<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T16:24:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616"></link>
            <id>https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616</id>
            <summary type="text">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய, கிழக்கு மாகாணங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14e4585-5fef-45d2-b380-8d3d1a673245/26-6a9edeca9eb95.webp' /></p><p style="text-align: justify; "> 

அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை ; விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6387e22-9511-4775-8ac6-d51c487097f0/26-6a9eda44248b5.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, இன்று (07) முதல் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இது முழுமையாக ஒன்லைன் முறைமையினூடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f18f50-2d2b-4f69-8255-f4c446572ad1/26-6a9eb7d51ceb2.webp' /></p><h2>தங்க நகைகள், உண்டியல்கள்&nbsp;&nbsp;திருட்டு</h2><p>

மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>

திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 திருட்டு சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885"></link>
            <id>https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885</id>
            <summary type="text">&amp;nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae56e3be-8150-45f8-893e-fc2e2fe7e838/26-6a9eb0f719e6c.webp' /></p><h2>கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார்?</h2><p> </p><p>

 அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p> 
உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டி மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><p></p><p>

 அத்துடன் ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.</p><p> இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><p></p><p>


 எனினும் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை.</p><p> இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். </p><p>

விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. 

ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். </p><p> 

அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751</id>
            <summary type="text">&amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ள குறித்த கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153796b9-865e-4a45-8cde-b498ab038b50/26-6a9eb45910c38.webp' /></p><p>
</p><p>


இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச நாளைய (08) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p></p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

காலி – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, தனது பயணத்தை நிறைவு செய்த பின்னர், பழுதுபார்க்கும் பணிக்காக ரத்கம, ஓவகந்த பகுதியில் உள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84783991-9ea8-4b68-94c8-7c13a9189dd5/26-6a9ebb1e550ee.webp' /></p><p>
</p><p>
 கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் ஒளி சமிக்ஞை அமைப்பு இருந்தபோதிலும், அது முறையாகச் செயல்படுவதில்லை என ரத்கம பிரதேச சபை உறுப்பினர் ஹர்ஷ பசான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதன் காரணமாக, குறித்த ரயில்வே கடவை நீண்ட காலமாகவே பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012"></link>
            <id>https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcceb69-1132-48b7-b17f-da60b78f92cf/26-6a9eb945d57ff.webp' /></p><p>

இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது மனித செயற்பாடுகள் காரணமாக உருவான நிலையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T13:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337"></link>
            <id>https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337</id>
            <summary type="text">&amp;nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.



அதனடிப்படையில், ஹங்வெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரி-56 துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b0b0db-d109-49fc-b920-3b3d0adb9156/26-6a9eb2bb5a31b.webp' /></p><p>
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T12:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914"></link>
            <id>https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e4fc1-f516-40b0-8905-89c91b9e3149/26-6a9ea55c2c357.webp' /></p><p>
</p><p>
எம்பிலிபிட்டிய, காந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியும், அதன் பகுதியிலுள்ள மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எம்பிலிபிட்டிய புதுநகர் பகுதியில் அமைந்துள்ள 23.7 பேர்ச்சஸ் காணியும், அதிலுள்ள மூன்று மாடி வீடும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T11:48:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சீசன் 10 ; சட்டசபையான வீடு! வெளிநடப்பு செய்த முனியம்மாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-house-assembly-vijay-tv-1788779575"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-house-assembly-vijay-tv-1788779575</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 10 நிகழ்ச்சி நேற்று (06) மாலை தொடங்கியது. இதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 10 நிகழ்ச்சி நேற்று (06) மாலை தொடங்கியது. இதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளான இன்று (07), கேப்டன் தேர்வு நடைபெற்ற Promo வீடியோ வெளியானது.</p><p> அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது Promo வீடியோவில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக 'Democracy room' என்பதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bead895-79ed-4879-b687-52ca6e1afec6/26-6a9e9c3936227.webp' /></p><h2>ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு</h2><p> </p><p>

இதில் ஆளும் கட்சி - எதிர்கட்சி என சட்டமன்றத்தில் உள்ளது போலவே, ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு உள்ளது. இதற்கு தலைவராக ஷதிகா உள்ளார்.</p><p></p><p> </p><p>

இந்நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷதிகா முறைத்துக்கொண்டு, Rough-ஆக Democracy room-ஐ வழிநடத்த வேண்டாம் என முனியம்மாள் கூற, உங்கள மாறி ஒரு ஆள உக்கார வெச்சிருந்தா அது மாறத்தான் செய்யும்' என ஷதிகா கூறுகிறார்.</p><p> 

இதனால் Democracy room-லிருந்து முனியம்மாள் உடனடியாக தான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறிவிட்டு வெளியேறுகிறார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mqxr4p5HMKw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462"></link>
            <id>https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின்<a href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788767996" target="_blank"> விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை</a> நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63433c20-a93d-4f12-80c3-37cf0ce802cc/26-6a9e97df862a1.webp' /></p><h2>தேரருக்கு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை</h2><p> 

 சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p> 

அதேநேரம் தேரருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

குறித்த வழக்குகளில் அவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247"></link>
            <id>https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247</id>
            <summary type="text">&amp;nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3866da1-34a3-4f22-9f5f-a99400159b39/26-6a9e650645d0a.webp' /></p><h2>&nbsp;சார்ஜரை&nbsp; இணைக்க முற்பட்டவேளை உயிரிழப்பு</h2><p>
 வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,&nbsp; சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.</p><p></p><p>இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:36:47+00:00</updated>
        </entry>
    </feed>
