<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T11:05:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை ; பிரபல நிறுவனத்தின் காருக்குள் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-abducted-stripped-and-tortured-1783679180"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-abducted-stripped-and-tortured-1783679180</id>
            <summary type="text">திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">


 யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார்&nbsp; குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe420bd-a47c-4c58-94d3-5b15aa82de79/26-6a50c8cdd068c.webp' /></p><h2 style="text-align: justify;">கடத்தல் சம்பவம்&nbsp;</h2><p style="text-align: justify;">
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், 

யாழ். இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c3e8a2-8872-48ec-831e-52611bfc898f/26-6a50c8ce88959.webp' /></p><p style="text-align: justify;">

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இந்நிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.

சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
இதனை அடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதேவேளை பொலிஸாரின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன், தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T10:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 ஆவது சீசன் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-vijay-tv-bigg-boss-season-10-1783679907"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-vijay-tv-bigg-boss-season-10-1783679907</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

 

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
</p><p>
 

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ccf8aa-fa50-49ac-92fb-a965ec80377c/26-6a50cd092f44f.webp' /></p><p> </p><p>

கடைசியாக ஒளிபரப்பான 9 ஆவது சீசனில் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா கணேஷ் வென்றார். </p><p>

ஆனால் மக்கள் வெற்றியாளராக கானா வினோத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அவர் இடையில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து திவ்யா கணேஷ் வெற்றிப் பெற்றார்.</p><p> 

 இந் நிலையில் செப்டம்பர் 6 முதல் பிக்பாஸ் 10 ஆவது சீசன் ஆரம்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உச்சம் தொட்ட கறுவாப்பட்டையின் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cinnamon-prices-hike-in-sri-lanka-1783678831"></link>
            <id>https://jvpnews.com/article/cinnamon-prices-hike-in-sri-lanka-1783678831</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1cde15-4fc7-413a-9470-3697f449dbb3/26-6a50c7716154e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை கறுவாப்பட்டைக்கான அதிக கேள்வி மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1783678612"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1783678612</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c9df94-bc8b-40dd-8174-2ce845bac6a5/26-6a50c69576a09.webp' /></p><p> </p><p>

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டல் அறைக்குள் அத்துமீறிய மட்டக்களப்பு உறுப்பினர்! அம்பலமான சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kattankudy-urban-council-member-misbehaves-woman-1783665020"></link>
            <id>https://jvpnews.com/article/kattankudy-urban-council-member-misbehaves-woman-1783665020</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயது இளம் தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகரசபை உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயது இளம் தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
திருமணம் முடித்து கணவரைப் பிரிந்து வாழும் அப்பெண், தனது வாழ்வாதாரத்திற்காக குறித்த ஹோட்டலில் 40,000 ரூபாய் சம்பளத்திற்குச் சுத்திகரிப்புப் பணியில் இணைந்துள்ளார். 

சில காலமாகச் சம்பளம் வழங்கப்படாததால், அவர் பணிக்குச் செல்வதைத் தவிர்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0764d54-3ac9-4746-af1f-0e7e6430570b/26-6a50917e43721.webp' /></p><p></p><h2>ஹோட்டல் அறைக்குள் பாலியல் தொல்லை </h2><p> </p><p>இந்நிலையில், நிலுவைச் சம்பளத்தைத் தருவதாகக் கூறி உரிமையாளரான நகரசபை உறுப்பினர் 
பெண்ணை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளார்.
</p><p>
வியாழக்கிழமை (09) காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்த நகரசபை உறுப்பினர், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த அப்பெண், இது குறித்துக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நகரசபை உறுப்பினரைக் கைது செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வௌ்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட உள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p><p>
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T10:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண நகரில் யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை ; அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crackdown-launched-on-beggars-in-jaffna-city-1783677465"></link>
            <id>https://jvpnews.com/article/crackdown-launched-on-beggars-in-jaffna-city-1783677465</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா நட்பு சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8082ae3f-6644-4eb5-9d90-e469ba740cc3/26-6a50c21b443da.webp' /></p><h2 style="text-align: justify; ">முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுற்றுப்பகுதிகளில் யாசகம் என்ற பெயரில் வியாபார நிலையங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72c029d4-86b9-475f-8fe4-66fdf3233ff6/26-6a50c299730ed.webp' /></p><p style="text-align: justify;">



இதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்பும் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அதன்படி, யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்புடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகத்தின் பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சொந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதாகவும், அவர்களின் பாதுகாவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழி பெறப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T09:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் பெரும் திருவிழா; விசேட ரயில் சேவைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/festival-nallur-kandaswamy-temple-spl-train-1783675264"></link>
            <id>https://jvpnews.com/article/festival-nallur-kandaswamy-temple-spl-train-1783675264</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) அன்று இடம்பெற்ற வினாநேரத்தின் போது,&nbsp; இரா. சாணக்கியன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85298cc1-ac23-4336-a5e3-8767e54d47c2/26-6a50b9823c284.webp' /></p><h2>திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவை</h2><p>

தற்போது வாரத்திற்கு 4 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவையை, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி சேவையாக அதிகரிக்க வேண்டும்.</p><p>

முப்படையினரின் முற்பதிவு காரணமாகப் பொதுமக்கள் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதால், வடக்கு நோக்கிய ரயில்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க வேண்டும் என சாணக்கியன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.</p><p></p><p>

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "மடு, நல்லூர் மற்றும் தலதா மாளிகை உற்சவங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். </p><p>

ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் பற்றாக்குறையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நெருக்கடிகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காண்போம்" என உறுதியளித்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னரே வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருவிழா 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் விமரிசையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T09:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-continues-to-rise-1783674228"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-continues-to-rise-1783674228</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

நாடு தழுவிய ரீதியில் இதுவரை 66,064 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக ஜீன் மாதம் மாத்திரம் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு,&nbsp; கடந்த 9 நாட்களில் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927e05a-ad94-4a76-b076-6661c1573ae6/26-6a50b576431e9.webp' /></p><h2 style="margin-left: 25px;">டெங்கு காய்ச்சல்</h2><p>


மேல் மாகாணத்தில் 34,828 (52.72 சதவீதம்) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென் மாகாணத்தில் 10,372 (15.70 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.</p><p></p><p>

டெங்கு பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T09:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தீவிரம்; பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்களை மூட வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-calls-close-schools-universities-1783674245"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-calls-close-schools-universities-1783674245</id>
            <summary type="text">&amp;nbsp; நா ட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நா ட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு உடனடியாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதனை 'மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்' தலைவர் சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d7c027-ca68-4431-bdcf-3f67424c2711/26-6a50b58753c3b.webp' /></p><h2>சுமார் 70,000 டெங்கு பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகள் பதிவாகும் பகுதிகளில் உள்ள கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கை பொருந்த வேண்டும் என்றும், மீண்டும் திறப்பதற்கு முன் அந்த வளாகங்கள் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
மேல் மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் சுமார் 70,000 டெங்கு பாதிப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.</p><p></p><p>
</p><p>
தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த பிறகு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது பலனளிக்காது என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சஞ்சீவ, நிலைமை மோசமடைவதற்கு முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
மருத்துவமனைகள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள் மற்றும் சிகிச்சை கோரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சோர்வுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
மருத்துவமனைப் படுக்கைகளின் பற்றாக்குறையால் சில நோயாளிகள் படுக்கைகளுக்கு அடியிலோ அல்லது மருத்துவமனை நடைபாதைகளிலோ தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

டெங்கு பரவல் தீவிரமடையும் வரை காத்திருப்பது அதைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்த டாக்டர் சஞ்சீவ, கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்</p>]]></content>
            <updated>2026-07-10T09:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பா செல்வோரின் அந்தரங்கங்களை படம்பிடித்து வெளி நாட்டுக்கு விற்பனை ; பொலிஸார் அதிரடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-video-trafficking-spa-center-police-raid-1783673208"></link>
            <id>https://jvpnews.com/article/secret-video-trafficking-spa-center-police-raid-1783673208</id>
            <summary type="text">&amp;nbsp; பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

