<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-30T09:38:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராம் காதலனால் 24 வயது பெண் எரித்துக் கொலை; சம்பவத்தால் ஷாக் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-burned-to-death-over-illicit-affair-erode-1785402349"></link>
            <id>https://jvpnews.com/article/woman-burned-to-death-over-illicit-affair-erode-1785402349</id>
            <summary type="text">&amp;nbsp; இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாக அவரை பிரிந்து தனது பெற்றோரின் வீட்டில் அருகே மற்றொரு வீட்டில் வினோதினி மகனுடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896faa5e-2ec3-4e93-875c-867a61668b35/26-6a6b13ef26587.webp' /></p><h2>இன்ஸ்டாகிராம் மூலம்&nbsp;&nbsp;பழக்கம் </h2><p>
</p><p>
இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடையை சேர்ந்த நவநீதி கிருஷ்ணன்(26) என்பவரோடு வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. </p><p> 

 கடந்த சில நாட்களாக நவநீத கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் வினோதினி அவரிடம் சரியாக பேசவில்லை. எனவே, வினோதினி தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பழகி வருகிறார் என நவநீத கிருஷ்ணன் சந்தேகம் ஏற்பட்டது.
</p><p>
சம்பவத்தன்று நள்ளிரவு ஈரோட்டுக்கு வந்த நவநீத கிருஷ்ணன் வினோதினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரமடைந் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை வினோதினியின் உடல் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். </p><p>அப்போது நவநீதகிருஷ்ணன் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அங்கிருந்த அவர் தப்பி ஓடிவிட்டார்.

வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரின் பெற்றோர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p>

ஈரோடு கூடுதல் மகளிர் நீதிபதி நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி முன்னிலையில் நவநீதகிருஷ்ணன் என்னை ஊற்றி கொலை செய்யப்பட்டார் என வாக்குமூலம் கொடுத்துவிட்டு வினோதினி இறந்துவிட்டார். </p><p>

 போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நவநீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
இன்னிலையில் கள்ளக்காதலால் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T09:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்று நடைபெற்றது சட்டத்தரணிகள் சங்க கூட்டமா .....அரசியல் தலைவர்களின் கூட்டமா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
</p><p>
உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர,சாகர காரியவசம் போன்றவர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் என்றால்அது எவ்வாறுபட்ட கூட்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08e97d5-3197-4650-937e-c5fbc260b096/26-6a6b0b49e8593.webp' /></p><h2>&nbsp;எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள்?</h2><p>இந்த உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் சட்டதரணி என்று சொல்கிறார்கள் இவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.
</p><p>
தயாசிறி ஜயசேகர சொல்வதை போன்று ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பதால் அப்படி என்ன ஜனநாயகம் செத்திடும்.</p><p></p><p> கடந்த காலங்களில் நீதி துறையில் மாத்திரமல்ல முத்துறைகளிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையிலும் அரசியல் தலையீடுகள் இருந்த போது ஜனநாயகம் வாழ்ந்ததா? என்ற கீள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணிக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902"></link>
            <id>https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.



யாழ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce92a96-f80d-4acd-af04-a3890f139509/26-6a6b06780979d.webp' /></p><p>



 'மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்' 'செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்' 'உலகமே செம்மணியை மறந்து விடாதே!' உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>



இதன்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மறை மாவட்டத்தின் சாராபாக கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gotabaya-s-private-secretary-remanded-again-1785397018"></link>
            <id>https://jvpnews.com/article/gotabaya-s-private-secretary-remanded-again-1785397018</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b21b9169-03b2-4ce5-9a69-f38db638bb19/26-6a6aff1b92725.webp' /></p><p> 

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

பின்னர் சுகீஸ்வர பண்டார பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T07:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 12-ஆம் திகதி முழு சூரிய கிரகணம்; உலக மக்களுக்கு NASA அரிய வாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/total-solar-eclipse-on-august-12-nasa-offers-1785396227"></link>
            <id>https://jvpnews.com/article/total-solar-eclipse-on-august-12-nasa-offers-1785396227</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆகஸ்ட் 12-ஆம் திகதி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள அபூர்வ முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆகஸ்ட் 12-ஆம் திகதி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தென்படவுள்ள அபூர்வ முழு சூரிய கிரகண நிகழ்வை, உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் நாசா (NASA) நேரலை செய்யவுள்ளது.</p><p>



கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab40c471-4e16-47e0-8ee8-d80a2a5042d1/26-6a6afc0531acb.webp' /></p><p>

இந்த விண்வெளி நிகழ்வை நேரடியாகப் பார்க்க முடியாத உலகெங்கிலும் உள்ள மக்கள் கண்டுகளிப்பதற்காக, நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதனை நேரலை (Live Stream) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/department-of-meteorology-red-warning-wind-1785395463"></link>
            <id>https://jvpnews.com/article/department-of-meteorology-red-warning-wind-1785395463</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41938b1-b8d6-4364-9ba8-262507acd523/26-6a6af908bf9ea.webp' /></p><p> </p><p>

