<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-20T06:32:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வேண்டிய வரங்கள் கிடைக்கும் வரலட்சுமி விரதம்; பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/varalakshmi-vratam-pooja-amman-blessings-1787205504"></link>
            <id>https://jvpnews.com/article/varalakshmi-vratam-pooja-amman-blessings-1787205504</id>
            <summary type="text">&amp;nbsp; 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளையதினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. </p><p>

இந்த நாளில் பெண்கள், அன்னை மகாலட்சுமியிடம் இருந்து வேண்டிய வரங்களை கேட்டு பெறும் அற்புதமான நாளாக வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c92dab6-fdf2-4553-a8fd-9eb5c2447a23/26-6a8697822b781.webp' /></p><h2>செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம்</h2><p> 

பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலோ அல்லது பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையிலோ கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1c3d89-517b-4491-aa41-90959c4548a3/26-6a869782dab61.webp' /></p><p> 

பக்தர்கள் வேண்டும் வரங்களை தரும் லட்சுமியின் வடிவமான வரலட்சுமியை வழிபடும் நாளாகும். </p><p>செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை தொடர்பான வரங்களையும், மகாலட்சுமியின் அருளையும் பெறுவதற்காக வழிபடும் நாளாகும். 

கோவில்களிலும், வீடுகளிலும் வரலட்சுமி விரதம் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58013299-d199-4aa5-bd97-d38d00383426/26-6a86978396b2c.webp' /></p><p> </p><p>கலசம் அமைத்து, அதை அம்மனை போல் அலங்கரித்து, பூஜைகள் செய்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.
</p><p>
திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்</p>]]></content>
            <updated>2026-08-20T06:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச - வசந்த கரன்னாகொட குற்றப்பத்திரிகை கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-karannagoda-indictment-served-1787206106"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-karannagoda-indictment-served-1787206106</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165e58c2-84d4-49b2-9478-79b69b64f2dd/26-6a8699dba0c08.webp' /></p><p> நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ச - வசந்த கரன்னாகொட இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியருக்கு உதவிய இலங்க்கையர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-document-used-to-secure-bail-indian-national-1787204112"></link>
            <id>https://jvpnews.com/article/fake-document-used-to-secure-bail-indian-national-1787204112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc92f3fc-0a94-4dbd-82c3-b07f2998c681/26-6a869212485f7.webp' /></p><h2>சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை</h2><p>

இந்தநிலையில் சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.

இதன்போது. தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.</p><p></p><p>
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். </p><p>எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-20T05:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் முற்றுகை இடப்பட்ட வீடு; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cannabis-plants-on-the-rooftop-house-in-kalmuna-1787202842"></link>
            <id>https://jvpnews.com/article/cannabis-plants-on-the-rooftop-house-in-kalmuna-1787202842</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கல்முனை பிரதேசத்தில் வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கல்முனை பிரதேசத்தில் வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
</p><p>
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb141c3-ce1e-4da1-9342-8699d04132cc/26-6a868d1bad7ab.webp' /></p><h2>&nbsp;சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில்&nbsp; கஞ்சா&nbsp;</h2><p>
</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், பிட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb38637-840e-40c0-b46c-5803fa1c350a/26-6a868ec87018b.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.


இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T05:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பெற நினைத்தால் விசா இல்லை; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001"></link>
            <id>https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001</id>
            <summary type="text">&amp;nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் , 

ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e739de4-64de-4ebd-9d51-5826a423cb45/26-6a8689d351124.webp' /></p><h2>&nbsp;விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்</h2><p>
</p><p>
இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>.

அத்துடன், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T04:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பலாம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787201349"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-in-india-can-return-home-1787201349</id>
            <summary type="text">&amp;nbsp; யுத்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக வெளிநாடு செல்லாதவர்கள், நாட்டுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யுத்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக வெளிநாடு செல்லாதவர்கள், நாட்டுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
</p><p>
 அந்தத் தீர்மானத்துக்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd9f540-1b25-44ac-b294-f0d967fe3abe/26-6a86874758200.webp' /></p><h2>இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கை</h2><p>
</p><p>


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
</p><p>

யுத்தக் காலத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
</p><p>


அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.</p><p><br></p><p> </p><p>அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அங்கீகரிக்கப்பட்ட வகையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்கள்.</p><p> குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டது. தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>


இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின், அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து தாம் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். </p><p>அதனைத்தொடர்ந்து அரசப்புலனாய்வு சேவை பிரிவினூடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p> அதனைத் தொடர்ந்து அவர்களால் இலங்கைக்கு வருகை தர முடியும்.



பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த பல கேள்விகளுக்கு நீதியமைச்சுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது. </p><p>ஆகவே இதற்கு பதிலளிக்க இரண்டு வாரகால அவகாசம் வேண்டும். அதனைத் தொடர்ந்து முழுமையான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-20T04:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/806bb031-3987-4582-8680-ed9ce352cb80/26-6a86594e81943.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. </p><p>

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். </p><p>

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு நடக்கும் அநீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-injustice-fac-sri-lankans-returning-switzerland-1787188251"></link>
            <id>https://jvpnews.com/article/19-injustice-fac-sri-lankans-returning-switzerland-1787188251</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து பின்னர் இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து பின்னர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மாதாந்திர AHV ஓய்வூதியத் தொகையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுவிட்சர்லாந்தில் பணியாற்றி, அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதியக் காப்புறுதி திட்டத்தில் பங்களிப்பு செலுத்தியுள்ள தகுதியுடையவர்களுக்கு இந்தத் திட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f087114-a888-4c2e-8542-e0c6e7a98313/26-6a86541d93567.webp' /></p><p>

சுவிட்சர்லாந்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்குச் செல்ல விரும்பும் இலங்கைப் பிரஜைகள், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாதாந்திர AHV ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நடைமுறை குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து, ஓய்வுபெறும் வயதை அடைந்த பின்னர் இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>19 சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு நடக்கும் அநீதி தொடர்பிலும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கிய காணொளியை நாம் இங்கு காணலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kZclS8M97G8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T01:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுமா? வெளிநாட்டு கையிருப்பு குறித்து அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-country-go-bankrupt-again-foreign-reserves-1787187099"></link>
            <id>https://jvpnews.com/article/will-country-go-bankrupt-again-foreign-reserves-1787187099</id>
            <summary type="text">நடப்பு அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2f1c80-a6ca-4230-a6c9-ebe1747705e5/26-6a864f9ce35f3.webp' /></p><p>
"இலங்கை தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பாகக் கொண்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது இந்த கையிருப்பு 15 பில்லியன்களாக இருக்க வேண்டும்.</p><p>எனவே அரசாங்கம் இன்னும் 9 பில்லியன் டொலர்களை கையிருப்பாகக் கொண்டுவர வேண்டும்; இல்லையேல் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்" என்று ரணிலும் கம்மன்பிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>
எனினும் இதனை மறுத்து, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இறக்குமதித் தடைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுடன், இலங்கை தனது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை எதிர்பார்த்ததை விட விரைவாகக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கணிக்கப்பட்ட கையிருப்பு இலக்குகளை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனினும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பின்னர் அந்தத் தடைகளைத் தளர்த்த முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதன்படி, தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நாணயக் கடிதங்கள் (Letters of Credit - LC) திறக்கப்பட்டுள்ளன. அந்த வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டிராவிட்டால், இலங்கையின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும்.
</p><p>
இருப்பினும், வெளிநாட்டு கையிருப்பைச் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், வெளிநாட்டு கையிருப்பு நிலையை மீண்டும் கட்டியெழுப்பும் அதேவேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.</p><p>
</p><p></p><p>எரிபொருள் இறக்குமதியும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கணிசமான அளவு கையிருப்பு வெளியேறுகிறது; இவை தவிர்க்க முடியாத செலவுகளாகும்.</p><p>

