<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T01:36:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e244b2-abb6-4d89-83d9-a737fd7ea815/26-6a6d40f4d8dfb.webp' /></p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர&nbsp; சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. </p><p style="text-align: justify;">சனியின் இந்த இடப்பெயர்ச்சி மற்றும் அதன் பார்வை&nbsp; சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49608ccb-1e9b-4df1-bdd3-8afaf4107835/26-6a6d4684c6ef2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறந்த பலன்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">குறிப்பாக, இரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்கள் சனியின் அருளால் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம், பண வரவு மற்றும் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும் என்று குறிப்பிடப்படுகிறது.
</p><p style="text-align: justify;"><b>
ரிஷபம்:</b> ரிஷப ராசிக்காரர்களுக்கு, இக்காலம் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமாக அமையக்கூடும். நீண்ட காலத் தடைகள் நீங்கி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் கூட்டணிகளுக்கு வழிவகுக்கலாம். பணியாளர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் காலமாகவும் இது கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;"><b>
மிதுனம்:</b> ஜோதிடக் கணிப்புகளின்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். உயர்கல்வி கற்க அல்லது வெளிநாட்டில் வேலை தேட விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட காலக் குடும்பப் பிரச்சனைகள் தணிந்து, உறவுகள் வலுப்படக்கூடும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T01:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிம்பிக் சாதனையாளர்களை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை நாயகன் ; 20 வருடங்களின் பின் கிடைத்த தங்கம் பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005"></link>
            <id>https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005</id>
            <summary type="text">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.</p><p style="text-align: justify;">

மேலும், மெல்பர்ன் 2006 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் சின்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f994ccac-8acf-4b2f-bb55-dc732a589b94/26-6a6d3d4737fa5.webp' /></p><h2 style="text-align: justify; ">கடும் முயற்சி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ருமேஷ் தரங்கவின் முதலாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும் இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்துக்கு முன்னேறினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">

மூன்றாவது முயற்சியில் அதனைவிட தூரத்திற்கு ஈட்டியை ருமேஷ் தரங்க எறிவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify; ">அவரது அடுத்த மூன்று முயற்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.</p><p style="text-align: justify; ">இப் போட்டியில் இந்திய வீரர்களான நீராஜ் சொப்ரா (இரண்டாவது முயற்சியில் 85.83 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் யாஷ் விர் சிங் (ஆறாவதும் கடைசியுமான முயற்சியில் 85.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T00:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி; அரச உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133"></link>
            <id>https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify;">

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0889d713-d921-4825-a920-687b9685432a/26-6a6d35f6b60a1.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடுகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். </p><p style="text-align: justify;">

அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p style="text-align: justify;">

இந்த விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர். </p><p style="text-align: justify;">

இந்நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் இன்று காலை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. </p><p style="text-align: justify;">

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும், 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சனிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T23:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நோய்கள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் ; உடல் தரும் முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911</id>
            <summary type="text">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.



மார்பு வலி :&amp;nbsp; இடது கை அல்லது தாடை பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.
</p><p style="text-align: justify;"><b>


மார்பு வலி :</b>&nbsp; இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக் கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35f951c-cfcb-470c-b0f1-1d284eb822b4/26-6a6d31371f755.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;அறிகுறிகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;"><b>


வயிறு வலி </b>: திடீரென ஏற்படும் வயிற்று வலி குடல் புண், பித்தப்பை கோளாறு, அலசர் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>


கால் வலி: </b>காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது இரத்த உறைவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>திடீர் தலைவலி: </b>மூளையில் இரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது இரத்த அழுத்த மாற்றங்களைக் குறிக்கும்.
</p><p style="text-align: justify; ">
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a0db9d-59f5-4657-8895-fb733694e8eb/26-6a6d326351ec2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;"><b>


பல் வலி :</b> பல்லில் தொடர்ந்து வலி இருந்தால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


திடீர் தோள்பட்டை வலி :</b> தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.</p><p style="text-align: justify;"><b> 



கழுத்து வலி: </b>கழுத்தில் வலியுடன் காய்ச்சல் இருந்தால் அது மெனின்ஜைட்டிஸ் எனப்படும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


முதுகு வலி: </b> முதுகின் அடிப்பகுதி, நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரகக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


பாத வலி : </b> பாதங்களில் வலி நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதற்கான அறிகுறி.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


