<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-10T18:36:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768"></link>
            <id>https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினதும் சமர்ப்பணங்கள் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிணை உத்தரவைப் பிரகடனப்படுத்துவதை நீதவான் ஒத்திவைத்தார்.</p><p>இதற்கமைய, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4292787-45be-4906-b6c1-ce5df50cafc8/26-6a7a1182e0477.webp' /></p><p>இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சாகர காரியவசத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>

கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாகச் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
</p><p>

குறித்த விசாரணை தொடர்பான செய்திகள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காகச் சாகர காரியவசத்தை இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>

இதற்கமைய, இன்று முற்பகல் அப்பணியகத்திற்கு வருகை தந்த சாகர காரியவசமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p>


பின்னர் அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>

இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானே சைமா குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949"></link>
            <id>https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மலேசிய பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
41 வயதான குறித்த சந்தேகநபர் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் அவர் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h3>இரண்டு முக்கிய வழக்குகளில் பிரதிவாதி
</h3><p>
பொலிஸாரின் தகவல்களின்படி, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும், 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b586683-c7fd-4d7a-8871-f2d6a4f147b9/26-6a7a0e5015a74.webp' /></p><p>குறித்த இரண்டு வழக்குகளும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் அவர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதற்கு மேலதிகமாக, 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், கல்கிஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் நிதி நடவடிக்கைகளை கையாண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளையும் குறித்த சந்தேகநபர் நிர்வகித்து வந்ததாகவும், அவரது குரல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த ஆண்டு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் நபருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை “ரத்மலானே சைமா” ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பான மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதேவேளை, சில காலம் பிரான்ஸில் தங்கியிருந்த “குடு அஞ்சு” என அழைக்கப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாகவும் குறித்த சந்தேகநபர் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f444258-859c-41fc-ba91-b82a1cd62850/26-6a7a0e4f63364.webp' /></p><p>பின்னர் அவர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“குடு அஞ்சு” என்பவர் “ரத்மலானே சைமா”வை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அது தொடர்பில் கஞ்சிபானி இம்ரான் அவரை எச்சரித்த பின்னரே சைமா, கஞ்சிபானி இம்ரானுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>“ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நீண்ட காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர்கள் மீது குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? நாடு முழுவதும் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083"></link>
            <id>https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083</id>
            <summary type="text">இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p> 


குறித்த குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>


சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce197d8-0b1b-468b-ad22-16478190ac8b/26-6a7a0b4483dad.webp' /></p><p>தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

 

நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
</p><p>

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.
</p><p>

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. </p><p>புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><p></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T16:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை? தேசிய செயல்பாட்டு சபையில் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697</id>
            <summary type="text">போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து &quot;முழு நாடுமே ஒன்றாக&quot; தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இச்செயல்பாட்டு சபை கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.</p><p>

 

நச்சு போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி, ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமையையும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதையும் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94c8e03-7068-4b72-bdc9-553deab92650/26-6a79f9cc302d2.webp' /></p><p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தைச் சுற்றி உருவெடுத்துள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
</p><p>
 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து "நாடு ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.</p><p>

 

ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் நச்சு போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்கியெறிய நாட்டில் நடைமுறைச் செயல்பாடுகளையும், விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். </p><p>

 

இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
 

இந்த தேசிய பேரழிவின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
 

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிப் கட்டத்தில் உள்ளன என்றும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ef1123-a886-4cb6-b94b-3795bc46e116/26-6a79f9cb7df19.webp' /></p><p>போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p>இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதத்தால் சிறையிலுள்ளவர்களின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப (5 கிராமிற்கும் குறைவாக, 10 கிராமிற்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
</p><p>
 

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
 

பாதுகாப்பு கெமரா அமைப்புகளை (CCTV) பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அநீதி ; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/injustic-5th-year-scholarship-exam-complain-police-1786377683"></link>
            <id>https://jvpnews.com/article/injustic-5th-year-scholarship-exam-complain-police-1786377683</id>
            <summary type="text">நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>கிரிந்திவெல, போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பெற்றோர்களின் குற்றச்சாட்டின்படி, முற்பகல் 11.15 மணிக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் மாணவர்களுக்கு முற்பகல் 11.30 மணியளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5935918-92a6-4023-bfb2-399790f69c96/26-6a79f5d4b18cb.webp' /></p><p>மேலும், அந்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணியளவில் மீண்டும் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இதன் காரணமாக, தமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பரீட்சை நேரத்தில் சுமார் அரை மணி நேரம் வரை குறைந்துள்ளதாகவும், இதனால் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் தமது பிள்ளைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் கல்வி எதிர்காலத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பரீட்சையாகும்.</p><p> இந்நிலையில், பரீட்சைக்கான நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமது பிள்ளைகளின் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், குறித்த கலந்துரையாடலின் மூலம் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பெற்றோர்கள், பின்னர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9fb858-655f-4dbc-b1e2-9059e56660c6/26-6a79f5d56ca44.webp' /></p><p>தமது பிள்ளைகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதிக்கு உரிய தீர்வை வழங்குவதுடன், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், பரீட்சை நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிர்வாகத்தினரின் உத்தியோகபூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10 ; புதிய புரோமோ! ஆர்வத்தில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-season-10-tamil-new-promo-1786365428"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-season-10-tamil-new-promo-1786365428</id>
            <summary type="text">&amp;nbsp; பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில்&nbsp; &nbsp;ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

