<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-13T04:56:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512"></link>
            <id>https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்துள்ளார்.</p><p>

சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48245d22-059d-4bb6-ad58-e69d14ab8de9/26-6a7d4ca238506.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130"></link>
            <id>https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு
ள்ளது.
</p><p>
ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb2a695-5e38-4d5f-9ea2-9d58241afec2/26-6a7d4b23a383b.webp' />]</p><p> </p><h2>18 வயதுடைய இலங்கை இளைஞர்&nbsp;&nbsp;கைது</h2><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்திகள்&nbsp; மேலும் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-13T04:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளக்காதலனுக்காக கணவரை சிறைக்கு அனுப்ப போட்ட திட்டம் ; மனைவியின் பயங்கர சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277"></link>
            <id>https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277</id>
            <summary type="text"> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&amp;nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த இளைஞர் கோழிப்பண்ணை நடத்தி வருவதுடன், அதே பகுதியில் இறைச்சிக் கடையொன்றையும் நடத்தி வருகிறார். </p><p>இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது முகவரிக்கு கூரியர் பார்சல் ஒன்று வந்துள்ளது. </p><p>அதனைத் திறந்து பார்த்தபோது, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கந்தர்பால் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்சலை கைப்பற்றியதுடன், கோழிப்பண்ணை உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
</p><p>
விசாரணையின்போது, தனக்கு பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது குறித்து எதுவும் தெரியாது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குறைந்த விலையில் கோழித் தீவனம் வழங்குவதாகவும், அதற்கான மாதிரிகளை அனுப்புவதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனை நம்பியே பார்சலைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தனது திருமணத்திற்கு முன்னரும் அதே தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், திருமணத்தை நிறுத்துமாறு தன்னை மிரட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, பொலிஸார் அவரது மனைவியின் தொலைபேசி தொடர்பு விபரங்களை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்போது, திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கும் ஸ்ரீநகரின் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்ற அரசு ஊழியருக்கும் தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பெற்றோரின் வற்புறுத்தலால் குறித்த பெண் கோழிப்பண்ணை உரிமையாளரை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பின்னரும் தாரிக் அகமதுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கணவரை போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான வழக்கில் சிக்கவைத்து நீண்ட காலம் சிறையில் அடைக்கச் செய்வதற்கு, குறித்த பெண்ணும் அவரது காதலனும் திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h3>போதைப்பொருட்கள்</h3><p>

இதற்காக தாரிக் அகமது, கான்பூரில் உள்ள தனது நண்பர் அரீப் என்பவரின் உதவியுடன் போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை கோழித் தீவனம் எனக் கூறி பார்சல் மூலம் கணவரின் முகவரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1e62f1-4825-40cc-9b2f-e780f7d1eb63/26-6a7cf5c731ef3.webp' /></p><p>பின்னர், பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி, கணவரை கையும் களவுமாக சிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த வழக்கில் கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரீப் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T01:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/malaviya-raja-yogam-sukra-peyarchi-panam-perum-ras-1786575917"></link>
            <id>https://jvpnews.com/article/malaviya-raja-yogam-sukra-peyarchi-panam-perum-ras-1786575917</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் நுழைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316864fa-20f9-4b94-bceb-d852f0f45257/26-6a7cfc2ee9dd5.webp' /></p><p>இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த ராசிக்கே சுக்கிரன் செல்வதால், மிகவும் மங்களகரமான மற்றும் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ac9f24-8bdf-4530-9036-96be009d068d/26-6a7cfca5443f9.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகத்தை விரிவாக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் சுக்கிரனின் அருளால் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69ea502-2a0d-44b8-9e5a-5f8e2928cf88/26-6a7cfc2f9c5e2.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c03335-8b9c-4ba1-a1b4-1b1645915e8d/26-6a7cfc30517f0.webp' /></p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபமும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c9cd47-7784-463f-b1a7-e5ad3972106a/26-6a7cfc3106919.webp' /></p><h4>கடகம்
</h4><p>கடக ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னும், பொருளும் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>[MDWE
]</p>]]></content>
            <updated>2026-08-13T00:08:17+00:00</updated>
        </entry>
    </feed>
