<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T22:26:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணம் ; ‘தினன தகுண’ அமைப்பு கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374"></link>
            <id>https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374</id>
            <summary type="text">இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் &#039;தினன தகுண&#039; அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தனது பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் 'தினன தகுண' அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கும், அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்கும் ஊழலுக்கு எதிரான அலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய முற்பட்டமை இதற்குச் சிறந்த அண்மைய உதாரணமாக கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faac22ba-e3c1-439e-a84b-28c81541b192/26-6a7b9e6875707.webp' /></p><p>குடிமைசார் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருந்தும், அரசாங்கத்தின் ஏவலாளராகச் செயற்பட்டு காவல்துறையினர் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முயன்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்க ஆட்சி பீடமேறி 18 மாதங்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த 0வமைப்பு, உண்மையான வருமான வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு மற்றும் மறைமுக வரிகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றை அரசியல் எதிரிகளைப் பயமுறுத்தும் கருவிகளாக அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், இது ஜனநாயகத்தை காவல்துறை ராஜ்யத்தை நோக்கித் தள்ளும் ஆபத்தான நடவடிக்கை என்றும் 'தினன தகுண' அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் பயணத்துக்கு எதிராகக் குரலெழுப்புமாறும், நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறும் 'தினன தகுண' அமைப்பு ஊடகவியலாளர்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T22:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T22:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ; ரவிகரன் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337"></link>
            <id>https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான இரண்டாவது கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். </p><p>இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b15506e-96e8-4d6e-acf7-de4f0c6db9ed/26-6a7b9a5ad58bc.webp' /></p><p>

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில், அப்பகுதி மீனவர்களால் பெறப்பட்ட தெளிவான புகைப்பட ஆதாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நேரடியாகவே கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து உடனடி நடவடிக்கை கோரினார்.
</p><p>
கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரவிகரன் எம்.பி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளே இச்சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றம்சாட்டினார்.</p><p>

"தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால், அவர் சாலைப் பகுதியில் ஐந்து படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். </p><p>இத்தகைய வெளிமாவட்ட ஊடுருவல்களால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்வதோடு, முல்லைத்தீவு கடற்பகுதியின் வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137"></link>
            <id>https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து &#039;ஸீரோ க்ளிக்&#039; (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><p>பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) சொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64bd223-5adf-4898-992a-479da2d3daad/26-6a7b95aae5639.webp' /></p><p>

பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் 'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389"></link>
            <id>https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389</id>
            <summary type="text">முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeba6ff3-e055-4ea7-836a-aa9c9785eff7/26-6a7b92bf3b868.webp' /></p><p>இந்தத் திட்டத்திற்கு 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல், சட்டம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ,அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வலுசக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன்படி, ஒப்பந்தத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இன்றி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம் முத்துராஜவெல முனையத்தின் எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய அதிர்ச்சி ; பணமீட்டல் தகுதி இருமடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574</id>
            <summary type="text">யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP)-இல் இணைந்து பணமீட்டுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a962d5-c8c8-4024-82c2-83151bdb708d/26-6a7b8f9009510.webp' /></p><p>இதன்படி, யூடியூப் மூலம் விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டும் வசதிகளைப் பெற விரும்பும் சேனல்கள் இனி பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p>

பின்தொடர்பவர்கள்: குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.
</p><p>
பார்வை நேரம்: கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்குக் கிடைத்த மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
YouTube Shorts: Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் என்ற வரம்புக்கு பதிலாக 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
இந்த புதிய தகுதி வரம்புகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், YouTube Partner Program-இல் இணைந்து பணம் ஈட்ட விரும்பும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-scheme-farmers-prices-president-major-step-1786480771"></link>
            <id>https://jvpnews.com/article/new-scheme-farmers-prices-president-major-step-1786480771</id>
            <summary type="text">விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நெல் கொள்வனவில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இதன்படி, மாவட்டச் செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவுக்கான கடன் வழங்கும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8297dbf4-d198-4d85-9f59-5833eafd85c7/26-6a7b888513e41.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல்லை குறைந்தபட்சம் ரூ.120க்கு கொள்வனவு செய்ய வேண்டும். ஒரு விவசாயியிடமிருந்து ஹெக்டயருக்கு அதிகபட்சம் 4,000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும்.
</p><p>
கொள்வனவு செய்யப்படும் நெல் மற்றும் விவசாயிகள் தொடர்பான முறையான ஆவணங்களைப் பேணுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரிசியை விற்பனை செய்த பின்னர் பெற்ற கடனை அரசாங்கத்திடம் மீளச் செலுத்த வேண்டும் எனவும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் போகங்களிலும் இத்தகைய சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதுடன், செயலிழந்துள்ள சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலைகளை மீண்டும் செயற்படுத்த முடியும் என ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T20:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வட்டி விகிதம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-governor-announcement-interest-rates-1786479305"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-governor-announcement-interest-rates-1786479305</id>
            <summary type="text">மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6368e111-1d8b-4f74-81e0-96bd1e5e4354/26-6a7b82cb879e9.webp' /></p><p>இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். </p><p>

