<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T18:36:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணச்சீட்டு பெற முடியவில்லையா? இணையத்தில் பெற புதிய வசதி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649"></link>
            <id>https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649</id>
            <summary type="text">ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 'pravesha' அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042706c9-37d3-437c-8e1b-d0c676f201ec/26-6aac31137e433.webp' /></p><p>இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று (17) வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. </p><p>

ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.</p><p> 

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.</p><p> 

ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இதன் காரணமாக இன்று காலை ரயில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.</p><p> 

பணிப்புறக்கணிப்பு அமுலில் உள்ள போதிலும், இன்று (17) காலையைப் போன்றே பிற்பகலிலும் வழக்கம்போல் ரயில்களை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவு விவகாரம் ; கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248</id>
            <summary type="text">சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>முன்னதாக அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியானதாகக் கூறப்படும் மேன்முறையீட்டு தீர்ப்பிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c677df5-4fba-41c5-9a1b-2abb6322bfdf/26-6aac2f8280714.webp' /></p><p>சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் சவுதி அதிகாரிகளால் அனோஜன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னைய செய்திகள் தெரிவித்திருந்தன. </p><p>அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆரம்ப தண்டனையில் சிறைத்தண்டனை, 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த நிலையில், தண்டனையை குறைப்பதற்காக சட்ட ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தகைய முயற்சிகளுக்கு மத்தியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அனோஜனின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, அனோஜனுக்காக அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது சவுதி அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படும் வரை, மரண தண்டனை குறித்த தகவலை “விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்ற அடிப்படையிலேயே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.</p><p>

முன்னதாக அனோஜனுக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் தொடர்பான தகவலை இலங்கைத் தூதரகம் குடும்பத்தினருக்கு அறிவித்ததாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் சாமி அம்மாவின் அருள்தேடி வந்த லிமினி ராஜபக்‌ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008"></link>
            <id>https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு கேட்பதற்காக நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ அவர்கள் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p></p><p>இந்நிகழ்வில் அன்னாரும் அவருடைய குடும்பத்தினரும் சாமி அம்மாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866e67e3-9f68-409f-8163-194705de30d3/26-6aac1721d472e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T16:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு ; நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e05c736-7e38-4daf-a42b-d22c0dc8eeaa/26-6aac1a8b4b751.webp' /></p><p>

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[$1 பில்லியன் பணத்தை வெளியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966"></link>
            <id>https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தனியார் வங்கி அதிகாரிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதன்படி ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7825bd65-108d-49f4-a76a-7f28fae81e20/26-6aac131041a66.webp' /></p><p>எனினும், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். </p><p>

மேலும், குறித்த வங்கி அதிகாரிகள் அவர்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடை செய்து மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் ஜிப்ரி என்ற வர்த்தகரின் பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் மற்றொரு சந்தேகநபரை வரும் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் நடத்தியவரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835"></link>
            <id>https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p> 

இந்தக் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.</p><h4>மேலதிக விசாரணை</h4><p> </p><p>

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் மேற்பார்வையில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f7639b-3448-4472-8d9c-dfbb39955162/26-6aac0ea5cf324.webp' /></p><p>இவ்வாறான பின்னணியில் கைது செய்யப்பட்ட, கைக்குண்டு தாக்குதலை நடத்திய நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார். </p><p>

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 2025 ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

பின்னர் அவர் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி இரத்மலானையில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். </p><p>

அதற்காக போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு 5 இலட்சம் ரூபாய் பணமும் 10 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். </p><p>

அதனைத் தொடர்ந்து தெஹிவளை வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல் நடத்தும் ஒப்பந்தத்தையும் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோரே தன்னிடம் ஒப்படைத்ததாக அவர் கூறியுள்ளார். </p><p>

அதன்படி தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குரிய வீட்டைக் காட்டுவதற்காக அதில் மற்றொரு நபர் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0020574c-7425-4946-bb24-941aca49ef06/26-6aac0ea6a09cb.webp' /></p><p>இருப்பினும், அந்த நபர் தனக்குக் காட்டியது தவறான வீடு என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p>

குறித்த தாக்குதலின் பின்னர் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை வழங்கி, பிபிலை பகுதிக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> 

பிபிலையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவரிடம் நடத்திய விசாரணையில், அதற்காக அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் இருபதாயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரியளவான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விடம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-illegal-gem-mining-site-raided-1789652352"></link>
            <id>https://jvpnews.com/article/major-illegal-gem-mining-site-raided-1789652352</id>
            <summary type="text">காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டத்தில் உள்ள கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டத்தில் உள்ள கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடமொன்றை, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர். </p><p>

முற்றுகை நடவடிக்கையின் போது அங்கு இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3001e1-b0fb-4490-b50b-f975a464144d/26-6aabed820efa5.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோத நடவடிக்கை</h2><p> </p><p>

