<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T06:36:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-wijesiri-who-sentenced-to-prison-1787553202"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-wijesiri-who-sentenced-to-prison-1787553202</id>
            <summary type="text">பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1910407-30c6-4f0e-87d0-98053942c08e/26-6a8be5b436ad4.webp' /></p><p>இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கசிப்பு உற்பத்திக்கு முற்றுகை ; 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-crackdown-liquor-production-two-arrested-1787551791"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-crackdown-liquor-production-two-arrested-1787551791</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமராட்சி துன்னாலை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dae106c-32a2-455b-aba5-9cbb2c3c49f8/26-6a8be0312634f.webp' /></p><p>

அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் , கைது செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தப்பியோடிய ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி மருத்துவர்கள் இருவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-quacks-sentenced-to-prison-1787551247"></link>
            <id>https://jvpnews.com/article/two-quacks-sentenced-to-prison-1787551247</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர், குற்றத்தை ஒப்புக்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான் நுத்தினன் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f23e899-fca2-4dcd-9582-0239c5610e17/26-6a8bde10ade7f.webp' /></p><h2>பதிவு செய்யப்படாமல் சட்டவிரோத தொழில்</h2><p>
</p><p>
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p>

இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது வெளிச்சத்துக்கு வந்தது.</p><p></p><p>
</p><p>
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் (களச் சேவைகள்) சமூக மருத்துவ நிபுணர் சரித் ஹெட்டிஆரச்சி மற்றும் அளுத்கம சுகாதார மருத்துவ அதிகாரி சம்பத் நிரோஷன ஆகிய அதிகாரிகளுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்தே இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T05:58:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நான் இல்லை ....இருந்தாலும் தவறு இல்லை; அமைச்சர் கீர்த்தனா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
சிற்றுந்து இருந்து நவீன உடையில் பெண் ஒருவர் இறங்கிச் செல்லும் காணொளி ஒன்று அதிகமாக இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b122ff0a-0fcf-42f2-9459-19d3404a2507/26-6a8bd39e46e46.webp' /></p><h2>பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை</h2><p>

இந்தநிலையில் சிற்றுந்தில் இருந்து இறங்கிச் செல்லும் அந்த பெண் தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனாவை போன்று இருப்பதால், அது அமைச்சர் கீர்த்தனா என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “அந்த காணொளியில் இருப்பது தாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அது தாமாக இருந்தாலும்கூட, அதில் என்ன பிரச்சனை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><p>

பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதமாக்குவது பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தனது நிர்வாகம் மற்றும் கொள்கைகளை விமர்சிக்க முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வதந்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் கீர்த்தனா விசனம் வெளியிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடாகக் கோரும் சாந்த பண்டார!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shantha-bandara-seeks-500-million-in-compensation-1787549958"></link>
            <id>https://jvpnews.com/article/shantha-bandara-seeks-500-million-in-compensation-1787549958</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடாகக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடாகக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். </p><p> 


இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, 

தனது மகன் பணக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு ஒரு திரைப்படம் போல பரபரப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb16883-ac8f-4819-ac5f-eb2c41f3f5ef/26-6a8bd90804701.webp' /></p><p>
</p><p>
சம்பவம் நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் சுற்றளவுக்குள் தனது மகன் இருந்ததாக பொலிஸார் முதலில் கூறியதாகவும், பின்னர் நாரஹேன்பிட்ட என்றும், அதன் பிறகு இராஜகிரிய என்றும் பொலிஸார் முரண்பாடான தகவல்களைத் தந்தனர்.</p><p> 

நீதிமன்றம் இந்த விவகாரத்தை சுயாதீனமாக பரிசீலித்தது, தனது சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பிய போது பொலிஸாரால் தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.</p><p></p><h2>&nbsp;தனது குடும்பத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது</h2><p> 

தன்னைத் தாக்குவதற்கான ஒரு வழியாக அரசியல் எதிரிகள் தனது மகனை இலக்கு வைத்துள்ளனர். இந்த சம்பவம் தனது குடும்பத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. </p><p>


இது ஒரு நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல், இது ஒரு குற்றமாகும். தனது குடும்பம் ஏன் இலக்கு வைக்கப்பட்டது என்று தான் நம்புவதற்கான காரணங்களை விரிவாக வெளிப்படுத்துவதாக உறுதியளிக்கிறேன் என்றார்.</p><p></p><p> </p><p>

கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியனைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை 21 அன்று சாந்த பண்டாரவின் மகனான அனுத பண்டார மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-24T05:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியிடம் சுரேஷ் சலேவின் தாயார் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saleh-s-mother-makes-heartfelt-request-president-1787549493"></link>
            <id>https://jvpnews.com/article/saleh-s-mother-makes-heartfelt-request-president-1787549493</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.</p><p> </p><p></p><p>நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தனது மகன் 37 வருடங்களாக இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி, நாட்டுக்காக தனது இளமைக் காலத்தையும் குடும்பத்துடன் கழிக்கக்கூடிய பெறுமதியான வருடங்களையும் தியாகம் செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea06009f-1f9e-4770-9668-035909e22870/26-6a8bd73703362.webp' /></p><p>வயதான தாயாக தனது மகன் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருப்பதைக் காண்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

எவ்வாறாயினும், எந்தவொரு விசாரணையையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும், குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை பரிசீலித்து, சாட்சிகள் இருப்பின் அவற்றை விசாரித்து உண்மையைக் கண்டறியுமாறும் அவர் கோரியுள்ளார். </p><p>

விசாரணைகள் நடைபெறும் அதேவேளை, தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் என ஒரு தாயாக கருணையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அனைத்து விசாரணைகளும் சாட்சிகளின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் எனவும், தடுப்புக் காவலானது சாட்சிகளுக்கு மாற்றீடாக அமையக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். </p><p>

அத்துடன், தனக்கு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தான் விசேட சலுகைகளை எதிர்பார்க்கவில்லை எனவும் நீதி,மனிதநேயம் மற்றும் நியாயமான ஒரு சந்தர்ப்பத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இறுதியாக, தனது மகன் சுதந்திரமாக சட்டத்தின் முன் முகம்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sumanthiran-jaffna-north-land-liberation-struggle-1787548560"></link>
            <id>https://jvpnews.com/article/sumanthiran-jaffna-north-land-liberation-struggle-1787548560</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
</p><p></p><p>இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebf1408-3f7b-4b8f-a401-4731a1aa2124/26-6a8bd392391ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc017983-68f7-4d11-9f40-023337253b89/26-6a8bd392e1cfd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083245f5-caf2-4880-9dab-b69ea2f9f585/26-6a8bd39393fb7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ed545f-0cc9-4707-bb59-23d55320ec5c/26-6a8bd39446c96.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5163798-0abf-4ffc-9130-08a6fdbc1336/26-6a8bd395014b4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T05:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 நாடுகளுக்கு விசா தடை செய்த டிரம்ப்; திருப்பி அடித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trump-imposed-visa-ban-on-75-countries-court-order-1787547901"></link>
            <id>https://jvpnews.com/article/trump-imposed-visa-ban-on-75-countries-court-order-1787547901</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அரசின் உத்தரவுக்கு எதிராக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அரசின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. </p><p>இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என கூறி, விசா தடையை ரத்து செய்ய நீதிபதி ஜீனெட் வர்காஸ் உத்தரவிட்டுள்ளார்.

 இந்த தீர்ப்பு அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bbfbb0-eabe-4902-bbf3-94b8dd001ec1/26-6a8bd0ff4a2e7.webp' /></p><h2>&nbsp;விசா தடையை ரத்து செய்ய நீதிபதி&nbsp; உத்தரவு</h2><p>
 
2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கையின் கீழ் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து, ஏமன் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவது நிறுத்தப்பட்டது. </p><p>

அதிக ஆபத்து கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவுக்கு பொருளாதார சுமையாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் அளித்திருந்தது.</p><p></p><p>
</p><p> 
ஆனால், விசா விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பரிசீலிக்காமல், அவர்களின் பூர்வீக நாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து விசா மறுக்குமாறு உத்தரவிடப்பட்டதாக நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், இந்த உத்தரவை பிறப்பித்த வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 
இந்தத் தீர்ப்பின் மூலம், குறிப்பிட்ட கொள்கையை மட்டும் காரணமாகக் கொண்டு செய்யப்பட்ட விசா மறுப்புகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T05:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462"></link>
            <id>https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462</id>
            <summary type="text">காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். </p><p>

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf74ad4-32ae-462c-aa4a-4646628a949b/26-6a8bcf47dd5ea.webp' /></p><p>இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். </p><p>

இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை - மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வறட்சி வறட்சியான காலநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drought-and-dry-weather-conditions-in-many-parts-1787546620"></link>
            <id>https://jvpnews.com/article/drought-and-dry-weather-conditions-in-many-parts-1787546620</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>
இந் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de7339f2-4746-4a87-92c0-dc6d963c5b1d/26-6a8bcbfdbe98f.webp' /></p><p>
</p><p>
இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.</p><p>

