<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T13:36:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார், யாழ்ப்பாணத்தில் சிக்கிய 07 பேர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974"></link>
            <id>https://jvpnews.com/article/07-people-trapped-in-mannar-and-jaffna-1789649974</id>
            <summary type="text">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் யஹப்பார் மற்றும் யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்கரைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை (26) மற்றும் இன்று வியாழக்கிழமை ( 17) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளைப் பிடித்த 7 சந்தேகநபர்கள் 3 படகுகள் மற்றும் 1,400 கடல் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வடமத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட பிரிவுகளால் இச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee79d687-5cfd-481c-805c-4987f405a968/26-6aabe438583e9.webp' /></p><h2 style="text-align: justify; ">கடல் அட்டைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாச்சிக்குடா, யஹப்பாறு பகுதியில் 'இ.க.க. புவனெக' படையணியினர் நடத்திய சோதனையில் அனுமதிப்பத்திரமின்றி 550 கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற 3 சந்தேகநபர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினரால் குடாரப்பு கடற்கரையில் இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இரவில் சட்டவிரோதமாகச் சுழியோடி 850 கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேகநபர்கள் 2 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதானவர்கள் 29 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T13:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரை நீரில் கரைக்க சென்ற 6 சிறுவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903"></link>
            <id>https://jvpnews.com/article/six-boys-sinked-in-the-water-and-died-1789648903</id>
            <summary type="text">கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 14ஆம் தேதி இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விநாயகரை ஆற்றில் கரைக்கு சென்ற ஆறு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p>தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு அருகில் உள்ள பெத்தகஞ்சர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42071bce-83fe-448f-bdf1-48b41619f276/26-6aabe008eccaf.webp' /></p><p> </p><p>ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட சிலைகளை 8 மாணவர்கள் குளத்தில் கரைக்க சென்றிருக்கிறார்கள்.
</p><p>
செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டதால் ஏரி மற்றும் குளத்தில் ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. </p><p>அந்த ஆழம் தெரியாமல் விநாயகர் சிலை கரைக்கு சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் தப்பி ஓடி வந்து ஆசிரம ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். </p><p>அதன்பின் நீரில் மூழ்கி மரணமடைந்த ஆறு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-those-who-waiting-to-buy-a-vehicle-1789648031"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-those-who-waiting-to-buy-a-vehicle-1789648031</id>
            <summary type="text">சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13494caf-742e-438b-9b11-6974232c3223/26-6aabdca0c3653.webp' /></p><p>
</p><p>
சில வாகனங்களின் விலைகள் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் ; பேருந்து நிலையத்தில் சிறப்பு பெட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032"></link>
            <id>https://jvpnews.com/article/free-condom-distribution-campaign-in-mannar-1789647032</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c898b7b-eaa0-4c1f-8050-29284fa09a80/26-6aabd8b9e81f0.webp' /></p><p>



பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொட பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-dematagoda-area-1789645870</id>
            <summary type="text">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இன்று (17) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c27655-e89a-4895-9cae-525f623304eb/26-6aabd42fda226.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எனினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T11:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வர்த்தகருக்கு மரண தண்டனை ; வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-trader-sentenced-to-death-1789643983</id>
            <summary type="text">&amp;nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ad6d3f-5881-4a55-b6fe-bf197df69bdb/26-6aabcdc24358d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


அந்த சுற்றிவளைப்பின்போது,பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify;">


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T11:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822"></link>
            <id>https://jvpnews.com/article/remand-order-for-slpp-renuka-perera-1789643822</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் <a href="https://jvpnews.com/article/ex-ntc-chairman-renuka-perera-arrested-1789627045" target="_blank">ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்</a> வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3773c-d170-41cc-83cf-b433e7fc348e/26-6aabcc2fc7edc.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனத்திற்கு வந்த கொள்கலனில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134"></link>
            <id>https://jvpnews.com/article/the-shock-that-awaited-in-the-container-1789643134</id>
            <summary type="text">பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொருட்களை கொண்டுவந்திருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான 7 பொதிகளில் இருந்து 1,469 சட்டவிரோதமான ஈ-சிகரெட்டுகள் கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

