<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:29:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722"></link>
            <id>https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d07b62-bd78-4320-8ae3-15a3614a8401/26-6a8d8d9c4231c.webp' /></p><p>
அரசாங்க சம்பள விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
</p><p></p><p>
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணிநேரம் காதலி கொடுத்த 3,400 முத்தம்; காதலனுக்கு வினையானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509"></link>
            <id>https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூபா 5,500 அபராதம் விதித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. </p><p> 

வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abc407e-4f04-4298-ae31-5efbc3a3003c/26-6a8d94972f39c.webp' /></p><h2>&nbsp;வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரல்</h2><p> காதலிக்கு கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். 

உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். </p><p>முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. 

உடனே வீதியில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பொலிஸாரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a41edd7-6378-45cd-90d3-40c46281a0f2/26-6a8d9497dfab9.webp' /></p><p> 

மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூபா 5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p></p><p>. 

தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த பொலிஸார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொண்டையில் பலூன் சிக்கி சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-balloon-gets-stuck-in-throat-1787661393"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-balloon-gets-stuck-in-throat-1787661393</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் பகுதியில், பலூனை விழுங்கியதால் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பெற்றோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் பகுதியில், பலூனை விழுங்கியதால் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p>
பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, குறித்த சிறுவன் மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1d168f-8d92-4184-a575-897c46c2e108/26-6a8d8c52d90bc.webp' /></p><h2>சிறுவர்கள் விளையாடும்போது&nbsp;கூடுதல் கண்காணிப்பு&nbsp; அவசியம்</h2><p>

இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.</p><p></p><p>

சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தொண்டையில் பலூன் சிக்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

பலூன் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே சிறுவன் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

இன்னிலையில் சிறுவர்கள் விளையாடும்போது இதுபோன்ற பொருட்களை வழங்கும்போது பெற்றோர் கூடுதல் கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்</p>]]></content>
            <updated>2026-08-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியியல் வழக்குகளில் புதிய சட்டத் திருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-case-testimony-via-online-link-remote-1787662464"></link>
            <id>https://jvpnews.com/article/civil-case-testimony-via-online-link-remote-1787662464</id>
            <summary type="text">&amp;nbsp; குடியியல் வழக்குகளில், இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் செவிப்புல–கட்புல இணைப்பு மூலம் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்குவதற்கு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குடியியல் வழக்குகளில், இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் செவிப்புல–கட்புல இணைப்பு மூலம் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் குடியியல் வழக்குக் கோவையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>


இதற்கான குடியியல் வழக்குக் கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதனை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5934443-867d-4b60-92be-d663ac6ce7e0/26-6a8d9081e6d7f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765"></link>
            <id>https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>


குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527fcd05-9958-49f3-a26d-57530dd13326/26-6a8d77f0313e7.webp' /></p><h2>அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறை&nbsp;</h2><p> 

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T13:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் வழக்கு ; முதலமைச்சர் விஜய்க்கு அபராதம் ; நீதிமன்றம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648"></link>
            <id>https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648</id>
            <summary type="text">&amp;nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956435be-4826-4b34-b940-175b90124ef8/26-6a8d85823c4ac.webp' /></p><h2>&nbsp;உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு</h2><p> 

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.
</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது. கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.</p><p></p><p>
</p><p>
இதைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், 'எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>

அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-25T13:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை; புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770"></link>
            <id>https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் அதீத ஒளி மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளால் 500க்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ba57183-c247-4eb3-974e-b9767deae7d0/26-6a8d8213e9851.webp' /></p><h2>500க்கும் அதிகமானோர் கண் பாதிப்பு</h2><p>
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக தேவையான விதிமுறைகளை உருவாக்குவதுடன், மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கும்போது மின்விளக்குகள், ஒலியமைப்புகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423"></link>
            <id>https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a684f2cd-3182-40f5-a454-e11bf305d86b/26-6a8d88885c028.webp' /></p><p>இவ்வருடத்தில் நாடாளுமன்றத்தினால் சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். </p><p>

தேர்தலை நடத்துவதற்கான சட்டமொன்று இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கமைய விரைவாகச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.</p><p> 

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். 

