<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T14:26:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663"></link>
            <id>https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663</id>
            <summary type="text">தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.</p><p> 

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு இன்று (26) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7389b93-5e2f-438a-bf51-2704083bba92/26-6a660c1907f30.webp' /></p><h2>&nbsp;காவடி நடனம்&nbsp;&nbsp;</h2><p> </p><p>

தேவேந்திர முனை தேவாலயத்தின் பெரஹர ஊர்வலம் இநாட்களில் நடைபெற்று வரும் நிலையில், காவடி நடன அங்கம் அடங்கிய பெரஹர எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது. </p><p>

குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த தினத்தில் நடைபெறவிருந்த காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.</p><p> 

அந்த எழுத்துப்பூர்வ அறிவித்தலுக்கு அமைய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன இன்று அது தொடர்பில் குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450</id>
            <summary type="text">&amp;nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&amp;nbsp; மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&nbsp; மருத்துவமனைக்கு சென்றார்.
</p><p>
அங்கு&nbsp; அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c276a61-cd6c-41e8-b227-54e6bc53be02/26-6a66075c93e8b.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
</p><p>
இதனால் சந்தேகம் அடைந்த வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் பொலிசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><p>அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்து இருவரும் இளம் பெண்ணின் வற்புறுதலின் பேரில் தகாத உறவிலிருந்துள்ளனர்.</p><p>

இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். 

அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது பொலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; அம்பலமான திடுக்கிடும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959</id>
            <summary type="text">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5fbb4a-24bf-4d7e-99ee-c800c0072e09/26-6a660958bd2f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார்.

 

நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p style="text-align: justify; ">

 

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

 

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

 

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639</id>
            <summary type="text">ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அந்தத் தீ விபத்து சம்பவங்களில் மொத்த மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8316148-8ddb-4314-884c-9379fe25fcee/26-6a660431060a9.webp' />&nbsp;</p><h2>&nbsp;தீ விபத்து சம்பவங்கள்&nbsp;</h2><p> </p><p>

கடந்த ஆண்டில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. </p><p>

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதுடன், அந்த அழைப்புகளில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன. </p><p>

இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகப் பல்வேறு பணி இடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருத்தல், அவசரப் பதிலளிப்பு நடவடிக்கைகளுடன் இணையாதிருத்தல், வீடுகள் மற்றும் பணி இடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடுகள் மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் போத்தலால் 10 இலட்சம் ரூபாய் இழந்த சுற்றுலா நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709"></link>
            <id>https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709</id>
            <summary type="text">எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனம் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe36779-f341-4bae-acb7-a164125d42c8/26-6a65f4d7347a8.webp' /></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>


இதனையடுத்து, நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் வழக்குத் தாக்கல் செய்தது.
</p><p>


இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சகோதரர்கள் ; இத்தாலிக்கு திருப்பி அனுப்பபடும் ஜீவன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285"></link>
            <id>https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347c6319-1829-46e1-a8c1-dc92ec3e6bfd/26-6a65f716d1c6d.webp' /></p><h2 style="text-align: justify; ">சுங்கப் விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர்.
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று ( 25) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்றபோது, அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்தன.
</p><p style="text-align: justify; ">
சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T12:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக காணொளியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138</id>
            <summary type="text">வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca58e34-0bd3-46ec-b22f-edd0f0c5a1d0/26-6a65f29c0596a.webp' /></p><h2>பணியிடைநீக்கம்</h2><p>
</p><p>
சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சுசார் நிறுவன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் பிடிபட்ட மூவர் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.</p><p>



சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a898c5a7-0df0-4825-a607-69e5b2f22970/26-6a65e3a7bb8d0.webp' /></p><p>
</p><p>


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளியலறையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580</id>
            <summary type="text">காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7dbfab-62b3-49c9-bdf7-aa46b22f70c5/26-6a65ec85ed8ba.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

குறித்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>

அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டில் பரிசோதனை மேற்கொண்டபோதே குளியலறையில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

பிரேத பரிசோதனைக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T10:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்த சொகுசு பேருந்து ; அதிகாலையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.</p><p>



