<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T07:47:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-dep-meteorology-wind-warning-1784101096"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-dep-meteorology-wind-warning-1784101096</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கையானது நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe89fed-ab6f-429c-8395-417bdd0ceaa1/26-6a5738e9c9969.webp' /></p><p>
</p><p>
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றின் தீவிரத்தன்மை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
</p><p>
இந்த காலப்பகுதியில் 12 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு 'அம்பர்' எச்சரிக்கையையும் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA['எல் நினோ' காலநிலை சூப்பர் எல் நினோ வாக மாறுவதற்கான வாய்ப்பு ; ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/possibility-el-ni-o-evolving-into-a-super-el-ni-o-1784100488"></link>
            <id>https://jvpnews.com/article/possibility-el-ni-o-evolving-into-a-super-el-ni-o-1784100488</id>
            <summary type="text">தற்போது நிலவும் &#039;எல் நினோ&#039; காலநிலை, &#039;சூப்பர் எல் நினோ&#039;வாக மாறுவதற்கான வாய்ப்பு 81 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம், எச்சரித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் 'எல் நினோ' காலநிலை, 'சூப்பர் எல் நினோ'வாக மாறுவதற்கான வாய்ப்பு 81 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம், எச்சரித்துள்ளது.</p><p>

இந்த காலநிலை மாற்றம் 2027-ஆம் ஆண்டின் தொடக்க வசந்த காலம் வரை நீடிக்க 97 சதவீத வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1°C முதல் 3°C வரை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501fcac0-1030-4ab9-a62a-fec4e77f6d83/26-6a573689d1419.webp' /></p><h2>97 சதவீத வாய்ப்பு</h2><p>
</p><p>
இது கடந்த நூற்றாண்டின் வலுவான எல் நினோ காலநிலையில் ஒன்றாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த மாற்றத்தால் தென்கிழக்கு ஆசியாவில் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பயிர் இழப்புகள் ஏற்படலாம் எனவும், ஏனைய சில பிராந்தியங்களில் அதீத மழையும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
இந்த எல் நினோவின் தாக்கம் வலுவடைந்து வருவதால், 2026 அல்லது 2027-ஆம் ஆண்டுகள் உலகளாவிய வெப்பநிலையில் புதிய உச்சத்தைத் தொடக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்த வானிலை மாற்றங்கள் உலகளாவிய விவசாயச் சந்தைகளிலும், பயிர் உற்பத்தியிலும் கடுமையான சவால்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.</p><p>

அதேவேளை NOAA அமைப்பு கடந்த ஜூன் மாதம் எல் நினோ தொடக்கத்தை அறிவித்த நிலையில், அதன் தீவிரம் எதிர்பார்ப்பை விட வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-15T07:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக்ஸர் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த துயரம்; எச்சரிக்கை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-three-year-boy-dies-after-eating-mixture-snack-1784099756"></link>
            <id>https://jvpnews.com/article/a-three-year-boy-dies-after-eating-mixture-snack-1784099756</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், &#039;மிக்ஸர்&#039; சாப்பிடும்போது வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' சாப்பிடும்போது வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது சிறுவன் வீட்டில் வைத்து 'மிக்ஸர்' தின்பண்டத்தைச் சாப்பிட்டுள்ளார்.

 இதன்போது மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117c2831-95f2-4ec6-8e1a-86f77cc0c17a/26-6a5733addc965.webp' /></p><p>
</p><p>
 பதறிய பெற்றோர் தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

 சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p></p><p>

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T07:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டிருந்து வந்தவர்களுக்கு வந்த சோதனை ;கனேடிய டொலர்கள் , யூரோக்கள், கடவுச்சீட்டு களவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-foreigners-homes-in-jaffna-1784090349</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

காரைநகரிலுள்ள ஒரு வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றுமொரு வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் இலங்கை ரூபா ஒரு லட்சம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2c5306-ce8f-4d23-8bf9-d774ac52978c/26-6a571d7caeb8d.webp' /></p><p></p><h2>திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள்&nbsp;</h2><p> 

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p> விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இருவர் பலி ; கர்ப்பிணிப் பெண் படுகாயம்; இன்று காலை இடம்பெற்ற துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-killed-pregnant-woman-critically-accident-1784096998"></link>
            <id>https://jvpnews.com/article/two-killed-pregnant-woman-critically-accident-1784096998</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயம் அட்டைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

 விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcbd9051-456c-49a7-ad0f-079c4562dd3a/26-6a5728e881c81.webp' /></p><h2>பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற "சிசு சரிய" பேருந்து</h2><p>

 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற "சிசு சரிய" பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்த நிலையில் விபத்தின் போது இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 விபத்து ஏற்படும் போது மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச பாடசாலை ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255"></link>
            <id>https://jvpnews.com/article/school-teacher-sells-narcotics-with-husband-1784096255</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் விற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eefe4c0-226f-4c02-80ca-09aba08b9e37/26-6a57260172f9a.webp' /></p><h2>சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவனின் வசம் 1 கிலோகிராம், 6 கிராம், 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையின் வசம் 149 கிராம், 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
வேனொன்றின் முன்பகுதியில் வைத்து மாதம்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நளின் ஸ்ரீயந்தவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் தம்பதியினர் மாதம்பிட்டிய உள்ள ஒரு மதஸ்தலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 சந்தேக நபர் தம்பதியினர் பயணித்த வேனைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
</p><p>
 அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவை வத்தளை (வெலிசர) பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-un-against-the-npp-1784095268"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-un-against-the-npp-1784095268</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் மற்றும் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கையின் கூட்டு எதிர்க்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. </p><p> 

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினர், இன்று (15) காலை ஐநா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பான விரிவான எதிர்ப்பு மகஜரை கையளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6003f2f4-fcd9-40eb-a94b-bb7196b097b1/26-6a5722266ed8d.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக விழுமியங்கள் சீர்குலைக்கப்படுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடித் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-15T05:59:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை ஏற்றி செல்லும் பெற்றோருக்கு வவுனியா பொலிஸார் கடும் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-police-order-children-must-wear-helmets-1784094531"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-police-order-children-must-wear-helmets-1784094531</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியாவில், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியாவில், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
 இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f14365-ab3d-4f8b-80f0-f3d33706924d/26-6a571f44c84f2.webp' /></p><h2>&nbsp;ஒரு வார கால அவகாசம்</h2><p> 

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று விசேட விழிப்புணர்வு நடவடிக்கை&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b68549-8bab-431a-996b-3826d0797883/26-6a571f457de92.webp' /></p><p></p><p>

இதன்போது, தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f6138c-a585-4cbc-8d98-793838e0648a/26-6a571f4635494.webp' /></p><p></p><p> </p><p>

அத்துடன், சிறுவர்களுக்கு தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T05:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-s-b-dissanayake-s-brother-arrested-1784093929"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-s-b-dissanayake-s-brother-arrested-1784093929</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p> 

மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7034cd62-f37f-4f2d-a0ef-6d314985cac6/26-6a571cea68a3c.webp' /></p><p>

 

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றைய தினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் மேலும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-further-sri-lanka-1784093355"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-further-sri-lanka-1784093355</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472ddfc3-d7ae-4fad-a5f5-28c9993a5194/26-6a571aacd7bc7.webp' /></p><p>

அத்துடன், டெங்கு மரணங்களும் 49 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>



மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T05:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண ஆளுநர் பதவி இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resignation-from-post-of-central-province-governor-1784092685"></link>
            <id>https://jvpnews.com/article/resignation-from-post-of-central-province-governor-1784092685</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்தததாக அவர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்தததாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c384d374-8421-45ed-8615-2afcc2fb511e/26-6a57180f62751.webp' /></p><p>
</p><p>
நேற்று அனுப்பப்பட்ட அந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும், ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.</p><p>
 

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.</p><p></p><p>

இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.

அந்தப் பதவியை வகித்த மஞ்சுளா மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T05:16:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்காங்கே மீட்கப்பட்ட சடலங்களால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-bodies-recovered-in-galewela-and-deraniyagala-1784090934"></link>
            <id>https://jvpnews.com/article/two-bodies-recovered-in-galewela-and-deraniyagala-1784090934</id>
            <summary type="text">&amp;nbsp; கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (14) மாலை கலேவெல பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று (14) மாலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம பகுதிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3d5b09-c237-4d08-bea2-07a3c6a20173/26-6a5711382fa21.webp' /></p><h2>மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர்</h2><p>


உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஆவார். இந்த பெண் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயாவில் நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.
</p><p>

சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T04:47:24+00:00</updated>
        </entry>
    </feed>
