<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T06:46:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dmk-mla-death-threat-to-chief-minister-vijay-1784529549"></link>
            <id>https://jvpnews.com/article/dmk-mla-death-threat-to-chief-minister-vijay-1784529549</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p> 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததுடன், அவர் மீது கடுமையான மிரட்டல் தொனியில் பேசி இருந்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40c630f-4a3c-41ff-8af0-1c3e7a7372df/26-6a5dc28e64171.webp' /></p><h2>பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனம்</h2><p>அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியது.
 
இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ-வை கைது செய்தனர்.</p><p></p><p> </p><p>

எம்எல்ஏ-வை கைது செய்ததை அடுத்து கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. </p><p>

பின்னர், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p></p><p> </p><p> 

திமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வரையே மிரட்டும் வகையில் பேசியதும், அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T06:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945"></link>
            <id>https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் &#039;குங்பூ ருவான்&#039; என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d3ee84-867d-4f02-9045-b6881bc698de/26-6a5dacab3d4da.webp' /></p><h2>வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், 

நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'குங்பூ ருவான்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T06:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நஷ்டஈடு கொடுக்கச் சென்றவர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-murdered-ahangama-pay-compensation-1784528442"></link>
            <id>https://jvpnews.com/article/man-murdered-ahangama-pay-compensation-1784528442</id>
            <summary type="text">&amp;nbsp;காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f44ecf5-0309-49f7-a264-1d24826709a7/26-6a5dbe4652402.webp' /></p><p>

 அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, நஷ்டஈடு வழங்கச் சென்றவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.</p><p> 

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T06:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை இறுக்கும் இந்தியா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-rule-1784527664"></link>
            <id>https://jvpnews.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-rule-1784527664</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று ( 19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aea6e7c-8ffd-45c3-8ec6-a4fd57cff4f3/26-6a5dbb3253337.webp' /></p><h2>&nbsp;நேற்று ( 19) முதல் நடைமுறைக்கு...</h2><p> </p><p>

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி வித்தியாசமாக மதிப்பீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

முக்கியமாக, வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே சில கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அத்தகைய வரி ஏய்ப்பைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. </p><p>

இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்திய நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானத்திற்கே இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த புதிய PPT விதிமுறையின் கீழ், வெறும் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படமாட்டாது. 

நிறுவனங்கள், தாங்கள் அமைத்துள்ள ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்குரிய வாகனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும்.</p><p> 

வரிச் சலுகையைப் பெறுவது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தால், ஒப்பந்தத்தின் பலன்களை மறுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. </p><p>

எனவே, முதலீட்டாளர்கள் இனி தங்கள் குறுக்கு-எல்லை ஏற்பாடுகளுக்குத் தெளிவான வணிகக் காரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இது நிறுவனங்களுக்கு தங்கள் வரி மற்றும் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் அளிக்கிறது</p><p>இந்தியா மற்றும் இலங்கை இடையே செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்கள் வணிகத்தின் உண்மையான நோக்கத்திற்கான ஆவணங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும். </p><p>

அதன்படி வரிக் கணக்குத் திட்டமிடலுக்கு மேலும் தெளிவைத் தரும் வகையில், 'முக்கிய நோக்கம்' என்பதை நிரூபிப்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்த மத்திய நேரடி வரிகள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களைக் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T06:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைக்கு உட்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528"></link>
            <id>https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cad345-4e98-402f-8fc6-e41ecd719273/26-6a5db6c1d6e2e.webp' /></p><p>
</p><p>
நாட்டில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளே முக்கிய காரணங்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த நிலை சோதனைப் பணிகளை மேற்கொள்வதற்குத் தகுதியான தொழில்நுட்ப அதிகாரிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கான தொடர்புடைய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணி ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-20T05:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 76,000 ஐ கடந்த எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் <a href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553" target="_blank">டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை </a>76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f7efda-4b39-446d-9f2d-ad5aa931e1d4/26-6a5db21be3245.webp' /></p><p> </p><p>

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அதேவேளை 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிட்டு போன வெற்றி ; கதறி அழுத லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், நடப்புச் செம்பியனான ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbc1d65-3f65-4eee-a08c-c5f4830e6c12/26-6a5da94c26db7.webp' /></p><p>
</p><p>


தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தநிலையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர், நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி" என்று உருக்கமாகத் பதிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T04:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு; ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; கலங்கும் முன்னாள் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627"></link>
            <id>https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டார்.
</p><p>


உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2064925a-8ab6-4c22-bd81-a696e347b68a/26-6a5da784c8c37.webp' /></p><p>
</p><p>


 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். </p><p>மிகவும் நேர்மையான, வெளிப்படையான, நல்ல குணத்துடன் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டவர்.



பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான நிலைப்பாட்டு மோதல்களால் பொலிஸ் மா அதிபருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் செயற்பட்டார்.</p><p></p><p> </p><p>ஆர்ப்பாட்டக்காலத்திலும் கூட மிக அமைதியாகவே செயற்பட்டார்.



இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் அவரும் எனது நண்பரொருவரும் சந்தித்தோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்பட சிறிது நேரத்துக்கு முன்பு, “சேர் உங்களின் வீட்டுக்கும் வர வேண்டும் என்றுகூட தெரிவித்தார்.&nbsp;</p><p>அரசியலுக்கு அப்பால் சமய, தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தோம். அவ்வாறிருக்கையில், அவரின் இறப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>



இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கூற முடியாது. விசாரணைகளினூடாகவே புரியும். அதனால், இதுபோன்று பெறுமதிமிக்க அதிகாரிகளை பொலிஸ் மட்டுமல்ல ஏனைய சேவைப்பிரிவுகளுக்கும் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரம் அவர். இவரை போன்றவர்கள் நாட்டுக்கு அவசியமானவர்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T04:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் ; பல காலம் இளைஞன் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125"></link>
            <id>https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதுபற்றி தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42990249-3bf7-41d5-b187-fdc720932de1/26-6a5d6af7151de.webp' /></p><h2 style="text-align: justify; ">விளம்பரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு&nbsp; இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T01:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019"></link>
            <id>https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p>

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fdb6f57-224b-4a0d-a4d4-29b5ff9f8bf2/26-6a5d76444c9b0.webp' /></p><p> </p><h2>அது எந்தெந்த ராசிகள் </h2><p><b>
ரிஷபம்: </b>ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.</p><p></p><p>
</p><p><b>

சிம்மம்:</b> சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.</p><p></p><p> </p><p><b>

துலாம்:</b> துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p><b>
மகரம்:</b> மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:13:48+00:00</updated>
        </entry>
    </feed>
