<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T15:02:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. </p><p>

அதற்கமைவாக, நாளை (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6d1473-a9ec-4af2-bbf1-d27b7608de22/26-6a53975382b98.webp' /></p><h2>சிறைக்கைதிகள்&nbsp;</h2><p> </p><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அங்குள்ள சிறைக்கைதிகள் சிலரை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>

அவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p> 

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் ; சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876</id>
            <summary type="text">இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.
</p><p>

கடந்த ஜூலை 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீண்டகாலமாக வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து இந்த மலையகக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b160ac4b-c14c-4e4b-a9c1-9a1d6628b32c/26-6a53965e0d74c.webp' /></p><h2>தவறான விமர்சனங்கள்</h2><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதியமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

"இந்த வெளியேற்ற நடவடிக்கையானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பாகவே அமைந்திருந்தது.</p><p> எனினும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது முற்றிலும் பிழையானதொரு கண்ணோட்டமாகும்." எனத் தெளிவுபடுத்தினார்.
</p><p>
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை முழுமையாக ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="margin-left: 25px;"></p><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் பின்னர் அவர்களுக்கு மிக விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>


அத்துடன், அமைச்சர் லால்காந்த அவர்களுடனும் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடிச் சரியானதொரு தீர்வை எட்டவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய குடியிருப்புகளை வழங்குவதற்குத் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக முன்னின்று செயற்படும் என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன்போது மேலும் தெரிவித்தார்.</p><p>

இந்தக் கள விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவி துஸ்பிரயோகம், மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் ; இறுதியில் தந்தைக்கு கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575</id>
            <summary type="text">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
</p><p style="text-align: justify; ">
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ce6d1-602b-482b-ba6f-1010d5466a7c/26-6a5391487be31.webp' /></p><h2 style="text-align: justify; ">கொடூரக்கொலை&nbsp;</h2><p style="text-align: justify; ">இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "> தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க&nbsp; திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்&nbsp; சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
 மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T13:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; அவசர எச்சரிக்கைகளால் அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868"></link>
            <id>https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b53c56dc-2987-4b55-bb9c-512d0cd6fec9/26-6a539a3d52de0.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110"></link>
            <id>https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224e183e-0065-493b-a433-99168343eb16/26-6a538b901dd9a.webp' /></p><p> 

அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரையிலும், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வருடங்களாக கோமாவில் கணவர் ; காலை கடித்து சரி பண்ணிய மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182"></link>
            <id>https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182</id>
            <summary type="text">கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.  இந்நிலையில்தான் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. </p><p> இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebeb51fb-bfc6-4a41-b610-c996e312f7eb/26-6a53746793d92.webp' /></p><h2>நெகிழ்ச்சி சம்பவம்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.</p><p>கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.</p><p>


தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.</p><p></p><p> </p><p>அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். </p><p>சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685</id>
            <summary type="text">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான &#039;அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவல்படி, பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை - 'எச்சரிக்கை'&nbsp; நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d165534-efe1-450d-9fc1-c23fea19b6c9/26-6a5385feee112.webp' /></p><h2 style="text-align: justify;">வெப்பச் சுட்டெண்</h2><p style="text-align: justify;">



வெப்பச் சுட்டெண் என்பது ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடல் உணரும் வெப்பத்தை பிரதிபலிக்கிறதே தவிர, அது முன்னறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அல்ல என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
</p><p style="text-align: justify;">


கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலில் இருக்கவும், அதிகளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T12:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474"></link>
            <id>https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474</id>
            <summary type="text">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீண்டும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c43fa8-d97e-4e81-a271-d6df905e2456/26-6a53814395667.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு</h2><p> </p><p style="text-align: justify;">&nbsp;போதைப்பொருள் மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வின்படி, புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்கள் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தபோது பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">அதன்படி, 47 சதவீத புனர்வாழ்வு முடித்தவர்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாலேயே மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக பிரதான காரணமாக உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
மேலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலின் தாக்கம், காரணமாக 24.5 சதவீதமானோர், குடும்பத்தினரின் முறையான அரவணைப்பும் கவனமும் கிடைக்காததால் 23 சதவீத பேரும், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழல் காரணமாக 22 சதவீத பேரும், காதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர காரணங்களால் 4 சதவீதமானவர்கள் மீண்டும் போதைப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கின்றனர்.
</p><p style="text-align: justify;">

இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, பெரும்பாலானவர்கள் தங்களின் 11 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிப் பருவத்திலேயே முதன்முதலில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றுக்கு அடிமையாகி, பின்னரே கடுமையான போதைப்பொருட்களுக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 76 சதவீத பேர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்களாவர். மாறாக, உயர் தரம் வரை கல்வி கற்றவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக, அதாவது 13 சதவீத ஆக மட்டுமே உள்ளது. </p><p style="text-align: justify;">இதன் காரணமாக, பிள்ளைகளை சாதாரண தரத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களை உயர் கல்வி நோக்கி ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்கும் உண்டு.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இளம் தலைமுறையினரை இந்த போதையிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேரைச் சென்றடையும் வகையில் 1,050 விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"> நடப்பு ஆண்டில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு 1,278 விழிப்புணர்வு திட்டங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 660 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 62,000 பேர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c95cf1e-9d08-4440-bb2b-5eebe7462422/26-6a533274a1e68.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T11:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 68,000த்தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. </p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46348c0-2f99-4700-b528-7b36e4a40ba4/26-6a53780d5b929.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p> </p><p>

இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

டெங்கு நோய் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>அதிகப்படியான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். </p><p>

ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p>

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,823 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். </p><p>

தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,560 பேரும் என அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் வெளியே சென்ற பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-killed-after-going-out-at-night-1783851997"></link>
            <id>https://jvpnews.com/article/woman-killed-after-going-out-at-night-1783851997</id>
            <summary type="text">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

