<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T16:41:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466"></link>
            <id>https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின்<a href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893?itm_source=parsely-api" target="_blank"> பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த</a> பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4178078a-e6ef-41f5-b7af-bc18193907d1/26-6a5a1ca39adda.webp' /></p><h2>உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு&nbsp;</h2><p> 

இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T16:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-first-hydrogen-train-1784292185"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-first-hydrogen-train-1784292185</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்' பகுதியிலிருந்து 'சோனிபட்' வரை சுமார் 89 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன ரயில் சேவை இயக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b0b643-e627-47cc-82df-b622ef0f3ff4/26-6a5a235a92fb0.webp' /></p><h2>&nbsp;முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன்</h2><p>
 
வழக்கமான ரயில்களைப் போல மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரம் பெறாமல், இந்த ரயில் முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துகிறது.</p><p> 1200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசையால் இந்த ரயில் இயக்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், 10 பெட்டிகளுடன் சுமார் 2,600 பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.</p><p></p><p>
</p><p> 
பாதுகாப்பை பொறுத்தவரை, ஹைட்ரஜன் கசிவு, அதிக வெப்பம் மற்றும் புகையை முன்கூட்டியே கண்டறியும் அதிநவீன சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.</p><p> பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்பதால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன், ரயிலை இயக்குவதற்கான செலவும் பெருமளவில் குறைகிறது.</p><p></p><p> </p><p>

 
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய வல்லரசு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்த சூழல் நட்பு தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இயக்கும் ஆறாவது நாடாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-kings-owner-arrest-sl-cricket-clarification-1784291457"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-kings-owner-arrest-sl-cricket-clarification-1784291457</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் &#039;Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95cf134-219b-4152-8631-be0d82830637/26-6a5a208283e1f.webp' /></p><h2>&nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்&nbsp; அறிக்கை</h2><p> 

இந்தக் கைது சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தங்களது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகத் தமது நிறுவனம் மற்றும் எல்.பி.எல் ஒழுங்கமைப்புக் குழு ஆகியன அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இப்போட்டித் தொடரின் நேர்மைத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, இப்போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் ஊழல்கள், ஒழுக்கக்கேடான நடத்தைகள் அல்லது முறையற்ற செயல்களை எவ்வகையிலும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.</p><p></p><p> </p><p>

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தினால் போட்டித் தொடருக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இன்று (17) இரவு கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள 'காலி கேலன்ட்ஸ் - ஜப்னா கிங்ஸ்' (Galle Gallants - Jaffna Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இடம்பெறும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>

இப்போட்டித் தொடரை மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நேர்மைத்தன்மையின் தரநிலைகளுக்கு இணங்க நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மேலும், அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, இம்முறை போட்டித் தொடர் முழுவதும் சுயாதீன அமைப்பொன்றின் நிபுணர் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-07-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[9.5 மில்லியன் ரூபா கையூட்டல் ; மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-2026-team-co-owner-manjot-kalra-arrested-1784295065"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-2026-team-co-owner-manjot-kalra-arrested-1784295065</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2c5903-390f-4f4e-9275-e6b06c5fc39a/26-6a5a2e9b36ec1.webp' /></p><h2>வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபா&nbsp;கையூட்டல்</h2><p>
</p><p>
போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.

சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். </p><p>பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-07-17T13:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sexual-assault-secretly-filmed-a-woman-bathing-1784293292"></link>
            <id>https://jvpnews.com/article/sexual-assault-secretly-filmed-a-woman-bathing-1784293292</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த இளைஞனை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த இளைஞனை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவிக்கையில், </p><p>


இந்தியா குஜராத்தில் ஒரு பெண் குளிப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு வாலிபர் தன்னுடைய செல்போனில் படம் எடுத்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/960e8937-054f-41c3-a71a-8d9a2f0a0ee2/26-6a5a27add581f.webp' /></p><p>
</p><p>&nbsp;இளைஞனின் மிரட்டலை&nbsp; அந்தப் பெண் தனது கணவரிடம் சொல்லி விடவே இருவரும் சேர்ந்து அந்த வாலிபரை கொலை செய்ய திட்டமிட்டனர். 

அதன்படி அந்த இளைஞனை வீட்டுக்கு வரவழைத்த அந்த பெண்ணும், கணவரும்&nbsp; இளைஞனை கொலை செய்திருக்கிறார்கள்.</p><p></p><p> </p><p>

மேலும் அவரது செல்போனை உடைத்து சாலையில் வீசியதாக&nbsp; கூறப்படுகின்றது.

இதையடுத்து அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&nbsp; எனினும்&nbsp; கணவன், மனைவி&nbsp; இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில்&nbsp; அவர்களை&nbsp; &nbsp;பொலிஸார்&nbsp; வலைவவீசி தேடிவருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-17T12:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் கொவிட்-19 ; 12 பேருக்கு தொற்று உறுதி; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835"></link>
            <id>https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கொவிட்-19 தொற்றினால் , சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f616e2-caac-437d-9214-50d7ebfc7dee/26-6a59f31d4ccbb.webp' /></p><p></p><h2>&nbsp;உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள்</h2><p>
உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p></p><p>

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 எனவே பொது இடங்களில் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரமரத்ன மரணம்; குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-ex-dgp-wickramaratne-case-handed-over-cid-1784287060"></link>
            <id>https://jvpnews.com/article/death-ex-dgp-wickramaratne-case-handed-over-cid-1784287060</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e0127b3-58bc-4958-aaff-24f0971e5eb8/26-6a5a1063a49d6.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியே உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன, கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T11:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ஷவு வழக்கு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-court-order-issued-today-1784285942"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-court-order-issued-today-1784285942</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றதுடன், முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c388ceaa-306e-4bde-a06b-fd709f2c5c18/26-6a5a0bdf5a824.webp' /></p><p>
</p><p>


யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார்.</p><p>



வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இம்மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T10:57:27+00:00</updated>
        </entry>
    </feed>
