<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T18:27:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-for-sri-lankans-in-saudi-1789493872"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-for-sri-lankans-in-saudi-1789493872</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

தமது கைபேசிக்கு அவசர எச்சரிக்கை (National Warning Alert) கிடைத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b981d-987a-45d5-9ee3-6354bf3fbdef/26-6aa98271cd090.webp' /></p><h2 style="text-align: justify; ">அவசர சேவை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவசர நிலைகளின் போது அவசர சேவை இலக்கங்களாக மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற தொலைபேசி இலக்கத்தையும், ஏனைய பகுதிகளில் 998 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், துணைத் தூதரகக் காரியாலயத்தின் அவசரத் தொடர்பு இலக்கமான 056 098 6671 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T18:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659"></link>
            <id>https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659</id>
            <summary type="text">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69c6493-0607-4c30-8da0-0513507f0138/26-6aa97db4ef1ae.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/975e8e36-1723-4bde-bc46-9c4daff7144f/26-6aa978edc8618.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964</id>
            <summary type="text">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

நேற்று (14) முதல் ஒரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f78c187-eb5e-4f83-8d85-9f53b16d156c/26-6aa9732e6f31f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மீண்டும்&nbsp;டெங்கு நோய்</h2><p style="text-align: justify; ">

 

இருப்பினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டெங்கு அதி-அபாயகரமான சூழ்நிலையில் ஓரளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதாரத் துறையினர் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை சாதிக்க முடிந்தது என்றும் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

எனினும், ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குக் காரணம், வரவிருக்கும் மழைக்கால சூழ்நிலையால் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதே என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அதற்கமைய, நோய் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இத்திட்டம் 6 மாகாணங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்கு இணையாக கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இத்திட்டத்திற்காக ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிற்கும் தலா 10 குழுக்கள் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தக் குழுக்களில் சுகாதார ஊழியர் ஒருவர், இராணுவ அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143"></link>
            <id>https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e92c4a-5039-4f12-a7d6-7fa5735001de/26-6aa93d30c42c0.webp' /></p><h2>&nbsp;ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்</h2><p> 

மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
</p><p>
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
</p><p>
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.</p><p> காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர். </p><p>இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>

சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது . </p><p>உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T16:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271"></link>
            <id>https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

டெண்டர் நடைமுறைகளுக்குப் புறம்பாக பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கி அரசுக்கு 4,160,000 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35475656-3b18-4ed0-9fa4-03eff4ba0c73/26-6aa96c90c1398.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு</h2><p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட மீறலாக, உரிய டெண்டர் முறையைத் தவிர்த்து குறித்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதன் மூலம் வெளித் தரப்பினருக்கு பயனளித்து, 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரசன்ன சஞ்சீவ இன்று (15) காலை 9.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விதிமுறைக்கு அனுமதி ; 20 ஆம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800"></link>
            <id>https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800</id>
            <summary type="text">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

வாகன உற்பத்தியாளரால் வாகன பட்டி பொருத்தப்படாத இருக்கைகளுக்கு அவற்றை பொருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு வெளியிடப்பட்ட, 2026 ஜூன் 17 ஆம் திகதியிடப்பட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உத்தரவுகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba2651e-f655-43a5-af97-f7c2bc46ee1c/26-6aa966d238b4f.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2011.08.03 ஆம் திகதி 1717/14 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக வீதிகள்) விதிகளைத் திருத்தி, 2025.09.25 ஆம் திகதி 2455/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

பின்னர் ஆசன பட்டிகளை பொருத்திக் கொள்வதற்காக 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கால அவகாசம் 2025.12.25 அன்றுடன் நிறைவடைந்தது.
</p><p style="text-align: justify; ">
 

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்தக் காலம் 2026.03.20 முதல் 2026.06.19 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

 திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b6ffd6-aa0e-4dd0-841a-3eda16233cf0/26-6aa9416a2d738.webp' /></p><h2>&nbsp; முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதற்கமைய இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.</p><p>

 

இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

 

எப்படியிருப்பினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 

கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
 

சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.</p><p>

 

இதனிடையே, விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p></p><p>

 

2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>

 

மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்; மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216"></link>
            <id>https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&amp;nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

 
 தற்போதைய காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
 
 தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும். 

 அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது..

ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f202c3a-9260-467e-b4c9-fe1321cb0db2/26-6aa9454a6b44b.webp' /></p><h2>மனிதர்களை விட வேகமாக செயலபடும்&nbsp; AI&nbsp;</h2><p> Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று. ஆனாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது

 AI மனித குலத்திற்கு எதிரானது.</p><p> AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் கருகின்றார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா ‘ ( Satya Nadella ) ,</p><p></p><p> மனிதகுலத்திற்கு உதவாத மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை. Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.</p><p> அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை நாளை மக்களின் கருத்துக்காக வெளியிடவிருக்கிறோம்.</p><p>]</p><p> 

அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும்’ என அவர்&nbsp; ( Satya Nadella )&nbsp; கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயை சீண்டிய விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் கட்டமைக்கப்பட்ட வடிவம், பிரத்யேக கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டு சூழலுக்குள் மட்டுமே நடத்தப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943c5883-ca2d-405b-b4e5-0aad075beddb/26-6aa94769a90ca.webp' /></p><h2>&nbsp;விஜய் டிவி&nbsp; அறிக்கை</h2><p> </p><p>
 
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்தும் அந்தந்த தருணங்களின் கதைப்போக்கிற்கு உட்பட்டவையே தவிர, அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p> 
அத்துடன் நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமும் அல்லது தொடர்பும் தங்களால் உத்தேசிக்கப்பட்டதும் இல்லை, அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை என்றும் விஜய் டிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLPP கூட்டத்தில் LTTE கருத்து; விசாரணை TID க்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158"></link>
            <id>https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158</id>
            <summary type="text">&amp;nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c10db7-d345-4b98-b544-100b007b8a02/26-6aa939583cb99.webp' /></p><h2>பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்</h2><p>
</p><p>
 பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி" என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p>

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.</p><p></p><p>
</p><p>
 பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு "புலி" எனக் குறிப்பிட்டதுடன், "நரியை" ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><p>
</p><p>
 அதேசமயம் , மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710"></link>
            <id>https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56525197-e94a-4da9-859e-104bcc1a2a94/26-6aa93f67a0951.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஐவர் கொலை சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:42:32+00:00</updated>
        </entry>
    </feed>
