<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T19:49:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்காக பறிபோன உயிர்கள் ; வைரலான காணொளி; விசாரணையில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. </p><p>அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3ca4e1-a935-4c25-9db8-c80b1a3fab85/26-6a91e4d163447.webp' /></p><h2>&nbsp;ஐபோன்</h2><p>
</p><p>
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். </p><p>முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..

gunal
அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். </p><p>ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது..</p><p></p><p> ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். </p><p> பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
</p><p>
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. </p><p>ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடிப்படையினரிடம் சிக்கிய கடத்தல்காரர் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725"></link>
            <id>https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725</id>
            <summary type="text">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு Iஇன் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (27) கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹடவில - பொத்துவட்டன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eced449-65c8-4252-9e15-3a390fa858e1/26-6a91d35f37fb4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் கஹடவில, பொத்துவட்டன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">
16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மது மற்றும் போதைப்பொருள் பாவிப்போரின் கவனத்திற்கு ; மிரளவைக்கும் தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651"></link>
            <id>https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460e4cf8-c59f-4e09-949f-3a2afab6c88d/26-6a91cb4547c61.webp' /></p><h2>சட்டவிரோத போதைப்பொருள்</h2><p> 

இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p> 

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். </p><p>இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகளுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063"></link>
            <id>https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c24a88-69b3-465e-ac9e-4606d5680583/26-6a91c511066fa.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிரிழப்புகள்</h2><p style="text-align: justify; ">

இதில், 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, ரயில் விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; ">

விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13733759-edb2-45d2-b4ef-48f6ebff17c9/26-6a91bf2e80abb.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p style="text-align: justify; ">



இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.</p><p style="text-align: justify;">



அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><p style="text-align: justify;">


இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-28T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404"></link>
            <id>https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் 124.57 மில்லியன் ரூபாவுக்கும் (12.45 கோடி) அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd250c1-fd05-4417-897a-8836e2bffb36/26-6a91b73d4017e.webp' /></p><h2 style="text-align: justify; ">வருமானம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">26ஆம் திகதி E01, E 02, E 03 மற்றும் E 04 ஆகிய அதிவேகப் பாதைகளில் மொத்தம் 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 60.41 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதில் E 01 மற்றும் E 02 பாதைகளிலேயே அதிகளவிலான போக்குவரத்து பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">இங்கு 97,149 வாகனங்கள் பயணித்ததன் மூலம் 35.61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அதேவேளையில், E 03 பாதையில் 45,942 வாகனங்கள் மூலம் 18.90 மில்லியன் ரூபாவும், E 04 பாதையில் 20,672 வாகனங்கள் மூலம் 5.90 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">&nbsp;27ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதன் மூலம் 64.16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது முந்தைய நாளை விடச் சுமார் 3.75 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

அன்றைய தினம் E 01 மற்றும் E 02 பகுதிகளில் 102,027 வாகனங்கள் மூலம் 41.14 மில்லியன் ரூபாவும், E 03 பகுதியில் 35,004 வாகனங்கள் மூலம் 15.99 மில்லியன் ரூபாவும், E 04 பகுதியில் 24,522 வாகனங்கள் மூலம் 7.03 மில்லியன் ரூபாவும் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ஒட்டுமொத்த வருமானமாக 124,574,925 ரூபா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-28T16:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289</id>
            <summary type="text">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக &#039;விசுவல் கேப்பிட்டலிஸ்ட்&#039; (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக 'விசுவல் கேப்பிட்டலிஸ்ட்' (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f08232c-5782-4e10-9327-ac2ba6151754/26-6a91afdd9a6d9.webp' /></p><h2 style="text-align: justify; ">குறைந்தபட்ச மாதச் சம்பளம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">

இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, ​​குறித்த தொகையானது 200 அமெரிக்க டொலர்களாக தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது இலங்கைப் பண மதிப்பில் சுமார் 66,000 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

ஆசியாவில் அதிகூடிய குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளுக்கு மத்தியில் தென் கொரியா முன்னிலையில் உள்ளதுடன், அங்கு அந்த மதிப்பு 2366 அமெரிக்க டொலர்களாகும். </p><p style="text-align: justify;">

இந்த தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து குறைந்தபட்ச சம்பளமாக 3804 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T15:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673"></link>
            <id>https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
</p><p>
 அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc617ef1-2dad-478b-9dc8-a8aa8ddc6cb9/26-6a91850b03f6d.webp' /></p><h2>&nbsp;முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை</h2><p>
</p><p>
ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.</p><p> இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.</p><p></p><p>இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை&nbsp; பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை&nbsp; பாராட்டி&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர்&nbsp; ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம்; சுற்றி வளைத்த பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774"></link>
            <id>https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774</id>
            <summary type="text">&amp;nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc6f139-adb0-4286-9c7a-ab61ef71a737/26-6a918d4046c5c.webp' /></p><h2>&nbsp;238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம்</h2><p> </p><p>



''கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> 



அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p></p><p> 



இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை. </p><p>



இந்நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்களிடம் விடயத்தை வினவிய போது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>


நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்கள்.


காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
அந்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட உள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.</p><p>

ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89141911-6eb9-4eb3-b2d8-7f737806dcd5/26-6a9187d57a18c.webp' /></p><h2>கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ,ஐரோப்பா</h2><p> 

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும்.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது.</p><p></p><p> 

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

அத்துடன் வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
