<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-14T05:29:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிக்கச் சென்ற 11 வயது இளம் பிக்குவிற்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571"></link>
            <id>https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571</id>
            <summary type="text">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் &#039;ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் 'ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து உடுதும்புர பொலிஸ் நிலையத்திற்குப் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee87a91f-e807-4632-9d53-93d7e0cdb4c6/26-6aa7818d3628b.webp' /></p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள விகாரையொன்றின் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உடுதும்பர பகுதியில் நடைபெற்ற தான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இப் பிக்கு, ஏனைய சில பிக்குகளுடன் இணைந்து 'ஹீன் கங்கையில் குளிக்கச் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T05:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல் ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய உகண்டா பிரஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652"></link>
            <id>https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545e8e2c-9736-4f9e-854c-e91fb4057aa8/26-6aa77df65ed12.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். </p><p style="text-align: justify;">

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p style="text-align: justify;">[<span style="text-align: left;"></span></p><p style="text-align: justify;">சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;">

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T04:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிக்கு தனியார் வகுப்பு ஆசிரியர் செய்த தகாத செயல் ; தொலைபேசியில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721</id>
            <summary type="text">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மேலதிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80362ebc-611f-40b9-8ce4-c5cd9e9508af/26-6aa77a52d2c5a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T04:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவின் கூட்டத்தில் சிக்கிய இரகசிய வீடியோ ; அநுரவின் மிரட்டலால் கலக்கத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974"></link>
            <id>https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் மதுபானம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் சிலரின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் தங்க நிற கோல் அல்லது செங்கோல் போன்ற பொருள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>

இந்தப் பொருள் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சில தரப்பினர் இதனை அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் ஜோதிட நம்பிக்கை, அவர் அணியும் மோதிரங்கள் மற்றும் தாயத்துக்கள் தொடர்பான விவாதங்களும் இதனுடன் இணைத்து சமூக ஊடகங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T01:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியக் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-women-s-team-refused-to-accept-the-asia-cup-1789347550"></link>
            <id>https://jvpnews.com/article/indian-women-s-team-refused-to-accept-the-asia-cup-1789347550</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்தபோதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56bf7206-19bf-43ca-9fa9-4be0f0295606/26-6aa746e15b840.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.</p><p>

இந்த சம்பவம், கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. </p><p>அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
</p><p>
மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களின் பின்னணியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T01:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தியில் இந்த பொருட்களை படைத்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/items-required-for-vinayagar-chaturthi-varam-1789343574"></link>
            <id>https://jvpnews.com/article/items-required-for-vinayagar-chaturthi-varam-1789343574</id>
            <summary type="text">இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் சுவையான நைவேத்தியங்கள் இல்லாமல் முழுமையடையாது. விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவென்றால் அது கொழுக்கட்டைதான் என்று நாம் நன்கு அறிவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900f5ab1-df16-4d91-b495-7c6b26a2aa8d/26-6aa7375890950.webp' /></p><p>ஆனால் விநாயகரின் அருளை பெறுவதற்கு இந்த கொழுக்கட்டை மட்டுமே போதாது, அவருக்கு மிகவும் பிடித்த வேறுசில பொருட்களும் உள்ளன. இந்த பொருட்களை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டிய புனித பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9456af-d5f3-416d-8a03-9ccaeb236533/26-6aa73757da90b.webp' /></p><h4>கொழுக்கட்டை
</h4><p>வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு என்பதால், விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இது கட்டாயம் படைக்கப்பட வேண்டும். கொழுக்கட்டை என்பது அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். விநாயகரை வழிபடும்போது மோதகம் இல்லாவிட்டால் அந்த வழிபாடு முழுமையடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ed41d4-5a11-4843-8c27-44be07a01edc/26-6aa7375945711.webp' /></p><h4>அருகம்புல்
</h4><p>விநாயகருக்கு மிகவும் பிடித்த பொருட்களில் அருகம்புல் ஒன்றாகும். இது அடிப்படையில் வயல்வெளிகளில் தானாக வளரக்கூடிய, மூன்று கிளைகளைக் கொண்ட ஒரு வகை புல் ஆகும். விநாயகருக்கு ஏன் அருகம்புல் மிகவும் பிடித்தமானது என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஒருமுறை, தேவர்களைத் துன்புறுத்தி வந்த 'அனலாசுரன்' என்ற தீய அரக்கனை விநாயகர் விழுங்கினார். ஆனால், அந்த அரக்கன் செரிக்காமல் போனதால் விநாயகர் கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது சில முனிவர்கள் அவர் மீது அருகம் புற்களைத் தூவ, அவரது வயிற்று எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல், இந்தப் புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf7d1e7-9afc-4a40-ba59-916bbd4db791/26-6aa73759ecabb.webp' /></p><h4>சாமந்திப் பூக்கள்
</h4><p>விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட விநாயகர் சிலையை வீட்டிற்கு எடுத்து வரும் போது சிலையை அலங்கரிக்க சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களைப் பயன்படுத்து வேண்டும். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும். பெரும்பலான விநாயகர் கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூக்கள் மற்றும் அருகம்புல்லால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை நாம் காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d22dfa76-fc0c-4d18-af61-ef792777637d/26-6aa7375aa2023.webp' /></p><h4>சங்கு
</h4><p>விநாயகருக்கு நான்கு கைகள் உள்ளன; அவற்றில் ஒன்றில் அவர் சங்கை ஏந்தியுள்ளார். பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடனேயே தொடங்கப்படுகின்றன. விநாயகருக்கும் சங்கு நாதம் மிகவும் பிடிக்கும். விநாயகருக்கு ஆரத்தி எடுக்கும்போது பலர் தங்கள் வீடுகளில் சங்கு முழங்குகின்றனர். அந்தத் தீட்சண்யமான ஒலி தீய சக்திகளை விரட்டியடிக்கும் என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையின் போது சங்கொலியை எழுப்புவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab083b32-33ec-4c3c-88ce-fbc8b8574594/26-6aa7375b534ac.webp' /></p><h4>தேங்காய், வாழைப்பழம்
</h4><p>தேங்காயும், வாழைப்பழமும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களாகும். விநாயகர் யானை முகத்தானாக இருப்பதால் , அவருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்கள் மீதும் மிகுந்த விருப்பம் உண்டு. பொதுவாக, அவரது திருவுருவச் சிலைகள் வாழை இலைகள் மற்றும் வாழைத் தண்டுகளால் சூழப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8e98b1-8924-4470-94e0-98558366d307/26-6aa7375c0b123.webp' /></p><h4>எருக்கம் பூ
</h4><p>எருக்கம் மலர்கள் ஒருவரின் உடல் மற்றும் மனதிலிருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஆற்றல் உண்டு. விநாயகருக்கு எருக்குப் பூக்களால் ஆன மாலையைச் சாற்றி வழிபடுவது, பக்தர்களுக்கு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை அருளும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4f2549-9abc-4e53-a16a-48338a23ffc7/26-6aa7375cc6579.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T23:53:10+00:00</updated>
        </entry>
    </feed>
