<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-26T14:41:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.</p><p> 

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f7bea1-dc1e-4ea2-9882-0d8e19d42c39/26-6a8ee2c8d01b1.webp' /></p><h2>தற்போது &nbsp;மிகவும் மாசடைந்த கிரகரி வாவி</h2><p> </p><p>

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.</p><p></p><p> </p><p>

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும். 

இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடக பாவனைக்கு கட்டுப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892</id>
            <summary type="text">&amp;nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>


பணி நேரங்களிலும், உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கிய தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/458b92da-7b82-4a8a-b32e-0c95353aa68c/26-6a8ee60571b18.webp' /></p><h2>&nbsp;சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>


சமூக ஊடகங்களில் ரயில்வே தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவது, ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கத்தை பாதிக்கக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>


புதிய சுற்றறிக்கையின்படி, ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர், உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே ரயில்வே தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கும் ஊடகங்களுக்கும் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



மேலும், சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125"></link>
            <id>https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர்.

சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd774e3a-47b4-4cd6-9c7b-1db61c69bf2a/26-6a8edb374426d.webp' /></p><h2>ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால்&nbsp;வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும். </p><p>அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
</p><p></p><p>
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.</p><p></p><h3>&nbsp;அவசர எண்கள் அறிவிப்பு</h3><p>மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுகா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.</p><p>&nbsp; நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T13:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை பேரிடர்; நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905"></link>
            <id>https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>



அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0eafd7-33ed-4d63-9ab1-fc004bfc834b/26-6a8ee9fa9db21.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி</h2><p>
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது'எக்ஸ்' வலைத்தளத்தில்,</p><p> “நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். 



இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்.</p><p></p><p> </p><p>



நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T13:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோபாலா நீ வாடா...யாழில் மனதை உருக்கும் ஒரு தாயின் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708"></link>
            <id>https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9f0ba6-6674-4a99-9240-5b645b15db4a/26-6a8eb285ae7fd.webp' /></p><p></p><h2>&nbsp;இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்</h2><p>



அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821"></link>
            <id>https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
</p><p>


யாழ்.புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்பட்டார்.



தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர்,யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ead269-045b-499a-9504-c64e2b767be8/26-6a8ed61f383fc.webp' /></p><p>



குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
</p><p>


மேலும், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-24-hours-1787743400"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-24-hours-1787743400</id>
            <summary type="text">அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். 

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fe39a9-3e81-41f3-9376-da2730c8f97f/26-6a8ecca9ec36d.webp' /></p><p>காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும்போது கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரத்திற்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-in-october-and-november-due-to-el-nino-1787742382"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-in-october-and-november-due-to-el-nino-1787742382</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது .</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து குறிப்பிடுகையில்,

இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் இந்த இரண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6096eb-c839-4550-a7fa-fe15354f8560/26-6a8ec8afa9c4f.webp' /></p><p>வழக்கத்தை விட கனமழையால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T11:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம் ; கணக்கு மோசடிகளை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/whatsapp-makes-dramatic-changes-new-security-1787742058"></link>
            <id>https://jvpnews.com/article/whatsapp-makes-dramatic-changes-new-security-1787742058</id>
            <summary type="text">கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 6 இலக்க இருபக்க சரிபார்ப்பு PIN முறைக்கு மாற்றாக, கூடுதல் பாதுகாப்பு கொண்ட கடவுச்சொல் (Password) முறையைப் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தக் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எழுத்து மற்றும் ஒரு எண் இடம்பெற வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 எழுத்துகளைக் கொண்ட கடவுச்சொல்லை பயனர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f23ffb52-81cd-43b4-8468-d2bf2a3706d4/26-6a8ec76bc2ed3.webp' /></p><p>இதனை Settings &gt; Account &gt; Password பகுதிக்குச் சென்று அமைத்துக்கொள்ள முடியும்.

