<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T09:47:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் தவறான மருந்தா... இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a1f8b8-d89c-434a-92cf-0f14c4a1854d/26-6a97c16555f11.webp' /></p><p></p><h2>&nbsp;வழங்கப்பட்ட மருந்துகள்&nbsp; தொடர்பில் சந்தேகங்கள்</h2><p> </p><p>உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில், </p><p> 

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p></p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சன் கிளாஸ்; பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268"></link>
            <id>https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
</p><p>
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்றையதினம் மேட்டூர் அணையை திறப்பதற்காக மேட்டூருக்கு சென்றார். 

 மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5e19bd-81bf-4a6f-b583-c805266f6960/26-6a97e05e7ddc9.webp' /></p><h2>பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி&nbsp;</h2><p> அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.</p><p></p><p>

அந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாயில் ,30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இன்னிலையில் முதலமைச்சரிடம் சண்கிளாஸ் வாங்கிய மூதாட்டியுடன் பலரும் புகைப்படங்க்கள் எடுத்து வெளியிட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் அந்த மூதாட்டி வைரலாகியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழ விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683"></link>
            <id>https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683</id>
            <summary type="text">பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a750851-0722-462b-9f21-80d9806c4046/26-6a97e1fcb8912.webp' /></p><p>

இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>விவசாயிகள் அடிப்படை காப்புறுதித் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான காப்புறுதிக் கட்டணத்தை செலுத்தி இந்தப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சி மற்றும் புழுத் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
</p><p>
அத்துடன், காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.</p><p>

பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படலாம் என சபை தெரிவித்துள்ளது.
</p><p>
விவசாய அபாயங்களை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும், பழப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுகடங்காத வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான ஆலயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528"></link>
            <id>https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
</p><p>
 அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பால் அடிப்பகுதி பலவீனமடைந்து நொடிகளில் இடிந்து ஆற்றில் முழுவதும் மூழ்கியது. பல தலைமுறைகள் வழிபட்ட இந்த கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3222e6c5-f04c-447c-8f09-ce4819dec2ca/26-6a97dd7a48c94.webp' /></p><h2>கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரம்</h2><p> 

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது.</p><p></p><p> </p><p>

 கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி சரிந்து விழுந்தது.</p><p>

பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892"></link>
            <id>https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892</id>
            <summary type="text">&amp;nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fcb00-2483-4940-b79f-f0d51c25530f/26-6a97cb5e54782.webp' /></p><h2>பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>

இந்தச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


 எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
</p><p>


2018ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குள் மர்ம நபர்களால் சீலரத்ன தேரர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331</id>
            <summary type="text">ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விகாரையொன்றில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa1f382-fffa-4f30-809d-4dfe39ab3194/26-6a97d8cd33938.webp' /></p><p>இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் ; கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c600dba0-9163-4382-9b36-f22109937ce8/26-6a97d38dc9ff3.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தாக்கல் ; 8 பேருக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lawsuit-filed-against-the-university-of-colombo-1788333469"></link>
            <id>https://jvpnews.com/article/lawsuit-filed-against-the-university-of-colombo-1788333469</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>

பல்கலைக்கழகத்தின் பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e3c297-5321-41db-bd64-74c2d15b1910/26-6a97cd9e9ad6e.webp' /></p><h2>&nbsp;8 பேருக்கு அழைப்பாணை</h2><p>

 பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் கையூட்டல் கோரியமை போன்ற குற்றச்சாட்டுக்களை மனுதாரர் முன்வைத்துள்ளார்.
</p><p>
நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T07:14:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கொலைகள்; லண்டனில் உள்ள பிள்ளையான் சகாவிற்கு பிடிவிறாந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767" target="_blank">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை</a> செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி கட்டளையிட்டுள்ளது.</p><p>

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8047d0-aab0-42d7-bc96-9f0896ea3472/26-6a97ac34b98aa.webp' /></p><h2>&nbsp;லண்டனில் வசிக்கும் காத்தான்குடி ‘பொலிஸ் பாய்ஸ்’</h2><p>

கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.</p><p></p><p>ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.</p><p></p><p>மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p></p><p>

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T06:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யால தேசிய பூங்கா; வறண்டு போயுள்ள நீர் வளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yala-national-park-affected-by-severe-drought-1788331743"></link>
            <id>https://jvpnews.com/article/yala-national-park-affected-by-severe-drought-1788331743</id>
            <summary type="text">&amp;nbsp; கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
</p><p>
பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd43dc8-8baf-43dd-aae0-5b4bcd85f987/26-6a97c6e0c575f.webp' /></p><h2>காடுகளில்&nbsp;வறண்டு போயுள்ள நீர் வளங்கள்</h2><p>

இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து செல்கின்றன.</p><p></p><p>

எனினும், அந்த குளம் வறண்டு போயுள்ளதுடன், அதன் நடுப்பகுதியில் சேற்றுக்குளம் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது.</p><p>

