<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T17:29:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பம் குறித்து இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011"></link>
            <id>https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011</id>
            <summary type="text">நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index), “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd9925d-2c6c-4f66-bb1a-8075a7562840/26-6aa4339cd8483.webp' /></p><p>எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பகல் வேளையில் அதிக வெப்பத்துக்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்த்து, போதியளவு நீர் அருந்தி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்கட்டிச்சோலை ஆலய குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004"></link>
            <id>https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குருவாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.</p><p></p><p>

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பூர்வீக கால பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த அவர், அவற்றை ஆதாரபூர்வமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50edcc04-1929-487f-9661-80582c868762/26-6aa42fae3b8d0.webp' /></p><p>ஆலயத்தின் நீண்டகால வரலாறு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களை அவர் அறிந்திருந்ததுடன், அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
</p><p>
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 1998 முதல் 2004 வரை வண்ணக்கராகவும் செயலாளராகவும் பணியாற்றிய காலப்பகுதியில், ஆலயத்தின் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சோதிலிங்கம் குருக்கள் தனக்குத் தெரிவித்திருந்ததாக நெருங்கியவர்கள் நினைவுகூருகின்றனர்.
</p><p>
அடியார்கள் மத்தியில், “கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்றால் சோதிலிங்கம் குருக்கள்; சோதிலிங்கம் குருக்கள் என்றால் கொக்கட்டிச்சோலை சிவன் கோயில்” என்ற எண்ணக்கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது.</p><p>

அன்னாரின் இல்லம் மட்டக்களப்பு கூளாவடியில் அமைந்துள்ளதுடன், அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-sentence-imposed-after-11-years-1789141929"></link>
            <id>https://jvpnews.com/article/death-sentence-imposed-after-11-years-1789141929</id>
            <summary type="text">காலி பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7adb20d9-ecd2-497d-a6ac-3058348b3d9c/26-6aa423aa94d79.webp' /></p><p>வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர். </p><p>

பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் 'CRI 2264/2019' எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.</p><p> 

இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி, கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dollar-pound-face-different-inflation-environments-1789141099"></link>
            <id>https://jvpnews.com/article/dollar-pound-face-different-inflation-environments-1789141099</id>
            <summary type="text">டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது செப்ரம்பர் மாத முடிவுகளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f903f6-4f25-41c5-ab86-695c7331fd28/26-6aa4206cc5756.webp' /></p><p>டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன.</p><p>எனினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வங்கியும் உண்மையில் மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம் ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது.</p><p> ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>
வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட, தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில் வர்த்தகமாகிறது.</p><p> ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட் செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில் இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>
ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும் விதியாகும்.

மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும், எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h3>US தரப்பு சமன்பாடு</h3><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
</p><p>
முக்கியமாக எரிசக்திச் சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச் சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.

அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. </p><p>ஒட்டுமொத்தப் பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம் மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய வங்கி தயக்கம் காட்டக்கூடும்.

தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின் சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்' வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும்.
</p><p>
USD வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும் உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h4>UK தரப்பு
</h4><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது, ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க் ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
</p><p>
தொழிலாளர் சந்தை தளர்வதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை. வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது.</p><p>வட்டி விகித உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும் ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து வித்தியாசமானது.</p><p>

GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம் மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம் குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக் கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h4>விலகுதல் அளவீடு
</h4><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில் இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச் செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின் நகர்வு அமைய வாய்ப்புள்ளது.

நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக் காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது. </p><ul><li>&nbsp;கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத் துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை விரிவுபடுத்துகிறது.உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில் இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP) மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே உள்ளது.</li><li>மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத் துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது, ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும் கவனியுங்கள்.</li><li>இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும் தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.</li><li>இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.</li></ul><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான் குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம் செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து வர்த்தகம் செய்யத் தொடங்கும்.
</p><p>
இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.” பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது.
</p><p>
ஆனால் கணிப்புகளில் ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக் கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:
</p><ul><li>&nbsp;முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள். சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில் மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும் உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப் பற்றி அதிகமாகக் கூறுகின்றன. </li><li>&nbsp;வாக்குப் பிளவை எடைபோடுங்கள்.பாங்க் ஒஃப் இங்லண்டில் நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல் இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை சமிக்ஞையை வழங்குகிறது.</li><li>ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள்.எரிபொருள் விலை வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும் ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான சமிக்ஞையை அளிக்கின்றன.</li></ul><h4>
ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்</h4><p> வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும்.
</p><p>
அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும் சமயங்களில் இது நிகழலாம். </p><p>இறுக்கமான செல்லாத நிலை அளவில் செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும் ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை மட்டும் கருத்தில் கொள்வதில்லை. </p><p>அவர்கள் டொலர் தரப்பின் போக்கு, ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையானவிளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச் சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.</p><p>

விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக் கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.

நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச் சரிசெய்துவிடாது. </p><p>அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்டதா என்பதை மதிப்பாய்வு செய்வதை அவை எளிதாக்குகின்றன</p><p>Exness ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச் செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம், குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.
</p><p>
இதன் மல்ரி- சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும்.
</p><p>
அதே பணிச்சூழல் சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல் தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும் இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில் இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும்.</p><p>ஒரு வர்த்தகர், தான் ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின் உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும்.
</p><p>
திறந்த வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின் தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற உதவுகிறது.

கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.</p><p>” சார்புச் சான்றுகள், கணிப்புகள், வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான் சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.</p><h4>

சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன </h4><p>ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும், மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.</p><p>மற்றொன்றை விட எந்த எதிர்வினைச் செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து சக்தியாக ஆக்குகிறது.
</p><p>
அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-11T15:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் ஒன்றுகூடும் உலக தலைவர்கள்; பாதுகாப்பு தீவிரம்; உற்று நோக்கும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-leaders-gather-delhi-brics-security-tight-1789131830"></link>
            <id>https://jvpnews.com/article/world-leaders-gather-delhi-brics-security-tight-1789131830</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாவுள்ள நிலையில் உலக தலைவர்கள் வருகையினை அடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாவுள்ள நிலையில் உலக தலைவர்கள் வருகையினை அடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாகி, நாளை மறுதினம் (13) நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f9639f-214d-4184-afb9-6dd831eceda3/26-6aa3fc3825018.webp' /></p><h2>ஒன்றுகூடும் உலக தலைவர்கள்</h2><p>
</p><p>
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.



மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை இந்தியா வரவுள்ளார்.
</p><p>


மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.



‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.</p><p></p><p>



மாநாட்டை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முக்கிய சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>



இதனிடையே, புட்டின் மற்றும் ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p><p> 



தற்போதைய சர்வதேச சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>


அதேவேளை,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.இதனால், பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p> 

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி என்கின்ற பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12cbe1c-6336-4a36-9bad-0ac497b97204/26-6aa3f7d8385e3.webp' /></p><h2>&nbsp;முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி&nbsp;</h2><p> </p><p> 

2025 பொதுப் பட்டமளிப்பு விழாவில் MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தம் 32 தங்கப் பதக்கங்களில், 16 பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்றுள்ளார்.
</p><p>
இறுதித் தேர்வு உட்பட MBBS படிப்பின் ஐந்து முக்கிய பிரிவுகளிலுமே முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி .</p><p></p><p>
</p><p>
 மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவப் பீட பட்டதாரிகளுக்குமான பொதுத் தரவரிசைப் பட்டியலில் நாடு முழுவதுமாக முதலிடம் பிடித்து, மருத்துவப் பயிற்சிப் பணிக்காக தேர்வாகியுள்ளார்.
</p><p>
அத்துடன், கல்விச் சிறப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான "பேராசிரியர் திலக் ஹெட்டியாரச்சி விருது" (Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence) இவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் மணல் திட்டில் கடற்படையினரால் மீட்கப்பட்ட சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320"></link>
            <id>https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320</id>
            <summary type="text">&amp;nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>


வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான ‘தம்மென்னா’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் மணல் திட்டில் சிக்கித் தவித்த சிறுவன் ஒருவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b0f29b0-c1a4-4a90-a6a2-435ac85ee602/26-6aa3fa3987ce3.webp' /></p><p></p><p>

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுவன் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கையை நோக்கி வந்தபோது வழிதவறி மணல் திட்டில் சிக்கியமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>


கடற்படையினர் சிறுவனை ‘தம்மென்னா’ நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளனர்.
</p><p>


மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக ஈழத்தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470"></link>
            <id>https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470</id>
            <summary type="text">&amp;nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட முதலாவது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.</p><p>

