<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T02:14:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275"></link>
            <id>https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலைத் தோட்டமொன்றைச் சொந்தமாக்கிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.</p><p>
'லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d271e30-98b8-45f8-b3b5-99bb9a3e220c/26-6aa0b61c624a3.webp' /></p><p> </p><p>
அவ்வமைப்பின் தலைவர் காமந்த துஷார என்பவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் உரிய ஆவணச் சான்றுகளுடன் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குச் சமூகமளிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:32:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474"></link>
            <id>https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e80780a1-398d-4c3a-9c26-6a5e3216bfd0/26-6aa0b2fccfd5c.webp' /></p><p>சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.&nbsp;இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae87b4b-25f9-4efe-96ab-120c7382ea3e/26-6aa0b2fe37aca.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdcfc042-4944-4f89-ae32-48909351c002/26-6aa0b2fedf63f.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48749e39-12d6-494a-b57f-d053c777efac/26-6aa0b2ff94457.webp' /></p><h4>துலாம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e224651d-861a-497b-9490-adfc0db1f186/26-6aa0b300472ce.webp' /></p><h4>கும்பம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe76160b-e764-4339-b6c6-306a43925c45/26-6aa0b300efe55.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரான் தேர் திருவிழா ; கந்தனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.</p><p>

தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p><p>ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியை தரிசிப்பதற்காக பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடவுள்ளதுடன், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றவுள்ளனர்.
</p><p>
இதனையொட்டி நல்லூர் ஆலயச் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா, இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b85a669-ebcb-4b03-b85b-7d53f95c8f51/26-6aa0afee25f13.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300"></link>
            <id>https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300</id>
            <summary type="text">செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை, இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்துகிறது.</p><p></p><p>

எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டெம்பர் 10) முதல், இந்த வசதியை காவல்துறையினர் அறிமுகப்படுத்துகின்றனர்.
</p><p>
இலங்கை காவல்துறையின் 160 ஆவது வருடக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f7b9fc-0116-46f6-95ad-0a5f763e6dcf/26-6aa0a69673fc3.webp' /></p><p>செவிப்புலன் வலுவிழந்தோரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>முறைப்பாடு அளிக்கும் வழிமுறைகள்: </p><p>இந்த சேவைக்காக பிரத்யேக குறுஞ்செய்தி இலக்கம் (Short-code number) அறிமுகப்படுத்தப்படும் வரை, பயனாளிகள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
1. இலக்கத்தைச் சேமித்தல்: முதலில் **011-2809980** என்ற தொலைபேசி இலக்கத்தை உங்களது கைபேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.</p><p>

2. அழைப்பு மேற்கொள்ளல்: பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு குரல் அழைப்பை (Audio call) மேற்கொள்ள வேண்டும்.</p><p>

3. இணைப்பைப் பெறுதல்: அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்ட பின்னர், உங்களது கைபேசிக்கு ஒரு இணைய இணைப்பு (Link) குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
</p><p>
4. காணொளி அழைப்பில் இணைதல்: அந்த இணைப்பைத் திறந்து, **“Join Browser”** மற்றும் அதன் பின்னர் **“Join Meeting”** ஆகிய தெரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
</p><p>
இதன் மூலம் காவல்துறையினருடன் நேரடி காணொளி அழைப்பில் இணைந்து செவிப்புலன் வலுவிழந்தோர் தமது முறைப்பாடுகளை எளிதாகத் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளாக படுக்கையில் காவல் அதிகாரி ; உரிமைகளை பெற்றுத்தர மனைவி கண்ணீர்க் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம் (IGP) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த காவல் அதிகாரி, பொரளை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, அதிகாரியால் அன்றாடச் செயற்பாடுகளைக் கூட சுயமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b81f10-863d-43c5-a384-8eec59ee4217/26-6aa09989e2975.webp' /></p><p>அவருக்கு இதுவரை முழுமையான சுயநினைவு திரும்பவில்லை எனவும், உணவு மற்றும் சுவாசத்திற்காக தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;கணவரை முழுநேரமும் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தம்மால் வேறு எந்தவொரு தொழிலிலும் ஈடுபட முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
வாடகை வீட்டில் வசித்து வரும் தமது குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லாத நிலையில், கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்து இடம்பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கான சம்பளமும், விபத்து விடுப்பு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கான சம்பளமும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>காவல் அதிகாரிக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் விபத்து நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், குறித்த நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
விசேட புலனாய்வுப் பிரிவின் (SIU) விசாரணை காரணமாக ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்கள் காரணமாக விபத்து நஷ்டஈடு தொடர்பான கோப்புகள் முன்னும் பின்னுமாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமது குடும்பம் எவரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவல் அதிகாரியின் மனைவி, தனது கணவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் குடும்பத்திற்கான நீதியையே கோருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மேலும், தமது நிலைமை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லும் வகையில் இந்தத் தகவலை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T22:54:11+00:00</updated>
        </entry>
    </feed>
