<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T11:36:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132"></link>
            <id>https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க - கொழும்பு வீதியில் அமைந்துள்ள&nbsp; உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d357a937-5b8d-4648-992c-734f45b838bc/26-6aaa75a675c94.webp' /></p><h2>அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு</h2><p>
</p><p>
 உணவகத்தின் மேல் தளத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகச் சீதுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் அந்த உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போயகனே, இசுருபெதெச, 3வது லேனைச் சேர்ந்த 48 வயதுடைய வீரசிங்க முதியன்சேலாகே பிரதீப் பிரியசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நேற்று இரவு (15) வேலையை முடித்த பிறகு அவர் உணவகத்தின் மேல் மாடியில் தனது அறையில் இருந்ததாகவும், உணவகத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு ஊழியர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

 இறந்தவருக்கும் அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஒன்று ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

எனினும், இந்த மரணம் நிகழ்ந்த சரியான விதமும் அதற்கான காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-by-unidentified-persons-dies-1789557359"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-by-unidentified-persons-dies-1789557359</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4476c107-cd98-48ac-8cfb-e70dfec42548/26-6aaa7a7197857.webp' /></p><p> </p><p>

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:12:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16) நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba07ac88-fc93-4f3e-8376-00a1f3a44d18/26-6aaa5060a6c10.webp' /></p><p>
</p><p>
 

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.</p><p></p><h2>மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்</h2><p>

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.</p><p></p><p>

 

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் கைவிடப்பட்ட சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119"></link>
            <id>https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119</id>
            <summary type="text">கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சருமத்தைப் பொலிவாக்கும் முகப்பூச்சுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் கொண்டுவரப்பட்ட 6 பயணப் பைகளிலிருந்தே அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae08a21a-d4ff-44cb-99e3-6254552cff00/26-6aaa6dc99b8d5.webp' /></p><h2>மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா</h2><p>
</p><p>
6 பயணப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 111,400 சிகரெட்டுகளைக் கொண்ட 557 சிகரெட் கார்ட்டூன்களும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 125 முகப்பூச்சுப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் முறையான சுங்க விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த சிகரெட்டுகள் மற்றும் முகப்பூச்சுத் தொகையை அரசுடமையாக்கியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவற்றை அழிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
</p><p>
 இன்னிலையில் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவந்து கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ; மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991</id>
            <summary type="text">

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. </p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba539dbc-b101-48ea-99fe-ddea1c80d261/26-6aaa5da8e1dc6.webp' /></p><p> </p><p>

இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>&nbsp; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் வானூர்தி கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614" target="_blank">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்</a>ஷ, சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>

ஏற்கனவே கையூட்டல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் குலுங்கிய விமானம் ; மேற்கூரை பேனல்கள் உடைந்ததால் அலறிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554"></link>
            <id>https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கும் சக்கரப் பகுதி மற்றும் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb3a1c2-69ca-4254-a0b9-1375d50e36c8/26-6aaa67abf25a8.webp' /></p><h2>&nbsp;என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு</h2><p> </p><p>

இதனால் விமானம் மிகக் கடுமையாக அதிரத் தொடங்கியதில், பயணிகளின் பைகள் வைக்கும் அறைகள் திறந்து உடைமைகள் சிதறி விழுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறிய காணொளி சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே அவசரத் தரையிறக்கம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதேவேளை சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் புதிய விமானங்களையோ உதிரிப் பாகங்களையோ வாங்க முடியாததால், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கிக் கிடப்பதோடு, சுமார் 32 ஆண்டுகள் பழமையான விமானங்களே அங்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு இழப்பீடு; துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/compensation-for-rumesh-tharanga-s-javelins-1789551799"></link>
            <id>https://jvpnews.com/article/compensation-for-rumesh-tharanga-s-javelins-1789551799</id>
            <summary type="text">&amp;nbsp; விமானத்தில் எடுத்து வரப்பட்டபோது உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விமானத்தில் எடுத்து வரப்பட்டபோது உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பில் நிறுவனத்திற்குள் முறையான உள்நாட்டு விசாரணையை நடத்தி, விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/104de7a7-5fbe-4ab1-b2ee-f89d1891e3b3/26-6aaa64b9116ce.webp' /></p><p>



அத்துடன், பாதிக்கப்பட்ட வீரருக்கு விரைவாக உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.</p><p></p><p>



சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்திய விளையாட்டு வீரரின் உபகரணங்கள் சேதமடைந்த விவகாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நேரடியாக தலையிட்டு கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/summons-issued-to-shiranthi-rajapaksa-at-airport-1789550351"></link>
            <id>https://jvpnews.com/article/summons-issued-to-shiranthi-rajapaksa-at-airport-1789550351</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை, செப்டம்பர் 24 அன்று பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை, செப்டம்பர் 24 அன்று பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


அவர் இன்று காலை (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்ட போது,விமான நிலையத்தில் வைத்து அவருக்கு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109b3565-c095-4fe2-a863-aad18eb25b84/26-6aaa5f10c128d.webp' /></p><p>
</p><p>


பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, சிறிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
</p><p>


அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம், இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே செப்டம்பர் 24 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார் .</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>

ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ff3201-30f0-4bb3-80d2-527b725430ff/26-6aaa205edf994.webp' /></p><p>
</p><p>

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lightning-warning-for-several-regions-srilanka-1789546107"></link>
            <id>https://jvpnews.com/article/lightning-warning-for-several-regions-srilanka-1789546107</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>


இன்று (16) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2b1e26-5bcd-48ea-8633-c1fe048e3440/26-6aaa4e7d10f8c.webp' /></p><p>



இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p>


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T08:05:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவஞானம், சுமந்திரன் உட்பட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ariyanethiran-files-case-against-sumanthiran-1789544427"></link>
            <id>https://jvpnews.com/article/ariyanethiran-files-case-against-sumanthiran-1789544427</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (16) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>கடந்த ஆண்டு அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழ் அரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74fc269-3647-49a4-ab2c-4a8fcb31e915/26-6aaa47ed35b86.webp' /></p><p>

இந்த வழக்கினை மாவட்ட நீதவான் இன்று எடுத்துக்கொண்ட போது எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை நீதவான் திகதியிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி மோசடி ; தமிழக அரசின் கிடுக்கிப்பிடியில் அன்பில் மகேஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936717ae-67a4-46ed-93b0-5deb7d05a02b/26-6aaa44dfac6ca.webp' /></p><h2>&nbsp; &nbsp;100 கோடி மோசடி</h2><p>
</p><p>
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
மேலும், சென்னை, திருச்சியில் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும் அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9000 கடல் அட்டைகளுடன் நாங்கு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


நேற்றிரவு(15) இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது, 02 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf566e05-5617-4fe2-a787-990f5336f5bb/26-6aaa4111327da.webp' /></p><p>
</p><p>
 வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குச் சொந்தமான கல்முனை முனை கடற்படைப் பிரிவினால், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>


 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைகளின் தொகுதியுடன் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு (04) சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகுகளும் இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>

 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1e29a1-4175-4e27-a19e-0ddffc0fffd8/26-6aaa3e71ee902.webp' /></p><p>
</p><p>

அதற்கமைய, 2026.09.16&nbsp; இன்று களுத்துறை நகரில் வைத்து குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p></p><p>
</p><p>
குறித்த சந்தேகநபர் இந்த போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் ரூபாய் 10,000,000/- (ஒரு கோடி ரூபாய்) பெறுமதியான சொத்தொன்றை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-16T06:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் தகவல்களை மறுக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847"></link>
            <id>https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801daa6d-f37c-4c94-8679-2b9b2d646ba7/26-6aaa39f16f0b9.webp' /></p><h2>எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

 அத்துடன் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.</p><p></p><p>
</p><p>
 

முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

அதன்படி ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-16T06:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gnanasara-thero-appears-in-court-1789538834"></link>
            <id>https://jvpnews.com/article/gnanasara-thero-appears-in-court-1789538834</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.</p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf44efd-f155-4b75-bf0d-38e9e6a37ee8/26-6aaa32144aedc.webp' /></p><h2>இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து</h2><p> விசாரணைகளின் பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp; அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருந்தது.</p><p>



அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-former-minister-johnston-fernando-1789537473"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-former-minister-johnston-fernando-1789537473</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9533445e-445b-4273-959f-9b05a26129ce/26-6aaa2cc2b58c0.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p></p><p>
</p><p>
 

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
 

 மேலும் , இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:41:16+00:00</updated>
        </entry>
    </feed>
