<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T14:43:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ண கால்பந்து போட்டி; Golden Boot வெல்லப்போவது யார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-cup-football-who-will-win-the-golden-boot-1783948659"></link>
            <id>https://jvpnews.com/article/world-cup-football-who-will-win-the-golden-boot-1783948659</id>
            <summary type="text">&amp;nbsp; உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் &#039;தங்க காலணி&#039; (Golden Boot) விருதை கைப்பற்ற 4 வீரர்களுக்கு இடையே கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை கைப்பற்ற 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
</p><p>
தற்போதைய நிலவரப்படி, மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே தலா 8 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். 

அவர்களை தொடர்ந்து இங்கிலாந்தின் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் தலா 6 கோல்கள் அடித்து போட்டியில் நீடித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5788f5a1-46b6-44ce-9fb6-9c1706931a5e/26-6a54e57491f23.webp' /></p><h2>4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி</h2><p>



இந்த நான்கு வீரர்களும் இன்னும் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளதால், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் முடிவில் யார் அதிக கோல்கள் அடித்து தங்க காலணியை வெல்லப் போகிறார் என்பது தெரியவரும்.
</p><p>
இதற்கிடையில், நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்கள் அடித்திருந்தாலும், அவரது அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால் தங்க காலணிக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அடுத்து அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வருகிற 14-ம் திகதி நடைபெறும் போட்டியில் பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து 15-ம் திகதி நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-13T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அழையா விருந்தாளி! சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/snake-slithers-into-a-parked-motorcycle-1783947846"></link>
            <id>https://jvpnews.com/article/snake-slithers-into-a-parked-motorcycle-1783947846</id>
            <summary type="text">&amp;nbsp; ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Scooty ரக மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Scooty ரக மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (13) மாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p>இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டுச் சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e29e15-9ef0-43df-9532-cf95b257d2b1/26-6a54e2479256b.webp' /></p><h2>பாதிப்பு ஏற்படவில்லை</h2><p>
</p><p>
 அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு புகுந்துள்ளது. 

அவ்வழியால் சென்ற ஒருவர், கவசத்திற்குள் இருந்த பாம்பு தலையை வெளியே நீட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார். </p><p>

தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.</p><p></p><p> 

பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு, மோட்டார் சைக்கிள் கவசப் பகுதியைச் சீரமைத்து, தடியொன்றின் உதவியுடன் பாம்பைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். 

 பாம்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஹட்டன் புகையிரதப் பாதைக்கு அருகிலுள்ள புதர்ப்பகுதியில் அது விடுவிக்கப்பட்டது. </p><p>

இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித&nbsp; &nbsp;பாதிப்பு&nbsp; ஏற்படவில்லை. வாகனங்களுக்குள் பாம்புகள் புகும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருவதால், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இயக்குவதற்கு முன்னர் அவற்றை நன்கு பரிசோதித்துக் கொள்வது அவசியம் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-07-13T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாகம் என கேட்டது தப்பா..தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த ஆசிரியை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-drinks-acid-mistaking-it-for-water-1783946552"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-drinks-acid-mistaking-it-for-water-1783946552</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய ஆசிரியை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c192a9d-957f-42c1-baf9-33d36323c9b8/26-6a54dd3a31fcc.webp' /></p><h2>தண்ணீருக்குப் பதிலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலம்&nbsp;</h2><p>
</p><p>

குறித்த ஆசிரியை, நகைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தாகம் எடுத்ததால் குடிநீர் கேட்டுள்ளார்.

நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர் ஒருவரிடம் பணம் கொடுத்து, அருகில் உள்ள கடையிலிருந்து குளிர்ந்த தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார்.
</p><p>
 ஊழியர் வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்துள்ளது. 

