<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T05:54:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய மகசின் சிறைச்சாலை மோதல் ; ஒருவர் பலி; 9 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-magazine-prison-clash-claims-one-life-1786081474"></link>
            <id>https://jvpnews.com/article/new-magazine-prison-clash-claims-one-life-1786081474</id>
            <summary type="text">கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">


சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e0d7ca4-6ba4-48fb-b3be-645e536cc20d/26-6a7570c43a5af.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்&nbsp; தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக தற்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று&nbsp; ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

</p>]]></content>
            <updated>2026-08-07T05:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் பதற்றம் ; கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pallansena-prison-faces-sudden-unrest-1786080582"></link>
            <id>https://jvpnews.com/article/pallansena-prison-faces-sudden-unrest-1786080582</id>
            <summary type="text">நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகள் கூரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருதானகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d451c223-90ac-4a08-955b-9f95844e1b71/26-6a756d4883fc1.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T05:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் பொலிஸாருக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; தப்பியோடிய 25 பேர் கொண்ட குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-targets-police-officers-1786079490"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-targets-police-officers-1786079490</id>
            <summary type="text">மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c08636-1972-4ec8-86cd-a2235dbe4519/26-6a75690400800.webp' /></p><h2 style="text-align: justify;">கசிப்பு உற்பத்தி நிலையம்</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">


தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify;">மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify;">


இதனையடுத்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify;">



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T05:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று பெண்களுடன் கைதான ஆண் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-held-alongside-three-women-1786078546"></link>
            <id>https://jvpnews.com/article/man-held-alongside-three-women-1786078546</id>
            <summary type="text">கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜூலை 18 ஆம் திகதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கடந்த ஜூலை 18 ஆம் திகதியன்று வீடு ஒன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec4ab20-e4b2-4596-8dc6-fe2bae526ab7/26-6a7565546280e.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நேற்று (6) தெஹிவளைப் பகுதியில் இக்குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்களும், ஹட்டன் பத்தன பகுதியில் அந்த குற்றத்திற்கு ஒத்தாசை வழங்கிய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது, திருடப்பட்ட 8 ஜோடி தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்க சங்கலிகள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

கைதானவர்கள் 28, 46, 53 வயதுடைய பெண்களும், 28 வயதுடைய ஹட்டன் பத்தனப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T04:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய மெகசின் சிறையில் மோதல் ; உறவினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601"></link>
            <id>https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601</id>
            <summary type="text">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1f122-2c73-497a-b8ea-4368840d3a3c/26-6a7561a2d9fd6.webp' /></p><h2 style="text-align: justify;">சிறைச்சாலை பாதுகாப்பு</h2><p> </p><p style="text-align: justify;">

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fd74acb-c6be-499d-8090-aaed70f2d1d7/26-6a7563eed7a98.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify;">

இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T04:39:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை ; இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199"></link>
            <id>https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199</id>
            <summary type="text">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e986c191-4c47-409b-b4b1-ca8fbbd09fea/26-6a756010d742f.webp' /></p><h2 style="text-align: justify; ">காயமடைந்தவர்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p style="text-align: justify;">
இந்த நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"> 

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p style="text-align: justify;">

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T04:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளத்தொடர்பு சந்தேகம் ; மனைவியின் தொடர்பை அறிந்த கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409</id>
            <summary type="text">இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற தொழிலதிபர், தனது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதியான முகேஷ் யாதவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தொடர்பை மனைவியின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d62bea-8dea-4361-b870-02135383bf03/26-6a74ef9bf3c3f.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் மனைவியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, ராஜேந்திர பிரசாத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>காவல்துறை தகவல்களின்படி, அவர் மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாக கவிதா சர்மா கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில் கவிதாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ உதவியை நாடி, அதை இயற்கையான மரணம் போன்று காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, கவிதாவின் தொலைபேசி தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன.</p><p>மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், இதையடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9fc2c55-59c2-422e-94ba-9dac31d16d5d/26-6a74ef9b4e213.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் சாரதி முகேஷ் யாதவிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:44:19+00:00</updated>
        </entry>
    </feed>
