<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T11:35:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904"></link>
            <id>https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904</id>
            <summary type="text">கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

 உயிரிழந்தவர் களுத்துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p>
 உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வாகனப் பொறிமுறைக் (ஆட்டோமொபைல்) கற்கை நெறியைப் பயின்று வருபவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42827a8-e7ee-451a-b24a-e2e8c7b70807/26-6a60aa2219dee.webp' /></p><p> </p><p>

அவர் நேற்று (21) பிற்பகல் களுமுல்லை தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள கடலில் குளிக்கச் சென்றபோது, நீரோட்டத்திற்கு (அலைக்கு) சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸார், உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் களுத்துத்துறை - கட்டுக்குருந்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தலைமையகப் பொலிஸார் மீலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக் குட்டிகளுக்குப் பெயரிட அருமையான வாய்ப்பு ; மக்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724"></link>
            <id>https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724</id>
            <summary type="text">எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடுவதற்காகப் பொதுமக்களுக்கான திறந்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விலங்குப் பிரியர்கள் இந்த இளம் பூனைகளுக்குச் படைப்பாற்றல் மிக்க மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38828b5d-e85e-41f0-b702-5d7a07e04e61/26-6a60a19d91775.webp' /></p><p>சிறந்த பெயர்ப் பரிந்துரைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புக் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பின்னவளை மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் (<a href="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf-FN9kem0-fBAkcS7EsdyqnOyCC6JF9xbwBCEcBQlW4-R2Wg/formResponse" target="_blank">Google Form</a>) ஊடாகத் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். </p><p>இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7, 2026 அன்று நிறைவடையவுள்ளன.
</p><p>
அரிதான மீன்பிடிப் பூனைக் குட்டிகளின் தனித்துவமான ஆளுமைக்குப் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றின் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு குடும்பங்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சூரியன் தட்டில் எலி; வாடிக்கையாளர் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258"></link>
            <id>https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258</id>
            <summary type="text">குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p> வீடியோ இணையத்தில் வைரலாகி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உணவகத்திற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/854bbfce-6fbf-467b-89c1-d8a7098ad25a/26-6a60a3b44bcef.webp' /></p><p>&nbsp;இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில், வாடிக்கையாளர் வாங்கிய மஞ்சூரியன் தட்டில் எலி இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, உரிய உரிமம் இன்றி உணவகம் இயங்கியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த&nbsp; &nbsp;பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76392451-15c0-4069-9ae1-179e8a5a9d37/26-6a60856b7c687.webp' /></p><p></p><h2>இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது</h2><p>
</p><p>


 இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

 அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது.. தவெக கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rahul-gandhi-priyanka-gandhi-arrested-tvk-condemns-1784714879"></link>
            <id>https://jvpnews.com/article/rahul-gandhi-priyanka-gandhi-arrested-tvk-condemns-1784714879</id>
            <summary type="text">&amp;nbsp; டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 
 
ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் உரிமைகள் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202a0c95-a597-44a1-b853-334d23a045c2/26-6a60968182b3e.webp' /></p><p>

 நாட்டில் ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு வருவதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களையும் அவர்களுக்குத் துணையாக நிற்பவர்களையும் ஒடுக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>
 
மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொள்ளும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளது. 

 
நீட் தேர்வு போராட்ட விவகாரத்தில் இத்தனை நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தபோதும் தவெக மௌனம் காத்து வந்தது.</p><p>

இந் நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T10:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-decides-to-use-presidential-residences-1784713629"></link>
            <id>https://jvpnews.com/article/government-decides-to-use-presidential-residences-1784713629</id>
            <summary type="text">நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p></p><p>

இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4121d515-02ff-424d-a5cf-04035a0c9897/26-6a60919ebbbd9.webp' /></p><p>2025ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எட்டு ஜனாதிபதி இல்லங்களை பராமரிப்பதற்காக 13.9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், ஜனாதிபதி இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படும் வரை அவற்றின் பராமரிப்பிற்காக அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132"></link>
            <id>https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.</p><p>

