<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T23:30:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934</id>
            <summary type="text">நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf59866-bd64-4580-94e4-268872c32890/26-6aadc87083c66.webp' /></p><p>பூண்டு பற்களை தினசரி சமையலில் சேர்த்து வந்தாலும், "தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் அவை என்னவென நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddec3f4e-8e27-4804-b84d-ad504d5d550e/26-6aadc86fcf78e.webp' />&nbsp;</p><h4>இதயத்திற்கு நல்லது </h4><p>பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கும். இதனால் இரத்த நாள அடைப்பு நோய் வராமல் தடுக்கும். இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8879fe14-284c-46cf-92c7-d6fdbe08a354/26-6aadc87404b74.webp' /></p><h4>குடலுக்கு நல்லது </h4><p>நமது குடலில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அந்த பாக்டீரியாக்கள் நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர ப்ரீ பயோடிக்குகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ப்ரீபயோடிக்குகள் வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்து வரும் போது, செரிமான மண்டலம் நன்கு வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e0f1b6-31cd-4d08-ac79-4fd99386c72a/26-6aadc8734d601.webp' /></p><h4>மூளைக்கு நல்லது </h4><p>தினமும் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தவறான உணவுப் பழக்கங்களால் உடலில் ப்ரீ ராடிக்கல்கள் என்று சொல்லக்கூடிய கழிகள் சேர்கின்றன. இந்த ப்ரீ ராடிக்கல்கள் நமது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால் புற்றுநோய், டிமென்ஷியா, நரம்பு சிதைவு நோய் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து, டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய் வருவதைத் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4575f40f-c32c-4795-8382-5ddb626a8533/26-6aadc8729b27b.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது </h4><p>தினமும் ஒரு பல் பூண்டை காலையில் சாப்பிடும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், செலினியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற நிறைய தாதுஉப்புக்கள் உள்ளன. இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பூண்டிற்கு ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. எனவே தான் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது, பூண்டு ரசம் வைத்து சாப்பிடும் போது விரைவில் குணமாகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8d320-eae5-4e34-9d26-1c565a8bdd5b/26-6aadc871e0246.webp' /></p><h4>இரத்த சர்க்கரை கட்டுப்படும் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்&nbsp;இதுமட்டுமின்றி, பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும், எடை இழப்புக்கு உதவும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு சாப்பிடும் போது தாய்ப்பால் நிறைய சுரக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81dae70-a640-4060-9439-a5bdc18191d3/26-6aadc871392bb.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T23:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d26a864c-e891-4db4-990c-ccacc0c4adc6/26-6aadbecad5d1b.webp' /></p><p>வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரபல பாடசாலை மாணவி போதைப்பொருளுக்கு அடிமையா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640"></link>
            <id>https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரை உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தாது குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>

குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் பாவிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6c53ce-1d2b-42e9-8321-4bc097d12b49/26-6aadb3c225be4.webp' /></p><p>குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விடுதி ஊழியர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த இளம் பெண் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக குறித்த விவகாரம் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>எனவே, சம்பவம் தொடர்பில் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த பின்னரே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
</p><p>
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பெற்றோர் மற்றும் பொறுப்பான தரப்பினர் உரிய முறையில் தலையிட்டு தேவையான மருத்துவ மற்றும் புனர்வாழ்வு உதவிகளை வழங்குவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கொழுந்துவிட்டு எரிந்த குப்பை மேடு ; புகையால் இரவு முழுவதும் அவதிப்பட்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222"></link>
            <id>https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&amp;nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் 

தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்</p><p> </p><p></p><p>குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அயலூர் மக்கள் இரவு முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p><p>அந்நிலையில் இன்றைய தினம் அப்பகுதிகளில் மாநகர சபை குப்பைகளை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அதனை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da41a680-7800-42b1-bd70-4899d9c7ef43/26-6aadb60902e31.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a52863-0b6a-4890-96d2-8cfd2f7575c5/26-6aadb6084c2c4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/697d2290-0989-4d71-aa92-34ee0a0723e6/26-6aadb609ac23c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T22:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465"></link>
            <id>https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465</id>
            <summary type="text">பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சுமார் 300 டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa896a7-7645-4ffd-b4b3-dc987301c9ca/26-6aadab4315d1a.webp' /></p><p>இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், வலி. வடக்கு பிரதேச சபை பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>

