<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T22:40:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634</id>
            <summary type="text">சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01bbe79e-c230-4b04-8b1c-c84e534c0a8c/26-6a98a1339d59a.webp' /></p><h2>சந்தைப் பெறுமதி</h2><p>

சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

</p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T22:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலை உண்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982"></link>
            <id>https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982</id>
            <summary type="text">கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9a9bc61-644f-4956-a5e5-3f06ecc40c98/26-6a9896d86b853.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>



கரடியானா குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள், ஆற்றில் மனித சடலம் ஒன்று கிடப்பதையும், அதனை முதலை ஒன்று இழுத்துச் செல்வதையும் அவதானித்துள்ளனர். </p><p>இதையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், சடலத்தை முதலை ஒன்று உண்டு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>



இதன்பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலை சடலத்தைப் பிடித்திருந்ததால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.</p><p>



இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-02T21:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஐ ஆராய பூரண நீதியரசர் ஆயம் நியமிக்கப்படாமைக்கு CLA கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435"></link>
            <id>https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வௌியிட்டுள்ளார். </p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக&nbsp; கலந்துகொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35381f9d-1174-44d9-96c1-b563d3c3a7d9/26-6a9890cd685d8.webp' />&nbsp;</p><h2>அரசியலமைப்பு&nbsp;</h2><p> </p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார். </p><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வௌியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

முக்கியமான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பூரண ஆயத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். </p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p> 

இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (02) நிறைவு செய்தது. </p><p>

அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.</p><p></p><p> 

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது. </p><p>

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. </p><p>

அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T21:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005</id>
            <summary type="text">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031cf9d6-e16b-4915-9a6a-18a27c0c6bd3/26-6a9877af6947c.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T20:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-year-old-boy-dies-in-illegal-electric-fence-1788373865"></link>
            <id>https://jvpnews.com/article/14-year-old-boy-dies-in-illegal-electric-fence-1788373865</id>
            <summary type="text">சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">&nbsp;செவ்வாய்க்கிழமை (01) இரவு மின்சாரம் தாக்கிய நிலையில், சிறுவன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130fe0a7-95f6-481a-b6e7-77eadb556a16/26-6a986b6ae9be5.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிரிபுர, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் ஒருவர் தனது காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, அதற்கு தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



இந்நிலையில், வேலிக்கு அருகில் சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்வேலியை அமைத்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் சிரிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T19:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302</id>
            <summary type="text">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aefc306-c1d3-4ca0-bb42-f76d9f6ece68/26-6a987107f36be.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆடை வியாபாரம்&nbsp;</h2><p style="text-align: justify; "> இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.</p><p style="text-align: justify; "> வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். </p><p style="text-align: justify; ">தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T18:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-colombo-mayor-s-son-arrested-1788371852"></link>
            <id>https://jvpnews.com/article/former-colombo-mayor-s-son-arrested-1788371852</id>
            <summary type="text">கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கட்டடக் கட்டுமானத் திட்டமொன்றுக்குச் செலுத்த வேண்டியிருந்த சுமார் 36 மில்லியன் ரூபாய் பணத்தை செலுத்தத் தவறியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7aab2e-13b6-48a9-a58c-30b9e5ec1b81/26-6a98638e1fff3.webp' /></p><p>&nbsp;கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-02T17:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca6bf7e-c120-4da4-b678-4ef547b230b6/26-6a9859e1ed5da.webp' /></p><h2 style="text-align: justify; ">வெட்டுப்புள்ளி</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T17:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் பிரதமரை சந்தித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861"></link>
            <id>https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் கலந்துகொள்வதற்காகப் பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். </p><p style="text-align: justify; ">

இந்த சந்திப்பானது திம்பு நகரில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96926090-d87e-4b4a-830d-3d5885e9c06c/26-6a9853f68e18b.webp' /></p><h2 style="text-align: justify; ">இருதரப்பு உறவுகள்</h2><p style="text-align: justify; ">இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பரந்த துறைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதன்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமிக்க பல்வேறு துறைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T17:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><h2>சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை</h2><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:40:13+00:00</updated>
        </entry>
    </feed>
