<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-19T03:54:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தமிழர் பகுதியை அதிர வைத்த துப்பாக்கிசூடு ; மதுபானக் கடை அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812fb664-349e-496e-b451-dc60b9a2cf9d/26-6aae05f769636.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p style="text-align: justify; ">

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணைய வழியில் பெண் செய்த சம்பவம் ; இரண்டு வருடங்களின் பின் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-a-woman-online-1789787657</id>
            <summary type="text">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1284780-d146-4869-a94b-2f9a68d5ccb9/26-6aadfe0ad8e46.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> 

இதற்கமைய, நேற்று (18) காலை சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.</p><p style="text-align: justify; "> 

இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக 2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன் ; வைரலான காணொளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-following-a-viral-video-1789786656</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf2d2dc-7c92-4049-8515-dea084f31fd0/26-6aadfb94207dc.webp' /></p><h2 style="text-align: justify; ">அடுத்தகட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி,&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில்,பொலிஸ் அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366"></link>
            <id>https://jvpnews.com/article/anogen-case-minister-s-plea-to-saudis-1789785366</id>
            <summary type="text">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a473efb-2817-43ca-9adc-7705b664fa12/26-6aadf51942d3a.webp' /></p><h2 style="text-align: justify; ">சமூக ஊடக பதிவு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்தக் கருத்தை சில நிமிடங்களில் நீக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், நீதியுடன் கருணையும் இணைந்திருக்க வேண்டும் என்றும், அனோஜன் தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T02:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரபல பாடசாலை மாணவி போதைப்பொருளுக்கு அடிமையா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640"></link>
            <id>https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரை உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தாது குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>

குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் பாவிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6c53ce-1d2b-42e9-8321-4bc097d12b49/26-6aadb3c225be4.webp' /></p><p>குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விடுதி ஊழியர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த இளம் பெண் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக குறித்த விவகாரம் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>எனவே, சம்பவம் தொடர்பில் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த பின்னரே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
</p><p>
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பெற்றோர் மற்றும் பொறுப்பான தரப்பினர் உரிய முறையில் தலையிட்டு தேவையான மருத்துவ மற்றும் புனர்வாழ்வு உதவிகளை வழங்குவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/raguvin-natchathira-matram-kodikalai-kuvikkum-rasi-1789772791"></link>
            <id>https://jvpnews.com/article/raguvin-natchathira-matram-kodikalai-kuvikkum-rasi-1789772791</id>
            <summary type="text">நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகு கிரகம் பொதுவாக இடையூறுகள், லட்சியம் மற்றும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. ராகு கிரகம் பொதுவாக இடையூறுகள், லட்சியம் மற்றும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ராகுவின் இயக்கத்தில் ஏற்படும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உணரப்படும். ராகு தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61d7bc0e-62ac-4fe2-9b64-84bfa7fde030/26-6aadc3f9c2c86.webp' /></p><p>அக்டோபர் 03-ஆம் திகதி, ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குப் பெயர்ச்சி அடைந்து, டிசம்பர் 5-ஆம் திகதி வரை அங்கேயே நிலைத்திருக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்குக் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். </p><p>இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42fc782f-cf21-4d55-91d2-87a94dedf096/26-6aadc3f916b3f.webp' /></p><h4>மேஷம்
</h4><p>ராகு அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான முன்னேற்றங்களைக் கொண்டு வரக்கூடும். இந்த நேரத்தில் வழக்கமான சிந்தனைகளிலிருந்து விலகி, புதிய யோசனைகளைச் சோதித்துப் பார்க்க நீங்கள் அதிக ஆர்வம் காட்டலாம். இந்த கிரக மாற்றத்தால் தொழில் சவால்கள் குறையலாம், மேலும் வளர்ச்சி மற்றும் சாதனைக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதிரீதியாக, இந்த காலம் சாதகமான காலகட்டமாக இருக்கும், வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/096b0b87-0ecd-42e8-89e9-8c69dfe2817c/26-6aadc3fa7beb2.webp' /></p><h4>சிம்மம்
</h4><p>ராகுவின் இந்த சஞ்சாரக் காலம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம்; அத்துடன், உங்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றம் வேலைகளை அணுகும் விதத்தில் புதிய உத்வேகத்தை அளிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் பெரிய வெற்றிகளைக் குவிக்கப் போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, தங்கள் வேலை வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளை அடையலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3a744c-d586-4af9-9c13-7fa3c73f4942/26-6aadc3fb32867.webp' /></p><h4>கும்பம்</h4><p>
ராகு தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் அதன் சஞ்சாரம், கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான முன்னேற்றங்களை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் சில இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fda2f6a8-2044-4623-8a93-59572926e99c/26-6aadc3fbdd17d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T00:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934</id>
            <summary type="text">நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf59866-bd64-4580-94e4-268872c32890/26-6aadc87083c66.webp' /></p><p>பூண்டு பற்களை தினசரி சமையலில் சேர்த்து வந்தாலும், "தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் அவை என்னவென நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddec3f4e-8e27-4804-b84d-ad504d5d550e/26-6aadc86fcf78e.webp' />&nbsp;</p><h4>இதயத்திற்கு நல்லது </h4><p>பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கும். இதனால் இரத்த நாள அடைப்பு நோய் வராமல் தடுக்கும். இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8879fe14-284c-46cf-92c7-d6fdbe08a354/26-6aadc87404b74.webp' /></p><h4>குடலுக்கு நல்லது </h4><p>நமது குடலில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அந்த பாக்டீரியாக்கள் நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர ப்ரீ பயோடிக்குகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ப்ரீபயோடிக்குகள் வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்து வரும் போது, செரிமான மண்டலம் நன்கு வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e0f1b6-31cd-4d08-ac79-4fd99386c72a/26-6aadc8734d601.webp' /></p><h4>மூளைக்கு நல்லது </h4><p>தினமும் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தவறான உணவுப் பழக்கங்களால் உடலில் ப்ரீ ராடிக்கல்கள் என்று சொல்லக்கூடிய கழிகள் சேர்கின்றன. இந்த ப்ரீ ராடிக்கல்கள் நமது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால் புற்றுநோய், டிமென்ஷியா, நரம்பு சிதைவு நோய் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து, டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய் வருவதைத் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4575f40f-c32c-4795-8382-5ddb626a8533/26-6aadc8729b27b.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது </h4><p>தினமும் ஒரு பல் பூண்டை காலையில் சாப்பிடும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், செலினியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற நிறைய தாதுஉப்புக்கள் உள்ளன. இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பூண்டிற்கு ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. எனவே தான் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது, பூண்டு ரசம் வைத்து சாப்பிடும் போது விரைவில் குணமாகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8d320-eae5-4e34-9d26-1c565a8bdd5b/26-6aadc871e0246.webp' /></p><h4>இரத்த சர்க்கரை கட்டுப்படும் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்&nbsp;இதுமட்டுமின்றி, பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும், எடை இழப்புக்கு உதவும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு சாப்பிடும் போது தாய்ப்பால் நிறைய சுரக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81dae70-a640-4060-9439-a5bdc18191d3/26-6aadc871392bb.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T23:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d26a864c-e891-4db4-990c-ccacc0c4adc6/26-6aadbecad5d1b.webp' /></p><p>வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கொழுந்துவிட்டு எரிந்த குப்பை மேடு ; புகையால் இரவு முழுவதும் அவதிப்பட்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222"></link>
            <id>https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&amp;nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் 

தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்</p><p> </p><p></p><p>குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அயலூர் மக்கள் இரவு முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p><p>அந்நிலையில் இன்றைய தினம் அப்பகுதிகளில் மாநகர சபை குப்பைகளை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அதனை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da41a680-7800-42b1-bd70-4899d9c7ef43/26-6aadb60902e31.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a52863-0b6a-4890-96d2-8cfd2f7575c5/26-6aadb6084c2c4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/697d2290-0989-4d71-aa92-34ee0a0723e6/26-6aadb609ac23c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T22:07:10+00:00</updated>
        </entry>
    </feed>
