<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T21:24:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933"></link>
            <id>https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933</id>
            <summary type="text">இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>&nbsp;20 ஆண்டுகள் சிறை</h4><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி, அச்சரம்பட்டு பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53df1f0f-3dee-41cb-aa86-fc33e2f1d43a/26-6aa5b9ef47a22.webp' /></p><p>

அப்போது அங்கு சென்ற செல்வம், சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பொலிஸார் செல்வத்துக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
</p><p>
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. </p><p>வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
</p><p>
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை ; ஜனாதிபதி அநுர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685"></link>
            <id>https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685</id>
            <summary type="text">தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fab08fb-7c5b-4fb4-8f98-fec9be305f23/26-6aa5b127258dd.webp' /></p><p>

ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.</p><p>

தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
</p><p>

பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.</p><p>

அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி ; அர்ச்சுனா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340"></link>
            <id>https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு "கருநாக்கு" (சொல் பலிக்கும் வாக்கு) இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67acaa8-ff6d-43a2-b482-dec43c22d348/26-6aa5abe67b542.webp' /></p><p>அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
</p><p>
இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டும் பெயரிட முடியும் என்றால், அது இன்றோ, நாளையோ, என்றைக்கோ அது நமது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியானது மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்துவதற்கான களத்தையே தயார் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661</id>
            <summary type="text">மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>தாவர மற்றும் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d42cdcb-7e51-4900-8e2a-d44d366d3dde/26-6aa5a16f5fc53.webp' /></p><p>
</p><p>
 

வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' பிரிவினரால் மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுக் கடத்தப்படவிருந்த 67 கிலோகிராமுக்கும் அதிகமான திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

 

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயருமா? பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h3>பெற்றோலியக் கூட்டுத்தாபனம்&nbsp;</h3><p>எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65608f5-6ec1-4bb9-ba7d-38410e35b5b2/26-6aa5993b027a2.webp' /></p><p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தப் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.06 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் சுமார் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் எரிபொருள் விலைகள் இந்த மாத இறுதியில் மீண்டும் திருத்தப்பட உள்ளன.
</p><p>
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை மட்டுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>[M1TSWYM
]</p>]]></content>
            <updated>2026-09-12T18:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் நடத்தையில் சந்தேகம் ; கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955"></link>
            <id>https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955</id>
            <summary type="text">இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகள் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.</p><p>
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராதிகா, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனமொன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec36bfb-75a3-4fc5-abd5-f4cee8948e07/26-6aa596dd263a7.webp' /></p><p>அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதுடன், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அருண்குமாருக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தன்று இரவு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாகவும், அப்போது கட்டிலில் தலை மோதியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் ராதிகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>

இதுகுறித்து திருப்பூர் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>

ராதிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
</p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ராதிகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அருண்குமார் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதையடுத்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் ; எல் நினோ பாதிப்பு குறித்து புதிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497"></link>
            <id>https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497</id>
            <summary type="text">கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>முன்னதாக 95 வீதமாக இருந்த இந்த முன்னறிவிப்பு தற்போது 98 வீதமாக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39776b45-7bf4-4620-940d-79e859a9787e/26-6aa5912a8f78b.webp' /></p><p>

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
</p><p>
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cda3dff-25ba-4a41-a9bd-fd9f19d002cb/26-6aa5868242ffa.webp' /></p><p>சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2</p>&mdash; AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) <a href="https://x.com/AndhraBoxOffice/status/2098788805801320925?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T17:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277f041-fd4a-44c5-b406-ec6bf577ab2f/26-6aa5837debe3b.webp' /></p><p>பொலிஸாரின் கட்டளைக்கு அமைய வேனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதன் சாரதி கட்டளையை மீறி வேனை முன்னோக்கிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, குறித்த வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e1018b-4d43-4965-9083-25bd110bbc75/26-6aa57cb84f26a.webp' /></p><p>இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.</p><p>இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆசிரிய மாணவி தற்கொலை விவகாரம் ; உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அர்ச்சுனா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204"></link>
            <id>https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204</id>
            <summary type="text">யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p> </p><p></p><p>மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவரை அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியான வார்த்தை பிரயோகத்தால் உளநீதியாக தாக்கம் அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42a57e7-9d08-46e4-925f-21f901b7eb10/26-6aa58065d40af.webp' /></p><p>குறித்த மாணவி குறித்த விரிவுரையாளர் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
</p><p>
குறித்த மாணவி விரிவுரையாளரால் உளநீதியாக தாக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> 

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உணவு வழங்கலில் பெரிய முறைகேடு இருப்பது உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. </p><p>

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:40:11+00:00</updated>
        </entry>
    </feed>
