<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T20:33:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106"></link>
            <id>https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. 

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. </p><p>

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852a48e9-1d24-4b3e-aa99-804eadfb3ce1/26-6a6667ac033bf.webp' /></p><p>தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். </p><p>

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. </p><p>

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் இரு பெண்களை மோதிய பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160</id>
            <summary type="text">ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் காரைச் செலுத்தி இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரின் தகவலின்படி, நேற்று முன்தினம் (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையிலான காலப்பகுதியில், ஹைலெவல் வீதியில் உள்ள மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், வட்டரக்க 20ஆம் கட்டை பகுதியிலும் அடுத்தடுத்து இந்த இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b516b-944f-4cfc-85ca-bd5457c4fa19/26-6a665c29c45da.webp' /></p><p>விபத்துகளை ஏற்படுத்திய பின்னர் காரில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைப் பரிசோதனையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை ; வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195"></link>
            <id>https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4ae97c-af18-44bd-b276-2ecb8af5f09b/26-6a665864b7afd.webp' /></p><p>கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.
</p><p>


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தினால் அந்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838</id>
            <summary type="text">கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னெடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூன் 19ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 'சோமிரச' என்ற மீன்பிடிப் படகில் பயணித்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோரே பங்களாதேஷ் கடற்பரப்பில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த மீனவர் ஒருவர் மற்றொரு படகின் உதவியுடன் கரையை அடைந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdfa297-5ce4-4e71-8580-1bc84e7808d0/26-6a664f2fd5076.webp' /></p><p>எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
படகில் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
</p><p>
எனினும், கடல் நீரோட்டத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு படகு தொலைதூரப் பகுதிகளுக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பை அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், அந்நாட்டு மீனவர்கள் குழுவொன்றினால் தந்தையும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் முதற்கட்டமாக ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதுடன், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இருவரையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T18:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T17:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலங்குகளைப் பாதுகாக்க இலங்கையில் புதிய சட்டப் புரட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-legal-revolution-in-sri-lanka-protect-animals-1785083077"></link>
            <id>https://jvpnews.com/article/new-legal-revolution-in-sri-lanka-protect-animals-1785083077</id>
            <summary type="text">விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><p>

2026 ஜூலை 17ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், விலங்குகள் மீது கருணை, தயவு மற்றும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதுடன், அவற்றின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><h4>

உணவு, நீர் மற்றும் இருப்பிடத்தை மறுப்பதும் குற்றமாகும்
</h4><p>
விலங்கு நலன் என்பது விலங்குகளை உடல்ரீதியாகத் தாக்காமல் இருப்பதுடன் மட்டுப்படுவதில்லை என்பதை இந்தச் சட்டமூலம் வலியுறுத்துகிறது. விலங்குகளுக்குத் தேவையான உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் பொருத்தமான இருப்பிடத்தை வழங்குவது உரிமையாளர்களின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcfd4e7-4406-4e7d-b3b6-096d4a105345/26-6a6634c74b20b.webp' /></p><p>இதன்படி, விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காமல் இருப்பது, அவற்றுக்குத் தகுந்த இருப்பிடத்தை வழங்கத் தவறுவது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது, வேலை செய்யத் தகுதியற்ற விலங்குகளைப் பயன்படுத்துவது அல்லது வேறு எந்தச் செயல் அல்லது அலட்சியத்தின் மூலமும் தேவையற்ற வலி, துன்பம் அல்லது காயத்தை ஏற்படுத்துவது குற்றமாகப் பிரகடனப்படுத்தப்பட உள்ளது.</p><p>

இதன் மூலம் வேண்டுமென்றே செய்யப்படும் கொடுமைகள் மட்டுமன்றி, அடிப்படைப் பராமரிப்பை மறுப்பதும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக மாறுகிறது.</p><p>புதிய சட்டமூலத்தின் விதிகளை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் ஒருவர் ரூபா 250,000-ஐ மிகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p>

