<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T09:21:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் உயர்வு ; அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-sharply-across-sri-lanka-1786179847"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-sharply-across-sri-lanka-1786179847</id>
            <summary type="text">நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a0d4d7-be7c-486b-b35d-2d877d3612c3/26-6a76f108c35fc.webp' /></p><h2 style="text-align: justify; ">அதி-அபாய வலயங்கள்</h2><p style="text-align: justify; ">

 

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.

 

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T09:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜஃப்னா கிங்ஸ், கோல் கெலன்ட்ஸ் மோதும் LPL இறுதிப் போட்டி ; ரசிகர்களுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-final-free-entry-announced-for-fans-1786177836"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-final-free-entry-announced-for-fans-1786177836</id>
            <summary type="text">கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
</p><p>
 

மைதானத்தின் 'C' Upper மற்றும் Lower, 'D' Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4cce7c4-ff02-4df9-ba05-b2bc99ad8116/26-6a76e92e7aa88.webp' /></p><h2>நிறைவு விழா</h2><p>

 

இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.</p><p>

 

இதற்கமைய, மைதானத்தின் அனைத்து வாயில்களும் பார்வையாளர்களுக்காக மாலை 5.30 மணி முதல் திறக்கப்படவுள்ளன.</p><p>

 

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ரசிகர்களுக்காக பல்வேறு பொழுதுபோக்கு அங்கங்களும், கவர்ச்சிகரமான நிறைவு விழாவும் நடத்தப்படவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T09:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் அதிகரிக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-pose-growing-danger-in-sri-lanka-1786176809"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-pose-growing-danger-in-sri-lanka-1786176809</id>
            <summary type="text">தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முறையான தரமான தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee2803d-99e9-42c8-8897-95e1f54416cc/26-6a76e52b797d2.webp' /></p><h2>விபத்துகள்&nbsp;</h2><p>
</p><p>
 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,626 விபத்துகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,585 விபத்துகளை விட அதிக எண்ணிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

இக்காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 749 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

 

தனதும் பிறரதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் எப்போதும் தலைக்கவசம் அணிந்து தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சென்ற கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/letter-urges-release-of-11-indian-fishermen-1786176036"></link>
            <id>https://jvpnews.com/article/letter-urges-release-of-11-indian-fishermen-1786176036</id>
            <summary type="text">கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் கடல் எல்லையைத் தாண்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e132e8-acbc-4098-9b78-0c76d30164e0/26-6a76e225b2133.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட உதவிகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


கைதுசெய்யப்பட்ட 11 மீனவர்களையும், கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உள்ளிட்டவர்களையும் உடனடியாக தாயகத்துக்கு அழைத்து வர தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகை அதன் உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதுகாப்பாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை இருநாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T08:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் ; துயரை ஏற்படுத்திய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். 

 

கண்டி மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். </p><p>

 

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42b7888-fe2a-4b5e-8093-e893f4025f1b/26-6a76cfc32762b.webp' /></p><h2>புற்றுநோய்&nbsp;</h2><p>
</p><p>
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:</p><p>

 

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
</p><p>
 

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><p></p><p> 

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

 

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-08T08:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-sathosa-cuts-prices-of-essential-food-items-1786174904"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-sathosa-cuts-prices-of-essential-food-items-1786174904</id>
            <summary type="text">நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்த விலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>


இந்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbb6616-e2ce-4f29-9329-2bd6a48a0dd3/26-6a76ddb9f26fc.webp' /></p><h2>விலை குறைப்பு&nbsp;</h2><p>
</p><p>


இதன்படி, ஒரு கிலோகிராம் பூண்டின் விலை 699 ரூபாவிலிருந்து 649 ரூபாவாகவும்,</p><p> பெரிய வெங்காயத்தின் விலை 259 ரூபாவிலிருந்து 224 ரூபாவாகவும், </p><p>உருளைக்கிழங்கின் விலை 259 ரூபாவிலிருந்து 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
</p><p>


வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.</p><p>



இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோர் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-s-tragic-fate-while-swimming-with-friends-1786174471"></link>
            <id>https://jvpnews.com/article/boy-s-tragic-fate-while-swimming-with-friends-1786174471</id>
            <summary type="text">தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff67f82-b735-4e00-9af9-006df600afe2/26-6a76dc08d4a08.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதனடிப்படையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் மொணராகலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

