<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T11:31:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294"></link>
            <id>https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

நிலக்கரி ஏற்றிச் சென்ற ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளம் கடற்பரப்பை வந்தடைந்துள்ள நிலையில், நிலக்கரியை இறக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சரக்கை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f677ec9e-2850-4720-a690-b34e9dc2c76a/26-6a9aab4f5ee7c.webp' /></p><p>இந்நிலையில், ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு மற்றும் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று (04) காலை மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
</p><p>
இதன்போது, அடுத்த சில நாட்களுக்கு மின் நிலையத்தை இயக்குவதற்குத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பில் இருப்பதை அமைச்சர் அவதானித்துள்ளார்.
</p><p>
மேலும், மின் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களை சந்தித்த அமைச்சர், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் மின்சார உற்பத்திக்காக அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிலக்கரி விநியோகம் மற்றும் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757"></link>
            <id>https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

எவ்வாறாயினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட ஒகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,962 பேரும் பதிவாகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b837d2c-8d0f-40fc-a551-ae151d7e871e/26-6a9aa54f4c95e.webp' /></p><p>இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இக்காலப்பகுதியில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,760 ஆகும். </p><p>

தென் மாகாணத்தில் 13,931 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,788 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,910 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,444 ஆகும். </p><p>

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 19,008 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,043 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,154 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,181 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p> 

நாடளாவிய ரீதியில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதி-அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6db0888-ff13-46cd-9bb1-0b64ae960c44/26-6a9aa7ccb9990.webp' /></p><h2>சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு</h2><p> </p><p>இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p>ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், அதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc20b296-9b3c-4bd9-a40e-c0083a234678/26-6a9a8b2c53bf2.webp' /></p><p>வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போன கடற்படை அதிகாரியின் உடல் என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770"></link>
            <id>https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770</id>
            <summary type="text">அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல், இன்று (04) காலை கடற்படை நீர்மூழ்கிக் குழுவினரால் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>



அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
</p><p>


கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa08ac-cdc0-434d-9d76-75183adc6d16/26-6a9a9d8c42c5f.webp' /></p><p>இந்நிலையில், கடல் மற்றும் நீருக்கடியில் நிலவிய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் விசேட நீர்மூழ்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் இன்று மீட்க்கப்பட்டது. </p><p>



குறித்த படகு சுமார் 80 அடி ஆழத்தில் காணப்பட்டதுடன், நீருக்கடியில் பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p> 



மேலும், படகின் உள்ளகப் பகுதிகள் மிகவும் குறுகலாக இருந்ததால், நீர்மூழ்கி வீரர்களுக்கு மீட்பு நடவடிக்கையின்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.</p><p>



சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியை மீட்பதே இலங்கை கடற்படையின் பிரதான முன்னுரிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>


காணாமல் போன அதிகாரியைத் தேடும் நடவடிக்கைகள் பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
</p><p>


தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் கடற்படை ஒருங்கிணைந்து செயற்பட்டதுடன், கிடைக்கக்கூடிய கடல் மற்றும் வான்வழி வளங்களும் பயன்படுத்தப்பட்டன.
</p><p>


மேலும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை விரிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் கண்டறிவதற்கான விசாரணையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:29:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961"></link>
            <id>https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். 

 

இதன்போது, எதிர்பாராதவிதமாக வீசிய பாரிய அலை ஒன்றில் சிக்கி அத்தோணி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>

 

 சம்பவத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவரான 'நாகேந்திரன்' என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா நீரில் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc15ff1-0ccc-4f7c-adee-280ab3bfc546/26-6a9a9e4a6578b.webp' /></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

 

அதேவேளை, தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்ற மீனவர் அலையை எதிர்த்து நீந்திப் போராடிப் பாதுகாப்பாகக் கரையை வந்தடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

நீரில் மூழ்கியவர்களில் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

 

 எனினும், காணாமல்போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488"></link>
            <id>https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. </p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437ரூபாய் 13 சதம், விற்பனைப் பெறுமதி 451ரூபா 63 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 388ரூபாய் 47 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0826d371-1ed8-4b05-8250-0642e56a0344/26-6a9a988a0007a.webp' /></p><p>
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 415 ரூபாய் 10சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 69 சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 45சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 34சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 08என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 14 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/valikamam-north-land-acquisition-gazette-1788515493"></link>
            <id>https://jvpnews.com/article/valikamam-north-land-acquisition-gazette-1788515493</id>
            <summary type="text">&amp;nbsp; கடந்தகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடந்தகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்தார்.</p><p> 

யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) 20 ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bbf0dd-9add-4254-93d2-47586ef7c2f9/26-6a9a94a72c449.webp' /></p><p>
</p><p>
வலி வடக்கு மக்களின் சுமார் 6,317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.

மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அனுரகுமார தலைமையிலான அரசாங்கமும் குறித்தவர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசுகளைப் போல் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.</p><p></p><h2>&nbsp;மூன்று இடங்களில் போராட்டங்கள்&nbsp;</h2><p> 


வலி வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவக்குமாறு கோரி மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.</p><p>

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.</p><p></p><p> </p><p>

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக வலி வடக்கு காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:48:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை தொடருந்தில் மோதி உயிரை மாய்த்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-loses-his-life-being-struck-train-trincomale-1788514761"></link>
            <id>https://jvpnews.com/article/man-loses-his-life-being-struck-train-trincomale-1788514761</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா தொடருந்து நிலையத்திற்கும் திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவராவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08eb908-b604-460b-8c94-28115a2e5e70/26-6a9a91cb03224.webp' /></p><p></p><p>&nbsp;இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><h2>&nbsp;இளைஞர் மற்றும் சிறுமி&nbsp; &nbsp;காவல்துறையின் பாதுகாப்பில்..</h2><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T09:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு ; பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/details-revealed-background-kollupitiya-shooting-1788512310"></link>
            <id>https://jvpnews.com/article/details-revealed-background-kollupitiya-shooting-1788512310</id>
            <summary type="text">கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p>



கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியினர் சம்பவத்தையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8044c87-a747-43ef-b994-96e77200b1e3/26-6a9a883803a6f.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய சந்தேகநபர், பல துப்பாக்கிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான குறித்த திருமணமாகாத சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 12 போர் ரக துப்பாக்கி, அதற்கான இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாயு ரைபிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>



பொலிஸ் விசாரணைகளின்படி, காயமடைந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்த நெருங்கிய தொடர்பே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. </p><p>



மேலும், சம்பவத்துக்கு முந்தைய இரவு குறித்த பெண் மற்றொரு இளம் பெண்ணை சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குடியிருப்பு வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணை நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302"></link>
            <id>https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p> </p><p></p><p>குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37afbb81-547a-42ee-8eb6-bd9fbfb28229/26-6a9a806072e82.webp' /></p><p>இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன.</p><p>இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. </p><p>

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது.</p><p> 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பாவனை; பாடசாலைகளில் கடும் சோதனை நடவடிக்கை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326"></link>
            <id>https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326</id>
            <summary type="text">&amp;nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea76c316-efc0-4669-abb7-b54545cb8084/26-6a9a807815343.webp' /></p><p></p><h2>பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவி</h2><p>
</p><p>


பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்போது, பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>



பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. </p><p>இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த கருவிகள் முதலில் சந்தைகளில் கிடைக்கச் செய்யப்படுவதுடன், பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 



இதன்மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பரிசோதனையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை: சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012"></link>
            <id>https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாதுகாப்பாளரும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>


சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd20bd1-2474-4962-bef0-92ed53ab6d0a/26-6a9a6f9dbdc29.webp' /></p><h2>சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

கொடுமைக்குள்ளான சிறுவன் மாரஸ்ஸனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழத்தில் பாம்பின் விசம்; சிறுவன் பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/snake-venom-in-jamun-fruit-boy-died-tragically-1788505574"></link>
            <id>https://jvpnews.com/article/snake-venom-in-jamun-fruit-boy-died-tragically-1788505574</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

சம்பவத்தில் பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0abea9-a04c-4641-83ab-33c0b0aa9ad2/26-6a9a6de76cffb.webp' /></p><h2>மயங்கி வீழ்ந்த&nbsp; சிறுவன் </h2><p>
</p><p>
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று (03) வியாழக்கிழமை மாலை எடுத்து உட்கொண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து மயங்கி வீழ்ந்த சிறுவனை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-of-midigama-sooti-frozen-1788506471"></link>
            <id>https://jvpnews.com/article/assets-of-midigama-sooti-frozen-1788506471</id>
            <summary type="text">&amp;nbsp; திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான பிரபாத் மதுசங்க என்ற &#039;மிதிகம சூட்டி&#039; என்பவருக்குச் சொந்தமான வீட்டினைப் பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான பிரபாத் மதுசங்க என்ற 'மிதிகம சூட்டி' என்பவருக்குச் சொந்தமான வீட்டினைப் பயன்படுத்துவதைத் தடை செய்யச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>

