<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T15:44:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குண்டும் குழியுமான வீதிகளால் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912"></link>
            <id>https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>


782ஆம் வழித்தடமான யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சுமார் 15 அடி நீளத்திற்கு வீதியின் முழு அகலமும் சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92585248-920e-4e84-9f1c-28b8e21c80bc/26-6a845ec9c3581.webp' /></p><h2>விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்&nbsp;</h2><p>
</p><p>


வீதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து, சில மாதங்களுக்கு முன்னர் நீர் வீதியை ஊடறுத்து பாய்ந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>



குறித்த வீதியூடாக மூன்று பேருந்து வழித்தடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.</p><p>



இந்நிலையில், சேதமடைந்துள்ள குறித்த பகுதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


எனவே, மேலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மருத்துவமனை சம்பவம்; உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3kg-kidney-stone-record-world-1787057064"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3kg-kidney-stone-record-world-1787057064</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809" target="_blank">திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் </a>அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட சம்பவம் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவரிடமிருந்து 1.9 கிலோகிராம் எடையுள்ள கல் அகற்றப்பட்டதே உலக சாதனையாக பதிவாகியிருந்தது

சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழாம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0840977-4db6-4e13-8008-76018bf9b98b/26-6a8453aa6a794.webp' /></p><h2>பிரேசில் நாட்டில் நோயாளியின் 1.9 கிலோகிராம்&nbsp; கல்</h2><p>

இந்த விடயம் தொடர்பான சாதனைப் புத்தக அங்கீகாரம் குறித்து அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என மருத்துவத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான பதிவுகள் குறிப்பிடப்பட்டாலும், திருகோணமலை மருத்துவமனையில் அகற்றப்பட்ட கல்லை உலக சாதனையாக உறுதிப்படுத்துவதற்கு உரிய சர்வதேச பதிவுகள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

முன்னதாக, திருகோணமலை மருத்துவமனையில் 52 வயதான ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோகிராம் நிறையுடைய பாரிய கல் கடந்த வெள்ளிக் கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
</p><p>
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சுமார் 21 சென்றிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் நிறையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பரிசோதனைகளின் அடிப்படையில் நோயாளிக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[PTA க்கு பதிலாக புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-new-bill-to-replace-the-pta-1787058946"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-new-bill-to-replace-the-pta-1787058946</id>
            <summary type="text">&amp;nbsp; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை' பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
</p><p>
 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed15f78b-17c4-4e73-aeac-dcd328eb7f18/26-6a845b038150e.webp' /></p><h2>சட்டமா அதிபரின் அனுமதி</h2><p>
</p><p>
 

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்குத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> 

 

அந்த ஆரம்ப வரைவின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.</p><p>

 

சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

 

இச்சட்டமூலம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன்பின்னர் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள காதலுக்கு இடையூறு; TV பார்த்த கணவன் மற்றும் மகன் கொலை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

 கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனையும் , மகனையும் கொடூரமாக கொன்றமை பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753a4b00-a14d-46d2-9f86-253bc3f0a33b/26-6a844db3e2c77.webp' /></p><h2>&nbsp;ஸ்னாப்சாட் மூலம்&nbsp; பழக்கம்</h2><p> 
 பெங்களூருவில் அபிநந்தன் என்பவருடன் 2021-ல் திருமணம் நடந்த ஹரிணிக்கு, ஸ்னாப்சாட் மூலம் வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியதால், கணவனை பிரிய ஹரிணி விரும்பியுள்ளார்.</p><p></p><p> 
 
ஆனால் அபிநந்தன் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டு புகார் அளித்துள்ளார்.</p><p> 

இதனால் ஏற்பட்ட தகராறில் காதலன் வினய்யுடன் சேர்ந்து கொடூர திட்டத்தைத் தீட்டியுள்ளார் ஹரிணி.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கணவனும் மகனும் பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது, திட்டமிட்டபடி நைட்டுக்கு மேல் வீட்டிற்குள் நுழைந்த வினய் மற்றும் ஹரிணி இருவரும் சேர்ந்து, அபிநந்தனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கொடூரத்தை பார்த்த ஐந்து வயது மகனையும் விட்டுவைக்காமல் அவனையும் கொலை செய்துள்ளனர். 

மறுநாள் காலை இருவரும் சடலமாக கிடப்பதாகக் காவல்துறையினருக்கு நாடகமாடி போன் செய்துள்ளார் ஹரிணி.</p><p> எனினும், உடலில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த போலீசார், ஹரிணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து ஹரிணியும் வினய்யும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் அரை நிர்வாணமாக சுற்றும் இளைஞன்; பெண் மீது துஸ்பிரயோக முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து இ கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccc33e3-ee1a-43f1-b678-dc7fabd1bc32/26-6a841af26ce67.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணையில் இளைஞன் ஒருவரை அடையாளம் கண்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.</p><p></p><p>

 குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடமாடிய இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை 14ஆம் திகதி பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தது தான் தான் பொலிசாரிடம் கூறியுள்ளார்.</p><p>

குறித்த இளைஞன் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ven-rambukkana-siddhartha-thero-passes-away-1787058406"></link>
            <id>https://jvpnews.com/article/ven-rambukkana-siddhartha-thero-passes-away-1787058406</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.

