<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T12:40:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e32b4c-5cdd-40a8-b6fb-f44b52c18f69/26-6a64a6147e82f.webp' /></p><h2>&nbsp;வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T12:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் இரு பெண்கள் தவறான முடிவால் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325"></link>
            <id>https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நீதிமன்ற மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மருதமுனை - 06 ஆம் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9781871d-cc84-4fe3-8c82-bee2b58f8ea6/26-6a649b973394a.webp' /></p><h2>யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்து</h2><p>
</p><p>
 யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் பரவியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான், உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
</p><p>
அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் பாகங்கள் கொழும்பிலுள்ள அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் கடந்த புதன்கிழமை (22)&nbsp; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h3>கணவன் வெளிநாட்டில்</h3><p> 

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை - 03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மரணத்திற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-25T11:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு; பிரான்ஸ் வாழ் நபருக்கு கடுங்காவல் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128"></link>
            <id>https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938b26a3-f58b-427b-9176-f485d7ac9d93/26-6a648b3174313.webp' /></p><p></p><h2>சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு&nbsp;</h2><p>
</p><p>
 சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய சந்தேகநபர், தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.</p><p></p><p>
</p><p>
 வழக்கில் அரச தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மூவர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து சந்தேகநபருக்குக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளது.</p><p>


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு,&nbsp; சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; யாரும்&nbsp; தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு குழந்தைகள் பிறந்தும் நாமல் ராஜபக்க்ஷவை துரத்தும் பிரச்சனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற<a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-warning-electric-bill-issue-1691557217" target="_blank"> நாமல் ராஜபக்‌சவின் திருமண விழா</a>விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d47b12-264f-4e44-88f2-786a7193f802/26-6a6445c8a4243.webp' /></p><h2>எனக்கு மட்டும் பாராபட்சம் ஏன்?</h2><p>
</p><p>
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி இல்லை; தங்கிய வெளிஆட்கள் 3,089 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926"></link>
            <id>https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அதே காலப்பகுதியில், அந்த மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb17a280-0788-4cf5-91b0-fe84b7c9fb6d/26-6a6472f80c7c6.webp' /></p><h2>கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவு</h2><p>


ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025ஆம் ஆண்டு எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், எவரும் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.</p><p></p><p>



இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளுக்காக ரூ.2,447,754 செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>



ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-smuggler-illegal-assets-frozen-1784975203"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-smuggler-illegal-assets-frozen-1784975203</id>
            <summary type="text">&amp;nbsp; இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி டிராக்டர் வண்டி மற்றும் நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பணம் என்பன 07 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290eaaf0-171d-4c57-a03e-132f2643eadc/26-6a648f64d012e.webp' /></p><h2>சட்டவிரோத சொத்துக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

சந்தேகநபரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் பிரகாரம், 2026 ஜூலை 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந் நிலையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, இந்த கடத்தல் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T10:25:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு காணொளி ; ஒரே இரவில் பிரதமர் மோடி உலக சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pm-modi-sets-a-new-record-on-instagram-neet-video-1784974722"></link>
            <id>https://jvpnews.com/article/pm-modi-sets-a-new-record-on-instagram-neet-video-1784974722</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.
</p><p>
இந்தியாவில் நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a525bb81-101e-4ace-8df4-70e0c3fe7b4d/26-6a648d8368bb0.webp' /></p><p></p><h2>24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வை</h2><p>

இவ்வாறான பின்னணியில், மாணவர்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் செல்ஃபி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பிற்கும் இளைஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி "நன்றி நண்பர்களே" என்ற தலைப்பில் மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p>

அதில், இளைஞர்களுடனான இந்த நேர்மறையான உரையாடலும் பிணைப்பும் மேலும் வலுவடையும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-25T10:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் டெலிவரி; வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/beard-growth-oil-delivered-instead-iphone-flipkart-1784969780"></link>
            <id>https://jvpnews.com/article/beard-growth-oil-delivered-instead-iphone-flipkart-1784969780</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்ர்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், 

மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிளிப்கார்ட் தளத்தில் வட்டி இல்லா மாதத் தவணை முறையில் ரூ.1,11,793 மதிப்பில் ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ போன் ஆர்டர் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fffff2c2-7cc2-4a01-b32a-2104ee1204c2/26-6a647a36479d1.webp' /></p><p></p><h2>&nbsp;ஐபோனுக்குப் பதிலாக&nbsp; தாடி வளர்க்கும் எண்ணெய்</h2><p>

ஆனால், பார்சலில் ஐபோனுக்குப் பதிலாக ‘தாடி வளர்க்கும் எண்ணெய்’ இருந்தது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் சரியான தீர்வு வழங்கவில்லை.</p><p>

இதையடுத்து அவர் மும்பை புறநகர் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிளிப்கார்ட், அதன் விற்பனையாளர் ‘இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல்’ மற்றும் ‘ஆப்பிள் இந்தியா’ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், “இந்த இழப்புக்கு பிளிப்கார்ட்டும், அதன் விற்பனையாளருமே கூட்டுப் பொறுப்பு.

