<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T06:11:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயணைப்பு அவசர அழைப்பு இலக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-emergency-hotline-faces-technical-issue-1783748829"></link>
            <id>https://jvpnews.com/article/fire-emergency-hotline-faces-technical-issue-1783748829</id>
            <summary type="text">தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, பொதுமக்கள் ஏதேனும் தீ விபத்துகள் அல்லது அவசர நிலைகள் குறித்து அறிக்கை செய்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa32cd08-d065-422b-b876-36bbf4636d37/26-6a51d9a93597e.webp' /></p><p></p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-07-11T05:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108"></link>
            <id>https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி&nbsp; தலைமையில் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e12a17-3c20-4624-abce-10c240351f76/26-6a51aefe7853e.webp' /></p><p style="text-align: justify;">

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T05:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இளைஞனின் மரணத்தால் பெரும் சோகம் ; துயரில் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mourns-young-man-s-sudden-death-1783746514"></link>
            <id>https://jvpnews.com/article/mourns-young-man-s-sudden-death-1783746514</id>
            <summary type="text">கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672af37a-0d10-4456-a0f2-33215683796e/26-6a51cfd41e7c7.webp' /></p><p>

குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
</p><p>
இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஸ்கட்களில் தமிழில் திருக்குறள் வார்த்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thirukkural-words-in-tamil-on-biscuits-britannia-1783746134"></link>
            <id>https://jvpnews.com/article/thirukkural-words-in-tamil-on-biscuits-britannia-1783746134</id>
            <summary type="text">&amp;nbsp; உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்&nbsp; நோக்கத்துடன் தனது 'மில்க் பிகிஸ்' (Milk Bikis) பிஸ்கட்களில் திருக்குறள் வார்த்தைகளை அச்சடித்துள்ளது.</p><p>இது&nbsp; தொடர்பில் இந்திய&nbsp; ஊடகங்கள்&nbsp; குறிப்பிட்டுள்ளதாவது,</p><p>

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்..." போன்ற உலகப்பொதுமறையின் உன்னத வரிகளை பிஸ்கட்களின் மேல் வடிவமைப்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4d457d-90f6-4177-badd-4d3d7b32a6dd/26-6a51ce57a4a98.webp' /></p><p>

பல மாத காலத் தீவிர உழைப்பிற்குப் பின்னரே இந்த அரிய முயற்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள பிரிட்டானியா நிறுவனம், இதனுடன் சேர்த்து 'திருக்குறள் சேலஞ்ச்' என்ற விசேட போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>

2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட 133 அதிகாரங்களைக் கொண்ட 1330 குறள்கள் அன்றாட வாழ்விற்கான மிகவும் போற்றப்படும் வழிகாட்டி நூல்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-11T05:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா செல்வோர் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dense-fog-in-nuwara-eliya-drivers-caution-1783745517"></link>
            <id>https://jvpnews.com/article/dense-fog-in-nuwara-eliya-drivers-caution-1783745517</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

 இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

 இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். </p><p>

 நேற்று (10) அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல, தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள உயர் பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. </p><p>சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர் வரை மட்டுமே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4770752-0ed8-42e6-8fb0-71ef3b6da618/26-6a51cbeeef86a.webp' /></p><p> 

 விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, பிரதான வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தும், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தியும் மெதுவாகப் பயணிக்குமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p> 

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி வாகனங்களைச் செலுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

வானிலை சீரற்ற தன்மை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அத்தியாவசியத் தேவையின்றி அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்குமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 
 ஒவ்வொரு சாரதியும் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T04:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தை பிறப்பு வீழ்ச்சி; குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decline-in-birth-rate-in-sri-lanka-1783745173"></link>
            <id>https://jvpnews.com/article/decline-in-birth-rate-in-sri-lanka-1783745173</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c9175c-bf3b-45b2-a0b1-7f58479ce6c9/26-6a51ca96bc2e2.webp' /></p><p>
</p><p>
இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை குறைவடைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித் திறனுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
எனவே, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குடும்பங்களை கவரக்கூடிய நிதி ஊக்கத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T04:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் அவசமாக தரையிறக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363"></link>
            <id>https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363</id>
            <summary type="text">UPDATE:&amp;nbsp;கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;"><b>UPDATE:&nbsp;</b>கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட 'A330' ரக பயணிகள் விமானம் ஒன்றுடன் பறவையொன்று மோதியுள்ளது.</p><p style="text-align: justify;">


பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2c5363-0b12-4187-8449-c37ce8bd889c/26-6a51c76c810f7.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
எனினும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தற்போது எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T04:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனையில் பிடிபட்ட 19வயது இளைஞன் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-caught-during-police-check-1783742863"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-caught-during-police-check-1783742863</id>
            <summary type="text">கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d17497-320e-49f3-a4b3-9e7586aeb851/26-6a51c1907823f.webp' /></p><h2 style="text-align: justify; ">போதை மாத்திரைகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 69 கிராம் குஷ் போதைப்பொருள், 18 கிராம் கொகெய்ன் மற்றும் 40 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T04:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானது ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-warned-as-next-two-weeks-pose-high-risk-1783740909"></link>
            <id>https://jvpnews.com/article/public-warned-as-next-two-weeks-pose-high-risk-1783740909</id>
            <summary type="text">மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலுக்கு மிகவும் ஆபத்தான காலமாக அமையும் என டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலுக்கு மிகவும் ஆபத்தான காலமாக அமையும் என டெங்கு முகாமைத்துவ விசேட நிபுணர் குழு எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; ">


விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில், தற்போதைய டெங்கு நிலைமை 2017ஆம் ஆண்டை விடவும் தீவிரமடையக்கூடும் எனக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec041aca-e1bc-4927-af55-e3a2fabbf3a7/26-6a51b9ee6f012.webp' /></p><h2 style="text-align: justify; ">நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; ">

நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், மேல் மாகாண வைத்தியசாலைகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே, பருவமழைக் காலங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பது வழக்கமானதெனவும், இதற்கான முன் தயாரிப்புகள் அவசியம் எனவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
மேலும், சில நாடுகளில் டெங்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவை உடனடியாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாது என்றும், ஏற்கனவே டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களிடமே அதன் செயற்பாடு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-07-11T03:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க கோரிக்கை ; றஜீவன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/call-to-declare-aadi-pirappu-as-public-holiday-1783739480"></link>
            <id>https://jvpnews.com/article/call-to-declare-aadi-pirappu-as-public-holiday-1783739480</id>
            <summary type="text">நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நாடாளுமன்றத்தில் முன்மொழிவு ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நாடாளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.</p><p style="text-align: justify; ">

 நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு பிரேரணையை முன்வைத்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4aef8a-b232-4e49-a613-f6bc1cfa448e/26-6a51b459a71ca.webp' /></p><h2 style="text-align: justify; ">பொது விடுமுறை தினம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

 ஆடிப்பிறப்பு தமிழர் மரபு, பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான நாளாகும் என்பதால், அதனை தேசிய ரீதியில் அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறையாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.</p><p style="text-align: justify; ">மேலும், இத்தகைய நடவடிக்கை இலங்கையின் மத மற்றும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகை தரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு ஈர்க்க உதவும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதன் மூலம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வருமான உயர்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நாட்டிற்கு கிடைக்கும்.</p><p style="text-align: justify; ">எனவே, ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பாக அரசு சாதகமான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T03:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் ; சுற்றுலாப் பயணிக்கு நடத்தப்பட்ட மோசமான சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-police-officers-rob-tourist-in-incident-1783738848"></link>
            <id>https://jvpnews.com/article/fake-police-officers-rob-tourist-in-incident-1783738848</id>
            <summary type="text">இலங்கையில் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கையில் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து, பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