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்​ என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் ; இலங்கையில் QR எரிபொருள் முறைமை தொடருமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056"></link>
            <id>https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
மத்திய கிழக்கு நெருக்கடியும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் உலகளாவிய எரிபொருள் விலைகளிலும் விநியோகத்திலும் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3d7786-c106-4424-9f69-041d824ab6b0/26-6a8d83314867a.webp' /></p><p>பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கே இந்த QR முறைமை தொடர்ந்து பராமரிக்கப்படும்.
</p><p>
QR முறைமையின் அமுலாக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் நுகர்வு ஓரளவு மட்டுமே குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய டீசல் நுகர்வு சுமார் 10 வீதமும், பெட்ரோல் நுகர்வு சுமார் 9 வீதமுமே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
அத்தியாவசியத் துறைகளுக்குத் தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் சூழல் சீரடையும் வரை இந்த QR முறைமை தற்காலிகமாகத் தொடர்ந்து செயற்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் - அரச பேருந்துகள் போட்டி; A/L பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் திண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897"></link>
            <id>https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce24c3ba-a8bc-43a5-bdda-08f4447c8c32/26-6a8d72f26c411.webp' /></p><h2>மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் திண்டாட்டம்&nbsp;</h2><p>

இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
</p><p>
 இன்றைய தினம் (25) குறித்த பேருந்தானது வளமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதரா உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப் பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>

அதேவேளை நேற்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T11:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321"></link>
            <id>https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321</id>
            <summary type="text">இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலக் கோரிக்கையான தங்களது உறவுகளின் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd22dc59-83f9-4b77-9a03-81f0e395c602/26-6a8d7c6a76e9b.webp' /></p><p>குறிப்பாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களும் தங்களுக்கு தேவையில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.</p><h3>

“எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?”
</h3><p>
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறி, அவர்களின் தற்போதைய நிலை குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
</p><p>
தமது உறவுகள் தொடர்பில் உண்மை மற்றும் நீதியே தங்களுக்கு தேவை எனவும், இழப்பீடு அல்லது மரணச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>
இதன்போது, தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி சிலர் கதறி அழுததால் போராட்டம் நடைபெற்ற பகுதியில் உணர்வுபூர்வமான சூழல் ஏற்பட்டதுடன், சிறிது நேரம் பதற்றமான நிலையும் காணப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சர்வதேச ரீதியிலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>
இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த மாநாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அவர்களின் உறவுகளின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘அஸ்வெசும’ நிதி மோசடி ; இருவரின் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-financial-fraud-remand-of-two-extended-1787656533"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-financial-fraud-remand-of-two-extended-1787656533</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த இருவரையும் இன்று (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94587f4d-353b-4e26-a8f5-73c81451978f/26-6a8d7957012cd.webp' /></p><p> எனினும், ஹட்டன் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
</p><p>


இதனையடுத்து, ஹட்டன் மாவட்ட நீதிபதி இருவரையும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், முறைகேடாக அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததாக நோர்வூட் பிரதேச செயலாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>



ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனை மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுன்னவின் மேற்பார்வையில், ஹட்டன் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் ; அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715</id>
            <summary type="text">அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ed3baa-eff8-403f-85a6-eca3c6cef6a1/26-6a8d6a6c9af8f.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மொடல்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அப்பிளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், புதிய ஐபோன் மொடல்களின் விலை உயர்வு தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171</id>
            <summary type="text">&amp;nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. 

இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefc8735-7517-48c9-bfbe-158224aaf566/26-6a8d607d1a0ae.webp' /></p><h2>&nbsp;90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு</h2><p> </p><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவற் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் லலித் இற்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435"></link>
            <id>https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர என்ற &quot;பஸ் லலித்&quot;, 72 மணி நேரம் தடுப்புக் காவலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட<a href="https://jvpnews.com/article/police-release-background-information-onbus-lalith-1787640968" target="_blank">, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர </a>என்ற "பஸ் லலித்", 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பஸ் லலித்க்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1448b1-2d61-4015-9a4a-d06d63b99cd3/26-6a8d656c7704c.webp' /></p><h2>மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்</h2><p>&nbsp; அதேவேளை துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஹங்வெல்ல, வட்டரெக்க, மீகொட மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
இதனை முன்னிட்டு, குறித்த பகுதிகளில் பல்வேறு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த அரசாங்கத்துக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

அத்துடன், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T09:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகருக்கு சர்வதேச கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252"></link>
            <id>https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுக நகரில் ஏற்கனவே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதன் கீழ் இரண்டு பாரிய குடியிருப்புத் திட்டங்கள், நவீன உணவகங்கள் மற்றும் மாநாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5661a1b-93e6-45ea-ab9a-09a226351a13/26-6a8d64b5dedc0.webp' /></p><p>அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் சில முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வரிச் சலுகைகள் மாத்திரம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர் நம்பிக்கை, சிறந்த தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் கெஹெல்பத்தர பத்மே நீதிமன்றில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420"></link>
            <id>https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420</id>
            <summary type="text">தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d325e253-ebe8-4d5a-a358-d5b764cc5184/26-6a8d61755eab7.webp' /></p><p>சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:33:54+00:00</updated>
        </entry>
    </feed>
