<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T03:32:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170"></link>
            <id>https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170</id>
            <summary type="text">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&amp;nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">கம்பளை, புப்புரஸ்ஸ&nbsp; பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf80ea4-844d-489f-855d-3802f0108554/26-6a8ce7640f684.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

குடும்பத்தினர் அனைவரும்&nbsp; வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று&nbsp; &nbsp;வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில்&nbsp; அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T01:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கிற்கு தயாரான குடும்பம்... உயிருடன் வந்த கைதி ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929"></link>
            <id>https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929</id>
            <summary type="text">நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
 

இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e95865-0b44-48a8-9de2-56979289a40c/26-6a8cee43b2109.webp' /></p><h2>இறுதிச்சடங்கு</h2><p>

 

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
 

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
 

தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் கடும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.</p>]]></content>
            <updated>2026-08-25T01:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5050b30d-4772-4669-8646-c31f08a4cf5c/26-6a8ce210b997e.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சில பகுதிகளில் செப்டம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பரு முதல் நீரிழிவு வரை... மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501</id>
            <summary type="text">&amp;nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். </p><p style="text-align: justify; ">பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f5da5-3c97-492e-a95b-bf2a88b0a8d9/26-6a8cd91760c0f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ குணங்கள்</h2><p style="text-align: justify; ">


சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்ட தொடர்ந்து உணவாக உட்கொள்ளும்போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். </p><p style="text-align: justify; ">தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
</p><p style="text-align: justify; ">


சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.



மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகின்றது. </p><p style="text-align: justify; ">100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன.</p><p style="text-align: justify; "> 



நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T23:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968</id>
            <summary type="text">இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ – சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையினர்&nbsp; மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8283d8-08e6-410b-a8fb-15b74ae534e7/26-6a8cb7bde665b.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>


வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படைக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 13 பொதிகள் சோதனையிடப்பட்டன.
</p><p>


இதன்போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புகைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்நாள் முழுவதும் யாசகம் எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366"></link>
            <id>https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார். 68 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.</p><p> 68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969e4dca-ff83-41c3-a094-f2c4f371105e/26-6a8c8a67b1daf.webp' /></p><h2>&nbsp;கோடிக்கணக்கில் பணம்?&nbsp;</h2><p>இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். </p><p>மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.</p><p> ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:31:57+00:00</updated>
        </entry>
    </feed>
