<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T23:31:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயால் டபுள் ஜாக்பாட் ; உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518"></link>
            <id>https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6d7aef-b855-4f8d-a341-b88790e792c1/26-6aa487a12e803.webp' /></p><p> சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள். இந்த பதிவில் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12008d73-ad87-4c8d-87ac-546325b15f6f/26-6aa487a06b0cd.webp' /></p><h4>ரிஷபம்</h4><p>
செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால் அவர்கள் அனைத்து வகையான நிதி நன்மைகளையும் அடையப்போகிறார்கள். பல மகிழ்ச்சியான மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்க இதுவே சிறந்த நேரம்.

வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு புதிய வேலை உங்களைத் தேடி வருகிறது. நிதி நிலைமை அவர்கள் முற்றிலும் எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்க இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59737d5-deb5-4fe7-a241-596c57dfcaa4/26-6aa487a1e1f1c.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது செவ்வாய் அவர்களின் பத்தாவது வீட்டிற்குள் நுழையப்போகிறார். இதனால் அவர்கள் வணிகம் மற்றும் வேலையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். இது நிதி நிலையை அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், மேலும் வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம். கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இதனால் பல்வேறு பணிகளில் தடையின்றி பங்கேற்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba36a56c-fec4-45d6-bcc5-b873e5d6c1b5/26-6aa487a295a95.webp' /></p><h4>கும்பம்</h4><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருந்து, தற்போது ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். செவ்வாயின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்திலிருந்து குடும்பம் வரை அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.</p><p>அதே நேரத்தில் வேலையில்லாதவர்களுக்கு சரியான வேலைகள் கிடைக்கும், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் வேலையில் நல்ல நற்பெயரைப் பெறலாம், மேலும் பல்வேறு திட்டங்களை முடிப்பதில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இது அவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9bd97cd-6290-4c70-a1f0-bd4b1dcda1c4/26-6aa487a34e53f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T23:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்மைக்குறைபாடு சிகிச்சை ; 24 வயது இளைஞனின் வயிற்றுக்குள் கருப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430"></link>
            <id>https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சிகிச்சை பெறுவதற்காக 24 வயது இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
</p><p>
வெளிப்புறமாக அவருக்கு ஆணுக்குரிய உடல் அமைப்புகள் இயல்பாகவே இருந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருப்பது தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017eb9d8-3690-4c1b-ac72-ee644af969fb/26-6aa473c087110.webp' /></p><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஸ்கேன் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் பெண்களுக்கு காணப்படும் கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>

மேலும், விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும் விதைப்பையில் இல்லாமல் வயிற்றுப் பகுதியிலேயே இருந்ததும் மருத்துவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p>

இந்த அரிய மருத்துவ நிலை, மருத்துவ ரீதியாக 'பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்' (Persistent Müllerian Duct Syndrome) என அழைக்கப்படுவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வயிற்றுக்குள் இருக்கும் விரைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கக்கூடும் என்பதால், உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞருக்கு குறைந்த அளவு காயம் ஏற்படும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றுப் பகுதியில் இருந்த கருப்பை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் தொடர்பில் மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் மருத்துவ ரீதியாக மிகவும் அரிய ஒன்றாக கருதப்படுவதுடன், குழந்தையின்மை அல்லது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவு ; பொலன்னறுவையில் இன்று ஜனாதிபதி பங்கேற்கும் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-attended-by-the-president-polonnaruwa-today-1789164090"></link>
            <id>https://jvpnews.com/article/rally-attended-by-the-president-polonnaruwa-today-1789164090</id>
            <summary type="text">பொலன்னறுவையில் இன்று (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

&quot;மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவையில் இன்று (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.</p><p></p><p>