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறினார். </p><p>

நாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஏதேனும் விலகல்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>

எதிர்காலத்தில் நிதியியல் கொள்கையை இறுக்குவது அல்லது தளர்த்துவது பற்றிய எந்தவொரு முடிவும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேறுபட்ட பாதை உருவாகிறதா என்பதன் அடிப்படையிலேயே அமையும். 

இதுவரை அப்படி எதுவும் நாங்கள் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, இலங்கையின் முக்கிய பணவீக்கச் சுட்டெண் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகப் பதிவாகியதுடன், இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பாகும். 

நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 8 சதவீதமாக உயரும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>

மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் வீரசிங்க கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b1a7aeb-0385-4e8f-9e88-b398396eebd3/26-6a7b82ccdf2af.webp' /></p><p>பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் ஆளுநர் வீரசிங்கவின் இந்த சமீபத்திய கருத்துக்கள், மத்திய வங்கி அதன் நிதியியல் கொள்கையை குறைந்தது ஆண்டின் எஞ்சிய பகுதி வரை 8.75 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருக்கத் தயாராக இருப்பதை உணர்த்துகின்றன. </p><p>

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் காரணமாக முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வழிகள் தடைப்பட்டு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>

அரசாங்கத்தின் கணக்குகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, அரசாங்கம் எரிபொருள் விலைகளை 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதுடன், ரேஷன் முறையை அறிமுகப்படுத்தி, புதன்கிழமைகளைப் பொது விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c794f9ae-7b38-46c2-86ac-b83ca0f710be/26-6a7b82cc3a40b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T20:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nalinda-explains-regard-salary-increase-parliament-1786478039"></link>
            <id>https://jvpnews.com/article/nalinda-explains-regard-salary-increase-parliament-1786478039</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை சுட்டிக்காட்டி, சில தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி வருவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9effb580-4cac-442e-9f79-cb71bf4ea574/26-6a7b7dd903e51.webp' /></p><p>இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எந்தவொரு வகையிலும் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்றைய அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. 50,000, 60,000, 100,000 என எந்தவொரு தொகையாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் குறித்தளவிலான எரிபொருள் அளவு உள்ளது. </p><p>

அந்த லீற்றர் அளவுக்கு அமைவாக அது ஒரு படியாகச் சேர்க்கப்படுகிறது. </p><p>இது பொதுவாக அந்த நேரத்தில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்பவே கணக்கிடப்படுகிறது. </p><p>

ஆனால் 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரிப்புடன் இந்த அளவைக் கணக்கிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வழங்கியிருந்தால் அது ஒரு பாரிய அதிகரிப்பாக இருக்கும்.</p><p> </p><p></p><p>எனவே 2026 மார்ச் 1 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே கணக்கீடுகள் செய்யப்பட்டன. </p><p>மார்ச், ஏப்ரல், மே, ஜூன் வரை நிலவிய எரிபொருள் விலைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் கணக்கிட்டிருந்தால் இதை விட அதிக தொகை வழங்க வேண்டியிருக்கும். </p><p>

ஆனால் நாங்கள் மார்ச் 1 ஆம் திகதி நிலவிய விலையின் அடிப்படையில் கணக்கிட்டோம், அந்த சுற்றறிக்கையை நாங்கள் ஜூலை 1 ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவந்தோம். 

ஜூலை 1 ஆம் திகதி முதல் கணக்கிடப்படுவது, அந்த நாளில் சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்பவே ஆகும்.</p><p> குறைந்தால் குறையும், அதிகரித்தால் அதிகரிக்கும். 

