<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T06:53:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLIATE மறுசீரமைப்புக்கு புதிய திட்டம் ; கோப் உபகுழுவில் ஆய்வு முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-plan-for-sliate-restructuring-progress-cope-1784875459"></link>
            <id>https://jvpnews.com/article/new-plan-for-sliate-restructuring-progress-cope-1784875459</id>
            <summary type="text">இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வை நடைமுறைப்படுத்தும் வழிமுறை, அதற்கான கால அட்டவணை மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உபகுழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தலைமையில் குறித்த உபகுழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>ஆய்வை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள நிறுவன செயற்பாட்டுக் குழு மற்றும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e128ae-3ede-4555-80d5-f0566bd8c7e5/26-6a6309c50baa1.webp' /></p><p>
</p><p>


மேலும், ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள கலப்பு ஆய்வு முறையியல், வினாக்கொத்துகளைத் தயாரித்தல் மற்றும் தரவுகளைச் சேகரிக்கும் செயன்முறை தொடர்பிலும் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p> இதேவேளை, இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் உபகுழுவினால் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p> 



ஆய்வுடன் தொடர்புடைய மனித வள மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை பிரிவுகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது, ஆய்வின் செயற்பாட்டு கால அட்டவணையை தயாரித்தல் மற்றும் கைத்தொழில் துறையின் பங்குதாரர்களுடன் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>


அத்துடன், வர்த்தக சம்மேளனங்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட SLIATE நிறுவனங்களில் கள ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>ஆய்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து முன்வைக்கவும் உபகுழு தீர்மானித்துள்ளது.
</p><p>


இந்த உபகுழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்கவும் கலந்துகொண்டார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75d288af-94d5-4829-88f9-b0194aea7999/26-6a6309c5b1ac1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909502ff-64ea-4e96-bbe0-4eb28faa6bff/26-6a6309c661879.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477df9e4-8f6e-4670-a373-138bc11226e2/26-6a6309c71a2ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e128ae-3ede-4555-80d5-f0566bd8c7e5/26-6a6309c50baa1.webp' /></p>]]></content>
            <updated>2026-07-24T06:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வு விவகாரம்; நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/neet-exam-issue-pm-modi-releases-video-at-midnight-1784875057"></link>
            <id>https://jvpnews.com/article/neet-exam-issue-pm-modi-releases-video-at-midnight-1784875057</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா தளக் கட்சியினர் கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
</p><p>
அதன்பின் அவர்களோடு பல மாணவர் இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 
டெல்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493afe2b-d880-4bd4-a945-d471f9346809/26-6a63083280256.webp' /></p><h2>போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி</h2><p> </p><p>

மாணவர்களின் போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்..

போலீசார் கடுமையாக தாக்கியதில் பல மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு வாலிபர் கண் பார்வையை இழந்துள்ளார்.</p><p> 

ஒருபக்கம் பல சினிமா பிரபலங்களும் மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்,</p><p></p><p> ‘இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வினாத்தாள் கசிவு பற்றி ஆலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும்.</p><p> தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
 மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வினாத்தாள் கசிவு தொடர்பகா விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-07-24T06:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் உதவியாளரிடம் அத்து மீறல்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி பதவி நீக்கமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-criminal-court-chief-khan-removed-un-1784874286"></link>
            <id>https://jvpnews.com/article/international-criminal-court-chief-khan-removed-un-1784874286</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.
</p><p>


பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



தன் மீதான பாலியல் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கரீம் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4c040e-af30-458a-9ad9-06a414fa20dc/26-6a63052fedf5b.webp' /></p><h2>குற்றச்சாட்டுகள் அனைத்தையும்&nbsp; &nbsp;திட்டவட்டமாக மறுத்துள்ள&nbsp;கரீம் கான் </h2><p>
</p><p>


அத்துடன், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் இந்த ஐ.நா கூட்டத்தில் கரீம் கான் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகின்றது.</p><p>



உலகெங்கிலும் உள்ள தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


நெருக்கடியில் சிக்கியுள்ள தலைமை சட்டத்தரணி கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவரைப் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதா இல்லையா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T06:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் திணைக்களத்திலிருந்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-announcement-public-department-of-labor-1784873658"></link>
            <id>https://jvpnews.com/article/special-announcement-public-department-of-labor-1784873658</id>
            <summary type="text">தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிரதேச, மாவட்ட மற்றும் உப தொழிலாளர் அலுவலகங்களிலும் EPF கொடுப்பனவுகள், பதிவுகள் மற்றும் டிஜிட்டல் EPF கட்டமைப்பு சார்ந்த சேவைகள் இந்த இரண்டு நாட்களிலும் வழங்கப்படமாட்டாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be80e3c6-c5df-4d32-a9ad-02e91573b594/26-6a6302bb66db2.webp' /></p><p>அதேவேளை, குறித்த தினங்களில் சேவைகளைப் பெற முன்கூட்டியே நேரம் ஒதுக்கியவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக தினத்தில் வருகை தந்து தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பழைய கச்சேரி மற்றும் மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை; அமைச்சர் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/preserve-jaffna-old-concert-hall-manthiri-manai-1784873222"></link>
            <id>https://jvpnews.com/article/preserve-jaffna-old-concert-hall-manthiri-manai-1784873222</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். </p><p>

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி , </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52927d90-cb91-48f1-ab9e-c48bacb94407/26-6a630107bca34.webp' /></p><p></p><p>பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரி கட்டத்தை பார்வையிட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55a34355-4e1c-47fe-a1f2-ad0a341eb8d6/26-6a630108755c1.webp' /></p><p> </p><p>பழைய கச்சேரி கட்டடம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து.

