<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T13:33:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் புகையிரதத்தில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை; 5 லட்சம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-bottles-inflated-prices-train-5-lak-fine-1785493922"></link>
            <id>https://jvpnews.com/article/water-bottles-inflated-prices-train-5-lak-fine-1785493922</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாவை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தண்டப்பணமாக விதித்துள்ளது. </p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்டப் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1340eee3-25cc-40ad-beed-ff0750ab101d/26-6a6c79a39581f.webp' /></p><p>
</p><h2>விசேட திடீர் சோதனை</h2><p>
கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனையின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதிகபட்ச சில்லறை விலையாக ரூ. 120 எனக் குறிப்பிடப்பட்ட 1,000 மில்லி (1 லீட்டர்) குடிநீர் போத்தல் ஒன்று, புகையிரத்தில் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
</p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 96 ஆம் இலக்க உத்தரவை மீறியதற்காகக் குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
புகையிரதங்களின் நடமாடும் சிற்றுண்டிச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகையிரத திணைக்களத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முறைப்படியாக அறிவித்துள்ளது.</p><p>

நுகர்வோர் சட்டங்களை மீறியதற்காக இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்னரும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

எதிர்காலத்திலும் குறித்த நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், மீண்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்து்ளளது.</p>]]></content>
            <updated>2026-07-31T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் ; பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752</id>
            <summary type="text">&amp;nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்து மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><p>&nbsp;பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb8df78-7a7b-42b9-bc33-bfbc8d9431bb/26-6a6c906981504.webp' /></p><h2>&nbsp;புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும்&nbsp; தாக்குதலைத் தடுக்கத் தவறியமை</h2><p>&nbsp;போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

2022 ஆம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:28:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் விவகாரம் ; பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகக் கடவத்தை பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞர், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கடவத்தை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea65810-b6fe-49fb-941d-d0cf899701f6/26-6a6c8dbe61978.webp' /></p><p>
</p><p>
தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும்&nbsp; மூவரை&nbsp; கடவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>&nbsp; சம்பவம் காதல் விவகாரம் தொடர்பான தகராறினால் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் இலங்கை பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-inflation-rose-to-7-3-percent-in-july-1785503188"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-inflation-rose-to-7-3-percent-in-july-1785503188</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாக காணப்பட்டது.
</p><p>
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்தது.

அது, 2026 ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d764f6f-b595-422a-ac05-c5460d373579/26-6a6c9dd5ddd3d.webp' />]</p><p>
</p><p>
அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 8.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

அதில் 2026 ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் சோகம்; மற்றுமொரு பழம்பெரும் பின்னணி பாடகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200</id>
            <summary type="text">&amp;nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218f6766-e949-4ee9-94be-43082b1cfa05/26-6a6c6731e253c.webp' /></p><p></p><h2>பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த ஜமுனா ராணி</h2><p>

நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p></p><p>
</p><p>
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-07-31T11:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528"></link>
            <id>https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528</id>
            <summary type="text">&amp;nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



அதன்படி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c1535d-03aa-48c3-b7b4-eaa794f9ff70/26-6a6c83d23fcab.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் ; நீதிமன்றத்திற்கு வந்தடைந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372"></link>
            <id>https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தனர்.</p><p></p><h3>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்&nbsp;</h3><p>

உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தபோதிலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்புக்காகவே வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57fa12a-cc60-4983-a9ad-acb6900a3008/26-6a6c8335a4793.webp' /></p><p>

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அறிவிக்கப்படவுள்ளது.</p><p>

குறித்த இருவருக்கும் எதிரான வழக்கின் விசாரணை அண்மையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972"></link>
            <id>https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972</id>
            <summary type="text">அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த ஆய்வு மையத்தின் நிறுவல், இலங்கையின் சைபர் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்த பின்னர் பதிலளிக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து விலகி, உளவுத்தகவல் அடிப்படையிலான முன்கூட்டிய அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.</p><p>

நாட்டில் டிஜிட்டல் அரச சேவைகளும் இணையவழி அரச தளங்களும் விரிவடைந்து வரும் நிலையில், 'பிஷிங்' தாக்குதல்கள், தரவுக் கசிவுகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு அமைப்புகளின் பலவீனங்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf04c8b-23f6-4cc4-bbe5-d57399831987/26-6a6c72060620e.webp' /></p><p>

தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) தற்போது மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், முன்கூட்டியே அச்சுறுத்தல்களை கண்டறிந்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் தனித்திறன் கொண்ட அமைப்பின் தேவை காரணமாகவே MATH Lab நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆய்வு மையம், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக Proactive Threat Hunting உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்கி, வலையமைப்புகளுக்குள் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை சேதம் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் திறனை வழங்கும்.</p><p>

