<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T12:39:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438"></link>
            <id>https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h3>மேலதிக தீவிர விசாரணை</h3><p>
</p><p>
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47657e31-b95f-49be-8782-5c407fec0fd0/26-6a8ae8b83bdad.webp' /></p><p>

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p>

மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
</p><p>
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி ஓட்டும் வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? ; அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772"></link>
            <id>https://jvpnews.com/article/wil-age-limit-driving-three-wheelers-increased-40-1787485772</id>
            <summary type="text">முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். 

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p><p> 

பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c865481-bd30-41f7-9aff-723214b79d66/26-6a8ade4e144ba.webp' /></p><p>மேலும், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே தங்கியுள்ளது என்றும், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே சுட்டிக்காட்டுகிறார். </p><p>

அதற்கமைய, ஒரு அரசாங்கமாக மனித வள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். </p><p>

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, 

எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே உள்ளது.</p><p>அபிவிருத்தியடைந்த மனித வளமே என்றாவது ஒருநாள் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும். ஒரு அரசாங்கமாக நாம் மனித வள மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறோம்.</p><p></p><p> </p><p>

அதற்காகவே கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். 

இந்த கல்வியில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் நம்புகிறோம்.</p><p> 

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்தும் வயதையும் 40 ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். </p><p>

பாடசாலை சென்று முடிந்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வர முடியாது எனக் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-circular-of-management-service-officers-1787485035"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-circular-of-management-service-officers-1787485035</id>
            <summary type="text">முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2026 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdd4199-496f-447b-b957-ab42baa58af9/26-6a8adb6cccaef.webp' /></p><p>விருப்பமான சேவை இடத்தில் 05 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுவர் என்பதுடன், வேறு சேவை இடத்தில் 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கும் இடமாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர். </p><p>

2027 வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறைமை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அதற்காக misco.pubad.gov.lk/misco என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் அடிப்படை விபரங்கள் மற்றும் முந்தைய சேவை இடங்கள் பற்றிய விபரங்களும் சரியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். </p><p>

சுற்றறிக்கையின்படி, 2026 ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடைக்கால/வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு அக்கட்டளை அதிகாரிக்குக் கிடைத்த திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வருடாந்த இடமாற்ற முறைமையின் கீழ், குறித்த அதிகாரிகளின் சேவைக்காலம், சேவை இடம் மற்றும் இடமாற்றக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084"></link>
            <id>https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084</id>
            <summary type="text">முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.</p><p>

 

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7718c0c8-be23-426f-bda0-26d81b8ad44b/26-6a8ad7b56398b.webp' /></p><p>இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மேலும் கோரியுள்ளது.
</p><p>
 

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம்:

 

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.</p><p>

 

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63-இல் இருந்து 65 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்மூலம் மாகாண மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574</id>
            <summary type="text">இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86521d5a-46af-418c-9a4c-671ef613669e/26-6a8ad1cfd20f0.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f107c8c-a6af-4e30-a008-23307508dfc8/26-6a8aca507f6c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798</id>
            <summary type="text">இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
</p><p>
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a401d4d-32ea-4dd1-9b9e-514b21944766/26-6a8ac6f747bfb.webp' /></p><p>இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
</p><p>
இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
</p><p>
இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், ஏதிலிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330</id>
            <summary type="text">கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b36508-2b0a-4748-88fe-d1af31feba2a/26-6a8abd53a8378.webp' /></p><p>வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
</p><p>


இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.
</p><p>


அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


விபத்தில் தொடர்புடைய ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637</id>
            <summary type="text">நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef67f89-f6c6-4126-93b4-e72b229d72b3/26-6a8aba9f351a3.webp' /></p><p>நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
</p><p>
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.
</p><p>
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி விமானப்படை சீருடையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320</id>
            <summary type="text">விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76ad008d-e4bb-48a3-8d56-12e66271ec4b/26-6a8aa9c18bac2.webp' /></p><p>

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
விசாரணைகளின்போது, சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணியாற்றுவதாகக் கூறி, தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அவர்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்து பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை நம்பிய பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை விற்று கிடைத்த 60 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேகநபரிடம் வழங்கியுள்ளார்.
</p><p>
குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடை அணிந்து வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் குருநாகல் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 7 கோடி பெறுமதியான 1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654</id>
            <summary type="text">மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50361c87-f6d5-4feb-a86a-d0fac51296e1/26-6a8a978816860.webp' /></p><p>அங்கிருந்து 1044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

இதேவேளை, அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
 

வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:47:42+00:00</updated>
        </entry>
    </feed>