 

ரம்புகன சித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
 

ரம்புகன சித்தார்த்த தேரர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b78d761-4617-4661-9046-ac82d950a4c7/26-6a8458e7c82f9.webp' /></p><p>1950 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெனியாய ரம்புகானையில் பிறந்த வண. ரம்புகன சித்தார்த்த தேரோ தனது ஆரம்பக் கல்வியை மொரவக வெலிவ பௌத்த கலப்புப் பாடசாலையில் கற்றார்.</p><p>


 



வண. ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு இலங்கையின் பௌத்த மற்றும் பிரபலமான பாடல் இலக்கியங்களுக்கு நிலையான பங்களிப்பை வழங்கிய மரியாதைக்குரிய நபரின் இழப்பைக் குறிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-18T13:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ நிலை ; மார்ச் - ஏப்ரலில் மின்னுற்பத்திக்கு பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-conditions-threat-to-power-generation-1787057687"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-conditions-threat-to-power-generation-1787057687</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் எல் நினோ நிலைமையால் அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின்னுற்பத்திக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படக் கூடுமென வலுசக்தி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் எல் நினோ நிலைமையால் அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின்னுற்பத்திக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படக் கூடுமென வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>



பெட்டரி வலுசக்தியை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கொழும்பில் நேற்று (17) இதுதொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51e19072-94e3-4a8f-8cf3-133a9b2cba3d/26-6a84561893f94.webp' /></p><h2>பெட்டரி வலுசக்தி மின்னுற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை</h2><p>
</p><p>


அதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 160 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>


அந்தக் கட்டமைப்பினூடாக செப்டெம்பர் மாதத்தில் 130 மெகாவோட் மற்றும் ஒக்டோபர் மாதத்தில் 10 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p>



அதேபோன்று தனியார் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக் கூடியதாக இருந்தால் மேலும் 50 மெகாவோட் வரையிலான மின்னை தேசியக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
</p><p>


இதற்கிடையில், பெட்டரி கட்டமைப்பினூடாக 250 மெகாவோட் மற்றும் 150 மெனாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்வதனூடாக எல்நினோ நிலையை எதிர்கொள்வது மாத்திரமல்லாமல் மின்னுற்பத்தியையும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T12:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடசாலைக்கு மகளுடன் சென்ற தந்தைக்கு அதிர்ச்சி; பாலியல் லஞ்சம் கோரிய பெண் அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879"></link>
            <id>https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360c41e-5b6b-40f3-8bdd-f2a34a89f7a3/26-6a83fd00d8fb7.webp' /></p><p></p><h2>&nbsp;பாலியல் லஞ்சம்&nbsp;&nbsp;</h2><p>

 இன்னிலையில் , மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே&nbsp; பாலியல் லஞ்சம் கோரியதாக&nbsp; &nbsp; தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T12:18:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்; அம்பலப்படுத்திய அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515</id>
            <summary type="text">நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இன்று (18) பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.
</p><p>
 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f61b73-5244-486c-9ebb-0ece65578d8b/26-6a843dfcc634e.webp' /></p><p></p><h2>&nbsp;நான்கு முகாமையாளர்கள்&nbsp; 89 கணக்குகள்</h2><p> </p><p>அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

 

இந்த நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகக் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ கூறினார்.</p><p></p><p>

 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர், அதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் பலனாக இந்த 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T11:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் கொலுசுச் சத்தம்; அமானுஸ்ய அச்சத்தில் வெளியேறிய 600 மாணவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sound-anklets-in-the-hostel-600-students-fled-fear-1787047672"></link>
            <id>https://jvpnews.com/article/sound-anklets-in-the-hostel-600-students-fled-fear-1787047672</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் சுமார் 600 மாணவர்கள் பயத்தில் அவர்களின் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் சுமார் 600 மாணவர்கள் பயத்தில் அவர்களின் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவம் அமராவதி (Amravati) நகரில் அரசாங்கம் வழிநடத்திய மாணவர் தங்கும் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவம் என்ற வதந்தி பரவத் தொடங்கியதை அடுத்து மாணவர்கள் தங்களின் வீட்டிற்குத் திரும்பியதாகச் ஊடகங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21511db-af37-499a-b8c4-ea300f924b30/26-6a842efa54cd3.webp' /></p><h2>கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம்&nbsp;</h2><p>
கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம் கேட்டதாக
சில மாணவிகள் கூறியதை அடுத்து விடுதியில் தங்க்கிருந்த மாணவர்கள் மத்தியில் பயத்தைக் கிளறியது.

ஆறு மாணவிகள் கட்டுப்படுத்தமுடியாமல் மாறி மாறி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததாகக் கூறப்பட்டது.</p><p></p><p> 

பள்ளியின் தலைமை ஆசிரியர் மனநல நிபுணரை வரவழைத்து அந்த மாணவிகளைச் சோதனைக்கு உட்படுத்தினார்.

அவர்கள் Dissociative Conversion Disorder எனப்படும் மனநல நோயால் அவதிப்படுவதாக மருத்துவச் சோதனை மூலம் தெரியவந்தது.
</p><p>
அதீத மனவுளைச்சலால் மனோவியல் ரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் அழையா விருந்தாளி; ஆனால் நடந்தது வேறு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-stroll-kandalama-hotel-lobby-1787047052"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-stroll-kandalama-hotel-lobby-1787047052</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
காட்டு யானை ஒன்று விருந்தக வளாகத்திற்குள் அமைதியாக நடந்து வரும் காட்சிகளை ஊழியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/233cd545-dd3a-46f2-8631-ca83cb79dc2f/26-6a842c8e2a3ef.webp' /></p><h2>&nbsp; அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்ற&nbsp;யானை</h2><p>
</p><p>
எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தாமலும், குறித்த விருந்தகத்தின் தளபாடங்கள் மற்றும் பிற பொருட்களைச் சேதப்படுத்தாமலும் அந்த யானை மிக அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்றுள்ளது.</p><p></p><p>
</p><p>
அத்துடன், ஊழியர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அந்த யானை தானாகவே விருந்தக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளது.</p><p>

விருந்தகம் ஒன்றுக்குள் காட்டு யானை உலா வந்த இந்த அபூர்வ நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:55:07+00:00</updated>
        </entry>
    </feed>
