<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T16:30:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வித்துறையில் அதிரடி மாற்றம் ; GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-weighted-average-marks-system-education-sector-1789056818"></link>
            <id>https://jvpnews.com/article/new-weighted-average-marks-system-education-sector-1789056818</id>
            <summary type="text">தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b42142-082a-4442-ab8e-570b77969c07/26-6aa2d73449c28.webp' /></p><p>அத்துடன், புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
</p><p>
தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரை உடனே தொடர்பு கொள்ள புதிய அலைபேசிச் செயலி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-mobile-app-launched-contact-police-immediately-1789054140"></link>
            <id>https://jvpnews.com/article/new-mobile-app-launched-contact-police-immediately-1789054140</id>
            <summary type="text">அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> </p><p></p><p>"Sri Lanka Police App" என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், தேசிய அடையாள அட்டை வைத்துள்ள எந்தவொரு இலங்கையரும் பதிவு செய்ய முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><p> 

இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அவசர காலத்தில் 10 வினாடிகள் அழுத்தி இயங்கச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7105a395-f202-444b-8fbf-c83fc6382d08/26-6aa2ccbdba294.webp' /></p><p> </p><p>

119 அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்தச் செயலியின் மூலமாகவும் விரைவாகத் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் கூட இந்தச் செயலியின் மூலம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்த முடியும் என்றும், அது தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். </p><p>

Play Store ஊடாக Sri Lanka Police App செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய முடியும் என்பதுடன், தேசிய அடையாள அட்டை உள்ள சிறுவர்களுக்கும் இதில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

மேலும், இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், 2025 ஆம் ஆண்டில் 119 அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய 91 நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T15:29:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ஷ வழக்கு; பொய் சாட்சி வழங்கியவருக்கு கிடுக்கிப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-false-testimony-1789045189"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-false-testimony-1789045189</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறப்படும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறப்படும் சாட்சி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
</p><p>


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நவம்பர் 12ஆம் திகதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37eb9bfd-465f-4874-b732-2adaab4d9532/26-6aa2a9c705fa8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு; தனியார் பேருந்தின் அனுமதிப்பத்திரம் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/issue-tickets-north-private-bus-permit-cancel-1789043699"></link>
            <id>https://jvpnews.com/article/issue-tickets-north-private-bus-permit-cancel-1789043699</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கில் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கில் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
</p><p>
குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் நான்கு தடவைகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்டமையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92da5367-fd2d-4cad-82b2-1335edf61e04/26-6aa2a3f47872a.webp' /></p><p></p><h2>பயணிகளுக்கு பயணச்சீட்டு</h2><p>
</p><p>
இதன்படி, பேருந்தின் அனுமதிப்பத்திரம் 2026 செப்ரெம்பர் 10ஆம் திகதி முதல் 2026 ஒக்ரோபர் 9ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>


வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளைஒழுங்குமுறைக்கு உட்படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பானதும் நம்பகமானதுமான சேவையை உறுதி செய்வதற்காக அதிகார சபையால் கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>

மேலும், இவ்வாறான முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமின்றி முறைப்பாடு செய்ய முடியும்.</p><p></p><p>
</p><p>
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் வந்த போதைப்பொருள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-arrived-from-pakistan-in-two-containers-1789044351"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-arrived-from-pakistan-in-two-containers-1789044351</id>
            <summary type="text">&amp;nbsp; பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அந்த விசாரணைக்கு அமைய சில குறைபாடுகளும் கவனயீனங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் அது தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c7e529-d506-4bd7-8149-32a4dd91982a/26-6aa2a68071360.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இந்த உள்வாரியான விசாரணையானது, போதைப்பொருட்களுடன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட இரண்டு கொள்கலன்கள் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேற்கொள்ளும் விசாரணைக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

அத்துடன், அந்த முக்கிய விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை; 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-expired-cosmetics-fine-of-230-000-rupees-1789041577"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-expired-cosmetics-fine-of-230-000-rupees-1789041577</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5321263a-844f-4b2c-8c6b-cf8e3940b09f/26-6aa29bab641d9.webp' /></p><p></p><h2>&nbsp;1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்க உத்தரவு</h2><p>
</p><p>


2026 ஓகஸ்ட் 5ஆம் திகதி பண்டாரவளை, எட்டம்பிட்டிய வீதியிலுள்ள நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, காலாவதியான Aquasoft Lotion பொதிகள் 24, விலை மாற்றப்பட்ட , விலையை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத 1,180க்கும் அதிகமான மருந்துப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>

 வழக்குச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதி திகதி, விலை உள்ளிட்ட தகவல்களை கவனமாகச் சரிபார்க்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T13:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கிணறுகள் பெருகெடுத்த காரணம் வெளியானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876"></link>
            <id>https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260?itm_source=article" target="_blank">யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலய</a>த்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.
</p><p>


இந்த விடயமானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



அங்கு வந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் வழங்கல் குழாயினை சோதனை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fdbf5e9-69b4-4cc1-8a48-eb83403a44f4/26-6aa2ac75b5d74.webp' /></p><h2>வடிகாலமைப்பு சபையினர்&nbsp; &nbsp;சோதனை</h2><p> இதன்போது அந்த குழாயில் இரண்டு பாரிய துளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



