<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T01:17:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை ; 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882</id>
            <summary type="text">மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மழையுடன் கூடிய காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d58be973-5d6a-47b4-82b0-96d97b67c51c/26-6aa89c03f2678.webp' /></p><p>மேலும், பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469"></link>
            <id>https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469</id>
            <summary type="text">முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb924a7-6051-4f09-9f66-b585cedf6525/26-6aa882f6cb9e0.webp' /></p><p>

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.</p><p>

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சுமி நாராயண ராஜயோகம் ; ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072"></link>
            <id>https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது.&nbsp;வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7861c63-79af-48ef-85ad-64fd56dc2b35/26-6aa898dac436f.webp' /></p><p>இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பர் இறுதியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a06d56-92d9-48ed-a2e0-d48b50af92f9/26-6aa898da14219.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8341a78-50d4-4133-a3a8-3d9f6240ac94/26-6aa898db889ae.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e67718f3-be0b-41d6-93ea-d9b8ca112898/26-6aa898dc40f26.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்தாலும், நிதி நிலை சிறப்பாகவே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ebce32-68c0-45d2-9b38-7025b95c9934/26-6aa898dcebfc7.webp' /></p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஊடகம், மார்கெட்டிங் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841bba2d-0a1e-4ad4-b344-fcc48c08868e/26-6aa898dda82a4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T01:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பை ; ரூ.320 மில்லியன் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675</id>
            <summary type="text">கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1a35a6-6d57-4ae2-b51f-f9f326a48ce8/26-6aa8936524024.webp' /></p><p>

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘குஷ்’ ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு ; 7000 பேருக்கு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889"></link>
            <id>https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், இன்று (14) லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79990f73-9e9e-4308-ad3a-75d014484de7/26-6aa82eaad318a.webp' /></p><p>இதன்படி, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளபாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
</p><p>
சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த மையத்தின் ஊடாக 2000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி வீதியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC கொரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சுவீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sria Solutions) மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் இயங்கி வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது.</p><p>

இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
</p><p>
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்குரிய &#039;அஸ்வெசும&#039; கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டு நலன்புரிப் நன்மைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8abff56-9849-4fe9-9c59-913860015833/26-6aa851764fc28.webp' /></p><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 9,99,053 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9 பில்லினே 181 மில்லியனே 696 ஆயிரத்து 250 ரூபா நிதி வைப்புச் செய்யப்படவுள்ளது. </p><p>

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 2,13,335 குடும்பங்களுக்கு 2 பில்லியனே 120 மில்லியனே 856 ஆயிரத்து 250 ரூபா நிதியை செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இந்த நிதியை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஹுங்கல்லையில் துப்பாக்கிச்சூடு முயற்சி ; மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826"></link>
            <id>https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826</id>
            <summary type="text">அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போதிலும், துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அத்தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த வீட்டில் அந்தப் பெண் மட்டுமே இருந்துள்ளதுடன், நபரொருவர் வந்து கதவைத் தட்டியதை அடுத்து அவர் கதவைத் திறந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5480f5f9-17da-4561-89fa-c1dfa64d2617/26-6aa84dac3e4f2.webp' /></p><p>அந்தக் கணமே செயற்பட்ட அந்த நபர், பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் துப்பாக்கி இயங்கவில்லை. 

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சிறைவாசம் அனுபவித்த 'குடு நோனி' என்று அழைக்கப்படும் லியன கமகே அனோமா என்ற பெண் ஆவார். 

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். </p><p>

அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc78103-c973-484c-b2f8-bbea0f70cd24/26-6aa849590b420.webp' /></p><p> 

மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

அவிஷ்கவின் நெருங்கிய கூட்டாளியான 'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியின் மாமாவும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஒருவருமே இத்தாக்குதலை வழிநடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

சந்தேகநபர் தெஹிவளை, வனரதன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. </p><p>

அவிஷ்க குழுவின் முதன்மை கூலிப்படை கொலையாளியாக இவரே செயற்பட்டுள்ளார் என்றும், கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கின் நேரடி மேற்பார்வையில் ஒரு பொலிஸ் குழுவும், மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தலைமையில் 3 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.</p><p> 

இதன்படி, கைக்குண்டுத் தாக்குதலுக்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக அதை பழுது பாரக்கும் நிலையம் ஒன்றுக்கு ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த முச்சக்கரவண்டி களுத்துறை நாகொட பகுதியில் வைத்து திருடப்பட்டு, பின்னர் தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் வைத்து அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளமை கல்கிஸ்ஸை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தெரியவந்துள்ளது.</p><p> </p><p></p><p>அதனடிப்படையிலேயே அந்த நிலைய்த்தின் உரிமையாளரான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அத்துடன், முச்சக்கரவண்டியை அங்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, வீட்டிற்குள் கைக்குண்டை வீசிய சந்தேகநபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

வீட்டின் மீது கைக்குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் அத்திட்டிய மாந்திரிமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். </p><p>இவர், கல்கிஸ்ஸை பொது மயானத்தின் காவலாளியாக செயற்பட்ட 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை சுடுவதற்கு வந்த துப்பாக்கிச் சூட்டாளர்களுக்கு தங்குமிட வசதி அளித்துள்ளமையுடன், கடந்த ஓகஸ்ட் 01 ஆம் திகதி 'குடு அஞ்சு' என்பவனின் காசாளரை படுகொலை செய்த நபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும், இந்தச் சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் உண்மை என்னவெனில், இந்த குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளமையாகும்.</p><p> 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.</p><p> 

பாதாள உலகத்தைப் பற்றி எதுவுமே அறியாத, தாயின் குறையையும் போக்கி தங்களை வளர்த்த தந்தையுடன் ஆயிரம் கனாக்களுடன் வாழ்ந்த இரு அப்பாவி சிறுவர்களுமே இந்த குண்டுத் தாக்குதலால் தங்களின் உயிர்களை வீணாகப் பலி கொடுத்துள்ளனர்.</p><p> 

இத்தாக்குதலில் சிறுவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3bd22-66ea-4636-b722-f8350af72916/26-6aa849585065c.webp' /></p><p> </p><p>

பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத, முச்சக்கரவண்டி ஓட்டி தனது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த அந்த அன்புத் தந்தை, தற்போது ஒரு காலை இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

மனைவியும் இல்லாத சூழலில், தான் ஆசையாக வளர்த்த இரு பிள்ளைகளின் முகத்தைக் கூட கடைசி நேரத்தின் போது நேரில் பார்க்க முடியாமல், வைத்தியசாலைக் கட்டிலில் கண்ணீர் வடித்தபடி அந்தத் தந்தை தவிக்கின்றார்.</p><p>இதேவேளை, இந்த இரு சிறுவர்களின் படுகொலை தனது இதயத்தை உலுக்கிய சம்பவமாகும் எனக் குறிப்பிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ பிரான்ஸ் (Marc-André Franche) எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். </p><p>

எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இத்தகைய வன்முறைக்கு பலியாகக் கூடாது என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். </p><p>

ஒரு கிராமத்தையே அழவைத்துவிட்டு அநியாயமாகப் பிரிந்த இந்த சிறு சகோதரர்களின் இறுதிக்கிரியைகள் இன்று கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றன. </p><p>

இறுதியில்... தங்கள் உயிர் ஏன் பறிக்கப்பட்டது என்று கூட அறியாமல் விடைபெற்ற இந்த அப்பாவிச் சிறுவர்கள், இந்த சமூகம் எவ்வளவு பாதுகாப்பற்றது, பயங்கரமானது என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டு நாடே கண்ணீர் சிந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:22:07+00:00</updated>
        </entry>
    </feed>
