<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-01T17:33:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[95,000ஐ கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; பொது மக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-dengue-cases-surpass-95-000-1788281752"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-dengue-cases-surpass-95-000-1788281752</id>
            <summary type="text">இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,157 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தில் டெங்கு காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு மரண வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0224d0-3789-4474-9fd3-9810826d13a6/26-6a970399b6691.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு</span></h2><p style="text-align: justify; ">மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50,506 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">
மேலும், நாட்டின் 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிகம் பரவும் அபாயப் பகுதிகளாக தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563</id>
            <summary type="text">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மத்திய அரசாங்கத்தின் கடன் மட்டும் 31.999 டிரில்லியன் ரூபா அல்லது 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768f2b2c-da31-46f1-92a4-eb4f5d754b95/26-6a96fef51e4e9.webp' /></p><h2 style="text-align: justify; ">உள்நாட்டுக் கடன்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் 20 மில்லியன் டொலர்கள் என்றும், அரசாங்கப் பிணையுடனான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக அல்லது 19.203 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகச் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதில் செலுத்தப்படாத திறைசேரிப் பிணைமுறிகளின் அளவு 47.732 பில்லியன் டொலர்கள் அல்லது 16,069 பில்லியன் ரூபா எனவும், செலுத்தப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவு 7.045 பில்லியன் டொலர்கள் அல்லது 2,372 பில்லியன் ரூபா எனவும் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 38.008 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் இறுதியில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டின் இறுதியில் 38.008 பில்லியன் டொலர்கள் வரை 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகச் சம்மந்தப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p style="text-align: justify; ">

அந்த வெளிநாட்டுக் கடன்களில் பலதரப்புக் கடன்களாக 14.802 பில்லியன் டொலர்களும், வர்த்தகக் கடன்களாக 12.409 பில்லியன் டொலர்களும் மற்றும் இருதரப்புக் கடன்களாக 10.797 பில்லியன் டொலர்களும் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T16:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் நாளைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823</id>
            <summary type="text">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நாளைக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அத்திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54971670-30ec-4a1f-95e4-e1a29fec5ed8/26-6a96f8298fd0f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;பலத்த காற்று</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p style="text-align: justify; "> 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன்படி, நாளை (02) நண்பகல் 12:10 மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளுக்கு பதில் வீட்டுக்காவல் ; சட்ட மறுசீரமைப்புகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757"></link>
            <id>https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f131be0-cd57-4226-9828-79c6dd86d3b8/26-6a96f016eec0e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட மறுசீரமைப்புகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

"நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T15:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேநாளில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பல மில்லியன் வருமானம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259</id>
            <summary type="text">&amp;nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e27381-2cad-49b4-a1f9-a22f7e0f1836/26-6a96d2cc80f09.webp' /></p><h2>&nbsp;கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா முறியடிப்பு</h2><p>



விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>



தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p> </p><p>



 மேலும் பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதியில் காலை வாரிய செருப்பு ;மகள்களின் கல்விச் செலவு; வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315"></link>
            <id>https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315</id>
            <summary type="text">&amp;nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb72bc1d-b0b0-4200-bf27-bd6d1dec1d85/26-6a96cf1cbc1e7.webp' /></p><h2>பாதியில் காலை வாரிய செருப்பு</h2><p>
</p><p>
விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தற்போது தனது மகள்கள் கல்வி கற்கும் போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், உள்ளூர் அமைப்பொன்று நடத்திய ‘அமிர்த தௌட்’ மரதன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p></p><p>

அந்தப் பரிசுத் தொகையில் மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்கலாம் எனக் கருதிய ரமாபாய் போட்டியில் பங்கேற்றார்.</p><p>

போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்த நிலையில் அறுந்த செருப்பை , கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடி, முதலிடத்தையும் பிடித்தார்.
</p><p>
இந்த போட்டியில் அவரது மகள் பூஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரமாபாயின் ஒரு மகள் காவல்துறை பணிக்கான போட்டித் தேர்வுக்கும், மற்றொரு மகள் வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.</p><p></p><p>

தனது வெற்றி குறித்து கருத்துரைத்த ரமாபாய், “போராடி இந்தப் பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண்முன் தெரிந்தது. </p><p>பரிசுத் தொகையில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் மகள்களின் கல்விக்காகப் போராடி வரும் ரமாபாயின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575</id>
            <summary type="text">&amp;nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜா-எல நகர சபைப் பணியாளர்கள் இன்று (01) கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைக்குண்டைக் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d1f1ad-2172-4e16-899f-60e78e0d2771/26-6a96cc390ae93.webp' /></p><p>
</p><p>
இது குறித்து உடனடியாகக் கந்தானை பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அந்த கைக்குண்டை பாதுகாப்பாக அகற்றினர்.


 சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 பவுன் தங்கம்....கட்டுக்காட்டாக பணம்; இணையத்தை மிரட்டிய தாய்மாமன் சீர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-soveren-gold-gift-stuns-madurai-thai-maman-seer-1788267035"></link>
            <id>https://jvpnews.com/article/50-soveren-gold-gift-stuns-madurai-thai-maman-seer-1788267035</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மதுரையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி, மேலும் ரூ.60 லட்சம் மொய் பணம் லாரி, கார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தாய்மாமன் சீர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
</p><p>
தமிழகத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தாய்மாமன் சீர் வழங்கும் நடைமுறையில், சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சார்பில் சீர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141294f1-b9c2-4e28-97e4-dbd303d3210f/26-6a96ca1ce902a.webp' /></p><h2>சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா</h2><p> 

இந்நிலையில், மதுரை காதணி விழாவில் சிறுமியின் தாய்மாமன் மற்றும் தாத்தா சார்பில் சிறுமிக்கு மொய்யாக வழங்குவதற்காக ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.60 லட்சம் பணம் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>அந்தப் பணப்பெட்டிகளை தலையில் சுமந்தபடி உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மொய் வழங்கியுள்ளனர்.

