<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-14T16:37:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மங்கல விளக்கேற்றலில் சர்ச்சை ; தவிசாளர் க.ஜெசீதன் மீது விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/auspicious-lamp-jaffna-criticism-directed-chairman-1789403116"></link>
            <id>https://jvpnews.com/article/auspicious-lamp-jaffna-criticism-directed-chairman-1789403116</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டுடை பகுதியில் வீதியொன்றின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e878a277-e3d1-48cb-bcdb-ca41b2bc77a5/26-6aa81fee92948.webp' /></p><p>குறித்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசீதனும் கலந்துகொண்டிருந்தார்.
</p><p>
இதன்போது இடம்பெற்ற மங்கல விளக்கேற்றும் நிகழ்வில், தவிசாளர் காலணிகளை கழற்றாமல் மங்கல விளக்கை ஏற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், அவரது செயற்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மங்கல விளக்கேற்றும் நிகழ்வுகள் பொதுவாக சமய மற்றும் கலாசார மரபுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில், இவ்வாறான நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திட்டமிட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/planned-railway-trade-union-strike-confirmed-1789402067"></link>
            <id>https://jvpnews.com/article/planned-railway-trade-union-strike-confirmed-1789402067</id>
            <summary type="text">தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் பதவி குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் கிடைக்கப்பெறாததால், முன்னதாக அறிவிக்கப்பட்டவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் பதவி குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் கிடைக்கப்பெறாததால், முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு இலங்கை ரயில்வே சேவையில் செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><p></p><p>ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்களின் இணை அழைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்றைய தினம் (14) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். </p><p>

இன்று போக்குவரத்து அமைச்சு வளாகத்தில், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e543362-53e7-4642-a812-5f02c33944fa/26-6aa81bd4ae246.webp' /></p><p> 

இதன்போது ரயில்வே திணைக்களத்திற்குள் எழுந்துள்ள நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், பயணிகள் எதிர்கொண்டுள்ள சேவை முடக்கங்கள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விரிவாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் நிர்வாகத்தின் மீது தொழிற்சங்கங்களுக்கு உள்ள நம்பிக்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதால், அவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தியுள்ளனர். </p><p>

ரயில்வே திணைக்களத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, திறமையான சேவையை நிறுவுவது மற்றும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரே நோக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>

கலந்துரையாடலில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில்வே திணைக்களத்தைக் கட்டியெழுப்புவதே தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளருக்கு விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியது சரியான செயலல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

எவ்வாறாயினும், தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு மேலும் அவகாசம் தேவை என அமைச்சின் செயலாளர் இதன்போது அறிவித்துள்ளார். </p><p>

எனினும், கடந்த இரண்டு வருடங்களாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி தொழிற்சங்கங்கள் அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதற்கமைய, வேலைநிறுத்தத்தைக் கைவிடுவது அல்லது இரத்து செய்வது தொடர்பில் எவ்வித உடன்பாடும் இன்றி கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதால், செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் மேலும் அறிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் கூரையில் ஏறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216"></link>
            <id>https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216</id>
            <summary type="text">&amp;nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக வீட்டின் வரவேற்பறைக் கூரையிலிருந்து மழைநீர் கசிந்துள்ளது.

இதனைப் பரிசோதிப்பதற்காக குறித்த நடுத்தர வயது பெண் ஏணியைப் பயன்படுத்தி கூரைப் பகுதியைச் சென்று பார்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b94a5f-4798-4f10-b75a-e931626f6f15/26-6aa7f942963c5.webp' /></p><p>
</p><p>
இதன்போது, கூரையில் சேதமடைந்திருந்த பகுதிக்கு அருகே விளாம்பழம் போன்ற வடிவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை அவர் அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் தனது உறவினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, அவர் அளுத்கம காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழுவினர் சோதனையிட்டதில் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அளுத்கம காவல்நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் இலங்கையர் மகுடம் சூடினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-wins-world-senior-model-title-1789392782"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-wins-world-senior-model-title-1789392782</id>
            <summary type="text">சிங்கப்பூரில் நடைபெற்ற 2026 ஆண்டுக்கான உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் &#039;எலைட்&#039; பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கலாநிதி துமிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் நடைபெற்ற 2026 ஆண்டுக்கான உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் 'எலைட்' பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கலாநிதி துமிந்த சில்வா, உலக அழகன் பட்டத்தை வென்ற முதல் இலங்கை மொடல் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி தாய்நாடு திரும்பியுள்ளார்.</p><p> சிங்கப்பூரில் செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் 10 அம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e17d0a6-499e-484c-b326-8a1f65d37ec8/26-6aa7f78fade1f.webp' /></p><h2>மிஸ்டர் ஸ்ரீலங்கா</h2><p>
</p><p>
முக்கிய உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமன்றி, போட்டியில் மேலும் சிறந்த ஆளுமை, சிறந்த முன்மாதிரி மொடல், சிறந்த நீச்சல் உடை அழகன் மற்றும் மிகவும் பிரபலமான போட்டியாளர் ஆகிய 04 முக்கிய உப பிரிவுகளிலும் துமிந்த சில்வா வெற்றி வாகை சூடியுள்ளார்.
</p><p>

