<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T06:29:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80% மரணங்களுக்கு காரணம் தொற்றா நோய்களே ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/80-of-deaths-in-the-country-are-caused-by-ncds-1789625308"></link>
            <id>https://jvpnews.com/article/80-of-deaths-in-the-country-are-caused-by-ncds-1789625308</id>
            <summary type="text">நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80 சதவீதம் மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன எனவும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80 சதவீதம் மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன எனவும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவையே முதன்மையான காரணங்களாகக் காணப்படுகின்றன எனவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிநவீன 'இருதயப் பராமரிப்பு வளாகத்தின்' கட்டுமானப் பணிகளை நேற்று (16) புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26652821-d4d5-4de0-80df-4e1b74a9fc93/26-6aab85c9c5aba.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">மிகக் கடுமையான பாதிப்பு</span></h2><p style="text-align: justify; "><span style="text-align: left;"><br></span>அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோரின் நிலைமையே தப்போது சரியான கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p style="text-align: justify; ">அதேபோல, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமானோரின் நிலைமையே உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவற்றால் ஏற்படும் மிகக் கடுமையான பாதிப்பு மாரடைப்பு ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்த நவீன கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய சுகாதார அமைப்பின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சனத்தொகை அமைப்பு மற்றும் நோய் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மாற்றியமைக்க அரசாங்கம் 03 முக்கிய கூறுகளைச் செயல்படுத்தி வருகிறது.
</p><p style="text-align: justify; ">
அதன்படி, சமூக மற்றும் தடுப்புச் சுகாதார முறைகளை வலுப்படுத்த வேண்டும். வைத்தியசாலைச் சேவைகளை ஒருங்கிணைத்து வலையமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அத்துடன், அநுராதபுரத்தில் அமைக்கப்படும் இருதயப் பராமரிப்பு வளாகம் போன்ற அதிநவீன சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு இத்திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T06:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான &#039;மவுண்ட் எலிசபெத்&#039; மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301" target="_blank">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்</a>ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாகக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4b47680-f2ea-47bd-9959-2dbecfea4ff3/26-6aab816a79443.webp' /></p><h2>விமான நிலையத்தில்&nbsp; வழங்கப்பட்ட அழைப்பாணை&nbsp;</h2><p> </p><p>

வாக்குமூலம் அளிப்பதற்கான அறிவித்தல் முதலில் தங்காலையில் உள்ள 'கார்ல்டன் ஹவுஸ்' இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p>

அவர் வெளிநாடு செல்லத் தயாராவதை அறிந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். 

ஷிரந்தி ராஜபக்ஷ விமானத்தில் ஏறவிருந்த வேளையில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது.</p><p></p><p> அவருடன் பயணித்த உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, இது சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி என்ற செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4379e0e0-854a-40d4-b0a3-060fb016d8eb/26-6aab828d2e2d6.webp' /></p><p> 

தனது உடல்நலக் குறைபாட்டிற்கான மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் 19-ஆம் திகதி மீண்டும் தீவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதன்படி, திட்டமிட்டபடி 24-ஆம் திகதி அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் ஆஜராவார்.
</p><p>
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 'சிரிலியா சவிய' கணக்கு விவகாரம் குறித்து மேலும் தெளிவுபடுத்திய சட்டத்தரணி, மகரகமவில் உள்ள 'அபேக்ஷா' (Apeksha) மருத்துவமனையில் சிறுவர் புற்றுநோயாளிகளுக்காக 'PET ஸ்கேன்' இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அக்காலகட்டத்தில் இலங்க்கை மக்கள் வங்க்கியில் 2 மில்லியன் ரூபா நன்கொடை பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> 

எனினும், சீன அரசாங்கம் அந்த இயந்திரத்தை இலவசமாக வழங்க முன்வந்ததால், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சிறுவர்களுக்கான வார்டு (ward) ஒன்றை அமைக்க அறக்கட்டளை தீர்மானித்ததாக அவர் கூறினார்.
</p><p>
அந்தக் கணக்கில் உள்ள நிதியில் எதையும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருமோ தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவில்லை என்றும் வங்கி' நன்கொடை உட்பட அனைத்து நிதியும் இன்றுவரை அந்தக் கணக்கிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.</p><p> 

