<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T08:31:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணை நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302"></link>
            <id>https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p> </p><p></p><p>குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37afbb81-547a-42ee-8eb6-bd9fbfb28229/26-6a9a806072e82.webp' /></p><p>இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன.</p><p>இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. </p><p>

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது.</p><p> 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பாவனை; பாடசாலைகளில் கடும் சோதனை நடவடிக்கை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326"></link>
            <id>https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326</id>
            <summary type="text">&amp;nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea76c316-efc0-4669-abb7-b54545cb8084/26-6a9a807815343.webp' /></p><p></p><h2>பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவி</h2><p>
</p><p>


பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்போது, பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>



பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. </p><p>இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த கருவிகள் முதலில் சந்தைகளில் கிடைக்கச் செய்யப்படுவதுடன், பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 



இதன்மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பரிசோதனையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை: சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012"></link>
            <id>https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாதுகாப்பாளரும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>


சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd20bd1-2474-4962-bef0-92ed53ab6d0a/26-6a9a6f9dbdc29.webp' /></p><h2>சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

கொடுமைக்குள்ளான சிறுவன் மாரஸ்ஸனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><h2>&nbsp;இளைஞர் மற்றும் சிறுமி&nbsp; &nbsp;காவல்துறையின் பாதுகாப்பில்..</h2><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழத்தில் பாம்பின் விசம்; சிறுவன் பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/snake-venom-in-jamun-fruit-boy-died-tragically-1788505574"></link>
            <id>https://jvpnews.com/article/snake-venom-in-jamun-fruit-boy-died-tragically-1788505574</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

சம்பவத்தில் பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0abea9-a04c-4641-83ab-33c0b0aa9ad2/26-6a9a6de76cffb.webp' /></p><h2>மயங்கி வீழ்ந்த&nbsp; சிறுவன் </h2><p>
</p><p>
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று (03) வியாழக்கிழமை மாலை எடுத்து உட்கொண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து மயங்கி வீழ்ந்த சிறுவனை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-of-midigama-sooti-frozen-1788506471"></link>
            <id>https://jvpnews.com/article/assets-of-midigama-sooti-frozen-1788506471</id>
            <summary type="text">&amp;nbsp; திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான பிரபாத் மதுசங்க என்ற &#039;மிதிகம சூட்டி&#039; என்பவருக்குச் சொந்தமான வீட்டினைப் பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியான பிரபாத் மதுசங்க என்ற 'மிதிகம சூட்டி' என்பவருக்குச் சொந்தமான வீட்டினைப் பயன்படுத்துவதைத் தடை செய்யச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>

வெலிகம, பாத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றே இவ்வாறு பயன்பாட்டிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311990cc-657b-4a92-bf90-66b2a926d7c3/26-6a9a7168db0f2.webp' /></p><p>
</p><p>
குறித்த வீடும் காணியும் சுமார் 1.5 கோடி ரூபாய் பெறுமதியானது எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் ஸ்டைல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் விநாயகர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-style-vinayagar-idol-in-a-coat-suit-viral-1788504726</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 
 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> 
 

விநாயகா சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான தீம்களில் (Themes) விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d6ce9e0-93bf-40f6-85a7-2084332f8598/26-6a9a6a9764e3a.webp' /></p><h2>வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது</h2><p>
</p><p>
 அந்த வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தோன்றிய கோட் சூட் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p></p><p> </p><p>&nbsp;சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் செய்த வைரல் சைகை இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளில் இடம்பெற்றுள்ளதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-fernando-arrested-a-short-while-ago-1788502734</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p> 

