<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T18:19:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் நடத்தையில் சந்தேகம் ; கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955"></link>
            <id>https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955</id>
            <summary type="text">இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகள் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.</p><p>
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராதிகா, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனமொன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec36bfb-75a3-4fc5-abd5-f4cee8948e07/26-6aa596dd263a7.webp' /></p><p>அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதுடன், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அருண்குமாருக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தன்று இரவு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாகவும், அப்போது கட்டிலில் தலை மோதியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் ராதிகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>

இதுகுறித்து திருப்பூர் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>

ராதிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
</p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ராதிகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அருண்குமார் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதையடுத்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் ; எல் நினோ பாதிப்பு குறித்து புதிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497"></link>
            <id>https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497</id>
            <summary type="text">கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>முன்னதாக 95 வீதமாக இருந்த இந்த முன்னறிவிப்பு தற்போது 98 வீதமாக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39776b45-7bf4-4620-940d-79e859a9787e/26-6aa5912a8f78b.webp' /></p><p>

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
</p><p>
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cda3dff-25ba-4a41-a9bd-fd9f19d002cb/26-6aa5868242ffa.webp' /></p><p>சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2</p>&mdash; AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) <a href="https://x.com/AndhraBoxOffice/status/2098788805801320925?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T17:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277f041-fd4a-44c5-b406-ec6bf577ab2f/26-6aa5837debe3b.webp' /></p><p>பொலிஸாரின் கட்டளைக்கு அமைய வேனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதன் சாரதி கட்டளையை மீறி வேனை முன்னோக்கிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, குறித்த வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e1018b-4d43-4965-9083-25bd110bbc75/26-6aa57cb84f26a.webp' /></p><p>இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.</p><p>இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆசிரிய மாணவி தற்கொலை விவகாரம் ; உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அர்ச்சுனா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204"></link>
            <id>https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204</id>
            <summary type="text">யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p> </p><p></p><p>மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவரை அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியான வார்த்தை பிரயோகத்தால் உளநீதியாக தாக்கம் அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42a57e7-9d08-46e4-925f-21f901b7eb10/26-6aa58065d40af.webp' /></p><p>குறித்த மாணவி குறித்த விரிவுரையாளர் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
</p><p>
குறித்த மாணவி விரிவுரையாளரால் உளநீதியாக தாக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> 

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உணவு வழங்கலில் பெரிய முறைகேடு இருப்பது உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. </p><p>

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு; ஐ.நா கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-kills-two-children-un-concerned-1789221051"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-kills-two-children-un-concerned-1789221051</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.</p><p>

 

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa637658-59c0-4373-9496-0bce5b247aec/26-6aa558bd0feb5.webp' /></p><h2>கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
 

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
 

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T14:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 4 சந்தேகநபர்கள் கைது ; விசேட தேடுதலில் வெளிவந்த சட்ட விரோத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-suspects-arrested-in-jaffna-1789220023"></link>
            <id>https://jvpnews.com/article/four-suspects-arrested-in-jaffna-1789220023</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று&amp;nbsp; (11) மேற்கொள்ளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று&nbsp; (11) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் இச் சோதனை நடவடிக்கை கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2031cd5e-942f-4a1b-825e-41a14e9dc94b/26-6aa554b910a15.webp' /></p><h2>மீன் தொகுதி பறிமுதல்</h2><p>

தடைசெய்யப்பட்ட ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே இவர்கள் சட்டத்தின் கைகளில் சிக்கியுள்ளனர்.</p><p>

3 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,900 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

</p><p>கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T14:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் </p><p>

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17068f16-31b6-4ac3-b470-32ab5babe4c7/26-6aa5176285ad4.webp' /></p><p> துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் சென்ற தமிழக முதல்வர் ; இரவு முழுவதும் காத்திருந்து ஈழத்தமிழ் பெண் செய்த செயலால் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-woman-waits-all-night-to-meet-vijay-1789219198"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-woman-waits-all-night-to-meet-vijay-1789219198</id>
            <summary type="text">அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.</p><p>

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு நேற்று சென்றடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5010948-1ea6-4ffa-b13d-47af1c1e8b5f/26-6aa5517fd9f50.webp' /></p><h2>பெண் வழங்கிய கடிதம்</h2><p>

முதலமைச்சர் விஜயை வரவேற்பதற்காக லண்டனில் வசிக்கும் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் விடுதி வளாகத்தில் திரண்டிருந்தனர். </p><p>அவர்கள் பூங்கொத்துகளை வழங்கி அவருக்கு தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.</p><p>

இதன்போது, முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்காக இரவு முழுவதும் காத்திருந்ததாகக் கூறப்படும் பிரித்தானியாவில் வசிக்கும் 19 வயதான ஈழத் தமிழ் பெண் ஒருவர், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதிய கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அந்தக் கடிதத்தை முதலமைச்சர் விஜய் அன்புடன் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், குறித்த சந்திப்பு மற்றும் இளம் பெண் வழங்கிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-father-of-four-on-street-1789217634"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-father-of-four-on-street-1789217634</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d58381a-b6dc-4dbf-ab58-8f0ce916eb7d/26-6aa54b6487695.webp' /></p><p>
</p><p>
பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தை இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.</p><p>

பாலமுனைப் பகுதியில் வைத்து எதிர்வந்த தனியார் பேருந்துடன் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியுள்ளது.</p><p>


இச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் ; சைவ பக்தர்களுக்கு இடையூறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845"></link>
            <id>https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845</id>
            <summary type="text">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fc7ebc-cf76-4683-81eb-c0b12b68fa84/26-6aa544677cf09.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;குவிக்கப்பட்ட பொலிஸார்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p style="text-align: justify; ">
அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
