<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T21:32:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் பயணத்தை இலகுபடுத்த புதிய போக்குவரத்து நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357"></link>
            <id>https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், அத்துடன் டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6fe76b-8774-467c-ba3b-631b67e7a794/26-6a68ed325dcb6.webp' /></p><p>மேலும், தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பம் ; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069"></link>
            <id>https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db962981-f812-4afd-9777-45e789c385d4/26-6a691aef13a39.webp' /></p><p>அதிக வெப்பநிலை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அதிக நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல், போதுமான அளவு நீர் அருந்துதல், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி ; இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423"></link>
            <id>https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p></p><p>

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பிற்கான சர்வதேச மையத்திற்கு (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c2abb7-2621-466f-8436-08bd3b863bae/26-6a690cb1b0260.webp' /></p><p>இவ்விஜயத்தின் போது, அக்குழு மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
</p><p>
இதில் மூங்கில் பயிர்செய்கை, மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வாக இலங்கையில் மூங்கில் உயிர் வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஆதரவை பிரதி அமைச்சர் ஜெயக்கொடி உத்தியோகபூர்வமாகக் கோரினார்.
</p><p>
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கச் சீனத் தரப்பு தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியது.</p><p>

மேலும், இத்திட்டம் யானை - மனித மோதலுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதோடு, மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனச் சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T20:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167"></link>
            <id>https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.</p><p></p><p>

இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e5bf8e-d73a-420c-b6ac-821c8a519934/26-6a6907c8ebd26.webp' /></p><p>இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.
</p><p>
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T19:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம் ; நீதிமன்றத்தில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80680f2-942d-4b37-9acd-ba933caaa070/26-6a68f611c3992.webp' /></p><p>

இதனிடையே, குறித்த பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் தங்களது அலுவலக வருகையை பதிவு செய்த பின்னர், கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் ; புதிய நடைமுறை ஒக்டோபரில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341"></link>
            <id>https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341</id>
            <summary type="text">காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d4ef6f9-b3a0-4695-9551-e2c029e1d495/26-6a68e937109c9.webp' /></p><p>அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்துவது அவசியமானது சுட்டிக்காட்டிய அவர், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>
 

டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
</p><p>
 

வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக எவரது வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

 

LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் (Online) சமர்ப்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
</p><p>
 

புதிய நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இறையாண்மை கடன் தரவரிசையில் மாற்றமில்லை ; S&amp;P உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-change-in-sri-lanka-s-sovereign-credit-rating-1785259659"></link>
            <id>https://jvpnews.com/article/no-change-in-sri-lanka-s-sovereign-credit-rating-1785259659</id>
            <summary type="text">இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை &#039;CCC+/C&#039; ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&amp;am...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை 'CCC+/C' ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&amp;P Global Ratings) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னோக்கிய 6 முதல் 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி ஒருங்கிணைப்பிற்கும் ஆதரவளிக்கும் நிலைமைகள் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக S&amp;P குறிப்பிட்டுள்ளது.
</p><p>
 

இருப்பினும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்கள் தொடர்ந்து நிலவுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0237d9-7821-4169-8ab8-edf9029ab8f6/26-6a68e68ceccb7.webp' /></p><p>இதேவேளை, நாட்டின் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மற்றும் வெளிநாட்டு நாணயமாக மாற்றுவது தொடர்பான அபாய மதிப்பீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் Transfer and Convertibility Assessment தரவரிசையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக உயர்த்தியுள்ளது.
</p><p>
 

'CCC+' கடன் தரவரிசையானது இலங்கையின் கடன் நிலைமை மேலும் அபாயகரமான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன், நாட்டின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என்றும் S&amp;P தெரிவிக்கிறது.
</p><p>
 

இருப்பினும், இலங்கை அரசாங்கம் அண்மைய காலத்தில் உடனடி நிதி அல்லது கொடுப்பனவு நெருக்கடியைச் சந்திக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

 

