<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-31T06:11:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்&nbsp;தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1ef7ed-572c-47b2-a399-4305c88c2858/26-6a95154d3e28b.webp' /></p><h2>&nbsp;பாலியல் வன்புணர்வு</h2><p>நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மறுநாள் சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பமுனுகம கடலில் மூழ்கி பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-and-two-girls-drown-sea-at-pamunugama-1788153303"></link>
            <id>https://jvpnews.com/article/woman-and-two-girls-drown-sea-at-pamunugama-1788153303</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 35 வயது பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 35 வயது பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 வயது சிறுவன் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa1ce0e-a265-4b4c-a8fd-eb737c3b63c2/26-6a950dd93e964.webp' /></p><p>
</p><p>


காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



அதன்படி, 35 வயது பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமராக மாட்டார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-will-not-become-pm-vaiko-1788152530"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-will-not-become-pm-vaiko-1788152530</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



திருநெல்வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4537423-233c-4040-be82-c2fe94db92b2/26-6a950ad3c5a3e.webp' /></p><p>
</p><p>


அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்குமா? இன்று தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bakery-product-prices-rise-decision-1788152006"></link>
            <id>https://jvpnews.com/article/bakery-product-prices-rise-decision-1788152006</id>
            <summary type="text">&amp;nbsp; பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.



கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.</p><p>



கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ecaa86-b263-483d-a2a3-dbf59f29492c/26-6a9508c851be1.webp' /></p><h2>விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு&nbsp;</h2><p>
</p><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>



இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T04:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488"></link>
            <id>https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே நேற்று (30) உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac189a9e-b511-499a-97db-35647fef5e56/26-6a9506c2485df.webp' /></p><h2>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணி</h2><p> </p><p>

அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. </p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தமை , சக உத்தியோகத்தர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>
 சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T04:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T01:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடம்பில் கெட்ட கொழுப்பை குறைக்க இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839"></link>
            <id>https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839</id>
            <summary type="text">உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவை தான். இவை ஒரே நாளில் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக தினசரி மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தை பாழாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c8c761-d7bf-41a1-b859-4e3505509383/26-6a94d171e3ea1.webp' /></p><p>ஆனால் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சில காலை பழக்கங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கலாம். உதாரணமாக அதிக சர்க்கரை அல்லது நிறைவுற்ற கொழுப்பு கொண்ட காலை உணவைத் தேர்ந்தெடுப்பது, உடற்பயிற்சியைத் தவிர்ப்பது போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க வழிவகுத்து, நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இப்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் சில காலை பழக்கங்களைக் காண்போம். இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76913eeb-2882-455a-8341-ca9a30348ab1/26-6a94d17132950.webp' /></p><h4>காலை உணவை தவிர்ப்பது
</h4><p>காலை உணவைத் தவிர்ப்பது கெட்ட கொழுப்பு அதிகரிப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. காலை உணவை தவறாமல் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும் போது காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>அதிக கொழுப்புள்ள அல்லது பொரித்த காலை உணவை உண்பது
</h4><p>காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் எண்ணெயில் பொரித்த காலை உணவை உட்கொள்வது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க வழிவகை செய்யும். ஏனெனில் இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக அதிகரிக்கும்.</p><h4>காலையில் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பது</h4><p>
பொதுவாக காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இயற்கையாகவே அதிகரிக்கும். இந்நிலையில் காலையில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவது அல்லது பதட்டத்துடன் நாளைத் தொடங்குவது, கூடுதல் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நாள்பட்ட காலை மன அழுத்தம் அதிக LDL அளவு மற்றும் அதிகரித்த வீக்கத்திற்கு பங்களிக்கக்கூடும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>உடலுழைப்பில்லாமை</h4><p>காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, ஸ்ட்ரெட்ச்சிங் போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருந்தால், கொழுப்பைக் கட்டுப்படுத்தும் உடலின் திறனைக் கட்டுப்படுத்தும். அதுவும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவு நேர கொழுப்பு உற்பத்தியை எதிர்த்து, சீரான கொழுப்பு சுயவிவரத்தை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.</p><h4>தாமதமாக தூங்கி எழுவது
</h4><p>காலையில் தாமதமாக தூங்கி எழுவது அல்லது ஒழுங்கற்ற தூக்க முறையை மேற்கொள்வது உடலின் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பு தொகுப்பு தான் தினசரி சர்க்காடியன் தாளத்தைப் பின்பற்றுகிறது. மேலும் ஒழுங்கற்ற காலை வழக்கங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை தவறாக சீரமைக்கும். இது அதிக எல்.டி.எல் உற்பத்தி மற்றும் குறைந்த எச்.டி.எல் அளவுகளுக்கு பங்களிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆர். கூட செய்யாத சர்வாதிகாரம் ; அரசாங்கத்தை கடுமையாக சாடிய திலித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114"></link>
            <id>https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf63a42-4c35-4f20-8e56-c501e4fdc3f5/26-6a94cab34ba35.webp' /></p><p> இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே திலித் ஜயவீர மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.
</p><p>
தற்போது நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்ட சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எந்த ஜனாதிபதியும் இதுவரை மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் தெரிவித்தார்.</p><p>

மேலும், இவ்வாறான அதிகாரமிக்க அரசியல் நிலை உருவாகுவதற்கு நாட்டு மக்கள் காரணமல்ல என்றும், சுயநல அரசியல்வாதிகளே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தமது அரசியல் நடவடிக்கைகள் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டவை எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படுவது இதன் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
</p><p>
அரசியலில் குடும்பப் பின்னணி அல்லது பரம்பரை உரிமை மூலம் தலைமைத்துவம் கிடைக்கும் என்ற எண்ணம் மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
“அரசியலில் எதுவும் தந்தையின் உரிமையால் கிடைக்காது; மக்களின் அன்பின் மூலமே அரசியல் உரிமை கிடைக்கும்” எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:28:42+00:00</updated>
        </entry>
    </feed>
