<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T18:33:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-foreign-secretary-meets-president-1785953264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-foreign-secretary-meets-president-1785953264</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது.
</p><p>


இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a562dc8-dbcf-40d7-b7f8-4a9209aee48b/26-6a737bf308d2c.webp' /></p><h2>எதிர்கால&nbsp;திட்டங்கள் </h2><p>
</p><p>






2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.</p><p>



இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>


போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>



காலநிலை மாற்றத்தால் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>



இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
</p><p>


மேலும், தொழில்நுட்பம், வலுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T18:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது இளைஞனின் உயிரைப் பறித்த பேருந்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221"></link>
            <id>https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221</id>
            <summary type="text">மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

 

நேற்று (04) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம, சீராதுன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d47edccd-32fa-4360-b824-4e88719fc359/26-6a73700f052d1.webp' />&nbsp;</p><h2>&nbsp;மேலதிக சிகிச்சை</h2><p>
</p><p>
 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>&nbsp;மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை ; 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-weather-affects-over-16-000-people-1785948723"></link>
            <id>https://jvpnews.com/article/severe-weather-affects-over-16-000-people-1785948723</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அந்த நிலையம் வெளியிட்ட பு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

அந்த நிலையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e01b3d9-1656-4946-b574-04d59ce8b97a/26-6a736a352fa11.webp' /></p><h2 style="text-align: justify;">சீரற்ற வானிலை</h2><p style="text-align: justify;"> 

நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

அங்கு 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 7,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்களும் பதிவாகியுள்ளன. </p><p style="text-align: justify;">

புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

அதன்படி, சீரற்ற வானிலையால் இதுவரை மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify;">

அனர்த்த நிலைமையினால் ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> 

நாடு முழுவதும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 383 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இந்தத் தரவுகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T17:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் காசாளர் மீது துப்பாக்கிச்சூடு ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138"></link>
            <id>https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138</id>
            <summary type="text">மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெல வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த வருடம் நவம்பர் (17) இரவு 8.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இருவர் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e89f315-651d-48c8-b136-8599351d2401/26-6a7367eb71e14.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
சம்பவத்தில் படுகாயமடைந்த 48 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்ற உணவகத்தில் காசாளராகக் குறித்த பெண் பணியாற்றி வந்தவராவார்.</p><p>


சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு, கந்தர மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும் பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தால் பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதற்கமைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோருகின்றனர். படத்தில் உள்ள சந்தேகநபர் உபுல் குமார எனும் ஜம்பு என்பவராவார்.</p><p></p><p> 39 வயதுடைய 871254385V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவராவதோடு, உடுமுல்ல ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p> குறித்த நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறியக்கிடைக்கும் பட்சத்தில் மீட்டியாகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591481 மற்றும் பொலிஸ் நிலையம் 0912260423 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206</id>
            <summary type="text">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ade9d7-4125-405b-89e2-f2e2ad5ade87/26-6a735c77882ef.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத செயல்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் அதனைப் பரப்புவதும் அச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் குற்றமும் சட்டவிரோதமான செயலுமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்காகத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அந்த இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T16:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதிகளில் பயணிப்போரின் கவனத்திற்கு ; நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expressway-users-alert-grace-period-extended-1785946796"></link>
            <id>https://jvpnews.com/article/expressway-users-alert-grace-period-extended-1785946796</id>
            <summary type="text">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கட்டளையின்படி, அதிவேக வீதிகளில் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2538a8-22fe-4389-bbaa-4ba33ca7793f/26-6a7362adbecd9.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சலுகைக் காலம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


ஆசன பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்து பொருத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகைக் காலம் 2026 ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p style="text-align: justify; ">

எனவே, இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த அரசாங்கம், 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் குறித்த கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை 2026 செப்டம்பர் 19 வரை நீடித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T16:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-announcement-for-hatton-schools-1785936423"></link>
            <id>https://jvpnews.com/article/special-announcement-for-hatton-schools-1785936423</id>
            <summary type="text">&amp;nbsp; சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்படி குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8b78a1-c75e-4d4b-91c7-2f7a8e7ad0bf/26-6a733a2885dfb.webp' /></p><p> </p><p>