அதற்கமைய எரிபொருள் விலை அதிகரித்ததால் அந்த மேலதிக தொகை கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 33 வயது இளைஞன் உயிரிழப்பு ; உடற்கூற்றில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639"></link>
            <id>https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் நேற்று (10) இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fdd4b-4259-4161-90a8-fcc02a58411a/26-6a7b7861594b1.webp' /></p><p>இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவு போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சியங்களை கோப்பாய் காவல்துறையினர் பதிவு செய்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா – இலங்கை உறவில் புதிய அத்தியாயம் ; புதிய தூதுவர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/china-relations-new-ambassador-arrives-sri-lanka-1786470901"></link>
            <id>https://jvpnews.com/article/china-relations-new-ambassador-arrives-sri-lanka-1786470901</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கையை வந்தடைந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இன்று (11) இலங்கையை வந்தடைந்துள்ளார்.</p><p></p><p> 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த அவர் இதன்போது உறுதியளித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311d0b61-9931-4c14-8b3d-e824a8b0e9e0/26-6a7b61f73217e.webp' /></p><p>தூதுவர் வெய் தனது நியமனத்தை மாபெரும் கௌரவமாகவும் பாக்கியமாகவும் கூறியதுடன், இலங்கையின் செழுமையான வரலாறு, இயற்கை அழகு மற்றும் விருந்தோம்பும் மக்கள் குறித்துத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார். </p><p>

நூற்றாண்டுகால கடல்சார் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மற்றும் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டது முதல் இருதரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர் முன்னிலைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T17:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி சிக்கலுக்கு தீர்வு காண சுங்கத் திணைக்களம் விசேட குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-committee-resolve-coversial-vehicle-import-1786467881"></link>
            <id>https://jvpnews.com/article/special-committee-resolve-coversial-vehicle-import-1786467881</id>
            <summary type="text">கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவாவிடம் வினவியபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190c4c6b-259a-4ff5-95b6-dd36b0b33e6d/26-6a7b5ddf44aa5.webp' /></p><p>குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T17:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள் ; வட மாகாண ஆளுநர் வேதநாயகன் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suicide-incidents-increasing-in-jaffna-vedanayagan-1786467556"></link>
            <id>https://jvpnews.com/article/suicide-incidents-increasing-in-jaffna-vedanayagan-1786467556</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd77338-a6ce-45cd-b626-5030ee7b0cda/26-6a7b54e5b0007.webp' /></p><p>ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்தாய்வின் போது, நிலவும் மோசமான சுகாதாரச் சூழல் குறித்தும், அதனைத் தடுப்பதற்கான பல்துறை கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.</p><p>கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>தேசிய மட்டத்தில் 1 லட்சம் பேருக்கு 15 பேர் என்ற அளவில் உள்ள இந்நிலை, யாழ்ப்பாணத்தில் 1 லட்சம் பேருக்கு 30 பேர் எனும் இரு மடங்கு வீதத்தை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p>குறிப்பாக இளைஞர்களும் பெண்களுமே அதிகளவில் இவ்வாறான தவறான முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
</p><p>
மதுப்பழக்கம், குடும்ப வன்முறைகள், உறவுகளுக்கு இடையிலான தொடர்பாடல் இடைவெளி, தனிமை மற்றும் கடுமையான உளவியல் அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
இச்சிக்கலை வெறும் சுகாதாரத் துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் கல்வி, நிர்வாகம், பொலிஸ், ஆன்மீகம் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய "மாகாண அளவிலான சமூக இயக்கமாக" மாற்ற வேண்டும்.</p><p>
</p><p></p><p>இதுவரை பதிவான உயிரிழப்புகள் குறித்த பின்னணியை விரிவாக பகுப்பாய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
</p><p>
பல்வேறு திணைக்களங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப்போக்கி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையத்தை உடனடியாக மீளமைக்க வேண்டும்.
</p><p>
மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் அல்லது தனிமையால் தவிப்பவர்கள் உடனடி உளவியல் ஆலோசனை பெற, வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 'நேயம்' (021 222 6666) என்ற 24 மணிநேர இலவச அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். </p><p>இங்கு தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T16:59:40+00:00</updated>
        </entry>
    </feed>
