<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T09:55:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து விலகிச் சென்று முன்வரிசையில் இருந்த அமைச்சர்களுக்கு அருகில் அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. </p><p>


வழக்கமாக முதலமைச்சர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகிலேயே தனி இருக்கையில் அமர்வது வழக்கம் என்பதால், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb237e3f-1875-41df-9297-ace74a5df372/26-6a91570250adb.webp' /></p><h2>கவனம் ஈர்த்த&nbsp; செயல்</h2><p> </p><p>

அமைச்சர்கள் முதலமைச்சருடன் இணைந்து முதல் வரிசையில் தனித்தனியாக அமர்வார்கள்.&nbsp; இவர்களது இருக்கைகள் பொதுவாக மூப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
</p><p>
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு நேர் எதிரே உள்ள வரிசையில் எதிர்க்கட்சியினர் அமர்கின்றனர்.

234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அமர்த்தப்படுகின்றனர்.</p><p></p><p>

அவர்களுக்குப் பின்னால் கட்சி உறுப்பினர்கள் அமர்கின்றனர்.

இன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நடவடிக்கைகளின்போது, ​​சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வலதுபுறம் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையிலிருந்து சாதாரணமாக எழுந்த விஜய், அவையின் முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.</p><p></p><p>
</p><p>
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சக உறுப்பினர்களுடன் சுருக்கமாகப் பேசுவதற்காக அவ்வப்போது இருக்கைகளை மாற்றுவதுண்டு என்றாலும், முதலமைச்சர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T09:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடர்; இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-sri-lanka-provides-1-million-aid-1787907828"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-sri-lanka-provides-1-million-aid-1787907828</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69263f4-a94d-42ed-82d6-9416242d1e4b/26-6a914ef5b4c71.webp' /></p><p>
</p><p>
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
</p><p>
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.</p><p>

இதன்போது நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், நேபாள அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கையால் வழங்கக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T09:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-1787906084"></link>
            <id>https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-1787906084</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பிரதேசங்களுக்கு இது செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f5a8772-6f4f-4905-a6bb-f4f6559b584e/26-6a91482611329.webp' /></p><p>


அதற்கமைய, கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p>
</p><p>

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் கடல் அலையின் உயரமானது சுமார் 2.0 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>

இதன்காரணமாக, கடற்தொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T08:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்! வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496"></link>
            <id>https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0208df1c-b0b2-40aa-a8e6-631b96873c7e/26-6a9122b2b788e.webp' /></p><h2>நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்</h2><p>

இந்த சம்பவம், பேரழிவு காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p><p></p><p>

இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. <a href="https://t.co/12fLMnjS0f">pic.twitter.com/12fLMnjS0f</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092969173265924324?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T08:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் எலிகளால் மக்கள் அச்சம்; ஆபத்தான நோய்கள் பரவலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-in-colombo-fear-rats-disease-outbreaks-1787905353"></link>
            <id>https://jvpnews.com/article/people-in-colombo-fear-rats-disease-outbreaks-1787905353</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எலித் தொல்லைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் கொழும்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
எலிகள் மூலம் ரேபிஸ் (Rabies) , எலிக்காய்ச்சல் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், கொழும்புக்கு வரும் மக்களின் சுகாதாரத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e981b06-b5d2-4f73-bcab-fe9416ce95d1/26-6a91454a54e34.webp' /></p><h2>சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உணவாகக் உட்கொள்ளும் எலிகள், தற்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
</p><p>
 எலிகளால் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் சேதமடைவதாக மக்கள் கூறுகின்றனர்.</p><p></p><p>

இன்னிலையில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியம் ஆகும்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மரத்துப்போன மனிதம்; உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215"></link>
            <id>https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3febe628-d183-43c4-aa29-d1936b8225bd/26-6a913909889e9.webp' /></p><h2>பொலிஸார் கைது நடவடிக்கை</h2><p>



விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோரே நகை திருடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த காணொளியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற 2 பேர், மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர்</p><p>. 