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடிமுடக்கப்பட்ட இந்த நிலத்தில், கடத்தல்காரர்கள் சுமார் 100 பேரை ஈடுபடுத்தி மீண்டும் இரவும் பகலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கால்வாயை மறித்து பெரிய குழிகளைத் தோண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த மோசடி காரணமாக அப்பகுதியின் சூழியல் அமைப்பிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

முற்றுகையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், கால்வாயை மறித்து அமைக்கப்பட்டிருந்த குழிகளை உடைத்தெறிவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T14:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத் தகராறு ; மனைவியின் மூக்கை கடித்துக் குதறிய கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-dispute-husband-bites-wife-s-nose-1789641182"></link>
            <id>https://jvpnews.com/article/family-dispute-husband-bites-wife-s-nose-1789641182</id>
            <summary type="text">&amp;nbsp; குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, தெலங்கானா மாநிலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, தெலங்கானா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p> சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

, மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிசந்தர் என்பவருக்கும், கொட்டபள்ளியைச் சேர்ந்த மமதா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c787c168-8ac1-479a-b070-99a6fa5d647b/26-6aabc1dff2aeb.webp' /></p><h2>தொடர் குடும்பத் தகராறுகள்</h2><p> இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிசந்தர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
</p><p>
இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறுகள் மற்றும் மனவேதனை காரணமாக, மமதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோட்டபள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.</p><p></p><p>
</p><p>
மனைவியை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மணிசந்தர் தனது மாமனார் நாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமனார் நாராயணனை மணிசந்தர் கட்டையால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ளார். தனது தந்தையைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்த முயன்ற மனைவியின் மீது ஆத்திரமடைந்த மணிசந்தர், திடீரென அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளார்.</p><p></p><p> </p><p>இதில் பலத்த காயமடைந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மமதா அலறித் துடித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த மமதா&nbsp; மருத்துவமனையில்&nbsp; தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>
 பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261"></link>
            <id>https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261</id>
            <summary type="text">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.

கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 42 வயதுடைய தோட்டத் தொழிலாளர் ஒருவர் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6434489-454a-4178-9171-6a521608d79a/26-6aabe93f8185b.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p style="text-align: justify; ">
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, சங்குவாரி மேல் பிரிவு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றுமொரு ஆண் தொழிலாளரும் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், கடந்த வாரமும் கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இதனால், தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து காடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T14:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் ; பேருந்து நிலையத்தில் சிறப்பு பெட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032"></link>
            <id>https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c898b7b-eaa0-4c1f-8050-29284fa09a80/26-6aabd8b9e81f0.webp' /></p><p>



பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T13:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பனின் காதலியுடன் உல்லாசம் ; இறுதியில் பட்டதாரி இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ;வீடியோவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.உல்லாசம்
இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify;">உல்லாசம்
இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da018982-4e25-4767-bd98-9a22a42c5822/26-6aabf0943b035.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p> </p><p style="text-align: justify; ">அதனை தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் தனது நண்பர்களுடன்&nbsp; நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருங்த போது&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது படி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார்.</p><p style="text-align: justify; ">அந்த வீடியோவில் நண்பர் காதலித்த பெண்ணுடன் பட்டதாரி உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. அவர்கள்வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify;">இதன்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார், யாழ்ப்பாணத்தில் சிக்கிய 07 பேர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974"></link>
            <id>https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974</id>
            <summary type="text">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளைப் பிடித்த 7 சந்தேகநபர்கள் 3 படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வடமத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பிரிவுகளால் இச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee79d687-5cfd-481c-805c-4987f405a968/26-6aabe438583e9.webp' /></p><h2 style="text-align: justify; ">கடல் அட்டைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாச்சிக்குடா, யஹப்பாறு பகுதியில் 'இ.க.க. புவனெக' படையணியினர் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி 550 கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற 3 சந்தேகநபர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினரால் குடாரப்பு கடற்கரையில் இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இரவில் சட்டவிரோதமாகச் சுழியோடி 850 கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேகநபர்கள் 2 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதானவர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T13:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரை நீரில் கரைக்க சென்ற 6 சிறுவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903"></link>
            <id>https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903</id>
            <summary type="text">கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p>தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு அருகில் உள்ள பெத்தகஞ்சர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42071bce-83fe-448f-bdf1-48b41619f276/26-6aabe008eccaf.webp' /></p><p> </p><p>ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட சிலைகளை 8 மாணவர்கள் குளத்தில் கரைக்க சென்றிருக்கிறார்கள்.
</p><p>
செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டதால் ஏரி மற்றும் குளத்தில் ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. </p><p>அந்த ஆழம் தெரியாமல் விநாயகர் சிலை கரைக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பி ஓடி வந்து ஆசிரம ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். </p><p>அதன்பின் நீரில் மூழ்கி மரணமடைந்த ஆறு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:00:30+00:00</updated>
        </entry>
    </feed>
