<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T01:42:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-signs-key-agreement-with-saudi-arabia-1784769314"></link>
            <id>https://jvpnews.com/article/us-signs-key-agreement-with-saudi-arabia-1784769314</id>
            <summary type="text">மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7796aa23-a22d-440a-86df-b91bacd2f2ba/26-6a616b23bee68.webp' /></p><p> </p><p>

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும். 

இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.</p><p> 

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T01:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இலங்கை வைத்தியர் செய்த தகாத செயல் ; கணினியில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-doctor-s-shocking-act-in-canada-1784768843"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-doctor-s-shocking-act-in-canada-1784768843</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி &#039;குழந்தைகள் நல மருத்துவமனையில்&#039; பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி 'குழந்தைகள் நல மருத்துவமனையில்' பணியாற்றிய, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53afd78c-209a-4bce-a512-52a8bc4c69e8/26-6a61694ce9f3a.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p style="text-align: justify;">

டொராண்டோ பொலிஸாரின் இணையவழி குழந்தை துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify;">
இந்த விசாரணை 2026 ஜனவரியில் தொடங்கியது என்று தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">பின்னர், பிப்ரவரி மாதம், பொலிஸார் சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும் சந்தேக நபரின் சொந்த வீட்டிலும் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தனர். அங்கு, அவர் பணியிடத்தில் பயன்படுத்திய கணினி உட்பட பல மின்னணு சாதனங்களை அவர்கள் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த மற்றும் அவற்றை இணையம் மூலம் பெற்ற குற்றச்சாட்டுகளின் பேரில், சந்தேக நபர் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தார்.
</p><p style="text-align: justify;">
இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify;">
இந்தக் குற்றச்சாட்டுகள், சந்தேகத்திற்குரிய மருத்துவரின் தொழில்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என டொராண்டோ காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட குழந்தைகள் மருத்துவமனை, இந்தச் சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

விசாரணை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் திஸாநாயக்கவை உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">இந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவரது மருத்துவ சேவைக்கும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T01:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் யுவதி உட்பட ஐவரின் உயிரை பறித்த தீ விபத்து ; பணியில் இணைந்து சில நாளிலேயே 19 வயது இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-kills-five-including-tamil-young-woman-1784767142"></link>
            <id>https://jvpnews.com/article/fire-kills-five-including-tamil-young-woman-1784767142</id>
            <summary type="text">ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p style="text-align: justify; ">

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad566ddc-0d01-45d0-945f-7cb05cfc140a/26-6a6163a506356.webp' /></p><h2 style="text-align: justify; ">உடைமைகளால் அடையாளம் காணப்பட்ட உடலம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவ்விபத்தில் ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய வரதராஜ் தமயந்தி, தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 24 வயதுடைய கொதாகொட சிதுகே சஹன் உதார ,கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த மரியோ எட்வர்ட், தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய வதுகல கமகே திலீப் மதுசங்க மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த 24 வயதுடைய சசின் தில்ஷான் ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;இந்த சம்பவத்தில் உயிரிழந்தகமகே திலீப் மதுசங்க என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; ">


மேலும், தீ விபத்தின் போது நச்சுப் புகையை சுவாசித்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தொழிற்சாலையின் உட்பகுதியை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியதுடன், அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


கோட்டை, தெஹிவளை, ஹொரானா தீயணைப்பு பிரிவுகள் மற்றும் விமானப்படையின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">ஹோமாகம ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சில உடல்களை, உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டை, தோடு மற்றும் கழுத்து மாலை போன்ற அடையாளங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">தொழிற்சாலையின் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T00:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ; காவடி ஆட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு ; பலத்த பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-at-devundara-perahera-festival-1784766184"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-at-devundara-perahera-festival-1784766184</id>
            <summary type="text">&amp;nbsp;மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, தற்போது துப்பாக்கிச் சூடு வரை தீவிரமடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னரே இந்த தகவல் வௌியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc480840-03dd-4b70-bf2a-782faa5c5ab4/26-6a615eea32860.webp' /></p><h2 style="text-align: justify;">கொலை மிரட்டல்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட குற்றவாளிகளே இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p style="text-align: justify;">

இவ்வாறான பின்னணியில், நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹராவிற்காக விசேட பாதுகாப்பு வழங்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify;">

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் குற்றவாளியின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">


தேவேந்திரமுனை விகாரை பெரஹெரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக் குழுக்களைக் குறைப்பது தொடர்பாகக் கடந்த 20 ஆம் திகதி அந்த விகாரையின் பஸ்நாயக்க நிலமேக்கு நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கஞ்சிபானை இம்ரானுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் குரல் பதிவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. </p><p style="text-align: justify;">

இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T00:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு துண்டு தேங்காய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/coconut-benefits-for-a-healthy-heart-1784763779"></link>
            <id>https://jvpnews.com/article/coconut-benefits-for-a-healthy-heart-1784763779</id>
            <summary type="text">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். </p><p>ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து என்றாவது சிந்தித்திருப்போமா?



