<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-26T07:24:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி புகையிரதக் கடவையில் விபத்தில் யுவதி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-accident-kilinochchi-railway-crossing-1787728925"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-accident-kilinochchi-railway-crossing-1787728925</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4892db0c-54ef-42f2-8810-b4de45cb093c/26-6a8e9449bc54f.webp' /></p><p>

இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த புகையிரதக் கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
புகையிரதக் கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-26T07:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309"></link>
            <id>https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b39bea3-5b5a-4a14-b53f-72119e5c5430/26-6a8e8217ecf35.webp' /></p><p> </p><h2>&nbsp;திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு</h2><p>

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4f95e5-14bf-4492-b1c8-c30003582c3c/26-6a8e82173f69a.webp' /></p><p> 

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். 

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.</p><p> இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். </p><p>

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். 

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T07:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-quality-fertilizer-import-scam-case-adjourned-1787726868"></link>
            <id>https://jvpnews.com/article/low-quality-fertilizer-import-scam-case-adjourned-1787726868</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6c2d3f-028c-4f31-8bf6-d4d9c176e1b5/26-6a8e8c159a5fc.webp' /></p><p>இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>
கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி , குரும்பசிட்டி காணிகள் விடுவிப்பு; வங்குரோத்து அரசியல் செய்யும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்; அமைச்சர் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து , தமது போராட்டங்கள் ஊடாகவே காணி விடுவிக்கப்பட்டது போன்றதான வங்குரோத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் (25) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1fc3c3b-5ffa-4875-beea-16b12ade7a05/26-6a8e732620708.webp' /></p><h2>வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி</h2><p>
</p><p>
 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
இதன்போது பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பிட்டின்படி இழப்பீடு வழங்கப்படுவதுடன், அவர்கள் அக்காணிகளைப் பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 எதிர்வரும் ஆண்டில் தேவைப்படும் 13,000 வீடுகளையும் முழுமையாகக் கட்டிமுடித்து "மீள்குடியேற்ற வீடுகள்" எனும் நாமத்தையே நாட்டின் வரலாற்றில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பைப் பற்றிப் பேசினால் தென்னிலங்கை கொதித்துவிடும் என்று கூறி அமைதி காத்த தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் போன்ற தலைவர்கள், தற்போது காணி விடுவிப்பு அரசாங்கத்தால் உறுதியாகியுள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகமாடுகின்றனர்.</p><p> 

மக்கள் இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:47:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yellow-warning-issued-for-strong-winds-sea-areas-1787726898"></link>
            <id>https://jvpnews.com/article/yellow-warning-issued-for-strong-winds-sea-areas-1787726898</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd80eb41-7263-4ee7-a516-51567e5dd33b/26-6a8e8c336ab3b.webp' /></p><p>
</p><p>


மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதனால் கடற்படை மற்றும் மீனவத் தரப்பினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அடுத்த பேரிடர் சவால் ; எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912</id>
            <summary type="text">எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல் உலகளாவிய பல்வேறு நெருக்கடிகள் வரை இலங்கை ஏற்கனவே ஐந்து பெரிய பேரிடர்களைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் ஆறாவது சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e1a3fc-8b0c-45f2-bc7f-cf52d4397c35/26-6a8e885962618.webp' /></p><p>கடுமையான வறட்சியைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் இந்த இரண்டு தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நிவாரண நடவடிக்கைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முறைகளைக் கற்றுக்கொண்டு புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு, புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எளிதில் இலக்காகக்கூடும் என்றும், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தை தோண்டியபோது சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ; மட்டக்களப்பில் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/powerful-mortar-shell-in-kattankudy-home-1787726003"></link>
            <id>https://jvpnews.com/article/powerful-mortar-shell-in-kattankudy-home-1787726003</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் ​நேற்று (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் ​நேற்று (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முற்றத்தில் வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, சக்தி வாய்ந்த 81 ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44993f9e-d301-40dd-8cb3-625416ecda54/26-6a8e88b502d4e.webp' /></p><p> </p><p>

வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிஸாருக்கு குறித்த குண்டு தொடர்பாக அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>

 யுத்த காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-26T06:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ஊர் செல்ல கொழும்பு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892</id>
            <summary type="text">நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

