<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T00:36:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335"></link>
            <id>https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335</id>
            <summary type="text">இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca93679-b81a-4cad-8947-d9e032bfc6e6/26-6a5ac8010836f.webp' /></p><p>ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>இதன்போது சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், வனப்பகுதியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>அதன் பின்னர், மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நாயுடுப்பேட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தலைமறைவாக உள்ள சந்தேகநபர் ராகேஷை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-entering-sri-lanka-international-envelopes-1784332765</id>
            <summary type="text">சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடத்தல்காரர்கள் பிடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர்.</p><p>

கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது அஞ்சல் உறைகள் சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4099a5d4-bf2f-4dc9-8fd6-bf0e5f843cb8/26-6a5ac1de93662.webp' /></p><p>தினமும் அதிகப்படியான சர்வதேச அஞ்சல்கள் நாட்டுக்கு வருவதால், அனைத்து பொதிகளையும் ஆய்வு செய்ய முடியாது.
</p><p>
எனவே, சந்தேகத்திற்குரிய பொதிகளைக் கண்டறிய சுங்கத்துறை ஆய்வுக் கருவி தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது.</p><p>

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய அஞ்சல்; உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
</p><p>
தனித்தனி உறைககளில் உள்ள போதைப்பொருட்களின் அளவு குறைவாகத் தோன்றினாலும், அவை இறுதிப் பயனாளியைச் சென்றடைந்து, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna Kings அணியைச் சூழ்ந்த சர்ச்சை ; இந்திய இளையோர் அணி வீரர் மன்ஜோத் கல்ரா கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-team-player-manjot-kalra-arrested-1784331805</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e95bbc6-c52f-426c-8e19-58b6d9d39fcf/26-6a5abe1f9598d.webp' /></p><p>போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.
</p><p>
சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.</p><p> பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T23:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. </p><p>பரிசோதனை முடிவில் அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டதுடன், போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்ற உரிமையாளர் தொடர்பான தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என விசாரணையில் தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e67a50-ca65-4495-ad4f-9f58c3d973c9/26-6a5a9ad377f68.webp' /></p><p>இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p>

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
</p><p>
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய் போத்தல்கள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927</id>
            <summary type="text">நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f54b97-b49f-4167-805f-1f11ef1e08c1/26-6a5a9788d89c8.webp' /></p><p>தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு ; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157"></link>
            <id>https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157</id>
            <summary type="text">இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>

இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd6afe3-3efb-48ff-9dc9-396bc94301ae/26-6a5a948688946.webp' /></p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/renovation-work-begins-nuwara-eliya-post-office-1784319888"></link>
            <id>https://jvpnews.com/article/renovation-work-begins-nuwara-eliya-post-office-1784319888</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளம் அஞ்சல் சேவைகள், முத்திரைப் பிரிவு, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை மையம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5430442-62ce-4ac8-a647-9ffb1d2bcbbf/26-6a5a8f9241370.webp' /></p><p>அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கட்டிடத்தின் மேல் தளத்தை சுற்றுலா மையமாக மாற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
</p><p>
இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும், இலங்கை சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் துறைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:26:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-aswesuma-welfare-scheme-recipients-1784318264"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-aswesuma-welfare-scheme-recipients-1784318264</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து பண மோசடி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து பண மோசடி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அழைத்து, தங்களை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என பொய்யாக அறிமுகப்படுத்தி, தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b745c79f-8393-42b4-ac74-e301979466d7/26-6a5a893a6e242.webp' /></p><p>

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>எனவே, இதுபோன்ற போலி தொலைபேசி அழைப்புகள் அல்லது மோசடி முயற்சிகள் தொடர்பாக எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஹரக்கட்டா' இலஞ்ச வழக்கு ; நீதிமன்றில் அம்பலமான பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harakatta-bribes-high-ranking-police-officers-1784316407"></link>
            <id>https://jvpnews.com/article/harakatta-bribes-high-ranking-police-officers-1784316407</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான &#039;ஹரக்கட்டா&#039;வின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1,200 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1,200 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d6bfdc-5b4b-459d-99ed-d9c8f39d627f/26-6a5a81f89c5a6.webp' /></p><p>
</p><p>
ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி மஹேஷிகா மதுவந்தி வழங்கிய வீடியோ வாக்குமூலம் மற்றும் சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஆதாரங்கள் தற்போது விசாரணை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்த இலஞ்ச விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கிடையில் 1,300-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு சென்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். </p><p>குறித்த பிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முழுமையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb4710d-3846-4726-9f37-8f52b3ab2f26/26-6a5a81f94b165.webp' /></p><p>

அத்துடன், இந்த மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் ஒரு இலஞ்ச முறைப்பாடும் கிடைத்துள்ளதால் அதுகுறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.&nbsp;</p><p>
இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை முன்வைத்து பிணை கோரினர். </p><p>இருப்பினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணை மனுக்கள் தொடர்பான உத்தரவை ஜூலை 28 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்து, அதுவரை மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/intensive-investigation-into-death-of-former-igp-1784314221"></link>
            <id>https://jvpnews.com/article/intensive-investigation-into-death-of-former-igp-1784314221</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 

சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இன்று (17) காலை மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b839779-5aca-4549-8235-1153361e5df1/26-6a5a796f47628.webp' /></p><p>எவ்வாறாயினும், சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p> 

இன்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். </p><p>

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்துள்ளார்.</p><p>

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி. விக்

ரமரத்ன, உயிரிழக்கும் போது 63 வயதாகும்.</p><p></p><p> 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். </p><p>

அதன்பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பதவிக் காலம் நீடிக்கப்பட்டதன் காரணமாக, மேலும் 08 மாதங்கள் வரை அவர் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றினார். </p><p>

இதன்படி, சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T18:50:36+00:00</updated>
        </entry>
    </feed>
