<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-07T23:33:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792</id>
            <summary type="text">நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 



குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 



குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e61886-f4c5-4b77-9387-2465ea43c0a7/26-6a9f48f19feb9.webp' /></p><p>
</p><p>


சில ஆய்வுகளின்படி, நாவல் கொட்டையில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். </p><p>



எனினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>



நாவல் கொட்டைப் பொடியில் உள்ள நார்ச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும். </p><p>



நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கும் துணையாக அமையலாம்.
</p><p>


இதய ஆரோக்கியம், குடல் செயல்பாடு மற்றும் உடலின் வளர்சி மாற்றத்தை ஆதரிக்கும் தன்மையும் இதில் இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p><p>



நாவல் கொட்டைப் பொடியை பயன்படுத்த விரும்புபவர்கள், வெதுவெதுப்பான நீரில் சிறிய அளவு கலந்து அருந்தலாம். </p><p>ஆனால் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், இதை பயன்படுத்துவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. </p><p>உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T23:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737"></link>
            <id>https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; ">&nbsp; சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் ,

கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c144353-6cb6-47b6-b674-5f4c208b308b/26-6a9f2d62c9fc2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

இதனடிப்படையில் குறித்த பகுதியை&nbsp; இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.
</p><p style="text-align: justify; ">
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிசார் தெரிவித்துள்ளனர்
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளதுடன்.</p><p style="text-align: justify; ">விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T22:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கோரிக்கைக்கு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் வழங்கிய பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-secretary-general-s-response-to-namal-1788815761"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-secretary-general-s-response-to-namal-1788815761</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fd12ba-0720-4dc7-9389-28ab796318ef/26-6a9f29935a40d.webp' /></p><p style="text-align: justify; ">அதன்படி, நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக, நாமல் ராஜபக்ஷ இன்று (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-07T21:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936"></link>
            <id>https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936</id>
            <summary type="text">திருப்பத்தூர் அருகே &quot;என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்&quot; எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&amp;nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


</p><p style="text-align: justify; ">இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeed6db-6cb8-4680-af2c-90775a49900e/26-6a9f0eea0d6a6.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த&nbsp; பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். </p><p style="text-align: justify; ">&nbsp;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T21:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராம பாடசாலைகளிலும் அதிகரிக்கும் ஆபத்து ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/growing-danger-in-rural-schools-1788814866"></link>
            <id>https://jvpnews.com/article/growing-danger-in-rural-schools-1788814866</id>
            <summary type="text">தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>

அவற்றில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b16e3920-53c9-4631-b4b7-c44f55013335/26-6a9f261407ab2.webp' /></p><p>
</p><p>
கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக அமைச்சர் விஜேபால கவலை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>

பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-suspects-arrested-treasure-hunting-1788807646"></link>
            <id>https://jvpnews.com/article/five-suspects-arrested-treasure-hunting-1788807646</id>
            <summary type="text">புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e783af-3646-443e-bceb-6d11890a4c59/26-6a9f09e012386.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குராக்கொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T20:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T19:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-delegates-meet-presidential-staff-chief-1788806725"></link>
            <id>https://jvpnews.com/article/un-delegates-meet-presidential-staff-chief-1788806725</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
</p><p style="text-align: justify; ">


டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991b2d4f-4472-4f64-a8b4-50091412b6f6/26-6a9f064cc76d5.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்கால வேலைத்திட்டங்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">அதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">






அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மார்க் என்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">



ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் (Azam Bakeer Markar, Partnerships &amp; Dev Finance Specialist) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும்திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் 'பூத களுவா' படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254"></link>
            <id>https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254</id>
            <summary type="text">திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156ff0c3-00ef-4c20-be20-6d2c63b155b0/26-6a9f0088e4733.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணைகள்</h2><p> </p><p>

இவ்வாறு கொலையானவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய நபராவார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. </p><p>

படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2314dc-468c-4ef8-9787-c5a8981d57d8/26-6a9ef8f154487.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஊழல் விசாரணை</h2><p style="text-align: justify; "> 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தோனியின் வழிநடத்தலில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, 2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் வீதிக்கு கார்பட் இடுவதற்கான ஏலதாரர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

அக்காலகட்டத்தில் குறித்த நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பிரதிவாதி குமார ஜயகொடி பணியாற்றியதாகச் சாட்சி குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அதன்படி, கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி இந்த கார்பட் இடும் பணியை மேற்கொள்வதற்காக ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு முன்பணப் பிணையின் அடிப்படையில் ரூ. 8,859,708 முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் சாட்சி கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு என்பன உரிய கொள்முதல் நடைமுறையைச் சரியாகப் பின்பற்றியுள்ளதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே தாம் அந்தப் பணப்பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததாகச் சாட்சி சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

இருப்பினும், குறித்த நிறுவனம் கார்பட் இடும் பணியை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சாட்சி, அந்தப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தமது நிறுவன வளாகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர், குறித்த நிறுவனம் வழங்கிய முன்பணப் பிணையின் கீழ் ரூ. 2,214,921 மட்டுமே அறவிடப்பட்டதாகச் சாட்சி குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் சாட்சியமளித்தார். </p><p style="text-align: justify; ">

அதன்பின்னர், இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T18:00:43+00:00</updated>
        </entry>
    </feed>
