<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T07:38:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீற்றர் மழையும், லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் 183.3 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1e0548-2683-4c28-a891-b4e5e4725772/26-6a6eebf513f38.webp' /></p><p>மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால் அதன் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் எந்த நேரத்திலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edf587d3-4011-40c5-a321-50836696ae41/26-6a6eebf5b8752.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஞ்சியில் தோனி–ரிஷப் பண்ட் இணைந்து பயிற்சி ; வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989"></link>
            <id>https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சிக் கூடமொன்றில் தோனியுடன் இணைந்து ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்தப் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68600d83-7fae-4be8-9055-df4e983c6130/26-6a6ee6fe5fcd1.webp' /></p><p>சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட ரிஷப் பண்ட், 312 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
</p><p>
இதனிடையே, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில் இந்திய அணி தனது எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><p> இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/722da6e8-594b-44aa-b05a-438a95630d0b/26-6a6ee37f68340.webp' /></p><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591"></link>
            <id>https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேலையில்லா பட்டதாரியான டிலெக்ஸன், பகுதி நேர தச்சுத் தொழிலாளியாக பணியாற்றியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0051ab-20d9-4f32-89dd-abc381660d32/26-6a6ed9b94658d.webp' /></p><p>இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றது நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்திற்கு அண்மையில் என்பதனால், பள்ளி நிர்வாகத்தின் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் திகதி உயிரிழந்தவரின் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. </p><p>அத்துடன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும், கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனத்தின் சார்பிலும் ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் யசீர் அரபாத் (B.A), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
</p><p>
நிகழ்வில் கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குரு, இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், பள்ளி நிர்வாகத்தின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829"></link>
            <id>https://jvpnews.com/article/tension-in-mahara-prison-brought-under-control-1785647829</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p><p>எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளன. </p><p>

 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f38159d-8e70-43fd-b4da-cd7126d3ec87/26-6a6ed2d723b5e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83254dae-9ea7-4523-bcee-686b06aff8e3/26-6a6ed2d672bf6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T05:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-extra-classes-for-5th-grade-students-1785646895</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5542aa70-65be-4ef5-85c7-26d4dcb35f0e/26-6a6ecf30de1a3.webp' /></p><p>இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது. </p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>

2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-02T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T04:47:14+00:00</updated>
        </entry>
    </feed>
