<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T23:35:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், விசேட காவல் துறை குழுவொன்றினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98103047-9cfa-4a74-a752-27b7ef3b6cba/26-6a9de99eb2809.webp' /></p><p>கடல் வழியாக்க சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் புறாக்கள், பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களுக்காகப் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு, அதன் எஞ்சின் மற்றும் சிற்றூர்தி ஒன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைப்பற்றப்பட்ட புறா ஒன்றின் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்துப் புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கற்பிட்டி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய எரிமலை வெடிப்பு ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பாதை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941"></link>
            <id>https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து இன்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p></p><h3>எரிமலை வெடிப்பு</h3><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe65d5d-073b-43a3-aeaf-9bbe258adbe4/26-6a9dc6cedcd37.webp' /></p><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-06T19:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1989ஆம் ஆண்டு குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.</p><p>
</p><p></p><p>1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற், தனது பணிவாழ்வில் பல்வேறு பங்குகளிலும் மறைமாவட்டப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f712731e-7fd1-4cc8-99de-ba61078d9848/26-6a9db93cec7fe.webp' /></p><p>

அவர் மயிலிட்டி, இளவாலை மற்றும் பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும், சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
மேலும், கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை மற்றும் பரந்தன் ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாகவும், ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநராகவும், மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும், வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் அவர் தனது ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
</p><p>
நீண்டகாலமாக கத்தோலிக்க திருச்சபைக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி, அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற அனைவரும் மன்றாடுவோம்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ சேவையில் புதிய மாற்றம் ; குடும்ப வைத்தியரின் பரிந்துரை அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839"></link>
            <id>https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839</id>
            <summary type="text">அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பேருவளையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ac223ce-8849-4777-b94b-1b6b5050fe15/26-6a9db6c8a57dc.webp' /></p><p>நோயாளர்கள் தாங்கள் விரும்பிய வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் முறைக்குப் பதிலாக, தங்களது குடும்ப வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லும் முறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் பேர் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் 22 மில்லியனாக இருக்கும் நிலையில், ஒருவர் சராசரியாக நான்கு தடவைகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

நோயாளர்களே எந்த வைத்தியரைச் சந்திப்பது, எந்த வைத்தியசாலைக்குச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதன்மை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளர்கள் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்லும் வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தேவையற்ற வகையில் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளாமல் இடைநடுவில் நிறுத்துவது மருந்து விரயத்துக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் கலாசாரத்திற்கு அரசாங்கம் முன்மாதிரி ; டில்வின் சில்வா வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651"></link>
            <id>https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651</id>
            <summary type="text">அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad19af4-a8b5-444a-a047-1a6b9ddf7e97/26-6a9db224a00a9.webp' /></p><p> எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.</p><p>

கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
</p><p>
நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உதாரணமாக, 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.</p><p>

எனவே, அரசாங்கத்தைக் கைப்பற்ற எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களோ, அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என டில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மொழிபெயர்ப்பின் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' வசதியில் இரு புதிய அம்சங்கள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281"></link>
            <id>https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281</id>
            <summary type="text">கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் &#039;லைவ் ட்ரான்ஸ்லேட்&#039; (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப்படுத்தல்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>தற்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் இந்த நேரலை மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தும் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கினர், 5 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a3a44d-95a3-4bc8-a331-01a2cb95a035/26-6a9daccab5195.webp' /></p><p>இதனைக் கருத்திற் கொண்டு, எண்ட்ரோய்ட் பயனர்கள் இனி நேரலை மொழிபெயர்ப்பு இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிற செயலிகளைப் பயன்படுத்தவும், தொலைபேசித் திரையைப் பூட்டி வைக்கவும் (Screen Lock) முடியும் வகையில் பின்புலத்தில் இயங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அதேபோல், iOS பயனர்கள் இனி ஹேண்ட்போன் இல்லாத சூழலிலும் தொலைபேசியைக் காதில் வைத்து அழைப்புகளைப் பேசுவது போல் நேரடியாக மொழிபெயர்ப்பைக் கேட்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இரைச்சல் மிகுந்த வானூர்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அறிவிப்புகளைத் தெளிவாகக் கேட்க இது பயனுள்ளதாக அமையும். </p><p>இந்த வசதி ஏற்கனவே எண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலை இணைப்பு வீதிகள் விரிவாக்கம் ; வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440"></link>
            <id>https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறிப்பிட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59054290-932e-4488-b401-c110b73aafdb/26-6a9da599b2582.webp' /></p><p>கடந்த 10 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ள அனைத்து பிரதான வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:40:46+00:00</updated>
        </entry>
    </feed>
