<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T18:30:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் சற்று முன்னர் திடீர் பதற்றம் ; பாதுகாப்பு படையினர் களத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845"></link>
            <id>https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845</id>
            <summary type="text">கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643d860d-46c0-4ba9-82d9-106fbefa78e2/26-6a74d20ed8910.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற நிலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளின் வசதிக்காக புதிய திட்டம் ; பேருந்துக் கட்டணத்தில் டிஜிட்டல் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371"></link>
            <id>https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371</id>
            <summary type="text">பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adf879-f0fe-4fd2-866e-cf7af12b1543/26-6a74d034bde08.webp' /></p><p>

பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைக்கவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நவீன கட்டணச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வறட்சி ; மொனராகலை மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாது வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விடயத்தை வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f736dde-4995-47b7-934e-516190035a7a/26-6a74cd9db2814.webp' /></p><p>மேலும், அந்தப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் நீர்ப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக கும்புக்கன் ஓயா (Kumbukkan Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த வறட்சி காரணமாக ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி புதைகுழியில் வெளிவரும் உண்மைகள் ; தொடரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p> மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் உத்தரவின்படி 56 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p>இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, மனித எச்சங்களுடன் சிறுவர்களின் ஆடைகளில் பயன்படுத்தப்படும் பொத்தான்கள் மற்றும் பழமையான நாணயக் குற்றி ஒன்று சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களைச் சேர்த்து இதுவரை மொத்தம் 99 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
அகழ்வாராய்ச்சியின் தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 494 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு மேலதிக நீதிமருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இந்த அகழ்வாராய்ச்சி, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியமான விசாரணையாகக் கருதப்படுவதால், அதன் முன்னேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65b9f52-9e9b-47d0-b4bc-45a7fdb12835/26-6a74c70f66af8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ecc1b1b-6d7f-4cb0-8b61-5a397be2ff29/26-6a74c710215b8.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T17:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் ; சுகாதார அபாயம் குறித்து மக்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/piling-up-garbage-people-concerned-about-health-1786037056"></link>
            <id>https://jvpnews.com/article/piling-up-garbage-people-concerned-about-health-1786037056</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளில் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாத காரணத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாகவும், இதனால் பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>



குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c520add-3500-4de6-8e32-80eaad3255f6/26-6a74c3420c3d3.webp' /></p><p>



மேலும், வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


இந்த நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட பொது சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>


எனவே, சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், தொடர்ச்சியான மற்றும் முறையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணி விடுவிப்புக் கோரிக்கை ; சோள விற்பனையால் எழுந்த புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/land-release-requ-jaffna-new-controversy-over-sale-1786036358"></link>
            <id>https://jvpnews.com/article/land-release-requ-jaffna-new-controversy-over-sale-1786036358</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பயிர்ச்செய்கையிலிருந்து அறுவடை செய்யப்படும் சோளங்களே யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வலிகாமம் வடக்கில் பல குடும்பங்களின் சொந்த நிலங்கள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd58dd3d-8e60-470b-b41e-9e0f41e103a7/26-6a74c08786e6c.webp' /></p><p>தங்களது வீடுகள் மற்றும் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், பல குடும்பங்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் இல்லங்களிலும் இடம்பெயர்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், குறித்த காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறுவடை செய்யப்படும் சோளங்களை தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த நிலைமையால், யாழ்ப்பாண நகரில் சோள விற்பனையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்வதுடன், தங்களது அன்றாட வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவற்றைப் பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தங்களுக்கு வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, படையினரின் வியாபார நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதுடன், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் காணிகள் தொடர்பிலும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை இராணுவம் அல்லது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தம் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486"></link>
            <id>https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று தொடர்பான ஆபத்தான வானிலை எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e0285-6e26-4e59-95c9-c818f830f4b2/26-6a74b93760868.webp' /></p><p>இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஏனைய பிரதேசங்களிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் படகுகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான கடற்பிரதேசத்திற்குள் நுழைவதையோ அல்லது அங்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நிலவும் வானிலை நிலைமை குறித்துப் வௌியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இணையவழி சூதாட்டத்திற்கு எதிராக அதிரடி ; 146 தளங்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-orders-closure-146-illegal-gambling-web-1786033784"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-orders-closure-146-illegal-gambling-web-1786033784</id>
            <summary type="text">இலங்கையில் இயங்கி வந்த 146 அனுமதியற்ற இணையவழி சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இயங்கி வந்த 146 அனுமதியற்ற இணையவழி சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
சட்டவிரோத இணையத்தள சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இணையதளங்களை இலங்கைக்குள் அணுக முடியாத வகையில் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/839dcaf5-c46d-4b76-a068-13f25ca521cb/26-6a74b67982266.webp' /></p><p>நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வழங்கிய அறிவித்தலின் அடிப்படையிலேயே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிய அனுமதிப் பத்திரமின்றி இலங்கைக்குள் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது அவற்றை ஊக்குவிப்பது, சட்டத்தின் 44ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களை சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறையற்ற சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கமும் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-regarding-the-price-laufs-gas-1786032931"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-regarding-the-price-laufs-gas-1786032931</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விலையிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் எரிவாயு விலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6339a675-58a7-4a30-8dac-0bf1c1090934/26-6a74b32525504.webp' /></p><p> எனினும், ஓகஸ்ட் மாதத்திற்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.</p><p>இதேவேளை, லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>

