<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T08:34:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை; உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104"></link>
            <id>https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>


இந்தநிலையில் இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய பாதையை அமைப்பதில் உடன்பாட்டை ஏற்படுத்தி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8238bce-3fc7-4c29-bf07-d218c402f320/26-6a704ae9ba57c.webp' /></p><h2>இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தற்போதுள்ள வடக்கு அல்லது தெற்குப் பாதையாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மையையும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உலகளவில் நுகரப்படும் மசகு எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்ற உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644</id>
            <summary type="text">&amp;nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான &#039;ஹரக் கட்டா&#039;வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா'வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32ccf70-824a-43af-905f-8e29d55ec8e0/26-6a704d05ab737.webp' /></p><h2>குற்றச்சாட்டுகள் நீக்கம்</h2><p>
</p><p>
 தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், அவரைப் பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையில் தடுப்பில் வைப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்லச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது.
</p><p>
இது தொடர்பான வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி , குறித்த உத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-03T08:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ;பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451"></link>
            <id>https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

இன்று திங்கட்கிழமை (03) குறித்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் தொடர்பில் தகவல் வெளியாகத நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82ef7b-4e4d-44b2-be6e-c7775eccc627/26-6a7030ed16932.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை; குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

​</p><p>2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694046d6-21e8-463b-b57a-7b3cc744f7e4/26-6a703d2c6f2f3.webp' /></p><p></p><h2>யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p>யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் 'Royal Navy Young Officers Course' பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதனூடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.</p><p>. 

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவால் கர்ப்பிணி பெண்ணும் சிசுவும் பலி; பெரும் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656"></link>
            <id>https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.</p><p>

வடுவாவைச் சேர்ந்த அப்பெண், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f781b37b-acfe-4697-a319-90f63fb81542/26-6a70398972da5.webp' /></p><h2>&nbsp;இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும் இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது. </p><p>ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணமே டெங்குவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>மொத்த பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (45,675) இங்குதான் பதிவாகியுள்ளன. இதில் கம்பஹா (18,321) மற்றும் கொழும்பு (17,101) மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தென் மாகாணத்தில் 12,969 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 7,567 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் விழுந்த பாரிய கற்பாறை; போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huge-boulder-rock-falls-hatton-road-blocked-1785739071"></link>
            <id>https://jvpnews.com/article/huge-boulder-rock-falls-hatton-road-blocked-1785739071</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாக ஹட்டன், போடைஸ் மற்றும் டயகம ஆகிய இடங்களை இணைக்கும் குறுக்கு வழியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5bffa9-7645-42b9-928c-4897820e5480/26-6a703740ca6b6.webp' /></p><p>
</p><p>
எனவே, பயணிகள் மற்றும் சாரதிகள் குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹட்டன் வலய காவல்துறையின் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-03T06:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து; 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்து இன்று (3) காலை 6:15 மணியளவில் ​ கேகாலை - கரடுபன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b13678c-6191-45f2-91e1-982d5ab4212f/26-6a701c25d6394.webp' /></p><p> 

​ ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07a836a7-2408-4a01-b5e9-9f987f44ff12/26-6a701c78cbfe4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T06:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kotmale-reservoir-opened-flood-warning-1785738461"></link>
            <id>https://jvpnews.com/article/kotmale-reservoir-opened-flood-warning-1785738461</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள மதகுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e34422-9276-4060-95ca-a635ec8ffbe8/26-6a7034de8e3ee.webp' /></p><h2>கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை நேற்று இரவு (02) முதல் மத்திய உயர்நிலப்பகுதியின் மேற்குச் சரிவுகளில் தொடர் மழையின் காரணமாக, டெவன் அருவியில் கலக்கும் டெவன் கால்வாய் நிரம்பி வழிந்து, கொட்டகல வர்த்தகப் பகுதி மற்றும் லோகில் எஸ்டேட்டில் உள்ள 40 வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது</p><p>.

 வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் சாலைகளில் கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறை வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T06:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடர்ந்து கரையொதுங்கும் கொள்கலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/containers-continue-to-wash-ashore-in-sri-lanka-1785736546"></link>
            <id>https://jvpnews.com/article/containers-continue-to-wash-ashore-in-sri-lanka-1785736546</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

​ குறித்த கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

​ குறித்த கொள்கலன் வெள்ளை நிறமுடைய சுமார் 40 அடி நீளமான கொள்கலன் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ </p><p>இது கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த கொள்கலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். 

​</p><p></p><p> அதேவேளை , நேற்று (02) இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலனொன்று கரை ஒதுங்கியிருந்தது. 

​</p><p> நேற்று முற்பகல் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இக்கொள்கலன், நேற்றுமுன்தினம் கொழும்புக்கு அண்மித்த கடற்பகுதியில் கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த வெற்றுக் கொள்கலன் என தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-03T06:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சீன அழகுக்கலை நிபுணர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-beauty-expert-shocks-airport-officials-1785735517"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-beauty-expert-shocks-airport-officials-1785735517</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

​</p><p>&nbsp;கைதுசெய்யப்பட்டவர் சீனாவின் ஷீ-ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய அழகுக்கலை நிபுணர் என தெரியவந்துள்ளது.​&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1862d4-1b83-4af3-91a5-6c7f3f2eb8f1/26-6a70295fe9630.webp' /></p><p> </p><p>சீனாவில் தயாரிக்கப்பட்ட குறித்த சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

​ </p><p>இவர் இந்த சிகரெட் தொகுதியை சீனாவிலிருந்து கொள்முதல் செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் MH-179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

​ </p><p>இதன்போது&nbsp; &nbsp;பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 20,400 சிகரெட்டுகளைக் கொண்ட 102 சிகரெட் பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

​ கைதுசெய்யப்பட்ட சீனப் பெண்ணை இன்று (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T05:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு; தொடரும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahara-prison-clash-causes-loss-of-15-crore-rupees-1785733269"></link>
            <id>https://jvpnews.com/article/mahara-prison-clash-causes-loss-of-15-crore-rupees-1785733269</id>
            <summary type="text">&amp;nbsp; நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேற்று முன்தினம் (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் 15 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

 சிறைச்சாலையின் பல கட்டடங்கள், கூரைகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு கைதிகளால் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57f650d8-a6c4-4fbe-9f6f-13e7d776150c/26-6a70209727b94.webp' /></p><h2>&nbsp;104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்</h2><p> </p><p>
அத்துடன் புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளன.



சம்பவம் இடம்பெற்ற தினம் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சில கைதிகள் இணைந்து பதற்றநிலையை முன்னின்று வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p></p><p>இதனையடுத்து, வன்முறையில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூஸா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அண்மையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தட்டுப்பாடே இந்த அமைதியின்மைக்கான காரணமாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>


பதற்றநிலையின் போது சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், பின்னர் சிறை அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>
இதையடுத்து, மருந்துகள், கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.



மேலும், சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியிலிருந்த மதிலை உடைத்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சியைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதற்கிடையில், கைதிகள் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்குத் தீ வைத்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



அத்துடன், சில கைதிகள் ஏனைய சிறைக் கூடங்களின் பூட்டுகளை உடைத்து கைதிகளை வெளியேறச் செய்ததாகவும், வெளியே வர மறுத்த சில கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T04:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான காலநிலை ; மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-holidays-for-central-province-schools-1785732498"></link>
            <id>https://jvpnews.com/article/weather-holidays-for-central-province-schools-1785732498</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

​ நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cca8e96-5e7e-426f-bbd3-c18fb160aa7c/26-6a701d9489aa2.webp' /></p><p> 

​அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:46:14+00:00</updated>
        </entry>
    </feed>
