<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T23:42:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968</id>
            <summary type="text">இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ – சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையினர்&nbsp; மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8283d8-08e6-410b-a8fb-15b74ae534e7/26-6a8cb7bde665b.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>


வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படைக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 13 பொதிகள் சோதனையிடப்பட்டன.
</p><p>


இதன்போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புகைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366"></link>
            <id>https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார். 68 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.</p><p> 68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969e4dca-ff83-41c3-a094-f2c4f371105e/26-6a8c8a67b1daf.webp' /></p><h2>&nbsp;கோடிக்கணக்கில் பணம்?&nbsp;</h2><p>இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். </p><p>மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.</p><p> ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி ; அநுர அரசிற்கு வலுக்கும் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-food-expenses-rise-1787606311"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-food-expenses-rise-1787606311</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e618164-3322-4b07-84f2-8a4975a363b6/26-6a8cb5290b83a.webp' /></p><h2>வருடாந்த செயல்திறன் அறிக்கை</h2><p>


2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 48 சதவீதத்தால் அதிகரித்து, 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.</p><p>

இதில் குடிநீர் போத்தல்களுக்காக மட்டும் சுமார் 2 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.</p><p> தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 1,200 வரை உயர்ந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கான உணவுச் செலவு 109 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>&nbsp;தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு, வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டுவந்து உட்கொள்வோம் என்றும் மக்கள் பணத்தைச் சேமிப்போம் என்றும் கூறினார்கள்.</p><p> ஆனால் இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உணவுக்காகச் செலவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? என கேள்வியெழுப்பினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-sea-cucumber-smuggler-arrested-1787603916"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-sea-cucumber-smuggler-arrested-1787603916</id>
            <summary type="text">கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப் படகுடன் நேற்று (24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலால் கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23d71b-71d8-4dcf-9638-f1e8a4c53c86/26-6a8cabce5182c.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">






இதன்போது, கிரஞ்சி கடற்கரையை நோக்கி வந்த தெப்பப் படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதில் அனுமதியின்றி கடல் அட்டைகளை தரைப்பகுதிக்கு கடத்திச் சென்ற 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 380 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T20:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் சிக்கிய NPP நகர சபை உறுப்பினரின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-council-member-s-son-arrested-1787602136"></link>
            <id>https://jvpnews.com/article/npp-council-member-s-son-arrested-1787602136</id>
            <summary type="text">பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கொலன்னாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது, அவர் மற்றொரு நபரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு வந்திருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53bd77a-169c-4560-b3af-16d7499ef768/26-6a8ca4da60094.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் விற்பனை</h2><p style="text-align: justify; ">



இதனையடுத்து, பொலிஸார் குறித்த நபரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">



அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது வீட்டிலிருந்து மேலும் 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர், தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T20:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505</id>
            <summary type="text">நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

நேற்று (23) நுவரெலியா பொலிஸாரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dec2ef2e-eadb-477e-a2a2-5c09fb081647/26-6a8c9a92a5b0f.webp' /></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
 

நுவரெலியா மேல் ஏரி வீதி மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பில் ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேகநபர்களைக் கைது செய்த போது, கம்பிகளிலிருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், 344 அடி செப்பு அல்லாத கம்பிகள், செப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருந்த இறப்பர் உறைகளின் தொகுதி மற்றும் கம்பிகளை அறுப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்கள் கந்தப்பளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய இருவராவர்.</p><p></p><p>
</p><p>
 

கைப்பற்றப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை கணப்பிடப்படவில்லை என்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவற்றின் பெறுமதியைக் கணப்பிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் இன்று (24) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
 

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:35:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966</id>
            <summary type="text">மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (23) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a3fc6e-d84e-4a7f-a293-88ec3aebc727/26-6a8c8cc07bc62.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோத மதுபானம்</h2><p>
</p><p>
இதன்போது 112 லீற்றர் 500 மில்லி லீற்றர் (150 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெலிசரை, ராகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வட குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வால் இலங்கைக்கு கிடைத்த வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-import-relaxation-boosts-sri-lanka-revenue-1787592253"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-import-relaxation-boosts-sri-lanka-revenue-1787592253</id>
            <summary type="text">&amp;nbsp;பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92e15595-82f3-4406-83db-bfe05a07d482/26-6a8c7e3f0a816.webp' /></p><h2 style="text-align: justify; ">மொத்த வருமானம்</h2><p style="text-align: justify; ">

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.
</p><p style="text-align: justify; ">
இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T17:45:21+00:00</updated>
        </entry>
    </feed>
