<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T11:31:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ITAK கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084"></link>
            <id>https://jvpnews.com/article/itak-demands-referendum-on-22-1787484084</id>
            <summary type="text">முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது.</p><p>

 

சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7718c0c8-be23-426f-bda0-26d81b8ad44b/26-6a8ad7b56398b.webp' /></p><p>இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது மக்களின் இறைமையுடன் தொடர்புடையது என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மேலும் கோரியுள்ளது.
</p><p>
 

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம்:

 

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65-இல் இருந்து 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.</p><p>

 

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63-இல் இருந்து 65 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்மூலம் மாகாண மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-chairman-for-the-civil-aviation-authority-1787482574</id>
            <summary type="text">இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இப்பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86521d5a-46af-418c-9a4c-671ef613669e/26-6a8ad1cfd20f0.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-in-front-of-a-house-colombo-1787480655</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலுள்ள கைக்குண்டு ஒன்றை பொரளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இன்று (23) காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f107c8c-a6af-4e30-a008-23307508dfc8/26-6a8aca507f6c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-expatriates-india-allowed-return-home-1787479798</id>
            <summary type="text">இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
</p><p>
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a401d4d-32ea-4dd1-9b9e-514b21944766/26-6a8ac6f747bfb.webp' /></p><p>இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
</p><p>
இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
</p><p>
இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், ஏதிலிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T10:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330</id>
            <summary type="text">கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b36508-2b0a-4748-88fe-d1af31feba2a/26-6a8abd53a8378.webp' /></p><p>வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
</p><p>


இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.
</p><p>


அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


விபத்தில் தொடர்புடைய ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637</id>
            <summary type="text">நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef67f89-f6c6-4126-93b4-e72b229d72b3/26-6a8aba9f351a3.webp' /></p><p>நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
</p><p>
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.
</p><p>
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி விமானப்படை சீருடையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320</id>
            <summary type="text">விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76ad008d-e4bb-48a3-8d56-12e66271ec4b/26-6a8aa9c18bac2.webp' /></p><p>

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
விசாரணைகளின்போது, சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணியாற்றுவதாகக் கூறி, தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அவர்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்து பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை நம்பிய பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை விற்று கிடைத்த 60 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேகநபரிடம் வழங்கியுள்ளார்.
</p><p>
குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடை அணிந்து வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் குருநாகல் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 7 கோடி பெறுமதியான 1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654</id>
            <summary type="text">மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50361c87-f6d5-4feb-a86a-d0fac51296e1/26-6a8a978816860.webp' /></p><p>அங்கிருந்து 1044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

இதேவேளை, அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
 

வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557"></link>
            <id>https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557</id>
            <summary type="text">அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b4e92e-03f2-46a7-ab00-2e889c07ae1d/26-6a8a7bceb3197.webp' /></p><p>கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அவருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

தகராறு முற்றிய நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதமொன்றால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-23T06:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ; இரவு நேரத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-nighttime-accident-losing-control-speed-1787465299"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-nighttime-accident-losing-control-speed-1787465299</id>
            <summary type="text">அம்பாறை களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடப்பதற்காக வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97bd5379-3c22-4c7d-ba2e-89bc0cd12307/26-6a8a8e550e666.webp' /></p><p> இச்சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

 

கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த ஜெகநாதன் கிஷோர் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

சம்பவத்தினமான நேற்று இரவு 9.30 மணியளவில், குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காக மூன்று சிறுவர்கள் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.</p><p> 

 

இதன்போது வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். </p><p>

 

காயமடைந்தவர்கள் உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் ; பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-scholarship-differently-abled-stude-jaffna-1787464545"></link>
            <id>https://jvpnews.com/article/special-scholarship-differently-abled-stude-jaffna-1787464545</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி நிதியத்தின் உதவிகள் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd23af26-4154-404d-9262-21dcaf1e2027/26-6a8a8b62e7a55.webp' /></p><p>வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்தகால யுத்தத்தின் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று எனத் தெரிவித்த அவர், மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p>
மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் வெற்றிக் கதைகள் ஏனையோருக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக ஜனாதிபதி நிதியத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-who-wen-swimming-with-friends-drowned-and-died-1787463988"></link>
            <id>https://jvpnews.com/article/man-who-wen-swimming-with-friends-drowned-and-died-1787463988</id>
            <summary type="text">இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><h3>முதற்கட்ட விசாரணை</h3><p>
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3f64eb2-efcb-4934-b884-82a35d9a6ab4/26-6a8a8936689cd.webp' /></p><p>உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவம் தொடர்பாக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் செப்டம்பர் 5 முதல் பிரம்மாண்ட மக்கள் பேரணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/massive-public-rallies-led-president-september-5-1787463527"></link>
            <id>https://jvpnews.com/article/massive-public-rallies-led-president-september-5-1787463527</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9c5e9f-d645-4f7c-947f-c25b6a594705/26-6a8a8768561d5.webp' /></p><p>களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.</p><p>

 

"ஜி.எல். பீரிஸின் வீட்டில் இரவோடு இரவாகச் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்காமல் வீதியில் இறங்கிச் செய்யச் ​சொல்லுங்கள். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் கூட்டங்களை நடத்துமாறு கூறுங்கள்.</p><p>அதை விடுத்து கோட்டாபயவை விட ஒன்று இருக்கிறது, ரணில் விக்கிரமசிங்கவை விட ஒன்று இருக்கிறது, அங்கு ஒன்று இருக்கிறது, இங்கு ஒன்று இருக்கிறது என்று பேசுவதில் பயனில்லை. வார்த்தைகளில் பயனில்லை.
</p><p>
 

நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைத்து வருகிறோம்.</p><p>

 

வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்டங்களில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளன. </p><p>அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுமானால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கூறுகிறோம்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:38:53+00:00</updated>
        </entry>
    </feed>
