<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T13:24:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை கொலையாளிக்கு உதவிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960</id>
            <summary type="text">&amp;nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
 

குறித்த கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479b33db-2977-40ba-bb39-031202207905/26-6a89a2a191751.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517"></link>
            <id>https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.94 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 19,945 நோயாளர்களும், கொழும்பில் 18,588 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a085291-36bc-4b70-9c6c-20a674701b89/26-6a8999172fb66.webp' /></p><p>
</p><p>


மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை; 13 ஆண்டுகளின் பின் கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794"></link>
            <id>https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794</id>
            <summary type="text">&amp;nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்.</p><p>


 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3e204f-5fa3-4a9a-a6aa-ad0fc29956df/26-6a898a8c12cf4.webp' /></p><h2>2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல்&nbsp;</h2><p> 

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p>

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.

 குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.
</p><p>
சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும், செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்பளித்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T12:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T11:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sugeeshwara-bandara-admitted-to-prison-hospital-1787396995"></link>
            <id>https://jvpnews.com/article/sugeeshwara-bandara-admitted-to-prison-hospital-1787396995</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>


அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (21) சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa115cae-32d1-4b1b-9ebc-d88894e0574b/26-6a8983852cbde.webp' /></p><p>அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T11:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் வீடு சென்றனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kovil-suffered-eye-injuries-in-jaffna-return-home-1787394394"></link>
            <id>https://jvpnews.com/article/kovil-suffered-eye-injuries-in-jaffna-return-home-1787394394</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம்<a href="https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243" target="_blank"> பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழா</a>வைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
</p><p>
பாதிக்கபப்டவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7908f8f6-9542-4644-8445-5958ecb6a636/26-6a89795c96377.webp' /></p><p>
</p><p>
இன்னிலையில் வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:24:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனால் உயிரிழந்த குடும்பம்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260"></link>
            <id>https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260</id>
            <summary type="text">&amp;nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கவ்டா மலையில் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 
அந்த 18 வயது வாலிபர் மலையில் விளிம்பில் நின்றுகொண்டு தனக்கு Iphone வாங்கி தர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a509fdb6-3800-4d0d-8ebe-7f151b09ff4b/26-6a896d1dce541.webp' /></p><h2>&nbsp;மலை விளிம்பில் நின்றுகொண்டு&nbsp; மிரட்டல்</h2><p> இல்லையென்றால் குதித்துவிடுவேன் என மூன்று மணி நேரமாக அவரின் பெற்றோரை தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

 ‘எப்படியாவது உனக்கு ஐபோன் வாங்கி கொடுத்து விடுகிறோம். </p><p>கீழே குதித்துவிடாதே ’ என அவரின் பெற்றோர் கெஞ்சிதுடன், அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.</p><p></p><p> 

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தடுமாற அவரை எப்படியாவது பிடித்து இழுத்து விடலாம் என அவ்ரை பிடிக்க வாலிபரின் தந்தை அருகில் சென்றபோது இருவதுமே மலை உச்சையிலிருந்து கீழே விழுந்தனர்.
</p><p>
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாய் இருவரையும் காப்பாற்றி விடலாம் எனக் கூறி அவரும் கீழே குதித்திருக்கிறார். இறுதியில் அவர்கள் மூவருமே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டனர்.</p><p></p><p> 

இந்த தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கலில் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T10:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-one-dies-of-electrocution-1787393244"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-one-dies-of-electrocution-1787393244</id>
            <summary type="text">அனுராதபுரம் -கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

 </p><p> துயர சம்பவம் நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் 
உயிரிழந்தவர் தௌபீக் முகமட் தாரிக் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a73718-28c6-4594-b0d1-19436066ae17/26-6a8974dd8e44b.webp' /></p><h2>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை</h2><p>

விவசாய இயந்திரத்தை கழுவுவதற்காக வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் கொம்ரசர் இயந்திரத்தை இணைத்திருந்த நிலையில், மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார்.
</p><p>உடனடியாக கஹடகஸ்திகிலிய – ரத்மல்கஹவெவ கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T10:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனிப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-vice-chancellor-university-of-kelaniya-1787392871"></link>
            <id>https://jvpnews.com/article/new-vice-chancellor-university-of-kelaniya-1787392871</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.



இதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>



இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe12b59-08f1-4011-a4b3-00a0b20c7f46/26-6a8973688ae23.webp' /></p><p>
</p><p>


பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.</p><p>



இந்த நியமனமானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித இனம் முடிவுக்கு வருகிறதா? விவாததை கிளப்பிய 1960-ல் கணிக்கப்பட்ட ‘உலக அழிவு நாள்’!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/in-1960-predicted-humanity-squeezed-to-world-1787389959"></link>
            <id>https://jvpnews.com/article/in-1960-predicted-humanity-squeezed-to-world-1787389959</id>
            <summary type="text">உலக &amp;nbsp; மக்கள் தொகை கணக்கீடுகளின் அடிப்படையில் மனித இனம் நெருக்கடியால் அழியும் நாள் மிக அருகில் உள்ளதாக 1960-ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய ஆய்வுக் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக &nbsp; மக்கள் தொகை கணக்கீடுகளின் அடிப்படையில் மனித இனம் நெருக்கடியால் அழியும் நாள் மிக அருகில் உள்ளதாக 1960-ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய ஆய்வுக் கட்டுரை வெளியீட்டின் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் ,மனித இனத்தின் அழிவு குறித்து தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.</p><p>

 ஆஸ்திரிய இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் (Heinz von Foerster) மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிட்ட கணிப்பின்படி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a090ef4-7f62-4141-8911-3802a3313497/26-6a896808ed955.webp' /></p><h2>மனித இனம் பசியால் இறக்காது நெருக்கடியால்&nbsp;அழியும்</h2><p> </p><p>“மனித இனம் பசியால் இறக்காது, மாறாக மக்கள் தொகை பெருக்கத்தின் நெருக்கடியால் (Squeezed to death) அழியும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>

கடந்த 2,000 ஆண்டுகால உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தையும், 24 வெவ்வேறு காலகட்ட தரவுகளையும் கணித சூத்திரங்களின் மூலம் பகுப்பாய்வு செய்து இந்த முடிவை ஃபோர்ஸ்டர் வெளியிட்டார்.</p><p></p><p> மக்கள் தொகை இரட்டிப்பாகும் கால இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மக்கள் தொகை எல்லையற்ற நிலையை எட்டி, பூமியில் இடநெருக்கடியை உருவாக்கும் என்றும், அதுவே மனித இனத்தின் ‘உலக அழிவு நாள்’ (Doomsday) என்றும் கணி கணிதவியல் முறையில் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5402e3e-2e95-40f2-98c2-84a294326150/26-6a896809c52a7.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய நவீன மக்கள் தொகை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தக் கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
</p><p>
 1960-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு 2.2% ஆக உச்சத்தில் இருந்த நிலையில், 2026-ல் இதன் வளர்ச்சி விகிதம் 0.84% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது. </p><p>மேலும், ஃபோர்ஸ்டரின் கணிதக் கோட்பாட்டைப் பின்னோக்கி இயக்கிப் பார்த்த போது, மனித இனம் 200 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற தவறான முடிவு கிடைத்ததால், அவரே தனது கணிப்பில் பிழைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
</p><p>
தற்போது உலகின் மக்கள் தொகை சுமார் 8.2 பில்லியனாக இருக்கும் நிலையில், மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் ஃபோர்ஸ்டர் குறிப்பிட்ட ‘நெருக்கடி அழிவு’ ஏற்பட வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.</p><p> 

எனினும், குறிப்பிட்ட அந்தத் தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்து இணையவாசிகள் மத்தியில் இது குறித்த சுவாரஸ்யமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான வாகன பதிவு ஆவணங்களை தயாரித்து விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-fake-vehicle-registration-documents-1787387556"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-fake-vehicle-registration-documents-1787387556</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகே வாகனப் பதிவிற்கான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afe76df-6811-4a26-8edb-1f68a2aadccd/26-6a895ea649bde.webp' /></p><h2>&nbsp;போலி ரப்பர் முத்திரை</h2><p> </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142</id>
            <summary type="text">&amp;nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடப்பதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd1067e-dafb-404f-a174-da9f709a7e42/26-6a895d07c5bc8.webp' /></p><h2>&nbsp;கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம்</h2><p> 

உயிரிழந்தவர் கலஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஆவார்.

இப் பெண் தனது மகனுடன் கலஹிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
இன்னிலையில் சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மகன், தாய் தலையில் பலத்த இரத்தக் காயங்களுடன் வீட்டின் உள்ளே இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p>

இச் சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான நீதவான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p>

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID காவலில் வேண்டாம்; ஜனாதிபதி அனுரவிடம் கெஞ்சும் சுரேஷ் சல்லே மனைவி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294"></link>
            <id>https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். </p><p>

ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caaa6003-f1b6-4159-94d4-0908ed96f2e7/26-6a8959b8018cd.webp' /></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு கோரி&nbsp; கடிதம்</h2><p>

முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் இலங்கை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ஐஊனு எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சல்லேவுக்கு தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:58+00:00</updated>
        </entry>
    </feed>
