<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T02:29:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடி கைதான இளம் சீன பெண் தொழிலதிபர்கள் ; அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059</id>
            <summary type="text">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்கிழமை (28) விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய சீன நாட்டுத் தொழிலதிபர்களாக உள்ள பெண்களாவர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34041fa7-b013-456e-a539-cb6b50ab6259/26-6a922b8d908a3.webp' /></p><h2 style="text-align: justify; ">சிகரெட்&nbsp;கொள்வனவு </h2><p style="text-align: justify; ">

இவர்கள் சீனாவில் இந்த சிகரெட்டுகளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">


சந்தேக நபர்கள் கொண்டுவந்த 4 பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட இரு சீனப் பெண்களையும் சுங்கப் பொறுப்பில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் இரட்டை பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288</id>
            <summary type="text">&amp;nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அதாவது செப்டம்பர் 7ஆம் திகதி புதன் பகவான் கன்னி ராசியிலும் அடுத்து இருபது நாட்களில் செப்டம்பர் 26 ஆம் திகதி&nbsp; துலாம் ராசிக்கும் இடம் இடம் மாறுகிறார்.</p><p>


இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். இதில் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில்&nbsp; வாழ்க்கையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7dbc9-3862-4a0c-b9d6-da4e777e7abc/26-6a922f6a92aea.webp' /></p><h2>&nbsp;எந்த ராசிகள்</h2><p>

</p><p><b>

மேஷம்:
</b>மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. அதிலும் தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத வழியில் இவர்களுக்கு பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
</p><p><b>
சிம்மம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டம் புதன் பகவானுடைய இரட்டை பெயர்ச்சி பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவர்களுக்கு தகவல்கள் மற்றும் நினைத்த காரியங்கள் கைகூடிவரும். திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி இவர்கள் செய்து முடிப்பார்கள்.

</p><p><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு பல வகைகளில் நன்மையை வழங்கப்போகிறது. செயல் திறன் அதிகரிப்பதோடு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. நீண்ட நாட்கள் நீங்கள் திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள்.</p>]]></content>
            <updated>2026-08-29T01:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த தந்தையின் நண்பருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437</id>
            <summary type="text">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரவக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5890a7f0-a9ea-4858-b9f6-d04098b06563/26-6a92244766969.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">குறித்த சிறுவன் தனது வீட்டின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு பட்டம் விடச் சென்ற போது&nbsp; &nbsp;சந்தேகநபரான தந்தையின் நண்பரால்&nbsp; துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை&nbsp; விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊருபொக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-29T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரில் கடத்தி, கொல்லப்பட்ட சீன நாட்டவர் ; சீகிரியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-killed-in-port-city-1787961459"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-kidnapped-and-killed-in-port-city-1787961459</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) சீகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் சீன நாட்டின் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர், சீன நாட்டவர் ஒருவர் பலவந்தமாக கடத்தப்பட்டதுடன், பின்னர் அவரது சடலம் எஹலியகொட பகுதியில் உள்ள வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc086e8-4b26-494f-beed-64f51af30d95/26-6a922074a0cb7.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதுடன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த ஏனைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதற்கமைய, சீகிரியா பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சீன நாட்டவர்களிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T23:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலமான சட்டவிரோத செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220</id>
            <summary type="text">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">வியாழக்கிழமை (27)&nbsp; வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062f00b7-3478-40a0-8bcc-9056b3500018/26-6a92042f280cb.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத மதுபானம்</h2><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T23:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு ; ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486"></link>
            <id>https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d62d7d2-11bf-4a42-94ec-4b89a89bc17c/26-6a920150dd256.webp' /></p><h2 style="text-align: justify; ">திருத்தங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்படுவதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இதன்போது, ​​இது நிறைவேற்றுத்துறையின் தலையீடு இன்றி இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைப்பதும் தாமதங்களைக் குறைப்பதும் இத்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T22:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்காக பறிபோன உயிர்கள் ; வைரலான காணொளி; விசாரணையில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. </p><p>அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3ca4e1-a935-4c25-9db8-c80b1a3fab85/26-6a91e4d163447.webp' /></p><h2>&nbsp;ஐபோன்</h2><p>
</p><p>
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். </p><p>முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..

gunal
அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். </p><p>ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது..</p><p></p><p> ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். </p><p> பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
</p><p>
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. </p><p>ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T22:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754"></link>
            <id>https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754</id>
            <summary type="text">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'நவோதயா புரம்' வீட்டுத்திட்டம்&nbsp; வெள்ளிக்கிழமை (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7306a834-9a62-4f8c-b0ad-a5a327de8f7f/26-6a91fe742f311.webp' /></p><h2 style="text-align: justify; ">இலங்கை அகதிகள்</h2><p style="text-align: justify; ">

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

</p><p style="text-align: justify; ">
யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்த சகல தடைகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளேன். அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.</p><p style="text-align: justify; ">&nbsp;அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T21:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634"></link>
            <id>https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832572e0-ca57-4b86-b533-191dc5f6b582/26-6a91f62bc5cb6.webp' /></p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>

இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களில் அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:57:23+00:00</updated>
        </entry>
    </feed>
