<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T13:32:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் மரணதண்டனை ; கண்ணீருடன் மன்றாடும் அனோஜனின் தாயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739"></link>
            <id>https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனச் கதறி அழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (18) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். இதன் போது அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f92128-3c8c-4800-9047-19110a9da38c/26-6aad007568f60.webp' /></p><p></p><h2>எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான்</h2><p> </p><p>

 

"அவர் செய்தது தவறுதான்&nbsp; அதற்காக அவரும்&nbsp; மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை மன்னித்து, எனது மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம்" என்று கதறி அழுது கூறினார்.</p><p></p><p>

"எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில்தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம். அவருக்கு இந்த கதி என்றால் நாங்கள் நிர்க்கதியாகிவிடுவோம். செய்த தவறுக்கு இது மிகவும் பெரிய தண்டனையாக நினைக்கிறோம். தயவுசெய்து அவர் செய்த தவறை மன்னித்து, அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்துத்தாருங்கள்" என அனோஜனின் சகோதரர் கூறினார்.</p><p>


 ஊடக சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சகம் என்பவற்றோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகள் பற்றிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டன.
</p><p>
 அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், 

"இது மிகவும் வேதனைக்குரிய தருணமாகப் படுகின்றது.</p><p></p><p> </p><p>இது ஓர் உயிருக்கான போராட்டம். இதனையிட்டு நாங்கள் ஏற்கனவே எமது சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அமைச்சர் என்று பலருடனும் பேசியிருக்கின்றோம்; அவர்களும் இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த வேளையில் தேவையற்ற முகநூல் பதிவுகள், கூட்டங்கள், போராட்டங்களைத் தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே கோரிக்கை விடுத்து, அனோஜனை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். </p><p>இதற்காக எங்களது உச்சகட்ட ஆதரவைத் தருவோம்" என்றார்.

அச்சமயம், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஆலயத் தலைவர்கள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T12:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கை மாறியது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191"></link>
            <id>https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் இன்று (18) கையொப்பமிட்டனர் .</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. 

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f6572b-cde7-4f9a-9cab-03bc5166ba95/26-6aad2949542e7.webp' /></p><h2>அமைச்சரவை&nbsp; அனுமதி</h2><p> 

இலங்கை பாராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன்&nbsp;யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்&nbsp; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a9c680-472f-49d5-888c-6a643d8445e1/26-6aad294a0dbdd.webp' /></p><p> 

மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன், எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள் கையாளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32de268-9be9-43b5-8f52-04692a0dba45/26-6aad294abd7c6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T12:34:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் கடற்படை முன்னாள் வீரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-navy-sailor-arrested-narcotics-worth-10-million-1789734725"></link>
            <id>https://jvpnews.com/article/ex-navy-sailor-arrested-narcotics-worth-10-million-1789734725</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன், கடற்படையின் முன்னாள் வீரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன், கடற்படையின் முன்னாள் வீரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p><p>&nbsp; வெளிநாட்டில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய முக்கிய நபராகச் செயல்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a51054-0982-4ddd-b7dd-60b03501cf58/26-6aad2f46b6a1e.webp' /></p><p> </p><p>வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த சந்தேகநபர் பிடிபட்டார்.

விசேட அதிரடிப்படைக்கு&nbsp; கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​சந்தேகநபரிடமிருந்து 716 கிராம் ஹெராயின் மற்றும் 255 கிராம் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.</p><p></p><p> </p><p>

அத்துடன், ரஷ்யத் தயாரிப்பு 'மைக்ரோ' (Micro) ரக கைத்துப்பாக்கி, அதற்கான மேகசின் (magazine) மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டன.
</p><p>
கைது செய்யப்பட்ட 43 வயதான நபர், முன்னர் இலங்கை கடற்படையில் பணியாற்றி பின்னர் பணியிலிருந்து விலகிச் சென்றவர் ஆவார்; எனினும், 2025-ல் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் அவர் சட்டப்பூர்வமாக அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். </p><p>

பொலிஸாரின் விரிவான விசாரணையின் போது, ​​தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள "துபாய் பிரியங்கர" (Dubai Priyankara) என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவராக இவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (Police Narcotics Bureau) ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T12:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643</id>
            <summary type="text">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். 

