<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-12T02:43:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை நாளான இன்று மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680</id>
            <summary type="text">என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எந்த ஒரு திதி கொடுக்காவிட்டாலும், இந்த அமாவாசையில் காரியம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318fb8d-e62a-4c6d-8d82-88fdfadcc750/26-6a7ba76ad8d9e.webp' /></p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை இன்றைய நாளான ஆகஸ்ட் 12 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பது நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. எவ்வாறான விடயங்களை ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00fc842-3f1c-465c-af7d-ea619b81f284/26-6a7ba76a32e33.webp' /></p><h4>தர்ப்பணத்திற்கு முன் கோலம் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளானது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்யும் நாளாகும். இந்நாளில் தர்ப்பணம் செய்வதற்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. எனவே ஆடி அமாவாசை நாளில் வீட்டில் திதி அல்லது தர்ப்பணம் செய்யும் வரை கோலம் போடாதீர்கள்.</p><h4>சுப காரியங்களைத் தவிர்க்கவும்
</h4><p>அமாவாசை நாளானது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள் என்பதால், இந்நாளில் சுப காரியங்களான திருமண பேச்சு வார்த்தை, புதுமனை புகுவிழா நடத்துவது, புதிய தொழிலை தொடங்குவது, வீடு, வாகனம் வாங்குவது போன்ற சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய நடைமுறை.</p><h4>அசைவ உணவுகள் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அல்லது அசைவ உணவை வெளியில் வாங்கி உண்பது போன்றவற்றை தவிர்ப்பது வழக்கம். அதேப் போல் சைவ உணவை உண்பவர்கள் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர், முருங்கை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் தாமச குணம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.</p><h4>ஷேவிங் மற்றும் முடி வெட்டுவது</h4><p>கூடாது
ஆடி அமாவாசை நாளில் ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, ட்ரிம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. சில வீடுகளில் தாய் தந்தை உள்ளவர்கள் அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதைத் தவிர்ப்பார்கள்.</p><h4>உணவை வீணாக்கக்கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஏதாவது ஒரு வடிவில் நம்மை சுற்றி வருவார்கள் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட நாளில் காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அதை விடுத்து அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்த உணவை வீணாக்காமல் அளவாக சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை சாதம் மீந்து போனால், பசியுடன் இருப்பவர்களுக்கு அதை கொடுங்கள்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணம் ; ‘தினன தகுண’ அமைப்பு கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374"></link>
            <id>https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374</id>
            <summary type="text">இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் &#039;தினன தகுண&#039; அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தனது பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் 'தினன தகுண' அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கும், அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்கும் ஊழலுக்கு எதிரான அலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய முற்பட்டமை இதற்குச் சிறந்த அண்மைய உதாரணமாக கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faac22ba-e3c1-439e-a84b-28c81541b192/26-6a7b9e6875707.webp' /></p><p>குடிமைசார் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருந்தும், அரசாங்கத்தின் ஏவலாளராகச் செயற்பட்டு காவல்துறையினர் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முயன்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்க ஆட்சி பீடமேறி 18 மாதங்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த 0வமைப்பு, உண்மையான வருமான வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு மற்றும் மறைமுக வரிகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றை அரசியல் எதிரிகளைப் பயமுறுத்தும் கருவிகளாக அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், இது ஜனநாயகத்தை காவல்துறை ராஜ்யத்தை நோக்கித் தள்ளும் ஆபத்தான நடவடிக்கை என்றும் 'தினன தகுண' அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் பயணத்துக்கு எதிராகக் குரலெழுப்புமாறும், நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறும் 'தினன தகுண' அமைப்பு ஊடகவியலாளர்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T22:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ; ரவிகரன் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337"></link>
            <id>https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான இரண்டாவது கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். </p><p>இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b15506e-96e8-4d6e-acf7-de4f0c6db9ed/26-6a7b9a5ad58bc.webp' /></p><p>

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில், அப்பகுதி மீனவர்களால் பெறப்பட்ட தெளிவான புகைப்பட ஆதாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நேரடியாகவே கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து உடனடி நடவடிக்கை கோரினார்.
</p><p>
கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரவிகரன் எம்.பி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளே இச்சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றம்சாட்டினார்.</p><p>

"தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால், அவர் சாலைப் பகுதியில் ஐந்து படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். </p><p>இத்தகைய வெளிமாவட்ட ஊடுருவல்களால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்வதோடு, முல்லைத்தீவு கடற்பகுதியின் வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137"></link>
            <id>https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து &#039;ஸீரோ க்ளிக்&#039; (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><p>பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) சொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64bd223-5adf-4898-992a-479da2d3daad/26-6a7b95aae5639.webp' /></p><p>

பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் 'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389"></link>
            <id>https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389</id>
            <summary type="text">முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeba6ff3-e055-4ea7-836a-aa9c9785eff7/26-6a7b92bf3b868.webp' /></p><p>இந்தத் திட்டத்திற்கு 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல், சட்டம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ,அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வலுசக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன்படி, ஒப்பந்தத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இன்றி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம் முத்துராஜவெல முனையத்தின் எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய அதிர்ச்சி ; பணமீட்டல் தகுதி இருமடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574</id>
            <summary type="text">யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP)-இல் இணைந்து பணமீட்டுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a962d5-c8c8-4024-82c2-83151bdb708d/26-6a7b8f9009510.webp' /></p><p>இதன்படி, யூடியூப் மூலம் விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டும் வசதிகளைப் பெற விரும்பும் சேனல்கள் இனி பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p>

பின்தொடர்பவர்கள்: குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.
</p><p>
பார்வை நேரம்: கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்குக் கிடைத்த மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
YouTube Shorts: Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் என்ற வரம்புக்கு பதிலாக 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
இந்த புதிய தகுதி வரம்புகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், YouTube Partner Program-இல் இணைந்து பணம் ஈட்ட விரும்பும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:09:44+00:00</updated>
        </entry>
    </feed>
