<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T06:33:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402"></link>
            <id>https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e037cd4-29aa-42b0-a231-cee4ee9611bc/26-6a6d90dc12ba7.webp' /></p><p>தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது <a href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047" target="_blank">தந்தை விஜய் குறித்து </a>இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு&nbsp; &nbsp;மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.</p><p>

 ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deda9d0-9b30-4fbc-8497-4a7e686cc876/26-6a6d7a7556061.webp' /></p><h2>வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....</h2><p>
</p><p>
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><p>சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T06:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பெருக்கு நாளில் செல்வம் பல மடங்கு பெருக செய்ய வேண்டிய வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698</id>
            <summary type="text">ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை வழிபடும் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.</p><p></p><p>

ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரை, குளக்கரை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. </p><p>நீர்நிலைகளை காவிரி அன்னையாகக் கருதி மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்களப் பொருட்களை படைத்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் மங்களங்கள் பெருகும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449058b5-87f7-4385-87fb-64ca1b53e968/26-6a6d8a349d6b1.webp' /></p><p>

இந்த நாளில் புனித நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கான தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>முன்னோர் வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மேலும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த ஆண்டில் தாலிக்கயிறு மாற்றுவதற்கு காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையிலான நேரம் சிறந்த நேரமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் போன்ற மங்களப் பொருட்களை வழங்குவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>அன்னதானம் வழங்குதல், கோவில்கள் மற்றும் கோசாலைகளுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்குதல் போன்றவை புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.</p><p>

இந்த நாளில் மஞ்சளில் விநாயகர் உருவம் செய்து வழிபடுவதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மஞ்சளுடன் தண்ணீர் அல்லது பசும்பால் சேர்த்து பிடித்து, வெற்றிலை அல்லது வாழை இலையில் வைத்து விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82510d3e-d6d5-4627-8a54-9546a24bcb6f/26-6a6d8a3558681.webp' /></p><p>மேலும், பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து உணவளிப்பது, வீட்டில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி நிரப்பி வைப்பது ஆகியவையும் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய வழிபாட்டு முறைகளாகக் கருதப்படுகின்றன.
</p><p>
செல்வ வளம் பெருக வேண்டும் என விரும்புவோர், தங்க நகை வாங்க முடியாத நிலையில் கல் உப்பு, மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை வாங்கி வைக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. </p><p>குபேர வழிபாடு, நவதானியங்கள் வைத்து வழிபடுதல் போன்றவையும் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
லக்ஷ்மி குபேராய நமஹ"

என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து குபேர பூஜை செய்வது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையும் நிலவுகிறது.
</p><p>
இவ்வாறு, ஆடிப்பெருக்கு திருநாள் இயற்கைக்கும் நீர்நிலைகளுக்கும் நன்றி செலுத்தி, குடும்ப வளம், நன்மை மற்றும் மங்கள வாழ்வை வேண்டி கொண்டாடப்படும் முக்கியமான ஆன்மிக நாளாக விளங்குகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432"></link>
            <id>https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432</id>
            <summary type="text">அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே பரவிய தீயினால் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1fb4a00-3122-4490-9b49-11504383d3f4/26-6a6d8d11e1344.webp' /></p><p>சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மழை ஆரம்பித்த போது வீட்டிலிருந்த இரு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெரும் தொகை போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243"></link>
            <id>https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bc045b8-7d9b-40a0-83d7-ce2d06faf4af/26-6a6d8c54b1abc.webp' /></p><p></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698"></link>
            <id>https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698</id>
            <summary type="text">மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>நேற்று வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பதுளுவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2732711c-65b1-4030-a2fe-651da5fcd75a/26-6a6d864b8c2c4.webp' /></p><p>உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து இங்கினியாகல குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155"></link>
            <id>https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155</id>
            <summary type="text">இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d1b1782-b0e5-4e4a-860c-d5fbc807f223/26-6a6d842ce59fd.webp' /></p><p> இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.</p><p> 

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். </p><p>அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. </p><p>

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த பெண்ணின் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-s-body-found-suspiciously-on-land-recovered-1785561600"></link>
            <id>https://jvpnews.com/article/woman-s-body-found-suspiciously-on-land-recovered-1785561600</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைபுஹுல்ஹேன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a764ab8-fad7-460b-9860-ec99e78e9ee1/26-6a6d8201bb91b.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; புலம்பும் அலி சப்ரி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238"></link>
            <id>https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அலி சப்ரி மபதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ee99cc9-6152-4d25-8737-f8b865914dd3/26-6a6d80978ecf9.webp' /></p><h2>&nbsp;பூஜித் , ஜயசுந்தர குற்றவாளி என&nbsp; தீர்ப்பு</h2><p>

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிறப்பு மூவர் அடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது உண்மை, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், இந்தத் தண்டனைத் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவேற்றம் செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T05:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421"></link>
            <id>https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421</id>
            <summary type="text">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சார்பற்ற முறையில் பல பாரிய சமிக்ஞைக் கோளாறுகள் காணப்படுகின்ற பின்னணியில், தலவாக்கலை மற்றும் தலைமன்னார் பாதையில் பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் முதல் இந்தப் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய சமிக்ஞை முறைமைகள் சீரமைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11cebd4-2cb3-4723-b232-1ec2fcce2892/26-6a6d75969283c.webp' /></p><p>தற்போது மதவாச்சி முதல் தலைமன்னார் துறைமுகம் வரையிலான ஒற்றை ரயில் பாதையில் 'வழிகாட்டி முறைமையின்' கீழ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>பொதுவாக இவ்வாறான வழிகாட்டி முறைமையானது ஏதேனும் சமிக்ஞைக் கோளாறுகள் ஏற்படும் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>ஆனால் அதிகாரிகள் அதனை ஒரு நிரந்தர இயக்க முறைமையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>


