<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-19T21:27:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659"></link>
            <id>https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

 

"நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c272ba3-9d8c-46dc-b980-8e6e89c1dc2a/26-6aaef42504730.webp' /></p><p>என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். </p><p>ஆனால், இதுவரை அவர்களால் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. </p><p>ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழரசுத் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். </p><p>போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அதிகரித்துள்ளன.</p><p>எனவே, போதைப்பொருள் ஒழிப்புக்கும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். </p><p>மேலும், இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகு சேவைக்கான நிதி உதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037"></link>
            <id>https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037</id>
            <summary type="text">நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஓகஸ்ட் 2024-இல் இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசு வழங்கும் நிதியுதவியின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு இதுவாகும்.</p><p> பிராந்திய இணைப்புத் திறனை மேம்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீட்டிப்பு பிரதிபலிக்கிறது என்று உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d680606-1a80-4df2-ae8e-25a8ddaaa0b8/26-6aaeedcee9962.webp' /></p><p>ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி, ‘வியாபிலிட்டி கேப் ஃபண்டிங்’ (Viability Gap Funding – செயல்பாட்டுச் செலவு இடைவெளிக்கான நிதி) எனும் நடைமுறையின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், இச்சேவையை மலிவு விலையிலும் அதே சமயம் நிலையான செயல்பாட்டுத் திறனுடனும் பராமரிப்பதை இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 2024-இல் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இப்படக்ச் சேவை சுமார் 52,000 பயணிகள் பயணிக்க உதவியுள்ளது; இது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இச்சேவை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
</p><p>
டிசம்பர் 2024-இல் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் ஏப்ரல் 2025-இல் இந்தியப் பிரதமரின் இலங்கை பயணம் ஆகியவற்றின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கடல்வழி இணைப்பு குறித்த கூட்டு நோக்கத்துடனும் இந்த நிதியுதவி நீட்டிப்பு ஒத்துப்போகிறது.</p><p>

எதிர்காலத் திட்டங்களில், 65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீரமைத்தல் மற்றும் கடல்வழி இணைப்பை மேலும் விரிவுபடுத்தி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தக்கூடிய கூடுதல் வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331</id>
            <summary type="text">குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன &#039;பாசிவ் கூலிங்&#039; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன 'பாசிவ் கூலிங்' (Passive Cooling) முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் 'குளிர்விப்பு கூட்டமைப்பு' (Cool Coalition) இணைந்து கடந்த15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்தப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை A/C இயந்திரங்களின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9490583d-804c-40df-94b0-3cb5f3777e3f/26-6aaee72503916.webp' /></p><p>

உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.</p><p>

மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
</p><p>
கடுமையான வெப்பத்துக்குத் தீர்வு காண்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க குளிர்ச்சி அமைப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் பாசிவ் கூலிங் முறைகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாசிவ் கூலிங் (Passive Cooling) முறை என்பது மின்சாரம் அல்லது செயற்கையான குளிரூட்டிகள் (Air Conditioners / Fans) ஏதும் இன்றி, இயற்கை வழிகளிலேயே ஒரு கட்டடத்தின் உட்புற வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வடிவமைப்பு நுட்பமாகும்.
</p><p>
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135"></link>
            <id>https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை 98,616 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மொத்த நோயாளர்களில் 52.62% பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7756a99-0bf9-4f53-ac60-8512e1cc080e/26-6aaede91286c0.webp' /></p><p>இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,209 ஆகும்.</p><p>

 

மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். </p><p>அங்கு 20,917 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 19,435 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

இதனிடையே, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

 

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

செப்டம்பர் மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

34 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்னமும் டெங்கு அதிடர்க் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739"></link>
            <id>https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739</id>
            <summary type="text">சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db0363-8e65-4da3-a9f2-31f108a18325/26-6aaec97cc65bc.webp' /></p><p>

 

இந்நிகழ்வின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே அனோஜனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

 

எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து, அவரது குடும்பத்தினர் அமைதியாக வாழச் சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
</p><p>
 

இதனிடையே, இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் ; தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை ; றிஷாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481</id>
            <summary type="text">அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாம் ஏற்கனவே ஏழு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p>

அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்கள் ஊடகங்களில் தம்மை மீண்டும் தாக்குதலுடன் இணைக்கும் வகையில் செய்தியாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b96d0e0-df13-46ac-9d08-5fcdc1baee84/26-6aaec4934d6cd.webp' /></p><p>வர்த்தகர் அலாவுதீனுடனான தொடர்பின் அடிப்படையில் சஹ்ரானுடன் தமக்கு தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General கூறியதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுயாதீனமான, அரசியல் தலையீடற்ற விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
</p><p>
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞர் எஸ். அனோஜன் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து, அவருக்கு உதவுவதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>

அனோஜனுக்காக சவூதி அரசாங்கத்திடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜனாதிபதி மற்றும் சவூதி தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவி நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-grants-interim-stay-removal-jaffna-municipal-1789837131"></link>
            <id>https://jvpnews.com/article/court-grants-interim-stay-removal-jaffna-municipal-1789837131</id>
            <summary type="text">யாழ் மாநகர சபை உறுப்பினர் சுவீகரன் நிசாந்தனின் பதவி நீக்கத்துக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது. 
குறித்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாநகர சபை உறுப்பினர் சுவீகரன் நிசாந்தனின் பதவி நீக்கத்துக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.</p><p></p><p> 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ் மாநகர சபைக்கு தெரிவான குறித்த உறுப்பினரை சில மாதங்களுக்கு முன்னர் அரச அமைச்சர் கலந்து கொண்ட மாநகரசபை நிகழ்வு ஒன்றில் குறித்த உறுப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கட்சி ஒழுங்காற்று நடவடிக்கை எனும் பெயரில் உறுப்பினர் பதவியை நீக்குவதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81315959-a874-4411-8bfe-21d4cfc60a62/26-6aaebf4cb1239.webp' /></p><p>இந்நிலையில் குறித்த கடிதத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>
குறித்த வழக்கில் குறித்த மாநகர சபை உறுப்பினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதவி நீக்கம் தொடர்பில் தனது கட்சிக்காரர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை காரணங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி வி. மணிவண்ணன் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை வழங்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தார். </p><p>
ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாநகர சபை உறுப்பினரின் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கி தவணையிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/england-defeated-the-sri-lankan-team-by-8-wickets-1789836168"></link>
            <id>https://jvpnews.com/article/england-defeated-the-sri-lankan-team-by-8-wickets-1789836168</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 3-0 என இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee93c7d-3f5e-4e5a-a092-c63cb57ab45c/26-6aaebb898506f.webp' /></p><p>


மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p> இலங்கை அணி தரப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 35 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.</p><p>

 

125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. </p><p>ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்தார். அணித்தலைவர் ஹேரி புரூக் 33 ஓட்டங்கள் சேர்த்தார். </p><p>இறுதியில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p> ஆட்டநாயகன் விருதை சோனி பேக்கர் தட்டிச் சென்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965</id>
            <summary type="text">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b43e6d-00be-467f-8e2c-9589ac34a5d5/26-6aae746e868b1.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">குறித்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p style="text-align: justify; ">
 

இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T16:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது ; நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயங்காது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ், அங்கு பணியாற்றி வந்த அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதால் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் எனக் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927877a-b6ad-452d-93e5-2b161c1e2fd0/26-6aaeb33ea57e1.webp' /></p><p>இது தொடர்பாக விடயப்பரப்பிற்குரிய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p> இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயல்வதாகவும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எது எவ்வாறாயினும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ள அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:07:34+00:00</updated>
        </entry>
    </feed>
