<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T02:32:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம் ; சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/judicial-reforms-necessary-before-death-penalty-1786840166"></link>
            <id>https://jvpnews.com/article/judicial-reforms-necessary-before-death-penalty-1786840166</id>
            <summary type="text">இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மத்தியில், மரண தண்டனை பற்றிய விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ள நிலைமையைக் சுட்டிக்காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed5858bc-7dd8-4786-bae6-b1312beb1896/26-6a8104674da3d.webp' /></p><p>முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார், கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.
</p><p>
வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.</p><p>

வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.

போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.
</p><p>
விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானத்தால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ; ரூ.81 பில்லியன் கூடுதல் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-causing-huge-losses-country-loss-81-billion-1786839491"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-causing-huge-losses-country-loss-81-billion-1786839491</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 335 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக மது மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 335 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது அதே ஆண்டில் மதுபான வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட மிக அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மதுபான வரியாக 254 பில்லியன் ரூபா மட்டுமே அரசாங்கத்தினால் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169b1cca-31bd-4302-99ff-f94b0d264683/26-6a8101c52a6a0.webp' /></p><p>இதற்கமைய, வரியாகக் கிடைத்த வருமானத்தை விட மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான செலவு 81 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் காணப்படுகின்றது.</p><p>

இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் - குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் ; உங்க ராசி இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-guru-inaippu-athirstam-perum-rasi-1786838669"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-guru-inaippu-athirstam-perum-rasi-1786838669</id>
            <summary type="text">நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருபகவான் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருபகவான் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbaba3e4-78f2-43a3-a88c-76df9ef35f0e/26-6a80fe905326f.webp' /></p><p>ஆகஸ்ட் 15 அன்று, புதனும்-குருபகவானும் இணைந்து சக்திவாய்ந்த கிரக சேர்க்கையை உருவாக்குகின்றன. இரண்டு சுப கிரகங்களின் இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் உறவுகளில் நேர்மறையான முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa50d7ec-b9e1-434d-b067-95ad7696e9f0/26-6a80fe9102b5c.webp' />&nbsp;</p><h4>ரிஷபம்</h4><p>
புதன் மற்றும் குருபகவானின் சேர்க்கையானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும். இக்காலகட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வருமான உயர்வு போன்ற நன்மைகளை அடையலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உணர்வதுடன், சமூகத்தில் பிறரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். அவர்களின் நீண்ட கால ஆசைகளில் சில இப்போது நிறைவேறலாம். </p><p>இது முதலீட்டுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். புதன்-குருபகவானின் இணைப்பு மாற்றம் இவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியையும், முன்னேற்றத்தையும் தரப்போகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb5d17d-796b-4a7d-b70c-a1490ad7df63/26-6a80fe91a44e7.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன்-குரு சேர்க்கையானது, அற்புதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், புதிய பொறுப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் சமூகத்தில் அந்தஸ்தும், அங்கீகாரமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். குருபகவானின் தாக்கம் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கும்.</p><p>அவர்கள் வியாபாரத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் உருவாகும். வணிகர்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்த சிறந்த நேரமாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a688d5dd-8e36-4b21-b63d-6cf509316a80/26-6a80fe92563b5.webp' /></p><p>
</p><h4>மகரம்
</h4><p>இந்தக் கிரகச் சேர்க்கையின் விளைவாக, மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைச் சந்திக்கலாம். இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p>குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8033a5d1-fffe-4760-9c45-175492ba4ff6/26-6a80fe9305ad1.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T00:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை ; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509</id>
            <summary type="text">யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>26 வயதான குறித்த யுவதி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அதே பீடத்தில் கல்வி கற்ற இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதையடுத்து, பிரான்ஸில் தொழில் புரிந்து வந்த 35 வயது இளைஞருடன் கடந்த மாத தொடக்கத்தில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcd20f0-938e-4b28-966b-1bdf675cca8e/26-6a80ea6720ec4.webp' /></p><p> திருமணத்துக்குப் பின்னர் கணவன் யாழ்ப்பாணத்தில் மனைவியுடன் தங்கியிருந்ததாகவும், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த புதுமணப் பெண் யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் தனது பழைய காதலனுடன் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. </p><p>பொலிஸார் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தான் காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, திருமணத்துக்காக வழங்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> திருமணச் செலவுகள் மற்றும் நகைகள் தொடர்பாக கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை ; சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-warning-drivers-1786836641"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-warning-drivers-1786836641</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cba770-84fa-4a5a-ae0f-92bd32c6baac/26-6a80f6a29ef8e.webp' /></p><p>இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
</p><p>
இதனால், பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஞ்சி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-eating-ginger-lower-high-blood-pressure-1786835143"></link>
            <id>https://jvpnews.com/article/will-eating-ginger-lower-high-blood-pressure-1786835143</id>
            <summary type="text">அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, சீரான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b75792c-bb98-4780-b775-4d928a5132fb/26-6a80f0ca5d121.webp' /></p><p>கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையும் நீரிழப்பும் பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்பம் உடலை அதிகமாக வியர்க்கச் செய்வதால் நீரிழப்பு, சோர்வு மற்றும் இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் போன்ற பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கக்கூடும். </p><p>குறிப்பாக, ஏற்கனவே உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கோடை காலத்தில் தங்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770cf430-1142-44e3-b65e-1b937a441814/26-6a80f0c9ac851.webp' /></p><p>அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, சீரான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இத்தகைய சூழ்நிலையில், உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, சமச்சீரான உணவை உண்பது மற்றும் உணவில் சில இயற்கையான, சத்தான பொருட்களைச் சேர்ப்பது ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.</p><p>உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இஞ்சி மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கையான உணவாகும். இஞ்சியை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df48ea54-1d06-4cb1-846d-3937cf6db6f9/26-6a80f0cb0d2a4.webp' /></p><h4>உயர் இரத்த அழுத்தத்தில் இஞ்சி உட்கொள்ளல்</h4><p>உயர் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவும் பல உயிர்வேதியியல் கலவைகள் இஞ்சியில் உள்ளன. ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற கலவைகள் இஞ்சியில் காணப்படுகின்றன. </p><p>மேலும் இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவது இரத்த நாளங்களை தளர்த்தி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த காரணிகள் அனைத்தும் பிபி நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/181b158f-230d-40d4-b131-9529ee727c88/26-6a80f0cbb3670.webp' /></p><p>இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கத்தைக் குறைக்கும். இஞ்சி சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி இருந்தால் இஞ்சியை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்து.</p><p> நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இஞ்சியை உட்கொள்வதும் இதற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் வைரஸ் மற்றும் பருவகால நோய்த்தொற்றுகளின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645f8b9d-89f3-403c-880f-10e988e362e4/26-6a80f0cc66430.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T23:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து கலாசார திணைக்களத்துக்கு 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771"></link>
            <id>https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771</id>
            <summary type="text">இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
</p><p>வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dd1e8e-44a8-4020-b542-58ac0963aa6d/26-6a80dfb562743.webp' /></p><p>இந்தத் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கான நிதி உதவிகள், பல்வேறு சமயச் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்தநிலையில் தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும், இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
</p><p>
எனவே வரவிருக்கும் நிதியொதுக்கீட்டின் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்தி, சமய மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் மீது அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472</id>
            <summary type="text">சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdc5a33-0a99-4a28-a728-4dfce3d12bfb/26-6a80daa286c09.webp' /></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:31:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண யூடியூப்பரின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ; சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638"></link>
            <id>https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>யூடியூப்பர் தனது வீடியோ எடிட்டிங் பணிகளுக்காக பாடசாலை நண்பரான ஒருவரை பணியமர்த்தியதாகவும், குறித்த எடிட்டர் கொக்குவில் பகுதியில் நடத்தி வந்த போட்டோ கடை எடிட்டிங் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9cdfd-94a7-4d56-8955-d4d894f23fab/26-6a80a497b44fd.webp' /></p><p>

மேலும், யூடியூப்பரின் காதலி அந்த இடத்திற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அவருக்கும் எடிட்டருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் பின்னர் யூடியூப்பருக்கு தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து யூடியூப்பர் இருவரிடமிருந்தும் விலகியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலித்தீனுக்கு மாற்றுப் பொருட்கள் அறிமுகம் ; அரசாங்கம் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631"></link>
            <id>https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631</id>
            <summary type="text">நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21420e04-1bb4-4179-b9d2-d3b75ab48e20/26-6a80d371039d0.webp' /></p><p>இந்தச் சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
</p><p>
அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:00:38+00:00</updated>
        </entry>
    </feed>
