<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T05:34:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்; குவிந்த பக்தர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை 25 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.</p><p>

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.</p><p> 

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் மட்டுமல்லாது, இக்கால பகுதியில் , வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சன்னதியான் ஆலய மகோற்சப பெருவிழாவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HJtV8sHdAL0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை; ரசிகர்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633"></link>
            <id>https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .</p><p>27 வயதான , மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் 7 Hours to Go, The Final Exit, Ghost உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தி மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e271a7c-5456-463e-894c-06211870a040/26-6a8290c2ee797.webp' /></p><h2>ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தெரிவிப்பு</h2><p> திரைப்படங்கள் மட்டுமின்றி, பல்வேறு இசை வீடியோக்களிலும் அனன்யா ராஜ் நடித்துள்ளார். தெலுங்கில் Thaggede Le படத்திலும், Madrasi Gang என்ற மும்மொழி படத்திலும் நடித்திருந்தார்.</p><p>
 

இந்நிலையில், அனன்யா ராஜ் காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று (16) அறிவித்துள்ளனர். 

அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தற்போது அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், அவரது மரணச் செய்தி உடனடியாக வெளியிடப்படவில்லை. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி குடும்பத்தினர் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் மரணத்தை அறிவித்துள்ளனர்.</p><p>

அனன்யா ராஜ்-இன் மறைவு செய்தி அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T05:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்தில் இதுவே கடைசி ஆண்டு; ரொனால்டோ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/this-is-my-last-year-in-football-cristiano-ronaldo-1786943495"></link>
            <id>https://jvpnews.com/article/this-is-my-last-year-in-football-cristiano-ronaldo-1786943495</id>
            <summary type="text">போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>



தனது நீண்டகால துணைவியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் வழங்கிய பேட்டியிலேயே ரொனால்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13628e92-89de-49df-a67f-70b968212072/26-6a82980896896.webp' /></p><h2>உலகம் முழுவதும் பயணம்</h2><p>



கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மகத்தான மரபொன்றை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற பின்னர், ஓய்வு தொடர்பான முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஓய்வுக்குப் பின்னர் தனது அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும், தனக்கு மிகவும் பிடித்த ‘பேடல்’ விளையாட்டில் ஈடுபடவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் - இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-flight-service-between-vietnam-sri-lanka-1786942151"></link>
            <id>https://jvpnews.com/article/direct-flight-service-between-vietnam-sri-lanka-1786942151</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. </p><p>

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f4ab253-9698-45df-bc74-859165304424/26-6a8292c9a12b9.webp' /></p><h2>&nbsp;ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி&nbsp; &nbsp;கிழமைகளில்&nbsp;விமானப் பயணங்கள்</h2><p> </p><p>

இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 

புதிய விமான சேவையை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p> இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டார்.

இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be42ca33-29be-4be9-a6c9-bf03e54ca4ee/26-6a8292c8e79ce.webp' /></p><p> </p><p>அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். </p><p>

