<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T10:26:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் தமிழக முதலவர் விஜயின் மனைவி சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p>

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><p><br></p><p>

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p>பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். </p><p>வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p>
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
</p><p>
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704"></link>
            <id>https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704</id>
            <summary type="text">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 ஆம் திகதி 11 பத்திரிகைகளை மேலதிகமாக வெளியிடுவதுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 1,748,877.76 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e21f0d-f109-44a7-8977-effc68e7bfdb/26-6a75b02a2b2c8.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, 17 இலட்சத்துக்கும் அதிக தொகையை அரசாங்கத்திற்கு நட்டப்படுத்தியமை ஊடாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-07T10:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெளிநாட்டவரின் மோசமான செயல் ; விரட்டி பிடித்த பொது மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1459ba0-a70f-45ca-8a08-3b52e58d9962/26-6a75a81885cb8.webp' /></p><p style="text-align: justify;">சந்தேகநபர் வீதியில் சென்ற ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனினும், அவரை துரத்திச் சென்ற உள்ளூர் நபர் ஒருவர் பிடித்து, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



குறித்த நபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்து நிற்கும் காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது.&nbsp; </p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் செய்த விபரீத செயல் ; இதற்காகவா இப்படி? துயரில் கதறும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea718b1d-fc2d-4d5c-af5e-c070ba750299/26-6a757c1260baa.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p style="text-align: justify; ">
தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் பதற்றம் ; ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-crisis-president-chairs-special-meeting-1786094730"></link>
            <id>https://jvpnews.com/article/prison-crisis-president-chairs-special-meeting-1786094730</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பொதுப் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">[OTAIZA</p><p style="text-align: justify; ">

 

இருப்பினும், இச்சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் சிறைச்சாலைகளில் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இதற்கமைய, நீதி அமைச்சரின் தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-07T09:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித், குகன் காணாமற்போன வழக்கு ; கோட்டாபய ராஜபக்சவிற்கு நீதிமன்ற பிறப்பித்த முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-key-order-against-gotabaya-rajapaksa-1786093636"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-key-order-against-gotabaya-rajapaksa-1786093636</id>
            <summary type="text">2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி அழைப்பின் ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு காணொளி அழைப்பின் ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3ffd51-ca1e-4bb5-82a8-3e8bd3e41f18/26-6a75a0462ff0b.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு ; குவிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-security-around-batticaloa-prison-1786092813"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-security-around-batticaloa-prison-1786092813</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பை அடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c432cf53-8f22-46f1-b365-d50347616466/26-6a759d0f9bad7.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதுகாப்பு நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f92c9eb-4030-4282-9c10-85379791df68/26-6a759d10509df.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அதேவேளை, இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சிறைச்சாலை ஆராய்ந்து கொண்டார்.
</p><p style="text-align: justify; ">
தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன், இன்றையதினம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T08:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ; கொண்டாட்டத்திற்கு செல்லவிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/midnight-incident-reported-in-jaffna-1786091483"></link>
            <id>https://jvpnews.com/article/midnight-incident-reported-in-jaffna-1786091483</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b874ecfe-4d88-4160-80ae-5d3a57c868e6/26-6a7597dd61aaf.webp' /></p><h2 style="text-align: justify; ">பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்</p><p style="text-align: justify; "> 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , தாலிக்கொடி உள்ளிட்ட 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டார் கூறியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T08:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறையில் தீவிரமடையும் நிலைமை ; பிரதான கதவை முற்றுகையிட்ட கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-escalates-at-pallansena-open-prison-1786090671"></link>
            <id>https://jvpnews.com/article/tension-escalates-at-pallansena-open-prison-1786090671</id>
            <summary type="text">நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.</p><p style="text-align: justify; ">சில கைதிகள் பிரதான கதவை முற்றுகையிட்ட சூழ்ந்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன.நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cec31ac-22e7-413e-810d-008d05f645d9/26-6a7594b0eee55.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மோதல் சூழ்நிலை</h2><p> </p><p style="text-align: justify;">

