<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T14:28:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575</id>
            <summary type="text">&amp;nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜா-எல நகர சபைப் பணியாளர்கள் இன்று (01) கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைக்குண்டைக் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d1f1ad-2172-4e16-899f-60e78e0d2771/26-6a96cc390ae93.webp' /></p><p>
</p><p>
இது குறித்து உடனடியாகக் கந்தானை பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அந்த கைக்குண்டை பாதுகாப்பாக அகற்றினர்.


 சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 பவுன் தங்கம்....கட்டுக்காட்டாக பணம்; இணையத்தை மிரட்டிய தாய்மாமன் சீர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-soveren-gold-gift-stuns-madurai-thai-maman-seer-1788267035"></link>
            <id>https://jvpnews.com/article/50-soveren-gold-gift-stuns-madurai-thai-maman-seer-1788267035</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி, மேலும் ரூ.60 லட்சம் மொய் பணம் லாரி, கார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தாய்மாமன் சீர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
</p><p>
தமிழகத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தாய்மாமன் சீர் வழங்கும் நடைமுறையில், சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சார்பில் சீர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141294f1-b9c2-4e28-97e4-dbd303d3210f/26-6a96ca1ce902a.webp' /></p><h2>சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா</h2><p> 

இந்நிலையில், மதுரை காதணி விழாவில் சிறுமியின் தாய்மாமன் மற்றும் தாத்தா சார்பில் சிறுமிக்கு மொய்யாக வழங்குவதற்காக ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.60 லட்சம் பணம் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>அந்தப் பணப்பெட்டிகளை தலையில் சுமந்தபடி உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மொய் வழங்கியுள்ளனர்.

மேலும், 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், வெள்ளித் தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதுமட்டுமின்றி, சொகுசு கார், லாரிகளில் 500 வகையான சீர்வரிசை பொருட்கள், 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்தில் இன்ஜின் கோளாறு; அச்சத்தில் உறைந்த பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engine-failure-indigo-goa-to-delhi-flight-mid-air-1788263623"></link>
            <id>https://jvpnews.com/article/engine-failure-indigo-goa-to-delhi-flight-mid-air-1788263623</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இண்டிகோவின் 6E 2102 விமானம் இன்று காலை 9.15 மணிக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f5c9762-8141-483b-bacf-7e42fd7bf4eb/26-6a96bcc91d82c.webp' /></p><h2>அவசரமாக தரையிறக்கம் ...</h2><p> </p><p>

திட்டமிட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p> இதையடுத்து விமானிகள், விமானத்தை மீண்டும் கோவாவுக்குத் திருப்பினர்.

விமானம் கோவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்துக்கு ‘முழு அவசரநிலை’ அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மேலும், திட்டமிட்ட நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாக மீண்டும் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு நீர்க் கண்காட்சி; பக்தர்கள் தவறவிட வேண்டாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497"></link>
            <id>https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&amp;nbsp; &amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&nbsp;<a href="https://jvpnews.com/article/water-exhibition-attracts-attention-nallur-jaffna-1755591735" target="_blank"> &nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர்</a> எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில்&nbsp;நீர்க் கண்காட்சி இடம்பெறவுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7b995-5fe9-46b5-ab07-2ff4fdce500d/26-6a96c41abc679.webp' /></p><h2>வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு</h2><p> 

தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன. </p><p>

குறித்த நீர்வளம் பேணும் செயற்திட்டம் தொடர்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் இன்று 01.09.2026 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு,</p><p></p><p> </p><p> 

ஆறு வருடங்களாக இடம்பெற்ற நீர் சார்ந்த ஆய்வு செயற்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு பிரதேசங்களில் செய்யப்பட்ட நீரியல் ஆய்வுகள் தந்த பெறுபேறுகளையும் மக்களோடு இணைந்து செய்வதில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறோம்.

அதன் இறுதிப்பகுதியில் வழுக்கையாற்றை ஒரு பேசு பொருளாக சமூகத்திற்குள் கொண்டுவர எடுத்த முயற்சி ஊரவர்களின் கற்பனையையும் சேர்த்து பிரேதேச சபைகளுடன் இணைந்து எடுத்த முயற்சியுடன் ஆய்வுகள் குறித்து இன்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.</p><p> 

அந்த அடிப்படையில் கிணறோடு சேர்ந்த வாழ்வியலில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலத்தடி நீரைப் பேணுவதற்கு கிணறுகளையும் பராமரித்தல் அவசியமானது என்பதும் அதற்கு அனுகூலமான வகையில் இருக்கின்ற ஊர்க் குளங்களை தூர்வார்ந்து பயனுள்ள வகையில் அவற்றில் நீர் தேக்குவது அவசியமானது. </p><p>

