<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T11:32:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[X செயலி மூலமாகவும் பணம் அனுப்பும் வசதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061"></link>
            <id>https://jvpnews.com/article/elon-musk-said-facility-send-money-via-the-x-app-1785324061</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.


அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது. </p><p>முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக app கள் மட்டுமே இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6bf499-288d-44c7-8044-1e01c89de8f6/26-6a69e21e642b5.webp' /></p><p>
</p><p>
ஆனால், தற்போது பல வகையான மொபைல் ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் வசதிகள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான் முன்பு டிவிட்டராக இருந்து தற்போது X என மாறியிருக்கும் தளத்திலும் பணம் அனுப்பும் வசதியை அதன் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.</p><p>

இதன் மூலம் பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என அவர் அறிவித்திருக்கிறார். 

சமூக ஊடக தளத்தை எல்லாவற்றுக்குமான ஒரே செயலியாக மாற்றும் நோக்கத்தில் இந்த அதிரடி வசதி கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-29T11:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், <a href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245" target="_blank">சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான</a> சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கட்டணம் வசூலிப்பு; வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0088d4de-014f-4fef-9ee3-6603f47f44a8/26-6a69ba8371594.webp' /></p><p></p><h2>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ.400 ஐ விட அதிகமாக ரூ.550 வசூலித்தமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு ரூ.500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரமுனவுடன் இணைய வாருங்கள்; நாமல் ராஜபக்ச அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187"></link>
            <id>https://jvpnews.com/article/come-and-join-the-slpp-namal-rajapaksa-call-1785323187</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாக கூறியுள்ள நாமல் ராஜபக்ச , பெரமுனவுடன் இணைய பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>

ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b56773-2fb8-43c2-9169-a703b3627fab/26-6a69deb538929.webp' /></p><p>
</p><p>
அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே முன்னெடுப்பதாக தெரிவித்த அவர், தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.</p><p>

கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் எவரும் இணைந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்த அவர், கடந்த காலங்களில் பலர் விலகிச் சென்றாலும், புதியவர்கள் இணைந்துள்ளதாகவும், கட்சியை பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T11:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயினாதீவு குறிகாட்டுவானில் கடல் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174"></link>
            <id>https://jvpnews.com/article/nainativu-kurikadduvan-fishermen-sea-protest-1785322174</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் நயினாதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59db7b4-f7ed-4f4f-a3b1-6aefa46ce3e7/26-6a69dac067a94.webp' /></p><p>
</p><p>


தீவக கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.&nbsp;&nbsp;</p><p></p><p>தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கடல் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகப் பகுதிகளைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
</p><p>


இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நாளாந்த வருமானமும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/946a8445-0862-423f-bcee-47b0d1bf5812/26-6a69dac1236d5.webp' /></p><p>



</p><p>, இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>


“கடலுக்காக நீதி வேண்டும்; எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏராளமான கடற்தொழிலாளர்கள் இந்தக் கடல் போராட்டத்தில் பங்கேற்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T10:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தின் கழிவுநீரில் விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி! ஆண்டுதோறும் 43 கிலோகிராம் தங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது Eawag மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff8db04-5c4f-4a05-8b30-9816c2902d40/26-6a69cfcce6aac.webp' /></p><h2>ஆண்டுதோறும்&nbsp; 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும்</h2><p>
</p><p>


அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.



அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
 இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.



கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


 ஈனெனில் , கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>அதேசமயம் சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-29T10:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடி இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672"></link>
            <id>https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672</id>
            <summary type="text">&amp;nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 23 ஆம் திகதி காலை சுமார் 10.45 மணியளவில், வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முன்பாக உத்தியோகபூர்வ சீருடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த கு அதிகாரி, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25073e30-9359-4624-b347-b247abbf42b3/26-6a69c929ec25e.webp' /></p><h2>பொதுமக்களுடன் மிரட்டும் வகையில் தர்க்கம்</h2><p>கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டு பொதுமக்களுடன் மிரட்டும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு இலங்கை பொலிஸின் மற்றும் முழு அரச சேவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்டதால், நிறுவனச் சட்டத் தொகுப்பின் (Establishments Code) தொடர்புடைய விதிகளின் கீழ் அவரது கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், இத்தகைய செயற்பாடுகள் ஏனைய அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும், அவரை தொடர்ந்தும் சேவையில் வைத்திருப்பது பொலிஸ் சேவையின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமிக்க பொலிஸ் சேவையை நிலைநிறுத்துவதே தமது அடிப்படை நோக்கம் என வலியுறுத்தியுள்ள இலங்கை பொலிஸ், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளின் ஒழுங்கற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் நீதியுடனும் பொறுப்புடனும் செயல்படுவதற்கு இலங்கை பொலிஸ் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பலியெடுத்த கப் ரக வாகனம் நிற்காமல் ஓட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-dies-hit-by-a-pickup-truck-in-vavuniya-1785313402"></link>
            <id>https://jvpnews.com/article/man-dies-hit-by-a-pickup-truck-in-vavuniya-1785313402</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் , விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.
</p><p>
கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d6028a-e62c-4b9e-8130-5b12c44ef640/26-6a69b87bb5090.webp' /></p><p>
</p><h2>நிறுத்தாமல் தப்பியோடிய&nbsp;&nbsp; கப் ரக வாகனம்</h2><p>
மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.</p><p>

