<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T11:34:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல் ; உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185"></link>
            <id>https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185</id>
            <summary type="text">நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e904911-53c8-4c5b-aafd-8b486f5a57e2/26-6a7709cb1d91b.webp' /></p><p>

இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேத பரிசோதனைகள் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளன.
</p><p>
அமைதியின்மை மற்றும் மோதல்கள் பதிவான குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகள் உட்பட நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸார் , பொலிஸ்&nbsp; விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் ; துயரை ஏற்படுத்திய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். 

 

கண்டி மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். </p><p>

 

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42b7888-fe2a-4b5e-8093-e893f4025f1b/26-6a76cfc32762b.webp' /></p><h2>புற்றுநோய்&nbsp;</h2><p>
</p><p>
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:</p><p>

 

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
</p><p>
 

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><p></p><p> 

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

 

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-08T11:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்த முயன்ற 290 கிலோ கஞ்சா பறிமுதல் ; இரு இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090"></link>
            <id>https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090</id>
            <summary type="text">தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062e9403-b71a-4ac9-b0e1-de764c636e24/26-6a770d53db9dc.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு பொலிஸார் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். </p><p>

அப்போது அங்கு வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T11:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தலைக்கவசத்தால் சிக்கிய பலர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270"></link>
            <id>https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270</id>
            <summary type="text">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">

இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a79350-cf1a-4e85-8b89-ea1eed9461b0/26-6a770637c331e.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடிச் சோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
வருடாந்தம் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக 2,500 முதல் 2,700 வரையான நபர்கள் உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இந்த உயிரிழப்புகளில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே ஏற்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் என்ற போர்வையில் நீண்ட காலம் அரங்கேறிய தகாத செயல் ; வாடிக்கையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-act-unfolds-under-the-guise-of-lovers-1786183969"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-act-unfolds-under-the-guise-of-lovers-1786183969</id>
            <summary type="text">காதலர்கள் போல் நாடகமாடி நீண்ட காலமாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர், 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காதலர்கள் போல் நாடகமாடி நீண்ட காலமாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர், 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e514c533-6e17-4a51-9c5a-fbbd8c27cf13/26-6a770123603b1.webp' /></p><h2 style="text-align: justify;">போதை பொருள்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

 பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, காதலர்கள் போல பாசாங்கு செய்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

</p><p style="text-align: justify;">சந்தேகநபர்களை சோதனையிட்டபோது, போதை பொருள் விற்பனையால் சம்பாதித்த 1000 ரூபா பணத்துடன், 80 போதை மாத்திரைகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட இளைஞர் இதற்கு முன்னரும் போதை பொருள் கடத்தல் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

இந்த தம்பதியினர் நீண்ட காலமாக இந்த கடத்தலை தங்கள் வாழ்வாதாரமாக நடத்தி வந்துள்ளனர், மேலும் பாடசாலை மாணவர்களும் பெண்களும் கூட இவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கியுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;"> யாரும் சந்தேகப்படாத வகையில் தனிமையான இடங்களில் காதலர்கள் போல தங்கியிருந்து இவர்கள் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர், மேலும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T10:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முயற்சி ; நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-install-buddha-statue-at-amman-temple-1786181806"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-install-buddha-statue-at-amman-temple-1786181806</id>
            <summary type="text">நுவரெலியா - வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுவரெலியா - வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு வெளியாட்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; ">



நேற்று (07) இரவு சுமார் 10 மணியளவில் பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த நபர்கள் குறித்த சிலையை அங்கு நிறுவுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef38f081-5d92-4720-bd60-a19c378f5f9a/26-6a76f8b0385bd.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">



சம்பவத்தை கிராம மக்கள் அவதானித்ததைத் தொடர்ந்து, உடனடியாக ராகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரின் உதவியுடன், புத்தர் சிலையை அங்கு நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 



அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் மற்றும் காவல் தெய்வ வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



இந்நிலையில், அப்பகுதி மக்களின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குறித்த இடத்தில் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T09:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் ஈரான் உச்ச தலைவரின் மறைவு செய்தி ; கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா கொமெனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/khamenei-in-critical-condition-reports-say-1786182552"></link>
            <id>https://jvpnews.com/article/khamenei-in-critical-condition-reports-say-1786182552</id>
            <summary type="text">ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">


ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f02b52d-eacf-4937-9c4b-3bf399f0b5c0/26-6a76fb998eb9e.webp' /></p><h2 style="text-align: justify;">உடல் நிலை&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">உயர் தலைவராக பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


கொமெய்னி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கொமெய்னியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.</p><p style="text-align: justify;">


அவரது நிலை பற்றி வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, மொஜ்தபா கொமெய்னியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மொஜ்தபா கொமெய்னியின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">


அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். </p><p style="text-align: justify;">மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கொமெய்னி 90% செயலிழந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மொஜ்தபா கொமெய்னியின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்ட நிலையிலும் ஈரான் அரசு அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தனர். </p><p style="text-align: justify;">அவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டதாகவும், நாட்டின் இராணுவச் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.
</p><p style="text-align: justify;">


தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கொமெய்னி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T09:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA['Hi' க்கு பின்னால் காத்திருக்கும் பெரும் ஆபத்து ; இலங்கையருக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/slcert-warns-of-extortion-scams-on-social-media-1786180914"></link>
            <id>https://jvpnews.com/article/slcert-warns-of-extortion-scams-on-social-media-1786180914</id>
            <summary type="text">Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfad7a9f-bfe8-4fb0-8c02-623372a2386c/26-6a76f534b267e.webp' /></p><h2>குறுஞ்செய்தி</h2><p>இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து 'Hi' எனச் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.</p><p>

அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களைக் அவதானித்து, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.
</p><p>
புகைப்படத்தில் உள்ள பெண்ணின் அழகைக் கண்டு அவர்கள் மீண்டும் அந்தச் செய்திக்குப் பதிலளிக்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
அதன்பின்னர், அப்பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.</p><p>
</p><p>
பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் மற்றும் கப்பம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T09:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் உயர்வு ; அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-sharply-across-sri-lanka-1786179847"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-sharply-across-sri-lanka-1786179847</id>
            <summary type="text">நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a0d4d7-be7c-486b-b35d-2d877d3612c3/26-6a76f108c35fc.webp' /></p><h2 style="text-align: justify; ">அதி-அபாய வலயங்கள்</h2><p style="text-align: justify; ">

 

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.

 

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T09:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜஃப்னா கிங்ஸ், கோல் கெலன்ட்ஸ் மோதும் LPL இறுதிப் போட்டி ; ரசிகர்களுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-final-free-entry-announced-for-fans-1786177836"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-final-free-entry-announced-for-fans-1786177836</id>
            <summary type="text">கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
</p><p>
 

மைதானத்தின் 'C' Upper மற்றும் Lower, 'D' Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4cce7c4-ff02-4df9-ba05-b2bc99ad8116/26-6a76e92e7aa88.webp' /></p><h2>நிறைவு விழா</h2><p>

 

இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.</p><p>

 

இதற்கமைய, மைதானத்தின் அனைத்து வாயில்களும் பார்வையாளர்களுக்காக மாலை 5.30 மணி முதல் திறக்கப்படவுள்ளன.</p><p>

 

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ரசிகர்களுக்காக பல்வேறு பொழுதுபோக்கு அங்கங்களும், கவர்ச்சிகரமான நிறைவு விழாவும் நடத்தப்படவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T09:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் அதிகரிக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-pose-growing-danger-in-sri-lanka-1786176809"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-pose-growing-danger-in-sri-lanka-1786176809</id>
            <summary type="text">தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முறையான தரமான தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee2803d-99e9-42c8-8897-95e1f54416cc/26-6a76e52b797d2.webp' /></p><h2>விபத்துகள்&nbsp;</h2><p>
</p><p>
 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,626 விபத்துகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,585 விபத்துகளை விட அதிக எண்ணிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

இக்காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 749 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

 

தனதும் பிறரதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் எப்போதும் தலைக்கவசம் அணிந்து தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சென்ற கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/letter-urges-release-of-11-indian-fishermen-1786176036"></link>
            <id>https://jvpnews.com/article/letter-urges-release-of-11-indian-fishermen-1786176036</id>
            <summary type="text">கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் கடல் எல்லையைத் தாண்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e132e8-acbc-4098-9b78-0c76d30164e0/26-6a76e225b2133.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட உதவிகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


