<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T11:35:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன்வைக்க அனுமதி கோரியும் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சாலெவின் இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942475a3-1410-430c-9061-7bf684fd4940/26-6a71cb70e6b39.webp' /></p><p>
</p><p>


இதன்போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><p>



இதையடுத்து, குறித்த இடைக்கால மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் நிலவும் வெள்ள அபாயம்; வெளியேற்றப்படும் வாவி நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854"></link>
            <id>https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.</p><p>



பெய்துவரும் தொடர் மழையினால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் , அணையின் பாதுகாப்பைக் கருதியும், நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதன் காரணமாகவும் கிரகரி வாவியின் வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4d745d-5d0a-47eb-869c-c9d02d099511/26-6a71c8bfb101b.webp' /></p><p>
</p><p>

நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.



நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம் போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474"></link>
            <id>https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.
</p><p>

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக காலை மற்றும் மாலை வேளையில் வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42da6d82-622d-4f80-a312-ec79cc543b18/26-6a71c743c1d68.webp' /></p><p>
</p><p>


நுவரெலியா - பதுளை பிரதான வீதி ,நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன .</p><p> 



இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறும் , ஆபத்தான பகுதிகளில் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pillayan-remand-extended-further-1785837907"></link>
            <id>https://jvpnews.com/article/pillayan-remand-extended-further-1785837907</id>
            <summary type="text">&amp;nbsp; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 இதன்போது, பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59423772-2def-44ad-b487-4fd4711d47a0/26-6a71b95563ef2.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 மேலும் வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T09:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/service-extension-police-officers-over-60-age-1785835380"></link>
            <id>https://jvpnews.com/article/service-extension-police-officers-over-60-age-1785835380</id>
            <summary type="text">&amp;nbsp;60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c72c9eaa-9506-4812-a708-85995adaa0b9/26-6a71af766c5b5.webp' /></p><p> </p><p>

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>

பொலிஸ் திணைக்களத்திற்குள் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த பற்றாக்குறையை முகாமை செய்து, குறிப்பாகக் கீழ்நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605</id>
            <summary type="text">&amp;nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&amp;nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&amp;nbsp; பொலிஸார்&amp;nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&amp;nbsp; இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&nbsp; பொலிஸார்&nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp; உதயநிதி&nbsp;கைது செய்து அழைத்து செல்வதாக&nbsp; கூறப்படுகின்றமை&nbsp; &nbsp;திமுகவினரிடையே&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a88f03a-2df1-4451-b8e1-18203217d7bb/26-6a717745ecaa1.webp' /></p><p></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.</p><p>
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உதயநிதி மீது&nbsp; வழக்கு பதிவு</span></p><p> 

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.</p><p> அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.</p><p></p><p>
</p><p>
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.</p><p> எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997"></link>
            <id>https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997</id>
            <summary type="text">&amp;nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0803001-7cce-476f-98bd-fe52aa884a10/26-6a71a23eed63d.webp' /></p><p></p><p>
</p><p>
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-04T08:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் அட்டூழியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dmk-burning-of-an-effigy-of-chief-minister-vijay-1785831091"></link>
            <id>https://jvpnews.com/article/dmk-burning-of-an-effigy-of-chief-minister-vijay-1785831091</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் விஜய் தொடர்பில் அவதூறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் விஜய் தொடர்பில் அவதூறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57cbc82b-1f18-420a-a4c8-50a7f5f25b59/26-6a719eb986934.webp' /></p><p>

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை&nbsp; வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் நடிகை ரீத்து ஆகர்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c322786-6899-4cf4-bdcf-761c78d4e9e4/26-6a716fbe0a3ab.webp' /></p><h2> சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>
</p><p>
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் நடிகை ரீத்து ஆகர்ஷா ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இந்த நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக நடிகை ரீத்து ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,</p><p></p><p> இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு; 87 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


அதன்படி நேற்று (03) நிலவரப்படி, டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 86,947 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435226de-ff4c-462f-bd40-bd77c4354f3b/26-6a7193a030bd8.webp' /></p><p>
</p><p>


ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21.24 சதவீத டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.



அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17,187 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,082 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இதுவரை நாடு முழுவதும் 62 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T07:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் ஆஜராக யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர்களுக்கு அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13868831-27b5-463e-b589-8e06d9906104/26-6a719083e47dd.webp' /></p><p> 

சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> 

அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். </p><p>

இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி வெள்ளத்தில் சிக்கிய இ.போ.ச.பேருந்தை மீட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927</id>
            <summary type="text">&amp;nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வான்பாய்ந்ததால் அவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. </p><p>

அச்சமயத்தில் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த போது, அம்பகமுவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9db68b-ab7a-4fab-a6ca-7f682e190168/26-6a718e711def0.webp' /></p><p> 

அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று பேருந்திலிருந்த மக்களை மீட்டதுடன், பின்னர் கெப் ரக வாகனம் ஒன்றின் உதவியுடன் பேருந்தையும் மீட்டெடுத்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a334178f-88e5-474e-bbd4-b7533e424bbd/26-6a718bbf6bf6b.webp' /></p><p> 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்காரணமாக, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:48:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது ; திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்; பரபரக்கும் தமிழகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-arrested-defamatory-cm-vijay-1785825302"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-arrested-defamatory-cm-vijay-1785825302</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுபேச்சு , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுபேச்சு , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் தீவிர முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இதன்போது "கைது செய்யாதே, கைது செய்யாதே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாதே" என அவர்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் கோஷங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b5e990-80a5-4591-ad3c-7917a1ba1922/26-6a7188181d746.webp' /></p><p>
</p><p> 
 
முதல்வர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி என திமுக தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளை&nbsp; இந்த கைது நடவடிக்கையின் போது, நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதியின் வீட்டிற்கு மிக அருகில் வசிக்கும் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், தனது வீட்டின் மாடியில் இருந்துகொண்டு இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p> 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926</id>
            <summary type="text">


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (05) காலை 9.00 மணி வரை இந்தச் சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb20a1fd-77b0-4a20-a410-9ff7e89d4664/26-6a717ae868f48.webp' /></p><p> </p><h2>

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்</h2><p><b>

கண்டி மாவட்டம்</b>,&nbsp; &nbsp;கங்க இஹள கோரளை 

உடுதும்பர 

பஸ்பாகே கோரளை 

கேகாலை மாவட்டம் 

யட்டியாந்தோட்டை </p><p><b>

நுவரெலியா மாவட்டம்</b>&nbsp;,அம்பகமுவ 

நோர்வூட் 

இதனிடையே, கட்டம் 2 மற்றும் கட்டம் 1 இன் கீழும் பல மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><b>எச்சரிக்கை மட்டம் 2,</b></p><p><b>கண்டி மாவட்டம்</b> 

பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ மற்றும் தெல்தோட்டை </p><p><b>

கேகாலை மாவட்டம்</b>&nbsp;, அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட மற்றும் புலத்கோஹுபிட்டிய </p><p><b>

நுவரெலியா மாவட்டம்,</b> 

தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு </p><p><b>

இரத்தினபுரி மாவட்டம்</b>&nbsp;, இரத்தினபுரி, ஓப்பநாயக்க மற்றும் இம்புல்பே</p><p><b> 

எச்சரிக்கை மட்டம் 1</b></p><p><b> 

கேகாலை மாவட்டம் ,</b>கேகாலை 

நுவரெலியா மாவட்டம் 

ஹங்குரன்கெத்த 

இரத்தினபுரி மாவட்டம் 

நிவிதிகல மற்றும் குருவிட்டை</p>]]></content>
            <updated>2026-08-04T05:36:54+00:00</updated>
        </entry>
    </feed>
