<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T04:34:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083"></link>
            <id>https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b706cd45-5a76-4e56-b318-0c99860da12a/26-6aacbb7c680ee.webp' /></p><p> </p><p>

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் கடுமையாக அமுலாக்கபடவுள்ள சட்டம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147"></link>
            <id>https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஆசனப்பட்டி அணிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (18) நிறைவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82796ce-7307-4a7d-8a27-7538b9b6eca1/26-6aacb7d513010.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; ">

இதன்படி, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், ஆசனப்பட்டி வசதி இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் முன் மற்றும் பின் ஆசனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

</p><p style="text-align: justify; ">இதேவேளை, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் உற்பத்தியாளர்களால் ஆசனப்பட்டி பொருத்தப்படாதிருந்ததால் வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் , அவ்வாறான வாகனங்களுக்கு ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக பல தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இறுதியாக வழங்கப்பட்ட கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் ; அதிர்ச்சி கொடுக்கும் பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186"></link>
            <id>https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186</id>
            <summary type="text">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார். 

இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdee946-9f9d-4a56-b3fc-c5a9b5ed0efd/26-6aacb413a2b21.webp' /></p><h2 style="text-align: justify; ">சொத்துக்கள் விபரம்</h2><p> </p><p style="text-align: justify; ">

மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம் </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

ஸ்பேசியா ரக கார் (சுமார்: ரூ. 80 இலட்சம்)</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

விசாரணையின் படி, இச்சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த இச்சொத்துக்களை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த நபரும் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

அவ்விசாரணையின் படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் உழைத்த சட்டவிரோதப் பணத்தில் கொள்முதல் செய்த சொகுசு ஜீப் வண்டியை (சுமார்: ரூ. 350 இலட்சம்) விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையோ தடுப்பதற்காக நேற்று (16) முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T03:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை ; ஆரம்பமான கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153"></link>
            <id>https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153</id>
            <summary type="text">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b2c5fa-e76b-4236-b0d1-9b76e1b75157/26-6aacad3be057a.webp' /></p><h2 style="text-align: justify; ">நேரடி விமானங்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.
</p><p style="text-align: justify;">
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T03:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியில் சென்ற இளம் தம்பதியரின் தவறான செயல் ; வாடகை வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879</id>
            <summary type="text">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது &#039;பாணந்துறை குடு சலிந்து&#039; என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

கல்கிசை தலைமையக பொலிஸார் நடத்திய சோதனையின் போது, சந்தேகநபர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749d2866-b783-4bed-8b99-c60a87cf5ee5/26-6aaca8df0c556.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியரிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் வருவதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர்&nbsp; தகவல் கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை மறித்து பரிசோதித்த போது, அதன் பின் இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த போது, அவர் பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவருடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் காரணமாக அவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்த போது, அதற்குள் இருந்து பெருந்தொகை பணம் கண்டெடுக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கணவன்-மனைவி எனத் தெரியவந்ததுடன், பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 1,50,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை - ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், அந்த வீட்டைப் பரிசோதித்த போது பணத்தை எண்ணப் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

26 மற்றும் 34 வயதுடைய இத் தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T02:51:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844</id>
            <summary type="text">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 

கெற்பேலி பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56327309-2d5d-491b-8c49-614927e844b6/26-6aaca31e41d99.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p style="text-align: justify; ">

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T02:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய 27 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-impregnates-female-student-promising-marriage-1789676406"></link>
            <id>https://jvpnews.com/article/man-impregnates-female-student-promising-marriage-1789676406</id>
            <summary type="text">இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>பொலிஸ் விசாரணையின்படி, குறித்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd58ccaa-99a2-4fba-a837-0ffa76ea7f91/26-6aac4b78acec6.webp' /></p><p>இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p>

