<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T05:43:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதி வருமானம் 12.4 கோடியைத் தாண்டியது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-expressway-revenue-crossed-12-4-crore-1787894176"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-expressway-revenue-crossed-12-4-crore-1787894176</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆகும்.

 

ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db15a05a-ebc0-49f7-8f8f-306cc12af8aa/26-6a9119a18e0a5.webp' /></p><p>அத்துடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.

 

ஓகஸ்ட் 27 ஆம் திகதி அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆகும். அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T05:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்குக்கான புகையிரத மார்க்கத்தில் தடங்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/disruption-on-the-railway-line-to-the-north-1787893810"></link>
            <id>https://jvpnews.com/article/disruption-on-the-railway-line-to-the-north-1787893810</id>
            <summary type="text">&amp;nbsp; பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பொல்கஹவெலவிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்றே பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0590c8-68c2-47d7-8c37-6f0e93d8b44c/26-6a91183418db2.webp' /></p><p>இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T05:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப வன்முறை ; இலங்கை பெண்கள் தொடர்பில் அதிர்ச்சிதரும் ஆய்வு அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/domestic-violence-shocking-research-report-1787892742"></link>
            <id>https://jvpnews.com/article/domestic-violence-shocking-research-report-1787892742</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதேபோன்று, இலங்கையிலுள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் 15 வயதிலிருந்தே சரீர மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb34fc0c-74d2-4b5b-9f12-5695d1234e76/26-6a9114081001b.webp' /></p><h2>பாலியல் மற்றும் ஆண் பெண் தன்மையின் அடிப்படையில் துன்புறுத்தல்</h2><p>
</p><p>


08 மாவட்டங்களில் 888 பெண்கள் மற்றும் 109 பணியாளர்களூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் அனுபவங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
</p><p>
 அதில் , இலங்கையில் பாலியல் மற்றும் ஆண் பெண் தன்மையின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு தீர்வுகாணும் சேவை கட்டமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


ஜனநாயகத்துக்கான தேசிய நிதியம், டியாகொனியா மற்றும் இலங்கையில் செயற்படும் விழுது அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டது.



இந்த ஆய்வறிக்கையில் , </p><p>துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்ணொருவர் அதுதொடர்பில் முறைப்பாடு செய்யும் சதவீதம் நூற்றுக்கு முப்பது சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல், பல்வேறு விபத்துகளுக்குள்ளாகுதல், வெட்கம், ஏற்புடைமை தொடர்பிலான பயம் மற்றும் விவாகரத்து மீதான பயம் காரணமாக அவர்கள் அந்த துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்ரி ராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘பல வருடங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பலனாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


பெண்களின் வாழ்க்கையில் துன்புறுத்தல்கள் நிகழ்வதுடன் அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டதாக ராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உள்ளக மற்றும் வாழ்க்கை துணைகளினால் சாதாரணமாக ஏற்படும் துன்புறுத்தல்கள் சில சந்தர்ப்பங்களில் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு கடுமையான நிலைமைக்குள்ளாகி, அதற்கு பெண்களும் இசைவாக்கமடைவதாக ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>


இந்த ஆய்வறிக்கை பெண்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்டு ஆய்வு கருத்தாடல் மற்றும் நடைமுறை செயற்பாடுகளுக்கு பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


இதேவேளை, வெறும் வன்முறைகள் பற்றி மட்டும் தேடிப்பார்க்காமல் பிந்தைய உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் உயிர் காப்பாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும்போது இடம்பெறும் தோல்வியை அறிக்கையிட்டு பதிலளிக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T04:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்பு ; 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை; கிலியில் பலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149"></link>
            <id>https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bcf82c-2ef4-40ad-9a5b-e9b90289bd2f/26-6a9111b6d7f89.webp' /></p><h2>&nbsp;அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்</h2><p>



 விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.</p><p>



தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T04:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிக்காரர்கள் ; கோடீஸ்வர யோகம் இவர்களுக்குத்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-caught-in-baba-vanga-s-predictions-1787879076"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-caught-in-baba-vanga-s-predictions-1787879076</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்&amp;nbsp; பாபா வங்காதான். உலகின் வரலாற்றை மாற்றிய பல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp; எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்&nbsp; பாபா வங்காதான். உலகின் வரலாற்றை மாற்றிய பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரகங்களின் அமைப்பானது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/184f9a79-eae3-4666-9cfd-e851554c46b5/26-6a90dea5b2dfd.webp' /></p><h2 style="text-align: justify; ">என்னென்ன தெரியுமா?</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>&nbsp;ரிஷபம் :</b> பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களின் கடின உழைப்பிற்கான பெரும் பலன்களை இப்போது அடையலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இப்போது அலுவலகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கலாம். அதேசமயம், வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>
சிம்மம் : </b>பாபா வங்காவின் கணிப்பின்படி, இந்த மாதத்தில் அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது மட்டுமின்றி பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சிஆகியவை அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களைச் செல்வந்தராக மாற்றக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம் :&nbsp;</b>இந்த மாதத்தில் அவர்கள் செய்யும் முதலீடுகள் அவர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுக்கக்கூடும். இந்தக் காலம் அவர்களை நிதிரீதியாக வலிமைமிக்கவராக மாற்றக்கூடும். இந்த மாதம் நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்கலாம் அல்லது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு முக்கியமான நபரின் நட்பைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலமாக இருக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; 19 வயது இளைஞனின் உயிரை பறித்த தொலைபேசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/phone-claims-the-life-of-a-19-year-old-youth-1787877836"></link>
            <id>https://jvpnews.com/article/phone-claims-the-life-of-a-19-year-old-youth-1787877836</id>
            <summary type="text">கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df9da5c-bd26-43a0-93e8-9378d669e5c7/26-6a90d9cdc4bf6.webp' /></p><h2 style="text-align: justify;">பிரேத பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

குறித்த இளைஞன் சம்பவ தினமான வியாழக்கிழமை (27) மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு கையடக்க தொலைபேசியை அவரது நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு நிலையத்திற்குள் தம்பதியரின் தகாத செயல் ; கட்டுக்கட்டாக மீட்க்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374"></link>
            <id>https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374</id>
            <summary type="text">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e285455-824d-4b52-825a-d76a60c0a6b9/26-6a90d418236bb.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வியாபாரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? இதை பாருங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946"></link>
            <id>https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். </p><p>ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ed863b-7889-4f9e-a2cb-5db86a8a6c35/26-6a90ce845d382.webp' /></p><h2>என்னவெல்லாம் செய்யக்கூடாது&nbsp;</h2><p><b> குளித்தல்: சாப்பிட்ட </b>உடனே குளித்தால் ரத்த ஓட்டம் தோலின் பகுதிக்கு சென்று வயிற்றுக்கான ரத்த ஓட்டம் குறைந்து செரிமானம் தாமதமாகும்.
</p><p><b>
உடனே படுப்பது:</b> சாப்பிட்டுவுடன் படுப்பது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து படுக்க வேண்டும். இரவு உணவுக்கும் தூங்க செல்வதற்கும் இடையே 2 மணி நேரம் இருப்பது மிகவும் நல்லது. அதுவும் தூக்கத்திற்கு முன் சிறிது நேரம் நடந்து விட்டு படுப்பது இன்னும் நல்லது..</p><p></p><p><b>அதிக தண்ணீர் குடித்தல்:</b> உணவருந்தியதும் உடனே அதிகமாக தண்ணீர் கொடுத்தால் செரிமான நீரில் நீர்த்துப் போய் செரிமானம் மந்தமாகும்.


டீ அல்லது காபி குடித்தல்: உணவுக்கு பின் தேநீர் அல்லது காபி குடிப்பது உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுத்து அமிலத்தன்மையை உருவாக்கும். இதனாலும் செரிமானம் பாதிக்கப்படும்.</p><p><b>
பழங்கள் சாப்பிடுதல்: </b>உடனடியாக பழங்கள் சாப்பிடுவது வாயு தொல்லை அல்லது செரிமான கோளாறை உண்டாக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T01:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணத்திற்காக சிறுமிக்கு ஆடையின்றி பூஜை; ஆறு மாதகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589"></link>
            <id>https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589</id>
            <summary type="text">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.&nbsp; </p><p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். </p><p style="text-align: justify;">அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d22fd00-84b7-493d-a6f3-6efa959ae20c/26-6a908ab74750c.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறப்புப் பூஜைகள்</h2><p style="text-align: justify; ">ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

</p><p style="text-align: justify;">
மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.</p><p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்,&nbsp; புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p style="text-align: justify;">

சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T01:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம்; தாய்க்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb23d020-f6ba-4725-a536-569305948535/26-6a90a85ed5d2b.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T01:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் அவதூறு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454</id>
            <summary type="text">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தனது நற்பெயரைக் கட்டியெழுப்பியதாகவும், கூறப்படும் பொய்யான கூற்றுகள் தனது பெயருக்கும், கடினமாக உழைத்து நிலைநாட்டிய நற்பெயருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c303b774-f3d6-44fd-8776-a5d6803e4869/26-6a90b527c6a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">விரைவான விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்தப் புகாரை அளித்ததாகவும், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்படுமாறும், கருத்துக்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தனது வழக்கறிஞர்கள் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு சட்டரீதியான தீர்வு காணப்போவதாகவும் தில்ஷான் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-28T01:08:35+00:00</updated>
        </entry>
    </feed>
