<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T11:23:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ; கைதால் நாம் முடங்க மாட்டோம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717</id>
            <summary type="text">&amp;nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8838cb-8db3-46ee-ae01-9a90e4e3f119/26-6a9bf51716aac.webp' /></p><h2>&nbsp;இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல...</h2><p> 
இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் 

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>
இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p><b>
முதலாம் இணைப்பு</b></p><p> இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
</p><p>


இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை சந்திப்பு</span></p><p>
</p><p>


பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>


வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T11:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de68cacf-36e6-4dc5-a7ac-e24c12c5f062/26-6a9ba7689d211.webp' /></p><h2>&nbsp;பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு</h2><p>&nbsp;சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாது ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.</p><p>
</p><p>சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

 கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
 இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
 சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்&nbsp; பெரும் அதிர்ச்சியை&nbsp; ஏற்படுத்தியுள்ள&nbsp; நிலையில்&nbsp; சம்பவம்&nbsp; தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T10:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு எதிராக கருணா வாக்குமூலம்; திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/karuna-amman-statement-against-suresh-sallay-1788597986"></link>
            <id>https://jvpnews.com/article/karuna-amman-statement-against-suresh-sallay-1788597986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக கருணா அம்மான என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றத்தடுப்புப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக கருணா அம்மான என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CID) வழங்கிய வாக்குமூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5edd6c1c-fba1-4179-9a5d-de5328167eb7/26-6a9bd6e4657a9.webp' /></p><h2>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
தனக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி லண்டனுக்கு அனுப்பிவிட்டு கைது செய்யச் சதி செய்ததாக சுரேஷ் சலே மீது கருணா குற்றம் சாட்டியுள்ளதுடன், இராணுவப் புலனாய்வு நிதி மோசடிகள் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார் .</p><p></p><p>அதேவேளை மருத்துவமனையில் உள்ள சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், உணவு உட்கொள்ளாமல் இருப்பதோடு கைப்பேசிக் கடவுச்சொற்களையும் வழங்க மறுப்பதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T10:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தீவைத்து படுகொலை ; கண்டியில் மறைந்திருந்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-arson-attack-in-colombo-suspect-hiding-kandy-1788604536"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-arson-attack-in-colombo-suspect-hiding-kandy-1788604536</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574061e1-adf9-48c3-912b-833f27de35d2/26-6a9bf0799092f.webp' /></p><h2>&nbsp;தந்தையைக் கொலை செய்தமைக்கு பழி</h2><p> </p><p>

படுகொலையின் பின்னர் கண்டிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையைக் கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலையைச் செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 'கொஸ்மல்லி' எனும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதுடன், கொலையுண்ட நபர் 'படோவிட அஸங்க' என்பவரின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகின்றது. </p><p>

 கைதான இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stroke-victim-shot-dead-in-boralesgamuwa-1788603849"></link>
            <id>https://jvpnews.com/article/stroke-victim-shot-dead-in-boralesgamuwa-1788603849</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
</p><p>
 

பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் 'தெஹிவளை சாண்டோ' என்பவரால், 'கொஸ்மல்லி' என்பவரின் காசாளரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d9e850-db47-45a7-8950-c5bff4350f6a/26-6a9bedca70193.webp' /></p><h2>காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
 

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு தவறியதால், குறித்த காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது. </p><p>&nbsp;உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் பெர்னாண்டோ எனப்படும் 74 வயதுடைய முதியவராவார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்பாக்கி மூலம் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>

 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T10:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றம்; முதலமைச்சர் விஜய் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamilnadu-cm-vijay-first-phase-cabinet-reshuffle-1788600359"></link>
            <id>https://jvpnews.com/article/tamilnadu-cm-vijay-first-phase-cabinet-reshuffle-1788600359</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தமிழகத்தில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இரகசிய செயல்திறன் ஆய்வறிக்கையின் அடிப்படையில், இந்த மாற்றங்க்கள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5a9a1e-6bed-4265-825e-96dff847f38b/26-6a9be0295eec9.webp' /></p><p>
</p><p>
பல்வேறு புகார்கள் மற்றும் போதிய செயல்திறன் இன்மை காரணமாக சில அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் மாத சட்டப்பேரவை பாதீட்டுக்கான கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இந்த அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>

