<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T18:46:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dias</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் எதிராக வெடித்தது போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-against-sumanthiran-school-1784396330"></link>
            <id>https://jvpnews.com/article/protest-against-sumanthiran-school-1784396330</id>
            <summary type="text">சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="font-size: 14px;">சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார்.</span><br></h2><p>
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனை அழைத்திருந்தோம். ஆனால் அவர்
தான் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.</p><p>யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி
ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக
கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள
வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435a5a01-d852-4b76-b39d-8e5689511b76/26-6a5bba2c207ac.webp' /><br></p><h2>&nbsp; பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை
நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக
வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது
பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு
தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.</p><h2>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம்&nbsp;</h2><p>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு
தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும்
பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமுகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள்
முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய
மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமுகத்துடனேயே
நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள்
போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p>இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு
செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால்
அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த
ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர்
சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.</p><h2>தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை</h2><p>நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது.
போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே
முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனஉளைச்சல்
ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த
விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.</p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற
வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.<br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T18:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிட்டிவேரம் பகுதியில் விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-cityveram-accident-young-man-death-1784393615"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-cityveram-accident-young-man-death-1784393615</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் இன்று (18.07.2026) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருக்கும் போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f03d06c-993c-43cc-8e0f-b1e6dd9f7d27/26-6a5bb23d37e50.webp' /></p><p>
</p><p>
இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார
வைத்தியாசலையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T17:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dias</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஆசையில் 8 மில்லியனை இழந்த தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-job-scam-suspect-arrested-1784393482"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-job-scam-suspect-arrested-1784393482</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை&nbsp;</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-18T16:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியில் மேலும் 06 என்பு கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-more-skeletons-identified-chemmani-mass-grave-1784377109"></link>
            <id>https://jvpnews.com/article/six-more-skeletons-identified-chemmani-mass-grave-1784377109</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p> 
 இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்பு கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3900627-1f5b-431f-b673-94e3f06d261b/26-6a5b6f16e67a9.webp' /></p><h2>&nbsp;பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல்</h2><p>
</p><p>
வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக கிண்ணஇறுதிப்போட்டி; நடுவர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-2026-world-cup-final-umpire-announcement-1784374153"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-2026-world-cup-final-umpire-announcement-1784374153</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

உலகமே எதிர்பார்க்கும் 23ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (19) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. 



அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d8eee0-7be6-4f07-9756-cbc0ade67303/26-6a5b638b492e8.webp' /></p><p> இறுதிப்போட்டியில் நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

உதவி நடுவர்களாக தாமஸ் கிளான்ஸ்னிக், ஆன்ட்ராஸ் கோவாசிச் ஆகியோர் செயல்படுவார்கள். 4ஆவது நடுவராக ஆதாம் மகாத்மேவும், மாற்று உதவி நடுவராக முகமது அல்கலாப்பும் இருப்பார்கள்.



'பிபா' நடுவர் குழுவின் தலைவர் பியர்லூகி கொலினோ இதனை அறிவித்தபோது, சிலாவ்கோ வின்சிச் இன்ப அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் பதற்றம்; குவைத் விமான நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/war-tensions-kuwait-airport-operations-suspended-1784379355"></link>
            <id>https://jvpnews.com/article/war-tensions-kuwait-airport-operations-suspended-1784379355</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான 'குவைத் எயார்வேஸ்' தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c8a06-f36b-4089-be48-1fb635568e0e/26-6a5b77dd59547.webp' /></p><p></p><p>

 

இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-elder-affected-by-kidney-disease-1784381339"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-elder-affected-by-kidney-disease-1784381339</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் முதியோர் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் முதியோர் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

 

இது தவிர, இந்நாட்டில் இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பெருமளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85d37175-0a13-4194-94dd-7065997fa7fd/26-6a5b7f9ce22af.webp' /></p><h2>சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள்</h2><p>

 

சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டிலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் கூறினார்.</p><p>

 

இது சதவீத அடிப்படையில் 25% ஆகும் எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறுவதால் மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பதை விளக்கியுள்ளார்.
</p><p>
 

மேலும், இதற்கு மேலதிகமாக உயர் குருதி அழுத்தம் , இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுதல் போன்ற நிலமைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

இதன் காரணமாக, தற்போது பதிவாகியுள்ள 10% சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25% வரை உயரக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அது 30% முதல் 40% வரை கூட அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
</p><p>
 

சிறுநீரக நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இளைஞர்களும் இனங்காணப்பட்டதாகக் கூறிய வைத்தியர், அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின்படி, உடற்கட்டமைப்பு (Bodybuilding) மற்றும் சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் பயன்பாடே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T13:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580"></link>
            <id>https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580</id>
            <summary type="text">யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/696e7192-709f-4958-909c-dd52d4bc19c5/26-6a5b653608f8a.webp' /></p><p> </p><p>

இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் , பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் இதனால் மின் கம்பிகள் அப்பகுதி வீடுகளின் மேல் விழுந்து பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோரை பலி எடுக்கும் மின்னல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-people-die-from-lightning-strikes-every-year-1784378909"></link>
            <id>https://jvpnews.com/article/50-people-die-from-lightning-strikes-every-year-1784378909</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.



இன்று (18) கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>


இன்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மின்னல் விபத்துகளால் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகள் மட்டுமன்றி, சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பாரிய சேதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b4f4ad-613b-4494-adcd-a8e50b2231d3/26-6a5b761ec791d.webp' /></p><p>



மின்னல் தாக்கம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:46:52+00:00</updated>
        </entry>
    </feed>