 கடையின் குளிர்சாதனப் பெட்டியில் இந்த அமில போத்தல் வைக்கப்பட்டிருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

போத்தலில் இருப்பது அமிலம் என்பதை அறியாத ஆசிரியை, அதனை ஒரு மடக்கு குடித்த உடனே அவரது தொண்டையில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் அலறியடித்தபடி அவர் கடையை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள உள்ளூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மீரட்டில் உள்ள அதிநவீன மருத்துவ மையத்திற்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p>


இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தின. அதில், ஆசிரியை தனது தாயாருடன் நகைக் கடையில் அமர்ந்திருப்பதும், கடைக்காரர் போத்தலை நீட்டிய சில நொடிகளில் அவர் நிலைதடுமாறி வெளியில் ஓடுவதும் பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து பொலிஸ் அதிகாரி அனிதா சவுகான், 

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நகைக் கடை உரிமையாளர் உரிய உரிமம் இன்றி கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் பெரிய கொள்கலன்களில் இருந்த அமிலத்தை, பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீர் போத்தல்களில் மாற்றி ஊற்றி வைத்துள்ளார்.</p><p></p><p>

யாரோ ஒருவர் அந்த அமில போத்தலை தவறுதலாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக் கடை மற்றும் பலகாரக் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>
இச்சம்பவம் குறித்து இதுவரை முறைப்படியான முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், முழுமையான விசாரணைக்கு பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T13:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசாஜ் நிலையத்தில் தகாத தொழில் ; கொத்தோடு சிக்கிய கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-activities-at-massage-parlour-17-arrested-1783933739"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-activities-at-massage-parlour-17-arrested-1783933739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிரிபத்கொடையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளை முற்றுகையிட்ட கிருபத்கொடை பொலிஸார், 10 பெண்கள், 5 ஆண்கள் மற்றும் இரண்டு விடுதிகளின் முகாமையாளர்கள் இருவர் உட்பட மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர்.</p><p>

மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முற்றுகை நடவடிக்கை கடந்த 5-ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3e00c8-0a3f-4663-a3f7-05656fb354f3/26-6a54ab2c7e08f.webp' /></p><p></p><p>

இதன்போது, முதலாவது மசாஜ் நிலையத்திலிருந்து ஒரு பெண் முகாமையாளர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இரண்டாவது மசாஜ் நிலையத்திலிருந்து பெண் முகாமையாளர் ஒருவர் உட்பட 5 பெண்கள் மற்றும் சேவை பெற வந்திருந்த 3 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்கள் அனுராதபுரம், கண்டி, கந்தளாய், வாதுவை, பொல்கஹவெல மற்றும் நிக்கவெரட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் கைபேசியால் கணவர் மரணம் ; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810"></link>
            <id>https://jvpnews.com/article/husband-dies-after-being-struck-by-wife-s-mobile-1783943810</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா ஒடிசா மாநிலம், பாலாங்கீர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவி வீசிய கைபேசி (மொபைல் போன்) கணவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கைபேசியை கணவர் மீது வீசியுள்ளார். அது அவரது தலையில் பலமாக தாக்கிதில், அவர் படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72d5c2a-d0da-4acb-a883-10d4b9a79137/26-6a54d2845adcb.webp' /></p><h2>&nbsp;மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய&nbsp;சம்பவம் </h2><p>
</p><p>
காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமடைந்தது.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினர் அவரை அவசர சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றபோதிலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T12:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் மாயம்; தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-goes-missing-bathing-in-river-lindula-1783945631"></link>
            <id>https://jvpnews.com/article/student-goes-missing-bathing-in-river-lindula-1783945631</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுவரெலியா லிந்துலை&amp;nbsp; பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுவரெலியா லிந்துலை&nbsp; பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3f4922-7519-4cd2-857f-314e32c70724/26-6a54d9a09ddb4.webp' /></p><p>
</p><p>
 மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரு மாணவன் மாத்திரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

காணாமல் போனவர், 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந் நிலையில் மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை காவல்துறையினரும், பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T12:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் அநீதியா? திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/injustice-awareness-raising-protest-in-trincomalee-1783940884"></link>
            <id>https://jvpnews.com/article/injustice-awareness-raising-protest-in-trincomalee-1783940884</id>
            <summary type="text">&amp;nbsp; சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி இன்று (13) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக் கோரி இன்று (13) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76195fa6-0601-4c95-bb79-90c7adf5b7da/26-6a54c7158d96a.webp' /></p><p>
</p><p>


மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>


அத்துடன், அரசியல் தலையீடுகள் இன்றி தகுதியானவர்களுக்கு நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T11:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு; சுற்றிவளைப்பில் நேர்ந்த துயரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783940438"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783940438</id>
            <summary type="text">ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர்; சுற்றிவளைப்பில் நேர்ந்த துயரம்!

