<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T19:26:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் திருவிழாவில் விபரீதம் ; வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9cfc12-6528-4a42-be4e-98505c3997aa/26-6a888b4cdc6db.webp' /></p><p>

இதன்போது அங்கிருந்த பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அங்கு திரண்டிருந்த சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், சில ஆலய நிர்வாகங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, திருவிழா மற்றும் மத நிகழ்வுகளை பொறுப்புடன் நடத்த வேண்டும் என அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான தீ விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நவாலி அந்திரான் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சிங்கள பாடகியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730</id>
            <summary type="text">காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.</p><p> 

நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். </p><p>

நந்தா மாலினியின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் நாளை (22) பொரளை பொது மயானத்தில் பி.ப 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc69c7ec-317d-4dd1-8e80-98915dc2f175/26-6a88a3d39cb66.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d9dc20-3d30-42fa-8648-fc61ec3e086d/26-6a88a17fd9446.webp' /></p><p> 

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னோடித் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199"></link>
            <id>https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199</id>
            <summary type="text">விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.</p><p> 

முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதலீடுகளும் உபகரணங்களும் வீணடிக்கப்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட திட்டத்தின் முன்னோடி கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் உரிய சவால்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f503fb5d-e712-46f4-92c9-ebf8e53478cc/26-6a888669dd920.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்மூலம் கிடைக்கும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஆரம்பக் கட்டத்தில் இனங்காணப்பட்ட குறைபாடுகளுடைய கற்கும் மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை முறையாக நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போது நடைமுறையிலுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படுவதுடன், அதன் ஆரம்பக் கட்டத்தில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. </p><p>

இதன்போது, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள பாடசாலைகள் அல்லது கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். </p><p>

இது தவிர, முறையான அடையாள மற்றும் பரிசோதனை முறைகளை நிறுவுதல், கல்வியலாளர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல் மற்றும் அணுபவ வசதிகள் தொடர்பான தரங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கனேடிய கடவுச்சீட்டுடன் பயணித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>

தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c2ed1c-daea-457b-bac2-b51de0abf59e/26-6a887e5960e09.webp' /></p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p>
இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனத் திருட்டுகள் குறித்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718"></link>
            <id>https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718</id>
            <summary type="text">மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e41d72d4-f871-402d-975d-8d77b158c9aa/26-6a8878cfbdb44.webp' /></p><p>அத்தகைய வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்குள் விடப்படும் விலைமதிப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்பவை காணாமல் போவது தொடர்பிலும் தற்போது பதிவாகியுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

சில சந்தர்ப்பங்களில், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே வேறு வேலைகளில் ஈடுபடுவதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாவிகளை அவற்றிலேயே விட்டுச் செல்வதன் மூலம் குற்றவாளிகள் உடனடியாக அவற்றைத் திருடிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

அத்துடன், தங்களது வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியை வீட்டின் திறந்த வெளியில் நிறுத்தி வைப்பதும், வீட்டின் வாயில் கதவுகளுக்கு பூட்டுப் போடாமல் இருப்பதன் மூலமும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது வாகனங்கள் திருடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடமும், வர்த்தக நிலைய வளாகத்தில் வாகனம் நிறுத்தப்பட்டால் அது தொடர்பான பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது வர்த்தக நிலையத்தின் கடமையில் உள்ள ஊழியரிடம் அது குறித்துத் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

அத்துடன், இரவில் இருண்ட பகுதியிலோ அல்லது தனிமையான இடத்திலோ மோட்டார் சைக்கிள் அல்லது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அது குற்றவாளி ஒருவருக்குக் குற்றம் இழைப்பதற்கு உதவி புரிவதாக அமையும் என்பதால், அது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

எவ்வாறாயினும், தங்களது வாகனம் திருடப்பட்டால், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்களான 119 / 118 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும், அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970"></link>
            <id>https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970</id>
            <summary type="text">&amp;nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேலும் மூவர் புனர்வாழ்வளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871b1310-7f00-4ea3-b214-0cd8eb5e4bec/26-6a884ed42da4f.webp' /></p><p>



நேற்று (20) வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில் 753 போதைப்பொருள் கைப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


