<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T16:35:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலிகளின் பயிற்சி முகாம் என கதையளந்தவர் கம்பி எண்ணுகிறார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766"></link>
            <id>https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/ltte-training-camp-kilinochchi-person-spread-false-1787114482" target="_blank">&nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம்</a> அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b26ad0-77e1-4578-bf44-3456623cffb5/26-6a85a65801b81.webp' /></p><p>
</p><p>
 கிளிநொச்சியில் ,LTTE பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-set-to-get-married-dies-in-accident-1787145610"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-set-to-get-married-dies-in-accident-1787145610</id>
            <summary type="text">&amp;nbsp; திருமணத்திற்கு இரு நாட்களும் வெளிநாடு செல்ல மூன்று நாட்களுமே இருந்த நிலையில் விபத்தில்&amp;nbsp; &amp;nbsp;இளைஞன் உயிரிழந்த&amp;nbsp; சம்பவம்&amp;nbsp; பெரும்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருமணத்திற்கு இரு நாட்களும் வெளிநாடு செல்ல மூன்று நாட்களுமே இருந்த நிலையில் விபத்தில்&nbsp; &nbsp;இளைஞன் உயிரிழந்த&nbsp; சம்பவம்&nbsp; பெரும்&nbsp; துயரத்தை எற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;மாத்தறை, அக்குரஸ்ஸயில் சம்பவித்த விபத்தில் 25 வயது லக்மால் என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efbfe576-d74d-4d79-8e7c-c185b8ebbb74/26-6a85ad8ca0031.webp' /></p><p>உயிரிழந்த&nbsp; இளைஞசன் ,திருமணப் பதிவுக்காக 2 நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு 3 நாட்களும் மட்டுமே இருந்த நிலையில்&nbsp; &nbsp;விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><p>
தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>
மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/project-set-to-be-launched-at-vavuniya-university-1787144590"></link>
            <id>https://jvpnews.com/article/project-set-to-be-launched-at-vavuniya-university-1787144590</id>
            <summary type="text">&amp;nbsp; 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, குறித்த திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதியை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) அன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff3f785-3f00-4f2a-bfde-abd39c294ba1/26-6a85a98f9cd66.webp' /></p><p>



கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி மணல் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sand-theft-in-kilinochchi-by-bribing-the-police-1787142607"></link>
            <id>https://jvpnews.com/article/sand-theft-in-kilinochchi-by-bribing-the-police-1787142607</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பரந்தன் வீதிச் சோதனைச்சாவடியில், இன்றைய தினம் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் வாகன சாரதிகள் ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced0053a-f15e-4c06-9a8b-46ec3631189e/26-6a85a1d14f3be.webp' /></p><p> 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிக்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-media-centre-cannot-be-released-1787144947"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-media-centre-cannot-be-released-1787144947</id>
            <summary type="text">&amp;nbsp; பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



கிளிநொச்சி ஏ9 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>



கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5880241d-6cc7-46be-b2ad-78867c91df6b/26-6a85aaf5aa089.webp' /></p><p>
</p><p>


இக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியிருந்தது அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திறகு வழங்கிய பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும் கட்டடத்தையும்

விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.

வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p>



2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும் கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>


இந்த காணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா

வித்தியாலயத்திற்கு விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும் விடுவிக்கப்பட்டது.



இந்நிலையில், ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே

விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493"></link>
            <id>https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
</p><p>
 பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb4533e-11e9-4b26-8feb-36112d9846d4/26-6a8557276d3eb.webp' /></p><p></p><h2>வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்</h2><p>
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.</p><p></p><p>

இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T13:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடையும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-rising-prices-for-essential-commodities-1787143105"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-rising-prices-for-essential-commodities-1787143105</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தாக்கம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b9561fb-89f8-422c-876e-adab9e4095ec/26-6a85a3c2d7b96.webp' /></p><p>
</p><p>
இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்வடையக்கூடும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

 சர்வதேச சந்தை மாற்றங்களின் பிரதிபலிப்பாக, கடந்த சில நாட்களில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனியின் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587"></link>
            <id>https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


காங்கேசன்துறையில் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>


காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c88d236-7525-40d2-a6e8-81047b013c43/26-6a858a4cb5d00.webp' /></p><p>
</p><p>
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
</p><p></p><p>
குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலும் வலுவடைந்த இலங்கை ரூபாயின் மதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/value-of-the-sri-lankan-rupee-strengthens-further-1787141029"></link>
            <id>https://jvpnews.com/article/value-of-the-sri-lankan-rupee-strengthens-further-1787141029</id>
            <summary type="text">&amp;nbsp; டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (19) மேலும் வலுவடைந்துள்ளது.



டொலரின் சராசரி கொள்வனவு வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (19) மேலும் வலுவடைந்துள்ளது.



</p><p>டொலரின் சராசரி கொள்வனவு விலை 327.41 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 336.48 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb758c6-c907-4816-9905-ca30faa89a60/26-6a859ba76fd0a.webp' /></p><p> </p><p>



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரஹெராவை முன்னிட்டு 10 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-shops-closed-for-10-days-ahead-of-perahera-1787139247"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-shops-closed-for-10-days-ahead-of-perahera-1787139247</id>
            <summary type="text">&amp;nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல மஹா பெரஹெராவை முன்னிட்டு, நேற்று (18) முதல் கண்டியிலுள்ள பல மதுபானக் கடைகளை மூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல மஹா பெரஹெராவை முன்னிட்டு, நேற்று (18) முதல் கண்டியிலுள்ள பல மதுபானக் கடைகளை மூட கலால் வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

</p><p>&nbsp;எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பத்து நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff52fc4-4ce0-44a7-8e5d-0f0c23548046/26-6a85a0997b9d8.webp' /></p><p>
கண்டி கடவத் சத்தர மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையம் வரை அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935"></link>
            <id>https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவின் மூலம் அது 365 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4744694b-731f-4291-993a-1fda162554be/26-6a858f914bbd9.webp' /></p><p>
</p><p>
சட்டப்பேரவையில் மனிதவள முகாமைத்துவ துறை தொடர்பான மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் டி. சரத்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
தற்போது தமிழ்நாட்டில் அரச பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
</p><p>
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுமுறை கிடைக்கப்பெறும்.

சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி தமிழக அரசு செயற்படுத்தி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T11:09:45+00:00</updated>
        </entry>
    </feed>
