<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T13:37:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727"></link>
            <id>https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை&nbsp; இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2070e472-e98c-4955-9251-8e30f1abe3f1/26-6a6748c094a34.webp' /></p><h2>&nbsp;கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.</p><p>&nbsp;இந் நிலையில்&nbsp; அரசியல் கூட்டங்களில் பலியாவோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p></p><p>

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்கள் செல்லாது எனவும் அவற்றை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்காள் குரிப்பிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் மோதல் நிறுத்தம்; மசகு எண்ணெய் விலை சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899"></link>
            <id>https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
</p><p>
இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db051e2-e4f5-4610-87f1-aa2ce84ac922/26-6a675cf5443a4.webp' /></p><p>
</p><p>
அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
மற்றும் பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398"></link>
            <id>https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f380335-55bf-4e82-bbf8-366581c92c8f/26-6a6737d7b7983.webp' /></p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய இலவச விசா ; இந்திய உயர்ஸ்தானிகராலயம் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
</p><p>
புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cdf0b7-b777-43fd-b137-9c1f508f0249/26-6a6758afedc7f.webp' /></p><p>
</p><p>
இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாகப் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தூதரக சேவை மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.</p><p></p><p>
</p><p>
இந்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட பயணிகள் அனைவரும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்ட போதிலும், விசா சேவை மையத்துக்கான செயலாக்கக் கட்டணமாக 1,855 இலங்கை ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-27T13:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே ரிட் மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9d7e03d-f33f-4031-b090-b752ed4a9c2b/26-6a674e267b5fc.webp' /></p><p>
</p><p>
குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> 

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான மருந்து பாவனை; பாடசாலை மாணவி பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-schoolgirl-due-incorrect-medication-use-1785150333"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-schoolgirl-due-incorrect-medication-use-1785150333</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கடந்த 24 ஆம் திகதி, குறித்த மாணவி வீட்டில் இருந்த குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். 

இதன் காரணமாக திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாகப் பொகவந்தலாவ வைத்தியசாலையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6cf97ee-1ece-4598-bd80-a72040ac4230/26-6a6742b332810.webp' /></p><p>

எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

 சம்பவம் குறித்து பொகவந்தலாவப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798"></link>
            <id>https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb64786-ac91-4dfc-8356-cb1d5a49511c/26-6a6702b84c5c2.webp' /></p><p></p><h2>300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள்...</h2><p>
</p><p>


நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>



எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-official-department-of-motor-traffic-arrested-1785151415"></link>
            <id>https://jvpnews.com/article/ex-official-department-of-motor-traffic-arrested-1785151415</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சுங்க அனுமதி மற்றும் வரிகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b439c04-f71c-429c-a164-769fa1de82f1/26-6a673fb929a01.webp' /></p><p>
</p><p>
இலங்கை சுங்கத்திடம் அனுமதி பெறாமலும், பொருந்தக்கூடிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு குறித்த நபர் உதவி புரிந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
வாகனத்தின் முதலாவது உரிமை மாற்றத்திற்குத் தேவையான கவுண்டர் இலக்கத்தை வழங்கியதோடு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதனுடன் தொடர்புடைய தரவுகளை முன்னாள் அதிகாரி பதிவேற்றம் செய்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையம் வந்த இளைஞன்; சொக்லேட்களுக்குள் ஒளிந்திருந்த குஷ்; அதிகாரிகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-airport-kush-was-hiding-in-chocolate-1785148140"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-airport-kush-was-hiding-in-chocolate-1785148140</id>
            <summary type="text">தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான &#039;குஷ்&#039; போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84780b21-3cd6-40ef-86ce-b04b43fe49d0/26-6a6732edcbb5f.webp' /></p><p>
</p><p>
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரது பயணப் பையைச் சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறித்த போதைப்பொருளானது சொஸேஜஸ் வடிவில், மேலே சொக்லேட் பூசப்பட்டு, பிரபல சொக்லேட் நிறுவனத்தின் பெயரைக் கொண்ட பொதிகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்கள் வாங்கும் போது இந்த 5 விஷயங்களை கவனித்து வாங்குங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/keep-these-5-things-in-mind-when-buying-fish-1785144612"></link>
            <id>https://jvpnews.com/article/keep-these-5-things-in-mind-when-buying-fish-1785144612</id>
            <summary type="text">கடல் மீன்களை உண்பதால் இதயம் காக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சி மேம்பட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல் மீன்களை உண்பதால் இதயம் காக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சி மேம்பட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.</p><p>