அதேவேளை, பயனர்கள் தங்களது பல்வேறு சாதனங்களில் பல Passkeys-களை உருவாக்கும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
மேலும், அறியப்படாத எண்களில் இருந்து அழைப்புகள் வரும் போது, Android பயனர்களுக்கு அழைப்பாளர் தொடர்பான கூடுதல் தகவல்களை வாட்ஸ்அப் வழங்கவுள்ளது.</p><p> குறிப்பாக, அழைப்பாளர் வெளிநாட்டைச் சேர்ந்தவரா அல்லது அவருடன் ஏதேனும் பொதுவான குழுக்களில் பயனர் இடம்பெற்றுள்ளாரா போன்ற தகவல்கள் காட்டப்படும்.</p><p>

தொழில்நுட்ப ரீதியான ஹேக்கிங் தாக்குதல்களை விட, மனிதர்களை ஏமாற்றும் சமூகப் பொறியியல் (Social Engineering) முறைகளை மோசடி செய்பவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதால், இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வாட்ஸ்அப்பில் 2017ஆம் ஆண்டு முதல் 6 இலக்க PIN அடிப்படையிலான இருபக்க சரிபார்ப்பு முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக்குறிகள் அடங்கிய வலுவான கடவுச்சொல்லைத் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
எளிதில் யூகிக்கக்கூடிய PIN அல்லது கடவுச்சொற்களைத் தவிர்த்து, வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடியும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஆண்டுகளுக்கு முன் இராணுவச் சிப்பாய் கடத்தி படுகொலை ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-soldier-murdered-information-investigation-1787740936"></link>
            <id>https://jvpnews.com/article/army-soldier-murdered-information-investigation-1787740936</id>
            <summary type="text">எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிக்கொண்டு வந்துள்ளது.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின்போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80c8ec6b-f013-41c0-9cc6-0648f99659d3/26-6a8ec309ede58.webp' /></p><p>கடந்த ஜூன் 8ஆம் திகதி வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நபரொருவர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p><p>

அச்சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான 'நிஷங்க' என்பவரின் மனைவியுடன் தனக்கிருந்த சட்டவிரோதத் தொடர்பே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
8 ஆண்டுகளுக்கு முன்னர் குருவிட்ட பகுதியில் வைத்து அவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T10:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சக்திவாய்ந்த வெள்ளப் பெருக்கு; அச்சத்தில் பதறி ஓடிய மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/powerful-floods-in-nepal-people-fled-in-panic-1787740823"></link>
            <id>https://jvpnews.com/article/powerful-floods-in-nepal-people-fled-in-panic-1787740823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர். இதனையடுத்து பிஹாரில் கண்டக் மற்றும் கோசி ஆற்றங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் மாயமாகினர். இதனையடுத்து பிஹாரில் கண்டக் மற்றும் கோசி ஆற்றங்கரையோர நிலவரங்களை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அம்மாநில தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
நேபாள நாட்டின் வட பகுதியில் உள்ளது ரசுவா மாவட்டம். இது திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் இன்று திடீரேன வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c710d82-4f34-40a7-968f-7cb343a3ecb8/26-6a8ec298af0ff.webp' /></p><h2>திபெத்திலும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு</h2><p> </p><p>இதனால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமல்ல பெரிய பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. அதனாலேயே இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிஹாரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
நேபாளத்தில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இன்னும் முழு வீச்சில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

