<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T08:40:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை நினைவுகூர்ந்த தமிழ் எம்பிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர்.</p><p> 

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66ca2e8-03af-4ddd-9fdb-3eb4cca5321b/26-6a61d3576d4c2.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468"></link>
            <id>https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468</id>
            <summary type="text">கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>

சமூகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba6c1eee-b4ef-46fd-90a3-8a45ebe54d50/26-6a61cd65dfa4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126"></link>
            <id>https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
</p><p>


இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7cafa4-e57a-40de-9a02-6acf576104be/26-6a61cc0fd7373.webp' /></p><p>
</p><p>


இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 9ஆம் திகதி நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசீலனைக்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>



கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று தொடரவுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F901592169693205%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்; பின்னணியில் திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356"></link>
            <id>https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&nbsp; திடுக்கிடும்&nbsp; தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக&nbsp; பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ee094b-4f4e-402d-a638-9edaf111c81b/26-6a61aeac96d24.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம்</h2><p>
</p><p>சந்தேக நபர்களிடம்&nbsp; இருந்து&nbsp; 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என&nbsp; பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள&nbsp; சந்தேக நபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல்&nbsp; அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்தமை&nbsp; &nbsp;ஆரம்பகட்ட விசாரணைகளின்போது&nbsp; &nbsp;ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. </p><p>தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;கைதான&nbsp; மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் நேற்று (22) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேசமயம் நேற்று (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.378,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79c9ec3-a0c7-4c0a-a26d-6b22d303d39b/26-6a61ca2fb973d.webp' /></p><p>
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T07:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்ற வேண்டாம் ; அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>
</p><p></p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப முற்பட்ட அர்ச்சுனா இராமநாதன், கேள்வியை முன்வைப்பதற்கு முன்னரே அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்ததுடன், நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ca2c25-9921-4662-a2ff-669de863ec58/26-6a61c8d55a537.webp' /></p><p>சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.
</p><p>
நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>அத்துடன், அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட அவருடன் அருகில் அமர முடியாது எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அவரால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
மேலும், கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தனிப்பட்ட முறையில் சபாநாயகரை இலக்காகக் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை எனவும் அவர் கூறினார்.
</p><p>
இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அமர்வு பரபரப்பாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shots-fired-at-police-officer-s-house-beliatta-1784791980"></link>
            <id>https://jvpnews.com/article/shots-fired-at-police-officer-s-house-beliatta-1784791980</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாந்தோட்டை - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாந்தோட்டை - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>



குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1b2a5e-f22c-4738-b539-dd322dd41fdf/26-6a61c3ae49c23.webp' /></p><p> 



 அவரது வீட்டின் வாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T07:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்க வாழ் தமிழர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-1500-hoax-bomb-threats-us-based-tamil-arrest-1784790887"></link>
            <id>https://jvpnews.com/article/india-1500-hoax-bomb-threats-us-based-tamil-arrest-1784790887</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த சம்பவத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p><p> 
 
விபிஎன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததாக&nbsp; குறித்த நபர்&nbsp; &nbsp;மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30bb110-c1fe-4ed2-b582-2b495d8d6205/26-6a61bf6989611.webp' /></p><h2>சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு&nbsp;</h2><p> </p><p>

விசாரணையின் போது, அவர் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிய ஒரு சிறிய கவனக்குறைவான பதிலால் போலீசாரிடம் அவர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p> 
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சில சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

 இந்த செய்தி வெளிவந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>
 
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போலி மிரட்டல்களை விடுத்து வந்த இவரை கைது செய்துள்ள காவல்துறையினர், இவருக்கு பின்னால் வேறு யாரேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெப்பம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorological-department-warns-risin-temperatures-1784790057"></link>
            <id>https://jvpnews.com/article/meteorological-department-warns-risin-temperatures-1784790057</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.</p><p></p><p>

அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9828ce-0680-493f-93ac-b061b87824c9/26-6a61bc2b31dd3.webp' /></p><p>அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருந்த அனுமான் ; கோடிக்கணக்கில் பணமோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-hanuman-statue-in-jaffna-financial-fraud-1784787370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-hanuman-statue-in-jaffna-financial-fraud-1784787370</id>
            <summary type="text">&amp;nbsp; மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அனுமான் சிலை தொடர்பில் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