இவ்விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T08:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறைக்கு பயணித்த ரயில் இடை நடுவில் கோளாறு; அடைத்து அள்ளிச்சென்ற யாழ்தேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/train-kankesanthurai-develops-a-fault-en-route-1785312455"></link>
            <id>https://jvpnews.com/article/train-kankesanthurai-develops-a-fault-en-route-1785312455</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு ரயில், காலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு ரயில், காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


இன்று பௌர்ணமி தினம் என்பதால், ரயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



இதையடுத்து, பின்னால் வந்த யாழ்தேவி விரைவு ரயிலில் காங்கேசன்துறை ரயிலின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14486c6b-583f-4bf3-87e9-459ff7a90f88/26-6a69b4c9a0256.webp' /></p><h2>இரு ரயில்களின் பயணிகளும் ஒரே ரயிலில்...&nbsp;</h2><p> </p><p>

இதனால், இரு ரயில்களின் பயணிகளும் ஒரே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ரயில் வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று ரயில் சேவை இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T08:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2031 ஆம் வருடம் தமிழகத்தில் இவர்கள்தான் அரசியல் களம்; ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2031-political-cm-vijay-vs-dhanush-radhan-pandit-1785310210"></link>
            <id>https://jvpnews.com/article/2031-political-cm-vijay-vs-dhanush-radhan-pandit-1785310210</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் ‘நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக, அதிமுக காலியாகும், என கூறியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f9470d3-5478-4818-b539-1884f48a6397/26-6a69ac041c5e8.webp' /></p><h2>அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால்.....&nbsp;</h2><p>
</p><p>
தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது.. உதவி செய்வதற்கு அனுபவமும், அறிவும் தேவையில்லை.. மனம் இருந்தால் போதும்.. அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால் 2031 ஆம் வருடம் விஜய் vs தனுஷ் என்று அரசியல் களம் மாறும்’ எனவும்&nbsp; ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்&nbsp; &nbsp;கூறியுள்ளாராம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் முன்பு பேசிய தனுஷ் ‘நாம் இதோடு நின்று விடக்கூடாது.. உங்கள் வீட்டு அருகில் வசிக்கும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உதவி செய்யுங்கள்.. நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்’ என்று பேசினார்.</p><p>

தனுசின் இந்த பேச்சை தொடர்ந்தே அவர் அரசயலுக்குள் வரலாம் என்கின்ற ஊகங்கள் எழுந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் மற்றுமொரு சோகம்; பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710"></link>
            <id>https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710</id>
            <summary type="text">&amp;nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&amp;nbsp;&amp;nbsp;


திருமதி செல்வம், சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&nbsp;&nbsp;</p><p>


திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ab9fb7-8410-418d-a688-3fdcd18ab786/26-6a698acfc60c2.webp' /></p><p> </p><p> 

முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

மேலும், சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களை இயக்கியுள்ளார்.</p><p></p><p> இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.


அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும், சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனின் உயிரை பறித்த அளவுக்கு மீறிய போதை பழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785308046"></link>
            <id>https://jvpnews.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785308046</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c32c6ff-c2a7-4bcb-a4d0-57b9d907a9d0/26-6a69a38ff3d55.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
</p><p>
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை யாழ்ப்பாண இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகமாக வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T06:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-caught-in-police-encirclement-with-drugs-1785306388"></link>
            <id>https://jvpnews.com/article/woman-caught-in-police-encirclement-with-drugs-1785306388</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>முல்லேரியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43758d0b-82fc-4b97-9fc0-4cac9a0d02c2/26-6a699d1697b93.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T06:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலை பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-security-officer-attacked-jaffna-hospital-1785304843"></link>
            <id>https://jvpnews.com/article/female-security-officer-attacked-jaffna-hospital-1785304843</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
</p><p>

போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை யுவதியொருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் , குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19727685-336a-4a9e-8310-3b3ccbab1801/26-6a69970d49d21.webp' /></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
 அந்த யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் , 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர். </p><p>

இதன் போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் , யுவதியின் தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார். 

 யுவதியின் உறவினர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தருடன் முரண்பட்டு , அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>அதற்கு பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு உத்தியோகஸ்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர் அவரை தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். </p><p>

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T05:58:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப தகராறில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-in-a-family-dispute-1785304046"></link>
            <id>https://jvpnews.com/article/murder-in-a-family-dispute-1785304046</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று (28) இரவு இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று (28) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.</p><p>

 

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b805e3a-8aae-4abc-8f2b-07abf6c58d27/26-6a6993f016dcd.webp' /></p><p>
</p><p>
 காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T05:45:40+00:00</updated>
        </entry>
    </feed>
