<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-13T12:48:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் உயிருக்கும் உத்தரவாதமில்லை; எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்; ஜனாதிபதி அநுர குமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-am-ready-to-face-any-challenge-president-anura-1786622496"></link>
            <id>https://jvpnews.com/article/i-am-ready-to-face-any-challenge-president-anura-1786622496</id>
            <summary type="text">&amp;nbsp; தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91956206-8a9f-49f4-a969-9c16127e3ab3/26-6a7db33451d41.webp' /></p><h2>நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன்</h2><p> இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

"எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். </p><p>அடுத்ததாக உபுல் அவர்கள் குறிப்பிட்ட சவால், அதாவது இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் காரணமாக மற்றைய ஜனாதிபதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களுக்கும் செல்ல வேண்டி வரலாம் என்பதாகும்.</p><p></p><p> </p><p>நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன்.

 நான் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அல்ல. அதேபோன்று, இந்த மாற்றத்தைச் செய்வதற்காக அந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ள மனிதன். </p><p>சவால் ஏதுமின்றி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மாற்றம் எப்போதும் சவாலை எதிர்கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது." 

"சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p> </p><p>எனது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இருப்பினும் விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன அல்லவா? அதில் உயிர் ஆபத்து இருக்கிறது என்பதை நான் அறிவேன். </p><p>

ஆனால், ஓர் சவாலை எதிர்கொள்ளாமல் எதனையும் மாற்றியமைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதனால் அந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்.</p><p></p><p> </p><p>அந்த சவாலின் காரணமாக எனது பதவி அற்றுப்போகுமாயின், அதை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகிச் செல்ல நான் தயார். அதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன்." என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-13T12:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு; சடலத்தின் அருகே தூக்கு கயிறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-found-dead-while-asleep-in-batticaloa-1786617351"></link>
            <id>https://jvpnews.com/article/person-found-dead-while-asleep-in-batticaloa-1786617351</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f804fd6-2bfb-4ef2-8d15-4d6565606aaa/26-6a7d9e094053b.webp' /></p><p>
</p><p>
 சம்பவ இடத்திற்கு சென்ற பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.</p><p></p><p>
</p><p>
 சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்தில் குறித்த கயிற்றின் ஒரு பகுதி காணப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T11:44:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c41275-2ac9-4a11-b3af-bfbe0ad50d92/26-6a7da008376f2.webp' /></p><h2>தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள்</h2><p>
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-13T11:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியை கடித்துகுதறிய பிட்புல் நாய்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pit-bull-mauls-couple-buy-a-house-punjab-1786620299"></link>
            <id>https://jvpnews.com/article/pit-bull-mauls-couple-buy-a-house-punjab-1786620299</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினர் மீது ‘பிட்புல்’ ரக நாய் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினர் மீது ‘பிட்புல்’ ரக நாய் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கணவன், மனைவி இருவரும் தாங்கள் வாங்குவதற்காகத் தெரிவு செய்திருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37326cdc-67df-452f-9031-9f09e9957461/26-6a7da98ca3e4e.webp' /></p><h2>திடீரென வெளியே பாய்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கிய&nbsp;நாய் </h2><p>
</p><p>
 இதன்போது, வீட்டின் வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தியதைத் தொடர்ந்து, வீட்டுக்குள் இருந்த பிட்புல் நாய் திடீரென வெளியே பாய்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், அவர்களை நாயிடமிருந்து மீட்கப் போராடியுள்ளனர். எனினும், அதற்குள் நாய் இருவரையும் உடலின் பல பகுதிகளிலும் கடித்துக் குதறியுள்ளது.
</p><p>

காயமடைந்த இருவரும் மீட்புப் படையினரால் உடனடியாக பாட்டியாலாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிட்புல் என பொதுவாக அழைக்கப்படும் நாய் வகைகள் வலுவான உடல் அமைப்பு மற்றும் அதிக தாடை வலிமையைக் கொண்டவையாகும்.</p><p></p><p> </p><p>அமெரிக்கன் பிட்புல் டெரியர், அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷயர் டெரியர் உள்ளிட்ட ரகங்கள் இந்த வகைப்பாட்டுடன் தொடர்புடையவை.