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - முல்லைத்தீவு சொகுசு பேருந்தில் நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் ; உடந்தையான உரிமையாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-activity-on-luxury-bus-route-exposed-1786088219"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-activity-on-luxury-bus-route-exposed-1786088219</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்திப் பேருந்தைச் செலுத்திய சாரதியும், அவருக்கு உடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்திப் பேருந்தைச் செலுத்திய சாரதியும், அவருக்கு உடந்தையாக இருந்த பேருந்தின் உரிமையாளரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

யாழ்ப்பாணம் - கொழும்பு மற்றும் முல்லைத்தீவு இடையே பயணிக்கும் சில தனியார் பேருந்துகளின் சாரதிகள் நீண்டகாலமாக 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தி பேருந்துகளைச் செலுத்தி வருவதாக வவுனியா, புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba98df23-526b-4103-9e10-679db5954b87/26-6a758b1d13dd5.webp' /></p><h2 style="text-align: justify; ">உடல் ரீதியான அசௌகரியங்கள்&nbsp;</h2><p>

</p><p style="text-align: justify; ">புளியங்குளம் பொலிஸ் பிரிவில் குறித்த பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இச்சம்பவம் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சாரதி நாளொன்றுக்கு 2 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை பயன்படுத்தி, இடைநிறுத்தங்களின்றி நீண்டதூரம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சாரதியின் கடும் களைப்பு மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்களைப் பொருட்படுத்தாது பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதித்த குற்றத்திற்காக குறித்த பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T07:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளே அவதானம்....ஒரு வினாடியில் காத்திருக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-warning-issued-to-drivers-1786087099"></link>
            <id>https://jvpnews.com/article/important-warning-issued-to-drivers-1786087099</id>
            <summary type="text">வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பொது பாதுகாப்புத் தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் , காணொளிகளைப் பார்ப்பதற்காக வீதியிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலம் எதிரே வாகனம், பாதசாரி அல்லது ஏனைய தடைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முக்கியமான எதிர்வினை நேரத்தை சாரதிகள் இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c548cd8c-65bd-40a0-87c9-6fe47235c891/26-6a7586be1319e.webp' /></p><h2 style="text-align: justify; ">கோரிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; ">"நீங்கள் பார்க்கும் காணொளியினால் சில வினாடிகள் மட்டுமே வீதியிலிருந்து உங்களது கவனம் திசைதிருப்பப்பட்டாலும், ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கிறீர்கள்" என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; ">அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸார், காணொளிகளைப் பின்னர் பார்க்கலாம்; ஆனால் "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, வீதியைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறும், விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் உயிரை பறித்த கணவன் ; குடும்ப தகறாரால் வந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-after-wife-s-tragic-death-1786085407"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-after-wife-s-tragic-death-1786085407</id>
            <summary type="text">கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளகெதர பொலிஸார் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வெளகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகொட்ட பகுதியில் நேற்று&nbsp; (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58ce1a1-71f8-429f-b50e-90ea9305abc4/26-6a758020eaa30.webp' /></p><h2 style="text-align: justify; ">குடும்பத் தகராறு</h2><p>
</p><p style="text-align: justify; ">
தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்பட்ட குடும்பத் தகராறு எல்லை மீறிச் சென்றதையடுத்து, கணவன் கூர்மையான ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெளகெதர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T06:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-peradeniya-campus-students-1786083730"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-peradeniya-campus-students-1786083730</id>
            <summary type="text">&amp;nbsp;சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் வழமை போன்று&nbsp; முன்னெடுத்துச் செல்வதற்குத் தற்போது அனைத்துக் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce790573-80f0-42ee-a1ca-6172c7eb51a5/26-6a75799428a47.webp' /></p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T06:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி செனவிரத்னவிற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ravi-seneviratne-faces-interim-injunction-1786082973"></link>
            <id>https://jvpnews.com/article/ravi-seneviratne-faces-interim-injunction-1786082973</id>
            <summary type="text">பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. </p><p>