பின்னர், பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதை அங்கு கூடியிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இந்த மனிதாபிமானமற்ற செயலை நேபாள பொலிஸார் மற்றும் பொதுமக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
</p><p>


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 500 ஐ நெருங்க்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரு மனுக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-more-petitions-in-support-22nd-amendment-1787901192"></link>
            <id>https://jvpnews.com/article/two-more-petitions-in-support-22nd-amendment-1787901192</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

 

அவற்றில் ஒரு மனு சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திரவாலும், மற்றைய மனு ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேராவாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add2c40c-483f-4279-819c-ee1eac062734/26-6a91350a0bdc9.webp' /></p><p>
</p><p>
 

குறித்த மனுக்களில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

 

 குறித்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுபவரா நீங்க... இனி அந்த தவறை செய்யாதிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730"></link>
            <id>https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730</id>
            <summary type="text">&amp;nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. </p><p>எனவே ஊதுபத்தியை ஏற்ற தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்தலாம்

இந்து மரபில் பூஜையின்போது ஏற்றப்படும் விளக்கு தெய்வீக ஒளி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b124417-92ff-446c-b5b0-d39574bea4f1/26-6a912b6c5297e.webp' /></p><h2>வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தியை ஏற்றுவது சில ஆன்மிக நம்பிக்கைகளின்படி தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. </p><p>குறிப்பாக மகாலட்சுமியின் அருள் குறைந்து பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே&nbsp; &nbsp;ஊதுபத்தியை ஏற்றுவதற்கு தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்துவது பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e584b1e8-e0fb-4079-910d-e20e9609d33d/26-6a912b6d09849.webp' /></p><h3>&nbsp;இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும்&nbsp;பூஜை விளக்கு</h3><p> பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தமாகவும் முறையாகவும் பயன்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது

பூஜை விளக்கின் முக்கியத்துவம்
இந்து மரபில் தினசரி பூஜையின்போது விளக்கேற்றுவது முக்கியமான ஆன்மிக நடைமுறையாகக் கருதப்படுகிறது. </p><p>விளக்கின் ஒளி தெய்வீக சக்தியின் அடையாளமாகவும், இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும் குறியீடாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450abe61-d631-4200-b2d4-38a61e3f3f91/26-6a912b6e73283.webp' /></p><p>

ஏனவே எரிந்து கொண்டிருக்கும் பூஜை விளக்கிலிருந்து ஊதுபத்தியை பற்றவைப்பது சில சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளில் தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது.</p><p>செழிப்புடன் தொடர்புடைய நம்பிக்கை
சாஸ்திர நம்பிக்கைகளின்படி, பூஜைக்காக ஏற்றப்படும் விளக்கு வீட்டின் செழிப்பு மற்றும் தெய்வீக அருளைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.</p><p> அந்த விளக்குச் சுடரிலிருந்து வேறு பொருளை பற்றவைப்பது நல்லதல்ல என்றும், இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அல்லது தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2731d205-bf34-49e2-a26b-f052431bb4cc/26-6a912b6db88dc.webp' /></p><p> </p><p>

 இந்த நடைமுறை வீட்டில் மகாலட்சுமியின் அருள் குறைவதற்கான காரணமாக அமையலாம் என்ற ஆன்மிக கருத்தும் உள்ளது. 

 பூஜை விளக்கின் ஒளி வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.</p><p> அதே சுடரில் இருந்து ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை பற்றவைப்பது விளக்கின் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் ஆன்மிக சூழலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம் . </p><p>எனவே, பூஜையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய முறையில் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T07:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் , குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த இளைஞன்; பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-shared-intimate-photos-women-and-children-1787899619"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-shared-intimate-photos-women-and-children-1787899619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க நிழற்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க நிழற்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
அம்பாந்தோட்டை பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் கைதாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767eb308-bcca-47e7-b66a-d0d4c5fa8826/26-6a912ee5050e4.webp' /></p><p></p><p>

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் குழுவினர், பெலியத்தை (Beliatta) பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகநபரின் கைப்பேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T06:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்பு ; 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை; கிலியில் பலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149"></link>
            <id>https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bcf82c-2ef4-40ad-9a5b-e9b90289bd2f/26-6a9111b6d7f89.webp' /></p><h2>&nbsp;அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்</h2><p>



 விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.</p><p>



தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதி வருமானம் 12.4 கோடியைத் தாண்டியது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-expressway-revenue-crossed-12-4-crore-1787894176"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-expressway-revenue-crossed-12-4-crore-1787894176</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆகும்.

