<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T01:47:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T01:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&amp;nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef134-df9c-4792-a1f8-80fea7d926ca/26-6a541eeb321bb.webp' /></p><p>அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்.&nbsp;இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fe9914-5bd0-4115-8dc7-068c8a3db572/26-6a541eebd6b77.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் காணக்கூடும். ஊடகம், கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சில் தாக்கம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5d25a1-b910-4070-9e7a-86dcc6560a68/26-6a541eec858c3.webp' /></p><h4>கன்னி</h4><p>
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8df9e7-d6dc-4b67-b066-eacf0a5cb29a/26-6a541eed334a4.webp' /></p><h4>விருச்சிகம்
</h4><p>விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். இது வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு இருந்தால், குருவின் அருளால் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d1e078b-654e-4ca9-af65-bca456a896f5/26-6a541eee846a9.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பண வரவு அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a84f0d4-dd15-4d80-9078-0530449e03d5/26-6a541eef330fb.webp' /></p><h4>மீனம்
</h4><p>மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். குரு அருளால் எதிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f500b4c-e317-41ae-adf5-3dbacb8a2415/26-6a541eefd8b4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-13T00:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799"></link>
            <id>https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799</id>
            <summary type="text">சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p> </p><p></p><p>நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f7004ff-a1ea-4732-aae4-8c187731bec7/26-6a542a830406f.webp' /></p><p>சிறுநீரக கல் நோய் இலங்கையில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் 30 க்கும் மேற்பட்ட விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுகள் விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் பணியாற்றினாலும், சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. 

குறிப்பாக, உள்கட்டமைப்பின் குறைவான வளங்கள், குறைவான அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பத்திற்கான குறைவான வளங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. </p><p>

இலங்கையில் சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் தற்போது 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் இந்த நாட்டின் சுகாதார சேவையில் ஒரு தீர்க்கமான மற்றும் மாபெரும் முன்னேற்றமாகும் என்றும், சுகாதாரத் துறை மட்டுமின்றி பல தரப்பினரையும் உள்ளடக்கி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.</p><p> 

நாட்டில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த மையம் நாட்டு மக்களுக்கும், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சுகாதார சேவைக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்றும் தெரிவித்தார். </p><p>

இந்த நாட்டின் சுகாதார சேவையில் பல சமயங்களில் காத்திருப்போர் பட்டியல்கள் உள்ளன என்றும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே அந்தக் காத்திருப்போர் பட்டியல்களைத் தாண்டி சிகிச்சை சேவைகளைப் பெறும் நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p> 

மாறாக, முழு மக்களும் ஆரோக்கியமாக இருக்க சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் போர்வையில் சேவைகள் பராமரிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்குப் பலன் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>

முறையான திட்டமிடல் திட்டத்தைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் நாட்டின் சுகாதார சேவையில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும், அந்த உபகரணங்கள் மூலம் சேவைகள் முழுத் திறனில் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். </p><p>

சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு அபாயம் உச்சம் ; இன்று முதல் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-at-its-peak-country-special-measures-1783895644"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-at-its-peak-country-special-measures-1783895644</id>
            <summary type="text">நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, &quot;க்ளீன் ஸ்ரீலங்கா&#039;&#039; வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, "க்ளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நாடு முழுவதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fe1067-f710-4237-b00c-29818554097a/26-6a54165e48682.webp' /></p><p>இந்த வருடத்தில் இதுவரையில் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.</p><p>

