<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T09:39:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி ; வசமாக பிடிபட்ட இரு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964</id>
            <summary type="text">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, பதுலுஓயா சந்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் முச்சக்கர வண்டியுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கந்தகெட்டியப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e7565d-d661-4f65-ae1a-f15a7024e2b9/26-6aa3cb705fdbf.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் கைது </h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி, மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சந்தேகநபரின் வீட்டில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சொரபொர இடதுகரைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மஹியங்கனை, தம்பறாவப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஆவர் எனப் பொலிஸார் கூறினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T09:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053"></link>
            <id>https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்றார்.</p><p>

இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae145df9-26d8-4fc5-82f9-7d9cd7c80667/26-6aa3ca4ee2137.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T09:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114"></link>
            <id>https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.



இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014b50ea-ac2f-4496-bc05-06ed86855069/26-6aa3c6aa45498.webp' /></p><p>
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.0476 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.0703 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-11T09:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T08:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் வரவேற்பு! மக்கள் ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390"></link>
            <id>https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8e7476-6fd5-4531-9dd4-e954fb5fea7b/26-6aa3a8780f406.webp' /></p><p></p><h2>&nbsp; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு</h2><p>

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார்.</p><p>

ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p></p><p>முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>

புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.</p><p></p><p>

 
முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; ஈடுசெய்ய முடியாத இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302"></link>
            <id>https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302</id>
            <summary type="text">

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.</p><p>

தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e587906-c46b-45d5-8023-8d1e982b4656/26-6aa3bf5f5ee17.webp' /></p><h2>&nbsp;தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் பேரிழப்பு</h2><p> </p><p>கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார்

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p><p></p><p>கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர்.&nbsp;இதுவரை அவர் 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் சாலமன் பாப்பையா அவர்கள்</p><p> </p><p>அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:25:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assam-wild-elephant-wandered-tyre-around-neck-1789113505"></link>
            <id>https://jvpnews.com/article/assam-wild-elephant-wandered-tyre-around-neck-1789113505</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மனித - யானை மோதல்கள் அடிக்கடி நடைபெறும் கோலகாட் மாவட்டத்தின் மொரோங்கி வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த யானை நடமாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66c8da3-0295-439e-81a8-0de2e1786bf7/26-6aa3b4a24f029.webp' /></p><p></p><h2>உணவு தேடியவாறு உலா வந்த&nbsp; யானை</h2><p>
</p><p>
தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடியவாறு இந்த யானை உலா வந்த நிலையில், அதன் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்டிருக்கும் நிழற்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
<br></p><p>
சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், உடனடியாக செயற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானையின் கழுத்தில் இறுக்கமாக சிக்கியிருந்த டயரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்த யானை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-information-on-the-electricity-tariff-increase-1789112610"></link>
            <id>https://jvpnews.com/article/key-information-on-the-electricity-tariff-increase-1789112610</id>
            <summary type="text">அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46b6343-363b-43e3-a757-93d260e31bf4/26-6aa3b2aea8b85.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சாரக் கட்டண அதிகரிப்பு</h2><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை எனக் கூறிய அமைச்சர், அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் வலுசக்தி அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக எந்த வகையிலும் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, அடுத்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T07:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் வல்லிபுர ஆழ்வார் பெரும் திருவிழா ஆரம்பம்; இன்று கொடியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-vallipuram-alvar-festival-2026-1789112671"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-vallipuram-alvar-festival-2026-1789112671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று (11) கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று (11) கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
</p><p>
மகோற்சவத்தின் தேர் திருவிழா 25 ஆம் திகதியும் தீர்த்த திருவிழா 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bdb4b37-6295-462a-ad2f-55e4ab57f659/26-6aa3b16251b4c.webp' /></p><p> </p><p>16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும்.

வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற தலமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0a6f3b-96dc-4547-ae58-a82324020404/26-6aa3b1619461d.webp' /></p><p>
</p><p>
 வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bdb4b37-6295-462a-ad2f-55e4ab57f659/26-6aa3b16251b4c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T07:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு ; இலக்கு தவறியதால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319</id>
            <summary type="text">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
பாதுக்க - பஹல போபே பகுதியில் இந்த முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617c4286-d649-4470-879c-f98399d1200d/26-6aa3acf14368e.webp' /></p><h2 style="text-align: justify; ">கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T07:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI இற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்! வரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/robots-protest-against-ai-poland-viral-video-1789109656"></link>
            <id>https://jvpnews.com/article/robots-protest-against-ai-poland-viral-video-1789109656</id>
            <summary type="text">&amp;nbsp; போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ரோபோக்களின் போராட்டத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.&nbsp; &nbsp;கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82313caa-74d4-4faa-936f-e02ed4013ecc/26-6aa3a599e2f5b.webp' /></p><h2> மனித வளம் வெளிச்சம் போட்டுக் காட்டவே&nbsp; போராட்டம்</h2><p>