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். </p><p style="text-align: justify; ">

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் உங்களுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50fb8596-f2b6-4467-9ed6-dd57fd687494/26-6aad1b6c71e70.webp' /></p><h2 style="text-align: justify; ">வேலைவாய்ப்பு</h2><p style="text-align: justify; "> 

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தபால் நிலையத்தில் இருந்து மகஜர் அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது வேலை வாய்ப்பு தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T11:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மேடையில் சர்ச்சை கருத்து ; விமல் வீரவங்ச குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8262e83-cf27-427c-8a40-22272c628da4/26-6aad1ad4c90e3.webp' /></p><h2>&nbsp;விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து</h2><p> 



கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>



இந்நிலையில், நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><p> </p><p>



அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை றிஷாட் பதியுதீனிடம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928</id>
            <summary type="text">&amp;nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நாளை (19) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b04152-d2d1-4f6d-a54f-f53e5547703e/26-6aad14ba36809.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-overtaking-attempt-ends-in-tragedy-1789727324"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-overtaking-attempt-ends-in-tragedy-1789727324</id>
            <summary type="text">திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



சேருநுவர – கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>


சேருநுவர – கந்தளாய் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8284a83-572c-4e35-8d2b-8a0226461bae/26-6aad12ed183fd.webp' /></p><p>



மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


விபத்தில் வாகனத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; 100 கசையடியால் மயங்கி விழுந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/affair-woman-faints-after-receiving-100-lashes-1789721162"></link>
            <id>https://jvpnews.com/article/affair-woman-faints-after-receiving-100-lashes-1789721162</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தோனேசியாவின் அச்சினே (Aceh) மாகாணத்தில் திருமணத்தை மீறிய உறவில் (Adultery) ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு இஸ்லாமிய ஷரியா ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தோனேசியாவின் அச்சினே (Aceh) மாகாணத்தில் திருமணத்தை மீறிய உறவில் (Adultery) ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் தலா 100 கசையடிகள் (Lashes) பகிரங்கமாக வழங்கப்பட்டன.</p><p>

இந் நிலையில் சாட்டையடியின் கொடூரமான வலியைத் தாங்க முடியாமல் தண்டனை விதிக்கப்பட்ட பெண் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f18a7cb9-8d81-4d80-b2e7-3d08ff519bf9/26-6aacfa4c99288.webp' /></p><p></p><h2>கடுமையான வலியால் அலறிய&nbsp; பெண்</h2><p>

இந்தோனேசியாவில் கடுமையான ஷரியா சட்டங்கள் அமலில் உள்ள ஒரே தன்னாட்சி மாகாணமாக அச்சினே விளங்குகிறது. 

அங்குள்ள பண்டா அச்சினே நகரில் பொதுமக்கள் திரண்டிருந்த மைதானத்தில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. </p><p>பிரம்பினால் முதுகில் 100 முறை அடிக்கப்பட்ட போது, கடுமையான வலியால் அலறிய அந்தப் பெண் பாதியிலேயே சுருண்டு விழுந்தார்.</p><p></p><p> </p><p>

உடனடியாக அவருக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, எஞ்சிய கசையடிகள் அடித்து முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

கசையடி தண்டனை நிறைவடைந்ததும் பலத்த காயமடைந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட அவரது ஆண் கூட்டாளிக்கும் 100 கசையடிகள் வழங்கப்பட்டன. </p><p>

இவர்களுடன் சேர்த்து சூதாட்டம் மற்றும் மது அருந்திய குற்றச்சாட்டில் கைதான மேலும் சில நபர்களுக்கும் 20 முதல் 40 கசையடிகள் வரை பகிரங்க தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மாகாணப் போலீசார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
பொதுவெளியில் வழங்கப்படும் இத்தகைய கசையடி தண்டனைகள் மனிதநேயமற்றவை என்றும், சித்திரவதைக்குச் சமமானவை என்றும் சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.&nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-update-for-teacher-service-job-seekers-1789724937"></link>
            <id>https://jvpnews.com/article/key-update-for-teacher-service-job-seekers-1789724937</id>
            <summary type="text">பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8db9223d-cdc6-4040-be15-f18069f3fcb0/26-6aad09d06c53e.webp' /></p><h2>போட்டிப் பரீட்சை</h2><p>
</p><p>
கடந்த மே 24ஆம் திகதி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றிருந்தது. </p><p>ஆப்போட்டிப் பரீட்சைக்கு 1,63,433 பேர் விண்ணப்பித்திருந்தனர். </p><p>இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
</p><p>
இதில், அரச சேவையில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையில் தோற்றிய 15,000 பேரும், திறந்த அடிப்படையில் நடத்தப்பட்ட பரீட்சையில் தோற்றிய 8,000 பேரும் உள்ளடங்குகின்றனர்.</p><p></p><p>

