<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T10:39:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் ; ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252"></link>
            <id>https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c608a4bf-7a0e-4d21-b05b-20e6e3d0b08c/26-6aa2855a84900.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">பொதுமக்களின் காணிகள்</span></h2><p style="text-align: justify; "><span style="text-align: left;"><br></span>யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணி பொன்னாலை–பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதி வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணி; மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளமை; மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணி;பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை ஆகியவை தொடர்பில் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>
</p><p style="text-align: justify; ">
பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
காணிகளை விடுவிப்பது என்பது வெறுமனே நிலங்களை மீளக் கையளிப்பது மாத்திரமல்ல.

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து, வழிபாடு மற்றும் சமூக–பொருளாதார நடவடிக்கைகளை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
</p><p style="text-align: justify; ">
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T10:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்; வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/football-legend-datuk-abdah-alif-married-girl-1789036054"></link>
            <id>https://jvpnews.com/article/football-legend-datuk-abdah-alif-married-girl-1789036054</id>
            <summary type="text">&amp;nbsp; மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். </p><p>

1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும் மலேசிய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர், 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc78c4f-964f-4680-8c39-340d4e43316d/26-6aa2861759463.webp' /></p><h2>வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்</h2><p> </p><p>

இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி கோலா திராங்கானுவில் இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடனும் ஆசிகளுடனும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.</p><p></p><p> திருமணம் முடிந்து தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளதால், இந்த நிகழ்வு குறித்து அப்தா அலிப்பைத் தொலைபேசியில் உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. 

முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இரு குடும்பங்களின் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

இளம் பெண்ணை கரம்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணம் மலேசியக் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T10:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735cef42-18b2-446c-a38a-2886b7fe73f4/26-6aa283ac6c104.webp' /></p><p></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-chief-minister-vijay-visit-to-london-1789034705"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-chief-minister-vijay-visit-to-london-1789034705</id>
            <summary type="text">&amp;nbsp; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியை மையப்படுத்தி , தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டனுக்கு&amp;nbsp; செல்லவுள்ளார்.தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியை மையப்படுத்தி , தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டனுக்கு&nbsp; செல்லவுள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக

அதன்படி, முதல்வர் விஜய் இன்று இரவு 10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் செல்லவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebbab72-a441-4191-88c9-b26bf6dec39b/26-6aa280d3529da.webp' /></p><h2>16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார்</h2><p> 

அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார் என்றும், மீண்டும் துபாய் வழியாக செப்டம்பர் 17 ஆம் திகதி காலை 8 மணிக்குச் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள்.

லண்டனில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார். </p><p>அங்கு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்குத் தமிழ்நாட்டை ஒரு சிறந்த இடமாக அவர் முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக மாநிலத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர். </p><p>

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரிட்டிஷ் தலைநகரைச் சென்றடைந்துள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் இக்குழுவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூட நம்பிக்கையால் பறிபோன உயிர் ; கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fate-of-woman-living-apart-from-husband-1789029727"></link>
            <id>https://jvpnews.com/article/fate-of-woman-living-apart-from-husband-1789029727</id>
            <summary type="text">பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக மொரகஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போதே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daff1b86-a369-442f-8364-c809046b8a7d/26-6aa26e2d3d5a7.webp' /></p><h2 style="text-align: justify; ">மத வழிபாடுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதம் போன்ற நோய் நிலைக்கு ஆளாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">&nbsp;அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக உடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T08:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-for-university-selected-students-1789028893"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-for-university-selected-students-1789028893</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51f1e5c-cefb-4358-bdb3-a51434623486/26-6aa26a1f5751f.webp' /></p><h2 style="text-align: justify; ">பல்கலைக்கழக அனுமதி&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் www.ugc.ac.lk ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T08:31:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T08:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லியன் பெறுமதியான வீடு முடக்கம் ; ஷிரான் பாசிக்கின் கூட்டாளிக்கு அதிகாரிகள் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-bassik-s-associate-s-rs-100m-house-frozen-1789026879"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-bassik-s-associate-s-rs-100m-house-frozen-1789026879</id>
            <summary type="text">தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாகக் குறிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள், 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0fecac3-fc7c-472d-af8e-c08411f3f01c/26-6aa2636360d60.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T08:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு; பொலிஸார் வழக்கு தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-buddhist-worship-at-vedukkunari-malai-1789025300"></link>
            <id>https://jvpnews.com/article/special-buddhist-worship-at-vedukkunari-malai-1789025300</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>

 சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478f7ba8-8ce8-42ed-841d-25b154b8d2b8/26-6aa25c1558764.webp' /></p><h2>நீதிமன்ற&nbsp; உத்தரவு</h2><p>

இந்நிலையில் 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம்,&nbsp;ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர்&nbsp; நீதிமன்றத்தில் தோன்றுமாறு&nbsp; வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><p>
</p><p>
2026/09/12ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும் சமய வழிபாடுகள் நடத்தப்படுவதாகவும் பூஜை நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஒரே பூமியில் தொல்பொருள் அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடவிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் இரு தரப்பினரின் சமய வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும் இவ்வாறாக இடப் பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத்தளத்தினை பிரதான மையமாகக் கொண்டு நாட்டுக்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>

