<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T18:59:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; களத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defence-secretary-and-army-chief-visit-site-1785610510"></link>
            <id>https://jvpnews.com/article/defence-secretary-and-army-chief-visit-site-1785610510</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில் குறித்த பகுதிகளில்&nbsp; பாதுகாப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளதுடன் ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c79eda-a613-4414-a3e7-ab9aa49f1e3d/26-6a6e410fdf2a9.webp' /></p><h2 style="text-align: justify;">மோதல் நிலை</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;">&nbsp;மஹர சிறைச்சாலையினுள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

</p><p style="text-align: justify;">சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அங்கு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T18:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்கு சட்டம் ; இவர்களுக்கு வீடுகளில் தஞ்சமளிக்க வேண்டாம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">Update:&amp;nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Update:</b>&nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.</p><p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p></p><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-01T18:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-dies-while-getting-off-bus-1785609369"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-dies-while-getting-off-bus-1785609369</id>
            <summary type="text">காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கராப்பிட்டிய - லபுதூவ வீதியின் லபுதூவ பகுதியில், லபுதூவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கராப்பிட்டிய - லபுதூவ வீதியின் லபுதூவ பகுதியில், லபுதூவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டபோது, அதிலிருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.</p><p>

உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7d23a5-4803-44b3-94a4-6acae121a3a0/26-6a6e3c9b53c9c.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஆவார்.</p><p></p><p>
</p><p>
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T18:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதிகளில் சிக்கிய இரு இளைஞர்கள் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-in-tamil-areas-1785605521"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-in-tamil-areas-1785605521</id>
            <summary type="text">பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் இரு சந்தேக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பூவரசங்குளம் மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை (31) பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோபால புளியங்குளம் பகுதியில், 100 கிராம் 310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09610e51-ab66-4deb-aa65-430e54b81bce/26-6a6e2d92f3478.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிப்பண்ணை பகுதியில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸார் நடத்திய சோதனையின்போது, 433 கிராம் 330 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் பாலக்குடாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

</p><p style="text-align: justify; ">
இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T17:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ; பாதுகாப்பு தீவிரம் ; களமிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295"></link>
            <id>https://jvpnews.com/article/unrest-erupts-again-at-mahara-prison-1785602295</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify; ">சிறைச்சாலைக்குள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40b4193e-e09e-4ed2-a87f-456fc3d9509b/26-6a6e2517c72ed.webp' /></p><h2 style="text-align: justify; ">பதற்றநிலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சில அடிகள் முன்வந்து மக்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இதன்போது, கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்திற்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-01T16:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நடு வீதியில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் ; போக்குவரத்துப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701"></link>
            <id>https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701</id>
            <summary type="text">வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
</p><p>
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9419dda-23f7-45b3-b9d0-4588a0f8ed77/26-6a6e1abf839fb.webp' /></p><h2>போக்குவரத்துப் பாதிப்பு</h2><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.
</p><p>
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T16:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; ஒருவர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446"></link>
            <id>https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b119da44-7ae0-4fad-888d-bc53f713d107/26-6a6e11f0407f8.webp' /></p><h2 style="text-align: justify;">பதற்ற நிலை</h2><p style="text-align: justify;"> 

அதேநேரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2893631e-0e8b-41d8-960f-a92c17947bb5/26-6a6e15f1bc2f2.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"> 

இந்த பதற்றநிலை காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p style="text-align: justify;">

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அபிவிருத்திப் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033"></link>
            <id>https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
</p><p>

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217ed06-55ed-4106-a300-588b721533b8/26-6a6df4fb55783.webp' /></p><h2>&nbsp;சிறந்த விமானப் போக்குவரத்து சேவை</h2><p>
</p><p>
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.



</p><p> திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. </p><p>



அதற்கமைய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p>



 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடர் என கூறி 800,000 டொலர் மோசடி; நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100"></link>
            <id>https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc5c253-d6f6-412b-ac32-a5e27ac2b1c2/26-6a6de98590d68.webp' /></p><h2>இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம்...&nbsp;</h2><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கும் வருகின்றது மெட்ரோ பேருந்து சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசாங்கத்தின் &#039;மெட்ரோ&#039; (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசாங்கத்தின் 'மெட்ரோ' (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்கான புதிய பேருந்துகள் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்தார்.</p><p>

சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து 121 மெட்ரோ பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னதாகப் பதிவு செய்தல் உள்ளிட்ட சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce6f91e-10cd-442f-a07a-2ba51a132850/26-6a6dec6a9155b.webp' /></p><h2>ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள்</h2><p>
</p><p>
தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இப்பேருந்துகள் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவைக்காகப் பல புதிய வழித்தடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும், இதன் மூலம் கொழும்புக்கு அப்பாலும் இச்சேவையை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
"இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மெட்ரோ பேருந்து சேவையைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்விரு மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து நிலையங்களும் (depots) அமைக்கப்படும்," என்று அவர் கூறினார்.</p><p></p><p>
போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்காக, பயணிகள் தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், மெட்ரோ பேருந்துகளில் பயணிகளுக்கான தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500-க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் பதற்ற நிலை; களத்தில் பொலிஸ் அதிரடிப்படை! கைதிகள் நால்வர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449"></link>
            <id>https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சிறைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e04295-9490-4ce4-98f4-eede94fc5a36/26-6a6de3134edd7.webp' /></p><h2>&nbsp;கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும்&nbsp; முறுகல் நிலை</h2><p> </p><p> 

அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார் அதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சில பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p><b>இரண்டாம் இணைப்பு</b></p><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. 

இந்த பதற்றநிலை காரணமாக 4 கைதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f5bd07-a264-42ea-bddc-8495597ff7f2/26-6a6df0710fb20.webp' /></p><p> </p><p>

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் , சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரப்பூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p>]]></content>
            <updated>2026-08-01T13:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-al-examination-ban-on-private-classes-1785590431"></link>
            <id>https://jvpnews.com/article/2026-al-examination-ban-on-private-classes-1785590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>


பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fdeb05b-4611-4b1e-ba15-4b728184918a/26-6a6df2a13d080.webp' /></p><p>



மேலும், உயர்தரப் பரீட்சைக்கான கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சை கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் இடம்பெறும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடக விளம்பரங்களை வெளியிடுதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>



2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் 2,532 தேர்வு மையங்களில் ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T13:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி ; வளிமண்டலவியல் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2812c9-8d0b-4856-a15d-3d15691798d4/26-6a6de1860b616.webp' /></p><p>
</p><p>
எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:03:35+00:00</updated>
        </entry>
    </feed>
