<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T19:28:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429"></link>
            <id>https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8613bf7c-94a0-4e6d-89b5-d24338c95eda/26-6a67ad26d794b.webp' /></p><p> 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T19:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315"></link>
            <id>https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315</id>
            <summary type="text">கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உற்சவ நிகழ்வுகளுக்காக அதிகளவிலான பக்தர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43122887-4880-4555-8438-5540d2041982/26-6a67a4e53eb4d.webp' /></p><p>இதன் காரணமாக, குறித்த நாட்களில் அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கவுள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
போக்குவரத்தை சீராக முன்னெடுப்பதற்காக தேவையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் ; மோட்டார் வாகனத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661"></link>
            <id>https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661</id>
            <summary type="text">மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் நிர்வாகச் சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி இன்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, அதன் முதலாம் உரிமையாளர் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சேவைச் சாளர எண்களை வழங்கி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47350514-4b42-47fd-bf35-15ded23b2b79/26-6a679a87cc306.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-extension-retirement-age-judges-1785173210"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-extension-retirement-age-judges-1785173210</id>
            <summary type="text">நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (27) நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p></p><p>இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b42686e-0a5e-48d5-9f7f-1396bde51954/26-6a6794dbb3e5a.webp' /></p><p>இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் வீதம் நீடிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. </p><p>

தற்போது உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 08 நீதியரசர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளதாகவும், இந்தப் வெற்றிடங்களை நிரப்புவதை ஜனாதிபதி நீண்டகாலமாகத் தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரான எம்.பி. அர்ச்சுனா ; பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-appears-fort-magistrate-court-release-bail-1785172738"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-appears-fort-magistrate-court-release-bail-1785172738</id>
            <summary type="text">பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p> </p><p></p><p>இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6492d-2528-41ef-bde1-90f29a85d4c6/26-6a67930425045.webp' /></p><p>அவருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. </p><p>

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகாதிருந்த நிலையிலும், அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. </p><p>

இதனடிப்படையில், கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. </p><p>

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் ; சந்தேகநபரை தேடிவரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-police-sergeant-police-searching-suspect-1785171932"></link>
            <id>https://jvpnews.com/article/attack-police-sergeant-police-searching-suspect-1785171932</id>
            <summary type="text">களுத்துறை ஹொரணை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியதாகக் கூறப்படும் நபரை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை ஹொரணை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியதாகக் கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வந்த சந்தேகநபர், வைத்தியசாலை ஊழியர்களை வசைபாடி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p> </p><h3>

பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>அந்த நேரத்தில், வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1648fe5f-0066-4e08-8ef6-4bda2bad9f0a/26-6a678fdde3596.webp' /></p><p>அதன்பின்னர், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வைத்தியசாலை பொலிஸ் சார்ஜன்ட் தலையிட்டபோது, சந்தேகநபர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இச்சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபருக்கும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட்டின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

மேலும் வைத்தியசாலையின் ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும் சந்தேகநபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் காரில் தப்பிச் சென்றுள்ள நிலையில், அந்த நேரத்தில் வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபர் தப்பிச் சென்ற காரின் இலக்கத்தைப் புகைப்படம் எடுத்துள்ளதால், விசாரணைகளுக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். </p><p>

சம்பவம் நடந்த போது சந்தேகநபரின் தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, ஹொரணை பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து வீரர்களின் சம்பளமும் சந்தை மதிப்பும் ஒன்றல்ல ; பலரை குழம்பும் விடயம் இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/football-players-salaries-market-value-not-same-1785171101"></link>
            <id>https://jvpnews.com/article/football-players-salaries-market-value-not-same-1785171101</id>
            <summary type="text">கால்பந்து உலகில் வீரர்களின் பெயர்களுடன் கோடிக்கணக்கான யூரோக்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இருப்பினும், அந்தத் தொகைகள் அனைத்தும் வீரர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து உலகில் வீரர்களின் பெயர்களுடன் கோடிக்கணக்கான யூரோக்கள் தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இருப்பினும், அந்தத் தொகைகள் அனைத்தும் வீரர்களின் சம்பளம் என்று பலரும் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.</p><p></p><p> உண்மையில், சம்பளம் (Salary) மற்றும் சந்தை மதிப்பு (Market Value) என்பது முற்றிலும் வேறுபட்ட இரண்டு பொருளாதாரக் கருத்துகளாகும்.

