<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T01:05:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்க வேண்டாம் ; இலங்கை மக்களுக்கு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-stay-home-if-you-have-these-symptoms-1784595278"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-stay-home-if-you-have-these-symptoms-1784595278</id>
            <summary type="text">டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி&nbsp; அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e259897-3738-41b9-8ebd-94606da8a093/26-6a5ec34fa4a95.webp' /></p><p style="text-align: justify; ">

இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
</p><p style="text-align: justify; ">
இந்த நிலையில், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர, டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T00:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை கிளப்பிய யாழ் இளைஞன் ; மட்டக்களப்பு நீதிமன்றில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38d44ac-e568-4af6-b950-88fc3ffc2da0/26-6a5ebf0c4a3d3.webp' /></p><h2 style="text-align: justify; ">நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை உடைத்து திருடியமை உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார். 

பிணையில் சென்ற அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பின்னர் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேற்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">

வழக்கு விசாரணைக்காக இன்று காலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "> அதனைத் தொடர்ந்து திறந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> திறந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்ற குறித்த கைதி, சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p style="text-align: justify; ">தற்கொலைக்கு முயன்ற நபர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவருக்கு எதிராக மட்டக்களப்பில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T00:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582"></link>
            <id>https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582</id>
            <summary type="text">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன் சேர்ந்து கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a16b6-8cfe-439c-b580-f339b8547a33/26-6a5e72779969f.webp' /></p><h2 style="text-align: justify; ">கள்ளக்காதல்</h2><p style="text-align: justify; ">

இந்த பள்ளியில் வாகன ஓட்டுநராக இருப்பவருடன் தாமினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கு தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டி விட முடிவு செய்தனர்.</p><p style="text-align: justify; "> இருவரும் சேர்ந்து சாலை விபத்தில் கொலை செய்ய முதலில் திட்டமிட்டனர்.

ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனால், வேறு திட்டம் தீட்டி கணவரை கொல்ல&nbsp; முடிவு செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்த முறை கணவருக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததும், படுக்கையறையில் விஷப்பாம்பை விட்டு அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்த கொலைக்கு 2 காரணங்கள் இருந்துள்ளன. காப்பீடாக ரூ.20 லட்சம் தொகையை பெற்று விட்டு, கள்ளத்தொடர்பை தொடர இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க பாம்பை விட்டு கடிக்க செய்து இயற்கையான முறையில் உயிரிழந்தது போல் காட்ட திட்டமிட்டு உள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இது இயற்கை மரணம் போன்று முதலில் விசாரிக்கப்பட்டாலும், பொலிசாரின் தீவிர விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T00:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-writes-to-justice-minister-1784592901"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-writes-to-justice-minister-1784592901</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது, பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைந்து போகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.</p><p>

அதேநேரம், உயர்நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசர அடிப்படையில் அல்லாது, வெளிப்படையான பொதுக் காரணங்களுடனும், அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனைகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799971c3-c7c3-48fb-bfd5-b673bc89d72d/26-6a5eba074c4ad.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழிவுக்கு நீதித்துறை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சருடன் சந்திப்பு ஒன்றையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம் போகாமல்.. உங்க தொப்பையை குறைக்கலாம் ; இந்த விஷயங்களை செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reduce-belly-fat-without-gym-workouts-1784588254"></link>
            <id>https://jvpnews.com/article/reduce-belly-fat-without-gym-workouts-1784588254</id>
            <summary type="text">இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை &#039;தொப்பை&#039;. உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை 'தொப்பை'. உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே வழிவகுக்கிறது.</p><p style="text-align: justify; "> 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6b9ae-e31e-4f14-80ec-0892641b8234/26-6a5ea7e01e339.webp' /></p><h2 style="text-align: justify; ">கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலை எழுந்ததும் அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பெல்லாம் கரைந்து தொப்பை குறையும். </p><p style="text-align: justify; ">

நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மற்ற வேண்டும். 

கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.</p><p style="text-align: justify; "> 

இனிப்புகள், இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து வந்தால் தொப்பை வேகமாகக் குறையும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01c0cb-3ad8-4c0d-901e-91725130e9b2/26-6a5ea7e0c933c.webp' /></p><p style="text-align: justify; "> 

புரதச்சத்து மிகவும் அவசியம், முட்டை, முளைகட்டிய பயறுகள் மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் பசியைக் கட்டுப்படுத்தும். </p><p style="text-align: justify; ">

தினமும் அதிகாலையில் உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையிலோ அல்லது மாலையிலோ குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி பண்ண வேண்டும்.</p><p style="text-align: justify; "> இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். </p><p style="text-align: justify; ">

வயிற்றுக்கான பயிற்சிகள் மிக மிக அவசியம் அப்போதான் தொப்பை குறையும். பிளாங்க், க்ரஞ்சஸ் மற்றும் யோகாசனங்கள் செய்வது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்க உதவுகிறது. 

