<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T17:33:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராயக் கூட்டுப் பொறிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/joint-mechanism-to-examine-the-problems-prisoners-1786123812"></link>
            <id>https://jvpnews.com/article/joint-mechanism-to-examine-the-problems-prisoners-1786123812</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பரவலாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ab2bb7-9701-42bf-a8f2-4894e096cfef/26-6a761625d3655.webp' /></p><p>அத்துடன், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
 

அதற்கமைய, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் உருவாக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிர்வாகத்தில் மாற்றம் ; உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/several-senior-police-officers-transferred-1786123318"></link>
            <id>https://jvpnews.com/article/several-senior-police-officers-transferred-1786123318</id>
            <summary type="text">தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761baecd-7888-4cfe-aee0-d1f4490bf478/26-6a7614375cbd9.webp' /></p><p>

 

மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் கடமையாற்றுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பதவியில் இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் கே.பி. கருணாரத்ன அப்பதவியில் இருந்து வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

 

வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இதைத் தவிர, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>

 

இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைகளில் திடீர் கலக்கம் ; காரணம் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/disturbance-kuruvita-prisons-investigation-cause-1786122912"></link>
            <id>https://jvpnews.com/article/disturbance-kuruvita-prisons-investigation-cause-1786122912</id>
            <summary type="text">இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளிச் சிறை முகாம் ஆகிய இடங்களில் இன்று (07) கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் அமைதியின்மைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளிச் சிறை முகாம் ஆகிய இடங்களில் இன்று (07) கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் அமைதியின்மைச் சம்பவங்கள் தொடர்பாகப் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இன்றைய தினம் இரு சிறை வளாகங்களிலும் கைதிகள் திடீரென அமைதியின்மையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1b3c9a-c896-4334-aeb2-d51ae9ffbd1a/26-6a7612a1e22d8.webp' /></p><p>நிலைமையை உடனடியாகச் சீர்செய்யும் பொருட்டு, இலங்கை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) விரைவாகக் வரவழைக்கப்பட்டு, சிறை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் தடுக்கும் நோக்கில், இரு சிறைச்சாலைகளையும் சூழ இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் அடங்கிய பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அமைதியின்மைக்கான மூலக் காரணம் மற்றும் பின்னணி குறித்துச் சிறைச்சாலைத் திணைக்களம் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் வன்முறை மோதல் ; உயிரிழந்த கைதியின் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/violent-clash-magazine-prison-background-deceased-1786122181"></link>
            <id>https://jvpnews.com/article/violent-clash-magazine-prison-background-deceased-1786122181</id>
            <summary type="text">பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h3>விசேட விசாரணைகள்</h3><p>

 

வெளியில் இருந்து சிலர் சிறைச்சாலை வளாகத்திற்குள் எறிந்த ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ce1253-3ef5-46cf-8ca4-df5d3d5fcf0f/26-6a760fc75ecb5.webp' /></p><p>அச்சமயத்தில் ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.</p><p> 

 

அவர்களில் பெரும்பாலானோர் "கொஸ்மல்லி" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர்கள் எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

அமைதியின்மையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, நிலமையைக் கட்டுப்படுத்தச் சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகப் போராடியுள்ளனர்.
</p><p>
 

இரு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போதே ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவன பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்டீன் (35 வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
</p><p>
 

இவர் கல்கிஸை வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் கொலை மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைப் கொலை உட்படப் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.
</p><p>
 

மேலும், "ஹோமாகம ஹந்தயா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கூலிப்படை துப்பாக்கிதாரியாக பணியாற்றியதாகக் கூறப்படும் இவருக்கு எதிராகக் காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p></p><p> 

 

அத்துடன், கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராகவும் இவர் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.</p><p>இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கருதப்படும் 9 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p> சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T16:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் ; விவகாரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p style="text-align: justify;">பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p style="text-align: justify;">
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T15:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை ; அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/steps-taken-to-expedite-bail-procedures-prisoners-1786117047"></link>
            <id>https://jvpnews.com/article/steps-taken-to-expedite-bail-procedures-prisoners-1786117047</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.</p><p></p><p>கொழும்பில்,இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0565ddb0-dc33-4675-a836-787c98ec4932/26-6a75fbb93b090.webp' /></p><p>அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் விளக்கமறியலில் உள்ள கைதிகள் பிணை பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்ய 70 புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நவீன இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன.
</p><p>
இதன் மூலம் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.</p><p>