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bde64ea-591d-4033-af4c-4c6d373d903f/26-6a9a62d03cd38.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[CPL-ல் புதிய சத சாதனை படைத்த இலங்கை வீரர் தசுன் ஷானக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057"></link>
            <id>https://jvpnews.com/article/dasun-shanaka-record-fastest-century-in-the-cpl-1788502057</id>
            <summary type="text">இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிராக செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி, கரீபியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிவேக சதத்தை அடித்து, தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> </p><p></p><p>கரீபியன் பிரீமியர் லீக்கின் 25 ஆவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பாசெட்டெர் மைதானத்தில் இடம்பெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லூசியா கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76126317-b483-4b3e-8c77-ccc54bccdf72/26-6a9a602a8bbfb.webp' /></p><p> 

துடுப்பாட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தசுன் ஷானக 43 பந்துகளில் 121 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். </p><p>

அவர் வெறும் 39 பந்துகளில் இந்தப் போட்டியில் சதம் விளாசினார். 

இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்குகின்றன. அவர் 281.39 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்தார். </p><p>

தசுன் ஷானகவின் இந்த சதமானது, இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் குறைந்த பந்தில் பெற்றுக் கொண்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. </p><p>

இதற்கு முன் CPL இல் ஆண்ட்ரே ரஸ்ஸல், டிம் சீஃபர்ட் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் சதம் பெற்றிருந்தனர்.</p><p> 

இந்நிலையில் தசுன் ஷானக அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 13.5 நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. </p><p>

துடுப்பாட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பில் அதிகப்பட்சமாக டிம் சீஃபர்ட் 50 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஜெரேமியா லூயிஸ் 5 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க மற்றும் அஷ்மீட் நெட் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் ஆசிரியை கொலை; மகனுக்கு பொலிஸார் வலைவீச்சு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கைது செய்வதற்கான விசாரணையை கந்தாரா போலீசார் தொடங்கியுள்ளனர். </p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், நான்கு பிள்ளைகளின் தாயான, விதானா அரச்சிங்கே ரெசிரினா ஸ்ரீமதி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.

கொலை நடந்த நேரத்தில், அந்த ஓய்வுபெற்ற ஆசிரியை, தபால் ஊழியரான தனது இளைய மகனுடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6826b37c-8f76-41ee-b8eb-db459f914668/26-6a9a5df56f244.webp' /></p><h2>&nbsp;சிசிடிவி காட்சியால் சிக்கிய மகன்</h2><p> </p><p>இந் நிலையில் கடந்த&nbsp; &nbsp;2ஆம் தேதி காலையில், இளைய மகன் காலி பகுதிக்கு வேலைக்குச் சென்றிருந்தார். 

அப்போது, ​​அவரது மனைவியும் பிள்ளைகளும் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர் வீடு திரும்பியபோது, ​​தனது படுக்கையறையில் தாயார்&nbsp; இரத்தக் குளியலில் கிடப்பதைக் கண்டார். </p><p>&nbsp;அதிச்சியடைந்த&nbsp; மகன்&nbsp; உடனடியாக 1919 என்ற எண்ணிற்கு ஆம்புலன்ஸை அழைத்தார், ஆனால் அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, 119 என்ற அவசர எண்ணின் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்.</p><p></p><p>
</p><p>
போலீசார் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​இறந்த பெண்ணின் மூத்த மகன் வீட்டிற்குத் திரும்பி வந்து இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. </p><p>

அவரை ஓடுவதைக் கண்ட ஒரு குடியிருப்புவாசி, அதுபற்றிக் கேட்டபோது எந்தப் பதிலும் அளிக்காமல் தப்பி ஓடியதாகவும், பின்னர் அந்தச் சந்தேக நபர் தனது கைபேசியை அணைத்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
</p><p>
மாத்தறை பதில் நீதிபதி பாலித ஹெட்டியாராச்சி 3ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, பிரேதப் பரிசோதனைக்காக உடலை மாத்தறை பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். </p><p>

மாத்தறை பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன விஜேசேகரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கந்தறை பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த ஜயலத்தின் மேற்பார்வையிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாசிரியர் சலிந்த அமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T05:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192"></link>
            <id>https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80200c9-8f89-4bdf-8f7f-6f696418a16f/26-6a9a455959db2.webp' /></p><p>இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.</p><p>

