<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:49:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த பாராட்டு ; அரசாங்கத்திற்கு காத்திருக்கும் ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (03) நிதி அமைச்சில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631afa1f-a788-4555-a431-41327134adfb/26-6a70ded984ed7.webp' /></p><h2>&nbsp;டிஜிட்டல் மயமாக்கல்&nbsp;</h2><p>
</p><p>
இவ்வுயர்மட்ட சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் அதன் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><p>

கன்னி விக்னராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து செயற்படவுள்ளோம். நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித விவாதமும் இல்லை.</p><p></p><p> </p><p>தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றார்.</p><p>இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கைக்காக வழங்கி வரும் ஆதரவை மதிப்பதாகவும் நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்ட தொடர்பின் அவசியத்தையும் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதன்போது வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T18:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சீரற்ற வானிலையால் 2,331 பேர் கடுமையாகப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-331-affected-by-severe-weather-in-sri-lanka-1785778722"></link>
            <id>https://jvpnews.com/article/2-331-affected-by-severe-weather-in-sri-lanka-1785778722</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்&nbsp; தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d904f2-6dcd-4512-889e-1afd79a2f01e/26-6a70d2246c6aa.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;இடைத்தங்கல் முகாம்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இவர்களுக்கான சகல வசதிகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருவதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. </p><p style="text-align: justify; ">இருப்பினும், இன்று மாலையில் நுவரெலியா நகரில் மழை குறைந்து வெள்ள நீர் சற்று வடிந்துள்ள போதிலும், வீடுகளுக்குள் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T17:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510</id>
            <summary type="text">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b517f5f-fbb5-415e-a679-975e725a3601/26-6a70c980991a6.webp' /></p><p style="text-align: justify;"> 

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T17:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தொன்று வெள்ள நீரில் சிக்கியிருந்த&nbsp; காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b960743-cfe6-466a-8b29-73bebbbc4b8e/26-6a70bee9aed1a.webp' /></p><h3>&nbsp;சீரற்ற காலநிலை</h3><p>
</p><p>இதனையடுத்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்படும் காட்சிகளும் குறித்த&nbsp; காணொளியில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>மோசமடைந்து வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அந்த இளைஞர்களின் விரைவான செயல்பாடும் தைரியமும் ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளம் முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல தடை ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369"></link>
            <id>https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>


தீவைச் சுற்றியுள்ள மோசமான வானிலை ஓரளவு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7df0d5-611b-4413-92ef-9573e1f9c16f/26-6a70c50b7bf36.webp' /></p><h2>மறு அறிவிப்பு&nbsp;</h2><p>

இருப்பினும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதியில் பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதும் தொடர்ந்து நிலவுவதாக அவர் வலியுறுத்தினார்.</p><p>

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோரப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.</p><p>
அதன்படி, வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி கடல் நிலவரம் சீரடைந்தவுடன் இந்தத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p></p><p>

கடந்த சில நாட்களாக வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்து கடலுக்குச் சென்ற மன்னார், கல்பிட்டியா, சிலாபம் மற்றும் நீர்கொழும்புப் பகுதிகளில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்தது குறித்தும் பணிப்பாளர் நாயகம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.</p><p>எனவே, மீனவர்களின் பாதுகாப்பிற்காக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், எந்தவொரு பகுதியிலும் பணிபுரியும்போது உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை ; பாதுகாப்பு அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9acd1045-8541-4fe7-b81f-f4cc963ff84c/26-6a7095a4c629b.webp' /></p><p> </p><p>

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p> 

 இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை மோதல் ; கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408"></link>
            <id>https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றது. </p><p style="text-align: justify; ">

இதன்போது, அதிகளவில் இரத்தம் வெளியேறியமையே மரணத்திற்கான காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c0b2e32-ea0e-4f0c-928f-a827e6bf2c13/26-6a70b9799bcb3.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்று பரிசோதனை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், குறித்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளைப் பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">நேற்று முன்தினம்&nbsp; (01)&nbsp; கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன. 

</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது. 

எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T15:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-shop-in-five-lamps-junction-1785771347"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-shop-in-five-lamps-junction-1785771347</id>
            <summary type="text">கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு திணைக்களம் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6dd16d-0d50-40e9-b8b4-9c93a89eee58/26-6a70b555a79ae.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-03T15:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க கழிவறை குப்பைத் தொட்டியில் ஆபத்தான பொருள்; ஆடிப்போன அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-found-in-katunayake-airport-trash-bin-1785762147"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-found-in-katunayake-airport-trash-bin-1785762147</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 1 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான &#039;ஹஷீஷ்&#039; போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 1 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதியொன்று கைவிடப்பட்ட நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>

இன்று திங்கட்கிழமை (03) அதிகாலை 12.00 மணியளவில் விமான நிலைய வருகை முனையத்தின் 3 ஆம் இலக்கப் பயணப்பைப் பட்டையப் பகுதிக்கு அருகில் உள்ள பெண்கள் கழிப்பறையின் 02 குப்பைத் தொட்டிகளுக்குள் இருந்தே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f86352b-c52f-43eb-b26e-a16013f9053b/26-6a709164c2df4.webp' /></p><h2>187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள்</h2><p>
</p><p>
07 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 187 கிராம் எடையுடைய 'ஹஷீஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருளுடன் சேர்த்து சில பெண்களுக்கான காலணிகள் மற்றும் ஆடைகளும் அக்குப்பைத் தொட்டிகளுக்குள் வீசிச் செல்லப்பட்டிருந்தன.</p><p></p><p>
</p><p>
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது ஏற்பட்ட அச்சம் அல்லது சந்தேகம் காரணமாக, கடத்தல்காரர்கள் இப்போதைப்பொருளைக் கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகுதி மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்; கொண்டாடும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-cauvery-river-cm-vijay-people-celebrating-1785762742"></link>
            <id>https://jvpnews.com/article/water-cauvery-river-cm-vijay-people-celebrating-1785762742</id>
            <summary type="text">&amp;nbsp;கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.

இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
</p><p>இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், காவிரி நீர்வரத்து அதிகரித்ததை வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b63be3e-0056-4097-905f-b6a130484fe4/26-6a7093b7d705d.webp' /></p><h2>கடவுளின் குழந்தை - சமூக வலைதளங்களில் பதிவுகள்&nbsp;</h2><p>

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆதரவாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பல சமூக வலைதள பயனர்கள், இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பல்வேறு பதிவுகள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
"இயற்கையே முதலமைச்சர் பக்கம் நிற்கிறது", "கடவுளின் குழந்தை" போன்ற வாசகங்களுடன் பகிரப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.&nbsp;</p><p>ஆரம்பத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு தயக்கம் காட்டியிருந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மற்றும் கபினி அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169"></link>
            <id>https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2d48bb-2bf7-43a5-a11a-74584ee76d1b/26-6a706a6bce9e7.webp' /></p><h2>&nbsp;ஒகஸ்ட்&nbsp; 5 ஆம் திகதி&nbsp;வரை செல்லுபடியாகும் </h2><p> </p><p>மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு&nbsp;சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​</p><p></p><p>அதன்படி, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><p>அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும் , ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசுபிக் பெருங்கடலில் சூறாவளி; வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cyclone-pacific-ocean-sl-department-meteorolog-1785761578"></link>
            <id>https://jvpnews.com/article/cyclone-pacific-ocean-sl-department-meteorolog-1785761578</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இதனைத் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f675016-5ca4-410d-8fcf-5babce84cef7/26-6a708f2beeb9c.webp' /></p><h2>&nbsp;பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி</h2><p> </p><p>

இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.</p><p> 

இதன்படி மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

"இந்த கொந்தளிப்பான வானிலை நிலைமை நாளை (04) நண்பகலாகும்போது படிப்படியாக நம்மை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்படி இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருகிறது.</p><p></p><p> அந்த நிலைமை ஆறாம் திகதியளவில் மீண்டும் தீவிரமடைவதுடன், காற்றின் வேகம் அதிகரித்து, மீண்டும் ஆறாம் திகதிக்குப் பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் மழை பெய்யக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
