<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T17:40:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-matara-large-quantity-heroin-weapons-1788629774"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-matara-large-quantity-heroin-weapons-1788629774</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட காவல்துறை விசாரணைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான தெஹி பாலே மல்லி என்பவரின் சகோதரர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், மாத்தறை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1.21 கிலோகிராம் ஹெரோயின், ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, 51 T-56 தோட்டாக்கள் மற்றும் 47 (9mm) தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7eb39e7-80e2-4150-9755-667c1bed329b/26-6a9c531035880.webp' /></p><p>வெளிநாடுகளில் செயற்படும் பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத வலையமைப்பு தொடர்பில், மாத்தறை காவல்துறையினரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T17:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 25 - 35 க்கு இடைப்பட்டதாக திருத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/demand-set-age-limit-driving-three-wheelers-25-35-1788627377"></link>
            <id>https://jvpnews.com/article/demand-set-age-limit-driving-three-wheelers-25-35-1788627377</id>
            <summary type="text">முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.</p><p></p><p>

குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த வயது எல்லையை 25 - 35 வயதுக்கு இடைப்பட்டதாகத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
</p><p>
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f109c6e-d738-41f5-8102-19f1a3e4744b/26-6a9c49b3af145.webp' /></p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனினும், இது தொடர்பில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே முன்னதாக குறிப்பிட்டுகையில், முச்சக்கர வண்டி செலுத்துவது தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.
</p><p>
அதன்படி, முச்சக்கர வண்டியை செலுத்தக் குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-used-boralesgamuwa-shooting-recovered-1788626423"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-used-boralesgamuwa-shooting-recovered-1788626423</id>
            <summary type="text">கொழும்பு பொரலஸ்கமுவையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மகரகம பொலிஸார் மீட்டுள்ளனர். பன்னிப்பிட்டிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பொரலஸ்கமுவையில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மகரகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>பன்னிப்பிட்டிய - மஹல்வராவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இன்று (05) இந்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

மகரகம பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிளைக் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b770e770-47fb-462f-890c-471a370c3b5f/26-6a9c45f922ece.webp' /></p><p> 

நேற்று (04) இரவு பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். </p><p>

74 வயதான குறித்த நபர் வீட்டில் இருந்தவேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளராக பணியாற்றியவர் என்பதும் பொலிஸாரால் தெரியவந்துள்ளது. </p><p>

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலை குறைப்புக்கு பின்னர் லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-regarding-laugfs-gas-prices-1788625999"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-regarding-laugfs-gas-prices-1788625999</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf70a09-779d-4106-bb89-a53dec9d4b28/26-6a9c445158bdc.webp' /></p><p>இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டன.</p><p> 

இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 4,965 ரூபாவாகும். </p><p>

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 512 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 1,988 ரூபாவாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நெடுந்தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-camera-systems-installed-in-long-distance-buses-1788613095"></link>
            <id>https://jvpnews.com/article/ai-camera-systems-installed-in-long-distance-buses-1788613095</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b772d54-33e7-4de2-9301-9cc518bdc108/26-6a9c11e8d61b2.webp' /></p><h2>ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள்</h2><p> </p><p>

 திட்டத்தின் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் தொழில்நுட்ப சாதனங்களைப் பொறுத்தும் பணிகள் இன்று (5) மேற்கொள்ளப்பட்டன. </p><p>

ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படுவதுடன், அவற்றின் வெற்றி மற்றும் செயற்பாடுகளைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் இயங்கும் ஏனைய பேருந்துகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 AI தொழில்நுட்பத்தின் மூலம் மூலம் சாரதிகளைக் குற்றவாளிகளாக்குவதற்குப் பதிலாக, பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பேருந்தின் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். </p><p>

வாகனம் செலுத்தும் போது சாரதிக்கு தூக்கக்கலக்கம் அல்லது சோர்வு ஏற்படுதல், தொலைபேசியைப் பயன்படுத்துதல் மற்றும் ஆசனப் பட்டையை (Seatbelt) அணியாதிருத்தல் போன்ற பாதுகாப்பற்ற செயல்கள் கண்டறியப்பட்டால், 'குரல் செய்தி' (Voice Message) மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். </p><p>

மேலும் இதன்மூலம் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை ஏதிலிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

குறிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efef9430-176c-4f19-8c52-cba2902fc29f/26-6a9c05e31d168.webp' /></p><h2>பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்&nbsp;</h2><p> </p><p>

இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இக்குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d719738b-72d5-4eba-b79b-015b0d885f24/26-6a9c06c2de319.webp' /></p><p> </p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மீட்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-refugees-rescued-talaimannar-rises-further-1788619626"></link>
            <id>https://jvpnews.com/article/number-refugees-rescued-talaimannar-rises-further-1788619626</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இன்று (05) பிற்பகல் அங்கிருந்த மேலும் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. </p><p>

மீட்கப்பட்டவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b00cf4e-a7e3-4bc7-a0bb-c310cd48dd82/26-6a9c2b6b67220.webp' /></p><p>இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>

இதன்படி, ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>

குறித்த நபர்கள் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியான அம்பாறை இளைஞர்; குவியும் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ampara-youth-becomes-a-police-officer-in-the-usa-1788611972"></link>
            <id>https://jvpnews.com/article/ampara-youth-becomes-a-police-officer-in-the-usa-1788611972</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் அக்கரைப்பற்று இளைஞர் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்ற சமூகவலைத்தள வாசிகள் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



அக்கரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் அக்கரைப்பற்று இளைஞர் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்ற சமூகவலைத்தள வாசிகள் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p>



அக்கரைப்பற்றைச் சேர்ந்த நவீத் முஹம்மத், அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று புதிய பணிப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06b381-7c20-4c5c-a08d-06ef8a75bb9b/26-6a9c0d86be2e3.webp' /></p><p></p><p>


இன்னிலையில் அமெரிக்க பொலிஸ் துறையில் சேர்ந்து அக்கரைப்பற்றுக்கு பெருமை சேர்த்த இளைஞனுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77ef83e5-f01a-4b9d-b51a-3edf671deef4/26-6a9c0d8610332.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய நேபாள பேரழிவு; 11 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட மூதாட்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-elderly-woman-rescued-after-11-days-1788610642"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-elderly-woman-rescued-after-11-days-1788610642</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970" target="_blank">நேபாள</a>த்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>


<a href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831" target="_blank">தீவிர மீட்புப்பணி</a> நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3f9ddb-2c10-4e1f-97ed-59972203fdd9/26-6a9c08543946c.webp' /></p><p>



ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டி, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிக்கொப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள இராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்; அநியாயமாக பறிபோன பிஞ்சின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-die-accident-vehicle-in-kilinochchi-1788613797"></link>
            <id>https://jvpnews.com/article/child-die-accident-vehicle-in-kilinochchi-1788613797</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக குழந்தை வாகனச் சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இச்சோகச் சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6794e5cc-dedc-4e7a-b466-5efb73e8b038/26-6a9c14a67d6e6.webp' /></p><p> </p><p>

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார்.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பலாலி கிணறில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/explosives-recovered-from-a-well-in-palaly-jaffna-1788614992"></link>
            <id>https://jvpnews.com/article/explosives-recovered-from-a-well-in-palaly-jaffna-1788614992</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



கிணற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>



கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1409a95-7c06-499e-85cd-528b8767f2c9/26-6a9c195200a76.webp' /></p><p>

கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T13:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> 

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07e33348-5cbb-463a-81f6-3191707e5bc4/26-6a9bfff2435fe.webp' /></p><p> 

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி, கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T13:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் கோர விபத்து; தமிழ் நாட்டை உலுக்கிய சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-students-from-tamil-nadu-killed-accident-kerala-1788614573"></link>
            <id>https://jvpnews.com/article/8-students-from-tamil-nadu-killed-accident-kerala-1788614573</id>
            <summary type="text">&amp;nbsp; கேரளாவில் ​லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேரளாவில் ​லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f612ee-0335-4041-83fc-6e6c1085ced8/26-6a9c17ae650dc.webp' /></p><h2>&nbsp;லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்து</h2><p> 

அப்பகுதியில் வீதியோரம் சரக்கு லொறி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு சுமார் 11:40 மணியளவில் அந்த வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p> 

விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.</p><p></p><p> </p><p>

இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் வைத்தியக் கல்லூரி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. </p><p>

இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

 உயிரிழந்த மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்றும், குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்து லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இன்னிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T13:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ; கைதால் நாம் முடங்க மாட்டோம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717</id>
            <summary type="text">&amp;nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8838cb-8db3-46ee-ae01-9a90e4e3f119/26-6a9bf51716aac.webp' /></p><h2>&nbsp;இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல...</h2><p> 
இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் 

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>
இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p><b>
முதலாம் இணைப்பு</b></p><p> இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
</p><p>


இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை சந்திப்பு</span></p><p>
</p><p>


பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>


வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T12:36:59+00:00</updated>
        </entry>
    </feed>
