<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T16:23:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[02 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173</id>
            <summary type="text">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதை பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef444e4-c840-4e19-83ec-bee62379604f/26-6a999966ae419.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் பாவனை</h2><p style="text-align: justify; ">

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161"></link>
            <id>https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.</p><p style="text-align: justify; "> 

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f66977a7-cc03-41cb-b14b-3d2c902e518e/26-6a99918acbe8f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மேயர் முசம்மிலின் மகனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431c39cf-fa87-4d9c-8381-edde7b1dcc35/26-6a9974e89228d.webp' /></p><p>


எனினும், சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; மேள​தாளங்​கள் முழங்க கொண்டாடும் குடும்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475"></link>
            <id>https://jvpnews.com/article/a-baby-girl-after-200-years-the-family-celebrates-1788439475</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில்,சுமார் 200 ஆண்​டு​களாக பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது பிறந்த குழந்​தைக்கு ‘கார்​கி’ எனப் பெயரிட்டுள்​ளனர்.
</p><p>
 நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளதை குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868365a1-d2f9-4ade-8cf0-1f99c1beb1ea/26-6a996bb55a909.webp' /></p><h2>&nbsp;சாரட் வண்டியில்&nbsp; ஊர்​வல​மாக&nbsp; வந்த தாய், குழந்​தை&nbsp;</h2><p> </p><p>

மருத்​து​வ​மனை​யில் பிரசவம் முடிந்து வீடு திரும்​பிய தாய் மற்​றும் குழந்​தையை அவர்​களு​டைய குடும்​பத்​தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்​றனர்.</p><p> குறிப்​பாக, மேள​தாளங்​கள் முழங்க, கிராமிய நடனங்​களுக்கு நடுவே அலங்​கரிக்​கப்​பட்ட சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்.

குழந்​தை​யின் தாத்தா லிம்​பாஜி தஹி​பாலே உணர்ச்​சிவசப்​பட்டு கூறும்​போது,</p><p></p><p> “குடும்​பத்​தில் ஒரு பெண் குழந்தை பிறப்​பது பெரும் பாக்​கி​யம். பல ஆண்​டு​களாக பெண் இல்​லாத குறை இருந்​தது, இன்று அது நிறைவேறி​யுள்​ளது” என்​றார்.</p><p>

தன்​னுடைய இரு மரு​மகள்​களை​யும் சொந்த மகள்​களைப் போலவே நடத்தி வந்​த​தாக​வும், பேத்​தியை தேரில் இசை​யுட​னும் நடனத்​துட​னும் வீட்​டுக்கு அழைத்து வந்​த​தில் மகிழ்ச்சி அடைவதாக​வும் அவர் தெரி​வித்​தார்.</p><p></p><p> குழந்​தை​யின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறும்​போது, “இன்று எங்​கள் வீட்​டுக்கு லட்​சுமி வந்திருக்​கிறாள் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.</p><p>

குழந்​தை​யின் தந்தை கூறும்​போது, “பொது​வாக மக்​கள் ஆண் குழந்​தையையே விரும்​பு​வார்​கள், ஆனால் பெண் குழந்தை பெறும் உணர்​வும் மகிழ்ச்​சி​யும் வேறு வித​மானது. மகள்​கள் தந்தை​யிடம் அதிக பாசம் கொண்​ட​வர்​கள். எங்​கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்​போம்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விட வேண்டாம்; மின் விநியோகம் தடைப்படும் அபாயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-fly-kites-risk-of-power-supply-disruption-1788441425</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின்சார பரிமாற்றக் கம்பிகளின் கீழ், மின்கோபுரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய முறைமை இயக்குநர் (NSO) தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


 இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டங்கள் மற்றும் அவற்றின் நூல்கள் மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மின்சார பரிமாற்றக் கம்பிகள் செயலிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db2664d-5843-4ec1-b4ef-58bb67d0f2e2/26-6a9973535a814.webp' /></p><h2>மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள்</h2><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், மின்சார பரிமாற்றக் கம்பிகள் தானியங்கி முறையில் துண்டிக்கப்படுவதற்கும் காரணமாக அமையக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


