<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T09:31:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் டெலிவரி; வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/beard-growth-oil-delivered-instead-iphone-flipkart-1784969780"></link>
            <id>https://jvpnews.com/article/beard-growth-oil-delivered-instead-iphone-flipkart-1784969780</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்ர்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், 

மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிளிப்கார்ட் தளத்தில் வட்டி இல்லா மாதத் தவணை முறையில் ரூ.1,11,793 மதிப்பில் ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ போன் ஆர்டர் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fffff2c2-7cc2-4a01-b32a-2104ee1204c2/26-6a647a36479d1.webp' /></p><p></p><h2>&nbsp;ஐபோனுக்குப் பதிலாக&nbsp; தாடி வளர்க்கும் எண்ணெய்</h2><p>

ஆனால், பார்சலில் ஐபோனுக்குப் பதிலாக ‘தாடி வளர்க்கும் எண்ணெய்’ இருந்தது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் சரியான தீர்வு வழங்கவில்லை.</p><p>

இதையடுத்து அவர் மும்பை புறநகர் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிளிப்கார்ட், அதன் விற்பனையாளர் ‘இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல்’ மற்றும் ‘ஆப்பிள் இந்தியா’ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், “இந்த இழப்புக்கு பிளிப்கார்ட்டும், அதன் விற்பனையாளருமே கூட்டுப் பொறுப்பு.

வாடிக்கையாளருக்கு அசல் தொகை ரூ.1,11,793-ஐ 2023 ஏப்ரல் 22 முதல் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். மன உளைச்சல், வழக்குச் செலவு உட்பட மொத்தம் ₹1.8 லட்சம் வரை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” உத்தரவிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-25T09:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/neetissue-union-minister-dharmendra-pradhan-resign-1784970755"></link>
            <id>https://jvpnews.com/article/neetissue-union-minister-dharmendra-pradhan-resign-1784970755</id>
            <summary type="text">&amp;nbsp; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில்&amp;nbsp; இந்திய கல்வி அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில்&nbsp; இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்
பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9932e2-ee60-4205-ac08-cb6b284fd1f6/26-6a647e04d2bcb.webp' /></p><p></p><p>

இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T09:11:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு குழந்தைகள் பிறந்தும் நாமல் ராஜபக்க்ஷவை துரத்தும் பிரச்சனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற<a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-warning-electric-bill-issue-1691557217" target="_blank"> நாமல் ராஜபக்‌சவின் திருமண விழா</a>விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d47b12-264f-4e44-88f2-786a7193f802/26-6a6445c8a4243.webp' /></p><h2>எனக்கு மட்டும் பாராபட்சம் ஏன்?</h2><p>
</p><p>
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T08:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி இல்லை; தங்கிய வெளிஆட்கள் 3,089 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926"></link>
            <id>https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அதே காலப்பகுதியில், அந்த மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb17a280-0788-4cf5-91b0-fe84b7c9fb6d/26-6a6472f80c7c6.webp' /></p><h2>கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவு</h2><p>


ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025ஆம் ஆண்டு எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், எவரும் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.</p><p></p><p>



இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளுக்காக ரூ.2,447,754 செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>



ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T08:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலை விடுவிட்டு துறவறம்; பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mk-founder-ramadoss-retires-from-politics-1784969058"></link>
            <id>https://jvpnews.com/article/mk-founder-ramadoss-retires-from-politics-1784969058</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது. </p><p> 

நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், “இன்று எனக்கு 88 ஆவது வயது ஆரம்பமாகிறது. இந்த தருணத்தில் நான் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdefa758-7eba-4d95-b9fd-9fcdad3121cc/26-6a64776be4f15.webp' /></p><h2>அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்</h2><p> </p><p>அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். வருபவர்களைப் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். 

ரசியலில் நான் தலையிடமாட்டேன். அதை அன்புமணி பார்த்துக்கொள்வார்.</p><p></p><p> அவரது துணைவியாரும் அவருக்கு துணையாக இருப்பார். நாங்களும் துணையாக இருப்போம்.

