<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T07:34:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி மோசடி ; தமிழக அரசின் கிடுக்கிப்பிடியில் அன்பில் மகேஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936717ae-67a4-46ed-93b0-5deb7d05a02b/26-6aaa44dfac6ca.webp' /></p><h2>&nbsp; &nbsp;100 கோடி மோசடி</h2><p>
</p><p>
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
</p><p>
மேலும், சென்னை, திருச்சியில் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும் அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9000 கடல் அட்டைகளுடன் நாங்கு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


நேற்றிரவு(15) இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது, 02 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf566e05-5617-4fe2-a787-990f5336f5bb/26-6aaa4111327da.webp' /></p><p>
</p><p>
 வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குச் சொந்தமான கல்முனை முனை கடற்படைப் பிரிவினால், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>


 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைகளின் தொகுதியுடன் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு (04) சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகுகளும் இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>

 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-for-forging-land-documents-1789541999</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு 07, பார்ன்ஸ் பெலேஸ் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றுடன் தொடர்புடைய போலியான உறுதியொன்றைத் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டவர் கது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1e29a1-4175-4e27-a19e-0ddffc0fffd8/26-6aaa3e71ee902.webp' /></p><p>
</p><p>

அதற்கமைய, 2026.09.16&nbsp; இன்று களுத்துறை நகரில் வைத்து குறித்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p></p><p>
</p><p>
குறித்த சந்தேகநபர் இந்த போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் ரூபாய் 10,000,000/- (ஒரு கோடி ரூபாய்) பெறுமதியான சொத்தொன்றை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-16T06:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>

ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ff3201-30f0-4bb3-80d2-527b725430ff/26-6aaa205edf994.webp' /></p><p>
</p><p>

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் தகவல்களை மறுக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847"></link>
            <id>https://jvpnews.com/article/refute-information-shiranthi-rajapaksa-family-1789540847</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 

ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801daa6d-f37c-4c94-8679-2b9b2d646ba7/26-6aaa39f16f0b9.webp' /></p><h2>எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

 அத்துடன் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.</p><p></p><p>
</p><p>
 

முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

அதன்படி ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-16T06:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gnanasara-thero-appears-in-court-1789538834"></link>
            <id>https://jvpnews.com/article/gnanasara-thero-appears-in-court-1789538834</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.</p><p>

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf44efd-f155-4b75-bf0d-38e9e6a37ee8/26-6aaa32144aedc.webp' /></p><h2>இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து</h2><p> விசாரணைகளின் பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp; அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருந்தது.</p><p>



அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-former-minister-johnston-fernando-1789537473"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-former-minister-johnston-fernando-1789537473</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9533445e-445b-4273-959f-9b05a26129ce/26-6aaa2cc2b58c0.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p></p><p>
</p><p>
 

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
 

 மேலும் , இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் 100 வயதைக் கடந்த ஒரு லட்சம் முதியவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-hundred-thousand-people-over-100-in-japan-1789537113"></link>
            <id>https://jvpnews.com/article/one-hundred-thousand-people-over-100-in-japan-1789537113</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பானில் தற்போது 107,677 முதியவர்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3005fe37-c482-460d-845a-dae14dc2d8d5/26-6aaa2b5b26f6e.webp' /></p><h2>உலகிலேயே மிக அதிக எண்ணிக்கை</h2><p> 100 வயதைக் கடந்தவர்களில் 88% பேர் பெண்கள் ஆவர்.

கியோட்டோ (Kyoto) நகரத்தைச் சேர்ந்த 114 வயதான கிஷிமோட்டோ ஃபுயோ (Kishimoto Fuyo) மிகவும் வயதான பெண்ணாகவும், குமாமோட்டோவைச் (Kumamoto) சேர்ந்த 112 வயதான காடோ ஹிகாரூ (Kato hikaru) மிகவும் வயதான ஆணாகவும் கருதப்படுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர் கெனிசிரோ உஎனோ (Kenichiro Ueno), சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையான சமூகப் பாதுகாப்பு அமைப்பைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p>

மீன், காய்கறிகள் மற்றும் அரிசி ஆகியவை அடங்கிய குறைந்த நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பாரம்பரிய உணவு முறை.
</p><p>முதியவர்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பன இதில் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.14 ஆகக் குறைந்துள்ளது.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தற்போது நாட்டின் 30% மக்கள்தொகையாக உள்ளனர். </p><p>இது 2070 ஆண்டுக்குள் 40%ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2008 இல் 12.8 கோடியாக இருந்த உச்சபட்ச மக்கள் தொகை, 2070 க்குள் 30% குறைந்து 8.7 கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p> 

அதேசமயம் 1963-ல் முதன்முதலில் இந்த ஆய்வு தொடங்கியபோது 100 வயதைக் கடந்தவர்கள் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1981-ல் 1,000 ஆகவும்இ 1998-ல் 10,000 ஆகவும் உயர்ந்ததாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு; அதிகாலை இடம்பெற்ற துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-women-killed-in-train-accident-kalutara-1789535123"></link>
            <id>https://jvpnews.com/article/two-women-killed-in-train-accident-kalutara-1789535123</id>
            <summary type="text">&amp;nbsp; களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

இந்த விபத்தில் தாயும் அவரது உறவினரான மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் வந்த மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a4620f-875f-40ec-a46c-df7951f584a7/26-6aaa239555ef9.webp' /></p><h2>&nbsp; கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது&nbsp; துயரம்&nbsp;</h2><p>
</p><p>
இன்று காலை 4.30 மணியளவில் இவர்கள் ரயில் பாதையில் கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மருதானையிலிருந்து காலி நோக்கி அதிவேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது.</p><p>

 மதுகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள் மற்றும் உறவினரான மகள் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் நடைபெறும் மத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர்.
</p><p>


அனுராதபுரம் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடையை நோக்கி ரயில் பாதையின் வழியே இவர்கள் நடந்து சென்றபோது இந்த துயரம் நிகழ்துள்ளது.
</p><p>









உயிரிழந்தவர்களின் சடலங்கள் முதற்கட்டமாக தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன..சடலங்களை பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



விபத்து குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலை; கடும் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4a2b021-6dbb-40b2-93fc-a30044694791/26-6aaa21987c986.webp' /></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள&nbsp; நாமல்&nbsp;</h2><p>
</p><p>
 

குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p>2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியிருந்தார்.</p><p></p><p>&nbsp; தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-16T04:53:33+00:00</updated>
        </entry>
    </feed>