கடந்த 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த எதிர்பாராத சம்பவத்தில் கீறல் காயங்களுக்குள்ளான அந்தச் சிறுவன், உடனடியாக மத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec91b66-576a-4472-af53-51dc687f7cc1/26-6a608bc650dfc.webp' /></p><h2>&nbsp;சிறுவனின் திடீர் அலறல் சத்தம்</h2><p>

வீட்டுத் தோட்டத்தில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் திடீர் அலறல் சத்தம் கேட்டதும், அவனது தந்தை உடனடியாக வெளியே ஓடிவந்தார்.

அப்போது ஒரு பெரிய கழுகு அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டு மேலே பறக்க முயன்றதைக் கண்டார்.</p><p></p><p> உடனடியாகச் செயல்பட்ட தந்தை, அந்தக் கழுகை அடித்துச் சிறுவனை அதன் பிடியிலிருந்து விடுவித்தார்.

 பின்னர் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இச்சம்பவம் குறித்து மாத்தறை பொது மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><p> </p><p>கழுகின் தாக்குதலால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்டார். மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து முதலுதவி மற்றும் மருந்துகளைப் பெற்ற பிறகு, சிறுவன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தாத்தா, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் தனது மகன் உடனடியாக வெளியே ஓடிவந்து செயல்பட்டதாலேயே அவனது உயிர் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டதாகக் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 தனது வாழ்நாளில் இது போன்ற பெரிய கழுகை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், இச்சம்பவத்திற்குப் பிறகும் அச்சிறுவன் இன்னும் கடும் பயத்துடனும் காய்ச்சல் போன்ற நிலையிலும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-22T09:28:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் புத்த விகாரை கட்டப்படாது ; சமூக ஊடக வதந்திக்கு குகதாசன் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buddhist-temple-built-in-kinniya-kukathasan-denies-1784711932"></link>
            <id>https://jvpnews.com/article/buddhist-temple-built-in-kinniya-kukathasan-denies-1784711932</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு பகுதியில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு பகுதியில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மறுத்துள்ளார்.</p><p></p><p>

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி, குறித்த பகுதியில் புத்த விகாரை உள்ளிட்ட எந்த புதிய சமயக் கட்டடமும் நிர்மாணிக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து தமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867843a0-8dfe-40b4-a9d5-5f8428e97397/26-6a608afd7d402.webp' /></p><p>மேலும், அந்தப் பகுதியில் காணப்படும் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும், மதக் கட்டட நிர்மாணத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டதாகவும் சண்முகம் குகதாசன் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

குறிப்பாக, 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் அதனைச் சூழவுள்ள தொல்பொருள் பகுதியில் எந்த சமயக் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த வழக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் ஊடாக தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சண்முகம் குகதாசன் கூறினார்.</p><p>

இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், உண்மையான நிலைமை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-illegal-mobile-phones-1784711181"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-illegal-mobile-phones-1784711181</id>
            <summary type="text">கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 300க்கும் அதிகமான ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5028a6-eeb0-4366-a8e1-1bc6a8cb59bb/26-6a60880ed1426.webp' /></p><p>இதன்போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியானது என காவல்துறை தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 உரும்பிராய் வடக்கு கற்பகப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

 உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

 எனினும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a0e9d9-4173-4326-8d36-b50efa91131b/26-6a605b02d7bb5.webp' /></p><p> </p><p> இந் நிலையில் இளம் யுவதியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு ; சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sarath-weerawansa-s-remand-extended-1784710564"></link>
            <id>https://jvpnews.com/article/sarath-weerawansa-s-remand-extended-1784710564</id>
            <summary type="text">பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (22) உத்தரவிட்டார்.</p><p>
</p><p></p><p>சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவு அடுத்த விசாரணை நாளில் வழங்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf13c4a-32a8-4009-ae1c-9637bc892940/26-6a6085a5cd0d9.webp' /></p><p>சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த விடங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பிரபல வணிக வளாகத்தில் அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002"></link>
            <id>https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed39083b-e41f-42f8-90bd-61e3669375d8/26-6a607ba3d74d7.webp' /></p><p></p><p>
</p><p>
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனப் பிரஜையிடம் 2 கோடி கொள்ளையிட்ட மேலும் நால்வர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-more-arrested-robbing-chinese-national-2-crore-1784709237"></link>
            <id>https://jvpnews.com/article/4-more-arrested-robbing-chinese-national-2-crore-1784709237</id>
            <summary type="text">&amp;nbsp; சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு கொள்ளுப்பிட்டி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள் பிடித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf545c32-cb42-4b3f-a6b4-68e010cbe6b7/26-6a6080772cf84.webp' /></p><h2>சீனப் பிரஜை ஒருவரும் கைது</h2><p>
குறித்த சந்தேக நபரை மேலதிகமாக சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 290 மில்லிகிராம் ஹஷீஷ் போதைப்பொருளும், சீனப் பிரஜையிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 20,000,000/- (2 கோடி) பணமும் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>
</p><p>
கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபரை 2026.07.14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுள்ளனர்.
</p><p>
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றம் நடைபெற்ற இடத்துக்கு வருவதற்காக சந்தேகநபர் வாடகை வாகனமொன்றைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்தது.</p><p></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து, அந்த வாடகை வாகனப் பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு 05, ஜாவத்தை பகுதியில் இரு சந்தேகநபர்களும், சீனப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
அவர்கள் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2026.07.23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T08:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளிக்கிழமை நீதி அமைச்சருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1784708525"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1784708525</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p> 

 

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளமைம குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decdb2a9-ac6d-4470-888d-4a332bd118c3/26-6a607daeecd7a.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை வாங்க இருப்பவர்களுக்கு வெளியான ஷாக் தகவல் ; மீண்டும் அதிகரித்த தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-jewelry-gold-prices-increase-again-1784706939"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-jewelry-gold-prices-increase-again-1784706939</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (21) 24 கரட் தங்கம் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

நேற்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 அதிகரித்து ரூ.380,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/669f27a4-87e9-402d-8e98-0dba15c53c99/26-6a60777c38a1b.webp' /></p><p>

தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.349,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-rupee-against-the-dollar-1784705204"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-rupee-against-the-dollar-1784705204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 78சதம், விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 04 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 457 ரூபா 75 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/488b5eb4-f73a-4015-a909-767f666d63af/26-6a6070b680829.webp' /></p><p>யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபாய் 51 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
</p><p>சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 422 ரூபாய் 75 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 97 சதம், விற்பனைப் பெறுமதி 242ரூபாய் 96 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 241 ரூபாய் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது
</p><p>சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 265 ரூபாய் 81 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 02சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மரணத்திலும் கடமை மறவாத சாரதி ; காப்பாற்றப்பட்ட பயணிகள் ; பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-driver-dies-saving-passengers-lives-in-jaffna-1784705798"></link>
            <id>https://jvpnews.com/article/bus-driver-dies-saving-passengers-lives-in-jaffna-1784705798</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் பயணிகள் உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என மரணம் அடைந்தமை தியரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் பயணிகள் உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என மரணம் அடைந்தமை தியரத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இன்று (22/07) காலை நயினாதீவு குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தது.
</p><p>
இதன்போது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f4338d4-ae9b-4911-887e-20977eb1bd69/26-6a6073076a6d6.webp' /></p><h2>மரணத்திலும்&nbsp; கடமை மறவாத&nbsp; சாரதி&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இதனையடுத்து , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.</p><p> 

