<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-27T11:51:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-announcement-regard-vehicle-import-fees-1787830653"></link>
            <id>https://jvpnews.com/article/government-announcement-regard-vehicle-import-fees-1787830653</id>
            <summary type="text">இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதன்படி அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலேயே கட்டணம் நீக்கம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a27757ed-7e69-4180-a695-e08b2381a2bc/26-6a90217ea4c21.webp' /></p><p>நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் பின்னரே இத்தகைய வரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.</p><p>மேலும், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதி தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, அரசாங்கம் ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகன இறக்குமதியை எதிர்பார்த்திருந்த நிலையில், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்கள் உள்ளிட்ட மொத்த மதிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-mullaitivu-to-mark-child-safety-week-1787829789"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-mullaitivu-to-mark-child-safety-week-1787829789</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடும் நடைபெற்றுள்ளது.
</p><p>


“எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்ரி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல் மற்றும் ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361333fa-46dd-4f93-af9f-a8512b0ac962/26-6a901e1e59ce4.webp' /></p><p>

சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய பேரணி, முல்லைத்தீவு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது.</p><p></p><p>
</p><p>


இதன்போது சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
பேரணியின் நிறைவில், சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.</p><p>



இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரிகள், சிறார்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T11:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-explained-country-about-government-s-lies-1787828129"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-explained-country-about-government-s-lies-1787828129</id>
            <summary type="text">இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>மேலும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
 

அனுராதபுரம் மாவட்டத்தின் மெதவச்சிய தொகுதியின் ரம்பேவ பகுதியில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் ஊக்குவிப்பு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9402631a-ecdc-4819-9901-b60f77f14c55/26-6a9017a309e8d.webp' /></p><p>

 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானது என்றும், இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசின் கொள்கை பொய் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
</p><p>
 

இன்றைய அரசாங்கம் பொய்கள் மற்றும் அப்பட்டமான ஏமாற்றங்களின் மீது இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி நெல் சாப்பிட்டு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 150 தருவதாகக் கூறியபோதிலும், இன்று அது ரூ. 120 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
 

மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கார் வழங்குதல் என உறுதியளித்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367"></link>
            <id>https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367</id>
            <summary type="text">&amp;nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a9cd9f-45e7-48fa-9b93-404d63ee60ec/26-6a8fda10ab4aa.webp' /></p><h2>இருக்க வசிப்பிடமின்றி&nbsp; வீதிக்கு வந்த&nbsp; பெற்றோர்கள்</h2><p> மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.</p><p></p><p> 

அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.</p><p>

குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T10:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள திடீர் வெள்ளம் ; காணாமல் போனவர்களில் இலங்கையர்கள் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-flash-floods-no-sri-lankans-among-missing-1787826461"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-flash-floods-no-sri-lankans-among-missing-1787826461</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, தற்போது மொத்தம் 644 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினரும், 127 நேபாள நாட்டவரும் அடங்குகின்றனர்.
</p><p>


காணாமல் போன வெளிநாட்டினரில் இந்திய நாட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af12c18-771d-42a7-9abd-936d87593199/26-6a90111faae1f.webp' /></p><p>



மேலும், 65 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 51 மலேசியர்கள், 35 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 25 கனேடியர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
</p><p>


அத்துடன், சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா 8 பேரும், லாட்வியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தலா 6 பேரும், ஜப்பான் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த தலா 5 பேரும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த தலா 3 பேரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதேவேளை, இத்தாலி, அயர்லாந்து, கஜகஸ்தான், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவரும், பெலாரஸ், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், செர்பியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் காணாமல் போயுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுக்களும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நேபாள சுற்றுலா திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[45,000 றோஜாக்கள்.... காதலை சொல்லி இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174"></link>
            <id>https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174</id>
            <summary type="text">&amp;nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a649fa70-c782-4c27-b13e-3a55fcef9141/26-6a9008301c494.webp' /></p><h2>இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்</h2><p>
</p><p>
ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>
காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>

இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T10:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி வாவியில் போனியை கொடூரமாகத் தாக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-brutally-attacked-pony-ride-at-gregory-lake-1787822591"></link>
            <id>https://jvpnews.com/article/youth-brutally-attacked-pony-ride-at-gregory-lake-1787822591</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


போனியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதுடைய இளைஞரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர் நுவரெலியா ஸ்ட்ராபத் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca953f6-3827-457b-88af-1c440be33206/26-6a90020133041.webp' /></p><h2>உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவை</h2><p>
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, கிரகரி வாவிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>


 உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவையில் ஈடுபட்டு வரும் நடத்துநர்கள், தனிநபர் ஒருவரின் செயல் காரணமாக அனைத்து போனி நடத்துநர்கள் மீதும் தவறான கருத்து ஏற்படுவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



விலங்குகளின் சுகாதாரம், உணவு, ஓய்வு மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பில் தெளிவான தரநிலைகளை அறிமுகப்படுத்தி, போனி சவாரி சேவைகளை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-police-driver-suspended-for-drug-use-1787821542"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-police-driver-suspended-for-drug-use-1787821542</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் விபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் விபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (26) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கடந்த 24ஆம் திகதி இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ebb3e1-9ef1-431a-a28b-7700ed6d2f91/26-6a8ffde7923ab.webp' /></p><h2>ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்து</h2><p>
</p><p>


இதன்போது மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில், ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

. </p><p>இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரின் ஒரு கால் முறிந்ததுடன், அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.</p><p></p><p>
</p><p>


விபத்தைத் தொடர்ந்து பொலிஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். </p><p>பின்னர் கடந்த 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்தார்.</p><p>



எனினும், மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் குறித்த பொலிஸ் சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த சாரதியை உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்; வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/up-councillors-pledged-to-share-the-bribe-money-1787820262"></link>
            <id>https://jvpnews.com/article/up-councillors-pledged-to-share-the-bribe-money-1787820262</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை தங்​களுக்​குள் நேர்மையாக பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாகி உள்ளது. </p><p>
 

 வெளியான காணொளியில் , ஒரு​வர் வாட்​டர் பாட்​டிலில் உள்ள கங்கை நீரை அங்​குள்ள மற்ற நபர்​களின் கைகளில் ஊற்​றுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94306c3-76ea-48db-ad8c-6f93a6c0ae5f/26-6a8ff8e75de97.webp' /></p><h2>&nbsp;கங்கை நீரின் மீது சத்​தி​யம்</h2><p> </p><p>அதன் பிறகு அவர் “மாநக​ராட்​சிக்கு கிடைக்​கும் பணம் 60 கவுன்​சிலர்​களுக்​கும் சமமாகப் பகிரப்​படும். குழு​வில் உள்ள யாருக்​காவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அனை​வரும் ஒற்​றுமை​யாக அவருக்கு ஆதர​வாக நிற்போம்” என சத்​தி​யம் செய்​கிறார்.</p><p></p><p>
</p><p>

அதைத் தொடர்ந்து மற்ற அனை​வரும் அதே வாக்​கி​யங்​களை மீண்​டும் கூறி சத்​தி​யம் செய்​கின்​றனர். மேலும், அந்த வீடியோவில் சத்​தி​யத்தை மீறிய ஒரு​வரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்​பெற்​றுள்​ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Yogi Adityanath ji should take immediate action against councillors who are openly talking about corruption, rising above party politics and acting against such conduct regardless of which party holds the majority.<br><br>In Shahjahanpur, Uttar Pradesh, municipal councillors reportedly… <a href="https://t.co/MQd9V4zJi1">pic.twitter.com/MQd9V4zJi1</a></p>&mdash; The Frustrated Indian (@FrustIndian) <a href="https://x.com/FrustIndian/status/2092255366788608158?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இந்த வீடியோ கவுன்​சிலர்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​களை கிளப்​பி​யுள்​ளது.

