<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T08:44:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-worth-10-crore-gift-package-from-thailand-1785573805"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-worth-10-crore-gift-package-from-thailand-1785573805</id>
            <summary type="text">தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff864632-a4d2-4ae4-a6f5-ed40fe4a215e/26-6a6db1ae5c9ab.webp' /></p><p>குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் (Metal containers) மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். </p><p>

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாவிற்கும் (106,080,000) அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சைகள் அடுத்த வாரம்; புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/al-and-grade5-scholarship-examination-date-1785573121"></link>
            <id>https://jvpnews.com/article/al-and-grade5-scholarship-examination-date-1785573121</id>
            <summary type="text">&amp;nbsp; கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93689fed-7423-4580-8080-104771c3d8be/26-6a6dafaa6dbe8.webp' /></p><h2>பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணி</h2><p> </p><p>

அதன்படி பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>
</p><p>
மேலும் அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T08:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுகம்பே விடுதியில் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; விசேட அதிரடிப்படையினர் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stole-from-three-russian-travelers-arugam-bay-1785572190"></link>
            <id>https://jvpnews.com/article/stole-from-three-russian-travelers-arugam-bay-1785572190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். </p><p> 

நேற்றையதினம் (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4612356-965f-4cb8-ad08-9be60eb5f73e/26-6a6dab60076c6.webp' /></p><h2>குளிக்கச் சென்ற தந்தை மற்றும் அவரது இரு மகள்கள்</h2><p>

 தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p>

சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ரயிலில் மோதுண்டு நபரொருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-dies-after-being-hit-train-in-vavuniya-1785571753"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-dies-after-being-hit-train-in-vavuniya-1785571753</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு, காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45920db7-0ab7-43f9-9cf6-cf3c3fbeb7a5/26-6a6da9aab4856.webp' /></p><p>இவ்விபத்தில் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது <a href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047" target="_blank">தந்தை விஜய் குறித்து </a>இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு&nbsp; &nbsp;மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.</p><p>

 ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deda9d0-9b30-4fbc-8497-4a7e686cc876/26-6a6d7a7556061.webp' /></p><h2>வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....</h2><p>
</p><p>
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><p>சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T08:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;ஹேமசிறி வெளிப்படுத்திய தகவல்; சிக்கப்போகும் மைத்ரிபால சிறிசேன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>

தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
நீதிபதி விராஜ் வீரசூரிய இவருடைய வழக்கிலும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0e7258-2bec-4350-9d37-4f2e9c7289c5/26-6a6da8666114d.webp' /></p><h2>புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்</h2><p>
</p><p>
ஆயினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டுடன் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பெர்னாண்டோ, கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது,
</p><p>
 “எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை; ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. 'பாதுகாப்புச் செயலாளர்' என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது 'பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்' பதவியாகும்.

அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். </p><p>செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும்; அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு; அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர்.</p><p></p><p> </p><p>நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். 'நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார்.</p><p>நானும் அதையே செய்தேன்.

எனக்கு எந்தவித எழுத்துமூலமான அறிக்கையும் கிடைக்கவில்லை, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் இரண்டும் மட்டுமே கிடைத்துள்ளன.

புலனாய்வுத் தலைவருக்கு வந்த ஆவணத்தை அவர் எனக்கு வழங்கியபோது, நாளைய கூட்டத்தில் இதனை முன்வைக்குமாறு அவரிடம் கூறினேன். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதி கூட்டம் தொடங்கியது. இறுதியில் சிசிர அந்தக் கடிதத்தை எனக்குக் காட்டினார்.</p><p> அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு விபரங்களைக் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு குழுவை அனுப்பி கிழக்கு மாகாணத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குவதாகக் கூறினார்கள்; ஆனால் செயலாளர் அவரிடம் சென்று அந்த அறிக்கையைக் கேட்பதில்லை, அந்த அறிக்கையைக் கொண்டுவந்து சேர்ப்பது அவருடைய பொறுப்பாகும். அந்த அறிக்கை இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர் 16ஆம் திகதி காத்தான்குடியில் உந்துருளி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அது குறித்து 17ஆம் திகதியே நிலந்த எனக்குத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி 12ஆம் திகதி மட்டக்களப்பு விஜயத்துக்காக எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார், நிலந்த அதற்கு அனுமதி வழங்கினார்.</p><p> அவர் அவ்வாறு பயிற்சி பெற்றுச் செயற்படுகிறார் என்றால், ஒரு குடிமகனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த அநீதிகள் இழைக்கப்பட வேண்டும்?