தலைமன்னார் பாதைக்கு மேலதிகமாக, மஹவ - அனுராதபுரம் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்றும், அங்கேயும் தற்காலிக சமிக்ஞை முறைமைகளே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச் செலவழித்து புனரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதைகள் தற்போது சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ரயில் நிலையங்களில் நிலவும் இச்சமிக்ஞைக் கோளாறுகள் மற்றும் பணி தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் துரித தீர்வை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் புதிய திருப்பம் ; லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870</id>
            <summary type="text">நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>விபத்தின் போது குறித்த இளைஞர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாகவும், சுமார் மணிக்கு 160 முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியதாகவும் லொறி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லொறியைத் திருப்பும் நடவடிக்கையின் போது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை எனவும், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, பாதை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576a189e-e1da-4519-b7c0-998b39bbe87c/26-6a6d737046fb3.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளில் இடம்பெற்ற விடயங்கள் தெளிவாகக் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, விபத்துக்குப் பின்னர் கன்டெய்னர் லொறிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். உள்ளூர்வாசிகள் வாகனத்துக்கு ஆதரவாக இருந்ததாகவும், வெளியிடங்களில் இருந்து வந்த சிலரே வாகனத்தை சேதப்படுத்தி பின்னர் தீ வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருந்த போதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை 29 ஆம் திகதி நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.</p><p> பின்னர் குறித்த லொறி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி, அரசாங்கம் குறித்து அவதூறு பதிவுகள் ; காவல்துறை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281</id>
            <summary type="text">ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df34f71-df41-402a-a87e-9a7265c2a988/26-6a6d6d3a9166a.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
</p><p>
சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.</p><p>

இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்–பேருவளை கடற்பகுதிக்கு எச்சரிக்கை ; மீனவர்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. </p><p>

இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவால் அனைத்து மீனவர் சமூகத்திற்கும் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf398a5c-0303-4611-a596-3c6cdb07d32a/26-6a6d6ab5775ba.webp' /></p><p>அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பாக இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை மிக உயர்வாக அதிகரிக்கக்கூடும் என்றும், அத்துடன் கடல் அலைகள் கொந்தளிப்பாக மாறுவது சிறிய படகுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். </p><p>

தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். </p><p>

இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் எனத் தாம் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 

நிலவும் வானிலை தொடர்பில் மீன்பிடி மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார். </p><p>

இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d18a0fb-cadf-4328-95a6-0fde44beeff4/26-6a6d6ab6275e5.webp' /></p><p>காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p> 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள். </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. </p><p>மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p> 

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113</id>
            <summary type="text">இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca9d0cc-7e0b-4b02-98c2-b7276913aa22/26-6a6d68ab0c81a.webp' /></p><p>மேலும், மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 48 மணி நேரம் அவதானம் ; களனி கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde756cc-ab6d-4885-b61d-07ee1ac6ae5a/26-6a6d652d348c9.webp' /></p><p> 

அதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2025-a-l-exam-university-entrance-cut-off-points-1785553594"></link>
            <id>https://jvpnews.com/article/2025-a-l-exam-university-entrance-cut-off-points-1785553594</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த. உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் (Z-Score Cut-off Marks) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.</p><p>இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்து கற்கை நெறிகளுக்கும் அனுமதி பெறத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b7d47a-6e95-4650-b65b-a1d0ef1df115/26-6a6d62bb869e7.webp' /></p><p>

தங்களது மாவட்டம் மற்றும் விண்ணப்பித்துள்ள கற்கை நெறிக்கான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகளைப் பரிசீலித்து, பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், வெட்டுப் புள்ளிகளின் முழுமையான பட்டியலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crash-kills-person-in-tamil-area-1785544947</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e244b2-abb6-4d89-83d9-a737fd7ea815/26-6a6d40f4d8dfb.webp' /></p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்க காத்திருக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-brings-three-years-of-prosperity-1785546371</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் கர்ம வினைக்கான பலன்களை அளிக்கும் கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக, சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர&nbsp; சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. </p><p style="text-align: justify;">சனியின் இந்த இடப்பெயர்ச்சி மற்றும் அதன் பார்வை&nbsp; சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49608ccb-1e9b-4df1-bdd3-8afaf4107835/26-6a6d4684c6ef2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறந்த பலன்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">குறிப்பாக, இரண்டு ராசிகளைச் சேர்ந்தவர்கள் சனியின் அருளால் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம், பண வரவு மற்றும் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும் என்று குறிப்பிடப்படுகிறது.
</p><p style="text-align: justify;"><b>
ரிஷபம்:</b> ரிஷப ராசிக்காரர்களுக்கு, இக்காலம் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமாக அமையக்கூடும். நீண்ட காலத் தடைகள் நீங்கி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் கூட்டணிகளுக்கு வழிவகுக்கலாம். பணியாளர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் காலமாகவும் இது கருதப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;"><b>
மிதுனம்:</b> ஜோதிடக் கணிப்புகளின்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். உயர்கல்வி கற்க அல்லது வெளிநாட்டில் வேலை தேட விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட காலக் குடும்பப் பிரச்சனைகள் தணிந்து, உறவுகள் வலுப்படக்கூடும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T01:06:24+00:00</updated>
        </entry>
    </feed>
