குளம் காளிகோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள வீட்டில் திடீரென தீப்பற்றியதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், வவுனியா மாநகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0947bdd-1eeb-4ff2-9994-9c5522e3df9d/26-6a857620b0dac.webp' /></p><h2>&nbsp;பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசம்</h2><p>
</p><p>
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அயலவர்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஒத்துழைத்துள்ளனர்.
</p><p>
எனினும், தீ விபத்தின் காரணமாக வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T09:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலனிலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-climate-poses-a-threat-to-health-1787129693"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-climate-poses-a-threat-to-health-1787129693</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், அதிக வெப்பத்தால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.</p><p>



இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற எல் நினோ நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14b60a7c-fe10-4a2e-b39d-b89ea64a5859/26-6a856f5eb60fe.webp' /></p><h2>&nbsp;எல் நினோ நிலைமை</h2><p> 



சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாயிகள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்தி, வெளிர் நிற ஆடைகளை அணிந்து, தலையை மூடிக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>


மேலும், மாணவர்கள் தேவையற்ற வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்த்து நிழலான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், பாடசாலை முடிந்து செல்லும்போது குடை அல்லது தலையை மூடும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>



மேலும், வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T08:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் முடிப்பதாக ஆசை காட்டி யுவதி துஷ்பிரயோகம்; முன்னாள் மேயர் ஆட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041</id>
            <summary type="text">&amp;nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

 குறித்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08cf6f36-f668-411e-9baa-46dece05e1b1/26-6a853622cf102.webp' /></p><h2>&nbsp;அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில்பெண் முறைப்பாடு</h2><p>


கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்றை சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் நியாயம் கேட்டிருந்தார்.</p><p></p><p>
</p><p>
 இச் சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p>


முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>



அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்றுவரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது அணிவது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mandatory-for-drivers-passengers-to-wear-seatbelts-1787126403"></link>
            <id>https://jvpnews.com/article/mandatory-for-drivers-passengers-to-wear-seatbelts-1787126403</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
</p><p>


அதன்படி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd16b9f6-3511-443a-b701-240a63ecd3dc/26-6a8562852d23e.webp' /></p><h2>&nbsp;அதிவிசேட வர்த்தமானி&nbsp;</h2><p>
</p><p>


விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.</p><p></p><p>



ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிவேகப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடுவதற்கான சட்டப்பூர்வ வசதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அனைவரின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

இதற்கிடையில், தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><p> </p><p>ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடடைவதாகத் தெரிவித்தார்.
</p><p>


2025 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அதிவேக வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T07:57:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-notice-from-the-department-of-meteorology-1787124334"></link>
            <id>https://jvpnews.com/article/warning-notice-from-the-department-of-meteorology-1787124334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cad524a-b65b-43d5-a916-2319bbf79a0d/26-6a855a6fb0828.webp' /></p><p>
 

நீர்கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரத்தை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக அவ்அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

மேலும், இந்தக் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.

 

எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:23:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகை மரணத்தில் சிபிஐ வளையத்துள் கணவன் மற்றும் மாமியார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-mother-in-law-cbi-actress-twisha-sharma-1787122668"></link>
            <id>https://jvpnews.com/article/husband-mother-in-law-cbi-actress-twisha-sharma-1787122668</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மாவின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் சமர்த் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மாவின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>


த்விஷா சர்மா கடந்த மே 13ஆம் திகதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb7e5a2-9d79-4c94-8afe-68c465e8fe3b/26-6a8553ee4b08a.webp' /></p><h2>&nbsp;வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை</h2><p>
</p><p>
தனது மகள் வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் சிசிரிவி காட்சிகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் த்விஷாவின் தந்தை நவ்நீதி சர்மா குற்றஞ்சாட்டியிருந்தார்.</p><p></p><p>

இதனையடுத்து, தலைமறைவாகியிருந்த அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
</p><p>
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வுத் திணைக்களம் (CBI), போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.</p><p></p><p>

