<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-31T19:02:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

இன்று (31) பிற்பகல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>
 

இன்று (31) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய இளைஞராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890ee987-a263-4cd3-b0b4-fb5325ef34f2/26-6a95c72e2e464.webp' /></p><p>
</p><p>
 

காணாமல் போன இளைஞனைத் தேடும் விசேட தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T18:15:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் துண்டிற்க்காக உற்ற நண்பனுக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-close-friend-over-a-piece-of-chicken-1788199863"></link>
            <id>https://jvpnews.com/article/incident-close-friend-over-a-piece-of-chicken-1788199863</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலையை மறைக்க முயன்ற வாலிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p>

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்</p><p>[ 
</p><h2>வாக்குவாதம்</h2><p>வாராந்திர விடுமுறை நாளான நேற்று (30), அவர்கள் தங்கியிருந்த அறையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.</p><p> 

அப்போது, சீதாராம் தன்னை விட அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டதால் அருண்குமார் கோபமடைந்தார்.</p><p> மது போதையில் இருந்த 2 பேருக்கும் இடையே "யார் அதிக சிக்கன் பீஸ் சாப்பிடுவது" என்பதில் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியது.</p><p></p><p> 

ஆத்திரமடைந்த அருண்குமார், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இதையடுத்து, கொலையை விபத்தாக மறைக்க திட்டமிட்ட அருண்குமார், சீதாராமின் உடலை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். </p><p>அங்கு, சீதாராம் "வெல்டிங் வேலை செய்யும்போது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்" என்று வைத்தியர்களிடம் பொய் கூறி நாடகமாடினார்.</p><p></p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சிக்கன் பீஸ் சண்டைக்காக தன் நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதை அருண்குமார் ஒப்புக்கொண்டார்.</p><p>இதையடுத்து, பொலிஸார், அருண்குமாரைக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T18:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு ; நாளை முதல் ஆரம்பமாகும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defence-ministry-notice-operations-begin-tomorrow-1788197960"></link>
            <id>https://jvpnews.com/article/defence-ministry-notice-operations-begin-tomorrow-1788197960</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/678bdb2e-1440-44e8-a07a-7fc55b528871/26-6a95bc49eacc5.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">



செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 



எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T18:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றுகையிடப்பட்ட பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-illegal-liquor-production-facility-raided-1788193224"></link>
            <id>https://jvpnews.com/article/large-illegal-liquor-production-facility-raided-1788193224</id>
            <summary type="text">குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அதன் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹண ஓலுகலவின் உத்தரவு மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, இன்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1823fd9-744a-481d-aa50-9811d8e43e80/26-6a95a9c9b92d5.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

 

இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீற்றர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீற்றர் கசிப்பு அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த கோடாவை காய்ச்சி உற்பத்தி செய்யப்படும் சட்டவிரோத மதுபானத்தைப் பிரதேசம் முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T17:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயாகல பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு ; இளைஞர் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-payagala-area-1788195681"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-payagala-area-1788195681</id>
            <summary type="text">&amp;nbsp;Update : பயாகலவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயது இளைஞர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்&amp;nbsp;&amp;nbsp;பயா...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>&nbsp;Update : </b>பயாகலவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயது இளைஞர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்&nbsp;&nbsp;</p><p>பயாகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1d25e0-f8ef-4e95-a49e-fc9856d293ff/26-6a95b3630580a.webp' /></p><p>



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T17:01:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தை பரபரபாக்கிய கொள்கலன் ; 02 பாகிஸ்தானியர்கள் கைது, சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/container-causes-port-stir-2-pakistanis-arrested-1788194141"></link>
            <id>https://jvpnews.com/article/container-causes-port-stir-2-pakistanis-arrested-1788194141</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுகத்தில் <a href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486" target="_blank">கொள்கலன் </a>ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792c9d27-92b3-4481-ab05-583b5a7064b8/26-6a95ad5eee638.webp' /></p><h2 style="text-align: justify;">கைது நடவடிக்கை</h2><p style="text-align: justify;">

 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

முன்னதாகச் சந்தேகத்திற்குரிய கொள்கலனைச் சோதனையிட்ட போது அதிலிருந்து 463 கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் சென்றடைந்தார் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114</id>
            <summary type="text">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72553fc-7ff4-4f9e-b741-6e281a6a2af2/26-6a95a5746f03e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விமான நிலையத்தில் வரவேற்பு</h2><p style="text-align: justify; ">அவரை பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T16:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089</id>
            <summary type="text">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் வரை சாரதிகள் தற்போதைய கட்டணங்களையே அறவிடுவார்கள் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb849c0d-cbc4-4c03-ba3c-3591996db85c/26-6a95a17309afb.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற தற்போதைய உத்தியோகபூர்வ கட்டண முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T15:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலையில் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd42ab4-7f8e-4fff-b4c4-ec9c2d78c736/26-6a95820b2e1da.webp' /></p><h2>காவலர்களின் பாதுகாப்புடன்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>


இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311"></link>
            <id>https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>
 
கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் ஆகஸ்ட் 26-ம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61f601e-dc63-4173-b524-2b1c33cc967d/26-6a957b40ea12f.webp' /></p><h2>&nbsp;இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய&nbsp;&nbsp;இளம் பெண்</h2><p>
</p><p> 
மஞ்சீத்தின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது தோழி, “அவர் விரைவில் நடந்ததை அவருடைய வார்த்தைகளிலேயே உங்களிடம் சொல்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
</p><p> 
அவரது தாயார் அளித்த புகாரின்படி, ஜூலை 3-ம் தேதி சண்டிகரின் செக்டர் 34 பகுதியில் இருவரை சந்திக்க சென்ற மஞ்சீத்தை, ஷுபி மற்றும் பிண்டா ஆகியோர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>பின்னர் பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் மொரிந்தாவுக்கு அழைத்து சென்று தாக்கி, மரத்தில் கட்டி தீ வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அங்கு வந்த நண்பர் ஒருவர் போர்வையை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மஞ்சீத், ஆகஸ்ட் 5-ம் தேதி சிறிது நேரம் சுயநினைவு பெற்று குடும்பத்தினரிடம் சம்பவத்தை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.
 
இந்த வழக்கில் கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 பவுண் நகை.... ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288"></link>
            <id>https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288</id>
            <summary type="text">70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5df4364-6d86-450f-8a11-7315993b6ae0/26-6a957f11dc514.webp' /></p><h2>தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை</h2><p>கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புவனேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p> 
எம்.எஸ்சி., பி.எட். படித்திருந்த புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், 50 சவரன் தங்க நகைகள் வழங்கியதாகவும், மணமகனுக்கு 20 சவரன் நகைகள் கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
 
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் தங்கச்சங்கிலி வழங்கியதை தொடர்ந்து பிரச்சினை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டெய்னருக்குள் சிக்கிய 420 கிலோ 'ஐஸ்; மாட்டினார் பிரபல தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486"></link>
            <id>https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052" target="_blank">&nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்</a> ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedf3a17-9f88-400d-88d6-a36e1f5b2bd0/26-6a957808487ba.webp' /></p><p>
</p><p>
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8665cf96-66ff-402d-912a-fd5e76084d03/26-6a95805ddce85.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:20:48+00:00</updated>
        </entry>
    </feed>
