<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T18:38:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838</id>
            <summary type="text">கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னெடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூன் 19ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 'சோமிரச' என்ற மீன்பிடிப் படகில் பயணித்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோரே பங்களாதேஷ் கடற்பரப்பில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த மீனவர் ஒருவர் மற்றொரு படகின் உதவியுடன் கரையை அடைந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdfa297-5ce4-4e71-8580-1bc84e7808d0/26-6a664f2fd5076.webp' /></p><p>எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
படகில் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
</p><p>
எனினும், கடல் நீரோட்டத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு படகு தொலைதூரப் பகுதிகளுக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பை அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், அந்நாட்டு மீனவர்கள் குழுவொன்றினால் தந்தையும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் முதற்கட்டமாக ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதுடன், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இருவரையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T18:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T17:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலங்குகளைப் பாதுகாக்க இலங்கையில் புதிய சட்டப் புரட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-legal-revolution-in-sri-lanka-protect-animals-1785083077"></link>
            <id>https://jvpnews.com/article/new-legal-revolution-in-sri-lanka-protect-animals-1785083077</id>
            <summary type="text">விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><p>

2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், விலங்குகள் மீது கருணை, தயவு மற்றும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதுடன், அவற்றின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><h4>

உணவு, நீர் மற்றும் இருப்பிடத்தை மறுப்பதும் குற்றமாகும்
</h4><p>
விலங்கு நலன் என்பது விலங்குகளை உடல்ரீதியாகத் தாக்காமல் இருப்பதுடன் மட்டுப்படுவதில்லை என்பதை இந்தச் சட்டமூலம் வலியுறுத்துகிறது. விலங்குகளுக்குத் தேவையான உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் பொருத்தமான இருப்பிடத்தை வழங்குவது உரிமையாளர்களின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcfd4e7-4406-4e7d-b3b6-096d4a105345/26-6a6634c74b20b.webp' /></p><p>இதன்படி, விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காமல் இருப்பது, அவற்றுக்குத் தகுந்த இருப்பிடத்தை வழங்கத் தவறுவது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது, வேலை செய்யத் தகுதியற்ற விலங்குகளைப் பயன்படுத்துவது அல்லது வேறு எந்தச் செயல் அல்லது அலட்சியத்தின் மூலமும் தேவையற்ற வலி, துன்பம் அல்லது காயத்தை ஏற்படுத்துவது குற்றமாகப் பிரகடனப்படுத்தப்பட உள்ளது.</p><p>

இதன் மூலம் வேண்டுமென்றே செய்யப்படும் கொடுமைகள் மட்டுமன்றி, அடிப்படைப் பராமரிப்பை மறுப்பதும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக மாறுகிறது.</p><p>புதிய சட்டமூலத்தின் விதிகளை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் ஒருவர் ரூபா 250,000-ஐ மிகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p>

அதேவேளை, விலங்கொன்றை கொடூரமான முறையில் கொன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபா 500,000-க்கு குறையாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>செல்லப்பிராணிகளை வளர்த்துவிட்டு பின்னர் அவற்றைக் கைவிடுவது தொடர்பிலும் புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
</p><p>
நோயுற்ற அல்லது ஊனமுற்ற விலங்குகளைப் பொது இடங்களில் கைவிடுதல், சிகிச்சை வழங்காமல் புறக்கணித்தல் மற்றும் அவற்றின் நலனைப் பாதுகாக்கத் தவறுதல் போன்ற செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
மேலும், சட்டவிரோதமான கருத்தடைச் சிகிச்சைகள் மேற்கொள்வது மற்றும் தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படவுள்ளன.</p><p>விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் சண்டைகள், விலங்குகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வேட்டை விளையாட்டுகள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான சண்டைகளை நடத்துதல் ஆகியவற்றுக்கும் முழுமையான தடை விதிக்க சட்டமூலம் முன்மொழிகிறது.
</p><p>
அத்துடன், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நிர்வகித்தல், அதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் அல்லது விளம்பரப்படுத்துதல் ஆகியனவும் குற்றமாகக் கருதப்படும்.</p><p>விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும்போது அவற்றுக்கு தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.</p><p>

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூபா 300,000-க்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.</p><p>செல்லப்பிராணி விற்பனை நிலையங்கள் மற்றும் செல்லப்பிராணி இனப்பெருக்க நிலையங்களுக்கு கட்டாய அனுமதிப்பத்திர முறைமையை அறிமுகப்படுத்தவும் சட்டமூலம் முன்மொழிகிறது.