விடுமுறையைக் கழிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கும் மக்கள் அதிகரித்துள்ளதால், மாகும்புர போக்குவரத்து நிலையத்தில் இன்று (26) கடும் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b15fd49-0876-4cba-a133-1211fc396577/26-6a8e845e3f65d.webp' /></p><p>பேருந்துகளைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையத்தில் நீண்ட வரிசைகளும் பரபரப்பான சூழலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் அதிகளவில் பயணிக்கக்கூடும் என்பதால், போக்குவரத்து நிலையங்களுக்கு செல்லும் மக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721"></link>
            <id>https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். அதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e061b441-a68f-4612-86a1-dc264fb7c65c/26-6a8e83b2c9515.webp' /></p><p>
</p><p>


குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹல்பத்தர பத்மே கைபேசிகள்; சிக்கபோகும் 9 அரசியல்வாதிகள் ஏழு நடிகைகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actresses9-politicians-contact-kehelbaddara-padme-1787723315"></link>
            <id>https://jvpnews.com/article/actresses9-politicians-contact-kehelbaddara-padme-1787723315</id>
            <summary type="text">&amp;nbsp; பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் &#039;கெஹல்பத்தர பத்மே&#039; என்பவரிடமிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் 'கெஹல்பத்தர பத்மே' என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளிலிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏழு நடிகைகள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் அவற்றில் இருந்து பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba883d3f-324a-494f-8ec2-29328000161e/26-6a8e7e34edfa8.webp' /></p><h2>சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசி</h2><p>
முன்னதாக, சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசிகளிலிருந்தும் நீக்கப்பட்ட தரவுகள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.</p><p>
இதில் 8,841 தொலைபேசி அழைப்பு விபரங்கள், 3,26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புக்கள் மற்றும் 5,039 காணொளிகள் என்பன அவற்றில் அடங்கியுள்ளன.</p><p></p><p>
</p><p>
சந்தேக நபரின் தொலைபேசிகளில் ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், பெயரிடப்பட்ட நபர்கள் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதன் மூலம் அர்த்தப்படுத்த முடியாது என புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கண்டு பிடிக்கப்பட்டு, அது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 19 பேரின் கடவுச்சீட்டுப் புகைப்படங்கள் மற்றும் 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
கடந்த 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறிய கெஹல்பத்தர பத்மே, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
எனினும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்

இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை அவரை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T05:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் படுகையில் பெட்ரோலியம் ; இலங்கைக்கு அடிக்கபோகும் அதிஸ்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315"></link>
            <id>https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னார் படுகையில் இவ்வருடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
மன்னார் படுகையில் இவ்வருடத்திற்கான பெட்ரோலிய ஆய்வு உரிமங்களை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,&nbsp; (25) கொழும்பிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abae7e1d-de36-4593-86fb-7ae0e8e385c2/26-6a8e766597c29.webp' /></p><h2>அதிகார பூர்வ&nbsp; அறிவிப்பு</h2><p> </p><p>

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சரும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><p>
</p><p>
இதன்படி சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு பிரதான கடல் தொகுதிகள் (Blocks) ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
</p><p>
முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவக் கசிவுகள் கண்டறியப்பட்டதன் மூலம், மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா, ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பரப்பளவில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளைச் சேகரிக்க வாய்ப்புப் பெறும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p>

மேலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மன்னார் படுகையிலிருந்து சுமார் 2 பில்லியன் பேரல் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அகழ்ந்தெடுக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-26T05:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-for-drivers-traveling-on-expressways-1787718957"></link>
            <id>https://jvpnews.com/article/notice-for-drivers-traveling-on-expressways-1787718957</id>
            <summary type="text">தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் பகுதி, அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த வெளியேறும் பகுதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மிரிகம நுழைவுப் பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் பகுதி ஆகிய இடங்களில் வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61cf255d-c35e-4f07-afe3-084e4b42d1a0/26-6a8e6d2ea7ecb.webp' /></p><p>இதனால் குறித்த பகுதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும், போக்குவரத்து நெரிசலை கருத்திற்கொண்டு பயண நேரத்தை திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்கள் மற்றும் நிலைமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T04:36:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் மர்ம மரணம் ; விடுதி அறையில் அழுகிய உடல் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/old-man-decomposed-body-recovered-from-hostel-room-1787717684"></link>
            <id>https://jvpnews.com/article/old-man-decomposed-body-recovered-from-hostel-room-1787717684</id>
            <summary type="text">காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51db845-a561-4f1e-9228-150bb7814638/26-6a8e68362f12d.webp' /></p><p>இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
</p><p>
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T04:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்பும் அமைதியும் போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/today-is-the-birthday-of-the-prophet-muhammad-1787716738"></link>
            <id>https://jvpnews.com/article/today-is-the-birthday-of-the-prophet-muhammad-1787716738</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26). 

