<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T06:28:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buddhist-monk-arrested-with-heroin-1785133161"></link>
            <id>https://jvpnews.com/article/buddhist-monk-arrested-with-heroin-1785133161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea1a674-4275-4df9-b82c-75caa6828c72/26-6a66f87231230.webp' /></p><h2>&nbsp;88,700 மில்லிகிராம் ஹெரோயின்</h2><p>






மலசலக்கூடத்திற்கு அருகில் நின்ற பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.



 கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>


 பிக்குவிடம் கைப்பற்றப்பட்ட பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.



சந்தேகத்திற்கிடமான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T06:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன பிரஜை கடத்தப்பட்டு கொலை; சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-murdered-colombo-1785131710"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-murdered-colombo-1785131710</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.</p><p> 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17513b5f-2b6a-4130-aa64-517cfae0a7d4/26-6a66f2bf7d2ad.webp' /></p><h2>இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்</h2><p>

கடந்த ஜூலை 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு, கொழும்பு போர்ட் சிட்டி பாலத்தில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

வேனில் வந்த மற்றுமொரு சீன பிரஜைகள் குழு, அங்கிருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கை கால்களைக் கட்டி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளது.


பின்னர், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹலியகொடை, கரத்தன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>
 பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட உள்உறுப்பு காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை சீன தூதரகத்தின் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், உயிரிழந்த ஹாவ் சோங் என்ற நபரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T05:53:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விபத்தில் ஸ்தலத்தில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-lost-in-a-road-accident-in-kolonnawa-1785131156"></link>
            <id>https://jvpnews.com/article/life-lost-in-a-road-accident-in-kolonnawa-1785131156</id>
            <summary type="text">&amp;nbsp; கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5652b6d7-0052-4d87-8d37-304f46a00498/26-6a66f0958b3a8.webp' /></p><p> </p><p>

 முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விபத்து முச்சக்கர வண்டி சாரதியின் அலட்சியத்தால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dutch-tourist-dies-in-nilaveli-sea-1785127647"></link>
            <id>https://jvpnews.com/article/dutch-tourist-dies-in-nilaveli-sea-1785127647</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (26) கிடைத்த தகவலின் அடிப்படையில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdbb210-3b62-46ad-a504-500fad2a91e7/26-6a66e2e1725e8.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T05:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; கலைந்துபோன கனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/panadura-private-university-student-dies-suddenly-1785130417"></link>
            <id>https://jvpnews.com/article/panadura-private-university-student-dies-suddenly-1785130417</id>
            <summary type="text">&amp;nbsp; பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

ஒடித்யா முதுமாலி விஜேசேகர , சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d63ce2a-9ea4-4cb1-a0ce-32cfe1ae1e3e/26-6a66edb2b7ad8.webp' /></p><p>
</p><p>
 கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 10 லட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-water-bottles-at-inflated-higher-10-lakh-fine-1785129935"></link>
            <id>https://jvpnews.com/article/rs-water-bottles-at-inflated-higher-10-lakh-fine-1785129935</id>
            <summary type="text">&amp;nbsp; பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65f1c45-478f-4ccc-be5b-a8bffe193a96/26-6a66ebd0a042c.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-in-a-shooting-incident-death-1785128698"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-in-a-shooting-incident-death-1785128698</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து களுபோவில&amp;nbsp; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய உணவக உரிமையாளர் சிகிச்சை பலனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து களுபோவில&nbsp; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய உணவக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளர்.
</p><p>பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற காயமடைந்த உணவக உரிமையாளர் களுபோவில&nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7336c509-c216-4614-a1f0-fb276452be1a/26-6a66e6fc56561.webp' /></p><p>

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

இந் நி லையில் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாகக் பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T05:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-who-returned-from-abroad-dies-in-accident-1785127377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-who-returned-from-abroad-dies-in-accident-1785127377</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுத்தை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான டி. எம். திலானி அரோஷா (46 வயது) ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1b310f-3b9f-442b-a720-81dfcd6b1c49/26-6a66e1d275e30.webp' /></p><p>
</p><p>

விபத்தில் லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.
</p><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். 

இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

 பிள்ளைகாளுடன் நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T04:41:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறை தவறிய அதிகாரி ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-who-erred-action-taken-1785112870"></link>
            <id>https://jvpnews.com/article/officer-who-erred-action-taken-1785112870</id>
            <summary type="text">கம்பஹா, வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய காவல்துறை சாவடியில் பணியாற்றும் ஒரு உதவி காவல்துறை அதிகாரி பொதுமக்களிடம் முறையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய காவல்துறை சாவடியில் பணியாற்றும் ஒரு உதவி காவல்துறை அதிகாரி பொதுமக்களிடம் முறையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

இந்தச் சம்பவம், 2026 ஜூலை 23 ஆம் திகதி,வத்துப்பிட்டிவல மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095d4f0b-dcc8-4838-8840-8d40001a8c5a/26-6a66a9284a579.webp' /></p><p>சீருடையில் இருந்த அந்த அதிகாரி, அங்கிருந்தவர்களுடன் கடுமையான, அச்சுறுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்தே அவர்,நிறுவனங்கள் நெறிமுறை விதிகளின்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:41:20+00:00</updated>
        </entry>
    </feed>