தூக்கம் தான் அனைத்திற்குமே அடிப்படை தற்போதைய காலகட்டத்தில் பலர் சரியாகவே தூங்குவதில்லை. </p><p style="text-align: justify; ">தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். முக்கியமாக குறைவான தூக்கம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.</p><p style="text-align: justify; "> 

மனஅழுத்தம் ஸ்ட்ரெஸ் நம்மில் பலருக்கு தேவையானது போல் அனைவருமே சுமக்கும் ஒன்றாகும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது 'கார்டிசோல்' ஹார்மோன் சுரந்து, அது வயிற்றுப் பகுதியில் கொழுப்பாகப் படியும். எனவே தியானம் மூலம் மனதை அமைதியாக வையுங்கள்.</p>]]></content>
            <updated>2026-07-20T23:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-finance-commission-chairman-appointed-1784583525"></link>
            <id>https://jvpnews.com/article/new-finance-commission-chairman-appointed-1784583525</id>
            <summary type="text">நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன் ஏனைய உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ecae4a9-8edc-4538-a89b-21d9e4dab42b/26-6a5e956779e62.webp' /></p><p> </p><p>

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார்.</p><p></p><p>

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T22:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு பாட்டி நடத்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandmother-s-cruel-act-against-newborn-girl-1784582222"></link>
            <id>https://jvpnews.com/article/grandmother-s-cruel-act-against-newborn-girl-1784582222</id>
            <summary type="text">ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர்.

ஈரோடு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர்.
</p><p>
ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையை அவரின் சொந்த பாட்டியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73284c97-6a52-4eb4-8d25-6bc35317e0fe/26-6a5e904fe1acf.webp' /></p><h2>மது போதைக்கு அடிமை</h2><p>
</p><p>
குழந்தையின் கழுத்து மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.
</p><p> பொலிசார் விசாரணையில் அந்த குழந்தையை சொந்த பாட்டியான தங்கமணி(47) கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. 

கொலைக்கான காரணம் பற்றி பொலிசார் விசாரித்து வருகிறார்கள். </p><p>தனது மகளுக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் மருமகன் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த முறையும் பெண் குழந்தை பிறந்ததால், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க முடியாது எனக் கருதி, குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். </p><p>இதையடுத்து, பேத்தியைக் கொலை செய்ததாக தங்கமணியை பவானி காவலர்கள் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி ; 4 பெண்கள் உட்பட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-raided-during-police-operation-1784579638"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-raided-during-police-operation-1784579638</id>
            <summary type="text">சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை&amp;nbsp; முற்றுகையிட்ட போது, 4 பெண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை&nbsp; முற்றுகையிட்ட போது, 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/599850be-ba05-4589-8c51-1a2402cc0447/26-6a5e86379c190.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் மற்றும் விபச்சார தொழிலுக்காகத் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சீதுவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T21:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683</id>
            <summary type="text">ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e00588-6bb6-4a76-88a2-e4c62f8215b9/26-6a5e827d9a4b6.webp' /></p><p> 

அவர் வசம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் ; ஆனந்த விஜயபால]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764"></link>
            <id>https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764</id>
            <summary type="text">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்த போதிலும், எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாமல் போதைப்பொருள் ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட 16 முக்கிய தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b709f9-8b6f-4ead-99f3-2dd8213edf83/26-6a5e7ee6aeb10.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p style="text-align: justify; ">
கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் ஆதரவு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்களுக்கு இடையிலான பிணைப்பு தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிராக மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு 14,125 மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

</p><p style="text-align: justify; ">
மேலும், போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களைக் வெறும் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்து சிறையில் அடைப்பதால் எவ்வித பலனும் இல்லை என்பதால், அவர்களை நோயாளர்களாகக் கருதி முறையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது மட்டுமே சட்டத்தின் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p style="text-align: justify; ">
பிராந்திய பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான செயற்பாடு காணப்படாவிட்டால், வேறு பொலிஸ் பிரிவுகளையோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையையோ பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெறப்படும் தகவல்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.</p><p style="text-align: justify; "> நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் இந்தத் தேசியப் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், போதைப்பொருள் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அல்லது சாதகமாகச் செயற்படுபவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவோ அல்லது அதற்குத் துணை செல்பவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T20:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580"></link>
            <id>https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580</id>
            <summary type="text">தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p>இது முற்றிலும் போலியான செய்தியாகும் என தொழில் அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c045c63c-5801-43f6-ac64-d1b60ccb3d2f/26-6a5e7a459f09e.webp' /></p><h2>போலிப் பிரசாரம்</h2><p>
</p><p>
தொழில் அமைச்சினால் திங்கட்கிழமை (20) விடுக்கப்பட் அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும். </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:43:04+00:00</updated>
        </entry>
    </feed>
