<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T23:30:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய் ; ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aids-at-risk-of-resurgence-un-warns-1785193299"></link>
            <id>https://jvpnews.com/article/aids-at-risk-of-resurgence-un-warns-1785193299</id>
            <summary type="text">உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் சர்வதேச நிதி உதவி 18 சதவீதம் குறைந்து 7.3 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34f47979-7117-4e63-b041-4a27a6ece157/26-6a67e3553c93a.webp' /></p><p>இது கடந்த இரண்டு தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.</p><p>

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் மற்றும் நிதி நிறுத்தங்கள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைத் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
முறையான நிதியுதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மீண்டும் கிடைக்கப்பெறாவிட்டால், கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T23:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 உலகக் கிண்ணத்துக்கான திட்டம் ; வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-indian-player-thoughts-vaibhav-suryavanshi-1785186051"></link>
            <id>https://jvpnews.com/article/former-indian-player-thoughts-vaibhav-suryavanshi-1785186051</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவதற்கான முழுத் தகுதியையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8be452-07cc-4bac-8e84-c33e7c6a1bd4/26-6a67c7052af60.webp' /></p><p>இடதுகை மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களின் கலவையானது அணியின் பலத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்த ஃபரூக் என்ஜினியர், இந்த அணுகுமுறை எதிரணிகளுக்கு சவாலாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், ஷுப்மன் கில்லை 4ஆம் இலக்கத்தில் களமிறக்குவது இந்திய அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்தும் என்றும், விராட் கோலி 3ஆம் இலக்கத்தில் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
2027 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்திய அணி தனது அணிக்கட்டமைப்பைத் திட்டமிடும் நிலையில், இளம் வீரர்களின் பங்களிப்பு தொடர்பான விவாதங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:01:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devendramunai-esala-45-kavadi-dance-allowed-1785180840"></link>
            <id>https://jvpnews.com/article/devendramunai-esala-45-kavadi-dance-allowed-1785180840</id>
            <summary type="text">தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120fbdc2-6d82-4ac0-b246-fc3262ede051/26-6a67b2aaa7aa6.webp' /></p><p>

இதன்படி, கடந்த ஆண்டு பெரஹரையில் பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இம்முறை நடைபெறவுள்ள எசல பெரஹரையிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளன.
</p><p>
மேலும், நாளை நடைபெறவுள்ள பெரஹரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரையும் மேலதிகமாக பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
பெரஹரையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T19:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429"></link>
            <id>https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8613bf7c-94a0-4e6d-89b5-d24338c95eda/26-6a67ad26d794b.webp' /></p><p> 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T19:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315"></link>
            <id>https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315</id>
            <summary type="text">கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உற்சவ நிகழ்வுகளுக்காக அதிகளவிலான பக்தர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43122887-4880-4555-8438-5540d2041982/26-6a67a4e53eb4d.webp' /></p><p>இதன் காரணமாக, குறித்த நாட்களில் அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கவுள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
போக்குவரத்தை சீராக முன்னெடுப்பதற்காக தேவையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் ; மோட்டார் வாகனத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661"></link>
            <id>https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661</id>
            <summary type="text">மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் நிர்வாகச் சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி இன்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, அதன் முதலாம் உரிமையாளர் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சேவைச் சாளர எண்களை வழங்கி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47350514-4b42-47fd-bf35-15ded23b2b79/26-6a679a87cc306.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:51:09+00:00</updated>
        </entry>
    </feed>
