<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T03:43:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113</id>
            <summary type="text">இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca9d0cc-7e0b-4b02-98c2-b7276913aa22/26-6a6d68ab0c81a.webp' /></p><p>மேலும், மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 48 மணி நேரம் அவதானம் ; களனி கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde756cc-ab6d-4885-b61d-07ee1ac6ae5a/26-6a6d652d348c9.webp' /></p><p> 

அதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2025-a-l-exam-university-entrance-cut-off-points-1785553594"></link>
            <id>https://jvpnews.com/article/2025-a-l-exam-university-entrance-cut-off-points-1785553594</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் (Z-Score Cut-off Marks) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.</p><p>இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்து கற்கை நெறிகளுக்கும் அனுமதி பெறத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b7d47a-6e95-4650-b65b-a1d0ef1df115/26-6a6d62bb869e7.webp' /></p><p>

தங்களது மாவட்டம் மற்றும் விண்ணப்பித்துள்ள கற்கை நெறிக்கான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகளைப் பரிசீலித்து, பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், வெட்டுப் புள்ளிகளின் முழுமையான பட்டியலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e244b2-abb6-4d89-83d9-a737fd7ea815/26-6a6d40f4d8dfb.webp' /></p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர&nbsp; சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. </p><p style="text-align: justify;">சனியின் இந்த இடப்பெயர்ச்சி மற்றும் அதன் பார்வை&nbsp; சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49608ccb-1e9b-4df1-bdd3-8afaf4107835/26-6a6d4684c6ef2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறந்த பலன்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">குறிப்பாக, இரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்கள் சனியின் அருளால் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம், பண வரவு மற்றும் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும் என்று குறிப்பிடப்படுகிறது.
</p><p style="text-align: justify;"><b>
ரிஷபம்:</b> ரிஷப ராசிக்காரர்களுக்கு, இக்காலம் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமாக அமையக்கூடும். நீண்ட காலத் தடைகள் நீங்கி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் கூட்டணிகளுக்கு வழிவகுக்கலாம். பணியாளர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் காலமாகவும் இது கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;"><b>
மிதுனம்:</b> ஜோதிடக் கணிப்புகளின்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். உயர்கல்வி கற்க அல்லது வெளிநாட்டில் வேலை தேட விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட காலக் குடும்பப் பிரச்சனைகள் தணிந்து, உறவுகள் வலுப்படக்கூடும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T01:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிம்பிக் சாதனையாளர்களை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை நாயகன் ; 20 வருடங்களின் பின் கிடைத்த தங்கம் பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005"></link>
            <id>https://jvpnews.com/article/ramesh-tharanga-s-historic-victory-1785544005</id>
            <summary type="text">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்கொட்லாந்தில் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.</p><p style="text-align: justify;">

மேலும், மெல்பர்ன் 2006 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் சின்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f994ccac-8acf-4b2f-bb55-dc732a589b94/26-6a6d3d4737fa5.webp' /></p><h2 style="text-align: justify; ">கடும் முயற்சி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ருமேஷ் தரங்கவின் முதலாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எனினும் இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்துக்கு முன்னேறினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">

மூன்றாவது முயற்சியில் அதனைவிட தூரத்திற்கு ஈட்டியை ருமேஷ் தரங்க எறிவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify; ">அவரது அடுத்த மூன்று முயற்சிகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.</p><p style="text-align: justify; ">இப் போட்டியில் இந்திய வீரர்களான நீராஜ் சொப்ரா (இரண்டாவது முயற்சியில் 85.83 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் யாஷ் விர் சிங் (ஆறாவதும் கடைசியுமான முயற்சியில் 85.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T00:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி; அரச உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133"></link>
            <id>https://jvpnews.com/article/two-public-officials-held-in-surprise-arrest-1785542133</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் நேற்று மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify;">

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0889d713-d921-4825-a920-687b9685432a/26-6a6d35f6b60a1.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடுகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். </p><p style="text-align: justify;">

அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p style="text-align: justify;">

இந்த விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர். </p><p style="text-align: justify;">

இந்நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் இன்று காலை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. </p><p style="text-align: justify;">

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும், 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சனிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T23:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நோய்கள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் ; உடல் தரும் முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-ignore-these-health-conditions-1785540911</id>
            <summary type="text">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.



மார்பு வலி :&amp;nbsp; இடது கை அல்லது தாடை பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.
</p><p style="text-align: justify;"><b>


மார்பு வலி :</b>&nbsp; இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக் கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35f951c-cfcb-470c-b0f1-1d284eb822b4/26-6a6d31371f755.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;அறிகுறிகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;"><b>


வயிறு வலி </b>: திடீரென ஏற்படும் வயிற்று வலி குடல் புண், பித்தப்பை கோளாறு, அலசர் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>


கால் வலி: </b>காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது இரத்த உறைவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>திடீர் தலைவலி: </b>மூளையில் இரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது இரத்த அழுத்த மாற்றங்களைக் குறிக்கும்.
</p><p style="text-align: justify; ">
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a0db9d-59f5-4657-8895-fb733694e8eb/26-6a6d326351ec2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;"><b>


பல் வலி :</b> பல்லில் தொடர்ந்து வலி இருந்தால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


திடீர் தோள்பட்டை வலி :</b> தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.</p><p style="text-align: justify;"><b> 



கழுத்து வலி: </b>கழுத்தில் வலியுடன் காய்ச்சல் இருந்தால் அது மெனின்ஜைட்டிஸ் எனப்படும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


முதுகு வலி: </b> முதுகின் அடிப்பகுதி, நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரகக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p style="text-align: justify;"><b>


பாத வலி : </b> பாதங்களில் வலி நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதற்கான அறிகுறி.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


கண் வலி: </b> கண்களில் வலி, அழுத்தம், பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் தொற்றாகவும் இருக்கும்.
</p><p style="text-align: justify;"><b>


காது வலியுடன் சீழ் வடிதல் :</b> காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறினால் கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-31T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[241,420 இலங்கையர்கள் கைது ; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-announce-241-420-arrests-nationwide-1785534655"></link>
            <id>https://jvpnews.com/article/police-announce-241-420-arrests-nationwide-1785534655</id>
            <summary type="text">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 241,420 சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 241,420 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த வருடம் (2025) ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a865030c-468b-4c88-9400-61e37ed98130/26-6a6d18c0c16a0.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சுற்றிவளைப்பு நடவடிக்கை</h2><p style="text-align: justify;">

அதற்கமைய வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 684 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 684 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

மேலும் கைதான 4 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


அத்தோடு கடந்த ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 420 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 243,058 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2256 கிலோ கிராம் ஹெரோயின், 2642 கிலோ கிராம் ஐஸ் , 7517 கிலோ கிராம் கஞ்சா, 293 கிலோ கிராம் கொக்கைன், 1639 கிலோ கிராம் குஷ், 372 கிலோ கிராம் ஹசிஸ், 876 கிலோ கிராம் மதனமோதகம், 441 கிலோ கிராம் மாவா மற்றும் 3,678,542போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 380 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3300 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2341 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T22:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T21:54:04+00:00</updated>
        </entry>
    </feed>