கண் வலி: </b> கண்களில் வலி, அழுத்தம், பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் தொற்றாகவும் இருக்கும்.
</p><p style="text-align: justify;"><b>


காது வலியுடன் சீழ் வடிதல் :</b> காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறினால் கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-31T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[241,420 இலங்கையர்கள் கைது ; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-announce-241-420-arrests-nationwide-1785534655"></link>
            <id>https://jvpnews.com/article/police-announce-241-420-arrests-nationwide-1785534655</id>
            <summary type="text">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 241,420 சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 241,420 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த வருடம் (2025) ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a865030c-468b-4c88-9400-61e37ed98130/26-6a6d18c0c16a0.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சுற்றிவளைப்பு நடவடிக்கை</h2><p style="text-align: justify;">

அதற்கமைய வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 684 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 684 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

மேலும் கைதான 4 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


அத்தோடு கடந்த ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 420 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 243,058 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2256 கிலோ கிராம் ஹெரோயின், 2642 கிலோ கிராம் ஐஸ் , 7517 கிலோ கிராம் கஞ்சா, 293 கிலோ கிராம் கொக்கைன், 1639 கிலோ கிராம் குஷ், 372 கிலோ கிராம் ஹசிஸ், 876 கிலோ கிராம் மதனமோதகம், 441 கிலோ கிராம் மாவா மற்றும் 3,678,542போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 380 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3300 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2341 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T22:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T21:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494"></link>
            <id>https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494</id>
            <summary type="text">&amp;nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
</p><p style="text-align: justify; ">


இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் இங்கு சுட்டிக் காட்டினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed0a312-658d-4c0a-ad5e-e24da7dbe08c/26-6a6d10500942a.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட கவனம்</h2><p style="text-align: justify; ">



அந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும், நிர்வாகத் துறையில் அது குறித்த ஒரு கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
</p><p style="text-align: justify; ">


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலில் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ec6309-96b3-4b89-97a0-350b72c6b7e9/26-6a6d1050b6806.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் பொது நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு என்பவற்றுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகள் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
</p><p style="text-align: justify; ">


அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக வழங்கக்கூடிய சேவைகள் குறித்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



அம்பாறை, மட்டக்களப்பு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்ட செயலக வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் களுத்துறை, பிடபெத்தர, அகுணுகொலபெலஸ்ஸ, இரத்மலானை, கோட்டை மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


நாடு முழுவதும் தற்போது 2,000க்கும் அதிகமான குறைவான பயன்பாட்டில் உள்ள கட்டிட நிர்மாணப் பணிகள் காணப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய அனைத்து நிர்மாணங்களின் தேவைகள் குறித்தும் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அவசியமான நிர்மாணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் கீழ் அரசாங்க நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கொழும்பு பெருநகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. </p><p style="text-align: justify; ">2015 ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைப் பிரதேசத்திற்கு உரிய ஒட்டுமொத்த வடிகாலமைப்புக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் 1927 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கடன் அபிவிருத்தி நிதியம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய கிராமிய சிறு பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்களின் இந்த வருடத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், கிராமிய சிறு பாலங்களின் அபிவிருத்திக்காக 2026/2029 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்கு 6,793 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் 29% முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> இத்திட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கிராமிய பாலங்களின் நிர்மாணத் திட்டங்களை மிகவும் பயனுள்ள வகையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது 750,000 அளவிலானோர் ஓய்வூதிய உரிமையைப் பெற்று வருவதாகவும் இங்கு தெரவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


அமைச்சர்களால் உத்தியோகபூர்வ வதிவிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பங்களாக்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக ஈடுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் முன்னேற்றத்தினையும் ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த வளங்களிலிருந்து முறையான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வருமானம் ஈட்டல் பணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "> ஏனைய பொது சேவைகளின் போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மேலும் முறைமைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான பொது வசதிகளை வழங்குதல் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சியினை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-31T21:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439</id>
            <summary type="text">&amp;nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc44a930-84a9-4bee-8155-0cdc9f326bd3/26-6a6d08490ae52.webp' /></p><h2 style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து</h2><p style="text-align: justify; ">



மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என்றார்.</p><p style="text-align: justify; ">



மேலும், எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகளுக்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T20:40:52+00:00</updated>
        </entry>
    </feed>
