<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T19:46:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு உள்ளான ஒருவர் பலி ; வைத்தியசாலையில் ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609"></link>
            <id>https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609</id>
            <summary type="text">லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>நேற்று&nbsp; காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a9ae1-8b66-46dd-852a-5e3faaea7906/26-6a6cf182a0b5e.webp' /></p><p> </p><p>

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997"></link>
            <id>https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997</id>
            <summary type="text">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e3f867-a2c4-4179-bcf0-43a8b6f67b67/26-6a6ceb36857be.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்டவிரோதச் சொத்துக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வேறு இடங்களில் கைதான இளைஞர்கள் ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440</id>
            <summary type="text">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் &#039;ஐஸ்&#039; போதைப்பொருட்களுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">யடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa89353d-7230-4640-8f26-1993b834506f/26-6a6ce5228d618.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது 100 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தூல்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">&nbsp;கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தம்பவின்ன பகுதியில் மேற்கொண்ட வீதிச் சோதனையின் போது, 130 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் வசமாக பிடிபட்ட இருவர் ; வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416"></link>
            <id>https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416</id>
            <summary type="text">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb928892-167f-400a-9433-6dfa9441544d/26-6a6cd951d7229.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T17:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-appeal-issued-to-sri-lankans-1785516972"></link>
            <id>https://jvpnews.com/article/important-appeal-issued-to-sri-lankans-1785516972</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, தற்போது பல மாவட்டங்களில் கணிசமான நீர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75918e20-0236-4985-b4bd-7d1e0fa5a3a8/26-6a6cd3ade502b.webp' /></p><h2 style="text-align: justify; "> நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு</h2><p style="text-align: justify; "> 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 40 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "> 

வரவிருக்கும் ஓகஸ்ட் மாதம் மற்றும் தற்போது நிலவும் 'எல் நினோ' நிலைமையினால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் ஆவியாகி கணிசமான அளவு இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பணிப்பாளர், மீண்டும் மழை பெய்யும் வரை நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை மிகவும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, நீர் வீணாகாமல் பயன்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய வறட்சியான வானிலையை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்றும் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T16:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pujith-and-hemasiri-fernando-taken-to-prison-1785514750"></link>
            <id>https://jvpnews.com/article/pujith-and-hemasiri-fernando-taken-to-prison-1785514750</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் இன்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f996fb8-2f40-4383-8324-f675aae6a94e/26-6a6ccb344f99a.webp' /></p><p style="text-align: justify;">

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-31T16:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கணிசமாக உயர்ந்த பணவீக்கம் ; புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inflation-sees-significant-increase-1785512855"></link>
            <id>https://jvpnews.com/article/inflation-sees-significant-increase-1785512855</id>
            <summary type="text">கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இது 2026 ஜூன் மாதத்தில் பதிவான 6.8% உடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதப் புள்ளிகள் உயர்வாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2229688f-8375-41d7-aa67-c837cbf0cffe/26-6a6cc399a923a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
அதேபோல், உணவுப் பணவீக்கமானது ஜூன் மாதத்தில் 3.6% ஆக இருந்து ஜூலை மாதத்தில் 6.3% ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இருப்பினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமானது ஜூன் மாதத்தில் 8.4% ஆக இருந்து ஜூலை மாதத்தில் 7.8% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T16:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-southern-sri-lanka-1785513295"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-southern-sri-lanka-1785513295</id>
            <summary type="text">மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dd0c6b-cc43-40aa-a65f-154e8b0d6854/26-6a6cc550d12e9.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இத்துப்பாக்கிச் சூட்டிற்கு 'ரிவோல்வர்' (Revolver) ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.</p><p></p><p> </p><p>

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-defence-secretary-faces-death-penalty-1785510938"></link>
            <id>https://jvpnews.com/article/former-defence-secretary-faces-death-penalty-1785510938</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99bf49a-22ba-4c90-bac7-56f61f2f375a/26-6a6cbc1c0e3c3.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்&nbsp;</h2><p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;&nbsp;இவ்வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நீதிபதிகள் குழாத்தின் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் தமது பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். </p><p>
</p><p style="text-align: justify; ">பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதே குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T15:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கைதிகள் இடமாற்றம்; கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-drug-colombo-to-batticaloa-1785504594"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-drug-colombo-to-batticaloa-1785504594</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காகக் கொழும்பில் இருந்து வந்து உணவகத்தில் தங்கியிருந்த இருவர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காகக் கொழும்பில் இருந்து வந்து உணவகத்தில் தங்கியிருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மட்டக்களப்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் ஒருவர் குறித்த கைதியின் சகோதரர் என்பதோடு, மற்றையவர் அவரது நண்பராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7526034c-3f74-4d18-b14a-90ecc172236c/26-6a6ca354b0677.webp' /></p><h2>&nbsp;விமான நிலையத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர்&nbsp;</h2><p>
</p><p>


கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.5 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் வியாபாரியும் அடங்குவார்.</p><p></p><p>
</p><p>


மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்ட தனது சகோதரனைப் பார்ப்பதற்காக, அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து சென்று கல்லடிப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>


கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை (29) இரவு அந்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
</p><p>
 சோதனையின் போது அறையிலிருந்த இருவரிடமிருந்தும் 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>


கைது செய்யப்பட்ட கைதியின் சகோதரர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அண்மையில்தான் பிணையில் விடுதலையாகியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>



கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்; பெரும் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spain-sees-49-000-migrant-arrivals-in-24-hours-1785503691"></link>
            <id>https://jvpnews.com/article/spain-sees-49-000-migrant-arrivals-in-24-hours-1785503691</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c4b25ef-8b6f-4400-a6d3-14b8504bcc55/26-6a6c9fcc82af4.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது.</p><p></p><p> </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை முன்னறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/department-of-meteorology-special-weather-forecast-1785503984"></link>
            <id>https://jvpnews.com/article/department-of-meteorology-special-weather-forecast-1785503984</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e4eb00-80b2-4a0d-96d1-f5167b1fac34/26-6a6ca0f1c642a.webp' /></p><p> </p><p>

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. </p><p>

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
