<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-22T05:52:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-commander-ravindra-wijegunaratne-granted-bail-1784699317"></link>
            <id>https://jvpnews.com/article/navy-commander-ravindra-wijegunaratne-granted-bail-1784699317</id>
            <summary type="text">2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

 

முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68958ed6-726c-4559-87c3-6f4f408a7e31/26-6a6059b74661c.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.
</p><p>
 

அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 மில்லியன் ரூபாய் கொள்ளை; முன்னாள் அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/200-million-robbery-shantha-bandara-son-in-court-1784698325"></link>
            <id>https://jvpnews.com/article/200-million-robbery-shantha-bandara-son-in-court-1784698325</id>
            <summary type="text">&amp;nbsp; சீன நாட்டவருக்குச் சொந்தமான 200 மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (22...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீன நாட்டவருக்குச் சொந்தமான 200 மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


கொள்ளுப்பிட்டிய பொலிஸில் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்தபோது சரணடைந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c70cb45-2ef7-4008-8e07-7f51c9b6317d/26-6a6055d69fdfb.webp' />]</p><p>
</p><p>


கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டடியில் வாகனத்தில் பயணித்த சீன நாட்டவர் ஒருவரைப் பொலிஸார் போன்று நடித்து வழிமறித்த இருவர், அவரது பயண ஆவணங்களைச் சோதனையிட்டதுடன், 200 மில்லியன் ரூபாய் பணம் அடங்கிய பையுடன் தப்பியோடினர்.</p><p> இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.



அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டிய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இச்சம்பவத்தை நேரில் கண்டு, சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>


தான் தனியாகவே செயற்பட்டதாக அவர் ஆரம்பத்தில் தெரிவித்த போதிலும், மேலதிக விசாரணைகள் மற்றும் தொலைபேசிப் பகுப்பாய்வு மூலம் மேலும் நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>



இதனைத் தொடர்ந்து, மற்றொரு சீன நாட்டவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்தளிப்பதற்காகச் சாந்த பண்டாரவின் மகனும் ஏனையோரும் அருகில் காத்திருந்ததாகவும், கைது நடவடிக்கைகள் குறித்து அறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T05:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாயின் மீது இலங்கையின் முதல் சூரிய மின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-solar-power-project-on-a-canal-1784697175"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-solar-power-project-on-a-canal-1784697175</id>
            <summary type="text">இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது &#039;Canal-Top Solar&#039; சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக விளங்கும் வியானா கால்வாய், தேசிய மின்சார அமைப்பிற்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கும் திறனும், ஆண்டின் பெரும்பகுதியில் கிடைக்கும் போதிய சூரிய ஒளியும் உள்ளதால், இத்திட்டத்திற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்தத் திட்டத்தின் கீழ், கால்வாயின் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்படவுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86885cfd-42d3-494f-80bc-f3359c8097bd/26-6a605158d3ab4.webp' /></p><p>இதன் மூலம் நீர் ஆவியாவதை குறைத்தல், கடுமையான வெப்பமான காலநிலையிலும் நீரின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்தல் மற்றும் எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜன் போன்ற மேம்பட்ட மின்சக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>


மேலும், திட்டத்தில் பாதுகாப்பான மின்சார யானை வேலியும் இணைக்கப்படவுள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயத்தையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதன்படி, இந்தத் திட்டம் நீரை எடுத்துச் செல்லும் கால்வாயாக மட்டுமல்லாமல், சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், நீர்வளங்களையும் காட்டு யானைகளையும் பாதுகாக்கும், இலங்கையின் பசுமை மின்சக்தி கொள்கைக்கு புதிய திசையைக் காட்டும் தேசிய அளவிலான முன்னோடி அபிவிருத்தித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இலங்கைமுதலீட்டு வழிகாட்டி



இத்திட்டம் தொடர்பான விசேட கள விஜயமும் முன்னேற்ற மறுஆய்வுக் கலந்துரையாடலும் கடந்த 20ஆம் திகதி மஹியங்கனையில் நடைபெற்றது.</p><p>



இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அலககோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்றில் புத்தர் வருகின்றார்? பறிபோகின்றதா தமிழரின் புண்ணிய பூமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-the-buddha-arriving-at-the-kanniya-hot-springs-1784696507"></link>
            <id>https://jvpnews.com/article/is-the-buddha-arriving-at-the-kanniya-hot-springs-1784696507</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்துக்களினது புனித பூமியான கன்னியா வெந்நீர் ஊற்றில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலையில் அமைந்துள்ள <a href="https://jvpnews.com/article/buddha-will-the-kanniya-hot-spring-be-lost-1765957756" target="_blank">வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்துக்களினது புனித பூமியான கன்னியா வெந்நீர்</a> ஊற்றில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f3d3fe-eb08-422f-9f05-08bea5213f8d/26-6a604ebd7c72c.webp' /></p><p> </p><p>