இது தொடர்​பாக மாநக​ராட்சி ஆணை​யர் சவும்யா குரு​ராணி , “இந்த வீடியோ 2025 நவம்​பரில், முந்​தைய மாநக​ராட்சி ஆணை​யர் பதவி​யில் இருந்த காலத்​தில் பதிவு செய்யப்​பட்​ட​தாகவும், எனினும் அது குறித்து விசாரணை தொடங்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் வளத்தைப் பாதுகாக்க புதிய முயற்சி ; தமிழர் பகுதியில் உருவாகும் பவள அருங்காட்சியகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-initiative-to-protect-marine-resources-1787819808"></link>
            <id>https://jvpnews.com/article/new-initiative-to-protect-marine-resources-1787819808</id>
            <summary type="text">திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலங்கையின் கடல் சூழலியல் அமைப்புகள் தொடர்பில் கற்றறிந்து, ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த மையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20e5b519-dfa8-4fdf-856f-d897f4718ace/26-6a8ff721856a8.webp' /></p><p>அதன் பின்னர், பவளப் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்க நடவடிக்கைகளுடன், பல்வேறு செயற்பாடுகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
பவள இனங்கள், கடல் சூழலியல் அமைப்புகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் தொடர்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தளமாகவும், பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையமாகவும் இது செயற்படவுள்ளது.</p><p>

கடல் உயிரினப் பல்வகைமையைப் பாதுகாப்பது, கடல் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பது மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>
மேலும், நாட்டின் நிலையான சுற்றுச்சூழல் கொள்கையின் கீழ், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற கடல் உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கையின் கோர தாண்டவத்தில் 1000 பேரை காணவில்லை; நேபாள வெளியுறவு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-missing-in-floods-nepal-foreign-minister-1787818908"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-missing-in-floods-nepal-foreign-minister-1787818908</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.</p><p>

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4f13ae-f253-40ab-a065-afa9bc84b357/26-6a8ff39e57ad7.webp' /></p><h2>300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை&nbsp;</h2><p> </p><p>300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேபாள நாட்டின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 476 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை ஆய்வுக்கு உட்பட்டது

வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ”ரசுவா பகுதியில் இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p></p><p> </p><p>ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. தற்போது அவர்களில் பலர் காணாமால் போயுள்ளனர். இந்த பேரிடரின் முழு அளவை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்.</p><p>

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 300 இந்தியர்கள் - இவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்ரீகர்கள் - காணாமால் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><p> </p><p>அவர்களைத் தொடர்பு கொள்ள அரசாங்கம் முயன்று வருகிறது. வெளிநாட்டினரில் சுமார் 500 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.</p><p> இந்திய அரசு ஏற்கனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துக்கு துணை நிற்குமாறும், நாடு தன்னைத்தானே மீட்டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தருமாறும் நாங்கள் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.</p><p></p><p> </p><p>உடனடி நிவாரண நடவடிக்கைகள் மட்டுமல்லாது, நேபாளத்துடன் உலகம் தொடர்ந்து இணைந்திருப்பதும் நாங்கள் மீண்டு வர மிக முக்கியம்.

கடந்த 2015ல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகும் நாங்கள் வலிமையுடன் மீண்டு வந்தோம். நேபாளம் தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும்.” என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-27T08:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘யாழ் டிங்கர்ஸ்’ அணியின் உரிமையாளராக இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரண]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/madheesha-becomes-the-owner-jaffna-tinkers-team-1787817694"></link>
            <id>https://jvpnews.com/article/madheesha-becomes-the-owner-jaffna-tinkers-team-1787817694</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, தனது முதல் விளையாட்டு முதலீடாக ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்.
தனது நீண்டகால ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, தனது முதல் விளையாட்டு முதலீடாக ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்.</p><p>
</p><p></p><p>தனது நீண்டகால மேலாளரும் வர்த்தக கூட்டாளருமான அமில கலுகலேவுடன் இணைந்து இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ள மதீஷ பதிரண, அணியின் நிர்வாகப் பங்காளராக அமில கலுகலேவை நியமித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbb590d-2a11-49f7-a3b1-596139e5ce94/26-6a8feedfe8b73.webp' /></p><p>



