<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T06:32:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலர் பறிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4591a306-37d6-454c-97a2-5040b3d62caf/26-6a93ccd8c15ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T06:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்த நிவாரண சேவைகளுக்காக நேபாளம் செல்லும் இலங்கை பாதுகாப்புப் படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679"></link>
            <id>https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679</id>
            <summary type="text">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f2f919-8b49-49a4-9f95-246e8568a769/26-6a93c730a303e.webp' /></p><h2 style="text-align: justify; ">நிவாரணப் பணி</h2><p style="text-align: justify; "> 

அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

நேபாளத்தில் நடந்த சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">அத்துடன், அரசாங்கம் என்ற வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி ரீதியாக நிவாரணமாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழுக்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையம் என்பன உள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

இன்னமும் திட்டமிடப்பட்டு வருகிறதே தவிர, அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. </p><p style="text-align: justify; ">

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.</p>]]></content>
            <updated>2026-08-30T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயரதிகாரியின் மீது தாக்குதல் ; சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280</id>
            <summary type="text">கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், சனிக்கிழமை (29) இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db17ef1b-269f-4722-b030-cc911296d0a3/26-6a93c1b982630.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தாக்குதல் நடத்தல் ஆகிய சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கேகாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544</id>
            <summary type="text">கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தக் கொலை தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ce3899-57b9-47f3-898c-84ea91050ab2/26-6a93beda21c96.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> 

இதன்போது, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடைய கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் காதை வெட்டிய சக கைதி ; களுத்துறை சிறைச்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655"></link>
            <id>https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c289e6-8bc6-42d3-92b9-b7b8841cdd32/26-6a93bb60cc038.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அறுவை சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

</p><p style="text-align: justify; ">அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளம் உத்தியோகத்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a06cfc-3c34-47dd-88f7-05142e5f6f77/26-6a93b7edeabe6.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">வ்வாறு உயிரிழந்த இளைஞர் தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் விசாரணையில் தெரியவருகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T04:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி கொன்ற கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huband-murder-wife-1788065138"></link>
            <id>https://jvpnews.com/article/huband-murder-wife-1788065138</id>
            <summary type="text">கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><span style="text-align: left;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dc1e304-c173-48fd-9b12-64a74ffe6d8a/26-6a93b5ebe1703.webp' /></span></p><p style="text-align: justify; "><h2>கடுமையாக தாக்குதல்</h2>சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவியை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">
மேலும், தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T04:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685"></link>
            <id>https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685</id>
            <summary type="text">பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p></p><p>
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93bafc0b-7976-4ad1-97ff-00044d7e4b18/26-6a9384cf030c2.webp' /></p><p>

எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef3ec11-3653-47fa-be49-b15a42e59234/26-6a938386b7458.webp' /></p><p>இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb04b92-8a47-462a-a716-3cb1b56bb323/26-6a93838768a9a.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ba1306-b2bc-47be-8244-5945212ed1c2/26-6a9383881ae59.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ad1011-573d-489f-b7db-8c944f11d669/26-6a938388bf116.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d05c-3d75-40be-8a49-2dc8cbc9a035/26-6a9383896f350.webp' /></p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f816993-2d2b-42a0-ae12-c83d4b37b184/26-6a93838a243db.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T01:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் பெண் வைத்தியர் வழக்கில் புதிய திருப்பம் ; நீதிமன்றில் முக்கிய சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் இடம்பெற்ற மூடிய நீதிமன்ற அமர்வில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்தியர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.</p><p>
</p><p></p><p>2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கில் மொத்தம் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, சந்தேகநபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸாரால் தாம் தாக்கப்பட்டதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் இந்த காணொளியில் காணலாம்......&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/73hmixIp9p0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T00:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும் ; ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365"></link>
            <id>https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365</id>
            <summary type="text">செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இதன் மூலம் 22-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படக்கூடுமா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee2fffb3-1a74-4712-b100-c0c7ef766ec2/26-6a937bbf36e67.webp' /></p><p>

இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தற்போது வெற்றிடங்களாக உள்ள நீதியரசர்களின்பணியிடங்களை நிரப்புவதற்குப் பல நீதியரசர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:39:35+00:00</updated>
        </entry>
    </feed>
