<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T17:34:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்தது ; அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த சிறுரகப் படகு மாலை சுமார் 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1d625b-cf5e-4e5c-b60d-d693f5035be8/26-6a81e9891e449.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர், மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்தை அறிந்த கடற்படையினரும் அப்பகுதி மீனவர்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படகில் பயணித்த 10 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி கட்டிடப் பொருள் விற்பனை மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warn-public-online-building-sales-scam-1786899673"></link>
            <id>https://jvpnews.com/article/police-warn-public-online-building-sales-scam-1786899673</id>
            <summary type="text">கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அஸ்பெஸ்டாஸ், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணப் பொருட்களை சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுவதே மோசடி கும்பலின் ஆரம்ப நடவடிக்கையாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c423ef-6145-4450-8b98-43db7ccb1711/26-6a81ecdb0d6ef.webp' /></p><p>ஆர்டர் கிடைத்த பின்னர், வாடிக்கையாளர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர் ஒருவரை தொடர்புகொண்டு, அவரது ஊடாக குறித்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க மோசடியாளர்கள் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பொருட்கள் வாடிக்கையாளரின் முகவரியைச் சென்றடைந்ததும், மோசடியாளர்கள் வாடிக்கையாளரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை உடனடியாக வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்துவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இதனையடுத்து வாடிக்கையாளர் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்த பின்னர், பொருட்களை விநியோகித்த சாரதி அதற்கான பணத்தை கோரும்போதே, தாம் மோசடிக்கு உள்ளாகியிருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இவ்வாறான இணையவழி மோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, சமூக வலைத்தளங்களில் குறைந்த விலையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், விற்பனையாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pradeshiya-sabha-deputy-chairman-arrested-action-1786897898"></link>
            <id>https://jvpnews.com/article/pradeshiya-sabha-deputy-chairman-arrested-action-1786897898</id>
            <summary type="text">முல்லைத்தீவு, செம்மலை – கொக்கிளாய் வீதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு, செம்மலை – கொக்கிளாய் வீதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>நேற்று (15) மாலை செம்மலை – கொக்கிளாய் வீதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6505a06b-414a-4b36-b244-f5654f12f788/26-6a81e5eba5de6.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும் தற்போது கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கொக்குளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரத்துறைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு ; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-100-million-allocated-for-the-health-sector-1786896853"></link>
            <id>https://jvpnews.com/article/rs-100-million-allocated-for-the-health-sector-1786896853</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

2026ஆம் ஆண்டுக்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 600 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான தொகையைக் கொண்ட வரவு–செலவுத் திட்டத்தை முன்வைத்த இலங்கையின் முதலாவது பிரதேச சபையாக தமது சபை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், குறித்த வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 100 மில்லியன் ரூபாய் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28806d75-1dbf-4476-a18d-0ed40a47d3b1/26-6a81e1d729a59.webp' /></p><p>இதேவேளை, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியை பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
</p><p>
ஓந்தாச்சிமடம் கடற்கரையை கிழக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது, சுகாதாரத்துறையை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அதிகளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் வினோராஜ் தெரிவித்தார்.
</p><p>
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புவதைத் தடுப்பதிலும் பிரதேச சபை முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>இதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் சுகாதார அதிகாரி ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அதில் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அணுக வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தினார்.
</p><p>
தமிழ் மக்களின் தேவைகளை எந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றுகின்றதோ, அந்த அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் கீழ், தமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கட்டமைப்புடன் செயற்படுவதே தமது நோக்கம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை விவகாரம் குறித்து இரா.பிரபாகரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prabhakaran-allegations-kalmunai-hospital-issue-1786896037"></link>
            <id>https://jvpnews.com/article/prabhakaran-allegations-kalmunai-hospital-issue-1786896037</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாகவும், அதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாகவும், அதனை மத அல்லது கலாச்சாரப் பிரச்சினையாக திசைதிருப்பி இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் ஈரோஸ் கட்சியின் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