 எல்லபகுதியில் இயங்கி வந்த இந்த ஸ்பா மையத்தில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர் போல வேடமணிந்த சென்று சட்டவிரோதச் செயல்பாட்டை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7154de85-272d-4537-ae82-71dc804e6c7b/26-6a50b17a0eee2.webp' /></p><h2>&nbsp;4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணம்</h2><p>
</p><p>
இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னெடுத்த முக்கிய சந்தேக நபர்களாக, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணும், மினுவாங்கொடப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
அங்குள்ள அறைகளில் தந்திரமாகப் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளைப் படம்பிடித்து, அவற்றை வெளிநாட்டுத் தரப்பினருக்குப் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, விபச்சாரம் மற்றும் பாலியல் காணொளி விற்பனைச் செயல்பாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
சந்தேகத்திற்குரிய ஜோடியைத் தவிர, ஜா-எல, மினுவாங்கொட, மாத்தளை மற்றும் வெலிமடைப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் இந்தச் சோதனையின் போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் அலைபேசிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
</p><p>
உவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்ஸிரி விஜேரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரவளைப் பிரிவு விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T08:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களின் நகைகள் எங்கே? உகண்டாவிலா...சிறிதரன் எம்பி காரசாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/final-war-jewelry-mp-sridharan-ask-parliament-1783670859"></link>
            <id>https://jvpnews.com/article/final-war-jewelry-mp-sridharan-ask-parliament-1783670859</id>
            <summary type="text">&amp;nbsp; இறுதி யுத்தத்தின் போது வன்னி வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுக்கு என...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறுதி யுத்தத்தின் போது வன்னி வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுக்கு என்ன நடந்தது என சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
 இது குறித்து அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03c46980-5dae-44f1-8002-5ea45d6f7cd1/26-6a50a89b8a675.webp' /></p><p>

நாடாளுமன்றத்தில்&nbsp; நேற்று (9)&nbsp; நடைபெற்ற நிதி தூய்தாக்கல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,</p><p></p><p> 

"யுத்த காலத்தில் தமிழர்கள் தங்கள் விவசாயத் தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வன்னி வைப்பகங்களில் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர்.</p><p>

இறுதி யுத்தத்தின் போது, இந்த நகைகள் அடங்கிய கொள்கலன்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினர் பொறுப்பேற்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பலமுறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சிறிதரன் எம்பி சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T08:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வாசனை சவர்க்காரத்துடன் சென்றவர் கைது ; பார்சலில் வந்த பொருளால் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-man-arrested-after-suspicious-parcel-seized-1783670362"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-man-arrested-after-suspicious-parcel-seized-1783670362</id>
            <summary type="text">வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740bacca-0d1e-4bd1-ad41-6164af80f492/26-6a50a65ba32e6.webp' /></p><h2 style="text-align: justify; ">சவற்காரங்களுடன் கைது</h2><p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">


பொலிசாரின் சோதனையின் போது, வெளியிடமொன்றிலிருந்து பார்சல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவர்க்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">


கைதுசெய்தப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.
</p><p style="text-align: justify;">
 

கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">



இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும்&nbsp; யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T08:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லடிப் பாலத்தின் மீது இளைஞனின் செயலால் பரபரப்பு ; பொலிஸாரால் தடுக்கப்பட்ட பெரும் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-act-on-kallady-bridge-sparks-panic-1783669353"></link>
            <id>https://jvpnews.com/article/youth-act-on-kallady-bridge-sparks-panic-1783669353</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், கூரிய பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்துக்கொள்வதை அவதானித்த கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d181f6ab-efb1-4207-9a77-e9b9df697623/26-6a50a26b1892a.webp' /></p><h2 style="text-align: justify;">போக்குவரத்து நெரிசல்</h2><p style="text-align: justify;"> இருப்பினும், கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify;">

இந்தச் சம்பவத்தினால் கல்லடிப் பாலத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p style="text-align: justify;">சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T07:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் திரையுலகில் சோகம்; மற்றுமொரு இயக்குநர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/national-award-win-director-chezhiyan-passed-away-1783658729"></link>
            <id>https://jvpnews.com/article/national-award-win-director-chezhiyan-passed-away-1783658729</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக&amp;nbsp; இந்திய&amp;nbsp; ஊடகங்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் வயது 50 ஆகும்.</p><p>

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd7d09a-9035-451d-a574-e418454610ad/26-6a5078eb45262.webp' /></p><p></p><h2>திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்</h2><p>சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.&nbsp; &nbsp; </p><p>&nbsp;கடந்த 2017-ல் டூலெட் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கொல்கத்தா சர்வதேச பட விழாவில் இந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதையும் டூலெட் வென்றது.&nbsp;</p><p></p><p>இந் நிலையில்&nbsp; சென்னை தரமணியில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) காலை அவர் காலமானாதாக&nbsp; தெரிவிக்கபப்டுகின்றது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T07:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம யாத்திரீகளுக்கு உணவு தயாரிக்க சென்றவருக்கு நடந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-man-dies-accident-1783667942"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-man-dies-accident-1783667942</id>
            <summary type="text">பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த வேன் சாரதி சிகிச்சை பல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த வேன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52ff0a25-df13-4af5-92f5-33e7dde13024/26-6a509ce7c9e35.webp' /></p><h2 style="text-align: justify; ">பிரேதப் பரிசோதனை</h2><p> </p><p style="text-align: justify;">உயிரிழந்தவர், கதிர்காமப் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தை பகுதியில் உணவுகளைத் தயாரித்து வழங்கிய பின்னர், வீடு திரும்பும் வழியிலேயே விபத்தில் சிக்கியுள்ளார்.</p><p style="text-align: justify;">

