<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T00:20:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளாக படுக்கையில் காவல் அதிகாரி ; உரிமைகளை பெற்றுத்தர மனைவி கண்ணீர்க் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம் (IGP) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த காவல் அதிகாரி, பொரளை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, அதிகாரியால் அன்றாடச் செயற்பாடுகளைக் கூட சுயமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b81f10-863d-43c5-a384-8eec59ee4217/26-6aa09989e2975.webp' /></p><p>அவருக்கு இதுவரை முழுமையான சுயநினைவு திரும்பவில்லை எனவும், உணவு மற்றும் சுவாசத்திற்காக தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;கணவரை முழுநேரமும் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தம்மால் வேறு எந்தவொரு தொழிலிலும் ஈடுபட முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
வாடகை வீட்டில் வசித்து வரும் தமது குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லாத நிலையில், கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்து இடம்பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கான சம்பளமும், விபத்து விடுப்பு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கான சம்பளமும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>காவல் அதிகாரிக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் விபத்து நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், குறித்த நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
விசேட புலனாய்வுப் பிரிவின் (SIU) விசாரணை காரணமாக ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்கள் காரணமாக விபத்து நஷ்டஈடு தொடர்பான கோப்புகள் முன்னும் பின்னுமாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமது குடும்பம் எவரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவல் அதிகாரியின் மனைவி, தனது கணவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் குடும்பத்திற்கான நீதியையே கோருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மேலும், தமது நிலைமை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லும் வகையில் இந்தத் தகவலை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T22:54:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993"></link>
            <id>https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.
இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca6adbf-28c7-4f82-ae41-b21ed035d243/26-6aa05f1368512.webp' /></p><p>

நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், மெட்ரோ பேருந்து சேவையின் மொத்த எண்ணிக்கை இந்த மாதத்தில் 122 ஆக உயரும்.</p><p>

மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065</id>
            <summary type="text">மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணை

இந்தத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e14aca-f524-4ec0-9b5e-db11b226dfb4/26-6aa05b733baea.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:01:14+00:00</updated>
        </entry>
    </feed>