அதேசமயம் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரம் தற்காலிகமானது என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குடும்பத்திலுள்ள பெண்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p> 

முன்னதாக, பாரதா கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய டுமிண்டா சில்வாவும் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
</p><p>
 அக்காலகட்டத்தில், அந்த மருத்துவமனை அறிக்கைகளைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து டுமிண்டாவால் தப்பிக்க முடிந்தமைகும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T05:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூவரை பலியெடுத்த கோர விபத்து ; மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280</id>
            <summary type="text">மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943a8841-387e-4ed9-8cf3-28bd532b2978/26-6aab7cc0cc1ca.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சையில்&nbsp;8 பேர்</h2><p style="text-align: justify;">



கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து அதிவேகமாக மோதி இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify;">



இந்த விபத்தில், கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify;">



விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இச்சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T05:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-faces-tragedy-in-tamil-area-1789615179"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-faces-tragedy-in-tamil-area-1789615179</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று(16) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று(16) இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே சிக்கியுள்ளனர். அதில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f19934-885c-4655-b5e6-1652da61a978/26-6aab5c4d35029.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்
கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

</p><p style="text-align: justify; ">

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T05:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்திற்கிடமான மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspicious-death-police-intensive-investigation-1789622826"></link>
            <id>https://jvpnews.com/article/suspicious-death-police-intensive-investigation-1789622826</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இரத்தினபுரி – பாணதுறை (A8) பிரதான வீதியில் அமைந்துள்ள இலிம்பா சந்திப்பில் ஆற்றின் மறுகரையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இரத்தினபுரி – பாணதுறை (A8) பிரதான வீதியில் அமைந்துள்ள இலிம்பா சந்திப்பில் ஆற்றின் மறுகரையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


ஹொரன பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



 உயிரிழந்தவர் பொக்குனுவிட்டாவைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d053095c-d963-4cd6-b18f-fd95e5ceba13/26-6aab7a2b7605e.webp' /></p><p>
</p><p>


சடலத்தின் மீது இன்று (17) நீதித்துறை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



 சம்பவம் குறித்து ஹொரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T05:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 ரூபாய் வாங்கிய நீதிமன்ற அலுவலக ஊழியர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871"></link>
            <id>https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871</id>
            <summary type="text">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1549bbb-d69c-452e-b3f2-74195b7c8856/26-6aab775f38781.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபரால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பின்னர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T05:15:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறித்து மகன் ஜேசன் சஞ்சய் பெருமிதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-jason-sanjay-proud-of-chief-minister-vijay-1789621474"></link>
            <id>https://jvpnews.com/article/son-jason-sanjay-proud-of-chief-minister-vijay-1789621474</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தனது சிக்மா&#039; படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தனது சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். </p><p>

நடிகரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா.அக்டோபர் 2 ஆம் திகதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad161e8-7231-42bb-ba33-3b7cab3732a2/26-6aab752c317cf.webp' /></p><h2>படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி</h2><p> 

 </p><p>முதலமைச்சர்&nbsp; விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><p> 

படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது தந்தை குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி வருகிறார். 

இந்த நிலையில், ஐதராபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜேசன் சஞ்சய் கூறியதாவது,</p><p></p><p> </p><p>

எனது தந்தை முதல்வர் ஆனதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். 'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். 

எனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்.</p><p> விளம்பரங்கள் அனைத்தும் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும், அவரைச் சார்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன.</p><p> நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><p> 

 நிகழ்ச்சியில் உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் எதை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், 'நேரம் தவாறாமை’ என பதிலளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T05:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்; பலருக்கு கலக்கம்...மனைவி பிள்ளைகளுக்கும் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-new-restrictions-imposed-by-australia-1789620855"></link>
            <id>https://jvpnews.com/article/visa-new-restrictions-imposed-by-australia-1789620855</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


மேலும், தற்காலிக வீசாக்களில் உள்ளவர்கள் பிற வீசாக்களுக்கு மாறுவதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f2813c-293e-45d6-986c-4c5d37dfe6d2/26-6aab727941219.webp' /></p><h2>&nbsp; புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க&nbsp; திட்டம்</h2><p>