அதிகாலை சுமார் 04.45 மணியளவில் பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfdecbc-ee11-432c-88bb-80fcf75bfa7d/26-6a65df31afaee.webp' /></p><h2>பாரிய சேதம்</h2><p>



இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p><p> </p><p>சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான பணிகள் ஆரம்பம் ; நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439"></link>
            <id>https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தெளிவுபடுத்தியபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370558ee-64af-4d43-ab12-723aa6acbfc1/26-6a65dc58454c3.webp' /></p><p style="text-align: justify; ">

அதற்கமைய, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும், அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பட்சத்தில், அது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T10:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம் ; தந்தையும் மகனும் அரங்கேற்றிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், அண்மையில் ஹோமகம, கலகாஹேன பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் சாரதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea653a98-ca35-49ec-9344-0f224a3fd931/26-6a65d3493c8b6.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

 

ஹோமகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஜூலை 16 ஆம் திகதி அதிகாலையில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான கொல்லப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 

கொலையாளிகள் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த CCTV காட்சிகளை பரிசோதித்தபோது, கொலையுண்ட 'PickMe' மோட்டார் சைக்கிள் சாரதி மற்றொரு நபரை ஏற்றிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வருவது தெரியவந்தது.

 

அதன்படி நடத்திய விசாரணையில், அந்த நபரே மோட்டார் சைக்கிள் சாரதியுடன் அங்கு வந்து இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பின்னர், இந்த இரண்டு சந்தேகநபர்களும் தந்தையும் மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

இக்கொலை நடந்த மறுநாளில், சந்தேகநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளிலேயே மொரகஹஹேன பகுதிக்குச் சென்று, பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தைக் காட்டிப் பயமுறுத்தி அவரது தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர்கள் மீண்டும் ஹோமகம பகுதியிலேயே இதுபோன்ற மற்றொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், அங்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

 

சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் 500 மில்லிகிராம் ஹெரோயினும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபரின் வீட்டில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரத்தக்கறை படிந்த தலைக்கவசம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், குற்றங்களைச் செய்வதற்காக ஆயுதங்களுடன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, தனது இராணுவ அடையாள அட்டையைக் காட்டி பொலிஸ் சோதனைச் சாவடிகளில் எந்தவித தடையுமின்றி பயணித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (25) ஹோமகம பதில் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஹோமகம பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இக்குற்றங்களுக்குக் காரணமான முதன்மைச் சந்தேகநபரான தந்தையைத் தேடி, ஹோமகம தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சமன் கமகே அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-26T09:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3c9325-4398-4412-b75e-b85f591cf032/26-6a65ccf67bd52.webp' /></p><h2>இலவசமாக விசாக்கள்&nbsp;</h2><p> </p><p> 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்தியாவிலுள்ள புனித பௌத்த யாத்திரைத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்குப் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுக்களாகப் பயணிக்கும் பட்சத்தில் இலவசமாக விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. </p><p>சேவை வழங்குனரில் ஏற்பட்ட இடைக்கால மாற்றத்தினால் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த இச்செயற்பாடு, புதிய மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p></p><p> 


முன்னர் காணப்பட்ட நடைமுறையைப் போலவே, இலவச விசா வசதியைப் பெற விரும்பும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யாத்திரிக் குழுக்களின் விண்ணப்பங்கள், இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p> 

இந்திய அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 12 வயது முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். </p><p>குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும்.</p><p></p><p> </p><p>இது பயணிகள் இந்தியாவில் இறங்கும்போது குடிவரவு நடைமுறைகளை எளிதாகவும் சிரமமின்றியும் கடந்துசெல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

ஐ.சி.ஏ.சி. மையங்களுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் காத்திருக்கும் நேரத்தைச் சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேற்கண்ட நடைமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசு எவ்வித விசா கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இருப்பினும், ஐ.சி.ஏ.சி. சேவைக்கான கட்டணமாக விண்ணப்பதாரி ஒருவர் இலங்கை 1,855 ரூபா மாத்திரம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:01:46+00:00</updated>
        </entry>
    </feed>