முறைப்பாட்டின் அடிப்படையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
</p><p>
தொடர்ந்து, குறித்த 27 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம் ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-suriyan-yogam-kavanama-iruka-vendiya-rasi-1789682286"></link>
            <id>https://jvpnews.com/article/sani-suriyan-yogam-kavanama-iruka-vendiya-rasi-1789682286</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்பட்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்பட்டாலும், ஜோதிட நம்பிக்கையின்படி, சூரியனுக்கும் சனிக்கும் தந்தை-மகன் உறவு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3baf6350-2c5b-4b22-8497-b5c01aeea356/26-6aac627029a7f.webp' /></p><p>அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் திகதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசிக்கு சூரியன் செல்வதால், சூரியனுக்கும், சனிக்கும் இடையே சமசப்தம யோகம் உருவாகிறது.&nbsp;இப்போது சூரியன் மற்றும் சனியால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb13eabc-8ea8-4c5c-8373-72a186182322/26-6aac626f74877.webp' />&nbsp;</p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியனும், 12 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் வேலை பாதிக்கப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தலைவலி அல்லது செரிமான பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de65057e-e05a-49e7-8d2e-8fa1a955145e/26-6aac62718d69c.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியனும், 6 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவசரப்படுவதைத் தவிர்த்து, பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவில் மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யோசிக்காமல் கண்டபடி பேசினால், உங்களின் நற்பெயர் தான் பாதிக்கப்படும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b4ffa4b-a6ac-4cd6-82af-15ec5fc5bbca/26-6aac6270d33a7.webp' /></p><h4>மீனம்
</h4><p>மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவானும், 7 ஆவது வீட்டில் சூரியனும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படும். எனவே வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். அலட்சியம் பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிலர் மன அழுத்தத்தை உணரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109b8445-04d8-49d4-822c-ea0949a12303/26-6aac6272417de.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற்று நெகிழ வைத்த சீன மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-student-who-moved-hearts-by-learning-tamil-1789690337"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-student-who-moved-hearts-by-learning-tamil-1789690337</id>
            <summary type="text">சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

சூரியன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>சீன மின்சூ பல்கலைக்கழகத்தில் (Minzu University of China) தமிழ் மொழியைக் கற்றுத் தற்போது சிறப்புப் பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ் ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்பதால் அதனைக் கற்க ஆர்வம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb1433a-e607-4732-81ea-8f86f3f5f142/26-6aac81e3477d8.webp' /></p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறந்த பேராசிரியர்கள் எமக்குத் தமிழ் மொழியைக் கற்பித்தனர்.</p><p>

அகத்தியர் முதல் தொல்காப்பியர் போன்ற சான்றோர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டதையிட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.</p><p>

தமிழ் மொழியிலுள்ள முக்கிய நூல்களை, எதிர்காலத்தில் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சீனாவில் வெளியிடுவதே எனது முதன்மை எதிர்பார்ப்பாகும்."

தனது செவ்வியின் நிறைவில் , "வாழ்க தமிழ், வளர்க தமிழ்" எனக்கூறித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை ; நாகமுத்து பிரதீபராஜா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><p>குறித்த தாழமுக்கம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில், பங்களாதேஷ் வழங்கியுள்ள ‘அர்னாப்’ (Arnap) என்ற பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>&nbsp;தாழமுக்கம்</h3><p> எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1809b230-a8e5-4b5a-bd68-99dd0e2400ad/26-6aac47c674979.webp' /></p><p>இந்தத் தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனால் இலங்கைக்கு நேரடியான புயல் தாக்கம் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும், அதன் மறைமுக தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் நிறைந்த காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக செப்டெம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், செப்டெம்பர் 20 முதல் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfc74e4-1721-4cb0-af60-38efde4c1812/26-6aac47c729878.webp' /></p><p>இதனிடையே, எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கத்தால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை பல்வேறு வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால் பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் கடல் நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T23:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் ; வர்த்தகருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggling-of-heroin-worth-100-crore-death-penalty-1789684376"></link>
            <id>https://jvpnews.com/article/smuggling-of-heroin-worth-100-crore-death-penalty-1789684376</id>
            <summary type="text">சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee680f8-3b71-4d65-b378-df543833f495/26-6aac6a99e20bb.webp' /></p><p>கடந்த 2017 மே 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமையே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T22:35:56+00:00</updated>
        </entry>
    </feed>
