<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T16:44:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ; நீர்த்தாரை பிரயோக வாகனங்களை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295"></link>
            <id>https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify; ">சிறைச்சாலைக்குள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8591d134-5163-492e-b455-ed4eed1367e6/26-6a6e20f8ef5ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பதற்றநிலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சில அடிகள் முன்வந்து மக்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இதன்போது, கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்திற்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கை செய்திகள்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T16:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p>]]></content>
            <updated>2026-08-01T16:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நடு வீதியில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் ; போக்குவரத்துப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701"></link>
            <id>https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701</id>
            <summary type="text">வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
</p><p>
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9419dda-23f7-45b3-b9d0-4588a0f8ed77/26-6a6e1abf839fb.webp' /></p><h2>போக்குவரத்துப் பாதிப்பு</h2><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.
</p><p>
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T16:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; ஒருவர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446"></link>
            <id>https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b119da44-7ae0-4fad-888d-bc53f713d107/26-6a6e11f0407f8.webp' /></p><h2 style="text-align: justify;">பதற்ற நிலை</h2><p style="text-align: justify;"> 

அதேநேரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2893631e-0e8b-41d8-960f-a92c17947bb5/26-6a6e15f1bc2f2.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"> 

இந்த பதற்றநிலை காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p style="text-align: justify;">

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அபிவிருத்திப் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033"></link>
            <id>https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
</p><p>

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217ed06-55ed-4106-a300-588b721533b8/26-6a6df4fb55783.webp' /></p><h2>&nbsp;சிறந்த விமானப் போக்குவரத்து சேவை</h2><p>
</p><p>
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.



</p><p> திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. </p><p>



அதற்கமைய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p>



 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடர் என கூறி 800,000 டொலர் மோசடி; நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100"></link>
            <id>https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc5c253-d6f6-412b-ac32-a5e27ac2b1c2/26-6a6de98590d68.webp' /></p><h2>இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம்...&nbsp;</h2><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கும் வருகின்றது மெட்ரோ பேருந்து சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசாங்கத்தின் &#039;மெட்ரோ&#039; (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசாங்கத்தின் 'மெட்ரோ' (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்கான புதிய பேருந்துகள் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்தார்.</p><p>

சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து 121 மெட்ரோ பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னதாகப் பதிவு செய்தல் உள்ளிட்ட சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce6f91e-10cd-442f-a07a-2ba51a132850/26-6a6dec6a9155b.webp' /></p><h2>ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள்</h2><p>
</p><p>
தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இப்பேருந்துகள் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவைக்காகப் பல புதிய வழித்தடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும், இதன் மூலம் கொழும்புக்கு அப்பாலும் இச்சேவையை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
"இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மெட்ரோ பேருந்து சேவையைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்விரு மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து நிலையங்களும் (depots) அமைக்கப்படும்," என்று அவர் கூறினார்.</p><p></p><p>
போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்காக, பயணிகள் தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், மெட்ரோ பேருந்துகளில் பயணிகளுக்கான தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500-க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் பதற்ற நிலை; களத்தில் பொலிஸ் அதிரடிப்படை! கைதிகள் நால்வர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449"></link>
            <id>https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சிறைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e04295-9490-4ce4-98f4-eede94fc5a36/26-6a6de3134edd7.webp' /></p><h2>&nbsp;கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும்&nbsp; முறுகல் நிலை</h2><p> </p><p> 

அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார் அதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சில பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p><b>இரண்டாம் இணைப்பு</b></p><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. 

இந்த பதற்றநிலை காரணமாக 4 கைதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f5bd07-a264-42ea-bddc-8495597ff7f2/26-6a6df0710fb20.webp' /></p><p> </p><p>

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் , சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரப்பூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p>]]></content>
            <updated>2026-08-01T13:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-al-examination-ban-on-private-classes-1785590431"></link>
            <id>https://jvpnews.com/article/2026-al-examination-ban-on-private-classes-1785590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>


பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fdeb05b-4611-4b1e-ba15-4b728184918a/26-6a6df2a13d080.webp' /></p><p>



மேலும், உயர்தரப் பரீட்சைக்கான கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சை கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் இடம்பெறும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடக விளம்பரங்களை வெளியிடுதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>



