<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T11:48:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-results-1786275426"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-results-1786275426</id>
            <summary type="text">இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில், 2,723 பரீட்சை நிலையங்களில் இன்று(9) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p><p>இதற்கிடையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p>மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T11:37:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை; அரசியல்வாதியும் மனைவியும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438"></link>
            <id>https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஐஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>மேலும், சந்தேகநபர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-09T11:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழா இடைநிறுத்தம்! முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923</id>
            <summary type="text">கிளிநொச்சி-&amp;nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக&amp;nbsp; நிர்வாகம் அறிவித்துள்ளது.ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-&nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக&nbsp; நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>றீச்ஷாவில் ஓகஸ்ட் 7 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரம்மாண்டமான உணவுத் திருவிழா கோலகலமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்து.</p><h2>மீள் வழங்கப்படும்&nbsp; பணம்</h2><p>இந்தநிலையிலே, தவிர்க்க முடியாத காரணத்தினால், இன்றையதினமும்(9) நாளையதினமும் (10) நடைபெறவிருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>அத்தோடு, இன்றையதினமும், நாளையதினமும் உணவுத்திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்திய முழுத் தொகையும் நிகழ்நிலை வங்கி பரிமாற்றம் மூலம் மீளளிக்கப்படும் எனவும் றீச்சா நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் திட்டமிட்டு சிலர் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விசமத்தனமாக&nbsp; கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p>அதேசமயம்&nbsp; றீச்சா, வடக்கின் மாபெரும்&nbsp; சுற்றுலா தளமாக&nbsp; தற்போது&nbsp; மாறியுள்ளது.அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளையும் றீச்சா கவர்ந்துள்ளது என்பதை யாராலும்&nbsp; மறுக்க முடியாது.</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-09T10:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி வங்கியொன்றில் போலி நாணயத்தாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/counterfeit-banknote-at-a-kilinochchi-bank-1786268300"></link>
            <id>https://jvpnews.com/article/counterfeit-banknote-at-a-kilinochchi-bank-1786268300</id>
            <summary type="text">கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி&amp;nbsp; நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி&nbsp; நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டுவந்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;அது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே அவர்கள் நேற்று (08)&nbsp; கைது செய்யப்பட்டதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T10:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&amp;nbsp; கடந்த&amp;nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;கண்டி மாவட்டத்தைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&nbsp; கடந்த&nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.</p><p>இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.&nbsp;</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.மாணவியின் மரணம்அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T09:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி ; இராணுவ அங்கியும் வெடிபொருளும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673"></link>
            <id>https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், குறித்த அங்கி இராணுவத்தினர் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி எனத் தெரியவந்துள்ளது.</p><p>அந்த அங்கியில் நீண்ட காலமாக காணப்பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் இருந்தமையும் பொலிஸாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T09:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறையை தூண்டிய குழுக்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981"></link>
            <id>https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981</id>
            <summary type="text">குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், வன்முறையின் போது கைதிகளால் சிறைச்சாலைக் கூரைகள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சிறைகளில் கைதிகளைத் தங்கவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இரத்தினபுரிப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் இன்று (08) சிறைச்சாலையில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, வன்முறையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், குறித்த சிறைச்சாலையில் பார்வையாளர் அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tunisian-tourist-dies-while-surfing-1786263092"></link>
            <id>https://jvpnews.com/article/tunisian-tourist-dies-while-surfing-1786263092</id>
            <summary type="text">வெலிகம கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>இன்று (09) காலை வெலிகம பழைய கடை கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் சடலம் கரை ஒதுங்கியதாக வெலிகமப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>பழைய கடை கடற்கரையில் நேற்று (08) துனிசிய சுற்றுலாப் பயணிகள் குழு அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் பலத்த காற்று காரணமாக கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது கடல் அலையில் சிக்கி குறித்த சுற்றுலாப் பயணி காணாமல் போனதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>காணாமல் போன சுற்றுலாப் பயணியைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர் காப்பாளர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தனியார் மூழ்குநர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.</p><p>இதனைத் தொடர்ந்து, இன்று காலை பழைய கடை கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>இச்சம்பவம் குறித்து வெலிகம தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் 22 வயது இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-year-old-man-killed-in-accident-1786262389"></link>
