<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-20T18:46:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/discussions-between-sri-lanka-and-saudi-arabia-1789928976"></link>
            <id>https://jvpnews.com/article/discussions-between-sri-lanka-and-saudi-arabia-1789928976</id>
            <summary type="text">தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இலங்கையும் சவூதி அரேபியாவும் கலந்துரையாடியுள்ளன.</p><p>
</p><p></p><p>அதன்படி, சவூதி அரேபியாவுக்கான ஸ்ரீலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் (O.L. Ameer Ajwad), ரியாத் நகரில் அமைந்துள்ள நீதி அமைச்சில், சவுதி அரேபியாவின் சட்ட மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலவியை (Mishaal bin Ali Al-Balawi) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d5beea-1392-4fbd-b6b0-6efdc7f57f36/26-6ab026123dbc3.webp' /></p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீதி மற்றும் சட்டத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக இரண்டு உத்தேச உடன்படிக்கைகளையும் துரிதமாக இறுதி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகச் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>

சட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீள உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு நலன்சார்ந்த பிற விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் தூதரகத் தலைவருமான தமித்ரி சமங்கிக்க (Damithri Samangika) மற்றும் தூதரக அதிகாரி சஜீத் (Sajeeth) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி வீட்டுக்கே வரும்சுகாதார சேவைகள் ; ஜனாதிபதி அறிவித்த புதிய சுகாதாரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154"></link>
            <id>https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154</id>
            <summary type="text">பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

சுகாதாரத் துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக பல பிரதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec1e54e-cdec-4fcc-8390-bfe0613d78d4/26-6ab01ef49092d.webp' /></p><p>அதற்கமைய, பொதுமக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரச் சேவை மேலும் நெருக்கமாக்கப்படுவதுடன், உலகளவில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் முறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான நிதி எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் 16 இடங்களில் 'கெத் லெப்' (Cath Lab) வசதிகள் ஆரம்பிக்கப்படும்.
</p><p>
மேலும், இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக காணப்பட்ட 1 முதல் 2 வருட காலக் காத்திருப்புப் பட்டியல், குறுகிய காலத்திற்குள் 15 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488"></link>
            <id>https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4223806-11bf-466b-b637-066303438cc1/26-6ab01c598c87a.webp' /></p><p>மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது:</p><p>

களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா </p><p>

களு கங்கை: மகுரு கங்கை, மில்லகந்த (குடா கங்கை) மற்றும் இரத்தினபுரி </p><p>

கிங் கங்கை: தவலம மற்றும் பத்தேகம </p><p>

மகாவலி கங்கை: பேராதனை 

கடந்த 12 மணித்தியாலங்களில் (இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில்) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன், அதிகபட்ச மழைவீழ்ச்சியாகக் கித்துல்கல பகுதியில் 89.6 மி.மீ பதிவாகியுள்ளது.</p><p> 

இதுதவிர நாவலப்பிட்டி (81.9 மி.மீ), கிரிவுல்ல (78.4 மி.மீ) மற்றும் தெரணியகல (76.7 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537"></link>
            <id>https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537</id>
            <summary type="text">கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை அச்சிட்டு வந்த நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, புலனாய்வாளர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணையைத் தொடர்ந்து, யக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார். 

மாதமொன்றிற்கு 35,000 ரூபாய் வாடகைக்குப் பெறப்பட்ட வீடொன்றிலேயே இவர் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9e21bd-f1e6-45c7-b96a-191da811735b/26-6ab018a343584.webp' /></p><p> 

இந்த முற்றுகையின் போது 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட் கைபேசிகள், 1 வர்ண அச்சு இயந்திரம் , 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் (Emboss) முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கடிதத் தலைப்புகளும் (Letterheads) இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. </p><p>

அவற்றுள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், தனியார் வங்கியொன்று மற்றும் பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவை, ருஹுண, ரஜரட்ட, வயம்ப, ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் அடங்குகின்றன.</p><p> 

சுமார் ஒரு வருட காலமாக இந்தச் சட்டவிரோதத் தொழில் இடம்பெற்று வந்துள்ளதோடு, சாதாரண சான்றிதழ்களைச் சந்தேகநபர் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.</p><p> 

எனினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான போலிச் சான்றிதழ்களை 4 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தயாரித்துக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p> 

