<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T22:48:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223"></link>
            <id>https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf19818-a344-44b3-a7a0-823ca9fa93c7/26-6a8371b8e6377.webp' /></p><p>இந்நிலையில், நிறுவனத்தின் தலைவருடன் ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவர், எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
</p><p>
கையடக்கத் தொலைபேசியின் மின்கலன் தீர்ந்திருந்ததால், தான் வீட்டிற்கு வருவது தொடர்பில் மனைவிக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவரால் முடியவில்லை.
</p><p>
இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், கதவைத் தட்டியபோது மனைவி கதவைத் திறப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டதுடன், வீட்டின் பின்பக்கக் கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்து சத்தம் கேட்டுள்ளது.

மின்கல விளக்கை எடுத்துக்கொண்டு தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>
அந்த நேரத்தில் மரத்திலிருந்து சில பலாக்காய்கள் கீழே விழுந்த சத்தமும் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உடனடியாக அருகில் வசித்த மனைவியின் சகோதரர்களை அழைத்த அவர், மரத்தில் திருடன் ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adf44f4f-66a8-4e8a-b902-4a2839a7d9e4/26-6a8371b99d1c6.webp' /></p><p>அங்கு வந்த உறவினர்கள் மரத்தில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, கணவன் தனது மனைவியை அந்த நபருடன் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மனைவியின் சகோதரர்களும் குறித்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரு பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பில் தொடர்ந்தும் பணியாற்றுவதைத் தவிர்த்து, தனது இரு பிள்ளைகளையும் தானே பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T22:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-police-officers-arrested-for-accepting-bribes-1787004881"></link>
            <id>https://jvpnews.com/article/two-police-officers-arrested-for-accepting-bribes-1787004881</id>
            <summary type="text">அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 20,000 ரூபாய் இலஞ்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 20,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரு பொலிஸ் அதிகாரிகள் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், அதே பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றியதுடன் தற்போது அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e336b344-aa38-4fdd-9505-5c9b33080431/26-6a8387d2ecc19.webp' /></p><p>போதைப்பொருள் சந்தேகநபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு உதவுவதாகக் கூறியே குறித்த இலஞ்சத் தொகை பெறப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T22:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட ஷிரான் பஸிக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-bassi-remanded-in-custody-for-90-days-1787003325"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-bassi-remanded-in-custody-for-90-days-1787003325</id>
            <summary type="text">48 வயதுடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுத் திணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>48 வயதுடைய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CCID) அனுமதி பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

தெஹிவளையைச் சேர்ந்த ஷிரான் பஸிக், டுபாயில் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5d114c0-27a3-4442-9c80-de041e249fd6/26-6a8381bea66aa.webp' /></p><p>
</p><p>
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக CCID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>இதனிடையே, ஈரானுடனான மோதல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டுபாயில் உள்ள சொகுசு ஷாப்பிங் வளாகமொன்றில் இருந்தபோது, டுபாய் காவல்துறையினரால் தாம் வழிமறித்து விசாரிக்கப்பட்டதாக பஸிக் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது அலைபேசியைச் சோதனையிட்ட டுபாய் காவல்துறையினர், ஈரானியத் தாக்குதல்கள் தொடர்பான படங்களைக் கண்டறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தாம் கைது செய்யப்பட்டதாகவும் பஸிக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும், ஈரானுடன் தமக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து, இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையில் டுபாய் காவல்துறையினர் தினமும் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், பஸிக்கின் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் CCID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T21:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை ; தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-jewels-missing-action-taken-arrest-guru-1786993287"></link>
            <id>https://jvpnews.com/article/temple-jewels-missing-action-taken-arrest-guru-1786993287</id>
            <summary type="text">கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h3>பயணத் தடை உத்தரவு</h3><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>


குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3177bc44-506b-43a8-928b-27f68379c9c8/26-6a835a88de9a0.webp' /></p><p>கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல்போன கோயில் நகைகளை மீட்பதற்கும், குறித்த பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>


தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T19:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-tourism-development-authority-chairman-1786990974"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-tourism-development-authority-chairman-1786990974</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் புத்திக ஹேவாவசம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் புத்திக ஹேவாவசம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு, அமைச்சின் செயலாளர் ஊடாக சமர்ப்பித்துள்ளார்.</p><p>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் SLTDA தலைவராக பதவியேற்றதாகவும், தேசிய நலன் மற்றும் நிறுவனத்தின் நேர்மையை முன்னிறுத்தி தனது பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் புத்திக ஹேவாவசம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927ebb7-05e4-4c40-99c0-7108b0cbff7a/26-6a83517f8cd69.webp' /></p><p>2024 ஒக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரை அவர் SLTDA தலைவராக பணியாற்றியுள்ளார்.
</p><p>
தனது பதவிக்காலத்தில் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இயற்கை அனர்த்தங்கள், முக்கிய சுற்றுலா சந்தைகளில் ஏற்பட்ட உலகளாவிய சமூக-அரசியல் நெருக்கடிகள் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாட்டு வரம்புகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்த சாதனை எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், 2025ஆம் ஆண்டில் இலங்கை 15க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுலா விருதுகளைப் பெற்றதாகவும், இதன் மூலம் உலகின் முன்னணி சுற்றுலா destinations நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களை தேசிய சுற்றுலா இலக்குகளை நோக்கி ஒன்றிணைப்பதிலும், அரசாங்கத்தின் சுற்றுலா கொள்கை மற்றும் மூலோபாயம் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
SLTDAவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது தனது பதவிக்காலத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்ததாகவும் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
புதிய தலைமையிடம் பொறுப்புகளை சுமுகமாக ஒப்படைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும், அது SLTDA மற்றும் நாட்டின் நலனுக்கு அமைய அமைய வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T18:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-falling-colombo-apartment-building-1786989992"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-falling-colombo-apartment-building-1786989992</id>
            <summary type="text">கொழும்பு 09, மருதானை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 09, மருதானை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19aa591-3600-44cd-b5bc-c867e4b7d819/26-6a834da9dc24d.webp' /></p><p>உயிரிழந்த சிறுவன், குறித்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, மேல் மாடியில் உள்ள திறந்தவெளிப் பகுதியில் இருந்து தவறி விழுந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதானை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T18:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘டுபாய் கசுன்’ உறவினர் காயம் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relative-of-dubai-cousin-injured-shooting-colombo-1786989022"></link>
            <id>https://jvpnews.com/article/relative-of-dubai-cousin-injured-shooting-colombo-1786989022</id>
            <summary type="text">கொழும்பு ஹபரகட, சீலாலங்கார மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ஹபரகட, சீலாலங்கார மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>விசாரணை</h3><p>அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4aa3f0d-2055-4540-933d-449b559f0801/26-6a8349dfa62b5.webp' /></p><p>ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் “டுபாய் கசுன்” என்பவரின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>காயமடைந்தவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-statement-regarding-vehicle-price-reducti-1786988011"></link>
            <id>https://jvpnews.com/article/minister-statement-regarding-vehicle-price-reducti-1786988011</id>
            <summary type="text">இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சிப் பேரணியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

பொதுமக்கள் வசதியாகத் தங்களது சொந்த வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு, அன்றாடத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0890060-dde6-4614-9370-0b4bcf9062e6/26-6a8345ecedd8f.webp' /></p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமையையும், நாட்டிற்குள் எந்தவொரு வாகனத்தையும் கொண்டுவர முடியாத நிலைமை காணப்பட்டமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.</p><p>

எனினும், குறுகிய காலத்திற்குள் இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதுடன், இன்று கட்டுப்பாடுகள் இன்றி எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக தற்காலிகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்றும், விரைவில் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
மக்களின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தமையினாலேயே, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முறையிலாவது இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
பிரஜைகள் மகிழ்ச்சியாக வாழவும் சுதந்திரமாகப் பயணிக்கவும் விரிவான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும், அந்த மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம் ; ஜனாதிபதி யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/single-center-combining-tri-service-research-1786985481"></link>
            <id>https://jvpnews.com/article/single-center-combining-tri-service-research-1786985481</id>
            <summary type="text">இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பாதுகாப்பு அமைச்சின் 2027ஆம் ஆண்டிற்கான பாதீட்டுக்கு முன்னாயத்தமாக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
</p><p>
பாதுகாப்புத் துறையின் இலக்குகளை மேலும் திறமையாகவும் வினைத்திறனுடனும் அடைவதற்கு இத்தகைய ஒருங்கிணைந்த மையம் வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd49eeb0-c25b-4c32-b58f-9b339db0ad14/26-6a833c0ac61d7.webp' /></p><p>

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும், உலகளாவிய புதிய சவால்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்புத் துறை நவீன தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாற வேண்டியதன் அவசியம் குறித்தும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>
அத்துடன், பாதுகாப்புப் படையினரின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப்பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயற்பாடுகள் குறித்தும், இவ்விரு நிறுவனங்களுக்குமான தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.</p><p>

பாதுகாப்புப் படையினரின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் அவர்களைக் கட்டுமானத் துறையில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இந்தக் கலந்தரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:51:47+00:00</updated>
        </entry>
    </feed>
