<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-20T16:32:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்! கொதித்தெழுந்த பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636"></link>
            <id>https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>
குறித்த பயணி அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரப் பயணத்துக்காக ஆசனங்களை முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7604fbc-3de7-4bef-b921-4076c1fb39a7/26-6a86edf694527.webp' /></p><h2>&nbsp;பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தல்</h2><p>

 எனினும், நள்ளிரவு 2.00 மணியளவில் கெப்பிட்டிகொல்லாவ அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு , பொலிஸார் சோதனையிட்ட போது, "திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறுமாறு" பேருந்தில் இருந்த&nbsp; பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p> 

 பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பேருந்துக்கு உரிய வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து பொலிஸார் அப்பேருந்தை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைத்து, பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p><p>

இறுதியில் மற்றுமொரு பேருந்து மூலம் பயணிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், போதிய ஆசனங்கள் இன்மையால் பயணிகள் சிலர் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த பயணி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>&nbsp;பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களின் அலட்சியப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பயணிகளின் அவசரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்தை இயக்கியமை மிகப்பெரிய தவறாகும் என&nbsp; பயணி&nbsp; சாடியுள்ளார்.</p><p>

அதேவேளை, சட்டப்படி தலையிட்டு நள்ளிரவில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் செயலை அவர் பாராட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655</id>
            <summary type="text">2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படுதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a038c6-23de-439a-8ec8-bb1518846d82/26-6a8724b8cdc89.webp' /></p><p>இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் 130 பாடநெறிகளின் கீழ் பட்டப்படிப்பு அல்லது தேசிய மட்டத்திலான டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். </p><p>

இலங்கை முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3 ஆம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.</p><p> 

அதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்வதாக களுத்துறை மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரை; நாசாவின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முட்டைக்கோஸ் மற்றும் வசாபி கடுகு கீரைகளை வெற்றிகரமாக விளைவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1c93d9-6e1b-46ff-bb84-ae0150792b4c/26-6a86e03dad1ce.webp' /></p><p>

இந்நிலையில், அந்த கீரைகளை இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் அனில் மேனன் சாப்பிடும் காணொளி தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி ; பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727"></link>
            <id>https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bfea72-258f-4485-81ea-1a06628f9647/26-6a86f620deda4.webp' /></p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை - பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
</p><p>
தாக்குதலுக்கு இலக்கான 04 வயதுடைய பெண் குழந்தையும் 07 வயதுடைய ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

இந்த தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்கும், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பின்னவலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயோத்தி ராமர் கோவிலின் பிரசாதம்; Amazon நிறுவனத்துக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-imposed-on-amazon-over-ayodhya-ram-prasad-1787226459"></link>
            <id>https://jvpnews.com/article/fine-imposed-on-amazon-over-ayodhya-ram-prasad-1787226459</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

'சந்து டிரேடிங் கம்பனி' எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீகாரி பிரதர்ஸ்' என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f657a7d-ee5b-4e6b-811d-fbe93046b558/26-6a86e95c9af9a.webp' /></p><p> </p><h2>நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா&nbsp;</h2><p>

நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகளின் விபரக் குறிப்புகளில் 'அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்' என்றும், 'ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்' என்றும் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இதனை உண்மை என நம்பி ஏராளமான நுகர்வோர்கள் கொள்வனவு கட்டளை செய்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இவை எதுவும் உண்மையான கோவில் பிரசாதங்கள் அல்ல என்பது விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்தது.</p><p> இதனையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அமேசன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.

அதோடு, "நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே எனக் கூறிக்கொண்டு இவ்வாறான தவறான விற்பனைப் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது" எனவும் அமேசன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு' அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T13:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜகிரிய பகுதியில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691</id>
            <summary type="text">&amp;nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், குறித்த அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2da605a-214e-4e5f-8c91-26760d53848d/26-6a86fdccd967b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T13:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் பியூமி ஹன்சமாலிக்கு தொடர்பு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428"></link>
            <id>https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி ஹன்சமாலி கடுமையாக மறுத்துள்ளார்.
</p><p>


தாம் இலங்கையில் இல்லாத நிலையில், சில முகநூல் பக்கங்கள் தம்மை தொடர்புபடுத்தி போலியான செய்திகளைப் பரப்புவதை அறிந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d71969d-00b5-4cc6-9db8-fb7a28bfd02e/26-6a86f8ddb0af5.webp' /></p><p></p><h2>ஷிரான் பாசிக்&nbsp; யார் என்றே&nbsp; தெரியாது...&nbsp;</h2><p>
</p><p>


ஷிரான் பாசிக் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள பியூமி ஹன்சமாலி, டுபாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கெஹெல்பத்தர பத்மேவை மாத்திரமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தான் உழைத்த பணமே தன்னிடம் இருப்பதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் ஊடாகவே முன்னேறியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், போதைப்பொருள் அல்லது கருப்புப் பணம் தனக்குத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மேலும், தன்னைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் பியூமி ஹன்சமாலி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T12:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் ; சூடாகி கனிமொழி கூறிய பதில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.</p><p> 

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம், தவெக தரப்பு முன்வைக்கும் இந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec890fd-3f55-44d4-94bd-a514cfb6b05f/26-6a86cb13b1400.webp' /></p><h2>&nbsp;தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இதற்கு பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் எந்த குறிக்கோளும் இல்லை என்றார்.</p><p></p><p> 
 
மேலும், கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோது, ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்பே மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p> 
தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெளியாகும் போது காங்கிரஸ் தரப்புதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

இன்னிலையில் கனிமொழியின் இந்த பதில் தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்தான விவாதங்களை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T12:31:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் தாயும் , சிறுமியும் சாரதியும் பலி; ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-child-and-driver-killed-in-accident-1787225641"></link>
            <id>https://jvpnews.com/article/mother-child-and-driver-killed-in-accident-1787225641</id>
            <summary type="text">&amp;nbsp;தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>பியகம பகுதியில் இருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, திடீரென வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஐவர் படுகாயமடைந்து&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐவர் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 39 வயதுடைய பெண்ணும் 7 வயதுடைய சிறுமியும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T11:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் – இணுவில் மதுபானசாலை மூட கோரி போராட்டம்; வீதிக்கு இறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-demanding-the-closure-inuvil-liquor-shop-1787223262"></link>
            <id>https://jvpnews.com/article/protest-demanding-the-closure-inuvil-liquor-shop-1787223262</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe68f0f8-b7eb-4412-abf8-c257bf30f689/26-6a86dcdfa353a.webp' /></p><h2>கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்</h2><p>
</p><p>
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p>
</p><p>பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன் மதுபான சாலையை அகற்றுமாறு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T10:51:49+00:00</updated>
        </entry>
    </feed>
