<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T03:35:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685"></link>
            <id>https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685</id>
            <summary type="text">பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p></p><p>
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93bafc0b-7976-4ad1-97ff-00044d7e4b18/26-6a9384cf030c2.webp' /></p><p>

எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef3ec11-3653-47fa-be49-b15a42e59234/26-6a938386b7458.webp' /></p><p>இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb04b92-8a47-462a-a716-3cb1b56bb323/26-6a93838768a9a.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ba1306-b2bc-47be-8244-5945212ed1c2/26-6a9383881ae59.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ad1011-573d-489f-b7db-8c944f11d669/26-6a938388bf116.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d05c-3d75-40be-8a49-2dc8cbc9a035/26-6a9383896f350.webp' /></p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f816993-2d2b-42a0-ae12-c83d4b37b184/26-6a93838a243db.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T01:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் பெண் வைத்தியர் வழக்கில் புதிய திருப்பம் ; நீதிமன்றில் முக்கிய சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் இடம்பெற்ற மூடிய நீதிமன்ற அமர்வில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்தியர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.</p><p>
</p><p></p><p>2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கில் மொத்தம் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, சந்தேகநபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸாரால் தாம் தாக்கப்பட்டதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் இந்த காணொளியில் காணலாம்......&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/73hmixIp9p0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T00:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும் ; ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365"></link>
            <id>https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365</id>
            <summary type="text">செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இதன் மூலம் 22-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படக்கூடுமா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee2fffb3-1a74-4712-b100-c0c7ef766ec2/26-6a937bbf36e67.webp' /></p><p>

இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தற்போது வெற்றிடங்களாக உள்ள நீதியரசர்களின்பணியிடங்களை நிரப்புவதற்குப் பல நீதியரசர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-over-rising-risk-of-malnutrition-sri-lanka-1788048768"></link>
            <id>https://jvpnews.com/article/warning-over-rising-risk-of-malnutrition-sri-lanka-1788048768</id>
            <summary type="text">எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h3>கடும் உணவுப் பற்றாக்குறை</h3><p>மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் சமல் சஞ்சீவ,இது குறித்து எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53eb4250-e8e6-4b16-b56f-99c47ae3e5a8/26-6a937581bae13.webp' /></p><p>நீண்டகால வறட்சியினால் விவசாய உற்பத்தி குறைவு, தரமான உணவுகள் கிடைக்காமை, விவசாயிகளின் வருமான வீழ்ச்சி மற்றும் குடும்பச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புற குடும்பங்கள் சத்தான உணவைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
</p><p>
5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
</p><p>
5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான 'திரிபோஷ' விநியோகத் திட்டம் நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே உரிய வகையில் செயற்படவில்லை எனக் சுட்டிக்காட்டியுள்ள அவர், வறட்சி நீடித்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

எனவே, கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது" என விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964"></link>
            <id>https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964</id>
            <summary type="text">விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951d3aa1-b30f-418b-9a39-a94e2067e3f7/26-6a9366a61b1b2.webp' /></p><p>இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T23:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி எண்ணும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452"></link>
            <id>https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p>

மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk
</p><p>
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a6c46d-fbb4-48a8-b68f-1eaa589a8481/26-6a9360be360b7.webp' /></p>]]></content>
            <updated>2026-08-29T22:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடல் வெப்பமயமாதல் ; புவியை பேரழிவை நோக்கித் தள்ளும் மனிதத் தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942"></link>
            <id>https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்</p><p>பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b6cb00-5672-40e6-a75a-4762bc53750b/26-6a935ec0ae2a5.webp' /></p><p>

சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும் என்றும், செப்டம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1d5ad36-6137-4655-ab56-d64f8dd1b6c6/26-6a935ebfee3a7.webp' /></p><p>அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பேராசிரியர் எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T22:35:52+00:00</updated>
        </entry>
    </feed>