கிராமிய குளமொன்றை கிராம மக்களின் ஈடுபாட்டோடு பல்வேறு சமூகத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் தொழிநுட்ப அறிவையும் கருவிகளையும் பயன்படுத்தி பக்குவமாக தூர்வாருதல் தொடர்பிலும் அதில் கிடைக்கும் பாடங்களையும், மற்றும் பல்வேறு விடயங்களையும் முப்பரிமாண தோற்றங்களாக, செய்தியாக, படங்களாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம். </p><p>

கடந்த ஆண்டுகளை விட பல முனைகளில் நிலத்தடி நீர் சார்ந்த தெளிவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பல்வேறு காட்சிகளையும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் வரும் இழப்புகள் பற்றியும் மக்கள் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஈடுபாட்டோடு முடிவெடுத்தலையும் செய்து வந்திருக்கிறோம் என்றார்.
</p><p>
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. </p><p>

நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T12:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812"></link>
            <id>https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p>

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f71b117-8e51-424a-b7c1-877c5bb0f0ac/26-6a96b99e12a42.webp' /></p><p> </p><p>



இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய ; குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இரு நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விஜயங்களுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
</p><p>


அத்துடன், முக்கியமான உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புலன் தகவல்கள், முனைப்பான மற்றும் சாதகமான அணுகுமுறைகள் ஊடாக இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள், முதலீடுகள், சுற்றுலாத்துறை, தொழிநுட்ப, விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடுகின்ற பிரஜைகள் தொடர்பான விடயதானங்களுக்கான விசாக்கள்,</p><p></p><p> குடிவரவு மற்றும் குடியகல்வு விவகாரங்கள் தொடர்பான வசதிப்படுத்தல்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களாகக் கருதப்படும் மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அலுவலர்களின் அறிவு, </p><p>திறன் மற்றும் இயலளவுகளை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வுகளை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 



மேலும் இந்த உத்தேச ஒப்பந்த வரைபுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் செய்ய வற்புறுத்தல் ; கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் சூட்கேஸில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507</id>
            <summary type="text">சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>காவல்துறையினரின் விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பெண் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead16e40-e811-4819-ab52-356cad5c6f51/26-6a96b86c86f23.webp' /></p><p>சம்பவத்தன்று குறித்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலையின் பின்னர், உடலை மறைத்து அப்புறப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>பின்னர் உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சம்பவத்தின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் உடல் பாகங்கள் ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு ; பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149"></link>
            <id>https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149</id>
            <summary type="text">இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக இருந்த இந்தத் தொகை, ஜூலை மாதத்தில் 87 ரூபாய் அல்லது 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1,195 ரூபாய் அல்லது 7.2 சதவீத அதிகரிப்பாகும். </p><p>அதேவேளை, 2026 ஜனவரி மாதத்தில் 16,730 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு, தற்போது 949 ரூபாய் அல்லது 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாவட்ட ரீதியில், ஜூலை மாதத்தில் அதிகபட்ச அதிகாரபூர்வ வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33e9d92-b952-435f-9fac-3db3af09f4da/26-6a96b31edf679.webp' /></p><p>அங்கு ஒருவருக்கான மாதாந்தத் தொகை 19,067 ரூபாயாக உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 18,969 ரூபாயாகவும், நுவரெலியா மாவட்டத்தில் 18,592 ரூபாயாகவும் வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
</p><p>
குறைந்தபட்ச வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் 16,904 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 17,080 ரூபாயாகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 17,177 ரூபாயாகவும் உள்ளது.
</p><p>
இதன்படி, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மாவட்ட வறுமைக் கோடுகளுக்கு இடையிலான வித்தியாசம் ஒருவருக்கு மாதம் 2,163 ரூபாயாகும்.

வறுமைக் கோட்டின் அதிகரிப்பு, நுகர்வோர் விலைகள் உயர்வுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 223.4 ஆக உயர்ந்ததுடன், வருடாந்த பணவீக்கமும் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அதிகாரபூர்வ வறுமைக் கோடு என்பது ஒரு குடும்பத்தின் சராசரி மாதச் செலவையோ அல்லது சாதாரண வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்குத் தேவையான வருமானத்தையோ பிரதிபலிக்கும் அளவுகோல் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c016c2-860a-45dc-abe2-a96d66cf130c/26-6a96b31f90bef.webp' /></p><p>

மாறாக, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவைப் பிரதிபலிக்கும் புள்ளிவிபர ரீதியான அளவுகோலாக இது பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டுக்கான குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் 31 முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான வறுமைக் குறியீட்டு அறிக்கை ஒக்டோபர் 30 முதல் டிசம்பர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய தரவுகள் மூலம் தற்போதைய குடும்பங்களின் செலவினங்கள், நுகர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அழுத்தங்கள் குறித்து மேலும் துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326"></link>
            <id>https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dda028f-a585-4d1e-9c93-32e9573cd41c/26-6a9681081597a.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p> </p><p>இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.</p><p></p><p>


பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காட்டிக்கொடுத்த காணொளி&nbsp;&nbsp;</span></p><p> 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.</p><p>]</p><p>
</p><p>
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

 இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவிரி தாயை மலர் தூவி வணங்கி மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை <a href="https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496" target="_blank">தமிழக முதல்வர் ஜோசப் விஜய்</a> இன்று (01) திறந்து வைத்தார்.
</p><p>

முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7592244-0f5b-40ac-8eef-48d645e75fbb/26-6a96b1549b0d4.webp' /></p><h2>காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி வழிபட்ட முதல்வர் விஜய்</h2><p>
</p><p>
டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p></p><p> 

 

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.</p><p>

 


நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்ட நிலையில் பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T11:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-of-rockfall-on-hatton-colombo-main-road-1788260038"></link>
            <id>https://jvpnews.com/article/danger-of-rockfall-on-hatton-colombo-main-road-1788260038</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f105176e-d643-4b0d-a1bc-4d6528ebfc88/26-6a96aec781b82.webp' /></p><p>பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:54:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனுடன் இந்த உணவுகளை சேர்த்தால் உடல்நலத்திற்கு பாதிப்பா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071"></link>
            <id>https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071</id>
            <summary type="text">தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு ஆற்றலை வழங்குவது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது போன்ற பலன்களை அளிக்கும்.</p><p> தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. மேலும், இதில் கொழுப்பு மற்றும் புரதம் எதுவும் இல்லை.&nbsp;தேனை சில குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து உட்கொள்வது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். அவ்வாறு தீங்கு விளைவிக்கும்&nbsp; உணவுகளை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d0e067-f275-408f-84d7-50e6f3fa6dd6/26-6a96ab00b3964.webp' /></p><h4>சூடான நீர்</h4><p> பலர் காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தேனை 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்துவது நல்லதல்ல. அதிக வெப்பநிலையில் தேனில் ஹைட்ராக்ஸி மெத்தில் ஃபர்ஃபியூரல் (HMF) எனப்படும் ஒரு பொருள் உருவாக வாய்ப்புள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயுர்வேதத்தின்படி, தேனை அதிகமாக சூடுபடுத்துவது அதன் இயற்கையான பண்புகளை மாற்றிவிடுகிறது. அதனால்தான், தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதோ அல்லது அது முழுமையாக ஆறிய பிறகு குடிப்பதோ சிறந்தது.</p><h4>நெய்</h4><p>ஆயுர்வேதமும் தேனையும் நெய்யையும் சம அளவில் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அவ்விரண்டின் தன்மையும் வெவ்வேறானது என்றும், அவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்வது செரிமானத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அது கூறுகிறது. எனவே, நீங்கள் இவ்விரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள விரும்பினால், முதலில் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><h4>புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்</h4><p> புளிக்கவைக்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. தயிர் மற்றும் மதுபானம் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுடன் தேனைக் கலப்பது சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளையும் வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். தேனில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் புளிக்கும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும்.</p><h4>இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்</h4><p>சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆயுர்வேதமும் மீனுடன் தேனை உட்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அது செரிமானத்தைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><h4>முள்ளங்கி மற்றும் வெங்காயம்</h4><p>முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை தேனுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன. இந்தக் கலவையானது செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுத்து வயிற்று உபாதை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், தேனுடன் அதிகப்படியான வெங்காயத்தைச் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T10:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d3d337-df98-44df-8a89-b949f5baab61/26-6a96a5e87cad0.webp' /></p><h2>5 கொலைச் சம்பவங்கள்</h2><p>



குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>



2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் ரி-56 துப்பாக்கியால் சுட்டு மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இந்த 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



வழக்கு விசாரணையின்போது, லண்டனில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approve-donation-one-million-dollars-nepal-1788256509"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approve-donation-one-million-dollars-nepal-1788256509</id>
            <summary type="text">திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p> 

வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc69c10c-d7ce-4025-81f0-a4a1cfd4dd45/26-6a96a0feade90.webp' /></p><p> 

இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை ஏற்பட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளல், தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படும் அபாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றமை போன்ற காரணங்களால் நிவாரணங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு ஆதரவுகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளது. </p><p>

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஆழமான கலாச்சார, சமய மற்றும் பரஸ்பர வெகுசனத் தொடர்புகளின் அடிப்படையில் நீண்டகால நட்புகள் மற்றும் மோசமான இயற்கை அனர்த்தத்தால் இடம்பெற்ற மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்காதீங்க.... பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-buy-gold-prime-minister-modi-appeals-again-1788255775</id>
            <summary type="text">&amp;nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.
</p><p>
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம். 

