<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T12:22:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சகோதரர்கள் ; இத்தாலிக்கு திருப்பி அனுப்பபடும் ஜீவன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285"></link>
            <id>https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347c6319-1829-46e1-a8c1-dc92ec3e6bfd/26-6a65f716d1c6d.webp' /></p><h2 style="text-align: justify; ">சுங்கப் விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர்.
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று ( 25) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்றபோது, அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்தன.
</p><p style="text-align: justify; ">
சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T12:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக காணொளியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138</id>
            <summary type="text">வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca58e34-0bd3-46ec-b22f-edd0f0c5a1d0/26-6a65f29c0596a.webp' /></p><h2>பணியிடைநீக்கம்</h2><p>
</p><p>
சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சுசார் நிறுவன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் பிடிபட்ட மூவர் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.</p><p>



சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a898c5a7-0df0-4825-a607-69e5b2f22970/26-6a65e3a7bb8d0.webp' /></p><p>
</p><p>


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளியலறையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580</id>
            <summary type="text">காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7dbfab-62b3-49c9-bdf7-aa46b22f70c5/26-6a65ec85ed8ba.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

குறித்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>

அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டில் பரிசோதனை மேற்கொண்டபோதே குளியலறையில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

பிரேத பரிசோதனைக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T10:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்த சொகுசு பேருந்து ; அதிகாலையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.</p><p>



அதிகாலை சுமார் 04.45 மணியளவில் பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfdecbc-ee11-432c-88bb-80fcf75bfa7d/26-6a65df31afaee.webp' /></p><h2>பாரிய சேதம்</h2><p>



இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p><p> </p><p>சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான பணிகள் ஆரம்பம் ; நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439"></link>
            <id>https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தெளிவுபடுத்தியபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370558ee-64af-4d43-ab12-723aa6acbfc1/26-6a65dc58454c3.webp' /></p><p style="text-align: justify; ">

அதற்கமைய, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும், அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பட்சத்தில், அது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T10:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம் ; தந்தையும் மகனும் அரங்கேற்றிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், அண்மையில் ஹோமகம, கலகாஹேன பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் சாரதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea653a98-ca35-49ec-9344-0f224a3fd931/26-6a65d3493c8b6.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

 

ஹோமகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஜூலை 16 ஆம் திகதி அதிகாலையில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான கொல்லப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 

கொலையாளிகள் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த CCTV காட்சிகளை பரிசோதித்தபோது, கொலையுண்ட 'PickMe' மோட்டார் சைக்கிள் சாரதி மற்றொரு நபரை ஏற்றிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வருவது தெரியவந்தது.

 

அதன்படி நடத்திய விசாரணையில், அந்த நபரே மோட்டார் சைக்கிள் சாரதியுடன் அங்கு வந்து இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பின்னர், இந்த இரண்டு சந்தேகநபர்களும் தந்தையும் மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

இக்கொலை நடந்த மறுநாளில், சந்தேகநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளிலேயே மொரகஹஹேன பகுதிக்குச் சென்று, பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தைக் காட்டிப் பயமுறுத்தி அவரது தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர்கள் மீண்டும் ஹோமகம பகுதியிலேயே இதுபோன்ற மற்றொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், அங்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

 

சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் 500 மில்லிகிராம் ஹெரோயினும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபரின் வீட்டில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரத்தக்கறை படிந்த தலைக்கவசம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், குற்றங்களைச் செய்வதற்காக ஆயுதங்களுடன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, தனது இராணுவ அடையாள அட்டையைக் காட்டி பொலிஸ் சோதனைச் சாவடிகளில் எந்தவித தடையுமின்றி பயணித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (25) ஹோமகம பதில் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஹோமகம பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இக்குற்றங்களுக்குக் காரணமான முதன்மைச் சந்தேகநபரான தந்தையைத் தேடி, ஹோமகம தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சமன் கமகே அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-26T09:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3c9325-4398-4412-b75e-b85f591cf032/26-6a65ccf67bd52.webp' /></p><h2>இலவசமாக விசாக்கள்&nbsp;</h2><p> </p><p> 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்தியாவிலுள்ள புனித பௌத்த யாத்திரைத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்குப் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுக்களாகப் பயணிக்கும் பட்சத்தில் இலவசமாக விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. </p><p>சேவை வழங்குனரில் ஏற்பட்ட இடைக்கால மாற்றத்தினால் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த இச்செயற்பாடு, புதிய மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p></p><p> 


முன்னர் காணப்பட்ட நடைமுறையைப் போலவே, இலவச விசா வசதியைப் பெற விரும்பும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யாத்திரிக் குழுக்களின் விண்ணப்பங்கள், இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p> 

இந்திய அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 12 வயது முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். </p><p>குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும்.</p><p></p><p> </p><p>இது பயணிகள் இந்தியாவில் இறங்கும்போது குடிவரவு நடைமுறைகளை எளிதாகவும் சிரமமின்றியும் கடந்துசெல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

ஐ.சி.ஏ.சி. மையங்களுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் காத்திருக்கும் நேரத்தைச் சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேற்கண்ட நடைமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசு எவ்வித விசா கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இருப்பினும், ஐ.சி.ஏ.சி. சேவைக்கான கட்டணமாக விண்ணப்பதாரி ஒருவர் இலங்கை 1,855 ரூபா மாத்திரம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலப்பனையில் காட்டுத் தீ ; 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782"></link>
            <id>https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p style="text-align: justify; ">


இன்று (26) ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3258e8e-b813-4028-b613-21f2e7a22cd4/26-6a65c2576f655.webp' /></p><h2 style="text-align: justify; ">தீ பரவல்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத்துறையினர் கோரியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தீ பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T08:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களுக்கு நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-after-hitting-two-women-1785052862"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-after-hitting-two-women-1785052862</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5322abb0-546c-402b-b355-812ec8a96109/26-6a65bec00de42.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T08:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a604e864-eadb-4335-8fcd-c8b88e76c91d/26-6a65b7ce3e126.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T07:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200</id>
            <summary type="text">காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00cccabe-5b85-4ba1-aced-cf6acf76ca4b/26-6a65b45a3650b.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேரியகுலம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.</p><p>&nbsp;சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உடலத்தை மீட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செட்டிகுளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தாக மாறும் டெங்கு நிலைமை ; அதிகரிக்கும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324</id>
            <summary type="text">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;">

 

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa578645-daf2-44fa-99b1-ca8add5db89e/26-6a65ad0596411.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;டெங்கு நோயாளர்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;இக்காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">அந்த எண்ணிக்கை 43,132 ஆகும்.

 

அவற்றுள் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். </p><p style="text-align: justify;">கம்பஹாவில் 17,280 நோயாளர்களும், கொழும்பில் 16,213 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6cf51f-a53e-4993-86c5-3d701075067f/26-6a65a9bae884d.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வரித் தொகை</h2><p> </p><p style="text-align: justify;">குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">
 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">&nbsp;விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
 

இருப்பினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:31:34+00:00</updated>
        </entry>
    </feed>
