<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T14:29:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்கம விதுரவின் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rathgama-vidura-assets-worth-rs-150-million-frozen-1784812219"></link>
            <id>https://jvpnews.com/article/rathgama-vidura-assets-worth-rs-150-million-frozen-1784812219</id>
            <summary type="text">ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரே இதனைக் செயற்படுத்தியுள்ளனர்.</p><p> 

குறித்த சொத்துக்கள் ரத்கம விதுரவின் தாயாரின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74741ef0-f70f-415f-940b-757a3e80777b/26-6a6212bc8fbf2.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, ரத்ம - தேவனிஹொட பகுதியில் 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலம் மற்றும் அரைகுறையாக முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம்,</p><p></p><p> அதே பகுதியில் உள்ள 12.33 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள மேலும் 200 லட்சம் ரூபாய் பெறுமதியான நிலம் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-23T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762"></link>
            <id>https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad, 69) பாரிஸ் நகரிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

 பிரெஞ்சு அதிகாரிகளின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, டேனியல் சியாட் பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இளம் பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைத்த இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c472e823-1f85-4450-b816-6bb43e4dc365/26-6a61fd6c55366.webp' /></p><h2>&nbsp;சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை</h2><p> சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் சியாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் புகார்களை அளித்திருந்த நிலையில், பிரெஞ்சு காவல் துறையினர் அவர் மீது தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>

பாரிஸின் கொலம்பஸ் (Colombes) பகுதியில் உள்ள அவரது வீட்டில் சியாட் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய நந்தேர் (Nanterre) நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வுக்கு (Autopsy) உத்தரவிட்டுள்ளது.</p><p> இருப்பினும், சியாட் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்ஸ்டீன் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த மற்றொரு முன்னணி பிரெஞ்சு மாடலிங் முகவர் ஜான்-லூக் புரூனெல் (Jean-Luc Brunel) 2022-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். </p><p>தற்போது அவருக்கு அடுத்து எப்ஸ்டீனின் முக்கிய கூட்டாளியான டேனியல் சியாட்டும் விசாரணை வளையத்திற்குள் வரும் முன்பே உயிரிழந்துள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி <a href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126" target="_blank">கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு</a>, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51454d9c-969d-4821-904b-d103a7bf1224/26-6a61fa13eeff8.webp' /></p><p>
</p><p>
இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content>
            <updated>2026-07-23T13:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் மருத்துவர் என நம்பி பெரும் தொகையை இழந்த பெண்; தமிழர் பகுதியில் சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504"></link>
            <id>https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான &#039;வெளிநாட்டு வைத்தியர்&#039; ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6aabb1-9371-417d-b398-b6c0e3db7a73/26-6a620ff16a9f7.webp' /></p><h2>சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி அப்பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கி வரும் சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். </p><p>

லண்டனைச் சேர்ந்த வைத்தியர் 'டான்' பல இலட்சம் ரூபாய் பெறுமதியான விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு (Clearance) 87,000 ரூபாய் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிவழியே செலுத்துமாறும் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதனை உண்மையென நம்பிய அப்பெண், 17ஆம் திகதி உடனடியாக 87,000 ரூபாயை அனுப்பியுள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, பொதியை விடுவிக்க மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படவே, அதனையும் வைப்புச் செய்துள்ளார். 

பின்னரும் பணம் கோரப்பட்டதால், அப்பெண்ணின் தாயார் மேலும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக "இன்னும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே பார்சல் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், "இனிமேல் பணம் தர முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த மோசடி கும்பலைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
</p><p>
 இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இந் நிலையில் முகநூல் வாயிலாக இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் பலர் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பறப்கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், அறிமுகமில்லாத முகநூல் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T13:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மனதை உறைய வைக்கும் மற்றுமொரு சிறுவரின் என்புக்கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306"></link>
            <id>https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி மனித புதைகுழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a03d91-f4ef-40eb-a309-e0cf813c15d2/26-6a6216fc3fbaf.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இந் நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.</p><p>
 
வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10336c1c-0aeb-4b9f-8a58-8624ee6376ad/26-6a61da1f37b29.webp' /></p><h2>2035 இல் இலங்கையின் முழு&nbsp; நகரிலும்&nbsp; மெட்ரோ பேருந்துகள்</h2><p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.</p><p></p><p>&nbsp; ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும்.</p><p> 

இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-23T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-transfer-of-a-mannar-school-principal-1784808019"></link>
            <id>https://jvpnews.com/article/protest-transfer-of-a-mannar-school-principal-1784808019</id>
            <summary type="text">&amp;nbsp; பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> 

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்று (23) வியாழக்கிழமை பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c9fc6-5c57-438a-a50f-db44ff6631b6/26-6a62025553c2a.webp' /></p><h2>&nbsp;பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை...</h2><p>மன்னார் மாவ்டத்தில் பிரபலமான அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிவித்து தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>&nbsp; இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர். </p><p>

தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் கூறுகையில், இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.</p><p>இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீனர்கள் அடிதடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-chinese-nationals-at-colombo-port-city-1784807344"></link>
            <id>https://jvpnews.com/article/clash-chinese-nationals-at-colombo-port-city-1784807344</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த சீன நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 காயமடைதவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ca2811d-611c-4d73-80b2-f5b425446a9f/26-6a61ffb203562.webp' /></p><p> </p><p>

சம்பவ இடத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு கருவி ஒன்றைக் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந்த மோதலின் போது காயமடைந்த மற்றொரு சீன நாட்டவரையும் எதிர் குழுவினர் அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

 மேலும் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460"></link>
            <id>https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a1c38d-3258-4522-a265-4e659ab6258c/26-6a61f85679456.webp' /></p><p>ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றை பொறுத்தவரை சைவத் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சின்னம் எனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.
</p><p>
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச்சூழலைப் பயன்படுத்தி பௌத்தமயமாக்க முனைவதும் வேதனை தரும் செய்தியாகும்.</p><p>

தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலைநிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம்.

இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aee21bd-8b25-4dcc-a2d7-f5be6812f793/26-6a61f855c4bfc.webp' /></p><p>கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது, பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாட்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
</p><p>
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
</p><p>
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதல் விடுக்கின்றோம் என்றுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு பாதிப்பு 79 ஆயிரத்தை கடந்தது ; பொதுமக்களுக்கு மீண்டும் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அந்தப் பிரிவு நேற்று (22) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1b8119-8a1a-4ab0-84f6-3dbda6696b0a/26-6a61ee8ca5fce.webp' /></p><p>அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு மட்டும் இதுவரை 16,676 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



அடுத்ததாக, கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,495 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,318 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,190 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,444 பேரும், காலி மாவட்டத்தில் 4,391 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மட்டும் 23,641 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி, கொசு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடருமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658</id>
            <summary type="text">சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>சந்தேகநபர்களைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d7a98e9-3d1c-4dba-9686-fedff7592cc7/26-6a61e97bb1723.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-missing-boy-who-drowned-in-river-recovered-1784800504"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-missing-boy-who-drowned-in-river-recovered-1784800504</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71830ce-628c-41f9-93dc-0fe9e317391a/26-6a61e4fa2049f.webp' /></p><p>ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.</p><p> 

இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>

இத்தீவிர தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.</p><p> 

பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-vimal-sentenced-to-one-year-in-prison-1784799102"></link>
            <id>https://jvpnews.com/article/actor-vimal-sentenced-to-one-year-in-prison-1784799102</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி இந்திய ரூபா கடனாகப் பெற்றுள்ளார். 

படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa38175-0266-409c-9196-ef8235e5aee5/26-6a61df8064e9b.webp' /></p><h2>காசோலை மோசடி</h2><p> </p><p>பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். 

 காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. </p><p>

இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.</p><p></p><p>

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்தார்.</p><p> அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து நடிகர் விமலுக்கு , அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் வாங்கிய காசு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்; பின்னணியில் திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356"></link>
            <id>https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&nbsp; திடுக்கிடும்&nbsp; தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக&nbsp; பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ee094b-4f4e-402d-a638-9edaf111c81b/26-6a61aeac96d24.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம்</h2><p>
</p><p>சந்தேக நபர்களிடம்&nbsp; இருந்து&nbsp; 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என&nbsp; பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள&nbsp; சந்தேக நபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல்&nbsp; அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்தமை&nbsp; &nbsp;ஆரம்பகட்ட விசாரணைகளின்போது&nbsp; &nbsp;ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. </p><p>தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;கைதான&nbsp; மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:43:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increased-elephant-movement-urgent-warning-issued-1784799012"></link>
            <id>https://jvpnews.com/article/increased-elephant-movement-urgent-warning-issued-1784799012</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>யானை வேலிகள் சேதப்படுத்தப்பட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால், மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4923b2f3-b22d-450e-be6e-035fea3670a8/26-6a61df25ba501.webp' /></p><p>



இந்நிலையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், இன்று பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் அமைக்கப்பட்டு, யானைகளை விரட்டும் தற்காலிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், இரவு 6.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தேவையற்ற வெளிச்செல்லல்களை தவிர்க்குமாறும், யானைகள் தென்பட்டால் அவற்றிற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


அத்துடன், டோர்ச் விளக்கு, பட்டாசு உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>



இதற்கிடையில், யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, குறித்த யானைகளை மாவட்ட எல்லையை கடந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerala-cannabis-2-motorcycles-seized-kilinochchi-1784798089"></link>
            <id>https://jvpnews.com/article/kerala-cannabis-2-motorcycles-seized-kilinochchi-1784798089</id>
            <summary type="text">கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 

6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 

6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.</p><p></p><p> 



தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 

கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. </p><p>



இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார் மீட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33a27c6-2f24-4b6a-bcf8-97d40ad525b8/26-6a61db8aa22d5.webp' /></p><p>அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p> எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>


கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய ஆங்கில மொழியிலான மேடைப்பேச்சு ; லண்டனில் இலங்கை மாணவனின் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-student-s-achievement-in-london-1784796966"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-student-s-achievement-in-london-1784796966</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.</p><p></p><p>

கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச போட்டியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1daa78d7-a85d-4841-a5ca-f105dd6489ba/26-6a61d7276861c.webp' /></p><p>

கடும் போட்டிக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒமர் ஹசாரி, தனது சிறப்பான பேச்சுத் திறமையால் நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றினார்.
</p><p>
இப்போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் இடத்தையும், உகாண்டாவைச் சேர்ந்த மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.</p><p>

இறுதிச் சுற்றில், தனது சிறுவயது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒமர் ஹசாரி ஆற்றிய உரை நடுவர்களை பெரிதும் கவர்ந்தது. </p><p>பாடசாலைப் பருவத்தில் எதிர்கொண்ட கேலி, அவமதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட திக்குவாய் குறைபாட்டை பிறரின் ஆதரவுடன் எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார் என்பதை அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.</p><p>

அத்துடன், பாடசாலைகளில் இடம்பெறும் கொடுமைப்படுத்தலுக்கு (Bullying) எதிராக தனது பாடசாலையில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்த அனுபவத்தையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
</p><p>
இந்த வெற்றியின் மூலம், உலகளாவிய மேடைப்பேச்சு போட்டியில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஷேன் தசநாயக்க உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.</p><p>

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் இலங்கை மாணவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை இளைஞர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறனுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் ; பொலிஸ் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103</id>
            <summary type="text">கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p> பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரனின் கூற்றுப்படி, அவர் தனது காரில் ஏறுவதற்காகச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00b92d4-5747-40c6-8ed2-50a567cc78b6/26-6a61d3c929da9.webp' /></p><p>அதன்பின்னர் தாமாகவே கீழே இறங்கியபோது, அவரை இழுத்து தாக்கியதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தி உயிர் அச்சுறுத்தலும் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், காரின் சாவியைப் பறித்துக்கொண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இந்தச் சம்பவத்தால் உடல் உபாதைகளும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பில் கொட்டகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை நினைவுகூர்ந்த தமிழ் எம்பிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர்.</p><p> 

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66ca2e8-03af-4ddd-9fdb-3eb4cca5321b/26-6a61d3576d4c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:06+00:00</updated>
        </entry>
    </feed>