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T04:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று ‘Amber’ வெப்ப எச்சரிக்கை ; மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/amber-heat-warning-in-place-many-parts-sri-lanka-1787546386"></link>
            <id>https://jvpnews.com/article/amber-heat-warning-in-place-many-parts-sri-lanka-1787546386</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039; எச்சரிக்கை&#039; (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இயற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
நேற்று(23) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1ec59f-b44f-40f2-bf44-0aa7bb73e15c/26-6a8bcb13a3627.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
</p><p>
குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.
</p><p>
வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.</p><p>

வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.</p><p>
வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.</p><p>

இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தை அவமதிப்பு ; விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-against-6-people-including-wimal-weerawansa-1787545704"></link>
            <id>https://jvpnews.com/article/action-against-6-people-including-wimal-weerawansa-1787545704</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/366c0c7e-5e31-48bb-8352-27eb2fd3ec45/26-6a8bc8694bfd7.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போதுஇ இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை விமர்சித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தகவல்களைச் சமர்ப்பித்தது.
</p><p>
முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் முதற்கட்ட அவதானிப்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டது.
</p><p>
அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-health-inspectors-union-action-islandwide-1787544981"></link>
            <id>https://jvpnews.com/article/public-health-inspectors-union-action-islandwide-1787544981</id>
            <summary type="text">இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.</p><p>
</p><p></p><p>கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8aa3b57-3fa6-48cf-ae18-fb3e8ce04b1d/26-6a8bc59747b1f.webp' /></p><p>

இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடி சோதனை ; போலி தரச் சான்று குடிநீர் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-quality-certificat-drink-water-bottles-seized-1787544527"></link>
            <id>https://jvpnews.com/article/fake-quality-certificat-drink-water-bottles-seized-1787544527</id>
            <summary type="text">கொழும்பு அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
</p><p>
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள் இருந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abe0867-3a08-40bd-967d-64e3afa4f9cf/26-6a8bc3d0d607e.webp' /></p><p>

அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை கவனமாக சரிபார்க்குமாறும், </p><p>சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத மர்ம சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-body-recovered-from-jaffna-beach-1787543464"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-body-recovered-from-jaffna-beach-1787543464</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியது 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியது 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2ec2f91-3ccb-4cab-8442-d1bb595e8678/26-6a8bbfa966fb5.webp' /></p><p>சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. </p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் இருந்த விசேட வைத்தியர் திடீர் மாயம் ; பொலிஸார் தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065"></link>
            <id>https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c397f399-a76a-4144-9715-1f676bd5372f/26-6a8bba32e6836.webp' /></p><p>இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்றைய தினம் அப்பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சந்திர கிரகணத்தைப் போல் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734"></link>
            <id>https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734</id>
            <summary type="text">எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. 

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p> 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9a9d8-5ff5-4e12-a6b5-4cd534a43b1e/26-6a8bb8e78fc35.webp' /></p><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.</p><p>எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர். 

சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். </p><p>

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது.</p><p> வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும். </p><p>

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p> 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. 

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. </p><p>காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். </p><p>

இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலைச் சம்பவம் ; மேலும் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944"></link>
            <id>https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கொலை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aecbb5-ea60-4c37-88c8-8885c05d3b91/26-6a8bb5d15cffb.webp' /></p><p>இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T03:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளம் பொறியியலாளரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&amp;nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">&nbsp;நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a9bd65-7887-4f55-8cd1-0f6d3c714022/26-6a8b95c48321a.webp' /></p><p style="text-align: justify; ">&nbsp;நேற்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">


விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையும் சனிபகவான் ; சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676</id>
            <summary type="text">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.</p><p style="text-align: justify; ">தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் நிலைபெற்றுள்ள சனிபகவான், ஏப்ரல் 17 அன்று ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தது. இப்போது அது ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53545906-8d15-4bf1-95a5-931690553f6b/26-6a8b9d569fc73.webp' /></p><h2 style="text-align: justify; ">அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> இது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் :</b>இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும்.&nbsp; உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.



வேலையில் இருக்கும் நபர்களுக்குப் பணியிடத்தில் ஆதரவு கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முக்கிய இலக்குகளை அடைய உதவும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும், மேலும் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>மிதுனம் :</b>&nbsp;ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம்,&nbsp; நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம், இது திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்,&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம் :&nbsp;</b>ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை எதிர்பார்க்காத சில வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். இந்த காலகட்டத்தில் சில நற்செயல்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களின் நற்பெயரை அதிகரிக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:24:45+00:00</updated>
        </entry>
    </feed>