எனினும், நாய்களின் நடத்தை அவற்றின் இனத்தை மட்டுமே சார்ந்தது அல்ல எனவும், முறையான சமூகப் பழக்கம், பயிற்சி, பராமரிப்பு மற்றும் உரிமையாளர்களின் பொறுப்புணர்வு ஆகியவை முக்கியமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T11:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463"></link>
            <id>https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3161b034-53e5-4aaa-a109-81c1890b7716/26-6a7d92c1bbf35.webp' /></p><p></p><h2>ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும்</h2><p> </p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06758374-5d10-487e-928b-7b09a1badb6b/26-6a7d92c29ec61.webp' /></p><p><b> 

வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல்</b>. </p><p><b>

அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல். </b></p><p><b>

நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல். </b></p><p>

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

"இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும். </p><p>எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80%க்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என்றார்.</p><p>

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T10:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் மூலம் வீட்டு மோசடி; இரண்டு நிறுவனங்களை நடத்தியவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facebook-based-housing-scam-fraud-alert-1786616004"></link>
            <id>https://jvpnews.com/article/facebook-based-housing-scam-fraud-alert-1786616004</id>
            <summary type="text">&amp;nbsp; தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர், இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff487bd-d092-44bc-a1a4-acc04096993d/26-6a7d98c58cad3.webp' /></p><p>
</p><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018"></link>
            <id>https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.
</p><p>
போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8cf796-c1f6-4331-b0c9-fa3bff8b2c81/26-6a7d8d1c6f6a3.webp' /></p><h2>10 ஆண்டுகால காதல்</h2><p>
 இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். 

இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88b0de1-4e50-4103-a291-cec792964d64/26-6a7d8d1d27d3b.webp' /></p><p> 
அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர்.</p><p>நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p>இன்னிலையில்&nbsp;&nbsp; கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண புகைப்படங்கள் இணையங்க்களில்&nbsp; வைரலாகி வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:21:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவை கொண்டாட ATM அட்டை திருடிய 26 வயது யுவதி! இலங்கையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408"></link>
            <id>https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408</id>
            <summary type="text">&amp;nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவதி ஒருவர் அத்துருகிரியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் போது, குறித்த வர்த்தகரின் கட்டிட நிர்மாணப் பணித்தளத்தில் மேசனாகப் பணியாற்றிய அவரது காதலனின் திட்டம் மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdc9248-39d6-4ec6-81e8-9cb48b193c35/26-6a7d6791acbaa.webp' /></p><h2>வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவு</h2><p>

கொழும்புக்கு வரவிருந்த தனது காதலிக்கு ஒரு இரவு தங்குவதற்கு இடமளிக்குமாறு அந்த மேசன் வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>அதற்கு வர்த்தகர், "தான் வீட்டில் தனியாக வசிப்பதால், அந்த யுவதியுடன் அவரது தாயாரும் வந்தால் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து, மேசன் தனது மனைவியையும் மனைவியின் தாயாரையும் வர்த்தகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வர்த்தகரின் ATM அட்டைகளைத் திருட காதலிக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
மறுநாள் காலை, இருவரும் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு ATM அட்டைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி, குறித்த மேசனைச் சந்தித்துள்ளனர்.</p><p> பின்னர், அந்த ATM அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் 50,000 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, இருவரும் திருமணத்தைப் பதிவுசெய்து கொண்டு, வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவைக் கொண்டாடியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், வெலிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபரான மேசன், திறந்த பிடியாணை ஒன்றின் அடிப்படையில் வெலிகமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். </p><p>

அவரைக் கைதுசெய்த சந்தர்ப்பத்தில், அவரிடம் சட்டவிரோதப் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாத்தறை பகுதிக்குச் சென்ற யுவதி, திருடிய ATM அட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணத்தைப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தின் மூலம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் தங்க நகைகளையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அத்துருகிரியப் பொலிஸார், வங்கிக் கிளைகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகநபரான யுவதியை அடையாளம் கண்டு கைது செய்தனர். </p><p>

