<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T07:29:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு; பொலிஸார் வழக்கு தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-buddhist-worship-at-vedukkunari-malai-1789025300"></link>
            <id>https://jvpnews.com/article/special-buddhist-worship-at-vedukkunari-malai-1789025300</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>

 சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478f7ba8-8ce8-42ed-841d-25b154b8d2b8/26-6aa25c1558764.webp' /></p><h2>நீதிமன்ற&nbsp; உத்தரவு</h2><p>

இந்நிலையில் 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம்,&nbsp;ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர்&nbsp; நீதிமன்றத்தில் தோன்றுமாறு&nbsp; வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
2026/09/12ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும் சமய வழிபாடுகள் நடத்தப்படுவதாகவும் பூஜை நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஒரே பூமியில் தொல்பொருள் அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடவிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 

இக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் இரு தரப்பினரின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும் இவ்வாறாக இடப் பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத்தளத்தினை பிரதான மையமாகக் கொண்டு நாட்டுக்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அதன் பிரகாரம், மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு இன்று 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் தோன்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T07:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4342da14-a953-43b9-9170-2d5560af249d/26-6aa23e2f39995.webp' /></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977"></link>
            <id>https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே ஜனக நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9275df8-09fd-4bc1-b024-ff7a63646249/26-6aa256eaefe10.webp' /></p><p> 

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு காவலாளி படுகொலை ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872"></link>
            <id>https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872</id>
            <summary type="text">இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752f8faf-b0d9-435d-9c8e-bbfe7c8a6f3f/26-6aa254d7aab97.webp' /></p><h2>தீவிரமாகும் விசாரணை</h2><p>

இரத்தினபுரி, கஹங்கம, கெடலியன்பள்ள பகுதியைச் சேர்ந்த&nbsp; 61 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் கொலை இடம்பெற்ற வீட்டைப் பராமரித்து வந்த காவலாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>குறித்த காவலாளி நாற்காலியொன்றில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயதுடைய நபர் ஒருவர் இக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

</p><p>தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலரையும் சிந்திக்கவைத்த யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686"></link>
            <id>https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு தற்பொதைய சமூகத்தையும் , புலம் பெயர் தமிழ் மக்களையும் சிந்தை கொள்ள செய்துள்ளது.
</p><p>
சமூகம் சார்ந்த பிரச்சனைகள் , மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்களை தோலுரித்து காட்டுவதாக அவர்களின் பேச்சுக்கள் அமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bea979b-56fa-4a8b-b5e3-3c213e1d2250/26-6aa24a0fcff9b.webp' /></p><h2>சிந்திக்கவைத்த&nbsp;&nbsp;பேச்சு</h2><p>
</p><p>
சில புலம் பெயர் தமிழர்கள் தாயகம் வந்து செய்யும் அலப்பறைகள் தொடர்பிலும், தாயகத்தில் வாழும் எம் உறவுகள் புலம் பெயர் தமிழர்களை சார்ந்து வாழும் நிலை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.&nbsp; &nbsp; </p><p>&nbsp; <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2335888403614312%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>போர் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பியோடிய எம் இளம் தலைமுறையினர் பலர் , தாயகம் மீண்டெழுவதற்கு உதவி இருந்தமையினையும் சுட்டிகாட்டியுள்ளனர்.</p><p>அதேசமயம் தாயகத்தில் பொருளாதார , கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் பெரும் பங்களிப்பு இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை வளையத்தில் முன்னாள் அரச ஜோதிடர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800"></link>
            <id>https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சிரிலிய சவிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc01dd7-f8ea-4d37-87bf-3721a160cee3/26-6aa24e6a4ae11.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657</id>
            <summary type="text">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மரிதன்கடவல நகரில் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf5430e-e93b-446f-b359-a885a0fab0be/26-6aa249f2eadca.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