காலி, தல்பே பகுதியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பிரேசில் நாட்டுப் பயணியின் அறையை, சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர் சோதனையிட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8799cd52-1816-4357-bb0a-2319a4b8c733/26-6a51b1e27c5fe.webp' /></p><h2 style="text-align: justify;">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்த அவர்கள், பின்னர் மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து அந்தப் பயணியைக் கைவிலங்கிட்டு மிரட்டியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
கொழும்பில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி, 3 மில்லியன் ரூபாய் பிணைப்பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
பாதிக்கப்பட்ட பயணியிடமிருந்து ஏற்கனவே 200,000 ரூபாயைப் பறித்திருந்த நிலையில், மீதிப் பணத்தைக் கோரியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இது குறித்துக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, உனவடுன சுற்றுலா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 25 மற்றும் 26 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify;">

இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்&nbsp; ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T03:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905"></link>
            <id>https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2480450-1511-40eb-b77c-5701995c7776/26-6a51833bb8c09.webp' /></p><p> அதே வேளையில் இம்மாதத்தில் தான் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான உறவால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. இந்த சிறப்பு பார்வை ஆகஸ்ட் 2 வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c83947-b178-4195-936e-8ee611d21c69/26-6a51833c6719a.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2ae56f8-3656-4819-8062-f2475e96f9e1/26-6a51833d13d12.webp' /></p><h3>கன்னி</h3><p>
சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc97eca0-9e64-4587-b7ac-9edbaaee8782/26-6a51833dba6ae.webp' /></p><h3>மகரம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb259af-a94b-4321-8ec6-81e756720f68/26-6a51833e6a05e.webp' /></p><h3>கும்பம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தருவதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6194a3a9-08e5-4407-b9c4-7993d825eedb/26-6a51833f17d56.webp' /></p>]]></content>
            <updated>2026-07-11T00:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் மருத்துவ மாணவி மரணம் ; விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-dies-abroad-new-information-investigation-1783729017"></link>
            <id>https://jvpnews.com/article/student-dies-abroad-new-information-investigation-1783729017</id>
            <summary type="text">இந்தியா கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் உஸ்பெகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஹர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் உஸ்பெகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த்–மினி தம்பதியின் மகள் சாகர்யா (21), உஸ்பெகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.</p><p>

அதே கல்லூரியில் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் கல்வி பயின்று வந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd107bf-2059-4d16-ad0d-cc3ccfb3b359/26-6a518b7b52856.webp' /></p><p>இருவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி சாகர்யா மடிக்கணினியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>இதையடுத்து அவர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சாகர்யாவை மதம் மாறுமாறு வற்புறுத்தி சாதருள் அனாம் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p> இதனையடுத்து, அவரை உஸ்பெகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சாகர்யாவின் உடல் விமானம் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு கொண்டு வரப்பட்டது.</p><p>உறவினர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், சாகர்யாவின் உடல் அவரது சொந்த வீட்டுத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது அவரது சகோதரர் சாவந்த் சிதைக்கு தீ மூட்டினார்.</p><p>

இதேவேளை, சாகர்யாவின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சாதருள் அனாமுக்கு எதிராக ஹரிப்பாடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசாங்கம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/previous-gove-approval-companies-issue-online-visa-1783730215"></link>
            <id>https://jvpnews.com/article/previous-gove-approval-companies-issue-online-visa-1783730215</id>
            <summary type="text">ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (10.07.2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>

கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a283aaf-8a54-471f-93c4-dd8f8b4cd777/26-6a5190290c258.webp' /></p><p>பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><p>
இதன்போது, ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய்வதற்காக தற்போதைய அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

குறித்த குழு தற்போது விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதன் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இதன்போது மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், தற்போதைய அரசாங்கம் குறித்த பரிவர்த்தனையை ரத்து செய்ய தீர்மானித்திருந்தாலும், மனுவை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

மேலும், தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இதனையடுத்து, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:37:15+00:00</updated>
        </entry>
    </feed>