இன்னிலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள அனைத்து நீர் வளங்களும் வறண்டு போயுள்ளதோடு, இதனால் வனவிலங்குகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச T20 தரவரிசையில் உச்சத்தை தொட்ட சமரி அத்தபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/samari-reaches-top-the-international-t20-rankings-1788330710"></link>
            <id>https://jvpnews.com/article/samari-reaches-top-the-international-t20-rankings-1788330710</id>
            <summary type="text">இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்.</p><p></p><p>

அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைக்கான தரவரிசைகளில் ஒரே நேரத்தில் தனது அதிகபட்ச நிலையை அடைந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb06dcd-d57c-4e22-9740-764fdaa01681/26-6a97c2d7d426d.webp' /></p><p>நேற்று (01) வெளியிடப்பட்ட மகளிர் இருபதுக்கு இருபது தரவரிசையில், அவர் துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சுத் தரவரிசையில் 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.</p><p>இதேவேளை, மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.
</p><p>
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8:00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ; ஐபோன் 18 ப்ரோ செப்டம்பர் 9ல் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/apple-fans-rejoic-iphone-18-pro-launched-september-1788329608"></link>
            <id>https://jvpnews.com/article/apple-fans-rejoic-iphone-18-pro-launched-september-1788329608</id>
            <summary type="text">அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bfd6154-63d4-4716-aa7d-14ee739221a1/26-6a97be8939b37.webp' /></p><p>இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
</p><p>
அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/served-lunch-mahinda-sentenced-14-years-in-prison-1788327927"></link>
            <id>https://jvpnews.com/article/served-lunch-mahinda-sentenced-14-years-in-prison-1788327927</id>
            <summary type="text">2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நித...</summary>
            <content type="html"><![CDATA[<p>2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிதியில் இருந்து மதிய உணவு வழங்கிய குற்றச்சாட்டில், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 7 ஆண்டுகள் வீதம் தண்டனை விதித்தது. எனினும், தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக அமுல்படுத்தப்படவுள்ளது.</p><p>

மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a236cb-9f4a-446e-9e54-b6110a219dc6/26-6a97b7f8e9e99.webp' /></p><p>மே தின பேரணிக்காக தனியார் நிறுவனத்துக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அரச நிறுவனத்தின் நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாகவும், இது அரசியல் நடவடிக்கைக்காக பொது நிதியைப் பயன்படுத்திய செயலாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
ஊழல் என்பது அரச நிறுவனங்கள் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதால், இத்தகைய குற்றங்களை சாதாரணமாகக் கருத முடியாது என நீதிபதி முகமது மிஹைல் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, பியங்கர ஜெயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டசபை கூட்டத்தில் மீண்டும் &quot;மன்மத நன்றி&quot; ; அவையில் கலகல சிரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/manmatha-nandri-tamil-nadu-legislative-assembly-1788327519"></link>
            <id>https://jvpnews.com/article/manmatha-nandri-tamil-nadu-legislative-assembly-1788327519</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><p>
சட்டப்பேரவையில் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்துப் பேசி உரையை நிறைவு செய்த அருள் விக்னேஷ், சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் போது "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்று கூறிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/986b356f-9d31-4084-9392-3f11f923a32f/26-6a97b660f017b.webp' /></p><h2>அவையிலும் சிரிப்பலை...</h2><p>
</p><p>
தான் தவறுதலாகச் சொன்னதை உணர்ந்து அவர் உடனடியாகச் சிரிக்க, அவையிலும் சிரிப்பலை எழுந்தது.</p><p>

முன்னதாகஇ தனது முதல் சட்டப்பேரவை உரையின் போது கனிமொழி சந்தோஷும் இதேபோன்று "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக "மன்மத நன்றி" என்று கூறி சமூக வலைதளங்களில் பேசப்பட்டார் .</p><p></p><p>இந்த நிலையில்&nbsp; சட்டமன்ற உறுப்பினர்&nbsp; அருள் விக்னேஷும் அதே வார்த்தையைத் தவறுதலாக உச்சரித்தபோது, அவருக்கு முன்பாக அமர்ந்திருந்த கனிமொழி வெளிப்படுத்திய முகபாவனையும் இணையத்தில் தற்போது அதிக கவனம் பெற்று வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559"></link>
            <id>https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; <a href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473" target="_blank">பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா</a>வின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத 'திறந்த தீர்ப்பு' (open verdict) வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரேதப் பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உட்புறக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், மேலதிக விசாரணைகளுக்காக அவரது உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c236e02-2deb-4975-bcfa-c5eccad50144/26-6a97aeb8ad167.webp' /></p><h2>உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை</h2><p>
</p><p>
மாடல் அழகியான சுலா பத்மேந்திரா குமாரபதிரன, ஆகஸ்ட் 31 அன்று பிலியந்தலை, தும்போவில, கங்காராம வீதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இறப்பு தொடர்பான விவரங்களை பிலியந்தலை பொலிஸார் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பதில் நீதவான் சுனேத்ரா பெரேரா சம்பவ இடத்தையும் சடலத்தையும் பார்வையிட்டார்.</p><p></p><p> மேலும், சடலத்தை கலுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி (JMO) மூலம் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதற்கிணங்க, நீதிமன்ற மருத்துவ அதிகாரி மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார்.