யக்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149"></link>
            <id>https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.</p><p> </p><p></p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b23313-e26a-4dde-bd67-352442dc6047/26-6ab0171ea2970.webp' /></p><p>எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை. </p><p>

இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe86027-14f1-42e1-b133-3f011e98238d/26-6ab00d82e7527.webp' /></p><p>வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. </p><p>

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும். </p><p>

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. </p><p>

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594"></link>
            <id>https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனை உறுதிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff3b24a-b368-45d9-9d7c-3baa0891f59e/26-6ab0093c32f4e.webp' /></p><p>மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளியிடப்படும் புதிய அறிக்கைகள் குறித்தும் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவரது தம்பி ஹம்சிதனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜூன் 30ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் இறுதியாக உரையாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68fb67f-33e7-4a95-9acb-486efc3c842d/26-6ab0060915506.webp' /></p><p>அனோஜன் மீது முதலில் சைபர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவரது தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்த சவுதி தரப்பும் மேன்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்போது, நபியை அவமதித்தல் மற்றும் அந்த உள்ளடக்கத்தை பலரிடம் பரப்பியமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் வழக்கில் இணைக்கப்பட்டு, வழக்கு வேறு கோணத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e68323-0f69-4eef-9fee-c866fd324252/26-6ab00609bf886.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது தண்டனை தொடர்பிலும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்கள் குறித்தும் அனோஜன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அனோஜனின் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறி வீழ்ந்தவர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648"></link>
            <id>https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648</id>
            <summary type="text">அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&amp;nbsp;இன்று (20) காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><p>இன்று (20) காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் தவறவிடப்பட்ட தங்க ஆபரணம்; உயியவரிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-jewelry-lost-on-the-street-handed-over-owner-1789909227"></link>
            <id>https://jvpnews.com/article/gold-jewelry-lost-on-the-street-handed-over-owner-1789909227</id>
            <summary type="text">ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் தவறவிடப்பட்ட, சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியைக் கண்டெடுத்த இளைஞர்கள் இருவர், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் தவறவிடப்பட்ட, சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியைக் கண்டெடுத்த இளைஞர்கள் இருவர், அதனைப் பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி நுவான் மதுசங்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணித்த ரமேஷ் பிருந்தன் மற்றும் மனோராஜ் ஆகிய இருவருக்கே இந்தத் தங்கச் சங்கிலி வீதியில் கிடைத்துள்ளது.</p><p>உடனடியாக அவர்கள் உரிய உரிமையாளரைக் கண்டறியும் நோக்கில் தமது பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டனர்.&nbsp;</p><p>அதனைத் தொடர்ந்து, உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு குறித்த நகை ஒப்படைக்கப்பட்டது.</p><p>கைச்சங்கிலியின் உரிமையாளர் பொகவந்தலாவ கிவ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p>கால்நடை வளர்ப்பு மூலமாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய இந்தத் தங்கக் கைச்சங்கிலியை, தமது தேவைக்காக ஹட்டன் நோக்கிச் சென்றபோதே தவறவிட்டதாகக் குறிப்பிட்ட உரிமையாளர், நகையை மீட்டுத் தந்த இளைஞர்களின் மனிதநேயத்தை வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425"></link>
            <id>https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425</id>
            <summary type="text">மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&amp;nbsp;இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று (20) திறக்கப்பட்டதாக கடைமை நேர பொறியியலாளர் திசர பண்டார தெரிவித்தார்.</p><p>திறக்கப்பட்டுள்ள 05 வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 21,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.</p><p>மழை மேலும் தீவிரமடைந்தால் அனைத்துக் கதவுகளையும் திறக்க வேண்டி வரலாம் என்பதால், பொல்கொல்ல அணைக்குக் கீழ் பகுதியில் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911</id>
            <summary type="text">நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யும்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;</p><p>இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தற்போது எரிபொருள் விலையானது ஏற்கனவே உயர்வான மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.&nbsp;</p><p>பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.&nbsp;</p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.&nbsp;</p><p>எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.&nbsp;</p><p>அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்.&nbsp;</p><p>ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.&nbsp;</p><p>அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p>ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தில் நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657"></link>
            <id>https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657</id>
            <summary type="text">எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p>அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581"></link>
            <id>https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.</p><p>இதன் தொடர்ச்சியாக, ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்ப்பாணம்&nbsp; நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.</p><p>இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:49:45+00:00</updated>
        </entry>
    </feed>
