<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T18:35:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expedite-lower-malwathu-oya-multipurpose-project-1788027859"></link>
            <id>https://jvpnews.com/article/expedite-lower-malwathu-oya-multipurpose-project-1788027859</id>
            <summary type="text">ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நேரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று முற்பகல் (29) விஜயம் செய்தார்.</p><p> </p><p></p><p>சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டிற்கென 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் எழுந்த சிக்கல்களைத் தீர்த்து கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்பதும், முற்றிலும் உள்நாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a753bf-304c-436d-b9d1-6d087fe5456e/26-6a9323d58dba3.webp' /></p><p>வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தையும், வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், தந்திரிமலை பொகொடவில் மல்வத்து ஓயாவின் குறுக்கே கட்டப்படவுள்ள மேற்படி கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கமானது, 1,69,400 ஏக்கர் அடி நீர் கொள்ளளவைக் கொண்டிருப்பதுடன், இதன் கட்டுமானப் பணிகளின் பின்னர், ரஜரட்டவில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமாகவும் வட மத்திய மாகாணத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் இது அமையும்.</p><p> 

இத்திட்டத்தினூடாக அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அளிப்பது, கீழ் மல்வத்து ஓயா பள்ளத்தாக்கில் கிராமப்புற அபிவிருத்தி மற்றும் விவசாயத்திற்கு நீர் வழங்குவது, தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி பிரதேசமொன்றை உருவாக்குவது, நீர்மின்சாரம் உற்பத்தி செய்வது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் நன்னீர் மீன்வளத்தை மேம்படுத்துவது ஆகிய இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 'யோத வாவி' மற்றும் 'அகித்தமுருப்பு வாவி' ஆகியனவற்றின் கீழ் உள்ள பிரதேசத்தில் பெரும்போகத்தில் 40,000 ஏக்கர் நெல் பயிர்செய்யப்பட்டாலும், நீர் பற்றாக்குறையின் காரணமாக சிறுபோகத்தில் 10,000 ஏக்கர் மாத்திரமே பயிர்செய்யப்படுகின்றது. </p><p>

எனவே, இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதால், சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டு பருவங்களிலும் 40,000 ஏக்கர் நெல் முழுவதையும் பயிர்ச்செய்ய முடியும். 

இதுதொடர்பில் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது எழுந்த பிரச்சனைகள், சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், மேற்படி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி மக்களுக்குப் பலன்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். </p><p>

இத்திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி முக்கிய கவனம் செலுத்தியதுடன், இவ்வாறான 315 குடும்பங்களுக்கு காணி, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்கவும், இந்த காணிகளில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசனம் மூலம் நுண் விவசாய பயிற்செய்கையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். </p><p>

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்ததுடன், 3.4 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்த்தேக்கத்தின் பிரதான அணை சுவரின் கட்டுமானப் பணிகள் சுமார் 60% நிறைவடைந்துள்ளதாகவும், தென்கரை மதகின் கட்டமைப்புப் பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>இத்திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, இதற்கான அத்திவாரம் அமைத்தல் மற்றும் கருங்கற்பாறைகளை தகர்த்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>

மேலும், யானைகளுக்கான தடை வேலி அமைத்தல், சிறிய குளங்களைப் புதுப்பித்தல் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகமொன்றை அமைத்தல் போன்ற பணிகளும் இதனிடையே மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T18:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தி 9 விக்கெட்டுக்களால் வென்ற இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-women-team-united-arab-emirates-9wickets-1788024689"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-women-team-united-arab-emirates-9wickets-1788024689</id>
            <summary type="text">மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இன்றைய (29) போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இன்றைய (29) போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.</p><p></p><p> 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f9e491-ccb6-48a5-9cc0-766f4a13550c/26-6a931772aac85.webp' /></p><p>இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. </p><p>

இந்நிலையில் 80 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 7.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.</p><p> 

இலங்கை அணித் தலைவி 48 ஓட்டங்களை அதிரடியாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T17:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர சதுக்க வளாகத்தில் அபாயகரமாக காரை செலுத்தியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-driving-independence-square-complex-1788023928"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-driving-independence-square-complex-1788023928</id>
            <summary type="text">கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள வீதியில் அபாயகரமான முறையில் கார் ஒன்றைச் செலுத்திய இளைஞர் ஒருவரைப் பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள வீதியில் அபாயகரமான முறையில் கார் ஒன்றைச் செலுத்திய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

இன்று பிற்பகல் குறித்த வீதியில் நான்கு கார்கள் அபாயகரமான முறையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் திடீர்ச் சோதனை நடத்தி இவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில் மூன்று கார்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6c955f7-4c75-4d33-baf5-622b5feba56c/26-6a9314797fe60.webp' /></p><p>எனினும், ஒரு காரைக் கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பறிமுதல் செய்துள்ளனர். </p><p>

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட காரைச் செலுத்தியவர் 20 வயதுடைய இளைஞர் எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

