<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T18:05:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-arrest-former-state-minister-s-son-1784656858"></link>
            <id>https://jvpnews.com/article/police-arrest-former-state-minister-s-son-1784656858</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். 


இரண்டு கோடி ரூபாவை கொள்ளையடித்த விவகாரத்தில் இவர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">


இரண்டு கோடி ரூபாவை கொள்ளையடித்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec056e85-0f51-4bb6-a9b6-1d550adc7d1e/26-6a5fb3db8f108.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடையவர் ஆவர். </p><p style="text-align: justify; ">இவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி லூசன் சூரியபண்டாரவின் பணிப்புரையின் பேரில், கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T18:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தப்பிச்சென்ற லொறி சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-claims-woman-s-life-1784655677"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-claims-woman-s-life-1784655677</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று, முன்னால் சென்ற மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>

இவ்விபத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dedec7f-2bbc-4102-9833-062156d0c72d/26-6a5faf3f0be0c.webp' /></p><p>

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற கொள்கலன் லொறி மற்றும் அதன் ஓட்டுநர் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

இச்சம்பவங்கள் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T18:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று வாரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nalinda-warns-of-three-week-challenge-1784654647"></link>
            <id>https://jvpnews.com/article/nalinda-warns-of-three-week-challenge-1784654647</id>
            <summary type="text">அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

தற்போது டெங்கு நோய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்நிலைமை ஆபத்தான மட்டத்திலேயே இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce294c00-0055-49ff-9dcd-39849ede41c7/26-6a5fab3919269.webp' /></p><h2 style="text-align: justify; ">நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; ">

 

3 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">

 

"டெங்கு என்பது ஒரே நாளில் அனைவரும் வீதியில் இறங்கித் தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. நிலவும் மழைக்கால சூழ்நிலையால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; "> வீடுகளில் நாம் கவனிக்காத இடங்களில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம். 

 

அதனால், சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். </p><p style="text-align: justify; ">கொழும்பு மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் நோயாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், விழிப்புணர்வை கைவிடக் கூடாது.</p><p style="text-align: justify; ">அடுத்த 3 வாரங்களுக்கு இந்த அபாயம் நீடிப்பதால், பகுதிகளைச் சுத்தம் செய்து, சுகாதார பரிசோதகர்களின் (PHI / MOH) உதவியுடன் புகையூட்டல் (Fogging) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T17:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்து ; தொழில் பிரதி அமைச்சரின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-order-issued-following-homagama-fire-1784653253"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-order-issued-following-homagama-fire-1784653253</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (21) காலை சுமார் 9:45 மணியளவில் குறித்த மூன்று மாடி தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15b3a79-8b90-49dc-9040-5f106bd032da/26-6a5fa5c687ab7.webp' /></p><h2 style="text-align: justify; ">துரித விசாரணை</h2><p style="text-align: justify; "> 

 

80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தபோது பரவிய இந்தத் தீயில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

 

தீ மிகவேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

 

இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள், தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விபத்துக்கான பின்னணி குறித்து துரித விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T17:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல பாடகர் கைது ; தமிழக முதல்வர் விஜய் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163"></link>
            <id>https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
</p><p>
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45489ec1-a3ed-40ba-b2ec-a69e84f6a7a8/26-6a5fa2928c6a0.webp' /></p><h2>கடும் கண்டனம்</h2><p>

