<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T20:44:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கினால் கடும் நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f6260a-ff41-4da7-9c6e-54971c19a284/26-6a99c4f15a699.webp' /></p><h2>சட்ட அங்கீகாரம்</h2><p> </p><p>

இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். </p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிசெய்து கொள்ள முடியும்:</p><p></p><p> 

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p> 

1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல். 

1338 உடனடி அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ளுதல். </p><p>

இதன் காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுதிகாரிகளின் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

யாதேனுமொரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.</p><p> 

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கைஅவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T20:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடு சலிந்து வழக்குக் கோப்புகள் மாயம் ; 7 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kudu-salindu-case-files-missing-10-questioned-1788460990"></link>
            <id>https://jvpnews.com/article/kudu-salindu-case-files-missing-10-questioned-1788460990</id>
            <summary type="text">&amp;nbsp;‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f3d1b0-62ec-4bbb-aeed-62ab0e4f02d8/26-6a99bfc036634.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; "> இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலை தொடர்பான வழக்கும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோப்பும் அடங்குகின்றன.
</p><p style="text-align: justify; ">


கடந்த 28ஆம் திகதி வழக்கிற்கான அறிக்கையைத் தேடியபோது அது கிடைக்காததால், உப கோப்பின் மூலம் 31ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே பிரதான கோப்புகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">


ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T19:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத பிரமிட் நிறுவன மோசடி: சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-pyramid-scam-court-order-issued-1788459999"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-pyramid-scam-court-order-issued-1788459999</id>
            <summary type="text">சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட&nbsp; சந்தேக நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான்&nbsp; வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; ">

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபருக்கு மேலும் 2 வங்கிக் கணக்குகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596d6e23-9d42-4dba-8982-2410ffeee834/26-6a99bbe162123.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அத்துடன், இந்த பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக 17 பிரதேசங்களில் இருந்து தலா ஒரு முகாமையாளர் வீதம் 17 முகாமையாளர்களிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

அதேபோல், சந்தேக நபரின் தந்தை, மனைவி உட்பட இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சாட்சிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு முடிவடைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சந்தேக நபரின் மனைவி வசிக்கும் வீட்டை பரிசோதித்த போது, வழக்குடன் தொடர்புடைய முக்கிய சான்றுகளும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மன்றில் விடயங்களை முன்iவைத்தனர்.
</p><p style="text-align: justify; ">
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விடயங்களை முன்வைக்கையில், சந்தேக நபர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">சந்தேக நபரின் மனைவி, தந்தை உட்பட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சாட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மனைவியின் வீட்டில் இருந்து உரிய சான்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால், எந்தவொரு பிணை நிபந்தனையின் கீழும் அவரை விடுவிக்குமாறு கோரினார்.</p><p style="text-align: justify; ">
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த தலைமை நீதிவான், சந்தேக நபர் மேற்கொண்ட பிரமிட் மோசடி, தங்கம் வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட இடங்கள், அதற்காக பணம் ஈட்டப்பட்ட விதம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-03T19:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718</id>
            <summary type="text">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27402e49-8c00-4441-ba7e-d9b22b6c42a0/26-6a99b6df9b926.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.&nbsp; குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். </p><p style="text-align: justify; ">அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில்&nbsp; உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை
உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp; </p>]]></content>
            <updated>2026-09-03T18:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139"></link>
            <id>https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139</id>
            <summary type="text">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f47d590-e527-4d5f-bb70-2abf08f5adbd/26-6a99acccb3d0b.webp' /></p><h2 style="text-align: justify; ">தவறான உரையாடல்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T17:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705"></link>
            <id>https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705</id>
            <summary type="text">&amp;nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் &#039;காவ் வாய் காதல் சந்தை&#039; (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907adc64-37ba-46ee-a95d-7c88ffaa628e/26-6a99785311a1f.webp' /></p><h2>எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத&nbsp; &nbsp;சந்தை</h2><p> 

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.</p><p></p><p>
</p><p>
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
</p><p>
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.

திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.</p><p>

3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p></p><p>
</p><p>
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாயம் இன்னும் நீங்கவில்லை ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990"></link>
            <id>https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990</id>
            <summary type="text">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdaf295-e6c4-4da8-b924-6b0631134611/26-6a99a467b9ca6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528"></link>
            <id>https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறையில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d93bbab-bd11-4ef5-a065-e4efd98368cf/26-6a999eb61926a.webp' /></p><p> </p><p>

இதற்கான உரிய திகதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[02 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173</id>
            <summary type="text">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதை பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef444e4-c840-4e19-83ec-bee62379604f/26-6a999966ae419.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் பாவனை</h2><p style="text-align: justify; ">

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161"></link>
            <id>https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.</p><p style="text-align: justify; "> 

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f66977a7-cc03-41cb-b14b-3d2c902e518e/26-6a99918acbe8f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மேயர் முசம்மிலின் மகனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431c39cf-fa87-4d9c-8381-edde7b1dcc35/26-6a9974e89228d.webp' /></p><p>


எனினும், சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
