<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T13:04:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477"></link>
            <id>https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477</id>
            <summary type="text">கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p>

தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9908046-b1e5-472e-b753-3f77ca1beb1d/26-6a6f37072e939.webp' /></p><p>

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார். </p><p>வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சார்ஜில் இருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று (02) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



முறைப்பாட்டின்படி, தனது வீட்டில் சுமார் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கைத்தொலைபேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715a66fd-fc2a-4de3-a3c1-e3dff6440dd9/26-6a6f3e9fcd6db.webp' /></p><p>



இதையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு எதிரில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>விசாரணைகளின் போது, திருடப்பட்ட கைத்தொலைபேசியை சந்தேகநபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர். </p><p>மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் அவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>



கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்து மக்களைத் துரத்திய யானை ; சிதறிஓடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித்திரிந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றுள்ளனர். இதன்போது யானை ஆவேசமடைந்து பொதுமக்களை நோக்கி முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87e2bff3-92f2-40fe-88aa-132b54271a3a/26-6a6f30bbc7273.webp' /></p><p>இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு கருதி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். </p><p>எனினும், குறித்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதமோ அல்லது உடைமைச் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பின்னர், கிராம இளைஞர்கள் மிகுந்த துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், பசறிச்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>


எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650"></link>
            <id>https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf5786-80a6-49bb-92ae-10b375c80089/26-6a6f2bfb8acbe.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> 

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.</p><p> </p><p></p><p>அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம் ; பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040"></link>
            <id>https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


வீடு உடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளுக்காக குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd613546-b16e-4df7-9086-0528d31bd6a1/26-6a6f299a0fe2d.webp' /></p><p>



இன்று காலை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையின் பாதுகாப்பு மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>


மேலும், இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மதில் மீது ஏறி தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc8c3d7-04c4-4fbf-914d-b86187f8a511/26-6a6f27dc6d12e.webp' /></p><p> இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>



தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் வரலாறு குறித்து மறுபரிசீலனை கோரும் ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836"></link>
            <id>https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836</id>
            <summary type="text">இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>2000 ஆம் ஆண்டு தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையை தற்போது மீள்பகிர்ந்துள்ள அவர், அனுராதபுரம் தொடர்பாக நிலவி வரும் வரலாற்றுப் புரிதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அந்தக் கட்டுரையில், அனுராதபுரம் சிங்களர்களுக்கே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்ற பார்வை பெரும்பாலும் மகாவம்சம் உள்ளிட்ட பிற்கால வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a7d783-d4a8-4703-8532-81c11685ed96/26-6a6f20fda767c.webp' /></p><p> மேலும், மகாவம்சம் ஒரு தேரவாத பௌத்தப் பார்வையில் எழுதப்பட்ட நூலாக இருப்பதால், அதிலுள்ள தகவல்களை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தின் ஆரம்பகால அரசர்கள், அக்கால சமூகத்தின் மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்பாக பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் கல்வெட்டுகளையும் மேற்கோள் காட்டியுள்ள ஆசிரியர், அக்கால மக்களின் அடையாளம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
</p><p>
அதேபோல், எல்லாளன் – துட்டகைமுனு போர் குறித்து இன்று பரவலாக நிலவும் "தமிழர் – சிங்களர் மோதல்" என்ற விளக்கத்தை விட, அது பௌத்த அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்தை மையமாகக் கொண்ட மோதலாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7947af8a-5820-470b-8490-0807549524cb/26-6a6f20fe5a524.webp' /></p><p>பௌத்தம் இலங்கைக்கு வந்த விதம், தேரவாத மற்றும் மகாயான பௌத்தப் பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகள், தமிழகத்துடனான வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் அனுராதபுரத்தின் அரசியல் பரிணாமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இலங்கையின் வரலாற்றை இன அடிப்படையில் மட்டுமல்லாது, மதம், மொழி, அரசியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையிலும் மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அனுராதபுரத்தின் வரலாறு தொடர்பில் மேலும் ஆழமான கல்வியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிவா சின்னப்பொடி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

எனினும், இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் ஆசிரியரின் வரலாற்று ஆய்வு மற்றும் விளக்கங்களாகும். இவை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக் கருத்துகளும் கல்வியியல் விவாதங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515"></link>
            <id>https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பலில் இருந்து குறித்த 17 வெற்று கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (01) அறிவித்திருந்தது.
</p><p>
நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, குறித்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரப் பகுதிகளை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028b5407-09b0-4795-b7cd-853fdfb81782/26-6a6f14051f07e.webp' /></p><p>

இதனையடுத்து, கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடலில் மிதந்து வந்த ஒரு கொள்கலன் இன்று காலி இந்துருவ, கைகாவல கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
</p><p>
கடலில் இருந்து கரை ஒதுங்கும் குறித்த கொள்கலன்களை பொதுமக்கள் தொடவோ அல்லது நகர்த்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவை தொடர்பில் அருகிலுள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், எஞ்சியுள்ள கொள்கலன்களின் நிலைமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு ; முன்னாள் ஜனாதிபதி குறித்து ஸ்ரீநேசன் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026"></link>
            <id>https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026</id>
            <summary type="text">ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>



மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள். </p><p>



ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20360168-cb66-4966-9ca7-548be81d331c/26-6a6eff24617bd.webp' /></p><p>500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p> 



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக் கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். </p><p>இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம் செலுத்தியவர் இருக்கின்றார். </p><p>



அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது சிந்திப்பார், ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என சிந்திப்பார்.
</p><p>


அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். </p><p>அவர்களுக்கும் கலக்கம். தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p> 



இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும்.</p><p> ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சுற்றுவட்டார பொலிஸ் ஊரடங்கு நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077</id>
            <summary type="text">ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று (1)பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717f08b9-17a3-4ecf-809a-d634247ae901/26-6a6f02aeb7e9c.webp' /></p><p> 

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. </p><p>

இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697"></link>
            <id>https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சிறைச்சாலை நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d92dd0-a8f2-4707-a058-a3109bc496ce/26-6a6f013322af9.webp' /></p><p>கைதிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

பூசா சிறைச்சாலை நாட்டின் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் உட்பட பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T08:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீற்றர் மழையும், லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் 183.3 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1e0548-2683-4c28-a891-b4e5e4725772/26-6a6eebf513f38.webp' /></p><p>மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால் அதன் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் எந்த நேரத்திலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edf587d3-4011-40c5-a321-50836696ae41/26-6a6eebf5b8752.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:04:28+00:00</updated>
        </entry>
    </feed>
