<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T11:40:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடல் அருகே கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-body-fond-in-galle-face-green-1786877490"></link>
            <id>https://jvpnews.com/article/dead-body-fond-in-galle-face-green-1786877490</id>
            <summary type="text">&amp;nbsp;கோட்டை பொலிஸார் விசாரணை

கொழும்பு, காலி முகத்திடலை அண்டிய கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கோட்டை பொலிஸார் விசாரணை

கொழும்பு, காலி முகத்திடலை அண்டிய கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், உடலமானது அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும், அரைக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p>

சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-16T10:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-exam-tv-channels-told-not-to-interview-1786876548"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-exam-tv-channels-told-not-to-interview-1786876548</id>
            <summary type="text">பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
இவ்வாண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய சிறுவர்கள் சிலர், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவர்கள் கிண்டலுக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்த கரிசனைகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
பரீட்சை முடிந்த பின்னர் சிறுவர்கள் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரிகாசத்திற்கு உள்ளாக்கும் வகையில் சுட்டிக்காட்டப்பட்டுப் பகிரப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 
பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதியைப் பெறாமல் சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>மேலும், சிறுவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இத்தகைய காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் வாங்குவோருக்குப் பொலிஸார் எச்சரிக்கை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warn-of-new-online-scam-targeting-hardware-1786875554"></link>
            <id>https://jvpnews.com/article/police-warn-of-new-online-scam-targeting-hardware-1786875554</id>
            <summary type="text">&amp;nbsp;இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் குறித்துப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>
கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆன்லைன் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. </p><p>
அஸ்பெஸ்டாஸ் தகடுகள், சிமெ்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு மோசடிக்காரர்கள் இணையத்தில் விளம்பரம் செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fa159f-33b2-4eb7-a9cc-bd24e0ad20f5/26-6a818ea441ed3.webp' /></p><p>வாடிக்கையாளர் பொருட்கள் வாங்கத் தொடர்புகொண்டதும், மோசடிக்காரர் வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள ஒரு உண்மையான ஹார்ட்வேர் கடைகயைத் தொடர்புகொண்டு, வாடிக்கையாளரின் வீட்டிற்கோ அல்லது கட்டுமான இடத்திற்கோ பொருட்களை வழங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.</p><p>
பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன், வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், தான் வழங்கும் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக அனுப்புமாறு கூறுகிறார்.
</p><p>பொருட்களை விநியோகித்த ஓட்டுநரோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரோ நேரில் பணத்தைக் கேட்கும் போதே, தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர் உணர்கிறார். இதனால் அனுப்பிய பணத்தையும், பொருட்களையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.
</p><p>பொருட்கள் உங்கள் இடத்தை வந்து அடைந்துவிட்டது என்பதற்காகவே அவசரப்பட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டாம்.
பொருட்களைக் கொண்டுவந்த ஓட்டுநரிடமோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரிடமோ நேரடியாகப் பேசி பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
</p><p>வங்கிப் பரிமாற்றம் செய்வதாக இருந்தால், குறிப்பிட்ட ஹார்ட்வேர் கடையின் பெயரில் உள்ள அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தை அனுப்ப வேண்டும்.</p><p>
முடிந்தவரை பொருட்கள் கைக்கு வந்தவுடன் நேரில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுங்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல அரசியல் முக்கியஸ்தருக்கு கோட்டாபயவினால் நேர்ந்த அவமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786859473"></link>
            <id>https://jvpnews.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786859473</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தனியார்&nbsp; ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து&nbsp; கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.&nbsp;</p><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa3342f-0d19-42ab-8bdd-af29de795cba/26-6a814fd330a05.webp' /></p><p>அந்த&nbsp; ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.&nbsp;</p><p>&nbsp;இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.&nbsp;&nbsp;</p><p>தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.&nbsp;</p><p>தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sewwandi-arrest-investigation-prison-1786864444"></link>
            <id>https://jvpnews.com/article/sewwandi-arrest-investigation-prison-1786864444</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
பெண்களை சிறைக்கு அழைத்துச்செல்லும்போது அவர்களுக்கு கைவிலங்கு இடப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>இதேவேளை, அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc1fbc9-429a-44ec-82c1-f4119c4cfb13/26-6a81633db7322.webp' /></p><p>அவர் தற்போது அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கிடையில், அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் இஷாரா செவ்வந்தியை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதனால் அவருடன் அதிக தொடர்பைப் பேண முடியாது என்றும் அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சடுதியாக வந்து குவியும் இந்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-tops-the-list-of-tourists-1786871027"></link>
            <id>https://jvpnews.com/article/india-tops-the-list-of-tourists-1786871027</id>
            <summary type="text">இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. </p><p>

ஆகஸ்ட் 13 ஆம் திகதி நிலவரப்படி, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,436,926 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் 358,608 பேர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 140,892 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 94,890 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 83,965 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்த நாடுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 93,511 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34af4aa8-967f-4376-82c2-ea358ab3aa2f/26-6a817cf50ef81.webp' /></p><p>இதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 49,759 சுற்றுலாப் பயணிகளும், இரண்டாம் வாரத்தின் 6 நாட்களில் 43,752 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>



இந்த மாதத்தின் 13ஆம் திகதி நிலவரப்படி, 20,378 இந்திய சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இரண்டாவது அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிலிருந்து 10,491 பேரும், பிரான்சிலிருந்து 7,198 பேரும், சீனாவிலிருந்து 6,383 பேரும் வருகை தந்துள்ளதாக தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T09:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்ந்துள்ள எரிபொருள் இறக்குமதி செலவீனம்! மத்திய வங்கியின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-import-costs-increase-srilanka-1786864210"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-import-costs-increase-srilanka-1786864210</id>
            <summary type="text">இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 1,995.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42745e14-3500-4db7-a1e6-df61725f52fd/26-6a8162541a3a0.webp' /></p><p>இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.</p><p>

இந்த காலகட்டத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவினம் 7.5 சதவீதம் அதிகரித்து 479.5 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம் 78.7 சதவீதம் அதிகரித்து 2538.6 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்துள்ளது.
</p><p>
நிலக்கரி இறக்குமதிச் செலவினமும் 16.1 சதவீதம் அதிகரித்து 150.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T07:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786860344"></link>
            <id>https://jvpnews.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786860344</id>
            <summary type="text">நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதேவேளை, தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p>இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள&nbsp; டெங்கு நோயாளர்களில் 52.96%&nbsp; என்ற வகையில் 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2675ad4-16b1-43cc-b9ad-d4ded550d19c/26-6a815339c4b26.webp' /></p><p>இரண்டாவதாக தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,968 ஆகும்.
</p><p>இதேவேளை, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T06:16:47+00:00</updated>
        </entry>
    </feed>