எனவே, சிறைச்சாலைக்குள் ஒரு சிலர் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ பலியாகாமல் பொறுமையுடன் செயற்படுமாறும், அரச உடைமைகளுக்கோ அல்லது சிறைச்சாலைச் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கைதிகளிடம் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:37:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178"></link>
            <id>https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178</id>
            <summary type="text">குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18ad013-d173-4c2f-9738-67e771a50db9/26-6a75dcfc09d56.webp' /></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்&nbsp;</h2><p>&nbsp;நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.</p><p>பல்லன்சேன சிறைச்சாலை கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பின்னர், பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முதியவர் செய்த விபரீத செயலால் வந்த வினை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த இரவு குடும்பத்தில் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி திரவத்தைக் குடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf6db2-4f2d-4654-bb0b-33b17ee921c0/26-6a75d8c9cecff.webp' /></p><h2>&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>&nbsp;மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸ் மா அதிபருடன் வாக்குவாதம் ; இறுதியில் வசமாக பிடிபட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argument-with-police-chief-in-ampara-1786106909"></link>
            <id>https://jvpnews.com/article/argument-with-police-chief-in-ampara-1786106909</id>
            <summary type="text">அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f91a78-18c5-42a5-b840-3972298e9206/26-6a75d41f27d9d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்காமல் ஆவணங்களை மட்டும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "> சட்டமீறல் தொடர்பில் அபாரதப் பத்திரம் வழங்க பொலிஸார் முற்பட்டபோது, சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அங்கிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலையிட்டு, பொலிஸாரிடம் தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமல் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்குமாறு அறிவுறுத்திய போதிலும், சாரதி பிரதிப் பொலிஸ் மா அதிபருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனையடுத்து, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குறித்த சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; ">சந்தேகநபரின் சீரற்ற நடத்தையை அடுத்து, அவர் அம்பாறை பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T13:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லங்களை வீடியோ பதிவு செய்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-for-filming-top-officials-homes-1786105432"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-for-filming-top-officials-homes-1786105432</id>
            <summary type="text">கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
சந்தேக நபர் வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்திய கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0337c5d0-cf0d-4f89-b9e3-1d4f406bd08d/26-6a75ce59459e7.webp' /></p><h2 style="text-align: justify; ">வீடியோ பதிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நேற்று (6) பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர், சொகுசு வாகனமொன்றில் வந்த நபரொருவர் வீதியோரத்தில் நின்றவாறு இல்லத்தை வீடியோ பதிவு செய்வதை அவதானித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பின்னர், சந்தேக நபரின் செயற்பாடு குறித்து அருகில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகபூர்வ அதிகாரியிடம் தெரிவிக்கவே, அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குருந்துவத்தை பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைப்பேசியைச் சோதனையிட்டபோது, பொலிஸ் மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம், அதனைச் சுற்றியுள்ள வீதி, பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சூழல் ஆகியவற்றை வீடியோ எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, பொழுதுபோக்கிற்காகவே தான் இவ்வாறு வீடியோ பதிவு செய்ததாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளின்போது தனது வசிப்பிடம் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து அவர் முரணான தகவல்களை வழங்கி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் அழுபோமுல்ல - அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குருந்துவத்தை பொலிஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T13:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடிக்கும் மோதல்கள் ; யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tight-security-measures-at-jaffna-prison-1786104337"></link>
            <id>https://jvpnews.com/article/tight-security-measures-at-jaffna-prison-1786104337</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e0cc2e-f616-46f6-94e8-55ceec49ae8a/26-6a75ca1363db9.webp' /></p><h2>அமைதியின்மை&nbsp;</h2><p>
</p><p>
அண்மையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அவற்றின் தாக்கம் ஏனைய சிறைச்சாலைகளிலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T12:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; சந்தேகநபர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-suspect-count-rises-further-1786103043"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-suspect-count-rises-further-1786103043</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (07) நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/386ab277-330a-44e0-905b-6b0286152283/26-6a75c5050cbb3.webp' /></p><h2 style="text-align: justify; ">பெயர் பட்டியல்</h2><p style="text-align: justify; ">

 

இதற்கமைய, ஏற்கனவே பெயரிடப்பட்ட 38 சந்தேகநபர்களுடன் இன்று பெயரிடப்பட்ட 24 பேரையும் சேர்த்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான பெயர் பட்டியலையும் 'பி' அறிக்கையையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேரடியாக நீதவானிடம் ஒப்படைத்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், சந்தேகநபர்களான 38 பேரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; ">

 

இது தவிர, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களையும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் 62 சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றம், நெரிப்படைச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T12:00:15+00:00</updated>
        </entry>
    </feed>
