<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T11:40:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்; அம்பலப்படுத்திய அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515</id>
            <summary type="text">நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இன்று (18) பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.
</p><p>
 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f61b73-5244-486c-9ebb-0ece65578d8b/26-6a843dfcc634e.webp' /></p><h2>&nbsp;நான்கு முகாமையாளர்கள்&nbsp; 89 கணக்குகள்</h2><p> </p><p>அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

 

இந்த நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகக் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ கூறினார்.</p><p></p><p>

 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர், அதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் பலனாக இந்த 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T11:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் கொலுசுச் சத்தம்; அமானுஸ்ய அச்சத்தில் வெளியேறிய 600 மாணவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sound-anklets-in-the-hostel-600-students-fled-fear-1787047672"></link>
            <id>https://jvpnews.com/article/sound-anklets-in-the-hostel-600-students-fled-fear-1787047672</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் சுமார் 600 மாணவர்கள் பயத்தில் அவர்களின் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் சுமார் 600 மாணவர்கள் பயத்தில் அவர்களின் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவம் அமராவதி (Amravati) நகரில் அரசாங்கம் வழிநடத்திய மாணவர் தங்கும் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவம் என்ற வதந்தி பரவத் தொடங்கியதை அடுத்து மாணவர்கள் தங்களின் வீட்டிற்குத் திரும்பியதாகச் ஊடகங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21511db-af37-499a-b8c4-ea300f924b30/26-6a842efa54cd3.webp' /></p><h2>கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம்&nbsp;</h2><p>
கொலுசுச் சத்தம்...சிரிப்புச் சத்தம்...அழுகைச் சத்தம் கேட்டதாக
சில மாணவிகள் கூறியதை அடுத்து விடுதியில் தங்க்கிருந்த மாணவர்கள் மத்தியில் பயத்தைக் கிளறியது.

ஆறு மாணவிகள் கட்டுப்படுத்தமுடியாமல் மாறி மாறி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததாகக் கூறப்பட்டது.</p><p></p><p> 

பள்ளியின் தலைமை ஆசிரியர் மனநல நிபுணரை வரவழைத்து அந்த மாணவிகளைச் சோதனைக்கு உட்படுத்தினார்.

அவர்கள் Dissociative Conversion Disorder எனப்படும் மனநல நோயால் அவதிப்படுவதாக மருத்துவச் சோதனை மூலம் தெரியவந்தது.
</p><p>
அதீத மனவுளைச்சலால் மனோவியல் ரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடசாலைக்கு மகளுடன் சென்ற தந்தைக்கு அதிர்ச்சி; பாலியல் லஞ்சம் கோரிய பெண் அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879"></link>
            <id>https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360c41e-5b6b-40f3-8bdd-f2a34a89f7a3/26-6a83fd00d8fb7.webp' /></p><p></p><h2>&nbsp;பாலியல் லஞ்சம்&nbsp;&nbsp;</h2><p>

 இன்னிலையில் , மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே&nbsp; பாலியல் லஞ்சம் கோரியதாக&nbsp; &nbsp; தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் அழையா விருந்தாளி; ஆனால் நடந்தது வேறு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-stroll-kandalama-hotel-lobby-1787047052"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-stroll-kandalama-hotel-lobby-1787047052</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
காட்டு யானை ஒன்று விருந்தக வளாகத்திற்குள் அமைதியாக நடந்து வரும் காட்சிகளை ஊழியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/233cd545-dd3a-46f2-8631-ca83cb79dc2f/26-6a842c8e2a3ef.webp' /></p><h2>&nbsp; அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்ற&nbsp;யானை</h2><p>
</p><p>
எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தாமலும், குறித்த விருந்தகத்தின் தளபாடங்கள் மற்றும் பிற பொருட்களைச் சேதப்படுத்தாமலும் அந்த யானை மிக அமைதியான முறையில் வரவேற்பறையைக் கடந்து சென்றுள்ளது.</p><p></p><p>
</p><p>
அத்துடன், ஊழியர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அந்த யானை தானாகவே விருந்தக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளது.</p><p>