இலங்கையின் உயர் பொதுக் கடன் சுமை தொடர்ந்து பிரதான சவாலாக இருப்பதுடன், அரசாங்கத்தின் வட்டிப் கொடுப்பனவுகள் அரசாங்க வருவாயில் சுமார் 45 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிவாரி அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் வெளிவாரி மற்றும் நிதிச் சமநிலைகளில் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டதாகவும் S&amp;P சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 

இருப்பினும், உத்தியோகபூர்வ நிதி உதவிகள், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கைக்கு தனது நிதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், நிதி மற்றும் வெளிவாரி நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என S&amp;P எதிர்பார்க்கிறது.
</p><p>
 

எனினும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பலவீனமான நிதி அல்லது வெளிவாரி செயற்பாடுகள் அல்லது புதிய நிதி மற்றும் பணப்புழக்க அழுத்தங்கள் ஏற்பட்டால், இலங்கையின் கடன் தரவரிசையைக் குறைக்கக்கூடும் என S&amp;P Global Ratings எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-ratmalanai-saima-arrested-in-malaysia-1785259085"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-ratmalanai-saima-arrested-in-malaysia-1785259085</id>
            <summary type="text">பாதாள உலக குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படும் &quot;ரத்மலான சைமா&quot; என்ற போதைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படும் "ரத்மலான சைமா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர், மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>மலேசிய காவல்துறையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de3a73c-e23e-4b45-a2aa-38f4cab56c52/26-6a68e44f68247.webp' /></p><p>இதற்கிடையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை வழிநடத்தி வருவதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக, சர்வதேச குற்றப் புலனாய்வு அமைப்பான இன்டர்போல் ஏற்கனவே சிவப்பு அறிவிப்பை (Red Notice) வெளியிட்டுள்ளது.
</p><p>
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான், வெளிநாடுகளில் இருந்து தனது குற்றவியல் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல், பணப்பரிவர்த்தனை மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஒருங்கிணைத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில், அவரது முக்கிய கூட்டாளிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நிதி வலையமைப்புடன் தொடர்புடையவர்களை இலக்காகக் கொண்டு இலங்கை மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இணைந்து பல்வேறு விசேட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.</p><p>

மலேசியாவில் இடம்பெற்றுள்ள இந்தக் கைது, கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என பாதுகாப்பு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-of-tourists-sri-lanka-crossed-1-3-million-1785257099"></link>
            <id>https://jvpnews.com/article/number-of-tourists-sri-lanka-crossed-1-3-million-1785257099</id>
            <summary type="text">ஜனவரி மாதம் தொடக்கம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி மாதம் தொடக்கம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,313,974 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 167,401 என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fc3384-3183-4a77-b45a-605f3b57d3d0/26-6a68dc8d9a55c.webp' /></p><p>ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,785 ஆகும்.
</p><p>
 

இரண்டாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,419 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நெதர்லாந்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 10,540 ஆகும்.
</p><p>
 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.
</p><p>
 

மேலும், இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு பெருமை; சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706</id>
            <summary type="text">எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்கள் தற்போது STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
</p><p>
இத்திட்டத்தின் ஒரு விசேட நிகழ்வாக, மிகவும் கடுமையான தேர்வு முறைக்குப் பிறகு, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Gunawardena) 'ShakthiSAT International Mission' சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aeb262-d3e4-4a34-84a8-7002de96a41b/26-6a68b00bb531e.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள்</h2><p>
</p><p>
இந்த அதிகாரப்பூர்வத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்த பல்கலைக்கழகத்தில் (Gautam Buddha University) நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயணம் ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமரும் இந்தியக் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பிரதிநிதியாகச் செனீசாவும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-train-passengers-1785256190"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-train-passengers-1785256190</id>
            <summary type="text">களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல - நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல - நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

 

நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள நாவல - நாரஹேன்பிட்டி வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d2bda7-4f45-4800-b393-af86003f5fbd/26-6a68d8ff88339.webp' /></p><p>

 

இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடை ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது.
</p><p>
 

மேலும், அன்றைய தினம் பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் ரயில் இயங்கும் நேரங்கள் குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