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ; வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585"></link>
            <id>https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585</id>
            <summary type="text">16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒரே நாளில் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
முதல் வழக்கில், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் தனது வீட்டில் வைத்து 14 வயது சிறுமியின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b69e45a-06a5-477d-94eb-1ff9872f2488/26-6a9a5682d7f62.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் மற்றுமொரு நபர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மூன்றாவது வழக்கில், கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் 2022ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547"></link>
            <id>https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fac342-e503-4bba-8491-2a677787f815/26-6a9a5274992e0.webp' /></p><p>அத்துடன், 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் புதிய விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம், ஊழல் ஆணைக்கழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b645cc-c83e-4dad-9180-51be7ca9596a/26-6a9a50246b7e2.webp' /></p><p>இதன்படி, அவர் சற்றுமுன்னர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
அவரிடம் எந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
இந்நிலையில், ஆணைக்குழுவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249"></link>
            <id>https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. </p><p>

இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
</p><p>
எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c7f88-8faf-4a97-a59a-ed701f0521f0/26-6a9a4d62dadf0.webp' /></p><p>இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. </p><p>

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.
</p><p>
"பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். </p><p>

போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
</p><p>
 இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. </p><p>

மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். 

இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb64e-edbd-4124-921e-9167844df1de/26-6a9a4d638f39c.webp' /></p><p>சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. </p><p>

குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p>

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.</p><p>

பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் ; நல்லூரில் 18ஆம் திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232"></link>
            <id>https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை திருவிழா நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.</p><p></p><p>

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p>

தொடர்ந்து, சுவாமி பூஞ்சப்பரத்தில் ஆலயத்தின் வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p>

திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் வெளிவீதிகளில் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கார்த்திகை திருவிழா, பக்தி மற்றும் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் முக்கிய திருவிழாக்களிலும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0067d82-44b5-4b55-9556-f6615fec2bcf/26-6a9a496ab01e4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bfad8e3-d8f0-4bd0-a1b3-c702b11c9c0b/26-6a9a4a471a2c9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b361824c-6eca-45ed-b5c7-1ea51cc95888/26-6a9a4a47e321a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28104e7-dfa8-4eac-8d2b-6dea8e989d42/26-6a9a4a4899e4e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T04:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் குறித்து சுகாஷ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561"></link>
            <id>https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய தூண் எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94914dc-30fb-475d-bcde-12ba0721f315/26-6a9a46ca7253d.webp' /></p><p>அத்துடன், பிரபாகரன் டிலக்சன் என்ற ஊடகவியலாளர் அரச ஆதரவுடன் அழுத்தங்களுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சிசிடிவி கமராவை சேதப்படுத்திய சம்பவத்தில் பொலிஸார் சட்ட நடைமுறைகளை மீறி அவரை விடுவித்ததாகவும் சுகாஷ் குற்றம்சாட்டினார்.
</p><p>
தமிழர் தாயகப் பகுதிகளில் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறிய அவர், தமிழர்களின் இருப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279"></link>
            <id>https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279</id>
            <summary type="text">நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.</p><p> </p><p></p><p>அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb28f60-12f9-44f5-8e2d-9796452b1e2a/26-6a9a41c89cdd3.webp' /></p><p>அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படும் அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறவுள்ளது.</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f60fdb7-754b-46e4-b724-7cbae21d92b3/26-6a9a39c8565d6.webp' /></p><p>எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1625993362373956%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-04T03:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d929c50-dab5-4ec4-9f91-48b7566000bd/26-6a9a377970e25.webp' /></p><p>இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு தலா ஒருவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. </p><p>

அதேநேரம் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் இரண்டாவது முறையாகவும் கைதாகியிருந்த நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>

இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162</id>
            <summary type="text">பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.</p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f988d3ea-5a43-47d8-a60f-9576c8bee199/26-6a9a359c61f29.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர் முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து, பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையிலேயே இந்தச் செயலைச் செய்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T03:06:13+00:00</updated>
        </entry>
    </feed>
