<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T19:35:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1989ஆம் ஆண்டு குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.</p><p>
</p><p></p><p>1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற், தனது பணிவாழ்வில் பல்வேறு பங்குகளிலும் மறைமாவட்டப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f712731e-7fd1-4cc8-99de-ba61078d9848/26-6a9db93cec7fe.webp' /></p><p>

அவர் மயிலிட்டி, இளவாலை மற்றும் பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும், சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
மேலும், கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை மற்றும் பரந்தன் ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாகவும், ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநராகவும், மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும், வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் அவர் தனது ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
</p><p>
நீண்டகாலமாக கத்தோலிக்க திருச்சபைக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி, அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற அனைவரும் மன்றாடுவோம்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ சேவையில் புதிய மாற்றம் ; குடும்ப வைத்தியரின் பரிந்துரை அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839"></link>
            <id>https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839</id>
            <summary type="text">அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பேருவளையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ac223ce-8849-4777-b94b-1b6b5050fe15/26-6a9db6c8a57dc.webp' /></p><p>நோயாளர்கள் தாங்கள் விரும்பிய வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் முறைக்குப் பதிலாக, தங்களது குடும்ப வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லும் முறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் பேர் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் 22 மில்லியனாக இருக்கும் நிலையில், ஒருவர் சராசரியாக நான்கு தடவைகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

நோயாளர்களே எந்த வைத்தியரைச் சந்திப்பது, எந்த வைத்தியசாலைக்குச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதன்மை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளர்கள் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்லும் வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தேவையற்ற வகையில் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளாமல் இடைநடுவில் நிறுத்துவது மருந்து விரயத்துக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் கலாசாரத்திற்கு அரசாங்கம் முன்மாதிரி ; டில்வின் சில்வா வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651"></link>
            <id>https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651</id>
            <summary type="text">அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad19af4-a8b5-444a-a047-1a6b9ddf7e97/26-6a9db224a00a9.webp' /></p><p> எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.</p><p>

கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
</p><p>
நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உதாரணமாக, 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.</p><p>

எனவே, அரசாங்கத்தைக் கைப்பற்ற எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களோ, அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என டில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மொழிபெயர்ப்பின் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' வசதியில் இரு புதிய அம்சங்கள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281"></link>
            <id>https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281</id>
            <summary type="text">கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் &#039;லைவ் ட்ரான்ஸ்லேட்&#039; (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப்படுத்தல்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>தற்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் இந்த நேரலை மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தும் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கினர், 5 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a3a44d-95a3-4bc8-a331-01a2cb95a035/26-6a9daccab5195.webp' /></p><p>இதனைக் கருத்திற் கொண்டு, எண்ட்ரோய்ட் பயனர்கள் இனி நேரலை மொழிபெயர்ப்பு இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிற செயலிகளைப் பயன்படுத்தவும், தொலைபேசித் திரையைப் பூட்டி வைக்கவும் (Screen Lock) முடியும் வகையில் பின்புலத்தில் இயங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அதேபோல், iOS பயனர்கள் இனி ஹேண்ட்போன் இல்லாத சூழலிலும் தொலைபேசியைக் காதில் வைத்து அழைப்புகளைப் பேசுவது போல் நேரடியாக மொழிபெயர்ப்பைக் கேட்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இரைச்சல் மிகுந்த வானூர்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அறிவிப்புகளைத் தெளிவாகக் கேட்க இது பயனுள்ளதாக அமையும். </p><p>இந்த வசதி ஏற்கனவே எண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலை இணைப்பு வீதிகள் விரிவாக்கம் ; வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440"></link>
            <id>https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறிப்பிட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59054290-932e-4488-b401-c110b73aafdb/26-6a9da599b2582.webp' /></p><p>கடந்த 10 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ள அனைத்து பிரதான வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராயர் மீனவ சமூகத்திடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-key-request-made-by-archbishop-fishing-community-1788714901"></link>
            <id>https://jvpnews.com/article/a-key-request-made-by-archbishop-fishing-community-1788714901</id>
            <summary type="text">பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> </p><p></p><p>சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca81e06-6f63-4090-97fd-533f5c233647/26-6a9d9f9757460.webp' /></p><p>இன்று (06) பேருவளை பண்டாரவத்தையிலுள்ள புனித லாசர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> 

சிலரின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த செயற்பாடுகள் பாரிய சமூக சீரழிவு ஏற்படுவதாக தெரிவித்தார். </p><p>

அதேநேரம் பெரும்பாலான இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தமது வாழ்க்கையை இழக்கின்றனர்.</p><p> 

எனவே போதைப்பொருளை ஒழிப்பதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>

அதற்கு மீனவ சமூகமும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையின் 9 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/significant-drop-water-ampara-nine-reservoirs-1788714558"></link>
            <id>https://jvpnews.com/article/significant-drop-water-ampara-nine-reservoirs-1788714558</id>
            <summary type="text">கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (06) 21.5% ஆகக் குறைந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (06) 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைவடைந்துள்ளது. </p><p>

நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தொடர்ந்தும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a94fee7-c265-4dfe-86ce-b9df0eddf9d2/26-6a9d9e402a2a6.webp' /></p><p>இவ்வாறான பின்னணியில், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளமையானது வறட்சியான காலநிலைக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது. </p><p>

