<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T22:41:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514"></link>
            <id>https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.</p><p></p><h3>இலங்கை மத்திய வங்கி</h3><p>

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad8e6b1-8013-4964-a175-13f6ad714653/26-6a823a5bdc966.webp' /></p><p>நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது ஓரளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்ற போதிலும், அனுராதபுரம், பொலன்னறுவை, வெல்லவாய, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வறட்சியான நிலையே நிலவுவதுடன் சிறிய குளங்கள் வற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாகப் பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலுள்ள தமிழர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி ; ஹாரோவில் பார்க்கிங் அபராதங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795"></link>
            <id>https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795</id>
            <summary type="text">லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் அப்பகுதிக்கு சென்ற பல தமிழர்கள் தொடர்ச்சியான அபராதச் சீட்டுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் குரல் கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9e0069-a623-4b5f-9f60-1d19f7e8ea35/26-6a82107cc982d.webp' /></p><p>இதனையடுத்து, ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், அதிகாரிகளுடன் விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
தமிழ் சமூகத்தினர் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை ஹாரோ நகரசபை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, தெற்கு ஹாரோ பகுதியில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்றுள்ளவர்களில், தங்களுக்கு நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்காக ஹாரோ நகரசபை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடலில் கரை ஒதுங்கிய மர்ம சடலம் ; கொலையா? தற்கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171</id>
            <summary type="text">கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>இன்று (16) ஞாயிற்றுக்கிழமைகாலை கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3892896c-391c-4e0e-9d62-037e423d1bb6/26-6a82351d74c78.webp' /></p><p>கரை ஒதுங்கிய சடலம் சிதைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும் மற்றும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார்.
</p><p>
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவும் கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439</id>
            <summary type="text">மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மிகுந்த விழிப்புணர்வு பெற்றுள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.</p><p>மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை உள்ளிருந்து சுத்தமாக வைத்திருக்கவும், பல கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.&nbsp;வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c3266-9fe9-4ad8-ad77-568588d3797c/26-6a8232429973a.webp' /></p><h3> உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது</h3><p>இன்றைய தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் வீக்கம் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இந்த வீக்கம் உங்கள் முகம் முதல் மூட்டுகள் வரை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கப் பிரச்சனையை கட்டுப்படுத்துகின்றன.</p><h3>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது</h3><p>உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் அதை வலுப்படுத்த மஞ்சள் தண்ணீர் அருந்துங்கள். மஞ்சளில் உள்ள குர்குமின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த சேர்மமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97aaba3a-9ab3-4774-8a90-73d248e475d7/26-6a823241e425e.webp' /></p><h3>இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது</h3><p>நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் நீர் மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது, எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d21b2ae-a5c9-4abe-8558-d81ea7213dcc/26-6a8232413dc63.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T21:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்தது ; அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த சிறுரகப் படகு மாலை சுமார் 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1d625b-cf5e-4e5c-b60d-d693f5035be8/26-6a81e9891e449.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர், மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்தை அறிந்த கடற்படையினரும் அப்பகுதி மீனவர்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படகில் பயணித்த 10 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி கட்டிடப் பொருள் விற்பனை மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warn-public-online-building-sales-scam-1786899673"></link>
            <id>https://jvpnews.com/article/police-warn-public-online-building-sales-scam-1786899673</id>
            <summary type="text">கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுமானத் துறைக்குத் தேவையான பொருட்களை இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அஸ்பெஸ்டாஸ், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணப் பொருட்களை சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறுவதே மோசடி கும்பலின் ஆரம்ப நடவடிக்கையாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c423ef-6145-4450-8b98-43db7ccb1711/26-6a81ecdb0d6ef.webp' /></p><p>ஆர்டர் கிடைத்த பின்னர், வாடிக்கையாளர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர் ஒருவரை தொடர்புகொண்டு, அவரது ஊடாக குறித்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க மோசடியாளர்கள் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பொருட்கள் வாடிக்கையாளரின் முகவரியைச் சென்றடைந்ததும், மோசடியாளர்கள் வாடிக்கையாளரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை உடனடியாக வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்துவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இதனையடுத்து வாடிக்கையாளர் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்த பின்னர், பொருட்களை விநியோகித்த சாரதி அதற்கான பணத்தை கோரும்போதே, தாம் மோசடிக்கு உள்ளாகியிருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இவ்வாறான இணையவழி மோசடி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, சமூக வலைத்தளங்களில் குறைந்த விலையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்துவதற்கு முன்னர், விற்பனையாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:01:23+00:00</updated>
        </entry>
    </feed>