போர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அனுமான் சிலை தொடர்பில் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது.
</p><p>
போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை ஒன்று, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜா-எல - மெல்வத்த பகுதிக்கு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டதாக இந்த மோசடிக் கும்பல் பிரசாரம் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8368e63c-6448-4bd3-a415-11b8cdba9ec1/26-6a61b1ab7b612.webp' /></p><h2>நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள&nbsp; சிலை</h2><p>
</p><p>
நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை, இந்தியாவில் உள்ள ஒரு பூசாரிக்கு ரூபாய் 2,500 கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் இணையவழியில் தகவல்களைப் பரப்பியுள்ளனர்.
</p><p>
 இந்தச் சட்டவிரோத வர்த்தகத்திற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகலவின் முழுமையான ஆதரவு இருப்பதாகக் கூறி மக்களை நம்ப வைக்க முயன்றுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
புதைக்கப்பட்டுள்ள சிலையைத் தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் இடைக்காலச் செலவுகளுக்காக ரூபாய் 2 கோடி தேவைப்படுவதாகக் கூறி, செல்வந்த தொழிலதிபர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
</p><p>
"இது ஒரு சிறந்த வணிகம், இதில் முதலீடு செய்தால் உடனடியாகப் பெருந்தொகை இலாபமாகக் கிடைக்கும்" எனக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்க இந்த கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.</p><p></p><p>

இத்தகைய பின்னணியில் தனது பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இந்த மோசடி குறித்துத் தகவலறிந்த பிரதி அமைச்சர் சுனில் வடகல, காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் உடனடியாக முறைப்பாடு அளித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட காவல்துறையினர், கொழும்பு பகுதியில் மற்றொரு நபரிடம் இந்த அனுமான் சிலை குறித்துப் பேசிப் பணத்தைப் பறிக்க முயன்றபோது, பிரதான சந்தேகநபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபரின் கையடக்கத்தொலைபேசியைச் சோதனையிட்டதில், வாட்ஸ்அப் மூலமாகப் பலருக்கு இந்த மோசடி தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-23T06:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-ranking-in-the-global-passport-index-1784787347"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-ranking-in-the-global-passport-index-1784787347</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலை வெளியிடும் 2026 ஆம் ஆண்டுக்கான &#039;ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94ஆவது இடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலை வெளியிடும் 2026 ஆம் ஆண்டுக்கான 'ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94ஆவது இடத்திற்கு முன்னேறி, அண்மைய ஆண்டுகளில் தனது மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளது.</p><p></p><p>கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 96 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 2 இடங்கள் முன்னேறி 94 ஆவது இடத்தை அடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d46264-bb18-40c2-940c-fa1e61f5f4ae/26-6a61b19464d74.webp' /></p><p>முன்னர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய இடங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் இப்பட்டியலில் இலங்கை படிப்படியாக முன்னேறி வருகிறது.
</p><p>
இப்பட்டியலானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகள் மற்றும் 227 பயண இடங்களை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.</p><p>

சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. (192 நாடுகளுக்கு முன்வீசா இன்றிப் பயணிக்கலாம்).
</p><p>
ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2ஆம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
</p><p>
ஆப்கானிஸ்தான் 104வது இடத்தில் தரவரிசையின் இறுதியில் உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் ; யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019</id>
            <summary type="text">தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.</p><p> 

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f583057b-8258-4873-8612-f636ac2d9a79/26-6a61893c90845.webp' /></p><p>இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. </p><p>

இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p> 

மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p> 

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்.</p>]]></content>
            <updated>2026-07-23T06:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-ruling-on-the-advanced-level-examination-1784786422"></link>
            <id>https://jvpnews.com/article/court-ruling-on-the-advanced-level-examination-1784786422</id>
            <summary type="text">அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாக ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb6d96b-c1c1-4433-b4e0-f4b4f0bc0754/26-6a61adf7e3236.webp' /></p><p>பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>
எனினும், குறித்த கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-died-after-being-attacked-with-sharp-weapon-1784785901"></link>
            <id>https://jvpnews.com/article/person-died-after-being-attacked-with-sharp-weapon-1784785901</id>
            <summary type="text">அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p></p><p>

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149f48c9-26db-46b6-a22d-e833bdf6ebd8/26-6a61abee9ca3b.webp' /></p><p>தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயம்; கறுப்பு ஜூலைக்கு 43 ஆண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/darkest-chapter-sri-lanka-history-black-july-1983-1784784638"></link>
            <id>https://jvpnews.com/article/darkest-chapter-sri-lanka-history-black-july-1983-1784784638</id>
            <summary type="text">&amp;nbsp;உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான 1983 கறுப்பு ஜூலையை நினைவுகூருகின்றனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான 1983 கறுப்பு ஜூலையை நினைவுகூருகின்றனர். 

 தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர்களை காவுகொண்டது.</p><p> ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. வீடுகளும் வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ecca55-46aa-40a8-aa48-c550d0393c50/26-6a61a6ff9fe60.webp' /></p><h2>உள்நாட்டுப் போருக்கான முக்கிய திருப்புமுனை</h2><p> அது பின்னர் மூன்று தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டுப் போருக்கான முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. 

இன்று அந்த நிகழ்வுகளுக்கு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அரசாங்கங்கள் மாறியுள்ளன, தலைமுறைகள் மாறியுள்ளன. </p><p> அந்த நினைவுகளும் அதன் ஆழமான காயங்களும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களில் வாழ்கின்றன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது. 

இந்த நோக்கங்கள் பாராட்டத்தக்கவை. </p><p>ஆனால் உண்மையான ஜனநாயக மாற்றம், ஒரு நாடு தனது வேதனையான வரலாற்றை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதிலும் அளவிடப்படுகிறது.


1983ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்கு தற்போதைய அரசுக்கு பொறுப்பு இல்லை. அந்தப் பொறுப்பு அன்றைய ஆட்சியினருக்கே உரியது. </p><p>

இருப்பினும், ஒவ்வொரு ஜனநாயக அரசும் கடந்த காலத்தில் அரசு தனது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிய தருணங்களை அங்கீகரித்து, அவை இனி மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வது என்ற ஒழுக்கப் பொறுப்பை ஏற்கிறது.

பல தமிழர்களுக்கு கறுப்பு ஜூலை என்பது ஒரு வரலாற்றுச் சம்பவம் மட்டுமல்ல,&nbsp; அது அரசின் மீது இருந்த நம்பிக்கை சிதைந்த தருணமாகும். </p><p>

1983க்குப் பிறகு பாதுகாப்புக்காக உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, தொழில்முனைவு, அறிவியல் மற்றும் பொதுச் சேவைகளில் உலகளவில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர்.</p><p> அதே நேரத்தில் அவர்கள் இலங்கைக்கும் முதலீடு, கல்வி, மனிதாபிமான உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. </p><p>1983 கறுப்பு ஜூலையின் துயரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல், இலங்கை உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா?

உலகின் பல நாடுகள் தங்கள் வேதனையான வரலாற்றை ஏற்றுக்கொண்டு நல்லிணக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ளன. </p><p>இலங்கையும் தனது தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். 

அப்பாவி மக்களின் துயரத்தை அங்கீகரிப்பது தேசிய ஒற்றுமைக்கு எதிரான செயல் அல்ல; அது ஜனநாயகத்தின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் செயல்.
</p><p>
கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துயரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல்,&nbsp; இன வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களுக்கும் தேசிய நினைவு நாள், மொழிச் சமத்துவம், காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், நீண்டகால கைதிகள் மற்றும் அரசியல் உரையாடலில் முன்னேற்றம், உலகத் தமிழர் புலம்பெயர் சமூகத்தை முதலீடு மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பங்காளிகளாக இணைத்துக்கொள்ளுதல்.
</p><p>
கடந்த காலத்தை அங்கீகரிப்பது இன்றைய தலைமுறையினரை குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல. அது ஒரு ஜனநாயக அரசு. தனது அனைத்து குடிமக்களினதும் துயரத்தை புரிந்துகொள்கிறது என்பதற்கான அடையாளமாகும்.

பொருளாதார வளர்ச்சியும் நல்லிணக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரிவன.</p><p> நம்பிக்கை, சமத்துவம் மற்றும் சட்டத்தின் முன் சம உரிமை ஆகியவை நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாகும்.

