<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T11:44:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112"></link>
            <id>https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p> 
 
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். 

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf08a62-e9c8-4a4e-8ded-fd4ebb6b47fa/26-6a7ada120aeec.webp' /></p><h2>என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை</h2><p> </p><p>
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p> 
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T11:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798</id>
            <summary type="text">றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது. </p><p>

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். 

அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில்,
 டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262d7f58-4f3c-4152-a593-7d70b0dd5d21/26-6a7affe866861.webp' /></p><h2>நெதர்லாந்தின்&nbsp; செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த&nbsp; ஈழத்தமிழர்</h2><p> நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான '<a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">Quote Net'</a> அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .</p><p> 
நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.
</p><p>அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d05f12-75c8-46a4-9eb8-72a2c2764e44/26-6a7b02b0b294b.webp' /></p><p>அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p>
இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . 
இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் . </p><p>
யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>
நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><h2>ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம்&nbsp;</h2><p> </p><p>தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 
2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார். </p><p>அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70fcddd-7cef-463a-8d18-81ab46fbdbe4/26-6a7b02b1b73e2.webp' /></p><p>ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் . </p><p>
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். </p><p>
அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை. </p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. 
அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். </p><p>இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது </p><p>. 
ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் . </p><p>
ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 
வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா&nbsp; என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278"></link>
            <id>https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>



அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மாதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே, 115 ஆவது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் வாகனங்களில் ஒன்று கவிழ்ந்ததுடன், இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa25c8a9-660e-4396-a945-c1ede4209c01/26-6a7af9f7beb8a.webp' /></p><p>&nbsp;மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T10:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் வெளிநாடு மோகத்தால் மாயமாகும் பெரும் தொகை பணம்; பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529"></link>
            <id>https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.</p><p>
 

இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d17cbe6-b4f5-45cc-aee3-397ba9b7c80b/26-6a7af70ae63fd.webp' /></p><h2>கனடா, பிரிட்டன் அனுப்புவதாகவே&nbsp; விளம்பரங்கள்</h2><p> </p><p>அதிகபட்சமாக நபரொருவர் ஒன்றரைக் கோடி ரூபாவை இழந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 கனடா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவே அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன.

 எந்தச் செலவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுகின்றனர்.
</p><p>
 காலப் போக்கில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் மோசடியாளர்கள் அவர்களின் வங்கித் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.</p><p></p><p> </p><p>

 
அதன் பின்னர் ஒரு தொகைப் பணத்தை வங்கியிலிட்டுக் காட்டுமாறு கூறிவிட்டு கடவுச்சொல்லைத் திருடி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 
எனவே மோசடியாளர்களிடம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-11T10:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>

 

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae3c77c-e3d7-4c23-afc2-81c2ee04b62a/26-6a7af1f31bc2f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யுத்த காலத்தில் நிலவிய சீரற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றி முறையான கடவுச்சீட்டின்றி இந்தியாவுக்குச் சென்ற பலர், அங்கு ஏதிலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4aff6a-43ba-4b3d-b9eb-5b957743b174/26-6a7aed171a0b5.webp' /></p><h2>UNHCR&nbsp; ஊடாகத்&nbsp; தாயகம் திரும்ப எதிர்பார்ப்பு</h2><p> இவர்கள் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
</p><p>
இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.</p><p></p><p>
</p><p>
இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.
</p><p>
தொடர்புடைய நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T09:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resolution-against-neet-passed-tamil-nadu-assembly-1786438852"></link>
            <id>https://jvpnews.com/article/resolution-against-neet-passed-tamil-nadu-assembly-1786438852</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழக சட்டப்பேரவையில் நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது.

 

தமிழக சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழக சட்டப்பேரவையில் நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது.

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். </p><p>இதற்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு செய்தார்.

 அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34895744-71ef-40b5-ba59-b8e33be9c932/26-6a7ae4c57b57f.webp' /></p><h2>&nbsp;பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு</h2><p> “மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறை கல்வி மட்டுமல்ல,&nbsp; அது மனித உயிர்களை காப்பாற்றும் உன்னத பணிக்கான கல்வி. </p><p>அந்த கல்விக்கான வாய்ப்பு பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொருவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு

நீட் தேர்வு முறையானது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த அரசு எந்த மாணவரின் கனவையும் பறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமையுள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும், அவர்களின் குடும்ப பொருளாதார பின்னணி காரணமாக தடைப்படக்கூடாது என போராடுகிறது.
</p><p>
மாணவர்களின் பனிரெண்டு ஆண்டு கால கல்வியை புறந்தள்ளி; ஒரு நாள் நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வருவதுதான்&nbsp; என்றார்.
</p><p>
இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T09:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பனின் மகளை துஸ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/40-years-of-rigorous-imprisonment-abuse-girl-1786429268"></link>
            <id>https://jvpnews.com/article/40-years-of-rigorous-imprisonment-abuse-girl-1786429268</id>
            <summary type="text">&amp;nbsp; நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார். </p><p> 

 

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயது சிறுமியை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40406d36-9de8-431a-a45d-c0bc6b554f15/26-6a7abf5662960.webp' /></p><p></p><p>சம்பவத்தில்&nbsp; 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T08:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தி செல்லப்படும் மாடுகள்; பொலிஸார் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cattle-being-smuggled-by-car-in-sammanthurai-1786437498"></link>
            <id>https://jvpnews.com/article/cattle-being-smuggled-by-car-in-sammanthurai-1786437498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாறை - சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாறை - சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ய சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
 

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0533d43f-c8e9-4f38-814e-6233bb828446/26-6a7adf7ba24b2.webp' /></p><p>


சுற்றிவளைப்பின்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.</p><p> 

 

இருப்பினும், தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாகக் கைது செய்வதற்கான தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T08:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 587 சந்தேக நபர்கள் அதிரடியாக கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/587-suspects-arrested-single-day-srilanka-police-1786434011"></link>
            <id>https://jvpnews.com/article/587-suspects-arrested-single-day-srilanka-police-1786434011</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் போது 587 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் போது 587 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e28bb7d2-5279-4835-9952-77d5c5603636/26-6a7ad1dd594ea.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 27,773 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
</p><p>
அதேநேரம், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 138 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 114 பேரும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
அதேவேளையில், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,521 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T07:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்; குவிந்த பக்தர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/maviddapuram-kandaswamy-temple-chariot-1786432674"></link>
            <id>https://jvpnews.com/article/maviddapuram-kandaswamy-temple-chariot-1786432674</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் -மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் (11) வெகு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் -மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் (11) வெகு சிறப்பாக நடைபெற்றது.&nbsp; </p><p>அதிகாலையில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07e5763-8324-4121-9079-2b35da27c773/26-6a7acca563320.webp' /></p><h2>சோழ இளவரசி மருதப்புரவீகவல்லி&nbsp;குதிரை முகம் நீங்கிய&nbsp; அற்புத&nbsp; தலம்</h2><p>
</p><p>
 
அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.
</p><p>
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிகப்பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சைவத் திருத்தலமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b693cca-0efa-40c5-8011-d63fa3f6501a/26-6a7acca3f1b3a.webp' /></p><p>குதிரை முகத்துடன் இருந்த சோழ இளவரசி மருதப்புரவீகவல்லி முருகப்பெருமானை வழிபட்டு தனது முகமாற்றம் நீங்கப் பெற்ற அற்புதத்தால் இத்தலம் 'மாவிட்டபுரம்' எனப் பெயர் பெற்றது.
</p><p>
அதேவேளை ஆடி அமாவாசை தினமான நாளையதினம் மாவை கந்தனுக்கு தீர்த்த உற்சபம் இடம்பெறவுள்ளது. 