2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் 2,532 தேர்வு மையங்களில் ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T13:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி ; வளிமண்டலவியல் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2812c9-8d0b-4856-a15d-3d15691798d4/26-6a6de1860b616.webp' /></p><p>
</p><p>
எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;ஹேமசிறி வெளிப்படுத்திய தகவல்; சிக்கப்போகும் மைத்ரிபால சிறிசேன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>

தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
நீதிபதி விராஜ் வீரசூரிய இவருடைய வழக்கிலும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0e7258-2bec-4350-9d37-4f2e9c7289c5/26-6a6da8666114d.webp' /></p><h2>புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்</h2><p>
</p><p>
ஆயினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டுடன் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பெர்னாண்டோ, கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது,
</p><p>
 “எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை; ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. 'பாதுகாப்புச் செயலாளர்' என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது 'பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்' பதவியாகும்.

அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். </p><p>செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும்; அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு; அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர்.</p><p></p><p> </p><p>நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். 'நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார்.</p><p>நானும் அதையே செய்தேன்.

எனக்கு எந்தவித எழுத்துமூலமான அறிக்கையும் கிடைக்கவில்லை, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் இரண்டும் மட்டுமே கிடைத்துள்ளன.

புலனாய்வுத் தலைவருக்கு வந்த ஆவணத்தை அவர் எனக்கு வழங்கியபோது, நாளைய கூட்டத்தில் இதனை முன்வைக்குமாறு அவரிடம் கூறினேன். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதி கூட்டம் தொடங்கியது. இறுதியில் சிசிர அந்தக் கடிதத்தை எனக்குக் காட்டினார்.</p><p> அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு விபரங்களைக் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு குழுவை அனுப்பி கிழக்கு மாகாணத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குவதாகக் கூறினார்கள்; ஆனால் செயலாளர் அவரிடம் சென்று அந்த அறிக்கையைக் கேட்பதில்லை, அந்த அறிக்கையைக் கொண்டுவந்து சேர்ப்பது அவருடைய பொறுப்பாகும். அந்த அறிக்கை இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர் 16ஆம் திகதி காத்தான்குடியில் உந்துருளி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அது குறித்து 17ஆம் திகதியே நிலந்த எனக்குத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி 12ஆம் திகதி மட்டக்களப்பு விஜயத்துக்காக எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார், நிலந்த அதற்கு அனுமதி வழங்கினார்.</p><p> அவர் அவ்வாறு பயிற்சி பெற்றுச் செயற்படுகிறார் என்றால், ஒரு குடிமகனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த அநீதிகள் இழைக்கப்பட வேண்டும்?

எனக்கு இறுதியாகத் தகவல்கள் கிடைத்தவை மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை ஆகும். </p><p>அந்த அறிக்கை பற்றி வாராந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனக்கு வந்த வாட்ஸ்அப் (WhatsApp) செய்தியைப் பார்த்தபோது, எதிர்வரும் நாட்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரிப்பதற்காக நான் உடனடியாக நிலந்தவைத் தொடர்புகொண்டேன்.</p><p></p><p>
</p><p>
அப்போது, தகவலைத் தெரிவித்த தரப்பு நம்பகமானதாகவும் தகவலின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நிலந்த என்னிடம் தெரிவித்தார்; அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் எனக்குக் கூற வேண்டும். இந்தச் செயற்பாட்டுக்கு வெறும் 12 மணித்தியாலங்களே இருந்தன. அந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முந்தைய நாளும் தாக்குதல் நடத்தப்பட்ட விருந்தகங்களிலேயே தங்கியிருந்தனர்</p><p>.

காவல்துறையினரைக் கூப்பிடுங்கள், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; என்னால் அவற்றைச் செய்ய முடியாது. இந்தத் தாக்குதலைத் தடுத்துச் செயற்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏப்ரல் 9ஆம் திகதி இருந்தது, ஆனால் நிலந்த அதனைத் தவிர்த்துவிட்டார்.

8ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை; 16ஆம் திகதியில்தான் அவர் நாடு திரும்பினார். </p><p>சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், நிலந்தவுக்கு அறிவுறுத்தி தேசியப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்க முடியும்; அவற்றுள் எதுவுமே செய்யப்படவில்லை.

பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மாஅதிபரோ எவருமே தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய உச்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.</p><p> அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகினேன். நான் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதியிடம் பேசினேன்; 'புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்களா இல்லையா?' என்று கேட்டேன்; அதற்கு 'இந்தத் தகவல்களை நிலந்த உங்களுக்கு அறிவிக்கவில்லையா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.

