<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T01:34:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம் ; துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-suriyan-sadashoka-yogam-thunbam-perapogum-ras-1787100268"></link>
            <id>https://jvpnews.com/article/sani-suriyan-sadashoka-yogam-thunbam-perapogum-ras-1787100268</id>
            <summary type="text">ஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. &#039;ஷடாஷ்டக யோகம்&#039; என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. 'ஷடாஷ்டக யோகம்' என்பது பொதுவாகத் தடைகள், நிதி நெருக்கடிகள், மன அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9898bf-1c47-4280-911d-dbad4c883a6c/26-6a84fc6f7a785.webp' /></p><p> இந்த கிரக அமைப்பு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் அதிக தடைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/440da19f-fd57-415e-9f30-e79787a6bfc8/26-6a84fc70d5157.webp' /></p><h3>மகரம்
</h3><p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசியின் அதிபதியாக சனி பகவான் இருப்பதால், இந்த கிரக அமைப்பானது மகர ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் தங்கள் பணியில் முழு கவனத்துடன் இருக்கவும், தேவையற்ற நிதி சார்ந்த முடிவுகளைத் தவிர்க்கவும், முக்கியமான பரிவர்த்தனைகளின்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aaebe7e-5245-49c6-8e0b-3187da250d9d/26-6a84fc6eca139.webp' /></p><h3>கும்பம்
</h3><p>சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கும்ப ராசிக்காரர்களுக்கு, சூரியன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் இந்தச் சேர்க்கை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலகட்டமாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள், எதிர்பாராத செலவுகள் அல்லது நிதி நெருக்கடி போன்றவை இந்த கிரக மாற்றத்தின்போது பொதுவாக ஏற்படக்கூடிய சவால்களாகக் கருதப்படுகின்றன. இந்த நேரத்தில் அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும். வேலை அல்லது பிற காரணங்களுக்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டியிருக்கும், இதனால் குடும்பத்தில் அழுத்தமான சூழல் நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f64500fd-809f-4e58-9eac-bfb8296a5fc4/26-6a84fc6e1e482.webp' /></p>]]></content>
            <updated>2026-08-19T01:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மஹோற்சவ காலத்தில் பக்தர்கள் அமைதியாகவும், தூய்மையாகவும் வழிபடுவதற்கு ஏதுவாக ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p><p>அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்களும் பக்தர்களும் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த வாகனத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
அத்துடன், இது உரிய அனுமதியுடன் இடம்பெற்றதா அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04aaad95-b599-4e9d-a793-2caabc986d31/26-6a84abbe95ffd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af556116-e9bc-4e3f-b4fd-266396f9c7b2/26-6a84abbf54f88.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f8560a-7f1f-49eb-9bfc-6e88e44da827/26-6a84abc007b0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-19T01:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள் ; விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-service-vacancies-application-deadline-exte-1787101241"></link>
            <id>https://jvpnews.com/article/police-service-vacancies-application-deadline-exte-1787101241</id>
            <summary type="text">இலங்கை காவல்துறையின் உதவி சேவையில் உள்ள 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை காவல்துறையின் உதவி சேவையில் உள்ள 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

