<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T23:28:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை வளாகத்தில் ஆசிரியைக்கு நடந்த கொடூரம் ; 27 முறை குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-faces-brutal-incident-at-school-1785960235"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-faces-brutal-incident-at-school-1785960235</id>
            <summary type="text">இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779c9066-6e0a-479b-b784-50b2c338ff37/26-6a73972cd0e7a.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p> </p><p>

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருதாவது,
</p><p>
உயர்நிலைப் பாடசாலையில் குறித்த ஆசிரியையை முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார். </p><p>

ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.</p><p>முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p></p><p> </p><p>

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>முன்னதாக, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை பொலிஸில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பாடசாலை வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>

சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் சந்தேகநபரைத் பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T23:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுமுழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள் ; பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-raids-conducted-at-471-pharmacies-1785968753"></link>
            <id>https://jvpnews.com/article/special-raids-conducted-at-471-pharmacies-1785968753</id>
            <summary type="text">நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின்கீழ் 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcca73a0-778d-470f-ba91-ee9136822d72/26-6a73b8734548b.webp' /></p><h2>சோதனைகள்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 362 மருந்தகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.</p><p> அண்மைய சோதனைகளுடன் சேர்த்து, இவ்வருடத்தில் நடத்தப்பட்ட விசேட மருந்தக சோதனைகளின் மொத்த எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துகள், நுகர்வோர் தகவல்களுக்கான விதிகளை மீறியமை, அத்துடன் மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T22:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சோதனையில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-held-with-drugs-and-weapons-in-raid-1785964793"></link>
            <id>https://jvpnews.com/article/youth-held-with-drugs-and-weapons-in-raid-1785964793</id>
            <summary type="text">பொரலஸ்கமுவை, லேக் வீதி பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்&amp;nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொரலஸ்கமுவை, லேக் வீதி பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து 23.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், ஒரு வாள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2acdf82-a5e7-4bc8-af29-428bf37b8cb9/26-6a73a8faccb1d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரதான பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்&nbsp; ஒருவர் சார்பில் உள்ளூர் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இவர் நடத்தி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
கூர்மையான ஆயுதங்களுடன் வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர், நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞனுக்கு எதிராகக் கடத்தல், தாக்குதல் நடத்துதல், கூர்மையான ஆயுதங்களால் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொரலஸ்கமுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T21:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206</id>
            <summary type="text">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ade9d7-4125-405b-89e2-f2e2ad5ade87/26-6a735c77882ef.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத செயல்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் அதனைப் பரப்புவதும் அச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் குற்றமும் சட்டவிரோதமான செயலுமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்காகத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அந்த இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T20:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் ; உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேர் தொடர்பில் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-order-against-udaya-and-six-1785961819"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-order-against-udaya-and-six-1785961819</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (05) திறந்த நீதிமன்றத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளர்.</p><p style="text-align: justify;">



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளைப் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ab9997-a1cd-4090-a103-0c9b11a5c228/26-6a739d5d0ad7c.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தண்டனைக்குரிய குற்றம்</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களாக முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


அத்துடன், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக அமையக்கூடும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