என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரிக்க வரலாம். அரசியல் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஏனென்றால், நான் இன்றிலிருந்து அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T08:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் உயிரிழந்தது யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/found-body-mahaweli-river-1784968312"></link>
            <id>https://jvpnews.com/article/found-body-mahaweli-river-1784968312</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

ஆற்றில் சடலமொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8972f1d8-2c43-41dc-b65c-58442859a04c/26-6a6474798a490.webp' /></p><p> </p><p>

அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p> 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T08:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடியில் அதிவேகத்தால் பாரிய விபத்து; குழந்தைகள் உட்பட ஐவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-accident-in-kaluwanchikudy-due-to-high-speed-1784962024"></link>
            <id>https://jvpnews.com/article/major-accident-in-kaluwanchikudy-due-to-high-speed-1784962024</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் வைத்து, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
 இன்று சனிக்கிழமை (25) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0707aaba-df46-46e3-8a11-ef2c87241b33/26-6a645be9db11a.webp' /></p><h2>அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/105b8cae-4f30-4d4a-befa-3e1a88015b18/26-6a645bea92fa2.webp' /></p><p>
</p><p>
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.</p><p>

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p>]</p>]]></content>
            <updated>2026-07-25T08:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்; 'Bitchat' செயலியை முடக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-protests-in-delhi-govt-block-bitchat-app-1784964755"></link>
            <id>https://jvpnews.com/article/student-protests-in-delhi-govt-block-bitchat-app-1784964755</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் போராட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் 'Bitchat' செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2716ff16-6863-4e93-a44a-c97d8a21c190/26-6a6466949d491.webp' /></p><p>
</p><p>
இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதால், அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்; இது தான் ஜனநாயகமா? நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-neet-actress-sanam-shetty-fumes-slam-joker-1784962943"></link>
            <id>https://jvpnews.com/article/protest-neet-actress-sanam-shetty-fumes-slam-joker-1784962943</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.</p><p>

“இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம். பொது மக்களில் ஒருவராக இதில் நான் பங்கேற்கிறேன். இங்கு எனக்கு முன்பு பேசியவர்களின் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாணவர்களின் போராட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f47aef0-b3cd-4447-91a6-f84cbeda57a8/26-6a645f803b5d1.webp' /></p><h2>நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்</h2><p> </p><p>அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

இந்த மேடையை அரசியல் சார்ந்து பயன்படுத்துபவர்கள் தான் கோமாளிகள். நாம் கிடையாது. நானும் கிடையாது. நான் தளபதியின் (விஜய்) தீவிர ரசிகர் கூறியபோது , அவரது பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர். </p><p> 

இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இப்போது புரிகிறதா நான் யார் குறித்து பேசினேன் என்று. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நான் வந்துள்ளேன். யாரும் சொல்லி இங்கு நான் வரவில்லை. நானாகவே வந்துள்ளேன் என்று ஆவேசமாக நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
</p><p>
பின்னர் நடிகை சனம் ஷெட்டியிடம் இருது மைக் வாங்கப்பட்ட நிலையில் மேடையில் இருந்தவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

“மாணவர்கள் போராட்டம் என்று சொன்னார்கள். </p><p>மைக்கில் நான் பேசிக்கொண்டிருந்த போது எனது மைக்கை பறித்தார்கள். இதுதான் அவர்களின் ஜனநாயகமா? இது மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டம். ஆனால், இங்கு தங்களது அரசியல் நிலைப்பாடு சார்ந்து போராடுகிறார்கள். பேசுவதற்கு கூட சுதந்திரம் தராதவர்கள்.</p><p> இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது. எனது கருத்தை மட்டும்தான் நான் பேச முடியும். ஒரு திரைப்படம் பார்த்தால் ஜோக்கரா?

