<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T12:32:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இரு பழங்கள்! எவை தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074"></link>
            <id>https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074</id>
            <summary type="text">&amp;nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.</p><p> தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

 ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் இரண்டும் வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc05588-0eb7-4194-924c-46ccde536e70/26-6a732d146c13a.webp' /></p><p><b>&nbsp;எடை குறைப்பு</b></p><p> </p><p>

ஆப்பிள்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக பெக்டின், நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. </p><p>இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. </p><p>

ஆப்பிளின் வழக்கமான நுகர்வு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p> ஒப்பீட்டளவில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க விரும்புவோருக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழமாகும்.</p><p><b>இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை, விலை மலிவானவை மற்றும் உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். </p><p>இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன, இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. </p><p>வாழைப்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உடல் விரைவாக ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவுகிறது.</p><p><b>செரிமானத்திற்கும் உதவுகிறது&nbsp;</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் குறிப்பாக குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், வாழைப்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியதாக வைத்திருக்கிறது.</p><p> 

நீங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டால் ஆப்பிள்கள் சற்று முன்னோக்கி உள்ளன. ஏனெனில் அவை கலோரிகளில் குறைவாகவும், ஆக்ஸிஜனேற்றத்தில் அதிகமாகவும் உள்ளன.</p><p> வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதே சமயம் ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு சமமாக பயனுள்ளதாக இருக்கும்.</p><p><b>நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது&nbsp;</b></p><p> 

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வைத்தியர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி இரண்டு பழங்களையும் மிதமாக சாப்பிடலாம். மென்மையான பழுத்த வாழைப்பழங்கள் பல் பிரச்சனைகள் இருந்தால் முதியவர்கள் சாப்பிடுவது எளிதாகும், மேலும் வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த சத்தான உணவாகும். </p><p>



வைத்தியர்களின் கூற்றுப்படி, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் நோய்களைத் தடுப்பதிலும் ஆப்பிள்கள் ஓரளவு மேம்பட்டவையாக இருக்கும் அதே வேளையில், உடற்பயிற்சிக்குப் பிறகு ஆற்றலையும், பொட்டாசியத்தையும் பெறுவதற்கு வாழைப்பழங்கள் சிறந்தவை எங்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு; ஓய்வு பெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577</id>
            <summary type="text">&amp;nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><h2>34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா</h2><p> </p><p>

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d510cc-3ee2-42aa-b997-ee0d7857f9e0/26-6a730414cc5d0.webp' /></p><p>குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.</p><p></p><p> </p><p>அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.</p><p>உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே.
அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813b6323-6590-4cf8-8077-b0bf07bacd00/26-6a730414202a5.webp' /></p><p>
தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார். </p><p>
உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில், அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.</p><p></p><p>இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றும் பல வைத்தியர்களின் நினைவில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6f0775-095e-41fc-942d-2b55648bb3d3/26-6a73041364f76.webp' /></p><p>
</p><p>இன்று நடைபெற்ற அவரது ஓய்வுபெறும் பாராட்டு விழாவில், அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலரும் அவரது தொழில்முறைத் திறமை, அமைதியான குணம், அன்பான அணுகுமுறை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பாராட்டினர்.
அவருடைய பாடசாலை நண்பர்கள் அவரை அன்புடன் "குட்டி" என்று அழைப்பார்கள். </p><p> செல்லப்பெயரிலேயே அவரது எளிமை, நட்புணர்வு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றன.
அதேபோல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவருடன் கடமையாற்றிய பல மருத்துவர்கள் அவரை அன்போடும் மரியாதையோடும் "ஸ்ரீ அண்ணன்" என்று அழைப்பது, அவர் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பிக்கை, பாசம் மற்றும் சகோதரத்துவ உறவிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf37792-6a02-4f52-8d65-c4ed80cca8c1/26-6a73041582106.webp' /></p><p> </p><p>பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார்.
உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது. </p><p>இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.</p><p></p><p>அன்பிற்குரிய டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா !
தங்களின் 34 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு வடக்கு மக்களின் சார்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக் குடும்பத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
</p><p>தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துகிறோம்.
"ஒரு நல்ல மருத்துவர் நோயாளிகளை மட்டும் குணப்படுத்துவதில்லை; மனிதர்களின் இதயங்களையும் வென்று விடுகிறார். </p><p>அந்த அரிய பெருமைக்குரியவர் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் என , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T11:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் மகோற்சவப் பெருவிழா; ஆயத்தங்கள் மும்மரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-2026-1785930401"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-2026-1785930401</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகம் மட்டுமல்லாது யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
</p><p>
ஆலய வளாகத்தில் ஆயத்தப்பணிகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஈழத்துத் தமிழ் மக்களின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425a7dc5-6a99-4c29-987d-f381d7a026b6/26-6a73257e6144a.webp' /></p><p> </p><p>

 நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து 25 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.</p><p> 

நல்லூர் கந்தன் பெரும் திருவிழாவை முன்னிட்டு புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் நாட்டுக்கு வருகை தருவார்கள். அதுமட்டுமல்லாது இந்திய பக்தர்களும் அண்மைய காலமாக நல்லூர் கந்தனை காண வருகை தருவது அதிகரித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0143057b-5462-4934-a691-76cc0fb8279f/26-6a73257f4b4c1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bda107-3dc7-44c4-bfe3-510913bf2102/26-6a73258022381.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29218e84-8dfe-42aa-ac8d-6406330b3568/26-6a732580ed71f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e289b3-e742-46bf-b00f-199f15afc806/26-6a732581c7068.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T11:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596"></link>
            <id>https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596</id>
            <summary type="text">&amp;nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>

மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இருக்கும். அதேபோல உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0d9753-3d16-4fc6-b55e-716bfe7e77f2/26-6a730fddbbc17.webp' /></p><p></p><h2>கோமா நிலை​யில் சிகிச்சை&nbsp;கோமா நிலை​யில் சிகிச்சை </h2><p> </p><p>

கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது.</p><p></p><p>
</p><p> 

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருந்​தார்.

சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் சுசிலா உயி​ரிழந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91992eb7-bd58-4d22-9878-093eb5414b9c/26-6a731074b379b.webp' /></p><p> ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்​படைக்​காத மருத்​து​வ​மனை நிர்​வாகம், அந்த இடைப்​பட்ட நேரத்​தில் உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தலாக வசூலித்​த​தாக புகார் எழுந்​தது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்​பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்​கில், ‘ரூ.61,644 கூடு​தலாக வசூலித்​திருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்பே நீதி​மன்​றத்​தில் ஒப்​புக்​கொண்​டு, அந்​தத் தொகையை திருப்​பிச் செலுத்​து​வ​தாக தெரி​வித்​தும் இது​வரை வழங்​க​வில்​லை’ எனக் கூறப்​பட்​டது.</p><p>

வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் காசி பாண்​டியன், மருத்​து​வ​மனைக்கு ரூ.65.62 லட்​சம் அபராதம் விதித்​ததுடன், கூடு​தலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனு​தா​ரருக்கு வழங்​கவும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-05T11:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாகாணங்களில் எலிக் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rat-fever-infectious-diseases-flood-srilanka-1785928070"></link>
            <id>https://jvpnews.com/article/rat-fever-infectious-diseases-flood-srilanka-1785928070</id>
            <summary type="text">&amp;nbsp;சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட புதன்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f75cf11-ce7f-40fd-b0a5-051e2e8bcf21/26-6a73198831c55.webp' /></p><h2>வயிற்றுப்போக்கு மஞ்சள் காமாலை தோல் நோய்கள் டெங்கு&nbsp;</h2><p>
</p><p>
அருகில் உள்ள சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார .வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால்&nbsp; &nbsp;உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடமிருந்து சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
மேலும், அசுத்தமான நீரில் குழந்தைகளை விளையாடச் செய்வது, நீராடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-import-of-vehicles-announcement-1785926482"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-import-of-vehicles-announcement-1785926482</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முக்கிய வெளியீடான &#039;மோட்டார் வாகனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது.
</p><p>
இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfad011d-848e-47d9-8cfa-b732dc63356c/26-6a731353e200b.webp' /></p><p>
</p><p>
15க்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு ஆலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20% உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்புக் கூட்டலும் அதிகரித்துள்ளன.</p><p></p><p>

2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.</p><p> இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது.

