<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T12:36:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa144a1-9d1d-4f8b-b78a-bcc5896e5b22/26-6a9ff9fe4fda6.webp' /></p><h2>மேலதிக கால அவகாசம்&nbsp; வழங்கப்பட மாட்டாது</h2><p>

அதேசமயம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
 இந் நிலையில் , செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை கடல் எல்லைக்கு அருகில் 47 கப்பல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/middle-east-tension-47-ships-near-sri-lanka-water-1788867351"></link>
            <id>https://jvpnews.com/article/middle-east-tension-47-ships-near-sri-lanka-water-1788867351</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b350273f-0762-49cb-85bc-78ff710714d1/26-6a9ff3190be98.webp' /></p><h2>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர்&nbsp;</h2><p>
</p><p>
 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
</p><p>
 

இந்தக் கப்பல்களில் ஈரானியக் கப்பல்களும் ஏனைய நாடுகளின் கப்பல்களும் அடங்குவதாகவும், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 

இந்தக் கப்பல்கள் எதுவும் இதுவரை இலங்கையிடம் எந்தவித வசதிகளையும் கோரவில்லை என்றும், இலங்கையும் அவற்றுக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இருப்பினும் கடற்படையினர் இது குறித்து அவதானித்து வருவதாகவும், அரசாங்கம் இதில் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகன் சிறையில் ... களத்தில் குதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f563a342-a320-465c-b856-ef38984ee800/26-6a9fba94db441.webp' /></p><p></p><h2>முன்னதாக&nbsp;நாமல் ராஜபக்ஷ தலைமையில்&nbsp; பேரணி&nbsp; ஏற்பாடு</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி காதல் ; திருவிழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485"></link>
            <id>https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இன்னிலையில் மஆணவியை வன்புனர்த சம்பவம் தொடர்பாக, செருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8112e36-c174-4387-9e52-9113819b3946/26-6a9fe3ff50281.webp' /></p><h2>தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல்</h2><p> </p><p>

பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p></p><p>எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புனவுர்க்கு உடபடுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல் உறவு மூலம் அந்த மாணவியை ஏமாற்றி, பெரஹெரா திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செருவிலவுக்கு வரவழைத்தே கூட்டாகப் வன்புனர்வு செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குற்றத்தைச் செய்த முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>

 தாக்குதலுக்குள்ளான மாணவி மேலதிக சிகிச்சைக்காகக் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் முத்தூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , மீலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T10:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460"></link>
            <id>https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460</id>
            <summary type="text">&amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41ddb4e-8354-4bd2-b6e7-41bd845ca4db/26-6a9fd82e57b81.webp' /></p><h2>&nbsp;நாளை வரை செல்லுபடியாகும்&nbsp;எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p> </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T09:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியம் முதல் அழகு வரை; டிராகன் பழத்தின் நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254"></link>
            <id>https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ நன்மைகளையும் வழங்குகின்றது.</p><p>
 கள்ளிச்செடி குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன அதிகளவில் நிறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f01ba6-8f01-47ab-8cc4-4fdd5d43a18a/26-6a9fd377ab5aa.webp' /></p><h2>&nbsp;ஆரோக்கிய&nbsp; நன்மைகள்</h2><p>
</p><p>
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் அதிகளவில் காணப்படுவதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.</p><p> 

பருவகாலத் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e58b8c3-0e61-46d0-86b6-b115b8ddbb94/26-6a9fd378681df.webp' /></p><p>

இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. </p><p>

 இதன் கருப்பு நிற விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30da72b9-b579-47be-afa2-93d6eeb504fd/26-6a9fd37921dd8.webp' /></p><p>

டிராகன் பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.
</p><p>
 இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமச் செல்களைப் புதுப்பித்து, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையுடன் தோற்றபொலிவை பேணவும் டிராகன் பழம் உதவுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T09:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார்.
</p><p>
வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d71a82-bd2d-40db-8a15-ce00b4405d0b/26-6a9fb891d8913.webp' /></p><h2>&nbsp;23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>

இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும், தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T09:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-remains-in-remand-1788857610"></link>
            <id>https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-remains-in-remand-1788857610</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இன்று செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d9f623-bb20-492f-83d1-c3eea80f1e6a/26-6a9fcd0c3ba46.webp' /></p><p></p><p>இந் நிலையில், இன்றையதினம் மீண்டும் தேரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேரர் கைதானமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-08T08:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-visits-sri-lanka-1788857282"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-visits-sri-lanka-1788857282</id>
            <summary type="text">38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார்.



இந்திய பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார்.
</p><p>


இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423928cc-e085-4651-a8b3-baaa0f6d4d44/26-6a9fcbc428cad.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு</h2><h2><span style="font-size: 14px;">ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</span></h2><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>அதேளை&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-sales-at-colombo-national-hospital-1788856389"></link>
            <id>https://jvpnews.com/article/drug-sales-at-colombo-national-hospital-1788856389</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


சம்பவம் தொடர்பில் கைதான 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள், மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81edc08-2708-47b6-9e6b-fc4cfeda29a0/26-6a9fc8473d7ff.webp' /></p><h2>இரு ஊழியர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம்</h2><p>
</p><p>


பொரளை – வானத்தமுல்ல பகுதியில் இருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



 கைது செய்யப்பட்ட இரு ஊழியர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p> 

 கைதான அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.</p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-09-08T08:06:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-shock-the-people-of-sri-lanka-1788854154"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-shock-the-people-of-sri-lanka-1788854154</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (07) 24 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 377,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502dc738-2f38-49fd-80a1-4bd32038e987/26-6a9fbf8bf081e.webp' /></p><p>
</p><p>
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T07:52:48+00:00</updated>
        </entry>
    </feed>