கீரிமலையில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியே உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று கீரிமலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760cbfde-4bcd-4f70-b300-5ddb90ba0ff2/26-6aadab43c1610.webp' /></p><p>இவ்வாறான நிலையில், வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கீரிமலை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பொதி செய்யப்பட்ட நிலையில் பெருமளவிலான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு மாதங்களாக கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி ஆணையாளரும் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T21:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அத்துமீறி நுழைந்து ஒலிபெருக்கி சாதனங்களை பிடுங்கி சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394"></link>
            <id>https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394</id>
            <summary type="text">தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யும் போது பொலிஸாரின் வாகனத்தினுள் சிவில் உடையில் இருந்த பெண்ணொருவர் அவற்றை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அதேவேளை வேலணை பகுதியில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் ஒலிபெருக்கி சாதனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் , உடுவில் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரும் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed53ff3-1f52-4967-b61a-5e84e5fb1cc6/26-6aada32bb1cd8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc8afbd-e25e-4504-9830-6ef1dea11c6d/26-6aada32c6718d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c24bdc-8ee2-4ed7-bffd-f8159f0fe151/26-6aada32d1c13a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b548af1-68db-4c95-abbe-276439cb91b7/26-6aada32dc5b7a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T20:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்களின் 48 மணி நேர போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253"></link>
            <id>https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253</id>
            <summary type="text">ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த தகவலை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e173b8e-71d2-49bd-9442-ee162df847ca/26-6aad9eb6dc910.webp' /></p><p>
</p><p>
குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், கடந்த காலங்களில் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அல்லது சதி நோக்கத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தமது சங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இந்த அடையாள வேலைநிறுத்தத்தின் பிரதான நோக்கம் எனவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், வேலைநிறுத்தம் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893"></link>
            <id>https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்று கூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.</p><p> 

சுதந்திர செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e160bc-ef45-42f3-8e2f-76044f2389e0/26-6aad9d4e6a5e7.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நொடியில் மாறிய ஹனிமூன் கனவு ; புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277"></link>
            <id>https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
</p><p>
திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூனை கொண்டாடுவதற்காக புதுமணத் தம்பதி டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><p></p><p>அங்கு உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த விடுதியில் விருந்தினர்களுக்காக பார்பிக்யூ (Barbecue) செய்து கொடுக்கும் வசதி இருந்துள்ளது.</p><p> இதையடுத்து சவுவிக் தாஸ் மற்றும் நிகிதா சாஹா ஆகியோர் பார்பிக்யூ தயாரிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57fb5682-7210-4039-b2e6-bc269a869924/26-6aad9ae759c00.webp' /></p><p>

அங்கு விடுதி ஊழியர் ஒருவர் அடுப்பில் பார்பிக்யூ தயாரித்துக் கொண்டிருந்த நிலையில், புதுமணத் தம்பதி அந்த அடுப்பிற்கு மிக அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதன்போது, அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்த திரவத்தை ஊழியர் ஒருவர் அடுப்பில் ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பிலிருந்து திடீரென தீப்பிழம்பு எழுந்துள்ளது.
</p><p>
அருகில் அமர்ந்திருந்த நிகிதா சாஹாவின் உடலில் அந்த தீ பற்றியதுடன், சில நொடிகளிலேயே அவரது உடல் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைக் கண்ட அவரது கணவர் சவுவிக் தாஸ், தனது மனைவியின் உடலில் பற்றிய தீயை அணைக்க உடனடியாக முயன்றுள்ளார். </p><p>அதேவேளை, அங்கிருந்த விடுதி ஊழியரும் தனது சட்டையை கழற்றி தீயை அணைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த சம்பவத்தில் நிகிதா சாஹாவுக்கு பாரிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
சம்பவம் தொடர்பாக சவுவிக் தாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின்படி, விடுதியில் தீயை அணைப்பதற்கான உரிய உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>மேலும், தீக்காயமடைந்த தனது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் விடுதி நிர்வாகத்தினர் போதிய உதவி வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a80d55f-efb3-4e77-b7c4-890f66dcf16a/26-6aad9ae80ffa4.webp' /></p><p>
</p><p>
சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்த பின்னரே மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, நிகிதாவை சிலிகுரி நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>சுமார் மூன்று மணி நேரம் நீடித்த அந்த பயணத்தின்போது, தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வலியில் அவர் துடித்துக் கொண்டிருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவரது உடலில் சுமார் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தனவா, தீயை ஏற்படுத்தியதாக கூறப்படும் திரவம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, விபத்துக்குப் பின்னர் அவசர மருத்துவ உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354"></link>
            <id>https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354</id>
            <summary type="text">சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ரஜமஹா விகாரையின் பினர மகா பெரஹரா நாளை (19) ஆம் திகதி இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0509e816-eb29-4e8b-b2f0-6f1a20680602/26-6aad83c3da204.webp' /></p><p>அதற்கமைய, பெரஹரா சிலாபம் - குருநாகல் வீதியில் பயணிக்கவுள்ளதால், அக்காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:33:00+00:00</updated>
        </entry>
    </feed>
