<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T05:26:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f5edb-a472-48a1-b4f0-fae43266dbd2/26-6a76b6775d020.webp' /></p><h2 style="text-align: justify;">அனுமதி அட்டை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">
 

அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p style="text-align: justify;">
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">

 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T04:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு ; மூன்று சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226</id>
            <summary type="text">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57749d68-99d7-4e43-a279-d5a528d6a1ed/26-6a76b403d75f6.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவர்கள் 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p style="text-align: justify; ">

 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-08T04:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து அரங்கேறிய மரணங்களால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deaths-continue-to-shock-jaffna-1786163791"></link>
            <id>https://jvpnews.com/article/deaths-continue-to-shock-jaffna-1786163791</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify;">


யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6d60d02-93d5-4d25-875f-d1daf1032979/26-6a76b250abc00.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;விசாரணைகள் தீவிரம்&nbsp;</h2><p style="text-align: justify;">



குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.
</p><p style="text-align: justify;">


வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில் நபர் ஒருவர் நேற்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"> பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">


அத்துடன் , யாழில் நேற்றுமுன்தினம் மன விரக்தியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p style="text-align: justify; ">



பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர்.&nbsp; விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


இதேவேளை யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


குறித்த நபர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். </p><p style="text-align: justify; ">இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.&nbsp; யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T04:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய இரு இளம்பெண்கள் ; தற்கொலையா? கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-nepali-women-hanged-themselves-saree-1786148797"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-nepali-women-hanged-themselves-saree-1786148797</id>
            <summary type="text">இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் மரம் ஒன்றில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் மரம் ஒன்றில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><h3>முதற்கட்ட விசாரணை</h3><p>பெங்களூரு எலகங்கா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள காலி நிலப்பகுதியில் இருந்த மரத்திலேயே நேற்று காலை இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிஸார், இரு பெண்களின் சடலங்களையும் மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b24d95f-8cb6-43b2-9ba9-7dd7e07bfbac/26-6a76846920b4b.webp' /></p><p>முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சைஜனா மற்றும் 23 வயதுடைய ரீட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
சைஜனா அம்ருதஹள்ளி பகுதியிலும், ரீட்டா பிரேசர் டவுன் பகுதியிலும் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இருவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்னரே நேபாளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்ததுடன், அங்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், இருவரும் ஒரே சேலையைப் பயன்படுத்தி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு நபர்கள் அவர்களை கொலை செய்து பின்னர் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T01:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-security-pallekara-thumbara-bogambara-prison-1786149195"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-security-pallekara-thumbara-bogambara-prison-1786149195</id>
            <summary type="text">கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் இன்று (07) காலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் இன்று (07) காலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை காவல்துறை, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) ஆகியன இணைந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a75cd8d-9b4a-472b-8add-1f848626a199/26-6a76794d52675.webp' /></p><p>இதன் ஒரு பகுதியாக, தும்பர போகம்பர சிறைச்சாலைக்கு செல்லும் பிரதான மற்றும் உப வீதிகளில் விசேட காவல்துறை வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-will-shower-money-on-these-zodiac-signs-1786148086"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-will-shower-money-on-these-zodiac-signs-1786148086</id>
            <summary type="text">குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.&amp;nbsp;இந்நிலையில் குரு பகவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.&nbsp;இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2e84b6-50fa-4d51-b351-1a725cbf535c/26-6a7674f7b8e61.webp' /></p><p>குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து சில ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ef4ab3-e983-4359-a2af-3429114d2c8f/26-6a7674f86f9ab.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910f4950-59bd-42d2-a555-40c63a8c7d5e/26-6a7674f92139d.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd409751-a341-4a3d-9fbe-3c04da4d479c/26-6a7674f9d24d8.webp' /></p><h3>துலாம்
</h3><p>துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9224fb69-6dac-4bfb-9725-febc0a37d906/26-6a7674fa836ba.webp' /></p><h3>தனுசு
</h3><p>தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12493fc-80d4-437f-a74a-05b6c16826fa/26-6a7674fb32ef5.webp' /></p>]]></content>
            <updated>2026-08-08T00:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[MNP சேவை தொடர்பில் வெளியான செய்திகளுக்கு அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159"></link>
            <id>https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159</id>
            <summary type="text">தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியாகிய ஊடக அறிக்கைகளைத் திருத்தியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a40cbc-9562-43bb-917f-f4eb1a87d198/26-6a76718054997.webp' /></p><p>தற்போது காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, இச்சேவையைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக மட்டுமே பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொலைத்தொடர்புத் துறையின் பங்குதாரர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு இறுதி உடன்பாட்டிற்கு வரத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய உரிம நிபந்தனைகளின் கீழ் ஒழுங்குமுறை உத்தரவொன்றைப் பிறப்பிக்க TRCSL நடவடிக்கை எடுக்கும் என்றே பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>

எனவே, 'செப்டம்பர் மாத இறுதி' என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவே தவிர, அது MNP சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி அல்ல என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், இந்தச் சேவையை கூடிய விரைவில் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:36:07+00:00</updated>
        </entry>
    </feed>