அதன்படி அமைச்சர் ஜெகதீஸ்வரி, அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில் தமிழக அரசிடமிருந்து இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அழையா விருந்தாளியால் பரபரப்பு! மடக்கிப்பிடித்த ஊரவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/long-crocodile-enters-batticaloa-residential-area-1788595761"></link>
            <id>https://jvpnews.com/article/long-crocodile-enters-batticaloa-residential-area-1788595761</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமான முதலை ஒன்றை பொதுமக்கள் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த சுமார் 8 அடி நீளமான முதலை ஒன்றை பொதுமக்கள் நேற்று (04) இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.</p><p>



 குறித்த முதலை, கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் நுழைந்தஅப்பகுதி மக்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419a64b8-dcae-47d4-9e38-3d71eee84e60/26-6a9bce32e69a1.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், நேற்று இரவு தோட்டக் காணிக்குள் முதலை ஊடுருவுவதை அவதானித்த காணி உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் சுருக்கு வைத்து முதலையைப் பிடித்துள்ளார்.</p><p></p><p>



 சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டு , முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 பிரதேசங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-lightning-warning-for-4-regions-1788595372"></link>
            <id>https://jvpnews.com/article/severe-lightning-warning-for-4-regions-1788595372</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>



இன்று (05) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3abb62-799c-4ad4-9e8e-d86d299b74ff/26-6a9bccad7b7b8.webp' /></p><p>
</p><p>


குறித்த பகுதிகளில் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T07:59:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; தகாத உறவால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-killed-sharp-weapon-illicit-affair-1788584326"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-killed-sharp-weapon-illicit-affair-1788584326</id>
            <summary type="text">&amp;nbsp; புத்தளம் - கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புத்தளம் - கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம்(03) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

பாலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், தாக்குதலில் பலத்த காயமடைந்து கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தனது வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cada74c7-ba24-41d4-acfa-1a56feb5b16f/26-6a9ba188251e2.webp' /></p><h2>வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு</h2><p>

குறித்த பெண் தனது கணவரைப் பிரிந்து சந்தேகநபருடன் வசித்து வந்ததாகவும், நீண்டகாலமாக குடும்பத்தில் ஏற்பட்ட முறுகலே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

சம்பவம் நடந்து 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐஸ் (ICE) போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனின் உயிரைப்பறித்த உழவு இயந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-after-tractor-overturns-1788593495"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-after-tractor-overturns-1788593495</id>
            <summary type="text">&amp;nbsp; அனுராதபுரம் திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அனுராதபுரம் திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c440e94b-8d68-4fbf-b32c-0914644b4281/26-6a9bc559450ad.webp' /></p><h2>மூவர்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
 

விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.</p><p></p><p> இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பாக திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிடப்பட்ட பொதியில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/t-56-rifle-found-in-mihintale-tank-embankment-1788593192"></link>
            <id>https://jvpnews.com/article/t-56-rifle-found-in-mihintale-tank-embankment-1788593192</id>
            <summary type="text">&amp;nbsp; மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டா மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

 

குறித்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (4) கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட மிஹிந்தலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே இந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28606f3e-4213-4a19-a1e2-6cf9aa1c222e/26-6a9bc429ac6d2.webp' /></p><p>
</p><p>
 

இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அந்த இடத்தில் கொண்டுவந்து போட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சந்தான கோபாலர் உற்சவம்; கண்டுகளித்த பக்தர்கள் கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/santhana-gopalar-utsavam-nallur-murugan-kovil-1788592645"></link>
            <id>https://jvpnews.com/article/santhana-gopalar-utsavam-nallur-murugan-kovil-1788592645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆயலத்தின் வருடாந்த மகோற்சப பெருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.</p><p>

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆயிரக்கணக்காணவர்கள் ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab81c6f-3a64-4e32-9038-45b5c9f9f744/26-6a9bc208bbd0d.webp' /></p><h2>செப்டம்பர் 9 ஆம் திகதி&nbsp; தேர்த்திருவிழா</h2><p>
</p><p> அதுமட்டுமல்லாது புலமபெயர் தமிழகளும் நல்லூர் கந்தனை காண நாட்டுக்கு வௌகை தந்தவண்ணம் உள்ளனர்.


