<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T09:34:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி யூரோ நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816</id>
            <summary type="text">&amp;nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹட்டன் நகரில் போலி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


ஹட்டன் நகரில் போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (14) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf85b0-d69d-4714-8691-7a6387aecd0d/26-6aa910f1768ba.webp' /></p><p>
</p><p>


 சந்தேகநபரிடம் இருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலி நாணயத்தாள்களும் உட்பட மொத்தம் 16 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனர் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னிடம் வழங்கியதாகவும், அவை போலியானவை என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களுக்கு ஞா. ஸ்ரீநேசன் எம்.பி. களவிஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194"></link>
            <id>https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று 15.09.2026 களவிஜயம் மேற்கொண்டார்.</p><p>

இதன்போது பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் வீதிகளை நேரில் பார்வையிட்டார். குறித்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>
</p><p>
பெரிய புல்லுமலை பகுதியில் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். </p><p>இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரியுடன் தொடர்புகொண்டு, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், பெரிய புல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்களின் அழைப்பின் பேரில் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>

எல்லைப் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரில் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569"></link>
            <id>https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645" target="_blank">&nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை </a>செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (14) பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4158f368-f6c7-4f27-95a8-1e2cdd067140/26-6aa9082b6c468.webp' /></p><h2>இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை</h2><p> </p><p>

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு குறித்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11 ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp; &nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர் 

மேலும் கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T08:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நால்வரின் உயிரைப் பறித்த பிரிட்ஜ் ; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852"></link>
            <id>https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 கர்நாடகா மாநிலம் பெலகவி பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்திருக்கிறது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 
 வீட்டில் பாரதி, சாரதா, கங்கா, பிரியா ஆகிய நான்கு பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c58fe9f-2e65-458e-aee5-e03cf5220fd9/26-6aa901764a698.webp' /></p><h2>விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..</h2><p> அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே பிரிட்ஜ் இருந்துள்ளது.

நள்ளிரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்ஜ் வெடித்திருக்கிறது. </p><p>தீ கொழுந்து விட்டு எறிந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நான்கு பேரும் மரணமடைந்தனர்.

 மேலும் இருவர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><p>
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வந்ததால் ஃபிரிட்ஜ் வெடித்ததை அருகிலிருந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக நினைத்துவிட்டதாகவும் அதன்பின் விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-15T08:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி மீது தொற்றிக் கொண்ட வௌவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523"></link>
            <id>https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523</id>
            <summary type="text">நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வௌவால் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
வௌவால் தொற்றிக் கொண்டதும் அச்சுறுத்தும் அந்தச் சூழலிலும் பதற்றமடையாமல் அந்தப் பயணி அமைதியாக நின்ற விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58c50d1-cd36-43d6-b36b-6688c1ea73b9/26-6aa8f47531e29.webp' /></p><h2>இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி ஒன்றில்,சுற்றுலாப் பயணியின் மீது திடீரென வந்து அமர்ந்த வௌவால் அவரை விட்டு நகராமல் ஒட்டியுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், பயந்து ஓடாமல் குறித்த சுற்றுலாப்பயணி அமைதியாக ஒரே இடத்தில் நின்றார்.</p><p></p><p>
</p><p>
அருகில் இருந்த மற்றொருவர் அந்த வௌவாலை அகற்ற அவருக்கு உதவ முயன்றார்.

இந்தநிலையில்,"நீங்கள் இலங்கைக்குச் செல்லும் போது... பெட்மேனே உங்கள் மீது விழுந்தால்..." என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு 24 மணி நேரம் மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69720e08-3ff7-4a58-a646-e04f7ed1b87f/26-6aa8fda2c6da7.webp' /></p><p> 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535</id>
            <summary type="text">&amp;nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் இன்று (15) காலை 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3937e48c-4285-4020-b768-dfd4c0c4cb5f/26-6aa8fc5117929.webp' /></p><p> 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட தூர ஜெட் விமானம் சொந்தமாக வைத்துள்ள இலங்கையர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-sri-lankan-who-owns-a-long-range-jet-aircraft-1789454813"></link>
            <id>https://jvpnews.com/article/a-sri-lankan-who-owns-a-long-range-jet-aircraft-1789454813</id>
            <summary type="text">&amp;nbsp; தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்று முன்தினம் (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். </p><p>

கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb535d-b4dd-417c-887a-ecbcb87c697b/26-6aa8e9df239ab.webp' /></p><p>
இவர் இலங்கைக்கு வருகை தந்த 'கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5' (Gulfstream G-V) விமானமானது ஒரே தடவையில் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>

இலங்கையின் முதலாவது தனியார் விமானமாக 1980 ஆம் ஆண்டுகளில் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'லியர்ஜெட் 35ஏ' (Learjet 35A) விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் விசமிகளா? ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plane-rumesh-tharanga-a5-javelin-damaged-1789452518"></link>
            <id>https://jvpnews.com/article/plane-rumesh-tharanga-a5-javelin-damaged-1789452518</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்டை வந்தடைந்தார். </p><p>

அங்கு, அவர் கொண்டுவந்த 5 ஈட்டிகள் விமான மூலம் கொண்டுவரப்பட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82aa282-4ebc-450a-9d5f-b30fd6f2cc1d/26-6aa8e0e7c530c.webp' /></p><h2>&nbsp;துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்</h2><p> </p><p>

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.</p><p></p><p>&nbsp; சேதமாக்கப்பட்ட அவற்றின் மதிப்பு ரூ. 2 மில்லியனுக்கும் அதிகம் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் தற்போது வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T06:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா தாக்குதல் ; மயிரிழையில் தப்பித்த ஐரோப்பிய தூதுவர்கள் மற்றும்போரிஸ் ஜொன்சன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/russia-attack-train-poland-boris-johnson-escapes-1789452143"></link>
            <id>https://jvpnews.com/article/russia-attack-train-poland-boris-johnson-escapes-1789452143</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

 ட்ரோன் நெருங்கியதை முன்கூட்டியே அறிந்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

 ட்ரோன் நெருங்கியதை முன்கூட்டியே அறிந்ததால், பயணிகள் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அதேவேளை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் காரல் பில்ட் உள்ளிட்ட ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில் ஒன்று சம்பவ இடத்தை கடந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பின்னர், அதே வழித்தடத்தில் சென்ற மற்றொரு பயணிகள் ரயில் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c8871-3147-4462-9860-2f332e36b82b/26-6aa8df70b2291.webp' /></p><h2>ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில்&nbsp;</h2><p>
</p><p>


நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து திரும்பும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான ரயில் வழித்தடமாகவும் இது காணப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


அதேவேளை ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ரயில்களின் நேர அட்டவணை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனால் தூதுவர்கள் பயணித்த ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுள்ளது. எனவே, ரஷ்யாவின் உண்மையான இலக்கு தூதுவர்கள் பயணித்த ரயிலாக இருக்கலாம் என உக்ரைன் ரயில்வே நிர்வாகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இதே பகுதியில் மற்றொரு சரக்கு வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ எல்லைக்கு அருகில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இத்தகைய தாக்குதல்களை போலந்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், இது ‘அத்துமீறலின் உச்சகட்டம்’ என தெரிவித்துள்ளது.</p><p>



எனினும், ஐரோப்பாவிலிருந்து வரும் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கட்டமைப்புகளையே தாங்கள் இலக்கு வைத்ததாக ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163"></link>
            <id>https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d1d448-3ddd-46f3-8f91-4920e62b80aa/26-6aa8d7b4626cd.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. </p><p>

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T05:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய பகை ...இருவர் கொலை; பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். </p><p>

நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265df11a-b15b-43c7-9a1c-0b480a3c5199/26-6aa8d09eb5044.webp' /></p><h2>தனிப்பட்ட தகராறு</h2><p> 

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 

இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். 

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T04:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661"></link>
            <id>https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
</p><p>
 முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/222928db-b87f-44c7-81a9-dc9fff0780b0/26-6aa8cdef56deb.webp' /></p><p>
</p><p>


அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.



அதன்பின்னர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p>&nbsp;நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூக செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;அதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T04:44:29+00:00</updated>
        </entry>
    </feed>