இதன் மூலம் விலங்கு வர்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான நடவடிக்கைகளை சட்டரீதியாக ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1bdc29-2ef7-4291-8569-0f79a7e43f37/26-6a6634c8025ca.webp' /></p><p>விலங்கு நலன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, 2025 டிசம்பர் 29ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p>

அந்தக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு 2026 மே 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டவரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
அதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதுடன், அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சட்டம் மட்டுமன்றி சமூகப் பொறுப்பும் அவசியம்

இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல், அவற்றைப் புறக்கணித்தல் மற்றும் விலங்குகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான மற்றும் வலுவான சட்டக் கட்டமைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், விலங்குகளின் நலனை சட்டம் மட்டுமே உறுதிப்படுத்த முடியாது. </p><p>விலங்குகளைப் பொறுப்புடன் பராமரித்தல், அவற்றுக்குத் தேவையான உணவு, நீர், இருப்பிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பை வழங்குதல், கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகியவை சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
</p><p>
விலங்குகளைத் துன்புறுத்திய பின்னர் தண்டனை வழங்குவது மட்டுமன்றி, விலங்குகள் மீது கருணை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் சமூகத்தை உருவாக்குவதே இந்தப் புதிய விலங்கு நலச் சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சினிமாவுக்கு உலகப் பெருமை ; சர்வதேச விருதுகளை வென்ற நடிகர்களுக்கு உற்சாக வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-cinema-is-a-global-pride-1785082067"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-cinema-is-a-global-pride-1785082067</id>
            <summary type="text">மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.</p><p> </p><p></p><p>9 ஆவது கோல்டன் குளோப் விருது விழா - 2026 (9th Golden Globe Award - 2026) என நடைபெற்ற மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில், "ரிவர்ஸ்டன்" (Riverston) திரைப்படத்தின் நடிப்புக்காக மகேந்திர பெரேரா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334d56ac-efdd-494e-abf9-0b3f87f5460f/26-6a6630d4c7ce6.webp' /></p><p> 

அதே திரைப்படத்தின் நடிப்புக்காக பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.</p><p> 

இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 4.01 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான UL 315 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். </p><p>

இவர்களை வரவேற்பதற்காக "ரிவர்ஸ்டன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிமந்தி போரகெ உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள் பலர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.</p><p> 

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற திரைப்படப் படைப்புகள் மட்டுமே இந்த விருது விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள பேருந்துகளுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-announced-regarding-buses-1785073112"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-announced-regarding-buses-1785073112</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c241416d-57d1-42bf-a655-1b96ae03a2db/26-6a660dd9e2d57.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய தரப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகளே பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன. </p><p style="text-align: justify; ">இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே புதிய தரப் பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இதற்காகத் தகுதியான தரப் பரிசோதகர்களைப் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


முதற்கட்டமாக, குறித்த பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டெம்பர் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். </p><p style="text-align: justify; ">இந்த நடைமுறை முதலில் மூன்று மாத காலத்திற்குப் பயணிகள் பேருந்துகளுக்கு மட்டும் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும். </p><p style="text-align: justify; ">அதன் பின்னர், நாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்தத் தரப் பரிசோதனை முறையைக் கட்டாயமாக்கத் தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-26T14:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663"></link>
            <id>https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663</id>
            <summary type="text">தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.</p><p> 

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு இன்று (26) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7389b93-5e2f-438a-bf51-2704083bba92/26-6a660c1907f30.webp' /></p><h2>&nbsp;காவடி நடனம்&nbsp;&nbsp;</h2><p> </p><p>

தேவேந்திர முனை தேவாலயத்தின் பெரஹர ஊர்வலம் இநாட்களில் நடைபெற்று வரும் நிலையில், காவடி நடன அங்கம் அடங்கிய பெரஹர எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது. </p><p>

குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த தினத்தில் நடைபெறவிருந்த காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.</p><p> 

அந்த எழுத்துப்பூர்வ அறிவித்தலுக்கு அமைய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன இன்று அது தொடர்பில் குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450</id>
            <summary type="text">&amp;nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&amp;nbsp; மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&nbsp; மருத்துவமனைக்கு சென்றார்.
</p><p>
அங்கு&nbsp; அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c276a61-cd6c-41e8-b227-54e6bc53be02/26-6a66075c93e8b.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
</p><p>
இதனால் சந்தேகம் அடைந்த வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் பொலிசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><p>அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்து இருவரும் இளம் பெண்ணின் வற்புறுதலின் பேரில் தகாத உறவிலிருந்துள்ளனர்.</p><p>

இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். 

அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது பொலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; அம்பலமான திடுக்கிடும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959</id>
            <summary type="text">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5fbb4a-24bf-4d7e-99ee-c800c0072e09/26-6a660958bd2f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார்.

 

நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p style="text-align: justify; ">

 

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

 

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

 

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639</id>
            <summary type="text">ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அந்தத் தீ விபத்து சம்பவங்களில் மொத்த மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8316148-8ddb-4314-884c-9379fe25fcee/26-6a660431060a9.webp' />&nbsp;</p><h2>&nbsp;தீ விபத்து சம்பவங்கள்&nbsp;</h2><p> </p><p>

கடந்த ஆண்டில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. </p><p>

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதுடன், அந்த அழைப்புகளில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன. </p><p>

இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகப் பல்வேறு பணி இடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருத்தல், அவசரப் பதிலளிப்பு நடவடிக்கைகளுடன் இணையாதிருத்தல், வீடுகள் மற்றும் பணி இடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடுகள் மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:57:28+00:00</updated>
        </entry>
    </feed>