தேங்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25e07d70-6a94-4483-b274-8fa724e69774/26-6a6155849d7df.webp' /></p><h2>ஆரோக்கிய நன்மைகள்</h2><p>
</p><p>


வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதயம், சருமம், தலைமுடி, வயிறு என அனைத்துக்கும் நல்லது.
</p><p>


உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சமிபாட்டுப் பிரச்சினைகளை சரி செய்கிறது.



தேங்காயில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. </p><p>இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.</p><p></p><p>
</p><p>


வாழைப்பழம், அப்பிள் பழங்களில் உள்ள சத்துக்களை விடவும் தேங்காயில் அதிகப்படியான புரதம் உள்ளது.</p><p> 



இது சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்யும்.</p><p> 



எனவே காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க உதவும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020</id>
            <summary type="text">&amp;nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.


ஜார்க்கண்ட் மாநிலம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">


ஜார்க்கண்ட் மாநிலம்&nbsp; ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753382e-0913-4c4e-9787-4db3e94f863c/26-6a60fc9e65790.webp' /></p><h2 style="text-align: justify;">கொடூரமாக&nbsp;கொலை </h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்,இளம் பெண்ணுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
</p><p style="text-align: justify;">

எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் இருக்க முடியாது என நினைத்து கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து எதிர்கால கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அதன்படி இளம் பெண் தனது வருங்கால கணவர் பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

இதை நம்பிய இளைஞன் குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து, குறித்த இளைஞனை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். 

பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர். </p><p style="text-align: justify;">

இதற்கிடையே காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T22:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஜூன் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-june-inflation-rate-updated-1784757487"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-june-inflation-rate-updated-1784757487</id>
            <summary type="text">உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 6.5 சதவீதமாக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p> 
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7590558b-6db6-45d4-b907-d54535d0c647/26-6a613cf116129.webp' /></p><h2>பணவீக்கம்</h2><p> 
 
இதன்படி மே மாதத்தில் 5.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p> 
அத்துடன் மே மாதத்தில் 1.5 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p> 
அதேபோல், உணவு அல்லாத பணவீக்கமும் 8.6 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:58:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் ; மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-missing-in-mahaweli-river-1784755812"></link>
            <id>https://jvpnews.com/article/boy-missing-in-mahaweli-river-1784755812</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>


நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367dec88-a3b6-4194-9c96-4f52eaef4e15/26-6a61366666b8b.webp' /></p><h2>மீட்பு பணி</h2><p> 



சம்பவத்தின் போது ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>


காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகள் பிரதேசவாசிகள் மற்றும் கம்பளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் அறிமுகமாகும் புதிய திட்டம் ; பிமல் ரத்நாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-north-next-year-1784752980"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-north-next-year-1784752980</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவை வினை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவை வினைத்திறனாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aaf24a0-aa95-44ee-bc5a-51108e6f63e5/26-6a612b55ee485.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;பொது போக்குவரத்து சேவை</h2><p>
</p><p style="text-align: justify;">
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,</p><p style="text-align: justify;">மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.</p><p style="text-align: justify;">மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுவதால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p style="text-align: justify;">வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T20:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564"></link>
            <id>https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f46d42-0089-479a-bf1e-0a94a6dd05b3/26-6a6121e5a3bbf.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T20:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக நடத்தப்பட்ட சோதனை ; நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545"></link>
            <id>https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545</id>
            <summary type="text">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொறகொட பொலிஸ் பிரிவின் லபுனோருவ பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் 21 ஆம் திகதி 22ஆம் திகதி புதன்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பின் போது புதயல்தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் மொறகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a53c2b-cb87-4b0a-8e8f-bc83b82a0718/26-6a611a03164f8.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்டவர்கள் 37,43,52,54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T19:45:26+00:00</updated>
        </entry>
    </feed>
