<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-12T12:51:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T12:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் காதைக் கடித்த விவகாரம்: 6 மாதமாக நீதி கிடைக்கவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-ear-being-bitten-no-justice-six-months-1786532094"></link>
            <id>https://jvpnews.com/article/woman-ear-being-bitten-no-justice-six-months-1786532094</id>
            <summary type="text">நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காது கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காது கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் 'United Human Rights Organization' அமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட HRC/HAT/58/26/N என்ற முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னரே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை</h2><p>நுவரெலியா – ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் 2026 ஜூலை 31ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் குறித்த பரிந்துரை நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.</p><p>முறைப்பாட்டின்படி, சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவருக்குச் சொந்தமான காணி தொடர்பில் அயல் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த காணிக்கு முன்னால் அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவதற்கு நோனா பட்டோன் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரது காதைக் குறித்த நபர் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் 2026 மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் கடந்த காலங்களில் ஊடகங்களிலும் வெளியாகி, பிரதேசத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், சம்பவம் தொடர்பில் உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்கள் வெளிப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.</p><p>அத்துடன், பெண்ணின் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில சந்தர்ப்பங்களில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை காணப்பட்டதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது தரப்பினரிடையே மத அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகள் நியாயமானதும் பாரபட்சமற்றதுமான முறையில் இடம்பெற்றனவா என்பது தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டைத் தாக்கல் செய்த 'United Human Rights Organization' அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய,&nbsp; எனத் தெரிவித்தார்.</p><p>&nbsp;அத்துடன்&nbsp; "கிராம உத்தியோகத்தரும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை விட, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர்&nbsp; குறிப்பிட்டார்.</p><p>இவ்வாறான சூழ்நிலையில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தனிநபர்களின் மதம் அல்லது வேறு பின்னணிகளின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என வலியுறுத்திய அவர், அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.</p><p>"பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் நாம் கோருவது, இந்தப் பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-12T12:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பெண் அரச ஊழியரின் திடீர் உயிரிழப்பால் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-government-employee-dies-in-batticaloa-1786536879"></link>
            <id>https://jvpnews.com/article/female-government-employee-dies-in-batticaloa-1786536879</id>
            <summary type="text">மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார்&amp;nbsp; &amp;nbsp;(41)&amp;nbsp; &amp;nbsp;உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயார்&nbsp; &nbsp;(41)&nbsp; &nbsp;உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த குடும்பப் பெண் கடந்த மாதம் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.</p><p>காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விவசாய பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோத்தராக கடமையாற்றும் இவர் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வந்ததுடன் சக உத்தியோகத்தர்களுடனும் புரிந்துணர்வுடன் கடமையாற்றி வந்துள்ளார் .</p><p>இவரது இழப்பு சக உத்தியோகத்தர்களிடையேயும் குடும்பத்தாரிடையேயும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-12T12:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா விபத்தில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-lost-in-vavuniya-accident-1786536269"></link>
            <id>https://jvpnews.com/article/life-lost-in-vavuniya-accident-1786536269</id>
            <summary type="text">வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>வவுனியாவிலிருந்து பயணித்த டிப்பர் வாகனம், சூடுவெந்தபிலவு பகுதியில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>மேலும், காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T12:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appreciation-of-the-sri-lankan-rupee-1786532496"></link>
            <id>https://jvpnews.com/article/appreciation-of-the-sri-lankan-rupee-1786532496</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று ( 12) மேலும் வலுவடைந்துள்ளது.அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 32...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று ( 12) மேலும் வலுவடைந்துள்ளது.</p><p>அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 329.9453 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 339.0332 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.&nbsp;</p><p>அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T11:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி A9 வீதி விபத்தில் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-a9-road-accident-in-kilinochchi-1786528836"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-a9-road-accident-in-kilinochchi-1786528836</id>
            <summary type="text">கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>யாழ். நோக்கி சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>விபத்தில் பாரஊர்தியின் சாரதி உதவியாளரான 21 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T10:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-in-international-karate-tournament-1786527054"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-in-international-karate-tournament-1786527054</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவரும்,யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட&amp;nbsp; ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவரும்,யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட&nbsp; ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி, தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.</p><p>யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.</p><p>அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.</p><p>கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் JKS கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-12T09:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-left-the-cid-1786526223"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-left-the-cid-1786526223</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.</p><p>இன்று (12) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுடன் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் வள்ளம் கவிழ்ந்து சகோதரர்களான இரு சிறுவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-brothers-die-bridge-collapses-in-kalpitiya-1786525949"></link>
            <id>https://jvpnews.com/article/two-brothers-die-bridge-collapses-in-kalpitiya-1786525949</id>
            <summary type="text">கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.</p><p>இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கிய&nbsp; நிலையில்&nbsp; கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.</p><p>உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733"></link>
            <id>https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733</id>
            <summary type="text">புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.</p><p>கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.</p><p>இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.</p><p>ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T08:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிடம் இருந்து நாமலிடம் கை மாறிய ராஜபக்சர்களின் அரசியல் சொத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730"></link>
            <id>https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். </p><p>அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</span></p><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8b4527-6b57-4721-8754-6d453d699249/26-6a7c20b42fd65.webp' /></p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p></p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான். </p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:29:18+00:00</updated>
        </entry>
    </feed>