கைதான ஹம்பாந்தோட்டை, சிரிபுரப் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி ஒரு குழந்தையின் தாய் என கூறியுள்ள பொலிஸார் மீலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் வேலைவாய்ப்பு ; ஏமாற்றிய இருவருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341"></link>
            <id>https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 சந்தேகநபர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b102a5-48d7-4814-bfe7-0361fc39c431/26-6a7d82a73c438.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் படலமா? பேக்கோ சமனின் தாய் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/f-revenge-murder-of-backhoe-saman-mother-1786608742"></link>
            <id>https://jvpnews.com/article/f-revenge-murder-of-backhoe-saman-mother-1786608742</id>
            <summary type="text">&amp;nbsp; பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற பேக்கோ சமனின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற பேக்கோ சமனின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரண்டேனியே சுத்தா குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea1fc2cf-70c9-4edf-832c-0811b8a68062/26-6a7d7c6829de0.webp' /></p><h2>இந்தோனேசியாவில் கெஹல்பத்ர பத்மேவுடன் பேக்கோ சமந் கைது</h2><p>
</p><p>
இந்தோனேசியாவில் கெஹல்பத்ர பத்மேவுடன் பேக்கோ சமந் கைது செய்யப்பட்ட பின்னர் , அவரும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
</p><p></p><p>கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் கொலைக்காகவும் பேக்கோ சமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், மாத்தறையின் பொல்வத்த, தம்பஹால பகுதியில் இன்று காலை (13)ஊருபொக்க பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
நேற்று (12) மாலை சுமார் 6 மணியளவில், உலஹித்தியாவ, மித்தெனியவின் படலங்கல கெதர பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p></p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச் சூடு சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. 9 மி.மீ. ரக துப்பாக்கியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பில் துப்பாக்கிதாரிகள் சுமார் 7 முறை சுட்டபின்னர் துப்பாக்கிதாரிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேகொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமியம் லீற்றருக்கு பத்து ரூபாய்; புதிய திட்டம் அறிமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874"></link>
            <id>https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f425b4a1-1d07-4b64-9fc8-4130b0e7d02e/26-6a7d6d4b90313.webp' /></p><h2>15 கிராமங்களில் சோதனை முறை</h2><p> 

இந்நிலையில் அங்கு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் இருந்து ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> </p><p>

முதற்கட்டமாக, 15 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நாளாந்தம் சுமார் 500 லீற்றர் கோமியம் சேகரிக்கப்படுகிறது. 

இந்த கோமியத்தை பயன்படுத்தி, இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாய உரங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இந்த சோதனை வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என உபி அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T07:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணுக்குத் தொடர் தொல்லை; இளைஞர்கள் மீது தீவைப்பு; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015"></link>
            <id>https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015</id>
            <summary type="text">&amp;nbsp; புலத்சிங்ஹல&amp;nbsp; &amp;nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புலத்சிங்ஹல&nbsp; &nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், திருமணமான தம்பதியினர் உட்பட மூவர் புலத்சிங்ஹல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கடந்த 10-ஆம் தேதி இரவு நடந்த இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் புலத்சிங்ஹலவின் பஹல வெல்கம&nbsp; (Pahala Welgama) பகுதியைச் சேர்ந்தவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da40b13d-edb2-4f50-b45c-28e1bf112461/26-6a7d71c10869a.webp' /></p><h2>&nbsp;கணவருடன்&nbsp; சென்று கொண்டிருந்தபோது&nbsp;பெண்ணுக்குத் தொல்லை</h2><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதான தம்பதியினரும், அந்தப் பெண்ணின் 19 வயதுடைய சகோதரரும் அடங்குவர்.

காவல்துறை விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட தம்பதியினரில் உள்ள பெண் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். </p><p>

10-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கி கணவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்ட அந்த இரு இளைஞர்களும் அப்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர்.</p><p></p><p>

 இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த இளைஞர்களைக் கண்டித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் வந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அப்பகுதிவாசிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அந்த இளைஞர்கள் மீது வீசி தீ வைத்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் முதலில் ஹொரணை (Horana) ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
 இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சந்தேக நபர்களின் வீட்டைத் தாக்கிச் சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இன்னிலையில் சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்ஹல பொலிஸர மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T07:24:35+00:00</updated>
        </entry>
    </feed>
