<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T19:37:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871</id>
            <summary type="text">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். </p><p style="text-align: justify; ">
 
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7407d0c2-dc15-4590-87b7-1897dedd42b3/26-6aa684d683463.webp' /></p><h2 style="text-align: justify; ">திட்டமிட்ட கொலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; "> 
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
வினீத்தின் முன்னாள் ஊழியரான&nbsp; மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T17:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303"></link>
            <id>https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303</id>
            <summary type="text">கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான &#039;P 4447&#039; என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'P 4447' என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bb89ad9-155a-40c4-ab5d-399088b805f5/26-6aa6e0598a90f.webp' /></p><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.

இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
</p><p>
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
</p><p>
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்பில் ருமேஷ் தரங்க தங்கம் வென்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-achieves-a-milestone-by-winning-gold-1789320197"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-achieves-a-milestone-by-winning-gold-1789320197</id>
            <summary type="text">உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்&#039; (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்' (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p></p><p> </p><p>

உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது. 

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது. </p><p>

உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805082f2-6133-464d-a935-0cd8d78fdad5/26-6aa6dc0698ece.webp' /></p><p>அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார். </p><p>

சமீபத்தில் 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p> 

அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார்.</p><p> 

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரம் எறிந்திருந்து மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தார். </p><p>

இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 81.49 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். </p><p>

உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இறுதிப்போட்டி இடம்பெற்றிருந்தது. </p><p>

இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும். </p><p>

மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் கொண்ட முதல் இலங்கையர் நாட்டுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/first-sri-lankan-to-own-a-private-long-haul-jet-1789316948"></link>
            <id>https://jvpnews.com/article/first-sri-lankan-to-own-a-private-long-haul-jet-1789316948</id>
            <summary type="text">தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் இன்று (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p><p></p><p> 

கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ce05c4-72e7-460e-894c-9831e07586f0/26-6aa6cf557f865.webp' /></p><p>இவர் இலங்கைக்கு வருகை தந்த 'கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5' (Gulfstream G-V) விமானமானது ஒரே தடவையில் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும்.</p><p> 

இலங்கையின் முதலாவது தனியார் விமானமாக 1980 ஆம் ஆண்டுகளில் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'லியர்ஜெட் 35ஏ' (Learjet 35A) விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:29:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகருக்கு எதிராக தயாசிறி சர்வதேசத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284"></link>
            <id>https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284</id>
            <summary type="text">சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்குச் சபாநாயகர் வாய்ப்பளிக்காமலும், அதற்குத் இடையூறு ஏற்படுத்தியமையையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd75f066-103e-4123-aecf-1e220d0f2beb/26-6aa6ccbe27835.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T16:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் ஆற்றில் 29 வயது இளைஞனின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைசடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00647540-cef1-471f-9452-d0f44f9ef5f7/26-6aa6c7b6f20eb.webp' /></p><p>குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-probe-against-speaker-jagath-1789307824"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-probe-against-speaker-jagath-1789307824</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

குறித்த விசாரணைகளின் ஒருகட்டமாக, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1839bb4d-4b38-4b06-a827-0e2b31730af3/26-6aa6abb1b2679.webp' /></p><p style="text-align: justify; ">

பாராளுமன்ற அதிகாரிகளால் இந்த ஆவணங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "> அவற்றில் சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர்களின் விபரங்கள், அவர்களின் சம்பள விபரங்கள் மற்றும் வாகன பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் இந்த முறைப்பாடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் அந்த விவாதத்துக்கு தலைமை தாங்குவதோ அல்லது குறித்த சட்டமூலத்தை சான்றளித்து கையொப்பமிடுவதோ பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளா</p>]]></content>
            <updated>2026-09-13T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலாமைகளை வைத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறித்த மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-for-sea-turtle-tourist-scam-1789306269"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-for-sea-turtle-tourist-scam-1789306269</id>
            <summary type="text">கடலாமைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் ஈட்டியதுடன், அந்த விலங்குகளுக்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட மூவரை உனவட்டுன ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடலாமைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் ஈட்டியதுடன், அந்த விலங்குகளுக்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட மூவரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
தல்பே பகுதியைச் சேர்ந்த 23, 41 மற்றும் 45 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8575faa-de78-460a-9a6d-f675174e7cf6/26-6aa6a59eddb03.webp' /></p><h2 style="text-align: justify; ">குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு கடலாமைகளுக்கு உணவளிக்கச் செய்தல், ஆமைகளைக் கைகளால் மேலே தூக்கித் துன்புறுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் பலவந்தமாகப் பணம் பறிக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் இதேபோன்று சுற்றுலாப் பயணிகளுக்குக் கடலாமைகளைக் காண்பித்துப் பணம் பறித்த இருவர் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T14:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகும் வரை ஈழம் கேட்க மாட்டேன் ; அர்ச்சுனா எம்.பியின் பேச்சுக்கு விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771"></link>
            <id>https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e738b9-67d0-44ee-9909-836c4cf97f7b/26-6aa67c9d37a49.webp' /></p><h2 style="text-align: justify; ">அரசியல் தீர்வு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தனக்கு "கருநாக்கு" இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p style="text-align: justify; ">அர்ச்சுனா எம்.பியின் இந்த கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T14:00:01+00:00</updated>
        </entry>
    </feed>
