<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-10T01:48:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431</id>
            <summary type="text">இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று இரவு கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சென்றுள்ளார். </p><p>இதன்போது, அவரை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளியான தரம் சிங், அப்பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e652c1b-d259-4193-92f8-1d5f69082732/26-6a790e88ed67c.webp' /></p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், தனது கைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் (CCTV) பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, தரம் சிங் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியில் இணைந்து நான்கு நாட்களே ஆகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவரை காவலாளியாக பணியில் அமர்த்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>தரம் சிங்கின் பின்னணி, பணியில் இணைக்கப்பட்ட விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22nd-constitutional-amendment-age-of-judges-tabled-1786321506"></link>
            <id>https://jvpnews.com/article/22nd-constitutional-amendment-age-of-judges-tabled-1786321506</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது வரம்பில் மாற்றங்களை முன்மொழியும் நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலமும் அன்றைய தினமே சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தத்தின் கீழ், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a44428-48fd-4855-bb5c-a95409107767/26-6a791a63c0c5a.webp' /></p><p>அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும்.

அதேநேரம் பிரதம நீதியரசர் 67 வயதை அடைந்ததும் அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததும் ஓய்வு பெறுவார்.</p><p>
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்கும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.
</p><p>
இதற்கிடையில், முன்மொழியப்பட்டுள்ள நீதித்துறை அமைப்புகள் சட்டத் திருத்தங்களின் மூலம் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்படும்.
</p><p>
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.
</p><p>
அரச ஊடக அறிக்கையின்படி, இந்த இரண்டு சட்டமூலங்களினதும் முதல் வாசிப்பு ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

அவை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு குடிமக்களுக்கும் அமைப்புகளுக்கும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.</p><p>

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் என்பதுடன், நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rahu-s-star-change-zodiac-signs-will-face-bad-luck-1786320552"></link>
            <id>https://jvpnews.com/article/rahu-s-star-change-zodiac-signs-will-face-bad-luck-1786320552</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்கின்றன. இது அவிட்டம் நட்சத்திரத்தின் வழியாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்கின்றன. இது அவிட்டம் நட்சத்திரத்தின் வழியாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளதுடன், ஏப்ரல் 2027 வரை அதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளது.&nbsp;</p><p>ஜோதிடத்தில், ராகு என்பது மாயை, திடீர் மாற்றங்கள், ஆசைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைக் குறிக்கும் ஒரு நிழல் கிரகமாகும். அவிட்டம் நட்சத்திரம் புகழ், செல்வாக்கு, சாதனை மற்றும் தைரியம் ஆகியவற்றைக் குறிப்பதால், இந்தக் காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத சவால்களையும் மாற்றங்களையும் சந்திக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3b0cdf-a8a7-47e9-a776-03b10ccca89b/26-6a7916aa1cd97.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அவர்களின் நிதி மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் சில மறைக்கப்பட்ட விஷயங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வரக்கூடும், இது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகள் அல்லது கடன் வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். எனவே, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். </p><p>யாரையும் எளிதில் நம்பாமல் இருப்பதும், பெரிய தொகையை யாருக்கும் கடனாகக் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பெரிய வாக்குவாதங்களாக மாறக்கூடும் என்பதால், கடக ராசிக்காரர்கள் இப்போது அமைதி காப்பதே சிறந்தது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சித்தால், இந்தக் கடினமான காலகட்டத்தை அவர்களால் வெற்றிகரமாகக் கடக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758351d4-67b8-4316-9dfc-19c3185f3fff/26-6a7916ac3569a.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் போட்டி, கருத்து வேறுபாடுகள் அல்லது அலுவலக அரசியல் போன்ற மோசமான சூழல்களை அவர்கள் சந்திக்க நேரிடலாம். இது அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சிறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. முக்கிய ஆவணங்கள், மருந்துகள் மற்றும் அன்றாடப் பொறுப்புகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்படுவது நல்லது.</p><p>அவர்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் கடுமையான அதிருப்தி அடையலாம். கன்னி ராசிக்காரர்கள் தற்போதைய நிலையில் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் பின்னடைவை சந்திக்கலாம். இந்த நேரத்தில் அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் குறைவாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8628296f-25b2-4a47-82e1-6bc068a3abfd/26-6a7916ab8180c.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கலாம், ஆனால் அதே வேகத்தில் அவர்களின் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் விருப்பமோ அல்லது அவசரப்பட்டு மேற்கொள்ளும் முதலீடுகளோ பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, நிதிக் தொடர்பான முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது.
</p><p>
திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31131d20-fe05-4f3a-84d0-528d2dac2c1c/26-6a7916aac69cd.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T00:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள சகோதரருக்கு உணவில் போதைப்பொருள் ; இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578</id>
            <summary type="text">களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a053d09-c043-4a5e-afbc-1247d955a1ff/26-6a790723c7e9a.webp' /></p><p>மில்லனிய - பட்டகொட வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால், வீதித் தடையொன்றில் வைத்து இவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு உணவுப் பொதிகளில் இருந்த 'சில்லி பேஸ்ட்' (Chili Paste) பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
வீதித் தடைக்கு சற்றுத் தொலைவில் உந்துருளியை நிறுத்தி, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டதாலேயே காவல்துறை அதிகாரிகள் அவர்களைப் பரிசோதித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் பயணித்த உந்துருளி மற்றும் கைபேசி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அங்குறுவாதொட்ட காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் புதிய உச்சம் ; 7 மாதங்களில் 5 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ee7663-3ff4-4b16-9d2d-2d1e47a72e29/26-6a790178b72a9.webp' /></p><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.
</p><p>
ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் குறித்து தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077"></link>
            <id>https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077</id>
            <summary type="text">தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் ராமு ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616a096e-96e8-4098-be2a-5296aa2d948d/26-6a78c6af46ded.webp' /></p><p>