சனிக்கிழமை (11) இரவு குறித்த பெண் அருகிலுள்ள வீடொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3112f906-3390-4974-bad2-6c602e055fce/26-6a536bdeac23f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவர் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T10:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை தொடர்பில் வெளியான தகவல் ; அமைச்சரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/latest-update-on-irakkamam-tile-factory-1783851087"></link>
            <id>https://jvpnews.com/article/latest-update-on-irakkamam-tile-factory-1783851087</id>
            <summary type="text">திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். </p><p style="text-align: justify; ">

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7c671b-9c65-4e78-af9a-787260012059/26-6a5368514fa84.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விஷேட வர்த்தமானி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை உரையாற்றும் போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, வீரமுனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 25 விவசாயிகளின் 197 ஏக்கர் மற்றும் 3 ரூட் உறுதிக் காணி 1970 இல் இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அன்றைய அரசினால் விஷேட வர்த்தமானி மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இந்த காணிகளை மீளப்பெற்றுக் கொள்ளவென இந்த விவசாயிகளும் அவர்களது பரம்பரையினரும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கடந்த கால காணி அமைச்சர்கள், கைத்தொழில் அமைச்சு அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளை அவர்கள் பல தடவைகள் சந்தித்துள்ள போதிலும் இற்றை வரையும் அவர்களுக்கு குறித்த காணியோ அல்லது மாற்றுக் காணியோ அல்லது காணிக்குரிய நஷ்டஈடோ இற்றை வரையும் கிடைக்கப் பெறாதுள்ளது. </p><p style="text-align: justify; ">


இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி குறித்த விவசாயிகளுக்கு காணியை மீளப் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அக் காணிக்குரிய நஷ்டஈட்டை வழங்கவோ அல்லது மாற்று காணி வழங்கவோ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் லால் காந்த, இவ்விடயம் தொடர்பில் காணி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையில் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம், கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர் தனியார் காணி உரிமையாளர்களுடன் பல கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதோடு காணியை அடையாளம் காணும் விடயங்களுக்கான செலவினை நில அளவையாளர் திணைக்களத்திற்கு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்தும் அந்த தீர்மானம் செயற்படுத்தப்படாமல் உள்ளதாக காணி ஆணையாளர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
இதன்போது அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையின் காணி விவகாரம் தொடர்பில் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து அமைச்சர் லால் காந்தவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T10:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மீளத் திறக்கப்படும் கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visual-arts-university-reopens-tomorrow-1783850197"></link>
            <id>https://jvpnews.com/article/visual-arts-university-reopens-tomorrow-1783850197</id>
            <summary type="text">டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, 'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்திற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் புகைத்தல் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4c06e0-4671-4231-939e-ccf73d9444df/26-6a5364d703d45.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு பரவல்</h2><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

தற்போதைய சூழ்நிலையில், நுளம்புகள் பெருகுவதற்கான இடங்களைப் பேணுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தி வருவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

டெங்கு பரவலின் வேகமான அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,000-ஐத் தாண்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இச்சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்றும் (12) பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இதன்போது, நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள முதியோர் இல்லமொன்றின் மீது வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T09:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-pilgrim-s-tragedy-during-kataragama-journey-1783848970"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-pilgrim-s-tragedy-during-kataragama-journey-1783848970</id>
            <summary type="text">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3fb8483-30ef-4699-b27d-2d5f7a030f32/26-6a53600c44f6b.webp' /></p><h2 style="text-align: justify; ">யாத்திரிகர்</h2><p style="text-align: justify; ">இவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் குறித்து, லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னதாக, கடந்த 8ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து, பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. </p><p style="text-align: justify; ">அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T09:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையற்ற சிறுமிக்கு நடத்தப்பட்ட தகாத செயல் ; காதலனால் அரங்கேற்றப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/orphan-girl-faces-shocking-abuse-incident-1783847704"></link>
            <id>https://jvpnews.com/article/orphan-girl-faces-shocking-abuse-incident-1783847704</id>
            <summary type="text">15 வயது 4 மாத சிறுமி ஒருவர், சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கடந்த (11) ஆம் திகதி மொனராகலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">15 வயது 4 மாத சிறுமி ஒருவர், சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கடந்த (11) ஆம் திகதி மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11-ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்தச் சிறுமியின் பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில், அவர் தனது பாட்டி மற்றும் சித்தியின் பராமரிப்பில் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8f86e5-1069-40c4-8018-be285e775205/26-6a535b1a27d5f.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;பொலிஸில் முறைப்பாடு&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

அந்த இருவரும் சிறுமி குறித்து அதிக கவனம் செலுத்தாததால், அவர் அருகிலுள்ள ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். குறித்த வீட்டிற்கு தவறுதலாக அழைப்பை ஏற்படுத்திய நபருடன் சிறுமிக்குக் காதல் மலர்ந்துள்ளது</p><p style="text-align: justify;">&nbsp;அந்த நபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவராவார். பின்னர், அந்த இளைஞன் குறித்த வீட்டிற்கு வந்து, அங்கு சிறுமியுடன் தகாத முறையில் நடந்துக்கொண்டதை அறிந்த சித்தி சிறுமியைத் திட்டியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனைத் தொடர்ந்து, கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் திகதி, “நண்பர்களுடன் வெளியில் செல்கிறேன்” என்று பாட்டியிடம் கூறிவிட்டுச் சென்ற சிறுமி, காலி பகுதிக்குச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"> அங்கு காலி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த இளைஞன், சிறுமியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருடன் மீண்டும் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சிறுமி வீட்டிற்குத் திரும்பியதும், இது குறித்து அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-12T09:15:12+00:00</updated>
        </entry>
    </feed>
