<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T23:31:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964"></link>
            <id>https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964</id>
            <summary type="text">விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951d3aa1-b30f-418b-9a39-a94e2067e3f7/26-6a9366a61b1b2.webp' /></p><p>இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T23:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி எண்ணும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452"></link>
            <id>https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p>

மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk
</p><p>
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a6c46d-fbb4-48a8-b68f-1eaa589a8481/26-6a9360be360b7.webp' /></p>]]></content>
            <updated>2026-08-29T22:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடல் வெப்பமயமாதல் ; புவியை பேரழிவை நோக்கித் தள்ளும் மனிதத் தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942"></link>
            <id>https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்</p><p>பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b6cb00-5672-40e6-a75a-4762bc53750b/26-6a935ec0ae2a5.webp' /></p><p>

சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும் என்றும், செப்டம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1d5ad36-6137-4655-ab56-d64f8dd1b6c6/26-6a935ebfee3a7.webp' /></p><p>அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பேராசிரியர் எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T22:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் யுவதியை கடத்தியது காதலனா? விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார் இன்று (29) முறியடித்துள்ளனர். இந்தக் கடத்தலை யுவதியின் காதலனே முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p></p><p>கார் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்படுவதாக இன்று பிற்பகல் 01:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. </p><p>

அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த முற்பட்டபோதிலும், அது பொலிஸாரின் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

பின்னர், நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் வைத்து காரை நிறுத்துமாறு மீண்டும் சமிக்ஞை செய்தபோதிலும், அது நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றமையினால் பொலிஸார் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226cfd0e-d605-4432-9578-7f782d976565/26-6a93067657d74.webp' /></p><p>இதன்போது சாரதி காரைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காரினுள் யுவதி ஒருவர் இருந்துள்ளார் என்றும், அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்ட யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காரைச் செலுத்தியவர் கடத்தப்பட்ட யுவதியின் காதலன் எனத் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் மாத்தறை - வெலிகமை மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனது குடும்ப உறவினர்களுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த யுவதி கடத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>

தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதுடன், அவர் கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியது யுவதியின் தந்தை எனக் கூறப்படுகின்றது. </p><p>

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், யுவதி இன்று பிற்பகல் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f60236-258a-455a-94e2-00e3b15c027f/26-6a9312267b524.webp' /></p><p> </p><p>

அதேவேளை, குறித்த கார் கடத்தலை மேற்கொண்ட காதலனுடையது என்றும், அதனை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவிற்கு ஓட்டிவந்துள்ளார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. </p><p>

அந்த இளைஞர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக் குற்றச்சாட்டுகளைக் கொண்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதும் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லூஷன் சூரியபண்டார உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள் ; அரசாங்கம் தீவிர அவதானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iranian-ships-near-sri-lanka-government-high-alert-1788029427"></link>
            <id>https://jvpnews.com/article/iranian-ships-near-sri-lanka-government-high-alert-1788029427</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்கள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்கள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடற்பரப்புக்கு (Territorial Waters) வெளியே நிறுத்தப்பட்டுள்ளதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75a9b8d-c104-4969-8eee-3daf656cbd50/26-6a9329f4710ce.webp' /></p><p>

முன்னதாக, அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக, தங்களின் சொந்த நாட்டுத் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் சுமார் 20 ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதுக்கு அப்பால் (14 கடல்மைல் தொலைவில்)அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் 'டேங்கர்ட்ரேக்கர்ஸ்' (TankerTrackers) இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.</p><p>

ஈரானியக் கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் மற்றும் தடைகளிலிருந்து தப்பித்துச் செயல்படும் "நிழல் கடற்படை" என அழைக்கப்படும் பல கப்பல்கள் உட்பட சுமார் 20 ஈரானியக் கப்பல்கள் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.</p><p>

