<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-30T03:46:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய சம்பவம் ; உணவுக்காக நடந்தப்பட்ட கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-reported-at-temple-in-tamil-area-1785372155"></link>
            <id>https://jvpnews.com/article/incident-reported-at-temple-in-tamil-area-1785372155</id>
            <summary type="text">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்.
</p><p style="text-align: justify; ">
வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba88d83-e4b4-4346-b75f-6e09df5686d3/26-6a6a9dfd49326.webp' /></p><h2 style="text-align: justify;">அன்னதானம்</h2><p style="text-align: justify;"> குறித்த ஆலையத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான புதன்கிழமை பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை வாங்கி சாப்பாடு இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து 7 பேர் கொண்ட ஜயங்கேணி வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கயவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவரை மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன். </p><p style="text-align: justify;">இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T01:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் ராஜயோகங்கள் ; சுப செய்தி காத்திருக்கும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guru-purnima-after-56-years-1785373946"></link>
            <id>https://jvpnews.com/article/guru-purnima-after-56-years-1785373946</id>
            <summary type="text">வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் திகதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் திகதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p style="text-align: justify; ">அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36105bfd-511d-4141-a04c-652e9236bc83/26-6a6aa4fcbd0c3.webp' /></p><h2 style="text-align: justify; ">

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் </h2><p style="text-align: justify; "><b>ரிஷபம் : </b>குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; "><b>
கும்பம்:&nbsp;</b> குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால், பெரிய வெற்றியைக் காணலாம். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

மகரம் :</b> குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து, பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T01:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பிரச்சினைக்காக அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097"></link>
            <id>https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097</id>
            <summary type="text">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த நபர் கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c822096e-4857-46d5-987a-44d213bfb0f7/26-6a6a920b053e0.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சாரம் துண்டிப்பு</h2><p style="text-align: justify; "> 

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify;">

மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் அந்த இடத்திற்கு அழைத்து சென்றதை அடுத்து, அவர் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

அச்சமயத்தில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இம்மாதம் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நபர் கம்பத்தில் ஏறியதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கையளிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மேலும், இந்தச் சந்தேகநபரை நேற்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதற்கமைய நேற்று (28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறும், வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-29T23:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்கள்தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277"></link>
            <id>https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277</id>
            <summary type="text">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.
</p><p style="text-align: justify; ">


தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b536dd2-8ece-41fd-931b-10f8d13d9bf9/26-6a6a8b3e0d291.webp' /></p><p style="text-align: justify; ">
</p><h2 style="text-align: justify; ">


 இதை எவ்வாறு சாப்பிடலாம்</h2><p style="text-align: justify; ">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.

தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; ">மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify; ">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:11:57+00:00</updated>
        </entry>
    </feed>
