<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T17:25:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349"></link>
            <id>https://jvpnews.com/article/new-facility-persons-disabilities-at-atm-machines-1788973349</id>
            <summary type="text">பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், பிறரின் உதவியை நாடாமல் தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5000e13e-ac2a-4b11-aa2d-1ee884511eb2/26-6aa19126b23c3.webp' /></p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234"></link>
            <id>https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a270f557-2a7c-44db-b5da-46f955d57e81/26-6aa18ccba912e.webp' /></p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">போலி இலக்கத் தகடுகள்&nbsp;</span></h3><p>ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29fe8e-6597-4c6c-aa55-19d2e3347706/26-6aa18ccc678f1.webp' /></p><p>கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:46:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இலக்க தகடுகள் குறித்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-number-plates-will-distributed-six-months-1788970630"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-number-plates-will-distributed-six-months-1788970630</id>
            <summary type="text">தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c579eb-b2ab-45aa-af85-db5fd4ccedb2/26-6aa186887ce54.webp' /></p><p> 

இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p> 

இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது.</p><p> 

அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன. </p><p>

2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன. </p><p>

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது. </p><p>

இதன்மூலம் எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினையை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் ; விரைந்து விடுவிக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-vehicles-stranded-at-ports-urgent-release-1788969935"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-vehicles-stranded-at-ports-urgent-release-1788969935</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a92c64-0264-48d8-834f-00320145afa4/26-6aa183d08ce7d.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.</p><p>

இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-just-moments-ago-1788968329"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-just-moments-ago-1788968329</id>
            <summary type="text">மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பிரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e677f2f0-b9a6-41c8-8fb9-748a8e8698a8/26-6aa17d8aa31cf.webp' /></p><p>எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T15:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியுதவியில் 3 புதிய பாலங்கள் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714"></link>
            <id>https://jvpnews.com/article/3new-bridges-in-batticaloa-funded-govnt-of-india-1788960714</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திறந்து வைக்கப்பட்டன.
</p><p>
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f5bece-dc01-4613-b7d3-021c837a1256/26-6aa15fcc63252.webp' /></p><p>
</p><p>
பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589"></link>
            <id>https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589</id>
            <summary type="text">&amp;nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சவர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7144d3d4-c624-4678-9498-00c528ef9276/26-6aa153970135e.webp' /></p><h2>&nbsp; AI&nbsp; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>
எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> 

தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08219b70-b7bd-4b0d-a201-592cb16bdc53/26-6aa15de3c2fcb.webp' /></p><h2>&nbsp;குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p> </p><p>

ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p> 

எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p> 

குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364ae4cf-8f30-4212-b56d-d6e5dcc81690/26-6aa15bbf586b3.webp' /></p><p>
</p><p>
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 கிராம் தேயிலைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233"></link>
            <id>https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233</id>
            <summary type="text">&amp;nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d3d6c-8bdd-4182-9072-4ce821f41462/26-6aa1561a951f0.webp' /></p><h2>&nbsp;குற்றத்தை ஒப்புக்கொண்ட&nbsp; நிறுவனம் </h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594"></link>
            <id>https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22314474-3191-4079-b8c8-f34dec547cdf/26-6aa14fb3a177e.webp' /></p><p> </p><p>

குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956"></link>
            <id>https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு புதன்கிழமை (9) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்&nbsp; &nbsp;.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f3bc14-6a55-4d1f-b999-57a49df0e2c2/26-6aa158ed8d504.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T12:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடையூறு விளைவித்தால் தண்டனை ; அர்ச்சுனா எம்.பிக்கு நாடாளுமன்றில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-warns-mp-archuna-1788954589"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-warns-mp-archuna-1788954589</id>
            <summary type="text">சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என குழுக்களின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என குழுக்களின் பிரதித் தலைவரான ஹேமாலி வீரசேகர, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நோக்கி எச்சரித்தார்.</p><p style="text-align: justify; ">

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcc8c51-ef50-4b2e-ad31-9e6c3a15f6ed/26-6aa147df38232.webp' /></p><h2 style="text-align: justify; ">சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு</h2><p style="text-align: justify; ">இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, அவரை இவ்வாறு எச்சரித்தார்.
</p><p style="text-align: justify; ">
பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது,அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா&nbsp; ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T11:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[54 இடங்களில் குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-underweight-bread-at-54-locations-1788954669"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-underweight-bread-at-54-locations-1788954669</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு முறையான எடையில் பாண் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெதுப்பகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe58df1-ac70-4bb3-a14f-30ca52428e84/26-6aa1482ed026c.webp' /></p><h2>&nbsp;செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை&nbsp;</h2><p>
</p><p>
முதற்கட்ட ஆய்வுகளின்படி, 54 இடங்களில் தெளிவான எடை விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் எடைக் குறைவான பாண் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
76 கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் பாணின் எடையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும், 65 இடங்கள் அதன் விலையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் முற்றுகையின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 81 வெதுப்பகங்கள் முற்றுகைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு முழு பாணின் எடை 450 கிராமும், அரை பாணின் எடை 225 கிராமும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 அதேசமயம் பாணிண் எடை, விலைகள் அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக நுகர்வோர் தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T11:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-the-reservoir-1788954173"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-the-reservoir-1788954173</id>
            <summary type="text">&amp;nbsp; தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று(08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று(08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


நீர்த்தேக்கத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பயணப் பை, கைபேசி மற்றும் பணப் பை என்பன பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்த்தேக்கத்தின் அடியில் சேற்றில் புதைந்திருந்த நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3adf3c39-4d62-40e9-b8ee-7c0d982732c8/26-6aa1463f1b85c.webp' /></p><p> 



 சடலம் ஹப்புத்தளை, கஹகல்ல தோட்டத்தில் வசித்து வந்த எஸ்.பிரான்சிஸ் (46 வயது) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
ஹப்புத்தளை பகுதியிலிருந்து தலவாக்கலையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த இவர், பின்னர் தலவாக்கலை நகரத்திற்கு வந்து, நகரத்திற்கு அருகிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>



நீதிவான் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p>



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:39:46+00:00</updated>
        </entry>
    </feed>
