<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T21:45:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளைஞரின் உயிரைப் பறித்த கோர விபத்து ; சகோதரிக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-died-horrific-accident-trying-overtake-vehicle-1785014713"></link>
            <id>https://jvpnews.com/article/man-died-horrific-accident-trying-overtake-vehicle-1785014713</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர், ஏ9 பிரதான வீதியின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதிக்கு அருகில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
அந்த வேளையில், மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d226d471-3c2c-471e-9451-7ec46549effe/26-6a6529bb7fca4.webp' /></p><p>இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
அவருடன் பயணித்த அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T21:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ; 2 சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-shooting-incident-2-suspects-arrested-1785012574"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-shooting-incident-2-suspects-arrested-1785012574</id>
            <summary type="text">கொழும்பு பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளையில், நவகமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் மீது இன்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403e0e1b-ecd1-410a-b827-9d4895c02128/26-6a6521605c35c.webp' /></p><p>இதனையடுத்து அவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:50:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; பேராசிரியரின் முறைப்பாட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுச் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appeal-board-dismisses-jaffna-professor-complaint-1785010839"></link>
            <id>https://jvpnews.com/article/appeal-board-dismisses-jaffna-professor-complaint-1785010839</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த உத்தரவு, கடந்த ஜூன் 30ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பேராசிரியர் ஆர். கபிலன், 2022ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c93bc926-3d2b-4270-a9e1-1ef886a6c5b5/26-6a651a9927cbb.webp' /></p><p> இதனை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கையாகக் கருதிய அப்போதைய பல்கலைக்கழகப் பேரவை, அவரை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.</p><p>

இந்த நீக்கத் தீர்மானம் சட்டவிரோதமானது எனக் கூறிய பேராசிரியர் ஆர். கபிலன், தம்மை 2022 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தாவரவியல் துறைத் தலைவராக நியமிக்குமாறு கோரி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p>
எனினும், முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்மானிக்கும் அதிகார வரம்பு மேன்முறையீட்டுச் சபைக்கு இல்லை என்று ஜூரிகள் சுட்டிக்காட்டியதுடன், அந்த அடிப்படையில் மேன்முறையீட்டு முறைப்பாட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, இதே விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பேராசிரியர் ஆர். கபிலன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகளையும் கடந்த ஆண்டு அவர் திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-17-year-old-girl-recovered-from-quarry-1785009525"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-17-year-old-girl-recovered-from-quarry-1785009525</id>
            <summary type="text">இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை23ஆம் திகதி முதல் அந்தச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தாக தெரியவருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e061de-f28d-4dbe-92f9-ca1abf38b93e/26-6a6515770f8a7.webp' /></p><p>இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர், பலாங்கொடை மஹாவலதென்னவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவார்.</p><p>எவ்வாறாயினும், குறித்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இது தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற உள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதய நோய் வரக்கூடாதா? கட்டாயம் இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-these-habits-to-prevent-heart-disease-1785008874"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-these-habits-to-prevent-heart-disease-1785008874</id>
            <summary type="text">நாம் பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்யும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, இதய நோயின் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கும். </p><p>இப்போது இதய நோயைத் தவிர்க்க இரவு 8 மணிக்கு மேல் எந்த மாதிரியான பழக்கவழக்கங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f83482c-eaee-4e48-b820-8dd35e08fbcd/26-6a6512ec33a06.webp' /></p><h3>வயிறுமுட்ட உண்பது
</h3><p>இரவு நேரத்தில் பொதுவாக மிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பலர் இரவு நேரத்தில் தான் பொறுமையாக சாப்பிட நேரம் கிடைக்கிறது என்று வயிறுமுட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். அதுவும் இரவில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது ஓய்வு நேரத்திலும் செரிமான மண்டலத்தை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டத்தை செரிமான மண்டலத்திற்கு திசைதிருப்புகிறது, இதயத்தை கடினமாக்குகிறது மற்றும் இரவுநேர இரத்த அழுத்த ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது.</p><h3>காபியை குடிப்பது</h3><p>பொதுவாக காபியில் உள்ள காஃப்பைன் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி இரவு தூக்கத்தை போதுமான அளவு மேற்கொள்ளாமல் இருந்தால், இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இதயத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h3>மொபைல், கணினி திரையை பார்ப்பது</h3><p>என்ன தான் ஓய்வு நேரத்தில் தான் மொபைலை நீங்கள் பார்ப்பவராக இருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன் மொபைலை பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் மொபைல் திரையின் நீல ஒளி வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. இது தூக்கத்தை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, உடலை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கும். மேலும் இதயத்தை போதுமான ஓய்வு எடுக்கவிடாமலும் தடுக்கும்.</p><h3>இரவு நேர ஸ்நாக்ஸ்</h3><p>
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது பசியைத் தூண்டும். அதுவும் அப்போது சிப்ஸ், ஸ்வீட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது ஆரோக்கியமற்ற கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, காலப்போக்கில் இதயத்தில் பிரச்சனையை வரத் தூண்டிவிடும்.</p><h3>மன அழுத்தம்</h3><p>
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் அனைவருமே தங்கள் உடல்கள் துன்பப்படுவதை உணர்வதில்லை. இரவு நேர வேலைகள் அல்லது மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.</p>]]></content>
            <updated>2026-07-25T19:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641"></link>
            <id>https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641</id>
            <summary type="text">வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் தரும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. </p><p>குறிப்பாக, செல்வம், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அடையாளங்களைக் கொண்ட படங்களை வீட்டில் வைத்திருப்பது மனநிறைவு மற்றும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b407a14b-a9c2-4b6d-a6cc-980183d169ea/26-6a650e1c16a9e.webp' /></p><h3>

நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் நீர்
</h3><p>ஓடும் நீர் அல்லது நீர்வீழ்ச்சி காட்சியைக் கொண்ட படங்கள், பணப்புழக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் படங்களை வீட்டின் வடக்கு திசையில் மாட்டுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இது செல்வ வளத்தை ஈர்த்து, பணப்பற்றாக்குறையை குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2524f57f-1281-41b2-ae50-36a30197aff1/26-6a650e1ab27ee.webp' /></p><h3>

ஓடும் 7 குதிரைகள்
</h3><p>ஏழு குதிரைகள் ஒன்றாக ஓடும் படம் வெற்றி, வேகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம் மற்றும் பணியில் வெற்றியை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e006f018-4a30-4e80-a80e-45621faba839/26-6a650e1b65e5d.webp' /></p><h3>

உதிக்கும் சூரியன்
</h3><p>உதயமாகும் சூரியனின் படம் புதிய தொடக்கம், நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆற்றலைக் குறிக்கிறது. இதனை வீட்டில் வைத்திருப்பது வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.</p><p>


<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7911e2-e5b9-41d9-a9d7-760674a547b7/26-6a650e1e2d77e.webp' /></p><h3>
தங்க நாணயங்கள்
</h3><p>தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ (Money Tree) படங்கள் நிதி வளர்ச்சி, சேமிப்பு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக கருதப்படுகின்றன. செல்வ வளத்தை ஈர்க்கும் சின்னங்களாக இவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a87c9ca7-1e80-425a-9140-0300612f5a74/26-6a650e1d77d2c.webp' /></p><h3>

கொய் மீன் (Koi Fish)
</h3><p>கொய் மீன் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை வீட்டில் வைத்திருப்பது பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை வாஸ்து மற்றும் ஃபெங் ஷுய் மரபுகளில் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e497b657-f1dc-45d0-bd33-96f2e0e34593/26-6a650e1cc377f.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T19:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[7.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d47a96-6c69-4f8d-bf8f-f8e49dcfa7bd/26-6a6500f55b098.webp' /></p><p>இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.</p><p>
</p><p></p><p>இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய அவர், பல தசாப்தங்களாக வணிக நிர்வாகத் துறையில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தார்.</p><p> நாட்டின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அவர், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2743386b-76db-497f-a9c0-87c387d35dfe/26-6a64fc990eb4a.webp' /></p><p>

