<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T17:40:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பணிக்காக 50 முறை பரீட்சை ; பட்டதாரி இளைஞரின் விபரீத முடிவு ; கண் கலங்க வைக்கும் தந்தைக்கான இறுதி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778"></link>
            <id>https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778</id>
            <summary type="text">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, பீகார் மாநிலம், பக்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, </p><p style="text-align: justify;">பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07175ff9-860f-4873-9c78-d626a28c69fe/26-6a5e5bcc0cdd8.webp' /></p><h2 style="text-align: justify;">மன்னிப்பு கடிதம்</h2><p>

</p><p style="text-align: justify;">
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். </p><p style="text-align: justify;">50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><p style="text-align: justify;">பொலிசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-20T17:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் உள்ள பிரச்சினைகள் ; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-chairs-meeting-on-prison-issues-1784567177"></link>
            <id>https://jvpnews.com/article/president-chairs-meeting-on-prison-issues-1784567177</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cbabbac-5da7-42f4-b167-f899d6905f1e/26-6a5e558ab3691.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">






மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T17:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு நீதி கோரி கடல் தாண்டியும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-in-france-demanding-justice-suresh-sallay-1784553823"></link>
            <id>https://jvpnews.com/article/protest-in-france-demanding-justice-suresh-sallay-1784553823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஈஸடர் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய கைதாயுள்ள சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஈஸடர் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய கைதாயுள்ள சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தி பாரிஸில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>


 பிரான்சில் வாழும் இலங்கை தேசப்பற்றாளர்கள் பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற குடியரசு சதுக்கத்தில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76718b5b-bd00-46ea-8bf7-1b847722c210/26-6a5e21613d451.webp' /></p><h2>தங்களது தேசியக் கடமை</h2><p> 



 பாரிஸ் நகரின் குடியரசு சதுக்கத்தில் ஒன்றுகூடிய பெருந்திரளான இலங்கையர்கள், அமைதி வழி போராட்டத்திலும் சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டனர்.</p><p></p><p>



யுத்த காலப்பகுதியில் பிரான்சிற்கான இலங்கை தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றிய சுரேஷ் சலே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக வெளிநாட்டு மண்ணில் இருந்து ஆற்றிய இணையற்ற பங்களிப்பை&nbsp; இதன்போது நினைவு கூர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bea9bc0-96a3-4727-b1c5-652434ed4aff/26-6a5e221b3c6cf.webp' /></p><p>
</p><p>


அன்று முதல் இன்று வரை நாட்டை நேசிக்கும் மக்கள், மேஜர் ஜெனரல் சலே ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை நன்கு அறிவர் என கூறிய போராட்டக்காரர்கள், தற்போது அவருக்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவாக எழுந்து நிற்பது தங்களது தேசியக் கடமையாகும் என்றும் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T16:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நாடாளுமன்றத்தின் முன் பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள் ; கரப்பான் பூச்சி கட்சி தலைவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-erupts-outside-indian-parliament-1784565456"></link>
            <id>https://jvpnews.com/article/tension-erupts-outside-indian-parliament-1784565456</id>
            <summary type="text">நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p style="text-align: justify;">
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கி நடப்போம் என்ற பேரணியின் போது, 'காக்ரோச் ஜனதா கட்சி' ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a60a976d-e129-4763-b414-036528f0954e/26-6a5e4ed21a410.webp' /></p><h2 style="text-align: justify;">உண்ணாவிரதப் போராட்டம்</h2><p>
</p><p style="text-align: justify;"> 
 நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டனர்.</p><p style="text-align: justify;"> போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தடுத்தனர். </p><p style="text-align: justify;">இந்த சம்பவத்தால் மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜீவ் சௌக், ஜன்பத் உள்ளிட்ட ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
பொலிசார் அமைத்திருந்த பல அடுக்கு இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அங்கு நிலைமை மோசமடைந்தது. </p><p style="text-align: justify;">மேலும் கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியையும் நடத்தினர்.
</p><p style="text-align: justify;">
இந்த தடியடியின் போது, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இருந்த தங்களது கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை பொலிசார் கைது செய்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-20T16:37:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலின மாற்று சுற்றறிக்கை ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "> முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1933dde7-d8db-4088-a3f8-57d008356f34/26-6a5e491fb712c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T16:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2025-git-exam-results-released-1784562371"></link>
            <id>https://jvpnews.com/article/2025-git-exam-results-released-1784562371</id>
            <summary type="text">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். 

மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9aaf732-ef01-477a-a4d2-eeaa634ba3fb/26-6a5e42c4df98e.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;பெறுபேற்று ஆவணங்கள்</h2><p style="text-align: justify;"> நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான <a href="http://www.doenets.lk" target="_blank">http://www.doenets.lk</a> மற்றும் <a href="http://www.results.exams.gov.lk" target="_blank">http://www.results.exams.gov.lk </a>ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p style="text-align: justify;">

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் <a href="https://onlineexams.gov.lk/eic" target="_blank">https://onlineexams.gov.lk/eic </a>இணையத்தளத்தின் 'Personal Account Login' ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.</p><p style="text-align: justify;"> 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, https://onlineexams.gov.lk/eic இன் 'School Account Login' பகுதிக்குள் பிரவேசித்து, அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify;"> 

அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">

உடனடி அழைப்பு இலக்கம்: 1911 </p><p style="text-align: justify;">

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922 </p><p style="text-align: justify;">

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422</p>]]></content>
            <updated>2026-07-20T15:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டி திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dates-announced-for-the-2030-fifa-world-cup-1784553128"></link>
            <id>https://jvpnews.com/article/dates-announced-for-the-2030-fifa-world-cup-1784553128</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2030ஆம் ஆண்டிற்கான 24ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2030ஆம் ஆண்டிற்கான 24ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
</p><p>
இந் நிலையில், இப்போட்டிகள் 2030 ஜூன் 8 முதல் ஜூலை 21 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8675654c-fd88-40be-abcd-0351727e3bd6/26-6a5e1ea9acba6.webp' /></p><h2>&nbsp;கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள்</h2><p>
</p><p>


உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, 1930-ல் முதல் தொடர் நடைபெற்ற உருகுவே, மற்றும் அண்டை நாடுகளான ஆர்ஜென்டினா, பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு சிறப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது.</p><p></p><p> 



இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டங்களில் நடைபெறுகின்றன.
</p><p>


அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து முடிந்த 23ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் வீட்டில் ஒரு இரவு தங்கினால் 52 ஆயிரம் சம்பளம்; எங்கே தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japanese-pay-52-000-spend-night-haunted-house-1784551337"></link>
            <id>https://jvpnews.com/article/japanese-pay-52-000-spend-night-haunted-house-1784551337</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

ஜப்பான் நாட்டில் பல வீடுகள் குறிப்பாக கிராமப்புறங்களில் கட்டப்படும் பல வீடுகள் யாரும் குடியிருக்காமல் அப்படியே கைவிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fb8d0e1-58a9-4fbf-b41e-fd8a9b8cd9a1/26-6a5e17aa9a832.webp' /></p><h2>&nbsp;வயதானவர்கள்&nbsp; &nbsp;தனியாகவே&nbsp; வசிக்கிறார்கள்</h2><p> </p><p>

அதற்கு காரணம் தாய் தந்தை இறந்ததும் அவர்களின் மகன்கள் வேலை வாய்ப்புக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
</p><p>
ஒருபக்கம் ஜப்பானில் வயதானவர்கள் அதிக வருடங்கள் தனியாகவே வீட்டில் வசிக்கிறார்கள்.</p><p></p><p>அவர்கள் இறப்புக்கு பின்னரும் பல வீடுகள் கைவிடப்படுகிறது.

அப்படிப்பட்ட வீடுகளில் பேய்கள் வசிப்பதாகவும் ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஒருபக்கம், ஜப்பானில் ஒரு வீடு வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதோ சுலபமில்லை.</p><p> அங்கே நிறைய விதிமுறைககளை பின்பற்றவேண்டும். மேலும், அதிக வரி செலுத்த வேண்டும். இதனாலே பலரும் வீட்டை அப்படியே விட்டுவிடுகிறார்கள்..

