<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T11:48:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-electricity-charges-for-the-quarter-1785757116"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-electricity-charges-for-the-quarter-1785757116</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>

தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a3acdc-3209-4b6c-a21f-a282eb009c0d/26-6a707dbd93ac3.webp' /></p><h2>காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண முறை</h2><p>

அனைத்து கணக்கீடுகளின்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகச் செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும்.</p><p>

நிலக்கரியின் தரப் பிரச்சினையால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>


இதன்படி, மூன்றாம் காலாண்டில் மொத்த மின்சார விநியோகச் செலவு ரூ.186,027 மில்லியனாகவும், மொத்த வருமானம் ரூ.185,610 மில்லியனாகவும் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் ரூ.417 மில்லியன் மட்டுமே என்பதால், மின்கட்டணத்தை மாற்றத் தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T11:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு செப்டம்பர் 22 இல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-on-gotabaya-writ-petition-on-september-22-1785756658"></link>
            <id>https://jvpnews.com/article/order-on-gotabaya-writ-petition-on-september-22-1785756658</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்து நிறைவு செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ece160-6f32-4145-ab5f-505c905361c6/26-6a707bf35d54c.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T11:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floodwaters-surging-through-the-city-of-kand-1785755275"></link>
            <id>https://jvpnews.com/article/floodwaters-surging-through-the-city-of-kand-1785755275</id>
            <summary type="text">கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கு 

கண்டி, கெலிஓயா நகரில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கு 

கண்டி, கெலிஓயா நகரில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக பல வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதனால், அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.



 அத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3613b6be-d45e-4a4d-9976-9612c8b18b33/26-6a70768ca0014.webp' /></p><p></p><p>







 இன்னிலையில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து, கரையோரப் பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
</p><p>


கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கெலிஓயா நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதிலும் கொட்டித்தீர்த்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/torrential-rain-also-lashed-sainthamaruthu-1785754904"></link>
            <id>https://jvpnews.com/article/torrential-rain-also-lashed-sainthamaruthu-1785754904</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
</p><p>


ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72edcfc-ff2d-4dc8-aac5-cb1206ebec00/26-6a70751a4e9c4.webp' /></p><p>



இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T10:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களின் தொப்புளில் 2,400 பக்டீரியாக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-400-bacteria-in-the-human-navel-1785753801"></link>
            <id>https://jvpnews.com/article/2-400-bacteria-in-the-human-navel-1785753801</id>
            <summary type="text">&amp;nbsp;மனிதர்களின் தொப்புளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உடலுக்கு இயல்பாக இருக்கும் தோல் நுண்ணுயிர்கள் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனிதர்களின் தொப்புளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உடலுக்கு இயல்பாக இருக்கும் தோல் நுண்ணுயிர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
 மனிதர்களின் தொப்புள் என்பது வெறும் தழும்பு அல்ல, அது ஒரு மினியேச்சர் அமேசான் காடு போன்ற ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5470f450-7edd-4102-b57c-5c6b8803052b/26-6a7070cb0c8f3.webp' /></p><h2>மனிதர்களின் தொப்புள்&nbsp; ஒரு மினியேச்சர் அமேசான் காடு&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் (North Carolina State University) விஞ்ஞானிகள் நடத்திய "தொப்புள் பல்லுயிர் பெருக்க திட்டம்" (Belly Button Biodiversity Project) என்ற ஆய்வில், மனிதர்களின் தொப்புள்களில் கிட்டத்தட்ட 2,368 க்கும் மேற்பட்ட (ஏறத்தாழ 2,400) பாக்டீரியா இனங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது

சில ஆய்வுகளின்படி, மனிதர்களின் தொப்புளில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட வகையான பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>


எனினும், அவை அனைத்தும் தீங்கு விளைவிப்பவை அல்ல என்றும், பெரும்பாலானவை உடலின் இயல்பான நுண்ணுயிர் சூழலின் ஒரு பகுதியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
அதேவேளை, தொப்புளை முறையாக சுத்தமாக வைத்திருக்காதபோது அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகள் தேங்கி, துர்நாற்றம், தோல் எரிச்சல் மற்றும் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், தொப்புளில் வாழும் நுண்ணுயிர்களின் சமநிலை, கல்லீரல், குடல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
இருப்பினும், இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து மேலதிக அறிவியல் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இந்நிலையில், தினசரி தனிநபர் சுகாதார பராமரிப்பில் தொப்புளை சுத்தமாக வைத்திருப்பதை பலரும் புறக்கணித்து வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-03T10:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை; குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

​</p><p>2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694046d6-21e8-463b-b57a-7b3cc744f7e4/26-6a703d2c6f2f3.webp' /></p><p></p><h2>யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p>யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் 'Royal Navy Young Officers Course' பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதனூடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.</p><p>. 

