<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T05:18:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை; சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரக கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.</p><p>பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>ஆனாலும்&nbsp; திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (14) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த&nbsp; சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan தலைமையில்&nbsp;</p><p>டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T05:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256"></link>
            <id>https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.&nbsp;</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.&nbsp;</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.&nbsp;</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.&nbsp;</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.&nbsp;</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>இந்தநிலையில்,&nbsp; சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில்&nbsp; நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில்&nbsp; வெலியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T04:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் - ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257</id>
            <summary type="text"> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

“நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f0db79-3aaa-46cd-be71-8538dc9efbfa/26-6a7fb9504e992.webp' /></p><p>
</p><p>
எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை.
மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.

எனினும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை.
</p><p>22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு ஆலோசனை</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கிறார்.

நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c32acb6-68b3-4b0b-9bd5-6f26440d9281/26-6a7fb94f9c294.webp' /></p><p>

22ஆவது திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T04:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drink-more-water-1786753781"></link>
            <id>https://jvpnews.com/article/drink-more-water-1786753781</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
</p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><h2>விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff06d9f-d839-4f52-a456-8ffefcb8db83/26-6a7fb38e0815d.webp' /></p><p>
</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய வானிலை காரணமாக மன அழுத்தம் போன்ற நோய்கள் தீவிரமடையக்கூடும் எனவும், இது மனநலத்தைப் பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்தும் திறனைக் குறைக்கக்கூடும் எனவும் ராகம மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மற்றும் சிறார்கள் மனநல விசேட நிபுணர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T02:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் நடந்தது மனிதப் படுகொலை! உண்மையை மறைக்க முடியாது – சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786752457"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786752457</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நேற்று(14) நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளார்.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>

புதைகுழியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a8b646-9c50-4baf-b0d9-8ad1180894e3/26-6a7fae89cb174.webp' /></p><p>

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி, யாரையும் கொண்டுவந்து புதைத்ததாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>

நாட்டின் நீதி அமைச்சர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் இவ்வாறான வார்த்தைகளை தெரிவிக்க கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போல இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது. 

ஏனெனில், இங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மண்ணில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af6ac14-821d-49b5-b55f-7b367f25227b/26-6a7fae8a7dc0b.webp' /></p><p> </p><p>இலங்கையின் கிரிசாந்தி கொலை வழக்கில் சாட்சியாக இருக்கின்ற சோமரத்ன ராஜபக்ச இதனைத் தெரிவித்திருக்கிறார். இப்போதும் தெரிவித்து வருகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைத் தோண்ட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளியில் வரும்.</p><p>

அந்த உண்மைகளை மறைப்பதற்காக எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு&nbsp; தேவையற்ற விடயம் போன்ற கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T02:07:20+00:00</updated>
        </entry>
    </feed>
