<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T20:50:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-crash-claims-young-man-s-life-in-jaffna-1785701947"></link>
            <id>https://jvpnews.com/article/car-crash-claims-young-man-s-life-in-jaffna-1785701947</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில்&nbsp;28 வயதுடைய இளைஞன்&nbsp; உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; ">காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2803e96f-9402-4e56-96be-7d3d8c5c1aea/26-6a6fa63d5148e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.</p><p style="text-align: justify; ">

குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T20:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305"></link>
            <id>https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c515c25-6949-43e9-ab3c-2730f4911b02/26-6a6f9fd3126b5.webp' /></p><h3 style="text-align: justify; ">&nbsp;தீவிர விசாரணை</h3><p>
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர்,&nbsp; கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.
</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; "> இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T19:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720</id>
            <summary type="text">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d7d98d-9ea8-4484-93e6-896e5c16d0fc/26-6a6f99a218f61.webp' /></p><h2 style="text-align: justify;">கருத்தடை</h2><p>
</p><p style="text-align: justify;">
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify;"> 

யாழ். மாநகர சபை - 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள், கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்,&nbsp; முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,

வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify; ">இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய 'விலங்கு நலச் சட்டத்தின்' ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T19:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-rise-across-sri-lanka-1785696733"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-rise-across-sri-lanka-1785696733</id>
            <summary type="text">நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884cb28d-cb50-4839-bd34-96feaa0c5248/26-6a6f91de9415f.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிஅபாய வலயங்கள்</h2><p style="text-align: justify; ">



மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 646 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


மாவட்ட வாரியாகப் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 18,249 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 17,048 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு பரவல் தொடரும் நிலையில், நாடு முழுவதும் 137 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T19:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; மோதல்களின் பின்னணி குறித்து நீதி அமைச்சர் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483"></link>
            <id>https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dedd99ba-1f46-4450-a33a-499935d27f36/26-6a6f8cfcd36d4.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">பதற்ற நிலைமைகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். </p><p style="text-align: justify; ">அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T18:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்திற்கு வந்திருந்த 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830</id>
            <summary type="text">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (01) இரவு 7.30 மணியளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

நேற்று (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d90b15-5ae7-462d-8c78-9a5757856911/26-6a6f7eb7ca804.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">&nbsp;மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

அவ்வாறு மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை அவர் தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ; பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157"></link>
            <id>https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள &#039;செண்டோ&#039; என்ற குற்றவாளியின் தந்தையை &#039;நிசல செவன&#039; மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை 'நிசல செவன' மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca54c280-bec9-4e33-bd99-9144f9e6162f/26-6a6f782f6085f.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபருக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இவர் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பிணையில் வந்தநிலையிலேயே, கடந்த 17 ஆம் திகதி இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவர் 2015 ஆம் ஆண்டு இராணுவ விசேட படையணியில் இருந்து விலகிய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத முடிவால் பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.



நே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



நேற்று (01) வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறித்த இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133b5efb-1b89-4c2d-b156-19c96a864918/26-6a6f67c3779ea.webp' /></p><h2 style="text-align: justify; ">வாழ்வதற்கு விருப்பமில்லை</h2><p>
</p><p style="text-align: justify;">


இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968</id>
            <summary type="text">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9e063b-39e1-4e6c-9af6-be4490a507b3/26-6a6f73895d875.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, குறித்த கடற்பிரதேசங்களில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் சட்டமூலம் ; சட்டமா அதிபர் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565"></link>
            <id>https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. 

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07ec23d-0d8e-4379-8e7e-1209a754bb83/26-6a6f6e0f78fec.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f241aa13-8cdd-4c35-b2ff-5ce9d48a551e/26-6a6f65eac24bb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புனரமைப்புப் பணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:44:49+00:00</updated>
        </entry>
    </feed>
