<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T09:34:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T09:25:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்ற கும்பலுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி ; மீட்கப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199"></link>
            <id>https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199</id>
            <summary type="text">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் கிரின்த கடலோரப் பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைது செய்ய இந்த உளவாளியே தகவல்களை வழங்கியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f1c8097-4269-447f-b9af-31c49000c2e5/26-6aa11f4884f1e.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; "> 

 

இந்த ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

இருப்பினும், வெளிநாட்டில் இருக்கும் 'ரூபன்' மற்றும் 'அங்கொட பிரியங்கர' ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகளால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கடத்தல் பொலிஸாரிடம் சிக்கியதால் ஏற்பட்ட இழப்புக்குப் பழிவாங்கும் வகையில், அந்த உளவாளியைக் கடத்திக் கொலை செய்து, அவரது தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன் போட்டுவிட்டுச் செல்ல குற்றவாளிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

எனினும் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2026 செப்டம்பர் 05ஆம் திகதி காலை 06 மணியளவில் கிரிந்த துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உளவாளியை இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியால் மோதி கொலை செய்ய குற்றவாளிகள் முயன்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது உளவாளி அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற ஜீப் வண்டி குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டி மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T09:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461"></link>
            <id>https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் இன்று (09) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (10) வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec54264-d1b9-4211-a963-fa05b7722529/26-6aa11c66744e5.webp' /></p><p>
</p><p>


இதன்படி, குறித்த கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கும் வர்த்தமானி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881"></link>
            <id>https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881</id>
            <summary type="text">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (09) புதன்கிழமை உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் (அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76625e66-975b-4449-932a-a5ca6bcde778/26-6aa11b0da4b9e.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைக்காலத் தடை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் நடைபெற்றிருந்தது. </p><p style="text-align: justify;">


அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும், அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதன்படி, மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

எனினும், எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அத்துடன், முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T08:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.



அமெரிக்க டொலரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.2860 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.2894 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2fb51a-6a14-4922-9850-92a3508b24d7/26-6aa11b6d5cc2f.webp' /></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-09T08:37:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இசை நிகழ்ச்சி பார்க்கச்சென்றவருக்கு இறுதியில் காத்திருந்த சோகம் ; நள்ளிரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469</id>
            <summary type="text">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb6f510-76f1-425b-be98-c6184045b217/26-6aa10ccebf09e.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விபத்தில் உயிரிழந்தவர் 44 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; ">

 

இவர் கடந்த நாள் ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2.00 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இரவு நேரத்தில் இந்த விபத்தைக் எவரும் பார்க்கவில்லை எனவும், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் சம்பவத்தைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

உயிரிழந்த நபர் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, செயலி (App) மூலம் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாகச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் இரத்து; பயணிகள் பெரும் அவதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b87fcb-d851-488c-82fb-de19106c3982/26-6aa1089b9969c.webp' /></p><h2>&nbsp;பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம்&nbsp;</h2><p>
</p><p>
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
</p><p>
 இந்த திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 இந் நிலையில் விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T07:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோயில் செல்ல தயாரான இளைஞருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677</id>
            <summary type="text">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



கிரான்குளம் பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d552bd-3a60-4ae1-8b7e-fa5771d335e6/26-6aa101e716992.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">


இந்நிலையில், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கி பயணித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663</id>
            <summary type="text">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ்&nbsp; குடும்ப பெண்&nbsp; செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c210c05-3d22-4ad3-9884-781eea5ecbd3/26-6aa0d2f9531ab.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858"></link>
            <id>https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858</id>
            <summary type="text">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5afecc5-8951-479c-829b-06b346eea03b/26-6aa0facb99236.webp' /></p><h2 style="text-align: justify; ">நெருக்கடி நிலை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அப்பால் ஈரானியக் கப்பல்கள் ; அமெரிக்க தூதரகத்தின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056"></link>
            <id>https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056</id>
            <summary type="text">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2246ba31-ff09-4f2d-9221-32b17e07a235/26-6aa0f4f713f60.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்காணிக்கப்படும் கப்பல்</h2><p style="text-align: justify; ">

குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொலிசார் என போலி விளம்பரங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190"></link>
            <id>https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், பொதுமக்கள் இவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929e3dc-ad50-4da1-999a-606964373f3c/26-6aa0f4475cc33.webp' /></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை அல்ல.</p><p></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன், 'Sri Lanka Police' இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தின் சோகம் மாறுவதற்குள் நள்ளிரவில் நிலநடுக்கம்; பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/earthquake-strikes-nepal-at-midnight-people-panic-1788930657"></link>
            <id>https://jvpnews.com/article/earthquake-strikes-nepal-at-midnight-people-panic-1788930657</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அங்க்குள்ள மக்களை அச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அங்க்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae3a03fa-f4fe-41be-b8c5-e619e6f82b2e/26-6aa0ea62869e0.webp' /></p><p>

 இன்னிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-09T05:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனை கொன்று சடலத்தை தீ வைத்து எரித்த நண்பர்கள் ; இலங்கையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-kill-youth-and-burn-his-body-1788929816"></link>
            <id>https://jvpnews.com/article/friends-kill-youth-and-burn-his-body-1788929816</id>
            <summary type="text">கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


குறித்த இருவரும் உயிரிழந்த நபருடன் ஒன்றாக மதுபானம் அருந்திய பின்னர் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததுடன், எரிந்த உடல் பாகங்களை அப்பகுதியில் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891090f3-7bc2-4041-91ed-67a2a99974f3/26-6aa0e719b515d.webp' /></p><h2 style="text-align: justify; ">காட்டுப் பகுதியில் சடலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">&nbsp;கொலை செய்யப்பட்டவர்&nbsp; 29 வயதுடையவரென தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது இளைய சகோதரர் தலாத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "> 



இதனையடுத்து பொலிஸார் அவரைத் தேடி வந்த நிலையில், காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> 



இதன்போது உயிரிழந்த நபர் இறுதியாக தொடர்பில் இருந்த இருவர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.</p><p style="text-align: justify; ">



அதனடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



இதன்போது கொலை மற்றும் சடலத்தை அப்புறப்படுத்தியமை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எவ்வாறாயினும், இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை முழுமையாக வெளியாகாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பின்னணி குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களிடமும் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-airlines-diverted-to-frankfurt-as-uk-air-1788930212"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-airlines-diverted-to-frankfurt-as-uk-air-1788930212</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திற்குத் திருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>

பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0e192d-0ab0-43c7-a47d-fc725301dc71/26-6aa0e8af2401d.webp' /></p><h2>&nbsp;தொழில்நுட்ப பிரச்சினை</h2><p>

வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 04:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், விமானங்கள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p><p>

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி தந்த அழகன் நல்லூர் கந்தன்- LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ள.</p><p>இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் கந்தன் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8289f5-2c00-45e6-ab72-aa9ccd97be24/26-6aa0e12310afe.webp' /></p><p> </p><p>கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது.
</p><p>&nbsp;நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசபட்ட 19 வயது இளைஞன் ; இறுதியில் நேர்ந்த துயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-man-thrown-from-motorcycle-1788927400"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-man-thrown-from-motorcycle-1788927400</id>
            <summary type="text">மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில்&amp;nbsp; 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில்&nbsp; 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில், கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் மாத்தறை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb646da9-047e-4106-89d4-2fe87b9dde89/26-6aa0ddaa35ef9.webp' /></p><h2 style="text-align: justify; ">சம்பவ இடத்திலேயே பலி</h2><p style="text-align: justify;"> 

 

இதன்போது தூக்கி வீசப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify;">
 

மற்றைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இவ்வாறு உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T04:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் செயலாளர் படுகொலை சம்பவம் ; நாடு கடத்தப்பட்ட 'கொண்ட ரஞ்சி’ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deported-konda-ranjie-arrested-1788926310"></link>
            <id>https://jvpnews.com/article/deported-konda-ranjie-arrested-1788926310</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcbf1d9-cc69-4ec7-929d-2acc18fe81f2/26-6aa0d968537bf.webp' /></p><h2 style="text-align: justify; ">டுபாயில் கைது</h2><p style="text-align: justify; ">

 

‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T03:58:55+00:00</updated>
        </entry>
    </feed>