அதேசமயம் வாகனப் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் AI பயன்பாடு, தயாரிப்புக்கான நேரத்தை 50% வரை குறைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும் இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T10:39:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு 50,000 அபராதம்; கொடுத்தவருக்கு 10 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-000-fine-for-woman-who-danced-with-python-1785923537"></link>
            <id>https://jvpnews.com/article/50-000-fine-for-woman-who-danced-with-python-1785923537</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பு 07-ல் உள்ள ஒரு பெரிய விழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசி தேர்வுப் போட்டியின் போது, ​​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பு 07-ல் உள்ள ஒரு பெரிய விழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசர் மற்றும் இளவரசி தேர்வுப் போட்டியின் போது, ​​வன மற்றும் தாவரவியல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்கான மலைப்பாம்பை ஏந்தியபடி நடனமாடியதற்காக, பதினெட்டு வயது இளம்பெண் ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது.</p><p> நடனமாடுவதற்காக அந்தப் பெண்ணுக்கு ரூ. 25,000-க்கு மலைப்பாம்பை விற்ற 44 வயது நபருக்கும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்ட இரு நபர்கள், அனுராதபுரம், தம்புட்டெகமவைச் சேர்ந்த நேத்மி ஹிரண்யா (18) மற்றும் லட்சுமண் ரத்னசிறி (44) ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b30c5c4-997d-463f-a35e-2510f7c10898/26-6a7307d282ef4.webp' /></p><h2>மலைப்பாம்பை விற்ற 44 வயது நபருக்கும் ரூ. 10 லட்சம் அபராதம்</h2><p> </p><p>வன மற்றும் தாவரவியல் சட்டத்தின் விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட ஊர்வன வகையான மலைப்பாம்பை வைத்திருந்தபடி நடனமாடியதாக அந்தப் பெண் மீதும், பாதுகாக்கப்பட்ட மலைப்பாம்பை வைத்து, கட்டுப்படுத்தி, ரூ. 25,000-க்கு விற்றதாக சம்பந்தப்பட்ட நபர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் ஆஜரான, இவ்வழக்கைக் கையாண்ட கொழும்பு மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியான திரு. எம். பி. சஞ்சீவ, 'லங்காதீபா' விடுத்த ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில்,</p><p>குற்றம் சாட்டப்பட்ட இருவரும் விசாரணையின்போது தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். 

18 வயதான அந்தப் பெண், தனக்கு விதிக்கப்பட்ட ரூ. 50,000 அபராதத்தை உடனடியாகச் செலுத்திய அதே வேளையில், அதே நாளில் ரூ. 10 லட்சம் அபராதத்தைச் செலுத்த முடியாத மற்றொரு நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><p>அவர் இரண்டு நாட்கள் கழித்து அபராதத்தைச் செலுத்தியதாகவும் அந்த வனவிலங்கு அதிகாரி குறிப்பிட்டார்.
</p><p>அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த ஆவூருடு இளவரசர் மற்றும் இளவரசி தெரிவுப் போட்டியில் அந்த இளம் பெண் பயன்படுத்திய மலைப்பாம்பை வில்பத்து தேசியப் பூங்காவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-08-05T10:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுப் பொதிக்குள் போதைப்பொருள்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-found-inside-a-food-parcel-1785919930"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-found-inside-a-food-parcel-1785919930</id>
            <summary type="text">&amp;nbsp; களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்தில் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மில்லனிய - படகொட வீதியில் பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சந்தேகநபர்களும் சோதனையிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1bbb38-e8b2-4876-9534-f32e222ef866/26-6a72f9bb98cb3.webp' /></p><h2>&nbsp;களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதி</h2><p> </p><p>

 

போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 

இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது, இரண்டு 'மிக்ஸ் ரைஸ்' உணவுக்குள் மிளகாய் பேஸ்ட் போட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 

 சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி என்பனவும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

அதேசமயம் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
 

சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கப் பதக்கம் வென்ற ரூமேஷ் தரங்கவிற்கு பதவி உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/promotion-for-gold-medalist-rumesh-tharanga-1785921091"></link>
            <id>https://jvpnews.com/article/promotion-for-gold-medalist-rumesh-tharanga-1785921091</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant) தரநிலைக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
</p><p>


2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தமைக்காக, அவரைப் பாராட்டி இந்த பதவி உயர்வு இன்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04c5a3a3-7d06-44ba-91e1-64380944b618/26-6a72fe44eec5b.webp' /></p><p>
</p><p>


கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ரூமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.</p><p></p><p>