கைதுசெய்யப்பட்ட 11 மீனவர்களையும், கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உள்ளிட்டவர்களையும் உடனடியாக தாயகத்துக்கு அழைத்து வர தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகை அதன் உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதுகாப்பாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை இருநாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T08:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-sathosa-cuts-prices-of-essential-food-items-1786174904"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-sathosa-cuts-prices-of-essential-food-items-1786174904</id>
            <summary type="text">நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்த விலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>


இந்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbb6616-e2ce-4f29-9329-2bd6a48a0dd3/26-6a76ddb9f26fc.webp' /></p><h2>விலை குறைப்பு&nbsp;</h2><p>
</p><p>


இதன்படி, ஒரு கிலோகிராம் பூண்டின் விலை 699 ரூபாவிலிருந்து 649 ரூபாவாகவும்,</p><p> பெரிய வெங்காயத்தின் விலை 259 ரூபாவிலிருந்து 224 ரூபாவாகவும், </p><p>உருளைக்கிழங்கின் விலை 259 ரூபாவிலிருந்து 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
</p><p>


வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.</p><p>



இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோர் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-s-tragic-fate-while-swimming-with-friends-1786174471"></link>
            <id>https://jvpnews.com/article/boy-s-tragic-fate-while-swimming-with-friends-1786174471</id>
            <summary type="text">தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff67f82-b735-4e00-9af9-006df600afe2/26-6a76dc08d4a08.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதனடிப்படையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் மொணராகலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

தனது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடச் சென்றபோதே இச்சோக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொம்பகஹவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T07:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்காக மகிழ்ச்சி தகவல் ; இலங்கையின் உணவுப்பிரியர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-tourists-visiting-jaffna-1786172772"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-tourists-visiting-jaffna-1786172772</id>
            <summary type="text">வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும் சனிக்கிழமை (15) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
</p><p>

எதிர்வரும் ஓகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும் அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2039013d-99f7-44b8-9c99-c1b97c717ca9/26-6a76d5665a03c.webp' /></p><h2>&nbsp;உணவுத் திருவிழா</h2><p>
</p><p>
இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், வட மாகாணத்தின் பாரம்பரியமும் பண்பாடும் சுற்றுலாத்துறையின் ஊடாக உலக அரங்கில் மேலும் உயர்த்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப் பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக் கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். </p><p>வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை, பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும், என்றார்.</p><p></p><p>
</p><p>மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
</p><p>
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T07:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585</id>
            <summary type="text">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த "சிவப்பு" மட்ட எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
சனிக்கிழமை (08) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221bfaf2-8d9d-4b30-8485-b95bd1cfc900/26-6a76ccdae48b6.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வானிலை முன்னறிவிப்பு</h2><p style="text-align: justify; ">

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்ற வீசுவதுடன் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
</p><p style="text-align: justify;">
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்தச் கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலான, மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, மேற்கூறிய கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T06:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; உருவாகும் விசேட கட்டமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816"></link>
            <id>https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816</id>
            <summary type="text">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 



நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரின் பங்களிப்புடன் கூடிய விசேட விரைவுச் செயற்பாட்டு அலகு அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9ec8be-6347-4e2a-b1f8-e71f5d863572/26-6a76c5f1e2f7d.webp' /></p><h3 style="text-align: justify; ">பாதுகாப்பு வழிமுறைகள்</h3><p style="text-align: justify; "> 

மேலும், பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு கைதிகளின் நலன் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதைத் தடுத்தல் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய தேவைகளும் இதன் மூலம் கவனத்தில் கொள்ளப்படும்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 61 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களைத் தடுக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பில்லாத சாதாரண கைதிகளுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார். </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்மானிக்கப்பட்ட புதிய கமிஷன்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை 33 சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T06:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a356a7e1-17ac-43f9-b73c-695b8eb956ba/26-6a76c1f57783c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-569 எண் கொண்ட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதும், இதுவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்படாததுமான "டாப் கன்" (Top Gun) வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளும் (200 சிகரெட் கார்ட்டன்கள்) இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இவரைக் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:19+00:00</updated>
        </entry>
    </feed>
