<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T06:42:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578"></link>
            <id>https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p>மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ac9bfbb-370e-458b-9001-b63d19847a24/26-6a87dc035d215.webp' /></p><h2>&nbsp;மூன்று நாள் தேசிய துக்க காலம் </h2><p> </p><p>&nbsp;மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdaaa352-7fde-4d9c-a364-b6c79f4eeaf3/26-6a87dcdbc5533.webp' /></p><h3>&nbsp;பாராளுமன்றத்தில்&nbsp; அஞ்சலி</h3><p>&nbsp;அதேவேளை காலஞ்சென்ற பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.



சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><p> பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர். 



இதன்பின்னர் அரசாங்கத்தின் அனுதாப அறிக்கையை பிரதமர் ஹரிணி சபையில் வாசித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அஞ்சலி உரையாற்றினார்</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீர் கலந்த தண்ணீரைக் மாணவிகளுக்கு குடிக்க கொடுத்த மாணவன்; சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776"></link>
            <id>https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அரோன் வட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிநீரில் ஏதோ கலந்திருப்பதை அறிந்து சிறுமிகள் இருவரும் உடனடியாகப் பாடசாலை அதிபரிடம் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8525891e-e83f-449d-b7ba-a334f1cf7eb2/26-6a87e88239af5.webp' /></p><h2>சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்</h2><p> </p><p>

எனினும் அதிபர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "வாய் ஒருமாதிரியாக இருந்தால் 10 ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து பாடசாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த மாணவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்த அதிபருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அரோன் துணைப் கோட்டாட்சியர் மஞ்சுஷா கத்ரி தகவலின்படி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கனத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் மேலும் சில ஆண் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் இரவு நேர இணைய பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f514da99-026f-45d8-a8bd-36e6e69707d6/26-6a87f13cd7d7b.webp' /></p><h2>சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள்</h2><p>

சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளிப்படையாக உலா வருகின்றன.

இதை பார்க்கும் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். </p><p>ஒரு சிலர் வழி தவறி செல்லவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, 13 வயதுகுட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
</p><p></p><p>அதோடு இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமுல் செய்யவேண்டும் என்று கோரி குறித்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p></p><p>
இந்த மனுவை விசாரித்த டில்லி மேல் நீதிமன்றம், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும் தடை விதிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p>

இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. எனினும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய தீவிரமான சிக்கல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று டில்லி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811"></link>
            <id>https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e043c5a-14e1-4736-9b53-c9d3439c316a/26-6a87ec8d2c8d0.webp' /></p><p>
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்</p><p>
தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-21T06:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கு காணி விடுப்விப்பு; ஜனாதிபதி விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><p>
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272c908c-7547-4db9-a3a7-bfcc36ab5b05/26-6a87e41ed1131.webp' /></p><h2>&nbsp;விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை</h2><p>தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணியாகும்.</p><p></p><p>&nbsp; &nbsp; அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.</p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p></p><p>
</p><p>
அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் , கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T05:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சொகுசு கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354"></link>
            <id>https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.</p><p>

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல் இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce36d479-51c7-470e-8e5b-3c96bd6ed3e1/26-6a87e2f9551c1.webp' /></p><p>

இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.</p><p> இலங்கைதேநீர்

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T05:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.



நிதிக்குற்றப் புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
</p><p>


நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c318ff80-bf1d-4f97-8653-e57182cc850d/26-6a87de0c8455b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:09:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து ; ஐந்து பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679</id>
            <summary type="text">மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில், கும்புக்கன களுப்பாலம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b417b2c2-f812-413e-9a08-52b36e7424a0/26-6a87a5b977af2.webp' /></p><p>
</p><p>
வெல்லவாய நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம், எதிர்திசையில் இருந்து வந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

விபத்தின்போது டிரெய்லரில் 10 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்களாவர். அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மேலும் மூவர் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் டிராக்டர் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T01:11:28+00:00</updated>
        </entry>
    </feed>
