<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-18T20:34:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904"></link>
            <id>https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fc1623-a6e8-455d-bf0f-88412f0b9a8d/26-6a84b4b1e1760.webp' /></p><p>இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240"></link>
            <id>https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240</id>
            <summary type="text">நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>
</p><p>இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5:30 மணி வரை அமுலில் இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388025c8-9fc8-4396-b797-f20b840d3536/26-6a84b21995a8e.webp' /></p><p>பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அந்த பகுதிகளில் செயற்படும் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மஹோற்சவ காலத்தில் பக்தர்கள் அமைதியாகவும், தூய்மையாகவும் வழிபடுவதற்கு ஏதுவாக ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p><p>அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்களும் பக்தர்களும் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த வாகனத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
அத்துடன், இது உரிய அனுமதியுடன் இடம்பெற்றதா அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04aaad95-b599-4e9d-a793-2caabc986d31/26-6a84abbe95ffd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af556116-e9bc-4e3f-b4fd-266396f9c7b2/26-6a84abbf54f88.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f8560a-7f1f-49eb-9bfc-6e88e44da827/26-6a84abc007b0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T19:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903"></link>
            <id>https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903</id>
            <summary type="text">வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
</p><p>
 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் (Shannon Cowlin) ஆகியோருக்கு இடையில் இன்று (18) கொழும்பு பொதுத் திறைசேரியில் இக்கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff172a1-b336-4330-875f-e35c52bb1bb8/26-6a84a511825e6.webp' /></p><p>இவ்முதலீடு மற்றும் கைத்தொழில் திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
</p><p>
 

இத்திட்டம் கடந்துபோன 2025 தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>

 

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகளாக இருப்பதுடன், அம்முன்னுரிமைகள் 2026-2028 காலப்பகுதிக்கான பிரதான அரச முதலீட்டுத் திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றன என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
 

நாட்டின் பிரதான அபிவிருத்தி சவால்களுக்குத் திட்டமிட்ட அணுகுமுறை மூலம் தீர்வுகளை வழங்குவதற்காக வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும் என்பதால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae5bdb3-1adb-41e8-96b9-a7091a2964c2/26-6a84a0d93958e.webp' /></p><p>மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>
 

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
</p><p>
 

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524</id>
            <summary type="text">விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p>

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71f8f54-e196-43e0-b73c-458276f755ba/26-6a849bc610cee.webp' /></p><p>இலக்கியம் மற்றும் இசைத்துறைகளில் தனது ஆக்கங்கள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு, கலை மற்றும் இலக்கியத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலன்னறுவையில் வேன் திருட்டு முறியடிப்பு ; சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/van-theft-foiled-in-polonnaruwa-suspect-arrested-1787073103"></link>
            <id>https://jvpnews.com/article/van-theft-foiled-in-polonnaruwa-suspect-arrested-1787073103</id>
            <summary type="text">பொலன்னறுவை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை அதிகாலை வேளையில் அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவரின் முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.4 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை அதிகாலை வேளையில் அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவரின் முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.</p><h3>4 மணி நேர துரத்தல்</h3><p>

கிரித்தலே விகாரைக்கு அருகில் இரவு சுமார் 10 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
</p><p>
எனினும், பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னரே சந்தேகநபர்கள் வேனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4732525-870c-4a40-bead-c91a502b74fe/26-6a849251636bc.webp' /></p><p>வேனில் எரிபொருள் குறைவாக இருந்ததாகவும், இதனால் சந்தேகநபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் செல்லக்கூடும் எனவும் பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து, ஜெயந்திபுர, மின்னேரியா மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், தியபெதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த வேனுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வேனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p>அதிகாலை 4.30 மணி வரை கிரித்தலே மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள கிராமப்புற வீதிகளில் பொலிஸார் வேனை தொடர்ந்து சென்றபோதிலும், அதனை உடனடியாக நிறுத்த முடியவில்லை.</p><p>

பின்னர், பகமூன பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை நோக்கி வேன் சென்றபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது, வேனில் இருந்த இரு சந்தேகநபர்களும் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தப்பியோடிய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நில்திய தடாகப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-tourism-activit-niltiya-lake-area-1787072323"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-tourism-activit-niltiya-lake-area-1787072323</id>
            <summary type="text">பதுளை, எல்ல - கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள &#039;நில்திய தடாகம்&#039; குகைப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்தி, விசேட கண்காணிப்பின் கீழ் ஆரம்பிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை, எல்ல - கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள 'நில்திய தடாகம்' குகைப் பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்தி, விசேட கண்காணிப்பின் கீழ் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>இராவண எல்ல சரணாலயத்தின் உள் குகைத் தொகுதியில் அமைந்துள்ள இந்த தடாகம், மிகவும் அரியவகை இயற்கை நீர் மூலமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a37e872e-c00a-4661-b696-e7ec282fa17b/26-6a848f44d755e.webp' /></p><p>இதன் விசேட புவியியல் பண்புகள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இது பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றுலா நடவடிக்கைகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது அவசியமாகக் கண்டறியப்பட்டது.
</p><p>
இதற்கமைய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள காதலுக்கு இடையூறு; TV பார்த்த கணவன் மற்றும் மகன் கொலை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

 கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனையும் , மகனையும் கொடூரமாக கொன்றமை பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753a4b00-a14d-46d2-9f86-253bc3f0a33b/26-6a844db3e2c77.webp' /></p><h2>&nbsp;ஸ்னாப்சாட் மூலம்&nbsp; பழக்கம்</h2><p> 
 பெங்களூருவில் அபிநந்தன் என்பவருடன் 2021-ல் திருமணம் நடந்த ஹரிணிக்கு, ஸ்னாப்சாட் மூலம் வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியதால், கணவனை பிரிய ஹரிணி விரும்பியுள்ளார்.</p><p></p><p> 
 
ஆனால் அபிநந்தன் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டு புகார் அளித்துள்ளார்.</p><p> 

இதனால் ஏற்பட்ட தகராறில் காதலன் வினய்யுடன் சேர்ந்து கொடூர திட்டத்தைத் தீட்டியுள்ளார் ஹரிணி.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கணவனும் மகனும் பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது, திட்டமிட்டபடி நைட்டுக்கு மேல் வீட்டிற்குள் நுழைந்த வினய் மற்றும் ஹரிணி இருவரும் சேர்ந்து, அபிநந்தனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கொடூரத்தை பார்த்த ஐந்து வயது மகனையும் விட்டுவைக்காமல் அவனையும் கொலை செய்துள்ளனர். 

மறுநாள் காலை இருவரும் சடலமாக கிடப்பதாகக் காவல்துறையினருக்கு நாடகமாடி போன் செய்துள்ளார் ஹரிணி.</p><p> எனினும், உடலில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த போலீசார், ஹரிணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து ஹரிணியும் வினய்யும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T16:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு ; அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/monthly-allowance-rs-5-000-students-special-needs-1787071079"></link>
            <id>https://jvpnews.com/article/monthly-allowance-rs-5-000-students-special-needs-1787071079</id>
            <summary type="text">குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம், இவ்வாறான மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்க முன்மொழியப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81b5f1c-1af3-4721-8b40-10748c40e224/26-6a848a6978f93.webp' /></p><p>

இதற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 5,530 விசேட தேவையுடைய மாணவர்கள் இதற்கான தகைமைகளைப் பெற்றுள்ளனர்.
</p><p>
இதற்கமைய, தகைமை பெற்ற 5,530 மாணவர்களுக்கும் உரிய மாதாந்தக் கொடுப்பனவைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T16:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணை கிடைத்தபோதிலும் ராஜிதவின் சகோதரர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rajitha-s-brother-remanded-despite-bail-1787068510"></link>
            <id>https://jvpnews.com/article/rajitha-s-brother-remanded-despite-bail-1787068510</id>
            <summary type="text">இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யத் தவறியமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது.
</p><p>
 

இதன்போது, சந்தேகநபரை தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறும், அவரது வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f11efc-cccf-485d-800b-404144053a14/26-6a8480606adc8.webp' /></p><p>

 

இருப்பினும், பிணை நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் ஆவார்.</p><p>

 

'ஊழல்' எனும் குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (18) காலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
 

2010 - 2012 காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிர்மாணிப்பது மற்றும் புனரமைப்பதில் உரிய கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகியவற்றின் மூலம் 'ஊழல்' புரிந்தார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குண்டும் குழியுமான வீதிகளால் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912"></link>
            <id>https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>


782ஆம் வழித்தடமான யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சுமார் 15 அடி நீளத்திற்கு வீதியின் முழு அகலமும் சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92585248-920e-4e84-9f1c-28b8e21c80bc/26-6a845ec9c3581.webp' /></p><h2>விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்&nbsp;</h2><p>
</p><p>


வீதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து, சில மாதங்களுக்கு முன்னர் நீர் வீதியை ஊடறுத்து பாய்ந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>



குறித்த வீதியூடாக மூன்று பேருந்து வழித்தடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.</p><p>



இந்நிலையில், சேதமடைந்துள்ள குறித்த பகுதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


எனவே, மேலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