இக்கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p> </p><p>

எனவே, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-complaint-human-rights-1785394963"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-complaint-human-rights-1785394963</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளது.
</p><p>
 கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாகவும் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் காணாமல் போயுள்ளதாகவும் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையான மற்றும் நியாயமான விசாரணையை நடத்துமாறு கோரி, இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d104d979-d28e-4361-9134-885a7f180622/26-6a6af71634b06.webp' /></p><p></p><p>
</p><p>
சிறைச்சாலையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன கைதிகளின் உறவினர்கள் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இணைந்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a0f7f6-e5dd-4fbb-a42b-9a30114b07fd/26-6a6af715800ec.webp' /></p><p>

அதோடு, அரச பாதுகாப்பில் இருந்த கைதிகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறும், இடம்பெற்ற அநீதிகள் தொடர்பாக முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு தலையிடுமாறும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-30T07:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த தாக்குதல் ; மத்தியகிழக்கில் மீண்டும் பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-launches-powerful-attack-iran-war-middle-east-1785386816"></link>
            <id>https://jvpnews.com/article/us-launches-powerful-attack-iran-war-middle-east-1785386816</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமை&nbsp; போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. </p><p>

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6e8136-65de-4a9e-8ae7-07b45e94552e/26-6a6ad741a4ff5.webp' /></p><p> </p><p>

இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.</p><p></p><p> </p><p>

பெப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்த போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த போதும் 5 மாதங்களாக இந்தப் போர் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ வழக்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-money-laundering-case-adjourned-1785394414"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-money-laundering-case-adjourned-1785394414</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14593ab-5243-460b-a089-3b88799c4678/26-6a6af4f059f08.webp' /></p><p> 

இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-30T06:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் யாழை சேர்ந்த ஊடகவியலாளர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/journalist-from-jaffna-dies-suddenly-in-canada-1785388357"></link>
            <id>https://jvpnews.com/article/journalist-from-jaffna-dies-suddenly-in-canada-1785388357</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு&amp;nbsp; உயிரிழந்துள்ளதுள்ளதாக&amp;nbsp; கூறப்படும்&amp;nbsp; நிலையில் ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு&nbsp; உயிரிழந்துள்ளதுள்ளதாக&nbsp; கூறப்படும்&nbsp; நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c9ae26-4d5b-4057-b881-c42dcdbd28d4/26-6a6ae15706576.webp' /></p><p>
</p><p>
மேலும், பிரபல பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>உலகசெய்தி

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார். </p><p>

அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T05:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் பயணித்த வாகனம் வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-bound-jaffna-accident-in-vavuniya-2-dead-1785389143"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-bound-jaffna-accident-in-vavuniya-2-dead-1785389143</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தம்புள்ளையில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ea0688-5b26-4073-8038-731bd72c7d03/26-6a6ae0588d422.webp' /></p><p>

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5485af1-ae01-4fdd-9fdb-84f185d6209a/26-6a6ae0596496e.webp' /></p><p>
</p><p>
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ce30f12-ebd3-4b6e-b11d-9fb67f696732/26-6a6ae05a1d4b6.webp' /></p>]]></content>
            <updated>2026-07-30T05:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெந்தோட்டை கடற்பரப்பில் பாரசூட்டில் பறந்த வெளிநாட்டு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreigner-dies-while-parasailing-coast-of-bentota-1785387627"></link>
            <id>https://jvpnews.com/article/foreigner-dies-while-parasailing-coast-of-bentota-1785387627</id>
            <summary type="text">&amp;nbsp; காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (29) மாலை, கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்ட இலகுரக பாராசூட் இயந்திரம் ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பெண் மற்றும் அதை இயக்கிய நபருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d65c5c9-9bfa-474a-8d1d-9a68e7538bc3/26-6a6ada6cd6e21.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

அவரது சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராசூட்டை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:58:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள்களுடன் 26வயது பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/26-year-old-police-officer-arrested-with-drugs-1785387303"></link>
            <id>https://jvpnews.com/article/26-year-old-police-officer-arrested-with-drugs-1785387303</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயதுடைய உதவி பொலிஸ் அதிகாரியொருவர் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயதுடைய உதவி பொலிஸ் அதிகாரியொருவர் போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>



 சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec50308b-bff7-4060-8ea6-ea40da1a0372/26-6a6ad92988a0f.webp' /></p><p>


 கைதான உதவி பொலிஸ் அதிகாரி தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
</p><p>


சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T04:53:06+00:00</updated>
        </entry>
    </feed>