அதன்பின்னர் குறித்த துளைகள் சீர் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிணறுகளின் நீர்மட்டம் வழமைக்கு திரும்பியது.</p><p></p><p>
</p><p>


கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் குடிநீர் வழங்கல் குழாயின் மூலம் ஏற்பட்ட நீர் வெளியேற்றமே என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சொத்து துஷ்பிரயோகம்; தயாசிறி ஜயசேகர- சபாநாயகர் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879"></link>
            <id>https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879</id>
            <summary type="text">&amp;nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக தாம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.</p><p>



பாராளுமன்றத்தில் நேற்று (10) பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5a6d92-182f-4754-9fc8-49b0635c5aac/26-6aa2b0616e037.webp' /></p><p>



சபாநாயகர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடுநிலையாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சபாநாயகருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>


இதன்போது, தாம் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரச்சினை பரிசீலிக்கப்பட்டு வருவதால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சபையில் பேச வேண்டாம் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
</p><p>


இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக முன்வைக்கும் போது அதனை கேட்டுக்கொண்டிருக்க முடியாவிடின், நீங்கள் சபையில் இருந்து வெளியேறுங்கள். பிரதி சபாநாயகரை சபைக்குத் தலைமை தாங்குவதற்கு குறிப்பிடுங்கள்” எனத் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T13:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ; சந்தேக நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/80-million-illegal-money-transfer-person-remanded-1789042407"></link>
            <id>https://jvpnews.com/article/80-million-illegal-money-transfer-person-remanded-1789042407</id>
            <summary type="text">&amp;nbsp; 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226" target="_blank">80 மில்லியன் அமெரிக்க டொலர்க</a>ளை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p> 

மருதானை பகுதியில் வைத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed212a0f-665a-4cc8-b2a0-fc16e94634a4/26-6aa29ee852c30.webp' /></p><p></p><p> </p><p>

இவர் 2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T12:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீதிப் பணம் கேட்ட பயணி மீது தாக்குதல்; நடத்துனருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passenger-attacked-for-asking-for-change-1789040260"></link>
            <id>https://jvpnews.com/article/passenger-attacked-for-asking-for-change-1789040260</id>
            <summary type="text">தனியார் பயணிகள் பேருந்தில் பயணி ஒருவர் மீதிப் பணமாக ரூ.5 கேட்டதால் ஆத்திரமடைந்து, அவரைத் தாக்கி பேருந்தில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படும் நடத்துந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனியார் பயணிகள் பேருந்தில் பயணி ஒருவர் மீதிப் பணமாக ரூ.5 கேட்டதால் ஆத்திரமடைந்து, அவரைத் தாக்கி பேருந்தில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படும் நடத்துநரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதிவான்&nbsp; உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர், மீட்டியாகொட, மகவெல பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69577810-1e9a-4502-b1d5-9a55f755ca19/26-6aa29685b3baf.webp' /></p><h2 style="text-align: justify; ">பேருந்து நிலையத்தில் கைது</h2><p style="text-align: justify; ">

நடத்துநரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பயணி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரான நடத்துநர் அம்பலாங்கொடை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த சந்தேகநபர் ‘கரந்தெனிய சுத்தா’ என அழைக்கப்படும் நபரின் மைத்துனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T11:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735cef42-18b2-446c-a38a-2886b7fe73f4/26-6aa283ac6c104.webp' /></p><p></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஜோதிடரிடம் 3 மணி நேர வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-hour-statement-given-to-the-royal-astrologer-1789038602"></link>
            <id>https://jvpnews.com/article/three-hour-statement-given-to-the-royal-astrologer-1789038602</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான<a href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800" target="_blank"> முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன</a>, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
</p><p>
அவர் இன்று (10) காலை 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.

‘</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f113ec-77e9-475c-900c-0423954c6a59/26-6aa2900b6f6b5.webp' /></p><p></p><p>சிரிலிய சவிய’ தொடர்பான விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:06:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழா காலத்தில் தயிர் விற்ற இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-issued-to-two-curd-sellers-in-jaffna-1789037085"></link>
            <id>https://jvpnews.com/article/order-issued-to-two-curd-sellers-in-jaffna-1789037085</id>
            <summary type="text">அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தலா 24,000 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தலா 24,000 ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>


சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர்&nbsp; மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634f2607-2bcc-4d4c-ae54-39d8d01923e5/26-6aa28a1e7be2f.webp' /></p><h2>அபராதம்</h2><p>



இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
</p><p>


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>



குறித்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் மன்றினால் தலா 24,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-prayers-sita-amman-temple-1789036880"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-prayers-sita-amman-temple-1789036880</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார். </p><p>தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மிக நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593fb51e-e04a-4564-9c8f-de68de2f9887/26-6aa28951b5e2b.webp' /></p><h2>&nbsp;உத்தியோகபூர் விஜயம் நிறைவு&nbsp;</h2><p>
</p><p>
இந்த வழிபாட்டில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஆலய நிர்வாக சபைத் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இணைந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று (10) பிற்பகல்&nbsp; பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.</p>]]></content>
            <updated>2026-09-10T10:38:19+00:00</updated>
        </entry>
    </feed>
