<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T22:44:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T22:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084</id>
            <summary type="text">2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.
கொழும்பு, நீர்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.</p><p>
</p><p></p><p>கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3290c5ad-d692-4b2c-8bcd-933da5f58016/26-6aa1d28598308.webp' /></p><p>

அரசுத் தரப்பு 249 நாட்கள் சாட்சியங்களை முன்வைத்த நிலையில், பட்டியலிடப்பட்ட 2,309 சாட்சிகளில் 547 பேர் மட்டுமே நீதிமன்றில் சாட்சியமளித்தனர். </p><p>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்ததுடன், 584 பேர் காயமடைந்தனர். </p><p>24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702"></link>
            <id>https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702</id>
            <summary type="text">நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.</p><p> </p><p></p><p>இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ff2434-2248-4a75-a955-a8a4821f3d0d/26-6aa1cd202b1ce.webp' /></p><p>இந்த ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அக்குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. </p><p>இதனையடுத்து, தற்போது கப்பல்களில் அவசியமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:19:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234"></link>
            <id>https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a270f557-2a7c-44db-b5da-46f955d57e81/26-6aa18ccba912e.webp' /></p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">போலி இலக்கத் தகடுகள்&nbsp;</span></h3><p>ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29fe8e-6597-4c6c-aa55-19d2e3347706/26-6aa18ccc678f1.webp' /></p><p>கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T20:32:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803"></link>
            <id>https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803</id>
            <summary type="text">Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp;amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

கெமரா, செயல்திறன், மின்கல ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் இந்த புதிய கைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>புதிய ப்ரோ மாதிரிகளில் 2-நனோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எப்பளின் 'ஏ20 ப்ரோ' (A20 Pro) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் 7-கோர் ஜிபியு (GPU) ஆனது முந்தைய ஏ19 ப்ரோ சிப்பை விட 40 சதவீதம் வரை வேகமான செயல்திறனை வழங்கும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த புதிய மாதிரிகளில் கெமரா பிரிவில் மிகப்பெரிய மாற்றமாக, ஐபோனில் முதல்முறையாக 'மாறிவரும் துளை' (Variable Aperture) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 மெகாபிக்சல் பியூஷன் முதன்மைக் கெமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c949434-8866-47e5-9695-9bbc7271ed4c/26-6aa1b9fd66fe2.webp' /></p><p>ஒளியமைப்பு மற்றும் ஆழத்துக்கு ஏற்ப இந்த கெமரா தானாகவே துளை அளவை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது.</p><p> மேலும், படங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக 'எப்பள் ரெஃபரன்ஸ் இமேஜ்' (Apple Reference Image) என்ற புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் புதிய சிறிய அளவிலான டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) ஒரே நேரத்தில் மூன்று நேரடி செயற்பாடுகளை (Live Activities) காட்டும் திறன் கொண்டது.</p><p>

ஐஓஎஸ் 27 (iOS 27) இயங்குதளத்தில் இயங்கும் இதில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புரிந்து கொண்டு செயல்படும் புதிய 'சிறி ஏஐ' (Siri AI) வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><p>

மின்கல (Battery) வசதியைப் பொறுத்தவரை, ஐபோன் 18 ப்ரோ 36 மணி நேரமும், ப்ரோ மெக்ஸ் 45 மணி நேரமும் காணொளி பிளேபேக் வழங்கும். மேலும், வயர் மூலம் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்.</p><p>

கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இவற்றின் ஆரம்ப விலை அமெரிக்காவில் 1,199 டொலர்களில் தொடங்குகிறது.</p><p> செப்டம்பர் 12ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படவுள்ள இந்த கைபேசிகள், செப்டம்பர் 18ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T19:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110</id>
            <summary type="text">மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படகு ஓட்டுநரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், கொழும்பு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae08efc-b945-4595-8f24-cbb54de815a3/26-6aa1ab8ff411d.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
இஷாரா செவ்வந்தியை திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்த சந்தேகநபர், அவரை இந்தியாவில் இறக்கிவிட்ட பின்னர் படகில் பொருத்தப்பட்டிருந்த முக்கிய சாட்சியமான GPS கருவியை அழித்துள்ளதாகவும் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இதே முறையைப் பயன்படுத்தி பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியுள்ளதாகவும், இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல 50,000 ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
குற்றப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drinking-water-supply-affected-wildlife-in-ampara-1788978728"></link>
            <id>https://jvpnews.com/article/drinking-water-supply-affected-wildlife-in-ampara-1788978728</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வனவில திணைக்கள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வனவில திணைக்கள அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><p>அம்பாறை சரணாலயம் என அழைக்கப்படும் புத்தாங்கல மற்றும் கல் ஓயா வடகிழக்கு பகுதிகளில் வறண்டுபோன குளங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காக காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அனுசரணையில் தாங்கி ஊர்திகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe809ec-87c9-4ad4-96de-f4a8fd11ec26/26-6aa1a629c4581.webp' /></p><p>நீண்டகாலமாக நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள பல இயற்கை நீர்நிலைகள் வறண்டுவிட்டதாகவும், இதனால் வனவிலங்குகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த நீர் விநியோக நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட செயலாளர் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறார்.
</p><p>
இதேவேளை, வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லாஹுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தம் ; ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-premadasa-questions-the-president-s-remarks-1788977174"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-premadasa-questions-the-president-s-remarks-1788977174</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்னும் வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்ட திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பே தேவையான பெரும்பான்மை குறித்து குடியரசுத் தலைவர் முடிவுக்கு வருவது எப்படி என வினவினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f964a57-e195-4da8-8d9e-e125bdd2777d/26-6aa1a017bc2d8.webp' /></p><p>மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இந்தநிலையில்,பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி வரும் அரசாங்கம், சான்றளிக்கப்பட்ட ஊடக வல்லுநர்களுக்கான சட்டம் மூலம் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முற்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஊடகங்களை ஒடுக்கும் அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349"></link>
            <id>https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349</id>
            <summary type="text">பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், பிறரின் உதவியை நாடாமல் தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5000e13e-ac2a-4b11-aa2d-1ee884511eb2/26-6aa19126b23c3.webp' /></p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:02:43+00:00</updated>
        </entry>
    </feed>