விபத்தில் 47 வயதுடைய தாய் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ; முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-plated-gun-ex-minister-indicted-1789018403"></link>
            <id>https://jvpnews.com/article/gold-plated-gun-ex-minister-indicted-1789018403</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்ணொருவர் என இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) குற்றப்பத்திரிகை தா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்ணொருவர் என இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இக்குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உட்பட இரு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389ad2f2-45fd-4fbe-b87a-635cb6588a3d/26-6aa24125180bd.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-pardon-granted-to-gnanasara-thero-is-invalid-1789018444"></link>
            <id>https://jvpnews.com/article/the-pardon-granted-to-gnanasara-thero-is-invalid-1789018444</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அது செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a01a38-927f-4b4b-a262-3538dcbaf95b/26-6aa2414d811cb.webp' /></p><h2>பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததைத் தொடர்ந்து, இன்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
நீதிமன்ற அவமதிப்புக்குக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனி நபர் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226</id>
            <summary type="text">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a24b19-5b9c-45d3-be63-a35a9c16f4f6/26-6aa2251c4434a.webp' /></p><p style="text-align: justify; "> 

2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று பெண்கள் அதிரடி கைது ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422"></link>
            <id>https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் &#039;கஞ்சா&#039; போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு-13, புத்தளம் - கற்பிட்டி மற்றும் கொழும்பு-02 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34,37 மற்றும் 54 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e78e70d-c723-465d-9d88-bf2a280155c5/26-6aa2396856ccc.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர்கள் நேற்று இரவு 10:50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 'தாய் ஏயர் ஏசியா' சேவையின் FD-140 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 803 கிராம் எடையுடைய 'கஞ்சா' போதைப்பொருள் 11 உருண்டைகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேடிதேடி வேட்டையாடும் ஜனாதிபதி அனுர அரசாங்கம்; கிலியில் முன்னாள் ஆட்சியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146"></link>
            <id>https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட்சி தலைவர்களை வேட்டையாட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது நீதித்துறைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை வளையத்தினுள் மேலும் ஆறு கட்சி தலைவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf0c8da-259e-4b53-8752-c3fcdf5af2f3/26-6aa23853aa579.webp' /></p><h2>அடுத்தக்கட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு முன்வைக்கப்படடுள்ளது. </p><p>

அவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முறைப்பாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஏற்கனவே நாமல் ராஜபக்ச அண்மையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T04:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சங்கராஜ மாவத்தையிலுள்ள கடையொன்றிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feff6b28-d286-4545-b0b0-aafee266595c/26-6aa2350275fa0.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களுக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொட்டாஞ்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T04:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCID க்கு அழைக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-air-force-commander-summoned-to-fcid-1789014481"></link>
            <id>https://jvpnews.com/article/former-air-force-commander-summoned-to-fcid-1789014481</id>
            <summary type="text">முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. 

மிக் விமானக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. </p><p>

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c96f57b-3805-4bb0-90c8-bca21ddb2fe1/26-6aa231d26b984.webp' /></p><p> 

குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T04:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென பற்றியெறிந்த பயணிகள் கப்பல் ; 5 பேர் பலி ; பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passenger-ship-catches-fire-5-killed-1789013473"></link>
            <id>https://jvpnews.com/article/passenger-ship-catches-fire-5-killed-1789013473</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

சுற்றுலாத் தலமான ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf87eb0-af8c-4bea-87f4-f4539fabd5ae/26-6aa22de2cabd3.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் பணிகள்</h2><p style="text-align: justify; "> 

விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் கடலோரக் காவல்படை, குறித்த கப்பலில் 134 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர்களில் 42 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனினும், கப்பலில் பயணம் செய்தவர்களில் 87 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வௌியாகவில்லை.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T04:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு ; கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-exploration-in-mannar-sea-1789012493"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-exploration-in-mannar-sea-1789012493</id>
            <summary type="text">எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbcd81b9-a887-4759-a6e0-940eba996bb7/26-6aa22a0edfea3.webp' /></p><h2 style="text-align: justify; ">அபிவிருத்தி நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தௌிவுப்படுத்தி முன்னெடுப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதுபோன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்காக முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகளால் மன்னார் தீவின் மீன்பிடிச் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு அமர்வின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T03:55:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ; நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149</id>
            <summary type="text">கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452e45e7-361c-4300-ab0e-e0299a03e1d0/26-6aa21cff70394.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T02:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து ; 22 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293"></link>
            <id>https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

மெதிரிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1100a0c3-5ec2-4b8a-b4dd-2be3a8ff760c/26-6aa21af82e27c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த இடம் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-09-10T02:45:03+00:00</updated>
        </entry>
    </feed>