 

ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db15a05a-ebc0-49f7-8f8f-306cc12af8aa/26-6a9119a18e0a5.webp' /></p><p>அத்துடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும்.

 

ஓகஸ்ட் 27 ஆம் திகதி அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆகும். அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T05:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்குக்கான புகையிரத மார்க்கத்தில் தடங்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/disruption-on-the-railway-line-to-the-north-1787893810"></link>
            <id>https://jvpnews.com/article/disruption-on-the-railway-line-to-the-north-1787893810</id>
            <summary type="text">&amp;nbsp; பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பொல்கஹவெலவிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்றே பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0590c8-68c2-47d7-8c37-6f0e93d8b44c/26-6a91183418db2.webp' /></p><p>இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T05:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப வன்முறை ; இலங்கை பெண்கள் தொடர்பில் அதிர்ச்சிதரும் ஆய்வு அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/domestic-violence-shocking-research-report-1787892742"></link>
            <id>https://jvpnews.com/article/domestic-violence-shocking-research-report-1787892742</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையிலுள்ள பெண்களில் ஐவரில் இருவர் (நூற்றுக்கு 39.8 சதவீத) அவர்களின் வாழ்நாளில் வாழ்க்கைத் துணைவர்களால் சரீர, பாலியல், உள மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதேபோன்று, இலங்கையிலுள்ள பெண்களில் நால்வரில் ஒருவர் 15 வயதிலிருந்தே சரீர மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக அந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb34fc0c-74d2-4b5b-9f12-5695d1234e76/26-6a9114081001b.webp' /></p><h2>பாலியல் மற்றும் ஆண் பெண் தன்மையின் அடிப்படையில் துன்புறுத்தல்</h2><p>
</p><p>


08 மாவட்டங்களில் 888 பெண்கள் மற்றும் 109 பணியாளர்களூடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் அனுபவங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
</p><p>
 அதில் , இலங்கையில் பாலியல் மற்றும் ஆண் பெண் தன்மையின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு தீர்வுகாணும் சேவை கட்டமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


ஜனநாயகத்துக்கான தேசிய நிதியம், டியாகொனியா மற்றும் இலங்கையில் செயற்படும் விழுது அமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டது.



இந்த ஆய்வறிக்கையில் , </p><p>துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்ணொருவர் அதுதொடர்பில் முறைப்பாடு செய்யும் சதவீதம் நூற்றுக்கு முப்பது சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல், பல்வேறு விபத்துகளுக்குள்ளாகுதல், வெட்கம், ஏற்புடைமை தொடர்பிலான பயம் மற்றும் விவாகரத்து மீதான பயம் காரணமாக அவர்கள் அந்த துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்ரி ராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘பல வருடங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பலனாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


பெண்களின் வாழ்க்கையில் துன்புறுத்தல்கள் நிகழ்வதுடன் அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டதாக ராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உள்ளக மற்றும் வாழ்க்கை துணைகளினால் சாதாரணமாக ஏற்படும் துன்புறுத்தல்கள் சில சந்தர்ப்பங்களில் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு கடுமையான நிலைமைக்குள்ளாகி, அதற்கு பெண்களும் இசைவாக்கமடைவதாக ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>


இந்த ஆய்வறிக்கை பெண்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்டு ஆய்வு கருத்தாடல் மற்றும் நடைமுறை செயற்பாடுகளுக்கு பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


இதேவேளை, வெறும் வன்முறைகள் பற்றி மட்டும் தேடிப்பார்க்காமல் பிந்தைய உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் உயிர் காப்பாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும்போது இடம்பெறும் தோல்வியை அறிக்கையிட்டு பதிலளிக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T04:49:35+00:00</updated>
        </entry>
    </feed>
