<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T22:45:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-drugs-in-police-raid-1784842904"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-drugs-in-police-raid-1784842904</id>
            <summary type="text">அநுராதபுரம் மற்றும் வீரம்பு கெதர பொலிஸ் பிரிவுகளில்&amp;nbsp; புதன்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மற்றும் வீரம்பு கெதர பொலிஸ் பிரிவுகளில்&nbsp; புதன்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத வீடமைப்பு வீதியில் நேற்றுமுன்தினம், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசேட சுற்றவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c050c-7f4d-4d4b-bd90-43e7c45a2681/26-6a628a9a2522f.webp' /></p><h2>போதைப்பொருள்</h2><p>
</p><p>
இதன்போது, 100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 90 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இதேவேளை, வீரம்பு கெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிதுருவெல்ல பகுதியில் வீரம்பு கெதர பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றவளைப்பில் 80 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
</p><p>
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T22:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/23-private-hospitals-and-labs-face-legal-action-1784840900"></link>
            <id>https://jvpnews.com/article/23-private-hospitals-and-labs-face-legal-action-1784840900</id>
            <summary type="text">காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p> 

அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83401f0b-d711-4360-bceb-6cb1522555a5/26-6a6282c6127a9.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

பொது சுகாதாரத்திற்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p> 

பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்தகங்களை இலக்கு வைத்து விசேட விசாரணைகளும் சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p> 

இந்த விசாரணைகளின் போது பொதுமக்களின் வாழ்க்கையிலும் சுகாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல தீவிர முறைகேடுகள் நுகர்வோர் சேவை அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635</id>
            <summary type="text">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423236e5-2a29-424b-9014-ecc1bd072bfd/26-6a626285680ed.webp' /></p><h2 style="text-align: justify; ">விபரீத முடிவு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

இந்த நிலையில் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்த போது நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, தொழிலதிபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T21:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 மாத பெண் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து ; வைத்தியசாலையில் 3 சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-accident-kills-9-month-old-baby-girl-1784839498"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-accident-kills-9-month-old-baby-girl-1784839498</id>
            <summary type="text">தம்புள்ள - ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தம்புள்ள - ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">&nbsp;விபத்தில் சிக்கிய வாகனத்தில்&nbsp;சாரதி உட்பட 10 பேர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920bd55b-5ca0-4894-b1c3-a4e2b1665ce2/26-6a627d4c3126d.webp' /></p><p style="text-align: justify; ">இவ்விபத்தில் காயமடைந்த மூவர் மற்றும் 3 சிறுமிகள் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T21:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாதங்களில் 5,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/000-child-abuse-complaints-in-6-months-1784838130"></link>
            <id>https://jvpnews.com/article/000-child-abuse-complaints-in-6-months-1784838130</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (23) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfcd1480-436c-4bcf-9f72-7eee05278a46/26-6a6277f394405.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரின் தகவலின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
</p><p style="text-align: justify; ">
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் கீழ் இயங்கும் 47 காவல் துறை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பணியகங்களுடன் இணைந்து விசாரணைகளை விரைவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பான சூழலில் காணொளி மூலம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒன்பது மாகாணங்களிலும் வீடியோ சாட்சியப் பதிவு அலகுகளை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T20:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 இலட்சம் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opportunity-awaits-250-000-sri-lankans-1784837082"></link>
            <id>https://jvpnews.com/article/opportunity-awaits-250-000-sri-lankans-1784837082</id>
            <summary type="text">நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை பிரதான இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை பிரதான இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைகளுக்கு மத்தியிலும், இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான நாடுகளைக் கண்டறிந்து, அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்தப் பணியகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d006213b-2f98-4e65-a299-09e02662264a/26-6a6273dbe1379.webp' /></p><h2 style="text-align: justify;">சிறிய வீழ்ச்சி</h2><p>
</p><p style="text-align: justify;">
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
அதற்கமைய இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,873 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதேபோன்று தென் கொரியாவுக்கு 8,000 தொழிலாளர்களை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,794 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
அரசாங்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,43,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். 92,590 ஆண் தொழிலாளர்களும், 50,497 பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.</p><p style="text-align: justify;"> 73,623 பேர் திறன் சார்ந்த வேலைகளுக்காகவும், 69,494 பேர் திறனற்ற பணிகளுக்காகவும் சென்றுள்ளனர்.

</p><p style="text-align: justify;">இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்குப் அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T20:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; இரவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில், மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa584de8-c02a-4372-8996-7257cf551ded/26-6a62681748bf8.webp' /></p><p> </p><p>இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் மற்றொரு அபாயம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531"></link>
            <id>https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531</id>
            <summary type="text">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb954-a7f5-40c1-a257-c4e384e6fd49/26-6a62565d1b337.webp' /></p><h2 style="text-align: justify;">தொற்று நோய்கள்</h2><p style="text-align: justify;">

நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify;">
குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T17:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் சற்று முன் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841ed905-1aa3-4a03-a8d6-c2516806b2ce/26-6a624ba3147b1.webp' /></p><p> </p><p>

 

பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:13:09+00:00</updated>
        </entry>
    </feed>
