<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-27T18:47:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852889"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852889</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சில மணி நேரங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42304359-f7d1-410e-84d7-1e2772eb61b2/26-6a90785b4eb1f.webp' /></p><h2 style="text-align: justify; ">573 பேர் மீட்பு</h2><p style="text-align: justify; ">இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T17:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி வழங்கிய இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-gives-1-million-relief-aid-to-nepal-1787851090"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-gives-1-million-relief-aid-to-nepal-1787851090</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aba1592-fbcd-4ccd-bd62-920c1a7f738f/26-6a9071541b51d.webp' /></p><h2 style="text-align: justify; ">வெள்ளப்பெருக்கு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த சவாலான தருணத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

நேபாளத்தின் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T17:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அனுர குமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-a-meets-maha-sangha-for-blessings-1787849066"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-a-meets-maha-sangha-for-blessings-1787849066</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார்.
</p><p>
 

அதற்கமைய, முதற்கட்டமாக மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2544795-bee9-4664-834e-6c75e7bb85f3/26-6a90696bb8784.webp' /></p><p>

 

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூகவலைத்தளத்தில் கவலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519"></link>
            <id>https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற தனது பெற்றோர் ரமேஷ் சர்மா(65), மற்றும் நீலம் சர்மா(64) இருவரையும் காணவில்லை.. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என நடிகர் நிவேதா பெத்தராஜ் சமூகவலைத்தங்களில் பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea7376b-63ba-49ae-8efa-cd298aece535/26-6a902cb143f11.webp' /></p><p></p><h2>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம்</h2><p> </p><p>மீட்பு குழுவினர், அரசு அதிபர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.</p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p> அதில் பல இந்தியர்களும் அடக்கம். நேபாளம் ஒரு சுற்றுலா நாடு. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலரும் அங்கு சுற்றுலா சென்ற நேரத்தில்தான் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.</p><p></p><p> பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேபோல், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 83 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற பதட்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க தமிழக அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தை அடையும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-heat-meteorology-department-warning-1787847801"></link>
            <id>https://jvpnews.com/article/rising-heat-meteorology-department-warning-1787847801</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நாளை (28) பகல் வேளையில் கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c98550-4a49-46d6-af73-35de506455f3/26-6a9064e91c850.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிகபட்ச வெப்பநிலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டே இந்த வெப்பச் சுட்டெண் தீர்மானிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">


இது மனித உடலுக்கு உணரப்படும் உண்மையான வெப்பநிலையைக் குறிக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடற்சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T16:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ; மீளளிக்கப்படும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-police-notice-for-sri-lankans-1787845158"></link>
            <id>https://jvpnews.com/article/important-police-notice-for-sri-lankans-1787845158</id>
            <summary type="text">2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பில் இருந்து நீங்கியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/698d4971-f3ed-4882-a4eb-06c6382a3cf1/26-6a905a2787fd5.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மீண்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் சான்றிதழை வழங்க முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அத்துடன், முந்தைய விண்ணப்பத்திற்காக அறவிடப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் செலுத்திய அட்டையிலேயே மீண்டும் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இதேவேளை, பொலிஸ் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை அழைத்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் தரவுத் தொகுதி ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிற்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அது சீர்செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, தற்போது வழமை போன்று சான்றிதழ் அறிக்கைகளுக்காக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T15:39:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் வாகன விபத்து ; ஆணும் பெண்ணும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-accident-in-galle-man-and-woman-died-1787836950"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-accident-in-galle-man-and-woman-died-1787836950</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8295e6-44e3-489e-9ba8-ef403a8fa69a/26-6a903a186c633.webp' /></p><h2>முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து</h2><p>



விபத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதில், அதன் பின்னாசனத்தில் பயணித்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>



கனம்பிட்டியைச் சேர்ந்த பெண்ணும், ஹீன்பந்தலையைச் சேர்ந்த ஆணுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநாகரிகமாக சுற்றித் திரிந்த நபர் ; மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ambalangoda-incident-two-more-police-transferred-1787835891"></link>
            <id>https://jvpnews.com/article/ambalangoda-incident-two-more-police-transferred-1787835891</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

சம்பந்தப்பட்ட சந்தேக நபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாளராக இருந்த பொலிஸ் உதவி ஆய்வாளரும் முன்னதாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad012fb6-a040-4885-abda-94a6d55ca454/26-6a9035f4bf281.webp' /></p><h2>குடிபோதையில் சாலையில் அநாகரிகமாக சுற்றித் திரிந்த&nbsp;நபர்,</h2><p>

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில் காலி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் கீழ் தொடங்கப்பட்ட விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.</p><p></p><p>
</p><p>
காவலில் உள்ள தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி, அம்பலங்கொடபொலிஸ் நிலையத்திற்குள் வன்முறையாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞனின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.</p><p></p><p>

காணொளியில் தந்தை என அடையாளம் காணப்பட்ட நபர், குடிபோதையில் சாலையில் அநாகரிகமாக சுற்றித் திரிந்ததற்காக அம்பலங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-pilots-killed-in-trainer-aircraft-crash-kanpur-1787832531"></link>
            <id>https://jvpnews.com/article/two-pilots-killed-in-trainer-aircraft-crash-kanpur-1787832531</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் விமானத்தின் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b0f0ff-7134-48ad-aee8-4a9d8438f40b/26-6a9028d53150f.webp' /></p><p></p><p>
</p><p>
சம்பவ இடத்திலிருந்து வெளியான காட்சிகள், புல் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் முற்றிலும் சிதைந்து கிடப்பதைக் காட்டின. 

விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை.</p><p> 

விமானத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்தே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 6 இல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-on-september-6-1787836626"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-on-september-6-1787836626</id>
            <summary type="text">&amp;nbsp; விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. </p><p>

 இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5a8ab4-9e91-4510-8b01-8b75e5dc9f32/26-6a9038d3d25b2.webp' /></p><h2>பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்&nbsp;</h2><p> 

 

உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.</p><p></p><p> </p><p>

தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10 ஆவது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இன்னிலையில் வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும்; தமிழக சட்டமன்றத்தில் காரசாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும் என தவெக ஆதவ் அர்ஜுனா சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac6413e-e8c4-4dc6-9bf3-9f75b31168af/26-6a903161ac026.webp' /></p><h2>கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்</h2><p> </p><p>

2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைத்ததை தாங்கிக் கொள்ள முடியாத திமுக சட்டசபையில் தவெகவுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.</p><p>

எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்றவர்கள் எழுந்து பதில் கூறி வருகிறார்கள்.</p><p></p><p> </p><p>அதிலும் யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்து பதில் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சட்டமன்றத்தில் புகார் கூறியிருந்தார்.</p><p>

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா ‘எப்போது பார்த்தாலும் சண்டை சண்டை என்று செல்கிறது.. இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்’ எனக்கூறினார்.</p><p></p><p> அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா ‘அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை இல்லை.. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும்.. உண்மைக்கு மாறாக பேசும் போது தான் நாங்கள் எழுந்து பதில் சொல்கிறோம்.</p><p> எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது.. அதை வைத்து கேஸ் பற்ற வைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம்.. கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்’ என பதிலடி கொடுத்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
