<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-20T10:34:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050"></link>
            <id>https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050</id>
            <summary type="text">கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அனர்த்த முகாமைத்துவ நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும்; நடிகை ஸ்ருதி ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273"></link>
            <id>https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273</id>
            <summary type="text">ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&amp;nbsp; கூறியுள்ளார்.தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&nbsp; கூறியுள்ளார்.</p><p>தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome) பாதிப்பு இருப்பதால், மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியை அனுபவித்து வருவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;Podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான சிரமங்கள் மற்றும் அதற்கான பணிச்சூழல் ஆதரவு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டால், அதற்கான அதிகாரபூர்வ விடுமுறை நடைமுறைக்கு வந்திருக்கும் என தான் பலமுறை பிரார்த்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், “அப்படி நடந்திருந்தால், வேலை ஒப்பந்தத்திலேயே மாதவிடாய் விடுமுறை இடம்பெற்றிருக்கும்” என ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் கடும் மழை; முறிந்து விழுந்த பாரிய மரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747</id>
            <summary type="text">மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358" target="_blank">மலையகத்தின் பல்வேறு</a> இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.</p><p>கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.</p><p>இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, பெத்தேகம, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.</p><p>மரம் முறிந்து விழுந்தபோது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்க்குழாயின் மீது விழுந்துள்ளதாகவும், இதனால் நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு பெருமளவில் நீர் கசிந்து வீதியில் பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.பன்விலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><div><br></div>]]></content>
            <updated>2026-09-20T09:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777"></link>
            <id>https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777</id>
            <summary type="text">செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு, இன்று (20) அதிகாலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p>இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காகக் குவைத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் குவைத் நகரிலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் அதிகாலை 3:10 மணிக்கு வந்தடைந்தனர்.</p><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தாயகம் திரும்பியவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிதியுதவியையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது</p>]]></content>
            <updated>2026-09-20T09:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T08:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனோஜனின் விடுதலைக்காக இனம், மதம், மொழி கடந்து கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/signature-campaign-in-saudi-anojan-s-release-1789888772"></link>
            <id>https://jvpnews.com/article/signature-campaign-in-saudi-anojan-s-release-1789888772</id>
            <summary type="text">சவுதியில்&amp;nbsp; சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்கான பிரம்மாண்டமான கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்றது.ஞா...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739" target="_blank">சவுதியில்&nbsp; சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின்</a> விடுதலைக்கான பிரம்மாண்டமான கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்றது.</p><p>ஞாயிற்றுக்கிழமை (20)&nbsp; காலை 9:00 மணி முதல், நற்பிட்டிமுனை முதலாம் கட்டைச் சந்தியில் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.</p><p>இனம், மதம், மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து, மனிதாபிமானத்துடன் ஒரு மனித உயிரைப் பாதுகாப்பதற்காக யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில்,கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.</p><p>அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில், பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கட்சி, மத பேதமின்றிப் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-soar-again-in-the-international-market-1789891166"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-soar-again-in-the-international-market-1789891166</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p>அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T07:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-1789890852"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-1789890852</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.&amp;nbsp;இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.</p><p>&nbsp;இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><p>குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T07:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மழை ;நாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p>இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊவாபரணகம தபகொல்ல மலை வெடிப்பு; தாழ்ந்த பூமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359</id>
            <summary type="text">ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&amp;nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&amp;nbsp; தெரிவித்துள்ளது.தபகொல்ல மலையின் தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிலவும் மழையுடன் இவ்வாறு அந்த விரிசல்கள் அதிகரித்து, மழை நீர் ஓடுவதால் பூமி தளரத் தொடங்கியுள்ளதாகவும்&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ள தபகொல்ல மலையைச் சுற்றி வீடுகளோ அல்லது மனித குடியிருப்புகளோ இல்லை என்றும்,&nbsp; &nbsp;அந்த மலையைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/landslide-risk-warning-for-12-districts-sri-lanka-1789887500"></link>
            <id>https://jvpnews.com/article/landslide-risk-warning-for-12-districts-sri-lanka-1789887500</id>
            <summary type="text">12 மாவட்டங்களுக்கு&amp;nbsp; மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 மாவட்டங்களுக்கு&nbsp; மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டம் 1 (எச்சரிக்கை) மற்றும் கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,</p><p>&nbsp;காலி மாவட்டம்: நாகொட, நெளுவ</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற</p><p>நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><p>&nbsp;கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,</p><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை</p><p>காலி மாவட்டம்: தவலம</p>]]></content>
            <updated>2026-09-20T06:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதியில் பறிபோன இளைஞனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-loses-his-life-on-a-jaffna-road-1789885614"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-loses-his-life-on-a-jaffna-road-1789885614</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்&amp;nbsp; மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்&nbsp; மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்&nbsp; &nbsp; சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p>இளைஞன் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p>இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p>முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p>&nbsp;சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T06:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பிரதேசங்களுக்கு பலத்த இடி மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948"></link>
            <id>https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948</id>
            <summary type="text">ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="margin-bottom: 0px;">இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.</p><p>இடி மின்னலினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பயங்கரம்; தாயைக் கொலை செய்து மகன் தற்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019"></link>
            <id>https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே குறித்த மகன் தனது தாயைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கொலையைச் செய்த பின்னர், மகன் அதே வீட்டில் உள்ள அருகில் இருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T05:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனோஜனின் மரண தண்டனை; ஹட்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739"></link>
            <id>https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குமாறு கோரியும், "மனிதாபிமான வேண்டுகோள்" எனும் தலைப்பில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.</p><p>கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T05:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கி்ளிநொச்சி பொலிசாருக்கு இலஞ்சம்; 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840"></link>
            <id>https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களைப் பரிசோதித்த போது, புவியியல் மதிப்பீடு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் வழக்கப்பட்ட மணல் போக்குவரத்து உரிமத்தில் உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடைய வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-20T05:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694</id>
            <summary type="text">கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுகண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது</p><p>கண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன் காரணமாக, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T04:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255"></link>
            <id>https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255</id>
            <summary type="text">தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் 38, 36 மற்றும் 31 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பேங்கொக்கிலிருந்து வானூர்தி மூலம் இலங்கை வந்த அவர்கள், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:41:14+00:00</updated>
        </entry>
    </feed>
