<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T21:23:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916"></link>
            <id>https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமைக்கு எதிராக, சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a233535-77f6-47c0-b7ac-36d763ec3913/26-6aa7119de119a.webp' /></p><p>

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு, இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் நான்கு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.</p><p>

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660</id>
            <summary type="text">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p> </p><p>இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
</p><p>
1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2d93da1-ded5-4a8e-8ae2-25d98e53f944/26-6aa70cb6781e4.webp' /></p><p>அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.</p><p>

ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.</p><p>

1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.</p><p>

1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.
</p><p>
மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
</p><p>
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் ; கொழும்பு-துபாய் விமான சேவையை தற்காலிக இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124"></link>
            <id>https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.</p><p></p><p>

இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f547f4d5-3298-429b-81b2-081b36f9f1e2/26-6aa70a9de9967.webp' /></p><p>பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் அதன் தாக்கம் தனது விமானச் செயல்பாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் கூறியுள்ளது.</p><p>&nbsp;தற்போதைய திட்டத்தின்படி, 2026 நவம்பர் 19 முதல் கொழும்பு-துபாய் விமான சேவையை மீண்டும் தொடங்க ஃபிட்ஸ் ஏர் எதிர்பார்க்கிறது. </p><p>இருப்பினும், இது அக்காலத்தில் நிலவும் சூழ்நிலையையும் எதிர்கால நிகழ்வுகளையும் பொறுத்தே அமையும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது. &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் சனிக்கிழமை கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725d8586-518a-470e-9e52-b66373fe5b08/26-6aa7079a89e31.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dr-hasini-achieves-historic-milestone-16gold-medal-1789330988"></link>
            <id>https://jvpnews.com/article/dr-hasini-achieves-historic-milestone-16gold-medal-1789330988</id>
            <summary type="text">கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுகளிலும் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1ac0f6-68e0-41e1-bd22-01e841eccc98/26-6aa7062df0c86.webp' /></p><p>

மருத்துவக் கல்வியில் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் மூலம், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தங்கப் பதக்கங்களையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
</p><p>
ஒரே பட்டமளிப்பு விழாவில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது Dr. ஹாசினியின் கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
</p><p>
அவரது இந்த சாதனை கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வியில் கொண்டிருந்த ஆர்வத்தின் மூலம் இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ள Dr. ஹாசினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:23:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் 11 அடி புத்தர் சிலை இருந்தது ; சந்தபோதி தேரர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045"></link>
            <id>https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045</id>
            <summary type="text">வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அதனை மீண்டும் அப்பகுதியில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை சென்றிருந்தனர்.
</p><p>
மலைப் பகுதிக்குச் சென்ற குறித்த குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதி, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p>இதேவேளை, குறித்த காலப்பகுதியில் சைவ மக்களை மலை உச்சிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் எனக் குறிப்பிட்டதுடன், அங்கு 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், தற்போது அந்த சிலை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகள் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தபோதி தேரர் குற்றம் சாட்டினார்.
</p><p>
வெடுக்குநாறிமலை தொடர்பில் நீண்டகாலமாக சைவ மற்றும் பௌத்த தரப்புகளுக்கு இடையில் உரிமை மற்றும் வழிபாட்டு விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், சந்தபோதி தேரரின் இந்தக் கருத்துக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
இந்நிலையில், குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02254a71-c1d7-4fab-8f3c-a1929028f485/26-6aa70280d44a7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c626e1c4-5d93-488b-99e2-9f90ad10b877/26-6aa7028028d66.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T20:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871</id>
            <summary type="text">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். </p><p style="text-align: justify; ">
 
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7407d0c2-dc15-4590-87b7-1897dedd42b3/26-6aa684d683463.webp' /></p><h2 style="text-align: justify; ">திட்டமிட்ட கொலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; "> 
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
வினீத்தின் முன்னாள் ஊழியரான&nbsp; மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T17:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303"></link>
            <id>https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303</id>
            <summary type="text">கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான &#039;P 4447&#039; என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'P 4447' என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bb89ad9-155a-40c4-ab5d-399088b805f5/26-6aa6e0598a90f.webp' /></p><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.

இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
</p><p>
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
</p><p>
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்பில் ருமேஷ் தரங்க தங்கம் வென்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-achieves-a-milestone-by-winning-gold-1789320197"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-achieves-a-milestone-by-winning-gold-1789320197</id>
            <summary type="text">உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்&#039; (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்' (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p></p><p> </p><p>

உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது. 

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது. </p><p>

உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805082f2-6133-464d-a935-0cd8d78fdad5/26-6aa6dc0698ece.webp' /></p><p>அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார். </p><p>

சமீபத்தில் 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p> 

அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார்.</p><p> 

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரம் எறிந்திருந்து மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தார். </p><p>

இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 81.49 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். </p><p>

உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இறுதிப்போட்டி இடம்பெற்றிருந்தது. </p><p>

இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும். </p><p>

மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் கொண்ட முதல் இலங்கையர் நாட்டுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/first-sri-lankan-to-own-a-private-long-haul-jet-1789316948"></link>
            <id>https://jvpnews.com/article/first-sri-lankan-to-own-a-private-long-haul-jet-1789316948</id>
            <summary type="text">தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p><p></p><p> 

கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ce05c4-72e7-460e-894c-9831e07586f0/26-6aa6cf557f865.webp' /></p><p>இவர் இலங்கைக்கு வருகை தந்த 'கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5' (Gulfstream G-V) விமானமானது ஒரே தடவையில் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும்.</p><p> 

இலங்கையின் முதலாவது தனியார் விமானமாக 1980 ஆம் ஆண்டுகளில் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'லியர்ஜெட் 35ஏ' (Learjet 35A) விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:29:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகருக்கு எதிராக தயாசிறி சர்வதேசத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284"></link>
            <id>https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284</id>
            <summary type="text">சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்குச் சபாநாயகர் வாய்ப்பளிக்காமலும், அதற்குத் இடையூறு ஏற்படுத்தியமையையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd75f066-103e-4123-aecf-1e220d0f2beb/26-6aa6ccbe27835.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T16:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் ஆற்றில் 29 வயது இளைஞனின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைசடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00647540-cef1-471f-9452-d0f44f9ef5f7/26-6aa6c7b6f20eb.webp' /></p><p>குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:56:55+00:00</updated>
        </entry>
    </feed>