இதற்கமைய, சந்தேகநபர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்காக அவரைச் சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், குறித்த கார் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனமா என்பதைப் பரிசோதிப்பதற்காக மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T17:18:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் யுவதியை கடத்தியது காதலனா? விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார் இன்று (29) முறியடித்துள்ளனர். இந்தக் கடத்தலை யுவதியின் காதலனே முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p></p><p>கார் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்படுவதாக இன்று பிற்பகல் 01:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. </p><p>

அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த முற்பட்டபோதிலும், அது பொலிஸாரின் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

பின்னர், நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் வைத்து காரை நிறுத்துமாறு மீண்டும் சமிக்ஞை செய்தபோதிலும், அது நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றமையினால் பொலிஸார் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226cfd0e-d605-4432-9578-7f782d976565/26-6a93067657d74.webp' /></p><p>இதன்போது சாரதி காரைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காரினுள் யுவதி ஒருவர் இருந்துள்ளார் என்றும், அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்ட யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காரைச் செலுத்தியவர் கடத்தப்பட்ட யுவதியின் காதலன் எனத் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் மாத்தறை - வெலிகமை மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனது குடும்ப உறவினர்களுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த யுவதி கடத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>

தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதுடன், அவர் கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியது யுவதியின் தந்தை எனக் கூறப்படுகின்றது. </p><p>

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், யுவதி இன்று பிற்பகல் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f60236-258a-455a-94e2-00e3b15c027f/26-6a9312267b524.webp' /></p><p> </p><p>

அதேவேளை, குறித்த கார் கடத்தலை மேற்கொண்ட காதலனுடையது என்றும், அதனை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவிற்கு ஓட்டிவந்துள்ளார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. </p><p>

அந்த இளைஞர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக் குற்றச்சாட்டுகளைக் கொண்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதும் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லூஷன் சூரியபண்டார உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T17:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை புலனாய்வு தகவலின் அடிப்படையில் ‘வெள்ளே சாரங்க’ டுபாயில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/velle-saranga-arrested-in-dubai-1788022475"></link>
            <id>https://jvpnews.com/article/velle-saranga-arrested-in-dubai-1788022475</id>
            <summary type="text">வெள்ளே சாரங்க என்ற சாரங்க பிரதீப் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளே சாரங்க என்ற சாரங்க பிரதீப் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லலித் கன்னங்கர எனப்படும் 'பஸ் லலித்' என்பவரைக் கைது செய்யச் சென்ற மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, டுபாய் பொலிஸாரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d4180a2-d37a-447e-b5b1-a7670af24fb2/26-6a930ecc8276f.webp' /></p><p> 

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து கொக்கெய்ன் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

எனினும், சந்தேகநபரின் கைது தொடர்பில் இதுவரை இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுச் சேவையின் உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T16:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை; மீட்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-slaughterhouse-raided-jaffna-rescued-cow-1788008817"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-slaughterhouse-raided-jaffna-rescued-cow-1788008817</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகையிடப்பட்டு, நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,58 மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகையிடப்பட்டு, நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,58 மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p>



இதன்போது சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த 43 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d7dde7-ce90-4fd4-a756-923a09c67caf/26-6a92d97396f31.webp' /></p><p></p><h2>&nbsp;ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம்&nbsp;</h2><p> </p><p>



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டனர்.</p><p></p><p> </p><p>

அதன்போது , மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும் , ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/027fabca-b97a-493e-90cc-d1bcb862acd3/26-6a92d972d8968.webp' /></p><p> 


 



கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தை ;இருவேறு பெற்றோர்... டிவிஸ்ட் கொடுத்த DNA!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577"></link>
            <id>https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்காகத் தன்னார்வ மாற்றுத்தாயாகச் செயல்படச் சம்மதித்தார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் தம்பதியின் கரு, இவரின் கருப்பையில் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8389fc-c722-4020-9640-1012a400a156/26-6a92ccca9d257.webp' /></p><p>

எனினும், அதே காலப்பகுதியில் இவர், தனது கணவருடன் இயல்பான முறையிலும் கருத்தரித்துள்ளார்.</p><h2>குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள்</h2><p>

கரு மாற்றப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், அவர் இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p>

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில், பெண் குழந்தை மாற்றுத்தாய்மை கோரிய தம்பதிக்கும், ஆண் குழந்தை குறித்த பெண்ணுக்கும் (மாற்றுத்தாய்) மற்றும் அவரது கணவருக்கும் சொந்தமானது என்பது உறுதியானது.</p><p>

2025 ஆம் ஆண்டு நவம்பரில் இவ்விரு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. எவ்வித சிக்கல்களும் இன்றி, இரு தம்பதியினரும் தங்களின் உயிரியல் குழந்தைகளை ஏற்று வளர்த்து வருகின்றன.</p><p></p><p>