எவ்வாறாயினும், அப்பகுதிகளில் பிற்பகல் வேளையில் ஓரளவு மழை பெய்தாலும், கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் வாரத்திலும் அவ்வாறே தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதேவேளை, நிலவும் கடும் வறட்சியான காலநிலை நாட்டின் 7 மாவட்டங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் நீர் ஆதாரங்களுக்கும் விவசாயம் உள்ளிட்ட பிரதான தொழில்களுக்கும் மிகவும் மோசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. </p><p>

வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்டத்தில் பல சிறிய குளங்கள் தற்போது முற்றாக வற்றிப்போயுள்ளன. </p><p>

அத்துடன், குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழாய்க் கிணறுகளைத் திருத்தியமைப்பதற்கு சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் சபையும் நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பச்சை நிற இலக்கத் தகடு ; அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-green-number-plate-uninformed-police-personnel-1788714065"></link>
            <id>https://jvpnews.com/article/new-green-number-plate-uninformed-police-personnel-1788714065</id>
            <summary type="text">மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்புண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு இன்மையால், புதிய மின்சார சிற்றூந்து உரிமையாளர் ஒருவர் வீதியில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>வெலிவேரிய பகுதியில் தனது புதிய மின்சார சிற்றூந்தில் பயணித்த வேளையில், அதன் பச்சை நிற இலக்கத் தகட்டைக் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை மறித்து விசாரணை நடத்தியதாக குறித்த வாகன உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71705ad-2c0f-4716-84ae-89821ae8e6ab/26-6a9d9c52c393a.webp' /></p><p>புதிய வகை இலக்கத் தகடு குறித்து காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்காததால், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாகனப் பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மற்றும் தொடர்புடைய ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அது சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட இலக்கத் தகடு என்பதைத் தான் நிரூபிக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரை மட்டும் முழுமையாகக் குற்றம் சுமத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மின்சார வாகனங்களுக்கான இந்த புதிய மாற்றம் குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே, வாகனப் பதிவு நடைமுறைகள் மற்றும் இலக்கத் தகடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்துவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்க தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை காவல்துறை நிலையங்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>வாகனப் பதிவு மற்றும் அடையாள அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், அது குறித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு இடையே போதிய தொடர்பாடலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்திய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

 வெற்றிலைக்கேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

 வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edfe743-a1f5-4219-8048-5411a46cf65c/26-6a9d96d010c4b.webp' /></p><p>கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>தமிழக மீனவர்களின் ரோலர் விசைப்படகுகள், நெடுந்தீவு கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவுக்குள் உள்ள கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca7875-9107-4bd0-8574-92e3311649e1/26-6a9d8f62c99e3.webp' /></p><p>இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான இந்திய விசைப்படகுகள் வரிசையாக நிற்பதால், அந்தப் பகுதிக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு கரை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெடுந்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மீனவர்களின் அட்டகாசம் ; இலங்கை மீனவர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164"></link>
            <id>https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9babf02f-0919-4c34-8835-b8a2a70b6cb1/26-6a9d8d15e409f.webp' /></p><p>இந்த அத்துமீறல் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981</id>
            <summary type="text">உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார்.</p><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafbae77-b09a-4df8-9a7d-d5deeeccc6b4/26-6a9d6d1f03091.webp' /></p><h2>இருதரப்பு உறவு</h2><p> 

எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். </p><p>

இந்தியாவும், இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பலதரப்பட்ட கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன. </p><p>

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 இல் ஏற்பட்ட 'டித்வா'புயலுக்குப் பிறகும் முதலாவதாகப் நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது. </p><p>

இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்படுத்துகிறது. </p><p>

பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவையும், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய - இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164"></link>
            <id>https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164</id>
            <summary type="text">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207f5705-3051-41e2-b200-02034f0c906f/26-6a9d71bd59da6.webp' /></p><h2 style="text-align: justify; ">விமானச் சேவை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

அஸூர் எயார் விமான நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.</p><p style="text-align: justify; "> 

இதனிடையே, 11 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&amp;nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f82c44-fc89-44e2-acf4-72409f8437d1/26-6a9d49b5e43a8.webp' /></p><h2>வாக்குவாதம்</h2><p> தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். </p><p>கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>&nbsp;ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. </p><p>இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p> இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>&nbsp;இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661"></link>
            <id>https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661</id>
            <summary type="text">மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், உள்ளூராட்சி தொடர்பான ஏழு சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85d82588-c343-4cf2-982a-0c81ee3360aa/26-6a9d67f711fc4.webp' /></p><p>



காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>


உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான செயற்பாடுகளில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>


இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களுக்கான பொதுச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவை விட ஆபத்தானது இது தான் ; அதிகரிக்கும் உயிரிழப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502"></link>
            <id>https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502</id>
            <summary type="text">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,



 கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/048eaf29-e1dc-437b-98f3-2b9bc9acdb0a/26-6a9d6f27ce6b6.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதி விபத்து</h2><p style="text-align: justify; ">இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்றும், சராசரியாக தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">


இவ்விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர்.
</p><p style="text-align: justify; ">


 குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


 குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழப்பதால், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">



தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாக திடீரென யூ திரும்பல் ('U-Turn') எடுத்தல், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. </p><p style="text-align: justify; ">



எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரசபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-06T13:48:31+00:00</updated>
        </entry>
    </feed>