இந்த 'பிக் பாஸ் - காமன் மேன்' நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e8f732-982b-4665-a258-5234deb84fec/26-6a79c5f652900.webp' /></p><h2>&nbsp;நடுவர்களாக முன்னாள் போட்டியாளர்கள்&nbsp;</h2><p> திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.</p><p></p><p> </p><p>
 
அதோடு, ஓவியா, ராஜு, ஆரி போன்ற முன்னாள் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

இந்த லாஞ்ச் புரோமோ மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி வரவேற்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1e34e0-e4d8-4f71-b574-160ac7880d9f/26-6a79c5f70a6a5.webp' /></p><p> </p><p>பிக் பாஸ் Common Man, 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்குடன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சீசனாக அமையவுள்ளது. </p><p>

இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் விரைவில், ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது.

 பிக்பாஸ் தமிழ் இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவிக்கு தெரியாது மண்ணில் புதைத்த பெரும் தொகை பணம்; கரையான் அரித்த சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-burial-ground-termite-damage-india-1786366262"></link>
            <id>https://jvpnews.com/article/money-burial-ground-termite-damage-india-1786366262</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியா இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தையும் கரையான் அரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியா இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தையும் கரையான் அரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிடுள்ளதாவது, </p><p>

இராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயியான மங்கிலால் மேக்வால், கடந்தாண்டு ரூபா 5 லட்சத்திற்கு தனது நிலத்தை விற்றுள்ளார். 

அந்தப் பணத்தை வைத்து விவசாயி நிலத்தில் ஒரு அறை கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், மனைவிக்கு தெரியாமல், பணத்தை பாலிதின் கவரில் போட்டு குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798547f0-dfbf-4462-b36e-9a79041e7ed1/26-6a79c937ca440.webp' /></p><h2>&nbsp;புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்து விட்டார்...</h2><p> </p><p>

மங்கிலாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்து விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

திடீரென அறை கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், மண்ணில் புதைத்து வைத்த பணத்தை தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக தேடிப் பார்த்து வந்துள்ளார். </p><p>அப்படி அவர் சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. 

நாளடைவில் இந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பிறகு மங்கிலாலுடன் சேர்ந்து பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்படியே ஓராண்டை கடந்து விட்ட நிலையில், மழை பெய்ததால் நிலத்தை விவசாயத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, டிராக்டரை வைத்து உழுதுள்ளனர். </p><p>

அப்போது, புதைத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளது. அதில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கறையான் அரித்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பமே அதிர்ந்துள்ளனர்.</p><p></p><p>இதையடுத்து, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கியில் மாற்றுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மறுத்த வங்கி நிர்வாகம், ஜெய்ப்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.</p><p> 

இதனிடையே, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-death-penalty-cannot-be-accepted-1786367572"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-death-penalty-cannot-be-accepted-1786367572</id>
            <summary type="text">&amp;nbsp; கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
</p><p>
 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே பேராயர் இதனைத் குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea3d9d6-a5e5-4221-8f50-faace8487a96/26-6a79ce55e76d5.webp' /></p><h2>மரண தண்டனை&nbsp; மனித கண்ணியத்தை மீறுவது</h2><p> 

மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாகவும், திருச்சபையின் போதனைகளின்படி எந்தவொரு மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இருப்பினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்மானங்களிலோ அல்லது விவாதங்களிலோ எந்த வகையிலும் தலையிட உத்தேசிக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.</p><p>

 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லம் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.
</p><p>
 