"மக்களின் ஆட்சி - ஈராண்டு பலம், அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி, இன்று மாலை 4 மணிக்குத் ஆரம்பமாகவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3421b8-b7db-4c83-818f-300a5dfa3e89/26-6aa47a3c0ba5c.webp' /></p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளில் இந்தப் பேரணியும் ஒன்றாகும்.
</p><p>
விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையை மையமாகக் கொண்டு பொலன்னறுவை பேரணி நடத்தப்படவுள்ளதாக இதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரப்படுத்தல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அண்மைய நாட்களில் நடைபெற்ற பேரணிகளில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த காலாண்டில் மின் கட்டணம் குறித்து வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/electricity-tariff-information-energy-minister-1789163581"></link>
            <id>https://jvpnews.com/article/electricity-tariff-information-energy-minister-1789163581</id>
            <summary type="text">எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாநிலக்க நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாநிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அத்துடன், எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக நாட்டின் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>நாடாளுமன்றத்தில் அமைச்சுசார் அறிவித்தல்களின் கீழ் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c33ca61-408a-41ac-a817-b5b0d21cda23/26-6aa4783ebd5ce.webp' /></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மக்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
</p><p>
2026 ஆம் ஆண்டில் எல் நினோ நிலைமை காரணமாக மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதால் மின்சார உற்பத்திச் செலவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார்.
</p><p>
மேலும், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையான மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோ நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கையில் அதன் தாக்கம் தீவிரமாகக் காணப்படுவதாகவும், இந்த நிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
அதேநேரம், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
ஓகஸ்ட் மாதம் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தற்போது நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 58.7 வீதமாக இருப்பதாகவும், இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறந்த நிலை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>

எல் நினோ தாக்கத்தால் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என்றும், எதிர்மறையான தாக்கங்களை விட நேர்மறையான விளைவுகளே அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:53:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வலி வடக்கு காணி பிரச்சினை ; மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-valikamam-north-land-issue-allegatio-public-1789160437"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-valikamam-north-land-issue-allegatio-public-1789160437</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சென்று குறித்த மகஜரை கையளித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89ec384-7ac2-45d2-8be5-eaf45a6663f6/26-6aa46bf6bed1a.webp' /></p><p>இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193"></link>
            <id>https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்&nbsp; நேற்று (11) நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ரஜஎல கம், மின்னேரிய பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60b65962-ad30-40a4-be40-215dc340baf1/26-6aa4539335142.webp' /></p><p>வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்திலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த விவசாயி மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கிண்ணம் ; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362"></link>
            <id>https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.</p><p></p><p> 

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec02c37c-a894-4c9c-92a5-dd390808a8dd/26-6aa463dc05e60.webp' /></p><p>துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். </p><p>

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Chamari Athapaththu மற்றும் Chamudi Praboda தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். </p><p>

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.</p><p> 

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் Harshitha Samarawickrama அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், Kavisha Dilhari 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். </p><p>

பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் Fatima Sana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். </p><p>

இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி ; சிற்றூந்து பந்தயப் பயிற்சி த்ரிஷாவும் வருகிறாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290"></link>
            <id>https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290</id>
            <summary type="text">நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
</p><p>
இதனால், நாளை சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85515a63-849a-4a15-b1e3-6c83503820e3/26-6aa4406c999a5.webp' /></p><p>

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup சிற்றூந்து பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாக Le Mans Cup நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் தகவல்களும் பரவி வருகின்றன.</p><p>

இந்தநிலையில், த்ரிஷா தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
எனினும், நடிகை த்ரிஷா குறித்த சிற்றூந்து பந்தயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504"></link>
            <id>https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504</id>
            <summary type="text">சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>புதிய விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதன்படி, புதிதாக சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் நபர்கள், மேம்படுத்தப்பட்ட அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca83f45-4e3c-47da-88f4-f0c2f7273f73/26-6aa4452a166dc.webp' /></p><p>

குறிப்பாக, புதிய சிம் அட்டை பெறுபவர்களின் நேரலை புகைப்படம் உள்ளிட்ட மேலதிக அடையாளத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக போலியான அல்லது பிற நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை பயனாளர்கள் அனைவருக்கும் நூறு சதவீத அடையாளச் சரிபார்ப்பை உறுதி செய்வதை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இலக்காகக் கொண்டுள்ளதாக பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:15:12+00:00</updated>
        </entry>
    </feed>
