<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T20:53:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc66cc-e921-4cd4-a5b7-f1375a0b11a8/26-6a777be6ad408.webp' /></p><p>

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
</p><p>
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6091aafd-8258-4ce8-a034-1ddb0989c355/26-6a777ea074154.webp' /></p><p>
இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32065a2c-4a51-46a5-811e-338a9af58c93/26-6a77750b86760.webp' /></p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
</p><p>
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி ; கிண்ணத்தை தட்டிச் சென்ற கோல் கெலன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706"></link>
            <id>https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706</id>
            <summary type="text">2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14180e89-f72f-4290-9fde-ab5230060467/26-6a777013a0663.webp' /></p><p>

அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு கோல் கெலன்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். </p><p>இதன் காரணமாக அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.</p><p>

இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி முன்னேறியது.
</p><p>
அந்த அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
</p><p>
இதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.</p><p>

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்து LPL கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916"></link>
            <id>https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.</p><p>

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797d27d7-e053-4008-980e-c3f597c78e40/26-6a776a65d415e.webp' /></p><p>மேலும், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நாளை காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

அத்துடன், பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, 0113 - 66 81 19, 0113 - 66 80 26, 0113 - 66 80 32 மற்றும் 0113 - 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872</id>
            <summary type="text">பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான சன நெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h3>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்

</h3><p>உணவே மருந்து – மருந்தே உணவு’ என்ற ஆரோக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809137a5-7aac-4c9b-b8e6-4e380cc92735/26-6a776651da11f.webp' /></p><p>ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்திருந்தனர்.
</p><p>
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களும் பெருமளவில் விழாவில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா அண்மையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

விழா ஆரம்பமானதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் பெருமளவான மக்கள் றீச்ஷா வளாகத்தில் திரண்டிருந்தனர்.</p><p>
</p><h3>பாதுகாப்பு கருதி நிகழ்வுகள் இரத்து</h3><p>இந்நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் ஒரே நேரத்தில் விழா வளாகத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f9b857-0df1-4ece-a836-12e31db55bf7/26-6a7767a817793.webp' /></p><p>இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இன்று நடைபெற்று வந்த உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்பட்டதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என றீச்ஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
நுழைவுச்சீட்டுகளுக்காக செலுத்தப்பட்ட பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக முறையாக மீளச் செலுத்தப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா, எதிர்பாராத அளவிலான மக்கள் திரளால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848"></link>
            <id>https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848</id>
            <summary type="text">கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், &#039;கண்ணிவெடி ஆலோசனை குழுவின்&#039; (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8509dc-0430-4712-a65d-5b136b76afb4/26-6a776252666d7.webp' /></p><p>அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
</p><p>
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
</p><p>
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச்சடங்குக்கு வர மறுத்த 3 மகள்கள் ; வைரலாகும் சமூக வலைத்தள விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034"></link>
            <id>https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034</id>
            <summary type="text">மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்தவரின் மூன்று மகள்களும் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதாகவும், தந்தையின் இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள அவர்கள் மறுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தூரம் காரணமாக இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கிற்காக ரூ.5,100 பணத்தை இணையவழியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f420e3-be5a-4f75-8ad0-f9fa8596afe0/26-6a775f24004a4.webp' /></p><p>மேலும், தந்தையின் இறுதிச்சடங்கை அவர்கள் காணொளி அழைப்பு மூலம் பார்த்ததாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, இறுதிச்சடங்குக்குப் பின்னர் தந்தையின் அஸ்தியைக் கூட மகள்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மகள்களின் நடவடிக்கை குறித்து இணையவாசிகள் பலரும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
பெற்றோரின் இறுதி தருணங்களில் பிள்ளைகளின் பொறுப்பு என்ன என்பது தொடர்பிலும், தூரம் உள்ளிட்ட காரணங்களால் இறுதிச்சடங்கில் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
ஒரு பெற்றோரின் இறுதிச்சடங்கில் கூட பிள்ளைகள் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குடும்பத்தினரின் தரப்பு குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் உயிரோடு வாழணும் ; 13 வயது குறைந்த இளைஞனுடன் தகாத உறவிலிருந்த மனைவிக்கு கணவன் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055"></link>
            <id>https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055</id>
            <summary type="text">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. அதுவும் பல இடங்களில் மனைவி கள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. </p><p style="text-align: justify;">அதுவும் பல இடங்களில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb37bd69-dfdc-47a7-b22b-2cc1e233c266/26-6a7724a15fb36.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சாக விருப்பம் இல்லை...&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில்தான் தனது மனைவிக்கு இன்னொரு காதல் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் மனைவியை அந்த காதலுடன் சேர்த்து வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. </p><p style="text-align: justify;">உத்தரப்பிரதேசம் சாண்ட் கபீர் நகரில் வசித்து வரும் கணவன் மனைவிக்கு திருமணம் ஆகி 21 வருடங்கள் ஆகிவிட் நிலையில் இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்தான் அவரை விட 13 வயது குறைந்த ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் இருவருக்கும் அவர் திருமணம் செய்து வைத்தார்

கணவன் முன்னிலையில் அவரது மனைவிக்கு அவரின் காதலர் குங்குமப்பொட்டை வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். </p><p style="text-align: justify;">

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில். </p><p style="text-align: justify;">
இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த நபர் ‘எனக்கு பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் அடைபட்டு சாக விருப்பம் இல்லை.. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள்இன்று (08) நண்பகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077da7de-4f1c-4a37-99bb-f615af446d6a/26-6a775c24582f2.webp' /></p><p>அவ்விடத்திலிருந்து சிறைச்சாலையினுள் 02 பொதிகளை வீசுவதற்கு இவர்கள் முயற்சித்த வேளையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

சந்தேகநபர்களிடமிருந்த 02 பொதிகளைச் சோதனையிட்ட போது, 22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஏஷ்' போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி தோடுகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447</id>
            <summary type="text">கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f8da31-072d-495b-aaa9-890128decb49/26-6a7751217f466.webp' /></p><p>எனினும், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சிறைச்சாலைகளில் மோதலில் ஈடுபட்ட கும்பல்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932"></link>
            <id>https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் நேற்று (07) மற்றும் அதற்கு முதல் நாள் (06) மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42085397-53fa-4b6b-8565-8ad09e329f25/26-6a774f1ea1758.webp' /></p><p> 

இச்சம்பவங்களில் 3 சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

இதனிடையே, குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் நேற்று (07) ஏற்படுத்திய பதற்றத்தின் போது, சிறைக்கூடங்களின் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தியமையால் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கைதிகளை அந்த இடங்களில் வைத்திருக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். </p><p>

இதற்கமைய, இன்றைய தினமும் (08) இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் தலையீட்டில் இது குறித்து ஆராயப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குறித்த மோதலின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

அத்துடன், அங்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:45:38+00:00</updated>
        </entry>
    </feed>