தற்போது ஆண்டுக்குச் சுமார் 3 இலட்சமாக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 2028 ஆம் ஆண்டிற்குள் 2 இலட்சத்து 25 ஆயிரமாகக் குறைக்க அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
தற்போது வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத்துணை அவுஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் இந்தச் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன.</p><p></p><p>
</p><p>
2023 இல் 518,000 ஆக உச்சத்திலிருந்த நிகரப் புலம்பெயர்வு, 2024 இல் 429,000 ஆகக் குறைந்து, 2025 ஜூன் 30 உடன் முடிந்த நிதியாண்டில் 306,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p> இதில் பாதியளவினர் வெளிநாட்டு மாணவர்களாவர்.

வலதுசாரி சார்புடைய 'ஒன் நேஷன்' கட்சி, தற்காலிகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><p>


கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அதிகரித்த புலம்பெயர்வோரால் நாட்டின் வீடமைப்புத் துறை, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>

இன்றைய தினம் தேசிய ஊடக மையத்தில் உரையாற்றவுள்ள உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T04:51:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் போலி செய்தி ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-news-circulated-using-police-officers-names-1789620065"></link>
            <id>https://jvpnews.com/article/fake-news-circulated-using-police-officers-names-1789620065</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் மற்றும் அடிப்படையற்றவை என இலங்கை பொலிஸ் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

“கான்ஸ்டபிள் புஞ்ஞசோமவின் ஊழல்கள் இதோ, காலணி பாலிஷ் டின்னிலும் மோசடி, உலகத்தால் தடைசெய்யப்பட்ட ஹைடெரா நிறுவனத்துடனும் டீல்” எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தொடர்பிலேயே பொலிஸ் தலைமையகம் இக் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7533efc0-d0ab-4677-ac3d-3817a3c40843/26-6aab70ad68137.webp' /></p><h2 style="text-align: justify; ">போலி செய்தி</h2><p>
</p><p style="text-align: justify;">
பொலிஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கான காலணி பாலிஷ் டின்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கை, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறைப்படியான அரசாங்கக் கொள்முதல் விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">

இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்த விலையைக் கோரிய நிறுவனத்திற்கே இக் குத்தகை வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">
இதில் எந்தவித தனிப்பட்ட விருப்பங்களோ அல்லது ஊழல்களோ இடம்பெறவில்லை எனப் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
பொலிஸ் அதிகாரிகளின் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக உடலில் அணியும் கேமராக்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகள் மட்டுமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
இதற்காக 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதுடன், 15 நிறுவனங்கள் மாதிரிப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளன.</p><p style="text-align: justify;"> எனினும், இதுவரையில் எந்தவொரு நிறுவனத்திற்கும் இக் குத்தகை வழங்கப்படவில்லை என்றும், அது தற்போது மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p style="text-align: justify;">
பொலிஸ் மா அதிபரினதும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினதும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையிலும் இவ்வாறான போலிச் செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T04:46:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதங்களால் தாக்கிகொல்லப்பட்ட நபர் ; போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-killed-in-sharp-weapon-attack-1789619229"></link>
            <id>https://jvpnews.com/article/person-killed-in-sharp-weapon-attack-1789619229</id>
            <summary type="text">தெஹிவளை - ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை - ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

07 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்று வீடொன்றிலிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திப் கொலை செய்திருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8a8597-a26e-4394-a13c-25a55e252f8c/26-6aab6c1e559f4.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">தீவிர விசாரணை</span></h2><p style="text-align: justify; ">இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (16) அங்குலானை, கந்தவல வீதி மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இக் குற்றத்தை மேற்கொண்ட நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 04 வாள்கள் உள்ளிட்ட 05 கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்த 23, 24 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T04:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாடியிலிருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்யப்பட்ட விடுதி ஊழியர் ; அம்பலமான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hotel-worker-pushed-to-death-from-balcony-1789616683"></link>
            <id>https://jvpnews.com/article/hotel-worker-pushed-to-death-from-balcony-1789616683</id>
            <summary type="text">சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சீதுவை நகர் பகுதியில் உள்ள <a href="https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132" target="_blank">விடுதியொன்றின்</a> மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

