<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T04:10:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடத்தையில் சந்தேகம் ; இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழ்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-lived-sri-lankan-tamil-rehabilitation-camp-1785025216"></link>
            <id>https://jvpnews.com/article/mother-lived-sri-lankan-tamil-rehabilitation-camp-1785025216</id>
            <summary type="text">இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த லூர்துகுமார் மற்றும் இந்திரகுமாரி தம்பதியினரின் மகளான ரெபேக்கா (24), ராமேசுவரத்தைச் சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் ராமேசுவரத்தில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e56a9b-5e58-4e60-9e17-2b969af0ce81/26-6a6552c27f225.webp' /></p><p>இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெபேக்கா தனது மூன்று குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து, பவானிசாகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், நேற்று காலை பாகபிரகாஷ் தனது மனைவியைச் சந்திக்க பவானிசாகர் முகாமிற்கு வந்துள்ளார். </p><p>மீண்டும் தன்னுடன் ராமேசுவரத்திற்கு வந்து குடும்ப வாழ்க்கையைத் தொடருமாறு அவர் கேட்டதாகவும், அதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், பாகபிரகாஷ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவை பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ரெபேக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், தப்பிச் செல்ல முயன்ற பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் பொலிஸாரஜடம் ஒப்படைத்தனர்.
</p><p>
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ரெபேக்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேகநபரான பாகபிரகாஷை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜை கொலை வழக்கு ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-chinese-national-murder-case-info-released-1785017285"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-chinese-national-murder-case-info-released-1785017285</id>
            <summary type="text">கொழும்பில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பாதுகாப்புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பாதுகாப்புத் தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர் ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>அவர் சர்வதேச அளவிலான இணையக் குற்ற வலையமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef58005f-6592-4cce-8b29-301b0a9bcc07/26-6a6533c7b0da7.webp' /></p><p>மேலும், இணையக் குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான பணம் தொடர்பான தகராறே இந்தக் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என விசாரணைத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுமார் 20 சீனப் பிரஜைகள் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
விசாரணைகளில் கிடைத்த தகவல்களின்படி, சம்பவம் நடந்த நாளில், நண்பர்களாக நடித்து இரு சீனப் பிரஜைகள் உயிரிழந்தவரை கொழும்பு துறைமுக நகரிலுள்ள (Port City) ஒரு பாலம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p> அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குழுவொன்று அவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், அவரை எஹலியகொட கரதன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் கற்களால் மூடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் விசாரணையின் ஆரம்பகட்டத்தில் வெளியாகியுள்ள தகவல்களாகும். </p><p>சம்பவம் தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணைகளின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர பெயர்ச்சி ; ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elarai-sani-entha-rasikaluku-eppadi-irukkum-1785020677"></link>
            <id>https://jvpnews.com/article/elarai-sani-entha-rasikaluku-eppadi-irukkum-1785020677</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். </p><p>அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில் ஜூலை 27 ஆம் திகதி சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6adbcd-b07e-471e-86c0-b3a61db9163f/26-6a65410689432.webp' /></p><p> </p><p>சனி பகவான் வக்ரமாகும் போது அதன் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். அதுவும் ஏழரை சனி நடப்பவர்களுக்கு இக்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.</p><p> தற்போது சனி பகவானின் நிலையால் மேஷம், மீனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இப்போது சனி வக்ரமாவதால் ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dbe9763-917c-4b68-b16e-f06437b76ea4/26-6a65410738c55.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்யும் வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.</p><h4>

கவனமாக இருக்க வேண்டியவை</h4><p>சனி வக்ர காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சரியாக ஆராயாமல் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0956118-eb7a-4a7f-9434-e116b46693ca/26-6a654107de44a.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் சனி வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். இருப்பினும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
</p><h4>
கவனமாக இருக்க வேண்டியவை</h4><p> கடன் கொடுப்பதையோ, வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f9005c-54b4-42fc-8d05-0ce1fc48d7a9/26-6a6541093e1df.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால் பணியிடத்தில் பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முன்பு எளிதில் முடிக்கப்பட்ட வேலைகள் தற்போது முடிக்க கடினமாக இருக்கலாம் அல்லது தாமதமாகலாம். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
</p><h4>
கவனமாக இருக்க வேண்டியவை</h4><p>பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54dd0640-fa29-462d-b0ad-ce8731c0da24/26-6a6541088d2b4.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T23:39:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bodies-two-women-found-hanging-two-different-areas-1785022772"></link>
            <id>https://jvpnews.com/article/bodies-two-women-found-hanging-two-different-areas-1785022772</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
மருதமுனை 6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத பெண், கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d82355-9822-4003-aac7-5cf48a67cc5e/26-6a6549363fcd6.webp' /></p><p>கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p>

அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்வதற்காக சில உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை-03 பகுதியைச் சேர்ந்த சிப்னா (28) என்ற ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p>

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றன.
</p><p>
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இந்த மரணத்திற்கான காரணம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல ; நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-and-sajith-s-unity-not-challenge-government-1785022201"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-and-sajith-s-unity-not-challenge-government-1785022201</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>களுவாஞ்சிகடி பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் இருவரும் ஒன்றாகச் செயற்பட்ட காலத்திலும் சாதனைகளைச் செய்ய முடியாமல் பிரிந்து சென்றதாகவும், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது சமமான கூட்டிணைவாகக் கருத முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளவும், சஜித் பிரேமதாசவைத் தனக்குக் கீழ் செயற்படும் ஒருவராக மாற்றவுமே இந்தச் சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cb77adb-38fc-4153-8175-01681ecb0747/26-6a6546fb5a744.webp' /></p><p>அத்துடன், சந்திப்புகளின்போது ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்குவதும், சஜித் பிரேமதாச அவற்றை குறிப்பெடுத்துக்கொள்வது போன்ற தோற்றமே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

இந்தச் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தவர்களில் பலர் வழக்குகள், விசாரணைகள் அல்லது குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.</p><p>


இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும் அச்சத்தின் காரணமாகவுமே சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:30:13+00:00</updated>
        </entry>
    </feed>
