<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T16:30:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தொன்று வெள்ள நீரில் சிக்கியிருந்த&nbsp; காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b960743-cfe6-466a-8b29-73bebbbc4b8e/26-6a70bee9aed1a.webp' /></p><h3>&nbsp;சீரற்ற காலநிலை</h3><p>
</p><p>இதனையடுத்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்படும் காட்சிகளும் குறித்த&nbsp; காணொளியில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>மோசமடைந்து வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அந்த இளைஞர்களின் விரைவான செயல்பாடும் தைரியமும் ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை மோதல் ; கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408"></link>
            <id>https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றது. </p><p style="text-align: justify; ">

இதன்போது, அதிகளவில் இரத்தம் வெளியேறியமையே மரணத்திற்கான காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c0b2e32-ea0e-4f0c-928f-a827e6bf2c13/26-6a70b9799bcb3.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்று பரிசோதனை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், குறித்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளைப் பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">நேற்று முன்தினம்&nbsp; (01)&nbsp; கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன. 

</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது. 

எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T15:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-shop-in-five-lamps-junction-1785771347"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-shop-in-five-lamps-junction-1785771347</id>
            <summary type="text">கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு திணைக்களம் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6dd16d-0d50-40e9-b8b4-9c93a89eee58/26-6a70b555a79ae.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-03T15:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க கழிவறை குப்பைத் தொட்டியில் ஆபத்தான பொருள்; ஆடிப்போன அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-found-in-katunayake-airport-trash-bin-1785762147"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-found-in-katunayake-airport-trash-bin-1785762147</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 1 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான &#039;ஹஷீஷ்&#039; போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 1 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதியொன்று கைவிடப்பட்ட நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>

இன்று திங்கட்கிழமை (03) அதிகாலை 12.00 மணியளவில் விமான நிலைய வருகை முனையத்தின் 3 ஆம் இலக்கப் பயணப்பைப் பட்டையப் பகுதிக்கு அருகில் உள்ள பெண்கள் கழிப்பறையின் 02 குப்பைத் தொட்டிகளுக்குள் இருந்தே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f86352b-c52f-43eb-b26e-a16013f9053b/26-6a709164c2df4.webp' /></p><h2>187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள்</h2><p>
</p><p>
07 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருளுடன் சேர்த்து சில பெண்களுக்கான காலணிகள் மற்றும் ஆடைகளும் அக்குப்பைத் தொட்டிகளுக்குள் வீசிச் செல்லப்பட்டிருந்தன.</p><p></p><p>
</p><p>
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது ஏற்பட்ட அச்சம் அல்லது சந்தேகம் காரணமாக, கடத்தல்காரர்கள் இப்போதைப்பொருளைக் கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதி மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை ; பாதுகாப்பு அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9acd1045-8541-4fe7-b81f-f4cc963ff84c/26-6a7095a4c629b.webp' /></p><p> </p><p>

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p> 

 இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்; கொண்டாடும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-cauvery-river-cm-vijay-people-celebrating-1785762742"></link>
            <id>https://jvpnews.com/article/water-cauvery-river-cm-vijay-people-celebrating-1785762742</id>
            <summary type="text">&amp;nbsp;கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.

இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
</p><p>இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்ததை வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b63be3e-0056-4097-905f-b6a130484fe4/26-6a7093b7d705d.webp' /></p><h2>கடவுளின் குழந்தை - சமூக வலைதளங்களில் பதிவுகள்&nbsp;</h2><p>

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆதரவாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பல சமூக வலைதள பயனர்கள், இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பல்வேறு பதிவுகள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
"இயற்கையே முதலமைச்சர் பக்கம் நிற்கிறது", "கடவுளின் குழந்தை" போன்ற வாசகங்களுடன் பகிரப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.&nbsp;</p><p>ஆரம்பத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு தயக்கம் காட்டியிருந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் கபினி அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169"></link>
            <id>https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2d48bb-2bf7-43a5-a11a-74584ee76d1b/26-6a706a6bce9e7.webp' /></p><h2>&nbsp;ஒகஸ்ட்&nbsp; 5 ஆம் திகதி&nbsp;வரை செல்லுபடியாகும் </h2><p> </p><p>மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு&nbsp;சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​</p><p></p><p>அதன்படி, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><p>அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும் , ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுபிக் பெருங்கடலில் சூறாவளி; வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cyclone-pacific-ocean-sl-department-meteorolog-1785761578"></link>
            <id>https://jvpnews.com/article/cyclone-pacific-ocean-sl-department-meteorolog-1785761578</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இதனைத் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f675016-5ca4-410d-8fcf-5babce84cef7/26-6a708f2beeb9c.webp' /></p><h2>&nbsp;பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி</h2><p> </p><p>

இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.</p><p> 

இதன்படி மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

"இந்த கொந்தளிப்பான வானிலை நிலைமை நாளை (04) நண்பகலாகும்போது படிப்படியாக நம்மை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படி இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருகிறது.</p><p></p><p> அந்த நிலைமை ஆறாம் திகதியளவில் மீண்டும் தீவிரமடைவதுடன், காற்றின் வேகம் அதிகரித்து, மீண்டும் ஆறாம் திகதிக்குப் பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் மழை பெய்யக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-nature-unleashing-its-fury-sri-lanka-once-again-1785759794"></link>
            <id>https://jvpnews.com/article/is-nature-unleashing-its-fury-sri-lanka-once-again-1785759794</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய மலைநாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய மலைநாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட புதிய வானிலை முன்னறிவிப்பில், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b73525a-420f-431d-bd89-b3f14caa9a28/26-6a708833c5783.webp' /></p><h2>100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்</h2><p>
</p><p>


வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



மேலும், வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டனில் மண்ணில் புதையுண்டு பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-in-hatton-landslide-1785761027"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-in-hatton-landslide-1785761027</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடில் நிலவும் சீரற்ற காலைனிலையால் ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடில் நிலவும் சீரற்ற காலைனிலையால் ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இன்று பிற்பகல் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12f2280-4ef5-4ced-b788-c124ad56b2cc/26-6a708d0533e6c.webp' /></p><p>
</p><p>
மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீட்டுக்குள் மேலும் சிலர் இருந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கை பிரதேசங்க்களுக்கும் வெள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-kelani-river-areas-1785758923"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-kelani-river-areas-1785758923</id>
            <summary type="text">&amp;nbsp;அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் பெருவெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df563e6-a562-4b41-956e-9b956151a591/26-6a7084cd10d5d.webp' /></p><p> </p><p>

மழை நிலவும் சூழல் இன்னும் தொடர்வதால் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும் என்பதால், கங்கையை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T12:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-electricity-charges-for-the-quarter-1785757116"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-electricity-charges-for-the-quarter-1785757116</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>

தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a3acdc-3209-4b6c-a21f-a282eb009c0d/26-6a707dbd93ac3.webp' /></p><h2>காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண முறை</h2><p>

அனைத்து கணக்கீடுகளின்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகச் செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும்.</p><p></p><p>

நிலக்கரியின் தரப் பிரச்சினையால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


இதன்படி, மூன்றாம் காலாண்டில் மொத்த மின்சார விநியோகச் செலவு ரூ.186,027 மில்லியனாகவும், மொத்த வருமானம் ரூ.185,610 மில்லியனாகவும் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் ரூ.417 மில்லியன் மட்டுமே என்பதால், மின்கட்டணத்தை மாற்றத் தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு செப்டம்பர் 22 இல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-on-gotabaya-writ-petition-on-september-22-1785756658"></link>
            <id>https://jvpnews.com/article/order-on-gotabaya-writ-petition-on-september-22-1785756658</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்து நிறைவு செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ece160-6f32-4145-ab5f-505c905361c6/26-6a707bf35d54c.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floodwaters-surging-through-the-city-of-kand-1785755275"></link>
            <id>https://jvpnews.com/article/floodwaters-surging-through-the-city-of-kand-1785755275</id>
            <summary type="text">கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கு 

கண்டி, கெலிஓயா நகரில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கு 

கண்டி, கெலிஓயா நகரில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக பல வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதனால், அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.



 அத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3613b6be-d45e-4a4d-9976-9612c8b18b33/26-6a70768ca0014.webp' /></p><p></p><p>







 இன்னிலையில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து, கரையோரப் பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
</p><p>


கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கெலிஓயா நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதிலும் கொட்டித்தீர்த்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/torrential-rain-also-lashed-sainthamaruthu-1785754904"></link>
            <id>https://jvpnews.com/article/torrential-rain-also-lashed-sainthamaruthu-1785754904</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
</p><p>


ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72edcfc-ff2d-4dc8-aac5-cb1206ebec00/26-6a70751a4e9c4.webp' /></p><p>



இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T10:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களின் தொப்புளில் 2,400 பக்டீரியாக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-400-bacteria-in-the-human-navel-1785753801"></link>
            <id>https://jvpnews.com/article/2-400-bacteria-in-the-human-navel-1785753801</id>
            <summary type="text">&amp;nbsp;மனிதர்களின் தொப்புளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உடலுக்கு இயல்பாக இருக்கும் தோல் நுண்ணுயிர்கள் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனிதர்களின் தொப்புளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உடலுக்கு இயல்பாக இருக்கும் தோல் நுண்ணுயிர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
 மனிதர்களின் தொப்புள் என்பது வெறும் தழும்பு அல்ல, அது ஒரு மினியேச்சர் அமேசான் காடு போன்ற ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5470f450-7edd-4102-b57c-5c6b8803052b/26-6a7070cb0c8f3.webp' /></p><h2>மனிதர்களின் தொப்புள்&nbsp; ஒரு மினியேச்சர் அமேசான் காடு&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் (North Carolina State University) விஞ்ஞானிகள் நடத்திய "தொப்புள் பல்லுயிர் பெருக்க திட்டம்" (Belly Button Biodiversity Project) என்ற ஆய்வில், மனிதர்களின் தொப்புள்களில் கிட்டத்தட்ட 2,368 க்கும் மேற்பட்ட (ஏறத்தாழ 2,400) பாக்டீரியா இனங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது

சில ஆய்வுகளின்படி, மனிதர்களின் தொப்புளில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட வகையான பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>


எனினும், அவை அனைத்தும் தீங்கு விளைவிப்பவை அல்ல என்றும், பெரும்பாலானவை உடலின் இயல்பான நுண்ணுயிர் சூழலின் ஒரு பகுதியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
அதேவேளை, தொப்புளை முறையாக சுத்தமாக வைத்திருக்காதபோது அழுக்கு, வியர்வை மற்றும் கிருமிகள் தேங்கி, துர்நாற்றம், தோல் எரிச்சல் மற்றும் தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், தொப்புளில் வாழும் நுண்ணுயிர்களின் சமநிலை, கல்லீரல், குடல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
இருப்பினும், இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து மேலதிக அறிவியல் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இந்நிலையில், தினசரி தனிநபர் சுகாதார பராமரிப்பில் தொப்புளை சுத்தமாக வைத்திருப்பதை பலரும் புறக்கணித்து வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-03T10:41:22+00:00</updated>
        </entry>
    </feed>