ஜூலை 10 ஆம் திகதியிட்ட 2497 ஆம் இலக்க அதிவிசேட அரசிதழ் மூலம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக ஆகஸ்ட் 14 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14 ஆம் திகதியிட்ட 2502 ஆம் இலக்க அரச வர்த்தமாணி அறிவித்தல் மூலம் இந்த காலநீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2fb7229-cddd-4056-86d3-4cf25b0e98c5/26-6a85003b5c8b3.webp' /></p><p>இந்த வெற்றிடங்களில் 177 காவல் உதவி ஆய்வாளர் (SI) பதவிகளும், 206 காவலர் (Constable) பதவிகளும் அடங்குகின்றன.
</p><p>
காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு இணையதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், கணினி அமைப்புப் பகுப்பாய்வு, மென்பொருள்-வன்பொருள், வலையமைப்பு, நிரலாக்கம், தரவு நிர்வாகம், வரைகலை வடிவமைப்பு, அளவு கணக்கெடுப்பு, இயந்திரவியல், உணவு வழங்கல் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்துறை சார்ந்த வல்லுநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
</p><p>
அதேவேளை, காவலர் பதவிகளுக்கு மேலதிகமாக மருந்தகம், செவிலியப் பணி, மின்சாரப் பணி, மருத்துவ ஆய்வகச் சேவைகள், குளிரூட்டல் மற்றும் காற்றுப் பதனப் பணி, வாகன இயக்கம், கணினி சார்ந்த பணிகள், இயந்திரப் பணி, பற்றவைத்தல், நீச்சல் பயிற்சி, மேடை விளக்குகள், ஒலி நிர்வாகம், ஒப்பனை மற்றும் உடற்பயிற்சிப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழினுட்ப மற்றும் ஆதரவுப் பணிகளுக்காகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையவழி (Online) மூலமாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நீடிக்கப்பட்ட இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T01:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/565-skeletons-recovered-from-semmani-mass-1787099141"></link>
            <id>https://jvpnews.com/article/565-skeletons-recovered-from-semmani-mass-1787099141</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 565 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 565 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த திங்கட்கிழமை மட்டும் மேலும் 8 என்புக்கூடுகளும் ஒரு என்புத் துண்டும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89686d68-3d4b-40d6-8b47-7fd8186e87b4/26-6a84f807178f7.webp' /></p><p>இதன்படி, இதுவரை மொத்தம் 565 மனித எலும்புக்கூடுகளும் 45 என்புத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.
</p><p>
நடைபெற்றுவரும் தற்போதைய அகழ்வுப் பணிகள் நாளை (19) வரை தொடரும் என்றும், கண்டெடுக்கப்படும் அனைத்து சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
அகழ்வுப் பகுதியிலிருந்து வெளிவந்துள்ள படங்களில், உடைகள் ஏதுமின்றி மனிதர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அத்துடன், உடல்கள் புதைக்கப்பட்டுள்ள மேலும் பல இடங்களை அடையாளம் காட்ட முடியும் எனக் கூறியுள்ள, தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்‌ஷவிடம் இருந்து ஏன் இதுவரை தகவல்கள் பெறப்படவில்லை என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.
</p><p>
இதற்குப் பதிலளித்த அமைச்சர், செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும், நீதிமன்றக் கட்டளைகளுக்கு அமைவாகச் சாட்சிகள் அழைக்கப்பட்டு விசாரணைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ; 14.56 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-tourism-grows-1456-million-tourist-arriv-1787098250"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-tourism-grows-1456-million-tourist-arriv-1787098250</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

 

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25,355 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 22% ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e95df34-60e0-49b3-be0f-90f0f005955f/26-6a84f48cec54a.webp' /></p><p>

 

அத்துடன், இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 12,738 பேரும், பிரான்ஸிலிருந்து 8,106 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
 

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 16 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,456,725 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அவர்களில் இந்தியாவிலிருந்து 363,585 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 143,139 பேரும் வருகை தந்துள்ளதாக அவ்வாணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T00:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தி ; பளை வனப்பகுதி குறித்து அரசு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-explains-about-palai-forest-area-fake-1787092944"></link>
            <id>https://jvpnews.com/article/government-explains-about-palai-forest-area-fake-1787092944</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d8ca85-af7d-4355-a2df-ccf6d1725b2f/26-6a84dfd1a1820.webp' /></p><p>குறித்த பகுதி 1919ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 7064ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக காடழிப்பு இடம்பெற்று வருவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. </p><p>தியாகராஜா குணதீபன் என்பவர் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பையும் பின்னர் 20 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் அப்பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது நான்கு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
குறித்த கட்டடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் நடத்தப்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனம் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், வனவள திணைக்களம் மற்றும் பொலிஸாரால் குறித்த பகுதியில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் குறித்த சந்தேகநபர் அந்தக் காணிக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. பின்னர், அந்தத் தடையை நீக்குமாறு பெப்ரவரி 17ஆம் திகதி அவர் முன்வைத்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நீதிமன்றத் தடையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை எடுத்துச் சென்றதாகவும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, கடந்த ஜூலை 24ஆம் திகதி வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தியாகராஜா குணதீபன் உள்ளிட்ட ஒன்பது பேர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், குறித்த காணி தமக்குச் சொந்தமானது எனக் கூறி சம்பந்தப்பட்ட நபர் சில ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவ்வாறான பின்னணியிலேயே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆடைத் தொழிற்சாலை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T22:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904"></link>
            <id>https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fc1623-a6e8-455d-bf0f-88412f0b9a8d/26-6a84b4b1e1760.webp' /></p><p>இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:33+00:00</updated>
        </entry>
    </feed>
