<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T16:32:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201</id>
            <summary type="text"> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

இத்துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>

 

இத்துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0e0c88-aca7-4fed-b128-2307c2a49010/26-6a64e16a8c03c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T16:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகைக்காகப் பெண்ணை கொலை செய்து ஜனநாயகன்' பார்த்த தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582"></link>
            <id>https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு &#039;ஜனநாயகன்&#039; திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>

 இந்தச் சம்பவத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருணொருவரே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d743af9f-3038-4ac8-a52c-bae5f392018a/26-6a64ac3807995.webp' /></p><h2>&nbsp;6 பவுண் தங்க நகை&nbsp; கொள்ளை</h2><p>
</p><p>
 உயிரிழந்த அணிந்திருந்த 6 பவுண் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியொன்றைக் கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
 பெண்ணிடம் பரிசொன்றைத் தருவதாகக் கூறி, அவரைக் தாக்கிய தம்பதியினர் , நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தத் தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>அதன்பின்னர், தம்பதியினர் எதுவுமே நடக்காதது போல் திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள லாஸ்பேட்டை காவல்துறையினர்,&nbsp; &nbsp;கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டில் வாழ்ந்தும் 20 ஆண்டுகள் பேசாத தம்பதி ; பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்த காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403"></link>
            <id>https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா (Otou Katayama) மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா (Yumi Katayama) ஆகியோர், தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db30253c-2cf1-4361-b67d-4c1df67a9e5e/26-6a64b35533f0e.webp' /></p><h2>மனைவி,பிள்ளைகள் மீது அன்பு செலுத்தியதால் பொறாமை&nbsp;</h2><p>


குடும்ப வாழ்க்கை வழக்கம்போல தொடர்ந்த போதிலும், கணவர் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியுடன் நேரடியாகப் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவி ஏதேனும் கேள்வி கேட்டால், தலையசைப்பதன் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ மட்டுமே அவர் பதிலளித்து வந்துள்ளார். </p><p>இருப்பினும், குடும்பத்தில் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பெற்றோர் இருவரும் ஒருவருடன் ஒருவர் உரையாடுவதை தாம் ஒருபோதும் பார்த்ததில்லை எனக் கூறிய அவர்களது இளைய மகன், இந்த நிலையை மாற்றுவதற்காக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியை நாடியுள்ளார்.
</p><p>
இதையடுத்து, தம்பதியர் முதன்முதலில் சந்தித்த பூங்காவில் மீண்டும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்த சந்திப்பில், நீண்டகால மௌனத்திற்கான காரணத்தை விளக்கிய கணவர், மனைவி,பிள்ளைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால், தனக்குள் பொறாமை உணர்வு ஏற்பட்டதாகவும், அந்த உணர்வின் காரணமாகவே மனைவியிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மனைவியிடம் பேசிய அவர்,
"நாம் பேசி நீண்ட காலமாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை சிறப்பாக வளர்த்ததற்கு நன்றி. இனி மீண்டும் பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்"
என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அந்த தம்பதியரின் மீள்சந்திப்பு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி, உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரை ; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e3b03b-1a00-409e-9388-a7c792d4d2b5/26-6a64ae5a89fe9.webp' /></p><p>

அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றவில்லை எனின், அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இதற்கமைய, தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன ! 9 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e32b4c-5cdd-40a8-b6fb-f44b52c18f69/26-6a64a6147e82f.webp' /></p><p></p><h2>&nbsp;வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு -&nbsp; 9 பேர் கைது</h2><p>
</p><p>
இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு; பிரான்ஸ் வாழ் நபருக்கு கடுங்காவல் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128"></link>
            <id>https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938b26a3-f58b-427b-9176-f485d7ac9d93/26-6a648b3174313.webp' /></p><p></p><h2>சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு&nbsp;</h2><p>
</p><p>
 சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய சந்தேகநபர், தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.</p><p></p><p>
</p><p>
 வழக்கில் அரச தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மூவர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து சந்தேகநபருக்குக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளது.</p><p>