இன்னிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை(5)&nbsp; காலை சந்தான கோபாலர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1917c1-f0f6-40b4-89de-c0d5c18a5dd2/26-6a9bc20806cf1.webp' /></p><p>
</p><p>
இன்றையதினம் ஆலயத்தில் ஆயிரக்கணகான அடியவர்கள் சந்தான கோபாலர் உற்சவத்தை கண்டு களித்தனர்.</p><p> 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா (மகோற்சவம்) செப்டம்பர் 2, 2026 அன்று கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக ஆரம்பமானது

தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் திகதி&nbsp; &nbsp;தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fb3409-616b-4423-ab02-49cfb62a6890/26-6a9bc2074688d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T07:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாங்க முடியாத பணிச்சுமை; வேலையைவிட்ட OIC!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவியை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கிடைத்த தகவல்களின்படி, அப்பிரிவு ஆய்வாளர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன் காவல் நிலையத் தகவல் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c68eee5-05e9-4ad0-b0ba-3abc08d359b4/26-6a9bb1f7f2ce3.webp' /></p><h2>&nbsp; இனிமேலும் சமாளிக்க முடியாது</h2><p>

 அதில், தனது கடமைகளுடன் தொடர்புடைய அதிக பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை இனிமேலும் சமாளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மவுண்ட் லாவினியா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அசோக குணசேகர, இது குறித்து விசாரணை நடத்துமாறு மவுண்ட் லாவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>.

இச்சம்பவம் ஏனைய பொலிஸ் அதிகாரிகளிடையே ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் அப்பிரிவைக் கண்காணிக்கும் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-05T06:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214"></link>
            <id>https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>


எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது எனவும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07493e6-738b-491d-b633-4e557bdf1940/26-6a9bb4a0075d2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானிகள் அறையில் போதைப்பொருள்; ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249</id>
            <summary type="text">&amp;nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

 கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபூகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏ-320 ரக விமானம் நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/744a4ada-98ef-4e84-b8f7-d4e535d202aa/26-6a9bacf37add5.webp' /></p><h2>விமான விபத்து புலனாய்வுப் பணியகம்&nbsp; அறிக்கை</h2><p>
</p><p>
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4 அன்று ஒடிசா வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் (Green, Blue, Yellow Systems) அடுத்தடுத்துச் செயலிழந்தன.</p><p></p><p>
</p><p>
இதனால் தானியங்கி இயக்கம் (Autopilot) துண்டிக்கப்பட்டு, விமானம் சில வினாடிகளில் 372 அடி உயர்ந்து பின்னர் 292 அடி தடாலடியாகக் கீழே சரிந்தது. இதில் இருக்கைப் பட்டை அணியாதிருந்த 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பைலட்களுக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது அருந்தியதற்கான சான்றுகள் இல்லை.</p><p></p><p> </p><p>இருப்பினும், இரத்த மாதிரி பரிசோதனையில் 34 வயதான முதன்மைப் பைலட்டின் மாதிரியில் கஞ்சா (Marijuana) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.</p><p> இதைத் தீவிரப் பாதுகாப்புக் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய AAIB, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககமான DGCA-வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.</p><p></p><p>
</p><p>
 பரிந்துரையைத் தொடர்ந்து அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, “பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கூறிப் பைலட்டின் சேவையை ஏர் இந்தியா உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>

தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதா அல்லது போதையில் இருந்த பைலட்டின் தவறான வழிகாட்டலா என்பது குறித்துத் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இச்சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T05:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397"></link>
            <id>https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><h2>


புதிய விலை விபரம்,</h2><p>&nbsp;இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4781c911-20a8-4dae-bc31-0fc0c06978a5/26-6a9b9de6890a5.webp' /></p><p> </p><p>இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.</p><p></p><p>



அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T05:34:25+00:00</updated>
        </entry>
    </feed>