</p><p>தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதுடன், ஆசிரியர் நியமனங்கள் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது.</p><p>

மேலும், கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பெற்ற 6,500 பேரையும் ஆசிரியர் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ளன.
</p><p>
இவ்வாறு இணைக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
</p><p>
தற்போது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் 40,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T09:54:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏற்படவுள்ள மாற்றம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/staff-quarters-dispensary-chavakachcheri-hospital-1789723855"></link>
            <id>https://jvpnews.com/article/staff-quarters-dispensary-chavakachcheri-hospital-1789723855</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தினை நிர்மாணிப்பதற்கான அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்தகத்துடன் கூடிய பணியாளர் குடியிருப்பு வளாகத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ff19652-122e-42ee-9976-89fc1c32c0b8/26-6aad04d1058df.webp' /></p><h2>&nbsp;நாளை&nbsp; அடிக்கல் நாட்டும் நிகழ்வு</h2><p> </p><p>

வடமாகாண மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் மாகாண சபையின் நோக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p></p><p> </p><p>

அதன்படி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய மருந்தகத்துடன் கூடிய குடியிருப்பு வளாகத்திற்காக ஒதுக்கப்பட் ட நிதி 282.52 மில்லியன் ரூபாவாகும். 

கட்டுமானப் பணிகளை 2027 ஒகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> 

வைத்தியசாலையின் லிஃப்ட் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கபட்டுள்ளது. அதற்காக செலவிடப்படும் தொகை 53 மில்லியன் ரூபாவாகும்.</p><p></p><p> 

வடமாகாண சபையின் விதிகளின் கீழ் அந்த ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் அனோஜனின் மரண தண்டனை; கஜேந்திரகுமார் எம்பி அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046"></link>
            <id>https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&amp;nbsp; &amp;nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&nbsp; &nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்குச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் இன்று காலை (செப்டம்பர் 18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efeadfd-7b81-463c-bb01-8d1f653357fb/26-6aacc71037c5f.webp' /></p><h2>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
</p><p>
 அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்துச் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T09:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார். </p><p> 

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையிட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d717c762-a879-45d7-9084-c88d0e3cb457/26-6aacea160e7e6.webp' /></p><h2>தீவிரமாக முயற்சிப்போம்</h2><p>
</p><p>
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்,</p><p> சவுதிக்கு பணிக்குச்சென்ற தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதேபோன்று, '2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் குழந்தையொன்றைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். </p><p>அக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடு மிகப்பலவீனமானதாகவே இருந்தது.</p><p>அந்தச் சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் காணப்படுகின்ற தற்காலத்துக்குப் பொருந்தாத, மனிதநேயமற்ற தண்டனைகளிலிருந்து எமது தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் சவுதி அரேபிய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படாத நிலையிலும், நாம் எமது தொழிலாளர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவந்தோம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
மேலும், நாம் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமாக முயற்சிப்போம் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T08:59:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் பிடிபட்ட 51 வயது பெண் ; வீட்டிற்குள் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/51-year-old-woman-arrested-after-secret-tip-off-1789720829"></link>
            <id>https://jvpnews.com/article/51-year-old-woman-arrested-after-secret-tip-off-1789720829</id>
            <summary type="text">வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட தனித்தனி போதைப்பொருள் தடுப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f43fd8fd-107c-4a39-a12c-44a2621a09b0/26-6aacf9c748ae5.webp' /></p><h2>பெண் ஒருவர் கைது</h2><p> 