ஐயா, இது மிகப்பெரிய அநீதியாகும்; ஆனாலும் இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. </p><p>இதனைச் செய்வதற்கு எனக்கு எந்தவிதமான விருப்பமும் இருக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற வேண்டும் என்ற தேவை இருவருக்கு இருந்தது; அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலந்தவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும்தான்.</p><p>

எனக்கு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் என்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யும்" எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ, தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T12:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை ; பூஜித் ஜயசுந்தர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-not-committed-any-injustice-pujith-1785584132"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-not-committed-any-injustice-pujith-1785584132</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df742f1f-c8bf-4653-96a9-830878248404/26-6a6dda0539a4f.webp' /></p><p></p><h2>&nbsp;பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்</h2><p>

இதன்போது அவர் "நான் நினைத்து எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. காவல்துறைக்கு இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். </p><p>நான் பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்துதான் பணியாற்றினேன்.

பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களின் நான் மிகுந்த வேதனை உள்ளானேன்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்துக்கு பிறகு இன்றுவரை அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் எனது மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை. நான் பின்பற்றும் மதத்தின்படி, இதனை எனது முற்பிறவி வினையின் பயன் என்றே கருதுகிறேன்.

தயவுசெய்து கனிவோடு என்னைக் குறித்துப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p></p><p> </p><p>நாட்டின் காவல்துறை மாஅதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T12:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மாலனையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-ratmalana-shooting-1785586900"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-ratmalana-shooting-1785586900</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்மலானை - கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்மலானை - கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2fbe42-cbe4-400a-964c-0a0920faa4dd/26-6a6de4d64a575.webp' /></p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் வீடொன்றில் தீ; மோட்டார் சைக்கிள் உட்பட பல பொருட்கள் தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-a-house-in-batticaloa-motorcycle-destroyed-1785585381"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-a-house-in-batticaloa-motorcycle-destroyed-1785585381</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளது. </p><p>


இன்று காலை வேளையில் அவ்வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். 

பின், அவ்வீட்டினரும் அயலவர்களும் இணைந்து நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7aa26ab-7087-4b83-8251-527ff0cb043e/26-6a6ddee6af38a.webp' /></p><p></p><h2>உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை</h2><p>
</p><p>
இருப்பினும், இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், பல உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் முதலியவை முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.</p><p>அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T11:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதியை 36 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-exports-target-to-increase-36-billion-1785582589"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-exports-target-to-increase-36-billion-1785582589</id>
            <summary type="text">2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வர்த்தக, வாணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0373079a-d8cb-42ae-b556-97255aecfb1a/26-6a6dd3fead73d.webp' /></p><p>அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களை மறுஆய்வு செய்வதும், எதிர்கால முன்னுரிமைகள் குறித்து ஆராய்வதும் இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.
</p><p>
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சர்வதேச சந்தைகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
</p><p>
சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் அளவிடக்கூடிய பெறுபேறுகளை அடைய அதிகாரிகள் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்தும் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கேற்ப தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:09:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-taken-against-those-buses-kerosene-1785581036"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-taken-against-those-buses-kerosene-1785581036</id>
            <summary type="text">பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது.

டீசலுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது.</p><p></p><p>

டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாட்டின் பல இடங்களில் பொலிஸார் இவ்விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
</p><p>
இந்த நடவடிக்கையின்போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

மேலும் சந்தேகத்திற்குரிய பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a98b670-1b6d-492c-ba09-236dcd1b16b9/26-6a6dcded9e8fb.webp' /></p><p>டீசல் லீட்டர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால் கூடுதல் லாபத்துக்காக பல பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.
</p><p>
இந்த சட்டவிரோதச் செயலால் பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. </p><p>இலாப நோக்கம் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
</p><p>
கேன்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ துணை போகக்கூடாது என பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

அண்மையில் கூட கல்முனை தலைமையக பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 3 பயணிகள் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>இது தவிர கொரோனா காலப்பகுதி மற்றும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காலப்பகுதிகளில் கல்முனை பிராந்தியத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து முதல் தனியார் கனரக வாகனங்கள் மண்ணெண்ணெய் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p>
இது தவிர பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து வாகனங்கள் திடீர் சோதனைகளின்போது சட்டவிரோதமாக 100 லீற்றருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:44:21+00:00</updated>
        </entry>
    </feed>