விருந்தகம் ஒன்றுக்குள் காட்டு யானை உலா வந்த இந்த அபூர்வ நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NTC வரலாற்றில் முதன்முறை முக்கிய பதவிக்கு பெண்கள் நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ntc-women-appointed-key-positions-lankan-history-1787046294"></link>
            <id>https://jvpnews.com/article/ntc-women-appointed-key-positions-lankan-history-1787046294</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p> 

இதன்படி, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளில் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03e6809-5a9c-448c-b595-251322e2d259/26-6a842997b45ed.webp' /></p><p> </p><p>

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த அதிகாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.</p><p> 

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், அட்டவணைப்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நியமனங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T09:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன்; சம்பவத்தால் அ திர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து இ கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccc33e3-ee1a-43f1-b678-dc7fabd1bc32/26-6a841af26ce67.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணையில் இளைஞன் ஒருவரை அடையாளம் கண்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.</p><p></p><p>

 குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடமாடிய இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை 14ஆம் திகதி பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தது தான் தான் பொலிசாரிடம் கூறியுள்ளார்.</p><p>

குறித்த இளைஞன் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T09:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன்; TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா? கொந்தளித்த பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-season-10-common-man-nighty-women-issues-1787043593"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-season-10-common-man-nighty-women-issues-1787043593</id>
            <summary type="text">&amp;nbsp; பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>&nbsp; காமன் மேன் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்த ஏராளமானோரை எமினேட் செய்துவிட்டு 50 பேரை மட்டும் தேர்வு செய்தார்கள் அதிலும் 30 பேரை எலிமினேட் செய்துவிட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f97289f-9e23-46d5-94b1-f21aa0aa4759/26-6a841f0b3d771.webp' /></p><h2>TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா?</h2><p> </p><p>

இவர்களுக்கு 'காமன்மேன்' என்ற பெயர் மட்டும் தான் வேண்டும், ஆனால், ஷோக்கு காமன் மேன் தேவையில்லை. 

நான் இன்ஸ்டாகிராமில் நைட்டியை நார்மல் செய்யுங்க என வீடியோ போடுபவள். </p><p>பிக் பாஸ் ஆடிஷனுக்கு செல்லும் முன், வீட்டின் சாதாரண பெண்ணாக நைட்டியில் வரலாமா என அவர்களிடம் கேட்டு, அவர்கள் சரி என சொல்லியதால் தான் தான் நைட்டியில் சென்றேன்.</p><p></p><p>

 இவர்களே என்னை நைட்டியில் வரச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் முன்னால் பிரச்சனை பண்ணவே நைட்டியில் வந்தீங்களா? என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள்.
</p><p>
 டிஆர்பி ரேட்டிங்கிற்காக எது வேண்டுமானாலும் செய்வார்களா? நடுவராக இருந்த ஆரி என்னை பார்த்து, குழந்தையா பிறக்கும் போது ஆடை இல்லாமல் தான் இருப்போம், அதற்காக வளர்ந்த பிறகும் அப்படியே இருக்க முடியுமா? எனக் கேட்கிறார்.</p><p></p><p> </p><p> 

ஆரி, ஓவியா, மாயாவுக்கும் இடையே நடந்த விஷயங்களை அரை மணி நேரமானாலும் அப்படியே டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் பண்ணி என்னை ஒரு கெட்டவள் போலச் சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:57:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை சீருடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170"></link>
            <id>https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170</id>
            <summary type="text">&amp;nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை<a href="https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944" target="_blank"> ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினை</a>க்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வு வழங்குவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

</p><p>அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5d5cb6-8c9b-4aac-b721-2ff8c9a20510/26-6a84159381a34.webp' /></p><p>

கடந்த சில நாட்களாகக் கவனத்தை ஈர்த்து வரும் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களும் விரிவாகக் கேட்கப்பட்டன.</p><p></p><p>

மருத்துவமனை அமைப்பின் சீரான செயல்பாட்டையும், அனைத்து சேவைப் பயனாளிகளின் ஒற்றுமையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகளையும் உறுதிசெய்யும் அமைதியான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடனடி குறுகிய கால நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வும் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a80c39fe-a770-449a-b86a-bed34747c5ee/26-6a841113e9d79.webp' /></p><p> </p><p>

