<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T03:37:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனி நபர் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226</id>
            <summary type="text">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a24b19-5b9c-45d3-be63-a35a9c16f4f6/26-6aa2251c4434a.webp' /></p><p style="text-align: justify; "> 

2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T03:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ; நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149</id>
            <summary type="text">கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452e45e7-361c-4300-ab0e-e0299a03e1d0/26-6aa21cff70394.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T02:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து ; 22 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293"></link>
            <id>https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

மெதிரிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1100a0c3-5ec2-4b8a-b4dd-2be3a8ff760c/26-6aa21af82e27c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த இடம் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-09-10T02:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374"></link>
            <id>https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&amp;nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.</p><p>இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8921cf8d-863d-4ff1-a4c6-c7623b50b217/26-6aa2066f81304.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f715f73-0930-4e69-8537-43678f3cbe5c/26-6aa2067034678.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5008c5b8-9f79-4098-b478-fb3cb6adaf86/26-6aa20670e03c0.webp' /></p><h3>துலாம்</h3><p>
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d5164d-290d-48ca-a0c3-7f2fcbc42858/26-6aa2067191fa7.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b762505-26de-46cc-982e-c67d392b6a6d/26-6aa2067244bb4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T01:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893"></link>
            <id>https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் &#039;எதெர திரிய&#039; (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p>

அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e115925-8c77-49c4-a082-7babe17075d7/26-6aa200a68356e.webp' /></p><p>இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும்.
</p><p>
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p>

வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084</id>
            <summary type="text">2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.
கொழும்பு, நீர்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.</p><p>
</p><p></p><p>கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3290c5ad-d692-4b2c-8bcd-933da5f58016/26-6aa1d28598308.webp' /></p><p>

அரசுத் தரப்பு 249 நாட்கள் சாட்சியங்களை முன்வைத்த நிலையில், பட்டியலிடப்பட்ட 2,309 சாட்சிகளில் 547 பேர் மட்டுமே நீதிமன்றில் சாட்சியமளித்தனர். </p><p>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்ததுடன், 584 பேர் காயமடைந்தனர். </p><p>24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:41:32+00:00</updated>
        </entry>
    </feed>
