<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T15:26:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரியளவான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விடம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-illegal-gem-mining-site-raided-1789652352"></link>
            <id>https://jvpnews.com/article/major-illegal-gem-mining-site-raided-1789652352</id>
            <summary type="text">காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டத்தில் உள்ள கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் நோர்வூட், ஷோர்ட்ரி தோட்டத்தில் உள்ள கால்வாயை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடமொன்றை, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர். </p><p>

முற்றுகை நடவடிக்கையின் போது அங்கு இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3001e1-b0fb-4490-b50b-f975a464144d/26-6aabed820efa5.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோத நடவடிக்கை</h2><p> </p><p>

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடிமுடக்கப்பட்ட இந்த நிலத்தில், கடத்தல்காரர்கள் சுமார் 100 பேரை ஈடுபடுத்தி மீண்டும் இரவும் பகலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கால்வாயை மறித்து பெரிய குழிகளைத் தோண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த மோசடி காரணமாக அப்பகுதியின் சூழியல் அமைப்பிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

முற்றுகையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், கால்வாயை மறித்து அமைக்கப்பட்டிருந்த குழிகளை உடைத்தெறிவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T14:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத் தகராறு ; மனைவியின் மூக்கை கடித்துக் குதறிய கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-dispute-husband-bites-wife-s-nose-1789641182"></link>
            <id>https://jvpnews.com/article/family-dispute-husband-bites-wife-s-nose-1789641182</id>
            <summary type="text">&amp;nbsp; குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, தெலங்கானா மாநிலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியா, தெலங்கானா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p> சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

, மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிசந்தர் என்பவருக்கும், கொட்டபள்ளியைச் சேர்ந்த மமதா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c787c168-8ac1-479a-b070-99a6fa5d647b/26-6aabc1dff2aeb.webp' /></p><h2>தொடர் குடும்பத் தகராறுகள்</h2><p> இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிசந்தர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
</p><p>
இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறுகள் மற்றும் மனவேதனை காரணமாக, மமதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோட்டபள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.</p><p></p><p>
</p><p>
மனைவியை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மணிசந்தர் தனது மாமனார் நாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமனார் நாராயணனை மணிசந்தர் கட்டையால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ளார். தனது தந்தையைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்த முயன்ற மனைவியின் மீது ஆத்திரமடைந்த மணிசந்தர், திடீரென அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளார்.</p><p></p><p> </p><p>இதில் பலத்த காயமடைந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மமதா அலறித் துடித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த மமதா&nbsp; மருத்துவமனையில்&nbsp; தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>
 பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261"></link>
            <id>https://jvpnews.com/article/two-workers-bitten-by-snakes-in-one-day-1789651261</id>
            <summary type="text">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.

கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 42 வயதுடைய தோட்டத் தொழிலாளர் ஒருவர் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6434489-454a-4178-9171-6a521608d79a/26-6aabe93f8185b.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p style="text-align: justify; ">
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, சங்குவாரி மேல் பிரிவு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றுமொரு ஆண் தொழிலாளரும் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், கடந்த வாரமும் கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இதனால், தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து காடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T14:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் ; பேருந்து நிலையத்தில் சிறப்பு பெட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032"></link>
            <id>https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c898b7b-eaa0-4c1f-8050-29284fa09a80/26-6aabd8b9e81f0.webp' /></p><p>



பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T13:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பனின் காதலியுடன் உல்லாசம் ; இறுதியில் பட்டதாரி இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ;வீடியோவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-graduate-youth-at-last-1789653132</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.உல்லாசம்
இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்திரா காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞருக்கு வேலை செய்யும் இடங்களில் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify;">உல்லாசம்
இதில் சில பெண்களை காதல் வலையில் வீழ்த்தினார். அவர்களை தனிஅறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da018982-4e25-4767-bd98-9a22a42c5822/26-6aabf0943b035.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p> </p><p style="text-align: justify; ">அதனை தனது செல்போனில் வீடியோ, போட்டோக்களாக பதிவு செய்து வைத்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் தனது நண்பர்களுடன்&nbsp; நேற்று முன்தினம் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருங்த போது&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது படி அவரது செல்போனில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை நண்பர்களுக்கு காட்டினார்.</p><p style="text-align: justify; ">அந்த வீடியோவில் நண்பர் காதலித்த பெண்ணுடன் பட்டதாரி உல்லாசமாக இருக்கும் வீடியோவும் இருந்தது. அவர்கள்வீடியோக்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify;">இதன்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார், யாழ்ப்பாணத்தில் சிக்கிய 07 பேர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974"></link>
            <id>https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974</id>
            <summary type="text">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளைப் பிடித்த 7 சந்தேகநபர்கள் 3 படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வடமத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பிரிவுகளால் இச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee79d687-5cfd-481c-805c-4987f405a968/26-6aabe438583e9.webp' /></p><h2 style="text-align: justify; ">கடல் அட்டைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாச்சிக்குடா, யஹப்பாறு பகுதியில் 'இ.க.க. புவனெக' படையணியினர் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி 550 கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற 3 சந்தேகநபர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினரால் குடாரப்பு கடற்கரையில் இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இரவில் சட்டவிரோதமாகச் சுழியோடி 850 கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேகநபர்கள் 2 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதானவர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T13:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரை நீரில் கரைக்க சென்ற 6 சிறுவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903"></link>
            <id>https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903</id>
            <summary type="text">கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p>தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு அருகில் உள்ள பெத்தகஞ்சர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42071bce-83fe-448f-bdf1-48b41619f276/26-6aabe008eccaf.webp' /></p><p> </p><p>ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட சிலைகளை 8 மாணவர்கள் குளத்தில் கரைக்க சென்றிருக்கிறார்கள்.
</p><p>
செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டதால் ஏரி மற்றும் குளத்தில் ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. </p><p>அந்த ஆழம் தெரியாமல் விநாயகர் சிலை கரைக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பி ஓடி வந்து ஆசிரம ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். </p><p>அதன்பின் நீரில் மூழ்கி மரணமடைந்த ஆறு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-those-who-waiting-to-buy-a-vehicle-1789648031"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-those-who-waiting-to-buy-a-vehicle-1789648031</id>
            <summary type="text">சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13494caf-742e-438b-9b11-6974232c3223/26-6aabdca0c3653.webp' /></p><p>
</p><p>
சில வாகனங்களின் விலைகள் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொட பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870</id>
            <summary type="text">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இன்று (17) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c27655-e89a-4895-9cae-525f623304eb/26-6aabd42fda226.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எனினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T11:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வர்த்தகருக்கு மரண தண்டனை ; வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983</id>
            <summary type="text">&amp;nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ad6d3f-5881-4a55-b6fe-bf197df69bdb/26-6aabcdc24358d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


அந்த சுற்றிவளைப்பின்போது,பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify;">


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T11:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822"></link>
            <id>https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் <a href="https://jvpnews.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-1789627045" target="_blank">ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்</a> வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3773c-d170-41cc-83cf-b433e7fc348e/26-6aabcc2fc7edc.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனத்திற்கு வந்த கொள்கலனில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134"></link>
            <id>https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134</id>
            <summary type="text">பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிகளில் இருந்து 1,469 சட்டவிரோதமான ஈ-சிகரெட்டுகள் கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

குறித்த கொள்கலனில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, 2026 செப்டம்பர் 16ஆம் திகதி இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3f2307-212a-4db9-9583-4a1497c90859/26-6aabcae61bef1.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் இச்சோதனை நடத்தப்பட்டது.
</p><p>

இதன்போது, உரிமையாளர்கள் எவரும் உரிமை கோராத 7 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலிருந்து 1,469 ஈ- சிகரெட்டுகள், ஈ-சிகரெட்டுகளுக்கு மீள் நிறப்பு திரவம் அடங்கிய 145 சிறிய திரவப் பெட்டிகள், 94 ஈ-சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் 400 கிராம் எடையுடைய 1,520 கொலாஜன் டின்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் 220 ஈ-சிகரெட்டுகள் அடங்கிய பொதியொன்றிற்கு உரிமை கோரி கலஹெடிஹேனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் வருகை தந்துள்ளார்.</p><p> இதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் கைதான இலங்கை நடிகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288"></link>
            <id>https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸ நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><p>
மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு வந்தால், கட்டாயப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என்றும் நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4700f-d575-4383-b5c5-4e3279520da8/26-6aabc6321bd0c.webp' /></p><h2>வெள்ளவத்தை பிரபல உணவகம் ஒன்றில் சோதனை</h2><p>

வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தைக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதன்போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐந்து பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, கல்ஹிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டபோது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெயின் (Cocaine) கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் மனைவியின் பிடியாணை வாபஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644"></link>
            <id>https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
</p><p>
<a href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751" target="_blank">ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தினால்</a> எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள கபில சந்திரசேனவின் மனைவிக்காகப் பிணையாளிகளாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நேற்று (16) பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீளப் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ecd0c6-9a20-48f9-8834-be4ae5054921/26-6aabb7f5c8ad9.webp' /></p><p>
</p><p>
அரவிந்த டி சில்வாவின் தாயாரின் மரணச் சடங்குகள் காரணமாக அவர்களால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக, இன்று மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மோஷன் மனு ஊடாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
இவ்விடயத்தைக் பரிசீலித்த நீதிவான், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை உடனடியாக வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658"></link>
            <id>https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பேறுவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. </p><p>
 

அந்த வகையில் மும்பை திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2372aa2b-81e7-40c0-a5c0-8dcc20d5bb98/26-6aaba47c4ed1b.webp' /></p><h2>திருமண இணையதளத்தில் போலி அடையாளம்</h2><p>
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், தன்னை ஒரு "பிளேபாய்" போலவும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், பெண்ணை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.</p><p></p><p> </p><p> சந்திப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர். </p><p>

இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.</p><p></p><p>

இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலகாள் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:18+00:00</updated>
        </entry>
    </feed>