யாழில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் முக்கிய இடமாக கீரிமலை தீர்த்தம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa91869d-84e1-418f-9487-bd386ade1f70/26-6a7acca4ab639.webp' /></p><p> இதற்காக நாளை லட்சக்காணக்கான மக்கள் கீரிமலை சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஊர் மரபாகும்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றினை உலுக்கிய நிலடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு; அச்சத்தில் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/earthquake-in-colombia-111-dead-people-in-fear-1786424609"></link>
            <id>https://jvpnews.com/article/earthquake-in-colombia-111-dead-people-in-fear-1786424609</id>
            <summary type="text">&amp;nbsp; கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலனடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

 

நிலநடுக்கத்தால்&nbsp; ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே&nbsp;அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a33ae11-c409-4adc-b05f-7cfcd3797954/26-6a7aad23335d4.webp' /></p><h2>ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான&nbsp; நிலநடுக்கம் ...</h2><p>

 

</p><p>, காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

மீட்பு நடவடிக்கைகளுக்காக போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 

சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

இதற்கிடையில் பெரெய்ரா , மனிசாலேஸ் , கிப்தோ , ஆர்மீனியா , கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

 

இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><p>

 

மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா மாநிலம், பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவுமில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T06:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[90 ஆயிரத்தைத் தாண்டிய டெங்கு நோயாளர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-number-of-dengue-patients-exceeds-90-000-1786429716"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-number-of-dengue-patients-exceeds-90-000-1786429716</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



ஓகஸ்ட் 10ஆம் திகதி நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக 90,306 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாகது.</p><p>



இதன்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 4,959 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/497acf30-fc76-4c02-985c-c1f44c19f1ce/26-6a7ac1169e1a8.webp' /></p><p>


மாவட்ட ரீதியில், கம்பஹா மாவட்டத்தில் 19,204 நோயாளர்கள் பதிவாகி அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். கொழும்பு மாவட்டத்தில் 17,965 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.



கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 6,971 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.</p><p>



நடப்பாண்டில் இதுவரை டெங்கு காரணமாக 65 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, டெங்கு மரண விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது.
</p><p>


எனவே, வீடுகளில் டெங்கு பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதுடன், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T06:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/monaragala-ctb-bus-bound-for-colombo-accident-1786428594"></link>
            <id>https://jvpnews.com/article/monaragala-ctb-bus-bound-for-colombo-accident-1786428594</id>
            <summary type="text">&amp;nbsp; மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>



இந்த விபத்து சம்பவம் இன்று(11) அதிகாலை சுமார் 3.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 



தனமல்வில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e527f3-1e72-4909-bac3-cbe711812305/26-6a7abcb462885.webp' /></p><p>
</p><p>


காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 



இதேவேளை, குறித்த பேருந்தில்15 பயணிகள் வரை பயணித்திருந்தாலும் அதிஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் உந்துருளியும் மோதி கோர விபத்து; பிறந்த நாளுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-son-killed-collision-bus-and-motorcycle-1786427616"></link>
            <id>https://jvpnews.com/article/mother-son-killed-collision-bus-and-motorcycle-1786427616</id>
            <summary type="text">&amp;nbsp; தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றும் உந்துருளியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தம்புள்ளை - மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றும் உந்துருளியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இன்று (11) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபரின் ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8272864-77df-40fe-827b-59c68d48ef8d/26-6a7ab8e252f66.webp' /></p><h2>ஒன்றரை வயதுடைய குழந்தையும் பலத்த காயம்</h2><p>
</p><p>
களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவொன்றுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிக் சென்றுகொண்டிருந்த போதே&nbsp; &nbsp;விபத்துக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததுடன், அதற்கு முன்னால் சென்ற உந்துருளி தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு&nbsp; வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமனாரின் உயிரை எடுத்த மருமகன் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-in-law-flees-after-killing-father-in-law-1786427177"></link>
            <id>https://jvpnews.com/article/son-in-law-flees-after-killing-father-in-law-1786427177</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தளை - லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தளை - லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

குறித்த நபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை வைத்தியசாலையில் சேர்க்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dde6a00-e883-41c2-9698-d3b5d22c9e6e/26-6a7ab72b6c883.webp' /></p><p></p><p>
</p><p>
 

சம்பவத்தில் உயிரிழந்தவர் மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்தவராவார்.

 

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மருமகன் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.</p><p>

 

சந்தேகநபரான மருமகன் அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய லக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:46:32+00:00</updated>
        </entry>
    </feed>