குற்றப்பத்திரிகையில், கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தொடர்ச்சியாக ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-19T06:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-number-of-dengue-deaths-in-the-country-1787122055"></link>
            <id>https://jvpnews.com/article/rising-number-of-dengue-deaths-in-the-country-1787122055</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



அத்துடன் இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



அத்துடன் இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>



மேல் மாகாணத்தில் 49,163 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 19,778 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 18,433 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbfe48ea-0eca-4371-888e-b37fcf50eb04/26-6a855188b4ba7.webp' /></p><p>
</p><p>


அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் 29,964 என்ற எண்ணிக்கையில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



எவ்வாறாயினும், 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T06:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் ; திமுக வாயை அடைத்த முதலமைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heated-debates-assembly-cm-vijay-silences-dmk-1787121781"></link>
            <id>https://jvpnews.com/article/heated-debates-assembly-cm-vijay-silences-dmk-1787121781</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. </p><p>

திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்

குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.</p><p></p><h2>&nbsp;திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி</h2><p>
</p><p>
 இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் ‘தவெக அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டுகளை சொன்னாலும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதாரங்களை கொடு ஆதாரங்களை கொடு என்று கேட்கிறார்கள்’.
</p><p>
 நிதியமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே சொன்ன அந்த மூன்று கோப்புகளும் என்னுடைய டேபிளில்தான் இருக்கிறது.</p><p></p><p>

அதை திறக்க வைத்து விடாதீர்கள்.. அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு.. மக்கள்கிட்ட என்ன, எப்போது, எப்படி பேசணும் என எல்லாம் எங்களுக்கு தெரியும்.</p><p> தேவையான நேரத்தில் அதை வெளியிடுவோம் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். 

மக்கள் ஆசை ஆசையாக எங்களை இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன்.. பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை.</p><p>இடைத்தேர்தலில் சிலருக்கு ஏதாவது நல்ல நடக்க வேண்டும் அல்லவா!.. அதனால்தான் பேசாமல் இருக்கிறேன்’ என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T06:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் ; கைதாகும்போது மயக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-officer-who-threatened-divisional-secretary-1787120141"></link>
            <id>https://jvpnews.com/article/female-officer-who-threatened-divisional-secretary-1787120141</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கைது செய்யப்பட்ட வேளை பெண் அரச உத்தியோகத்தர் அதிர்ச்சியால் மயங்கி விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dc128f-9f92-4bdf-908f-a219857deeb3/26-6a854a0f6a5fa.webp' /></p><h2>பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை</h2><p>
</p><p>
 நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், காணொளியை முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.</p><p></p><p>

 சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
 முறைப்பாட்டிற்கு அமைவாக, நேற்று மாலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p></p><p>

விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 தற்போது அவருக்குப் பெண் பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T06:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைக்கு தீவைத்த புதுமண பெண் உயிரிழப்பு ; தமிழர் பகுதியில் பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/newlywed-woman-dies-after-setting-fire-to-trash-1787117972"></link>
            <id>https://jvpnews.com/article/newlywed-woman-dies-after-setting-fire-to-trash-1787117972</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் திருமணமான இளம் பெண் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் திருமணமான இளம் பெண் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தில் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p>

கடந்த மே மாதம் 20ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ஆம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரியூட்டும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c86fdcf-16ed-43ea-bd9e-16eca28880b1/26-6a85459985f94.webp' /></p><h2>குப்பைகளை எரியூட்டுவதற்கு&nbsp; Paint Thinner&nbsp;&nbsp;</h2><p>
</p><p>

குப்பைகளை எரியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த Paint Thinner திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

 அதிலிருந்து பரவிய தீ அவரது ஆடைகளிலும் பிடித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p> 
எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
 
அதேவேளை Paint Thinner எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. குப்பைகளை எரியூட்டுவதற்கு அதைப் பயன்படுத்தக் கூடாது எனபது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
</p><p></p><p>
இந்தச் சம்பவம் நமக்கு முக்கிய பாடங்களைக் கற்பிக்கின்றது. வீட்டில் எஞ்சியிருக்கும் திரவங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் அவதானம் தேவை.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T05:38:56+00:00</updated>
        </entry>
    </feed>
