<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T18:33:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் 'பூத களுவா' படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254"></link>
            <id>https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254</id>
            <summary type="text">திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156ff0c3-00ef-4c20-be20-6d2c63b155b0/26-6a9f0088e4733.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணைகள்</h2><p> </p><p>

இவ்வாறு கொலையானவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய நபராவார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. </p><p>

படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2314dc-468c-4ef8-9787-c5a8981d57d8/26-6a9ef8f154487.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஊழல் விசாரணை</h2><p style="text-align: justify; "> 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தோனியின் வழிநடத்தலில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, 2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் வீதிக்கு கார்பட் இடுவதற்கான ஏலதாரர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

அக்காலகட்டத்தில் குறித்த நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பிரதிவாதி குமார ஜயகொடி பணியாற்றியதாகச் சாட்சி குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அதன்படி, கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி இந்த கார்பட் இடும் பணியை மேற்கொள்வதற்காக ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு முன்பணப் பிணையின் அடிப்படையில் ரூ. 8,859,708 முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் சாட்சி கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு என்பன உரிய கொள்முதல் நடைமுறையைச் சரியாகப் பின்பற்றியுள்ளதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே தாம் அந்தப் பணப்பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததாகச் சாட்சி சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

இருப்பினும், குறித்த நிறுவனம் கார்பட் இடும் பணியை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சாட்சி, அந்தப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தமது நிறுவன வளாகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர், குறித்த நிறுவனம் வழங்கிய முன்பணப் பிணையின் கீழ் ரூ. 2,214,921 மட்டுமே அறவிடப்பட்டதாகச் சாட்சி குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் சாட்சியமளித்தார். </p><p style="text-align: justify; ">

அதன்பின்னர், இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T18:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு மெட்ரோ பேருந்து சேவை ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774a4229-f2a6-463f-b8d3-2d844a4444d0/26-6a9ef1b2b7a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மெட்ரோ பேருந்து சேவை</h2><p style="text-align: justify; "> 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "> 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-07T17:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T16:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-reported-in-the-country-1788798281"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-reported-in-the-country-1788798281</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் 991 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் பதிவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி தென்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3baa063-c546-4f5a-b958-f55a9e31ac87/26-6a9ee55225dbe.webp' /></p><h2 style="text-align: justify;">டெங்கு காய்ச்சல்</h2><p style="text-align: justify;">

மொத்த நோயாளிகளில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,527 என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-07T16:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616"></link>
            <id>https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616</id>
            <summary type="text">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய, கிழக்கு மாகாணங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14e4585-5fef-45d2-b380-8d3d1a673245/26-6a9edeca9eb95.webp' /></p><p style="text-align: justify; "> 

அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை ; விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6387e22-9511-4775-8ac6-d51c487097f0/26-6a9eda44248b5.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, இன்று (07) முதல் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இது முழுமையாக ஒன்லைன் முறைமையினூடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f18f50-2d2b-4f69-8255-f4c446572ad1/26-6a9eb7d51ceb2.webp' /></p><h2>தங்க நகைகள், உண்டியல்கள்&nbsp;&nbsp;திருட்டு</h2><p>

மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>

திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 திருட்டு சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885"></link>
            <id>https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885</id>
            <summary type="text">&amp;nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae56e3be-8150-45f8-893e-fc2e2fe7e838/26-6a9eb0f719e6c.webp' /></p><h2>கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார்?</h2><p> </p><p>

 அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p> 
உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டி மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><p></p><p>

 அத்துடன் ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.</p><p> இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><p></p><p>


 எனினும் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை.</p><p> இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். </p><p>

விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. 

ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். </p><p> 

அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751</id>
            <summary type="text">&amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ள குறித்த கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153796b9-865e-4a45-8cde-b498ab038b50/26-6a9eb45910c38.webp' /></p><p>
</p><p>


இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச நாளைய (08) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p></p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

காலி – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, தனது பயணத்தை நிறைவு செய்த பின்னர், பழுதுபார்க்கும் பணிக்காக ரத்கம, ஓவகந்த பகுதியில் உள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84783991-9ea8-4b68-94c8-7c13a9189dd5/26-6a9ebb1e550ee.webp' /></p><p>
</p><p>
 கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் ஒளி சமிக்ஞை அமைப்பு இருந்தபோதிலும், அது முறையாகச் செயல்படுவதில்லை என ரத்கம பிரதேச சபை உறுப்பினர் ஹர்ஷ பசான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதன் காரணமாக, குறித்த ரயில்வே கடவை நீண்ட காலமாகவே பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012"></link>
            <id>https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcceb69-1132-48b7-b17f-da60b78f92cf/26-6a9eb945d57ff.webp' /></p><p>

இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது மனித செயற்பாடுகள் காரணமாக உருவான நிலையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T13:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337"></link>
            <id>https://jvpnews.com/article/guns-recovered-hanwella-cremation-ground-1788785337</id>
            <summary type="text">&amp;nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.



அதனடிப்படையில், ஹங்வெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரி-56 துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b0b0db-d109-49fc-b920-3b3d0adb9156/26-6a9eb2bb5a31b.webp' /></p><p>
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T12:46:19+00:00</updated>
        </entry>
    </feed>
