<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T06:41:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இருவர் பலி ; கர்ப்பிணிப் பெண் படுகாயம்; இன்று காலை இடம்பெற்ற துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-killed-pregnant-woman-critically-accident-1784096998"></link>
            <id>https://jvpnews.com/article/two-killed-pregnant-woman-critically-accident-1784096998</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம் அட்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

 விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcbd9051-456c-49a7-ad0f-079c4562dd3a/26-6a5728e881c81.webp' /></p><h2>பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற "சிசு சரிய" பேருந்து</h2><p>

 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற "சிசு சரிய" பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்த நிலையில் விபத்தின் போது இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 விபத்து ஏற்படும் போது மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255"></link>
            <id>https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eefe4c0-226f-4c02-80ca-09aba08b9e37/26-6a57260172f9a.webp' /></p><h2>சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவனின் வசம் 1 கிலோகிராம், 6 கிராம், 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையின் வசம் 149 கிராம், 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
வேனொன்றின் முன்பகுதியில் வைத்து மாதம்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நளின் ஸ்ரீயந்தவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் தம்பதியினர் மாதம்பிட்டிய உள்ள ஒரு மதஸ்தலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 சந்தேக நபர் தம்பதியினர் பயணித்த வேனைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
</p><p>
 அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவை வத்தளை (வெலிசர) பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-un-against-the-npp-1784095268"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-un-against-the-npp-1784095268</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. </p><p> 

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினர், இன்று (15) காலை ஐநா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பான விரிவான எதிர்ப்பு மகஜரை கையளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6003f2f4-fcd9-40eb-a94b-bb7196b097b1/26-6a5722266ed8d.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக விழுமியங்கள் சீர்குலைக்கப்படுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடித் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-15T05:59:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை ஏற்றி செல்லும் பெற்றோருக்கு வவுனியா பொலிஸார் கடும் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-police-order-children-must-wear-helmets-1784094531"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-police-order-children-must-wear-helmets-1784094531</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியாவில், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியாவில், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
 இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f14365-ab3d-4f8b-80f0-f3d33706924d/26-6a571f44c84f2.webp' /></p><h2>&nbsp;ஒரு வார கால அவகாசம்</h2><p> 

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று விசேட விழிப்புணர்வு நடவடிக்கை&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b68549-8bab-431a-996b-3826d0797883/26-6a571f457de92.webp' /></p><p></p><p>

இதன்போது, தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f6138c-a585-4cbc-8d98-793838e0648a/26-6a571f4635494.webp' /></p><p></p><p> </p><p>

அத்துடன், சிறுவர்களுக்கு தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T05:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-s-b-dissanayake-s-brother-arrested-1784093929"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-s-b-dissanayake-s-brother-arrested-1784093929</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p> 

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7034cd62-f37f-4f2d-a0ef-6d314985cac6/26-6a571cea68a3c.webp' /></p><p>

 

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றைய தினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் மேலும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-further-sri-lanka-1784093355"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-further-sri-lanka-1784093355</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472ddfc3-d7ae-4fad-a5f5-28c9993a5194/26-6a571aacd7bc7.webp' /></p><p>

அத்துடன், டெங்கு மரணங்களும் 49 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T05:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண ஆளுநர் பதவி இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resignation-from-post-of-central-province-governor-1784092685"></link>
            <id>https://jvpnews.com/article/resignation-from-post-of-central-province-governor-1784092685</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்தததாக அவர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்தததாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c384d374-8421-45ed-8615-2afcc2fb511e/26-6a57180f62751.webp' /></p><p>
</p><p>
நேற்று அனுப்பப்பட்ட அந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும், ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.</p><p>
 

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.</p><p></p><p>

இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.

அந்தப் பதவியை வகித்த மஞ்சுளா மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T05:16:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்காங்கே மீட்கப்பட்ட சடலங்களால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-bodies-recovered-in-galewela-and-deraniyagala-1784090934"></link>
            <id>https://jvpnews.com/article/two-bodies-recovered-in-galewela-and-deraniyagala-1784090934</id>
            <summary type="text">&amp;nbsp; கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (14) மாலை கலேவெல பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று (14) மாலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம பகுதிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3d5b09-c237-4d08-bea2-07a3c6a20173/26-6a5711382fa21.webp' /></p><h2>மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர்</h2><p>


உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஆவார். இந்த பெண் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயாவில் நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.
</p><p>

சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T04:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிருந்து வந்தவர்களுக்கு வந்த சோதனை ;கனேடிய டொலர்கள் , யூரோக்கள் கடவுச்சீட்டு களவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2c5306-ce8f-4d23-8bf9-d774ac52978c/26-6a571d7caeb8d.webp' /></p><h2>திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள்&nbsp;</h2><p> 

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p> விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T04:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்குள் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு ; மாணவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452</id>
            <summary type="text">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e487d026-9500-4aea-adf9-d6e361a667dc/26-6a56d4bdc1a1f.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல் உத்தரவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">


சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அவர்களை நேற்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p style="text-align: justify; ">


வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மாணவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவின் நட்சத்திர மாற்றம் ; இந்த ராசியினர்அரியணையில் அமரப்போறாங்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041</id>
            <summary type="text">குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.

அதேபோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.
</p><p>
அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் திகதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார்.&nbsp; இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b293ddf-9572-44d9-a01e-69307f9d0b4d/26-6a56e2c2d80b4.webp' /></p><p><b>

மேஷம்:</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள்.

முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p><b>

கடகம்:
</b>இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.

</p><p><b>

தனுசு:
</b>இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையின் பின்னணி அம்பலம் ; நீதிமன்றத்தில் CID வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c653cd62-3e91-479f-95b9-1733883ed8f7/26-6a56e09102b93.webp' /></p><h2 style="text-align: justify;">விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
</p><p style="text-align: justify;">
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03101f88-cd09-49e7-81c5-dd43e81378e4/26-6a56e091b3826.webp' /></p><p style="text-align: justify;"> அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். </p><p style="text-align: justify;">



பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும்.</p><p style="text-align: justify;"> இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர். </p><p style="text-align: justify;">



நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify;">


5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. </p><p style="text-align: justify;">மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 'அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்' என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது. 

 

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 



இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது.



முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன. </p><p style="text-align: justify;">ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. 



அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். 



அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">


மோதலின்போது கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்ததுடன், அதிகாரிகள் மீது கற்கள், தடிகள் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்குதல் நடத்தியதாகவும் CID தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை தடய அறிவியல் பரிசோதனைக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலைக் குற்றச்சாட்டு, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டு வருவதாக CID தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">


முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;">அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify;">


இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:21:27+00:00</updated>
        </entry>
    </feed>