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.</p><p>
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே&nbsp; சந்திப்பு நடைபெற்றது.</p><p></p><p> </p><p>நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>ரெப் பாடகர் "அறிவு" கைது செய்யப்பட்டமைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் பேருந்து நிலையங்களைச் சூழவுள்ள கடைகளில் அதிரடி சோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nationwide-raids-at-shops-around-bus-stations-1784650805"></link>
            <id>https://jvpnews.com/article/nationwide-raids-at-shops-around-bus-stations-1784650805</id>
            <summary type="text">நுகர்வோர் விவகார ஆணையம் , நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய நீண்ட தூர பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நுகர்வோர் விவகார ஆணையம் , நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய நீண்ட தூர பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளைக் குறிவைத்து 112 சிறப்பு அவசர சோதனைகளை நடத்தியது.
</p><p style="text-align: justify;">
பொதுமக்களும் பயணிகளும் தொடர்ந்து கூடும் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் நிகழும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று நுகர்வோர் விவகார ஆணையம் கூறியது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a956e922-915e-4502-9547-e3b2e44d065f/26-6a5f9c3759877.webp' /></p><h2 style="text-align: justify;">சிறப்புச் சோதனை</h2><p>
</p><p style="text-align: justify;">
உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கரி பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தத் தவறுதல், பொட்டலமிடப்பட்ட பொருட்களில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களைக் குறிப்பிடத் தவறுதல், மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டன என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தக் குற்றங்களைச் செய்த வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மீது நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை வழங்கும் வியாபாரிகள் மீது, அவர்களின் தகுதி பேதமின்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், எதிர்காலத்திலும் நாடு முழுவதும் இதுபோன்ற சிறப்புச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

இதுபோன்ற நியாயமற்ற வர்த்தக முறைகேடுகள் குறித்த தகவல்களை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் தொடர்பு இலக்கம் 1977 வழியாக, அலுவலக நேரங்களில் புகார் பிரிவிடம் வழங்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T16:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-opposition-leader-rahul-gandhi-arrested-1784648602"></link>
            <id>https://jvpnews.com/article/indian-opposition-leader-rahul-gandhi-arrested-1784648602</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.
</p><p style="text-align: justify;">
 

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் வீதியிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce45f17-6cec-47e6-9455-1769e8d5a3a5/26-6a5f939be46ee.webp' /></p><h2 style="text-align: justify;">திடீர் கைது</h2><p>
</p><p style="text-align: justify;">

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி போராட்டம் நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3428fd-ea1e-4dae-9ad6-7b47cdc1dd8f/26-6a5f947d814ee.webp' /></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

பிரதமர் இல்லம் எதிரிலேயே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

மாலை சுமார் 6:40 மணி அளவில், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் சென்றது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் திடீர் கைது நடவடிக்கையால் புதுடெல்லியின் முக்கியப் பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.</p><p style="text-align: justify;"><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">BREAKING || Rahul Gandhi Detained During Protest Near 7, Lok Kalyan Marg. <a href="https://t.co/1Lx7LHd3Zy">pic.twitter.com/1Lx7LHd3Zy</a></p>&mdash; TIMES NOW (@TimesNow) <a href="https://x.com/TimesNow/status/2079555584568041979?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-21T15:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sale-s-petition-adjourned-1784640512"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sale-s-petition-adjourned-1784640512</id>
            <summary type="text">ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இம்மனு இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6bee499-8000-4c53-8eb0-043664da4386/26-6a5f740183587.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T13:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை ; நெகிழ வைத்த இறுதி நாட்டியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895"></link>
            <id>https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895</id>
            <summary type="text">இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>மட்டக்களப்பில் பரதகலாலயா என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நடத்தி வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சுபித்ரா கிருபாகரன், இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p>பல தசாப்தங்களாக கலைப் பணியில் ஈடுபட்ட அவர், தனது மாணவர்கள் மூலம் பரதக் கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்.
</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக அவர் காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. </p><p>இதன்போது, அவரது மாணவ, மாணவிகள் தமது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கண்ணீருடன் நாட்டிய சமர்ப்பணத்தை நிகழ்த்தினர்.
</p><p>
குருவின் நினைவாக இடம்பெற்ற இந்த நாட்டியாஞ்சலி, அங்கு கூடியிருந்த அனைவரையும் உருகச் செய்ததுடன், அதன் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
</p><p>
இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p><p>
பரதக் கலையின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த சுபித்ரா கிருபாகரனின் கலைச் சேவை, அவரது மாணவர்களின் மூலம் என்றும் தொடரும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af4c1de-bfa8-45f0-bd9a-985d77dce650/26-6a5f3319aecf8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516871e0-b710-4813-9ec4-8e1b6182cddf/26-6a5f331a5ffe6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14588538-b750-497d-925b-b34345c8972c/26-6a5f331b1331b.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T13:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சி நீங்க வினோத வழிபாடு ; தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த கிராமத்துப் பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strange-ritual-relieve-drought-village-women-frogs-1784638628"></link>
            <id>https://jvpnews.com/article/strange-ritual-relieve-drought-village-women-frogs-1784638628</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியைத் தொடர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிராம மக்கள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியைத் தொடர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>குறித்த மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d12728a-3994-40fb-be62-7f0b51a8db83/26-6a5f6ca5bf131.webp' /></p><p>

