<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T21:59:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு பாட்டி நடத்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandmother-s-cruel-act-against-newborn-girl-1784582222"></link>
            <id>https://jvpnews.com/article/grandmother-s-cruel-act-against-newborn-girl-1784582222</id>
            <summary type="text">ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர்.

ஈரோடு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர்.
</p><p>
ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையை அவரின் சொந்த பாட்டியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73284c97-6a52-4eb4-8d25-6bc35317e0fe/26-6a5e904fe1acf.webp' /></p><h2>மது போதைக்கு அடிமை</h2><p>
</p><p>
குழந்தையின் கழுத்து மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.
</p><p> பொலிசார் விசாரணையில் அந்த குழந்தையை சொந்த பாட்டியான தங்கமணி(47) கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. 

கொலைக்கான காரணம் பற்றி பொலிசார் விசாரித்து வருகிறார்கள். </p><p>தனது மகளுக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் மருமகன் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த முறையும் பெண் குழந்தை பிறந்ததால், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க முடியாது எனக் கருதி, குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். </p><p>இதையடுத்து, பேத்தியைக் கொலை செய்ததாக தங்கமணியை பவானி காவலர்கள் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582"></link>
            <id>https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582</id>
            <summary type="text">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன் சேர்ந்து கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a16b6-8cfe-439c-b580-f339b8547a33/26-6a5e72779969f.webp' /></p><h2 style="text-align: justify; ">கள்ளக்காதல்</h2><p style="text-align: justify; ">

இந்த பள்ளியில் வாகன ஓட்டுநராக இருப்பவருடன் தாமினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கு தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டி விட முடிவு செய்தனர்.</p><p style="text-align: justify; "> இருவரும் சேர்ந்து சாலை விபத்தில் கொலை செய்ய முதலில் திட்டமிட்டனர்.

ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனால், வேறு திட்டம் தீட்டி கணவரை கொல்ல&nbsp; முடிவு செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்த முறை கணவருக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததும், படுக்கையறையில் விஷப்பாம்பை விட்டு அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்த கொலைக்கு 2 காரணங்கள் இருந்துள்ளன. காப்பீடாக ரூ.20 லட்சம் தொகையை பெற்று விட்டு, கள்ளத்தொடர்பை தொடர இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க பாம்பை விட்டு கடிக்க செய்து இயற்கையான முறையில் உயிரிழந்தது போல் காட்ட திட்டமிட்டு உள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இது இயற்கை மரணம் போன்று முதலில் விசாரிக்கப்பட்டாலும், பொலிசாரின் தீவிர விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T21:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி ; 4 பெண்கள் உட்பட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-raided-during-police-operation-1784579638"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-raided-during-police-operation-1784579638</id>
            <summary type="text">சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை&amp;nbsp; முற்றுகையிட்ட போது, 4 பெண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை&nbsp; முற்றுகையிட்ட போது, 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/599850be-ba05-4589-8c51-1a2402cc0447/26-6a5e86379c190.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் மற்றும் விபச்சார தொழிலுக்காகத் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சீதுவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T21:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683</id>
            <summary type="text">ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e00588-6bb6-4a76-88a2-e4c62f8215b9/26-6a5e827d9a4b6.webp' /></p><p> 

அவர் வசம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் ; ஆனந்த விஜயபால]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764"></link>
            <id>https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764</id>
            <summary type="text">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்த போதிலும், எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாமல் போதைப்பொருள் ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட 16 முக்கிய தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b709f9-8b6f-4ead-99f3-2dd8213edf83/26-6a5e7ee6aeb10.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p style="text-align: justify; ">
கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் ஆதரவு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்களுக்கு இடையிலான பிணைப்பு தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிராக மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு 14,125 மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

</p><p style="text-align: justify; ">
மேலும், போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களைக் வெறும் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்து சிறையில் அடைப்பதால் எவ்வித பலனும் இல்லை என்பதால், அவர்களை நோயாளர்களாகக் கருதி முறையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது மட்டுமே சட்டத்தின் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p style="text-align: justify; ">
பிராந்திய பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான செயற்பாடு காணப்படாவிட்டால், வேறு பொலிஸ் பிரிவுகளையோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையையோ பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெறப்படும் தகவல்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.</p><p style="text-align: justify; "> நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் இந்தத் தேசியப் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், போதைப்பொருள் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அல்லது சாதகமாகச் செயற்படுபவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவோ அல்லது அதற்குத் துணை செல்பவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T20:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580"></link>
            <id>https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580</id>
            <summary type="text">தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p>இது முற்றிலும் போலியான செய்தியாகும் என தொழில் அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c045c63c-5801-43f6-ac64-d1b60ccb3d2f/26-6a5e7a459f09e.webp' /></p><h2>போலிப் பிரசாரம்</h2><p>
</p><p>
தொழில் அமைச்சினால் திங்கட்கிழமை (20) விடுக்கப்பட் அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும். </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் திருமணப் பதிவுகளில் சரிவு ; 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-sees-drop-in-marriage-registrations-1784572942"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-sees-drop-in-marriage-registrations-1784572942</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> அதேவேளையில், பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552f7a77-c088-4006-a9a0-71f33f836dd9/26-6a5e6c0fb9c40.webp' /></p><h2>திருமணங்களின் எண்ணிக்கை</h2><p>

