<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T19:26:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110</id>
            <summary type="text">மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படகு ஓட்டுநரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், கொழும்பு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae08efc-b945-4595-8f24-cbb54de815a3/26-6aa1ab8ff411d.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
இஷாரா செவ்வந்தியை திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்த சந்தேகநபர், அவரை இந்தியாவில் இறக்கிவிட்ட பின்னர் படகில் பொருத்தப்பட்டிருந்த முக்கிய சாட்சியமான GPS கருவியை அழித்துள்ளதாகவும் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இதே முறையைப் பயன்படுத்தி பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியுள்ளதாகவும், இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல 50,000 ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
குற்றப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drinking-water-supply-affected-wildlife-in-ampara-1788978728"></link>
            <id>https://jvpnews.com/article/drinking-water-supply-affected-wildlife-in-ampara-1788978728</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வனவில திணைக்கள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வனவில திணைக்கள அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><p>அம்பாறை சரணாலயம் என அழைக்கப்படும் புத்தாங்கல மற்றும் கல் ஓயா வடகிழக்கு பகுதிகளில் வறண்டுபோன குளங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காக காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அனுசரணையில் தாங்கி ஊர்திகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe809ec-87c9-4ad4-96de-f4a8fd11ec26/26-6aa1a629c4581.webp' /></p><p>நீண்டகாலமாக நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள பல இயற்கை நீர்நிலைகள் வறண்டுவிட்டதாகவும், இதனால் வனவிலங்குகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த நீர் விநியோக நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட செயலாளர் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறார்.
</p><p>
இதேவேளை, வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லாஹுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தம் ; ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-premadasa-questions-the-president-s-remarks-1788977174"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-premadasa-questions-the-president-s-remarks-1788977174</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்ட திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பே தேவையான பெரும்பான்மை குறித்து குடியரசுத் தலைவர் முடிவுக்கு வருவது எப்படி என வினவினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f964a57-e195-4da8-8d9e-e125bdd2777d/26-6aa1a017bc2d8.webp' /></p><p>மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இந்தநிலையில்,பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி வரும் அரசாங்கம், சான்றளிக்கப்பட்ட ஊடக வல்லுநர்களுக்கான சட்டம் மூலம் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முற்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஊடகங்களை ஒடுக்கும் அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234"></link>
            <id>https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a270f557-2a7c-44db-b5da-46f955d57e81/26-6aa18ccba912e.webp' /></p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">போலி இலக்கத் தகடுகள்&nbsp;</span></h3><p>ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29fe8e-6597-4c6c-aa55-19d2e3347706/26-6aa18ccc678f1.webp' /></p><p>கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349"></link>
            <id>https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349</id>
            <summary type="text">பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், பிறரின் உதவியை நாடாமல் தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5000e13e-ac2a-4b11-aa2d-1ee884511eb2/26-6aa19126b23c3.webp' /></p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இலக்க தகடுகள் குறித்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-number-plates-will-distributed-six-months-1788970630"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-number-plates-will-distributed-six-months-1788970630</id>
            <summary type="text">தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c579eb-b2ab-45aa-af85-db5fd4ccedb2/26-6aa186887ce54.webp' /></p><p> 

இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p> 

இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது.</p><p> 

அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன. </p><p>

2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன. </p><p>

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது. </p><p>

இதன்மூலம் எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினையை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் ; விரைந்து விடுவிக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-vehicles-stranded-at-ports-urgent-release-1788969935"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-vehicles-stranded-at-ports-urgent-release-1788969935</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a92c64-0264-48d8-834f-00320145afa4/26-6aa183d08ce7d.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.</p><p>

இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-just-moments-ago-1788968329"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-just-moments-ago-1788968329</id>
            <summary type="text">மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பிரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e677f2f0-b9a6-41c8-8fb9-748a8e8698a8/26-6aa17d8aa31cf.webp' /></p><p>எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T15:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியுதவியில் 3 புதிய பாலங்கள் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714"></link>
            <id>https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திறந்து வைக்கப்பட்டன.
</p><p>
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f5bece-dc01-4613-b7d3-021c837a1256/26-6aa15fcc63252.webp' /></p><p>
</p><p>
பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589"></link>
            <id>https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589</id>
            <summary type="text">&amp;nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சவர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7144d3d4-c624-4678-9498-00c528ef9276/26-6aa153970135e.webp' /></p><h2>&nbsp; AI&nbsp; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>
எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> 

தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08219b70-b7bd-4b0d-a201-592cb16bdc53/26-6aa15de3c2fcb.webp' /></p><h2>&nbsp;குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p> </p><p>

ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p> 

எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p> 

குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364ae4cf-8f30-4212-b56d-d6e5dcc81690/26-6aa15bbf586b3.webp' /></p><p>
</p><p>
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
