<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T01:40:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376"></link>
            <id>https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.</p><p></p><p>

கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2e62f4-5e7a-460b-93e3-b060de19af6d/26-6a9cc2c9c95ee.webp' /></p><p>எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
</p><p>
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ; நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773"></link>
            <id>https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைக் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a385d47-72e7-40b9-b47b-e237979a864c/26-6a9cc06ebde61.webp' /></p><p>

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பகவானால் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217</id>
            <summary type="text">புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433d0e59-0282-427c-b9a2-98aedaaf206c/26-6a9cbe429d23a.webp' /></p><h3>ரிஷப ராசி&nbsp;</h3><p>ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f8db758-f2d1-4aaa-8166-ad14ca553d25/26-6a9cbe43529fa.webp' /></p><h3>மிதுன ராசி</h3><p>மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5199232-5177-4d72-bc20-13a122f11bf2/26-6a9cbe440b572.webp' /></p><h3>சிம்ம ராசி</h3><p>சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86055002-ff25-47e3-8eff-890a944dd475/26-6a9cbe44b2e96.webp' /></p><h3>கன்னி ராசி</h3><p>கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80714478-9177-48bc-821a-ef9b9770d9ca/26-6a9cbe45657b1.webp' /></p><h3>விருச்சிக ராசி&nbsp;</h3><p>விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f112f3-9318-4731-8219-3f3a58e6030e/26-6a9cbe461837c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T01:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357"></link>
            <id>https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டப் பேரணியொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச இந்தப் பேரணியில் பங்கேற்று பிரதான மேடையில் மக்களிடம் உரையாற்றக்கூடும் என பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43c57d1-bfdf-4e0f-8d7a-b62fa2b65929/26-6a9cb316a86e5.webp' /></p><p>எனினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்தத் தகவல்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி ராஜபக்ச தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனுடன் இணைந்து, ஊடகங்களுடனான சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு கட்சித் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாமல் ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணியில் லிமினி ராஜபக்ச பிரதான மேடையில் உரையாற்றுவாரா என்பதுடன், எதிர்வரும் நாட்களில் அவர் தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நிலைமை தெளிவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் ருமேஷ் தரங்க வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.</p><p> </p><p></p><p>இதில் அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த திறமையை வெளிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e0c778-c110-46e2-9fd1-f87a8d325750/26-6a9c8e669fe89.webp' /></p><p>இப்போட்டியின் இரண்டாம் இடத்தை போலந்தின் டேவிட் வேக்னர் 87.47 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 116 நாட்களில் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd56e38-f01b-4744-9328-37e0e8424cea/26-6a9c5ff607762.webp' /></p><p>தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய நிலையில், “இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது; நன்றாகத் தயாராகி வரச் சொல்லுங்கள்” என உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குரல் எழுப்பியதாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். </p><p>குறிப்பாக, தவெக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உதயநிதி அமைதியாகத் தண்ணீர் அருந்திய காட்சியை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
</p><p>
மறுபுறம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் எவ்வாறு பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பதிலளிப்பாரா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,600 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f1a94-e66e-4141-a9ab-98f14983b12b/26-6a9c7bd1a4e9c.webp' /></p><p>இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக இதே சுரங்கத்திலிருந்து நேற்று முன்தினம் இரண்டு நேபாளிகள் வியத்தகு முறையில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஆற்றின் மேல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக, ஆறு நீர்வழங்கல் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440"></link>
            <id>https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440</id>
            <summary type="text">இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். 

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். </p><p>

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) வெற்றியாளருக்குரிய கிரீடத்தைச் சூட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3344c7f-033e-471b-8853-77a01dfeed30/26-6a9c80a1d72d6.webp' /></p><p>வியட்நாமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முறையே ஸ்பெயின் மற்றும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர். 

இப்போட்டித் தொடர் இம்முறை அதன் 73ஆவது பதிப்பாக நடைபெற்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T20:50:52+00:00</updated>
        </entry>
    </feed>
