<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T01:49:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகள் ; அதிரஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913"></link>
            <id>https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913</id>
            <summary type="text">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் பல முக்கியமான கிரகங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; ">குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியிலும்,&nbsp; சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பர். சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அமைந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fa267d-31e3-4296-9303-4f9335cd5737/26-6a98c95ab28ed.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உள்ள கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p style="text-align: justify; "><b> ரிஷபம் :</b> தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>கடகம் :&nbsp;</b>தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; "><b>
கன்னி :</b>&nbsp;குருவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கு நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடைந்து மன திருப்தியைத் தரும்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு : </b>&nbsp;தொழிலதிபர்கள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வேனுடன் பிடிபட்ட நபர் ; சிசிரிவி காணொளிகளால் நீண்டகாலம் அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924</id>
            <summary type="text">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை, சிறிய ரக வேனில் வந்த நபரொருவர் பிடித்து ஏற்றிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314c581-16f9-4ce6-bdee-ed086e1086e8/26-6a98c57f33c2b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">
முறைப்பாட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

</p><p style="text-align: justify; ">இதன்போது, சிசிரிவி காணொளிகளின் உதவியுடன் ஆடு கடத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை (01) காத்தான்குடி பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக வாகனங்களைப் பயன்படுத்தி ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளா ; நீரிழிவு வரை செல்லும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641"></link>
            <id>https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641</id>
            <summary type="text">நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.அப்படி பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p>அப்படி படுக்கும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689635e0-f8cd-4b6f-9a93-34b2ca945e27/26-6a98b8ac00f2c.webp' /></p><h2>காத்திருக்கும் ஆபத்து&nbsp;</h2><p>

</p><p>சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லவதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல் நோக்கி வரக்கூடும். இது கடுமையான நெஞ்சு எரிச்சல், உணவு செரிமானம் தாமதமாவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடலில் அசௌகரியம் ஏற்படும்.</p><p> உணவில் உள்ள கலோரிகள் சரியாக எரியாமல் கொழுப்பாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும்.</p><p> வயிறு முட்டல் காரணமாக ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படும்.. இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p></p><p>
</p><p>
எனவே இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது உடலுக்கு நல்லது.</p><p>முக்கியமாக இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634</id>
            <summary type="text">சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01bbe79e-c230-4b04-8b1c-c84e534c0a8c/26-6a98a1339d59a.webp' /></p><h2>சந்தைப் பெறுமதி</h2><p>

சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

</p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; அகில இலங்கையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616</id>
            <summary type="text">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார்.</p><p style="text-align: justify;">குறித்த மாணவன்&nbsp;புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094d239a-2d57-4e64-b656-444943d10528/26-6a98c06188b97.webp' /></p><p style="text-align: justify; ">

யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலைக்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக&nbsp; மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T01:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302</id>
            <summary type="text">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aefc306-c1d3-4ca0-bb42-f76d9f6ece68/26-6a987107f36be.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆடை வியாபாரம்&nbsp;</h2><p style="text-align: justify; "> இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.</p><p style="text-align: justify; "> வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். </p><p style="text-align: justify; ">தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-03T01:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca6bf7e-c120-4da4-b678-4ef547b230b6/26-6a9859e1ed5da.webp' /></p><h2 style="text-align: justify; ">வெட்டுப்புள்ளி</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலை உண்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982"></link>
            <id>https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982</id>
            <summary type="text">கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9a9bc61-644f-4956-a5e5-3f06ecc40c98/26-6a9896d86b853.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>



கரடியானா குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள், ஆற்றில் மனித சடலம் ஒன்று கிடப்பதையும், அதனை முதலை ஒன்று இழுத்துச் செல்வதையும் அவதானித்துள்ளனர். </p><p>இதையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், சடலத்தை முதலை ஒன்று உண்டு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>



இதன்பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலை சடலத்தைப் பிடித்திருந்ததால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.</p><p>



இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஐ ஆராய பூரண நீதியரசர் ஆயம் நியமிக்கப்படாமைக்கு CLA கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435"></link>
            <id>https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வௌியிட்டுள்ளார். </p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக&nbsp; கலந்துகொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35381f9d-1174-44d9-96c1-b563d3c3a7d9/26-6a9890cd685d8.webp' />&nbsp;</p><h2>அரசியலமைப்பு&nbsp;</h2><p> </p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார். </p><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வௌியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

முக்கியமான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பூரண ஆயத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். </p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p> 

இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (02) நிறைவு செய்தது. </p><p>

அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.</p><p></p><p> 

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது. </p><p>

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. </p><p>

அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T21:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005</id>
            <summary type="text">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031cf9d6-e16b-4915-9a6a-18a27c0c6bd3/26-6a9877af6947c.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T20:00:49+00:00</updated>
        </entry>
    </feed>