எனக்கு இறுதியாகத் தகவல்கள் கிடைத்தவை மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை ஆகும். </p><p>அந்த அறிக்கை பற்றி வாராந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனக்கு வந்த வாட்ஸ்அப் (WhatsApp) செய்தியைப் பார்த்தபோது, எதிர்வரும் நாட்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரிப்பதற்காக நான் உடனடியாக நிலந்தவைத் தொடர்புகொண்டேன்.</p><p></p><p>
</p><p>
அப்போது, தகவலைத் தெரிவித்த தரப்பு நம்பகமானதாகவும் தகவலின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நிலந்த என்னிடம் தெரிவித்தார்; அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் எனக்குக் கூற வேண்டும். இந்தச் செயற்பாட்டுக்கு வெறும் 12 மணித்தியாலங்களே இருந்தன. அந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முந்தைய நாளும் தாக்குதல் நடத்தப்பட்ட விருந்தகங்களிலேயே தங்கியிருந்தனர்</p><p>.

காவல்துறையினரைக் கூப்பிடுங்கள், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; என்னால் அவற்றைச் செய்ய முடியாது. இந்தத் தாக்குதலைத் தடுத்துச் செயற்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏப்ரல் 9ஆம் திகதி இருந்தது, ஆனால் நிலந்த அதனைத் தவிர்த்துவிட்டார்.

8ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை; 16ஆம் திகதியில்தான் அவர் நாடு திரும்பினார். </p><p>சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், நிலந்தவுக்கு அறிவுறுத்தி தேசியப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்க முடியும்; அவற்றுள் எதுவுமே செய்யப்படவில்லை.

பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மாஅதிபரோ எவருமே தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய உச்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.</p><p> அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகினேன். நான் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதியிடம் பேசினேன்; 'புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்களா இல்லையா?' என்று கேட்டேன்; அதற்கு 'இந்தத் தகவல்களை நிலந்த உங்களுக்கு அறிவிக்கவில்லையா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.

ஐயா, இது மிகப்பெரிய அநீதியாகும்; ஆனாலும் இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. </p><p>இதனைச் செய்வதற்கு எனக்கு எந்தவிதமான விருப்பமும் இருக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற வேண்டும் என்ற தேவை இருவருக்கு இருந்தது; அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலந்தவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும்தான்.</p><p>

எனக்கு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் என்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யும்" எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ, தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T08:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015"></link>
            <id>https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை &#039;தாய்ப்பால் வாரம்&#039; பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.</p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a7f1c3-11db-4be1-9f1c-6aa26b8bc6a2/26-6a6d9ef8d0671.webp' /></p><p>
</p><p>
தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசாலை கடலில் மூழ்கி இளைஞர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143"></link>
            <id>https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (31) பதிவு செய்யப்பட்ட இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடலில் மூழ்கி காணாமல்போனவர் பேசாலை, காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37dd7c63-4fea-4e11-bcf9-b06d4652dbcf/26-6a6d9b90ad063.webp' /></p><p>
</p><p>
காணாமல்போன இளைஞர் மற்றொரு நபருடன் படகில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவிற்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962"></link>
            <id>https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962</id>
            <summary type="text">2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b332e60e-def5-4ed5-9fd6-2390a1979b10/26-6a6d9adb7c900.webp' /></p><p>அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே வென்ற தங்கப் பதக்கம், நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், "ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனவும் ஜனாதிபதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கைப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306"></link>
            <id>https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306</id>
            <summary type="text">&amp;nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று (01) காலை 7.30 மணிக்கு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை, நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47d21c6f-60bf-42d2-95f7-232845c4553b/26-6a6d984bc7f95.webp' /></p><p>
</p><p>


இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தொடர்ந்தும் கனமழை பெய்யும் சாத்தியம் நிலவுவதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் எனவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/intensifies-for-missing-fishermen-negombo-waters-1785566301"></link>
            <id>https://jvpnews.com/article/intensifies-for-missing-fishermen-negombo-waters-1785566301</id>
            <summary type="text">நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.</p><p></p><p>



இந்த நடவடிக்கைக்காக விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>


நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்குச் சென்ற டிங்கி படகொன்று விபத்துக்குள்ளானமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea568ca0-cb9a-46cb-8bb5-90b010010549/26-6a6d945e684af.webp' /></p><p>



இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>



விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில், மேலும் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடும் பணிக்காக கடற்படையின் டோரா படகு மற்றும் விசேட மூழ்குநர் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வான் மற்றும் கடல் மார்க்கமாக தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402"></link>
            <id>https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e037cd4-29aa-42b0-a231-cee4ee9611bc/26-6a6d90dc12ba7.webp' /></p><p>தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பெருக்கு நாளில் செல்வம் பல மடங்கு பெருக செய்ய வேண்டிய வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698</id>
            <summary type="text">ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை வழிபடும் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.</p><p></p><p>

ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரை, குளக்கரை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. </p><p>நீர்நிலைகளை காவிரி அன்னையாகக் கருதி மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்களப் பொருட்களை படைத்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் மங்களங்கள் பெருகும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449058b5-87f7-4385-87fb-64ca1b53e968/26-6a6d8a349d6b1.webp' /></p><p>

இந்த நாளில் புனித நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கான தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>முன்னோர் வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மேலும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த ஆண்டில் தாலிக்கயிறு மாற்றுவதற்கு காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையிலான நேரம் சிறந்த நேரமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் போன்ற மங்களப் பொருட்களை வழங்குவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>அன்னதானம் வழங்குதல், கோவில்கள் மற்றும் கோசாலைகளுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்குதல் போன்றவை புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.</p><p>

இந்த நாளில் மஞ்சளில் விநாயகர் உருவம் செய்து வழிபடுவதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மஞ்சளுடன் தண்ணீர் அல்லது பசும்பால் சேர்த்து பிடித்து, வெற்றிலை அல்லது வாழை இலையில் வைத்து விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82510d3e-d6d5-4627-8a54-9546a24bcb6f/26-6a6d8a3558681.webp' /></p><p>மேலும், பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து உணவளிப்பது, வீட்டில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி நிரப்பி வைப்பது ஆகியவையும் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய வழிபாட்டு முறைகளாகக் கருதப்படுகின்றன.
</p><p>
செல்வ வளம் பெருக வேண்டும் என விரும்புவோர், தங்க நகை வாங்க முடியாத நிலையில் கல் உப்பு, மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை வாங்கி வைக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. </p><p>குபேர வழிபாடு, நவதானியங்கள் வைத்து வழிபடுதல் போன்றவையும் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
லக்ஷ்மி குபேராய நமஹ"

என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து குபேர பூஜை செய்வது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையும் நிலவுகிறது.
</p><p>
இவ்வாறு, ஆடிப்பெருக்கு திருநாள் இயற்கைக்கும் நீர்நிலைகளுக்கும் நன்றி செலுத்தி, குடும்ப வளம், நன்மை மற்றும் மங்கள வாழ்வை வேண்டி கொண்டாடப்படும் முக்கியமான ஆன்மிக நாளாக விளங்குகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432"></link>
            <id>https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432</id>
            <summary type="text">அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே பரவிய தீயினால் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1fb4a00-3122-4490-9b49-11504383d3f4/26-6a6d8d11e1344.webp' /></p><p>சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மழை ஆரம்பித்த போது வீட்டிலிருந்த இரு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெரும் தொகை போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243"></link>
            <id>https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bc045b8-7d9b-40a0-83d7-ce2d06faf4af/26-6a6d8c54b1abc.webp' /></p><p></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698"></link>
            <id>https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698</id>
            <summary type="text">மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>நேற்று வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பதுளுவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2732711c-65b1-4030-a2fe-651da5fcd75a/26-6a6d864b8c2c4.webp' /></p><p>உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து இங்கினியாகல குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155"></link>
            <id>https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155</id>
            <summary type="text">இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d1b1782-b0e5-4e4a-860c-d5fbc807f223/26-6a6d842ce59fd.webp' /></p><p> இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.</p><p> 

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். </p><p>அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. </p><p>

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த பெண்ணின் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-s-body-found-suspiciously-on-land-recovered-1785561600"></link>
            <id>https://jvpnews.com/article/woman-s-body-found-suspiciously-on-land-recovered-1785561600</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைபுஹுல்ஹேன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a764ab8-fad7-460b-9860-ec99e78e9ee1/26-6a6d8201bb91b.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; புலம்பும் அலி சப்ரி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238"></link>
            <id>https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அலி சப்ரி மபதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ee99cc9-6152-4d25-8737-f8b865914dd3/26-6a6d80978ecf9.webp' /></p><h2>&nbsp;பூஜித் , ஜயசுந்தர குற்றவாளி என&nbsp; தீர்ப்பு</h2><p>

