<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T03:42:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் செய்த விபரீத செயல் ; காரணத்தில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-shocking-act-in-jaffna-1785631691"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-shocking-act-in-jaffna-1785631691</id>
            <summary type="text">யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab936c8b-71b8-48a5-997d-f6008eb7d505/26-6a6e93cd0fdb0.webp' /></p><p>

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி ; ராஜயோகத்தை தட்டித்தூக்கும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-in-gemini-brings-major-changes-1785633120"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-in-gemini-brings-major-changes-1785633120</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான்&amp;nbsp; சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான்&nbsp; சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார்.
</p><p style="text-align: justify; ">

அவர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை மிதுனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மையாக அமையப்போகிறது என பார்ப்போம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa397422-d7fb-4612-833e-acb03c5e57c6/26-6a6e99626a0c9.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நன்மை கிடைக்கும் இராசிகள்</h2><p>
</p><p style="text-align: justify;"><b>
மேஷம்:</b> இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்க போகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை இரட்டிப்பாக கூடிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்கின்ற பயணம் மிகச்சிறந்த லாபத்தையும் வெற்றியும் கொடுக்கப்போகிறது. அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
</p><p style="text-align: justify; "><b>
மிதுனம்:</b>
இவர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பு உருவாகும்.இவர்களுடைய திறமை இந்த காலகட்டங்களில் எல்லோரும் கவனிக்கும் படியாக வெளிப்படும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, திடீர் இடம் மாற்றம் போன்ற அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>

கன்னி: </b>இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிக உயர்ந்த உச்சத்தை தொடக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது.உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இவர்கள் எந்த தடையும் இல்லாமல் பெறப்போகிறார்கள். பொருளாதாரத்தில் முன்பை விட மிக சிறந்த பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
</p><p style="text-align: justify; "><b>
தனுசு:</b>இதனால் இவர்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான ஆற்றல் வரப்போகிறது. எதிர்பாராத லாபம் உண்டாகும்.மறைமுக எதிரிகள் தொல்லை முற்றிலும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T01:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்கு சட்டம் ; இவர்களுக்கு வீடுகளில் தஞ்சமளிக்க வேண்டாம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">Update:&amp;nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Update:</b>&nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.</p><p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p></p><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-02T00:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவம் ; விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-appeal-after-mahara-prison-incident-1785630940"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-appeal-after-mahara-prison-incident-1785630940</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது உள்ளதால், எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அங்கு ஒரு விசேட குழுவை அனுப்பி வைக்குமாறு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது உள்ளதால், எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அங்கு ஒரு விசேட குழுவை அனுப்பி வைக்குமாறு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் (HRCSL) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify;">

ஆயுதமேந்திய படையினர் மஹர சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6277d43e-a393-44f6-abb4-686a1feb7a06/26-6a6e90de3c146.webp' /></p><h2 style="text-align: justify;">பாதுகாப்பு</h2><p>
</p><p style="text-align: justify;">
மஹர சிறைச்சாலை பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை முன்பாக பிரதேசவாசிகள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் பாதுகாப்பு தரப்புடன் தர்க்கம்.
</p><p style="text-align: justify; ">
சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான பணிப்பாளர் சந்திக லொகுஹெட்டி ஆகியோரின் அவசரக் கவனத்திற்கும் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், நிலைமையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செயற்பட வேண்டும் என அக்குழு வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T00:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் ; மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின் நாமலின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-reacts-after-mahara-prison-unrest-1785628883"></link>
            <id>https://jvpnews.com/article/namal-reacts-after-mahara-prison-unrest-1785628883</id>
            <summary type="text">&amp;nbsp;மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 


 குறித்த பதிவில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 


 குறித்த பதிவில், மற்றொரு சிறைக் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b015d0b4-44fe-4037-bf46-d7ffb5ecc581/26-6a6e88d541cbc.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்காலிக தீர்வு</h2><p> </p><p style="text-align: justify; ">

குறித்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
</p><p style="text-align: justify; ">
”சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது சிறைக் கலவரம் இது. இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும். </p><p style="text-align: justify;">


நெருக்கடி நிகழும் போதிலும், சிறைத்துறை இன்றும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையர் இல்லாமல் தொடர்கிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
கூடுதல் பாதுகாப்பு படையினரை நிறுத்துவது தற்காலிக தீர்வாக மட்டுமே அமையும் என்றும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் திட்டங்களின் பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
நெரிசல், போதுமான வசதியின்மை, மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசரக் கவனத்தைக் கோருகின்றன.
</p><p style="text-align: justify; ">
சிறைத் தண்டனை ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே பறிக்கிறது, அவரது கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைக் கைவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறை அமைப்பைச் சரிசெய்யத் தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> <script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><div style="text-align: justify;"><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></div>]]></content>
            <updated>2026-08-02T00:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-guava-if-you-have-these-health-problems-1785626966"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-guava-if-you-have-these-health-problems-1785626966</id>
            <summary type="text">கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால்,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. </p><p style="text-align: justify; ">
எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654ca329-63dc-49b7-bbc6-6e77de56e733/26-6a6e81588b9ee.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்</p><p style="text-align: justify; "><b>

 குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் : </b>கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதனை கிரகிக்க முடியாத காரணத்தால், வயிறு உப்பிசம் அதிகரிக்கும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது, ஆனால் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02777ac7-7336-40ae-97cd-ba96b948acac/26-6a6e815942bc7.webp' /></p><p style="text-align: justify; "><b>

உடலில் வீக்கம் உள்ளவர்கள்:</b> கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.</p><p style="text-align: justify; "><b>


சளி இருமல் உள்ளவர்கள்:</b> சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p style="text-align: justify; "><b>
நீரிழிவு நோயாளிகள்: </b>கொய்யா ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழமாகும், இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-08-01T23:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வெளிநாட்டுசுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-tourists-in-tamil-area-1785621476"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-tourists-in-tamil-area-1785621476</id>
            <summary type="text">இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

ரஷ்யாவிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ed3e1d-51c6-4615-b22c-54111e719b8a/26-6a6e6be5b74ea.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">

அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் நீராட சென்ற வேளையில், அதனைச் திருடிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அந்தப் பைகளில் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் மற்றும் ஆவணங்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர் பணப்பைகளை திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதற்கமையச் செயற்பட்ட அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் நாணயங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T22:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியைக் கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-killed-while-crossing-the-road-1785619957"></link>
            <id>https://jvpnews.com/article/woman-killed-while-crossing-the-road-1785619957</id>
            <summary type="text">எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>

காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb8baa5-4549-4dc3-a1a4-a02d902a51ea/26-6a6e65f69465c.webp' /></p><p>

உயிரிழந்தவர் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் (வயது 75) ஆவார்.</p><p></p><p>
</p><p>
இவ்வாகன விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T21:45:45+00:00</updated>
        </entry>
    </feed>
