<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T00:28:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பரீட்சைக்கு அழைத்து சென்ற தந்தையின் உயிரை பறித்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493"></link>
            <id>https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493</id>
            <summary type="text">அநுராதபுர தலைமையக பொலிஸ்&amp;nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&amp;nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுர தலைமையக பொலிஸ்&nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8308a68-4403-465d-97dc-79b60b5f0d6a/26-6a97643e9ce4e.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T23:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய நான்கு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689"></link>
            <id>https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 பொலிஸாரால் முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

</p><p> பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட புகைக் குழாய்களைப் பொறுத்தி, அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1a97faa-90ce-4e6d-99fc-6103cbfb2b00/26-6a97517b0901d.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 18, 19, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் நிக்கவெரட்டிய, சித்திகுலிய, கொபேகனே மற்றும் சுத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;அத்துடன், கைது செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களும் போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திச் செலுத்தப்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில் நான் கைது செய்யப்படலாம்..காரணம் இது தான் ; நாமலின் ஆருடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936"></link>
            <id>https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். </p><p style="text-align: justify; ">எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe5eca2-be32-4504-9bb3-ef1ca5b9a99a/26-6a974b3d26d24.webp' /></p><h2 style="text-align: justify;">போதைப்பொருள் கொள்கலன்கள்</h2><p>
</p><p style="text-align: justify;">
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p style="text-align: justify;">
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு கிடையாது. நீதியமைச்சர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் தற்போது முரண்படுகிறார்.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் இரண்டு தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">இதற்கு முன்னர் எவ்வித பரிசோதனைகளுமின்றிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம்.</p><p style="text-align: justify;">


அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் எங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்காகவே நாங்கள் செயற்படுவதால் மக்களுக்காகவே எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T22:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டிற்குள் 23 சடலங்கள் ; நொடியில் முடிந்துபோன வாழ்க்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300"></link>
            <id>https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300</id>
            <summary type="text">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி நேபாளத்தில் உள்ள ஆறுகளின் பாய்ந்ததால் வடக்கு நேபாளத்தில் உள்ள 4 ஊர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.</p><p style="text-align: justify;">அந்த ஊரிலிருந்த வீடுகள், கட்டிடங்கள், கார் மற்றும் கனரக வாகங்கள் என எல்லாமே நீரில் அடித்து செல்லப்பட்டன. பெரு வெள்ளத்தில் பல மனிதர்களும் சிக்கினார்கள்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/614c5e8e-d503-4c27-93e7-d2323ead08f5/26-6a97194ae5359.webp' /></p><h2 style="text-align: justify;">மீட்பு பணிகள்</h2><p style="text-align: justify;">அவர்களில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம். அதேபோல், 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். </p><p style="text-align: justify;">அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரே வீட்டில் 23 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"> இதையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p style="text-align: justify;">மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T21:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-aswesuma-beneficiaries-1788292450"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-aswesuma-beneficiaries-1788292450</id>
            <summary type="text">அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


அஸ்வெசும திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d7697f7-c731-492b-9d26-7c08df04f9f9/26-6a972d644957b.webp' /></p><h2 style="text-align: justify; ">புதிய பயனாளர்கள்</h2><p style="text-align: justify; "> இதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய புதிய பயனாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
</p><p style="text-align: justify; ">


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயனாளர் பெயர் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பயனாளர்கள் தங்களுடைய பெயர், பட்டியலில் உள்ளதா என்பதை உங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மேலும், பெயர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதற்கான மேன்முறையீடுகளைச் செய்வதற்குரிய கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T20:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த இளைஞனால் அதிர்ந்த பொலிஸார் ; விதம் விதமாக மீட்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shocked-by-youth-dangerous-items-recovered-1788291476"></link>
            <id>https://jvpnews.com/article/police-shocked-by-youth-dangerous-items-recovered-1788291476</id>
            <summary type="text">அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது &#039;ஐஸ்&#039;, ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது 'ஐஸ்', ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6944b3a-10eb-4ece-8235-80edb5c57427/26-6a9729959280d.webp' /></p><h2>போதைப்பொருட்கள்</h2><p>
</p><p>
 

அவரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decision-quarantine-and-prevention-of-diseases-law-1788290667"></link>
            <id>https://jvpnews.com/article/decision-quarantine-and-prevention-of-diseases-law-1788290667</id>
            <summary type="text">1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p style="text-align: justify; ">



1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் படிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை நிர்வகிக்கின்ற இலங்கையிலுள்ள முக்கிய சட்டமாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8bfa6d0-1949-4bf7-b079-68a317020117/26-6a97266d08ef5.webp' /></p><h2 style="text-align: justify; ">திருத்தச் சட்டமூலம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



இருப்பினும், உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் தற்போது ஆட்களின், பண்டங்களின் மற்றும் சேவைகளின் தொழிற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையால், தொடர்ந்து இயங்கிவரும் உலகளாவிய விஜயங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தால் தொற்று நோய்கள் நாடுகளுக்கிடையே வேகமாகப் பரவி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.</p><p style="text-align: justify; "> 



அதற்கமைய, 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">ஆயினும், குறித்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p style="text-align: justify; ">


அதனால், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கமைய, கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமைகளின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து, சமகால சுகாதார சவால்களுக்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் பொருத்தமான திருத்தங்களை முன்மொழிவதற்கான மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T19:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக கொள்கலனில் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல் ; சிக்கிய தமிழ் வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-recovered-from-a-port-container-1788286052"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-recovered-from-a-port-container-1788286052</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'பரேவி சுதா' என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

மேலும், அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2c50f2-20b7-476d-a18a-af454c255e2f/26-6a9714659f432.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கொள்கலன்</h2><p style="text-align: justify; "> 

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "> 

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள தனிப்பட்ட உளவாளி ஒருவரிடமிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய கொள்கலனை பரிசோதிப்பதற்காக கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டதுடன், அதற்கமைய நேற்று (31) அந்த கொள்கலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளின் உதவியும் கிடைத்தது. 

கொள்கலனுக்குள் இருந்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை உள்நாட்டு வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி, தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சஷிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார். 

</p><p style="text-align: justify; ">மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இதனுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தானியர்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்ததுடன், அவர்கள் ஜம்பட்டா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

தெமட்டகொடை வர்த்தகரின் நிறுவனத்தின் ஊடாகவே குறித்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களும் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T19:00:05+00:00</updated>
        </entry>
    </feed>
