<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T00:58:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் ஈழத்தமிழ்ப் பெண் மதுபோதையில் மீட்கப்பட்டதாகப் பரவும் செய்தி ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117"></link>
            <id>https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117</id>
            <summary type="text">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்கள்&nbsp; பகிரப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify;">இதன் உண்மைத்தன்மை பற்றி பிரெஞ்சு பொலிஸாரிடம் இருந்து பல தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b770e7-4c5f-4da1-ae72-d64ea69229a9/26-6a6be20e8d64d.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify;"> 

இந்தச் செய்தி பிரெஞ்சு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும் இது தொடர்பாக பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது துலூஸ் (Toulouse) நகர பிரதான ஊடகங்களோ (La Dépêche, Actu Toulouse போன்ற தளங்கள்) எந்தவொரு உத்தியோகபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை&nbsp;என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
இந்தச் செய்தி வதந்தியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.பிரான்ஸில் இத்தகைய உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் நடக்கும்போது,
 பாதிக்கப்பட்டவர் தொடர்பில் எது வித தகவல்களையும் பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது ஊடகங்களோ ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒருபோதும் பகிரங்கப்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">எனவே, சமூக வலைத்தளங்கள் அல்லது வெளிநாட்டு புலம்பெயர் ஊடகங்களில் மட்டுமே பரவி வரும் இந்தச் செய்திக்கு நம்பகத்தன்மை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> 

சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் புனையப்பட்டதாக கருதப்படும் இத்தகைய செய்திகளைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T00:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த ஷாக் ; பின்னணியில் பிரபல கட்சியின் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810"></link>
            <id>https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810</id>
            <summary type="text">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது,</p><p style="text-align: justify;">
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7e9f88-15c3-40b3-a9f5-96d469452ceb/26-6a6bec93dec28.webp' /></p><h2 style="text-align: justify;">சட்ட விரோத பொருள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p>

</p><p style="text-align: justify;">இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p style="text-align: justify;">
அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T00:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி ; காதலால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307"></link>
            <id>https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307</id>
            <summary type="text">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60656991-ed79-4090-8dde-c121e742183c/26-6a6be6b4673cb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனைப் பயன்படுத்தி சிறுமியுடன் நெருக்கமாகப் பழகிய சந்தேகநபர், அவரை காதல் வலையில் சிக்கவைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


கடந்த ஜூலை 5ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது, மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T00:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T23:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியைக் காட்டி கொலை முயற்சி ; அதிரடி கைதான பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-over-gunpoint-murder-attempt-1785449763"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-over-gunpoint-murder-attempt-1785449763</id>
            <summary type="text">கல்கிஸை, பன்சல வீதிப் பகுதியில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிஸை, பன்சல வீதிப் பகுதியில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் 48 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;">பொலிஸாரின் தகவலின்படி, இக்குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதுடன், ரத்மலானையைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலமாகவே அது கைமாற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98ef897-6e29-46b5-9f87-d90da74a371b/26-6a6bcd253b2d3.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நேரத்தில் அப் பெண்ணிடமிருந்து 10.270 கிராம் ஐஸ் போதைப்பொருளும், இக்குற்றச் செயலுக்கான கூலியாக வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35,060 ரூபாய் பணமும்பொலிஸாரினரால் கண்டெடுக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், அன்றைய தினம் சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர்&nbsp; ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
மேலும், கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளைத் தொடரவுள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T22:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான ‘ரத்மலானே சைமா’ ; விசாரணையில் அம்பலமான பெரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912"></link>
            <id>https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a0425f-01a8-4c39-a8fb-548788f0ba46/26-6a6bc201c2827.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

 

இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற 'ரத்மலானே சைமா' உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் இவரே வழிநடத்தியுள்ளார் </p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டுள்ள தோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே மலேசியாவில் தலைமறைவாக வாழ்வதற்கு, கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் இவர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

தற்போது பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் 'குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் சில காலம் செயற்பட்ட இவர், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

 

'குடு அஞ்சு' சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அது குறித்து கஞ்சிபானி இம்ரான் சைமாவிற்கு எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் கஞ்சிபானியுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார்.

 

இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T21:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718"></link>
            <id>https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718</id>
            <summary type="text">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் பொருட்டு மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், மற்றொருவர் பகமூண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce50317-0a22-4341-8da2-083707cf033c/26-6a6bb96f90fb9.webp' /></p><h2 style="text-align: justify; ">தடுப்புக் காவல்</h2><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; ">கடந்த 25ஆம் திகதி, பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகத்தின் முன்பாக நீல நிற முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">


சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட அவசர வீதித் தடைச் சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை நவகமுவ பொலிஸார் கைதுசெய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவு பெறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று (29) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய இளம் ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323</id>
            <summary type="text">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">புதன்கிழமை மாலை வேளையில் புல்மோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae7d64b-da80-416f-bb21-b1dd5916f3d9/26-6a6ba844dc2c3.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">விபத்தில் படுகாயமடைந்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T19:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223"></link>
            <id>https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.
</p><p>

போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய வீதிகள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, நோயாளர்களிடம் விரைவாக சென்றடைய இச்சேவை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821a4fbd-4d00-469d-88eb-5b9ec0609a68/26-6a6ba3f8d9e9b.webp' /></p><h2>அவசர மருத்துவ உதவி&nbsp;&nbsp;</h2><p>

நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, நோயாளருக்குத் தேவையான உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
</p><p>
இச்சேவையில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
இதற்காகச் விசேடப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் அவசரப் பிரிவுகளில் களமிறக்கப்படுவர்.</p><p></p><p>
</p><p>
அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய நகர்ப்புறங்களில் இச்சேவை முதன்மையாகச் செயல்படுத்தப்படும்.

</p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்பகட்டமாக கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு சோதனையில் சிக்கிய பெண் ; சோதனையில் கிடைத்த பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142"></link>
            <id>https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்று (29) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 75,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24995d6-f2c3-4971-8b79-22ed54f6a959/26-6a6b9fecaca7f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T19:02:27+00:00</updated>
        </entry>
    </feed>
