<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T11:37:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T11:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588"></link>
            <id>https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். 

அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். </p><p>

அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும் அர்ச்சுனா MP வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e698543-a0f5-471d-a519-eab291976e26/26-6aa1400d7a59e.webp' /></p><p></p><p>

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அர்ச்சுனா MP மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



விழாவோடை பகுதியில் மோட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>


விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6ffb3d-ea4e-494e-9be3-87a2fef88934/26-6aa13b355c841.webp' /></p><h2>சரணடைந்த கார் சாரதி</h2><p>
</p><p>


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 



விபத்தையடுத்து, கார் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:59:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.</p><p>



சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாததை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdc6aa3-13f4-48ac-818e-cb970d9cb04b/26-6aa1379673b32.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெண்கள் இருவர் விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846"></link>
            <id>https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846</id>
            <summary type="text">&amp;nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9ac26b-6be7-41cc-8e64-33761eb1499c/26-6aa12d885970a.webp' /></p><p></p><h2>&nbsp;தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து&nbsp;&nbsp;குஷ்' போதைப்பொருள்</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி ; 6 ஆசிரியர்கள் இடைநிறுத்தம் ; பெண் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2559ae3e-4042-4fbf-bed6-89ed2360ea29/26-6aa12b55354d3.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p style="text-align: justify;">
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T09:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503"></link>
            <id>https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16086760-6984-498d-bbb7-fb916200ebb3/26-6aa12848e685b.webp' /></p><h2>புதிய நிர்வாகக் குழு&nbsp;</h2><p>&nbsp;கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தனது மையமாகக் கொண்டு, சுமார் 35 இடங்களுக்கு 23 விமானங்களைக் கொண்ட தொகுப்பை இயக்கும் 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines), 'ஒன்வேர்ல்ட்' (oneworld) கூட்டணியின் ஓர் உறுப்பினராகவும், இந்தியச் சந்தையைத் தனது முதன்மை வருவாய் ஆதாரமாகவும் கொண்டுள்ளது.</p><p></p><p>

 நீண்ட காலமாகத் தலைமைத்துவ வெற்றிடம் நிலவிய சூழலில், மார்ச் 2025 முதல் யசந்த திஸாநாயக்க தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO), மார்ச் 2026-இல் தலைவர் சரத் கணேகொட பதவி விலகியதைத் தொடர்ந்து திமல் அரந்தர தற்காலிகத் தலைவராகவும் பணியாற்றினர்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7-8 தேதிகளில் சரத் கணேகொட தலைமையில் புதிய நிர்வாகக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சுமார் 340 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான திரண்ட நஷ்டத்துடன் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசுக்குச் சொந்தமான இந்த விமான நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான ஒரு முக்கியத் திட்டத்தின் பின்னணியிலேயே இந்தத் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது. </p><p>

இதற்காக, ஜூன் 2026-இல் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.</p><p></p><p>இக்குழுவில் டுமிந்த ஹுலங்கமுவ, தேஷால் டி மெல், டுமித் பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.</p><p>

 சர்வதேச நிதிக் கழகத்தின் (IFC) ஆலோசனை ஆதரவைப் பெறும் இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-09T09:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்ற கும்பலுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி ; மீட்கப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199"></link>
            <id>https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199</id>
            <summary type="text">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் கிரின்த கடலோரப் பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைது செய்ய இந்த உளவாளியே தகவல்களை வழங்கியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f1c8097-4269-447f-b9af-31c49000c2e5/26-6aa11f4884f1e.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; "> 

 

இந்த ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

இருப்பினும், வெளிநாட்டில் இருக்கும் 'ரூபன்' மற்றும் 'அங்கொட பிரியங்கர' ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகளால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கடத்தல் பொலிஸாரிடம் சிக்கியதால் ஏற்பட்ட இழப்புக்குப் பழிவாங்கும் வகையில், அந்த உளவாளியைக் கடத்திக் கொலை செய்து, அவரது தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன் போட்டுவிட்டுச் செல்ல குற்றவாளிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

எனினும் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2026 செப்டம்பர் 05ஆம் திகதி காலை 06 மணியளவில் கிரிந்த துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உளவாளியை இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியால் மோதி கொலை செய்ய குற்றவாளிகள் முயன்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது உளவாளி அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற ஜீப் வண்டி குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டி மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T09:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461"></link>
            <id>https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் இன்று (09) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (10) வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec54264-d1b9-4211-a963-fa05b7722529/26-6aa11c66744e5.webp' /></p><p>
</p><p>


இதன்படி, குறித்த கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கும் வர்த்தமானி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881"></link>
            <id>https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881</id>
            <summary type="text">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (09) புதன்கிழமை உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் (அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76625e66-975b-4449-932a-a5ca6bcde778/26-6aa11b0da4b9e.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைக்காலத் தடை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் நடைபெற்றிருந்தது. </p><p style="text-align: justify;">


அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும், அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதன்படி, மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

எனினும், எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அத்துடன், முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T08:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.



அமெரிக்க டொலரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.2860 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.2894 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2fb51a-6a14-4922-9850-92a3508b24d7/26-6aa11b6d5cc2f.webp' /></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-09T08:37:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இசை நிகழ்ச்சி பார்க்கச்சென்றவருக்கு இறுதியில் காத்திருந்த சோகம் ; நள்ளிரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469</id>
            <summary type="text">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb6f510-76f1-425b-be98-c6184045b217/26-6aa10ccebf09e.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விபத்தில் உயிரிழந்தவர் 44 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; ">

 

இவர் கடந்த நாள் ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2.00 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இரவு நேரத்தில் இந்த விபத்தைக் எவரும் பார்க்கவில்லை எனவும், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் சம்பவத்தைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

உயிரிழந்த நபர் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, செயலி (App) மூலம் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாகச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் இரத்து; பயணிகள் பெரும் அவதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b87fcb-d851-488c-82fb-de19106c3982/26-6aa1089b9969c.webp' /></p><h2>&nbsp;பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம்&nbsp;</h2><p>
</p><p>
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
</p><p>
 இந்த திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 இந் நிலையில் விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T07:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோயில் செல்ல தயாரான இளைஞருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-youth-on-way-to-temple-1788936677</id>
            <summary type="text">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



கிரான்குளம் பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d552bd-3a60-4ae1-8b7e-fa5771d335e6/26-6aa101e716992.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">


இந்நிலையில், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறவிருந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் கிரான்குளம் நோக்கி பயணித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


சந்திவெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663</id>
            <summary type="text">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ்&nbsp; குடும்ப பெண்&nbsp; செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c210c05-3d22-4ad3-9884-781eea5ecbd3/26-6aa0d2f9531ab.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T06:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858"></link>
            <id>https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858</id>
            <summary type="text">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5afecc5-8951-479c-829b-06b346eea03b/26-6aa0facb99236.webp' /></p><h2 style="text-align: justify; ">நெருக்கடி நிலை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அப்பால் ஈரானியக் கப்பல்கள் ; அமெரிக்க தூதரகத்தின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056"></link>
            <id>https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056</id>
            <summary type="text">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2246ba31-ff09-4f2d-9221-32b17e07a235/26-6aa0f4f713f60.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்காணிக்கப்படும் கப்பல்</h2><p style="text-align: justify; ">

குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொலிசார் என போலி விளம்பரங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190"></link>
            <id>https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், பொதுமக்கள் இவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929e3dc-ad50-4da1-999a-606964373f3c/26-6aa0f4475cc33.webp' /></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை அல்ல.</p><p></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன், 'Sri Lanka Police' இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:09+00:00</updated>
        </entry>
    </feed>
