<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T03:37:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்; இந்த ராசிகளுக்குஅதிர்ஷ்டம் காத்திருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். </p><p>இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3d508a-b95a-42d1-b090-2eafbb09488d/26-6a6fedb4276d6.webp' /></p><p><b>


மிதுனம்:
</b>மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானார். ஆதலால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் பாதியில் நின்ற வேலை இவர்களுக்கு நல்ல முடிவை கொடுக்க போகிறது. எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய காலமாகும்.</p><p></p><p>
</p><p><b>
கன்னி:
</b>பூச நட்சத்திரத்தில் புதன் பகவானுடைய சஞ்சாரம் கன்னி ராசிக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த அரசு வேலைகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.

வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.</p><p></p><p> </p><p><b>துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானுடைய பூச நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர்ந்த செல்வாக்கை அளிக்க போகிறது.

வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911"></link>
            <id>https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911</id>
            <summary type="text">மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>



திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/839260a4-1601-4d3e-9728-cc29ef82be65/26-6a6fe4992d548.webp' /></p><h2>சரணடைந்த&nbsp; சாரதி</h2><p>
விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது&nbsp; இளைஞரும்&nbsp; உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21563cee-3c4c-49f8-9f1d-8fdb3bb529e7/26-6a6fe499d8a99.webp' /></p><p>
</p><p>


ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு ; இளைஞர்களுக்கு பொலிஸார் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059</id>
            <summary type="text">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e44621f-ecf3-43a4-8351-89a72e2b1ec7/26-6a6fe14524f1c.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடி நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, </p><p style="text-align: justify; ">பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். </p><p style="text-align: justify; ">தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்."
</p><p style="text-align: justify; ">
மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களில் முதல் பிரசவம் ; தாய்க்கும் சேய்க்கும் நடந்தேறிய துயரம் ; ஆபத்தாக மாறும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165"></link>
            <id>https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165</id>
            <summary type="text">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்துவ பகுதியில் பதிவாகியுள்ளது.
</p><p style="text-align: justify;">
வாதுவையைச் சேர்ந்த 34 வயதான&nbsp; பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2312bd-8cfc-45f0-b4d4-f380320e0337/26-6a6fd9df27e97.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify;">
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">ஆரம்பம் முதலே குறித்த தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போதே அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், உறவினர்கள் அவரை அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify;">

இறப்பு தொடர்பில் திறந்த முடிவு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305"></link>
            <id>https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c515c25-6949-43e9-ab3c-2730f4911b02/26-6a6f9fd3126b5.webp' /></p><h3 style="text-align: justify; ">&nbsp;தீவிர விசாரணை</h3><p>
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர்,&nbsp; கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.
</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; "> இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு சிக்கல் ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913</id>
            <summary type="text">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0050c4-6ae8-46d5-b843-e63560cdb1c4/26-6a6fbd8b2f8f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய கண்காணிப்பு நடைமுறை</h2><p style="text-align: justify; "> அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.</p><p style="text-align: justify; ">

வழக்கமான கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.</p><p style="text-align: justify; ">

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p style="text-align: justify; ">45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720</id>
            <summary type="text">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d7d98d-9ea8-4484-93e6-896e5c16d0fc/26-6a6f99a218f61.webp' /></p><h2 style="text-align: justify;">கருத்தடை</h2><p>
</p><p style="text-align: justify;">
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify;"> 

யாழ். மாநகர சபை - 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள், கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்,&nbsp; முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,

வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify; ">இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய 'விலங்கு நலச் சட்டத்தின்' ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் உயரதிகாரி செய்த செயல் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122"></link>
            <id>https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122</id>
            <summary type="text">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa5eca5-bbd6-429c-82e6-f5bb7750e474/26-6a6fcdfc34799.webp' /></p><h2 style="text-align: justify; ">நிதி முறைக்கேடு&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வு பரிசோதனையின் போதே இந்த நிதி முறைக்கேடு கண்டறியப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பெறப்படும் வருமானப் பணத்தை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் சார்ஜண்ட் காவல் நிலையத்துக்குப் பெறப்பட்ட அந்த பணத்தைச் வைப்பிலிடாது தவறியுள்ளமை கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:07:11+00:00</updated>
        </entry>
    </feed>