திடீரென இத்தகைய சக்திவாய்ந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரனம் என்று ஆராய்ந்து வருவதாக நேபாள மழை, வெள்ள கணிப்பு மையம் தெரிவித்துள்ளது. </p><p>ரசுவா மாவட்டத்தில் மழை பெய்திருந்தாலும்கூட அது இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை திபெத் பகுதியில் ஏதேனும் பனிப்பாறை உருகி வெடித்து அதன்மூலம் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்கிடையில், திபெத்திலும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலரைக் காணவில்லை என்றும் சீனாவில் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிராங் எல்லைப் பகுதியில் பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்பகுதியில் காணாமல் போனவர்களைத் தேடும்படியும், வேறேதும் பாதிப்புகள் தொடரக்கூடுமா என்பதை ஆராய்ந்து கண்காணிக்கவும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T10:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-chewing-2-cloves-every-morning-1787738339"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-chewing-2-cloves-every-morning-1787738339</id>
            <summary type="text">காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று வரும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சுவாசத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று வரும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சுவாசத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுக்கூடியது</p><p>இப்போது தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16964ede-b0df-4e1d-9e19-ce3da9256013/26-6a8eb8e4a07fe.webp' /></p><h4>வாய்வழி ஆரோக்கியம் மேம்படும்</h4><p>
கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று தான் வாய் புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும். ஏனெனில் இதில் யூஜெனோல் என்னும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வாய் துர்நாற்றத்திற்கு காரணமான கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, ஈறு தொற்றுகளையும் போக்கும். என்ன தான் கிராம்பு வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவினாலும், தினசரி பற்களை துலக்குவது, ஃப்ளோசிங் செய்வது போன்றவற்றை தவிர்க்கக்கூடாது.</p><h4>செரிமானம் மேம்படும்
</h4><p>பல நூற்றாண்டுகளாக செரிமான பிரச்சனைகளை போக்க கிராம்பு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான நொதிகளை தூண்டவும், உண்ட உணவுகளை திறம்பட உடைக்கவும் உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள யூஜேனோல் வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கவும், இரைப்பை புண்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதால் விலங்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மனித ஆய்வுகள் தேவைப்பட்டாலும், சீரான உணவில் கிராம்பை சேர்ப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.</p><h4>இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்</h4><p>
கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள ஆதரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. மேலும் சில சிறிய மனித ஆய்வுகள் மற்றும் விலங்கு ஆராய்ச்சிகள், கிராம்பில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அதிகரிப்புகளைக் குறைக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.</p><h4>அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்
</h4><p>நாள்பட்ட அழற்சியானது ஆர்த்ரிடிஸ், இதய நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுலும் இதில் உள்ள யூஜெனோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. பல ஆய்வுகள் முழு கிராம்புகளுக்குப் பதிலாக செறிவூட்டப்பட்ட கிராம்புச் சாறுகளைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அழற்சி எதிர்ப்பு டயட்டில் கிராம்பைச் சேர்ப்பது மிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9da451-e1dc-462a-be8a-a50f6ca35820/26-6a8eb8e555fb2.webp' /></p>]]></content>
            <updated>2026-08-26T09:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309"></link>
            <id>https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b39bea3-5b5a-4a14-b53f-72119e5c5430/26-6a8e8217ecf35.webp' /></p><p> </p><h2>&nbsp;திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு</h2><p>

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4f95e5-14bf-4492-b1c8-c30003582c3c/26-6a8e82173f69a.webp' /></p><p> 

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். 

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.</p><p></p><p> இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். </p><p>

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். 

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T09:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 28 பிளட் மூன் சந்திர கிரகணம்; ஜோதிட வல்லுநர்கள் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/blood-moon-lunar-eclipse-august-28-raksha-bhandan-1787733756"></link>
            <id>https://jvpnews.com/article/blood-moon-lunar-eclipse-august-28-raksha-bhandan-1787733756</id>
            <summary type="text">&amp;nbsp; 2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது.</p><p> 

இது நிலவின் 96 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பைப் பூமியின் அடர்ந்த நிழல் மூடுவதால், இந்நிகழ்வின் போது நிலவு சிவப்பு மற்றும் செம்பு நிறத்தில் தோன்றி ‘இரத்த நிலவு’ (Blood Moon) காட்சி அளிக்கும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb522de-f11c-4a05-a779-49c1e7baf1fb/26-6a8ea6fe710a9.webp' /></p><h2>இந்தியாவிலிருந்து நேரடியாகக் காண முடியாது&nbsp;</h2><p>
</p><p>

இந்திய நேரப்படி (IST) ஆகஸ்ட் 28 காலை 6:53 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12:32 மணி வரை இந்த கிரகண நிகழ்வு தொடரும்.

