<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-30T22:30:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியைக் காட்டி கொலை முயற்சி ; அதிரடி கைதான பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-over-gunpoint-murder-attempt-1785449763"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-over-gunpoint-murder-attempt-1785449763</id>
            <summary type="text">கல்கிஸை, பன்சல வீதிப் பகுதியில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிஸை, பன்சல வீதிப் பகுதியில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் 48 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;">பொலிஸாரின் தகவலின்படி, இக்குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதுடன், ரத்மலானையைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலமாகவே அது கைமாற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98ef897-6e29-46b5-9f87-d90da74a371b/26-6a6bcd253b2d3.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நேரத்தில் அப் பெண்ணிடமிருந்து 10.270 கிராம் ஐஸ் போதைப்பொருளும், இக்குற்றச் செயலுக்கான கூலியாக வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35,060 ரூபாய் பணமும்பொலிஸாரினரால் கண்டெடுக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், அன்றைய தினம் சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர்&nbsp; ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
மேலும், கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளைத் தொடரவுள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T22:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான ‘ரத்மலானே சைமா’ ; விசாரணையில் அம்பலமான பெரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912"></link>
            <id>https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a0425f-01a8-4c39-a8fb-548788f0ba46/26-6a6bc201c2827.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

 

இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற 'ரத்மலானே சைமா' உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் இவரே வழிநடத்தியுள்ளார் </p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டுள்ள தோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே மலேசியாவில் தலைமறைவாக வாழ்வதற்கு, கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் இவர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

தற்போது பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் 'குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் சில காலம் செயற்பட்ட இவர், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

 

'குடு அஞ்சு' சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அது குறித்து கஞ்சிபானி இம்ரான் சைமாவிற்கு எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் கஞ்சிபானியுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார்.

 

இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T21:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T21:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718"></link>
            <id>https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718</id>
            <summary type="text">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் பொருட்டு மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், மற்றொருவர் பகமூண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce50317-0a22-4341-8da2-083707cf033c/26-6a6bb96f90fb9.webp' /></p><h2 style="text-align: justify; ">தடுப்புக் காவல்</h2><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; ">கடந்த 25ஆம் திகதி, பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகத்தின் முன்பாக நீல நிற முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">


சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட அவசர வீதித் தடைச் சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை நவகமுவ பொலிஸார் கைதுசெய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவு பெறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று (29) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய இளம் ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323</id>
            <summary type="text">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">புதன்கிழமை மாலை வேளையில் புல்மோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae7d64b-da80-416f-bb21-b1dd5916f3d9/26-6a6ba844dc2c3.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">விபத்தில் படுகாயமடைந்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T19:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223"></link>
            <id>https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.
</p><p>

போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய வீதிகள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, நோயாளர்களிடம் விரைவாக சென்றடைய இச்சேவை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821a4fbd-4d00-469d-88eb-5b9ec0609a68/26-6a6ba3f8d9e9b.webp' /></p><h2>அவசர மருத்துவ உதவி&nbsp;&nbsp;</h2><p>

நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, நோயாளருக்குத் தேவையான உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
</p><p>
இச்சேவையில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
இதற்காகச் விசேடப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் அவசரப் பிரிவுகளில் களமிறக்கப்படுவர்.</p><p></p><p>
</p><p>
அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய நகர்ப்புறங்களில் இச்சேவை முதன்மையாகச் செயல்படுத்தப்படும்.

</p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்பகட்டமாக கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு சோதனையில் சிக்கிய பெண் ; சோதனையில் கிடைத்த பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142"></link>
            <id>https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்று (29) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 75,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24995d6-f2c3-4971-8b79-22ed54f6a959/26-6a6b9fecaca7f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T19:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள் ; லொறிக்கு தீ வைத்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449"></link>
            <id>https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449</id>
            <summary type="text">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,

கண்டெய்னர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb18d0c-475c-4d69-a7b9-af0c0c4508bb/26-6a6b8b70c62ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள், விபத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p style="text-align: justify; ">இதனை அடுத்து கட்டான பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றும் 19 வயதுடைய&nbsp; இரு இளைஞர்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியின் சாரதி பன்னில தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த தொழிலதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb78aea-4fe1-4326-9fd9-ca0058258853/26-6a6b824b5122f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் இன்று காலை 10.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த "மென்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையைச் சேர்ந்த 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 சிகரெட் கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894"></link>
            <id>https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c03cba5-0e20-4eb6-887c-eb8d32078db9/26-6a6b4cbfddf75.webp' /></p><h2>முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறையும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.
</p><p>
அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆனால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
</p><p>
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
</p><p>

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்கலாம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
</p><p>
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

இவர்களை நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-30T16:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் ; கடுமையாக்கப்படும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263</id>
            <summary type="text">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95b4513-378e-4411-a1bf-14275ee236ee/26-6a6b7f2b07a70.webp' /></p><h2 style="text-align: justify;">வர்த்தமானிப் பத்திரிகை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
 

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T16:34:29+00:00</updated>
        </entry>
    </feed>