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCSL) தலைவராகவும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராகவும் பணியாற்றிய அவர், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்ததுடன், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
</p><p>
அத்துடன், இலங்கை காப்பீட்டு கூட்டுத்தாபனம் (SLIC) நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
</p><p>
வணிகத் துறையில், நவாலொக்க குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக நீண்டகாலம் செயற்பட்ட அவர், நவாலொக்க பைலிங் லிமிடெட், நவாலொக்க டிம்பர் ஸ்டோர்ஸ் லிமிடெட், நவாலொக்க பாலிசாக்ஸ் லிமிடெட், நவாலொக்க இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நியூ நவாலொக்க டிரேடிங் கோ லிமிடெட் மற்றும் நவாலொக்க டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.</p><p>

உபாலி தர்மதாசவின் மறைவு, இலங்கையின் கிரிக்கெட் மற்றும் வணிகத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் 250 முறை ஏற்பட்ட திடீர் நில அதிர்வு ; இஸ்ரோ ஆய்வில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-earthquakes-occurred-250-times-on-the-moon-1784999316"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-earthquakes-occurred-250-times-on-the-moon-1784999316</id>
            <summary type="text">நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்டு, நிலவின் தென் துருவப் பகுதியான 'சிவசக்தி' களத்தில் தரை இறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.</p><p>

குறித்த ஆய்வின் படி, நிலவின் சிவசக்தி பகுதியில் சுமார் 250க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9901ba87-282b-4b53-abfe-82f00da453ee/26-6a64ed9681528.webp' /></p><p>இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றபோதிலும், சில அதிர்வுகள் பல மணிநேரம் நீடித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
நிலவின் மேற்பரப்பிலிருந்து 10 சென்டிமீற்றர் ஆழம் வரை உள்ள மண் பகுதியானது வெப்பத்தைக் கடத்தாத கவசமாகத் தொழிற்படுவதை சந்திரயான்-3 உறுதி செய்துள்ளது.</p><p>

அத்துடன் அங்குள்ள மண் அமைப்பில் மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், நிலவு உருவான காலகட்டத்தில் மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயற்பட்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
நிலவின் தென் துருவப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்வுகள் மற்றும் மண் கட்டமைப்பு தொடர்பான தரவுகள், நிலவின் தோற்றம் மற்றும் அதன் உள்வடிவமைப்பு குறித்த மேலதிக ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு; பிரான்ஸ் வாழ் நபருக்கு கடுங்காவல் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128"></link>
            <id>https://jvpnews.com/article/abuse-girl-in-jaffna-france-based-man-imprisonment-1784974128</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
எதிரி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938b26a3-f58b-427b-9176-f485d7ac9d93/26-6a648b3174313.webp' /></p><p></p><h2>சந்தேக நபர் பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு&nbsp;</h2><p>
</p><p>
 சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய சந்தேகநபர், தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.</p><p></p><p>
</p><p>
 வழக்கில் அரச தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் மூவர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து சந்தேகநபருக்குக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளது.</p><p>


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு,&nbsp; சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; யாரும்&nbsp; தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/are-there-outsiders-staying-at-presidential-palace-1784997344"></link>
            <id>https://jvpnews.com/article/are-there-outsiders-staying-at-presidential-palace-1784997344</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.</p><p></p><p>

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில், கடமை நிமித்தம் பாதுகாப்புப் படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831ed0c4-d79f-451a-8bd6-3c4f96d0ceca/26-6a64e5e20df56.webp' /></p><p>அத்துடன், குறித்த அதிகாரிகளில் எவரும் பிரதான ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கவைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-colombo-a-short-while-ago-1784996201</id>
            <summary type="text"> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> கொழும்பு பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>பொலிஸார் தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 55 வயதுடைய உணவக உரிமையாளர் கடுமையாக காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0e0c88-aca7-4fed-b128-2307c2a49010/26-6a64e16a8c03c.webp' /></p><p> </p><p>சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகள் பலனளிக்காததால், அவர் சிகிச்சை பெற்று வந்தபோதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, அதில் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:17:01+00:00</updated>
        </entry>
    </feed>