அவர்கள் குறிப்பிடுகையில், "புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.</p><p> ஆனால், அந்தச் சிறப்பான விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது கண்டிக்கத்தக்கது. </p><p>வருங்காலத்தில் இதுபோன்று நிகழக் கூடாது.

தமிழக முதல்வர் விஜய், அரச விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனக் கூறியது போல, புதுச்சேரி அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
</p><p>
பிரதமர் கூடத் தமிழ் தான் மூத்த மொழி எனக் கூறியுள்ளார். எனவே, அனைத்து அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும்; இல்லையெனில் வீதியில் இறங்கிப் போராடுவோம்.
</p><p>
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். </p><p>இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். எனவே, வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-liquor-outlet-raided-two-arrested-1786309376"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-liquor-outlet-raided-two-arrested-1786309376</id>
            <summary type="text">கல்கிஸ்ஸை, மொரட்டுவை, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து விநியோகித்து வந்த நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கிஸ்ஸை, மொரட்டுவை, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து விநியோகித்து வந்த நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>அவ்விடத்திலிருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 135 லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட், 08 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 16,000 லீற்றர் கோடா (Goda) மற்றும் பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/650774c4-6c4a-4edb-b8d6-7653d53b5681/26-6a78eb02af50b.webp' /></p><p>கரதியான குப்பைக் கழிவு மேட்டிற்கு அருகிலுள்ள பொல்கொட ஆற்றிற்குச் சொந்தமான வேரஸ் கங்கைத் தீவில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சப்படுவதாக கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை, தெலாவல பகுதியைச் சேர்ந்தவர்களாவர். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இந்தியா வழங்கிய மற்றுமொரு அதிரடி உதவி ; 5 பெய்லி பாலங்கள் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094"></link>
            <id>https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094</id>
            <summary type="text">&#039;டித்வா&#039; சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டித்வா' சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.</p><p></p><p> 

250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் புதிய பாலத் தொகுதி, இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரழிவிற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தின் மற்றொரு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659b7178-6f52-4578-b451-0b967df74dda/26-6a78e60000f7c.webp' /></p><p> 

இலங்கைக்கான இந்தியத் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரி கே, இப் பாலத் தொகுதியைச் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சின் கூற்றுப்படி, இந்தியா இதற்கு முன்னர் வழங்கிய இரண்டு பாலத் தொகுதிகளுக்கு மேலதிகமாக, 5 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய 5 மொடுலர் (Modular) பெய்லி பாலங்கள் இந்த மூன்றாவது நன்கொடையில் அடங்கியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை ; 03 விற்பனை நிலையங்களுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826"></link>
            <id>https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826</id>
            <summary type="text">அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.</p><p></p><p> 

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af77949-a8a1-4702-a9bb-a3abdfa038e9/26-6a78e10c6113a.webp' /></p><p>இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளையொன்றைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அதன் விலையைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், நுகர்வோரிடம் அநியாயமாகப் பணம் அறவிடும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:20:50+00:00</updated>
        </entry>
    </feed>