43 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கையால் கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதே நிதர்சனம்.</p>]]></content>
            <updated>2026-07-23T05:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தியுடன் பொலிஸ் நிலையம் வந்த நபர் ; மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரன் வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrives-at-police-station-knife-brother-death-1784784029"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrives-at-police-station-knife-brother-death-1784784029</id>
            <summary type="text">மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கையில் கத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கையில் கத்தியுடன் நேற்று பிற்பகல் சுமார் 2.10 மணியளவில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த நபர், தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78a55d8-c720-49cc-b4d1-9666a1ed527a/26-6a61a49f3d8ff.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ராஜகடலுவ பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
</p><p>
அங்கு, கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்தவர் குறித்த சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை ; நீதியமைச்சர் கருத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/there-are-no-political-prisoners-in-the-prisons-1784782927"></link>
            <id>https://jvpnews.com/article/there-are-no-political-prisoners-in-the-prisons-1784782927</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நாட்டில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களில் &quot;அரசியல் கைதி&quot; என்ற பதத்துக்கான முறையான விளக்கம் எங்கும் கிடையாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நாட்டில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களில் "அரசியல் கைதி" என்ற பதத்துக்கான முறையான விளக்கம் எங்கும் கிடையாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0542f44-b1e9-4f76-9b67-64663fc0b131/26-6a61a05061a6e.webp' /></p><h2>&nbsp;நீதிமன்ற&nbsp; தீர்ப்பை மாற்றுவதற்கு, அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது</h2><p>

நீதிமன்றங்களைப் பொறுத்தவரை எவரையும் "அரசியல் கைதி" என்று குறிப்பிட்டு யாரும் விளக்கமறியலிலோ அல்லது சிறைத்தண்டனையிலோ அடைக்கப்படுவதில்லை. அவர்கள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.
</p><p>
தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறினாரே, அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னும் இருக்கிறதா என அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.</p><p></p><p>

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், இந்த விவகாரம் தொடர்பான பட்டியலைத் தான் பலமுறை ஆராய்ந்ததாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் அனைவரும் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் என்றும், பல பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்தார்.</p><p>

கடந்த கால அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்த அறிக்கையின்படி, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது மற்றும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p><p></p><p>

இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதற்கும் பொதுவானதாகவே இருக்கும் என்றும் நீதியமைச்சர் கூறினார்.

எது எவ்வாறாயினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்கு, அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்றும் நீதியமைச்சர் இதன்போது கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-23T05:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கைப் பெண்ணை கட்டாய உழைப்புக்கு உட்படுத்திய இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-woman-to-forced-labor-in-malaysia-1784782347"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-woman-to-forced-labor-in-malaysia-1784782347</id>
            <summary type="text">மலேசியாவில் இலங்கைப் பெண் ஒருவரை கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 38 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் இலங்கைப் பெண் ஒருவரை கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 38 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>அதேவேளை, பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
சிலாங்கூர் மாநிலத்தின் ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில், மலேசிய குடிவரவுத் திணைக்களத்தின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவு, பணமோசடி எதிர்ப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965904b1-5502-4722-8840-732fbf1ce244/26-6a619e0d0d261.webp' /></p><p>

இலங்கைப் பெண் ஒருவர் கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டு சுரண்டப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சோதனையின் போது, சட்டப்பூர்வமான பயண ஆவணங்கள் மற்றும் செல்லுபடியாகும் வீசா இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 21 முதல் 51 வயதுக்குட்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலைவாய்ப்பும் வேலை அனுமதிப் பத்திரமும் பெற்றுத் தருவதாக உறுதியளித்து மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகத்தில் எந்தவித சம்பளமும் வழங்காமல் அவரிடம் வேலை வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை என்றும், உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கும் அவர் உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட 38 வயதுடைய இலங்கையர், மலேசியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து நீண்டகால சமூக விஜய வீசாவில் அந்நாட்டில் தங்கியிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் மீது மலேசியாவின் 2007 ஆம் ஆண்டின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1959/63 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொழிலாளர் சுரண்டல், கட்டாய உழைப்பு மற்றும் மனித வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மலேசிய குடிவரவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[El Niño முன்கூட்டியே இலங்கையில் முன்கூட்டியே தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-impacts-sri-lanka-early-1784782204"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-impacts-sri-lanka-early-1784782204</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார். </p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் துறை அமைச்சர், 'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92c042af-2562-485f-930b-668cc531cdf1/26-6a619d7de6375.webp' /></p><h2>இலங்கையில் வறண்ட வானிலை&nbsp;</h2><p> </p><p>

 ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கலாநிதி பட்டபெந்தி குறிப்பிட்டார்.</p><p></p><p> 

