<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T08:40:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605</id>
            <summary type="text">&amp;nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&amp;nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&amp;nbsp; பொலிஸார்&amp;nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&amp;nbsp; இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&nbsp; பொலிஸார்&nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp; உதயநிதி&nbsp;கைது செய்து அழைத்து செல்வதாக&nbsp; கூறப்படுகின்றமை&nbsp; &nbsp;திமுகவினரிடையே&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a88f03a-2df1-4451-b8e1-18203217d7bb/26-6a717745ecaa1.webp' /></p><p></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.</p><p>
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உதயநிதி மீது&nbsp; வழக்கு பதிவு</span></p><p> 

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.</p><p> அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.</p><p></p><p>
</p><p>
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.</p><p> எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997"></link>
            <id>https://jvpnews.com/article/drug-detection-sensors-in-metro-buses-1785831997</id>
            <summary type="text">&amp;nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0803001-7cce-476f-98bd-fe52aa884a10/26-6a71a23eed63d.webp' /></p><p>
</p><p>
பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக பாதுகாப்பை உருவாக்க முடியும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

உயர் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், உயர்மட்ட தொழில்முறை சாரத்தியத் தரத்தை பேணுவதன் மூலம் நாட்டிற்கு முன்மாதிரியான பொதுப் போக்குவரத்து சேவையை பராமரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-04T08:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு; திமுகவினர் அட்டூழியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dmk-burning-of-an-effigy-of-chief-minister-vijay-1785831091"></link>
            <id>https://jvpnews.com/article/dmk-burning-of-an-effigy-of-chief-minister-vijay-1785831091</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் விஜய் தொடர்பில் அவதூறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் விஜய் தொடர்பில் அவதூறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57cbc82b-1f18-420a-a4c8-50a7f5f25b59/26-6a719eb986934.webp' /></p><p>

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை&nbsp; வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் நடிகை ரீத்து ஆகர்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c322786-6899-4cf4-bdcf-761c78d4e9e4/26-6a716fbe0a3ab.webp' /></p><h2> சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>
</p><p>
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் நடிகை ரீத்து ஆகர்ஷா ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இந்த நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக நடிகை ரீத்து ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,</p><p></p><p> இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு; 87 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


அதன்படி நேற்று (03) நிலவரப்படி, டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 86,947 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435226de-ff4c-462f-bd40-bd77c4354f3b/26-6a7193a030bd8.webp' /></p><p>
</p><p>


ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21.24 சதவீத டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.



அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17,187 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,082 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இதுவரை நாடு முழுவதும் 62 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T07:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் ஆஜராக யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர்களுக்கு அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13868831-27b5-463e-b589-8e06d9906104/26-6a719083e47dd.webp' /></p><p> 

சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> 

அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். </p><p>

இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி வெள்ளத்தில் சிக்கிய இ.போ.ச.பேருந்தை மீட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927</id>
            <summary type="text">&amp;nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வான்பாய்ந்ததால் அவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. </p><p>

அச்சமயத்தில் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த போது, அம்பகமுவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9db68b-ab7a-4fab-a6ca-7f682e190168/26-6a718e711def0.webp' /></p><p> 

அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று பேருந்திலிருந்த மக்களை மீட்டதுடன், பின்னர் கெப் ரக வாகனம் ஒன்றின் உதவியுடன் பேருந்தையும் மீட்டெடுத்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a334178f-88e5-474e-bbd4-b7533e424bbd/26-6a718bbf6bf6b.webp' /></p><p> 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்காரணமாக, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:48:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது ; திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்; பரபரக்கும் தமிழகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-arrested-defamatory-cm-vijay-1785825302"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-arrested-defamatory-cm-vijay-1785825302</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுபேச்சு , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுபேச்சு , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் தீவிர முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இதன்போது "கைது செய்யாதே, கைது செய்யாதே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாதே" என அவர்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் கோஷங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b5e990-80a5-4591-ad3c-7917a1ba1922/26-6a7188181d746.webp' /></p><p>
</p><p> 
 
முதல்வர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி என திமுக தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளை&nbsp; இந்த கைது நடவடிக்கையின் போது, நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதியின் வீட்டிற்கு மிக அருகில் வசிக்கும் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், தனது வீட்டின் மாடியில் இருந்துகொண்டு இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p> 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926</id>
            <summary type="text">


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (05) காலை 9.00 மணி வரை இந்தச் சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb20a1fd-77b0-4a20-a410-9ff7e89d4664/26-6a717ae868f48.webp' /></p><p> </p><h2>

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்</h2><p><b>

கண்டி மாவட்டம்</b>,&nbsp; &nbsp;கங்க இஹள கோரளை 

உடுதும்பர 

பஸ்பாகே கோரளை 

கேகாலை மாவட்டம் 

யட்டியாந்தோட்டை </p><p><b>

நுவரெலியா மாவட்டம்</b>&nbsp;,அம்பகமுவ 

நோர்வூட் 

இதனிடையே, கட்டம் 2 மற்றும் கட்டம் 1 இன் கீழும் பல மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><b>எச்சரிக்கை மட்டம் 2,</b></p><p><b>கண்டி மாவட்டம்</b> 

பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ மற்றும் தெல்தோட்டை </p><p><b>

கேகாலை மாவட்டம்</b>&nbsp;, அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட மற்றும் புலத்கோஹுபிட்டிய </p><p><b>

நுவரெலியா மாவட்டம்,</b> 

தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு </p><p><b>

இரத்தினபுரி மாவட்டம்</b>&nbsp;, இரத்தினபுரி, ஓப்பநாயக்க மற்றும் இம்புல்பே</p><p><b> 

எச்சரிக்கை மட்டம் 1</b></p><p><b> 

கேகாலை மாவட்டம் ,</b>கேகாலை 

நுவரெலியா மாவட்டம் 

ஹங்குரன்கெத்த 

இரத்தினபுரி மாவட்டம் 

நிவிதிகல மற்றும் குருவிட்டை</p>]]></content>
            <updated>2026-08-04T05:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
அதன்படி, ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a6181a6-79c7-45b0-87cb-05e3b5a91648/26-6a71724ea006b.webp' /></p><p>
</p><p>
 வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>

 நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

 அத்துடன் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தினார்.</p><p></p><p>
</p><p>
 கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு 45 வயதுடைய நபர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

 மேலும் சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை; உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inclement-weather-discussion-regarding-al-exam-1785818383"></link>
            <id>https://jvpnews.com/article/inclement-weather-discussion-regarding-al-exam-1785818383</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;நாட்டில் நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cca269c-7929-49dc-90b7-7b81f87ea432/26-6a716d10d6b42.webp' /></p><h2>பரீட்சைப் பணிகள் தொடர்பாக&nbsp;கலந்துரையாடல்</h2><p> </p><p>

நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.</p><p></p><p> 

"உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

 அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம்.</p><p> ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும்.&nbsp; பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். </p><p></p><p>

அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும். எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும் என கூறினார்.</p><p>
அதேசமயம் எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T04:37:40+00:00</updated>
        </entry>
    </feed>
