<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-13T06:15:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/country-receives-millions-of-us-dollars-last-month-1789279319"></link>
            <id>https://jvpnews.com/article/country-receives-millions-of-us-dollars-last-month-1789279319</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வீதம் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae63c59-7223-4829-976c-1101f6341879/26-6aa63c58b00f4.webp' /></p><h2 style="text-align: justify; ">பணம் அனுப்புகை</h2><p style="text-align: justify; ">



இதற்கமைய, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து மொத்தமாக 6.131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p style="text-align: justify; ">



2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் தொழிலாளர்களின் பணம் அனுப்புகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T06:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 அடி பள்ளத்தில் வீட்டின் மீது பாய்ந்த லொறி ; நால்வர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lorry-plunges-75-feet-onto-house-1789278226"></link>
            <id>https://jvpnews.com/article/lorry-plunges-75-feet-onto-house-1789278226</id>
            <summary type="text">பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மதித்தலே பகுதியில் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி ஒன்று கவிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மதித்தலே பகுதியில் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
நேற்று (12) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், லொறி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f754d44-ba2f-4971-9033-6d736384854b/26-6aa638144581c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த குறித்த லொறி, மலைப்பாதையில் பிரேக் செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
இதன்போது, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மோதிய லொறி, பின்னர் சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து, கீழே அமைந்திருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பு வீடொன்றின் மீது விழுந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இந்த விபத்தில், குறித்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும், லொறியின் சாரதியும் உதவியாளரும் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T05:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிப்பட்ட தகராறால் படுகொலை ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-over-personal-dispute-one-arrested-1789277356"></link>
            <id>https://jvpnews.com/article/murder-over-personal-dispute-one-arrested-1789277356</id>
            <summary type="text">நாகொல்லாகம, தாலமல்கம பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாகொல்லாகம, தாலமல்கம பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf9da0b4-b5d7-4f3d-bdf5-372312e4b146/26-6aa634ae0ad45.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட தகராறு&nbsp;</h2><p style="text-align: justify; ">

தாலமல்கம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றிய நிலையில், கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> இதில் படுகாயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முன்னெடுக்கப்பட்ட விசேட சோதன நடவடிக்கையின் போது குறித்த 59 வயது சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவத்திற்கான பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தாலமல்கம பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T05:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-unions-prepare-for-strike-action-1789276280"></link>
            <id>https://jvpnews.com/article/railway-unions-prepare-for-strike-action-1789276280</id>
            <summary type="text">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f33f1db-63e9-4c53-a629-060ace34189a/26-6aa6307a2b32d.webp' /></p><h2 style="text-align: justify; ">பணிப்புறக்கணிப்பு</h2><p style="text-align: justify; ">

 

இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

 

ரயில் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனப் ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T05:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2724bcef-0b19-4f20-9419-6322d79805d3/26-6aa62cf3b0bdd.webp' /></p><h2 style="text-align: justify; ">வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T04:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த வர்த்தகர் அதிரடி கைது; காற்சட்டையில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trader-who-came-to-sri-lanka-arrested-in-a-raid-1789274451"></link>
            <id>https://jvpnews.com/article/trader-who-came-to-sri-lanka-arrested-in-a-raid-1789274451</id>
            <summary type="text">குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் குறித்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்து, விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான பசுமை வழி ஊடாக வெளியேற்ற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04713894-3c31-44cc-b49a-5210350b2a7e/26-6aa62954d9b76.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் நேற்று (12) மாலையில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதன்போது அவர் 668 கிராம் குஷ் போதைப்பொருளை 3 பொதிகளாகத் தயாரித்து, தான் அணிந்திருந்த காற்சட்டையில் மறைத்து நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இந்தப் போதைப்பொருள் தொகையின் மதிப்பு 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவர் கொண்டுவந்த குஷ் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T04:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு ; சொகுசு வேனுக்குள் அரங்கேறிய தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765"></link>
            <id>https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

மேல் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முற்கூட்டியே கிடைத்த தகவலுக்கு அமைவாக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c2670f-bf64-40a1-a98d-5dbbd240e160/26-6aa626a6a7253.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
 

அதற்கமைய, குறித்த வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கிப் பயணம் செய்வதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப் வண்டி மூலம் குறித்த வேனை நுணுக்கமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p>

 

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேனை வீதியோரமாக நிறுத்தியுள்ள நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வேனைப் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்போது வேனின் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியவாறு வேனைப் பல தடவைகள் உடனடியாக முன்னும் பின்னுமாக இயக்கியதுடன், பொலிஸ் ஜீப் மீதும் மோதி உத்தியோகத்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
</p><p>
 

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேன் நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வேனின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
</p><p>
 

காயமடைந்த சாரதியைப் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T04:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:16:45+00:00</updated>
        </entry>
    </feed>
