<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T09:39:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனால் உயிரிழந்த குடும்பம்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260"></link>
            <id>https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260</id>
            <summary type="text">&amp;nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கவ்டா மலையில் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 
அந்த 18 வயது வாலிபர் மலையில் விளிம்பில் நின்றுகொண்டு தனக்கு Iphone வாங்கி தர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a509fdb6-3800-4d0d-8ebe-7f151b09ff4b/26-6a896d1dce541.webp' /></p><h2>&nbsp;மலை விளிம்பில் நின்றுகொண்டு&nbsp; மிரட்டல்</h2><p> இல்லையென்றால் குதித்துவிடுவேன் என மூன்று மணி நேரமாக அவரின் பெற்றோரை தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

 ‘எப்படியாவது உனக்கு ஐபோன் வாங்கி கொடுத்து விடுகிறோம். </p><p>கீழே குதித்துவிடாதே ’ என அவரின் பெற்றோர் கெஞ்சிதுடன், அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.</p><p> 

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தடுமாற அவரை எப்படியாவது பிடித்து இழுத்து விடலாம் என அவ்ரை பிடிக்க வாலிபரின் தந்தை அருகில் சென்றபோது இருவதுமே மலை உச்சையிலிருந்து கீழே விழுந்தனர்.
</p><p>
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாய் இருவரையும் காப்பாற்றி விடலாம் எனக் கூறி அவரும் கீழே குதித்திருக்கிறார். இறுதியில் அவர்கள் மூவருமே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டனர்.</p><p> 

இந்த தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கலில் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T09:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித இனம் முடிவுக்கு வருகிறதா? விவாததை கிளப்பிய 1960-ல் கணிக்கப்பட்ட ‘உலக அழிவு நாள்’!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/in-1960-predicted-humanity-squeezed-to-world-1787389959"></link>
            <id>https://jvpnews.com/article/in-1960-predicted-humanity-squeezed-to-world-1787389959</id>
            <summary type="text">உலக &amp;nbsp; மக்கள் தொகை கணக்கீடுகளின் அடிப்படையில் மனித இனம் நெருக்கடியால் அழியும் நாள் மிக அருகில் உள்ளதாக 1960-ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய ஆய்வுக் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக &nbsp; மக்கள் தொகை கணக்கீடுகளின் அடிப்படையில் மனித இனம் நெருக்கடியால் அழியும் நாள் மிக அருகில் உள்ளதாக 1960-ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய ஆய்வுக் கட்டுரை வெளியீட்டின் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் ,மனித இனத்தின் அழிவு குறித்து தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.</p><p>

 ஆஸ்திரிய இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் (Heinz von Foerster) மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிட்ட கணிப்பின்படி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a090ef4-7f62-4141-8911-3802a3313497/26-6a896808ed955.webp' /></p><h2>மனித இனம் பசியால் இறக்காது நெருக்கடியால்&nbsp;அழியும்</h2><p> </p><p>“மனித இனம் பசியால் இறக்காது, மாறாக மக்கள் தொகை பெருக்கத்தின் நெருக்கடியால் (Squeezed to death) அழியும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>

கடந்த 2,000 ஆண்டுகால உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தையும், 24 வெவ்வேறு காலகட்ட தரவுகளையும் கணித சூத்திரங்களின் மூலம் பகுப்பாய்வு செய்து இந்த முடிவை ஃபோர்ஸ்டர் வெளியிட்டார்.</p><p></p><p> மக்கள் தொகை இரட்டிப்பாகும் கால இடைவெளி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மக்கள் தொகை எல்லையற்ற நிலையை எட்டி, பூமியில் இடநெருக்கடியை உருவாக்கும் என்றும், அதுவே மனித இனத்தின் ‘உலக அழிவு நாள்’ (Doomsday) என்றும் கணி கணிதவியல் முறையில் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5402e3e-2e95-40f2-98c2-84a294326150/26-6a896809c52a7.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய நவீன மக்கள் தொகை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தக் கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
</p><p>
 1960-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு 2.2% ஆக உச்சத்தில் இருந்த நிலையில், 2026-ல் இதன் வளர்ச்சி விகிதம் 0.84% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது. </p><p>மேலும், ஃபோர்ஸ்டரின் கணிதக் கோட்பாட்டைப் பின்னோக்கி இயக்கிப் பார்த்த போது, மனித இனம் 200 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற தவறான முடிவு கிடைத்ததால், அவரே தனது கணிப்பில் பிழைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
</p><p>
தற்போது உலகின் மக்கள் தொகை சுமார் 8.2 பில்லியனாக இருக்கும் நிலையில், மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் ஃபோர்ஸ்டர் குறிப்பிட்ட ‘நெருக்கடி அழிவு’ ஏற்பட வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.</p><p> 

எனினும், குறிப்பிட்ட அந்தத் தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்து இணையவாசிகள் மத்தியில் இது குறித்த சுவாரஸ்யமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T08:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான வாகன பதிவு ஆவணங்களை தயாரித்து விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-fake-vehicle-registration-documents-1787387556"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-fake-vehicle-registration-documents-1787387556</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகே வாகனப் பதிவிற்கான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afe76df-6811-4a26-8edb-1f68a2aadccd/26-6a895ea649bde.webp' /></p><h2>&nbsp;போலி ரப்பர் முத்திரை</h2><p> </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142</id>
            <summary type="text">&amp;nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடப்பதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd1067e-dafb-404f-a174-da9f709a7e42/26-6a895d07c5bc8.webp' /></p><h2>&nbsp;கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம்</h2><p> 

உயிரிழந்தவர் கலஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஆவார்.

