<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T07:26:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பம் ; பெற்றோருக்கு விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/extreme-heat-special-medical-expert-warns-parents-1787642001"></link>
            <id>https://jvpnews.com/article/extreme-heat-special-medical-expert-warns-parents-1787642001</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகின்றார்.</p><p>
</p><p></p><p>இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
</p><p>
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c9da1c-0e35-48df-9c26-6c2db9937b1c/26-6a8d4092dad2d.webp' /></p><p>தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.
</p><p>
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
</p><p>
 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.
</p><p>
 

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண பந்தத்தில் இணைந்தார் சரிகமப புகழ் சபேசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sa-re-ga-ma-pa-fame-sabesan-married-1787639067"></link>
            <id>https://jvpnews.com/article/sa-re-ga-ma-pa-fame-sabesan-married-1787639067</id>
            <summary type="text">அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த,&amp;nbsp; சரிகமப புகழ் சபேசன்,&amp;nbsp; தனது காதலியான ரிக்ஷானா (Rithika Sujith / Rikshana)&amp;nbsp; திருமணம் செய்து&amp;nbsp; இல்லற வாழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த,&nbsp; சரிகமப புகழ் சபேசன்,&nbsp; தனது காதலியான ரிக்ஷானா (Rithika Sujith / Rikshana)&nbsp; திருமணம் செய்து&nbsp; இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
</p><p>
 இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில்&nbsp; வெளியான நிலையில்&nbsp; &nbsp;ரசிகர்கள்&nbsp; புத்மண தம்பதிகளுக்கு&nbsp; வாழ்த்துக்களை&nbsp; தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bf7fb4-fa3e-4056-abca-fbd4172b44fd/26-6a8d351ca4242.webp' /></p><h2>புதுமண தம்பதிகளுக்கு&nbsp; குவியும் வாழ்த்து</h2><p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப.</p><p> </p><p>

அதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாத்துறையிலும், கச்சேரிகளில் பாடியும் வருகிறார்கள். 

அந்தவகையில் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த&nbsp; சபேசன் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1437931d-482c-474a-912f-057ee002a029/26-6a8d38803e1b5.webp' /></p><p>தனக்கென ரசிகர்களை கொண்டிருந்த சபேசன், அந்த சீசனில் 2 ஆவது இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றார். </p><p>

இன்னிலையில் திருமண பந்தத்தில்&nbsp; இணைந்த&nbsp; சபேசனுக்கு ,&nbsp; சரிகமப’ சக போட்டியாளர்கள், இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும்&nbsp; தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T06:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி இரதோற்சவம் ; அலைகடலென குவிந்த பக்தர்கள் கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thellippalai-durga-devi-chariot-festival-1787641190"></link>
            <id>https://jvpnews.com/article/thellippalai-durga-devi-chariot-festival-1787641190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (25) அலைகடலென குவிந்த பக்தர் கூட்டத்துடன் வெகு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (25) அலைகடலென குவிந்த பக்தர் கூட்டத்துடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது.</p><p> 



இன்று காலை 4.00 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் ஆரம்பமாகி, காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து, இரதோற்சவம் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c17ae5-ad24-421a-8c94-d361c79cf644/26-6a8d3d6892a85.webp' /></p><p>
</p><p>
யாழ் மானட்டத்தில் அமைத்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஸ்ரீ துர்க்காதேவி ஆலயமும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a8da3b-b43a-4bcc-b7f8-6fc8185999fb/26-6a8d40a962053.webp' /></p><p>
</p><p>
இன்னிலையில் துர்க்காதேவி பெருன் தொகையான பக்தர்களின் அரோகரா கோக்ஷம் முழங்க , துர்க்கைமன் தீரில் பவனி வந்து அடியவர்களுக்கு அற்புத காட்சி வழங்கி அருள்பாலித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33deb1f-a3e6-4533-85ef-5b0baad8217e/26-6a8d3d67d97e4.webp' /></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b53eb0e-930e-46c6-aefd-9ff17795ad4c/26-6a8d41b2cd558.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f069bb-bef4-4f0c-bbfc-f8bbe2887fe5/26-6a8d3d6948a1e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-25T06:57:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA['பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-release-background-information-onbus-lalith-1787640968"></link>
            <id>https://jvpnews.com/article/police-release-background-information-onbus-lalith-1787640968</id>
            <summary type="text">டுபாயில் இருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் பொலிஸார் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>அங்கு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த விசேட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p>

 

போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd55983-a93a-48d9-b4e2-196b3e344465/26-6a8d3c89af098.webp' /></p><p>

 

சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>

 

அத்துடன், அவரது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p>

 

மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரப் பொலிஸாரால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

 

அத்துடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
</p><p>
 

இது தவிர, சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
 

கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்களால் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 3,878 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டது.</p><p>

 

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்திற்குப் பெறப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் மேலும் 1,549 மில்லியன் ரூபா சொத்துக்களையும், 2026ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபா சொத்துக்களையும் அரசாங்கத்திற்குப் பெறுவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
</p><p>
 

இந்த அனைத்துச் சொத்துக்களும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளின் பின்னர் முழுமையாக அரசாங்கத்திற்குப் பெறப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் 70 இலட்ச ரூபாய் நகை திருட்டு; கம்பி எண்ணும் சந்தேக நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832"></link>
            <id>https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் உள்ளிட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. </p><p>
சாவகச்சேரி பகுதியில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நவாலி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d058e32-dfcf-470b-9d2c-970ea156e907/26-6a8d24920f334.webp' /></p><h2>திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்&nbsp;</h2><p>

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை , அடகு வைத்து பணத்தினை பெற்றமையும் , அதில் சுமார் எட்டரை இலட்ச ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்தமையையும் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p>
அடகு பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் , அடகு வைத்த நகை என்பவற்றை பொலிஸார் மீட்டதுடன் , சந்தேகநபர்கள் மூவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T06:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலை வீதியில் பயங்கர விபத்து ; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-on-monaragala-road-father-of-two-dies-1787640083"></link>
            <id>https://jvpnews.com/article/accident-on-monaragala-road-father-of-two-dies-1787640083</id>
            <summary type="text">வெல்லவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.
விபத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெல்லவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெள்ளவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf16afd8-a7f3-470b-89c5-ab00bb74558f/26-6a8d3914b61d2.webp' /></p><p>அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர் வெள்ளவாய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
</p><p>
 

காயமடைந்த மற்றைய நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை ; நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-suddenly-drop-in-sri-lanka-1787637792"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-suddenly-drop-in-sri-lanka-1787637792</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (24) 24 கரட் தங்கம் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d074ffd-8a5b-4f91-817f-2c8e9fbc239f/26-6a8d3021c3e22.webp' /></p><p>அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:03:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை ; 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-raid-colo-bus-station-9-people-caught-drugs-1787637382"></link>
            <id>https://jvpnews.com/article/action-raid-colo-bus-station-9-people-caught-drugs-1787637382</id>
            <summary type="text">கொழும்பு மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், அதிவேகப் பாதையில் பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், அதிவேகப் பாதையில் பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் உட்பட பேருந்து ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p>

மேலும், நடத்துனர் உரிமம் இன்றி பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று நடத்துனர்களும் இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31212c6c-7e29-41a7-a144-e0ef1824d737/26-6a8d2e87d76a5.webp' /></p><p>தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், ஹோமாகம காவல்துறை, மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையம் மற்றும் மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த பரிசோதனையை முன்னெடுத்திருந்தன.
</p><p>
அதிவேகப் பாதை மற்றும் சாதாரண வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் 152 தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹோமாகம காவல்துறையினரால் இன்று (25) ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இருந்து யாழ். நோக்கி மருந்துகளுடன் சென்ற வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-carrying-medicines-colombo-jaffna-accident-1787635931"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-carrying-medicines-colombo-jaffna-accident-1787635931</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது. 

கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது.</p><p></p><p> 

கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d512a09e-6b5a-47b8-a185-13f64163d252/26-6a8d28dcb9479.webp' /></p><p>விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் , பாதுகாப்பாக உள்ளதாகவும், தடம்புரண்ட வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்து வர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக , வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். </p><p>

அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகர வாகனத்தில் அருட்காட்சி அளித்த நல்லூர் கந்தன் ; நாளை மஞ்சத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandan-performed-auspicious-makara-vahana-1787635326"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandan-performed-auspicious-makara-vahana-1787635326</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>எட்டாம் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராக மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். </p><p>இதனையடுத்து, மூவரும் ஆலய வெளிவீதிகளில் உலா வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cab845-e121-466b-97a4-6c55136724fc/26-6a8d268014edd.webp' /></p><p>வருடாந்த மகோற்சவத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான எட்டாம் திருவிழாவைக் காண யாழ்ப்பாணம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். </p><p>மகர வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையின் தெய்வீகக் காட்சியை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.</p><p>

தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக, நாளைய தினம் புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. </p><p>இந்த விசேட திருவிழாவிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a02b8aa-ba0f-43be-ae32-71f456c4e37f/26-6a8d2680bb5ad.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfd0893-8e2a-49ce-b1b1-316f51e95efe/26-6a8d26816fa06.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d52b53a-46e5-49ab-96f8-c61b1f94d82f/26-6a8d26822b0ae.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cab845-e121-466b-97a4-6c55136724fc/26-6a8d268014edd.webp' /></p>]]></content>
            <updated>2026-08-25T05:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் விரைவில் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/verdict-in-easter-sunday-case-expected-soon-1787634436"></link>
            <id>https://jvpnews.com/article/verdict-in-easter-sunday-case-expected-soon-1787634436</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற ஆயம் நேற்று (24) அறிவித்திருக்கிறது.</p><p>



 வழக்கின் பிரதிவாதிகளின் வாய்மொழி வாதங்கள் நேற்று (24) மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்ததையடுத்து, இரு தரப்பினரின் எழுத்துபூர்வ வாதங்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f031ea-3851-48df-a14c-330a1dafa4ac/26-6a8d2305c4602.webp' /></p><h2>24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை</h2><p>
</p><p>


கொழும்பு சிறப்பு மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதிபதி), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (24) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
</p><p>


 வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிய விசாரணை கடந்த 13ஆம் திகதி மாலையுடன் நிறைவடைந்தது.



உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>



 வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை சாட்சியங்களாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 வழக்கு பொருட்கள் அடையாளம் காணப்பட்டு சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>


மேலும், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், பெருமளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
</p><p>


நெளபர் மெளலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகவே ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சட்ட மா அதிபரால் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T05:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 இலட்சம் ரூபா பெறுமதி ;சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-with-illegal-liquor-worth16-million-1787634179"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-with-illegal-liquor-worth16-million-1787634179</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f988e32c-fa39-4a24-99c9-265b9e844802/26-6a8d22048ef93.webp' /></p><p>
</p><p>
 

கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வையிலும் வழிகாட்டலிலும் சந்தேகநபர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T05:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-water-cut-in-colombo-and-gampaha-districts-1787632111"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-water-cut-in-colombo-and-gampaha-districts-1787632111</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd479a54-3088-4627-8cac-9b8f84686785/26-6a8d19f0862d0.webp' /></p><p>நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் ; CID விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-lalith-brought-sri-lanka-cid-investigation-beg-1787631221"></link>
            <id>https://jvpnews.com/article/bus-lalith-brought-sri-lanka-cid-investigation-beg-1787631221</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற &#039;பஸ் லலித்&#039; இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்பவர் மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1a5777-83d7-4ffa-9e1f-780c82383ccf/26-6a8d167734869.webp' /></p><p>

 

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

 

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

இதனிடையே, 2021.09.20 அன்று நெலுன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்த முயன்றமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2022.10.16 அன்று மூவரை வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் பஸ் லலித்திற்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T04:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம் ; வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-amendment-narcotics-act-gazette-notification-1787630318"></link>
            <id>https://jvpnews.com/article/new-amendment-narcotics-act-gazette-notification-1787630318</id>
            <summary type="text">விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fadebb70-2592-40bf-979e-4ff4e3bbdb65/26-6a8d12ef850f0.webp' /></p><p>
 

இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில புதிய யோசனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 

குறித்த கட்டளைச் சட்டத்தின் 54ஆவது பிரிவின் முதலாவது உப பிரிவில் காணப்பட்ட ஹெரோயின், கொக்கேய்ன், மோஃபின், அபின் ஆகிய சொற்களுக்கு மேலதிகமாக, 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்ற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, அரச பகுப்பாய்வாளரினால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பிலும், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் இந்தச் சட்டமூலத்தின் மூலம் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 

போதைப்பொருள் குற்றவாளி ஒருவரைக் கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T04:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170"></link>
            <id>https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170</id>
            <summary type="text">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&amp;nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">கம்பளை, புப்புரஸ்ஸ&nbsp; பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf80ea4-844d-489f-855d-3802f0108554/26-6a8ce7640f684.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

குடும்பத்தினர் அனைவரும்&nbsp; வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று&nbsp; &nbsp;வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில்&nbsp; அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T01:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கிற்கு தயாரான குடும்பம்... உயிருடன் வந்த கைதி ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929"></link>
            <id>https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929</id>
            <summary type="text">நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
 

இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e95865-0b44-48a8-9de2-56979289a40c/26-6a8cee43b2109.webp' /></p><h2>இறுதிச்சடங்கு</h2><p>

 

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
 

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
 

தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் கடும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.</p>]]></content>
            <updated>2026-08-25T01:22:19+00:00</updated>
        </entry>
    </feed>
