<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-14T07:38:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி ; மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-lightning-strike-1789371008"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-lightning-strike-1789371008</id>
            <summary type="text">கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

நேற்று (13) பிற்பகல் 4:45 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796e2e59-3feb-4330-9964-18ab372073f6/26-6aa7a4184ef91.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

உயிரிழந்த நபர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மின்னல் தாக்கத்தால் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேசமக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T07:33:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் ஆயுர்வேத கடையில் நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/long-running-incident-at-ayurvedic-shop-1789369894"></link>
            <id>https://jvpnews.com/article/long-running-incident-at-ayurvedic-shop-1789369894</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b783181-265b-42a0-8a5f-351d303b2628/26-6aa79e27c1e63.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">



அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T07:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வயோதிப பெண்ணுக்கு சொந்த வீட்டிலேயே அரங்கேறிய பயங்கரம் ; அதிகாலையில் கேட்ட அலறல்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-faces-horror-in-her-own-jaffna-home-1789367453"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-faces-horror-in-her-own-jaffna-home-1789367453</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04ee9b92-c195-4323-b840-0454bcac6a04/26-6aa7949ed4c90.webp' /></p><h2 style="text-align: justify; ">அலறல் சத்தம்</h2><p style="text-align: justify; ">

புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, அருகாமையிலுள்ள வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்தபோதே, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T06:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் மூடப்படும் யால தேசிய வனத்தின் 2 வலயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-yala-zones-to-close-from-today-1789365911"></link>
            <id>https://jvpnews.com/article/two-yala-zones-to-close-from-today-1789365911</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> 

அதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/522a898f-b9ab-4ada-b460-6ba37e8f57ff/26-6aa78e9937c0b.webp' /></p><h2 style="text-align: justify; ">வறட்சியான காலநிலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

யால தேசிய வனம், 44 பாலூட்டி இனங்கள், 215 பறவை இனங்கள், 47 ஊர்வன இனங்கள் மற்றும் 21 மீன் இனங்களின் வாழிடமாக திகழ்கிறது. </p><p style="text-align: justify; ">

இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள காலம் ஒகஸ்ட் முதல் மார்ச் வரை என்பதுடன், இம்முறை சுற்றுலாப் பருவத்தை எல் நினோ (El Niño) நிலைமை கடுமையாகப் பாதித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதிக வெப்பமான வானிலை காரணமாக யால தேசிய வனத்தின் பல நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளதுடன், இதனால் பூங்காவில் வாழும் விலங்குகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">மேலும், அதிக வறட்சியான வானிலை காரணமாக மரங்கள், செடிகொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து போயுள்ளதால், யால பூங்காவின் விலங்குகள் உணவுப் பற்றாக்குறைக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

நிலவும் சூழ்நிலையினால் விலங்குகளின் தாகத்தைத் தணிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி, மாணிக்க கங்கையின் 4 இடங்களில் சூரிய மின்தகடு மோட்டார்களைப் பயன்படுத்தி பெறப்படும் நீரை, நிலத்தடி குழாய்கள் மூலம் பூங்காவில் உள்ள குளங்களுக்கு திறந்துவிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இது தவிர, தினமும் சுமார் 2 இலட்சம் லீட்டர் நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பூங்காவின் செயற்கை மற்றும் இயற்கை குளங்களை நிரப்பும் பணியையும் வனஜீவராசிகள் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "> 

எனவே, நிலவும் வறட்சியான வானிலையால் உணவையும் நீரையும் தேடிச் செல்லும்போது விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, ஒரு மாத காலத்திற்கு யால தேசிய வனத்தின் மண்டலம் 01 மற்றும் 02 ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T06:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 97000 க்கும் அதிகமானோருக்கு டெங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-97-000-people-affected-by-dengue-1789365176"></link>
            <id>https://jvpnews.com/article/over-97-000-people-affected-by-dengue-1789365176</id>
            <summary type="text">இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் டெங்கு நோய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f73464-8d76-4b99-b3fe-c46483ee9a64/26-6aa78bba01d90.webp' /></p><p style="text-align: justify; "> 

இதனிடையே, செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

மொத்த டெங்கு நோயாளர்களின் பதிவைக் கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 20,742 ஆகும். </p><p style="text-align: justify; ">

இது தவிர, கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T05:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மூத்த கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-sri-lankan-artist-daya-nellampitiya-dies-1789364032"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-sri-lankan-artist-daya-nellampitiya-dies-1789364032</id>
            <summary type="text">இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். 

களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். </p><p style="text-align: justify; ">

களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8da22058-d19b-4578-bfd5-c6344d8942c3/26-6aa78742403da.webp' /></p><h2 style="text-align: justify; ">இறுதிச் சடங்குகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கண்டி பாரம்பரிய நடனத்தைக் கற்பித்த ஒரு சிறந்த ஆசிரியையாகவும் கருதப்படுகின்றார். </p><p style="text-align: justify; ">

பாடகரான சேன பொன்சேகாவின் மனைவியான இவர், தற்போதைய இலங்கை கலைத்துறையில் உள்ள பல மூத்த கலைஞர்களின் ஆரம்பகால ஆசிரியையுமாவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிப்பதற்காக அவர் ஆற்றிய சேவை ஈடு இணையற்றதாகும்.</p><p style="text-align: justify; "> 

அவரது இறுதிச் சடங்குகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T05:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிக்கச் சென்ற 11 வயது இளம் பிக்குவிற்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571"></link>
            <id>https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571</id>
            <summary type="text">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் &#039;ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் 'ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து உடுதும்புர பொலிஸ் நிலையத்திற்குப் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee87a91f-e807-4632-9d53-93d7e0cdb4c6/26-6aa7818d3628b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள விகாரையொன்றின் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உடுதும்பர பகுதியில் நடைபெற்ற தான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இப் பிக்கு, ஏனைய சில பிக்குகளுடன் இணைந்து 'ஹீன் கங்கையில் குளிக்கச் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T05:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல் ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய உகண்டா பிரஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652"></link>
            <id>https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545e8e2c-9736-4f9e-854c-e91fb4057aa8/26-6aa77df65ed12.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். </p><p style="text-align: justify;">

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p style="text-align: justify;">[<span style="text-align: left;"></span></p><p style="text-align: justify;">சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;">

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T04:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிக்கு தனியார் வகுப்பு ஆசிரியர் செய்த தகாத செயல் ; தொலைபேசியில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721</id>
            <summary type="text">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மேலதிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80362ebc-611f-40b9-8ce4-c5cd9e9508af/26-6aa77a52d2c5a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T04:38:50+00:00</updated>
        </entry>
    </feed>