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன், ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. </p><p style="text-align: justify; ">விபத்தின் வேகத்தினால் இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இவ்விபத்தில் வேன் ஓட்டுநரும், முச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டுப் பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வேன் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.</p><p style="text-align: justify;"> அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. </p><p style="text-align: justify;">விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-10T07:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; காணாமல் போன துப்பாக்கி மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-riot-missing-gun-recovered-1783668100"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-riot-missing-gun-recovered-1783668100</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது காணாமல் போன ‘ரிப்பீட்டர்’ (Repeater) வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது காணாமல் போன ‘ரிப்பீட்டர்’ (Repeater) வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
சிறைச்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கையின் போதே, துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாகத் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

 கடந்த ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போதே, இந்த ஆயுதம் காணாமல் போயிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5190f150-974d-4c8c-95ab-be818156eda7/26-6a509d85e4ba8.webp' /></p><h2>&nbsp;கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளைத் தங்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
காணாமல் போன ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன.

இலங்கை சிறைச்சாலைகளில் தற்போதைய கைதிகளின் எண்ணிக்கை அதன் கொள்ளளவை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

 இதனையடுத்து பழைய மற்றும் பயன்படுத்தப்படாத சிறைச்சாலை வளாகங்களைச் சீரமைத்து, கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T07:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வீட்டின் மீது பாய்ந்த பேருந்து ; நால்வர் படு காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-crashes-into-trinco-house-four-injured-1783665934"></link>
            <id>https://jvpnews.com/article/bus-crashes-into-trinco-house-four-injured-1783665934</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify;">&nbsp;திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c66922a-d001-4907-affb-769c4b12c1c7/26-6a50951027ab7.webp' /></p><h2 style="text-align: justify;">கடுமையான&nbsp; சேதம்</h2><p>
</p><p style="text-align: justify;">


விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee93c288-025c-4912-86b2-dd0a37b18739/26-6a509510d3f8e.webp' /></p><p> </p><p style="text-align: justify;">



சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. </p><p style="text-align: justify;">எனினும், அந்த நேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எவருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T06:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1783665874"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1783665874</id>
            <summary type="text">&amp;nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு ஆதரவு தெரிவித்து சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு ஆதரவு தெரிவித்து சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து இடைக்கால மனுக்களையும் வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8a7657-deaf-4b7f-b8e8-953fc7c75aac/26-6a509539bbd63.webp' /></p><h2>&nbsp;மனுக்களைப் பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>
</p><p>
 

வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
</p><p>
 

குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p></p><p>
</p><p>
 

இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறுகள், முதல் மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தால் மட்டுமே சாத்தியமாகும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

இங்கு இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான வி. கே. சொக்ஸி, மனோஹர டி சில்வா மற்றும் கிரிஷ்மால் வர்ணசூரிய, அசோக் பரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், இந்த வழக்கு தற்போது பொதுமக்களின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள ஒரு விவகாரம் என்பதால், இதில் தலையிட்டுத் தங்களது கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தை வேண்டி நின்றனர்.</p><p></p><p>
</p><p>
 

எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய குறிப்பிடுகையில், மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பிப்புகள் நிறைவடைந்த பின்னரே இந்த இடைக்கால கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிக்க முடியும் எனத் கூறினார்</p>]]></content>
            <updated>2026-07-10T06:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலியின் சாட்சியத்தால் சிக்கிய யோஷித ராஜபக்ஷ ; நீதிமன்றில் அம்பலமான பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-ex-lover-gives-key-testimony-1783663883"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-ex-lover-gives-key-testimony-1783663883</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஜூலை 1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க முக்கிய சாட்சியமளித்துள்ளார். </p><p style="text-align: justify;">