கடந்த ஜூன் மாதம் 21,538 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 11,764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
2017 ஆம் ஆண்டு நாட்டில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் (186,101) பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய நிலைமை அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்வதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றச் சிக்கல்களுக்கு தீர்வாக காவல்துறைக்கு சட்டப் பயிற்சி தேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-need-legal-training-to-solve-court-problems-1783894441"></link>
            <id>https://jvpnews.com/article/police-need-legal-training-to-solve-court-problems-1783894441</id>
            <summary type="text">நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும், சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சட்ட ரீதியான போதிய பயிற்சிகள் மற்றும் ஆலோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும், சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் காவல்துறை அதிகாரிகளுக்குச் சட்ட ரீதியான போதிய பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நீதவான் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்துறை வல்லுநர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை அதிகாரிகளே வழக்குகளை முன்வைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார்.
</p><p>
குறிப்பாக, நீதிமன்ற விவகாரங்களில் பொறுப்பாகவுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனைச் சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை மற்றும் சான்று சட்டக் கோவை ஆகியன குறித்த தெளிவான பயிற்சி இல்லாமை வழக்குகளை முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bd07d7d-318c-46aa-842b-131ff1db61aa/26-6a5411ab49d31.webp' /></p><p>இதனை நிவர்த்தி செய்வதற்காக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நீதிமன்ற அனுபவம் கொண்ட சட்டத்தரணிகளை உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக (ASP) நியமிக்கலாம் என்ற ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
</p><p>
இத்தகைய நியமனங்கள் மூலம், ஒவ்வொரு காவல்துறை பிரிவிலும் நீதிமன்றங்களில் சட்ட ரீதியான பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடிவதோடு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் தேவையை ஒவ்வொரு சிறிய வழக்குகளுக்கும் நாட வேண்டிய அவசியமும் இருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அதேநேரம், தண்டப் பணத்தை வசூலிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு வீதிப் போக்குவரத்துக் குற்றங்களில் மட்டும் காவல்துறை அதிக கவனம் செலுத்துவது அவர்களின் மீதான நன்மதிப்பைக் குறைப்பதாக ரவூப் ஹக்கீம் விமர்சித்தார்.
</p><p>
அரசின் வருமானத்தை விட, குற்றச் செயல்களைக் குறைப்பதிலேயே காவல்துறை அதிக அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்திய அவர், நீதிமன்ற வழக்குகளை விரைவாகவும் நீதியாகவும் முடிப்பதற்குப் படிப்படியாகச் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடைமிளகாய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/are-there-many-benefits-of-eating-chili-peppers-1783893956"></link>
            <id>https://jvpnews.com/article/are-there-many-benefits-of-eating-chili-peppers-1783893956</id>
            <summary type="text">உணவிற்கு சுவையையும், நிறத்தையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கும் காய்கறிகளில் குடைமிளகாய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. காரம் குறைவாக இருந்தாலும், இதில் உடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவிற்கு சுவையையும், நிறத்தையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கும் காய்கறிகளில் குடைமிளகாய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. காரம் குறைவாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான பல்வேறு விட்டமின்கள் மற்றும் கல்சியம், பொஸ்பரசு போன்ற முக்கிய ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன.</p><p>அந்த வகையில் குடைமிளகாயை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259a5904-9ba1-479c-b3fd-bc4b7b67fa92/26-6a540fc662422.webp' /></p><h4>மலச்சிக்கல் பிரச்சினைக்கு உதவும்</h4><p>குறிப்பாக விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், விட்டமின் A கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. அதிக நார்ச்சத்து கொண்ட குடைமிளகாய், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையைத் தணிக்க உதவுகிறது. மேலும், வயிற்றுப்புண் மற்றும் வாய்வு போன்ற செரிமானக் கோளாறுகளின் தாக்கத்தைக் குறைக்கவும் இது பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.</p><h4>&nbsp;புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்</h4><p>&nbsp;குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. சிறுநீர்ப்பை, கணையம், கருப்பைவாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்</h4><p>இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு கொண்டதால், உடல் எடை அதிகரிப்பதையும் தேவையற்ற கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.</p><h4>இளமையான தோற்றத்தை பராமரிக்கும்</h4><p>மேலும், இதில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் E தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைத்து இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகின்றன. செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தோலுக்கு உறுதியையும் பொலிவையும் அளிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-12T22:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-us-1783892868"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-us-1783892868</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் (57) குடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் (57) குடும்பத் தகராறின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஜார்ஜியா மாநிலத்தின் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஷீத்தல், குடும்பத் தகராறின்போது அவரது கணவர் கிர்க் வர்செசியனால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ccbe277-581e-4b04-a3d2-e667c138f18f/26-6a540b8597bef.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குண்டுக் காயங்களுடன் ஷீத்தலையும் அவரது மகன் ஜேசனையும் மீட்டனர்.</p><p>

இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஷீத்தல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>அவரது மகன் ஜேசன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஷீத்தலின் கணவர் கிர்க் வர்செசியன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் ஜேசனின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் கானா ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளார். </p><p>1994ஆம் ஆண்டு ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற அவர், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்த பின்னர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
</p><p>
தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஷீத்தலின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-father-sexually-abused-daughter-1783892300"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-father-sexually-abused-daughter-1783892300</id>
            <summary type="text">தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (III) பி.யு.பி. மானியம்கமவினால், குறித்த பொலிஸ் சார்ஜன்டின் சேவை கடந்த 11ஆம் திகதி முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறு சேவை இடைநிறுத்தப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் கே.ஜி. சமந்த ருவன் குமார என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e46277a7-f144-4dc2-afc3-527fb4a9299c/26-6a54094d87d15.webp' /></p><p>

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தனது மூத்த மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறுமியின் தாயார் 2021ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், வேறு ஒருவருடன் சிறுமி காதல் தொடர்பில் இருந்ததாக கூறி சந்தேகநபர் அவரை தாக்கியதாகவும், அதில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது, தந்தையினால் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில் வைத்தியரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து வைத்தியசாலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பின்னர் அவர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிணிகே தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லுக்கு நிர்ணய விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209</id>
            <summary type="text">நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51dc8181-b850-47c5-b347-e72edde9c58f/26-6a53f182a2fff.webp' /></p><p>அம்பாறை, உகன பிரதேசத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதற்கமைய, ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
</p><p>
இதனிடையே, நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெருமளவிலான நெல் இருப்பு காணப்படுவதால், இந்தத் தடவை எதிர்பார்க்கப்படும் அறுவடையில் சுமார் 2 சதவீதமான நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:56:59+00:00</updated>
        </entry>
    </feed>
