<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-10T07:08:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் முறிவு; யுவதியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்திய கல்லூரி ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300"></link>
            <id>https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300</id>
            <summary type="text">&amp;nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786d6188-977b-42ac-b348-2d66ba1b01f6/26-6a795bfe1183f.webp' /></p><p></p><h2>&nbsp;காதல் உறவு&nbsp;&nbsp;முறிவு</h2><p>

குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முடிவடைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, தன்னிடம் உள்ள குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி, அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>

 பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த உடுகம பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T06:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-eclipse-on-aadi-amavasya-2026-tharpanam-1786341407"></link>
            <id>https://jvpnews.com/article/solar-eclipse-on-aadi-amavasya-2026-tharpanam-1786341407</id>
            <summary type="text">பித்ருக்களின் ஆசி கிடைக்கும் &amp;nbsp; ஆடி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பித்ருக்களின் ஆசி கிடைக்கும் &nbsp;<a href="https://jvpnews.com/article/aadi-amavasai-2024-august4-don-t-forget-1722576536" target="_blank" style="background-color: rgb(255, 255, 255);"> ஆடி அமாவாசை நாளில் </a>சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம்&nbsp; இலங்கை, இந்திய இரவு&nbsp; நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், இதனால் பெரிய தோஷங்கள் எதுவும் இல்லை என கூறப்படுள்ளது.</p><p>மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம்.&nbsp;</p><p>
ஆடி மாதத்தில் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் ஆடி அமாவாசை. வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளில் இந்த ஆண்டு சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e31afe-58d6-49ce-a83b-7c6f9afba65e/26-6a796820cedfd.webp' /></p><p>

 இதனால் வழக்கமான முன்னோர் வழிபாட்டினை செய்யலாமா? தர்ப்பணம் கொடுக்கலாமா? என பல சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>
சூரிய கிரகணம் அன்று ஆடி அமாவாசை&nbsp;</h2><p>
இந்து சமய ஆன்மீக வழிபாட்டில் சூரிய கிரகணம், அமாவாசை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கித்துவம் வாய்ந்த சக்தி வாய்ந்த நாட்களாகும். அதிலும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும் அம்பிகை வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்படுவது வழக்கம். </p><p>இந்த சமயத்தில் மந்திர ஜபம் தவிர மற்ற பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது என்பார்கள். 

இதனால் சூரிய கிரகணம் மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் இணைந்து வரும் நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா, கூடாதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4114d0d6-d6e5-4eed-85b9-61d6658a989a/26-6a79682183163.webp' /></p><p>
</p><p>

</p><h3>வாழ்வில் வளம் தரும்&nbsp; முன்னோர் வழிபாடு</h3><p>ஒரு வருடத்தில் வரும் அமாவாசைகளில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகும். </p><p>மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கடன் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், இந்த மூன்று அமாவாசைகளை தவற விடாமல் அவசியம் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டினை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc1f7ae-d9fe-4b32-8a3f-96984627acf0/26-6a79682238afc.webp' /></p><p> </p><p>ஆடி அமாவாசையில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், தன்னுடைய குடும்பத்தினர் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை நேரடியாக பூமிக்கு வந்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது. </p><p>அதனால் ஆடி அமாவாசை, பித்ருதோஷம் உள்ளிட்ட மிக கடுமையான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.</p><p>&nbsp;சூரிய கிரகணம் இரவு நேரத்திலேயே வருகிறது.&nbsp; இதனால் கோவில் நடை அடைப்பு போன்றவை இந்த நாளில் இருக்காது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் வரும். </p><p>

இருந்தாலும் இரவு நேரத்தில் ஏற்படும் சூரிய கிரகணத்தால் தோஷம் ஏதும் ஏற்படாது. இதனால் வழக்கமான முறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடலாம். </p><p>கிரகண நாளில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.</p><h4>தான தர்மங்கள்</h4><p> இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், புதிய நதிகளில் நீராடுவது, காகத்திற்கு உணவு வைப்பது ஆகியவை பித்ரு தோஷங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. 

எனவே ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு தான் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e4a9a3-9dfc-4ffe-a050-dacfbfdaf974/26-6a7968d2390fe.webp' /></p><p> அதனால் வழக்கம் போல் ஆகஸ்ட் 12ம் தேதியன்று காலை சூரிய உதயத்திற்கு பிறகு நதிகள் அல்லது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். அதே போல் பகல் நேரத்தில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை செய்யலாம்.</p>]]></content>
            <updated>2026-08-10T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sagara-kariyawasam-arrested-1786343499"></link>
            <id>https://jvpnews.com/article/sagara-kariyawasam-arrested-1786343499</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது செய்யப்பட்டார்.
</p><p>
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார்.

இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34dd8b3-b9e5-41c8-9ca3-36fc257be8b9/26-6a79704d3f390.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T06:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொல்லாதே யாரும் கேட்டால்....கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி! இணையவாசிகள் திகைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombian-woman-buys-two-houses-by-selling-gossip-1786342980"></link>
            <id>https://jvpnews.com/article/colombian-woman-buys-two-houses-by-selling-gossip-1786342980</id>
            <summary type="text">&amp;nbsp; கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. 

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. 

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசுகிசுக்களை விற்று இரு வீடுகளை வாங்கியுள்ளார்.</p><p>

கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுசுக்கள் அதாவது மற்றவர்களின் ரகசியங்களையும் அருகில் வசிப்பவர்களிடம் கேட்டு பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283e43dd-9ad4-4709-a77d-55a75b807f8e/26-6a796e460c130.webp' /></p><h2>&nbsp;கள்ளக்காதல் விவகாரம் என்றால்&nbsp; அதிக தொகை</h2><p>

அதன்பின் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். அதன்பின் சம்மந்தப்பட்டவரிடம் அதை சொல்லி அதை வெளியில் சொல்லாமல் இருக்க கிசுகிசுவுக்கு ஏற்ற மாதிரி பணம் வசூலித்து வந்திருக்கிறார்.</p><p></p><p>
</p><p>
 இதில், கள்ளக்காதல் விவகாரம் என்றால் அதற்கு அதிக தொகையை வசூலித்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இரண்டு வீடுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.</p><p></p><p> 

சிலர் அவருக்கு 7 லட்சம் வரை கூட பணம் கொடுத்திருக்கிறார்களாம். இது குறித்து அந்த மூதாட்டி சமீபத்தில் மிர்யம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்துள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-arrested-for-flying-a-drone-camera-1786339705"></link>
            <id>https://jvpnews.com/article/boy-arrested-for-flying-a-drone-camera-1786339705</id>
            <summary type="text">&amp;nbsp; பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சௌத்பார் - பனங்கட்டுகொட்டு பகுதியில் வைத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02de4a7b-280d-4df9-b28a-f411ab844e6c/26-6a79617ab1b58.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் கேமரா பாதுகாப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுத்தத்திற்குப் பின் துணுக்காய் மக்களுக்கு விமோசனம்; மகிழ்ச்சியில் பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/post-war-bus-service-from-thunukkai-to-mullaitivu-1786338844"></link>
            <id>https://jvpnews.com/article/post-war-bus-service-from-thunukkai-to-mullaitivu-1786338844</id>
            <summary type="text">யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>


இந் நிலையில் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f59831-7d2f-4b4d-ab43-87d86661334e/26-6a795e1db6de8.webp' /></p><h2>மக்களின் நீண்டகால கோரிக்கை</h2><p>
</p><p>
 குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
</p><p>
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்&nbsp; துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
</p><p>
இதன் பயனாக குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p><b>
பேருந்து புறப்படும் நேரங்கள்,</b></p><p>
காலை 6.00 மணி – துணுக்காய்

காலை 6.10 மணி – மல்லாவி

காலை 7.00 மணி – மாங்குளம்
ழகாலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும் குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T05:11:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை; நாளை காலைவரை அவதானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/department-of-meteorology-issues-red-warning-1786337574"></link>
            <id>https://jvpnews.com/article/department-of-meteorology-issues-red-warning-1786337574</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p><p>



இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று(10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a86ac28-2b82-4fa2-b668-d9d31bee8b0f/26-6a795927c92ae.webp' /></p><h2>&nbsp;அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்&nbsp;எச்சரிக்கை</h2><p> 



இதற்கமைய, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p>&nbsp;அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.



மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் .</p><p>&nbsp;இதன்போது கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T04:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; விசேட போக்குவரத்து சேவைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/advanced-level-examinations-special-bus-services-1786337272"></link>
            <id>https://jvpnews.com/article/advanced-level-examinations-special-bus-services-1786337272</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. </p><p>

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eeac468-6350-4ce5-b8ae-ee9d37d23df2/26-6a7957f9ac9eb.webp' /></p><h2>விசேட போக்குவரத்து சேவைகள்&nbsp;</h2><p> </p><p>

 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதற்காக சுமார் 1,700 'சிசு செரிய' பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89398153-5dfd-47f3-8283-5f9f5b7a2c24/26-6a796252879da.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

பரீட்சைக் காலத்தில் பாடசாலை பேருந்து சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக இயக்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b074aa4a-9115-450b-a381-279486f6d92c/26-6a796253733a8.webp' /></p><p>
</p><p>
அத்துடன், பரீட்சைக் காலம் முழுவதும் எவ்வித ரத்துகளுமின்றி வழக்கமான கால அட்டவணையின்படி தொடருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பாதை பராமரிப்புப் பணிகள் பரீட்சைக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:45:36+00:00</updated>
        </entry>
    </feed>