இஸ்லாமிய நாட்காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்றாகும் (26). 

இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்த புனித நாள் தீர்மானிக்கப்படுகிறது.</p><p></p><p> 

கி.பி 570-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. </p><p>

தொடக்க காலத்தில் இந்நாள் அவரது மறைவை நினைவுகூரும் அமைதியான நாளாகவே கருதப்பட்டது. 

பின்னர் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் பாத்திமித் ஆட்சியாளர்களின் காலத்தில், நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் இறை வழிபாடுகளை முன்னிறுத்தி பொது நிகழ்வாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ada52de-4b8e-4e9c-a906-0ac41d53bba4/26-6a8e64838b986.webp' /></p><p> 

காலப்போக்கில் இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் தங்களது ஆன்மீக நெறிமுறைகளைப் புதுப்பிக்கும் சிறப்புமிக்க நாளாக மாறியது. </p><p>

மிலாது நபி என்பது வெறும் பண்டிகை மட்டுமே அல்லாமல், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்குப் போதித்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை மீண்டும் நினைவுகூரும் புனித நாளாகும். </p><p>

இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். 

அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். </p><p>அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்திருந்தார். </p><p>

பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற, சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபிகள் நாயகம் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். </p><p>

இந்நிலையிலேயே அவரது பிறந்த நாளை நினைவுகூறும் இந்த புனித நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல் மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T03:59:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் உழவு இயந்திரம் மோதி 7 வயது சிறுமி பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-tragically-dies-after-being-hit-by-a-plow-1787715852"></link>
            <id>https://jvpnews.com/article/girl-tragically-dies-after-being-hit-by-a-plow-1787715852</id>
            <summary type="text">மன்னார் விடத்தல்தீவு பகுதியில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் விடத்தல்தீவு பகுதியில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த விபத்து நேற்று (25) மாலை, அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவில் அமைந்துள்ள கிளை வீதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448963da-1dff-4427-bd45-a51eafc2cac2/26-6a8e610de070a.webp' /></p><p>

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
உயிரிழந்த சிறுமி விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்திய 32 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T03:44:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522"></link>
            <id>https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522</id>
            <summary type="text">காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> 

இதற்கமைய, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219e477d-a430-4862-a97f-245977d0a8d0/26-6a8e5bdc6408d.webp' /></p><p>தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி நபர் ஒருவர் குறித்த பொலிஸ் நிலையத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. </p><p>

குறித்த காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் முதியவர், நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டமையினால் அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அந்த நேரத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேகநபர் ஓட முயன்றதாகவும், ஓட முடியாமல் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

எவ்வாறாயினும், அந்த நபரை அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p> 

இதன்போது, குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T03:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913"></link>
            <id>https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913</id>
            <summary type="text">புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்டனின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் (Bryan Seaver) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத் துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி (Grammy) விருதுகளை வென்றுள்ளதுடன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06507f1c-f734-4406-996b-fd5159d6faf9/26-6a8e55936b6da.webp' /></p><p>அவர் "Jolene", "I Will Always Love You" மற்றும் "9 to 5" போன்ற உலகப் புகழ்பெற்ற பல பாடல்களை உருவாக்கிய பாடலாசிரியரும் ஆவார். </p><p>

டோலி பார்ட்டன் தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டதுடன், பாடல் எழுதுவதை தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வழியாகவும், தனக்கான ஒரு "சிகிச்சையாகவும்" கருதியதாகப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். </p><p>

இசைக்கு மேலாக நடிப்பு, வணிகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் அவர் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார். </p><p>

அவர் தொடங்கிய Imagination Library என்ற திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை விநியோகித்தது உட்பட பல சமூக நலப்பணிகளில் அவர் பங்காற்றியுள்ளார்.</p><p> 

டோலி பார்ட்டனின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், அவர் குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். </p><p>

உலகளவில் "கன்ட்ரி இசையின் ராணி" என்று அழைக்கப்படும் டோலி பார்ட்டனின் மறைவு இசைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T02:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதிக்குள் வீசிய துர்நாற்றம் ; அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் ; மர்ம மரணத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936"></link>
            <id>https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936</id>
            <summary type="text">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f94e9eb-0967-42d0-b612-3922256f150b/26-6a8e3a585735f.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிரமாகும் விசாரணை</h2><p style="text-align: justify; ">
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:25:48+00:00</updated>
        </entry>
    </feed>
