<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T09:22:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு கடலில் 11 இந்திய மீனவர்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109"></link>
            <id>https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&amp;nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&amp;nbsp;நெடுந்தீவு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&nbsp;</p><p>நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.&nbsp;</p><p>இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில்குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்தது.&nbsp;</p><p>நீண்ட முயற்சியின் பின்னர் இன்றைய தினம் குறித்த 11 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேவேளை, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-08-06T08:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக பாதீடு அறிக்கை;புயலைக் கிளப்பிய விவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tvk-led-government-s-maiden-revised-budget-1786003491"></link>
            <id>https://jvpnews.com/article/tvk-led-government-s-maiden-revised-budget-1786003491</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசின் பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசின் பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசியல் சர்ச்சையாக மாற்றக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார்.</p><p>இதனையடுத்து, அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் பதிலளித்து, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இராமர் சிலையுடன் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ வந்தாலும் இதையே சொல்வீர்களா சேர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T08:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக சேர்க்கை பதிவுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-university-admission-registration-begins-1786003086"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-university-admission-registration-begins-1786003086</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் .</p><p>இதனை&nbsp; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289"></link>
            <id>https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289</id>
            <summary type="text">யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;ஒழுங்காக படிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>ஒழுங்காக படிக்கவில்லை என அவரின் தாய் கண்டித்ததால் அவர்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக சொல்லப்படுகிறது.&nbsp;</p><p>இது தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொர்க்கத்தில் என் தாய் மகனை பார்த்துக்கொள்வார் என சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.</p><p>டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சவுக்கு சங்கர் யுடியூப்பில் தொடர்ந்து அரசியல் தொடர்பான விவாதங்களை செய்து வந்தார்.&nbsp;</p><p>குறிப்பாக 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>2026 தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தபின் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசி வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T07:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898"></link>
            <id>https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898</id>
            <summary type="text">திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T07:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-red-alert-for-12-districts-1786002053"></link>
            <id>https://jvpnews.com/article/weather-red-alert-for-12-districts-1786002053</id>
            <summary type="text">தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்&amp;nbsp; 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்&nbsp; 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை நாளை (07) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி தாழிறங்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-the-hatton-colombo-main-road-subsiding-1785998623"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-the-hatton-colombo-main-road-subsiding-1785998623</id>
            <summary type="text">கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதி வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதி வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p>இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு&nbsp; சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T06:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவனொளிபாத மலை உச்சிப் பகுதியில் மண்சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/landslide-at-the-summit-of-adam-s-peak-1785997001"></link>
            <id>https://jvpnews.com/article/landslide-at-the-summit-of-adam-s-peak-1785997001</id>
            <summary type="text">கனமழை காரணமாக சிவனொளிபாத மலை உச்சிப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிவனொளிபாத யாத்திரைப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழை காரணமாக சிவனொளிபாத மலை உச்சிப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிவனொளிபாத யாத்திரைப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து, சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், இடிக்கட்டு பஹானா வழியாக இரத்தினபுர வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், நிலவும் மோசமான வானிலை சீரடைந்த பின்னர், பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் செடிகளை அகற்றி வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நல்லதண்ணிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T06:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்குச் செல்ல வேண்டாம்! வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-venture-out-to-sea-meteorology-red-warning-1785996272"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-venture-out-to-sea-meteorology-red-warning-1785996272</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (06) கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இன்று (06) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.&nbsp;</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.&nbsp;</p><p>இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.&nbsp;</p><p>எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.&nbsp;</p><p>மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><br></p><p>மேலும்&nbsp; வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும்&nbsp; கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T06:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தரவரிசையில் முதலிடத்தில் ரூமேஷ் தரங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-tharanga-top-world-rankings-javelin-throw-1785995819"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-tharanga-top-world-rankings-javelin-throw-1785995819</id>
            <summary type="text">இலங்கையின் ரூமேஷ் தரங்க, உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில்&amp;nbsp; முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.&amp;nbsp;இலங்கையின் ருமேஷ் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ரூமேஷ் தரங்க, உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில்&nbsp; முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கையின் ருமேஷ் தரங்க 1,354 தரவரிசைப் புள்ளிகளுடன் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முதலாம் நிலை வீரராக உருவெடுத்துள்ளார்.</p><p>இதன் மூலம், ஈட்டி எறிதலில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.</p><p>அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து ரூமேஷ் தரங்க&nbsp; &nbsp;தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில், தரப்படுத்தலில் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண பீதியில் மைத்திரி - திருமண நிகழ்வில் அம்பலமான ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/maithripala-sirisena-in-sad-1785938417"></link>
            <id>https://jvpnews.com/article/maithripala-sirisena-in-sad-1785938417</id>
            <summary type="text">இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் திருப்புமுனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் திருப்புமுனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேடைகளில் பாடல்களை பாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ள மைத்திரி, சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வில் பாட மறுத்தமை அரசியல் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p> 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>இந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795af351-f008-4717-b4bd-2e3598fdb3e1/26-6a7356aeb289f.webp' /></p><p>தலவத்துகொட பகுதியில் பொலன்னறுவையை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டிருந்தார். </p><p>
திருமண நிகழ்விற்கு வந்ததிலிருந்து மைத்திரிபால ஒரு பாடல் பாட வேண்டும் என்று அனைவரும் பெரிதும் விரும்பியுள்ளனர். ஆனால், அதற்கு மைத்திரி இணக்கம் தெரிவிக்கவில்லை. </p><p> 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் அச்சத்தில் உள்ளமையினால் இயல்பான நிலையில் மைத்திரி இல்லை என அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஹேமசிறிக்கும் பூஜிதனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி கடும் வருத்தத்தில் உள்ளார் எனவும் அவர் பாட மாட்டார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். </p><h3><b>

