<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T19:38:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 33 வயது இளைஞன் உயிரிழப்பு ; உடற்கூற்றில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639"></link>
            <id>https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் நேற்று (10) இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fdd4b-4259-4161-90a8-fcc02a58411a/26-6a7b7861594b1.webp' /></p><p>இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவு போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சியங்களை கோப்பாய் காவல்துறையினர் பதிவு செய்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா – இலங்கை உறவில் புதிய அத்தியாயம் ; புதிய தூதுவர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/china-relations-new-ambassador-arrives-sri-lanka-1786470901"></link>
            <id>https://jvpnews.com/article/china-relations-new-ambassador-arrives-sri-lanka-1786470901</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கையை வந்தடைந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கையை வந்தடைந்துள்ளார்.</p><p></p><p> 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அவர் இதன்போது உறுதியளித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311d0b61-9931-4c14-8b3d-e824a8b0e9e0/26-6a7b61f73217e.webp' /></p><p>தூதுவர் வெய் தனது நியமனத்தை மாபெரும் கௌரவமாகவும் பாக்கியமாகவும் கூறியதுடன், இலங்கையின் செழுமையான வரலாறு, இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பும் மக்கள் குறித்துத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார். </p><p>

நூற்றாண்டுகால கடல்சார் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மற்றும் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டது முதல் இருதரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர் முன்னிலைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T17:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி சிக்கலுக்கு தீர்வு காண சுங்கத் திணைக்களம் விசேட குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-committee-resolve-coversial-vehicle-import-1786467881"></link>
            <id>https://jvpnews.com/article/special-committee-resolve-coversial-vehicle-import-1786467881</id>
            <summary type="text">கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவாவிடம் வினவியபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190c4c6b-259a-4ff5-95b6-dd36b0b33e6d/26-6a7b5ddf44aa5.webp' /></p><p>குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T17:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள் ; வட மாகாண ஆளுநர் வேதநாயகன் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suicide-incidents-increasing-in-jaffna-vedanayagan-1786467556"></link>
            <id>https://jvpnews.com/article/suicide-incidents-increasing-in-jaffna-vedanayagan-1786467556</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd77338-a6ce-45cd-b626-5030ee7b0cda/26-6a7b54e5b0007.webp' /></p><p>ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்தாய்வின் போது, நிலவும் மோசமான சுகாதாரச் சூழல் குறித்தும், அதனைத் தடுப்பதற்கான பல்துறை கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.</p><p>கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>தேசிய மட்டத்தில் 1 லட்சம் பேருக்கு 15 பேர் என்ற அளவில் உள்ள இந்நிலை, யாழ்ப்பாணத்தில் 1 லட்சம் பேருக்கு 30 பேர் எனும் இரு மடங்கு வீதத்தை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p>குறிப்பாக இளைஞர்களும் பெண்களுமே அதிகளவில் இவ்வாறான தவறான முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
</p><p>
மதுப்பழக்கம், குடும்ப வன்முறைகள், உறவுகளுக்கு இடையிலான தொடர்பாடல் இடைவெளி, தனிமை மற்றும் கடுமையான உளவியல் அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
இச்சிக்கலை வெறும் சுகாதாரத் துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் கல்வி, நிர்வாகம், பொலிஸ், ஆன்மீகம் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய "மாகாண அளவிலான சமூக இயக்கமாக" மாற்ற வேண்டும்.</p><p>
</p><p></p><p>இதுவரை பதிவான உயிரிழப்புகள் குறித்த பின்னணியை விரிவாக பகுப்பாய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
</p><p>
பல்வேறு திணைக்களங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப்போக்கி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையத்தை உடனடியாக மீளமைக்க வேண்டும்.
</p><p>
மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் அல்லது தனிமையால் தவிப்பவர்கள் உடனடி உளவியல் ஆலோசனை பெற, வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 'நேயம்' (021 222 6666) என்ற 24 மணிநேர இலவச அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். </p><p>இங்கு தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T16:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக்கு போதைப்பொருளை விநியோகித்த சிறை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-officer-arrested-drugs-to-magazine-prison-1786464754"></link>
            <id>https://jvpnews.com/article/prison-officer-arrested-drugs-to-magazine-prison-1786464754</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிப்பதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிப்பதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>அவருடன் சேர்த்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61823e75-42a0-45ee-93d5-b70c5f0af937/26-6a7b49f416a62.webp' /></p><p> 

