<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T16:41:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் மருத்துவர் என நம்பி பெரும் தொகையை இழந்த பெண்; தமிழர் பகுதியில் சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504"></link>
            <id>https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான &#039;வெளிநாட்டு வைத்தியர்&#039; ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6aabb1-9371-417d-b398-b6c0e3db7a73/26-6a620ff16a9f7.webp' /></p><h2>சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி அப்பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கி வரும் சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். </p><p>

லண்டனைச் சேர்ந்த வைத்தியர் 'டான்' பல இலட்சம் ரூபாய் பெறுமதியான விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு (Clearance) 87,000 ரூபாய் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிவழியே செலுத்துமாறும் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதனை உண்மையென நம்பிய அப்பெண், 17ஆம் திகதி உடனடியாக 87,000 ரூபாயை அனுப்பியுள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, பொதியை விடுவிக்க மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படவே, அதனையும் வைப்புச் செய்துள்ளார். 

பின்னரும் பணம் கோரப்பட்டதால், அப்பெண்ணின் தாயார் மேலும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக "இன்னும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே பார்சல் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், "இனிமேல் பணம் தர முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த மோசடி கும்பலைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
</p><p>
 இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இந் நிலையில் முகநூல் வாயிலாக இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் பலர் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பறப்கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், அறிமுகமில்லாத முகநூல் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T16:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/education-ministry-issues-notice-for-students-1784823607"></link>
            <id>https://jvpnews.com/article/education-ministry-issues-notice-for-students-1784823607</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை (24) நிறைவடையவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

பாடசாலை மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5451df93-b5a9-4a53-a9e8-5a57ab68a442/26-6a623f38b0ff0.webp' /></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஜூலை 31 ஆம் திகதி நிறைவடைவதுடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T16:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-scholarship-exam-applicants-1784822293"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-scholarship-exam-applicants-1784822293</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e9023d-8439-4399-9762-102c6ed3b768/26-6a623a17e7b11.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய,<a href="www.doenets.lk" target="_blank"> www.doenets.lk </a>என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்குள் பிரவேசித்து “எங்கள் சேவைகள்” (Our Services) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” ஊடாகவோ அல்லது <a href="onlineexams.gov.lk" target="_blank">onlineexams.gov.lk</a> என்ற இணையவழிப் பரீட்சை சேவை முறைமை ஊடாகவோ சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T15:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-incident-reported-in-dematagoda-1784821258"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-incident-reported-in-dematagoda-1784821258</id>
            <summary type="text">தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். </p><p>

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861b1f1e-3286-4842-8d68-b6bde2bcab42/26-6a62360c25875.webp' /></p><p> 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இச்சம்பவம் குறித்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decline-opening-letters-of-credit-vehicle-imports-1784812715"></link>
            <id>https://jvpnews.com/article/decline-opening-letters-of-credit-vehicle-imports-1784812715</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1f7ba0-98da-4255-8b91-03d07df8989a/26-6a6214acacb07.webp' /></p><h2>ஆறு மாதங்களில் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>
</p><p>
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
</p><p>
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>

கூடுதல் தீர்வை வரி அமுலுக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-07-23T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டாள் ; நாடாளுமன்றில் அர்ச்சுனாவின் வாயை அடைத்த சபாநாயகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fool-speaker-silences-archuna-mp-in-parliament-1784810282"></link>
            <id>https://jvpnews.com/article/fool-speaker-silences-archuna-mp-in-parliament-1784810282</id>
            <summary type="text">&amp;nbsp; முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம், நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அருச்சுனா எம்பியை சபாநாயகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம், நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அருச்சுனா எம்பியை சபாநாயகர் எச்சரித்தார்.
</p><p>
 இன்றைய தினம் , நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d754c1-f1fa-4e66-b509-a44b163915e4/26-6a620b2c091f3.webp' /></p><h2>&nbsp;சபையில் கடும் வாக்குவாதம்</h2><p>



 நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, வினாவை கேட்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
</p><p>

 அதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம், நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்திருந்தார்.</p><p></p><p>
</p><p>


இதன்போது சபாநாயகரின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



நிலையியல் கட்டளைகளின்படி எந்த ஒரு உறுப்பினருக்கும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் குற்றம் சாட்ட முடியாது. </p><p>முட்டாள் தனமாக உரையாற்றவேண்டாம் என நீங்கள் கூறிய விடயம் பொருத்தமற்றது. 

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நீங்கள் நிலையியல் கட்டளைக்கு ஏற்ப செயற்படுங்கள். கேள்விகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.</p><p></p><p>
</p><p>


இதன்போதுகருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க,



சபாநாயகரே இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்படுகின்றனர். </p><p>இதுவரை காலமும் நாடாளுமன்றில் அர்ச்சுனவைபோல எவரும் நேரத்தை வீணடித்து செயற்படவில்லை. உளநோயாளர்கள் போலவே இவர்கள் நடந்துகொள்கின்றனர். </p><p>



ஒலிவாங்கியும் காணொளிகளிலும் இவர்களின் செயற்பாட்டை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாட்சியாளர்கள் என குறிப்பிட்டார்.



