<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T14:40:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் வயிற்றில் 14 பேனா... 5 கரண்டிகள்; மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709"></link>
            <id>https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709</id>
            <summary type="text">&amp;nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

ஆந்திரா , பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a2ee60-3935-4a32-9cf1-5524f5ce2eab/26-6aa0041f807b3.webp' /></p><p></p><h2>10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பு</h2><p> </p><p>

வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது.</p><p> 

ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><p></p><p> </p><p>

வைத்தியர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக 'லாப்ரோஸ்கோபி' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். </p><p>

வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>

வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p> தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார். 

அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது.</p><p></p><p> மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

 உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருமண மேடையில் ஒன்று சேர்ந்த முக்கிய பிரபலங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078"></link>
            <id>https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா நிறுவுனரும் புலம்பெயர் தொழில் அதிபருமான கந்தையா- பாஸ்கரன் , யாழ்ப்பாணம் இந்திய தூதரக துணைத்தூதுவர் சாய் முரளி, மற்றும் இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b00f7b-9fb9-4a4f-8f22-f88f261b8004/26-6aa001a7a899d.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 இல் மனிதர்கள் 'சூப்பர் ஹியூமனாக மாற்றம்; வைரலாகும் பாபா வங்காவின் கணிப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-2027-prophecy-on-superhuman-1788873975"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-2027-prophecy-on-superhuman-1788873975</id>
            <summary type="text">&amp;nbsp; 2027-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான நோய் அல்லது மரபணு சோதனைகள் (Genetic Mutations) மூலமாக சில மனிதர்களுக்கு &#039;சூப்பர் ஹியூமன்&#039; (Superhuman) எனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2027-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான நோய் அல்லது மரபணு சோதனைகள் (Genetic Mutations) மூலமாக சில மனிதர்களுக்கு 'சூப்பர் ஹியூமன்' (Superhuman) எனப்படும் அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றது.
</p><p>

பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா 1996-ஆம் ஆண்டே காலமானார். அவர் தனது கணிப்புகளை எங்கும் எழுதி வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9011ac20-4b7b-4de6-a21c-7a06435c2233/26-6aa00cf96bacb.webp' /></p><h2>&nbsp;அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும்</h2><p> </p><p>அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வாய்மொழியாகக் கூறியவற்றின் அடிப்படையிலேயே இத்தகைய கணிப்புகள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ஆனால்&nbsp; &nbsp; அறிவியல் பூர்வமான உண்மை அல்ல:</p><p> மரபணு மாற்றங்கள் அல்லது நோய்கள் மூலம் மனிதர்கள் ஒரே வருடத்தில் சூப்பர் ஹியூமன்களாக மாறுவது என்பது அறிவியல் ரீதியாகச் சாத்தியமற்றது.</p><p></p><p>இது வெறும் கற்பனையான அறிவியல் புனைகதை (Science Fiction) போன்றது மட்டுமே ஆகும்

இது தவிர, வரும் ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்களைச் சந்திப்பார்கள், உலகப் போர் ஏற்படும், செயற்கை நுண்ணறிவு (AI) உலகை ஆக்கிரமிக்கும் போன்ற கணிப்புகளும் பாபா வங்காவின் கணிப்புகள் என்ற பெயரில் உலா வருகின்றன.
</p><p>
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் 9/11 தாக்குதல்கள் குறித்த கணிப்புகளைச் சரியாக வெளியிட்டதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா(Baba Vanga), தற்போது அடுத்த ஆண்டுக்கான ஒரு திடுக்கிடும் கணிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p>

முன்னதாக, 2025-ஆம் ஆண்டில் வேற்றுக்கிரக உயிரினங்கள் பூமியில் தரையிறங்கும் என்று 2024-ல் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.
</p><p>
பார்வையற்ற அந்த பல்கேரியப் பாட்டி இறந்து சுமார் மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர் இறப்பதற்கு முன் கூறிய கணிப்புகள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-visits-sri-lanka-1788857282"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-visits-sri-lanka-1788857282</id>
            <summary type="text">38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார்.



இந்திய பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் நாட்டை வந்தடைந்தார்.
</p><p>


இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423928cc-e085-4651-a8b3-baaa0f6d4d44/26-6a9fcbc428cad.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு</h2><h2><span style="font-size: 14px;">ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</span></h2><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>அதேளை&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</p>]]></content>
            <updated>2026-09-08T13:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி காதல் ; திருவிழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485"></link>
            <id>https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இன்னிலையில் மஆணவியை வன்புனர்த சம்பவம் தொடர்பாக, செருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8112e36-c174-4387-9e52-9113819b3946/26-6a9fe3ff50281.webp' /></p><h2>தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல்</h2><p> </p><p>

பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p></p><p>எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புனவுர்க்கு உடபடுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல் உறவு மூலம் அந்த மாணவியை ஏமாற்றி, பெரஹெரா திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செருவிலவுக்கு வரவழைத்தே கூட்டாகப் வன்புனர்வு செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குற்றத்தைச் செய்த முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>

 தாக்குதலுக்குள்ளான மாணவி மேலதிக சிகிச்சைக்காகக் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் முத்தூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , மீலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T13:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260"></link>
            <id>https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. </p><p> 



குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும்&nbsp; தெரிவிக்கபப்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fdee48-96f7-4444-b9cb-a25d2b3ea31a/26-6aa0064604f7d.webp' /></p><h2>&nbsp;நில மட்டத்திற்கு மேலே தண்ணீர்&nbsp;</h2><p>



அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><p>
</p><p>
நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.