இதனையடுத்து நடத்துனரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .</p><p></p><p>இதேவேளை இவரது உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட மருத்துவ நடவடிக்கைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தனது கடமையை இறுதி மூச்சுவரை கைவிடாத ஒரு பொறுப்பான சாரதியின் திடீர் மரணம் பெருந்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,000 ஐத் தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-number-of-dengue-patients-has-crossed-78-000-1784702892"></link>
            <id>https://jvpnews.com/article/the-number-of-dengue-patients-has-crossed-78-000-1784702892</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய, நேற்று (21) ஒரே நாளில் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 162 மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

 

கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,535 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் 22,749 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b65eb89-5fb3-42cc-bbbe-628d5783e815/26-6a6067ae0aa57.webp' /></p><p>இந்த ஆண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p>இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78% ஆகும் (41,236 நோயாளர்கள்).

 

தென் மாகாணத்தில் 11,950 நோயாளர்களும் (15.30%), மத்திய மாகாணத்தில் 6,603 நோயாளர்களும் (8.45%) பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 16,478 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,540 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

இவற்றைத் தவிர, மாத்தறை மாவட்டத்தில் 5,454 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,228 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைப் சுத்தமாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:48:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வயதுச் சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-1784702531"></link>
            <id>https://jvpnews.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-1784702531</id>
            <summary type="text">&amp;nbsp; தென் மாகாணத்தின் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர்கள் தீவிர சிகிச்சைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் மாகாணத்தின் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
திங்கட்கிழமை (20) நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையில், டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்கு பிரதான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ea1525f-d82c-4ada-bc2e-cdef1618492f/26-6a606644a4dae.webp' /></p><p>
</p><p>
அதேவேளை 2026 ஆம் ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் 78,125 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , டெங்கு காய்ச்சலால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>

ஜூன் மாதத்தில் 21,355 ஆக இருந்த பாதிப்பு, ஜூலை மாதத்தில் இதுவரை 22,749 ஆக உயர்ந்து மிகத் தீவிரமடைந்துள்ளது.


சராசரியாக நாளொன்றுக்கு 2,652 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

நாட்டின் 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிதீவிர அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையங்களைச் சூழ்ந்த கடைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/surprise-raids-on-shops-surrounding-bus-stands-1784701746"></link>
            <id>https://jvpnews.com/article/surprise-raids-on-shops-surrounding-bus-stands-1784701746</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தூரசேவை பேருந்து முனையங்களைச் சூழ்ந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தூரசேவை பேருந்து முனையங்களைச் சூழ்ந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (20) திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 112 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>



சோதனைகளின் போது, உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விலைகளை தெளிவாக காட்சிப்படுத்தாதமை, உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, தொகுதி எண், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட கட்டாய தகவல்களை குறிப்பிடாதமை, மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தமை உள்ளிட்ட பல்வேறு சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b73f870-4c7a-448c-8469-6bb1fe3ff5e1/26-6a606333cc737.webp' /></p><p>இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட கடைகள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>


பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் தரமற்ற உணவுகளை வழங்கும் வர்த்தகர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>


இதேபோன்ற திடீர் சோதனைகள் எதிர்காலத்திலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் பர்கர் சாப்பிட்ட கரப்பான் பூச்சி பேச்சாளர் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cockroach-speaker-ate-burger-protest-removed-1784701538"></link>
            <id>https://jvpnews.com/article/cockroach-speaker-ate-burger-protest-removed-1784701538</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற போராட்டத்தின் போது, அதில் பங்கேற்காமல் உணவகத்தில் பர்கர் சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) பேச்சாளர் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

சி.ஜே.பி சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed216ab4-41af-41bb-8d4d-71699e82718b/26-6a60626452c32.webp' /></p><h2>விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளி</h2><p>
</p><p>
போராட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைப் பிரயோகித்த நேரத்தில், கட்சியின் பேச்சாளர் அருகிலுள்ள உணவகத்தில் பர்கர் சாப்பிட்டபடி, விமர்சிப்பவர்களைக் கேலி செய்யும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.</p><p></p><p>
</p><p>
இதுகுறித்து பதிலளித்த அவர், "தொடர் போராட்டங்கள் காரணமாக இரண்டு நாட்களாகத் தூங்கவில்லை; கடுமையான பசியின் காரணமாகவே பர்கர் சாப்பிட்டேன். போராட்டக்காரராக இருப்பது மட்டுமே என் வேலையா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

