<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T05:25:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் 70 இலட்ச ரூபாய் நகை திருட்டு; கம்பி எண்ணும் சந்தேக நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832"></link>
            <id>https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் உள்ளிட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. </p><p>
சாவகச்சேரி பகுதியில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நவாலி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d058e32-dfcf-470b-9d2c-970ea156e907/26-6a8d24920f334.webp' /></p><h2>திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்&nbsp;</h2><p>

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை , அடகு வைத்து பணத்தினை பெற்றமையும் , அதில் சுமார் எட்டரை இலட்ச ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்தமையையும் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p>
அடகு பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் , அடகு வைத்த நகை என்பவற்றை பொலிஸார் மீட்டதுடன் , சந்தேகநபர்கள் மூவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T05:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் விரைவில் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/verdict-in-easter-sunday-case-expected-soon-1787634436"></link>
            <id>https://jvpnews.com/article/verdict-in-easter-sunday-case-expected-soon-1787634436</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற ஆயம் நேற்று (24) அறிவித்திருக்கிறது.</p><p>



 வழக்கின் பிரதிவாதிகளின் வாய்மொழி வாதங்கள் நேற்று (24) மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்ததையடுத்து, இரு தரப்பினரின் எழுத்துபூர்வ வாதங்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f031ea-3851-48df-a14c-330a1dafa4ac/26-6a8d2305c4602.webp' /></p><h2>24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை</h2><p>
</p><p>


கொழும்பு சிறப்பு மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதிபதி), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (24) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
</p><p>


 வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிய விசாரணை கடந்த 13ஆம் திகதி மாலையுடன் நிறைவடைந்தது.



உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>



 வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை சாட்சியங்களாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 வழக்கு பொருட்கள் அடையாளம் காணப்பட்டு சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>


மேலும், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், பெருமளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
</p><p>


நெளபர் மெளலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகவே ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சட்ட மா அதிபரால் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T05:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 இலட்சம் ரூபா பெறுமதி ;சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-with-illegal-liquor-worth16-million-1787634179"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-with-illegal-liquor-worth16-million-1787634179</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f988e32c-fa39-4a24-99c9-265b9e844802/26-6a8d22048ef93.webp' /></p><p>
</p><p>
 

கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் சந்தேகநபர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T05:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-water-cut-in-colombo-and-gampaha-districts-1787632111"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-water-cut-in-colombo-and-gampaha-districts-1787632111</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd479a54-3088-4627-8cac-9b8f84686785/26-6a8d19f0862d0.webp' /></p><p>நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் ; CID விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-lalith-brought-sri-lanka-cid-investigation-beg-1787631221"></link>
            <id>https://jvpnews.com/article/bus-lalith-brought-sri-lanka-cid-investigation-beg-1787631221</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற &#039;பஸ் லலித்&#039; இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்பவர் மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1a5777-83d7-4ffa-9e1f-780c82383ccf/26-6a8d167734869.webp' /></p><p>

 

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

 

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

இதனிடையே, 2021.09.20 அன்று நெலுன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்த முயன்றமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2022.10.16 அன்று மூவரை வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் பஸ் லலித்திற்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T04:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம் ; வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-amendment-narcotics-act-gazette-notification-1787630318"></link>
            <id>https://jvpnews.com/article/new-amendment-narcotics-act-gazette-notification-1787630318</id>
            <summary type="text">விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fadebb70-2592-40bf-979e-4ff4e3bbdb65/26-6a8d12ef850f0.webp' /></p><p>
 

இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில புதிய யோசனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 

குறித்த கட்டளைச் சட்டத்தின் 54ஆவது பிரிவின் முதலாவது உப பிரிவில் காணப்பட்ட ஹெரோயின், கொக்கேய்ன், மோஃபின், அபின் ஆகிய சொற்களுக்கு மேலதிகமாக, 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்ற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, அரச பகுப்பாய்வாளரினால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பிலும், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் இந்தச் சட்டமூலத்தின் மூலம் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 

போதைப்பொருள் குற்றவாளி ஒருவரைக் கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T04:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170"></link>
            <id>https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170</id>
            <summary type="text">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&amp;nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">கம்பளை, புப்புரஸ்ஸ&nbsp; பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf80ea4-844d-489f-855d-3802f0108554/26-6a8ce7640f684.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

குடும்பத்தினர் அனைவரும்&nbsp; வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று&nbsp; &nbsp;வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில்&nbsp; அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T01:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கிற்கு தயாரான குடும்பம்... உயிருடன் வந்த கைதி ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929"></link>
            <id>https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929</id>
            <summary type="text">நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
 

இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e95865-0b44-48a8-9de2-56979289a40c/26-6a8cee43b2109.webp' /></p><h2>இறுதிச்சடங்கு</h2><p>

 

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
 

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
 

தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் கடும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.</p>]]></content>
            <updated>2026-08-25T01:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5050b30d-4772-4669-8646-c31f08a4cf5c/26-6a8ce210b997e.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சில பகுதிகளில் செப்டம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பரு முதல் நீரிழிவு வரை... மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501</id>
            <summary type="text">&amp;nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். </p><p style="text-align: justify; ">பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f5da5-3c97-492e-a95b-bf2a88b0a8d9/26-6a8cd91760c0f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ குணங்கள்</h2><p style="text-align: justify; ">


சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்ட தொடர்ந்து உணவாக உட்கொள்ளும்போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். </p><p style="text-align: justify; ">தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
</p><p style="text-align: justify; ">


சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.



மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகின்றது. </p><p style="text-align: justify; ">100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன.</p><p style="text-align: justify; "> 



நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T23:52:01+00:00</updated>
        </entry>
    </feed>
