<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-12T07:33:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிடம் இருந்து நாமலிடம் கை மாறிய ராஜபக்சர்களின் அரசியல் சொத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730"></link>
            <id>https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். </p><p>அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</span></p><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8b4527-6b57-4721-8754-6d453d699249/26-6a7c20b42fd65.webp' /></p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p></p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான். </p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-to-cid-investigation-1786517298"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-to-cid-investigation-1786517298</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.வாக்குமூலமொன்று வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>வாக்குமூலமொன்று வழங்குவதற்காக&nbsp;குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T06:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் மீண்டும் துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786514260"></link>
            <id>https://jvpnews.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786514260</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733"></link>
            <id>https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733</id>
            <summary type="text">புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.</p><p>கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.</p><p>இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.</p><p>ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T05:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் நிகழும் மிக அரிய சூரிய கிரகணம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647"></link>
            <id>https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&nbsp;</p><p>உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.</p><p>இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது .சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே 'முழு சூரிய கிரகணம்' எனப்படுகிறது.</p><p>இதன்போது, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல ஒளிரும் காட்சியே இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.</p><p>இருப்பினும், இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 11:16 மணிக்கு இந்த கிரகணம் நிகழ உள்ளதால், இரவு நேர காரணமாக இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இதை நேரடியாகக் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முழு சூரிய கிரகணத்தின் முதன்மைப் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.</p><p>வடக்கு ஸ்பெயினில் சூரிய மறைவு நேரத்திற்கு மிக அருகில் கிரகணம் நிகழு என்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனோடு இணைந்த அரிய காட்சியை அங்கே காண முடியும்.</p><p>ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப்பகுதிகளிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.</p><p>முழு கிரகணம் தென்படாத ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, அலாஸ்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இது 'பகுதி சூரிய கிரகணமாக'க் காட்சியளிக்கும்.</p><p>அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆனால், அந்த கிரகணமும் இலங்கையில் இருந்து தென்படாது என்றும்; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளில் இருந்தே அதைக் காண முடியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T04:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் தங்கையின் கணவன் கைது - நிதி மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434"></link>
            <id>https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434</id>
            <summary type="text">சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை விசேட குற்ற விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கேகாலை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கேகாலை - ஹமுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி</b></h2><p>கடந்த நாட்களில் நடைபெற்ற அரசாங்கத்தின் வாகன ஏலத்தின் மூலம் வாகனம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3905c48-8465-4085-a84d-7b4ca20c40a1/26-6a7bdeba6250d.webp' /></p><p>கைது செய்யப்பட்டுள்ளவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சரொருவரின் மனைவியின் தங்கையின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சந்தேக நபர் பள்ளந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். தான் பெற்றுக் கொண்ட பணமோ அல்லது ஏல வாகனமோ தனக்குக் கிடைக்காமையின் காரணமாக குறித்த வர்த்தகர் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2><b>
சட்ட நடவடிக்கை
</b></h2><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e0a77f7-8bc1-42d1-9ef1-8a78b530279c/26-6a7bde2fa015c.webp' /></p><p>சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் சகோதரியின் கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அநுர அரசாங்கத்தில் சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T03:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071"></link>
            <id>https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T02:51:27+00:00</updated>
        </entry>
    </feed>