மேலும், அரச நிறுவனங்களின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு சொத்துக்களை External Attack Surface Monitoring (EASM) தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு குறைபாடுகள், தவறான கட்டமைப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் நுழைவு வாயில்களை அடையாளம் காண்பதும் இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, தேசிய சைபர் அச்சுறுத்தல் உளவுத்தகவல் (Cyber Threat Intelligence – CTI) பகிர்வு அமைப்பின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, உரிய நேரத்தில் பகிர்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38cc5d83-7377-44a3-bdf0-9525ba2dd8ab/26-6a6c7206aeb70.webp' /></p><p>

அரச அமைப்புகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, உளவுத்தகவல் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் அச்சுறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தாக்குதலாளர்கள் அமைப்புகளுக்குள் நீண்டகாலம் நிலைத்திருப்பதைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான சைபர் தாக்குதல்கள் உருவாகுமுன் அவற்றை முறியடித்தல் ஆகியவை இந்த ஆய்வு மையத்தின் பிரதான நோக்கங்களாகும்.</p><p>MATH Lab, 250-க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒருங்கிணைந்த, உளவுத்தகவல் சார்ந்த தேசிய சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்கவுள்ளது.</p><p>

மேலும், மால்வேர் பகுப்பாய்வு மற்றும் சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் துறைகளில் உள்நாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், சிக்கலான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, இலங்கையின் சுயாதீன சைபர் திறன்களை வலுப்படுத்தும் என்றும் இலங்கை CERT தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், அரசின் டிஜிட்டல் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான நீண்டகால முதலீடாக இந்த ஆய்வு மையம் அமையும் எனவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசின் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை CERT குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T10:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571"></link>
            <id>https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p>

பிணை நிபந்தனைகளாக தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன. </p><p>எனினும், பிணை நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d94f28-4ca7-4878-93a9-8fd2eaf58e63/26-6a6c6c8d18919.webp' /></p><p>மேலும், வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகியோருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
</p><p>
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, "துர்கா" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதலாளர், கொழும்பு இராணுவத் தலைமையக நுழைவாயிலுக்கு அருகே தாக்குதல் நடத்தியிருந்தார். </p><p>இந்தத் தாக்குதலில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சார்ஜென்ட் ஒருவரும், மூன்று கொமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு மேலாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்குகளும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
</p><p>
பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தொடர்பான வழக்கில் பிணை மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660"></link>
            <id>https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை இராணுவத்தின் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார். </p><p> 

இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f54639b-71ee-462f-8472-b209b1a98e28/26-6a6c6ce6864bb.webp' /></p><p>
</p><p>
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.</p><p></p><p>
</p><p>
இப்பதவியை ஏற்கும் முன்னர் சிரேஷ்ட அதிகாரி பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தற்போதைய படைத் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-cricketer-mohammed-shami-career-over-1785489768"></link>
            <id>https://jvpnews.com/article/indian-cricketer-mohammed-shami-career-over-1785489768</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை அணிக்கு எதிராக ஓகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை அணிக்கு எதிராக ஓகஸ்ட் 15-ஆம் திகதி தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
</p><p>
இந்த நிலையில், முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.



2023 ஒருநாள் உலகக்கிண்ணத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஷமி, கடைசியாக 2025 சாம்பியன்ஸ் தொடரிலும், பெப்ரவரி 2025-இல் இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடரிலும் விளையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea76ac72-6266-46f9-9a1e-4b7d3a6412d0/26-6a6c696a1fdde.webp' /></p><p> </p><p>இருப்பினும், அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகின்றன.



நீண்டகால காயத்தில் இருந்து மீண்டு, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய போதிலும் அவருக்குத் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.</p><p>



 தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T09:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டியில் 20 அடி மண்மேடு சரிந்து தொழிலாளி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/worker-seriously-injured-in-landslide-in-kandy-1785488700"></link>
            <id>https://jvpnews.com/article/worker-seriously-injured-in-landslide-in-kandy-1785488700</id>
            <summary type="text">கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.</p><p></p><p>

 

இதில் பலத்த காயமடைந்த அவர் இன்று (31) நண்பகல் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95c2399-122e-4036-ba37-ac215b1b14ae/26-6a6c653e5f4be.webp' /></p><p>இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு எதிர்பாராதவிதமாக இவர் மீது சரிந்து விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p>

 

விபத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகளும் சக ஊழியர்களும் மண்ணுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

வைத்தியசாலையில் அனுமதித்த சமயத்திலும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனி; நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rice-and-sugar-in-beer-production-court-order-1785488516"></link>
            <id>https://jvpnews.com/article/rice-and-sugar-in-beer-production-court-order-1785488516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பீர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பீர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும் ஒரு நீதிப்பேராணை மனுவின் விசாரணை அக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவே அக்டோபர் 2 ஆம் திகதியன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3edf3-6f6f-4850-8910-8965275eded7/26-6a6c6485ceab8.webp' /></p><p>
</p><h2>மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய&nbsp; &nbsp;திகதி</h2><p>
நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டத்துறைத் தலைவர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><p>