குறித்த கொள்கலனில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கொழும்பு மத்திய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, 2026 செப்டம்பர் 16ஆம் திகதி இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3f2307-212a-4db9-9583-4a1497c90859/26-6aabcae61bef1.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் இச்சோதனை நடத்தப்பட்டது.
</p><p>

இதன்போது, உரிமையாளர்கள் எவரும் உரிமை கோராத 7 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிலிருந்து 1,469 ஈ- சிகரெட்டுகள், ஈ-சிகரெட்டுகளுக்கு மீள் நிறப்பு திரவம் அடங்கிய 145 சிறிய திரவப் பெட்டிகள், 94 ஈ-சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் 400 கிராம் எடையுடைய 1,520 கொலாஜன் டின்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் 220 ஈ-சிகரெட்டுகள் அடங்கிய பொதியொன்றிற்கு உரிமை கோரி கலஹெடிஹேனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் வருகை தந்துள்ளார்.</p><p> இதனையடுத்து, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் கைதான இலங்கை நடிகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288"></link>
            <id>https://jvpnews.com/article/sinhala-actor-vishwa-kodikara-arrested-with-drugs-1789642288</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல சிங்களச் சின்னத்திரை நடிகர் விஷ்வ கொடிகாரவுக்கு, குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து 5,000 ரூபாய் அபராதம் விதித்து கல்கிஸ்ஸ நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><p>
மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு வந்தால், கட்டாயப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என்றும் நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4700f-d575-4383-b5c5-4e3279520da8/26-6aabc6321bd0c.webp' /></p><h2>வெள்ளவத்தை பிரபல உணவகம் ஒன்றில் சோதனை</h2><p>

வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தைக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதன்போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐந்து பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு, கல்ஹிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டபோது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கொக்கெயின் (Cocaine) கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் மனைவியின் பிடியாணை வாபஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644"></link>
            <id>https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
</p><p>
<a href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751" target="_blank">ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தினால்</a> எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள கபில சந்திரசேனவின் மனைவிக்காகப் பிணையாளிகளாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நேற்று (16) பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீளப் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ecd0c6-9a20-48f9-8834-be4ae5054921/26-6aabb7f5c8ad9.webp' /></p><p>
</p><p>
அரவிந்த டி சில்வாவின் தாயாரின் மரணச் சடங்குகள் காரணமாக அவர்களால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக, இன்று மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மோஷன் மனு ஊடாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
இவ்விடயத்தைக் பரிசீலித்த நீதிவான், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை உடனடியாக வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658"></link>
            <id>https://jvpnews.com/article/scammed-on-matrimonial-website-harassment-1789633658</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பேறுவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. </p><p>
 

அந்த வகையில் மும்பை திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2372aa2b-81e7-40c0-a5c0-8dcc20d5bb98/26-6aaba47c4ed1b.webp' /></p><h2>திருமண இணையதளத்தில் போலி அடையாளம்</h2><p>
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், தன்னை ஒரு "பிளேபாய்" போலவும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், பெண்ணை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.</p><p></p><p> </p><p> சந்திப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர். </p><p>

இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.</p><p></p><p>

இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலகாள் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; பெற்றோருக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-poses-risks-to-children-1789636051"></link>
            <id>https://jvpnews.com/article/ai-poses-risks-to-children-1789636051</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்டக்கங்களால் தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய டிஜிட்டல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e2608-1c7d-40bb-8545-1edbd983be27/26-6aabaf4c4a2d9.webp' /></p><h2 style="text-align: justify; ">அறிகுறிகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பாக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் விசேட விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
முன்னைய காலங்களில் இணையத்தில் பரப்பப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அல்லது காணொளிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களைக் கொண்டிருந்தன.</p><p style="text-align: justify; ">தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்றத்தால், குற்றவாளிகள் சிறுவர்களின் சாதாரண புகைப்படங்களை அவர்களின் அறிவோ அல்லது அனுமதியோ இன்றி, மிகத் துல்லியமான ஆபாச அல்லது துஷ்பிரயோகப் படங்களாக மாற்றியமைக்க முடிகிறது.
</p><p style="text-align: justify; ">
இது சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மனநலத்திற்குப் பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சிறுவர்கள் இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் காட்டும் அறிகுறிகள்:

ஒரு குழந்தை இணையவழியில் அச்சுறுத்தல் அல்லது தவறான செல்வாக்கிற்கு உள்ளாகியிருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">சமூக குழுக்களில் இணையுங்கள்