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169"></link>
            <id>https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2d48bb-2bf7-43a5-a11a-74584ee76d1b/26-6a706a6bce9e7.webp' /></p><h2>&nbsp;ஒகஸ்ட்&nbsp; 5 ஆம் திகதி&nbsp;வரை செல்லுபடியாகும் </h2><p> </p><p>மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு&nbsp;சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​</p><p></p><p>அதன்படி, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><p>அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும் , ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டேட்டிங் ஆசை; ஒரே நாளில் ஒரு மாத சம்பளத்தை இழந்த இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-loses-a-month-salary-single-day-due-dating-app-1785751245"></link>
            <id>https://jvpnews.com/article/man-loses-a-month-salary-single-day-due-dating-app-1785751245</id>
            <summary type="text">&amp;nbsp; டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் இணையத்தில் அறிமுகமான&amp;nbsp;பெண்&amp;nbsp; ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் இணையத்தில் அறிமுகமான&nbsp;பெண்&nbsp; ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
 
 
இணையத்தில் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற அந்த இளைஞர், குறிப்பிட்ட ஒரு பப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு மது அருந்தாத போதிலும், அந்த பெண் ஷாம்பெயின் மற்றும் ஹூக்கா என விலையுயர்ந்த பொருட்களை தாராளமாக ஆர்டர் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd759370-c1ce-4ce2-a71f-3bea745e551b/26-6a7066cf69f57.webp' /></p><h2>&nbsp;டேட்டிங் ஆப் மோசடி</h2><p> </p><p>
 
இறுதியில் பில் தொகை 20,500 ரூபாயை தாண்டியபோது, பில் வரும் நேரத்தில் அந்த பெண் கழிவறைக்கு சென்றுவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> பணத்தை இழந்ததை விட, தனது வருகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பில்லை கட்ட வைக்கும் இதுபோன்ற முறைகளை கையாண்டதுதான் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 
இந்த பதிவைப் பார்த்த பல சமூக வலைதள பயனர்கள், இது டெல்லி-என்சிஆர் பகுதியில் பரவலாக அரங்கேறிவரும் ஒரு பிரபலமான "டேட்டிங் ஆப் மோசடி" என்று எச்சரித்துள்ளனர். </p><p>தெரியாத நபர்களை சந்திக்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு பலியாக கூடாது என்றும் பலரும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-03T09:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கோயாவில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-lying-areas-in-dickoya-floodwaters-1785748385"></link>
            <id>https://jvpnews.com/article/low-lying-areas-in-dickoya-floodwaters-1785748385</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p>




ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயி பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் (03) நீரில் மூழ்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16246998-83e2-4f7e-8c40-0ec60b295bd6/26-6a705ba2c750d.webp' /></p><p>



அதேவேளை 2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதால் காரணமாக இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும்&nbsp;தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>







இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவித்தல் வரை பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கை இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/peradeniya-university-operations-suspended-1785746062"></link>
            <id>https://jvpnews.com/article/peradeniya-university-operations-suspended-1785746062</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், மாணவர்களது மற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b233b095-cf29-428d-b597-c2ab89b3ee09/26-6a705290080ac.webp' /></p><h2>கடுமையான காலநிலை</h2><p>&nbsp;அத்துடன் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>எவ்வாறாயினும், வளாகத்திலுள்ள அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து செயற்படும் என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பாகத் தமது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கக் கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>கடுமையான காலநிலை காரணமாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள், சலசல மெதுர (Sarasavi Medura) விடுதியைத் தவிர ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்குத் அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம். </p><p>எந்தவொரு மாணவரும் தங்களது விடுதி வசதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் வளாகத்தில் தற்காலிகத் தங்குமிடம் கோரினால், அவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அத்தகைய மாணவர்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குமாறும், தேவையான பதிவுகளைப் பேணுமாறும் விடுதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T09:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-holiday-kandy-nuwara-eliya-schools-tomorrow-1785747370"></link>
            <id>https://jvpnews.com/article/flood-holiday-kandy-nuwara-eliya-schools-tomorrow-1785747370</id>
            <summary type="text">&amp;nbsp;தொடரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 4)&amp;nbsp; விடுமுறை விடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தொடரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 4)&nbsp; விடுமுறை விடப்பட்டுள்ளது.</p><p>

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe403060-def4-4c23-82a8-70ce904033c6/26-6a7057ac1eb7d.webp' /></p><p>
</p><p>
இந்த அறிவிப்பை மத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர் வெளியிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:54:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாறைகள் சரிந்து விழும் அபாயம் ; கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-rockfalls-colombo-kandy-main-road-closed-1785746727"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-rockfalls-colombo-kandy-main-road-closed-1785746727</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
</p><p>


இந் நிலையில் மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0db523ec-cd3a-4bbd-ab79-72389675567e/26-6a705528c6aa2.webp' /></p><h2>தொடரும் சீரற்ற வானிலை</h2><p>தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ </p><p>, பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. 