அப்பகுதியில் சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் என்பன இருந்ததுடன், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் புனிதத் தலமாகவும் அது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p>

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிங்களவர்களின் ஆக்கிரமிப்பினுள் சிக்கியுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.</p><p>

அதேவேளை ஏற்கனவே திருகோணமலையினை சிங்கள பௌத்தமயமாக்கல் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T05:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணியில் ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/european-union-representatives-at-jaffna-semmani-1784697235"></link>
            <id>https://jvpnews.com/article/european-union-representatives-at-jaffna-semmani-1784697235</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று காலை சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் கவனயீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று காலை சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. </p><p>

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903c8a3b-fa9d-4d59-a860-44535a6aef8f/26-6a6051951f54c.webp' /></p><p> </p><p>

காலை 8.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். </p><p>

செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0de8781-2db7-4fa0-a6fa-9f8c91be88c1/26-6a6053b0aae51.webp' /></p><p> </p><p>

இவ்விடயங்களை மூடிமறைத்து அல்லது நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நீதி கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் பாதிக்கப்பட்ட மக்களை அரசின் வாக்குறுதிகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர். </p><p>

 
இதனை தொடர்ந்து செம்மணி மனிதப்புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதிகள் இன்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T05:12:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோழி தகராறில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-lost-in-a-dispute-over-a-chicken-1784695749"></link>
            <id>https://jvpnews.com/article/life-lost-in-a-dispute-over-a-chicken-1784695749</id>
            <summary type="text">&amp;nbsp;கோழி தகராறு விவகாரத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கோழி தகராறு விவகாரத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (22) அன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
</p><p>
 உயிரிழந்தவர், லிந்துலை மாவுசலை மேல் பிரிவைச் சேர்ந்த அந்தோணி ராஜா (வயது 65) ஆவார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையைத் தாக்கிவிட்டுத் தலைமறைவாக இருந்த மகன், கடந்த 19 ஆம் திகதி லிந்துலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53197f14-7307-4e87-85b8-cc8ecf21b6b2/26-6a604c163f208.webp' /></p><p>

பொலிஸ் விசாரணைகளின் பின்னர், கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-22T04:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-second-term-examination-postponed-1784695188"></link>
            <id>https://jvpnews.com/article/southern-second-term-examination-postponed-1784695188</id>
            <summary type="text">தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள் பரீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள் பரீட்சையை நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அதற்கமைய, இன்றைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பாடம் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f82e4-52fc-4295-91a2-9ce3f4856344/26-6a6049956f552.webp' /></p><p>வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இதுவரையில் வினாத்தாள்கள் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படாததால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இது தொடர்பில் வலயத்தின் அனைத்து அதிபர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:39:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் ; பல பயிர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-insurance-scheme-for-farmers-1784694435"></link>
            <id>https://jvpnews.com/article/new-insurance-scheme-for-farmers-1784694435</id>
            <summary type="text">விவசாயம் மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை, பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயம் மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை, பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தத் திட்டம், விவசாயத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ், கேரட், லீக்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை, குடைமிளகாய், தக்காளி, பாகற்காய் மற்றும் பூசணி உள்ளிட்ட பயிர்களை உள்ளடக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bdbdee7-3c9a-4e37-951e-ae6e33e23d02/26-6a6046a4dcb16.webp' /></p><p>ஆரம்பக் காப்பீட்டுத் தொகையில் 7% கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இக்காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம் என்று சபை தெரிவித்துள்ளது. </p><p> 