இது குறித்து பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,</p><p></p><p>



குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும். </p><p>



இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றும் அவர்கள்&nbsp; கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-on-srilanka-expressways-1788869116</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa144a1-9d1d-4f8b-b78a-bcc5896e5b22/26-6a9ff9fe4fda6.webp' /></p><h2>மேலதிக கால அவகாசம்&nbsp; வழங்கப்பட மாட்டாது</h2><p>

அதேசமயம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.</p><p></p><p>
</p><p>
 இந் நிலையில் , செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை கடல் எல்லைக்கு அருகில் 47 கப்பல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/middle-east-tension-47-ships-near-sri-lanka-water-1788867351"></link>
            <id>https://jvpnews.com/article/middle-east-tension-47-ships-near-sri-lanka-water-1788867351</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b350273f-0762-49cb-85bc-78ff710714d1/26-6a9ff3190be98.webp' /></p><h2>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர்&nbsp;</h2><p>
</p><p>
 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
</p><p>
 

இந்தக் கப்பல்களில் ஈரானியக் கப்பல்களும் ஏனைய நாடுகளின் கப்பல்களும் அடங்குவதாகவும், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 

இந்தக் கப்பல்கள் எதுவும் இதுவரை இலங்கையிடம் எந்தவித வசதிகளையும் கோரவில்லை என்றும், இலங்கையும் அவற்றுக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இருப்பினும் கடற்படையினர் இது குறித்து அவதானித்து வருவதாகவும், அரசாங்கம் இதில் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகன் சிறையில் ... களத்தில் குதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f563a342-a320-465c-b856-ef38984ee800/26-6a9fba94db441.webp' /></p><p></p><h2>முன்னதாக&nbsp;நாமல் ராஜபக்ஷ தலைமையில்&nbsp; பேரணி&nbsp; ஏற்பாடு</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460"></link>
            <id>https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788860460</id>
            <summary type="text">&amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41ddb4e-8354-4bd2-b6e7-41bd845ca4db/26-6a9fd82e57b81.webp' /></p><h2>&nbsp;நாளை வரை செல்லுபடியாகும்&nbsp;எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p> </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T09:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியம் முதல் அழகு வரை; டிராகன் பழத்தின் நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254"></link>
            <id>https://jvpnews.com/article/health-and-beauty-tips-benefits-of-dragon-fruit-1788859254</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது சந்தைகளில் பெருமளவில் விற்பனையாகும் டிராகன் பழம் (Dragon Fruit), தனது ஈர்க்கக்கூடிய தோற்றத்தால் மட்டுமல்லாமல், உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ நன்மைகளையும் வழங்குகின்றது.</p><p>
 கள்ளிச்செடி குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன அதிகளவில் நிறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f01ba6-8f01-47ab-8cc4-4fdd5d43a18a/26-6a9fd377ab5aa.webp' /></p><h2>&nbsp;ஆரோக்கிய&nbsp; நன்மைகள்</h2><p>
</p><p>
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபிளவனாய்டுகள் அதிகளவில் காணப்படுவதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.</p><p> 

பருவகாலத் தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வழிவகுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e58b8c3-0e61-46d0-86b6-b115b8ddbb94/26-6a9fd378681df.webp' /></p><p>

இதில் உள்ள குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. </p><p>

 இதன் கருப்பு நிற விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30da72b9-b579-47be-afa2-93d6eeb504fd/26-6a9fd37921dd8.webp' /></p><p>

டிராகன் பழத்தில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.
</p><p>
 இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமச் செல்களைப் புதுப்பித்து, வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையுடன் தோற்றபொலிவை பேணவும் டிராகன் பழம் உதவுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T09:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார்.
</p><p>
வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d71a82-bd2d-40db-8a15-ce00b4405d0b/26-6a9fb891d8913.webp' /></p><h2>&nbsp;23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>

இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும், தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T09:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-remains-in-remand-1788857610"></link>
            <id>https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-remains-in-remand-1788857610</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இன்று செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d9f623-bb20-492f-83d1-c3eea80f1e6a/26-6a9fcd0c3ba46.webp' /></p><p></p><p>இந் நிலையில், இன்றையதினம் மீண்டும் தேரர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேரர் கைதானமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-08T08:50:24+00:00</updated>
        </entry>
    </feed>