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics) அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 வீழ்ச்சியாகும்.</p><p>

2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. </p><p>இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.</p><p></p><p>

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன. </p><p>இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. </p><p>இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பணிக்காக 50 முறை பரீட்சை ; பட்டதாரி இளைஞரின் விபரீத முடிவு ; கண் கலங்க வைக்கும் தந்தைக்கான இறுதி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778"></link>
            <id>https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778</id>
            <summary type="text">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, பீகார் மாநிலம், பக்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, </p><p style="text-align: justify;">பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07175ff9-860f-4873-9c78-d626a28c69fe/26-6a5e5bcc0cdd8.webp' /></p><h2 style="text-align: justify;">மன்னிப்பு கடிதம்</h2><p>

</p><p style="text-align: justify;">
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். </p><p style="text-align: justify;">50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><p style="text-align: justify;">பொலிசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-20T17:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் உள்ள பிரச்சினைகள் ; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-chairs-meeting-on-prison-issues-1784567177"></link>
            <id>https://jvpnews.com/article/president-chairs-meeting-on-prison-issues-1784567177</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cbabbac-5da7-42f4-b167-f899d6905f1e/26-6a5e558ab3691.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">






மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T17:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு நீதி கோரி கடல் தாண்டியும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-in-france-demanding-justice-suresh-sallay-1784553823"></link>
            <id>https://jvpnews.com/article/protest-in-france-demanding-justice-suresh-sallay-1784553823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஈஸடர் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய கைதாயுள்ள சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஈஸடர் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய கைதாயுள்ள சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தி பாரிஸில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>


 பிரான்சில் வாழும் இலங்கை தேசப்பற்றாளர்கள் பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற குடியரசு சதுக்கத்தில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76718b5b-bd00-46ea-8bf7-1b847722c210/26-6a5e21613d451.webp' /></p><h2>தங்களது தேசியக் கடமை</h2><p> 



 பாரிஸ் நகரின் குடியரசு சதுக்கத்தில் ஒன்றுகூடிய பெருந்திரளான இலங்கையர்கள், அமைதி வழி போராட்டத்திலும் சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டனர்.</p><p></p><p>



யுத்த காலப்பகுதியில் பிரான்சிற்கான இலங்கை தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றிய சுரேஷ் சலே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக வெளிநாட்டு மண்ணில் இருந்து ஆற்றிய இணையற்ற பங்களிப்பை&nbsp; இதன்போது நினைவு கூர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bea9bc0-96a3-4727-b1c5-652434ed4aff/26-6a5e221b3c6cf.webp' /></p><p>
</p><p>


அன்று முதல் இன்று வரை நாட்டை நேசிக்கும் மக்கள், மேஜர் ஜெனரல் சலே ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை நன்கு அறிவர் என கூறிய போராட்டக்காரர்கள், தற்போது அவருக்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவாக எழுந்து நிற்பது தங்களது தேசியக் கடமையாகும் என்றும் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T16:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நாடாளுமன்றத்தின் முன் பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள் ; கரப்பான் பூச்சி கட்சி தலைவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-erupts-outside-indian-parliament-1784565456"></link>
            <id>https://jvpnews.com/article/tension-erupts-outside-indian-parliament-1784565456</id>
            <summary type="text">நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p style="text-align: justify;">
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கி நடப்போம் என்ற பேரணியின் போது, 'காக்ரோச் ஜனதா கட்சி' ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a60a976d-e129-4763-b414-036528f0954e/26-6a5e4ed21a410.webp' /></p><h2 style="text-align: justify;">உண்ணாவிரதப் போராட்டம்</h2><p>
</p><p style="text-align: justify;"> 
 நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டனர்.</p><p style="text-align: justify;"> போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தடுத்தனர். </p><p style="text-align: justify;">இந்த சம்பவத்தால் மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், ஜன்பத் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
பொலிசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது. </p><p style="text-align: justify;">மேலும் கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.
</p><p style="text-align: justify;">
இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை பொலிசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-20T16:37:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலின மாற்று சுற்றறிக்கை ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "> முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1933dde7-d8db-4088-a3f8-57d008356f34/26-6a5e491fb712c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T16:13:25+00:00</updated>
        </entry>
    </feed>