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தீவிர எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி <a href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923" target="_blank">ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா</a> இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e21cb00-9f80-49b9-8b6c-6ff7b62331bf/26-6a79a0a4b4956.webp' /></p><p><b> 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பி.கே.யின் ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?
</b></p><p>&nbsp;ரீச்சா கேளிக்கை பூங்கா மற்றும் உல்லாச விடுதி (ரீச்சா இயற்கை பண்ணை) என்பது இலங்கையின் கிளிநொச்சியில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சூழல் சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் திட்டமாகும்.
</p><p>
 டிஸ்னிலேண்ட் பாணியிலான இந்தப் பூங்காவை, பி.கே. என அறியப்படும் பாஸ்கரன் கந்தையா என்ற இலங்கை-டச்சு தொழிலதிபர் 2018-ல் நிறுவினார். பி.கே., ஆறு நாடுகளில் செயல்படும் ஒரு ஐரோப்பிய தொலைத்தொடர்பு நிறுவனமான லெபாரா குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். </p><p>மேலும், லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ஐபிசி தமிழின் தாய் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியாவின் தலைவராகவும் அவர் உள்ளார். </p><p>அண்மையில் அவர் தமிழ்வின், லங்காஸ்ரீ, சினியுலகம், மனிதன், ஐபிசி தமிழ், எல்பிசி தமிழ், விடுதலை, கனடாமிரர் மற்றும் ஜேவிபி நியூஸ் ஆகிய இணையதளங்களையும் வாங்கியதோடு, தமிழ் ஊடக சாம்ராஜ்யத்தில் கணிசமான பங்கையும் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
வட இலங்கையில் இந்த கேளிக்கை பூங்காவைக் கட்டுவதற்காக பி.கே. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளார். </p><p>சமீபத்தில் அவர் தனது கேளிக்கை பூங்காவில் நான்கு நாள் உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்தார், அங்கு உணவுடன் கூடிய ஒவ்வொரு பொழுதுபோக்குக்கான நுழைவுச்சீட்டும் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. </p><p>இருப்பினும், நேற்று அந்த கேளிக்கை பூங்காவிற்குள் பெரிய உணவு நெருக்கடி கலவரங்கள் ஏற்பட்டன, அங்கு வாடிக்கையாளர்கள் உணவுத் திருவிழாவில் உணவுப் பற்றாக்குறை குறித்து புகார் அளித்தனர். </p><p>நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் உணவுத் திருவிழாவில் உணவு உண்ணாமலேயே திரும்பிச் சென்றனர். இத்தகைய பெரிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்த பிறகு, எதிர்காலத்தில் இந்த கேளிக்கை பூங்காவிற்கு வருவதைப் புறக்கணிக்குமாறு வாடிக்கையாளர்கள் மற்றவர்களை வலியுறுத்தினர்.</p><p> வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்த பல சமூக ஊடக காணொளிகள் பரப்பப்பட்டு, அவை வைரலாகவும் பரவின.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நல்லெண்ணப் பயணமாக இந்த கேளிக்கை பூங்காவிற்குச் செல்லவிருந்தேன், ஆனால் அவ்வளவு நீண்ட பயணத்திற்கு என் நேரம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.</p><p>
ஒரு நாளைக்கு 2500 வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 4 நாள் உணவுத் திருவிழா நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப உணவையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பி.கே. தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்தது. அவர்கள் 100 வகையான உணவுகளையும் 100 விதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். </p><p>முதல் நாளில் 10,000 பேரும், இரண்டாம் நாளில் 30,000-க்கும் மேற்பட்டோரும் வருகை தந்தனர். இது ஒரு எதிர்பாராத கூட்டமாக இருந்தது. உதாரணமாக, அவர்களிடம் 5 ஹாப்பர்ஸ் நிலையங்கள் இருந்தன, ஆனால் இரண்டு மணி நேரத்தில் 5,000 பேர் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். </p><p>BK தரப்பின்படி, இதை நிர்வகிப்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவைத் தவிர, கவுண்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கியவர்களையும் அனுமதித்ததே BK தரப்பிலிருந்து நடந்த தவறு. அதுதான் மிகப்பெரிய தவறு. </p><p>அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, BK-யின் எதிரிக் கும்பல் ஒன்று, யூடியூபர்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கி, ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
</p><p>எப்படியிருந்தாலும், ஒரு வணிகத்தின் நிலைத்தன்மைக்கு நுகர்வோர் திருப்தி இன்றியமையாதது என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இது அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். </p><p>இதற்கிடையில், தனது தொழிலை அழிப்பதற்கான எதிரியின் சதித்திட்டத்தின் எல்லைக்குள் செல்லாமல், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழக்கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்கள் பி.கே-யின் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.</p><p>
முஹீத் ஜீரன் 
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி அநுரகுமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-drug-related-crimes-srilanka-review-1786368845"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-drug-related-crimes-srilanka-review-1786368845</id>
            <summary type="text">&amp;nbsp; பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.



ஜனாதிபதி அநுரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசமே ஒன்றிணைந்த" தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தில்,இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6796d95-f1d3-46ba-8669-dfa785db5e1a/26-6a79d34ea345a.webp' /></p><p>


நாட்டின் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன்! அரிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606"></link>
            <id>https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் தன்மையை கொண்டுள்ளதாம்.
</p><p>
 மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்களின் அதிசயம் குறித்து அறிவோம்.

பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fcd6f7-085b-4c5f-b5c1-c95f7c5f7954/26-6a799bafaef90.webp' /></p><h2>இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டை&nbsp;இடும் திறன்</h2><p> </p><p>பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன.</p><p></p><p> இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பெண்ணாக மாறும் பெரிய அளவிலான பாராமுண்டி மீன்கள், இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டைகளை இடும் திறன் கொண்டவை.</p><p></p><p> சில சமயங்களில் ஒரு மீன் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 அதேசமயம் , அனைத்து ஆண் பாராமுண்டி மீன்களும் பெண் மீன்களாக மாறுவதில்லை. அவற்றில் சில வாழ்நாள் முழுவதும் ஆண் மீன்களாகவே வாழும் என்று ம் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T12:50:49+00:00</updated>
        </entry>
    </feed>