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை பகுதியில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 8 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, முல்லேரியா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர். </p><p>இதன்போது அங்கிருந்து மேலும் 1 கிலோகிராம் 42 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதேவேளை, புத்தளம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (17) மதுரகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் 314 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதன்போது சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடமிருந்த கைப்பேசி என்பனவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாகி திலீபனுக்கு வெண்கல சிலையா? விமல் வீரவன்ச கொதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bronze-statue-martyr-thileepan-wimal-weerawansa-1789719790"></link>
            <id>https://jvpnews.com/article/bronze-statue-martyr-thileepan-wimal-weerawansa-1789719790</id>
            <summary type="text">&amp;nbsp; விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த நாயகன் என்று கூறப்படும் தியாக தீபம் திலீபன் வெண்கலச் சிலையை யாழ்ப்பாணம் நல்லூரில் உருவாக்குவதற்கும், அந்தச் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த நாயகன் என்று கூறப்படும் தியாக தீபம் திலீபன் வெண்கலச் சிலையை யாழ்ப்பாணம் நல்லூரில் உருவாக்குவதற்கும், அந்தச் சிலைக்கு மாலைகள் சூட்டுவதற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில், வௌ்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே&nbsp; விமல் வீரவன்ச&nbsp; &nbsp;மேற்கண்டவாறு கண்டனம் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f95043-609b-459e-a5ba-52975e0aa0e6/26-6aacf4f05c635.webp' /></p><p>
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் தற்போது வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.</p><p>

தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாக செய்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தமிழர் பகுதிகாளில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.
</p><p>
அதுமட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் தியாக தீபம் திலீபநின் நினைவேந்தல் அனுடிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T08:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 மாணவர்களுடன் இயங்கும் 1,600 பாடசாலைகள்! அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-600-schools-operating-with-50-students-srilanka-1789718992"></link>
            <id>https://jvpnews.com/article/1-600-schools-operating-with-50-students-srilanka-1789718992</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
</p><p>
கல்வித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b500c37e-564e-406b-9cad-a74978aa135a/26-6aacf1d750414.webp' /></p><p>
</p><p>
 ஒரு தேசிய பாடசாலை உட்பட மொத்தம் 1,665 பாடசாலைகள் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன.

இதில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 பாடசாலைகளில் மொத்தமாக 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p></p><p>
</p><p>
101 முதல் 200 மாணவர்கள் வரை உள்ள 2,149 பாடசாலைகளில் மொத்தமாக 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p>

201 முதல் 500 மாணவர்கள் வரை உள்ள 2,546 பாடசாலைகளில் மொத்தமாக 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
1,000 மாணவர்கள் வரை உள்ள 1,208 பாடசாலைகளில் மொத்தமாக 831,999 மாணவர்களும், 4,071 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
1,001 முதல் 1,500 மாணவர்கள் வரை கொண்ட 372 பாடசாலைகளில் மொத்தமாக 448,994 மாணவர்களும், 23,804 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p></p><p>
</p><p>
1,501 முதல் 2,000 மாணவர்கள் வரை உள்ள 186 பாடசாலைகளில் மொத்தமாக 318,966 மாணவர்களும், 16,041 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p>

2,001 முதல் 3,000 மாணவர்கள் வரை உள்ள 192 பாடசாலைகளில் மொத்தமாக 459,537 மாணவர்களும், 21,744 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
3,001 முதல் 4,000 மாணவர்கள் வரை உள்ள 68 பாடசாலைகளில் மொத்தமாக 230,518 மாணவர்களும், 10,214 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.
</p><p>
4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மொத்தமாக மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
 மேலும் , 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 65 பாடசாலைகளும், 10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட 4,242 பாடசாலைகளும், 26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட 1,744 பாடசாலைகளும், 51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட 721 பாடசாலைகளும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 275 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை? மன்னார் மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/state-lands-sold-using-fake-documents-1789718344"></link>
            <id>https://jvpnews.com/article/state-lands-sold-using-fake-documents-1789718344</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலகப் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் பிரதேச செயலகப் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


இதன்படி, அரச காணி என அறியாமல் போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5538356-a84f-464b-ac1f-56347e5251d3/26-6aacef4a06e86.webp' /></p><h2 style="text-align: justify; ">காணி கொள்வனவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர், குறித்த காணி தொடர்பான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் உண்மையானவையா என்பதை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், காணி கொள்வனவு செய்யும் நபர்கள் உரிய ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் சட்டரீதியான மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், காணி கொள்வனவில் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T08:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மின்னல் தாக்கம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045"></link>
            <id>https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045</id>
            <summary type="text">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1703319-f6ea-4138-af79-2aafbdde6b65/26-6aacea374710c.webp' /></p><h2 style="text-align: justify; ">பலத்த காற்று</h2><p style="text-align: justify;"> 

இன்று (18) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

மேற்குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் ஏற்படும்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதன் காரணமாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T07:39:41+00:00</updated>
        </entry>
    </feed>