இவரின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏளனமாக மற்றும் செயற்பாடு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவரின் அருகில் அமரமுடியாது என கடிதம் சமர்ப்பித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
யாழில் இவரால் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட நடத்தமுடியவில்லை. அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் சிகிச்சை பெற்றால் சரிவரும் என கருதுகின்றோம்.</p><p> 



இங்கு பார்க்கும்போது அவர் ஒரு சபாநாயகரை எப்படி அழைக்கின்றார்? கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக்கொண்டாலும் தனிப்பட்ட ரீதியில் எவரும் சபாநாயகரை தாக்கி பேசவில்லை என தெரிவித்தார். 


காரசாரமான இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியது.</p>]]></content>
            <updated>2026-07-23T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்கம விதுரவின் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rathgama-vidura-assets-worth-rs-150-million-frozen-1784812219"></link>
            <id>https://jvpnews.com/article/rathgama-vidura-assets-worth-rs-150-million-frozen-1784812219</id>
            <summary type="text">ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரே இதனைக் செயற்படுத்தியுள்ளனர்.</p><p> 

குறித்த சொத்துக்கள் ரத்கம விதுரவின் தாயாரின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74741ef0-f70f-415f-940b-757a3e80777b/26-6a6212bc8fbf2.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, ரத்ம - தேவனிஹொட பகுதியில் 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடம், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலம் மற்றும் அரைகுறையாக முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம்,</p><p></p><p> அதே பகுதியில் உள்ள 12.33 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள மேலும் 200 லட்சம் ரூபாய் பெறுமதியான நிலம் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்குகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-23T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762"></link>
            <id>https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad, 69) பாரிஸ் நகரிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

 பிரெஞ்சு அதிகாரிகளின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, டேனியல் சியாட் பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இளம் பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைத்த இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c472e823-1f85-4450-b816-6bb43e4dc365/26-6a61fd6c55366.webp' /></p><h2>&nbsp;சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை</h2><p> சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் சியாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் புகார்களை அளித்திருந்த நிலையில், பிரெஞ்சு காவல் துறையினர் அவர் மீது தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>

பாரிஸின் கொலம்பஸ் (Colombes) பகுதியில் உள்ள அவரது வீட்டில் சியாட் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய நந்தேர் (Nanterre) நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வுக்கு (Autopsy) உத்தரவிட்டுள்ளது.</p><p> இருப்பினும், சியாட் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்ஸ்டீன் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த மற்றொரு முன்னணி பிரெஞ்சு மாடலிங் முகவர் ஜான்-லூக் புரூனெல் (Jean-Luc Brunel) 2022-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். </p><p>தற்போது அவருக்கு அடுத்து எப்ஸ்டீனின் முக்கிய கூட்டாளியான டேனியல் சியாட்டும் விசாரணை வளையத்திற்குள் வரும் முன்பே உயிரிழந்துள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி <a href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126" target="_blank">கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு</a>, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51454d9c-969d-4821-904b-d103a7bf1224/26-6a61fa13eeff8.webp' /></p><p>
</p><p>
இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content>
            <updated>2026-07-23T13:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மனதை உறைய வைக்கும் மற்றுமொரு சிறுவரின் என்புக்கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306"></link>
            <id>https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி மனித புதைகுழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a03d91-f4ef-40eb-a309-e0cf813c15d2/26-6a6216fc3fbaf.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இந் நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.</p><p>
 
வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10336c1c-0aeb-4b9f-8a58-8624ee6376ad/26-6a61da1f37b29.webp' /></p><h2>2035 இல் இலங்கையின் முழு&nbsp; நகரிலும்&nbsp; மெட்ரோ பேருந்துகள்</h2><p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.</p><p></p><p>&nbsp; ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும்.</p><p> 

இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-23T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-transfer-of-a-mannar-school-principal-1784808019"></link>
            <id>https://jvpnews.com/article/protest-transfer-of-a-mannar-school-principal-1784808019</id>
            <summary type="text">&amp;nbsp; பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> 

மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்று (23) வியாழக்கிழமை பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c9fc6-5c57-438a-a50f-db44ff6631b6/26-6a62025553c2a.webp' /></p><h2>&nbsp;பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை...</h2><p>மன்னார் மாவ்டத்தில் பிரபலமான அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிவித்து தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>&nbsp; இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர். </p><p>

தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் கூறுகையில், இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.</p><p>இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீனர்கள் அடிதடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-chinese-nationals-at-colombo-port-city-1784807344"></link>
            <id>https://jvpnews.com/article/clash-chinese-nationals-at-colombo-port-city-1784807344</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த சீன நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 காயமடைதவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ca2811d-611c-4d73-80b2-f5b425446a9f/26-6a61ffb203562.webp' /></p><p> </p><p>

சம்பவ இடத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு கருவி ஒன்றைக் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந்த மோதலின் போது காயமடைந்த மற்றொரு சீன நாட்டவரையும் எதிர் குழுவினர் அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

 மேலும் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460"></link>
            <id>https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a1c38d-3258-4522-a265-4e659ab6258c/26-6a61f85679456.webp' /></p><p>ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றை பொறுத்தவரை சைவத் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சின்னம் எனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.
</p><p>
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச்சூழலைப் பயன்படுத்தி பௌத்தமயமாக்க முனைவதும் வேதனை தரும் செய்தியாகும்.</p><p>

தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலைநிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம்.

இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aee21bd-8b25-4dcc-a2d7-f5be6812f793/26-6a61f855c4bfc.webp' /></p><p>கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது, பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாட்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
</p><p>
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
</p><p>
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதல் விடுக்கின்றோம் என்றுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:20:28+00:00</updated>
        </entry>
    </feed>
