<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T05:18:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899"></link>
            <id>https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>


தனியார் வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d90a26-c1a5-4a19-a4bc-d1e42242f339/26-6a965c34efdcc.webp' /></p><h2>&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p> </p><p>கெளசல்யா, சர்மிளா, சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், மூவருக்கும் 17 வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p>

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்களுக்கு 0767070913, 0771658788 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T05:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் பிரித்தானியாவிற்கு பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496</id>
            <summary type="text">தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 10ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/816a2340-142a-4592-b784-151940a32d28/26-6a965e8a2efe4.webp' /></p><p>

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்த வெளிநாட்டு பயணங்களின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது பிரித்தானிய பயணத்தின்போது, மனைவி சங்கீதாவையும் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-01T05:08:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் நீரில் மூழ்கிய 19 வயது இளைஞனைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-young-man-bathe-kalu-ganga-has-disappeared-1788238485"></link>
            <id>https://jvpnews.com/article/a-young-man-bathe-kalu-ganga-has-disappeared-1788238485</id>
            <summary type="text">களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><p>இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.</p><p>நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><h3>
 

மேலதிக விசாரணை</h3><p>இவ்வாறு காணாமல் போனவர் யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞராவார்.
</p><p>
 

நேற்று (31) மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆற்றில் குதித்து நீந்த முயன்ற போது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfe1e8f-eea3-4a11-839a-ba8c79c3f94e/26-6a965bbc46e1c.webp' /></p><p> இதன்போது, அவரைப் காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆற்றில் குதித்துள்ளார்.

 

காப்பாற்றச் சென்ற நபரும் நீரோட்டத்தில் சிக்கிய போதிலும், அவர் கடும் போராட்டத்திற்குப் பிறகு கரை சேர்ந்துள்ளார்.</p><p>

 

பின்னர் இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
 

களு கங்கையின் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இது விளங்குவதால், இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். </p><p>

 

மேலும், அந்தப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால், கரையோரத்தில் தீ மூட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்தப் பிரதேசவாசிகளும் அவரது நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை ; 20 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-sexually-abusing-a-13-year-old-girl-1788237837"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-sexually-abusing-a-13-year-old-girl-1788237837</id>
            <summary type="text">13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை புத்தளம் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை புத்தளம் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்த சிறுமியின் தாய் கடந்த மாதம் முதலாம் திகதி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38be3649-b887-4fde-8978-fb0b49bb3f12/26-6a96580eb9495.webp' /></p><p>வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, சிறுமியின் தாய் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு; பெற்றோரை தேடும் சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496" target="_blank">நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம்</a> மற்றும் நிலச்சரிவுப் <a href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215" target="_blank">பேரழிவைத் தொடர்ந்து</a>, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி (Video) உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>&nbsp; &nbsp;அந்த வைரல் வீடியோவில், வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு ஒரு சிறுவன் தனது கைக்குழந்தையான தங்கையைத் தனது முதுகில் சுமந்தபடி நடந்து செல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a5ec58-09dd-4cbd-af59-70845bc30792/26-6a9658937270e.webp' /></p><h2>வைரல் வீடியோ....</h2><p>

பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1379736873712760%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>

இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு அதிக மழை அபாயம் ; ஐ.நா. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-at-risk-heavy-rains-year-end-un-warns-1788236996"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-at-risk-heavy-rains-year-end-un-warns-1788236996</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h3>ஐக்கிய நாடுகள் சபை</h3><p>

 

எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe607c4-99e1-41f0-96a5-078405013e95/26-6a9654c5955e7.webp' /></p><p>அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

 

எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&amp;nbsp;இன்று செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&nbsp;இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய கைதி ஒருவர் உடல் சுகயீனமடைந்த நிலையில், சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a7d82d-7e18-4e15-b0d7-8cfb0db931c5/26-6a964e9244090.webp' /></p><p>இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) 03.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>அதனடிப்படையில் அவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் ; வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட 15ஆம் திருவிழா சிறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553"></link>
            <id>https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a9b259-ec9c-43b5-8d2c-bd098cce0716/26-6a964b3aef752.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a5910-ca0e-4fc4-9ad6-96fce4ceb24a/26-6a964b3bb4df3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T03:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917"></link>
            <id>https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இலங்கையின் வரலாற்றில் ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98cbf32-2b54-4ad3-9f73-b6474669fc92/26-6a9648bf46b9f.webp' /></p><p>இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று (1) முற்பகல் 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>

இந்தச் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியலமைப்புக்கு முரணானதா என்பதையும் அவ்வாறாயின் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் சேர்த்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் இந்த உயர்நீதிமன்ற அமர்வு ஆராய்ந்து அறிவிக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079</id>
            <summary type="text">வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

இதன்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 32 கிலோகிராம் 400 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81b57b2f-7e72-496a-8d44-8a663b6dbc71/26-6a9645791ed07.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கடும் வெப்பம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671"></link>
            <id>https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
திறந்த வெளியில் வேலை செய்வோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனமாகப் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2485fa-7b77-4738-b94e-c4ad0149f85d/26-6a9643e10de58.webp' /></p><p>அத்துடன் குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, லேசான வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
</p><p>
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்கள் முற்றாக வறண்டுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர்மட்டம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு 7 மாவட்டங்களில் 81 ஆயிரத்து 929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T03:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190"></link>
            <id>https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190</id>
            <summary type="text">22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.

 

பிரதம நீதியரசர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.</p><p>

 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளது.</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f9370a-430f-43cd-a7bc-3b72ffba99e3/26-6a9642003f741.webp' /></p><p>நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், </p><p>இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.</p><p>
 

 அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T03:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சொந்த மகளுக்கு தந்தை செய்த தகாத செயல் ; 18 வருடத்தின் பின்னர் கிடைத்த அதிரடி தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221"></link>
            <id>https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af98b951-4b9c-44f9-80f6-6eebc6ef499d/26-6a961b0f458e0.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T00:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு பெரும் அதிஸ்டம் காத்திருக்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974</id>
            <summary type="text">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. </p><p style="text-align: justify; ">அந்த வகையில் இவரது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணிப்புகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மாதத்தின் முதல் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9516097-27ad-4b31-a881-18618517a479/26-6a9621e7a66da.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுப யோகங்கள்</h2><p style="text-align: justify; ">&nbsp;பாபா வாங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு :</b> செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

</p><p style="text-align: justify; "><b>சிம்மம் : </b>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களின் முக்கியமான பெரிய வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வாரத்தில் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் : </b>&nbsp;மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



</p><p style="text-align: justify; "><b>துலாம் : </b>தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் சில நட்புகள் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
மிதுனம் : </b>முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T00:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களுடன் சேர்ந்து இருபெண்கள் அரங்கேற்றிய சம்பவம் ; பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733"></link>
            <id>https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733</id>
            <summary type="text">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹொரனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள், இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a83c8b-8e24-4028-9513-45bfe7cfc80e/26-6a96153f60355.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காகவே குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
ஹொரனை பகுதியிலுள்ள கடை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்தமை, இரண்டு நாட்களுக்குள் ஹொரனை, வெலிகல பகுதியில் இரு பெண்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்தமை, ஹொரனை, கோணப்பல பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கொள்ளையடித்தமை மற்றும் ஹொரணை, முணகம பகுதியில் கடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் தங்கச்சங்கிலியைக் கொள்ளையடித்தமை போன்ற கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">கைதான பிரதான சந்தேகநபர்கள் இருவரும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
அதேபோன்று, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய இரு பெண்களும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரு ஜோடி தங்க நகைகள், அடகுப் இரசீது ஒன்று மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">மேலும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் ஹொரனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T23:59:01+00:00</updated>
        </entry>
    </feed>
