<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T05:35:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Avant-Garde நிஸ்ஸங்க சேனாபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்; கைதாகுவாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nissanka-senadhipathi-appears-bribery-commission-1786425538"></link>
            <id>https://jvpnews.com/article/nissanka-senadhipathi-appears-bribery-commission-1786425538</id>
            <summary type="text">&amp;nbsp; அவான்-கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதி (Nissanka Senadhipathi) இன்று (11) காலை ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவான்-கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாபதி (Nissanka Senadhipathi) இன்று (11) காலை ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
</p><p>


'கிரிஷ்' (Krrish) திட்ட ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைக்குத் தொடர்புடைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800c8562-00f3-4637-af32-05cd15e99b9a/26-6a7ab0c45d314.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T05:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/disruption-in-passport-issuance-srilanka-1786424995"></link>
            <id>https://jvpnews.com/article/disruption-in-passport-issuance-srilanka-1786424995</id>
            <summary type="text">&amp;nbsp;இரண்டாம் இணைப்பு

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் வழமைக்கு...

கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக குடிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>&nbsp;இரண்டாம் இணைப்பு
</b></p><p><b>
கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் வழமைக்கு...</b></p><p>

கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்று காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்குத் இடையூறு ஏற்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d2544a-e6d4-4cdf-8471-64adb3700eb0/26-6a7aaea53aa1f.webp' /></p><p><b>முதலாம்&nbsp; இணைப்பு</b></p><p>கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் இன்று (11) முற்பகல் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாகவே இவ்வாறு கடவுச்சீட்டு விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T05:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றினை உலுக்கிய நிலடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு; அச்சத்தில் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/earthquake-in-colombia-111-dead-people-in-fear-1786424609"></link>
            <id>https://jvpnews.com/article/earthquake-in-colombia-111-dead-people-in-fear-1786424609</id>
            <summary type="text">&amp;nbsp; கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலனடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

 

நிலநடுக்கத்தால்&nbsp; ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே&nbsp;அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a33ae11-c409-4adc-b05f-7cfcd3797954/26-6a7aad23335d4.webp' /></p><h2>ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான&nbsp; நிலநடுக்கம் ...</h2><p>

 

</p><p>, காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

மீட்பு நடவடிக்கைகளுக்காக போகோட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குக் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
 

இதற்கிடையில் பெரெய்ரா , மனிசாலேஸ் , கிப்தோ , ஆர்மீனியா , கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><p>

 

மேலும், அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா மாநிலம், பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவுமில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T05:01:10+00:00</updated>
        </entry>
    </feed>