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்த பொருளாதார வளர்ச்சி நமக்கு கிடைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb81e9ff-5251-421d-a927-548b7dff9e4f/26-6a969e2084e86.webp' /></p><h2>Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்</h2><p>

இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்.. வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள்.</p><p></p><p>
சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. 2020 கொரோனாக் காலம் முதல் இப்போது வரை ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.

 ஆனபோதும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.</p><p></p><p> எங்கு பார்த்தாலும் போர் பற்றிய செய்திகளாக இருக்கிறது.. உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது’ என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 20 ஏக்கர் காணியில் இந்திய ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் ... மக்கள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ayurvedic-massage-centre-20-acres-in-jaffna-1788253739</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த 20 ஏக்கர் காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[OD1Q2வ்]</p><h2>கலாச்சார&nbsp; சீர்கேடு&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
தங்களது மண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல தியாகங்களைச் சுமந்த மண் என்பதால், இளைய தலைமுறையை சீரழிக்கும் வகையிலான கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>

குறித்த திட்டத்தின் ஊடாக சுமார் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேதத்தை சுற்றுலாத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
தொழிற்துறைசார் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும், குறித்த நிலையம் கொழும்பில் இயங்கும் ஸ்பா நிலையங்களைப் போன்று அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் வெற்றிலைக்கேணி மற்றும் தாழையடி பகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

எனினும், குறித்த திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியானவை எனவும், பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்காத தரப்பினரே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T09:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768"></link>
            <id>https://jvpnews.com/article/health-inspect-arrested-sexually-harassing-student-1788252768</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
பின்னர் சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbce29f4-d75d-480e-b182-33f078032061/26-6a969261bea28.webp' /></p><p>இதன்போது இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தியதாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம், பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சிறார்களுடன் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், குறித்த அதிகாரி இவ்வாறான கடமைகளில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் அவருக்கு எதிராக உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலியே பயிரை மேய்ந்த கதை; மாணவி துஸ்பிரயோகம்; ஆசிரியரை பாதுகாத்த பாடசாலை சமூகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959</id>
            <summary type="text">&amp;nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக குளுநாகல தலைமையகக் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில் அறிவியல் பாடம் கற்பிக்கும் 52 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். 
 

கடந்த ஜூன் மாதத்தில் இந்தத் துஷ்பிரயோகம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f9e2a3-6ee4-4673-a16f-747939d90595/26-6a967bb11f90d.webp' /></p><h2>முன்பும் பாலியல் குற்றச்சாட்டில்&nbsp; சிக்கிய ஆசிரியர்</h2><p> </p><p>அதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அது குறித்துப் பாடசாலை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைப் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர், அது குறித்துக் குருநாகல் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு, சந்தேக நபர் குருநாகல் பகுதியிலேயே அமைந்துள்ள மற்றொரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் பதிவாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்த போதிலும், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகம் தொடர்பாகச் சந்தேகத்திற்கிடமான ஆசிரியருக்கு எதிராக அதிகாரிகள் எந்தக் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை, குருநாகல் தலைமையகக் காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
 அதேபவேளை கைதான ஆசிரியர் இதற்கு முன்னரும் குருநாகல் நகரில் உள்ள மற்றொரு பிரதான கலவன் பாடசாலையில் பணியாற்றியபோது, மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பதும் , சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் தாக்கியதில் 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8th-grade-student-dies-being-attacked-by-teacher-1788251379"></link>
            <id>https://jvpnews.com/article/8th-grade-student-dies-being-attacked-by-teacher-1788251379</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹர்தோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஹர்தோய் மாவட்டம், பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த ஷாமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h4>மேலதிக விசாரணை</h4><p>

கடந்த 20ஆம் திகதி பரீட்சைக்காக பாடசாலைக்கு சென்றிருந்த மாணவிக்கும் அவரது வகுப்புத் தோழிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594bca14-83f9-4277-9e98-c1b7fb3c03ef/26-6a968cf559c8f.webp' /></p><p>இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மாணவி வகுப்பு ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். </p><p>எனினும், மாணவியிடம் உரிய காரணங்களை கேட்டறியாமல் ஆசிரியர் அவரை கடுமையாக தாக்கியதாக மாணவியின் தந்தை பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி, பரூக்காபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலை அதிபர் அக்‌ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் மாணவியின் வகுப்புத் தோழி ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>

இதனிடையே, பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:29:48+00:00</updated>
        </entry>
    </feed>
