<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T02:22:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drink-more-water-1786753781"></link>
            <id>https://jvpnews.com/article/drink-more-water-1786753781</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
</p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><h2>விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff06d9f-d839-4f52-a456-8ffefcb8db83/26-6a7fb38e0815d.webp' /></p><p>
</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய வானிலை காரணமாக மன அழுத்தம் போன்ற நோய்கள் தீவிரமடையக்கூடும் எனவும், இது மனநலத்தைப் பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்தும் திறனைக் குறைக்கக்கூடும் எனவும் ராகம மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மற்றும் சிறார்கள் மனநல விசேட நிபுணர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T02:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் நடந்தது மனிதப் படுகொலை! உண்மையை மறைக்க முடியாது – சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786752457"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786752457</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நேற்று(14) நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளார்.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>

புதைகுழியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a8b646-9c50-4baf-b0d9-8ad1180894e3/26-6a7fae89cb174.webp' /></p><p>

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி, யாரையும் கொண்டுவந்து புதைத்ததாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>

நாட்டின் நீதி அமைச்சர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் இவ்வாறான வார்த்தைகளை தெரிவிக்க கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போல இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது. 

ஏனெனில், இங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மண்ணில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af6ac14-821d-49b5-b55f-7b367f25227b/26-6a7fae8a7dc0b.webp' /></p><p> </p><p>இலங்கையின் கிரிசாந்தி கொலை வழக்கில் சாட்சியாக இருக்கின்ற சோமரத்ன ராஜபக்ச இதனைத் தெரிவித்திருக்கிறார். இப்போதும் தெரிவித்து வருகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைத் தோண்ட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளியில் வரும்.</p><p>

அந்த உண்மைகளை மறைப்பதற்காக எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு&nbsp; தேவையற்ற விடயம் போன்ற கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T02:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980"></link>
            <id>https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980</id>
            <summary type="text">வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த வறட்சியான வானிலையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> </p><p>

அதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f1b4c6-1224-44e9-b0b7-fdd641f6a267/26-6a7f7df3037c3.webp' /></p><p>

மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T22:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787"></link>
            <id>https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cda6a6-7965-483a-a3d9-5cfe9feb5f49/26-6a7f16bd09586.webp' /></p><h2>&nbsp;மணமகளின் சகோதரரும்,&nbsp; பாட்டியும் உயிரிழப்பு</h2><p>
</p><p>


விபத்தில் உயிரிழந்தவர்களில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மணமகளின் சகோதரரும், அவரின் பாட்டியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



விபத்து இடம்பெற்ற நேரத்தில் மணமகளின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>


வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T22:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளி - இலங்கைக்கு இழுத்துவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T22:40:47+00:00</updated>
        </entry>
    </feed>
