<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T07:32:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-critically-injured-in-batticaloa-accident-1787988562"></link>
            <id>https://jvpnews.com/article/three-critically-injured-in-batticaloa-accident-1787988562</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>


திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சாய்ந்தமருதிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின்கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ea985d-b8db-46dd-9039-d538b580c7e6/26-6a928a53df279.webp' /></p><p>
</p><p>


விபத்தில் 50 வயதுடைய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் உட்பட, 55 வயதுடைய தந்தையும் 18 வயதுடைய மகளும் படுகாயமடைந்துள்ளனர். </p><p>மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வ சந்நிதி ஆலய சூழலில் இப்படி ஒரு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355"></link>
            <id>https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோதகர்கள் மீது வாகனத்தால் மோத நபர் ஒருவர் முயன்றதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca701e79-0272-45a2-af55-d5934537bf1b/26-6a92859d3fa6b.webp' /></p><p></p><h2>வாகனத்தால் மோதி விபத்து</h2><p>
</p><p>
அதன் போது ஆலய சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதன் போது , புலம்பெயர் தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையத்தில் , காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளன.</p><p>

அவற்றை கைப்பற்றி அழிக்க முற்பட்ட சுகாதார பரிசோதகர்களை கடுமையான வார்த்தை பிரயோகங்களால் பேசி , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவர்கள் மீது வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் சுகாதர பரிசோதகர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T07:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, தெற்கு கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-for-northern-and-southern-sea-areas-1787986660"></link>
            <id>https://jvpnews.com/article/warning-for-northern-and-southern-sea-areas-1787986660</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு வானில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள <a href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-1787906084" target="_blank">கடற்பகுதிகளுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை</a> விடுத்துள்ளது.</p><p>



குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இதனால் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e883e6df-d885-41b7-9dcd-1f6c49cce5db/26-6a9282e5b770d.webp' /></p><p>
</p><p>


மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதனால், கடற்படை மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலையும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/snack-prices-rise-due-increase-wheat-flour-prices-1787985086"></link>
            <id>https://jvpnews.com/article/snack-prices-rise-due-increase-wheat-flour-prices-1787985086</id>
            <summary type="text">கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கோதுமை மாவின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11cb0cfb-44e4-4e24-9aca-0d9c49110396/26-6a927cbf9e10b.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க வீட்டுக்குள் நுழைந்த இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-commission-entered-ravi-karunanayake-house-1787984468"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-commission-entered-ravi-karunanayake-house-1787984468</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.</p><p> 

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/118e4fb9-5d2d-4cef-87ae-21c1bb57a444/26-6a927a55d09ea.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளதை உலுக்கிய இயற்கை பேரழிவு; இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/disaster-nepal-bodies-found-floating-indian-rivers-1787982315"></link>
            <id>https://jvpnews.com/article/disaster-nepal-bodies-found-floating-indian-rivers-1787982315</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c9d8ea3-085f-4c64-9cc4-840a258a5652/26-6a9271ece978a.webp' /></p><h2>நதிகளில் மிதந்த சடலங்கள்</h2><p> 

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். </p><p>

வியாழக்கிழமையன்று மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>

இச்சடலங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காண்பதற்காக அதிகாரிகள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்த வெள்ளப் பேரழிவினால் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியம் முழுவதும் 2,400 க்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

இந்தியாவில் மீட்கப்பட்ட இந்த ஏழு சடலங்களும் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-29T06:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவர் கொலையில் மேலும் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-more-arrested-murder-of-a-chinese-national-1787983466"></link>
            <id>https://jvpnews.com/article/two-more-arrested-murder-of-a-chinese-national-1787983466</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சீகிரிய பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர். </p><p>

கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc8cb20b-67ca-4322-8b97-b49ee92020b9/26-6a92766b8a7fe.webp' /></p><h2>&nbsp;ஒளிந்திருந்த&nbsp; &nbsp;சீன நாட்டவர்களும் கைது</h2><p> </p><p>

பின்னர், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்றிருந்த ஏனைய சந்தேகநபர்கள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.</p><p></p><p> 

அதன்படி, சந்தேக நபர்களான மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர். </p><p>

இவ்வாறான பின்னணியில், நேற்று (28) சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒளிந்திருந்த போதே இவ்விரு சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T06:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் ; சகோதரன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/verbal-altercation-ends-murder-brother-loses-life-1787978635"></link>
            <id>https://jvpnews.com/article/verbal-altercation-ends-murder-brother-loses-life-1787978635</id>
            <summary type="text">&amp;nbsp; தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாகொட பகுதியில் தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தடியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாகொட பகுதியில் தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தடியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>


நேற்று (28) இரவு இடம்பெற்ற தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbac00ba-627e-4a80-883e-eedd68f60f18/26-6a92638d25d70.webp' /></p><h2>28 வயதுடைய சந்தேகநபர் கைது&nbsp;</h2><p>
</p><p>


உயிரிழந்தவர் மஹாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



தங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>



உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T05:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p></p><p> </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T05:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலன் ஒன்று கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-along-horana-colombo-road-blocks-1787981167"></link>
            <id>https://jvpnews.com/article/accident-along-horana-colombo-road-blocks-1787981167</id>
            <summary type="text">&amp;nbsp; ஹொரணை - கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹொரணை - கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837c002d-ebcc-4073-ac73-dab8c498cbf8/26-6a926d716ccaa.webp' /></p><p> </p><p>

கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T05:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-hike-in-wheat-flour-prices-starting-today-1787978880"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-hike-in-wheat-flour-prices-starting-today-1787978880</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. 

இதற்கமைய, கோதுமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. </p><p>

இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80287ec2-bbd9-41c8-bf8d-af2d9c9e027e/26-6a9264821990c.webp' /></p><p> 

இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T04:45:12+00:00</updated>
        </entry>
    </feed>