அதுமட்டுமல்லாது இதய ஆரோக்கியம்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c457fa5-9492-4e93-af52-6e7edc3ea681/26-6a672525a2c56.webp' /></p><p><b>

மூளைத் திறன்:</b> ஞாபக சக்தியை அதிகரித்து, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் மேம்படுத்துகிறது.
அயோடின் சத்து: தைராய்டு சுரப்பி சீராக இயங்கவும், ஹார்மோன் உற்பசிக்கும் உதவுகிறது.</p><p><b>புரதச் சத்து:</b> தசைகளின் வளர்ச்சிக்கும், உடலின் திசுக்கள் சீரமைக்கப்படுவதற்கும் உயர் தரப் புரதம் தருகிறது.
</p><p><b>
வைட்டமின் டி:</b> எலும்புகளை வலுவாக்கத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை வழங்குகிறது .</p><p>ஆனால் பலருக்கும் நல்ல மீன்களை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பங்கள் இருக்கலாம்.
 மீன்களை வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் என சில விஷயங்கள் உள்ளன. </p><p>

கீழ்வரும் அந்த 5 விஷயங்களை, நீங்களும் மீன் வாங்க செல்லும் போது கவனித்துப் பாருங்கள். இவை சரியாக இருந்தால்,&nbsp; பயப்படாமல் வாங்குங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/131be870-843e-4ae3-9637-3cf547d7060c/26-6a672526598a6.webp' /></p><p> </p><p><b>முதலில், மீனின் வாசனையை பாருங்கள்,&nbsp;</b> புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் என்றால், கடல் மணமோ ஆற்றின் மணமோ அதில் இருக்கும். அதேபோல அமோனியா வாசனையோ, புளித்தது போன்ற வாசனையோ இருந்தால் அது பழைய மீனாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட மீனாகவோ இருக்கக்கூடும். அவற்றை தவிர்ப்பதே நல்லது. </p><p><b>அடுத்தது, மீனின் கண்களை பாருங்கள்,&nbsp;</b>அவை பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அவை மங்கலாகவோ, குழி விழுந்தோ காணப்பட்டால் அந்த மீன்களை தவிர்த்துவிடுங்கள். </p><p><b>நீங்கள் வாங்கும் மீன்,</b> அதிக நேரம் ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தால், அந்த ஐஸ் பாக்ஸ் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை பாருங்கள். இல்லையெனில், அதன் மூலமாக கூட உங்களுக்கு தொற்றுப் பிரச்சனைகள் வரலாம். மட்டுமில்லாமல் சுத்தமான ஐஸ்களுக்கு மத்தியில் வைக்கப்படும் மீன்கள், நீண்டநேரம் புத்துணர்வோடு இருப்பதுடன், அதன் தரமும் சுவையும் பாதுகாக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf447c3-5184-4aa4-9c1e-d226bc65f81a/26-6a6727b4953a6.webp' /></p><p> </p><p><b>சிலர் கடைகளுக்கு சென்று மீன் வாங்குவதற்கு பதிலாக,</b> சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களிலோ அல்லது ஆன்லைனிலோ பேக் செய்யப்பட்ட மீன்களை வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது, மீனில் அதிகப்படியான திரவம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் மீனின் உறைநிலை நீக்கப்பட்டு, மீண்டும் அவை உறைய வைக்கப்பட்டிருந்தால்தான் அப்படி நடக்கும். இது மீனின் தன்மை மற்றும் சுவையை பாதிக்கும் என்பதால் தவிர்ப்பதே நல்லது. </p><p><b>மீனின் செவுள்களின் நிறத்தை கவனியுங்கள்,&nbsp; </b>அவை நல்ல சிவப்பு நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருந்தால், அந்த மீன் புத்துணர்ச்சியோடு இருப்பதாக பொருள். மாறாக, பழுப்பு அல்லது சாம்பல் நிறச் செவுள்கள் இருந்தால் அந்த மீன் புத்துணர்ச்சியுடன் இல்லை என பொருள்.</p>]]></content>
            <updated>2026-07-27T10:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-4-suspects-submitted-to-court-1785146883"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-4-suspects-submitted-to-court-1785146883</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, "ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085a59d1-3334-48b6-98b0-3fde4dfa195f/26-6a672e0543f52.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி; மருத்துவர்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pen-cap-stuck-in-mumbai-girl-s-lung-for-7-years-1785142086"></link>
            <id>https://jvpnews.com/article/pen-cap-stuck-in-mumbai-girl-s-lung-for-7-years-1785142086</id>
            <summary type="text">&amp;nbsp; மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். </p><p> சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/212e0651-3300-4a81-b2fa-b50a620c89e4/26-6a671b4843d40.webp' /></p><p></p><h2> அதிநவீன சிடி ஸ்கேன் பிரான்கோஸ்கோபி பரிசோதனை</h2><p> </p><p>

அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பல வைத்தியசாலைக்கு சென்றும், பிளாஸ்டிக் பொருள் என்பதால் சாதாரண எக்ஸ்-ரே பரிசோதனையில் அது சரியாகத் தெரியவில்லை. </p><p>

 இதனையடுத்து மருத்துவர்கள் சிறுமிக்கு&nbsp; &nbsp;காசநோய் மற்றும் ஆஸ்துமா இருப்பதாகக் கூறி, கடந்த 7 ஆண்டுகளாக அதற்கான மருந்துகளையும், இன்ஹேலர்களையும் வழங்கி வந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, அவர் மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> 

அங்குள்ள குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் சிறுமிக்கு அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் இடது பகுதி மூச்சுக்குழாயின் ஆழத்தில் பேனா மூடி சிக்கியிருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.</p><p> 

நீண்ட வருடங்களாக பேனா மூடி நுரையீரலில் இருந்ததால், சிறுமியின் இடது நுரையீரலின் கீழ் பகுதி முற்றிலும் சீழ் பிடித்து, சுருங்கி, கடுமையாகச் சேதமடைந்திருந்தது. 

இதையடுத்து, வைத்திய குழுவினர் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அந்த பேனா மூடியையும், அதோடு சேர்த்து முற்றிலும் சேதமடைந்த நுரையீரலின் ஒரு பகுதியையும் வெற்றிகரமாக அகற்றினர்.</p><p></p><p> </p><p>

தற்போது சிறுமி மைஷா ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, குணமடைந்து நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>

இந் நிலையில் சிறு குழந்தைகளுக்குத் தொடர் இருமல் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும், உடனடியாக முறையான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி ;2036 இற்குள் உலகில் பணத்தின் தேவை குறையும்; எலோன் மஸ்க் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-won-t-matter-by-2036-elon-musk-predicts-ai-1785141232"></link>
            <id>https://jvpnews.com/article/money-won-t-matter-by-2036-elon-musk-predicts-ai-1785141232</id>
            <summary type="text">&amp;nbsp; 2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவை பெருமளவில் குறைந்துவிடும் என உலக பெரும் பண்க்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவை பெருமளவில் குறைந்துவிடும் என உலக பெரும் பண்க்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி, மனிதர்களைக் காட்டிலும் அதிக அளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்கும் என அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f8dfbd4-4075-4acf-9d66-fb0439b05204/26-6a6717f240c95.webp' /></p><h2>மனித வடிவ ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி</h2><p>

இதன் காரணமாக, உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகக்கூடும் என்றும், அதன் விளைவாக பணத்தின் அவசியமும் அதன் பொருளாதார முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் எலோன் மஸ்க் கணித்துள்ளார்.</p><p>

எனினும், இது தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது எதிர்காலக் கணிப்பாகும்.
</p><p>
அதேசமயம் 2036-ஆம் ஆண்டுக்குள் பணத்தின் தேவை முற்றிலும் இல்லாமல் போகும் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ பொருளாதார மதிப்பீடோ அல்லது உலகளாவிய ஒருமித்த கருத்தோ இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-27T08:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளரின் மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/private-tuition-centre-owner-arrested-with-drugs-1785136831"></link>
            <id>https://jvpnews.com/article/private-tuition-centre-owner-arrested-with-drugs-1785136831</id>
            <summary type="text">&amp;nbsp; ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை, இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72a00c0-85c2-422a-8ef5-25312c0c4cda/26-6a6706c10a932.webp' /></p><p> </p><p>

 சந்தேகநபர் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது. 

அதிகாரிகள் நர்த்தனகலவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 குறித்த நபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T08:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு; தடுபூசி பெற கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-serious-threat-in-sri-lanka-vaccinated-1785139361"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-serious-threat-in-sri-lanka-vaccinated-1785139361</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4275ecd-5879-4827-8915-221a2fc67f51/26-6a6710a2de366.webp' /></p><h2>ஜூலையில்&nbsp; இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும்.</p><p>

எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>

"டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. </p><p>இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம்.

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. </p><p>எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது" என்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இதனிடையே, நேற்றைய தினத்தில் புதிதாக 500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p>அதேவேளை நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T08:00:51+00:00</updated>
        </entry>
    </feed>