முந்தைய நாள் இரவு பத்தரமுல்ல பகுதியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31 அன்று அதிகாலை 5.00 மணியளவில் அந்தத் தொழிலதிபருடன் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

அன்று மதியம் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காததால் '1990' அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரைப் பரிசோதித்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். </p><p>இருப்பினும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறை இருந்ததால், அந்தத் தொழிலதிபர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இறந்த மாடல் அழகியின் தாயாரும் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><p>பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அவரது மரணத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளும் பதிவுகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> இவை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, கண்ணியத்தைக் காக்குமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-02T05:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீர்த்தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634"></link>
            <id>https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.</p><p> </p><p></p><p>கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>

நேற்று (02) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். </p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d7884c0-7c18-451f-be41-de7b0242f18c/26-6a97a733d4e9e.webp' /></p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் நிவைவு தூபியை சேதப்படுத்திய விசமிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/miscreants-thanthai-selva-memorial-pillar-jaffna-1788323609"></link>
            <id>https://jvpnews.com/article/miscreants-thanthai-selva-memorial-pillar-jaffna-1788323609</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>



தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை - அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e0de29-37fa-433d-a1af-3bbdf501777b/26-6a97a71a9b9d9.webp' /></p><p>



போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.</p><p>இந்த நிலையில், தற்போது திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் வலி.வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>


நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், அதனை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டமூலம் ; மீண்டும் தொடங்குறது மனுக்கள் மீதான விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22nd-amendment-bill-hearing-on-petitions-resumes-1788323133"></link>
            <id>https://jvpnews.com/article/22nd-amendment-bill-hearing-on-petitions-resumes-1788323133</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று (02) மீண்டும் தொடங்குகிறது.</p><p></p><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d50b1f45-cbde-4bfa-96d1-187e4d2a7306/26-6a97a53e58bf6.webp' /></p><p>

மனுதாரர் தரப்பின் வாதங்கள் நேற்று இரவு சுமார் 10.30 அளவில் நிறைவடைந்தன.
</p><p>
அதன்படி, மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் இன்று மீண்டும் தொடங்குகின்றது.
</p><p>
மேலும் இன்று இடைநிலை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் தரப்பின் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு ; சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-seizure-colombo-port-international-network-1788322697"></link>
            <id>https://jvpnews.com/article/drug-seizure-colombo-port-international-network-1788322697</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின், கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>
</p><p></p><p>துபாயில் இருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படும் "பரவி சுதா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரே, இந்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.
</p><p>
அத்துடன் "அங்கொட பிரியந்த" மற்றும் "ரூபன்" என்ற நபர்களும் இந்த நடவடிக்கையில் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6bc26d-6921-486e-b786-cff0e0c63bb1/26-6a97a38aec0ab.webp' /></p><p>கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முன்றலில் கடந்த 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாட்டைச் சேர்ந்த தனிப்பட்ட தகவல் வழங்குநரிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்துஇ சிரேஷ்ட காவல்துறை மாஅதிச்சரகத்தின் ஊடாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவைப் பெற்றுஇ காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கைச் சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.</p><p>

இந்தக் கொள்கலன் மொரோக்கோவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்துவதே உண்மையான நோக்கமாகும் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>

கொழும்பைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் உட்பட பாகிஸ்தானிய நாட்டவர்கள் இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-next-24-hours-notice-fishermen-1788321958"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-next-24-hours-notice-fishermen-1788321958</id>
            <summary type="text">சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படக்கூடும்.
</p><p>
இதனிடையே, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc354fa4-ff9b-49b9-b4b2-9fb51da9fb3b/26-6a97a0a79bd94.webp' /></p><p>மேலும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
</p><p>
இதன் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பரப்புகளில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை ; இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888</id>
            <summary type="text">காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி தனது பாட்டியுடன் கதிர்காமத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது பேருந்தில் சந்தேகநபரை சந்தித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c178b16-832d-48fb-b26e-19bbb9f00c0c/26-6a979c79a2cfc.webp' /></p><p> இதனையடுத்து இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், சந்தேகநபர் சிறுமியை தலவாக்கலை நகரத்திற்கு அழைத்துச் சென்று, திம்புல பகுதியில் உள்ள குயிங்கிரி தோட்டத்தில் தனக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அங்கு சிறுமியை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி நன்னடத்தையின் அடிப்படையில் அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>சந்தேகநபர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:48:16+00:00</updated>
        </entry>
    </feed>
