<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T02:40:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன..? அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170"></link>
            <id>https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170</id>
            <summary type="text">கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான CCTV காணொளிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மற்றும் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.</p><p>இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

மேலும், இது தொடர்பில் நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்கமும், சம்பவத்தின் பின்னணி தகவல்களும் இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T23:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் அக்டோபர் 9 வரை அது நீடிக்கும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரக நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed509a35-6d46-4819-b33f-4ba90d86cff7/26-6a7a4bea7eb06.webp' /></p><p>அனைத்து ராசிக்காரர்களும் இதன் தாக்கத்தை உணரக்கூடும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சவாலான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ceb9a-c761-4192-bb72-3b9cc5b447c8/26-6a7a4be9cbd1d.webp' /></p><h3>கடகம்</h3><p>
சனி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கடக ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகளால் அவர்கள் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும், அதே சமயம் பணியிடங்களில் ஏற்படும் உரையாடல்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மன அமைதியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.</p><p></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. முன்னேற்பாடும், சரியான திட்டமும் இல்லாமல் எந்த விஷயத்தையும் தொடங்குவதைத் தவிர்க்கவும், முதலீடுகள் மற்றும் தேவையற்ற செலவினங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், தங்கள் துணையுடன் சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><h3>மகரம்</h3><p>மகர ராசிக்குச் சனி பகவான் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும், முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும், குடும்ப உறவுகளில் இணக்கமான சூழலைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். அவர்களின் எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அவர்கள் சில விபத்துக்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி மனிதப் புதைகுழி ; மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.</p><p>
</p><p></p><p>இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3927c4d6-d4e1-4ee3-b840-4a0e7a479a35/26-6a7a3f123f49b.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் 48ஆவது நாளான இன்றைய தினம் 09 புதிய எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> 

 

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 எலும்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
 

இன்றைய அகழ்வுப் பணியின் போது, சான்றுப் பொருட்களாக மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்று மற்றும் கைவளையல் ஒன்று ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இலங்கை ; 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது அந்த ஆறு நாட்களில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 18 சதவீதமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8fb4b3-576a-4532-8a1e-6ac544520467/26-6a7a3c6940ab0.webp' /></p><p>அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

இதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.</p><p>இதேவேளை, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதில் இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக காணப்படுகிறது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 346,057 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
மொத்த வருகை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக காணப்படுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பங்கு சுமார் 9.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749"></link>
            <id>https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749</id>
            <summary type="text">கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.
</p><p>
குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ்–கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6caae7-dfb8-40ed-a4d9-106463178185/26-6a7a387f5c1a7.webp' /></p><p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.</p><p>

இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:45:56+00:00</updated>
        </entry>
    </feed>
