<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T05:49:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333"></link>
            <id>https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>

இதன்போது உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/261182ce-9cc2-4de8-b59b-96214c581ff0/26-6a7ea796db117.webp' /></p><p>



புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகநேசனின் ஏற்பாட்டில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
</p><p>


 உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>


நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T05:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

நணபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.</p><p>

நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97417d93-a68d-45e7-be45-c68d30e491ad/26-6a7ea6795e030.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தியாவின் பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T05:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் ஆடிப்பூரம் இன்று; பெண்கள் இதை செய்ய மறக்காதீர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409"></link>
            <id>https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்படுகிறது.
</p><p>
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c04f2-e7da-4198-8461-d5a34624121a/26-6a7ea3fb3a80d.webp' /></p><h2>&nbsp;அம்மனுக்கு வளைகாப்பு&nbsp;</h2><p> </p><p>

பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.</p><p> 

ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e35a20-effc-4b5b-be4f-93b61f06419e/26-6a7ea3fbe94c0.webp' /></p><p> </p><p>உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். 

சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். </p><p>

அது மட்டுமல்லாமல் ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9abb61-7fa4-4420-af95-3583ec01e867/26-6a7ea3fca1204.webp' /></p><p>
</p><p>
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
</p><p>
 பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்</p>]]></content>
            <updated>2026-08-14T05:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வேலை செய்து சொத்து குவித்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343"></link>
            <id>https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e58f20-db79-4c35-821f-4e477f254778/26-6a7e9fd18d707.webp' /></p><p>
குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள்,</h2><p>&nbsp; &nbsp;ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி- 14 இலட்சம் ரூபாய்</p><p> 

06 வங்கிக் கணக்குகளில் இருந்த பணம்- 59 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் 03 கடைகள்- 225 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மேலும் ஒரு கடை- 75 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணி - 200 இலட்சம் ரூபாய் </p><p>

இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலேயே பெறப்பட்டவை என விசாரணைகளில் தெரிவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599"></link>
            <id>https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றின் திறந்த நீதிமன்றக் கூண்டிற்குள் வைத்து, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.</p><p>

இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த அவரை, விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்தது. </p><p>

அதன் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:41:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:24:17+00:00</updated>
        </entry>
    </feed>
