<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T09:26:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreigner-found-in-a-tree-at-thihagoda-vihara-1786956204"></link>
            <id>https://jvpnews.com/article/foreigner-found-in-a-tree-at-thihagoda-vihara-1786956204</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  

மாத்தறை, திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. </p><p> 

மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விசாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995e271b-f3e2-4cc6-aaa1-2e3e548a1b6e/26-6a82c9adb4fec.webp' /></p><h2>மரணம் தற்கொலையா அல்லது கொலையா...</h2><p>

சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.</p><p></p><p> 


 ஹம்பாந்தோட்டைக்கு புறப்படுவதற்கு முன்பு, அந்த நபர் வெலிகம, மிடிகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து ​பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-accident-on-gregory-lake-nuwara-eliya-1786957840"></link>
            <id>https://jvpnews.com/article/boat-accident-on-gregory-lake-nuwara-eliya-1786957840</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா - கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது, விபத்தில் சிக்கிய படகில் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (16) இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a14dcbc-8153-4f22-bec5-3e48b5e510ac/26-6a82d011ae01c.webp' /></p><p>

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-17T09:08:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு; கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainar-nagendran-defamatory-remarks-about-cm-vijay-1786957466"></link>
            <id>https://jvpnews.com/article/nainar-nagendran-defamatory-remarks-about-cm-vijay-1786957466</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe871c6-a624-42cd-8f5e-30c144d6b8b4/26-6a82ce9ba120d.webp' /></p><h2>உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்</h2><p> 

நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.</p><p></p><p>

பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>

அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p> அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T09:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைக்கு சென்று குற்றத்தை மறைக்க ஐடியா கொடுத்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-police-officers-accepted-a-bribe-of-5-lakh-1786954745"></link>
            <id>https://jvpnews.com/article/four-police-officers-accepted-a-bribe-of-5-lakh-1786954745</id>
            <summary type="text">மொனராகலை - தனமல்வில நிக்கவாவ தெம்மோதர குளத்திற்கு அருகில் கஞ்சா சாகுபடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - தனமல்வில நிக்கவாவ தெம்மோதர குளத்திற்கு அருகில் கஞ்சா சாகுபடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c97bbba-acc9-4b2e-8915-2568c1c0f9da/26-6a82c3fba2a25.webp' /></p><h2>நான்கு அதிகாரிகள் கைது&nbsp;</h2><p>



கஞ்சா சாகுபடி தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா செடியை மாத்திரம் அழித்துவிட்டு ஏனைய செடிகளை அகற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், மற்றொரு சந்தேகநபரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரிகள் கஞ்சா செடிகளை உலர்த்துமாறு தமக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து, மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


கைது செய்யப்பட்டவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T08:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சீருடை; கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944"></link>
            <id>https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இந்த வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள், சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் அல்லது பர்தா அணிவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்தே வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dafeb7f-1ce6-4efe-bf13-4246bddbcb69/26-6a82c0d9c2de2.webp' /></p><h2>சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் அல்லது பர்தா</h2><p>

வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
முஸ்லிம் ஊழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக் கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T08:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விடுதி; சோதனைக்கு சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-operating-under-guise-of-a-massage-parlour-1786951703"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-operating-under-guise-of-a-massage-parlour-1786951703</id>
            <summary type="text">&amp;nbsp;கடவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியின் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியின் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

கைது செய்யப்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஒரு நபரிடம் இருந்து 5,000 ரூபா கட்டணமாக அறவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50,000 ரூபா வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/043eb63c-5e1b-448d-a07d-ff5c56c64a08/26-6a82b8186809b.webp' /></p><h2>போதை மாத்திரைகளை பயன்படுத்தி&nbsp;விபச்சாரம்</h2><p>
</p><p>
 அத்துடன் பெண்கள் விபச்சார நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் நுவன் அசங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் புத்திக ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை; ரசிகர்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633"></link>
            <id>https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .</p><p>27 வயதான , மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் 7 Hours to Go, The Final Exit, Ghost உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தி மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e271a7c-5456-463e-894c-06211870a040/26-6a8290c2ee797.webp' /></p><h2>ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தெரிவிப்பு</h2><p> திரைப்படங்கள் மட்டுமின்றி, பல்வேறு இசை வீடியோக்களிலும் அனன்யா ராஜ் நடித்துள்ளார். தெலுங்கில் Thaggede Le படத்திலும், Madrasi Gang என்ற மும்மொழி படத்திலும் நடித்திருந்தார்.</p><p></p><p>
 

இந்நிலையில், அனன்யா ராஜ் காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று (16) அறிவித்துள்ளனர். 

அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தற்போது அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், அவரது மரணச் செய்தி உடனடியாக வெளியிடப்படவில்லை. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி குடும்பத்தினர் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் மரணத்தை அறிவித்துள்ளனர்.</p><p>

அனன்யா ராஜ்-இன் மறைவு செய்தி அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறுவிசாரணைக்கு வரும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-kumarapuram-massacre-undergo-retrial-1786947861"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-kumarapuram-massacre-undergo-retrial-1786947861</id>
            <summary type="text">&amp;nbsp;1996ஆம் &amp;nbsp;ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;1996ஆம் &nbsp;ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் அறுவருக்கு எதிராகவும் மறுவிசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>



24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41f38e1-92c6-491e-954e-1c450312ee1f/26-6a82a91791d53.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்கள் கொலை</span></p><p>


அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p></p><p> மேலும், தனது உத்தரவை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.



மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
</p><p>


குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பின்போது பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுத் தரப்புக்கு மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை தவறு என்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.</p><p></p><p>
</p><p>


09 குழந்தைகள், கர்ப்பிணித் தாய் ஒருவர் அடங்கலாக 09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆறு பேர் மீது அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் 101 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 2016ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
</p><p>


அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, விசாரணையின்போது அவற்றைச் சமர்ப்பிக்க மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை ஒரு தொழில்நுட்ப ரீதியான தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.</p><p></p><p>



இதற்கிடையில், அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் மற்றும் திகதி இல்லாததை ஒரு முக்கிய முடிவெடுக்கும் காரணியாக மேல்நீதிமன்ற நீதிபதி கருதியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதியரசர் பிரேமச்சந்திர தனது தீர்ப்பில் தெரிவித்தார்.</p><p>



"சம்பந்தப்பட்ட சாட்சியம் ஏற்றுக்கொள்ளத் தக்கதா மற்றும் அது மதிப்பீடு செய்யப்படக்கூடியதா என்பதில்தான் நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.



குற்றஞ்சாட்டப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த ஆஜரானார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விடுவதால் அதிகரிக்கும் விபத்துகள்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rise-in-accidents-due-to-kite-flying-1786947330"></link>
            <id>https://jvpnews.com/article/rise-in-accidents-due-to-kite-flying-1786947330</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பட்டம் விடும் நடவடிக்கை அதிகரித்துள்ள போதிலும், கவனக்குறைவான முறையில் பட்டம் விடுவதால் கடுமையான காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்படக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும் சிறப்பு வைத்தியருமான பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec00ef12-856d-4000-a513-c419e3f67e6d/26-6a82a7041b543.webp' /></p><h2>&nbsp;உயிருக்கு ஆபத்தான விபத்துகள்&nbsp;</h2><p>



</p><p>பட்டம் விடும்போது ஒருவருடன் ஒருவர் மோதுதல், கீழே விழுதல் மற்றும் கூரைகள் உள்ளிட்ட உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிப்பதால் கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


மேலும், பட்டத்தின் நூல் உயர் மின்னழுத்த மின் கம்பிகளுடன் தொடர்பு கொள்ளும்போது மின்சாரம் பாய்ந்து கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதனால் கைகள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.</p><p>



எனவே, குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இணையாக அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகள் பட்டம் விடும்போது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பு ; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-by-northern-province-development-officers-1786946702"></link>
            <id>https://jvpnews.com/article/protest-by-northern-province-development-officers-1786946702</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்றையதினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&amp;nbsp; யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்றையதினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp; யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd0448f-2147-4c34-b6ce-e32c33a2c5d3/26-6a82a4901f9a2.webp' /></p><p>

வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.</p><p></p><p>
</p><p>
மேலும், இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-17T06:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்; குவிந்த பக்தர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை 25 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.</p><p>

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.&nbsp;
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c91ab30-6cb8-43e6-aec0-a72258e8d52f/26-6a82a113ee7fd.webp' /></p><p>இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb52ad0d-e82c-40f4-b6e7-968aec92ba8e/26-6a829f0a34342.webp' /></p><p> 

இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர். உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65bee18-ddd4-4923-873e-08e211662e38/26-6a829f091989a.webp' /></p><p> 

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் மட்டுமல்லாது, இக்கால பகுதியில் , வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சன்னதியான் ஆலய மகோற்சப பெருவிழாவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HJtV8sHdAL0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்தில் இதுவே கடைசி ஆண்டு; ரொனால்டோ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/this-is-my-last-year-in-football-cristiano-ronaldo-1786943495"></link>
            <id>https://jvpnews.com/article/this-is-my-last-year-in-football-cristiano-ronaldo-1786943495</id>
            <summary type="text">போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>



தனது நீண்டகால துணைவியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் வழங்கிய பேட்டியிலேயே ரொனால்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13628e92-89de-49df-a67f-70b968212072/26-6a82980896896.webp' /></p><h2>உலகம் முழுவதும் பயணம்</h2><p>



கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மகத்தான மரபொன்றை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற பின்னர், ஓய்வு தொடர்பான முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஓய்வுக்குப் பின்னர் தனது அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும், தனக்கு மிகவும் பிடித்த ‘பேடல்’ விளையாட்டில் ஈடுபடவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் - இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-flight-service-between-vietnam-sri-lanka-1786942151"></link>
            <id>https://jvpnews.com/article/direct-flight-service-between-vietnam-sri-lanka-1786942151</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. </p><p>

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f4ab253-9698-45df-bc74-859165304424/26-6a8292c9a12b9.webp' /></p><h2>&nbsp;ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி&nbsp; &nbsp;கிழமைகளில்&nbsp;விமானப் பயணங்கள்</h2><p> </p><p>

இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 

புதிய விமான சேவையை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p> இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டார்.

இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be42ca33-29be-4be9-a6c9-bf03e54ca4ee/26-6a8292c8e79ce.webp' /></p><p> </p><p>அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். </p><p>

இந்த நேரடி விமான சேவை வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T04:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067"></link>
            <id>https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a74b07-81d8-440f-b42a-b1d00d2698d7/26-6a828e8ceebc3.webp' /></p><p> </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T04:28:39+00:00</updated>
        </entry>
    </feed>
