<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-13T17:52:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவணையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி ; பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475</id>
            <summary type="text">தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efd09eb-7a35-41f3-ae9d-471e4a02fd38/26-6a7e0414685a7.webp' /></p><p>இந்த விளம்பரங்களை நம்பிய பலர், வீடுகளை நிர்மாணிப்பதற்காக சந்தேகநபரின் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியுள்ளனர்.
</p><p>
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த பணத் தொகை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய திருப்பம் ; இந்தியாவில் கைது செய்யப்பட்ட இருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், அந்நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c87f75-970f-4393-b04d-0e29dc24f1dc/26-6a7dfee20d2b2.webp' /></p><p>இதனையடுத்து, இருவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே குறித்த இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இருவரிடமும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி அகழ்வுப் பணி தீவிரம் ; ஒரே நாளில் 10 எலும்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-chemmani-10-skeletons-recovered-single-day-1786639595"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-chemmani-10-skeletons-recovered-single-day-1786639595</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது.</p><p> </p><p></p><p>அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd7dd26-ade1-4bca-820b-fb298f1d478f/26-6a7df4ec9f885.webp' /></p><p>

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது.</p><p>அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p>

செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> 

அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய ஆயிரம் வெளிநாட்டவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thousands-foreigners-arrested-connection-cybercrim-1786639134"></link>
            <id>https://jvpnews.com/article/thousands-foreigners-arrested-connection-cybercrim-1786639134</id>
            <summary type="text">சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

'நாடே ஒன்றாக' தேசிய திட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dfa5c-4865-4bc8-895a-e25e86c92454/26-6a7df32005fe8.webp' /></p><p> 

2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p>

எவ்வாறாயினும், அந்த வெளிநாட்டவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதான ரயில் மார்க்கத்தில் தடை ; ரயில் சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/main-railway-line-blocked-train-services-affected-1786638537"></link>
            <id>https://jvpnews.com/article/main-railway-line-blocked-train-services-affected-1786638537</id>
            <summary type="text">பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணித்த ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0669a3-7d78-4d20-8216-1ed1ba3105cc/26-6a7df0cbb45b6.webp' /></p><p>ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் தாமதமாக பயணிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கோளாறுக்குள்ளான ரயிலை சீரமைத்து, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனால் பிரதான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள், ரயில் சேவைகளில் ஏற்படக்கூடிய தாமதங்களை கருத்திற்கொண்டு தங்களது பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c41275-2ac9-4a11-b3af-bfbe0ad50d92/26-6a7da008376f2.webp' /></p><h2>தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள்</h2><p>
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-13T15:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அதிரடி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/explai-against-a-l-examination-question-paper-leak-1786636490"></link>
            <id>https://jvpnews.com/article/explai-against-a-l-examination-question-paper-leak-1786636490</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> </p><p></p><p>எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711a9221-dd62-403c-abab-49538f79e9fc/26-6a7de8cc86899.webp' /></p><p> 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார். </p><p>

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. </p><p>

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன. </p><p>

இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T15:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-notices-issued-93-individuals-hiding-abroad-1786626827"></link>
            <id>https://jvpnews.com/article/red-notices-issued-93-individuals-hiding-abroad-1786626827</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் 93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் 93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a7643b-a99e-4f70-b47b-3fe6db94c420/26-6a7dc31262241.webp' /></p><p>
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பில் எடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை, கடந்த ஜனவரி மாதம் முதல் காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ; குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் புதிய சாதனை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-377-wedding-single-day-guruvayur-krishna-1786626355"></link>
            <id>https://jvpnews.com/article/over-377-wedding-single-day-guruvayur-krishna-1786626355</id>
            <summary type="text">&amp;nbsp; கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9944fb19-8bdc-43ef-a936-35238818c9d0/26-6a7dc1350080b.webp' /></p><h2>23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாள்</h2><p>

எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
அதிக அளவிலான கூட்ட நெரிசலைச் சமாளிக்க, வழக்கமான நேரத்திற்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே திருமணச் சடங்குகளைத் தொடங்க ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளததோடு ஆலயத்தில் பிரத்தியேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்களும் பாதுகாப்புப் படையினரும் நியமிக்கப்படவுள்ளனர்.</p><p></p><p>

அதேவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு திருமணக் குழுவில் மணமகன், மணமகள் மற்றும் படப்பிடிப்பாளர் உட்பட மொத்தம் 24 நபர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்கு அருகில் அனுமதி அளிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்கு முன்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றமையே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணங்கள் மூலம் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-school-student-arrested-with-cannabis-1786627844"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-school-student-arrested-with-cannabis-1786627844</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bcbe7f5-9da0-44a5-9175-1ea6ba934fbd/26-6a7dc7061dc91.webp' /></p><p>

முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் லுணுகலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-g-c-e-a-l-examination-question-paper-leak-1786627460"></link>
            <id>https://jvpnews.com/article/2026-g-c-e-a-l-examination-question-paper-leak-1786627460</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1e611e-796e-43d9-8144-e0f823b66f40/26-6a7dc585edc71.webp' /></p><h2>&nbsp;6 வினாத்தாள் பொதிகள்&nbsp;</h2><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p></p><p> </p><p>

இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463"></link>
            <id>https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3161b034-53e5-4aaa-a109-81c1890b7716/26-6a7d92c1bbf35.webp' /></p><p></p><h2>ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும்</h2><p> </p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06758374-5d10-487e-928b-7b09a1badb6b/26-6a7d92c29ec61.webp' /></p><p><b> 

வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல்</b>. </p><p><b>

அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல். </b></p><p><b>

நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல். </b></p><p>

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

"இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும். </p><p>எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80%க்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என்றார்.</p><p>

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T13:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 நாட்களில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு படைத்த சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/achievement-cm-vijay-tvk-government-in100-days-1786625651"></link>
            <id>https://jvpnews.com/article/achievement-cm-vijay-tvk-government-in100-days-1786625651</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் , தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b1e733-e9e4-4fe7-a30e-3ee737242333/26-6a7dbe74ba08c.webp' /></p><h2>100 நாட்களில்&nbsp;&nbsp; சாதனை</h2><p>
</p><p>

சென்னையில், நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் விஜய் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
மேலும், 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார். 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
</p><p>

777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன் ,9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T12:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018"></link>
            <id>https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.
</p><p>
போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8cf796-c1f6-4331-b0c9-fa3bff8b2c81/26-6a7d8d1c6f6a3.webp' /></p><h2>10 ஆண்டுகால காதல்</h2><p>
 இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். 

இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88b0de1-4e50-4103-a291-cec792964d64/26-6a7d8d1d27d3b.webp' /></p><p> 
அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர்.</p><p>நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p>இன்னிலையில்&nbsp;&nbsp; கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண புகைப்படங்கள் இணையங்க்களில்&nbsp; வைரலாகி வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T12:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் உயிருக்கும் உத்தரவாதமில்லை; எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்; ஜனாதிபதி அநுர குமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-am-ready-to-face-any-challenge-president-anura-1786622496"></link>
            <id>https://jvpnews.com/article/i-am-ready-to-face-any-challenge-president-anura-1786622496</id>
            <summary type="text">&amp;nbsp; தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91956206-8a9f-49f4-a969-9c16127e3ab3/26-6a7db33451d41.webp' /></p><h2>நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன்</h2><p> இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

"எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். </p><p>அடுத்ததாக உபுல் அவர்கள் குறிப்பிட்ட சவால், அதாவது இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் காரணமாக மற்றைய ஜனாதிபதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களுக்கும் செல்ல வேண்டி வரலாம் என்பதாகும்.</p><p></p><p> </p><p>நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன்.

 நான் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அல்ல. அதேபோன்று, இந்த மாற்றத்தைச் செய்வதற்காக அந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ள மனிதன். </p><p>சவால் ஏதுமின்றி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மாற்றம் எப்போதும் சவாலை எதிர்கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது." 

"சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p> </p><p>எனது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இருப்பினும் விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன அல்லவா? அதில் உயிர் ஆபத்து இருக்கிறது என்பதை நான் அறிவேன். </p><p>

ஆனால், ஓர் சவாலை எதிர்கொள்ளாமல் எதனையும் மாற்றியமைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதனால் அந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்.</p><p></p><p> </p><p>அந்த சவாலின் காரணமாக எனது பதவி அற்றுப்போகுமாயின், அதை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகிச் செல்ல நான் தயார். அதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன்." என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-13T12:00:03+00:00</updated>
        </entry>
    </feed>
