<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T23:46:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி ; ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-telecom-court-order-2-5-million-fraud-1784159080"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-telecom-court-order-2-5-million-fraud-1784159080</id>
            <summary type="text">திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31de35a3-a6a7-4612-b0de-f8cb6b48790a/26-6a581b699bcd0.webp' /></p><p>இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள் (Hard Disks), மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.
</p><p>
இந்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506"></link>
            <id>https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506</id>
            <summary type="text">வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை வான்படை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டங்களின் நூல் அல்லது பட்டங்கள் வானூர்திகளின் பறப்பு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இத்தகைய செயல்கள் விமானப் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a24a21-1f9b-4aed-a6d3-c4f14db67001/26-6a58192c6e953.webp' /></p><p>குறிப்பாக, வானூர்திகள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில், ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வானூர்தி நிலையங்களுக்கு அண்மைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலும் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை வான்படை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விமானப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு பாதுகாப்பான வான்பயண சூழலை பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வான்படை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052"></link>
            <id>https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடின்பரோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584c05f-2405-4386-a0a8-0dc4f0872524/26-6a581765aadd5.webp' /></p><p>

இதன்போது, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருந்தாலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படும் வரை மற்றும் தேர்தல்கள் நடைபெறும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

குறிப்பாக, தேர்தல்களை "முடிந்தவரை விரைவில்" நடத்த வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நிர்வாகக் குளறுபடிகள் நீங்கி, முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365"></link>
            <id>https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
</p><p></p><p>கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f2019-35b1-43c2-b131-63274a2f3847/26-6a5814b746845.webp' /></p><p>இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
</p><p>
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.
</p><p>
கடந்த 10 ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p>

ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p><p>IBCE1</p><p>936BMZTF</p><p>QWLKUS</p>]]></content>
            <updated>2026-07-15T23:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தின் அரையிறுதிப் போட்டிக்கு இஸ்மாயில் எல்பாத் நடுவராக நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ismail-elfat-appointed-referee-england-s-semi-fina-1784155910"></link>
            <id>https://jvpnews.com/article/ismail-elfat-appointed-referee-england-s-semi-fina-1784155910</id>
            <summary type="text">உலகக் கிண்ணத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகின்றனர் என்ற விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு நெருக்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகின்றனர் என்ற விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு நெருக்கமான நடுவராகப் பேசப்படும் அமெரிக்காவின் இஸ்மாயில் எல்பாத் (Ismail Elfath), இங்கிலாந்து அணி விளையாடவுள்ள முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கான பிரதான நடுவராக சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா (FIFA) நியமித்துள்ளது.</p><p>
</p><p></p><p>புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த முக்கிய அரையிறுதிப் போட்டிக்கு எல்பாத் நடுவராகப் பணியாற்றுவார் என பிஃபா உறுதிப்படுத்தியுள்ளது. அவரது சர்வதேச நடுவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ca54ea-c1be-4b11-a197-44a7360c4b1c/26-6a580f0771aa2.webp' /></p><p>கடந்த 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அந்த இறுதிப் போட்டிக்கான நடுவர் குழுவிலும் இஸ்மாயில் எல்பாத் இடம்பெற்றிருந்தார்.
</p><p>
மேலும், லியோனல் மெஸ்ஸி அமெரிக்க கால்பந்து லீக்கில் இணைந்த பின்னர், அவர் விளையாடிய நான்கு போட்டிகளுக்கு எல்பாத் நடுவராக இருந்துள்ளார். அந்த நான்கு போட்டிகளிலும் மெஸ்ஸியின் அணி வெற்றி பெற்றுள்ளமை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
எனினும், எல்பாத் அல்லது பிஃபா தரப்பில் அவர் எந்த அணிக்கும் சாதகமாகச் செயல்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. </p><p>எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகைய கருத்துகள் தற்போது விவாதங்களாக மட்டுமே இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் அரையிறுதிப் போட்டியில் எல்பாத் நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு விமர்சகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:36:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909"></link>
            <id>https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909</id>
            <summary type="text">எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p> 

சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த இன்று (15) அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15e9641-8868-4729-85b4-c62bdbac9aba/26-6a57d46f39724.webp' /></p><p>

முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>

இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462"></link>
            <id>https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ecc8d-9f5e-4b07-8369-b1498677ee1b/26-6a57d2b015c29.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லையா? சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1145ad-8278-4fff-b072-52f92849b186/26-6a57d02345751.webp' /></p><p>அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c010187-0c0a-47c2-bdd4-592ba0aef80d/26-6a57d02290435.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354</id>
            <summary type="text">கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d350b8-cba9-4889-bd35-c401a05a1738/26-6a57ca73c3341.webp' /></p><p>அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.</p><p> 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p> 

இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். </p><p>

அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:59:25+00:00</updated>
        </entry>
    </feed>
