<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T20:29:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாள் மரணத்துடன் போராட்டம்; மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221"></link>
            <id>https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6279dd2-d2d5-4bbe-a494-a0b88c944738/26-6a9b1c4ed1fd1.webp' /></p><h2>தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை குலாமினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் அதிகமான இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403"></link>
            <id>https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403</id>
            <summary type="text">கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த இழப்பீட்டுத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4346721b-c382-4e80-b073-d128382e56fd/26-6a9b191d45d67.webp' /></p><p> </p><p>மேலும், அத்தொகை கொழும்பிலுள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு ஊடாக உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
 
ஓமானிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கைத் தூதரகம் நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் காரணமாகவே இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.</p><p></p><p>
</p><p> 
ஓமானில் பணியாற்றியபோது உயிரிழந்த ஏனைய இலங்கையர்களுக்காகக் கிடைக்கவேண்டிய நிலுவை இழப்பீட்டுத் தொகைகளை அறவிடும் நடவடிக்கைகளுக்காகவும் தூதரகம் தொடர்ந்து தீவிரமாகத் தலையிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T19:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026"></link>
            <id>https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026</id>
            <summary type="text">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p style="text-align: justify;">


இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f791100b-34d4-4701-badf-ade18b5fe72f/26-6a9b00343421e.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p> </p><p style="text-align: justify;">



தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில்&nbsp;இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T18:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-04T18:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882"></link>
            <id>https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882</id>
            <summary type="text">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வேங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff6b9e4-bef9-4159-977f-06cb10dc09b7/26-6a9b04647beee.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மனு தாக்கல்</h2><p>
</p><p style="text-align: justify;"> 

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify;"> 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;">
 
அந்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதற்கமைய அதனை செல்லுபடியற்றதாக்கி தண்டனை வழங்கி உத்தரவிடுமாறு கோரியும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

அம்மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மனு விசாரணையும் நிறைவடைந்தது.

 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார செய்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-04T17:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-one-killed-1788541172"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-one-killed-1788541172</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385edead-55a1-4acc-85f3-28830ae5ae94/26-6a9af8f5d94eb.webp' /></p><p style="text-align: justify; ">



துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆவார்.</p>]]></content>
            <updated>2026-09-04T17:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் ; நாளை முதல் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-prices-for-locally-produced-canned-fish-1788540483"></link>
            <id>https://jvpnews.com/article/new-prices-for-locally-produced-canned-fish-1788540483</id>
            <summary type="text">நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37a3aaa3-dfb7-4f10-913a-5b521786372b/26-6a9af644c9b72.webp' /></p><h2 style="text-align: justify; ">சில்லறை விலைகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகவும், அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகவும், 425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகவும் உள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T17:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முடக்கப்படவுள்ள இணையத்தளங்கள் ; தீவிரமாகும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/websites-to-be-blocked-in-sri-lanka-1788538773"></link>
            <id>https://jvpnews.com/article/websites-to-be-blocked-in-sri-lanka-1788538773</id>
            <summary type="text">பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfc9b8c-64cf-4982-93c6-a1a9bb95a425/26-6a9aef96741af.webp' /></p><h2 style="text-align: justify; ">இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

சைபர் குற்றங்கள் தொடர்பில் நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; ">


குறித்த நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து அந்த வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

சைபர் குற்றப் புலனாய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தைப் பலப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


மேலும், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சி மற்றும் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p style="text-align: justify; ">


அத்துடன், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் திறம்பட செய்வதற்கு புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய மத்திய அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

குறிப்பாக, கிரிப்டோகரன்சி பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் தடைகளைக் குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

மேலும், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களின் நிலைமை, அக்குழுக்கள் மூலம் பெறப்படும் உணர்திறன் மிக்க தகவல்கள் கசிவதைத் தடுத்தல் மற்றும் சமூகப் பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதற்கு மேலாக, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இந்தக் குழுவுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T16:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி கைதான நாமல் ராஜபக்ஷ; ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-arrested-unp-condemns-1788536731"></link>
            <id>https://jvpnews.com/article/namal-arrested-unp-condemns-1788536731</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3a585b-6ecb-49ee-948d-31ff53dcbe41/26-6a9ae79d39611.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T16:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்குடன் சிறைச்சாலை செல்லும் நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-handcuffs-prison-1788535185"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-handcuffs-prison-1788535185</id>
            <summary type="text">இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039" target="_blank">நாமல் ராஜபக்ஷ</a> கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்&nbsp; இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e384f916-14b6-44b0-8e40-aedb4ad3e5bd/26-6a9ae19323a53.webp' /></p><h2 style="text-align: justify; ">எயார்பஸ் விமான கொள்வனவு</h2><p style="text-align: justify; ">

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமான கொள்வனவு சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (04) முற்பகலில் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T15:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு சொறிந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞன்; வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/china-man-earning-lakhs-by-scratching-backs-1788526599"></link>
            <id>https://jvpnews.com/article/china-man-earning-lakhs-by-scratching-backs-1788526599</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் இளைஞன் ஒருவர் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சம்பவம் இணையவாசிகளை வாய் பிள்ளக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் இளைஞன் ஒருவர் முதுகு சொறியும் சேவையை (Itch-scratching business) செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சம்பவம் இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
</p><p>
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா(Zhang Xiaoqiao) என்பவரால் 'சுமா' (Suma) முதுகு சொறியும் சேவை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce35ed1-1035-4c0d-aad9-c03155c170fa/26-6a9ac0091a14a.webp' /></p><h2>ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம்&nbsp;</h2><p>

ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சேவையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நகங்களைக் கொண்டு உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுவார்கள்.
</p><p>
மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படும் இந்த சேவைக்கு ஆண்களே அதிகளவில் (70 சதவீதம்) வருகின்றனர்.</p><p></p><p>

சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு காணொளியும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்த தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகமாக இருந்ததாக ஜாங் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
தற்போது இரண்டு கிளைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டும் அந்த இளைஞர், எதிர்காலத்தில் சீனாவில் 100 கிளைகளைத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 சமூக வலைத்தளங்களில் Zhang Xiaoqiao அதிக கவனத்தை பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046"></link>
            <id>https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் தோண்டப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> 



கடந்த 2ஆம் திகதி உயிரிழந்த நபரின் உறவினர்களால் மத்தேகொட பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbad65d-a7e4-4c2a-841e-46570300c435/26-6a9ab9f8b1c85.webp' /></p><h2>பாதாள உலகக் குற்றச்செயல்கள்</h2><p>
</p><p>


போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரிப்டீன் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது. </p><p>



ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபராக அடையாடப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>
</p><p>


கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.</p><p>



உயிரிழந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மத்தேகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. </p><p>எனினும், உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியின் கால் பகுதி அமைந்திருந்த பக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ தோண்டியிருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எவ்வித அறிவிப்பும் வழங்காமல், சில பணியாளர்கள் குழியை மீண்டும் மூடியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 



மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக குமாரவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T14:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
