<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T10:29:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024</id>
            <summary type="text">மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவுத் தெரிவித்துள்ளது.</p><p>அவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், குறித்த படகை கண்காணிப்பதற்காக வான் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்தி மற்றும் (B) பெல் 412 உலக்கு வானூர்தி ஒன்றும் குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T09:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T09:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T09:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுளுக்கு நன்றி; முதலமைச்சர் விஜய் இன் தாயார் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-mother-moved-emotion-inderscience-day-1786782813"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-mother-moved-emotion-inderscience-day-1786782813</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்<a href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256" target="_blank"> தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர்</a> கலந்துகொண்டனர்.</p><p>இதன்போது, சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சரின் தாயார், “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/72-hour-detention-shiran-basic-arrested-in-dubai-1786782300"></link>
            <id>https://jvpnews.com/article/72-hour-detention-shiran-basic-arrested-in-dubai-1786782300</id>
            <summary type="text">முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.</p><p>நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T08:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256"></link>
            <id>https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.&nbsp;</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.&nbsp;</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.&nbsp;</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.&nbsp;</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.&nbsp;</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>இந்தநிலையில்,&nbsp; சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில்&nbsp; நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில்&nbsp; வெலியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T08:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secretly-gathered-information-prison-officials-1786781392"></link>
            <id>https://jvpnews.com/article/secretly-gathered-information-prison-officials-1786781392</id>
            <summary type="text">சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.&amp;nbsp;சந்தேகநபர், அண்மையில் புதிய மெகசின் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>சந்தேகநபர், அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவரின் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>அஸ்மான் என்பவரால் கடந்த ஆண்டு தெஹிவளை வட்ரப்பல வீதியில் நடத்தப்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.&nbsp;</p><p>சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'கொஸ் மல்லி' என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைபேசியைப் பரிசோதித்த போது, 'கொஸ் மல்லி' என்பவருடன் நடத்திய பல உரையாடல்களின் குரல் பதிவுகளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.&nbsp;</p><p>அந்த தொலைபேசி உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:09:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 மாதங்கள் கடலில் ; கடும் மன அழுத்தத்தில் அமெரிக்க கப்பலின் 5,000 மாலுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368"></link>
            <id>https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>கப்பலில் உள்ள சுமார் 5,000 மாலுமிகளும் வீரர்களும் 9 மாதங்களாகக் கப்பலிலேயே வசித்து வருவதுடன், தொடர்ந்து 250 நாட்களாகக் கரைக்கு வராமலும் இருந்துள்ளனர்.</p><p>மேலும், கப்பலில் மோசமான சுகாதார வசதிகள், பழுதடைந்த கழிப்பறைகள் மற்றும் அடிப்படை சுகாதாரப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்புடைய அறிக்கைகளின்படி, இந்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான பணி நீட்டிப்பு காரணமாக, பல மாலுமிகள் கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு ஒரு முடிவு எட்டப்படாததால், மத்திய கிழக்கு நடவடிக்கைகளிலிருந்து கப்பலைத் திரும்ப அனுப்புவது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-15T07:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13ஆவது முறை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833</id>
            <summary type="text">&amp;nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,&nbsp; நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.&nbsp;</p><p>தொடர்ந்து பிரதமர் முப்படை மற்றும் டில்லி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய விமானப்படை சார்பில் ஹெலிக்கொப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது.</p><p>சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.</p><p>நாட்டின் கனவுகளும் இலட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை நனவாக்குவதற்கான உறுதியும் வலுவான மனவலிமையும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான பாதையை கண்டறியும் திறனை வலுவான மன உறுதி வழங்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன் நாடு புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபத்தில் சந்தேகத்திற்கிடமான படகு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481"></link>
            <id>https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481</id>
            <summary type="text">இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.பாறைகளில் மோதியதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.</p><p>பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் படகில் காணப்படாத நிலையில், அதில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T06:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு ராஜபக்சவை அழைத்து வாருங்கள்; சிறிதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875"></link>
            <id>https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&amp;nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,&nbsp; அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை&nbsp; செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.&nbsp;</p><p>அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.</p><p>யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.</p><p>&nbsp;இதனை நாங்கள் சொல்லவில்லை; பாடசாலை மாணவியான&nbsp; கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச&nbsp; சொல்லியிருக்கிறார். ,</p><p>எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ&nbsp; வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை; சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரக கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் &nbsp;நேற்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.</p><p>பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>ஆனாலும்&nbsp; திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (14) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த&nbsp; சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan தலைமையில்&nbsp;</p><p>டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110"></link>
            <id>https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110</id>
            <summary type="text">வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>பெக்கோ சமன் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்தியிருந்தனர்.&nbsp;</p><p>இதன்போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே&nbsp; கொலைக்கான மற்றொரு காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:04+00:00</updated>
        </entry>
    </feed>
