<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T22:43:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றிவளைப்பில் சிக்கிய 1,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582</id>
            <summary type="text">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரும், கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மற்றோரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சனிக்கிழமை (22) ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமகல பகுதியில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8b81a2-6bb2-42df-b83e-9bf81f1a5011/26-6a8b6a3057828.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது, 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபரும், 54,096 கஞ்சாச் செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஹம்பகமுவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதம்பலாவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T22:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான SLS முத்திரை ; 8,500 குடிநீர்ப் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116"></link>
            <id>https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116</id>
            <summary type="text">அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இந்தப் போத்தல்கள் தயாரிக்கப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aacf8c-efbd-492b-a2d4-43f4c01bb662/26-6a8b608e49d00.webp' /></p><h2>ஆரம்பக் கட்ட விசாரணை</h2><p>
</p><p>


அத்துடன், பல்வேறு அளவிலான குடிநீர்ப் போத்தல்களில் போலியான முறையில் SLS தரச் சான்றிதழ் முத்திரையும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் இடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p>இந்தத் குடிநீர்த் தொகுதி இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. எனினும் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



சுற்றிவளைப்பின்போது, சுமார் 8,500 போத்தல்களையும் சீல் வைத்து அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
</p><p>


மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361</id>
            <summary type="text">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p style="text-align: justify;">ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள்&nbsp; முதல் இவரை காணவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44921db-97d1-42ce-bf03-9fec9dbf89ff/26-6a8b32a2a507a.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.</p><p style="text-align: justify;">

விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"> எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.</p><p style="text-align: justify; ">&nbsp;தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.</p><p style="text-align: justify;"> எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார். </p><p style="text-align: justify;">அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-23T21:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா வந்தவரின் உயிரை பறித்த பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223"></link>
            <id>https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இந்த விபத்தில் இரத்தினபுரியில் இருந்து சுற்றுலா வருகை தந்த 46 வயதுடைய&nbsp; நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c5de94-f81f-4168-b2d9-5ed21bf8e14f/26-6a8b5929d257f.webp' /></p><p style="text-align: justify; ">



கண்டி பகுதியில் இருந்து&nbsp; நுவரெலியாவிக்கு சுற்றுலா வருகை தந்த பேருந்தில் தடையாளி இயங்காமை காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>


விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலியா

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330"></link>
            <id>https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330</id>
            <summary type="text">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">



இதற்கமைய, சங்கத்தின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்துதல்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ccc389-b0e1-4c3f-8fe0-f207bfd4027f/26-6a8b55ac6a305.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைநிறுத்துதல்.</h2><p style="text-align: justify; ">



இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 



இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">



இந்த விவகாரம் குறித்து, ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



எனவே, பி.எச்.மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது குறித்து நியாயமான விசாரணையை நடத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். </p><p style="text-align: justify; ">



இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">



எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T20:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதன மோதகம் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை ; மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட &#039;மதன மோதகம்&#039; தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட 'மதன மோதகம்' தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">


இச் சோதனையின் போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629e707b-bb1f-4609-8113-2b507dda8955/26-6a8b4ec9ad2cf.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன் போது, 270 கிலோகிராம் 994 கிராம் எடையுடைய மதன மோதகம், உற்பத்திக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் 500 கிராம் மதன மோதகக் கலவை, விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்ட 30 இலட்சம் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 11,133 மதன மோதகப் பொதிகள் மற்றும் 430 கிராம் கஞ்சா மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செவனகல மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 26, 36 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவர்கள் தயாரித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக அம்பலாந்தோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T19:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca432deb-5263-4ecd-9cab-6df916aaf83a/26-6a8b407fb8bff.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; "> 

இதனிடையே, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,562 எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 366,114 ஆகும்.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஆண்டின் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T19:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹராவில் அடாவடித்தனம் செய்தவருக்கு பொலிஸாரின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700"></link>
            <id>https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700</id>
            <summary type="text">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23), கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழையும் பிரதான சோதனைச் சாவடிக்கு அருகிலேயே பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/314101d8-e8a7-4bff-b1b7-46ff45b98dcb/26-6a8b37de4549c.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இதனை அடுத்து, குறித்த சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; ">&nbsp;அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T18:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது வளைவுப் பாலத்தில் வெடிப்பு ; சமூக ஊடக செய்தி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203</id>
            <summary type="text">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற &#039;ஒன்பது வளைவுப் பாலத்தில்&#039; புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஒன்பது வளைவுப் பாலத்தில்' புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி முற்றிலும் தவறானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அண்மைய நாட்களில் ஒன்பது வளைவுப் பாலத்தில் புதிய வெடிப்புகளோ அல்லது ஆபத்தான நிலைமையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a757119-8c44-407a-adff-483ebddbec15/26-6a8b2a3585f18.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலத்தில் நீர் கசிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இப் பாலத்தில் நீர் கசிவு மற்றும் வெடிப்பு தொடர்பான தகவல்கள் பரவிய போது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள நிபுணர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலத்தின் கட்டமைப்பில் எந்தவிதமான வெடிப்புகளோ அல்லது ஆபத்தான குறைபாடுகளோ இல்லை என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஆண்டு நிலவிய ஒரு செய்தியை மையமாக வைத்து, புதிதாக வெடிப்பு ஏற்பட்டுப் பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T17:13:32+00:00</updated>
        </entry>
    </feed>
