<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T08:21:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 தங்க சங்கிலி மற்றும் 10 வைர மோதிரங்களை திருடிய எலி; CCTV இல் பதிவான காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rat-stole-two-gold-chains-and-ten-diamond-rings-1785485440"></link>
            <id>https://jvpnews.com/article/a-rat-stole-two-gold-chains-and-ten-diamond-rings-1785485440</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும்&nbsp; எலி ஒன்று கொள்ளையிட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகையகத்தின் பூட்டுகள் உடைக்கப்படாததுடன், நகையகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் ஊழியர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c41bdc6-2811-4279-a980-86a22c36306e/26-6a6c593ed4fc5.webp' /></p><h2>ஊழியர்கள் மீது சந்தேகம்</h2><p>

இதையடுத்து, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, இரவு நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த எலி ஒன்று, வைர மோதிரங்களையும் தங்கச் சங்கிலிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து, மர அலுமாரிகளும் அவற்றின் பின்புறப் பகுதிகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சுமார் 13 மணி நேர தேடுதலின் பின்னர், மரப் பலகையின் பின்புறத்தில் இருந்த துளையொன்றிலிருந்து காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்கப்பட்ட நகைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விலைப் பட்டியல்கள் மட்டுமே சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மீட்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகையக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T08:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-criticized-president-anura-and-govt-1785482654"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-criticized-president-anura-and-govt-1785482654</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுரகுமாரவையும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுரகுமாரவையும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு இன்று (31) மேற்கொண்ட நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272cb955-ef53-490a-9707-fc0bf08ad803/26-6a6c4d9fdf197.webp' /></p><h2>சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரி</h2><p>
</p><p>
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் விளம்பரங்கள் குறித்த விசாரணை, பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><p>

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் ஆவார்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக மாணவர் குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை ; பெற்றோர் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-shocked-cruelty-inflicted-on-the-student-1785483292"></link>
            <id>https://jvpnews.com/article/parents-shocked-cruelty-inflicted-on-the-student-1785483292</id>
            <summary type="text">இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதே வகுப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருவிட்ட பொலிஸாரால் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b26883ff-0f0b-4236-ab8d-2eaf698d01f0/26-6a6c501df1b18.webp' /></p><p>இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்கள் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> மேலும், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருவிட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர்.
</p><p>
பொலிஸ் விசாரணைகளில், கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் குறித்த மாணவிக்கு எதிராக தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய மூன்று மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்; மஹிந்த தேஷப்ரியா கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/provincial-council-election-mahinda-deshapriyawarn-1785481591"></link>
            <id>https://jvpnews.com/article/provincial-council-election-mahinda-deshapriyawarn-1785481591</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படுவதை, ஜனநாயகக் கோட்பாடுகளின் மீறல் என்று கூறி, முன்னாள் தேர்தல் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படுவதை, ஜனநாயகக் கோட்பாடுகளின் மீறல் என்று கூறி, முன்னாள் தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்ரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தேஷப்ரியா, சபைகள் நிர்வாக ரீதியாக செயல்பட முடியும் என்று சிலர் வாதிட்டாலும், "மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஒரு மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பை இயக்குவது ஒரு குற்றமாகும்" என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b489a29b-7f82-4012-9460-ee3339a22332/26-6a6c497878ee2.webp' /></p><h2>&nbsp;ஆட்சியின் அடித்தளத்தையே சீர்குலைக்கும்&nbsp;</h2><p>
</p><p>
உறுப்பினர்கள் இல்லாமல் மாகாண சபைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டால், இதே தர்க்கம் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும், இது பிரதிநிதித்துவ ஆட்சியின் அடித்தளத்தையே சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
</p><p>
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் மாற்றாக இருக்க முடியாது, ஏனெனில் அவர்கள் நேரடியாக பொதுமக்களுக்குப் பொறுப்பானவர்கள் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>

உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15 அன்று கூடுதல் விவரங்களை வெளியிடுவதாக தேஷப்ரியா அறிவித்தார். 

மேலும், நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வடிவம் மற்றும் தேதியை அரசாங்கம் அதற்குள் அறிவித்திருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-31T07:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தைத் தொடர்ந்து கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-sette-fire-container-lorry-accident-1785480939"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-sette-fire-container-lorry-accident-1785480939</id>
            <summary type="text">நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4562782-f66f-4ed4-9e79-deb2b22d6db1/26-6a6c46ec98c90.webp' /></p><p>அத்துடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டை இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியுடன், நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
</p><p>
 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த இருவராவர்.
</p><p>
 

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள CCTV காணொளிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்குச் சேதம் விளைவித்ததில் தொடர்புடைய அனைத்துச் சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/journalists-protest-in-jaffna-1785480997"></link>
            <id>https://jvpnews.com/article/journalists-protest-in-jaffna-1785480997</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (31) ஊடகவியலாளர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (31) ஊடகவியலாளர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை வலியுறுத்தி&nbsp; போராட்டம்&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a004f29-4f6b-4b9d-9f25-4a81c5dcf683/26-6a6c4726b4833.webp' /></p><p> 



யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.</p><p> 

முன்னதாக, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றிலும் அவர் கலந்துகொள்ளவிருந்தார். </p><p>

இந்நிலையிலேயே, தாக்குதல்களுக்கு எதிரான நீதியான விசாரணைகளை வலியுறுத்தி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வை யாழ். ஊடக மையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T06:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு; 17 வயது மாமா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846"></link>
            <id>https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

சிறுமியை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற மாமா, மீன் காட்டுவதாக கூறி, ஆட்களற்ற பற்றைக்குள் அழைத்து சென்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4131ca4-e0c6-4ac4-8316-f3fc0a164291/26-6a6c2b37b6831.webp' /></p><p></p><p>
</p><p>
சிறுமி இது பற்றி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 60 அடி உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-tallest-statue-of-jesus-christ-in-sri-lanka-1785480404"></link>
            <id>https://jvpnews.com/article/the-tallest-statue-of-jesus-christ-in-sri-lanka-1785480404</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை ஆசீர்வதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. </p><p>

கொழும்பு சீதுவை 'சுபுவன் அரண' வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான சொரூபம், பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது.

60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் , வெண் இரும்பினால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e786bb08-2337-4863-b190-04acf9731d55/26-6a6c44d696288.webp' /></p><p>
</p><p>
சுபுவன் அரணவின் நிர்வாகியான அருட்தந்தை டாரெலின் கலைக் கோட்பாட்டிற்கு அமைவாக இச்சொரூபம் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
</p><p>
 நிகழ்வில் கத்தோலிக்கக் குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான கத்தோலிக்க பக்தர்கள் மட்டுமன்றி, பௌத்த மதகுருமார்களும் கலந்துகொண்டு மத நல்லிணக்கத்தைச் சிறப்பித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T06:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாரிடமும் வாங்க வேண்டாம் ; விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baggage-belonging-to-others-warning-air-passengers-1785477428"></link>
            <id>https://jvpnews.com/article/baggage-belonging-to-others-warning-air-passengers-1785477428</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விமானம் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விமானம் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c6ec80-e515-4d1a-9424-d2902c4c0b0c/26-6a6c3935c1d04.webp' /></p><h2>&nbsp;கடுமையான குற்றச் செயல்களில் சிக்கும் அபாயம்&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>
 இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-31T06:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் கேரள கப்பலின் கழிவுகள்; யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை பிளாஸ்டிக் துகள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/waste-kerala-msc-elsa-3-vessel-sri-lankan-waters-1785478781"></link>
            <id>https://jvpnews.com/article/waste-kerala-msc-elsa-3-vessel-sri-lankan-waters-1785478781</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய &#039;எம்எஸ்சி எல்சா 3&#039; கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய 'எம்எஸ்சி எல்சா 3' கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>


யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிக்கு இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதுடன், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba91de2-5002-48de-8620-b0d7b1650d02/26-6a6c3e7e71f3b.webp' /></p><h2>யாழில் இருந்து காலி வரை....</h2><p>



இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளுக்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>


இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p> அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று கூடியது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.



லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய ‘MSC Elsa 3’ என்ற இந்த கொள்கலன் கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் திகதி மூழ்கியது.



விபத்து இடம்பெற்றபோது கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் உதவி ; ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/adb-s-key-announcement-200-million-aid-sri-lanka-1785478180"></link>
            <id>https://jvpnews.com/article/adb-s-key-announcement-200-million-aid-sri-lanka-1785478180</id>
            <summary type="text">மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை மேம்படுத்தும் கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
</p><p>
இதில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மத்திய கிழக்கு நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ca28fa-94ef-4493-a57f-765b83efb331/26-6a6c3c2577b8a.webp' /></p><p>தொலைதூரத்தில் இடம்பெறும் மோதல்களின் தாக்கத்தினால் எந்தவொரு குடும்பமும் மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என ADB தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தத் திட்டத்தின் கீழ், வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரித்தல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
</p><p>
இச்சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் இலங்கையின் திறன் மேலும் வலுப்பெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, மத்திய கிழக்கு மோதலினால் அதிகரித்து வரும் செலவினங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை சமாளிக்கும் வகையில், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் ADB தீர்மானித்துள்ளது.
</p><p>
இதன்படி, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தாக மாறிய டெங்கு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-turns-dangerous-death-toll-rises-srilanka-1785477881"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-turns-dangerous-death-toll-rises-srilanka-1785477881</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
 

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83980919-4b49-4a29-9be6-6a3c1557de9f/26-6a6c3afb726e7.webp' /></p><p>

 

அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும்.

 

இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 44,829 ஆகும்.