ஈழத்தில் இருந்து 5 வயதில் புலம்பெயர்ந்து வந்த சிறுமியான கம்சி குணரத்தினம் நோர்வேயின் போக்குவரத்துதுறையின் அமைச்சராகி இருப்பது உலகெங்க்கும் வாழும் ஈழத தமிழர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03402da-f920-408a-ad1b-b26bf4b79bb3/26-6aa3df77b3fda.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகாளையும் கூறி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402"></link>
            <id>https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244" target="_blank">&nbsp; முல்லைத்தீவில்</a> கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d103d733-b534-4cc2-a12a-827a56a76282/26-6aa3d140aed02.webp' /></p><p></p><p> </p><p>இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329"></link>
            <id>https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு இன்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1352e55-566e-4f32-af99-d7c86fc977f0/26-6aa3fe2aeb6bc.webp' /></p><p></p><p>
</p><p>
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p></p><p>

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துகளை பறிமுதல் செய்யவும் ; இசைஞானி இளையராஜாவுக்கு நோட்டீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756</id>
            <summary type="text">&amp;nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. </p><p>

அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dd6375-51bb-4b85-80fc-7031cd48a75f/26-6aa3f41debffe.webp' /></p><h2>சொத்துகளை பறிமுதல் செய்யவும்....&nbsp;</h2><p> </p><p>

 பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.</p><p></p><p> </p><p>

இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 ஆம் திகதி அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><p> 
 சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T12:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கல்வி சீர்திருத்தம்; மாணவர்களின் புத்தகப்பை எடை குறைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516"></link>
            <id>https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
 புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும்</h2><p>
</p><p>
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். </p><p>இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.</p><p>

 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

 தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் எச்சரிகையுடன் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-ampitiye-sumanarathana-thero-1789127916"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-ampitiye-sumanarathana-thero-1789127916</id>
            <summary type="text">&amp;nbsp; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் மட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று (11) பிணையில் விடுவித்தார்.
</p><p>
கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரத்ன தேரர் 4 பேருடன் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/398b2a3e-ae9b-404e-84aa-ddf4b3ced348/26-6aa3ecedebc25.webp' /></p><h2>&nbsp;வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு</h2><p>
</p><p>


இதையடுத்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்து இன்று 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p></p><p>



 தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தேரருடன் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது , தேரரை இனிமேல் எந்த அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறு அச்சுறுத்தல் செய்யக்கூடாது, இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது என்று நீதிவான் தெரிவித்தார்.</p><p></p><p>



சம்பவத்துடன் தொடர்பட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதனை மீறும் பட்சத்தில் இந்த வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நிபந்தனைகளுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுத்தார்.</p><p></p><p>



அதேவேளை,இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இருவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடுத்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T11:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு தசையை கடித்து குதறிய முதலை ; இறுதியில் இளைஞன் செய்த செயலால் வியப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crocodile-attacks-young-man-his-brave-escape-1789126180"></link>
            <id>https://jvpnews.com/article/crocodile-attacks-young-man-his-brave-escape-1789126180</id>
            <summary type="text">பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
முதலையின் தாக்குதலில் கை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த இளைஞர், தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2425a0-783e-45fe-8540-896bc7ea2fff/26-6aa3e7e677120.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify;">
மாலை வேளையில் குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வந்த இளைஞர், தனது சோப்பை எடுப்பதற்காக மீண்டும் குளத்தின் படிகளில் இறங்கியுள்ளார். இதன்போது, நீரில் இருந்த முதலை அவரது காலை கவ்வி நீருக்குள் இழுத்துள்ளது.</p><p style="text-align: justify;">


குளத்தின் படியை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட இளைஞர், முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க போராடியபோது, முதலை அவரது தோள்பட்டையையும் கவ்வியுள்ளது.
</p><p style="text-align: justify;">
இதையடுத்து, தைரியமாகப் போராடிய அவர், தனது கையை முதலையின் வாய்க்குள் செலுத்தி அதன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கரைக்கு ஏறியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
முதலையின் தாக்குதலில் முதுகில் சதைப்பகுதி துண்டிக்கப்பட்ட போதிலும், சுயநினைவுடன் இருந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify;">
பின்னர் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
இதேவேளை, சுமார் 13 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று குறித்த குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

</p><p style="text-align: justify;">
அத்துடன், அந்த முதலை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T11:37:18+00:00</updated>
        </entry>
    </feed>