இயற்கைப் பேரழிவுகள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள், பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
</p><p>
விவசாயத் துறையில் ஏற்படும் அபாயங்களைக் குறைத்து, நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம், விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்கை செய்வதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று வேளாண்மை மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை இசைக் கச்சேரியில் மர்மம் ; நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/500-helmets-disappear-at-a-music-concert-1784693691"></link>
            <id>https://jvpnews.com/article/500-helmets-disappear-at-a-music-concert-1784693691</id>
            <summary type="text">களுத்துறை ஹொரணை பொது மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்களின் சுமார் 500 தலைக்கவசங்கள் மர்மமான முறையில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை ஹொரணை பொது மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்களின் சுமார் 500 தலைக்கவசங்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஹொரணை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இசைக் கச்சேரியைக் காண வந்த பலர், நிகழ்வு நடைபெற்ற இடத்தில் வாகன தரிப்பிடக் கட்டணத்தை அறவிட்ட பெண்ணொருவரிடம் தங்களது தலைக்கவசங்களை பாதுகாப்பிற்காக ஒப்படைத்து நிகழ்ச்சிக்குள் சென்றிருந்தனர்.
</p><p>
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், பார்வையாளர்கள் தங்களது தலைக்கவசங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான தலைக்கவசங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4beec0b-3170-4e39-9b48-307561542273/26-6a6043bd0641d.webp' /></p><p>இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலைக்கவசங்களைப் பொறுப்பேற்றிருந்த ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் உள்ளனரா என்பதையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
</p><p>
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
காணாமல் போன தலைக்கவசங்கள் திட்டமிட்ட முறையில் திருடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டி வீதம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-s-key-decision-on-interest-rates-1784691722"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-s-key-decision-on-interest-rates-1784691722</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/833e5dde-891b-45b3-9094-a708a6e0b822/26-6a603c0b587f0.webp' /></p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. </p><p>இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், பல்வேறு வழிகளில் இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

 

2026 ஜூன் மாதத்தில் இலங்கையின் பொதுப் பணவீக்கம் ஆண்டடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளதுடன், இதற்கு பிரதானமாக உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T03:42:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஹினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கர வண்டி விபத்து ; இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-accident-at-mohini-falls-two-dead-1784691231"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-accident-at-mohini-falls-two-dead-1784691231</id>
            <summary type="text">நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>
 

அந்த முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42c7c75-6f9f-411b-9b45-ff772442ed4d/26-6a60417e0fa50.webp' /></p><p>
 

காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T03:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ரூ. 2 கோடிக்கும் அதிக பணத்துடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-over-rs-2-crore-in-cash-colombo-1784690858"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-over-rs-2-crore-in-cash-colombo-1784690858</id>
            <summary type="text">கொழும்பில் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
நேற்று (21) மாலை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த ரூ.2.70 கோடி பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f12476e-2021-4f33-bb7b-e1031be2b901/26-6a6038abca72f.webp' /></p><p>குறித்த பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ சந்தேகநபர்கள் வழங்கத் தவறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 59 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதை கண்டறியும் நோக்கில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T03:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நான்கு பாடசாலை மாணவர்கள் கைது ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061"></link>
            <id>https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779f3bf5-5d92-47fe-82b6-c631bc8dd91f/26-6a6012d53464a.webp' /></p><h2>பிணையில் விடுதலை</h2><p>
</p><p>
இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறுவர் என்ற காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; காரில் வந்தவர்கள் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547</id>
            <summary type="text">தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019723ff-ae26-45d0-8c41-796e7d4ec6a1/26-6a6018348898b.webp' /></p><p>
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

 

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் குடும்பத்தினர் செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297"></link>
            <id>https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297</id>
            <summary type="text">&amp;nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் தலா 300 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0f869c-17e3-4dc8-9de9-7a86ef84bc18/26-6a600c4f64409.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இதன்பின், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அவர்களை தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;">



அப்போது, பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தோரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனைத் தொடர்ந்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையத்திலுள்ள இரு தனித்தனி சிறைக்கூடங்களில் தடுத்து வைத்தார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும்&nbsp; கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p style="text-align: justify;">விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன், சமாதானமாகச் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T00:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 பேரை பலியெடுத்த தீ விபத்து ; அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919"></link>
            <id>https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919</id>
            <summary type="text">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/386f7e6a-9e05-4631-b4f8-1ebf8b127092/26-6a6006215a57f.webp' /></p><h2 style="text-align: justify; ">முழுமையான விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

உரிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பல சந்தர்ப்பங்களில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக கடந்த ஜூலை 2 ஆம் திகதியும் இது தொடர்பாக நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

காலை 9:50 மணியளவில் ஏற்பட்ட தீ, பின்னர் விரைவாகத் தொழிற்சாலை முழுவதும் பரவியதுடன், சுற்றியுள்ள பகுதி அடர்ந்த கருப்பு புகையால் சூழப்பட்டது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, கோட்டே, தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபைகள், ஹோரணை நகர சபை மற்றும் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

தொழிற்சாலையின் உட்பகுதியைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

தீ விபத்து ஏற்பட்ட போது தலைக்கவச தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட பெருமளவிலான இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T23:52:14+00:00</updated>
        </entry>
    </feed>