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-president-rejects-allegations-1785936069"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-president-rejects-allegations-1785936069</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தன்மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவையென இலங்கை சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தன்மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
</p><p>


இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவருடன் இரகசிய உடன்படிக்கை செய்ததாகவும், பின்னர் தமக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பரப்பப்படும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6833cff8-fd9c-4d2c-8c66-72ec3d2401f6/26-6a7338c71086d.webp' /></p><p>



தான் ஒரு மோட்டார் வாகன நிறுவனத்தின் சார்பில், சட்டத்தரணியாக தனது தொழில்முறை கடமையின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் ஆஜராகியதாகவும், அதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மேலும், அறிந்தே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அவ்வாறான முறைப்பாடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


தனிப்பட்ட தாக்குதல்கள் தம்மை அச்சுறுத்தாது என்றும், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் என்றும் ரஜீவ் அமரசூரிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/swearing-in-new-governor-of-the-central-province-1785934453"></link>
            <id>https://jvpnews.com/article/swearing-in-new-governor-of-the-central-province-1785934453</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>


உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராக பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d7b1c0-8dda-464b-9a48-2424143a1a5e/26-6a733276d15b6.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய தினத்திலிருந்து காற்று மழை தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018"></link>
            <id>https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e19cf93-97e9-46b7-9dc1-4e29cf232eef/26-6a7334ab745e8.webp' /></p><p> </p><p>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். </p><p>

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு; ஓய்வு பெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577</id>
            <summary type="text">&amp;nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><h2>34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா</h2><p> </p><p>

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d510cc-3ee2-42aa-b997-ee0d7857f9e0/26-6a730414cc5d0.webp' /></p><p>குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.</p><p></p><p> </p><p>அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.</p><p>உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே.
அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813b6323-6590-4cf8-8077-b0bf07bacd00/26-6a730414202a5.webp' /></p><p>
தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார். </p><p>
உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில், அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.</p><p></p><p>இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றும் பல வைத்தியர்களின் நினைவில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6f0775-095e-41fc-942d-2b55648bb3d3/26-6a73041364f76.webp' /></p><p>
</p><p>இன்று நடைபெற்ற அவரது ஓய்வுபெறும் பாராட்டு விழாவில், அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலரும் அவரது தொழில்முறைத் திறமை, அமைதியான குணம், அன்பான அணுகுமுறை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பாராட்டினர்.
அவருடைய பாடசாலை நண்பர்கள் அவரை அன்புடன் "குட்டி" என்று அழைப்பார்கள். </p><p> செல்லப்பெயரிலேயே அவரது எளிமை, நட்புணர்வு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றன.
அதேபோல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவருடன் கடமையாற்றிய பல மருத்துவர்கள் அவரை அன்போடும் மரியாதையோடும் "ஸ்ரீ அண்ணன்" என்று அழைப்பது, அவர் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பிக்கை, பாசம் மற்றும் சகோதரத்துவ உறவிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf37792-6a02-4f52-8d65-c4ed80cca8c1/26-6a73041582106.webp' /></p><p> </p><p>பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார்.
உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது. </p><p>இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.</p><p></p><p>அன்பிற்குரிய டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா !
தங்களின் 34 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு வடக்கு மக்களின் சார்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக் குடும்பத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
</p><p>தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துகிறோம்.
"ஒரு நல்ல மருத்துவர் நோயாளிகளை மட்டும் குணப்படுத்துவதில்லை; மனிதர்களின் இதயங்களையும் வென்று விடுகிறார். </p><p>அந்த அரிய பெருமைக்குரியவர் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் என , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596"></link>
            <id>https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596</id>
            <summary type="text">&amp;nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>

மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இருக்கும். அதேபோல உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0d9753-3d16-4fc6-b55e-716bfe7e77f2/26-6a730fddbbc17.webp' /></p><p></p><h2>கோமா நிலை​யில் சிகிச்சை&nbsp;கோமா நிலை​யில் சிகிச்சை </h2><p> </p><p>

கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது.</p><p></p><p>
</p><p> 

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருந்​தார்.

சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் சுசிலா உயி​ரிழந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91992eb7-bd58-4d22-9878-093eb5414b9c/26-6a731074b379b.webp' /></p><p> ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்​படைக்​காத மருத்​து​வ​மனை நிர்​வாகம், அந்த இடைப்​பட்ட நேரத்​தில் உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தலாக வசூலித்​த​தாக புகார் எழுந்​தது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்​பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்​கில், ‘ரூ.61,644 கூடு​தலாக வசூலித்​திருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்பே நீதி​மன்​றத்​தில் ஒப்​புக்​கொண்​டு, அந்​தத் தொகையை திருப்​பிச் செலுத்​து​வ​தாக தெரி​வித்​தும் இது​வரை வழங்​க​வில்​லை’ எனக் கூறப்​பட்​டது.</p><p>

வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் காசி பாண்​டியன், மருத்​து​வ​மனைக்கு ரூ.65.62 லட்​சம் அபராதம் விதித்​ததுடன், கூடு​தலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனு​தா​ரருக்கு வழங்​கவும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இரு பழங்கள்! எவை தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074"></link>
            <id>https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074</id>
            <summary type="text">&amp;nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.</p><p> தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

 ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் இரண்டும் வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc05588-0eb7-4194-924c-46ccde536e70/26-6a732d146c13a.webp' /></p><p><b>&nbsp;எடை குறைப்பு</b></p><p> </p><p>

ஆப்பிள்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக பெக்டின், நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. </p><p>இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b291bd9-55b7-469a-b8ec-fa3464424993/26-6a732e9c12a69.webp' /></p><p> </p><p>

ஆப்பிளின் வழக்கமான நுகர்வு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p> ஒப்பீட்டளவில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க விரும்புவோருக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழமாகும்.</p><p><b>இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை, விலை மலிவானவை மற்றும் உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். </p><p>இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன, இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659cb6ea-a6ad-4901-b2f2-18bce7791710/26-6a732e9d051ca.webp' /></p><p> </p><p>வாழைப்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உடல் விரைவாக ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவுகிறது.</p><p><b>செரிமானத்திற்கும் உதவுகிறது&nbsp;</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் குறிப்பாக குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், வாழைப்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியதாக வைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799ecffc-6773-4f6e-9229-b0296a17bf53/26-6a732e9dcc0c9.webp' /></p><p> 

நீங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டால் ஆப்பிள்கள் சற்று முன்னோக்கி உள்ளன. ஏனெனில் அவை கலோரிகளில் குறைவாகவும், ஆக்ஸிஜனேற்றத்தில் அதிகமாகவும் உள்ளன.</p><p> வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதே சமயம் ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு சமமாக பயனுள்ளதாக இருக்கும்.</p><p><b>நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது&nbsp;</b></p><p> 

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வைத்தியர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி இரண்டு பழங்களையும் மிதமாக சாப்பிடலாம். மென்மையான பழுத்த வாழைப்பழங்கள் பல் பிரச்சனைகள் இருந்தால் முதியவர்கள் சாப்பிடுவது எளிதாகும், மேலும் வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த சத்தான உணவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4863363c-c7ac-41c3-95e2-1f125e5b6af8/26-6a732e9e9c463.webp' /></p><p> </p><p>



வைத்தியர்களின் கூற்றுப்படி, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் நோய்களைத் தடுப்பதிலும் ஆப்பிள்கள் ஓரளவு மேம்பட்டவையாக இருக்கும் அதே வேளையில், உடற்பயிற்சிக்குப் பிறகு ஆற்றலையும், பொட்டாசியத்தையும் பெறுவதற்கு வாழைப்பழங்கள் சிறந்தவை எங்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:49:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவை சந்தித்த இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-commander-meets-president-anura-1785933967"></link>
            <id>https://jvpnews.com/article/army-commander-meets-president-anura-1785933967</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்தார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்தார்.



ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
</p><p>


புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98914c7a-cd41-451d-996d-15e0bccad4f2/26-6a73309111a1a.webp' /></p><p></p><p>



தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:44:28+00:00</updated>
        </entry>
    </feed>