ஒரு கால்பந்து வீரர் தனது கிளப்புடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாராந்திரம் அல்லது மாதாந்திரம் பெறும் ஊதியமே அவரது சம்பளம் ஆகும்.</p><p> இது, அவர் கிளப்புக்காக விளையாடும் சேவைக்காக வழங்கப்படும் நிரந்தர வருமானமாகும்.

அதேவேளை, சந்தை மதிப்பு என்பது ஒரு வீரரை வேறு கிளப் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அவர் தற்போதைய நிலையில் எவ்வளவு மதிப்புடையவர் என மதிப்பிடப்படும் கணிக்கப்பட்ட தொகையாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c56ad43-f8ab-44fd-8273-a82b9c0271bf/26-6a678c9f13286.webp' /></p><p>இந்த மதிப்பு, வீரரின் வயது, ஆட்டத்திறன், தற்போதைய செயல்திறன், எதிர்கால வளர்ச்சி, ஒப்பந்தத்தின் மீதமுள்ள காலம் மற்றும் உலகளாவிய சந்தைத் தேவை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதனை எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லாரியை இயக்கி ஒருவர் மாதந்தோறும் பெறும் வருமானம், கால்பந்து வீரரின் சம்பளத்திற்கு ஒப்பானதாகும். </p><p>ஆனால் அதே லாரியை அதன் வயது, நிலை மற்றும் சந்தைத் தேவையைப் பொறுத்து விற்பனை செய்தால் கிடைக்கும் விலை, அதன் சந்தை மதிப்பாகும். </p><p>இதே கொள்கையே கால்பந்து வீரர்களுக்கும் பொருந்துகிறது.

எனவே, ஒரு வீரரின் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதால் அவர் அதே அளவிலான சம்பளம் பெறுகிறார் என்று கருத முடியாது. </p><p>அதேபோல், அதிக சம்பளம் பெறும் அனைத்து வீரர்களும் அதிக சந்தை மதிப்பைக் கொண்டிருப்பார்கள் என்றும் கூற முடியாது. </p><p>இந்த இரு மதிப்புகளும் வெவ்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.
</p><p>
தற்போது உலகின் அதிக சந்தை மதிப்புடைய முதல் 10 கால்பந்து வீரர்கள்</p><p>
எர்லிங் ஹாலண்ட் – €220 மில்லியன்
</p><p>லமின் யமால் – €220 மில்லியன்
</p><p>கிலியன் எம்பாப்பே – €200 மில்லியன்
</p><p>மைக்கேல் ஒலிசே – €170 மில்லியன்</p><p>
ஜூட் பெல்லிங்கம் – €160 மில்லியன்
</p><p>பெட்ரி – €150 மில்லியன்
</p><p>வினிசியஸ் ஜூனியர் – €150 மில்லியன்
</p><p>புகாயோ சாகா – €140 மில்லியன்
</p><p>ஃப்ளோரியன் விர்ட்ஸ் – €130 மில்லியன்
</p><p>ஜமால் முசியாலா – €130 மில்லியன்</p><p>

கால்பந்து தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்ளும் ரசிகர்கள், வீரர்களின் சம்பளம் மற்றும் சந்தை மதிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த அடிப்படை வேறுபாட்டை அறிந்திருப்பது அவசியமானதாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909"></link>
            <id>https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909</id>
            <summary type="text">மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p> 

இதன் காரணமாகத் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது கடினமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள், மதுவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb0d68a-3087-4ee5-bb48-7889d368b96c/26-6a6787f68a88b.webp' /></p><p>மதுபான உற்பத்தியின் போதும் சேமிப்புச் செயற்பாடுகளின் போதும் மதுசாரம் ஆவியாதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>