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு,&nbsp; சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; யாரும்&nbsp; தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-beedi-leaves-seized-in-puttalam-1784985789"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-beedi-leaves-seized-in-puttalam-1784985789</id>
            <summary type="text">&amp;nbsp;புத்தளத்தில்&amp;nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்&amp;nbsp; செய்யப்பட்டுள்ளன.புத்தளம் தளுவ கடற்கரைப் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புத்தளத்தில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்&nbsp; செய்யப்பட்டுள்ளன.</p><p>புத்தளம் தளுவ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த லொறியொன்றை கடற்படையினர் மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21f4e6f9-389a-4717-bb84-9db8284c9e63/26-6a64b8be63128.webp' /></p><p></p><p>
</p><p>
வடமேல் கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'தம்பபண்ணி' கப்பலின் கடற்படையினர் நேற்று (24) மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான லொறியில் 20 உறைகளில் பொதியிடப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p>



கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதியும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 நாட்கள் கடலில் தத்தளித்த தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-father-and-son-rescued-in-bangladesh-sea-1784985143"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-father-and-son-rescued-in-bangladesh-sea-1784985143</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மீனவர்கள் இருவர் 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த நிலையில் பங்களாதேஷ் மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மீனவர்கள் இருவர் 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த நிலையில் பங்களாதேஷ் மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர்.

 
மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.</p><p>மீட்கப்பட்டவர்கள்&nbsp; &nbsp;தெவிநுவரைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1281c1fe-c0fc-42e5-80d3-b7469b1a36a5/26-6a64b639178c6.webp' /></p><h2>&nbsp;அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 23 ஆம் திகதி இரவு 10:00 மணியளவில் வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த போதே பங்களாதேஷ் மீனவர்களால் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 

பின்னர் அவர்கள் பங்களாதேஷ் மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு மஹேஷ்காலி கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார்&nbsp; கூறியுள்ளனர்.</p><p></p><p>

 

உணவு மற்றும் குடிநீர் இல்லாத நிலையில், கடலில் கழித்த 36 நாட்களும் மீன்களை உண்டு இவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>இந் நிலையில் மீட்கப்பட்டவர்கள் உண்மையில் 36 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கழித்தார்களா என்பது குறித்தும் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>

 

இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T13:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் இரு பெண்கள் தவறான முடிவால் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325"></link>
            <id>https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நீதிமன்ற மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மருதமுனை - 06 ஆம் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9781871d-cc84-4fe3-8c82-bee2b58f8ea6/26-6a649b973394a.webp' /></p><h2>யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்து</h2><p>
</p><p>
 யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் பரவியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான், உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
</p><p>
அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் பாகங்கள் கொழும்பிலுள்ள அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் கடந்த புதன்கிழமை (22)&nbsp; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h3>கணவன் வெளிநாட்டில்</h3><p> 

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை - 03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மரணத்திற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-25T11:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு குழந்தைகள் பிறந்தும் நாமல் ராஜபக்க்ஷவை துரத்தும் பிரச்சனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற<a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-warning-electric-bill-issue-1691557217" target="_blank"> நாமல் ராஜபக்‌சவின் திருமண விழா</a>விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d47b12-264f-4e44-88f2-786a7193f802/26-6a6445c8a4243.webp' /></p><h2>எனக்கு மட்டும் பாராபட்சம் ஏன்?</h2><p>
</p><p>
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி இல்லை; தங்கிய வெளிஆட்கள் 3,089 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926"></link>
            <id>https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அதே காலப்பகுதியில், அந்த மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb17a280-0788-4cf5-91b0-fe84b7c9fb6d/26-6a6472f80c7c6.webp' /></p><h2>கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவு</h2><p>


ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025ஆம் ஆண்டு எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், எவரும் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.</p><p></p><p>



இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளுக்காக ரூ.2,447,754 செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>



ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:39:49+00:00</updated>
        </entry>
    </feed>