இதன் காரணமாக, பொருளாதாரச் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோலாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு கையிருப்புகளை முதன்மையாக ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்க வேண்டும் என அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொருளாதாரச் செயற்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளையில், வளர்ச்சியைக் குன்றச் செய்யாமல் இந்த பாதுகாப்பு அரணை அரசாங்கம் கட்டியெழுப்பி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நிகர வெளிநாட்டு கையிருப்பின் வளர்ச்சியே இலங்கையின் முக்கிய இலக்காக உள்ளது. இதன்படி, விவேகமான மத்திய வங்கி முகாமை மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672"></link>
            <id>https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&amp;nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.</p><p>கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் புதன் நுழைவது மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.இந்த கிரக மாற்றத்தால் இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9836114-ca87-4a5a-8da2-4b36b5d8a502/26-6a863e51c32a0.webp' /></p><h3>மேஷம் </h3><p>மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் அவர்களின் கவலையை அதிகரிக்கும். எதிரிகளின் வலிமை அதிகரிப்பதால் இந்த காலகட்டம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7ed623-597c-4a00-a9ef-022db98c926d/26-6a863e5272fef.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த கிரக மாற்றத்தால் பெரும்பாலும் வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1edca05f-3fb2-4f4c-8c29-d35e86cf42a9/26-6a863e532271d.webp' /></p><h3>விருச்சிகம்
</h3><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சாதகமான விளைவுகளை அளிக்கப்போவதில்லை. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385a2522-3a33-4bab-b4d1-18ba340f6107/26-6a863e53c5331.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T00:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை ஆடை விவகாரம் ; இனவாத மோதலாக மாற்ற வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kalmunai-north-base-hospital-clothing-issue-1787184824"></link>
            <id>https://jvpnews.com/article/kalmunai-north-base-hospital-clothing-issue-1787184824</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் மிகவும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.</p><p>

சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e543aa8b-5761-4abf-820e-db9428c3d39f/26-6a864b2e70432.webp' /></p><p>

"பல இன மக்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நாடு இது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
</p><p>
எனவே, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடான இலங்கையில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.</p><p> இவை அனைத்தின் சேர்க்கையும், ஒத்திசைவும், ஒற்றுமையும்தான் இலங்கை அரசாக நிலவுகிறது.</p><p>

இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாதப் பூச்சைப் பூசி ஆட்சி செய்தவர்களின் துரதிர்ஷ்டவசமான அனுபவங்கள் உள்ளன.
</p><p>
ஆனால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும்கூட அதிகாரத்திற்கு வர இனவாதத்தைப் பயன்படுத்தவில்லை. </p><p>தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து சுமார் 11 மாதங்கள் ஆகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள இனவாதத்திற்கும் மத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கவில்லை.</p><p>

இத்தகைய சிறிய சம்பவங்கள் நேர்ந்தாலும், தேவைப்பட்டால் சட்டத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
எனவே, கல்முனை மருத்துவமனை விடயம், தேவையில்லாத மோதல் நிலையாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், சிறிய இனவாத குழுக்களுக்குப் பந்தடிக்கும் வாய்ப்பாக இது மாறக்கூடாது என்பதிலும் அனைவரும் கவனமாக நடந்துகொண்டனர்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை அல்லது ஒழுங்குமுறை பின்பற்றப்படும் ஊழியர்களும் உள்ளனர்.
</p><p>
சுகாதாரத் துறையைக் கருத்தில் கொள்ளும்போது:

நோயாளிகளும் பொதுமக்களும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக,

மருத்துவமனைகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
சுகாதாரத் துறையில் சீருடைகளைத் தீர்மானிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, நோயாளி பராமரிப்பை எளிதாக்கவும் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகச் சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
</p><p>
சுகாதார அமைச்சில் சீருடைக்கு உரிமையுள்ள ஊழியர்களுக்குச் சீருடைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecbb182-f954-4355-8c10-1b799d0b3f2e/26-6a864b2dbb6fe.webp' /></p><p>இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல், செவிலியர்களுக்கு 30,000 ரூபாய், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு 28,000 ரூபாய், சுகாதாரப் பரிசோதகர்களுக்கு 30,000 ரூபாய் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 18,600 ரூபாய் எனச் சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
</p><p>
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், சில குழுக்கள் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தடுக்கவும் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

எனவே இந்த மோதல் பரவாமல் தடுக்க குறித்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை அமைச்சின் சீருடைக் குழுவிற்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்திலும் சுதந்திரம் உள்ளது. </p><p>ஆனால், தற்போதைக்கு நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
</p><p>
பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.
</p><p>
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத, கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:32:51+00:00</updated>
        </entry>
    </feed>
