<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T16:30:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>தமிழக மீனவர்களின் ரோலர் விசைப்படகுகள், நெடுந்தீவு கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவுக்குள் உள்ள கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca7875-9107-4bd0-8574-92e3311649e1/26-6a9d8f62c99e3.webp' /></p><p>இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான இந்திய விசைப்படகுகள் வரிசையாக நிற்பதால், அந்தப் பகுதிக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு கரை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெடுந்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மீனவர்களின் அட்டகாசம் ; இலங்கை மீனவர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164"></link>
            <id>https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9babf02f-0919-4c34-8835-b8a2a70b6cb1/26-6a9d8d15e409f.webp' /></p><p>இந்த அத்துமீறல் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981</id>
            <summary type="text">உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார்.</p><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafbae77-b09a-4df8-9a7d-d5deeeccc6b4/26-6a9d6d1f03091.webp' /></p><h2>இருதரப்பு உறவு</h2><p> 

எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். </p><p>

இந்தியாவும், இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பலதரப்பட்ட கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன. </p><p>

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 இல் ஏற்பட்ட 'டித்வா'புயலுக்குப் பிறகும் முதலாவதாகப் நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது. </p><p>

இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்படுத்துகிறது. </p><p>

பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவையும், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய - இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164"></link>
            <id>https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164</id>
            <summary type="text">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207f5705-3051-41e2-b200-02034f0c906f/26-6a9d71bd59da6.webp' /></p><h2 style="text-align: justify; ">விமானச் சேவை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

அஸூர் எயார் விமான நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.</p><p style="text-align: justify; "> 

இதனிடையே, 11 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&amp;nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f82c44-fc89-44e2-acf4-72409f8437d1/26-6a9d49b5e43a8.webp' /></p><h2>வாக்குவாதம்</h2><p> தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். </p><p>கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>&nbsp;ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. </p><p>இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p> இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>&nbsp;இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661"></link>
            <id>https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661</id>
            <summary type="text">மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், உள்ளூராட்சி தொடர்பான ஏழு சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85d82588-c343-4cf2-982a-0c81ee3360aa/26-6a9d67f711fc4.webp' /></p><p>



காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>


உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான செயற்பாடுகளில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>


இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களுக்கான பொதுச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவை விட ஆபத்தானது இது தான் ; அதிகரிக்கும் உயிரிழப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502"></link>
            <id>https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502</id>
            <summary type="text">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,



 கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/048eaf29-e1dc-437b-98f3-2b9bc9acdb0a/26-6a9d6f27ce6b6.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதி விபத்து</h2><p style="text-align: justify; ">இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்றும், சராசரியாக தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">


இவ்விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர்.
</p><p style="text-align: justify; ">


 குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


 குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழப்பதால், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">



தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாக திடீரென யூ திரும்பல் ('U-Turn') எடுத்தல், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. </p><p style="text-align: justify; ">



எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரசபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-06T13:48:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ; 22 கட்டாயம் நிறைவேற்றப்படும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-s-key-announcement-22-to-be-implemented-1788699985"></link>
            <id>https://jvpnews.com/article/president-s-key-announcement-22-to-be-implemented-1788699985</id>
            <summary type="text">உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1bd03-c23f-44ae-b7c6-c055fdf8871e/26-6a9d65531d11e.webp' /></p><p> </p><p>

இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>

குறித்த தீர்ப்பு கிடைத்தவுடன் அது பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார். 

நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். </p><p>அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். 

நாங்கள் பயமின்றி முன்னோக்கிச் செல்வோம். </p><p>அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள். 

தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள்.</p><p> உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். 

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களையும் மக்களுக்காகவே எடுக்கிறோம். </p><p>எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப் பெறமாட்டோம். 

22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். </p><p>பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். 

தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம். </p><p>

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும். அப்படித்தான் இந்தக் கறுப்பு ராஜ்யத்தை தகர்க்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T13:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டில்லியில் 6 மாடி மாணவர் விடுதி இடிந்து விபத்து; தீசிலமாகும் மீட்புப்பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-storey-student-hostel-collapses-in-delhi-1788698628"></link>
            <id>https://jvpnews.com/article/six-storey-student-hostel-collapses-in-delhi-1788698628</id>
            <summary type="text">இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஹோஸ்டல் டேஸ்' என்ற இந்த 75 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதி இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3781f558-7b34-4065-a504-82d66324c1a5/26-6a9d6005dd6c3.webp' /></p><h2>மீட்புப் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதுவரை 06 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், 2 பேர் மீட்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சில மாணவர்கள் தங்கள் தொலைபேசிகள் வாயிலாக உள்ளிருந்து உதவி கேட்டு அழைப்பதாக உள்ளூர் பிஜேபி எம்.எல்.ஏ அனில் சர்மா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுமார் 50 மாணவர்கள் விடுதிக்குள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>

சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் பேரனர்த்த மீட்புப் படைகள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><p>

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T13:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் நாளாந்த மின்சார தேவை வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553"></link>
            <id>https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553</id>
            <summary type="text">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb7d50ea-9445-44d4-8e54-40c7052b5c70/26-6a9d5bd302bf5.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மின்சாரத் தேவை</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 2,936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify;">

அத​ேமாதம் இரண்டாம் திகதி அந்தப் பெறுமதி 2,934 மெகாவோட்டாகப் பதிவாகியிருந்தது. </p><p style="text-align: justify;">

செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2,920 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-06T12:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் ; வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804"></link>
            <id>https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804</id>
            <summary type="text">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f10c23-2732-4bb6-9548-385fe490641c/26-6a9d58e617cd1.webp' /></p><p style="text-align: justify; ">

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T12:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு மர்ம நபர் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f0844a-0054-40d9-b748-4790c1000eb4/26-6a9d55090d98c.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணத் தடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362"></link>
            <id>https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362</id>
            <summary type="text">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f301e-79ee-49a5-b86a-4474774013ed/26-6a9d4b73636e3.webp' /></p><h2 style="text-align: justify; ">பயணத் தடை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p style="text-align: justify; "> 

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்தத் தண்டனைக்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டது. </p><p style="text-align: justify; ">

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அதனை இரத்து செய்து தண்டனை வழங்குமாறும் கோரி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T11:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243"></link>
            <id>https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243</id>
            <summary type="text">எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திங்கட்கிழமை (07) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியால் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c3d5b8-2121-43ed-8a47-e8cb32d13866/26-6a9d432d44a7b.webp' /></p><p>

இந்த அறிவித்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T10:40:51+00:00</updated>
        </entry>
    </feed>