கணினி அல்லது மொபைல் போனைப் பயன்படுத்தும்போது யாராவது அருகில் வந்தால், உடனே திரையை மூடுதல் அல்லது மறைத்தல்.</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமக் கட்டுப்பாடுகளைத் திடீரென அதிகரித்தல் அல்லது இரகசியமாகப் புதிய கணக்குகளை உருவாக்குதல்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திடீர் பதற்றம், மன அழுத்தம், குற்ற உணர்ச்சி அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி தனித்திருக்கும் போக்கு.</p><p style="text-align: justify; ">

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிரும்போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும். </p><p style="text-align: justify; ">பொதுக் கணக்குகளுக்குப் பதிலாகத் தனியுரிமை பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். </p><p style="text-align: justify; ">இணையத்தில் உள்ள ஆபத்துகள் மற்றும் தெரியாத நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுடன் தோழமையுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பிள்ளைகள் அணுகும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளைக் கண்காணிப்பதுடன், பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகளை சாத்தியமான இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பது விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது எனவும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட்டுப் பொறுப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T09:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mattakkuliya-accident-driver-remanded-1789636557"></link>
            <id>https://jvpnews.com/article/mattakkuliya-accident-driver-remanded-1789636557</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280" target="_blank"> மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து</a> சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு இடமம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7cf3ea-91de-446f-a507-8c73f1582d3e/26-6aabafceccd4c.webp' /></p><p></p><h2>காரொன்று&nbsp; பல வாகனங்களுடன் மோதி&nbsp;விபத்து</h2><p>
</p><p>
காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 

 விபத்தை அடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். 

இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/depreciation-sri-lankan-rupee-against-the-dollar-1789636015"></link>
            <id>https://jvpnews.com/article/depreciation-sri-lankan-rupee-against-the-dollar-1789636015</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (14) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 



அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (14) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>



அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 327.9020 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 336.9212 ரூபாயாகவும் உயர்ந்து பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac547e02-443c-433d-bf63-8d5179217063/26-6aabadb0eca9c.webp' /></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-issued-over-waste-dumped-in-keerimalai-1789634536"></link>
            <id>https://jvpnews.com/article/order-issued-over-waste-dumped-in-keerimalai-1789634536</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.வலி. வடக்கு பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் , சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றை வலி.தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8471a489-a5f5-4c2a-9175-4146379ce0b5/26-6aabaa27cb0c2.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட கூட்டம்</h2><p> </p><p style="text-align: justify;">

இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.</p><p style="text-align: justify; "> 

அதன் போது, குப்பைகளை மீள அள்ள வேண்டும் என வலி. தெற்கு பிரதேச சபைக்கு கால எல்லை அறிவிக்கப்பட்டு , அவர்கள் அதனை மீள அள்ளவில்லை. </p><p style="text-align: justify;">அதற்கு எதிராக தவிசாளர் இதுவரையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பிலும் , அதன் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க என கடந்த 14ஆம் திகதி விசேட கூட்டம் கூட்டப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் , அக்கூட்டம் கூட்டப்படவில்லை. </p><p style="text-align: justify;">இந்த விசேட கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் சென்ற கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை இவை அனைத்தும் தவிசாளரின் உதவியுடன் நடைபெறுவதாக தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் உரிய நடவடிக்கை தவிசாளர் எடுக்க வேண்டும் என கோரி பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அதனால் இன்றைய சபை அமர்வு நடைபெறாத நிலையில் , அது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , வலி. தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டனர் </p><p style="text-align: justify;">

அதனை அடுத்து , கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்க உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான &#039;மவுண்ட் எலிசபெத்&#039; மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301" target="_blank">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்</a>ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாகக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4b47680-f2ea-47bd-9959-2dbecfea4ff3/26-6aab816a79443.webp' /></p><h2>விமான நிலையத்தில்&nbsp; வழங்கப்பட்ட அழைப்பாணை&nbsp;</h2><p> </p><p>

வாக்குமூலம் அளிப்பதற்கான அறிவித்தல் முதலில் தங்காலையில் உள்ள 'கார்ல்டன் ஹவுஸ்' இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p>

அவர் வெளிநாடு செல்லத் தயாராவதை அறிந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். 