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிறப்பு மூவர் அடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது உண்மை, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், இந்தத் தண்டனைத் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவேற்றம் செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T05:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421"></link>
            <id>https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421</id>
            <summary type="text">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சார்பற்ற முறையில் பல பாரிய சமிக்ஞைக் கோளாறுகள் காணப்படுகின்ற பின்னணியில், தலவாக்கலை மற்றும் தலைமன்னார் பாதையில் பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் முதல் இந்தப் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய சமிக்ஞை முறைமைகள் சீரமைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11cebd4-2cb3-4723-b232-1ec2fcce2892/26-6a6d75969283c.webp' /></p><p>தற்போது மதவாச்சி முதல் தலைமன்னார் துறைமுகம் வரையிலான ஒற்றை ரயில் பாதையில் 'வழிகாட்டி முறைமையின்' கீழ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>பொதுவாக இவ்வாறான வழிகாட்டி முறைமையானது ஏதேனும் சமிக்ஞைக் கோளாறுகள் ஏற்படும் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>ஆனால் அதிகாரிகள் அதனை ஒரு நிரந்தர இயக்க முறைமையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>


தலைமன்னார் பாதைக்கு மேலதிகமாக, மஹவ - அனுராதபுரம் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்றும், அங்கேயும் தற்காலிக சமிக்ஞை முறைமைகளே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச் செலவழித்து புனரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதைகள் தற்போது சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ரயில் நிலையங்களில் நிலவும் இச்சமிக்ஞைக் கோளாறுகள் மற்றும் பணி தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் துரித தீர்வை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் புதிய திருப்பம் ; லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870</id>
            <summary type="text">நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>விபத்தின் போது குறித்த இளைஞர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாகவும், சுமார் மணிக்கு 160 முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியதாகவும் லொறி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லொறியைத் திருப்பும் நடவடிக்கையின் போது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை எனவும், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, பாதை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576a189e-e1da-4519-b7c0-998b39bbe87c/26-6a6d737046fb3.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளில் இடம்பெற்ற விடயங்கள் தெளிவாகக் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, விபத்துக்குப் பின்னர் கன்டெய்னர் லொறிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். உள்ளூர்வாசிகள் வாகனத்துக்கு ஆதரவாக இருந்ததாகவும், வெளியிடங்களில் இருந்து வந்த சிலரே வாகனத்தை சேதப்படுத்தி பின்னர் தீ வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருந்த போதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை 29 ஆம் திகதி நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.</p><p> பின்னர் குறித்த லொறி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி, அரசாங்கம் குறித்து அவதூறு பதிவுகள் ; காவல்துறை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281</id>
            <summary type="text">ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df34f71-df41-402a-a87e-9a7265c2a988/26-6a6d6d3a9166a.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
</p><p>
சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.</p><p>

இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்–பேருவளை கடற்பகுதிக்கு எச்சரிக்கை ; மீனவர்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. </p><p>

இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவால் அனைத்து மீனவர் சமூகத்திற்கும் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf398a5c-0303-4611-a596-3c6cdb07d32a/26-6a6d6ab5775ba.webp' /></p><p>அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பாக இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை மிக உயர்வாக அதிகரிக்கக்கூடும் என்றும், அத்துடன் கடல் அலைகள் கொந்தளிப்பாக மாறுவது சிறிய படகுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். </p><p>

தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். </p><p>

இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் எனத் தாம் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 

நிலவும் வானிலை தொடர்பில் மீன்பிடி மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார். </p><p>

இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d18a0fb-cadf-4328-95a6-0fde44beeff4/26-6a6d6ab6275e5.webp' /></p><p>காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p> 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள். </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. </p><p>மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p> 

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113</id>
            <summary type="text">இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca9d0cc-7e0b-4b02-98c2-b7276913aa22/26-6a6d68ab0c81a.webp' /></p><p>மேலும், மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 48 மணி நேரம் அவதானம் ; களனி கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde756cc-ab6d-4885-b61d-07ee1ac6ae5a/26-6a6d652d348c9.webp' /></p><p> 

அதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:18:03+00:00</updated>
        </entry>
    </feed>
