<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T15:50:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f241aa13-8cdd-4c35-b2ff-5ce9d48a551e/26-6a6f65eac24bb.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477"></link>
            <id>https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477</id>
            <summary type="text">கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p>

தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9908046-b1e5-472e-b753-3f77ca1beb1d/26-6a6f37072e939.webp' /></p><p>

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார். </p><p>வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தர நியமனம் குறித்து விமல் வீரவங்ச புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wimal-allegations-regarding-pujith-appointment-1785677880"></link>
            <id>https://jvpnews.com/article/wimal-allegations-regarding-pujith-appointment-1785677880</id>
            <summary type="text">நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93759f78-a523-4796-9873-7fa4bcb4b004/26-6a6f483aadd7f.webp' /></p><p>இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டு, முடியுமாயின் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திற்குச் சென்று நேரடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச, அவர்களுக்கு இடையே நெருங்கிய அரசியல் தொடர்பு நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்ததன் மூலம் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்குப் பூரண அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
</p><p>
எனினும், பூஜித் ஜயசுந்தர அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாததால் அத்தகைய பாதுகாப்பு எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befda1a9-0e57-442c-acb6-cf15813150dd/26-6a6f429bec2f1.webp' /></p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p> 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சார்ஜில் இருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று (02) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



முறைப்பாட்டின்படி, தனது வீட்டில் சுமார் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கைத்தொலைபேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715a66fd-fc2a-4de3-a3c1-e3dff6440dd9/26-6a6f3e9fcd6db.webp' /></p><p>



இதையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு எதிரில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>விசாரணைகளின் போது, திருடப்பட்ட கைத்தொலைபேசியை சந்தேகநபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர். </p><p>மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் அவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>



கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்து மக்களைத் துரத்திய யானை ; சிதறிஓடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித்திரிந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றுள்ளனர். இதன்போது யானை ஆவேசமடைந்து பொதுமக்களை நோக்கி முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87e2bff3-92f2-40fe-88aa-132b54271a3a/26-6a6f30bbc7273.webp' /></p><p>இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு கருதி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். </p><p>எனினும், குறித்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதமோ அல்லது உடைமைச் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பின்னர், கிராம இளைஞர்கள் மிகுந்த துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், பசறிச்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>


எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650"></link>
            <id>https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf5786-80a6-49bb-92ae-10b375c80089/26-6a6f2bfb8acbe.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> 

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.</p><p> </p><p></p><p>அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம் ; பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040"></link>
            <id>https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


வீடு உடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளுக்காக குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd613546-b16e-4df7-9086-0528d31bd6a1/26-6a6f299a0fe2d.webp' /></p><p>



இன்று காலை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையின் பாதுகாப்பு மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>


மேலும், இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மதில் மீது ஏறி தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc8c3d7-04c4-4fbf-914d-b86187f8a511/26-6a6f27dc6d12e.webp' /></p><p> இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>



தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் வரலாறு குறித்து மறுபரிசீலனை கோரும் ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836"></link>
            <id>https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836</id>
            <summary type="text">இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>2000 ஆம் ஆண்டு தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையை தற்போது மீள்பகிர்ந்துள்ள அவர், அனுராதபுரம் தொடர்பாக நிலவி வரும் வரலாற்றுப் புரிதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அந்தக் கட்டுரையில், அனுராதபுரம் சிங்களர்களுக்கே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்ற பார்வை பெரும்பாலும் மகாவம்சம் உள்ளிட்ட பிற்கால வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a7d783-d4a8-4703-8532-81c11685ed96/26-6a6f20fda767c.webp' /></p><p> மேலும், மகாவம்சம் ஒரு தேரவாத பௌத்தப் பார்வையில் எழுதப்பட்ட நூலாக இருப்பதால், அதிலுள்ள தகவல்களை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தின் ஆரம்பகால அரசர்கள், அக்கால சமூகத்தின் மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்பாக பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் கல்வெட்டுகளையும் மேற்கோள் காட்டியுள்ள ஆசிரியர், அக்கால மக்களின் அடையாளம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
</p><p>
அதேபோல், எல்லாளன் – துட்டகைமுனு போர் குறித்து இன்று பரவலாக நிலவும் "தமிழர் – சிங்களர் மோதல்" என்ற விளக்கத்தை விட, அது பௌத்த அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்தை மையமாகக் கொண்ட மோதலாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7947af8a-5820-470b-8490-0807549524cb/26-6a6f20fe5a524.webp' /></p><p>பௌத்தம் இலங்கைக்கு வந்த விதம், தேரவாத மற்றும் மகாயான பௌத்தப் பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகள், தமிழகத்துடனான வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் அனுராதபுரத்தின் அரசியல் பரிணாமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இலங்கையின் வரலாற்றை இன அடிப்படையில் மட்டுமல்லாது, மதம், மொழி, அரசியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையிலும் மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அனுராதபுரத்தின் வரலாறு தொடர்பில் மேலும் ஆழமான கல்வியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிவா சின்னப்பொடி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

எனினும், இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் ஆசிரியரின் வரலாற்று ஆய்வு மற்றும் விளக்கங்களாகும். இவை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக் கருத்துகளும் கல்வியியல் விவாதங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515"></link>
            <id>https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பலில் இருந்து குறித்த 17 வெற்று கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (01) அறிவித்திருந்தது.
</p><p>
நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, குறித்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரப் பகுதிகளை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028b5407-09b0-4795-b7cd-853fdfb81782/26-6a6f14051f07e.webp' /></p><p>

இதனையடுத்து, கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடலில் மிதந்து வந்த ஒரு கொள்கலன் இன்று காலி இந்துருவ, கைகாவல கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
</p><p>
கடலில் இருந்து கரை ஒதுங்கும் குறித்த கொள்கலன்களை பொதுமக்கள் தொடவோ அல்லது நகர்த்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவை தொடர்பில் அருகிலுள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், எஞ்சியுள்ள கொள்கலன்களின் நிலைமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:55:22+00:00</updated>
        </entry>
    </feed>