அதனை மிகவும் விரைவாகப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளோம்.
</p><p>
அதேபோன்று யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் என இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை; கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>


கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ec64ef-13ac-40b0-a56d-20660208bb90/26-6a62fd5101ee6.webp' /></p><p>



இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>


இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவர வழக்கில் புதிய தகவல் ; CID விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-priso-17-people-killed-shooting-cid-inform-1784869795"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-priso-17-people-killed-shooting-cid-inform-1784869795</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 969 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், 40 சந்தேக நபர்களின் புனைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 969 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், 40 சந்தேக நபர்களின் புனைப்பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று (23) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>இந்த வன்முறைச் சம்பவம் ஒரு 'குற்றம்' என நீதிமன்றம் முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b5ed9-d3c2-4429-87e2-29ed2c8c4a89/26-6a62f3a4a8945.webp' /></p><p>விசாரணையாளர்கள் இது தொடர்பான 28 பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். </p><p>அதில், உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
</p><p>


கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைக்குள் வெடித்த கடுமையான மோதல்களில், 10 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் காட்டுப்பாதை இன்றுடன் பூட்டு ;40ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-forest-route-closed-today-1784869507"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-forest-route-closed-today-1784869507</id>
            <summary type="text">வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.
 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.</p><p>
 அதன்படி இன்று பிற்பகல் 3 மணியுடன் கதிர்காமம் காட்டுப்பாதை பூட்டப்படும்.
 இந்த வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை கடந்த 10 ஆம் திகதி திறக்கப்பட்ட நிலையில் 15 தினங்களின் பின் இன்று மூடப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இம்முறை இதுவரை இப்பாதையால் சுமார் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பயணித்துள்ளதாக உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கர் தெரிவித்தார்.
அதேவேளை பாதயாத்திரையின்போது இதுவரை மாரடைப்பால் நான்குபேர் மரணித்துள்ளனர்.
</p><p> உகந்தமலை முருகனாலய வருடாந்த உற்சவம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையும்</p><p>.

இந் நிலையில் வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 10) முதல் நாளில் சுமார் 16000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:03:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகில் இந்தியா நுழைய முயன்ற இரு இலங்கையர்கள் கைது ; தமிழக பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரையில் கரையிறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b6b274-d8a0-4f3b-93f8-abbb7b20bdbd/26-6a62ed0d246b3.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் விஸ்வநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


இவர்கள் தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் நோக்கில் ஊடுருவியவர்களா அல்லது மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தமிழக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>



மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி மாணவர் போராட்டம் ; சச்சின், ஆலியா பட் ஆகியோர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-student-protest-sachin-alia-bhatt-condemn-1784866396"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-student-protest-sachin-alia-bhatt-condemn-1784866396</id>
            <summary type="text">இந்தியாவின், டெல்லி - ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின், டெல்லி - ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>


இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. </p><p>இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ad740d-cd39-4e6b-9c28-6a2f6ca35136/26-6a62e65ddff04.webp' /></p><p>மேலும், தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர், "தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்" என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் , "தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய தியாகத்தின் பயணம் உள்ளது. </p><p>அவர்கள் தங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவர்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரையும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுப்பவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி முழக்கம் ; பொலிஸாரின் விசாரணையில் வெளியான பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunshots-fired-birthday-party-police-release-infor-1784865723"></link>
            <id>https://jvpnews.com/article/gunshots-fired-birthday-party-police-release-infor-1784865723</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் நேற்று (23) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் நேற்று (23) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p>

காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa688a30-b8ce-463e-a237-853115b63c24/26-6a62e3bd398a9.webp' /></p><p>

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு, உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் நள்ளிரவு பயங்கரம் ; சீன நாட்டவரின் உடல் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-chinese-national-kidnapped-colombo-port-city-1784864553"></link>
            <id>https://jvpnews.com/article/body-chinese-national-kidnapped-colombo-port-city-1784864553</id>
            <summary type="text">கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் உடலம் எஹெலியகொட - கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் உடலம் எஹெலியகொட - கரந்தன பகுதியின் வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இலங்கையில் இயங்கும் சீனக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, புதன்கிழமை (22) இரவு 11:00 மணியளவில் மூன்று சீன நாட்டவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிற்றுந்தில் கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56fa28df-071d-4961-be29-b0abac1aca26/26-6a62df2a84422.webp' /></p><p>அவர்கள் அங்கிருந்த தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை 2:00 மணி முதல் 3:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் அடங்கிய சீனக் குழுவினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
</p><p>
குறித்த மூவரையும் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்திய அந்தக் குழுவினர், அவர்களின் கை, கால்களைக் கட்டி, முகங்களை மூடி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். </p><p>தாக்குதலுக்குப் பிறகு, இருவரைப் பலவந்தமாகக் கறுப்பு நிற வேனிலும், 'ஹாவோ சோங்' என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபரை வேறொரு வாகனத்திலும் கடத்திச் சென்றுள்ளனர்.</p><p>