முன்னதாக 'மிஸ்டர் ஸ்ரீலங்கா' பட்டத்தை வென்ற இவர், கலாநிதி பட்டம் பெற்ற உயர்கல்வியாளராகவும், ஒரு சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-309 விமானம் மூலம் நேற்று இரவு 9:35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்புரி விரும்பிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றுக்குள் அரங்கேறிய தகாத செயல் ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349"></link>
            <id>https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "> 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a940893-40b6-4c7f-a421-fcebf77d1249/26-6aa7de6f5cb47.webp' /></p><h2 style="text-align: justify; ">கசிப்பு உற்பத்தி</h2><p style="text-align: justify; "> 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; ">அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டேலாவுடன் ஒப்பிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ ; வலுக்கும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685</id>
            <summary type="text">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத்திற்கும் இடையே எந்தவொரு ஒப்பீடும் செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை குறிப்பிட்டு நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed5a898-7bdf-4b5e-af9b-14e7d22fb4cc/26-6aa7f3471970a.webp' /></p><p style="text-align: justify; ">"சிலரை கஷ்டங்கள் உடைத்துவிடும், ஆனால் சிலரை அது வலிமையாக்கும்" என்ற மண்டேலாவின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நஜித் இந்திக, தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருடன் நாமல் ராஜபக்ச தன்னை ஒப்பிட்டுக்கொள்வது பொருத்தமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நெல்சன் மண்டேலா அடக்குமுறைக்கும் இனவெறி முறைமைக்கும் எதிராக போராடியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் சுட்டிக்காட்டிய நஜித் இந்திக, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதுர்த்தியில் 601 கிலோ பிரம்மாண்ட லட்டு ; வியக்கவைத்த விநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713"></link>
            <id>https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48448870-4019-4265-b8d2-ce26daa06818/26-6aa7eb9317da4.webp' /></p><p style="text-align: justify; ">

மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு லட்டைக் காண, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

601 கிலோ எடையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லட்டு, அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17222359-ca44-401c-8fde-412fca777ab5/26-6aa7e65b10c33.webp' /></p><h2 style="text-align: justify; ">கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p style="text-align: justify; "> 

இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9வது வகுப்பு மாணவி கர்ப்பம் ; பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்; அதிபர் உள்ளிட்டோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647"></link>
            <id>https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647</id>
            <summary type="text">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">உடல்நலக் றைவு காரணமாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ccdfd24-58bb-4848-98bd-14d84114989b/26-6aa7dbb10e99b.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாடசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சமையற்காரராக பணிபுரிந்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

 
மாணவியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட தீவிர பற்றாக்குறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கருத்திற்கொண்டு, பள்ளியின் தலைமை ஆசிரியை, விடுதி காப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
பழங்குடியினர் மாணவிகள் தங்கிப் பயிலும் இதுபோன்ற விடுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சிறுமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களில் இது போன்ற பாலியல் குற்றங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T11:34:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைக்குள் அதிகாரி செய்த செயல் ; காலணிக்குள் இருந்த ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831"></link>
            <id>https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.



கிடைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96514428-9d26-4e27-9a8f-e6616d0eb3f8/26-6aa7d8810fbe3.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை காவலர் ஒருவராவார்.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16.7 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 



கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176"></link>
            <id>https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176</id>
            <summary type="text">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">



இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3976fad6-b530-4ba6-8749-24a6fd6217b2/26-6aa7d20a10a64.webp' /></p><p style="text-align: justify; ">இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T10:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா ; வெற்றிடமான எம்.பி பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208"></link>
            <id>https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை தொடர்பில் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccc9342-c7c5-4dab-8202-b48a091d02d3/26-6aa7cfa9650a2.webp' /></p><h2 style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர் பதவி</h2><p>
</p><p style="text-align: justify;">
அப்துல் வாஹித்தின் இராஜினாமா 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">


இதனையடுத்து, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

இந்நிலையில், ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T10:42:58+00:00</updated>
        </entry>
    </feed>
