<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T16:43:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடியால் தாக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110</id>
            <summary type="text">குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம் திகதி பொலிஸ் அதிகாரிக்கும் வேறு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d026496a-4658-42fc-ac3c-ddf87695cc71/26-6a7f3f114b1aa.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன் காரணமாக கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1516d37-2c2c-42a9-81b2-b55c62fbed12/26-6a7f3177816ad.webp' /></p><p> </p><p>

அத்துடன், நாளை (15) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T15:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளி - இலங்கைக்கு இழுத்துவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960"></link>
            <id>https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 52 வது நாளான இன்று (14) புதிதாக 2 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f01205-07bd-494b-a685-e1512da52309/26-6a7f1381d9524.webp' /></p><p></p><p>

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 554மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 547 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

2 குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படாத 6 குழிகள் 1 மீற்றர் அகலமும் 1 மீற்றர் நீளமும் கொண்டவை தோண்டப்பட்ட தில், 3 குழிக்குள் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக நண்பிகள்; டிவிஸ்ட் கொடுத்த டி.என்.ஏ சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211"></link>
            <id>https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84205643-724e-4387-b449-f9f94ac75938/26-6a7f0cad842e0.webp' /></p><h2>கண்ணீர் மல்க&nbsp; மகிழ்ச்சி</h2><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p></p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரப்ரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706"></link>
            <id>https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.

சம்பவத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.
</p><p>
சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள் நுழைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e1fdd3-5bca-47e9-ab61-0dbe8061e89e/26-6a7f06cb8045a.webp' /></p><p></p><p> இதனையடுத்து, அந்த முதலை&nbsp; வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தகைய காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாகப் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959</id>
            <summary type="text">&amp;nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>


மதிப்பீட்டுப் பணிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட அதிகாரிகளுக்கு இயலுமாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4209f9f4-bbff-4713-b9d1-6d3c5720d826/26-6a7f0f9e0f30c.webp' /></p><p></p><p>
</p><p>


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் இப் பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் அநாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004" target="_blank"> வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை</a> முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af3b08f7-5f23-46a7-896a-1d8c3545be6b/26-6a7ed1a7126da.webp' /></p><p>
</p><p>


சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் தாயாரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p></p><p>



இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787"></link>
            <id>https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cda6a6-7965-483a-a3d9-5cfe9feb5f49/26-6a7f16bd09586.webp' /></p><h2>&nbsp;மணமகளின் சகோதரரும்,&nbsp; பாட்டியும் உயிரிழப்பு</h2><p>
</p><p>


விபத்தில் உயிரிழந்தவர்களில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மணமகளின் சகோதரரும், அவரின் பாட்டியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



விபத்து இடம்பெற்ற நேரத்தில் மணமகளின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>


வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:20:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் அழகிற்கு மெருகூட்டும் ஓமம் தண்ணீர் ; உங்களுக்கு தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ajwain-water-enhances-women-s-beauty-carom-seed-1786700347"></link>
            <id>https://jvpnews.com/article/ajwain-water-enhances-women-s-beauty-carom-seed-1786700347</id>
            <summary type="text">&amp;nbsp; ஓமம் தண்ணீர் பெண்களின் ஒட்டுமொத்த அழகுப் பராமரிப்பிலும், கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஓமம் தண்ணீர் பெண்களின் ஒட்டுமொத்த அழகுப் பராமரிப்பிலும், கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது யாருக்கெல்லாம் தெரியும்? </p><p>

ஓமத்தில் 'தைமால்' எனப்படும் சக்திவாய்ந்த கிருமிநாசினிப் பொருள் நிறைந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/286db721-21ed-4be2-9a87-69f8332318d9/26-6a7ee23d23de3.webp' /></p><p><b>&nbsp;சக்திவாய்ந்த கிருமிநாசினிப் பொருள்</b></p><p>இது சருமத்தில் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. 

ஓமம் தண்ணீரைத் தினமும் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள் குறைவதோடு, அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளும் படிப்படியாக மறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d9676b-83b9-401d-80fc-5a2c4375d499/26-6a7ee23dd129d.webp' /></p><p> 

வெப்பம் மற்றும் தூசிகளால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி மற்றும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாகும். </p><p>

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்சலைத் தணித்து, தோலுக்கு மென்மையையும் இயற்கையான பளபளப்பையும் தருகிறது.</p><p><b>ஓமத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்</b></p><p> </p><p>ஓமத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கூந்தல் வேர்க்கால்களுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன. 

தொடர்ந்து ஓமம் தண்ணீரைத் தலைமுடிக்குக் குளித்து வர, நரைமுடி தோன்றுவது தடுக்கப்பட்டு கூந்தல் கருமையாக வளரும்.</p><p> 

ஓமம் தண்ணீர் கூந்தலின் வறட்சியைப் போக்கி, வேர்க்கால்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. கூந்தலைக் கழுவிய பிறகு, இறுதியாக ஓமம் தண்ணீரைக் கொண்டு அலசி வர, தலைமுடி சிக்கின்றி மென்மையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6908c2a4-a24b-4ffc-a65d-511a225b1c78/26-6a7ee23e89ee4.webp' /></p><p> 

இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகச் செயல்பட்டு கூந்தலுக்குப் பிரகாசத்தைத் தருகிறது. 

