<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T04:34:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய உயரதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087"></link>
            <id>https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df261ca-b115-4766-bad6-4ad83012bcaa/26-6a9cece6255e2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
</p><p style="text-align: justify; ">
விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பகவானால் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217</id>
            <summary type="text">புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433d0e59-0282-427c-b9a2-98aedaaf206c/26-6a9cbe429d23a.webp' /></p><h3>ரிஷப ராசி&nbsp;</h3><p>ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f8db758-f2d1-4aaa-8166-ad14ca553d25/26-6a9cbe43529fa.webp' /></p><h3>மிதுன ராசி</h3><p>மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5199232-5177-4d72-bc20-13a122f11bf2/26-6a9cbe440b572.webp' /></p><h3>சிம்ம ராசி</h3><p>சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86055002-ff25-47e3-8eff-890a944dd475/26-6a9cbe44b2e96.webp' /></p><h3>கன்னி ராசி</h3><p>கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80714478-9177-48bc-821a-ef9b9770d9ca/26-6a9cbe45657b1.webp' /></p><h3>விருச்சிக ராசி&nbsp;</h3><p>விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f112f3-9318-4731-8219-3f3a58e6030e/26-6a9cbe461837c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட நாமலுக்கு எதிராக கிறிஷ் மோசடி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குகளில் முக்கிய சாட்சியாக சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> </p><p></p><p>குறிப்பாக, Krrish Lanka நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் நிதி, நிமல் பெரேராவுடன் தொடர்புடைய கணக்குகள் ஊடாக நாமல் ராஜபக்சவுக்கு சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் அவர் முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளில், நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என விசாரணைத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafefd79-6887-4fea-9116-59d7cb9e296d/26-6a9cc5e274911.webp' /></p><p>இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்கு எதிரான ஏர்பஸ் கொள்வனவு தொடர்பான ஊழல் விசாரணையிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் விசாரணைகளில் கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள சட்டத்தரணி இந்திக கருணாஜீவ, நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு, ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் எனக் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> எனினும், அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நிமல் பெரேரா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன், நிமல் பெரேராவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையான சந்தர்ப்பத்தில் அவர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கக்கூடும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏர்பஸ் விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் சில தகவல்கள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2438d-f181-4a89-9824-d83561bacf5e/26-6a9cc5e1b90ac.webp' /></p><p>இதேவேளை, ரூ.70 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். இந்தத் தொகை Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன் பின்னர் குறித்த பணம் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்குகளுக்கு சென்றதாகவும் விசாரணைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தின் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வை கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376"></link>
            <id>https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.</p><p></p><p>

கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2e62f4-5e7a-460b-93e3-b060de19af6d/26-6a9cc2c9c95ee.webp' /></p><p>எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
</p><p>
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ; நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773"></link>
            <id>https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைக் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a385d47-72e7-40b9-b47b-e237979a864c/26-6a9cc06ebde61.webp' /></p><p>

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357"></link>
            <id>https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டப் பேரணியொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச இந்தப் பேரணியில் பங்கேற்று பிரதான மேடையில் மக்களிடம் உரையாற்றக்கூடும் என பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43c57d1-bfdf-4e0f-8d7a-b62fa2b65929/26-6a9cb316a86e5.webp' /></p><p>எனினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்தத் தகவல்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி ராஜபக்ச தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனுடன் இணைந்து, ஊடகங்களுடனான சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு கட்சித் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாமல் ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணியில் லிமினி ராஜபக்ச பிரதான மேடையில் உரையாற்றுவாரா என்பதுடன், எதிர்வரும் நாட்களில் அவர் தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நிலைமை தெளிவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:26:05+00:00</updated>
        </entry>
    </feed>
