<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T23:34:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்கள்தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277"></link>
            <id>https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277</id>
            <summary type="text">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.
</p><p style="text-align: justify; ">


தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b536dd2-8ece-41fd-931b-10f8d13d9bf9/26-6a6a8b3e0d291.webp' /></p><p style="text-align: justify; ">
</p><h2 style="text-align: justify; ">


 இதை எவ்வாறு சாப்பிடலாம்</h2><p style="text-align: justify; ">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.

தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; ">மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify; ">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிஅபாய மண்டலங்களாக மாறும் நாட்டின் பல பகுதிகள் ; தீவிரமாகும் டெங்கு நோய் பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-areas-declared-high-risk-zones-1785359915"></link>
            <id>https://jvpnews.com/article/many-areas-declared-high-risk-zones-1785359915</id>
            <summary type="text">நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அந்த அமைப்பின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6106ae95-a3d2-4f76-ac71-464a157023da/26-6a6a6e2c92ef7.webp' /></p><h2 style="text-align: justify; ">நோயாளர்கள்&nbsp; எண்ணிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17,779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16,665 நோயாளர்கள் கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

மாகாண மட்டத்தில் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.</p><p style="text-align: justify; "> மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக' சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அழித்து கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் தீவிர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T21:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-meets-sri-lanka-justice-minister-1785359263"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-meets-sri-lanka-justice-minister-1785359263</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே, இந்த தகவல் வௌியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37807a71-30b4-4859-a9f4-6fa5918e2326/26-6a6a6ba06b1ab.webp' /></p><h2>கோரிக்கைகள்</h2><p> </p><p>

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஜீவ் அமரசூரிய, குறித்த கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாகக் அவர் குறிப்பிட்டார். </p><p>

இதன்போது, ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார். </p><p>

இதற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தை எட்டும் வெப்பம் ; பல பகுதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387"></link>
            <id>https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387</id>
            <summary type="text">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa29b2-ad40-42ff-a672-fd5c22360a5f/26-6a6a644d6c4b2.webp' /></p><p style="text-align: justify; ">



மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண்,&nbsp; பகல் நேரங்களில் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



எனவே, நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; கைதான 25 வயது இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704</id>
            <summary type="text">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&amp;nbsp; புதன்கிழமை (29) தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&nbsp; புதன்கிழமை (29) தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வாரம் புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல்போயுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9928c51d-be1f-48bd-b5eb-3b3d4471d841/26-6a6a5db9c012d.webp' /></p><h2 style="text-align: justify; ">அறிவுறுத்தல்</h2><p style="text-align: justify; "> 

இவ்விடயம் தொடர்பில் அந்த நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



அதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (28) அந்த மோட்டார் சைக்கிளையும் அதனைத் திருடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில், பாணமை பொலிஸாருடன் இணைந்து கைது செய்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் 25 வயது இளைஞர் எனவும், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர், வாகனத்தின் இலக்கத்தகட்டை மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் பூட்டி, குறிப்பாக, மோட்டார் சைக்கிள் கென்ரின் பூட்டு செய்து, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதனால் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226"></link>
            <id>https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
</p><p>
தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகக்&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab88a7ec-e18d-480d-b710-f58a41bb6462/26-6a6a57f383e6d.webp' /></p><p>
</p><p>
தீப்பரவலுக்கான காரணம் குறித்த இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>மாத்தறை தீயணைப்புப் படை, மாத்தறை பொலிஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><p>

இதற்கிடையில், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763"></link>
            <id>https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313c073a-944e-4602-8b4d-e3d590447397/26-6a6a523d1c638.webp' /></p><p style="text-align: justify; ">இதனை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார். மர்ம நபரின் பேச்சை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">மேலும் சிலர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணம் தருவதாகக் கூறிய நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "> எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T19:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646</id>
            <summary type="text">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீரிகம கிரிவுல்ல - பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6ac5e-cda2-4e95-846a-3a74a39d7401/26-6a6a49f86bd9b.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;உயிரிழந்தவரின் அடையாளம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591625
</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலையம் - 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:44:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாயை காப்பற்ற முயன்றவருக்கு நடந்த விபரீதம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-dies-trying-to-rescue-dog-1785346903"></link>
            <id>https://jvpnews.com/article/man-dies-trying-to-rescue-dog-1785346903</id>
            <summary type="text">அநுராதபுரம், கல்நேவ - தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம், கல்நேவ - தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நேவ - தம்புத்தேகம வீதியின் 30 ஆம் கிலோமீற்றர் கல் அருகே உள்ள குறுக்கு வீதியில் நேற்று&nbsp; (28) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc6a872-d1b4-45d0-8541-8cefc3525561/26-6a6a3b590fd60.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்விபத்தில் கல்நேவ, கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நாமல்கமுவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியைக் குறுக்கறுத்த நாயைக் காப்பாற்ற முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகலேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T17:41:51+00:00</updated>
        </entry>
    </feed>