அரிசி உற்பத்திக்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து கணிசமான மானியங்களை வழங்கி வருகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், பீர் உற்பத்தி போன்ற வணிகத் தொழில்களுக்கு அரிசியைத் திசைதிருப்புவது தேசியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான நாட்டின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
</p><p>
அதன்படி, பீர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து, மதுவரி ஆணையர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு; 17 வயது மாமா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846"></link>
            <id>https://jvpnews.com/article/7-year-old-girl-assaulted-in-jaffna-uncle-arrested-1785473846</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 17 வயது மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

சிறுமியை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற மாமா, மீன் காட்டுவதாக கூறி, ஆட்களற்ற பற்றைக்குள் அழைத்து சென்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4131ca4-e0c6-4ac4-8316-f3fc0a164291/26-6a6c2b37b6831.webp' /></p><p></p><p>
</p><p>
சிறுமி இது பற்றி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T08:50:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-rescued-after-23-years-bonded-labour-1785487803"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-rescued-after-23-years-bonded-labour-1785487803</id>
            <summary type="text">&amp;nbsp; சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் , இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருந்த ஒருவர், இறுதியாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் , இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருந்த ஒருவர், இறுதியாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் பூமலைப்பட்டி அணைக்களம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியருக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் பிரகாஷ், கடந்த 2003-ஆம் ஆண்டு பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeeac759-95c1-4104-8c84-b280c132fa6b/26-6a6c61bd366bd.webp' /></p><h2>இறந்துவிட்டதாகக் கருதிய மகன்&nbsp;</h2><p> அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி, பத்திரிகையாளர் ஒருவர் சுந்தரியைக் கண்டறிந்து, அவரது மகன் பிரகாஷ் பஞ்சாபில் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
இறந்துவிட்டதாகக் கருதிய மகன் உயிருடன் இருப்பதை அறிந்து நெகிழ்ந்த சுந்தரி, பிரகாஷைக் கோயம்புத்தூருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரகாஷின் சகோதரர் பிரபுவும் உறவினர்களும் உடனடியாக பஞ்சாப் சென்று பிரகாஷை மீட்டு அழைத்து வந்தனர்.
</p><p>
இந் நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைப் பார்த்த தாய் சுந்தரி, கண்ணீ ர்விட்டு&nbsp; அழுத&nbsp; காணொளி சமூகவலைத்தளங்க்களில்&nbsp; &nbsp;வரலாகி வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T08:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறுவன இரகசியங்களை வெளிப்படுத்திய ஊழியருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/employee-who-revealed-production-secrets-faces-1785487126"></link>
            <id>https://jvpnews.com/article/employee-who-revealed-production-secrets-faces-1785487126</id>
            <summary type="text">கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான &quot;உற்பத்தி இரகசியங்கள்&quot; மற்றும் &quot;வணிக இரகசியங்களை&quot; நிதி இலாபத்திற்காக வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதிபதிகளான ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.</p><p>

 

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி தனியார் நிறுவனம் ஒன்றின் "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக இரகசியமாக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியமை தொடர்பில், அதன் ஊழியர் ஒருவருக்கு எதிராக அந்நிறுவனம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90124015-70b0-44ec-9fc0-6aa8e956d530/26-6a6c5f18e18f1.webp' /></p><p>குற்றம் சாட்டப்பட்டவர் அந்நிறுவனத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவராவார்.

 

இறப்பர் பாலைப் பயன்படுத்தி "தொழில்துறை கையுறைகளை" உற்பத்தி செய்யும் தமது நிறுவனம், அச்செயல்முறைக்குரிய தொழில்நுட்பம் மற்றும் இரகசியக் விடயங்கள் தொடர்பில் காப்புரிமையையும் பெற்றுள்ளதாகப் முறைப்பாட்டாளரான நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

எதிராளி திறமையான மற்றும் நம்பிக்கையான ஊழியராகச் செயற்பட்டதால், அத்தொழில்நுட்ப மற்றும் வணிக இரகசியங்கள் குறித்த பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 

ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பணியாற்றிய எதிராளி, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதியோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள நாளிலோ எவ்வித அறிவிப்புமின்றிப் பணியிலிருந்து விலகியதாகவும், அதே ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அதனை அறிவித்துக் கடிதம் அனுப்பியதாகவும் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
</p><p>
 

தமது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் கொரிய கையுறை உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிக இரகசியங்களை நிதி நன்மைகளுக்காக அந்த நிறுவனத்திற்கு எதிராளி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டாளர் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
</p><p>
 

