<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T23:29:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்தின் புதிய மையமாக இந்தியப் பெருங்கடல் ; சிங்கப்பூரில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832</id>
            <summary type="text">ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற Global Economic Cooperation, East Summit மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகம் தற்போது "இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டை" நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cc3a78-fe74-4bb8-b6e1-fe53c4b0e706/26-6a5962920e12d.webp' /></p><p>

இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு முக்கிய தசாப்தத்தை மட்டுமல்ல, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தால் வரையறுக்கப்படும் ஒரு புதிய நூற்றாண்டிற்குள் நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மில்கன் நிறுவகத்தின் மூத்த ஆய்வாளர்கள் குழுத் தலைவர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் கர்டிஸ் எஸ். சின் உடன் இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையின் பங்கு குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
</p><p>
இலங்கை, முக்கிய பிராந்தியங்களை இணைக்கும் நம்பகமான பாலமாக உருவெடுப்பதுடன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
"பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி அது எதிர்காலத்தையும் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வேகமாக மாறிவரும் உலக பொருளாதார சூழலில் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயார்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம் ; அபராதத்துடன் இழப்பீடும் வழங்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 ( Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.</p><p>குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa48c759-5d24-4f69-b7dc-a0c1adf2ccaf/26-6a595e2ac46c2.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732"></link>
            <id>https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50abf134-0f55-407c-b346-8ce49e23e712/26-6a593b1dc3893.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T21:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவர்க்கார பொதிகளில் புதிய தகவல்கள் கட்டாயம் ; நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189</id>
            <summary type="text">சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf8cf91d-ce61-4f1b-aa73-6efc554a3fbe/26-6a594c86b9723.webp' /></p><p>இதன்படி, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிமுறைகளுக்கு அமைய, சவர்க்காரத்தின் உற்பத்திப் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளிலும் பிரதான சட்டகத்தில் (Main Panel) தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
மூன்றாவது மொழியில் உள்ள தகவல் பொதியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பொதியிடப்படும் போது குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த புதிய விதிமுறைகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடலுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல வகையான சவர்க்காரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு தயாரிப்பு தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குவதையும், சந்தையில் தரநிலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தான் தூக்கிய குழந்தையே தனக்கு எதிராக களமிறங்கும் என மெஸ்ஸி நினைத்திருப்பாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235"></link>
            <id>https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235</id>
            <summary type="text">கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கிய குழந்தை இன்று அவருக்கே எதிராக களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>2007 ஆம் ஆண்டு 20 வயதான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற ஒரு தொண்டு நிகழ்வின் போது ஐந்து மாத குழந்தையான லமின் யமாலை கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்த சம்பவம் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அந்த புகைப்படங்கள் உண்மையானவை எனவும், அவை 2008 ஆம் ஆண்டுக்கான தொண்டு நாட்காட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b71598-6bc4-470a-b342-9b951573246e/26-6a5948cc31ba4.webp' /></p><p>உள்ளூர் ஸ்பெயின் செய்தித்தாளான டயாரியோ ஸ்போர்ட், யுனிசெஃப் (UNICEF) உடன் இணைந்து இந்த தொண்டு முயற்சியை முன்னெடுத்திருந்தது. நிதி திரட்டும் நோக்கில் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களை உள்ளூர் குழந்தைகளுடன் இணைத்து புகைப்பட அமர்வு நடத்தப்பட்டது.
</p><p>
அந்த நிகழ்வில் பங்கேற்க லமின் யமாலின் குடும்பமும் வாய்ப்பு பெற்றது. மியாட்டரோவின் ரோகாஃபோண்டா பகுதியைச் சேர்ந்த யமாலின் குடும்பம், சீரற்ற முறையில் நடைபெற்ற தெரிவு முறையின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமால், எதிர்பாராத விதமாக மெஸ்ஸியுடன் இணைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸிக்கு குழந்தையுடன் எவ்வாறு பழகுவது என்பது தெரியாமல் சற்று தயக்கமாக இருந்ததாக புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் பின்னர் தெரிவித்திருந்தார்.</p><p>

மெஸ்ஸி அப்போது மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததாகவும், குழந்தையை எவ்வாறு தூக்குவது என்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p> பின்னர் யமாலின் தாயார் ஷீலா எபானா உதவி செய்து அந்த தருணத்தை எளிதாக்கியுள்ளார்.

காலப்போக்கில் அந்த புகைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் போது அவை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானது.
</p><p>
லமின் யமாலின் தந்தை மௌனீர் நஸ்ராவி, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதன் பின்னர் ரசிகர்கள், மெஸ்ஸி அப்போது அந்தக் குழந்தைக்கு தனது கால்பந்து திறமையின் "ஆசீர்வாதத்தை" வழங்கியதாக நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.</p><p>

இன்று ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள லமின் யமால், தனது இளம் வயதிலேயே உலக கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.</p><p> மறுபுறம், அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

ஒரு காலத்தில் மெஸ்ஸியின் கைகளில் இருந்த குழந்தை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கால்பந்து மேடையில் அவருக்கு எதிரான போட்டியாளராக நிற்பது, விளையாட்டு உலகின் மறக்க முடியாத சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குற்றச்சாட்டு ; முல்லைத்தீவு செய்தியாளர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569</id>
            <summary type="text">வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff745788-1e63-45a6-bd3b-0f245e250ed1/26-6a593a7aa6fee.webp' /></p><p>வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
</p><p>
இதற்கமைய, முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் மற்றும் மற்றைய நபர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306"></link>
            <id>https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abe9254-c557-444c-b040-84f447d3e18c/26-6a591a343eb29.webp' /></p><p>இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
</p><p>
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.</p><p>

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை மாவட்ட மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affe9873-e035-4cba-8dc3-a6e719dbccef/26-6a591a34e6707.webp' /></p><p>ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் காலதாமதத்தையும் வள விரயத்தையும் குறைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
</p><p>
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடிய வகையில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
சுற்றுலா அமைச்சின் கீழ் காணப்படும் நிர்மாணத் துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக விசேட தலையீடுகளை மேற்கொண்டு செயல்முறைகளை விரைவுபடுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
</p><p>
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்கள் மாநாடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>
</p><p></p><p>அத்துடன், தூதரக சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கடந்த காலங்களில் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. </p><p>அதற்கமைய, ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:51:56+00:00</updated>
        </entry>
    </feed>