இதனால், நாட்டின் பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களான லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய இரு நிறுவனங்களும் ஓகஸ்ட் மாதத்தில் தற்போதைய விலையையே தொடர்ந்தும் பேணவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி வீதி ;பொலிஸார் வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thaiyiddy-road-police-case-dismissed-1786023598"></link>
            <id>https://jvpnews.com/article/thaiyiddy-road-police-case-dismissed-1786023598</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையிலுள்ள பவானி வீதி தொடர்பில் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வலிகாமம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையிலுள்ள பவானி வீதி தொடர்பில் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடையைத் தொடர்பாக பிரதேச சபையினால் வெளியிடப்பட்ட அறிவித்தல், சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு கடந்த மே மாதம் 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.</p><p>இந்நிலையில், குறித்த வழக்கில் சமாதான குலைவை ஏற்படுத்தியதற்கான போதுமான ஆதாரங்களை வழக்குத் தொடர்ந்த தரப்பு முன்வைக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T15:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை அறிக்கை ஜனாதிபதியிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/report-negombo-prison-violence-submitted-president-1786022928"></link>
            <id>https://jvpnews.com/article/report-negombo-prison-violence-submitted-president-1786022928</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;தேசிய ஒருமைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.&nbsp;</p><p>கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.&nbsp;</p><p>சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச நிர்வாகச் சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>அதற்கமைய, இழப்பீடு வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பிலும் அக்குழுவின் மூலம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலைமை மற்றும் பூரண ஊனமுற்ற நிலைமை தொடர்பில் ஆராய்ந்து, அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதும் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-06T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் அடித்துக் கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uganda-football-team-captain-beaten-to-death-1786020727"></link>
            <id>https://jvpnews.com/article/uganda-football-team-captain-beaten-to-death-1786020727</id>
            <summary type="text">உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் டேவிட் ஓவோரி தெருவில் வன்முறையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உகாண்டாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் டேவிட் ஓவோரி தெருவில் வன்முறையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>உகாண்டாவின் கம்பாலா பகுதியில் பிறந்த டேவிட் ஓவோரி உகாண்டா பிரிமீயர் லீக்கில் எஸ்சி வில்லா அணியில் மிட் ஃபீல்டராகவும் தலைவராகவும் விளையாடி வந்தார்.</p><p>டேவிட் ஓவோரி கம்பாலாவில் இருக்கும் தனது&nbsp; வீட்டில் இருக்கும்போது, திருடர்கள் அவரது செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்கள். இதில் நடந்த மோதலில் அவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் திருடர்கள் தப்பியோடியதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.</p><p>“அவர் கால்பந்து வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு தலைவர், ஒரு தலைமுறைக்கே உத்வேகம் அளித்தவர். நாட்டின் நம்பிக்கையை தூக்கிச் சுமந்தவர்.</p><p>நாம் நமது மகனை, தலைவனை, நட்சத்திரத்தை இழந்துள்ளோம். அவர் களத்தில் இருந்ததை நாம் மறக்கவே முடியாது. </p><p>இந்தப் பெரும் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கும் எஸ்சி வில்லா அணிக்கும் அளிக்க கடவுளை வேண்டிக்கொள்கிறோம்.” என உகாண்டாவின் தேசிய கால்பந்து அணி கூறியுள்ளது.</p><p>இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேயொரு தமிழ் பாடசாலையை பாதுகாக்க பெரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945"></link>
            <id>https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945</id>
            <summary type="text">அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இது குறித்து அந்த பாடசாலையில் பழைய மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p>1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் நிலப்பரப்பு, காலத்துக்கு காலம் பல்வேறு அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p>இந்நிலையில், பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி உட்பட சுமார் ஒரு ஏக்கர் காணியை, அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடமொன்றை அமைப்பதற்காகக் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>பாடசாலை நிர்வாகத்திற்கோ, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கோ அல்லது அதிபருக்கோ எவ்வித முன் அறிவித்தலும் வழங்கப்படாமல், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து குறித்த காணி திடீரென சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.</p><p>இது அப்பகுதி தமிழ் சமூகத்தினர் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தநிலையில், வலயக் கல்வி அலுவலகத்தை இந்த பாடசாலைக் காணியில் அமைப்பதற்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வட மத்திய மாகாண ஆளுநரைச் சந்தித்து அமைதியான முறையில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.</p><p>ஏற்கனவே பாடசாலையின் கணிசமான காணிகள் வேறு அரச நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள காணியை வேறு தேவைகளுக்குக் கையகப்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி மற்றும் கட்டட விரிவாக்க நடவடிக்கைகளுக்காக இந்த காணியைப் பாதுகாத்துத் தருமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு; 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-expected-tomorrow-36-hour-forecast-1786023202"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-expected-tomorrow-36-hour-forecast-1786023202</id>
            <summary type="text">எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நாளை (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நாளை (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&nbsp;</p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.&nbsp;</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T13:33:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிஷோர் பதவி பறிப்பு; நீதிமன்றின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kishore-stripped-of-post-court-order-1786018399"></link>
            <id>https://jvpnews.com/article/kishore-stripped-of-post-court-order-1786018399</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் நேற்று (05) தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p>வட மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருந்த ஞானப்பிரகாசம் கிஷோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>மனுதாரர் மற்றும் பதிலாளிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.</p><p>எனினும், நேற்று நடைபெற்ற அமர்வில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால், ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா என்பது தொடர்பான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T13:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-tv-actress-chaitra-reddy-getting-a-divorce-1786020358"></link>
            <id>https://jvpnews.com/article/is-tv-actress-chaitra-reddy-getting-a-divorce-1786020358</id>
            <summary type="text">பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில், பிரபல&amp;nbsp; சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில், பிரபல&nbsp; சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது.&nbsp;</p><p>சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ,தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><p>கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சைத்ரா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.&nbsp;</p><p>இதனால் சைத்ரா தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறார் என தகவல் பரவி&nbsp; வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-06T12:46:03+00:00</updated>
        </entry>
    </feed>