மின்சார பரிமாற்றக் கம்பிகளில் சிக்கியுள்ள பட்டங்கள் மற்றும் நூல்கள் தற்போது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகளின் கீழ் மனிதர்களால் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
</p><p>


எனவே, இவ்வாறான சம்பவங்கள் தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மின்சார உற்பத்தி அலகுகள் செயலிழப்பதற்கும் வழிவகுக்கலாம்.</p><p></p><p>
</p><p>


இவ்வாறான சம்பவங்கள் காரணமாக நேற்று (2) தேசிய மின்சார முறைமையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாகவும், முறைமையின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான அவசர நடவடிக்கையாக தெரிவுசெய்யப்பட்ட சில மின்சார விநியோக வழித்தடங்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதன் விளைவாக, குறித்த மின்சார விநியோக வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டிருந்த சில நுகர்வோரின் மின்சார விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த பிரதேசங்களில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்த்து, தேசிய மின்சார முறைமையின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயற்பாட்டை உறுதி செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006"></link>
            <id>https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. </p><p> 

அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70154aa3-f7a6-4162-8a08-684daa448886/26-6a994a9f9b348.webp' /></p><h2>பதில் சொல்கிறேன் ...&nbsp; யாரும் ஓடக்கூடாது</h2><p> 


இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p></p><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.</p><p> இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. 

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.</p><p></p><p>அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். </p><p>வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.</p><p>

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.</p><p></p><p>ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705"></link>
            <id>https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705</id>
            <summary type="text">&amp;nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் &#039;காவ் வாய் காதல் சந்தை&#039; (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907adc64-37ba-46ee-a95d-7c88ffaa628e/26-6a99785311a1f.webp' /></p><h2>எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத&nbsp; &nbsp;சந்தை</h2><p> 

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.</p><p></p><p>
</p><p>
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
</p><p>
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.

திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.</p><p>

3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p></p><p>
</p><p>
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியை கொலை;குற்றவாளிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612"></link>
            <id>https://jvpnews.com/article/monaragala-teacher-murder-death-sentence-1788440612</id>
            <summary type="text">&amp;nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி சிகிரீ ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகரவினால் புதன்கிழமை (02) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
மொனராகலை சொரோம்புவ பேரமண்டியவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அருண சாந்த என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72faef2c-4cd0-4367-b15c-c7f0c6734a8c/26-6a99702585984.webp' /></p><h2>நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின் மரண தண்டனை</h2><p>

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்தே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, காட்டில் இழுத்துச் செல்லப்பட்டு அவரது சேலையால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அவரை வன்புணர்ச்சி செய்யும் நோக்கத்துடன் காட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அது தோல்வியடைந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

பிரதிவாதிக்கு கொலைக் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்ததுடன், வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகக் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு SJB ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sjb-protest-in-front-of-the-fort-railway-station-1788438072"></link>
            <id>https://jvpnews.com/article/sjb-protest-in-front-of-the-fort-railway-station-1788438072</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41b7a83a-1f06-44a6-8b72-bb6e7c9bc7b9/26-6a99663a0e4d6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-individuals-deported-from-abu-dhabi-arrested-1788437271"></link>
            <id>https://jvpnews.com/article/two-individuals-deported-from-abu-dhabi-arrested-1788437271</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த இருவர், அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு 09/03 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
</p><p>


ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்குவதற்கு ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஏவுகணைகள் மற்றும் அவை இலக்குகளைத் தாக்கிய விதம் தொடர்பான காணொளிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்திருந்தமைக்காகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72d7e843-0ae3-4ce9-8d32-aa941e76c6b5/26-6a9963195997c.webp' /></p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது</h2><p>



</p><p>திசநாயக்க முதியன்செலகே பந்துல திசநாயக்க: அசோகபுராவின் துங்கன்னாவப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான இவர், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p>