குறிப்பாக, போத்தல்களில் அடைக்கும் இயந்திரங்களுக்குச் மதுசாரத்தைச் செலுத்தும் போதும், நவீன இயந்திரங்கள் மூலம் போத்தல்களில் அடைக்கும் செயற்பாடுகளின் போதும் இவ்வாறு அதிகளவில் மதுசாரம் ஆவியாகின்றது.</p><p> 

இது தவிர, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மதுபானப் போத்தல்களைச் சமர்ப்பிக்கும் போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் மதுபானப் போத்தல் தொகுதிகளும் இந்த வீணடிப்புச் சதவீதத்தின் கீழேயே கணக்கிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

மதுவரித் திணைக்களத்தினால் இலக்கம் 991 உடைய மதுவரி அறிவித்தல் மூலம் கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி இந்த புதிய திருத்தப்பட்ட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தென்னை மற்றும் பனை சாராய உற்பத்திகளின் போது ஏற்படும் வீணடிப்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு முன்னர் மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த இலக்கம் 151 உடைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தை, திருத்தப்பட்ட 991ஆம் இலக்க அறிவித்தல் மூலம் இவ்வாறு குறைத்தது ஒரு தன்னிச்சையான செயலாகும் என மதுபான உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>

எனவே, இந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தைக் குறைப்பதற்கு முன்னர், இந்த வீணடிப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன, எதன் அடிப்படையில் நிகழ்கின்றன மற்றும் அதற்குப் பங்களிக்கும் அறிவியல் காரணிகள் யாவை என்பது குறித்து சரியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான பரிசோதனையை மேற்கொள்வது அத்தியாவசியமானது என உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை; அதிர்ச்சித் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&amp;nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவ்நீத் கௌருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beba2bd0-31f8-4778-b077-8df3575443a0/26-6a6750ff4e597.webp' />]</p><h2>திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



இந் நிலையில் , பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் ஒரு நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். </p><p>சிறிது தூரம் சென்றதும் அப்பெண்ணிடம் அந்த நபர் ஏதோ பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.</p><p></p><p> </p><p>



இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த ஷரன்ஜித் சிங் (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>


 இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும் , இந்த கொலைக்கான பின்னணி மற்றும் அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
</p><p></p><p>


 சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கனடா பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து புதிய அரசாங்கத்தில் 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668"></link>
            <id>https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668</id>
            <summary type="text">இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>



அவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f708fd3-44f9-4a40-ba49-0dbc81752192/26-6a67543dca77a.webp' /></p><h2>இலங்கைத் தமிழர் வம்சாவளி&nbsp; உமா குமரன்</h2><p> இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகச் சமத்துவம் சார்ந்த முக்கியப் பணிகளை மேற்கொள்வார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df3dafa-eac9-4983-937f-d8a68f8f8356/26-6a67543ead3fd.webp' /></p><p>



தொழிலாளர் கட்சியின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரியாக ஹர்பிரீத் உப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும்கட்சியின் விதிமுறைகளை ஒருங்கிணைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சரியாகச் வழிநடத்தும் பொறுப்புகளை செய்வாரென கூறப்படுகின்றது.</p><p> 



இந் நிலையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கியத் துறைகளிலும், வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பத் துறையான AI அமைச்சின் முதல் அமைச்சராகவும் இந்திய வம்சாவளியினர் பொறுப்பேற்றிருப்பது உலகளவில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.</p><p></p><p>அதேவேளை இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரும், வெளியுறவுத் துறையில் இளைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருமான இந்து மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் ஆகியோருடன் சேர்த்து, தற்போது அமைச்சரவையின் முன்னவரிசையில் (front bench) இரண்டு இந்து மற்றும் இரண்டு சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727"></link>
            <id>https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை&nbsp; இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2070e472-e98c-4955-9251-8e30f1abe3f1/26-6a6748c094a34.webp' /></p><h2>&nbsp;கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.</p><p>&nbsp;இந் நிலையில்&nbsp; அரசியல் கூட்டங்களில் பலியாவோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p></p><p>

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்கள் செல்லாது எனவும் அவற்றை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்காள் குரிப்பிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:29:02+00:00</updated>
        </entry>
    </feed>