ரோபோக்கள் மூலம், மனிதர்களின் வேலையை தானியங்கி முறையில் செய்து, மனிதர்களின் வேலையைப் பறிக்கும் நிலை அசுர வேகத்தில் நடந்தேறி வரும் நிலையில், அதனை எதிர்த்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் ரோபோக்கள் கைகளில் கொடிகளை வைத்துக் கொண்டு, வட்டமாக சுற்றி சுற்றி நடந்து, ஒலிபெருக்கிகள் மூலம் முழக்கங்களை எழுப்பின.

பொதுவாக மனிதர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளலாம்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Robots in Poland protest against AI replacing human beings   iPhone Republicans #Sardar2 https://t.co/uIEZEUG0ep</p>&mdash; Tanishka Bakshi (@Soldiers_View) <a href="https://x.com/Soldiers_View/status/2097929071095394806?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஆனால் யார் கேட்பது, யார் பார்ப்பது, அதுவே, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் போராடினால் என்று மாற்றி யோசித்ததே இந்த போராட்டத்துக்கான காரணம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
</p><p>
செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும், தொழிற்சாலைகளில் கோலோச்சுவதால் மனித வளம் எவ்வாறு பாதிக்கிறது&nbsp; &nbsp;என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T06:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் தமிழர் பகுதியில் பிடிபட்ட நபர் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-in-tamil-area-following-tip-off-1789108926"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-in-tamil-area-following-tip-off-1789108926</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edde6b7-63af-4be9-867f-7c9ea86ee540/26-6aa3a39526d2e.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்&nbsp;</h2><p style="text-align: justify; ">கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

திருக்கோயில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்ட இச் சந்தேகநபர், மீட்கப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

</p><p style="text-align: justify; ">இச் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T06:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 கோடி பெறுமதியான வீடு ;விசாரணை வளையத்தில் ஷிரான் பாசிக்கின் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-father-under-ccib-investigation-1789107866"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-father-under-ccib-investigation-1789107866</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ccd0cf-e7a3-4091-bab5-2517b5fa7f42/26-6aa39e9c5abaa.webp' /></p><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் புதிய சிம் அட்டைகளை வாங்கவுள்ளோரின் கவனத்திற்கு ; வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-those-buying-new-sim-cards-in-sri-lanka-1789107231"></link>
            <id>https://jvpnews.com/article/attention-those-buying-new-sim-cards-in-sri-lanka-1789107231</id>
            <summary type="text">சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



அதன்படி, புதிய சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம் அட்டையைப் பெறும் வகையிலான நடைமுறை பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமுல்படுத்தப்படவுள்ளதாக TRCSL பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2814eb27-94d0-40c6-82a0-52e93ce61ea7/26-6aa39cf50f2af.webp' /></p><h2 style="text-align: justify; ">விதிமுறைகள்</h2><p style="text-align: justify;">நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


மேலும், 2027ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களையும் 100 சதவீதம் அடையாளம் காணக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது



இதன் மூலம் சட்டவிரோதச் செயல்களுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை குறைப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T06:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 25 பெண் உட்பட 106 பேருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-106-people-remanded-1789106827"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-106-people-remanded-1789106827</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 25 பெண்கைதிகள் புதிதாகச் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 25 பெண்கைதிகள் புதிதாகச் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
</p><p>
குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272360c2-8b84-4132-baf3-850e671c20d1/26-6aa39a8ce398a.webp' /></p><h2>ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்&nbsp;</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கலாக மொத்தம் 106 பேர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண் சந்தேக நபர்களுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், புதிதாகப் பெயரிடப்பட்ட பெண் சந்தேக நபர்களையும், 30ஆம் இலக்கம் முதல் 60ஆம் இலக்கம் வரை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், சாட்சியாளர்களான 20 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
</p><p>
நேற்றைய தினம் 23 சந்தேக நபர்கள் (இலக்கம் 7 முதல் 30 வரை) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சாட்சியாளர்களாக ஆஜரான சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

இதனையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய நீதிவான், சந்தேக நபர்கள் 106 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தாத ஏனைய சந்தேக நபர்களை நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 20 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-11T06:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ; திருகோணமலையில் கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-trapped-under-bus-wheel-1789106410"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-trapped-under-bus-wheel-1789106410</id>
            <summary type="text">திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 



துறைமுக பொலிஸ் நிலையத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 



துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4085a7-77da-43d3-95d1-0b247bcb096e/26-6aa398ec53030.webp' /></p><p style="text-align: justify; ">



விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T06:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 இலட்சத்துக்கு ஏலம் போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-sold-for-rs-500-000-in-vavuniya-1789105363"></link>
            <id>https://jvpnews.com/article/mango-sold-for-rs-500-000-in-vavuniya-1789105363</id>
            <summary type="text">வவுனியா - வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா - வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று (11) மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c881a2-ea96-45c4-8a5c-c31279dc4e45/26-6aa394d4b1ce5.webp' /></p><h2 style="text-align: justify; ">பலத்த போட்டி</h2><p style="text-align: justify; ">



இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம், ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.</p><p style="text-align: justify; ">



மாம்பழத்தை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெற்ற பலத்த போட்டிக்கு மத்தியில், வவுனியாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 505,000 ரூபா தொகையை வழங்கி மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



ஆலய வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் மாம்பழம் 5 இலட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டமை பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T05:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற மறுவாழ்வு முகாம் ஆட்சியர் ; வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545"></link>
            <id>https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545</id>
            <summary type="text">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம்&nbsp; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify;">

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள், அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cff2c4b-b98a-488a-9130-9655ee8747ed/26-6aa3737ee72ba.webp' /></p><h2 style="text-align: justify; ">லஞ்சம் கோரிய&nbsp;சார் ஆட்சியர் </h2><p> </p><p style="text-align: justify;">

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,500 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும், வைத்திய சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் ஒருவர் சென்னையில் வைத்திய சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். </p><p style="text-align: justify;">

ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. </p><p style="text-align: justify;">

பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர்க்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்றவரை சார் ஆட்சியர்&nbsp; தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T05:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதிக்கு இறங்கிய அரசியல்வாதிகள் , மக்கள் ; செவி சாய்க்குமா அனுர அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293"></link>
            <id>https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc6fefab-9cba-43e6-a583-591b900abb13/26-6aa390a67e426.webp' /></p><h2>பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர்</h2><p>
</p><p>
இராணுவம் மற்றும் கடற்கரை வெளியேற வேண்டும் என்று கோரி நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
</p><p>
அங்கு, மேற்குறித்த காணிகளை விடுவிக்குமாறு பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p></p><p> </p><p>

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், </p><p>நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் திருடி பிடிபட்ட இரு இளைஞர்கள் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர், ஆடியம்பலம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளொன்றை பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d1e987-df9b-4538-b1df-4c86dad7ac71/26-6aa38f0b33a96.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுச் சம்பவங்கள்</h2><p style="text-align: justify; ">



இதன்போது, அவரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி வேயங்கொடை பகுதியில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



குறித்த திருட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய மற்றைய சந்தேகநபரும் பின்னர் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் ஆடியம்பலம மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற இரண்டு செப்புக் கம்பி திருட்டுச் சம்பவங்கள், ஒரு கையடக்கத் தொலைபேசி திருட்டுச் சம்பவம் மற்றும் சீதுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T05:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் போத்தல் விற்றவருக்கு 750,000 ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720"></link>
            <id>https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9737f30f-4a21-4db9-889c-0f5a47f56c70/26-6aa38a8157eda.webp' /></p><p>
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-11T04:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களின் உயிரை பறித்த குண்டுத்தாக்குதல் ; விசாரணையில் 3 பொலிஸ் குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789100755"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789100755</id>
            <summary type="text">தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef20654-c81e-4581-ad5a-df9f7896499a/26-6aa382d47506d.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் பலி</h2><p style="text-align: justify; ">

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

</p><p style="text-align: justify; "> 

காயமடைந்தவர் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "> 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T04:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கு முன்பாக இரவில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; மர்ம நபர்கள் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-youth-outside-home-at-night-1789099631"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-youth-outside-home-at-night-1789099631</id>
            <summary type="text">மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று வியாழக்கிழமை (10) இரவு வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024e4da7-bb8c-40b3-afbe-eb904fbb9f56/26-6aa37e709b70c.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>

மாபாகடவெவ, அபேபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இக் கொலைக்கான பின்னணி அல்லது இதனைச் செய்த நபர்கள் யார் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p>
</p><p>

நீதவான் விசாரணைக்காக உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-president-gotabaya-rajapaksa-to-fcid-today-1789098571"></link>
            <id>https://jvpnews.com/article/former-president-gotabaya-rajapaksa-to-fcid-today-1789098571</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.&amp;nbsp; 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "> 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9caf1beb-ae78-4ba5-b0c7-8c2e89032f32/26-6aa380dc44bc4.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலம்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T03:49:38+00:00</updated>
        </entry>
    </feed>