இவ்வாறு உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/484ed5f0-3464-4be5-a898-4b06eb649539/26-6aab714e1c12a.webp' /></p><h2 style="text-align: justify; ">தகராறு</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

உயிரிழந்த நபர் குறித்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவ்விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இவர் மற்றொரு ஊழியருடன் இணைந்து மதுஅருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு முற்றியதில், மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T03:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ; 24 மணி நேரமும் இயங்கும் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-police-notice-to-sri-lankans-1789613564"></link>
            <id>https://jvpnews.com/article/important-police-notice-to-sri-lankans-1789613564</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

24...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

24 மணி நேரமும் இயங்கும் இத்தொலைபேசி எண்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான சிக்கல்களைத் தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70f56c6-4c57-4a62-b0c5-59cf1899b306/26-6aab55fe419fc.webp' /></p><h2 style="text-align: justify; ">இணையவழி முறைமை</h2><p style="text-align: justify; "> 

கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழி (Online) முறைமையின் ஊடாக பொலிஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை, பிரதேச பொலிஸ் நிலைய மட்டத்தில் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 071 859 59 46 , 071 859 59 47 , 071 859 59 48 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற முடியும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T02:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொறியை உடைத்துக்கொண்டு பாய்ந்த சிறுத்தை ; வைத்தியருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doctor-s-fate-while-rescuing-a-leopard-1789612641"></link>
            <id>https://jvpnews.com/article/doctor-s-fate-while-rescuing-a-leopard-1789612641</id>
            <summary type="text">பொறியில் (Wire Trap) சிக்கியிருந்த சிறுத்தையைக் காப்பாற்றச் சென்ற வனவிலங்கு மருத்துவ அதிகாரி, அந்த சிறுத்தையின் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொறியில் (Wire Trap) சிக்கியிருந்த சிறுத்தையைக் காப்பாற்றச் சென்ற வனவிலங்கு மருத்துவ அதிகாரி, அந்த சிறுத்தையின் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ரந்தெனிகல வனவிலங்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரே சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2665d3d5-a6b3-48e7-94a7-e43a04402cb3/26-6aab5268578e9.webp' /></p><h2 style="text-align: justify; ">காட்டுக்குள் தப்பி ஓட்டம்&nbsp;</h2><p style="text-align: justify; ">

சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்த முற்பட்ட போது, அது பொறியை உடைத்துக் கொண்டு அவர் மீது பாய்ந்து பின்னர் காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுத்தை பொறியில் சிக்கியிருந்தபோதும் அதற்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காயங்களுக்கு உள்ளான மருத்துவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
முழு பலத்துடன் இருந்ததால் மட்டுமே அதனால் பொறியை உடைத்துக் கொண்டு தப்பிக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T02:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp; அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411d3db-eab1-491c-9230-307035f1a00b/26-6aab2e69377a6.webp' /></p><p> </p><p>குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் திகதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a287e1-fa6d-4887-8094-66d4bf50ca29/26-6aab2e6880701.webp' /><br><h3>சிம்மம்
</h3></p><p>சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1bd01a-75ff-47e5-98ef-9c38bfe8d22c/26-6aab2e69e19ad.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407e1da4-dedc-4ba8-8526-45e2751afada/26-6aab2e6a9fd83.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82fda47f-e9df-4c81-8020-5f3cc0d264f0/26-6aab2e6b53b6f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு ; 8 பேர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p> </p><p></p><p>விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bde9773-b5cf-4b4d-8232-039f59438daf/26-6aab373a339bc.webp' /></p><p>வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p> 

இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல மாகாணங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான மழை ; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708</id>
            <summary type="text">இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>
</p><p></p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42eed6d3-fc9c-4374-8a27-25bf11c887df/26-6aab3b370d52f.webp' /></p><p>

மேலும், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6c4ad8-27a0-43b0-b7bf-d6fdcb7498b9/26-6aab1ec71e5a1.webp' /></p><p>

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:42:06+00:00</updated>
        </entry>
    </feed>