அதேவேளை, விலங்கொன்றை கொடூரமான முறையில் கொன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபா 500,000-க்கு குறையாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>செல்லப்பிராணிகளை வளர்த்துவிட்டு பின்னர் அவற்றைக் கைவிடுவது தொடர்பிலும் புதிய சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
</p><p>
நோயுற்ற அல்லது ஊனமுற்ற விலங்குகளைப் பொது இடங்களில் கைவிடுதல், சிகிச்சை வழங்காமல் புறக்கணித்தல் மற்றும் அவற்றின் நலனைப் பாதுகாக்கத் தவறுதல் போன்ற செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
மேலும், சட்டவிரோதமான கருத்தடைச் சிகிச்சைகள் மேற்கொள்வது மற்றும் தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படவுள்ளன.</p><p>விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் சண்டைகள், விலங்குகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வேட்டை விளையாட்டுகள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான சண்டைகளை நடத்துதல் ஆகியவற்றுக்கும் முழுமையான தடை விதிக்க சட்டமூலம் முன்மொழிகிறது.
</p><p>
அத்துடன், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நிர்வகித்தல், அதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் அல்லது விளம்பரப்படுத்துதல் ஆகியனவும் குற்றமாகக் கருதப்படும்.</p><p>விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும்போது அவற்றுக்கு தேவையற்ற வலி, துன்பம், காயம் அல்லது விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.</p><p>

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூபா 300,000-க்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.</p><p>செல்லப்பிராணி விற்பனை நிலையங்கள் மற்றும் செல்லப்பிராணி இனப்பெருக்க நிலையங்களுக்கு கட்டாய அனுமதிப்பத்திர முறைமையை அறிமுகப்படுத்தவும் சட்டமூலம் முன்மொழிகிறது.

இதன் மூலம் விலங்கு வர்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான நடவடிக்கைகளை சட்டரீதியாக ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1bdc29-2ef7-4291-8569-0f79a7e43f37/26-6a6634c8025ca.webp' /></p><p>விலங்கு நலன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, 2025 டிசம்பர் 29ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p>

அந்தக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு 2026 மே 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டவரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
அதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதுடன், அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சட்டம் மட்டுமன்றி சமூகப் பொறுப்பும் அவசியம்

இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல், அவற்றைப் புறக்கணித்தல் மற்றும் விலங்குகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான மற்றும் வலுவான சட்டக் கட்டமைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், விலங்குகளின் நலனை சட்டம் மட்டுமே உறுதிப்படுத்த முடியாது. </p><p>விலங்குகளைப் பொறுப்புடன் பராமரித்தல், அவற்றுக்குத் தேவையான உணவு, நீர், இருப்பிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பை வழங்குதல், கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகியவை சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
</p><p>
விலங்குகளைத் துன்புறுத்திய பின்னர் தண்டனை வழங்குவது மட்டுமன்றி, விலங்குகள் மீது கருணை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் சமூகத்தை உருவாக்குவதே இந்தப் புதிய விலங்கு நலச் சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சினிமாவுக்கு உலகப் பெருமை ; சர்வதேச விருதுகளை வென்ற நடிகர்களுக்கு உற்சாக வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-cinema-is-a-global-pride-1785082067"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-cinema-is-a-global-pride-1785082067</id>
            <summary type="text">மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில் விருதுகளை வென்ற சிரேஷ்ட நடிகர் மகேந்திர பெரேரா மற்றும் நடிகர் பிரியந்த சிறிகுமார ஆகியோர் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.</p><p> </p><p></p><p>9 ஆவது கோல்டன் குளோப் விருது விழா - 2026 (9th Golden Globe Award - 2026) என நடைபெற்ற மலேசிய சர்வதேச திரைப்பட விருது விழாவில், "ரிவர்ஸ்டன்" (Riverston) திரைப்படத்தின் நடிப்புக்காக மகேந்திர பெரேரா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334d56ac-efdd-494e-abf9-0b3f87f5460f/26-6a6630d4c7ce6.webp' /></p><p> 

அதே திரைப்படத்தின் நடிப்புக்காக பிரியந்த சிறிகுமார சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.</p><p> 

இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 4.01 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான UL 315 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். </p><p>

இவர்களை வரவேற்பதற்காக "ரிவர்ஸ்டன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிமந்தி போரகெ உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள் பலர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.</p><p> 

உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற திரைப்படப் படைப்புகள் மட்டுமே இந்த விருது விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:07:56+00:00</updated>
        </entry>
    </feed>
