<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T06:37:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655"></link>
            <id>https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ff764-1cbe-4f3c-a2f7-1a3e8b22f528/26-6a892d7679156.webp' /></p><h2>&nbsp;50,000 ரூபா தண்டப்பணம்</h2><p> 

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p> 

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 400 இற்கும் மேற்பட்டோருக்கு கண்பிரச்சனை; மின்குமிழ் பற்ற வைத்தவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>



குறித்த அதிக ஒளியை ஏற்படுத்திய மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2bcfd7d-dddc-4972-b884-a51884b1629d/26-6a893c9987851.webp' /></p><p>


விசாரணைகளின் பின்னர் அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



இதேவேளை, அதிகளவான ஒளிப்பாவனையால் கண்கள் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578" target="_blank"> மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியி</a>ன் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
</p><p>


நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f3dea5-198d-4d63-b552-d31c0e160f7a/26-6a8936e5b9945.webp' /></p><p>இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p></p><p>
</p><p>
மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T05:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129"></link>
            <id>https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், நெடுந்தீவின் இயற்கை சூழலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48cd01b-7b51-4676-9b6d-15576a46e966/26-6a8935eb6cdec.webp' /></p><p></p><h2>&nbsp;குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள&nbsp;வனவிலங்குகள்</h2><p>
</p><p>
கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதால், வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.</p><p>


நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் ஊடாக போனி குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a411b76-3228-4b21-a9d8-6c051ec11255/26-6a8935ec27215.webp' /></p><p>



நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும், தீவின் இயற்கை அழகையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீவுப் பகுதிகளில் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் , உந்துருளிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு; பொலிசார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597"></link>
            <id>https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e6b232-93be-48ed-814e-a23fd6e9340a/26-6a8933d6e62ce.webp' /></p><h2>பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்</h2><p>
</p><p>
குறிப்பாக, சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் இயந்திரம் இயக்கிய நிலையிலேயே வாகனத்தை விட்டுச் செல்வதாகவும், இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், இரவு நேரங்களில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T05:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சிறுவனுக்கு எமனான உழவு இயந்திரம்; சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tractor-proves-fatal-for-boy-in-kilinochchi-1787374900"></link>
            <id>https://jvpnews.com/article/tractor-proves-fatal-for-boy-in-kilinochchi-1787374900</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. 

உயிரிழந்த குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. </p><p>

உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e989c1-3b12-49e0-b362-ceaeb8fc7cf8/26-6a892d3585ac8.webp' /></p><h2>&nbsp;சாரதி கைது&nbsp;</h2><p> 

இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.</p><p> 

இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. </p><p>உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பண்டத்தரிப்பு ஆலய சம்பவம் ; 400 பேர் கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243"></link>
            <id>https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு <a href="https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434" target="_blank">பிரான்பற்று முருகன் ஆலயத்தில் </a>இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

 ஆலய திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் கண் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a9d12-7ffd-495d-93bf-ee9478baff2f/26-6a892aa570225.webp' /></p><p> </p><p>

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T04:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>



கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec335d3c-7f5c-4687-9768-e567cf08c43c/26-6a88b3c77f1c0.webp' /></p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>



இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
</p><p>


எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. </p><p>



எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்,

இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/astrology-sukra-peyarchi-athirsta-malai-perum-rasi-1787359240"></link>
            <id>https://jvpnews.com/article/astrology-sukra-peyarchi-athirsta-malai-perum-rasi-1787359240</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்; இந்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பான மற்றும் மங்களகரமான பலன்களைத் தரும். </p><p>சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி, செவ்வாய் ஆளக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி, குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f030112f-7052-43c2-8fe0-953ce65ac3e2/26-6a88f00a0483d.webp' /></p><h3>மேஷம்</h3><p>உத்தியோகம் மற்றும் தொழிலில் திறமைகளை வெளிப்படுத்த புதிய தளங்கள் அமையும். வருமானம் உயர்ந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ffc69d-bcdc-40fa-bdd7-fe2759dc3263/26-6a88f00aadc84.webp' /></p><h4>ரிஷபம்</h4><p>ஐந்தாம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால், படைப்பாற்றல் மற்றும் திறமைகள் மிளிரும். கலை, இசை மற்றும் எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்; சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c0674e-b332-420d-af60-1a76450a05e4/26-6a88f00b5cc1f.webp' /></p><h3>துலாம்</h3><p>பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும், புதிய தொழில் கூட்டணிகளும் கைகூடும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்; நிதி நிலைமை சீராக இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் விவகாரங்களில் இணக்கமான சூழல் நிலவும். தன்னம்பிக்கை அதிகரித்து அனைத்து சவால்களையும் எளிதாகக் கையாள்வீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03cfa30-76f9-448e-baf5-4d9c3605b2bf/26-6a88f00c0e386.webp' /></p><h3>விருச்சிகம்</h3><p>பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமைவதால், எதிர்பாராத பண வரவு உண்டாகும். வாராக்கடன்கள் வசூலாகும்; செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவும் புதிய வருமான வழிகளும் கிடைக்கும். பணியிடத்தில் விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் மற்றும் இல்லற வாழ்வில் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124c0332-357c-4b65-b570-7cdc1dbb6788/26-6a88f00cb9aca.webp' /></p><h3>மகரம்</h3><p>பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் பயணிப்பதால், தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகி சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், தொழிலில் கூடுதல் லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புனிதப் பயணங்கள் அல்லது சுற்றுலா சென்று வர சாதகமான சூழல் அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3db858e-73d6-4fd9-9d27-a4d1c26aa07d/26-6a88f00d7f814.webp' />&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T00:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் இறுதி உரை ; அரசியல் விமர்சனத்துடன் பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8d697c-67e0-400a-9312-f1781c1cd78b/26-6a88ab2252955.webp' /></p><p>அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:41:19+00:00</updated>
        </entry>
    </feed>