 குறிப்பாகக் காலை 9:43 மணி அளவில் கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் என நாசா தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p> இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதோடு நிலவு அடிவானத்திற்கு கீழே சென்றுவிடும் என்பதால், இந்தியாவிலிருந்து இதை நேரடியாகக் காண முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc12804-c608-4c24-b525-5db439448c03/26-6a8ea6ff28fd5.webp' /></p><p>

இந்தச் சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகத் தெளிவாகக் காட்சி அளிக்கும்.</p><p>

 இந்தியாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் நாசா மற்றும் சர்வதேச வானியல் அமைப்புகள் நடத்தும் இணைய நேரலைகள் (Live Streaming) மூலம் இந்த அரிய ‘பிளட் மூன்’ நிகழ்வைக் கண்டு களிக்கலாம்.</p><p></p><p>
</p><p>
மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இந்தச் சந்திர கிரகணம் இணைந்து வருவதால் பலருக்கும் ஆன்மீக சந்தேகங்கள் எழுந்துள்ளன.</p><p> 

ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தென்படாது என்பதால், பாரம்பரிய சாஸ்திர விதிகளின்படி ‘சுதக் காலம்’ (Sutak Kaal) இந்தியாவில் பொருந்தாது என்றும் ஜோதிட வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-26T08:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம்மாறும் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-astrologer-radhan-pandit-exit-tamilnadu-1787732267"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-astrologer-radhan-pandit-exit-tamilnadu-1787732267</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை என்றும் தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களின் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது. </p><p>

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் பண்டிட்டுக்கு ‘முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரி’ (OSD – Political) என்ற அரசாங்கப் பதவி வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57befc3e-cd09-4814-9669-d2e62643df30/26-6a8ea12cbd293.webp' /></p><h2>தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள்&nbsp;</h2><p>சுற்றுலாத் தலங்களை ஆராய்தல்

இருப்பினும், ஒரு மதச்சார்பற்ற ஆட்சியில் அரசாங்க நிர்வாகப் பதவிக்கு ஜோதிடரை நியமிப்பது அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல என எதிர்க்கட்சிகள் மற்றும் தவெகவின் கூட்டணித் தோழமை அமைப்புகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.</p><p></p><p> </p><p>

சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் எழுந்த இந்த விமர்சனங்கள் முதலமைச்சர் விஜய் தரப்பிற்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியதால், நியமிக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே அந்தப் பதவி நியமன அரசாணைத் திரும்பப் பெறப்பட்டது.
</p><p>
அரசுப் பதவி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டிற்குச் சென்ற ரத்தன் பண்டிட், அண்மையில் வெளியிட்ட வீடியோ நேர்காணலில் தனது அதிருப்தியைப் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p>

 அதில், “தான் 2026 தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைவார் என்றும், பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றும் முன்கூட்டியே சரியாகக் கணித்ததாக” உரிமை கோரியுள்ளார். </p><p>மேலும், பிற மாநிலங்களின் முதலமைச்சர்களும் வெளிநாட்டுப் பிரதமர்களும் தனது ஆலோசனைகளைக் கேட்கும் போது, தமிழகத்தில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டது தனக்கு வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலகல் சர்ச்சை காரணமாகவே தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக ரத்தன் பண்டிட் விளக்கியுள்ளார்.</p><p> 

இந்த விவகாரம் தவெக அரசு அமைந்த தொடக்கக் காலத்திலேயே பெரிய அரசியல் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், ரத்தன் பண்டிட்டின் இந்தத் திடீர் முடிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T08:46:15+00:00</updated>
        </entry>
    </feed>