            <id>https://jvpnews.com/article/22-year-old-man-killed-in-accident-1786262389</id>
            <summary type="text">கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.</p><p>மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உச்சம் தொட்ட டெங்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-reaches-a-peak-in-sri-lanka-1786262003"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-reaches-a-peak-in-sri-lanka-1786262003</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.</p><p>அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T07:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தலைவர் மொஜ்தபா கமேனி; சர்வதேசத்திற்கு ஈரான் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-leader-mojtaba-khamenei-fine-iran-1786260256"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-leader-mojtaba-khamenei-fine-iran-1786260256</id>
            <summary type="text">ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.&amp;nbsp;அவரது உடல்நிலை மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><h2>ஈரான் ஊடகம்&nbsp; &nbsp;காணொளி</h2><p>இவ்வாறு செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து ஈரான் ஊடகம் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்ததிலிருந்து கமேனி ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றவில்லை.</p><p>இந்த குறுகிய, காணொளியில் கமேனி தனது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காணொளியில் அவர் அமைதியாகவும் நல்ல உடல்நிலையுடனும் தோற்றமளிக்கிறார்.</p><p>இந்த காணொளியை பகிர்ந்த மெஹர் செய்தி நிறுவனம், உயர்மட்டத் தலைவரின் இத்தகைய காட்சிகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளது.</p><p>இந்த காணொளி எப்போது அல்லது எங்கு படமாக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-09T07:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் தொடர் நிலநடுக்கங்கள்; அச்சத்தில் வீதிகளில் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/series-of-earthquakes-in-maharashtra-1786259941"></link>
            <id>https://jvpnews.com/article/series-of-earthquakes-in-maharashtra-1786259941</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, நேற்று (08) இரவு 10 மணியளவில் நாசிக் மாவட்டத்தில் 4.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. </p><h2>வீடுகளின் சுவர்களில் விரிசல்கள்&nbsp;</h2><p>இதனைத் தொடர்ந்து நேற்று (09) அதிகாலை 5.33 மணியளவில் 3.3 ரிச்டர் அளவிலான நில அதிர்வும் பதிவாகியுள்ளது.</p><p>மகாராஷ்டிரா – குஜராத் எல்லைக்கு அருகிலுள்ள ஹட்காட் மலைத்தொடரை அண்டிய பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நாசிக் நகரம் மற்றும் சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி, நிபாட் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.</p><p>சுர்கானா தாலுகாவில் உள்ள பாதர் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நானாஷி ஆகிய கிராமங்களில் சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. அப்பகுதியில் உள்ள அணைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், வதந்திகளை நம்பாமல் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவர்ச்சிகரமான பெண்களில் மயங்க வேண்டாம்; சமூக ஊடகங்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216"></link>
            <id>https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216</id>
            <summary type="text">இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>பாதிக்கப்படுபவர்களின் விபரங்களை முன்னதாகவே திரட்டும் மோசடிக்காரர்கள், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் 'Hi' என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி பேச்சை ஆரம்பிக்கின்றனர்.</p><p>சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.</p><p>எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T07:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகள் பழமையான முறைமையை மாற்றும் நிதி அமைச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956"></link>
            <id>https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.ஆங்கில ஊடகம்&amp;nbsp; ஒன்று வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.</p><p>ஆங்கில ஊடகம்&nbsp; ஒன்று வெளியிட்டுள்ள தகவல்படி, அரச நிறுவனங்களுக்கான வேதன முறைமையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கான கொள்முதல்" (Procurement of Design&gt; Development and Implementation of a Payroll System for Government Organizations) என்ற கேள்விப்பத்திர அறிவிப்பை நிதியமைச்சின் மாநிலக் கணக்குகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>தற்போதைய ஜி.பி.எஸ் முறைமை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>இது அமைச்சகங்கள், திணைக்களங்கள், சிறப்புச் செலவின அலகுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சில சட்டபூர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p>தற்போதைய முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.</p><p>இதன் பலவீனமான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளுதல்கள் மற்றும் வேதனம் தொடர்பான மோசடி அபாயங்களுக்கு உட்படுத்துகின்றன, இது அரசு நிதிக்கூறுகளின் நம்பகத்தன்மையை மற்றும் செயல்திறனைக் குலைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், தற்போதைய முறைமையில் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் வேதன முகாமைத் தளமாகச் செயற்படத் தேவையான நெகிழ்வுத்தன்மையும் அளவிடக்கூடிய தன்மையும் இல்லை, இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் தடைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வேதன செயலாக்க முறைமைக்கு மாறுவதற்கான தேவை அவசரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:50:41+00:00</updated>
        </entry>
    </feed>
