<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T17:35:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம் ; விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371</id>
            <summary type="text">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீட்டில் காத்திருந்து பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028f6e34-24fe-42f7-884a-2007988cb6b9/26-6a89d8ad81610.webp' /></p><h2>&nbsp;மது போதை</h2><p>
</p><p>
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த நபர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் ஆத்திரமடைந்த மனைவி , வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது மூன்று குழந்தைகளும் நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
கணவர் உயிரிழந்த பின்னரும் மனைவி வீட்டிலேயே இருந்து, அவரது சடலத்தின் அருகில் விடிய விடிய காத்திருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p>
பொலிஸாரிடம், கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாமல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்&nbsp; தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>மேலும், வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T17:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற மூவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதலேகம பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df1a3a9-796a-4b07-bd68-9850015ebe23/26-6a89d274e310e.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த 37, 52 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் புலத்சிங்கள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோவால் 80000 மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761"></link>
            <id>https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66b6af8-8d0d-4d10-9895-6c5395845fa9/26-6a89c9de3110d.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் விநியோகம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்குமான வேலைத்திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:11:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437"></link>
            <id>https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதன்படி, பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் வழக்கம் போல் சமர்ப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a563759a-9e2b-414c-87d6-902da1493dda/26-6a89bfd72f241.webp' /></p><p>
</p><p>
 

இதற்கு முன்னர் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தற்காலிக வழிமுறையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்புளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>

 

எனவே, தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கம் போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையின் ஊடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் அடுத்தடுத்து சிக்கும் இலங்கை குற்றவாளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/criminal-bus-lalith-arrested-in-dubai-1787404704"></link>
            <id>https://jvpnews.com/article/criminal-bus-lalith-arrested-in-dubai-1787404704</id>
            <summary type="text">&amp;nbsp; துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p> 
அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f23828d-ec60-4fb5-b540-ef74a00c0e6b/26-6a89a1a1a4325.webp' /></p><h2>தொடர் கொலை...</h2><p>

ரவிந்து சங்க டி சில்வா என்ற “பூருமுனா” என்பவர் மீது, 2022-ல் ஹன்வெல்லாவில் ஒரு முஸ்லிம் தொழிலதிபரையும், 2023 செப்டம்பர் 30 அன்று ஹன்வெல்லாவின் நெலுவத்துவ பகுதியில் மற்றொரு தொழிலதிபரையும் கொலை செய்ததாகவும், 2023-ல் மன்னா ரொஷன் மற்றும் அவரது நண்பரைக் கொலை செய்ததாகவும்,</p><p> 2024-ல் ஹன்வெல்லாவில் வஜிரா நிஷாந்தா மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷனின் சகோதரர் ஒருவரைக் கொலை செய்ததாகவும், 2025 ஆகஸ்ட் 12 அன்று ஹோமகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முடுன்கொட்டுவ என்ற பானா மந்திரியைச் சுட்டுக் கொலை செய்ததாகவும்,</p><p> 2025 ஜூலை 6 அன்று கொழும்பில் உள்ள ஒரு இரவு விடுதியில் கொத்தஹேர பொட்டா மற்றும் தெமட்டகொட ருவன் ஆகியோரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு; கணவர் உயிரிழப்பு மனைவி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dispute-medicine-child-husband-dies-wife-arrested-1787403819"></link>
            <id>https://jvpnews.com/article/dispute-medicine-child-husband-dies-wife-arrested-1787403819</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவின் டெல்லியில் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நொய்டா நிறுவனத்தில் பணியாற்றி வந்த வினய் குப்தா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b7a767-c369-4a58-af2e-b6898e95d103/26-6a899e2c94456.webp' /></p><h2>&nbsp;குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம்</h2><p>

குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதையடுத்து, ரேகா தனது குடும்பத்தினரை அழைத்ததாகவும், வீட்டிற்கு வந்த அவரது இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் வினய் குப்தாவைத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
தாக்குதலைத் தடுக்க வினயின் தாயார் முயன்றபோதும், தாக்குதல் தொடர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த வினயை அயலவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

வினயின் குடும்பத்தினர், அவரது மனைவியின் உறவினர்கள் அவரைக் கழுத்தை நெரித்தும் மார்பில் தாக்கியும் இருந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p></p><p>
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட வினய் மற்றும் ரேகாவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள், சகோதரி மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், காவல்துறை விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரொயின் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-youth-found-of-heroin-1787402836"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-youth-found-of-heroin-1787402836</id>
            <summary type="text">&amp;nbsp; 2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, மெனிக்பாம் பிரதேசத்தில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b38418-00d4-40ef-bb25-8ec4b6d33e1d/26-6a899a55c24c0.webp' /></p><p>
</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p>

 எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. </p><p>

போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. </p><p>இலங்கைசுற்றுலா

குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை கொலையாளிக்கு உதவிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960</id>
            <summary type="text">&amp;nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
 

குறித்த கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479b33db-2977-40ba-bb39-031202207905/26-6a89a2a191751.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517"></link>
            <id>https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.94 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 19,945 நோயாளர்களும், கொழும்பில் 18,588 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a085291-36bc-4b70-9c6c-20a674701b89/26-6a8999172fb66.webp' /></p><p>
</p><p>


மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை; 13 ஆண்டுகளின் பின் கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794"></link>
            <id>https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794</id>
            <summary type="text">&amp;nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்.</p><p>


 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3e204f-5fa3-4a9a-a6aa-ad0fc29956df/26-6a898a8c12cf4.webp' /></p><h2>2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல்&nbsp;</h2><p> 

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p>

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.

 குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.
</p><p>
சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும், செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்பளித்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T12:34:46+00:00</updated>
        </entry>
    </feed>