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர்; சுற்றிவளைப்பில் நேர்ந்த துயரம்!

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் - மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>



 சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜண் சமீத் ஜிஹான் ரணசிங்க என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741e7807-dd42-4afc-8395-7136e0c7c9d8/26-6a54c5582cb01.webp' /></p><p></p><p>



மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது நேற்று (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த பொலிஸ் விசேட அதிரடீப்படையின் சார்ஜண்ட் காணாமல் போயிருந்தார்.</p><p></p><p>
</p><p>


இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பொலிஸ் சார்ஜண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 



 கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T10:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உருவான புதிய அரசியல் கூட்டணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-new-tamil-political-alliance-formed-in-sri-lanka-1783938047"></link>
            <id>https://jvpnews.com/article/a-new-tamil-political-alliance-formed-in-sri-lanka-1783938047</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.</p><p>



அதனடிப்படையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,இலங்கை தமிழ் அரசு கட்சி,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளி்ன பிரதிநிதிகள் இன்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6302baf-51d5-4628-91b8-0911cdc7f971/26-6a54bc0167c4c.webp' /></p><p> 



இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், குறிப்பாக காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.</p><p></p><p> </p><p>



 கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணி அபகரிப்பு இன்றளவிலும் தீவிரமடைந்துள்ளது. </p><p>தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><p>



மேலும் இந்த கூட்டணி வெறுமனே ஒன்று சேர்ந்த கூட்டணி அல்ல. மக்களின் நலனுக்காக சேர்ந்த தேசிய மேடை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-13T10:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கொடூரம்; கொல்லப்பட்ட அதிகாரியின் பிறப்புறுப்பு சிதைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-genitals-of-slain-officer-mutilated-1783934690"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-genitals-of-slain-officer-mutilated-1783934690</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 சிறைச்சாலை வன்முறை சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9ca94c9-074f-4d27-9081-7da5b35e47c0/26-6a54aee3d8780.webp' /></p><h2>300 கைதிகள் அடையாளம்&nbsp;</h2><p> 

இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
சிறைச்சாலை மோதலின் போது அதிகாரிகளைத் தாக்குவதற்காகக் கைதிகள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், பொல்லுகள் மற்றும் பிற உபகரணங்கள் என 1,000-க்கும் மேற்பட்ட பொருட்களை விசாரணை அதிகாரிகள் நீர்கொழும்புச் சிறைச்சாலையிலிருந்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

மீட்கப்பட்ட கூர்மையான ஆயுதங்களில் பெரும்பாலானவை சிறைச்சாலை சமையலறையில் இருந்தவை என்றும், சில ஆயுதங்கள் கைதிகளாலேயே கையால் தயாரிக்கப்பட்டவை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
சம்பவம் நடந்தபோது சிறைச்சாலையில் இருந்த அனைத்துக் கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p> </p><p>

8 சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிப் படுகொலை செய்தும், மேலும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குக் காயங்களை ஏற்படுத்தியும் உள்ள சுமார் 300 கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளைக் கொலை செய்த கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T09:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-by-the-department-of-meteorology-1783936740"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-by-the-department-of-meteorology-1783936740</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. 

மாத்தறையிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. </p><p>

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67247004-7549-4762-8892-07a811ee4ed4/26-6a54b6e5c5761.webp' /></p><p> 

 கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, நாட்டைச் சூழ நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T09:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் அதிபர், மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093"></link>
            <id>https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். </p><p>அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f54689-64cc-46e3-914e-78642da6e1e3/26-6a54951eae891.webp' /></p><p></p><h2>&nbsp;வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த மாணவன்</h2><p> 

 இதேவேளை கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த&nbsp; &nbsp;மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T09:09:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-regarding-pillayan-remanded-july-24-1783932739"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-regarding-pillayan-remanded-july-24-1783932739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, &#039;பிள்ளையான்&#039; என அழைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

அதன்படி பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9648d264-ad0c-4bf4-b58e-208138a0f355/26-6a54a74538bfc.webp' /></p><p>

இன்றையதினம் (13) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:50:57+00:00</updated>
        </entry>
    </feed>