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் நெறிப்படுத்தலில் முறைப்பாட்டாளர்களின் தரப்பு சாட்சியாளர்களான நால்வரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab84352e-1b59-4657-86dc-ff03028eba2e/26-6a508d0cde521.webp' /></p><h2 style="text-align: justify;">முக்கிய சாட்சியம்</h2><p style="text-align: justify;">
வழக்கின் முக்கிய சாட்சியாளரான சீஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் பிரதானியும், யோஷித்தவின் முன்னாள் காதலியுமான யசாரா அபேநாயக்க சாட்சியமளிக்கையில்,</p><p style="text-align: justify;"> "எனக்கும் யோஷிதவுக்கும் இடையே 2009 முதல் 2013 வரை காதல் தொடர்பு இருந்தது. நாங்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில், கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் அவரது பாட்டிக்கு சொந்தமானது என யோஷித கூறிய வீடு ஒன்றை நாங்கள் பார்வையிட்டோம். திருமனத்தின் பின்னர் அந்த வீட்டிற்கு குடிபெயர்வதற்காக வீட்டின் உற்புர அலங்கார வடிவமைப்பாளருடனும் பேசினோம் எனத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify;">

மற்றொரு சாட்சியாளரான லுஷான் ரத்நாயக்க சாட்சியமளிக்கையில், </p><p style="text-align: justify;"> தனது மனைவியின் நோய் நிலைமை காரணமாக கல்கிஸ்ஸ சிறிமல் உயன பகுதியிலிருந்த 34.5 பேர்ச் காணி மற்றும் வீட்டை 34 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்ததாகக் கூறினார். தனது நண்பரான வசந்த ஜயசூரிய மூலம் வந்த தரப்பினரே இக்காணியை வாங்கினார்கள். எனினும் அது யார் என்பது அப்போது எனக்கு தெரியாது.</p><p style="text-align: justify;"> ராஜகிரியவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இதற்கான உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்ட போதே வீட்டை கொள்வனவு செய்பவரின் பெயர் 'டேசி ஃபொரஸ்ட் (யோஷிதவின் பாட்டி) எனத் தமக்குத் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 34.54 மில்லியன் ரூபா பணம் வங்கி கணக்கில் முழுமையாக வைப்பு செய்யப்பட்டதன் பின்னரே உரிமம் மாற்றறும் ஆவணத்தில் கையெழுத்திட்டோம். எனினும் பணத்தை வைப்பிலிட்டவர் யார் என தெரியாது. காணியை வாங்குவதற்கு முன்னரே யோஷிதவும் யசாராவும் அங்கு வந்து பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதன்போது சாட்சியமளித்த வசந்த ஜயசூரிய, யோஷித்த யசாராவை திருமணம் செய்யவிருந்தார். ஆகையால் நான் யோஷிதாவிடம் சிறிமல் உயானாவில் உள்ள காணியை பற்றிக் கூறினேன். அவர் அந்த காணியை கொள்வனவு செய்ய தயாராக உள்ளதாக கூறினார். அதன்படி, ராஜகிரியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் காணியை கொள்வனவு செய்வதற்கான பத்திரங்கள் கையொப்பமிடப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சிறிமல் உயன காணியை வாங்குவதற்கான முழுத் தொகையான 34 மில்லியன் ரூபாவும், வங்கிக்கு ஒரு பயணப் பையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்ற ஒருவரால் ரொக்கமாகக் கொண்டுவரப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார். </p><p style="text-align: justify;"> இதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஏனைய சாட்சியாளர்களையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T06:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை செய்த விபரீதம் ; புற்றுநோயால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-father-of-three-dies-in-tragic-incident-1783660115"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-father-of-three-dies-in-tragic-incident-1783660115</id>
            <summary type="text">யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

 

கொழும்புத்துறையைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

கொழும்புத்துறையைச் சேர்ந்த&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897daee7-de9e-4acb-aaa4-fd22fa44b33f/26-6a507f17b8ba6.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

 

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

பின்னர் அவரது சடலமானது ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-10T06:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/26-people-arrested-with-60-448-sea-cucumbers-1783663499"></link>
            <id>https://jvpnews.com/article/26-people-arrested-with-60-448-sea-cucumbers-1783663499</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 60,448 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>


இந்த நடவடிக்கையின்போது, 26 சந்தேகநபர்களும் 12 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







வடமத்திய கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பல டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521b43d8-0d33-4e4b-b834-8452d3a3c290/26-6a508b8cd8a17.webp' /></p><p> </p><p>அப்போது கடல் வழியாக சட்டவிரோதமாக தரைக்கு கடத்தப்பட்டிருந்த பெருமளவிலான கடல் அட்டைகள் மீட்கப்பட்டன.



மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>



சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T06:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம கந்தன் ஆடிவேல் உற்சவம்; காட்டுபாதை திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-aadi-vel-festival-forest-path-opened-1783663030"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-aadi-vel-festival-forest-path-opened-1783663030</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி, உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன்&nbsp; திறந்து வைக்கப்பட்டது.</p><p>&nbsp;கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம், எதிர்வரும் 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f979cbbf-ab73-4a48-8128-4442a8868e85/26-6a5089b939404.webp' /></p><p> </p><p>தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் பக்திபூர்வமாக நிறைவடையவுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந் நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157fb51b-85a0-4c5d-9eb8-517b9bca802d/26-6a5089b878eb9.webp' /></p><p>
</p><p>
 அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட அதிதிகளால் குறித்த காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பாதையானது, எதிர்வரும் 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் பக்தி சிரத்தையுடன் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421991db-c37f-4781-8c29-351940614c5f/26-6a5089b7bd4d4.webp' /></p><p> </p><p>

இவர்கள் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கொண்ட, அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளைக் கடந்து, தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காகக் கதிர்காமம் நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T05:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் மாகாணத்தில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 35,000 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-western-province-35-000-affected-1783662090"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-western-province-35-000-affected-1783662090</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

 

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆகும்.

 

இதேவேளை, இன்றைய தினம் (10) வரை பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90dceed5-80d3-47ee-8011-99b75aab3ee6/26-6a50860c3132e.webp' /></p><p>

 

இவ்வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 13,355 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,699 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 4,425 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T05:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமறைவாகியிருந்த பிரதேச சபை தவிசாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/absconding-council-chairman-arrested-suddenly-1783661608"></link>
            <id>https://jvpnews.com/article/absconding-council-chairman-arrested-suddenly-1783661608</id>
            <summary type="text">இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்த பாதஹேவாஹெட்ட பிரதேச சபையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்த பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு, நீதிமன்றம் முன்னதாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/908da34d-945f-43f8-a4a3-2a7620f4c8d4/26-6a508429854a0.webp' /></p><h2>தலைமறைவு</h2><p>
</p><p>
 

எனினும், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தான் வசித்து வந்த கண்டி, மாரஸ்ஸன பகுதியை விட்டு வெளியேறி, இரகசியமாகத் தலைமறைவாகியிருந்தார்.
</p><p>
 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாகச் செயல்பட்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று (09) கிரில்லவல, இம்புல்கொட பகுதியில் வைத்து பிரதேச சபை தலைவரைக் கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>கைது செய்யப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸாரின் அறிவுரைக்கு அமைவாகவே தான் அவ்வப்போது தங்குமிடங்களை மாற்றி தலைமறைவாக இருந்ததாகச் சந்தேக நபரான பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T05:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோயில் முன்றலில் அரங்கேறிய சம்பவம் ; சுற்றி வளைப்பில் பிடிபட்ட இரு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-courtyard-incident-in-tamil-area-1783652265"></link>
            <id>https://jvpnews.com/article/temple-courtyard-incident-in-tamil-area-1783652265</id>
            <summary type="text">மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் மட்டக்களப்பு வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் மட்டக்களப்பு வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய மற்றும் 19 வயதுடைய இருவரை புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p>சம்பவம் தொடர்பில்&nbsp; தெரியவருவதாவது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34743cef-6249-4056-a6b7-fdda9df1e429/26-6a505fab6f7e4.webp' />&nbsp;</p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p> </p><p>மட்டக்களப்பு ரவுடி குழு என்ற பெயரில் இயங்கிவரும் வாள்வெட்டுக்குழு கடந்த மாதம் 29 ம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் ரவுடிக்குழு ஒன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடாத்தியவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர்.</p><p>

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (8) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியிருந்த வீட்டை சுற்றிவளைத்து இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் 3 வாள்களை மீட்டனர்.
</p><p>
இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் செல்வநகரைச் சேர்ந்த மதுஷன், மற்றும் செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.</p><p>

 இந்த வாள்வெட்டு குழுவினர் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாளுகளுடன் வலம் வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதுடன் போதை பொருள் கடத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

 கடந்த 2025ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் இந்து குழுவில் அந்த பகுதியைச் சோந்த 15 தொடக்கம் 28 வயது வரையிலான 10 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T05:09:27+00:00</updated>
        </entry>
    </feed>