அதன் பிரகாரம், மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு இன்று 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் தோன்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T07:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977"></link>
            <id>https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே ஜனக நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9275df8-09fd-4bc1-b024-ff7a63646249/26-6aa256eaefe10.webp' /></p><p> 

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு காவலாளி படுகொலை ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872"></link>
            <id>https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872</id>
            <summary type="text">இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752f8faf-b0d9-435d-9c8e-bbfe7c8a6f3f/26-6aa254d7aab97.webp' /></p><h2>தீவிரமாகும் விசாரணை</h2><p>

இரத்தினபுரி, கஹங்கம, கெடலியன்பள்ள பகுதியைச் சேர்ந்த&nbsp; 61 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் கொலை இடம்பெற்ற வீட்டைப் பராமரித்து வந்த காவலாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>குறித்த காவலாளி நாற்காலியொன்றில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயதுடைய நபர் ஒருவர் இக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

</p><p>தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலரையும் சிந்திக்கவைத்த யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686"></link>
            <id>https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு தற்பொதைய சமூகத்தையும் , புலம் பெயர் தமிழ் மக்களையும் சிந்தை கொள்ள செய்துள்ளது.
</p><p>
சமூகம் சார்ந்த பிரச்சனைகள் , மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்களை தோலுரித்து காட்டுவதாக அவர்களின் பேச்சுக்கள் அமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bea979b-56fa-4a8b-b5e3-3c213e1d2250/26-6aa24a0fcff9b.webp' /></p><h2>சிந்திக்கவைத்த&nbsp;&nbsp;பேச்சு</h2><p>
</p><p>
சில புலம் பெயர் தமிழர்கள் தாயகம் வந்து செய்யும் அலப்பறைகள் தொடர்பிலும், தாயகத்தில் வாழும் எம் உறவுகள் புலம் பெயர் தமிழர்களை சார்ந்து வாழும் நிலை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.&nbsp; &nbsp; </p><p>&nbsp; <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2335888403614312%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>போர் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பியோடிய எம் இளம் தலைமுறையினர் பலர் , தாயகம் மீண்டெழுவதற்கு உதவி இருந்தமையினையும் சுட்டிகாட்டியுள்ளனர்.</p><p>அதேசமயம் தாயகத்தில் பொருளாதார , கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் பெரும் பங்களிப்பு இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை வளையத்தில் முன்னாள் அரச ஜோதிடர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800"></link>
            <id>https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சிரிலிய சவிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc01dd7-f8ea-4d37-87bf-3721a160cee3/26-6aa24e6a4ae11.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657</id>
            <summary type="text">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மரிதன்கடவல நகரில் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf5430e-e93b-446f-b359-a885a0fab0be/26-6aa249f2eadca.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



விபத்தில் 47 வயதுடைய தாய் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ; முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-plated-gun-ex-minister-indicted-1789018403"></link>
            <id>https://jvpnews.com/article/gold-plated-gun-ex-minister-indicted-1789018403</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்ணொருவர் என இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) குற்றப்பத்திரிகை தா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்ணொருவர் என இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இக்குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உட்பட இரு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389ad2f2-45fd-4fbe-b87a-635cb6588a3d/26-6aa24125180bd.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-pardon-granted-to-gnanasara-thero-is-invalid-1789018444"></link>
            <id>https://jvpnews.com/article/the-pardon-granted-to-gnanasara-thero-is-invalid-1789018444</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அது செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a01a38-927f-4b4b-a262-3538dcbaf95b/26-6aa2414d811cb.webp' /></p><h2>பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது</h2><p>காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததைத் தொடர்ந்து, இன்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
நீதிமன்ற அவமதிப்புக்குக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனி நபர் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226</id>
            <summary type="text">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a24b19-5b9c-45d3-be63-a35a9c16f4f6/26-6aa2251c4434a.webp' /></p><p style="text-align: justify; "> 

2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று பெண்கள் அதிரடி கைது ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422"></link>
            <id>https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் &#039;கஞ்சா&#039; போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு-13, புத்தளம் - கற்பிட்டி மற்றும் கொழும்பு-02 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34,37 மற்றும் 54 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e78e70d-c723-465d-9d88-bf2a280155c5/26-6aa2396856ccc.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர்கள் நேற்று இரவு 10:50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 'தாய் ஏயர் ஏசியா' சேவையின் FD-140 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 803 கிராம் எடையுடைய 'கஞ்சா' போதைப்பொருள் 11 உருண்டைகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேடிதேடி வேட்டையாடும் ஜனாதிபதி அனுர அரசாங்கம்; கிலியில் முன்னாள் ஆட்சியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146"></link>
            <id>https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட்சி தலைவர்களை வேட்டையாட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது நீதித்துறைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை வளையத்தினுள் மேலும் ஆறு கட்சி தலைவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf0c8da-259e-4b53-8752-c3fcdf5af2f3/26-6aa23853aa579.webp' /></p><h2>அடுத்தக்கட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு முன்வைக்கப்படடுள்ளது. </p><p>

அவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முறைப்பாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஏற்கனவே நாமல் ராஜபக்ச அண்மையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T04:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சங்கராஜ மாவத்தையிலுள்ள கடையொன்றிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feff6b28-d286-4545-b0b0-aafee266595c/26-6aa2350275fa0.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களுக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொட்டாஞ்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T04:49:19+00:00</updated>
        </entry>
    </feed>
