<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-27T03:34:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் ; சமூக ஊடக மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370"></link>
            <id>https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519a6fd3-5bf4-4469-9ff2-f690c6625def/26-6a8fab346905a.webp' /></p><p>மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவ்விடயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்த அபாயகரமான நிலைமை குறித்துப் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T03:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பெரும் அனர்த்தம் ; 150 பேரை பலியான துயரம் ; நிலைக்குலைந்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951</id>
            <summary type="text">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய <a href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888" target="_blank">திடீர் வெள்ளப்பெருக்கின்</a> காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412b1069-336d-45b5-a086-1e78aa2487ef/26-6a8f8a516d5b2.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்தில் வக்ரமடையும் சனி; இவர்களுக்கு இனி ஜாக்பாட்.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
</p><p style="text-align: justify; ">கும்ப ராசியின் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். இந்த சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதுடன், மீன ராசியிலும் வக்ரமாக சஞ்சரிக்கிறார். இந்த கிரக அமைப்பு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12fe88a5-6fb1-4eb9-a262-43714c359520/26-6a8f933aae28b.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்பாராத அதிர்ஷ்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திர கிரகண நாளில் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் படைப்பாற்றலும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படுவதுடன், புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் அமையும். உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு அல்லது நிதி நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மீனம்: </b>சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கும் உயர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு, அந்த உறவு மேலும் ஆழமடையும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p>]]></content>
            <updated>2026-08-27T01:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankans-in-india-can-return-home-without-fear-1787789739"></link>
            <id>https://jvpnews.com/article/lankans-in-india-can-return-home-without-fear-1787789739</id>
            <summary type="text">இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed95ade7-9bfc-4f26-a4ec-1bc8d6ffd3a2/26-6a8f841e5c6c5.webp' /></p><h2 style="text-align: justify; ">அமைச்சரவையில் தீர்மானம்</h2><p style="text-align: justify; ">&nbsp;யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-08-27T00:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள் ; இதை முயற்சி பண்ணி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easy-ways-to-reduce-belly-fat-1787786913"></link>
            <id>https://jvpnews.com/article/easy-ways-to-reduce-belly-fat-1787786913</id>
            <summary type="text">ஆண்களுக்கு தொப்பை&amp;nbsp; தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.அதில் சொட்டையை தடுக்க முடியாவிட்டாலும் தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆண்களுக்கு தொப்பை&nbsp; தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.அதில் சொட்டையை தடுக்க முடியாவிட்டாலும் தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை குறைக்க சுலபமான சில வழிகளை பார்க்கலாம்:</p><p style="text-align: justify; ">நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் அதிக அளவில் சேரும்போது அது உடலின் வயிற்றுப் பகுதியில் தங்கிவிடும். அதைத்தான் தொப்பை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்படி உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து தொப்பையாக மாறுவது உடம்பில் பல பிரச்சனைகளையும் உருவாக்கும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693831eb-6804-40a5-a21a-3db0968ff391/26-6a8f76a323e64.webp' /></p><h2 style="text-align: justify; ">சுலபமான வழிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இரவு உணவில் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும். ஒன்று குறைவாக சாப்பிடுவது மற்றொன்று அதிக நேரம் தவிர்த்து சாப்பிடுவது. </p><p style="text-align: justify; ">அதாவது, இரவு உணவை முடிந்த வரை ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு 9:00 மணிக்கு தூங்க செல்லலாம்.. இரவு உணவுக்கு தூங்குவதற்கும் இடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருந்தால் அது நல்லது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c78ca55-16c7-4c97-8f52-2740a6606d2f/26-6a8f76a3d4037.webp' /></p><p style="text-align: justify; ">அதேபோல், பரோட்டோ போன்ற கடினமான உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இரவு உணவுக்கு பின் காலாற சிறிது தூரம் நடை பயிற்சி செய்யலாம்
. </p><p style="text-align: justify; ">ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்ய முடியாது என்றால் வீட்டிலேயே சில எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம்.</p><p style="text-align: justify; ">தூக்கத்துக்கும் தொப்பைக்கும் தொடர்பு உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. </p><p style="text-align: justify; ">அதேபோல் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.. தூங்கும் நேரம் குறைந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> குறிப்பாக இரவில் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p style="text-align: justify; ">அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு நார்ச்சத்து, இரும்பு சத்து, புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">குறிப்பாக நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.. அதேபோல் சமையலில் ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான்..
</p><p style="text-align: justify; ">
நிறைய தண்ணீர் குடிப்பது, சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, டீ, காபியை குறைப்பது, உணவில் உப்பை குறைப்பது ஆகியவவை நல்ல பலன்களை கொடுக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T23:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் காத்திருக்கும் ஆபத்து ; பெண்கள் குழந்தைகள் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672"></link>
            <id>https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்யும் இணையவழி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு&nbsp; தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் இந்த நிலைமை தொடர்பில் பயனர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e2323b-c8ed-44d7-ac7d-30c014c6013a/26-6a8f66122aafb.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சமூக ஊடகக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, தமது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இவ்வாறு பகிர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனவே, குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலிருந்தபடியே இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறான இணையவழி மோசடிக்கு இலக்காகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது அவதானிக்கப்பட்டால், அவர்களை உளவியல் மற்றும் சமூக ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முழுமையான கவனம் செலுத்தி வருவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T22:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414"></link>
            <id>https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பருடன் மோதி படுகாயமடைந்தார்.</p><p style="text-align: justify; "> கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d6de36-296a-4f67-9ec1-c7fedc2cc3b5/26-6a8f61280c5df.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ் விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்.</p><p style="text-align: justify; ">
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T21:57:01+00:00</updated>
        </entry>
    </feed>