மேலும் கடந்த ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் திருத்தப்படாத (Unedited) காணொளிகளை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T20:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனையில் மூதாட்டி உட்பட இருவர் கைது ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-raid-leads-to-two-arrests-1785959105"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-raid-leads-to-two-arrests-1785959105</id>
            <summary type="text">நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போது சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மொரட்டுரவை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட க்லோவியஸ் மாவத்தை பகுதியில் வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத 75 லீட்டர் மதுபானத்துடன் 75 வயதுடைய மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a998287e-cfa3-417e-a04f-3c16f476402b/26-6a7392c356ea7.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், கொச்சிக்கடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பலபாதுரய பகுதியில் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சட்டவிரோத 56 லீட்டர் 250 மி.லீ மதுபானத்துடன் 51 வயதுடைய கொச்சிக்கடையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">நீர்கொழும்பு பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T19:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு இது தான் காரணம் ; நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nalinda-jayatissa-explains-cause-of-prison-clashes-1785957579"></link>
            <id>https://jvpnews.com/article/nalinda-jayatissa-explains-cause-of-prison-clashes-1785957579</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு அதிகளவான நெருக்கடி முக்கிய காரணம் ஆகும். அதனால் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பிணை வழங்கும் நடைமுறையை விரைவுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு அதிகளவான நெருக்கடி முக்கிய காரணம் ஆகும். </p><p style="text-align: justify; ">அதனால் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பிணை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துதல், அரசாங்கப் பரிசோதகர் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5335e8-f844-40e3-a5e5-5ab2d66f0e80/26-6a738ccd367bb.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை நெரிசல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (4) விசேட நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><p style="text-align: justify; ">
நாட்டில், பொதுவாக 11,801 பேரை மாத்திரம் தடுத்து வைக்கும் கொள்ளளவு கொண்ட 37 சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி சுமார் 29,000 முதல் 30,000 கைதிகள் அதாவது கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு எதிரான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கைகளால் அதிகளவிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் ஆகும்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பிணை வழங்கப்படுவதில் உள்ள தாமதங்களைத் தடுத்தல், அரசாங்கப் பரிசோதகர் திணைக்களத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை வழங்குவதன் மூலம் பரிசோதனை அறிக்கைகளை விரைவுபடுத்துதல் போன்ற பல சட்ட மற்றும் நிர்வாகத் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">மேலும், சிறைச்சாலைகளுக்கு உள்ளே இயங்கி வந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கடத்தல்கள், தொலைபேசிப் பாவனைகள் என்பவை தற்பொழுது கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள், அங்கு கைதிக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தமை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகச் சிலரால் திட்டமிட்டு குழப்பங்கள் உருவாக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify; ">

சிறைக்குள்ளிருந்து கலவரத்தைத் தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்கு வெளிநபர்களின் அல்லது ஏதேனும் அரசியல் மற்றும் அமைக்கப்பட்ட குழுக்களின் ஆதரவு உள்ளதா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T19:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருகம்பே பகுதியில் புகுந்த காட்டு யானையால் பெரும்பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-sparks-panic-in-arugam-bay-1785955149"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-sparks-panic-in-arugam-bay-1785955149</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதியில் நேற்று நள்ளிரவு 10.30 மணியளவில் திடீரெனப் புகுந்த காட்டு யானையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதியில் நேற்று நள்ளிரவு 10.30 மணியளவில் திடீரெனப் புகுந்த காட்டு யானையால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.</p><p>மக்கள் நடமாட்டம் உள்ள வீதிக்குள் யானையைக் கண்டதும் கிராமமே அச்சத்தில் உறைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/082ded53-e4bd-4bb8-9ccc-916d1917d9ae/26-6a73834f8712d.webp' /></p><h2>யானைகளின் அச்சுறுத்தல்</h2><p> </p><p>

ஆத்திரத்துடன் மக்களை நோக்கி யானை பாய்ந்து வர, பொதுமக்கள் நாலாப்பக்கமும் சிதறியோடினர்.</p><p>அப்பகுதி இளைஞர்கள், மிகச் சாதுரியமாகச் யானையைப் பாதுகாப்பாகக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.</p><p></p><p>
இளைஞர்களின் இந்த அதிரடி முயற்சியால் பெரிய உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் தவிர்க்கப்பட்டது.</p><p>அருகம்பே பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T18:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-foreign-secretary-meets-president-1785953264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-foreign-secretary-meets-president-1785953264</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது.
</p><p>


இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a562dc8-dbcf-40d7-b7f8-4a9209aee48b/26-6a737bf308d2c.webp' /></p><h2>எதிர்கால&nbsp;திட்டங்கள் </h2><p>
</p><p>






2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.</p><p>



இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>


போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>



காலநிலை மாற்றத்தால் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>



இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
</p><p>


மேலும், தொழில்நுட்பம், வலுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T18:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது இளைஞனின் உயிரைப் பறித்த பேருந்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221"></link>
            <id>https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221</id>
            <summary type="text">மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

 

நேற்று (04) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம, சீராதுன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d47edccd-32fa-4360-b824-4e88719fc359/26-6a73700f052d1.webp' />&nbsp;</p><h2>&nbsp;மேலதிக சிகிச்சை</h2><p>
</p><p>
 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>&nbsp;மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
