<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T01:48:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய 10 கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் ; அசுர வளர்ச்சியை காணப்போகும் ராசிக்காரங்க இவங்க தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180"></link>
            <id>https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9861d4-00be-4230-bb8f-47ec7f397588/26-6a9e0256b0bbe.webp' /></p><p>இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506918e0-7967-4179-acfb-192d1e4e1a40/26-6a9e025608ded.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e19356-1d12-416d-8bdf-78c80216eb36/26-6a9e0258d2bae.webp' /></p><h3>தனுசு</h3><p>
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788672a3-c94e-4215-a685-8822eaec39a2/26-6a9e0258192bd.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c5f1e9-1cce-4410-aef2-0ca0c78734c9/26-6a9e0257639b9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், விசேட காவல் துறை குழுவொன்றினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98103047-9cfa-4a74-a752-27b7ef3b6cba/26-6a9de99eb2809.webp' /></p><p>கடல் வழியாக்க சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் புறாக்கள், பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களுக்காகப் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு, அதன் எஞ்சின் மற்றும் சிற்றூர்தி ஒன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைப்பற்றப்பட்ட புறா ஒன்றின் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்துப் புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கற்பிட்டி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய எரிமலை வெடிப்பு ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பாதை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941"></link>
            <id>https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து இன்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p></p><h3>எரிமலை வெடிப்பு</h3><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe65d5d-073b-43a3-aeaf-9bbe258adbe4/26-6a9dc6cedcd37.webp' /></p><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:02:28+00:00</updated>
        </entry>
    </feed>