இந்த நேரடி விமான சேவை வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T04:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067"></link>
            <id>https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a74b07-81d8-440f-b42a-b1d00d2698d7/26-6a828e8ceebc3.webp' /></p><p> </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T04:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ; கடற்படை முகாம் குறித்து CID தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-the-kidnapping-case-11-missing-youths-1786929042"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-the-kidnapping-case-11-missing-youths-1786929042</id>
            <summary type="text">2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையின் ‘கன்சைட்’ (Gunsite) முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த முகாமின் சுவரில் எழுதப்பட்டிருந்த முகவரி, கடத்தப்பட்டவர்களில் ஒருவரான சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ff50ad-52bd-47e0-8f02-23ffac283ae9/26-6a825f93d62ab.webp' /></p><p>இந்த விசாரணைகளின்போது, குறித்த கடற்படை முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சில வழக்குகள், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f255e41f-9cdc-40af-9513-cf78799c8c28/26-6a826075c33b1.webp' /></p><p>கடற்படைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் கப்பம் பெறும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சட்டமா அதிபரால் மொத்தம் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தகவல் இருந்ததாகவும், தெஹிவளையில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T01:10:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாக பஞ்சமியில் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-are-going-jackpot-on-naga-panchami-1786915675"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-are-going-jackpot-on-naga-panchami-1786915675</id>
            <summary type="text">இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் நாக பஞ்சமி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d24ae72-f977-4873-9557-9c668d9225e7/26-6a822b5cf407d.webp' /></p><p> இப்படியான அபூர்வமான நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகைல் காணப்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p>அதுவும் சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலில் வளர்ச்சி, வியாபார விரிவாக்கம், வேலை வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது நாக பஞ்சமி நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab7baa93-b6dc-4846-8fe0-febbb573daa9/26-6a822b5fc1a61.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a38a2c-fc7c-497f-9cf9-ddbfc5f3ff89/26-6a822b5f0fb48.webp' /></p><h3>கன்னி</h3><p>
நாக பஞ்சமி நாளானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் நாளாக இருக்கும். இந்நாளில் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை அல்லது தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6163a99f-b979-463f-9fde-ae4790ba5652/26-6a822b5e5d2f8.webp' /></p><h3>மகரம்</h3><p>
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இக்காலத்தில் வேலை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a0006b9-b35b-49aa-8502-d84ca5530424/26-6a822b5da8feb.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T00:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலுள்ள தமிழர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி ; ஹாரோவில் பார்க்கிங் அபராதங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795"></link>
            <id>https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795</id>
            <summary type="text">லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் அப்பகுதிக்கு சென்ற பல தமிழர்கள் தொடர்ச்சியான அபராதச் சீட்டுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் குரல் கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9e0069-a623-4b5f-9f60-1d19f7e8ea35/26-6a82107cc982d.webp' /></p><p>இதனையடுத்து, ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், அதிகாரிகளுடன் விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
தமிழ் சமூகத்தினர் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை ஹாரோ நகரசபை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, தெற்கு ஹாரோ பகுதியில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்றுள்ளவர்களில், தங்களுக்கு நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்காக ஹாரோ நகரசபை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பூங்காக்களில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? சஜித் முன்வைத்த புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ending-congestion-national-parks-sajith-new-idea-1786925619"></link>
            <id>https://jvpnews.com/article/ending-congestion-national-parks-sajith-new-idea-1786925619</id>
            <summary type="text">பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>காலநிலை மாற்றம் குறித்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இத்தகைய குறைந்த கட்டண நடைமுறை மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஈர்க்க முடியும் என்றும், இதன் மூலம் தேசிய பூங்காக்களின் நுழைவாயில்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d43e385-e92a-4312-a90a-2361fa86225f/26-6a825234d42b5.webp' /></p><p>மேலும், வனஜீவிகள் திணைக்களத்தில் நிலவும் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார்.
</p><p>
திணைக்களத்துக்கு 33 கால்நடை மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 17 பேர் மட்டுமே சேவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மனித-விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்துவதிலும், யானை மற்றும் சிறுத்தைகளுக்குச் சிகிச்சையளிப்பதிலும் இவர்கள் முக்கிய பங்காற்றுவதால், வனத்தாவரங்கள் மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கான சட்டபூர்வ அதிகாரங்களையும் பதவி உயர்வுகளையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
</p><p>
அதேநேரம், நாட்டின் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி, அவற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், இரவு பகலாகப் பணியாற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; பக்தி பரவசத்தில் களைகட்டும் நல்லூர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-devotion-rapture-1786906918"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-devotion-rapture-1786906918</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஆலயத்தின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) பக்திபூர்வமாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் நல்லூர் செம்மணி பகுதியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, நல்லூரின் தெற்கு மற்றும் வடக்கு வாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் சிறப்பாக நாட்டப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd5f58cd-37f3-4d48-b9c2-4f6afc7d57fc/26-6a82092886d7f.webp' /></p><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தைச் சூழவுள்ள வெளி வீதிகளை திருவிழாக் கோலத்தில் அலங்கரிக்கும் வகையிலும் இந்த சேவல் கொடி நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் திருவிழா ஏற்பாடுகளுடன் களைகட்டத் தொடங்கியுள்ளன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றுமுதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மிக மற்றும் பக்தி உணர்வுடன் விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா? அரசாங்கத்திடம் புதிய மானியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-fuel-prices-increase-again-in-sri-lanka-1786921820"></link>
            <id>https://jvpnews.com/article/will-fuel-prices-increase-again-in-sri-lanka-1786921820</id>
            <summary type="text">எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றம் இறக்குமதிச் செலவை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இதுகுறித்த மீளாய்வை மேற்கொள்வது அவசியமானது எனக் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f915c44f-02f9-4d3d-82c0-68f4e80bce68/26-6a82435de7805.webp' /></p><p>

இந்த மீளாய்வுக்குப் பின்னர், அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டுப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் கோரவுள்ளதாகவும், அல்லது நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விலைத் திருத்தம் போன்ற மாற்று வழிகளை நாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, அது ஜூலை மாதம் அமுலுக்கு வந்த போதிலும், நடப்பு மாதத்தில் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, மத்திய கிழக்கு போர் வெடித்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றபோதிலும், தொடர்ந்து அதிகரிக்கும் உலகச் சந்தை விலை பெரும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T23:52:24+00:00</updated>
        </entry>
    </feed>