எனினும், வர்த்தக மேல் நீதிமன்றத்தில் தனது தற்காப்பு வாதத்தைச் சமர்ப்பித்த எதிராளி, முறைப்பாட்டாளர் நிறுவனத்தின் உற்பத்தி அல்லது வணிக இரகசியங்கள் எதுவும் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது கல்வித் தகுதி மற்றும் பதவிக்கு அமைய இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ தனக்குத் திறன் இருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b22bcd57-588d-4b0e-9aec-33d10722ce57/26-6a6c5f183e457.webp' /></p><p>மேலும், இந்நிறுவனத்தின் எந்தவொரு இரகசியத் தகவலையும், வணிக அல்லது உற்பத்தி தொழில்நுட்ப இரகசியங்களையும் தான் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
</p><p>
 

அதன்படி, கையுறை உற்பத்தி இரகசியங்கள் மற்றும் வணிக இரகசியங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதை நிரூபிக்க முறைப்பாட்டாளர் நிறுவனம் தவறிவிட்டது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
</p><p>
 

எதிராளியின் கல்விப் பின்னணியைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம், அறிவு மற்றும் வணிக இரகசியங்களைப் புரிந்துகொள்ளவோ அல்லது வேறு தரப்பினருக்கு வழங்கவோ அவருக்கு இயலுமை இல்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.</p><p>

 

பின்னர், வர்த்தக மேல் நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியடையாத முறைப்பாட்டாளர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
</p><p>
 

அதனை விசாரணை செய்த பின்னர், நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் தமது தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன:

 

"வர்த்தக மேல் நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை மேல் நீதிமன்ற நீதிபதி சரிவர பகுப்பாய்வு செய்யவில்லை. </p><p>சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம், எதிராளி பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்நிறுவனத்தின் உற்பத்தி, வணிக இரகசியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தகவல்களை நிதி நன்மைக்காக மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது. </p><p>அதற்கமைய, மனுதாரர் நிறுவனத்திற்குரிய காப்புரிமையின் படி இவ்வாறான உணர்வுப்பூர்வமான தகவல்களை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதையோ அல்லது சுரண்டுவதையோ தடுத்து எதிராளிக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கத் தீர்மானிக்கிறேன்," என உத்தரவிட்டார்.
</p><p>
 

மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 50 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படுவதாகவும், அதற்கமைய எதிராளி 50 மில்லியன் ரூபாய் தொகையையும் வழக்குக் கட்டணத்தையும் மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, 2019.03.29 அன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T08:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 தங்க சங்கிலி மற்றும் 10 வைர மோதிரங்களை திருடிய எலி; CCTV இல் பதிவான காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rat-stole-two-gold-chains-and-ten-diamond-rings-1785485440"></link>
            <id>https://jvpnews.com/article/a-rat-stole-two-gold-chains-and-ten-diamond-rings-1785485440</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும்&nbsp; எலி ஒன்று கொள்ளையிட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகையகத்தின் பூட்டுகள் உடைக்கப்படாததுடன், நகையகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் ஊழியர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c41bdc6-2811-4279-a980-86a22c36306e/26-6a6c593ed4fc5.webp' /></p><h2>ஊழியர்கள் மீது சந்தேகம்</h2><p>

இதையடுத்து, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, இரவு நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த எலி ஒன்று, வைர மோதிரங்களையும் தங்கச் சங்கிலிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து, மர அலுமாரிகளும் அவற்றின் பின்புறப் பகுதிகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சுமார் 13 மணி நேர தேடுதலின் பின்னர், மரப் பலகையின் பின்புறத்தில் இருந்த துளையொன்றிலிருந்து காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்கப்பட்ட நகைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விலைப் பட்டியல்கள் மட்டுமே சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மீட்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகையக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T08:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-criticized-president-anura-and-govt-1785482654"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-criticized-president-anura-and-govt-1785482654</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுரகுமாரவையும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுரகுமாரவையும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு இன்று (31) மேற்கொண்ட நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272cb955-ef53-490a-9707-fc0bf08ad803/26-6a6c4d9fdf197.webp' /></p><h2>சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரி</h2><p>
</p><p>
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் விளம்பரங்கள் குறித்த விசாரணை, பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><p>

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய அதிகாரி, எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் ஆவார்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரி இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக மாணவர் குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை ; பெற்றோர் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-shocked-cruelty-inflicted-on-the-student-1785483292"></link>
            <id>https://jvpnews.com/article/parents-shocked-cruelty-inflicted-on-the-student-1785483292</id>
            <summary type="text">இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதே வகுப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருவிட்ட பொலிஸாரால் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b26883ff-0f0b-4236-ab8d-2eaf698d01f0/26-6a6c501df1b18.webp' /></p><p>இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்கள் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> மேலும், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருவிட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர்.
</p><p>
பொலிஸ் விசாரணைகளில், கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் குறித்த மாணவிக்கு எதிராக தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனைய மூன்று மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:35:05+00:00</updated>
        </entry>
    </feed>