இதன்போது, ஹெரோயின் 231 கிலோ 255 மில்லிகிராம், ஐஸ் 1 கிலோ 304 மில்லிகிராம், கஞ்சா 546 கிலோ 142 கிராம், கஞ்சா செடிகள் 43,122, குஷ் 1 கிலோ 52 கிராம், ஹஷீஷ் 11 கிராம், மெத்தம்பிட்டமின் 174 கிராம், மெத்தடோன் 257 கிராம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>



நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளி நாடொன்றில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்கள்; கிடைத்த வெகுமதியால் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318</id>
            <summary type="text">&amp;nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கையர்களால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8435a161-ea87-4247-bf27-9e64fc73c283/26-6a88485fc95ac.webp' /></p><p></p><h2>&nbsp;நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமை</h2><p> </p><p>

விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட இவர்கள், தாங்கள் சேவையாற்றிய கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன் கடலில் விழுந்த இரு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> 

விபத்து இடம்பெற்ற வேளையில் இந்த இலங்கையர்கள் தென் கொரியாவின் தொழில் அனுமதி முறைமையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசா அனுமதிப்பத்திரத்துடன் சேவையாற்றிக் கொண்டிருந்தனர். </p><p>

பொதுவாக அந்த விசா வகையின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளியொருவர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p></p><p> 

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு மற்றும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி, தென் கொரிய நீதி அமைச்சினால் குறித்த இரு இலங்கையர்களுக்கும், மீண்டும் மீண்டும் விசாவை நீட்டிக்கத் தேவையின்றி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமைகாட்டும் இந்த நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அதேவேளை இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்றைய இலங்கையரும் ஏற்கனவே நீண்டகால விசாவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-21T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் பிரதேச சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினர்! திடீரென நுழைந்ததால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641"></link>
            <id>https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>



மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c7b432-8ea7-4612-af61-0136af749475/26-6a8849a3074b8.webp' /></p><h2>கல்லூண்டாய் குப்பை மேடு -&nbsp;கடுமையான சுகாதாரப் பிரச்சினை</h2><p> </p><p>இதன்போதே உறுப்பினர் நா. பகீரதன் நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்தார்.



கல்லூண்டாய் குப்பை மேடு அடிக்கடி தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


குப்பை மேட்டில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் ஏற்படும் புகையைச் சுவாசிப்பதன் மூலம் மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>



இந்தப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும், மானிப்பாய் பிரதேச சபையிலும் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>


கல்லூண்டாய் குப்பை மேட்டில் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே நெருப்பு சட்டியுடன் சபைக்குள் வந்ததாகவும் உறுப்பினர் நா. பகீரதன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334"></link>
            <id>https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3c31ff-b7f2-4225-ba50-2667664ab443/26-6a8838d02f835.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத் திருவிழா அனர்த்தம்; 235 பேர் சிகிச்சை! நிரம்பிவழியும் மருத்துவமனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1f01346-1e9f-4f47-8e41-4b31f0913443/26-6a88548be1069.webp' /></p><h2>&nbsp;அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்</h2><p> </p><p>

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100d8353-c0b4-4b21-918f-65d294c871b6/26-6a88548c9ad6e.webp' /></p><p> 

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p> </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95fa16b-0d09-4f52-acf1-2042203cfec5/26-6a88548d633d3.webp' /></p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்</b></p><p><a href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452" target="_blank">யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்</a></p><p><a href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941" target="_blank">யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்</a><b></b></p>]]></content>
            <updated>2026-08-21T13:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு; முதலமைச்சர் விஜய் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/s-sowcar-janaki-passes-away-cm-vijay-condolences-1787317272"></link>
            <id>https://jvpnews.com/article/s-sowcar-janaki-passes-away-cm-vijay-condolences-1787317272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.எண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/actress-sowcar-janaki-passes-away-1787303794" target="_blank">&nbsp; &nbsp;பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி </a>உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a330c71-c37f-44e7-97a6-170f1c795fe3/26-6a884c19be81a.webp' /></p><h2>எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய&nbsp; &nbsp;கலைப்பணி</h2><p>



“பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை இரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
</p><p>


திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.</p><p></p><p> தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p></p><p>



சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