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும் எனவும், அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:48:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் இன் ஜனநாயகன்; உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jana-nayagan-fans-celebrate-grand-style-1784781697"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jana-nayagan-fans-celebrate-grand-style-1784781697</id>
            <summary type="text"> முதலமைச்சர் ,&amp;nbsp; &amp;nbsp; தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் &#039;ஜனநாயகன்&#039; திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p> முதலமைச்சர் ,&nbsp; &nbsp; தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பல்வேறு தாமதங்களுக்கு மத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள்,

இந்திய அளவில்: 3,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகள்,
உலகம் முழுவதும்: 8,000 திரையரங்குகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ec4b0-8c16-4966-8b69-cbac1089d6dd/26-6a619b82a2ce1.webp' /></p><h2>சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டம்</h2><p>

'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடவுள்ளதை முன்னிட்டு, குமரி - கேரள எல்லைப் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.</p><p>

குறித்த திரையரங்கில் வர்ண விளக்குகளில் அலங்காரத்துடன், சிறப்பு இசை நிகழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே திரையரங்கிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், ஆடல் பாடலுடன் திரைப்படத்தின் வருகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு சோதனையின் போது வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360"></link>
            <id>https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360</id>
            <summary type="text">தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6287ad-621d-41c3-9bf8-0e9d1ba1d85e/26-6a619a31eb3b8.webp' /></p><p>இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உற்பத்திச் செலவு அதிகரிப்பு ; சாராய விலையில் புதிய திருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187"></link>
            <id>https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187</id>
            <summary type="text">உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefb591-4ef7-4f9e-b2b5-03f2d5de3f46/26-6a61959ce9d64.webp' /></p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சியை அகற்ற முடியாது ; அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751</id>
            <summary type="text">எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ecfbf6-c745-41a0-aed2-e1eb1664e4c5/26-6a6193e8750ba.webp' /></p><p>

பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார்.
</p><p>
அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதாகவும், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் புதிய மோசடி ; வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340"></link>
            <id>https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340</id>
            <summary type="text">பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>

வட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பண மோசடிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அண்மைக் காலமாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மோசடிகளில் ஈடுபடுவோர், இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/600e4c8a-0feb-4fd9-b8fc-88d5ea89b564/26-6a61924d9165c.webp' /></p><p>அதன்போது, வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்குத் தொடரப்படும் அல்லது கணக்குகள் முடக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர். </p><p>பின்னர், "இரகசிய விசாரணை" நடைபெற்று வருவதாகக் கூறி, அதற்கு ஒத்துழைத்தால் பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும் என நம்பவைத்து, வட்ஸ்அப் மூலம் போலியான பொலிஸ் அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை அனுப்புகின்றனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீளச் செயல்படுத்த வேண்டும் என்ற பெயரில் OTP (One-Time Password) இலக்கங்களை கேட்பதுடன், வங்கிக் கணக்கில் உள்நுழைய தேவையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். </p><p>மேலும், பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறோ அல்லது USDT உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் அனுப்புமாறோ அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், வங்கி அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e09250-2a75-427e-a896-e2e5111677c7/26-6a61924e3f9e7.webp' /></p><p>

மேலும், "கணக்கு முடக்கப்படும்", "வழக்குத் தொடரப்படும்" போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அழைப்போ அல்லது தகவலோ கிடைத்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, இலங்கைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை. மேலும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யுமாறு கோருவதும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
அறியாத நபர்களிடமிருந்து வரும் இணைய இணைப்புகள் (Links), இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலிகள் (Apps) ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
தொடர்புக்கு,</p><p>
கணினி குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர்: 071 859 2918
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 859 1765
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 230 0756
</p><p>
மேலும், இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு ; தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971"></link>
            <id>https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971</id>
            <summary type="text">மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கார் திக்வெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நேற்று புதன்கிழமை (22) இரவில் புதிய பெலியத்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றைச் சோதனையிட முயன்ற போது, அதன் சாரதி காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தித் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் ஒன்றில் விழுந்து வீதியை விட்டு விலகி நின்றுள்ளதுடன், அதிலிருந்த சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6941b1be-22b5-4014-af47-2e83bc03576a/26-6a618cf46da48.webp' /></p><p>

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குறித்த காரே தெவிநுவரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

நேற்று அதிகாலை வேளையில் காரில் வந்த குழுவொன்று, பிஸ்டல் ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தெவிநுவர, கந்தர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தது.
</p><p>

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தெவிநுவர பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
துப்பாக்கிதாரிகள் காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கெமாராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:39:46+00:00</updated>
        </entry>
    </feed>