வெலிகம, பாத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றே இவ்வாறு பயன்பாட்டிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311990cc-657b-4a92-bf90-66b2a926d7c3/26-6a9a7168db0f2.webp' /></p><p>
</p><p>
குறித்த வீடும் காணியும் சுமார் 1.5 கோடி ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் ஸ்டைல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் விநாயகர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 
 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> 
 

விநாயகா சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான தீம்களில் (Themes) விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d6ce9e0-93bf-40f6-85a7-2084332f8598/26-6a9a6a9764e3a.webp' /></p><h2>வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது</h2><p>
</p><p>
 அந்த வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தோன்றிய கோட் சூட் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p></p><p> </p><p>&nbsp;சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் செய்த வைரல் சைகை இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளில் இடம்பெற்றுள்ளதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p> 

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bde64ea-591d-4033-af4c-4c6d373d903f/26-6a9a62d03cd38.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL-ல் புதிய சத சாதனை படைத்த இலங்கை வீரர் தசுன் ஷானக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057"></link>
            <id>https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057</id>
            <summary type="text">இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> </p><p></p><p>கரீபியன் பிரீமியர் லீக்கின் 25 ஆவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பாசெட்டெர் மைதானத்தில் இடம்பெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76126317-b483-4b3e-8c77-ccc54bccdf72/26-6a9a602a8bbfb.webp' /></p><p> 

துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். </p><p>

அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார். 

இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார். </p><p>

தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. </p><p>

இதற்கு முன் CPL இல் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் சதம் பெற்றிருந்தனர்.</p><p> 

இந்நிலையில் தசுன் ஷானக அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 13.5 நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. </p><p>

துடுப்பாட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பில் அதிகப்பட்சமாக டிம் சீஃபர்ட் 50 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் ஆசிரியை கொலை; மகனுக்கு பொலிஸார் வலைவீச்சு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கைது செய்வதற்கான விசாரணையை கந்தாரா போலீசார் தொடங்கியுள்ளனர். </p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், நான்கு பிள்ளைகளின் தாயான, விதானா அரச்சிங்கே ரெசிரினா ஸ்ரீமதி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.

கொலை நடந்த நேரத்தில், அந்த ஓய்வுபெற்ற ஆசிரியை, தபால் ஊழியரான தனது இளைய மகனுடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6826b37c-8f76-41ee-b8eb-db459f914668/26-6a9a5df56f244.webp' /></p><h2>&nbsp;சிசிடிவி காட்சியால் சிக்கிய மகன்</h2><p> </p><p>இந் நிலையில் கடந்த&nbsp; &nbsp;2ஆம் தேதி காலையில், இளைய மகன் காலி பகுதிக்கு வேலைக்குச் சென்றிருந்தார். 

அப்போது, ​​அவரது மனைவியும் பிள்ளைகளும் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர் வீடு திரும்பியபோது, ​​தனது படுக்கையறையில் தாயார்&nbsp; இரத்தக் குளியலில் கிடப்பதைக் கண்டார். </p><p>&nbsp;அதிச்சியடைந்த&nbsp; மகன்&nbsp; உடனடியாக 1919 என்ற எண்ணிற்கு ஆம்புலன்ஸை அழைத்தார், ஆனால் அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, 119 என்ற அவசர எண்ணின் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்.</p><p></p><p>
</p><p>
போலீசார் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​இறந்த பெண்ணின் மூத்த மகன் வீட்டிற்குத் திரும்பி வந்து இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. </p><p>

அவரை ஓடுவதைக் கண்ட ஒரு குடியிருப்புவாசி, அதுபற்றிக் கேட்டபோது எந்தப் பதிலும் அளிக்காமல் தப்பி ஓடியதாகவும், பின்னர் அந்தச் சந்தேக நபர் தனது கைபேசியை அணைத்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
</p><p>
மாத்தறை பதில் நீதிபதி பாலித ஹெட்டியாராச்சி 3ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, பிரேதப் பரிசோதனைக்காக உடலை மாத்தறை பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். </p><p>

மாத்தறை பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன விஜேசேகரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கந்தறை பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த ஜயலத்தின் மேற்பார்வையிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாசிரியர் சலிந்த அமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T05:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192"></link>
            <id>https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80200c9-8f89-4bdf-8f7f-6f696418a16f/26-6a9a455959db2.webp' /></p><p>இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.</p><p>

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:36:22+00:00</updated>
        </entry>
    </feed>
