<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T02:30:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/items-should-offered-during-vinayagar-chaturthi-1789258372"></link>
            <id>https://jvpnews.com/article/items-should-offered-during-vinayagar-chaturthi-1789258372</id>
            <summary type="text">முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் நாடு முழுவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76edc807-2937-465e-bce7-a7f6f152d70c/26-6aa5ea85bc428.webp' /></p><p> என்ன தான் ஒவ்வொரு மாததும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாத சதுர்த்தி திதியில் தான் விநாயகர் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் மட்டுமின்றி 10 நாட்கள் வரை கொண்டாடப்படும்.</p><p>அதுவும் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வாங்கி வந்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், லட்டு போன்றவற்றை செய்து படைத்து, விநாயகருக்கு உகந்த பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். தெய்வங்களிலேயே விநாயகர் எளிதில் திருப்தி அடையக்கூடியவர் ஆவார்.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் விநாயகரை வழிபடும் போது, எந்த பொருட்களை படைக்கக்கூடாது என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a3abe41-b5a9-455d-a858-a8645e67dc3a/26-6aa5ea8672cb8.webp' /></p><h4>துளசியை படைக்காதீர்
</h4><p>விநாயகருக்கு துளசி இலைகளை படைக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை துளசி தேவி விநாயகரை கணவனாக அடைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் விநாயகரோ அதை நிராகரித்தார். இதனால் கோபம் கொண்ட துளசி விநாயகருக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று சபித்தார். இந்த சாபத்தை கேட்ட விநாயகர் கோபமுற்று, "நீயும் ஒரு அசுரனை திருமணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், இனி என் வழிபாட்டில் ஒருபோதும் நீ பயன்படுத்தப்படமாட்டாய்" என்று சாபமிட்டார். இதனால் தான் துளசி விநாயகர் வழிபாட்டில் இடம் பெறுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d37c64ae-0026-4dbd-9a70-fb398293b6a6/26-6aa5ea872f4bf.webp' /></p><h4>தாழம்பூ
</h4><p>தாழம்பூ சிவபெருமானுக்கு படைக்க தடைசெய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். அதேப் போல் விநாயகருக்கும் தாழம்பூவை படைக்கக்கூடாது. ஏனெனில் புராணங்களின் படி, விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு போர் நடந்தது. அப்போது சிவன் ஒரு வழியை கண்டுபிடித்தார். ஆனால் பிரம்மாவும், தாழம்பூவை பயன்படுத்தி சிவனை ஏமாற்ற நினைத்தார். இருப்பினும், சிவனை பிரம்மாவின் தந்திரத்தை உணர்ந்து கோபமடைந்து, இனிமேல் தனது வழிபாட்டில் தாழம்பூ இடம் பெறாது என்று சபித்தார். சிவனின் மகன் விநாயகர் என்பதால், விநாயகரின் பூஜையிலும் தாழம்பூ தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b248836c-13a6-4ad5-b7bb-9051468cc24e/26-6aa5ea87d95d7.webp' /></p><h4>உடைத்த அரிசி
</h4><p>விநாயகரின் பூஜைக்கு அட்சதையாக அரிசியை பயன்படுத்தும் போது, உடைத்த அரிசியை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். முழுமையான மற்றும் சுத்தமான அரிசியை விநாயகரின் பூஜைக்கு பயன்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0daf1975-20da-4dbe-900d-ac9a2ce3db4e/26-6aa5ea88907e9.webp' /></p><h4>வெள்ளை ஆடைகள் கூடாது
</h4><p>விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை சமர்ப்பிக்கக்கூடாது. வெள்ளை நிறமானது சந்திரனைக் குறிக்கிறது. புராணங்களின் படி, சந்திர பகவான் தனது அழகால் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். அப்போது அவர் விநாயகரை கேலி செய்தார். சந்திர பகவானின் நடத்தையால் கோபமடைந்த விநாயகர், "இனிமேல் இவரை காண்பவர் எவரும் சமூகத்தில் அவமானத்தையும், இழிவையும் சந்திப்பார்கள்" என்று சபித்தார். எனவே தான் விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரனை காண்பது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது. சந்திரனின் நிறம் வெள்ளை என்பதால், விநாயகருக்கு வெள்ளை நிற ஆடைகள் படைக்கப்படுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/568c17fa-fd57-4b03-9efa-68372ff8c3ca/26-6aa5ea89469a8.webp' /></p><h4>பழைய அல்லது நீரில் கழுவிய பூக்கள் கூடாது
</h4><p>விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு வாடிய அல்லது பழைய பூக்களை சமர்ப்பிக்கும் தவறை செய்யக்கூடாது. அதேப் போல் பூக்களை நீரில் கழுவி சமர்ப்பிக்கக்கூடாது. எப்போதும் எந்த ஒரு பூஜையிலும் பயன்படுத்தும் பூக்கள் நீரில் கழுவப்படாத நிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0e53f1-df3c-4ad7-aaee-8f4437681332/26-6aa5ea89ef621.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T00:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-40-year-old-housing-complexes-colombo-1789255427"></link>
            <id>https://jvpnews.com/article/information-40-year-old-housing-complexes-colombo-1789255427</id>
            <summary type="text">வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவலின்படி, கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவலின்படி, கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் 96 வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515629e5-b2a3-4874-a91d-71baf96d9b22/26-6aa5df05403a1.webp' /></p><p>அவற்றில் மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அத்துடன், தற்போதுள்ள சில வீடமைப்புத் திட்டங்களுக்குப் பதிலாகப் புதிய வீடமைப்புத் திட்டங்களைக் நிர்மாணிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T23:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-decision-taken-regarding-train-services-1789253831"></link>
            <id>https://jvpnews.com/article/special-decision-taken-regarding-train-services-1789253831</id>
            <summary type="text">தொடருந்து போக்குவரத்து தொடர்ச்சியாக தாமதமடைதல், தொடருந்துகள் ரத்து செய்யப்படல் மற்றும் தொடருந்துகளில் அடிக்கடி ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து போக்குவரத்து தொடர்ச்சியாக தாமதமடைதல், தொடருந்துகள் ரத்து செய்யப்படல் மற்றும் தொடருந்துகளில் அடிக்கடி ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இது தொடர்பில் தொடருந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb075c4-3ba2-4eb4-b0a1-bdf176713fcc/26-6aa5d8c8f0aea.webp' /></p><p>இதற்கமைய, தொடருந்து தொழிற்சங்கங்கள் வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடருந்து தாமதங்கள், ரத்து செய்யப்படுபவை மற்றும் தொடர்ச்சியாக ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் குறித்து உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையே இந்த தொழிற்போராட்டத்திற்குக் காரணம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தந்த IMF குழு ; நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/imf-team-arrives-in-sri-lanka-talks-begin-1789252718"></link>
            <id>https://jvpnews.com/article/imf-team-arrives-in-sri-lanka-talks-begin-1789252718</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இலங்கையின் கடன் வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/755bfab8-2653-497c-b789-b8ca81adba54/26-6aa5d470770ca.webp' /></p><p>இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அதிகாரசபைகள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடல்கள் வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933"></link>
            <id>https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933</id>
            <summary type="text">இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>&nbsp;20 ஆண்டுகள் சிறை</h4><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி, அச்சரம்பட்டு பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53df1f0f-3dee-41cb-aa86-fc33e2f1d43a/26-6aa5b9ef47a22.webp' /></p><p>

அப்போது அங்கு சென்ற செல்வம், சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பொலிஸார் செல்வத்துக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
</p><p>
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. </p><p>வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
</p><p>
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:45:53+00:00</updated>
        </entry>
    </feed>
