<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T05:00:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப்பொழுதில் பரபரப்பை கிளப்பிய யாழ் இளைஞன் ; மட்டக்களப்பு நீதிமன்றில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38d44ac-e568-4af6-b950-88fc3ffc2da0/26-6a5ebf0c4a3d3.webp' /></p><h2 style="text-align: justify; ">நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை உடைத்து திருடியமை உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார். 

பிணையில் சென்ற அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பின்னர் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேற்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">

வழக்கு விசாரணைக்காக இன்று காலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "> அதனைத் தொடர்ந்து திறந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> திறந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்ற குறித்த கைதி, சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p style="text-align: justify; ">தற்கொலைக்கு முயன்ற நபர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவருக்கு எதிராக மட்டக்களப்பில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T01:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sun-transit-brings-rajyoga-for-these-zodiac-signs-1784597176"></link>
            <id>https://jvpnews.com/article/sun-transit-brings-rajyoga-for-these-zodiac-signs-1784597176</id>
            <summary type="text">சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20&nbsp; தனது நட்சத்திரத்தை மாற்றப்போகிறார்.
</p><p>
 இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே மகத்தான நன்மைகளை அடையப்போகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e270d1cb-97a7-46b6-b8f1-5f2578e6a8b0/26-6a5ecab9cf4a7.webp' /></p><h2> அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் </h2><p><b>

கடகம் : </b> சூரியன் பூச நட்சத்திரத்திற்கும் நுழைவதால் உங்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை மேம்படலாம். உங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அவர்களுக்குப் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கலாம். வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் வருமானம் ஈட்டலாம். அதைத் தவிர, உங்கள் போட்டியாளர்கள் உங்களை பார்த்து அஞ்சும் நிலை ஏற்படலாம். நிதி நிலைமை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும். உங்கள் வருமானத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.
</p><p><b>
துலாம்:</b> இந்தச் சஞ்சாரம் உங்கள் தொழில் மற்றும் நற்பெயருக்குச் சாதகமாக அமையும். உங்களுக்கு தொழில் வளர்ச்சி, அங்கீகாரம், பதவி உயர்வுகள் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அணுகுமுறை ஆகியவை மேலதிகாரிகளையும், சக ஊழியர்களையும் கவரக்கூடும். அவர்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது.

பெரிய வெற்றியைப் பெறுவார்கள், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். பல்வேறு முதலீடுகளிலிருந்து வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன.</p><p><b> 

மீனம்:</b> இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் அவர்களின் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும், மேலும் அவர்களின் பொருளாதார நிலை பல மடங்கு அதிகரிக்கும். அவர்கள் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T01:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்க வேண்டாம் ; இலங்கை மக்களுக்கு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-stay-home-if-you-have-these-symptoms-1784595278"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-stay-home-if-you-have-these-symptoms-1784595278</id>
            <summary type="text">டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி&nbsp; அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e259897-3738-41b9-8ebd-94606da8a093/26-6a5ec34fa4a95.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு காய்ச்சல்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
</p><p style="text-align: justify; ">
இந்த நிலையில், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர, டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T00:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582"></link>
            <id>https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582</id>
            <summary type="text">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன் சேர்ந்து கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a16b6-8cfe-439c-b580-f339b8547a33/26-6a5e72779969f.webp' /></p><h2 style="text-align: justify; ">கள்ளக்காதல்</h2><p style="text-align: justify; ">

இந்த பள்ளியில் வாகன ஓட்டுநராக இருப்பவருடன் தாமினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கு தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டி விட முடிவு செய்தனர்.</p><p style="text-align: justify; "> இருவரும் சேர்ந்து சாலை விபத்தில் கொலை செய்ய முதலில் திட்டமிட்டனர்.

ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனால், வேறு திட்டம் தீட்டி கணவரை கொல்ல&nbsp; முடிவு செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்த முறை கணவருக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததும், படுக்கையறையில் விஷப்பாம்பை விட்டு அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்த கொலைக்கு 2 காரணங்கள் இருந்துள்ளன. காப்பீடாக ரூ.20 லட்சம் தொகையை பெற்று விட்டு, கள்ளத்தொடர்பை தொடர இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க பாம்பை விட்டு கடிக்க செய்து இயற்கையான முறையில் உயிரிழந்தது போல் காட்ட திட்டமிட்டு உள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இது இயற்கை மரணம் போன்று முதலில் விசாரிக்கப்பட்டாலும், பொலிசாரின் தீவிர விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T00:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-writes-to-justice-minister-1784592901"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-writes-to-justice-minister-1784592901</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது, பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைந்து போகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.</p><p>

அதேநேரம், உயர்நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசர அடிப்படையில் அல்லாது, வெளிப்படையான பொதுக் காரணங்களுடனும், அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனைகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799971c3-c7c3-48fb-bfd5-b673bc89d72d/26-6a5eba074c4ad.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழிவுக்கு நீதித்துறை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சருடன் சந்திப்பு ஒன்றையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T00:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம் போகாமல்.. உங்க தொப்பையை குறைக்கலாம் ; இந்த விஷயங்களை செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reduce-belly-fat-without-gym-workouts-1784588254"></link>
            <id>https://jvpnews.com/article/reduce-belly-fat-without-gym-workouts-1784588254</id>
            <summary type="text">இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை &#039;தொப்பை&#039;. உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை 'தொப்பை'. உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே வழிவகுக்கிறது.</p><p style="text-align: justify; "> 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6b9ae-e31e-4f14-80ec-0892641b8234/26-6a5ea7e01e339.webp' /></p><h2 style="text-align: justify; ">கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலை எழுந்ததும் அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பெல்லாம் கரைந்து தொப்பை குறையும். </p><p style="text-align: justify; ">

நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மற்ற வேண்டும். 

கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.</p><p style="text-align: justify; "> 

இனிப்புகள், இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து வந்தால் தொப்பை வேகமாகக் குறையும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01c0cb-3ad8-4c0d-901e-91725130e9b2/26-6a5ea7e0c933c.webp' /></p><p style="text-align: justify; "> 

புரதச்சத்து மிகவும் அவசியம், முட்டை, முளைகட்டிய பயறுகள் மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் பசியைக் கட்டுப்படுத்தும். </p><p style="text-align: justify; ">

தினமும் அதிகாலையில் உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையிலோ அல்லது மாலையிலோ குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி பண்ண வேண்டும்.</p><p style="text-align: justify; "> இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். </p><p style="text-align: justify; ">

வயிற்றுக்கான பயிற்சிகள் மிக மிக அவசியம் அப்போதான் தொப்பை குறையும். பிளாங்க், க்ரஞ்சஸ் மற்றும் யோகாசனங்கள் செய்வது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்க உதவுகிறது. 

தூக்கம் தான் அனைத்திற்குமே அடிப்படை தற்போதைய காலகட்டத்தில் பலர் சரியாகவே தூங்குவதில்லை. </p><p style="text-align: justify; ">தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். முக்கியமாக குறைவான தூக்கம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.</p><p style="text-align: justify; "> 

மனஅழுத்தம் ஸ்ட்ரெஸ் நம்மில் பலருக்கு தேவையானது போல் அனைவருமே சுமக்கும் ஒன்றாகும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது 'கார்டிசோல்' ஹார்மோன் சுரந்து, அது வயிற்றுப் பகுதியில் கொழுப்பாகப் படியும். எனவே தியானம் மூலம் மனதை அமைதியாக வையுங்கள்.</p>]]></content>
            <updated>2026-07-20T23:10:40+00:00</updated>
        </entry>
    </feed>