தனது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடச் சென்றபோதே இச்சோக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொம்பகஹவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T07:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்காக மகிழ்ச்சி தகவல் ; இலங்கையின் உணவுப்பிரியர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-tourists-visiting-jaffna-1786172772"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-tourists-visiting-jaffna-1786172772</id>
            <summary type="text">வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும் சனிக்கிழமை (15) முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
</p><p>

எதிர்வரும் ஓகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும் அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2039013d-99f7-44b8-9c99-c1b97c717ca9/26-6a76d5665a03c.webp' /></p><h2>&nbsp;உணவுத் திருவிழா</h2><p>
</p><p>
இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், வட மாகாணத்தின் பாரம்பரியமும் பண்பாடும் சுற்றுலாத்துறையின் ஊடாக உலக அரங்கில் மேலும் உயர்த்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப் பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக் கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். </p><p>வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை, பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும், என்றார்.</p><p></p><p>
</p><p>மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
</p><p>
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T07:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585</id>
            <summary type="text">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த "சிவப்பு" மட்ட எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
சனிக்கிழமை (08) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221bfaf2-8d9d-4b30-8485-b95bd1cfc900/26-6a76ccdae48b6.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வானிலை முன்னறிவிப்பு</h2><p style="text-align: justify; ">

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்ற வீசுவதுடன் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
</p><p style="text-align: justify;">
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்தச் கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலான, மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, மேற்கூறிய கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T06:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; உருவாகும் விசேட கட்டமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816"></link>
            <id>https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816</id>
            <summary type="text">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 



நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரின் பங்களிப்புடன் கூடிய விசேட விரைவுச் செயற்பாட்டு அலகு அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9ec8be-6347-4e2a-b1f8-e71f5d863572/26-6a76c5f1e2f7d.webp' /></p><h3 style="text-align: justify; ">பாதுகாப்பு வழிமுறைகள்</h3><p style="text-align: justify; "> 

மேலும், பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு கைதிகளின் நலன் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதைத் தடுத்தல் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய தேவைகளும் இதன் மூலம் கவனத்தில் கொள்ளப்படும்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 61 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களைத் தடுக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பில்லாத சாதாரண கைதிகளுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார். </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்மானிக்கப்பட்ட புதிய கமிஷன்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை 33 சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T06:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a356a7e1-17ac-43f9-b73c-695b8eb956ba/26-6a76c1f57783c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-569 எண் கொண்ட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதும், இதுவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்படாததுமான "டாப் கன்" (Top Gun) வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளும் (200 சிகரெட் கார்ட்டன்கள்) இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இவரைக் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளைஞனின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233</id>
            <summary type="text">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூலர் ரக வாகனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d996c6-8d5a-4db2-8007-d0f8c6e86eb1/26-6a76bfc34bac6.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f5edb-a472-48a1-b4f0-fae43266dbd2/26-6a76b6775d020.webp' /></p><h2 style="text-align: justify;">அனுமதி அட்டை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">
 

அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p style="text-align: justify;">
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">

 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T04:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு ; மூன்று சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226</id>
            <summary type="text">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57749d68-99d7-4e43-a279-d5a528d6a1ed/26-6a76b403d75f6.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவர்கள் 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p style="text-align: justify; ">

 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-08T04:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து அரங்கேறிய மரணங்களால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deaths-continue-to-shock-jaffna-1786163791"></link>
            <id>https://jvpnews.com/article/deaths-continue-to-shock-jaffna-1786163791</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify;">


யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6d60d02-93d5-4d25-875f-d1daf1032979/26-6a76b250abc00.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;விசாரணைகள் தீவிரம்&nbsp;</h2><p style="text-align: justify;">



குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.
</p><p style="text-align: justify;">


வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில் நபர் ஒருவர் நேற்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"> பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">


அத்துடன் , யாழில் நேற்றுமுன்தினம் மன விரக்தியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p style="text-align: justify; ">



பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர்.&nbsp; விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


இதேவேளை யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


குறித்த நபர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். </p><p style="text-align: justify; ">இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.&nbsp; யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T04:36:34+00:00</updated>
        </entry>
    </feed>
