<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T07:31:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ;அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c346e116-2441-4f9d-8ba2-e5e852f07387/26-6a9d13fbacd94.webp' /></p><h2>டெங்கு நோயாளிகள்</h2><p> ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


மாகாண ரீதியில் மேற்கு மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 50,851 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளிகளில் 52.84 சதவீதமாகும்.
</p><p>


மேலும், தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711"></link>
            <id>https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711</id>
            <summary type="text">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65c2552-ee10-4a57-9e55-0808dc540183/26-6a9d0a6851594.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T06:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய விசைப்படகுகள் ; பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-trawlers-engaged-in-illegal-fishing-1788675629"></link>
            <id>https://jvpnews.com/article/indian-trawlers-engaged-in-illegal-fishing-1788675629</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56fc3482-225e-46fc-a838-16ecfe610e49/26-6a9d062e92122.webp' /></p><h2 style="text-align: justify; ">இந்திய விசைப்படகுகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுத்து, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-issue-warning-to-sri-lankans-1788674187"></link>
            <id>https://jvpnews.com/article/police-issue-warning-to-sri-lankans-1788674187</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட &#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58829d3-acac-4155-8e00-fa1b576032ed/26-6a9d008cbf923.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நிதி மோசடி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T05:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த தந்தையை படுகொலை செய்த 16 வயது மகன் ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738</id>
            <summary type="text">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3546978e-362a-46e4-831b-1ed38db07a6a/26-6a9cfae440a65.webp' /></p><p style="text-align: justify; "> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-a-l-exam-answer-paper-marking-1788671700"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-a-l-exam-answer-paper-marking-1788671700</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60516da4-1ca5-4820-91ea-79fb63d6d624/26-6a9cf6d62644a.webp' /></p><h2 style="text-align: justify;">செய்முறைப் பரீட்சைகள்</h2><p style="text-align: justify;">

அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
</p><p style="text-align: justify; ">
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;">

பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-06T05:15:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலகலமாக அரங்கேறிய போதை விருந்து ; 05 பெண்களுடன் கைதான 36 ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628"></link>
            <id>https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628</id>
            <summary type="text">தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். </p><p>

தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20944071-f913-4a5d-93fc-2699c9dadd4e/26-6a9cf2a56de4d.webp' /></p><h2>&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்சூடு ; அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664"></link>
            <id>https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "> 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bfad66-3a7a-452d-8317-e2777a6276ff/26-6a9ceee1f1959.webp' /></p><p style="text-align: justify; "> 

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய உயரதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087"></link>
            <id>https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df261ca-b115-4766-bad6-4ad83012bcaa/26-6a9cece6255e2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
</p><p style="text-align: justify; ">
விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பகவானால் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217</id>
            <summary type="text">புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433d0e59-0282-427c-b9a2-98aedaaf206c/26-6a9cbe429d23a.webp' /></p><h3>ரிஷப ராசி&nbsp;</h3><p>ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f8db758-f2d1-4aaa-8166-ad14ca553d25/26-6a9cbe43529fa.webp' /></p><h3>மிதுன ராசி</h3><p>மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5199232-5177-4d72-bc20-13a122f11bf2/26-6a9cbe440b572.webp' /></p><h3>சிம்ம ராசி</h3><p>சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86055002-ff25-47e3-8eff-890a944dd475/26-6a9cbe44b2e96.webp' /></p><h3>கன்னி ராசி</h3><p>கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80714478-9177-48bc-821a-ef9b9770d9ca/26-6a9cbe45657b1.webp' /></p><h3>விருச்சிக ராசி&nbsp;</h3><p>விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f112f3-9318-4731-8219-3f3a58e6030e/26-6a9cbe461837c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட நாமலுக்கு எதிராக கிறிஷ் மோசடி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குகளில் முக்கிய சாட்சியாக சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> </p><p></p><p>குறிப்பாக, Krrish Lanka நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் நிதி, நிமல் பெரேராவுடன் தொடர்புடைய கணக்குகள் ஊடாக நாமல் ராஜபக்சவுக்கு சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் அவர் முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளில், நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என விசாரணைத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafefd79-6887-4fea-9116-59d7cb9e296d/26-6a9cc5e274911.webp' /></p><p>இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்கு எதிரான ஏர்பஸ் கொள்வனவு தொடர்பான ஊழல் விசாரணையிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் விசாரணைகளில் கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள சட்டத்தரணி இந்திக கருணாஜீவ, நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு, ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் எனக் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> எனினும், அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நிமல் பெரேரா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன், நிமல் பெரேராவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையான சந்தர்ப்பத்தில் அவர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கக்கூடும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏர்பஸ் விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் சில தகவல்கள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2438d-f181-4a89-9824-d83561bacf5e/26-6a9cc5e1b90ac.webp' /></p><p>இதேவேளை, ரூ.70 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். இந்தத் தொகை Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன் பின்னர் குறித்த பணம் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்குகளுக்கு சென்றதாகவும் விசாரணைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தின் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வை கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376"></link>
            <id>https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.</p><p></p><p>

கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2e62f4-5e7a-460b-93e3-b060de19af6d/26-6a9cc2c9c95ee.webp' /></p><p>எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
</p><p>
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:33:07+00:00</updated>
        </entry>
    </feed>