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வீதி விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைகளையே இவ்வாறு முன்கொண்டு செல்வதற்கு இடைக்கால தடை உத்தரவை இன்று (7) பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69823b0b-60f3-498b-a73a-7c4c83aa7e67/26-6a75769f8854a.webp' /></p><p> 

ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T06:09:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளத்தில் கவிழ்ந்த வேன் ; தொழிலுக்கு சென்ற 12 பெண்கள் உட்பட இரு ஆண்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/van-plunges-into-ravine-12-women-injured-1786082192"></link>
            <id>https://jvpnews.com/article/van-plunges-into-ravine-12-women-injured-1786082192</id>
            <summary type="text">புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efb69f9-7a43-43f7-bb48-4a22a1149304/26-6a757392a08fd.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வைத்தியசாலையில் அனுமதி</h2><p> </p><p style="text-align: justify; ">

காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையிலும், 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் அடங்குவதுடன், சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய மகசின் சிறைச்சாலை மோதல் ; ஒருவர் பலி; 9 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-magazine-prison-clash-claims-one-life-1786081474"></link>
            <id>https://jvpnews.com/article/new-magazine-prison-clash-claims-one-life-1786081474</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">


சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e0d7ca4-6ba4-48fb-b3be-645e536cc20d/26-6a7570c43a5af.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்&nbsp; தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக தற்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று&nbsp; ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

</p>]]></content>
            <updated>2026-08-07T05:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் பதற்றம் ; கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pallansena-prison-faces-sudden-unrest-1786080582"></link>
            <id>https://jvpnews.com/article/pallansena-prison-faces-sudden-unrest-1786080582</id>
            <summary type="text">நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகள் கூரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருதானகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d451c223-90ac-4a08-955b-9f95844e1b71/26-6a756d4883fc1.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T05:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் பொலிஸாருக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; தப்பியோடிய 25 பேர் கொண்ட குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-targets-police-officers-1786079490"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-targets-police-officers-1786079490</id>
            <summary type="text">மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c08636-1972-4ec8-86cd-a2235dbe4519/26-6a75690400800.webp' /></p><h2 style="text-align: justify;">கசிப்பு உற்பத்தி நிலையம்</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">


தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify;">மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify;">


இதனையடுத்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify;">



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று பெண்களுடன் கைதான ஆண் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-held-alongside-three-women-1786078546"></link>
            <id>https://jvpnews.com/article/man-held-alongside-three-women-1786078546</id>
            <summary type="text">கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜூலை 18 ஆம் திகதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கடந்த ஜூலை 18 ஆம் திகதியன்று வீடு ஒன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec4ab20-e4b2-4596-8dc6-fe2bae526ab7/26-6a7565546280e.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நேற்று (6) தெஹிவளைப் பகுதியில் இக்குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்களும், ஹட்டன் பத்தன பகுதியில் அந்த குற்றத்திற்கு ஒத்தாசை வழங்கிய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது, திருடப்பட்ட 8 ஜோடி தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்க சங்கலிகள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

கைதானவர்கள் 28, 46, 53 வயதுடைய பெண்களும், 28 வயதுடைய ஹட்டன் பத்தனப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T04:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய மெகசின் சிறையில் மோதல் ; உறவினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601"></link>
            <id>https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601</id>
            <summary type="text">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1f122-2c73-497a-b8ea-4368840d3a3c/26-6a7561a2d9fd6.webp' /></p><h2 style="text-align: justify;">சிறைச்சாலை பாதுகாப்பு</h2><p> </p><p style="text-align: justify;">

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fd74acb-c6be-499d-8090-aaed70f2d1d7/26-6a7563eed7a98.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify;">

இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T04:39:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை ; இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199"></link>
            <id>https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199</id>
            <summary type="text">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e986c191-4c47-409b-b4b1-ca8fbbd09fea/26-6a756010d742f.webp' /></p><h2 style="text-align: justify; ">காயமடைந்தவர்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p style="text-align: justify;">
இந்த நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"> 

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p style="text-align: justify;">

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T04:33:14+00:00</updated>
        </entry>
    </feed>