குடிநீரைப் பெறுவதற்காக பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் நீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், கிராமத்தில் மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வழிபாட்டை நடத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது இரண்டு தவளைகளைப் பிடித்து அவற்றுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். </p><p>தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>

இது தொடர்பில் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில், வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது தமது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
தற்போது நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்நிலை பொருள் கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை ; புதிய மோசடி குறித்து அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-to-online-buyers-notification-of-new-scam-1784637318"></link>
            <id>https://jvpnews.com/article/warning-to-online-buyers-notification-of-new-scam-1784637318</id>
            <summary type="text">நிகழ்நிலை (Online) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிகழ்நிலை (Online) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>

வாடிக்கையாளர்கள் நிகழ்நிலை ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும் போது மூன்றாம் தரப்பினரால் ஏற்படுத்தப்படும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுருத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863c8042-d69c-4f09-856a-623782f0199b/26-6a5f67878692a.webp' /></p><p>இவ்வாறான மோசடிகளில், போது குறித்த பதிவு செய்யாத செய்யப்படாத பொருளை இரத்து செய்ய வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செயலி ஊடாக இணைய இணைப்பு ஒன்றினை அனுப்பிவைக்கப்படுவதாகவும், குறித்த இணைப்பை அனுகுவதன் மூலம் இரகசியக் குறியீட்டைப் பெற்று, தரவுகளை கையாளக் கூடிய செயலிக் கோப்புகளைப் மோசடி காரர்கள் பதிவிறக்கம் செய்ய வைப்பதன் மூலம் தொலைபேசி , கணினியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.
</p><p>
அத்தோடு, போலியான விநியோக முகவர்களும் நேரடியாக வந்து, பொருள் கொள்வனவுக்கான பதிவை இரத்து செய்வதாகக் கூறி இணைப்பை அனுகுமாறு தெரிவித்து, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் மோசடிகாரர்கலால் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p>ஆகையால், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை அனுகுவதையோ, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் பின் எண்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

மேலும் சந்தேகத்திற்கிடமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாமெனவும், விநியோக முகவரின் அடையாளத்தை நேரடியாக உறுதிப்படுத்துமாறும், மோசடி தொடர்பில் சந்தேகம் ஏற்படின் உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிரடி மாற்றம் ; 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dramatic-change-to-the-sri-lanka-transport-board-1784636596"></link>
            <id>https://jvpnews.com/article/dramatic-change-to-the-sri-lanka-transport-board-1784636596</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குளிரூட்டப்பட்ட (Deluxe) புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p></p><p>

2026ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 - 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd19013-e2b3-428c-aa1b-5bbce7e7a323/26-6a5f64b5e5f86.webp' /></p><p>

2025–2026 வீதி பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில், நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் மிகவும் பொருத்தமானவை என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமைவாக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த யோசனையை பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் ; பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-year-old-girl-tragically-dies-of-dengue-1784636073"></link>
            <id>https://jvpnews.com/article/4-year-old-girl-tragically-dies-of-dengue-1784636073</id>
            <summary type="text">டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்தார்.</p><p> </p><p></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bad05af-59d2-4d9b-a928-8cefd6e66b0e/26-6a5f62aa8d101.webp' /></p><p> 

கடும் காய்ச்சல் காரணமாக முதன்முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளார்.</p><p> 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அச்சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p>

காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:14:45+00:00</updated>
        </entry>
    </feed>
