<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T23:15:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள சகோதரருக்கு உணவில் போதைப்பொருள் ; இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578</id>
            <summary type="text">களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a053d09-c043-4a5e-afbc-1247d955a1ff/26-6a790723c7e9a.webp' /></p><p>மில்லனிய - பட்டகொட வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால், வீதித் தடையொன்றில் வைத்து இவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு உணவுப் பொதிகளில் இருந்த 'சில்லி பேஸ்ட்' (Chili Paste) பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
வீதித் தடைக்கு சற்றுத் தொலைவில் உந்துருளியை நிறுத்தி, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டதாலேயே காவல்துறை அதிகாரிகள் அவர்களைப் பரிசோதித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் பயணித்த உந்துருளி மற்றும் கைபேசி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அங்குறுவாதொட்ட காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் புதிய உச்சம் ; 7 மாதங்களில் 5 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ee7663-3ff4-4b16-9d2d-2d1e47a72e29/26-6a790178b72a9.webp' /></p><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.
</p><p>
ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் குறித்து தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077"></link>
            <id>https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077</id>
            <summary type="text">தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் ராமு ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616a096e-96e8-4098-be2a-5296aa2d948d/26-6a78c6af46ded.webp' /></p><p>

அவர்கள் குறிப்பிடுகையில், "புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.</p><p> ஆனால், அந்தச் சிறப்பான விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது கண்டிக்கத்தக்கது. </p><p>வருங்காலத்தில் இதுபோன்று நிகழக் கூடாது.

தமிழக முதல்வர் விஜய், அரச விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனக் கூறியது போல, புதுச்சேரி அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
</p><p>
பிரதமர் கூடத் தமிழ் தான் மூத்த மொழி எனக் கூறியுள்ளார். எனவே, அனைத்து அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும்; இல்லையெனில் வீதியில் இறங்கிப் போராடுவோம்.
</p><p>
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். </p><p>இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். எனவே, வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-liquor-outlet-raided-two-arrested-1786309376"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-liquor-outlet-raided-two-arrested-1786309376</id>
            <summary type="text">கல்கிஸ்ஸை, மொரட்டுவை, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து விநியோகித்து வந்த நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கிஸ்ஸை, மொரட்டுவை, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து விநியோகித்து வந்த நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>அவ்விடத்திலிருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 135 லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட், 08 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 16,000 லீற்றர் கோடா (Goda) மற்றும் பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/650774c4-6c4a-4edb-b8d6-7653d53b5681/26-6a78eb02af50b.webp' /></p><p>கரதியான குப்பைக் கழிவு மேட்டிற்கு அருகிலுள்ள பொல்கொட ஆற்றிற்குச் சொந்தமான வேரஸ் கங்கைத் தீவில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சப்படுவதாக கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை, தெலாவல பகுதியைச் சேர்ந்தவர்களாவர். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இந்தியா வழங்கிய மற்றுமொரு அதிரடி உதவி ; 5 பெய்லி பாலங்கள் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094"></link>
            <id>https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094</id>
            <summary type="text">&#039;டித்வா&#039; சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டித்வா' சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.</p><p></p><p> 

250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் புதிய பாலத் தொகுதி, இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரழிவிற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தின் மற்றொரு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659b7178-6f52-4578-b451-0b967df74dda/26-6a78e60000f7c.webp' /></p><p> 

இலங்கைக்கான இந்தியத் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரி கே, இப் பாலத் தொகுதியைச் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சின் கூற்றுப்படி, இந்தியா இதற்கு முன்னர் வழங்கிய இரண்டு பாலத் தொகுதிகளுக்கு மேலதிகமாக, 5 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய 5 மொடுலர் (Modular) பெய்லி பாலங்கள் இந்த மூன்றாவது நன்கொடையில் அடங்கியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை ; 03 விற்பனை நிலையங்களுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826"></link>
            <id>https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826</id>
            <summary type="text">அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.</p><p></p><p> 

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af77949-a8a1-4702-a9bb-a3abdfa038e9/26-6a78e10c6113a.webp' /></p><p>இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளையொன்றைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அதன் விலையைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், நுகர்வோரிடம் அநியாயமாகப் பணம் அறவிடும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சிக்கு நாவலப்பிட்டியில் பலத்த அடி ; சர்வஜன அதிகாரம் பக்கம் தாவிய முக்கிய முன்னாள் அமைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motu-party-suffers-heavy-blow-in-nawalapitiya-1786302944"></link>
            <id>https://jvpnews.com/article/motu-party-suffers-heavy-blow-in-nawalapitiya-1786302944</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதி முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், &#039;சர்வஜன அதிகாரம்&#039; கட்சியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதி முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், 'சர்வஜன அதிகாரம்' கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நாவலப்பிட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (09) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, சர்வஜன அதிகாரத்தின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம முன்னிலையில் இக்குழுவினர் இம்மாற்றத்தை முறைப்படி அறிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55ff723-304f-4c22-bb17-ca496be1d885/26-6a78d1e278508.webp' /></p><p>இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திலும் அமுனுகம, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்:
</p><p>
அரசாங்கத்தின் பொறுப்புத் துறப்பு: "சிறைச்சாலை மோதல்களுக்கு எதிர்க்கட்சியே காரணம் எனக் கூறுவதானால், நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இயங்கவே தேவையில்லை."</p><p>

சர்வாதிகாரப் போக்கு: "மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையும் மீறி, நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது."
</p><p>
வளர்ந்து வரும் வாக்கு வங்கி: "நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் தங்களின் நிலையான வாக்கு வங்கியை இழந்து வரும் நிலையில், சர்வஜன அதிகாரம் மட்டுமே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி குறுகிய காலத்தில் மிக வலுவான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது."</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழைகளின் பணத்தில் கைவைத்த அதிகாரிகள் ; அஸ்வெசும ஊழலில் தொடரும் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-who-tampered-with-the-money-of-the-poor-1786298683"></link>
            <id>https://jvpnews.com/article/officials-who-tampered-with-the-money-of-the-poor-1786298683</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் &#039;அஸ்வெசும&#039; நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் 'அஸ்வெசும' நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h3>ஆரம்ப கட்ட விசாரணை</h3><p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் போய் சேர வேண்டிய இந்தச் சமூக நலன்புரித் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது மற்றும் உறவினர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e3e992-d29d-4519-b245-6284a26d8499/26-6a78c13cd83ba.webp' /></p><p>இந்த மாபெரும் நிதிச் சூறையாடலில் மொத்தம் 11 அரச ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. </p><p>இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T18:04:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இலங்கையர்களுக்கான 16,000 பணியிட பதிவுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-those-wishing-israel-1786298016"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-those-wishing-israel-1786298016</id>
            <summary type="text">இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன.</p><p>
</p><p></p><p>அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aeb73ea-bb86-48c0-bf63-b9592ce7b036/26-6a78bea1c7037.webp' /></p><p>சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.
</p><p>
மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
</p><p>
அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
</p><p>
25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். </p><p>முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:53:42+00:00</updated>
        </entry>
    </feed>
