<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T23:34:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-court-verdict-pard-granted-gnanasara-thero-1789079606"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-court-verdict-pard-granted-gnanasara-thero-1789079606</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு, தன்னிச்சையானதும் சட்டரீதியாக செல்லுபடியாகாததுமாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கொள்கை மாற்றங்களுக்கான நிலையம் (CPA) மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c59b2f-e872-4576-8c71-4a87b5c58f64/26-6aa33037dfaf5.webp' /></p><p>

பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்திற்குள் ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.</p><p>

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
எனினும், 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில், ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிரபல பாடகர் ஜெஃப் டிம்மன்ஸ் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jeff-timmons-arrivs-srilanka-music-concert-colombo-1789078998"></link>
            <id>https://jvpnews.com/article/jeff-timmons-arrivs-srilanka-music-concert-colombo-1789078998</id>
            <summary type="text">அமெரிக்க இசைக் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியருமான ‘98 Degrees’ இசைக்குழுவின் நிறுவனருமான ஜெஃப் டிம்மன்ஸ் (Jeff Timmons), கொழும்பில் நடைபெறவுள்ள இசை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இசைக் கலைஞரும், பாடகரும், பாடலாசிரியருமான ‘98 Degrees’ இசைக்குழுவின் நிறுவனருமான ஜெஃப் டிம்மன்ஸ் (Jeff Timmons), கொழும்பில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p><p></p><p>

ஜெஃப் டிம்மன்ஸ் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/716b6dc2-fee6-4cee-a21e-604a3f664fd5/26-6aa32dd76dc6c.webp' /></p><p>இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் ஜெஃப் டிம்மன்ஸுக்கு கிடைக்கும் முழுத் தொகையும், இலங்கையில் மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஜெஃப் டிம்மன்ஸுடன் அவரது மகனும் இலங்கை வந்துள்ளார். </p><p>அவர்கள் தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான QR-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p>

அவர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, இசை நிகழ்ச்சியின் இலங்கை ஏற்பாட்டாளர்கள் சிலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருந்துகளுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து ; சாரதி சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ambulance-transportin-medicin-accident-driver-dies-1789076752"></link>
            <id>https://jvpnews.com/article/ambulance-transportin-medicin-accident-driver-dies-1789076752</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த விபத்து, இன்று (10.09.2026) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், பாதெனிய – அனுராதபுரம் வீதியில் உள்ள கத்தபஹுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f629167b-58dc-4bf9-8a23-dc44f2a2c674/26-6aa32511d340c.webp' /></p><p>

குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருட்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டியே இவ்வாறு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>விபத்தின் தாக்கம் காரணமாக நோயாளர் காவு வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
மேலும், நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டனர்.
</p><p>
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பன்பொல மற்றும் கல்கமுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582"></link>
            <id>https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582</id>
            <summary type="text">லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8316388-df3e-4551-974d-3a7086e358fc/26-6aa2f587b2c6d.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் உறங்க செல்வதற்கு முன் ஏலக்காயை மென்று சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100"></link>
            <id>https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100</id>
            <summary type="text">தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இயற்கையான நறுமண எண்ணெய்கள் ஆகியவை உடலுக்கு எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.</p><p>அத்துடன் இரவில் ஏலக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c41df7-5847-4797-8eae-116b02c6e0b8/26-6aa30b16500d0.webp' /></p><h4>சிறந்த செரிமானம்</h4><p>இரவு நேரத்தில் பலரைத் துன்புறுத்தும் முக்கியப் பிரச்சனை சாப்பிட்ட உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாமல், வயிறு வீங்குவது. இரவில் படுக்கும் முன் 1-2 ஏலக்காய்களை மென்று சாப்பிடுவது, உமிழ்நீர் மற்றும் செரிமான சாறுகளின் சுரப்பை அதிகரிக்கிறது. இது இரவில் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் காலையில் மலச்சிக்கல், வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd66d5f-7c1a-425a-a3d7-862f8e669a0a/26-6aa30b1704387.webp' /></p><h4>நிம்மதியான உறக்கம் மற்றும் நரம்புத் தளர்வு</h4><p>ஏலக்காயில் உள்ள இயற்கையான நறுமணச் சேர்மங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகின்றன. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மூளையைத் தளர்த்துவதன் மூலம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தைப் பெற இது உதவுகிறது. விலையுயர்ந்த மருந்துகளை நாடுவதை விடுத்து, சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஏலக்காயை அன்றாடப் பழக்கமாகக் கொள்வதன் மூலமும், தரமான உறக்கத்தைப் பெறுவதன் மூலமும் நீங்கள் ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fdcad3a-86c8-4e6a-a156-c36085d7aa9a/26-6aa30b17ab3ea.webp' /></p><h4>வாய் துர்நாற்றம்</h4><p>ஏலக்காயின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, காலையில் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கின்றன. மேலும், அவை இரவில் சுவாசப் பாதையில் தேங்கும் சளியை அகற்ற உதவுவதால் தொண்டை வலி மற்றும் குறட்டை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07294a7a-421a-4746-9b1e-91549e0fabc7/26-6aa30b1860adc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T19:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-crores-amassed-through-narcotics-frozen-1789067839"></link>
            <id>https://jvpnews.com/article/assets-crores-amassed-through-narcotics-frozen-1789067839</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தொடர்பாகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினராலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2851cf0-4562-4564-866e-53d4a6961e7a/26-6aa30240eb61e.webp' /></p><p>அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இதற்கமைய, மஹர, கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>

இந்த இரண்டு சொத்துக்களின் தோராயமான பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதன் மொத்தத் தோராய பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.</p><p> 

விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இச்சொத்துக்கள் வாங்கப்பட்டதாகக் கருதப்படுவதால், பணச்சலவை தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அவற்றை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. </p><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:17:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்துகள் குறித்து புலனாய்வுத் தகவல்களைப் பெற விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-initiative-gather-intelligence-facebook-1789066630"></link>
            <id>https://jvpnews.com/article/special-initiative-gather-intelligence-facebook-1789066630</id>
            <summary type="text">பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக விசேட திட்டமொன்றை பொலிஸ் மா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக விசேட திட்டமொன்றை பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>இத்திட்டத்தின் பலனாக, சில நாட்களுக்கு முன்னர் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்ததொன்றில் பங்கேற்ற 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2ec1fa-013e-43ca-a915-6f6759d63b94/26-6aa2fd87c6c4f.webp' /></p><p>எதிர்காலத்திலும் இவ்வாறான இடங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p> 

பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் விழும் அபாயம் உள்ளதால், இவ்வாறான விருந்துகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p> 

இவ்வாறான விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அவை வலையமைப்புச் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வியாபாரங்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், தமது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் பயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். </p><p>

இதேவேளை, போதைப்பொருள் பேரழிவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் 175 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், அவர்களில் 172 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். </p><p>

2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:57:17+00:00</updated>
        </entry>
    </feed>