 

மேலும் தென் மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T06:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணக் கொள்ளை வழக்கு ; முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-former-police-officers-sentenced-to-prison-1785473342"></link>
            <id>https://jvpnews.com/article/two-former-police-officers-sentenced-to-prison-1785473342</id>
            <summary type="text">தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>

நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08abb574-ba41-4c76-b91c-4281f84ee8ef/26-6a6c29404cca9.webp' /></p><p>
</p><p>
கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியன் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-secretly-records-video-of-prison-bus-1785473209"></link>
            <id>https://jvpnews.com/article/woman-secretly-records-video-of-prison-bus-1785473209</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்த இரு குழந்தைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்த இரு குழந்தைகளின் தாயை வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உடுகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹிதும ஹல்விட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce54fa8f-cd69-438f-954e-a898653b11f3/26-6a6c294340533.webp' /></p><h2>&nbsp;பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்</h2><p>
</p><p>


உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று தனது கைப்பேசியைக் காகிதத்தினால் மறைத்துக்கொண்டு இரகசியமாகச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்&nbsp; &nbsp;பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக&nbsp; &nbsp;சிறைச்சாலை பேருந்தைக் கைப்பேசியில் காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



உடுகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த கன்னங்கரவின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-31T04:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதியோர்களுக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் ; அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக முந்நூற்று பத்து கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபா (3,108,190,000) நிதியும், 



இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக முப்பத்து எட்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சத்து இருபதாயிரம் ரூபா (386,620,000) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51f08ab-a3f7-4346-bdec-fef041e71ff7/26-6a6c259be3be6.webp' /></p><p>



இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்து எட்டு இலட்சத்து பத்தாயிரம் (3,494,810,000) ரூபா வழங்கப்படவுள்ளது.
</p><p>


பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ; தலைமை அதிகாரியின் சாட்சிக்கு நீதிமன்றம் இரகசிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை சிறை அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><p></p><p>



நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.
</p><p>


சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46e9568-e4d4-4e82-853c-6417c16d2daf/26-6a6c22bcbb41f.webp' /></p><p>பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை நீடித்துள்ளது.</p><p>சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவித்த நீதவான், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>


அத்தகவல்கள் வெளிவரக் கூடுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அச்சாட்சியின் உள்ளடக்கங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



மேலும், அச்சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற 89 சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>



இவற்றுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான அறிக்கையொன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை துறைமுகம் வருவாயில் புதிய சாதனை ; ரூ.958 மில்லியன் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.</p><p></p><p>

இதன்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் துறைமுகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை துறைமுக இருப்பிட முகாமையாளர் சரத் குமார, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் துறைமுகத்தின் செயற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78af8d88-2956-4e8b-8331-becd414a2b06/26-6a6c1f905d19a.webp' /></p><p>அவரது விளக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் திருகோணமலை துறைமுகம் 1,192 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 958 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.
</p><p>
துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் வருவாய் உயர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073</id>
            <summary type="text">மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e71b1d0-7bba-4822-9428-c89392ed43db/26-6a6c1c7aa2ecb.webp' /></p><p>

அதன்படி, இன்று உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைகள் உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு பீப்பாய் (Barrel) பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 89.69 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 84.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417"></link>
            <id>https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e9f63a9-34f9-4ee4-a2c3-2d0359303bf5/26-6a6c19eaa7a8e.webp' /></p><p>பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
</p><p>
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இருவேறு காலநிலை ; மழையும் வெயிலும் ஒரே நாளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874"></link>
            <id>https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c1d8c2-a03b-44ae-b7ce-03cc82fcaa1b/26-6a6c13e406ec1.webp' /></p><p>அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, பலத்த மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் உணவகத்தில் தங்கியிருந்த இருவரிடம் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.
</p><p>
 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,</p><p>கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a297782-052d-42f0-9dc4-04273cc3f694/26-6a6c11165d5ec.webp' /></p><p>

 

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p>

 

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>
 

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
</p><p>
 

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார். </p><p>

 

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T03:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் கருக்குளவி தாக்குதல் ; 67 வயது முதியவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/67-year-old-man-dies-a-stabbing-attack-in-jaffna-1785466664"></link>
            <id>https://jvpnews.com/article/67-year-old-man-dies-a-stabbing-attack-in-jaffna-1785466664</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், ஜூலை 31 – யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>
</p><p>
கிடைத்த தகவல்களின் படி, சம்பவத்தன்று அவர் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு பனை வெட்டும் பணிக்காகச் சென்றிருந்தார். அப்போது கருக்குளவி கூட்டின் தாக்குதலுக்கு உள்ளாகி பல இடங்களில் கொட்டுக்காயங்களுக்கு ஆளானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e01f8d-0e9f-4478-bc1c-04584fb5c3eb/26-6a6c0f299be34.webp' /></p><p>

இதையடுத்து, அவரது மகன் உடனடியாக அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்தார். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
</p><p>
எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காமல், அவர் நேற்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனையும் மரண விசாரணையும் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-31T02:57:53+00:00</updated>
        </entry>
    </feed>