கடத்தப்பட்ட இரண்டு சீன நாட்டவர்களும் போர்ட் சிட்டி வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில் வாகனத்துடனேயே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டனர். </p><p>அவர்கள் தங்களைச் சுயமாக விடுவித்துக்கொண்டு, தங்களது நண்பர்கள் மூலம் கொழும்பு துறைமுகக் காவல்துறையை அணுகி அதிகாலை 5:00 மணியளவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p>

இதன் பின்னர், நேற்று பிற்பகல் எஹெலியகொட - கரந்தன வனப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டது. </p><p>அத்துடன் இந்த உடலத்தை மறைப்பதற்காக அதன் மீது கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தாக்குதலில் தப்பிய இரண்டு சீன நாட்டவர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலத்தைப் பார்வையிட்டதில், அது கடத்தப்பட்ட 'ஹாவோ சோங்' என்பவரின் உடலம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில், ஹாவோ சோங்கைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இதற்கிடையில், இரண்டு சீன நாட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கைவிடப்பட்ட கறுப்பு நிற சிற்றுந்தைச் சோதனையிட்டதில், குண்டுகள் நிரப்பப்பட்ட Glock 44 ரக அரை-தானியங்கி துப்பாக்கி (Semi-automatic pistol) மற்றும் வோக்கி-டோக்கி (Walkie-talkie) சாதனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>குறித்த வேன் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரது பெயரிலும், பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த சிற்றுந்து கொழும்பு 05-இல் உள்ள நிறுவனமொன்றின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்த இரு சீன நாட்டவர்களும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. </p><p>உண்மைகளை விரைவாகக் கண்டறிந்து, சீன நாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
அத்துடன், இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் பாதுகாப்பு விழிப்புடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-discovered-in-chemmani-burial-ground-jaffna-1784863672"></link>
            <id>https://jvpnews.com/article/boy-discovered-in-chemmani-burial-ground-jaffna-1784863672</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p><p> அதன் அடிப்படையில், அகழ்வுப் பணிகளின் 41ஆவது நாளான நேற்று (23) மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
</p><p>
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf9a3079-d019-4ca4-8dbf-9d3fd86de6a9/26-6a62dbb9e1bb4.webp' /></p><p> மேலும், நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள், சில ஆணிகள் மற்றும் சிமெந்து துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>இதன் போது மொத்தம் 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், 467ஆவது எலும்புக்கூடு இதுவரை கண்டறியப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
அவரின் கூற்றுப்படி, குறித்த எலும்புக்கூடு சவப்பெட்டியின் அடையாளங்களுடன் காணப்படுவதோடு, மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கியை ஒத்த ஆடையும், கால்பகுதியில் காலுறைகளும் (Socks) இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, அந்த உடல் சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

மேலும், இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான விரிவான தகவல்களை இன்று (24) நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் தெளிவாக வெளியிட முடியும் என்றும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-24T03:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மீதுஅமெரிக்கா விதித்த புதிய வரி ; ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-us-tariff-imposed-on-sri-lanka-1784856612"></link>
            <id>https://jvpnews.com/article/new-us-tariff-imposed-on-sri-lanka-1784856612</id>
            <summary type="text">தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efafc7a4-4fa1-4513-8eb3-d6c67151deee/26-6a62c025b43d2.webp' /></p><h2>புதிய வரி</h2><p> 

அதன்படி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.</p><p> 

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p> 

</p><p>த்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது.</p><p> 

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. </p><p>

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uma-kumaran-appointed-uk-minister-1784855738"></link>
            <id>https://jvpnews.com/article/uma-kumaran-appointed-uk-minister-1784855738</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1474333e-f2bb-49c0-b9c8-25c9ad526e97/26-6a62bcbb9513a.webp' /></p><h2>உயரிய அங்கீகாரம்&nbsp;</h2><p> </p><p>

இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.</p><p></p><p>

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மனைவியுடன் சென்ற இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த அசம்பாவிதம் ; எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-attacked-while-with-wife-1784854498"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-attacked-while-with-wife-1784854498</id>
            <summary type="text">திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளதுடன் அதனை செலுத்தி சென்றவர்,காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e131f1b3-b7fa-4ac3-bcc4-dd1d5d3c02af/26-6a62b7e4af37b.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>



திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்தியத் தம்பதியினர் பயணித்த காரும், கபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக வந்த உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>


காரில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி, கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>


விபத்தில் பலத்த காயமடைந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;லேசான காயங்களுக்கு உள்ளான அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p>



இவ்விபத்துக்கான முதன்மை காரணம் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:55:27+00:00</updated>
        </entry>
    </feed>
