<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T23:25:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-exam-tomorrow-1786139670"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-exam-tomorrow-1786139670</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது

இதில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4312f763-aa01-416f-8c9e-7a42c786edfb/26-6a765418cddd5.webp' /></p><p>

இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
</p><p>
இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T21:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/publication-of-the-22nd-amendment-bill-gazette-1786129448"></link>
            <id>https://jvpnews.com/article/publication-of-the-22nd-amendment-bill-gazette-1786129448</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழியும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் இன்று (07) அதிவிசேட வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0dda35-1a03-41ec-8400-93af3d3215bd/26-6a762c2a7b2c1.webp' /></p><p>மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போது அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது ஓய்வுபெற வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை தற்போதைய 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சட்டமூலம் தொடர்பான அடுத்தகட்ட அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின் பின்னரே இம்மாற்றங்கள் அமுலுக்கு வரும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786128913"></link>
            <id>https://jvpnews.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786128913</id>
            <summary type="text">இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த சந்திப்பின்போது, சமூக சேவையாளர் கம்பம் ஜெயராஜுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3310728e-7aeb-44c7-87f6-b0046cb181c2/26-6a762a136c6e5.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அண்மையில் இலங்கையை பாதித்த இயற்கை அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்களித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் பாராட்டியுள்ளார்.
</p><p>
இதன்போது செந்தில் தொண்டமான் பல்வேறு கோரிக்கைகளையும் இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்.
</p><p>
அவற்றில், பெருந்தோட்ட மக்களுக்காக OCI (Overseas Citizen of India) அட்டையை கட்டணச் சலுகையுடன் அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்புறுதி திட்டத்தின் பயன்களை இலங்கையில் லங்கா எல்.ஐ.சி. ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் அடங்கும்.</p><p>

அத்துடன், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மர்ம மரணம்; புதருக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-bushes-1786126246"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-bushes-1786126246</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து இன்று (7) மதியம் ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து இன்று (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம உத்தியோகத்தர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
</p><p>
 

தகவலறிந்த பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec658a90-04d7-4a17-9cbe-45f1f56ae953/26-6a761fa849e91.webp' /></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடித் தொழில் செய்து வந்தவர் என்பதும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அவரது வீடு அமைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்புத் தடயவியல் பொலிஸாருடன் இணைந்து பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

 

உயிரிழந்த நபரின் தொலைபேசித் தொடர்பு நேற்று (6) காலை 7.30 மணிக்கு மேல் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

சடலத்தைக் கைப்பற்றியுள்ள பேசாலை பொலிஸார், இம்மரணத்திற்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ; ஆயுதங்கள், பணம் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-drug-investigation-1786125175"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-drug-investigation-1786125175</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1715e97a-8841-4004-a6ef-adc1c176aaf9/26-6a761b7940811.webp' /></p><p>அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இந்த வீடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
 

குறித்த வீட்டின் நுழைவாயிலில் "சுபுன் சர்பயா நுழைவது தடை" என எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

அதற்கமைய, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51, 36 ஆகிய வயதுடைய இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p>

 

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராயக் கூட்டுப் பொறிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/joint-mechanism-to-examine-the-problems-prisoners-1786123812"></link>
            <id>https://jvpnews.com/article/joint-mechanism-to-examine-the-problems-prisoners-1786123812</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பரவலாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ab2bb7-9701-42bf-a8f2-4894e096cfef/26-6a761625d3655.webp' /></p><p>அத்துடன், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
 

அதற்கமைய, 33 சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறை ஒன்று எதிர்வரும் வாரத்தில் உருவாக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:30:23+00:00</updated>
        </entry>
    </feed>