ஷிரந்தி ராஜபக்ஷ விமானத்தில் ஏறவிருந்த வேளையில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது.</p><p></p><p> அவருடன் பயணித்த உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, இது சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி என்ற செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4379e0e0-854a-40d4-b0a3-060fb016d8eb/26-6aab828d2e2d6.webp' /></p><p> 

தனது உடல்நலக் குறைபாட்டிற்கான மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் 19-ஆம் திகதி மீண்டும் தீவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதன்படி, திட்டமிட்டபடி 24-ஆம் திகதி அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் ஆஜராவார்.
</p><p>
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 'சிரிலியா சவிய' கணக்கு விவகாரம் குறித்து மேலும் தெளிவுபடுத்திய சட்டத்தரணி, மகரகமவில் உள்ள 'அபேக்ஷா' (Apeksha) மருத்துவமனையில் சிறுவர் புற்றுநோயாளிகளுக்காக 'PET ஸ்கேன்' இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அக்காலகட்டத்தில் இலங்க்கை மக்கள் வங்க்கியில் 2 மில்லியன் ரூபா நன்கொடை பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> 

எனினும், சீன அரசாங்கம் அந்த இயந்திரத்தை இலவசமாக வழங்க முன்வந்ததால், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சிறுவர்களுக்கான வார்டு (ward) ஒன்றை அமைக்க அறக்கட்டளை தீர்மானித்ததாக அவர் கூறினார்.
</p><p>
அந்தக் கணக்கில் உள்ள நிதியில் எதையும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருமோ தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவில்லை என்றும் வங்கி' நன்கொடை உட்பட அனைத்து நிதியும் இன்றுவரை அந்தக் கணக்கிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.</p><p> 

அதேசமயம் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரம் தற்காலிகமானது என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குடும்பத்திலுள்ள பெண்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p> 

முன்னதாக, பாரதா கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய டுமிண்டா சில்வாவும் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
</p><p>
 அக்காலகட்டத்தில், அந்த மருத்துவமனை அறிக்கைகளைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து டுமிண்டாவால் தப்பிக்க முடிந்தமைகும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T08:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; ரயில் நிலைய நுழைவாயிலுக்கு பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trade-unions-on-strike-railway-station-locked-1789634476"></link>
            <id>https://jvpnews.com/article/trade-unions-on-strike-railway-station-locked-1789634476</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக, இன்று காலை நுகேகொட ரயில் நிலையத்தின் வெளியேறும் கதவு பூட்டப்பட்டிருந்தது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக, இன்று காலை நுகேகொட ரயில் நிலையத்தின் வெளியேறும் கதவு பூட்டப்பட்டிருந்தது. </p><p>

இதனால் அவிசாவளையில் இருந்து கோட்டை நோக்கி இயக்கப்பட்ட ரயிலில் நுகேகொட வந்தடைந்த பயணிகளால் ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் போய், கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936dd31e-cd44-46ed-83e6-a569c9408af8/26-6aaba7ade5e27.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, ரயிலில் வந்த பயணிகள் ரயில் தளத்திலிருந்து தண்டவாளத்தில் இறங்கி, தண்டவாள வழியே நடந்து சென்று ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகளைக் காண முடிந்தது.
</p><p>
ரயிலில் வந்த முதிய பெண்களால் ரயில் தளத்திலிருந்து தண்டவாளத்திற்கு இறங்க முடியவில்லை என்பதால், அவர்கள் கடும் அவதிக்குள்ளானதாகப் பயணிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>

சில ரயில் நிலையங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டாலும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கவில்லை என்றும், நுகேகொட ரயில் நிலையத்தில் மட்டுமே வெளியேறும் கதவு மூடப்பட்டிருந்தது கடுமையான தவறு என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T08:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; நடுவீதியில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-dies-in-accident-1789631707"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-dies-in-accident-1789631707</id>
            <summary type="text">திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
</p><p>


ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று சீமெந்து லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d563176-6fd0-4048-8e09-d486d8c23851/26-6aab9cdc5e520.webp' /></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>
</p><p>


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தோப்பூர் – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான&nbsp; என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>


அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதானவர் படுகாயமடைந்த நிலையில் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>



உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஜனாஸா கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T07:58:25+00:00</updated>
        </entry>
    </feed>