இப் பெண் தனது மகனுடன் கலஹிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
இன்னிலையில் சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மகன், தாய் தலையில் பலத்த இரத்தக் காயங்களுடன் வீட்டின் உள்ளே இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p>

இச் சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான நீதவான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p>

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID காவலில் வேண்டாம்; ஜனாதிபதி அனுரவிடம் கெஞ்சும் சுரேஷ் சல்லே மனைவி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294"></link>
            <id>https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். </p><p>

ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caaa6003-f1b6-4159-94d4-0908ed96f2e7/26-6a8959b8018cd.webp' /></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு கோரி&nbsp; கடிதம்</h2><p>

முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் இலங்கை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ஐஊனு எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சல்லேவுக்கு தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655"></link>
            <id>https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ff764-1cbe-4f3c-a2f7-1a3e8b22f528/26-6a892d7679156.webp' /></p><h2>&nbsp;50,000 ரூபா தண்டப்பணம்</h2><p> 

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p> 

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் குறையும் மீன் வளம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declining-fish-stocks-in-sri-lankan-waters-1787383250"></link>
            <id>https://jvpnews.com/article/declining-fish-stocks-in-sri-lankan-waters-1787383250</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. </p><p>

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7fde3a-d983-436c-a9e2-4ff35a9cf87f/26-6a894dd84cbf3.webp' /></p><h2>இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல</h2><p> 

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் கூறுகிறார். </p><p>

மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை எனவும், உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன எனத் தெரிவித்தார்.</p><p></p><p> 

எவ்வாறாயினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் மீனவ மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழிலவாய்ப்புகள் நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனத் தலைவர் மேலும் குறிப்பிட்டார். </p><p>

இதேவேளை, நிலவும் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடி நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களின் பயன்பாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை இந்த மீன்வளம் நசிந்துபோவதற்குப் பிரதான காரணமாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 சீனர்களை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-public-apprehend-3-chinese-1787382686"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-public-apprehend-3-chinese-1787382686</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
</p><p>


கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18eeac82-3289-470f-9623-c12b106b911a/26-6a894ba014d31.webp' /></p><h2>&nbsp;நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்</h2><p> சம்பவத்தின்போது மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் மூன்று சீன சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>



தேடப்பட்டு வரும் மூவரும் தற்போது இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்குப் பயன்படுத்திய சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


சந்தேகநபர்கள் வான் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>இதையடுத்து, சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், அவர்களின் நடமாட்டம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>



 தகவல்களை கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071 859 1735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T07:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 400 இற்கும் மேற்பட்டோருக்கு கண்பிரச்சனை; மின்குமிழ் பற்ற வைத்தவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>



குறித்த அதிக ஒளியை ஏற்படுத்திய மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2bcfd7d-dddc-4972-b884-a51884b1629d/26-6a893c9987851.webp' /></p><p>


விசாரணைகளின் பின்னர் அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



இதேவேளை, அதிகளவான ஒளிப்பாவனையால் கண்கள் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578" target="_blank"> மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியி</a>ன் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
</p><p>


நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f3dea5-198d-4d63-b552-d31c0e160f7a/26-6a8936e5b9945.webp' /></p><p>இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p></p><p>
</p><p>
மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T05:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129"></link>
            <id>https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், நெடுந்தீவின் இயற்கை சூழலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48cd01b-7b51-4676-9b6d-15576a46e966/26-6a8935eb6cdec.webp' /></p><p></p><h2>&nbsp;குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள&nbsp;வனவிலங்குகள்</h2><p>
</p><p>
கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதால், வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.</p><p>


நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் ஊடாக போனி குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a411b76-3228-4b21-a9d8-6c051ec11255/26-6a8935ec27215.webp' /></p><p>



நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும், தீவின் இயற்கை அழகையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீவுப் பகுதிகளில் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் , உந்துருளிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு; பொலிசார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597"></link>
            <id>https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e6b232-93be-48ed-814e-a23fd6e9340a/26-6a8933d6e62ce.webp' /></p><h2>பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்</h2><p>
</p><p>
குறிப்பாக, சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் இயந்திரம் இயக்கிய நிலையிலேயே வாகனத்தை விட்டுச் செல்வதாகவும், இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், இரவு நேரங்களில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T05:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சிறுவனுக்கு எமனான உழவு இயந்திரம்; சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tractor-proves-fatal-for-boy-in-kilinochchi-1787374900"></link>
            <id>https://jvpnews.com/article/tractor-proves-fatal-for-boy-in-kilinochchi-1787374900</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. 

உயிரிழந்த குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. </p><p>

உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e989c1-3b12-49e0-b362-ceaeb8fc7cf8/26-6a892d3585ac8.webp' /></p><h2>&nbsp;சாரதி கைது&nbsp;</h2><p> 

இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.</p><p> 

இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. </p><p>உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பண்டத்தரிப்பு ஆலய சம்பவம் ; 400 பேர் கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243"></link>
            <id>https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு <a href="https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434" target="_blank">பிரான்பற்று முருகன் ஆலயத்தில் </a>இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

 ஆலய திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் கண் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a9d12-7ffd-495d-93bf-ee9478baff2f/26-6a892aa570225.webp' /></p><p> </p><p>

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T04:48:06+00:00</updated>
        </entry>
    </feed>