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-rajitha-senaratne-brother-arrest-1787038208"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-rajitha-senaratne-brother-arrest-1787038208</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


நாடு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவி பராமரிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகளில் முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf4b1c39-ce7f-4aea-ae84-ce32c2fb7533/26-6a840a0191049.webp' /></p><p>முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரரான&nbsp; மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012 வரை சிலோன் மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசா வரை முதலமைச்சர் விஜய்யின் சைகை; சமூக வலைத்தளங்களில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nasa-don-thomas-praised-our-cm-vijay-s-efficient-1787037272"></link>
            <id>https://jvpnews.com/article/nasa-don-thomas-praised-our-cm-vijay-s-efficient-1787037272</id>
            <summary type="text">&amp;nbsp;நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியான மருத்துவர் டோன் தோமஸ் (Dr. Don Thomas), தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தீவிர ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியான மருத்துவர் டோன் தோமஸ் (Dr. Don Thomas), தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தீவிர ரசிகர் என்றும், அவரது திறமையான நிர்வாகத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளமை சமூக வலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.</p><p>


தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா வில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93842376-088c-4be4-8bc1-77ba9bbc5e77/26-6a84065a3b750.webp' /></p><h2>சமூக வலைத்தளங்களில் வைரல்</h2><p>
</p><p>
 நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் திறமையான நிர்வாகத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.</p><p></p><p>

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் வைரலான கை சைகையை மேடையில் செய்து காட்டி அங்கு கூடியிருந்த மாணவர்களையும், பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-18T07:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pillayan-further-remanded-over-eastern-murder-1787036349"></link>
            <id>https://jvpnews.com/article/pillayan-further-remanded-over-eastern-murder-1787036349</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b2cae3-c09b-4f1d-a942-6af9b9a5dd2e/26-6a8402bf13caf.webp' /></p><h2>&nbsp;05 கொலைச் சம்பவங்கள்</h2><p>
</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுள்ளார்.</p><p>


ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-injured-in-shooting-incident-1787035947"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-injured-in-shooting-incident-1787035947</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; &amp;nbsp;புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; &nbsp;புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
காயமடைந்தவர் உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02016dfc-f089-4b0e-940c-cde3ae579dd3/26-6a84012d2e3cf.webp' /></p><p>
</p><p>
உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423"></link>
            <id>https://jvpnews.com/article/student-sitting-for-a-level-exams-in-jaffna-dies-1787028423</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

 மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p> 


யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) எனும் மாணவனே திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9ca243-595a-4bce-8838-f44491ee61f5/26-6a83e3c92e0f5.webp' /></p><h2>&nbsp;பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த&nbsp;மாணவன்</h2><p>குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும் போது, பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த நிலையில் , அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p></p><p>

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் 12 ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p> 

இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு இருந்தவேளை திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>

உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>யாழ் இந்துக் கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு வைஸ்ணா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T06:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்நிதியான் ஆலய சூழலில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி; அகற்றப்பட்ட வியாபாரி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394"></link>
            <id>https://jvpnews.com/article/vendor-removed-from-the-sannithiyan-temple-1787033394</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட வியாபாரி ஒருவர் தும்பு மிட்டாய் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த தும்பு மிட்டாய் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e08680-7600-4483-b565-a2c0fb0a976b/26-6a83f73425db9.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><p> </p><p>இந்நிலையில் 16/08/2026 அன்று ஆலய சூழலில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அறிவுறுத்தலை மீறி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்பு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>இதனை அவதானித்த வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் அவர்களை விசாரித்தபோது மருத்துவ சான்றிதழ் இன்றி தும்பு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33414ce-56c3-45f9-9770-6829872fa848/26-6a83f77adfdbe.webp' /></p><p>
அத்துடன், அறிவுறுத்தல்களை மதிக்காது வியாபார நடவடிக்கைக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபார நடவடிக்கையினை தொடர்ந்த காரணத்தினால் தும்பு மிட்டாய் உள்ளிட்ட விற்பனை தொகுதி பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T06:08:05+00:00</updated>
        </entry>
    </feed>