​</p><p></p><p> </p><p>இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

​ </p><p>மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​</p><p></p><p>&nbsp;நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

​ அதேநேரம் கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை; உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104"></link>
            <id>https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>


இந்தநிலையில் இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய பாதையை அமைப்பதில் உடன்பாட்டை ஏற்படுத்தி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8238bce-3fc7-4c29-bf07-d218c402f320/26-6a704ae9ba57c.webp' /></p><h2>இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தற்போதுள்ள வடக்கு அல்லது தெற்குப் பாதையாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மையையும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உலகளவில் நுகரப்படும் மசகு எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்ற உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644</id>
            <summary type="text">&amp;nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான &#039;ஹரக் கட்டா&#039;வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா'வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32ccf70-824a-43af-905f-8e29d55ec8e0/26-6a704d05ab737.webp' /></p><h2>குற்றச்சாட்டுகள் நீக்கம்</h2><p>
</p><p>
 தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், அவரைப் பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையில் தடுப்பில் வைப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்லச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது.
</p><p>
இது தொடர்பான வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி , குறித்த உத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-03T08:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ;பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451"></link>
            <id>https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

இன்று திங்கட்கிழமை (03) குறித்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் தொடர்பில் தகவல் வெளியாகத நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82ef7b-4e4d-44b2-be6e-c7775eccc627/26-6a7030ed16932.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவால் கர்ப்பிணி பெண்ணும் சிசுவும் பலி; பெரும் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656"></link>
            <id>https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.</p><p>

வடுவாவைச் சேர்ந்த அப்பெண், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f781b37b-acfe-4697-a319-90f63fb81542/26-6a70398972da5.webp' /></p><h2>&nbsp;இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும் இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது. </p><p>ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணமே டெங்குவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>மொத்த பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (45,675) இங்குதான் பதிவாகியுள்ளன. இதில் கம்பஹா (18,321) மற்றும் கொழும்பு (17,101) மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தென் மாகாணத்தில் 12,969 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 7,567 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் விழுந்த பாரிய கற்பாறை; போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huge-boulder-rock-falls-hatton-road-blocked-1785739071"></link>
            <id>https://jvpnews.com/article/huge-boulder-rock-falls-hatton-road-blocked-1785739071</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாக ஹட்டன், போடைஸ் மற்றும் டயகம ஆகிய இடங்களை இணைக்கும் குறுக்கு வழியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5bffa9-7645-42b9-928c-4897820e5480/26-6a703740ca6b6.webp' /></p><p>
</p><p>
எனவே, பயணிகள் மற்றும் சாரதிகள் குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹட்டன் வலய காவல்துறையின் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-03T06:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து; 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collision-karadupana-area-kegalle-20-injured-1785732132</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்து இன்று (3) காலை 6:15 மணியளவில் ​ கேகாலை - கரடுபன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b13678c-6191-45f2-91e1-982d5ab4212f/26-6a701c25d6394.webp' /></p><p> 

​ ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07a836a7-2408-4a01-b5e9-9f987f44ff12/26-6a701c78cbfe4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T06:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kotmale-reservoir-opened-flood-warning-1785738461"></link>
            <id>https://jvpnews.com/article/kotmale-reservoir-opened-flood-warning-1785738461</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள மதகுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e34422-9276-4060-95ca-a635ec8ffbe8/26-6a7034de8e3ee.webp' /></p><h2>கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை நேற்று இரவு (02) முதல் மத்திய உயர்நிலப்பகுதியின் மேற்குச் சரிவுகளில் தொடர் மழையின் காரணமாக, டெவன் அருவியில் கலக்கும் டெவன் கால்வாய் நிரம்பி வழிந்து, கொட்டகல வர்த்தகப் பகுதி மற்றும் லோகில் எஸ்டேட்டில் உள்ள 40 வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது</p><p>.

 வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தச் சாலைகளில் கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறை வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T06:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடர்ந்து கரையொதுங்கும் கொள்கலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/containers-continue-to-wash-ashore-in-sri-lanka-1785736546"></link>
            <id>https://jvpnews.com/article/containers-continue-to-wash-ashore-in-sri-lanka-1785736546</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

​ குறித்த கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

​ குறித்த கொள்கலன் வெள்ளை நிறமுடைய சுமார் 40 அடி நீளமான கொள்கலன் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ </p><p>இது கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த கொள்கலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். 

​</p><p></p><p> அதேவேளை , நேற்று (02) இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலனொன்று கரை ஒதுங்கியிருந்தது. 

​</p><p> நேற்று முற்பகல் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இக்கொள்கலன், நேற்றுமுன்தினம் கொழும்புக்கு அண்மித்த கடற்பகுதியில் கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த வெற்றுக் கொள்கலன் என தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-03T06:03:09+00:00</updated>
        </entry>
    </feed>
