<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-13T22:54:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066"></link>
            <id>https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066</id>
            <summary type="text">தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 1 நெல்லிக்காய் எவ்வாறான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771ac955-c48b-4ddb-8b3d-c417505c3970/26-6a7e40fc74a7b.webp' /></p><h4>அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்</h4><p>அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bea593-ea0c-4410-ac1e-0c5781a004a1/26-6a7e40fff021c.webp' /></p><h4>தலைமுடி பிரச்சனை</h4><p>தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5a7356-770d-425d-aa59-1e71cad6c293/26-6a7e40ff48c3d.webp' /></p><h4>சரும பிரச்சனை&nbsp;</h4><p>பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a152027-687f-4b70-aab7-65a697f3a6b4/26-6a7e40fe98970.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்தி
</h4><p>அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3328619e-e801-418f-85da-f818b796758a/26-6a7e40fde6630.webp' /></p><h4>சர்க்கரை நோய் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18fc290-fbdd-45f0-8fd6-5e0a25c0a538/26-6a7e40fd358f9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T22:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொலை ; கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பழிவாங்கலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735"></link>
            <id>https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735</id>
            <summary type="text">பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><p> 

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர். </p><p>

கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b4efc0-ea95-485d-b014-fb713b118c35/26-6a7e2c29210ea.webp' /></p><p> 

அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் பெக்கோ சமனுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க பொலிஸாரால் மீட்கப்பட்டது. </p><p>

மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று (12) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. </p><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்குள்ள CCTV கெமராவிலும் பதிவாகியுள்ளது.</p><p> 

9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், துப்பாக்கிதாரிகள் அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

அதன் பின்னர் துப்பாக்கிதாரிகள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

பின்னர், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தோலிக்க சபையுடன் அரசாங்கம் முக்கிய கலந்துரையாடல் ; பாடசாலைகள் தொடர்பில் பல தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927"></link>
            <id>https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927</id>
            <summary type="text">விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p> </p><p></p><p>அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தந்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f1bc70-296a-428b-8f9b-d8aef1e300a4/26-6a7e26192d889.webp' /></p><p>மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

வருடத்திற்கு மூன்று தடவைகள் கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக இதன்போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். </p><p>

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் ஆராய வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார். </p><p>

எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-kithulkala-nuwara-eliya-1786650531"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-kithulkala-nuwara-eliya-1786650531</id>
            <summary type="text">நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p>குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17ff9a7-2f00-43a6-ab06-7b2adabcb52c/26-6a7e1fa572957.webp' /></p><p>

பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களின் உணர்வுகளை நாய்கள் புரிந்து கொள்ளுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dogs-understand-human-emotions-scientist-find-evid-1786649750"></link>
            <id>https://jvpnews.com/article/dogs-understand-human-emotions-scientist-find-evid-1786649750</id>
            <summary type="text">மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நாய்களின் மூளைச் செயல்பாடுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்காக 12 நாய்களின் மூளைச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்களின் முகப்படங்கள் அவற்றுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92ccf06f-cf23-4faa-a6c5-8daf17de00a9/26-6a7e1c98166a5.webp' /></p><p>ஆய்வில், மகிழ்ச்சியான முகங்களைப் பார்த்தபோது நாய்களின் மூளையில் உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் வெகுமதி உணர்வுடன் தொடர்புடைய Temporal Cortex மற்றும் Caudate Nucleus ஆகிய பகுதிகள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மறுபுறம், கோபம், பயம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் முகங்களைப் பார்த்தபோது, இந்த குறிப்பிட்ட மூளைப் பகுதிகளில் அதே அளவிலான செயல்பாடு காணப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது, பயம், கோபம் மற்றும் சோகம் ஆகிய எதிர்மறை உணர்வுகளை நாய்கள் தனித்தனியாக வேறுபடுத்தி அறிந்துகொள்ளக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மனிதர்களுடன் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்ததன் விளைவாக, மனிதர்களின் முகபாவனைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் ஒத்துழைக்கும் வகையில் நாய்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம் என அறிவியல் நிபுணர் லோரா குவாயா தெரிவித்துள்ளார்.
</p><p>
அடுத்தகட்ட ஆய்வுகளில், மனிதர்களின் உடல் மொழி, குரலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாசனை உள்ளிட்ட பல்வேறு சைகைகளை நாய்கள் எவ்வாறு ஒருங்கிணைத்து மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நாய்களும் அன்பான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் என்பதுடன், வேறுபட்ட சூழலில் வளர்ந்த நாய்கள் மனிதர்களின் உணர்வுகளுக்கு மாறுபட்ட விதத்தில் பதிலளிக்கக்கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இறைவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-vat-taxpayers-warning-1786647547"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-vat-taxpayers-warning-1786647547</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த காலக்கெடுவுக்குள் VAT வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால், சட்ட விதிகளுக்கு அமைய அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306c4818-5712-4aa7-b1ae-bca852d6a405/26-6a7e13fd2dea3.webp' /></p><p>அத்துடன், காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்திற்கு கிடைத்தால், அதுவும் தாமதமான வரி செலுத்துகையாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஜூலை மாதத்திற்கான VAT வரி அறிக்கையை ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
குறித்த VAT வரி அறிக்கையை இணையவழி முறையில் சமர்ப்பிக்குமாறும் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், தடுத்து வைக்கப்படும் வரியை (Withholding Tax) ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
எனவே, வரி செலுத்துவோர் உரிய காலக்கெடுவிற்குள் வரிகளை செலுத்தி, தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய அபராதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி தீவிரமடையலாம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drought-sri-lanka-may-intensify-due-el-nino-impact-1786646693"></link>
            <id>https://jvpnews.com/article/drought-sri-lanka-may-intensify-due-el-nino-impact-1786646693</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த எல் நினோ தாக்கத்தின் விளைவுகள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த எல் நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6669526-199d-4891-8195-a8dc8e45ee00/26-6a7e10a6b2288.webp' /></p><p>இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
எனினும், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், எல் நினோ நிலைமை உருவாகும் பட்சத்தில் நாட்டின் நீர்வளம், விவசாயம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் அதன் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலநிலை நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்கால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து ; தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-waiting-artificial-foods-intestinal-disease-1786644359"></link>
            <id>https://jvpnews.com/article/danger-waiting-artificial-foods-intestinal-disease-1786644359</id>
            <summary type="text">இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதும் இவ்வாறான நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62314e2f-ba06-4988-97e3-7502bda70044/26-6a7e078916047.webp' /></p><p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உளவியல் காரணிகளும் குடல் ஆரோக்கியத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

எனவே, இளைஞர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவணையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி ; பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475</id>
            <summary type="text">தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efd09eb-7a35-41f3-ae9d-471e4a02fd38/26-6a7e0414685a7.webp' /></p><p>இந்த விளம்பரங்களை நம்பிய பலர், வீடுகளை நிர்மாணிப்பதற்காக சந்தேகநபரின் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியுள்ளனர்.
</p><p>
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த பணத் தொகை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய திருப்பம் ; இந்தியாவில் கைது செய்யப்பட்ட இருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், அந்நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c87f75-970f-4393-b04d-0e29dc24f1dc/26-6a7dfee20d2b2.webp' /></p><p>இதனையடுத்து, இருவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே குறித்த இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இருவரிடமும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:29:12+00:00</updated>
        </entry>
    </feed>
