<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T22:42:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020</id>
            <summary type="text">&amp;nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.


ஜார்க்கண்ட் மாநிலம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">


ஜார்க்கண்ட் மாநிலம்&nbsp; ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753382e-0913-4c4e-9787-4db3e94f863c/26-6a60fc9e65790.webp' /></p><h2 style="text-align: justify;">கொடூரமாக&nbsp;கொலை </h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்,இளம் பெண்ணுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
</p><p style="text-align: justify;">

எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் இருக்க முடியாது என நினைத்து கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து எதிர்கால கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அதன்படி இளம் பெண் தனது வருங்கால கணவர் பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

இதை நம்பிய இளைஞன் குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து, குறித்த இளைஞனை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். 

பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர். </p><p style="text-align: justify;">

இதற்கிடையே காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T22:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஜூன் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-june-inflation-rate-updated-1784757487"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-june-inflation-rate-updated-1784757487</id>
            <summary type="text">உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 6.5 சதவீதமாக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p> 
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7590558b-6db6-45d4-b907-d54535d0c647/26-6a613cf116129.webp' /></p><h2>பணவீக்கம்</h2><p> 
 
இதன்படி மே மாதத்தில் 5.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p> 
அத்துடன் மே மாதத்தில் 1.5 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p> 
அதேபோல், உணவு அல்லாத பணவீக்கமும் 8.6 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:58:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் ; மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-missing-in-mahaweli-river-1784755812"></link>
            <id>https://jvpnews.com/article/boy-missing-in-mahaweli-river-1784755812</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>


நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367dec88-a3b6-4194-9c96-4f52eaef4e15/26-6a61366666b8b.webp' /></p><h2>மீட்பு பணி</h2><p> 



சம்பவத்தின் போது ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>


காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகள் பிரதேசவாசிகள் மற்றும் கம்பளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் அறிமுகமாகும் புதிய திட்டம் ; பிமல் ரத்நாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-north-next-year-1784752980"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-north-next-year-1784752980</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவை வினை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவை வினைத்திறனாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aaf24a0-aa95-44ee-bc5a-51108e6f63e5/26-6a612b55ee485.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;பொது போக்குவரத்து சேவை</h2><p>
</p><p style="text-align: justify;">
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,</p><p style="text-align: justify;">மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.</p><p style="text-align: justify;">மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுவதால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p style="text-align: justify;">வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T20:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564"></link>
            <id>https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f46d42-0089-479a-bf1e-0a94a6dd05b3/26-6a6121e5a3bbf.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T20:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக நடத்தப்பட்ட சோதனை ; நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545"></link>
            <id>https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545</id>
            <summary type="text">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொறகொட பொலிஸ் பிரிவின் லபுனோருவ பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் 21 ஆம் திகதி 22ஆம் திகதி புதன்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பின் போது புதயல்தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் மொறகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a53c2b-cb87-4b0a-8e8f-bc83b82a0718/26-6a611a03164f8.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்டவர்கள் 37,43,52,54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T19:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞனின் உயிரை பறித்த மதுபோதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-and-motorcycle-collide-in-road-accident-1784747547"></link>
            <id>https://jvpnews.com/article/car-and-motorcycle-collide-in-road-accident-1784747547</id>
            <summary type="text">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd24052f-e5a1-42ce-8404-26adf7e1502a/26-6a61161d576fe.webp' /></p><h2 style="text-align: justify;">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

அத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify;">

உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அலட்சியமான மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என மனம்பிட்டிய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T19:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a31f59-0005-469c-8bbb-6cd91a7937c7/26-6a610bf5430c4.webp' /></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:29:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714</id>
            <summary type="text">சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண்&nbsp; சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51b129d-866a-4cfe-9315-59f7115bc5b8/26-6a60ff53b1133.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் உயிரிழந்தவர் சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதோ 22 .... ஆனால் 14 திருமணங்கள்; கல்யாண ராணியால் அதிர்ந்த பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992"></link>
            <id>https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bda548-fe67-46f0-a47b-1c16e81d376c/26-6a60ba1aec411.webp' /></p><p></p><h2>முதல்&nbsp; திருமணம் முறிந்ததால்&nbsp; தொடர் திருமணம்</h2><p>அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.</p><p></p><p> </p><p>

அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார். </p><p>

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a066d2-a33b-41ef-aa13-61db62ee5c04/26-6a60ba1ba0ee8.webp' /></p><p> 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். </p><p>

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். 

திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.</p><p></p><p> 

 ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.</p><p>மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.</p><p>இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.</p><p></p><h3>வெப் சீரியஸ்களைப் பார்த்து வந்த யோசனை</h3><p> </p><p>

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. </p><p>

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். </p><p>

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். </p><p>விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் 2 பெண்களுடன் கைதான நபர்கள் ; தங்கத்துடன் கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/men-arrested-with-two-women-at-hotel-1784739312"></link>
            <id>https://jvpnews.com/article/men-arrested-with-two-women-at-hotel-1784739312</id>
            <summary type="text">மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வத்தேகம ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வத்தேகம பொலிஸாரினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302d2735-7c81-4c40-a682-cd2b1a876a8b/26-6a60f5f2557b1.webp' /></p><p> 

கைதானவர்களில் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> 

இந்நிலையில் அவர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:55:18+00:00</updated>
        </entry>
    </feed>