அழகு என்பது வெளிப்புறச் சருமம் மட்டுமல்ல, உடல் கட்டமைப்பும் சேர்ந்ததே ஆகும்.</p><h2>வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீர்</h2><p> </p><p>ஓமம் தண்ணீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓமம் தண்ணீர் குடித்து வர, தேவையில்லாத சதை குறைந்து உடல் கச்சிதமான வடிவத்தைப் பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8037a335-c26e-4650-a48d-fd1a9148dc52/26-6a7ee23f3e34c.webp' /></p><p> </p><p>

அழகுப் பராமரிப்புடன் சேர்த்து, ஓமம் தண்ணீர் குடிப்பது அஜீரணம், வயிற்று உப்பசம், சளி, இருமல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-14T12:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி வரி மிகைக் கட்டணம் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/surcharge-on-vehicle-import-tax-extended-1786711609"></link>
            <id>https://jvpnews.com/article/surcharge-on-vehicle-import-tax-extended-1786711609</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da32a6b5-6541-4f52-bd48-3b50f059c3d6/26-6a7f0e3b41788.webp' /></p><p> </p><p>

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இருப்பினும், கடந்த மே மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T12:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் கிரகத்தில் ஜெல்லிமீனா? நாசா புகைப்படத்தால் புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-jellyfish-on-mars-new-controversy-nasa-photo-1786708641"></link>
            <id>https://jvpnews.com/article/a-jellyfish-on-mars-new-controversy-nasa-photo-1786708641</id>
            <summary type="text">&amp;nbsp; செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாಸாவின் (NASA) ரோவர் விண்கலம் எடுத்து அனுப்பிய சமீபத்திய புகைப்படத்தில், ஜெல்லிமீன் (Jellyfish) போன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாಸாவின் (NASA) ரோவர் விண்கலம் எடுத்து அனுப்பிய சமீபத்திய புகைப்படத்தில், ஜெல்லிமீன் (Jellyfish) போன்ற விசித்திரமான வடிவம் தென்பட்டுள்ளது&nbsp; பெரும் விவாதத்தையும் பல்வேறு சதித்திட்டக் கோட்பாடுகளையும் (Conspiracy Theories) கிளப்பியுள்ளது. </p><p>

செவ்வாயின் தரிசு நிலப்பரப்பிற்கு மத்தியில் நீருக்கடியில் வாழும் ஜெல்லிமீன் போன்ற ஒரு உயிரினம் தென்படுவது சாத்தியமா என்ற கேள்வி உலகளாவிய விண்வெளி ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6869d0f5-e21f-474b-8150-ff626d8a6e81/26-6a7f02a2b1e49.webp' /></p><h2>ஏலியன்களின் இருப்பதாகக் உரிமை</h2><p>

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த வேற்றுக்கிரகவாசி (Alien) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள், செவ்வாய் கிரகத்தில் செழிப்பான நீர்வாழ் உயிரினங்கள் அல்லது ஏலியன்களின் வாழ்வியல் சான்றுகள் இருப்பதாகக் உரிமை கோரத் தொடங்கினர். </p><p>

குறிப்பாக, ஜெல்லிமீனின் தலைப் பகுதி மற்றும் அதன் கீழ் தொங்கும் நீண்ட கரங்கள் (Tentacles) போன்ற வடிவம் மிகத் தெளிவாகத் தெரிவதாகக் கூறி, இது வேற்றுக்கிரக உயிரினங்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் என இணையத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.
</p><p>
இருப்பினும், இந்த விசித்திர உருவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள் மற்றும் புவி அறிவியல் நிபுணர்கள், இக்கூற்றுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். </p><p>

இது ஏலியனோ அல்லது கடல் உயிரினமோ அல்ல; செவ்வாய் கிரகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் பலநூறு கோடி ஆண்டுகளாக நிகழ்ந்த பாறை அரிப்புகளால் (Wind Erosion) இயற்கையாக உருவான ஒரு வித்தியாசமான பாறை அமைப்புதான் என விளக்கமளித்துள்ளனர். </p><p>

மனித மூளை சீரற்ற வடிவங்களில் தனக்குத் தெரிந்த உருவங்களைக் காண்பதாகக் கற்பனை செய்யும் ‘பரேடோலியா’ (Pareidolia) என்ற உளவியல் விளைவே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>
முன்னதாகச் செவ்வாய் கிரகத்தில் மனித முகம், ஓணான், வழலைக்கட்டி மற்றும் மரக்கட்டை போன்ற வடிவங்களில் பாறைகள் தென்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த ‘ஜெல்லிமீன்’ வடிவ பாறையும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T11:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து வலுவடையும் இலங்கை ரூபாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-rupee-continues-to-strengthen-1786705563"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-rupee-continues-to-strengthen-1786705563</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (13) மேலும் வலுவடைந்துள்ளது.



அமெரிக்க டொலரின் சராசரி கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (13) மேலும் வலுவடைந்துள்ளது.
</p><p>


அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 329.0389 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 337.9922 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4502916-52ff-451d-8605-04d0727258d5/26-6a7ef69ca8950.webp' /></p><p>



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-warning-several-districts-in-sri-lanka-1786704820"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-warning-several-districts-in-sri-lanka-1786704820</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec131db-dcdd-4b3e-9790-063be9796180/26-6a7ef3b59edf8.webp' /></p><h2>&nbsp;39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும்</h2><p>
</p><p>
குறித்த மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, உடல் சோர்வு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இதனால், பகல் நேரங்களில் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான உடல் உழைப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 உடலில் நீரிழப்பு ஏற்படாத வகையில் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, அதிக வெப்பநிலை தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரியவும், பொதுமக்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T10:51:16+00:00</updated>
        </entry>
    </feed>