இந்நிலையில்தான், ஜப்பானில் வீடுகளை விற்பதற்கு வீட்டின் சொந்தக்காரர்கள் ஒரு புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>வீட்டில் தனியாக இருப்பவர்கள் இறப்பது, தீ விபத்து, தற்கொலை செய்து கொள்வது போன்ற காரணங்களால் பல வருடங்களாக யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.</p><p> 
அப்படி தங்கவைத்தால் அந்த வீட்டை வாங்க முன்வருவார்கள் என ஜப்பானியர்கள்&nbsp; நம்புகிறார்கள்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eight-more-skeletons-recovered-in-chemmani-today-1784552559"></link>
            <id>https://jvpnews.com/article/eight-more-skeletons-recovered-in-chemmani-today-1784552559</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40581444-b574-4867-bed3-200f9f8a52a3/26-6a5e1c710ce16.webp' /></p><h2>என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள்</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</p>]]></content>
            <updated>2026-07-20T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-students-at-a-school-hospital-poisonous-seeds-1784543290"></link>
            <id>https://jvpnews.com/article/22-students-at-a-school-hospital-poisonous-seeds-1784543290</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06596c04-6556-4274-a299-322e4aa0c3a7/26-6a5df83bdf7a7.webp' /></p><p></p><h2>&nbsp;20 மாணவர்கள் 02 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
 

மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் என மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.</p><p>
கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த மாணவன் வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்குக் கொண்டுசென்று பகிர்ந்து உண்பது வழமை எனவும் இன்றைய தினம் (20) சூரியகாந்தி விதைகள் என நினைத்து சூரியகாந்தி விதைகளுடன் வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் கொண்டுசென்று பகிர்ந்து உண்டுள்ளார்.</p><p>இதனாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந் நிலையில் இந்த சம்பவத்தால் அங்க்கு பரப்பான நிலைமை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-20T13:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் டிப்பர்கள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tipper-trucks-sand-mining-in-kilinochchi-seized-1784551624"></link>
            <id>https://jvpnews.com/article/tipper-trucks-sand-mining-in-kilinochchi-seized-1784551624</id>
            <summary type="text">&amp;nbsp;கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf02dbd-143d-4289-bddf-6e79353d3dfe/26-6a5e18ca4c75b.webp' /></p><p>
</p><p>
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் பயன்படுத்தி மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று (19) இரவு திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p><p>
இதன் போது, திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் மற்றும் ஒரு உளவு இயந்திரத்துடன் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் கைதான சாரதிகள் 5 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தடையப் பொருட்கள் புதன் கிழமை அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-20T12:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி கொடுத்தாலும் வேண்டாம்; சமூகவலைத் தளங்களை வெறுக்கும் பிரபல நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் என அவர் கூறியுள்ளமை ரசிகர்களுக்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd22f7e-d6fc-41e6-ad7e-87713c7226c0/26-6a5de49a09712.webp' /></p><h2>ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்து</h2><p> "என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது.

யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்.</p><p></p><p> இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது" எனவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T12:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் தடம் புரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/derailment-of-a-train-bound-for-rambukkana-1784549636"></link>
            <id>https://jvpnews.com/article/derailment-of-a-train-bound-for-rambukkana-1784549636</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. 



இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. </p><p>



இன்று திங்கட்கிழமை (20) மாலை 4:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த 1164 இலக்கமுடைய ரயில், மேடையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாலை 4:35 மணியளவில் தடம் புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ef74f3-1658-4f40-aa6e-1d3f9df4a612/26-6a5e11059c869.webp' /></p><p> </p><p>

ரயிலின் ஒரு பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகியதால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகள் மறிக்கப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த ரயில் கடந்த ஜூலை 7-ஆம் திகதியும் தடம் புரண்டிருந்தது. ஒரே ரயிலுக்குள் ஒரு மாத கால இடைவெளியில் இருமுறை விபத்து ஏற்பட்டுள்ளமை பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தற்போது ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டும் குறித்த ரயில் தடம் புரளும் இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T12:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் பிணையில் விடுதலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p> 

தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த பாதிப்பின் வலியை, பிணை வழங்கிய, நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7570ab1-a774-4591-af10-324fc17a25fd/26-6a5e097b97d7a.webp' /></p><h2>கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது</h2><p>

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது என்பதுடன் தற்போது 41 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காகக் காத்திருந்தபோது, அவர் தனது இளமைப் பருவத்தின் பொன்னான காலத்தை சிறையில் கழித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>

நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி.குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.</p><h3>&nbsp;குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள்&nbsp;</h3><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

 தம்பையா பிரகாசிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>
விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதே ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போயுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேசமயம் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:40:17+00:00</updated>
        </entry>
    </feed>