சியம்பலாடுவ பாதிரனலகே ஹர்ஷ குமார: கொழும்பு, பொரெல்லாவைச் சேர்ந்த 36 வயதான இவர்,ரேவி சூடாவின் நெருங்கிய ஆதரவாளரும், பூசா சிறைச்சாலைக் கலவரச் செயல்களில் ஈடுபட்டவரும் ஆவார்.</p><p>



அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானமான EY-392 மூலம் 09/03 அன்று காலை 10.15 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரையும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பந்துல திசாநாயக்க மேலதிக விசாரணைக்காகக் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கும், ஹர்ஷ குமார கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T12:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு நீண்ட நாளாக போக்கு காட்டிய கொம்பனித்தெரு குடு நோனா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479"></link>
            <id>https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>


செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a398e9b4-27d3-4f22-91bb-5979248d4295/26-6a992950a9395.webp' /></p><h2>நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்த நோனா</h2><p>
</p><p>


கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொம்பன்னவீதி மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் முன்னர் வசித்து வந்த சந்தேகநபர், கடந்த காலத்திலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p>முன்னதாக, 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><p>



நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பிலும் கிரிபத்கொட பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சுட்டி உக்குங்’ என்பவரின் சிறிய தாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அவரது கணவரான ‘கூம்பிகெலே சுட்டி’, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியால் இலங்கைக்கு குவியும் வருமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/revenue-pouring-into-sri-lanka-vehicle-imports-1788436469"></link>
            <id>https://jvpnews.com/article/revenue-pouring-into-sri-lanka-vehicle-imports-1788436469</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலமே இந்த வரி வருவாய் பெறப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378a5e81-d140-4205-a208-426c1350137e/26-6a99607f06b93.webp' /></p><h2>316,000 வாகனங்கள் -512,547 மில்லியன் வரி வருவாய் </h2><p> </p><p>



இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான ரூபாய் 386,726 மில்லியன் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.</p><p></p><p>



அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை' 1,000சிசி இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.</p><p></p><p>



அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T11:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பெண்ணை தகாத உறவுக்கு அழைத்து கடிதம் அனுப்பிய மூன்று இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945"></link>
            <id>https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945</id>
            <summary type="text">&amp;nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937d4b6a-2662-4668-946a-4ff5f3754254/26-6a993ac2c32f6.webp' /></p><h2>&nbsp;தகாத உறவுக்கு அழைத்து கடிதம்</h2><p>
</p><p>
தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாலியல் அழைப்புக் குறிப்புகளைப் பெண்ணின் அறைக்கதவின் கீழ் திணித்துள்ளனர்.</p><p></p><p>

பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
மேலும் கைதான சந்தேகநபர்கள் மூவரும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த குடும்பத் தகராறு ; மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-in-law-arrested-for-stabbing-father-law-death-1788434420"></link>
            <id>https://jvpnews.com/article/son-in-law-arrested-for-stabbing-father-law-death-1788434420</id>
            <summary type="text">கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



பாலுகடுமெட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று புதன்கிழமை (02) கிடைத்த தகவலையடுத்து, கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>



உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d331c15-98fd-416d-abe5-6877f83a1125/26-6a9957f59dd5c.webp' /></p><p>நேற்று இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபரான மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-increase-sharply-sri-lanka-single-day-1788433422"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-increase-sharply-sri-lanka-single-day-1788433422</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,&nbsp;இன்று அதன் விலை ரூ.377,000 ஆக குறைவடைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/750cc754-8219-4b78-97aa-033741b03405/26-6a99540fa1feb.webp' /></p><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கான்ஸ்டபிள் பதவிக்கு பரிசோதனை; இளம் பெண்ணிடம் அத்துமீறிய பொலிஸ் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-sergeant-sexually-assaulted-a-woman-1788425955"></link>
            <id>https://jvpnews.com/article/police-sergeant-sexually-assaulted-a-woman-1788425955</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த இளம்பெண் எதிர்வரும் 9ஆம் திகதி மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ed8853-0b3c-4658-af06-372d9e010603/26-6a9936e495c78.webp' /></p><p></p><h2>அந்தரங்கப் பகுதியில்&nbsp; &nbsp;தழும்புகள்</h2><p> </p><p>

இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் திகதி சிவில் உடையில் அவரது வீட்டுக்குச் சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி, மருத்துவப் பரிசோதனைக்கு முன்னர் அவரது அந்தரங்கப் பகுதியில் உள்ள தழும்புகள் தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும் எனக் கூறியதாகவும், அந்த அறிக்கை இல்லையெனில் வேலை கிடைக்காது என அச்சுறுத்தியதாகவும் பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க அறையில் அமர்ந்த பின்னர், யுவதியின் அந்தரங்கப் பகுதியைத் தொட்டதால் அதிர்ச்சியடைத்த யுவதி , கையைத் தட்டிவிட்டு ஓடிச்சென்று தனது தாயிடம் சம்பவத்தைத் தெரிவித்ததாகவும் இளம்பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
சம்பவத்தை அடுத்து பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-03T11:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் நீர்க் கண்காட்சி; பலரது கவனத்தை ஈர்த்த விழிப்புணர்வு நாடகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-water-exhibition-play-nallur-festival-jaffna-1788432623"></link>
            <id>https://jvpnews.com/article/the-water-exhibition-play-nallur-festival-jaffna-1788432623</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் 02.03.2026 நல்லூர் நீர்க் கண்காட்சி மூன்றாவது முறையாக ஆரம்பமானது. </p><p>

குறித்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான் நீரே தான்" நாடக ஆற்றுகை பலரது கவனத்தையும் ஈர்த்தது. வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட நீர்வள அதிகாரிகள், நீர் ஆர்வலர்கள் குறித்த நாடகத்தை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ef7e3d-eb0f-49a6-85e3-a154edd641fd/26-6a9950f0d4fc5.webp' /></p><h2>கடல் நீர் உட் புகும் அபாயம்</h2><p> </p><p> 

பொதுக் கிணறுகளில் ஊரிலுள்ள குடும்பங்கள் தண்ணீரை பகிர்ந்து அளவாக பயன்படுத்திய காலம் போய், வீட்டுக்கொரு கிணறு மூலம் அளவாக வாளிகளில் தண்ணீரை அள்ளிய காலமும் கடந்து,</p><p></p><p> இன்று காணிகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து ஒவ்வொரு காணிக்கும் ஒரு குழாய்க்கிணறு அடித்து சமூகப் பொறுப்பின்றி நிலத்தடி நீரை வேண்டியளவுக்கு உறிஞ்சுவதால் கடல் நீர் உட் புகும் அபாயம்&nbsp; தொடர்பிலும், அதனூடாக வரும் விளைவுகளையும் தத்ரூபமாக குறித்த நாடகம் பதிவு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26503b25-9e25-4917-b8e8-e73611369d8a/26-6a9950f1976dc.webp' /></p><p> </p><p>

நாடகம் முடிவடைந்த பின் குறித்த நாடக உருவாக்கத்தினை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

குறித்த நீர்க் கண்காட்சியின் பாரம்பரிய ஊருணி அரங்கில் 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7 மணி முதல் பல்வேறு கலை நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17570c70-ebe6-4071-8902-ac6d5f48cf6d/26-6a9950f2581d2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788432083"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788432083</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான இவ்வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2de946-d585-49a4-a0ba-17f6e85767ea/26-6a994ed470b62.webp' /></p><p> 

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p> 

அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-animation-artist-passes-away-1788431395"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-animation-artist-passes-away-1788431395</id>
            <summary type="text">இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார்.</p><p> </p><p></p><p>அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6c9dcd-6953-4fe7-b79b-a43decfc72db/26-6a994c24b770a.webp' /></p><p>அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதுடன், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். </p><p>

அனிமேஷன் துறையில் அவரது முன்னோடிப் பணி இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:30:17+00:00</updated>
        </entry>
    </feed>