மாணவர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். </p><p>விளம்பரத்துக்காக சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்தினால் கைது செய்வார்கள். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்று செய்தியாளர்களிடம் சனம் ஷெட்டி தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-25T07:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் கோர விபத்து; 19 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-private-bus-accident-in-matara-1784960963"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-private-bus-accident-in-matara-1784960963</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b74a17ed-accf-4725-8552-0051501f1bc9/26-6a6457c488cfd.webp' /></p><h2>11 ஆண்களும் 8 பெண்களும்&nbsp;காயம்</h2><p>
</p><p>
இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>


 மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T06:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-missing-17-year-old-girl-recovered-balangoda-1784959529"></link>
            <id>https://jvpnews.com/article/body-missing-17-year-old-girl-recovered-balangoda-1784959529</id>
            <summary type="text">&amp;nbsp; பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. 

பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

 
கடந்த வியாழக் கிழமை காலையில் மேற்படி சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தையினால் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c0d8c17-8404-4346-a3f4-a6e54685aad2/26-6a64522aa98fc.webp' /></p><h2>கொலையா, தற்கொலையா....</h2><p> </p><p>

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, சிறுமியின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p> 

பலாங்கொட மருத்துவமனையில் இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T06:15:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த இத்தாலி சிறுமிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-collides-with-foreign-girl-in-nilaveli-sea-1784958613"></link>
            <id>https://jvpnews.com/article/boat-collides-with-foreign-girl-in-nilaveli-sea-1784958613</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை நிலாவெளி கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் சிறுமி காயமடைந்துள்ளார்.

நேற்று காலையில் சுற்றுலாப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை நிலாவெளி கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் சிறுமி காயமடைந்துள்ளார்.
</p><p>
நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகளான இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் நிலாவெளி புறாத் தீவு அருகிலுள்ள கடற்பகுதியில் முழ்கி நீந்தும் சாதனங்களை அணிந்து, மீன்கள் மற்றும் பவளப்பாறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47242872-746c-4218-8834-10c464b8762a/26-6a644e9714582.webp' /></p><p> 

அப்போது, வேறு சில சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற டிங்கிப் படகு ஒன்று மோதியதில், கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த சிறுமி காயமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 சம்பவத்தின் போது இடத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த 11 வயதுடைய இத்தாலி நாட்டுச் சிறுமி நிலாவெளி மருத்துவமனையில் அனுமதித்தனர். </p><p>

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அச்சிறுமி திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 சம்பவம் தொடர்பில் டிங்கிப் படகின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T05:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahapola-scholarship-for-the-2024-2025-batch-1784957927"></link>
            <id>https://jvpnews.com/article/mahapola-scholarship-for-the-2024-2025-batch-1784957927</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறும் பல்கலை மாணவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறும் பல்கலை மாணவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி உதவித்தொகை நிதியம் கூறியுள்ளது.</p><p>


இதனை லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் அறிவித்துள்ளது.

 தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17க்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51845434-ecc9-43a8-aa93-5507340b4147/26-6a644be8e0e07.webp' /></p><h2>உதவி தொகை கிடைக்காத&nbsp; மாணவர்கள் மேன்முறையீடு&nbsp; செய்யலாம்</h2><p>
</p><p>
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.</p><p>


இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் , 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>


பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-25T05:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னந்தோட்டத் தொழிலாளி அடித்துப்படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234"></link>
            <id>https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd48a49b-d751-430e-87de-d70a0edbc61c/26-6a6449344aae4.webp' /></p><p>

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் பணியாற்றி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

 சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ள அவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579929b8-740c-42d9-b1c7-28614c7b0796/26-6a643f0ae7592.webp' /></p><p>
</p><p>


இராமநாதபுரம்&nbsp; தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>


ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. </p><p>இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.
</p><p>


அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp;கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என&nbsp; சந்தேகம்&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:42:09+00:00</updated>
        </entry>
    </feed>