‘சிலோன் பிக்கிள் லீக்’ போட்டியில் ‘யாழ் டிங்கர்ஸ்’ என்ற பெயரில் அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலம் பிக்கிள்போல் விளையாட்டில் அணிக்கான தனித்துவமான போட்டி அடையாளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>


இதுகுறித்து மதீஷ பதிரண தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு அணி அல்ல. நான் உண்மையாக நம்பும் ஒரு எண்ணக்கரு. யாழ் டிங்கர்ஸ் அணியை இரசிகர்கள் தங்களுடைய அணி என பெருமையுடன் அழைக்கும் வகையில் உருவாக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
</p><p>


அணியின் மூலோபாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அமில கலுகலே முன்னெடுக்கவுள்ளார்.
</p><p>


எதிர்வரும் சிலோன் பிக்கிள் லீக் ஏலத்திற்காக யாழ் டிங்கர்ஸ் அணி தயாராகி வருவதுடன், சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை உருவாக்குவதிலும் இரசிகர் சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-wise-visa-interviews-us-embassies-suspended-1787816351"></link>
            <id>https://jvpnews.com/article/world-wise-visa-interviews-us-embassies-suspended-1787816351</id>
            <summary type="text">&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p></p><h2>காலவரையின்றி நிறுத்தம்</h2><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அதேசமயம் நிறுத்தப்பட்ட நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை</p>]]></content>
            <updated>2026-08-27T07:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கி நபர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-dies-drowning-sea-at-dickwella-galle-1787815833"></link>
            <id>https://jvpnews.com/article/person-dies-drowning-sea-at-dickwella-galle-1787815833</id>
            <summary type="text">&amp;nbsp; காலி திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலி திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.

குறித்த நபர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b107ddb-c061-4217-a7ef-a8f32f691b36/26-6a8fe79b4eeb2.webp' /></p><p>

மேலும், இச் சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T07:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்...ஆய்வாளர்கள் எச்சரிக்கை! பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092"></link>
            <id>https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை நேபாள மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/066b13b1-5e17-424d-9b0c-24a65b2bac56/26-6a8fcd466e657.webp' /></p><p> </p><p>

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2>&nbsp;நேபாளத்தை புரட்டிப்போட்ட இயற்கை&nbsp; பேரழிவு</h2><p> </p><p>

காத்மாண்டுவில் இயங்கி வரும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

நேபாள-சீன எல்லைக்கு அருகே ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு ஒன்று இன்னும் நீங்காமல் இருக்கிறது. பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் இந்த அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. </p><p>இது திடீரென உடைந்தால் ஆற்றில் இரண்டாவது முறையாக பெரும் வெள்ளம் ஏற்படும். 

இதனால் போட் கோசி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

ஏற்கெனவே முதல் வெள்ளத்தில் சிக்கி 150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. 

தற்போது இரண்டாவது வெள்ள அபாயம் இருப்பதால், சீன எல்லையில் உள்ள ஜலாங் துறைமுகப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. </p><p>

மேலும் நுவாகோட், தாடிங் போன்ற கீழ் நிலை மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலை பகுதிகளில் இத்தகைய திடீர் வெள்ளப்பெருக்குகள் மற்றும் பனிச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.</p><p></p><p>

 நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை தாண்டிய முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது இத்தகைய பேரிடர் காலங்களில் பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். </p><p>

இப்போதுதான் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:49:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-panels-capacity-300-kw-temporarily-service-1787812983"></link>
            <id>https://jvpnews.com/article/solar-panels-capacity-300-kw-temporarily-service-1787812983</id>
            <summary type="text">இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p>

மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், மின்சார விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26e92e6a-a710-45e0-ae31-5eab07eda870/26-6a8fdc7915282.webp' /></p><p>இந்த காலப்பகுதியில் குறித்த திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.</p><p>

இந்நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட சூரிய மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பயனாளர்கள் தேவையான கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரம்&amp;nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரம்&nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f40fe7-1944-42e7-9bf3-34ad30ea291a/26-6a8fd332b9336.webp' /></p><p></p><p> </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

 விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T06:00:45+00:00</updated>
        </entry>
    </feed>