தெஹிவளையைச் சேர்ந்த 3​2 வயதுடைய நபர் ஒருவர் முதன்முதலாக இந்த போதைப்பொருளுடன் கல்கிசை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் வாட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக் கொள்ள வேண்டிய இடம் குறித்த தகவலை வழங்கியதாகவும், அதற்கமையவே இந்தப் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. </p><p>

அந்தப் போதைப்பொருள் பொதியை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கவிருந்ததாக சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரியின் தலைமையில் அந்த நபரைத் கைது செய்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டது. </p><p>

இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்ட போது, அங்கு மறைந்திருந்த பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரைக் சுற்றிவளைத்து கைது செய்தனர். </p><p>

கைதான சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே இச்சிறைச்சாலையில் சேவைக்குச் சேர்ந்துள்ளதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தங்காலை - பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T16:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்; EUR/USD-க்குப் பொறுமை தேவை, கணிப்பு அல்ல, அது ஏன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trading-in-a-damaging-market-environment-in-august-1786463805"></link>
            <id>https://jvpnews.com/article/trading-in-a-damaging-market-environment-in-august-1786463805</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடின...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eff1a1a-696f-4e76-822a-16b91a046824/26-6a7b463f146b7.webp' /></p><p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான
வர்த்தகச் சூழல்களில் சிலவாகும். </p><p>ஒகஸ்ட் மாதம் நெருங்கி வரும்
நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்
காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப்
பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.</p><p> ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின்
மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து
வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று
முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில்
சிக்கியுள்ளது.</p><p> யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே
தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும்
வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத்
திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும்
புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.</p><h4>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்
</h4><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச்
சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன,
கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார
வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான
கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. </p><p>இந்தச்
சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச்
சமிக்ஞைகளை உருவாக்குகிறது.</p><p> ஒரு நாள், எதிர்பார்த்ததை விட
அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச்
சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது. அடுத்த நாள்,

ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி
மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின்
பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.</p><p>
</p><p>யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க
முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது. சமீபத்திய OECD
பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச்
சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின்
சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால்
பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. </p><p>அதே சமயத்தில், யுஎஸ்
தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ்
நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால்,
EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது
கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான
வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை
உயர்த்துகின்றன. </p><p>இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி
மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன.
மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான
வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு
செய்யப்பட்டு வருகின்றன.</p><p> எண்ணெய் விலையில் மீண்டும்
ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே
பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன்
செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால்,
EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல்
சிரமம் ஏற்படுகிறது.</p><p> ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை
எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப்
பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.</p><h4>நிச்சயமற்ற தன்மையின் உளவியல்</h4><p>
விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய
சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது
பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு
தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள்
வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும்
ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண
முடியும். </p><p>ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட
திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை
விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த
தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில்,
அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர்
ஆபத்தாகும். </p><p>அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம்
பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ
தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த
உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத்
தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண
அவர்களைத் தூண்டுகிறது.</p><p> எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு
வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு
நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே
ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக்
கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். </p><p>அடுத்த
ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான
தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள்
தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய
வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது. குறுகிய
கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி,

வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள்.
</p><p>நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப்
பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப்
போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க
வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள். பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட
வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய
சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக
லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.</p><h4>அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம்
பெறுகிறது</h4><p>
நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு
அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன. </p><p>உண்மையற்ற
தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர்
விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச்
செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது.</p><p> </p><p>பணவீக்கத் தரவுகள்,
வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி
வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே
EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின்
ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a>-ஐ அறிமுகப்படுத்த
முடியும். </p><p>EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு
வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD
வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல்
தேவைப்படுகிறது. ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும்
தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான
பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்:
அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள்

புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர்
கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா
என்பன.
</p><p>இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச்
சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான
எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. </p><p>ஒரு CFD வர்த்தகர்
ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு
தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த
வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு
ஆதாரமாக மாறிவிடக் கூடாது.</p><p> மிகவும் சீரான செயலாக்கமும்
தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான
கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம்.
EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின்
அடிப்படையில், Exness Terminal கூட இந்த விவாதத்திற்குப்
பொருத்தமானதாக அமைகிறது. அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு
சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. </p><p>CFD
வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட்
குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய்,
பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க
வேண்டியிருக்கலாம். </p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை
முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப்
பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து
வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல்,
கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால்
இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக
மாறுகிறது. </p><p>தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD

வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச்
செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள்
அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான
வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது. </p><p>பிரத்தியேகமான விலை
நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு
விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD
வர்த்தகர்கள் தூண்டப்படலாம். </p><p>வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின்
நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை
உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல்,
விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது.
உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது
விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை. </p><p>முக்கியமான விஷயம்
என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம்
போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. </p><p>EUR/USD
ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே
சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச்
சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம்
உதவ வேண்டும்.</p><h4>முடிவுரை
</h4><p>பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம்
என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட,
சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும்.</p><p> ஓகஸ்ட் மாதத்தில் சேதம்
ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும்
சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள்
ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.</p><p>
வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு

புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம்
செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும்.</p><p> சீரான
நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக
உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான,
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து,
தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-11T15:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-more-human-skeletons-identified-in-chemmani-1786455355"></link>
            <id>https://jvpnews.com/article/15-more-human-skeletons-identified-in-chemmani-1786455355</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆவது நாளான இன்று மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆவது நாளான இன்று மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>


இவற்றில் 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>


யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59128399-3955-4d07-b645-5ef31e20f403/26-6a7b253d58200.webp' /></p><p>
</p><p>
இதுவரை செம்மணி மனித புதைகுழியில் மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 524 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


மேலும், 516ஆவது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் இடுப்புப் பகுதியில் இருந்து தாயத்து போன்ற பொருளொன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயமொன்றும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிட நீதித்துறை எடுத்த முடிவு கவலைக்குரியது என்றும்&nbsp; நீதிபதி&nbsp; குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38c8faa-1132-4aa4-bb93-7179c57a1da4/26-6a7b1f8bf1052.webp' /></p><h2>இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>

இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, 2024 நவம்பரில் நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்றில் அதானி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அதேவேளை அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாகும்.

இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான துறைமுகங்கள் முதல் சீமெந்து வரையிலும், எரிசக்தி முதல் ஊடகம் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சூரிய ஆற்றல் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களையும் வங்கிகளையும் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
</p><p>
 மேலும் அமெரிக்க நீதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு அமெரிக்காவின் சட்த்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113</id>
            <summary type="text">&amp;nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சு</p><p>ற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8857fc3-d2f1-4870-ac3e-795ed37e19cf/26-6a7b244b32867.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதத்தின் முதல் 06 நாட்கள் வரை மொத்தமாக 1,386,228 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
</p><p>
அத்துடன், அவர்களுள் இந்தியாவிலிருந்து 346,057 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலத்திலிருந்து பாய்ந்த பெண் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


கம்பளை பகுதியில் கடந்த 3ஆம் திகதி கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மதியம் கம்பளை பாலத்திலிருந்து பெண்ணொருவர் திடீரென பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e9a4b7-8c87-4071-8cad-559aa9fe05a1/26-6a7b267d3838f.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் இன்று கம்பளை – போத்தலாப்பிட்டிய களு பாலத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மற்றும் குற்றத்தடயப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:39:05+00:00</updated>
        </entry>
    </feed>