கட்சி உறுப்பினர்களும் போராட்டக்காரர்களும் காவல்துறையின் தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், பேச்சாளரின் இந்தச் செயல் மிகவும் பொறுப்பற்றது மற்றும் உணர்ச்சியற்றது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன் காரணமாக, அவரை பேச்சாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்து உத்தியோகபூர்வ பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கி சி.ஜே.பி (CJP) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T06:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் வீட்டுக்கு அருகில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு ; உண்மை காரணம் தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-found-hanging-near-girlfriend-house-rescued-1784700748"></link>
            <id>https://jvpnews.com/article/youth-found-hanging-near-girlfriend-house-rescued-1784700748</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸார் மேலதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bbc1d5-e7f5-4ace-92dd-12842f48ce13/26-6a605f4e4c80f.webp' /></p><p> 



உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது காதலியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரிவிக்கப்படுகின்றது. </p><p>



காதலியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சூழ்நிலையால் மனமுடைந்த அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 



எனினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
</p><p>


சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணம் அடுத்த 6 மாதங்களுக்கு விரைவில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/electricity-tariffs-announced-soon-next-6-months-1784699962"></link>
            <id>https://jvpnews.com/article/electricity-tariffs-announced-soon-next-6-months-1784699962</id>
            <summary type="text">புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7857d72-34a6-4ccb-a027-0334aa4dde49/26-6a605c3c3c06e.webp' /></p><p>இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய விலை மற்றும் விலை சூத்திரத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரம் இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

அதற்கமைய, சூரிய, காற்று மற்றும் பயோமாஸ் (Biomass) போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பொருத்தமான விலை சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டார்.</p><p>

 

அந்த விலை சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பது தொடர்பில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை இசைக் கச்சேரியில் மர்மம் ; நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/500-helmets-disappear-at-a-music-concert-1784693691"></link>
            <id>https://jvpnews.com/article/500-helmets-disappear-at-a-music-concert-1784693691</id>
            <summary type="text">களுத்துறை ஹொரணை பொது மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்களின் சுமார் 500 தலைக்கவசங்கள் மர்மமான முறையில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை ஹொரணை பொது மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்களின் சுமார் 500 தலைக்கவசங்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஹொரணை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இசைக் கச்சேரியைக் காண வந்த பலர், நிகழ்வு நடைபெற்ற இடத்தில் வாகன தரிப்பிடக் கட்டணத்தை அறவிட்ட பெண்ணொருவரிடம் தங்களது தலைக்கவசங்களை பாதுகாப்பிற்காக ஒப்படைத்து நிகழ்ச்சிக்குள் சென்றிருந்தனர்.
</p><p>
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், பார்வையாளர்கள் தங்களது தலைக்கவசங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான தலைக்கவசங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4beec0b-3170-4e39-9b48-307561542273/26-6a6043bd0641d.webp' /></p><p>இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலைக்கவசங்களைப் பொறுப்பேற்றிருந்த ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் உள்ளனரா என்பதையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
</p><p>
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
காணாமல் போன தலைக்கவசங்கள் திட்டமிட்ட முறையில் திருடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-commander-ravindra-wijegunaratne-granted-bail-1784699317"></link>
            <id>https://jvpnews.com/article/navy-commander-ravindra-wijegunaratne-granted-bail-1784699317</id>
            <summary type="text">2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

 

முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68958ed6-726c-4559-87c3-6f4f408a7e31/26-6a6059b74661c.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.
</p><p>
 

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:49:00+00:00</updated>
        </entry>
    </feed>