பலவந்தமாக அழைத்து செல்லப்பட்ட மைத்திரி</b></h3><p>திருமண நிகழ்வில் அனைவரும் தொடர்ந்து வந்து முன்னாள் ஜனாதிபதி ஒரு பாடல் பாடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். எனினும் திருமண நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் மைத்ரியை பலவந்தமாக அழைத்து சென்று மேடையில் பாட வைத்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250c5806-3bd2-4ddb-8dd7-69eb735af792/26-6a7356af63499.webp' /></p><p>சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பாடலை பாட வேண்டிய கட்டாய நிலைக்கு மைத்ரி உள்ளாகியிருந்தார்.

அதன் பிறகு மைத்திரிபால சிறிசேன ஒரு பாடலைப் பாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>ஒரு பாடல் தான் பாடுவேன் என கூறி மைத்திரிபால சிறிசேன சமாளித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் நட்டஈடாக பெருந்தொகை பணத்தை மைத்திரி நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளார்.</p><p> இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில் மைத்திரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-06T05:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சா கலந்த 1,050 மதனமோதக மாத்திரை;பொலிஸார் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cannabis-laced-madana-modaka-pills-1785992284"></link>
            <id>https://jvpnews.com/article/cannabis-laced-madana-modaka-pills-1785992284</id>
            <summary type="text">அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்வத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்வத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, புதன்கிழமை (05) இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>சந்தேகநபரிடமிருந்து 1,050 மதனமோதக மாத்திரைகளுடன் கைப்பற்றப்பட்டதுடன், அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்&nbsp; அவிசாவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T04:58:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-l-and-scholarship-examinations-as-usual-1785989578"></link>
            <id>https://jvpnews.com/article/a-l-and-scholarship-examinations-as-usual-1785989578</id>
            <summary type="text">இலங்கையில் இயற்கை பேரிடர் நிலைமை எதுவும் இல்லை என்பதால், க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்த தீர்மானிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இயற்கை பேரிடர் நிலைமை எதுவும் இல்லை என்பதால், க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p> 

நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இயற்கை பேரிடர் முகாமைத்துவ மையம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2><b>

க.பொ.த உயர்தர பரீட்சை</b></h2><p>பரீட்சைகள் நடைபெறும் அட்டவணைகளுக்கு அமைய அந்த நாட்களில் விசேட காலநிலை மாற்றங்கள் எவையும் ஏற்படுவதற்கு இதுவரை காலநிலை எதிர்வுகூறல்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b662c75-108d-4c7c-bdd9-f4acade65587/26-6a740c22b5997.webp' /></p><p>ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-06T04:23:21+00:00</updated>
        </entry>
    </feed>
