<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-30T05:37:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் யாழை சேர்ந்த ஊடகவியலாளர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/journalist-from-jaffna-dies-suddenly-in-canada-1785388357"></link>
            <id>https://jvpnews.com/article/journalist-from-jaffna-dies-suddenly-in-canada-1785388357</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு&amp;nbsp; உயிரிழந்துள்ளதுள்ளதாக&amp;nbsp; கூறப்படும்&amp;nbsp; நிலையில் ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு&nbsp; உயிரிழந்துள்ளதுள்ளதாக&nbsp; கூறப்படும்&nbsp; நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c9ae26-4d5b-4057-b881-c42dcdbd28d4/26-6a6ae15706576.webp' /></p><p>
</p><p>
மேலும், பிரபல பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>உலகசெய்தி

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார். </p><p>

அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T05:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் பயணித்த வாகனம் வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-bound-jaffna-accident-in-vavuniya-2-dead-1785389143"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-bound-jaffna-accident-in-vavuniya-2-dead-1785389143</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ea0688-5b26-4073-8038-731bd72c7d03/26-6a6ae0588d422.webp' /></p><p>

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5485af1-ae01-4fdd-9fdb-84f185d6209a/26-6a6ae0596496e.webp' /></p><p>
</p><p>
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ce30f12-ebd3-4b6e-b11d-9fb67f696732/26-6a6ae05a1d4b6.webp' /></p>]]></content>
            <updated>2026-07-30T05:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெந்தோட்டை கடற்பரப்பில் பாரசூட்டில் பறந்த வெளிநாட்டு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreigner-dies-while-parasailing-coast-of-bentota-1785387627"></link>
            <id>https://jvpnews.com/article/foreigner-dies-while-parasailing-coast-of-bentota-1785387627</id>
            <summary type="text">&amp;nbsp; காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (29) மாலை, கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்ட இலகுரக பாராசூட் இயந்திரம் ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பெண் மற்றும் அதை இயக்கிய நபருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d65c5c9-9bfa-474a-8d1d-9a68e7538bc3/26-6a6ada6cd6e21.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

அவரது சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராசூட்டை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:58:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள்களுடன் 26வயது பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/26-year-old-police-officer-arrested-with-drugs-1785387303"></link>
            <id>https://jvpnews.com/article/26-year-old-police-officer-arrested-with-drugs-1785387303</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயதுடைய உதவி பொலிஸ் அதிகாரியொருவர் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயதுடைய உதவி பொலிஸ் அதிகாரியொருவர் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>



 சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec50308b-bff7-4060-8ea6-ea40da1a0372/26-6a6ad92988a0f.webp' /></p><p>


 கைதான உதவி பொலிஸ் அதிகாரி தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
</p><p>


சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T04:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த தாக்குதல் ; மத்தியகிழக்கில் மீண்டும் பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-launches-powerful-attack-iran-war-middle-east-1785386816"></link>
            <id>https://jvpnews.com/article/us-launches-powerful-attack-iran-war-middle-east-1785386816</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமை&nbsp; போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. </p><p>

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6e8136-65de-4a9e-8ae7-07b45e94552e/26-6a6ad741a4ff5.webp' /></p><p> </p><p>

இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.</p><p></p><p> </p><p>

பெப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்த போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த போதும் 5 மாதங்களாக இந்தப் போர் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய சம்பவம் ; உணவுக்காக நடந்தப்பட்ட கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-reported-at-temple-in-tamil-area-1785372155"></link>
            <id>https://jvpnews.com/article/incident-reported-at-temple-in-tamil-area-1785372155</id>
            <summary type="text">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்.
</p><p style="text-align: justify; ">
வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba88d83-e4b4-4346-b75f-6e09df5686d3/26-6a6a9dfd49326.webp' /></p><h2 style="text-align: justify;">அன்னதானம்</h2><p style="text-align: justify;"> குறித்த ஆலையத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான புதன்கிழமை பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை வாங்கி சாப்பாடு இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து 7 பேர் கொண்ட ஜயங்கேணி வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கயவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவரை மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன். </p><p style="text-align: justify;">இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T01:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் ராஜயோகங்கள் ; சுப செய்தி காத்திருக்கும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guru-purnima-after-56-years-1785373946"></link>
            <id>https://jvpnews.com/article/guru-purnima-after-56-years-1785373946</id>
            <summary type="text">வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் திகதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் திகதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p style="text-align: justify; ">அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36105bfd-511d-4141-a04c-652e9236bc83/26-6a6aa4fcbd0c3.webp' /></p><h2 style="text-align: justify; ">

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் </h2><p style="text-align: justify; "><b>ரிஷபம் : </b>குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; "><b>
கும்பம்:&nbsp;</b> குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால், பெரிய வெற்றியைக் காணலாம். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

மகரம் :</b> குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து, பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T01:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பிரச்சினைக்காக அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097"></link>
            <id>https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097</id>
            <summary type="text">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த நபர் கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c822096e-4857-46d5-987a-44d213bfb0f7/26-6a6a920b053e0.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சாரம் துண்டிப்பு</h2><p style="text-align: justify; "> 

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify;">

மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் அந்த இடத்திற்கு அழைத்து சென்றதை அடுத்து, அவர் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

அச்சமயத்தில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இம்மாதம் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நபர் கம்பத்தில் ஏறியதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கையளிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மேலும், இந்தச் சந்தேகநபரை நேற்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதற்கமைய நேற்று (28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறும், வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-29T23:51:45+00:00</updated>
        </entry>
    </feed>
