<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T03:45:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்குள் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு ; மாணவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452</id>
            <summary type="text">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e487d026-9500-4aea-adf9-d6e361a667dc/26-6a56d4bdc1a1f.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல் உத்தரவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">


சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அவர்களை நேற்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p style="text-align: justify; ">


வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மாணவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவின் நட்சத்திர மாற்றம் ; இந்த ராசியினர்அரியணையில் அமரப்போறாங்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041</id>
            <summary type="text">குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.

அதேபோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.
</p><p>
அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் திகதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார்.&nbsp; இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b293ddf-9572-44d9-a01e-69307f9d0b4d/26-6a56e2c2d80b4.webp' /></p><p><b>

மேஷம்:</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள்.

முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p><b>

கடகம்:
</b>இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.

</p><p><b>

தனுசு:
</b>இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையின் பின்னணி அம்பலம் ; நீதிமன்றத்தில் CID வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c653cd62-3e91-479f-95b9-1733883ed8f7/26-6a56e09102b93.webp' /></p><h2 style="text-align: justify;">விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
</p><p style="text-align: justify;">
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03101f88-cd09-49e7-81c5-dd43e81378e4/26-6a56e091b3826.webp' /></p><p style="text-align: justify;"> அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். </p><p style="text-align: justify;">



பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும்.</p><p style="text-align: justify;"> இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர். </p><p style="text-align: justify;">



நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify;">


5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. </p><p style="text-align: justify;">மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 'அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்' என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது. 

 

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 



இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது.



முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன. </p><p style="text-align: justify;">ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. 



அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். 



அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">


மோதலின்போது கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்ததுடன், அதிகாரிகள் மீது கற்கள், தடிகள் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்குதல் நடத்தியதாகவும் CID தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை தடய அறிவியல் பரிசோதனைக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலைக் குற்றச்சாட்டு, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டு வருவதாக CID தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">


முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;">அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify;">


இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் சமையலறைக்குள் இரகசியமாக அரங்கேறிய சம்பவம் ; பெண்ணுடன் கைதான ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-incident-unfolds-inside-home-kitchen-1784074197"></link>
            <id>https://jvpnews.com/article/secret-incident-unfolds-inside-home-kitchen-1784074197</id>
            <summary type="text">வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் நேற்று 14ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் நேற்று 14ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72164a5c-16e5-47f4-b7b8-197f384ec0d7/26-6a56cfd6a4edc.webp' /></p><h2 style="text-align: justify; ">புதையல் தோண்டும் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும், சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.'</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காக பணம் செலவிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள் , மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும், மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி, அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-15T00:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு வெளியான முக்கிய தகவல் ; இனி இவற்றுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-betel-chewers-in-sri-lanka-1784073068"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-betel-chewers-in-sri-lanka-1784073068</id>
            <summary type="text">இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இலங்கையில் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோய் முன்னணியில் உள்ள நிலையில், இதனைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி.பிரசாத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1846b640-c687-41c9-8d9e-788d9bb968a7/26-6a56cb6e2b0c6.webp' /></p><h2 style="text-align: justify; ">வாய் புற்றுநோய்&nbsp;</h2><p style="text-align: justify; ">
புகையிலை கலந்த வெற்றிலையைப் பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இலங்கையின் தற்போதைய சட்டங்களின்படி, புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்தல், விநியோகித்தல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
எனவே, பொதுமக்களும் வர்த்தகர்களும் இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், சட்ட விரோதமான முறையில் புகையிலையை வெற்றிலையுடன் கலந்து விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதங்கள் சொல்லும் உடல் ரகசியங்கள் ; இதனையும் கட்டாயம் கவனியுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-your-feet-reveal-about-your-health-1784071489"></link>
            <id>https://jvpnews.com/article/what-your-feet-reveal-about-your-health-1784071489</id>
            <summary type="text">பாதங்கள் நமது உடலின் மிக முக்கியமான அடிப்பகுதியாகும். இவை உடலின் முழு எடையையும் தாங்கி, நாம் சமநிலையாக நிற்பதற்கும் நடப்பதற்கும் உதவுகின்றன.



உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">பாதங்கள் நமது உடலின் மிக முக்கியமான அடிப்பகுதியாகும். இவை உடலின் முழு எடையையும் தாங்கி, நாம் சமநிலையாக நிற்பதற்கும் நடப்பதற்கும் உதவுகின்றன.
</p><p style="text-align: justify;">


உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை முன்கூட்டியே எச்சரிக்கும் தன்மை பாதங்களுக்கு உண்டு.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7892526b-6713-4f2e-9e50-6ea6019a73d9/26-6a56c542e95df.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;உபாதைகள்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">



பாதங்களில் உள்ள நரம்புகள் உடலின் மற்ற அனைத்து உறுப்புகளுடனும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
</p><p style="text-align: justify;">


பாதங்களில் வெடிப்பு ,வீக்கம்,எரிச்சல் என்பன ஏற்றப்படுவது மனித உடலில் வேறு உபாதைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
</p><p style="text-align: justify;">


பாதங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவில்

ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருப்பதை உணர்த்தலாம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



எனவே பாதங்களை பராமரிக்க இதோ சில வழிமுறைகள் 



வெளியில் சென்று வந்தவுடனும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்றாகக் கழுவ வேண்டும். இல்லையேல் விரல் இடுக்கில் சேற்றுப் புண்கள் உருவாக வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify;">



பாதங்கள் வறண்டு போகாமல் இருக்க, இரவில் தூங்குவதற்கு முன் நல்ல ஈரப்பதமூட்டும் கிரீம் அல்லது வெசிலின் (Vaseline) தடவலாம்.
</p><p style="text-align: justify;">


வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும் சரியான காலணிகளைத் தேர்ந்தெடுத்து 

அணியுங்கள்.



ஒரு நாளைக்கு மூன்று லீட்டர் தண்ணீர் அருந்துங்கள்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T23:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732"></link>
            <id>https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732</id>
            <summary type="text">நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742553aa-356a-485d-ba9f-fdc9fb0f0408/26-6a567fe5d115b.webp' /></p><h2>சிறை தண்டனை</h2><p>
</p><p>
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதத்தில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.</p><p></p><p>
</p><p>
இது தவிர, கந்துவட்டி மற்றும் மிரட்டல் வழக்குகளிலும் இவருக்கு தனித்தனியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. </p><p>இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
</p><p>

அதேசமயம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தொழிற்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-director-general-appointed-to-state-industries-1784066747"></link>
            <id>https://jvpnews.com/article/new-director-general-appointed-to-state-industries-1784066747</id>
            <summary type="text">அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>


அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஏ. விஜேசிங்ஹ, கடந்த ஜூலை 9ஆம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581b1461-1d68-4773-b7ed-62dc69ba05d2/26-6a56b2bce1e42.webp' /></p><p>
</p><p>


தற்போது அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வரும் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தர அதிகாரியான பொறியியலாளர் எஸ்.என்.பீ.எம். பத்மசிறி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,</p><p></p><p>
</p><p>


இதற்கான யோசனையை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:06:21+00:00</updated>
        </entry>
    </feed>
