<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-27T16:37:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909"></link>
            <id>https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909</id>
            <summary type="text">மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p> 

இதன் காரணமாகத் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது கடினமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள், மதுவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb0d68a-3087-4ee5-bb48-7889d368b96c/26-6a6787f68a88b.webp' /></p><p>மதுபான உற்பத்தியின் போதும் சேமிப்புச் செயற்பாடுகளின் போதும் மதுசாரம் ஆவியாதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>

குறிப்பாக, போத்தல்களில் அடைக்கும் இயந்திரங்களுக்குச் மதுசாரத்தைச் செலுத்தும் போதும், நவீன இயந்திரங்கள் மூலம் போத்தல்களில் அடைக்கும் செயற்பாடுகளின் போதும் இவ்வாறு அதிகளவில் மதுசாரம் ஆவியாகின்றது.</p><p> 

இது தவிர, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மதுபானப் போத்தல்களைச் சமர்ப்பிக்கும் போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் மதுபானப் போத்தல் தொகுதிகளும் இந்த வீணடிப்புச் சதவீதத்தின் கீழேயே கணக்கிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

மதுவரித் திணைக்களத்தினால் இலக்கம் 991 உடைய மதுவரி அறிவித்தல் மூலம் கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி இந்த புதிய திருத்தப்பட்ட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தென்னை மற்றும் பனை சாராய உற்பத்திகளின் போது ஏற்படும் வீணடிப்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு முன்னர் மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த இலக்கம் 151 உடைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தை, திருத்தப்பட்ட 991ஆம் இலக்க அறிவித்தல் மூலம் இவ்வாறு குறைத்தது ஒரு தன்னிச்சையான செயலாகும் என மதுபான உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>

எனவே, இந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தைக் குறைப்பதற்கு முன்னர், இந்த வீணடிப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன, எதன் அடிப்படையில் நிகழ்கின்றன மற்றும் அதற்குப் பங்களிக்கும் அறிவியல் காரணிகள் யாவை என்பது குறித்து சரியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான பரிசோதனையை மேற்கொள்வது அத்தியாவசியமானது என உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை; அதிர்ச்சித் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&amp;nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவ்நீத் கௌருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beba2bd0-31f8-4778-b077-8df3575443a0/26-6a6750ff4e597.webp' />]</p><h2>திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



இந் நிலையில் , பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் ஒரு நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். </p><p>சிறிது தூரம் சென்றதும் அப்பெண்ணிடம் அந்த நபர் ஏதோ பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.</p><p></p><p> </p><p>



இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த ஷரன்ஜித் சிங் (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>


 இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும் , இந்த கொலைக்கான பின்னணி மற்றும் அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
</p><p></p><p>


 சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கனடா பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து புதிய அரசாங்கத்தில் 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668"></link>
            <id>https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668</id>
            <summary type="text">இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>



அவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f708fd3-44f9-4a40-ba49-0dbc81752192/26-6a67543dca77a.webp' /></p><h2>இலங்கைத் தமிழர் வம்சாவளி&nbsp; உமா குமரன்</h2><p> இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகச் சமத்துவம் சார்ந்த முக்கியப் பணிகளை மேற்கொள்வார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df3dafa-eac9-4983-937f-d8a68f8f8356/26-6a67543ead3fd.webp' /></p><p>



தொழிலாளர் கட்சியின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரியாக ஹர்பிரீத் உப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும்கட்சியின் விதிமுறைகளை ஒருங்கிணைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சரியாகச் வழிநடத்தும் பொறுப்புகளை செய்வாரென கூறப்படுகின்றது.</p><p> 



இந் நிலையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கியத் துறைகளிலும், வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பத் துறையான AI அமைச்சின் முதல் அமைச்சராகவும் இந்திய வம்சாவளியினர் பொறுப்பேற்றிருப்பது உலகளவில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.</p><p></p><p>அதேவேளை இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரும், வெளியுறவுத் துறையில் இளைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருமான இந்து மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் ஆகியோருடன் சேர்த்து, தற்போது அமைச்சரவையின் முன்னவரிசையில் (front bench) இரண்டு இந்து மற்றும் இரண்டு சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727"></link>
            <id>https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை&nbsp; இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2070e472-e98c-4955-9251-8e30f1abe3f1/26-6a6748c094a34.webp' /></p><h2>&nbsp;கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.</p><p>&nbsp;இந் நிலையில்&nbsp; அரசியல் கூட்டங்களில் பலியாவோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p></p><p>

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்கள் செல்லாது எனவும் அவற்றை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்காள் குரிப்பிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் மோதல் நிறுத்தம்; மசகு எண்ணெய் விலை சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899"></link>
            <id>https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
</p><p>
இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db051e2-e4f5-4610-87f1-aa2ce84ac922/26-6a675cf5443a4.webp' /></p><p>
</p><p>
அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
மற்றும் பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398"></link>
            <id>https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f380335-55bf-4e82-bbf8-366581c92c8f/26-6a6737d7b7983.webp' /></p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய இலவச விசா ; இந்திய உயர்ஸ்தானிகராலயம் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
</p><p>
புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cdf0b7-b777-43fd-b137-9c1f508f0249/26-6a6758afedc7f.webp' /></p><p>
</p><p>
இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாகப் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தூதரக சேவை மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.</p><p></p><p>
</p><p>
இந்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட பயணிகள் அனைவரும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்ட போதிலும், விசா சேவை மையத்துக்கான செயலாக்கக் கட்டணமாக 1,855 இலங்கை ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-27T13:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே ரிட் மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9d7e03d-f33f-4031-b090-b752ed4a9c2b/26-6a674e267b5fc.webp' /></p><p>
</p><p>
குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> 

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான மருந்து பாவனை; பாடசாலை மாணவி பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-schoolgirl-due-incorrect-medication-use-1785150333"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-schoolgirl-due-incorrect-medication-use-1785150333</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கடந்த 24 ஆம் திகதி, குறித்த மாணவி வீட்டில் இருந்த குளிசைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். 

இதன் காரணமாக திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாகப் பொகவந்தலாவ வைத்தியசாலையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6cf97ee-1ece-4598-bd80-a72040ac4230/26-6a6742b332810.webp' /></p><p>

எனினும், வைத்தியர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

 சம்பவம் குறித்து பொகவந்தலாவப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798"></link>
            <id>https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb64786-ac91-4dfc-8356-cb1d5a49511c/26-6a6702b84c5c2.webp' /></p><p></p><h2>300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள்...</h2><p>
</p><p>


நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>



எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-official-department-of-motor-traffic-arrested-1785151415"></link>
            <id>https://jvpnews.com/article/ex-official-department-of-motor-traffic-arrested-1785151415</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சுங்க அனுமதி மற்றும் வரிகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b439c04-f71c-429c-a164-769fa1de82f1/26-6a673fb929a01.webp' /></p><p>
</p><p>
இலங்கை சுங்கத்திடம் அனுமதி பெறாமலும், பொருந்தக்கூடிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு குறித்த நபர் உதவி புரிந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
வாகனத்தின் முதலாவது உரிமை மாற்றத்திற்குத் தேவையான கவுண்டர் இலக்கத்தை வழங்கியதோடு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதனுடன் தொடர்புடைய தரவுகளை முன்னாள் அதிகாரி பதிவேற்றம் செய்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:21:44+00:00</updated>
        </entry>
    </feed>