வாடிக்கையாளருக்கு அசல் தொகை ரூ.1,11,793-ஐ 2023 ஏப்ரல் 22 முதல் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். மன உளைச்சல், வழக்குச் செலவு உட்பட மொத்தம் ₹1.8 லட்சம் வரை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” உத்தரவிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-25T09:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/neetissue-union-minister-dharmendra-pradhan-resign-1784970755"></link>
            <id>https://jvpnews.com/article/neetissue-union-minister-dharmendra-pradhan-resign-1784970755</id>
            <summary type="text">&amp;nbsp; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில்&amp;nbsp; இந்திய கல்வி அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில்&nbsp; இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்
பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9932e2-ee60-4205-ac08-cb6b284fd1f6/26-6a647e04d2bcb.webp' /></p><p></p><p>

இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T09:11:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலை விட்டு துறவறம்; பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mk-founder-ramadoss-retires-from-politics-1784969058"></link>
            <id>https://jvpnews.com/article/mk-founder-ramadoss-retires-from-politics-1784969058</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது. </p><p> 

நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், “இன்று எனக்கு 88 ஆவது வயது ஆரம்பமாகிறது. இந்த தருணத்தில் நான் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdefa758-7eba-4d95-b9fd-9fcdad3121cc/26-6a64776be4f15.webp' /></p><h2>அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்</h2><p> </p><p>அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். வருபவர்களைப் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். 

ரசியலில் நான் தலையிடமாட்டேன். அதை அன்புமணி பார்த்துக்கொள்வார்.</p><p></p><p> அவரது துணைவியாரும் அவருக்கு துணையாக இருப்பார். நாங்களும் துணையாக இருப்போம்.

என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரிக்க வரலாம். அரசியல் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஏனென்றால், நான் இன்றிலிருந்து அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T08:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் உயிரிழந்தது யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/found-body-mahaweli-river-1784968312"></link>
            <id>https://jvpnews.com/article/found-body-mahaweli-river-1784968312</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

ஆற்றில் சடலமொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8972f1d8-2c43-41dc-b65c-58442859a04c/26-6a6474798a490.webp' /></p><p> </p><p>

அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p> 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T08:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடியில் அதிவேகத்தால் பாரிய விபத்து; குழந்தைகள் உட்பட ஐவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-accident-in-kaluwanchikudy-due-to-high-speed-1784962024"></link>
            <id>https://jvpnews.com/article/major-accident-in-kaluwanchikudy-due-to-high-speed-1784962024</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் வைத்து, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
 இன்று சனிக்கிழமை (25) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0707aaba-df46-46e3-8a11-ef2c87241b33/26-6a645be9db11a.webp' /></p><h2>அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/105b8cae-4f30-4d4a-befa-3e1a88015b18/26-6a645bea92fa2.webp' /></p><p>
</p><p>
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.</p><p>

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p>]</p>]]></content>
            <updated>2026-07-25T08:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்; 'Bitchat' செயலியை முடக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-protests-in-delhi-govt-block-bitchat-app-1784964755"></link>
            <id>https://jvpnews.com/article/student-protests-in-delhi-govt-block-bitchat-app-1784964755</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் போராட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் 'Bitchat' செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2716ff16-6863-4e93-a44a-c97d8a21c190/26-6a6466949d491.webp' /></p><p>
</p><p>
இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதால், அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்; இது தான் ஜனநாயகமா? நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-neet-actress-sanam-shetty-fumes-slam-joker-1784962943"></link>
            <id>https://jvpnews.com/article/protest-neet-actress-sanam-shetty-fumes-slam-joker-1784962943</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.</p><p>

“இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம். பொது மக்களில் ஒருவராக இதில் நான் பங்கேற்கிறேன். இங்கு எனக்கு முன்பு பேசியவர்களின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாணவர்களின் போராட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f47aef0-b3cd-4447-91a6-f84cbeda57a8/26-6a645f803b5d1.webp' /></p><h2>நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்</h2><p> </p><p>அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

இந்த மேடையை அரசியல் சார்ந்து பயன்படுத்துபவர்கள் தான் கோமாளிகள். நாம் கிடையாது. நானும் கிடையாது. நான் தளபதியின் (விஜய்) தீவிர ரசிகர் கூறியபோது , அவரது பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர். </p><p> 

இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இப்போது புரிகிறதா நான் யார் குறித்து பேசினேன் என்று. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நான் வந்துள்ளேன். யாரும் சொல்லி இங்கு நான் வரவில்லை. நானாகவே வந்துள்ளேன் என்று ஆவேசமாக நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
</p><p>
பின்னர் நடிகை சனம் ஷெட்டியிடம் இருது மைக் வாங்கப்பட்ட நிலையில் மேடையில் இருந்தவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

“மாணவர்கள் போராட்டம் என்று சொன்னார்கள். </p><p>மைக்கில் நான் பேசிக்கொண்டிருந்த போது எனது மைக்கை பறித்தார்கள். இதுதான் அவர்களின் ஜனநாயகமா? இது மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டம். ஆனால், இங்கு தங்களது அரசியல் நிலைப்பாடு சார்ந்து போராடுகிறார்கள். பேசுவதற்கு கூட சுதந்திரம் தராதவர்கள்.</p><p> இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது. எனது கருத்தை மட்டும்தான் நான் பேச முடியும். ஒரு திரைப்படம் பார்த்தால் ஜோக்கரா?

மாணவர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். </p><p>விளம்பரத்துக்காக சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்தினால் கைது செய்வார்கள். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்று செய்தியாளர்களிடம் சனம் ஷெட்டி தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-25T07:00:42+00:00</updated>
        </entry>
    </feed>
