<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T08:33:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளரின் மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/private-tuition-centre-owner-arrested-with-drugs-1785136831"></link>
            <id>https://jvpnews.com/article/private-tuition-centre-owner-arrested-with-drugs-1785136831</id>
            <summary type="text">&amp;nbsp; ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72a00c0-85c2-422a-8ef5-25312c0c4cda/26-6a6706c10a932.webp' /></p><p> </p><p>

 சந்தேகநபர் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது. 

அதிகாரிகள் நர்த்தனகலவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T08:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு; தடுபூசி பெற கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-serious-threat-in-sri-lanka-vaccinated-1785139361"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-serious-threat-in-sri-lanka-vaccinated-1785139361</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4275ecd-5879-4827-8915-221a2fc67f51/26-6a6710a2de366.webp' /></p><h2>ஜூலையில்&nbsp; இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும்.</p><p>

எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>

"டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. </p><p>இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம்.

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. </p><p>எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது" என்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இதனிடையே, நேற்றைய தினத்தில் புதிதாக 500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p>அதேவேளை நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T08:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798"></link>
            <id>https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb64786-ac91-4dfc-8356-cb1d5a49511c/26-6a6702b84c5c2.webp' /></p><h2>300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள்...</h2><p>
</p><p>


நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>



எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; கலைந்துபோன கனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/panadura-private-university-student-dies-suddenly-1785130417"></link>
            <id>https://jvpnews.com/article/panadura-private-university-student-dies-suddenly-1785130417</id>
            <summary type="text">&amp;nbsp; பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

ஒடித்யா முதுமாலி விஜேசேகர , சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d63ce2a-9ea4-4cb1-a0ce-32cfe1ae1e3e/26-6a66edb2b7ad8.webp' /></p><p>
</p><p>
 கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:23:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-warning-department-of-meteorology-wind-1785136393"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-warning-department-of-meteorology-wind-1785136393</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

இந்த அறிவித்தலானது நாளை (28) முற்பகல் 11 மணிவரையான காலப்பகுதிக்கு செல்லபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d606abd-8104-4501-a086-7d6d7a5bae9e/26-6a67050b0e0a1.webp' /></p><p>
</p><p>
 குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

 எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்டவர்களுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-shantha-bandara-s-sons-and-others-1785134985"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-shantha-bandara-s-sons-and-others-1785134985</id>
            <summary type="text">&amp;nbsp; சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85552f70-ee1d-42d1-a76f-48d1bd5b768b/26-6a66ff8a7c164.webp' /></p><p> </p><p>

இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.</p><p> 

 2 கோடி ரூபாய் நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட குறித்த 5 சந்தேகநபர்களும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T06:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buddhist-monk-arrested-with-heroin-1785133161"></link>
            <id>https://jvpnews.com/article/buddhist-monk-arrested-with-heroin-1785133161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea1a674-4275-4df9-b82c-75caa6828c72/26-6a66f87231230.webp' /></p><p></p><h2>&nbsp;88,700 மில்லிகிராம் ஹெரோயின்</h2><p>






மலசலக்கூடத்திற்கு அருகில் நின்ற பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.



 கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>


 பிக்குவிடம் கைப்பற்றப்பட்ட பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.



சந்தேகத்திற்கிடமான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T06:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன பிரஜை கடத்தப்பட்டு கொலை; சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-murdered-colombo-1785131710"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-murdered-colombo-1785131710</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.</p><p> 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17513b5f-2b6a-4130-aa64-517cfae0a7d4/26-6a66f2bf7d2ad.webp' /></p><h2>இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்</h2><p>

கடந்த ஜூலை 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு, கொழும்பு போர்ட் சிட்டி பாலத்தில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

வேனில் வந்த மற்றுமொரு சீன பிரஜைகள் குழு, அங்கிருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கை கால்களைக் கட்டி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளது.


பின்னர், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹலியகொடை, கரத்தன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>
 பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட உள்உறுப்பு காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை சீன தூதரகத்தின் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், உயிரிழந்த ஹாவ் சோங் என்ற நபரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T05:53:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விபத்தில் ஸ்தலத்தில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-lost-in-a-road-accident-in-kolonnawa-1785131156"></link>
            <id>https://jvpnews.com/article/life-lost-in-a-road-accident-in-kolonnawa-1785131156</id>
            <summary type="text">&amp;nbsp; கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5652b6d7-0052-4d87-8d37-304f46a00498/26-6a66f0958b3a8.webp' /></p><p> </p><p>

 முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விபத்து முச்சக்கர வண்டி சாரதியின் அலட்சியத்தால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dutch-tourist-dies-in-nilaveli-sea-1785127647"></link>
            <id>https://jvpnews.com/article/dutch-tourist-dies-in-nilaveli-sea-1785127647</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (26) கிடைத்த தகவலின் அடிப்படையில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdbb210-3b62-46ad-a504-500fad2a91e7/26-6a66e2e1725e8.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T05:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 10 லட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-water-bottles-at-inflated-higher-10-lakh-fine-1785129935"></link>
            <id>https://jvpnews.com/article/rs-water-bottles-at-inflated-higher-10-lakh-fine-1785129935</id>
            <summary type="text">&amp;nbsp; பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பண்டாரவளை பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65f1c45-478f-4ccc-be5b-a8bffe193a96/26-6a66ebd0a042c.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T05:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-in-a-shooting-incident-death-1785128698"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-in-a-shooting-incident-death-1785128698</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து களுபோவில&amp;nbsp; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய உணவக உரிமையாளர் சிகிச்சை பலனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து களுபோவில&nbsp; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய உணவக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளர்.
</p><p>பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற காயமடைந்த உணவக உரிமையாளர் களுபோவில&nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7336c509-c216-4614-a1f0-fb276452be1a/26-6a66e6fc56561.webp' /></p><p>

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

இந் நி லையில் சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாகக் பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T05:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-who-returned-from-abroad-dies-in-accident-1785127377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-who-returned-from-abroad-dies-in-accident-1785127377</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுத்தை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான டி. எம். திலானி அரோஷா (46 வயது) ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1b310f-3b9f-442b-a720-81dfcd6b1c49/26-6a66e1d275e30.webp' /></p><p>
</p><p>

விபத்தில் லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.
</p><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். 

இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

 பிள்ளைகாளுடன் நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T04:41:05+00:00</updated>
        </entry>
    </feed>