தரங்கவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி அவருக்கு சிறப்பு பணவிருதையும் வழங்கியதுடன் , ரூமேஷ் தரங்கவின் வெற்றிக்கு ஆதரவாகவும் பங்களிப்பாகவும் இருந்த அவரது பயிற்றுவிப்பாளர் டோனி பிரசன்ன மற்றும் பிசியோதெரபிஸ்ட் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோருக்கும் பணவிருதுகள் வழங்கப்பட்டன.</p><p></p><p>



 ரூமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பாலித பண்டார ஆண்களுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தட்டு எறிதல் (para discus throw) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-akila-viraj-kariyawasam-arrested-1785919451"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-akila-viraj-kariyawasam-arrested-1785919451</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்புமுன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>இரண்டாம் இணைப்பு</b></p><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். </p><p>

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;<b></b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd47e7ee-725e-44d8-a2a0-f2bbf4b2f7c5/26-6a72f7dc6dd9f.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T09:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773"></link>
            <id>https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

வாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வரவேற்றார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு, ஏனைய அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ccb7fa-837d-4f66-baf1-456a97f36b35/26-6a72f14f41048.webp' /></p><p>
</p><p>
இந்த விஜயமானது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே நடைபெற்று வரும் உயர்மட்டத் தொடர்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு ; 1 கிராம் தங்க மோதிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. </p><p> 

குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aca5215-b10d-4802-987c-ef54d769fa6a/26-6a72efce5d261.webp' /></p><p>
</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T08:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் 'ஹாஷிஷ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கொனஹேன முகாமின் விசேட அதிரடிப்படை உளவுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c647f4-7d66-4fc2-a24e-e21a0a619f7d/26-6a72ecca6c515.webp' /></p><p>
</p><p>
மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேகநபரை வழிமறித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 06 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் முதலில் கைப்பற்றப்பட்டது.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 06 கிலோகிராம் ஹாஷிஷ் கண்டெடுக்கப்பட்டது.</p><p>

கைப்பற்றப்பட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T07:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா பயணிகளை கவரும் திருகோணமலை மான்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து, அங்குள்ள மான்களுடன் பொழுதைக் கழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46009c7a-2f5a-43d5-b861-c1b2650c2b88/26-6a72e30121ea5.webp' /></p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.</p><p>

இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe07cc9-c9ed-4606-8e4b-058a71d091a2/26-6a72e2fef20f4.webp' /></p><p>

அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
</p><p>
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்காவும் சான்று பகிர்கின்றன. 

 மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e8518e3-50f6-46f0-8298-c27dc6ac1c89/26-6a72e2ffac9d7.webp' /></p><h3>&nbsp;மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை&nbsp;</h3><p>

அதேசமயம் மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. </p><p>

 எனவே சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef4697f-0164-4246-8f2c-4faff57268ab/26-6a72e30068d71.webp' /></p><p> </p><p>

அத்துடன், திருகோணமலையில் உள்ள மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார் நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இதுபோன்ற விடயங்களை மக்கள் மத்தியில் விழிப்பூட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுப் பேருந்துக்கு தீவைத்த விசமிகள் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779</id>
            <summary type="text">&amp;nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&amp;nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப்&nbsp; பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e445d6b-0d80-4dc6-bbf4-7e6536eec109/26-6a72c274eb69a.webp' /></p><h2>சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் சேதம்&nbsp;</h2><p>
</p><p>
 

அத்துடன், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>
 

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என&nbsp; கூறியுள்ள&nbsp;&nbsp;கடுவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் இரகசிய தகவலால் சிக்கிய மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-individuals-nabbed-ampara-area-tip-off-1785912923"></link>
            <id>https://jvpnews.com/article/3-individuals-nabbed-ampara-area-tip-off-1785912923</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை மாவட்டத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை மாவட்டத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f9a3803-5354-47aa-af99-5933f1b76709/26-6a72de5c9b61d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, அம்பாறை பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்களில் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முதல் சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
இருவருக்கும் போதைப்பொருளை விநியோகித்த பொல்வக காலனியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதான சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T06:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திடீர் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-gold-and-silver-prices-rising-today-1785912531"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-gold-and-silver-prices-rising-today-1785912531</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி , ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,132.03 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 60.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf1cf74-d43d-4628-8c6a-d0ae6cf6bd57/26-6a72dcd519f8f.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
</p><p>
 அதேசமயம் டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T06:46:53+00:00</updated>
        </entry>
    </feed>