மேலும், 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், வெள்ளித் தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதுமட்டுமின்றி, சொகுசு கார், லாரிகளில் 500 வகையான சீர்வரிசை பொருட்கள், 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்தில் இன்ஜின் கோளாறு; அச்சத்தில் உறைந்த பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engine-failure-indigo-goa-to-delhi-flight-mid-air-1788263623"></link>
            <id>https://jvpnews.com/article/engine-failure-indigo-goa-to-delhi-flight-mid-air-1788263623</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இண்டிகோவின் 6E 2102 விமானம் இன்று காலை 9.15 மணிக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f5c9762-8141-483b-bacf-7e42fd7bf4eb/26-6a96bcc91d82c.webp' /></p><h2>அவசரமாக தரையிறக்கம் ...</h2><p> </p><p>

திட்டமிட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p> இதையடுத்து விமானிகள், விமானத்தை மீண்டும் கோவாவுக்குத் திருப்பினர்.

விமானம் கோவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்துக்கு ‘முழு அவசரநிலை’ அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மேலும், திட்டமிட்ட நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாக மீண்டும் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு நீர்க் கண்காட்சி; பக்தர்கள் தவறவிட வேண்டாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497"></link>
            <id>https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&amp;nbsp; &amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&nbsp;<a href="https://jvpnews.com/article/water-exhibition-attracts-attention-nallur-jaffna-1755591735" target="_blank"> &nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர்</a> எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில்&nbsp;நீர்க் கண்காட்சி இடம்பெறவுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7b995-5fe9-46b5-ab07-2ff4fdce500d/26-6a96c41abc679.webp' /></p><h2>வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு</h2><p> 

தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன. </p><p>

குறித்த நீர்வளம் பேணும் செயற்திட்டம் தொடர்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் இன்று 01.09.2026 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு,</p><p></p><p> </p><p> 

ஆறு வருடங்களாக இடம்பெற்ற நீர் சார்ந்த ஆய்வு செயற்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு பிரதேசங்களில் செய்யப்பட்ட நீரியல் ஆய்வுகள் தந்த பெறுபேறுகளையும் மக்களோடு இணைந்து செய்வதில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறோம்.

அதன் இறுதிப்பகுதியில் வழுக்கையாற்றை ஒரு பேசு பொருளாக சமூகத்திற்குள் கொண்டுவர எடுத்த முயற்சி ஊரவர்களின் கற்பனையையும் சேர்த்து பிரேதேச சபைகளுடன் இணைந்து எடுத்த முயற்சியுடன் ஆய்வுகள் குறித்து இன்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.</p><p> 

அந்த அடிப்படையில் கிணறோடு சேர்ந்த வாழ்வியலில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலத்தடி நீரைப் பேணுவதற்கு கிணறுகளையும் பராமரித்தல் அவசியமானது என்பதும் அதற்கு அனுகூலமான வகையில் இருக்கின்ற ஊர்க் குளங்களை தூர்வார்ந்து பயனுள்ள வகையில் அவற்றில் நீர் தேக்குவது அவசியமானது. </p><p>

கிராமிய குளமொன்றை கிராம மக்களின் ஈடுபாட்டோடு பல்வேறு சமூகத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் தொழிநுட்ப அறிவையும் கருவிகளையும் பயன்படுத்தி பக்குவமாக தூர்வாருதல் தொடர்பிலும் அதில் கிடைக்கும் பாடங்களையும், மற்றும் பல்வேறு விடயங்களையும் முப்பரிமாண தோற்றங்களாக, செய்தியாக, படங்களாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம். </p><p>

கடந்த ஆண்டுகளை விட பல முனைகளில் நிலத்தடி நீர் சார்ந்த தெளிவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பல்வேறு காட்சிகளையும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் வரும் இழப்புகள் பற்றியும் மக்கள் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஈடுபாட்டோடு முடிவெடுத்தலையும் செய்து வந்திருக்கிறோம் என்றார்.
</p><p>
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. </p><p>

நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T12:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812"></link>
            <id>https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p>

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f71b117-8e51-424a-b7c1-877c5bb0f0ac/26-6a96b99e12a42.webp' /></p><p> </p><p>



இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய ; குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இரு நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விஜயங்களுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
</p><p>


அத்துடன், முக்கியமான உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புலன் தகவல்கள், முனைப்பான மற்றும் சாதகமான அணுகுமுறைகள் ஊடாக இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள், முதலீடுகள், சுற்றுலாத்துறை, தொழிநுட்ப, விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடுகின்ற பிரஜைகள் தொடர்பான விடயதானங்களுக்கான விசாக்கள்,</p><p></p><p> குடிவரவு மற்றும் குடியகல்வு விவகாரங்கள் தொடர்பான வசதிப்படுத்தல்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களாகக் கருதப்படும் மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அலுவலர்களின் அறிவு, </p><p>திறன் மற்றும் இயலளவுகளை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வுகளை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 



மேலும் இந்த உத்தேச ஒப்பந்த வரைபுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் செய்ய வற்புறுத்தல் ; கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் சூட்கேஸில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507</id>
            <summary type="text">சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>காவல்துறையினரின் விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பெண் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead16e40-e811-4819-ab52-356cad5c6f51/26-6a96b86c86f23.webp' /></p><p>சம்பவத்தன்று குறித்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலையின் பின்னர், உடலை மறைத்து அப்புறப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>பின்னர் உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சம்பவத்தின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் உடல் பாகங்கள் ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:35:22+00:00</updated>
        </entry>
    </feed>