இதேவேளை, ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை வேறு வேறு பெற்றோரின் உரிமைகளின் கீழ் பிரிப்பதைத் தடுக்கும் வகையில் குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள் அமைந்துள்ளன. </p><p>இதனால் இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு குயின்ஸ்லாந்து சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரும் ஒரே கர்ப்ப காலத்தில் வளர்ந்த "கர்ப்பகால இரட்டையர்கள்" (Gestational Twins) மட்டுமே என்றும், தற்போதைய தனித்துவமான சூழலைக் கருத்திற் கொண்டு மாற்றுத்தாய்மைச் சட்டத்தின் கீழ் இவர்கள் "பிறப்பு உடன்பிறப்புகள்" (Birth Siblings) ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, சட்டப்பூர்வமாகப் பெற்றோர் உரிமைகளை அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்க வழிவகுத்தது.</p><p></p><p>
</p><p>
குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும் பட்சத்தில், அவர்களைப் பிரித்து வளர்ப்பது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சுயாதீன ஆலோசகரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

குழந்தைகள் வளரும்போது அவர்களின் பிறப்புக்குப் பின்னாலுள்ள உண்மைச் சூழலைத் தகுந்த வயதில் புரியவைக்கவும், இரு குடும்பங்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தீர்மானித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்புரவுக் கருவி மூலம் மனைவியை வேவு பார்த்த கணவனுக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318"></link>
            <id>https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318</id>
            <summary type="text">தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

 வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை மற்றும் கண்காணிப்பு காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தென்பட்டமை அவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4491a569-0ff4-4039-9502-7eacced884dc/26-6a92cfafc7e29.webp' /></p><h2>கணவருக்கு எதிராக தீர்ப்பு</h2><p>

இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த வீட்டில் இருந்த ரோபோ துப்புரவுக் கருவியை செயலி மூலம் தொலைதூரத்திலிருந்து இயக்கியுள்ளார்.</p><p>

அதிலிருந்த நேரலைக் காட்சி மூலம், தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த அவர், அந்தக் காட்சியை பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது மனைவி மற்றும் குறித்த ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணவர், 20 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாகக் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில், இருவரும் திருமண உறவின் எல்லையை மீறியதாக நீதிமன்றம் தீர்மானித்து, மனைவிக்கு 5 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
</p><p>
எனினும், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p>

சிவில் வழக்கில் அந்தக் காணொளி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தனியுரிமையை மீறி பதிவு செய்யப்பட்ட செயலை நியாயப்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சட்டவிரோதமாக தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 1.5 இலட்சம் தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட அல்லது நெருக்கமான நடவடிக்கைகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த ReeCha ; பிரபலம் பகிர்ந்த பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது.
</p><p>நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமாக ReeCha சுற்றுலாதலம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/056a2d3c-4ef0-4969-bd51-cd2ed7dacfb5/26-6a92c613a52bc.webp' /></p><h2>40 ஆண்டுகள் கழித்து ஆசை நிறைவேறியுள்ளது</h2><p>

இன்னிலையில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான B.H. அப்துல் ஹமீத் அவர்கள் ReeCha சென்ற நிலையில் தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,</p><p> 

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில்(Holland)ஒலிபரப்புத்துறைப் பயிற்சிக்காக சென்றிருந்த போது,The Hagueல் உள்ள-Madurodam-miniature parkல், உலக அதிசயங்கள், மற்றும் உலகப்புகழ்மிகு கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சின்னஞ்சிறு வடிவங்களில் அற்புதமாக படைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து வியந்தபோது, என்நெஞ்சில் ஒரு ஆசை எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f622484a-aaeb-488e-85bd-7129964a10dd/26-6a92c612e87a2.webp' /></p><p> </p><p>உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்று.</p><p> 
40 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
நேற்று யாழ் மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரன்(IBCபாஸ்கரன்)அவர்களது அன்பு அழைப்பினை ஏற்று, ‘இயக்கச்சி’யில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha”- இயற்கை வேளாண் கருத்துக்கருப் பூங்காவுக்குப் போயிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05da5c6-a479-45b3-9998-8f5a93bc5a17/26-6a92c61238e4e.webp' /></p><p> </p><p>
தரிசு நிலமாய்க் கடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன். </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும்,</p><p> தேச எல்லைகள் கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டுக் கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும், </p><p>குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். 
வெகு விரைவில் யாழ் மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென&nbsp; பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df705b5-6706-4077-82ed-fec065e9fa62/26-6a92d295e8810.webp' /></p><h2>26 வயதான குறித்த யுவதி</h2><p> </p><p>

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543"></link>
            <id>https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162ea02-bd30-472d-861a-a03e08f186d0/26-6a92dc48b149d.webp' /></p><p> </p><p>

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p> 

இது தவிர, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இருந்து யாழ் சென்ற லொறி; நெல் உமிக்குள் பிடிபட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408"></link>
            <id>https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். </p><p>

நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29900b72-f0c4-432f-a67d-02311ae79df8/26-6a92b899eb1fa.webp' /></p><p></p><p> </p><p>

இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534"></link>
            <id>https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4610db40-882b-4585-aa1a-05ff04d444cc/26-6a9299d81fc6d.webp' /></p><h2>தாக்குதல் நடத்தப்படும் அபாயம்</h2><p> 

 ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது.</p><p></p><p> 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். </p><p>

அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக&nbsp; &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:36:10+00:00</updated>
        </entry>
    </feed>