இருப்பினும், இந்த எண்ணெய் தாங்கி கப்பல்களில் தற்போது எரிபொருட்கள் எதுவும் ஏற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மார்ச் மாதம் இலங்கைக் கடலோரப் பகுதியிலிருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS டெனா' என்ற போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T18:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expedite-lower-malwathu-oya-multipurpose-project-1788027859"></link>
            <id>https://jvpnews.com/article/expedite-lower-malwathu-oya-multipurpose-project-1788027859</id>
            <summary type="text">ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நேரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று முற்பகல் (29) விஜயம் செய்தார்.</p><p> </p><p></p><p>சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டிற்கென 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் எழுந்த சிக்கல்களைத் தீர்த்து கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்பதும், முற்றிலும் உள்நாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a753bf-304c-436d-b9d1-6d087fe5456e/26-6a9323d58dba3.webp' /></p><p>வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தையும், வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், தந்திரிமலை பொகொடவில் மல்வத்து ஓயாவின் குறுக்கே கட்டப்படவுள்ள மேற்படி கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கமானது, 1,69,400 ஏக்கர் அடி நீர் கொள்ளளவைக் கொண்டிருப்பதுடன், இதன் கட்டுமானப் பணிகளின் பின்னர், ரஜரட்டவில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமாகவும் வட மத்திய மாகாணத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் இது அமையும்.</p><p> 

இத்திட்டத்தினூடாக அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அளிப்பது, கீழ் மல்வத்து ஓயா பள்ளத்தாக்கில் கிராமப்புற அபிவிருத்தி மற்றும் விவசாயத்திற்கு நீர் வழங்குவது, தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி பிரதேசமொன்றை உருவாக்குவது, நீர்மின்சாரம் உற்பத்தி செய்வது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் நன்னீர் மீன்வளத்தை மேம்படுத்துவது ஆகிய இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 'யோத வாவி' மற்றும் 'அகித்தமுருப்பு வாவி' ஆகியனவற்றின் கீழ் உள்ள பிரதேசத்தில் பெரும்போகத்தில் 40,000 ஏக்கர் நெல் பயிர்செய்யப்பட்டாலும், நீர் பற்றாக்குறையின் காரணமாக சிறுபோகத்தில் 10,000 ஏக்கர் மாத்திரமே பயிர்செய்யப்படுகின்றது. </p><p>

எனவே, இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதால், சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டு பருவங்களிலும் 40,000 ஏக்கர் நெல் முழுவதையும் பயிர்ச்செய்ய முடியும். 

இதுதொடர்பில் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது எழுந்த பிரச்சனைகள், சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், மேற்படி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி மக்களுக்குப் பலன்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். </p><p>

இத்திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி முக்கிய கவனம் செலுத்தியதுடன், இவ்வாறான 315 குடும்பங்களுக்கு காணி, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்கவும், இந்த காணிகளில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசனம் மூலம் நுண் விவசாய பயிற்செய்கையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். </p><p>

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்ததுடன், 3.4 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்த்தேக்கத்தின் பிரதான அணை சுவரின் கட்டுமானப் பணிகள் சுமார் 60% நிறைவடைந்துள்ளதாகவும், தென்கரை மதகின் கட்டமைப்புப் பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>இத்திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, இதற்கான அத்திவாரம் அமைத்தல் மற்றும் கருங்கற்பாறைகளை தகர்த்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>

மேலும், யானைகளுக்கான தடை வேலி அமைத்தல், சிறிய குளங்களைப் புதுப்பித்தல் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகமொன்றை அமைத்தல் போன்ற பணிகளும் இதனிடையே மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T18:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தி 9 விக்கெட்டுக்களால் வென்ற இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-women-team-united-arab-emirates-9wickets-1788024689"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-women-team-united-arab-emirates-9wickets-1788024689</id>
            <summary type="text">மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இன்றைய (29) போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான இன்றைய (29) போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.</p><p></p><p> 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7f9e491-ccb6-48a5-9cc0-766f4a13550c/26-6a931772aac85.webp' /></p><p>இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சியம் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. </p><p>

இந்நிலையில் 80 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 7.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.</p><p> 

இலங்கை அணித் தலைவி 48 ஓட்டங்களை அதிரடியாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T17:31:37+00:00</updated>
        </entry>
    </feed>