டொக்டர் சுகுணனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு உரிய அடிப்படை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹாஷிமை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா சந்தித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df03b766-6f3d-42d3-8c65-b0a23cc93758/26-6a81dea7dfc6b.webp' /></p><p> இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID), அரசாங்கமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மேலும், ஓட்டமாவடியில் காளி கோயிலுக்குச் சொந்தமான காணி அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் ஏறாவூர் ஐயங்கேணியில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தயார்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 26 ஏக்கர் பரம்பரை காணி சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோன்று, உரிய அனுமதிகள் இன்றி சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி மூலங்கள், சொத்துக்கள் மற்றும் காணி தொடர்பான ஆவணங்கள் குறித்து புலனாய்வு ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் இரா.பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுத்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d053f7-6e22-4a3e-92d4-a0f667a81782/26-6a81dea737ce6.webp' /></p><p>

குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்திருப்பது நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சி அல்ல என்றும், தேர்தல் காலங்களில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஹிஸ்புல்லா மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி சட்டரீதியான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உச்சக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் இரா.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பதில்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786878785"></link>
            <id>https://jvpnews.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786878785</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> 

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பினை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியுள்ள பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினை மேலும் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அத்தகைய பேருந்துகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு ஏதுவாக, பேருந்து நிறுத்தங்கள் தடைகள் இன்றி இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேருந்து நிறுத்தங்கள் மற்ற வாகனங்களால் தடுக்கப்படும்போது, ​​மாற்றுத்திறனாளிகளும் மற்ற பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12baadd2-8e71-44db-a626-6a039193ab5f/26-6a819b42b4c70.webp' /></p><p> </p><p>

ஒரு சிறப்பு அரசாங்க வர்த்தமானி அறிவிப்பின்படி, பேருந்து நிறுத்தத்தை அணுகும் இடத்திலிருந்து 30 மீட்டருக்குள்ளும், வெளியேறும் இடத்திலிருந்து 15 மீட்டருக்குள்ளும் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதை அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பேருந்து நிறுத்தங்களை மறிக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்துமாறும், பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக நிறுத்தங்களை தடையின்றி வைத்திருக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவிடம் இருக்கும் அதிகாரம்! ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-president-anura-1786879031"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-president-anura-1786879031</id>
            <summary type="text">159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரின், ஜனாதிபதியுடனான சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அண்மையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.</p><p>இந்த சந்திப்பில், ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.</p><p>ஆனால், இந்த சந்திப்பில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடி மறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a664eeb3-862d-4752-8e10-49c1c3d37c6d/26-6a819c38c120d.webp' /></p><p>ஜனாதிபதியை மட்டும் போற்றிப் புகழும் இந்த அதிகாரிகளால், மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியே ஆகும்.

எனவே, ஜனாதிபதி அநுர குமார தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.</p><p>நாட்டின் தற்போதைய நிலையில், நீதபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது அவசியமற்றது.</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு இந்த சட்டமூலம் வருகின்றது. இதற்கு ஆளும் தரப்பினரும் கை உயர்த்தக் கூடாது.</p><p>மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாதவர்கள், 18ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொண்டு மண்வெட்டியோடு தங்களுடைய வயலுக்குச் சென்று விவசாய வேலையாவது செய்யுங்கள்.</p><p>

அதைவிடுத்து 159 பெரும்பான்மை இருக்கின்றது என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரையில் அதிகாரம் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை விவகாரங்களில் ஜனாதிபதி யாரைக் கலந்தாலோசிக்கிறார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-slams-anura-1786879906"></link>
            <id>https://jvpnews.com/article/namal-slams-anura-1786879906</id>
            <summary type="text">நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் அதன் வரம்பெல்லைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் அதன் வரம்பெல்லைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.</p><p>
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு தரப்பினரின் அவதானமும் திரும்பியுள்ள பின்னணியில், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>நீதித்துறை அமைப்பில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வது குறித்து கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட பல நிபுணர்கள் நாட்டிலிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>இத்தகைய சீர்திருத்தங்களின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காமன்வெல்த் மற்றும் பிராந்திய சட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
 அத்துடன், ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் போது, இரு தரப்பினரின் கருத்துகளும் சமநிலையாக முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:18:32+00:00</updated>
        </entry>
    </feed>
