<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T14:36:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசா; கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424"></link>
            <id>https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.
</p><p>


இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:



மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61711919-6d55-4380-bae3-c21cd4fddb69/26-6a60c39a0e278.webp' /></p><p></p><p>
</p><p>


விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.</p><p>



பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.
</p><p>


எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகனுக்கு தடுப்பு காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033"></link>
            <id>https://jvpnews.com/article/preventive-detention-for-shantha-bandara-son-1784725033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன நாட்டுப் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க<a href="https://jvpnews.com/article/200-million-robbery-shantha-bandara-son-in-court-1784698325" target="_blank"> அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள்</a> தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சாந்த பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebb5f2f-752a-4050-9b69-6b1aa76dd639/26-6a60be2b78755.webp' /></p><p></p><p>

இன்னிலையில் சந்தேக நபரை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதோ 22 .... ஆனால் 14 திருமணங்கள்; கல்யாண ராணியால் அதிர்ந்த பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992"></link>
            <id>https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bda548-fe67-46f0-a47b-1c16e81d376c/26-6a60ba1aec411.webp' /></p><p></p><h2>முதல்&nbsp; திருமணம் முறிந்ததால்&nbsp; தொடர் திருமணம்</h2><p>அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.</p><p></p><p> </p><p>

அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார். </p><p>

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a066d2-a33b-41ef-aa13-61db62ee5c04/26-6a60ba1ba0ee8.webp' /></p><p> 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். </p><p>

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். 

திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.</p><p></p><p> 

 ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.</p><p>மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.</p><p>இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.</p><p></p><h3>வெப் சீரியஸ்களைப் பார்த்து வந்த யோசனை</h3><p> </p><p>

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. </p><p>

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். </p><p>

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். </p><p>விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த&nbsp; &nbsp;பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76392451-15c0-4069-9ae1-179e8a5a9d37/26-6a60856b7c687.webp' /></p><p></p><h2>இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது</h2><p>
</p><p>


 இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

 அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புதிய அடிக்கல் நாட்டு நிகழ்வு; அவிழ்த்து விடப்பட்ட கதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-foundation-ceremony-kanniya-hot-springs-area-1784712587"></link>
            <id>https://jvpnews.com/article/new-foundation-ceremony-kanniya-hot-springs-area-1784712587</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.
</p><p>


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42899798-77da-4189-8d66-0cbd157f7b82/26-6a608d8cb83f0.webp' /></p><h2>&nbsp;கட்டுமானப் பணிகள்</h2><p>
</p><p>
வரலாற்றுத் தகவல்களின்படி, சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியின் மூலம் தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டதாகவும், பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


இதற்கிடையில், இக்காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 2002ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முயன்ற போது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் காணி உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e85176-75b9-434e-99cd-b7333c53ec06/26-6a60920f0b765.webp' /></p><p>

பராமரிப்பின்றி இக்கோயில் அழிவடைந்த நிலையில், புதிய ஆலய அமைப்புப் பணிகள் காணி உரிமையாளரால் தொடங்கப்பட்டபோதிலும், அங்கு புராதன தொல்பொருள் படிவங்கள் உள்ளன என்ற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உரிமையாளர் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



நிகழ்வில் பேசிய திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா, அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்துப் புராதன கட்டுமானத்தைப் பாதுகாப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றார்.



மேலும் அவர் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2efe208-421f-420b-abe3-e1cd2dc9a8b9/26-6a60920fe41cc.webp' /></p><p> "கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல; இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும். இதற்குச் சிலர் இன, மத சாயங்களைப் பூச நினைக்கின்றனர்.</p><p></p><p>



தற்போதைய 100 தொல்லியல் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவிலை பிரதேச செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள சோழர்கால ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5401c583-7893-427d-8f86-d82cd1cd9b1e/26-6a609210bd063.webp' /></p><p>



எனவே, தொல்லியல் திணைக்களம் மத, இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.</p><p>



நேற்றைய நிகழ்வில் மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மதகுரு மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசாசனம் வழங்கினார்.</p>]]></content>
            <updated>2026-07-22T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/healthcare-worker-was-sentenced-to-death-by-court-1784720247"></link>
            <id>https://jvpnews.com/article/healthcare-worker-was-sentenced-to-death-by-court-1784720247</id>
            <summary type="text">கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.</p><p></p><p> 

தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a7d325-6bca-41d2-a5cd-81ba270c272e/26-6a60ab7908ffd.webp' /></p><p>இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த, சுகாதார திணைக்களத்தில் பணிபுரிந்த டபிள்யூ.டி.தேவாநந்த என்ற சுகாதார உதவி ஊழியராவார். </p><p>

2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் எப்பாவல, 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல என்ற பி.மகிந்த குமார என்பவரால் கொலை செய்ததாக, இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. </p><p>

தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபர் சார்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரான அதேவேளை, பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா ஆஜரானார். </p><p>

எப்பாவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ்.அபேசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் சார்ஜன்ட் (61421) விஜேரத்ன விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். </p><p>

அத்துடன், அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் வழக்கு ஒருங்கிணைப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச வடிமுன பொலிஸ் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார். </p><p>

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அன்றைய தடயவியல் மருத்துவ அதிகாரி எச்.ஏ.கருணாதிலக்க உள்ளிட்ட சிலர் இவ்வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132"></link>
            <id>https://jvpnews.com/article/a-hawk-tried-to-abduct-the-child-matara-1784712132</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.</p><p>

கடந்த 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த எதிர்பாராத சம்பவத்தில் கீறல் காயங்களுக்குள்ளான அந்தச் சிறுவன், உடனடியாக மத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec91b66-576a-4472-af53-51dc687f7cc1/26-6a608bc650dfc.webp' /></p><h2>&nbsp;சிறுவனின் திடீர் அலறல் சத்தம்</h2><p>

வீட்டுத் தோட்டத்தில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் திடீர் அலறல் சத்தம் கேட்டதும், அவனது தந்தை உடனடியாக வெளியே ஓடிவந்தார்.

அப்போது ஒரு பெரிய கழுகு அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டு மேலே பறக்க முயன்றதைக் கண்டார்.</p><p></p><p> உடனடியாகச் செயல்பட்ட தந்தை, அந்தக் கழுகை அடித்துச் சிறுவனை அதன் பிடியிலிருந்து விடுவித்தார்.

 பின்னர் சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இச்சம்பவம் குறித்து மாத்தறை பொது மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><p> </p><p>கழுகின் தாக்குதலால் அச்சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்டார். மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து முதலுதவி மற்றும் மருந்துகளைப் பெற்ற பிறகு, சிறுவன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தாத்தா, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் தனது மகன் உடனடியாக வெளியே ஓடிவந்து செயல்பட்டதாலேயே அவனது உயிர் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டதாகக் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 தனது வாழ்நாளில் இது போன்ற பெரிய கழுகை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும், இச்சம்பவத்திற்குப் பிறகும் அச்சிறுவன் இன்னும் கடும் பயத்துடனும் காய்ச்சல் போன்ற நிலையிலும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-carrying-religious-sisters-meets-accident-1784720168"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-carrying-religious-sisters-meets-accident-1784720168</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.
</p><p>
 

 விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3d6617-f88b-4d8a-b530-7ab54f37dca8/26-6a60ab29e0957.webp' />]</p><p>
</p><p>
 

 ஒரு அருட்சகோதரி பலத்த காயமடைந்துள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

 

மன்னாரைச் சேர்ந்த 'மாசற்ற அமலோற்பவ அன்னை' சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் சென்ற வாகனமீ விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904"></link>
            <id>https://jvpnews.com/article/youth-bathing-in-the-sea-drowns-and-dies-1784719904</id>
            <summary type="text">கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

 உயிரிழந்தவர் களுத்துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p>
 உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வாகனப் பொறிமுறைக் (ஆட்டோமொபைல்) கற்கை நெறியைப் பயின்று வருபவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d42827a8-e7ee-451a-b24a-e2e8c7b70807/26-6a60aa2219dee.webp' /></p><p> </p><p>

அவர் நேற்று (21) பிற்பகல் களுமுல்லை தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள கடலில் குளிக்கச் சென்றபோது, நீரோட்டத்திற்கு (அலைக்கு) சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸார், உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் களுத்துத்துறை - கட்டுக்குருந்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தலைமையகப் பொலிஸார் மீலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக் குட்டிகளுக்குப் பெயரிட அருமையான வாய்ப்பு ; மக்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724"></link>
            <id>https://jvpnews.com/article/kitten-naming-contest-public-invited-1784717724</id>
            <summary type="text">எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடுவதற்காகப் பொதுமக்களுக்கான திறந்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விலங்குப் பிரியர்கள் இந்த இளம் பூனைகளுக்குச் படைப்பாற்றல் மிக்க மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38828b5d-e85e-41f0-b702-5d7a07e04e61/26-6a60a19d91775.webp' /></p><p>சிறந்த பெயர்ப் பரிந்துரைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புக் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பின்னவளை மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் (<a href="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf-FN9kem0-fBAkcS7EsdyqnOyCC6JF9xbwBCEcBQlW4-R2Wg/formResponse" target="_blank">Google Form</a>) ஊடாகத் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். </p><p>இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7, 2026 அன்று நிறைவடையவுள்ளன.
</p><p>
அரிதான மீன்பிடிப் பூனைக் குட்டிகளின் தனித்துவமான ஆளுமைக்குப் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றின் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு குடும்பங்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சூரியன் தட்டில் எலி; வாடிக்கையாளர் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258"></link>
            <id>https://jvpnews.com/article/rat-in-gobi-manchurian-dish-gujarat-food-outlet-1784718258</id>
            <summary type="text">குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p> வீடியோ இணையத்தில் வைரலாகி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உணவகத்திற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/854bbfce-6fbf-467b-89c1-d8a7098ad25a/26-6a60a3b44bcef.webp' /></p><p>&nbsp;இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில், வாடிக்கையாளர் வாங்கிய மஞ்சூரியன் தட்டில் எலி இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, உரிய உரிமம் இன்றி உணவகம் இயங்கியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T11:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது.. தவெக கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rahul-gandhi-priyanka-gandhi-arrested-tvk-condemns-1784714879"></link>
            <id>https://jvpnews.com/article/rahul-gandhi-priyanka-gandhi-arrested-tvk-condemns-1784714879</id>
            <summary type="text">&amp;nbsp; டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 
 
ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் உரிமைகள் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202a0c95-a597-44a1-b853-334d23a045c2/26-6a60968182b3e.webp' /></p><p>

 நாட்டில் ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு வருவதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களையும் அவர்களுக்குத் துணையாக நிற்பவர்களையும் ஒடுக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>
 
மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொள்ளும் நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகம் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளது. 

 
நீட் தேர்வு போராட்ட விவகாரத்தில் இத்தனை நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தபோதும் தவெக மௌனம் காத்து வந்தது.</p><p>

இந் நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T10:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-decides-to-use-presidential-residences-1784713629"></link>
            <id>https://jvpnews.com/article/government-decides-to-use-presidential-residences-1784713629</id>
            <summary type="text">நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p><p></p><p>

இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4121d515-02ff-424d-a5cf-04035a0c9897/26-6a60919ebbbd9.webp' /></p><p>2025ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எட்டு ஜனாதிபதி இல்லங்களை பராமரிப்பதற்காக 13.9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், ஜனாதிபதி இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படும் வரை அவற்றின் பராமரிப்பிற்காக அரசாங்கம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியாவில் புத்த விகாரை கட்டப்படாது ; சமூக ஊடக வதந்திக்கு குகதாசன் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buddhist-temple-built-in-kinniya-kukathasan-denies-1784711932"></link>
            <id>https://jvpnews.com/article/buddhist-temple-built-in-kinniya-kukathasan-denies-1784711932</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு பகுதியில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு பகுதியில் புத்த விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மறுத்துள்ளார்.</p><p></p><p>

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி, குறித்த பகுதியில் புத்த விகாரை உள்ளிட்ட எந்த புதிய சமயக் கட்டடமும் நிர்மாணிக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து தமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867843a0-8dfe-40b4-a9d5-5f8428e97397/26-6a608afd7d402.webp' /></p><p>மேலும், அந்தப் பகுதியில் காணப்படும் தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும், மதக் கட்டட நிர்மாணத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டதாகவும் சண்முகம் குகதாசன் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

குறிப்பாக, 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் அதனைச் சூழவுள்ள தொல்பொருள் பகுதியில் எந்த சமயக் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த வழக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் ஊடாக தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சண்முகம் குகதாசன் கூறினார்.</p><p>

இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், உண்மையான நிலைமை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-illegal-mobile-phones-1784711181"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-illegal-mobile-phones-1784711181</id>
            <summary type="text">கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 300க்கும் அதிகமான ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5028a6-eeb0-4366-a8e1-1bc6a8cb59bb/26-6a60880ed1426.webp' /></p><p>இதன்போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியானது என காவல்துறை தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-woman-dies-in-jaffna-drastic-step-1784699649</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 உரும்பிராய் வடக்கு கற்பகப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

 உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

 எனினும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a0e9d9-4173-4326-8d36-b50efa91131b/26-6a605b02d7bb5.webp' /></p><p> </p><p> இந் நிலையில் இளம் யுவதியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு ; சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sarath-weerawansa-s-remand-extended-1784710564"></link>
            <id>https://jvpnews.com/article/sarath-weerawansa-s-remand-extended-1784710564</id>
            <summary type="text">பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (22) உத்தரவிட்டார்.</p><p>
</p><p></p><p>சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவு அடுத்த விசாரணை நாளில் வழங்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf13c4a-32a8-4009-ae1c-9637bc892940/26-6a6085a5cd0d9.webp' /></p><p>சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த விடங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பிரபல வணிக வளாகத்தில் அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002"></link>
            <id>https://jvpnews.com/article/mobile-phones-seized-at-liberty-plaza-colombo-1784708002</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed39083b-e41f-42f8-90bd-61e3669375d8/26-6a607ba3d74d7.webp' /></p><p></p><p>
</p><p>
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:37:21+00:00</updated>
        </entry>
    </feed>
