<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T05:35:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற மறுவாழ்வு முகாம் ஆட்சியர் ; வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545"></link>
            <id>https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545</id>
            <summary type="text">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம்&nbsp; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify;">

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள், அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cff2c4b-b98a-488a-9130-9655ee8747ed/26-6aa3737ee72ba.webp' /></p><h2 style="text-align: justify; ">லஞ்சம் கோரிய&nbsp;சார் ஆட்சியர் </h2><p> </p><p style="text-align: justify;">

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,500 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும், வைத்திய சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் ஒருவர் சென்னையில் வைத்திய சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். </p><p style="text-align: justify;">

ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. </p><p style="text-align: justify;">

பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர்க்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்றவரை சார் ஆட்சியர்&nbsp; தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T05:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p>]</p>]]></content>
            <updated>2026-09-11T05:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரசியல்வாதிகள் , மக்கள் போராட்டம்; செவி சாய்க்குமா அனுர அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293"></link>
            <id>https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc6fefab-9cba-43e6-a583-591b900abb13/26-6aa390a67e426.webp' /></p><p>
</p><p>
இராணுவம் மற்றும் கடற்கரை வெளியேற வேண்டும் என்று கோரி நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
</p><p>
அங்கு, மேற்குறித்த காணிகளை விடுவிக்குமாறு பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. </p><p>

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், </p><p>நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் திருடி பிடிபட்ட இரு இளைஞர்கள் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர், ஆடியம்பலம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளொன்றை பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d1e987-df9b-4538-b1df-4c86dad7ac71/26-6aa38f0b33a96.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுச் சம்பவங்கள்</h2><p style="text-align: justify; ">



இதன்போது, அவரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி வேயங்கொடை பகுதியில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



குறித்த திருட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய மற்றைய சந்தேகநபரும் பின்னர் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் ஆடியம்பலம மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற இரண்டு செப்புக் கம்பி திருட்டுச் சம்பவங்கள், ஒரு கையடக்கத் தொலைபேசி திருட்டுச் சம்பவம் மற்றும் சீதுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T05:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் போத்தல் விற்றவருக்கு 750,000 ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720"></link>
            <id>https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9737f30f-4a21-4db9-889c-0f5a47f56c70/26-6aa38a8157eda.webp' /></p><p>
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
</p><p>
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-11T04:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களின் உயிரை பறித்த குண்டுத்தாக்குதல் ; விசாரணையில் 3 பொலிஸ் குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789100755"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789100755</id>
            <summary type="text">தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef20654-c81e-4581-ad5a-df9f7896499a/26-6aa382d47506d.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் பலி</h2><p style="text-align: justify; ">

இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

</p><p style="text-align: justify; "> 

காயமடைந்தவர் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "> 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T04:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கு முன்பாக இரவில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; மர்ம நபர்கள் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-youth-outside-home-at-night-1789099631"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-youth-outside-home-at-night-1789099631</id>
            <summary type="text">மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று வியாழக்கிழமை (10) இரவு வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024e4da7-bb8c-40b3-afbe-eb904fbb9f56/26-6aa37e709b70c.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>

மாபாகடவெவ, அபேபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இக் கொலைக்கான பின்னணி அல்லது இதனைச் செய்த நபர்கள் யார் என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p>
</p><p>

நீதவான் விசாரணைக்காக உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-president-gotabaya-rajapaksa-to-fcid-today-1789098571"></link>
            <id>https://jvpnews.com/article/former-president-gotabaya-rajapaksa-to-fcid-today-1789098571</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.&amp;nbsp; 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "> 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9caf1beb-ae78-4ba5-b0c7-8c2e89032f32/26-6aa380dc44bc4.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலம்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T03:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[30ரூபாயால் பறிபோன 750,000 ரூபாய் ; தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-issued-at-a-restaurant-in-batticaloa-1789095618"></link>
            <id>https://jvpnews.com/article/order-issued-at-a-restaurant-in-batticaloa-1789095618</id>
            <summary type="text">அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03822a75-edc8-4d97-936c-816c5f0d0349/26-6aa36f8699ebe.webp' /></p><h2 style="text-align: justify; ">திடீர் சோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T03:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நாட்டை உலுக்கிய சம்பவம் ; இரு சிறுவர்களின் உயிரை பறித்த கைக்குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-kills-two-boys-at-dawn-1789094420"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-kills-two-boys-at-dawn-1789094420</id>
            <summary type="text">தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; "><a href="http://jvpnews.com/article/hand-grenade-recovered-from-a-house-in-colombo-1789087926" target="_blank">தெஹிவளை, </a>கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p style="text-align: justify; ">

இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d2f0d00-ae3a-4df6-a111-135efdb41f59/26-6aa36a16a53cd.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "> 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.</p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T02:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளரின் முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு ; யாழ். கல்வியற் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drastic-taken-jaffna-college-education-student-1789090182"></link>
            <id>https://jvpnews.com/article/drastic-taken-jaffna-college-education-student-1789090182</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>குறித்த மாணவி, கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருவதாகவும், மன்றத்தின் செயற்பாடு தொடர்பில் அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியபோது, அவர் முறையற்ற வகையில் பேசியதாகவும் சக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b385d127-f473-4a66-bb4c-a427c9cff9fd/26-6aa359887c6f6.webp' /></p><p>

விரிவுரையாளர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவியை இழிவுபடுத்தியதாகவும், இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில், விரிவுரையாளரின் முறையற்ற வார்த்தை பிரயோகம் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மாணவி மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, மாணவியின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-from-a-house-in-colombo-1789087926"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-from-a-house-in-colombo-1789087926</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe43b2fe-0b65-46c9-a123-0e475e9cefed/26-6aa350b77ac60.webp' /></p><p>மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582"></link>
            <id>https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582</id>
            <summary type="text">லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8316388-df3e-4551-974d-3a7086e358fc/26-6aa2f587b2c6d.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-bhagavan-nanmai-anubavikkum-rasi-1789075573"></link>
            <id>https://jvpnews.com/article/sani-bhagavan-nanmai-anubavikkum-rasi-1789075573</id>
            <summary type="text">நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமென்றால் சனிபகவான்தான். ஜோதிடத்தில், சன பகவான் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமென்றால் சனிபகவான்தான். ஜோதிடத்தில், சன பகவான் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையவர். எனவே சனிபகவானின் கிரக மாற்றங்களும், நட்சத்திர மாற்றங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.</p><p>சொந்த நட்சத்திரத்திற்குள் சனிபகவான் நுழைவது சில ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் நிதிரீதியாகச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c70010-3262-4604-a5e9-f6f57e0bdaba/26-6aa32077cf659.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது முன்னேற்றம் காணக்கூடும். அதேவேளையில், வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளோ கிடைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9eb49ac-b99b-458e-9298-187c0956148d/26-6aa320788925b.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாக நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டு வருபவர்களுக்குச் சிறிது நிவாரணம் கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் செய்த முதலீடுகளில் இருந்து பெரிய லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f734ff-2b9f-4d1d-91c5-f6352ead2986/26-6aa320793cb48.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இது அவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மகர ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக ஸ்திரத்தன்மையையும், பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறக்கூடும். அவர்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c62504-0b28-45da-a967-989e81c1b104/26-6aa32079e424f.webp' /></p><h4>கும்பம்</h4><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு, சனிபகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவது தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறைகளில் பெரும் நன்மைகளைப் பெறலாம். திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலைமை மேம்படும். அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் அவர்களின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf8b0406-3dc0-41d5-bdcb-0aa6e7a15754/26-6aa3207a9677d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T00:39:02+00:00</updated>
        </entry>
    </feed>
