<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T11:41:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி <a href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126" target="_blank">கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு</a>, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51454d9c-969d-4821-904b-d103a7bf1224/26-6a61fa13eeff8.webp' /></p><p>
</p><p>
இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content>
            <updated>2026-07-23T11:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460"></link>
            <id>https://jvpnews.com/article/hot-spring-history-worries-hindu-mahasabha-1784805460</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.
</p><p>
கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a1c38d-3258-4522-a265-4e659ab6258c/26-6a61f85679456.webp' /></p><p>ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றை பொறுத்தவரை சைவத் தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சின்னம் எனலாம். இத்தகைய வரலாற்றை யாரும் மறைக்க முடியாது.
</p><p>
சைவ மக்களின் மிகப்பெரிய அடையாளச் சின்னமாக விளங்கும் கன்னியா வெந்நீரூற்றை போர்ச்சூழலைப் பயன்படுத்தி பௌத்தமயமாக்க முனைவதும் வேதனை தரும் செய்தியாகும்.</p><p>

தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலைநிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம்.

இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.</p><p>

கன்னியா வெந்நீரூற்றுச் சூழலை சைவ சூழலிலிருந்து சைவ மக்களின் அடையாளங்களை தொடர்ந்து முற்றாக அழிப்பதும் அங்கே இருந்த வரலாற்று தடயங்களை மாற்றி அமைப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aee21bd-8b25-4dcc-a2d7-f5be6812f793/26-6a61f855c4bfc.webp' /></p><p>கன்னியா வெந்நீரூற்றில் வழிபாடு செய்த விநாயகர் ஆலயத்தை முற்றாக அழித்துவிட்டு அந்த விநாயகர் ஆலயம் இருந்தது, பௌத்த அடையாளம் உடைய இடம் என்று நீண்ட நாட்களாக ஆலயத்தை கட்ட அனுமதிக்காது காலம் கடத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
</p><p>
தற்போது கன்னியா வெந்நீரூற்று சூழலையே மாற்றி அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
</p><p>
எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தொல்லியல் திணைக்களத்தை சார்ந்தவர்களும் சகல அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவ மக்களின் சார்பில் நமது வேண்டுதல் விடுக்கின்றோம் என்றுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு பாதிப்பு 79 ஆயிரத்தை கடந்தது ; பொதுமக்களுக்கு மீண்டும் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அந்தப் பிரிவு நேற்று (22) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1b8119-8a1a-4ab0-84f6-3dbda6696b0a/26-6a61ee8ca5fce.webp' /></p><p>அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு மட்டும் இதுவரை 16,676 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



அடுத்ததாக, கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,495 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,318 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,190 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,444 பேரும், காலி மாவட்டத்தில் 4,391 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மட்டும் 23,641 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி, கொசு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடருமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658</id>
            <summary type="text">சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>சந்தேகநபர்களைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d7a98e9-3d1c-4dba-9686-fedff7592cc7/26-6a61e97bb1723.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-missing-boy-who-drowned-in-river-recovered-1784800504"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-missing-boy-who-drowned-in-river-recovered-1784800504</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில், நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

நேற்று மாலை நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71830ce-628c-41f9-93dc-0fe9e317391a/26-6a61e4fa2049f.webp' /></p><p>ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.</p><p> 

இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>

இத்தீவிர தேடுதலின் பலனாக இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.</p><p> 

பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இச்சம்பவம் குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-vimal-sentenced-to-one-year-in-prison-1784799102"></link>
            <id>https://jvpnews.com/article/actor-vimal-sentenced-to-one-year-in-prison-1784799102</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென்னிந்திய பிரபல நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி இந்திய ரூபா கடனாகப் பெற்றுள்ளார். 

படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa38175-0266-409c-9196-ef8235e5aee5/26-6a61df8064e9b.webp' /></p><h2>காசோலை மோசடி</h2><p> </p><p>பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். 

 காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. </p><p>

இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.</p><p></p><p>

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்தார்.</p><p> அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து நடிகர் விமலுக்கு , அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் வாங்கிய காசு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்; பின்னணியில் திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356"></link>
            <id>https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&nbsp; திடுக்கிடும்&nbsp; தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக&nbsp; பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ee094b-4f4e-402d-a638-9edaf111c81b/26-6a61aeac96d24.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம்</h2><p>
</p><p>சந்தேக நபர்களிடம்&nbsp; இருந்து&nbsp; 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என&nbsp; பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள&nbsp; சந்தேக நபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல்&nbsp; அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்தமை&nbsp; &nbsp;ஆரம்பகட்ட விசாரணைகளின்போது&nbsp; &nbsp;ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. </p><p>தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;கைதான&nbsp; மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:43:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.</p><p>
 
வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10336c1c-0aeb-4b9f-8a58-8624ee6376ad/26-6a61da1f37b29.webp' /></p><h2>2035 இல் இலங்கையின் முழு&nbsp; நகரிலும்&nbsp; மெட்ரோ பேருந்துகள்</h2><p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.</p><p></p><p>&nbsp; ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும்.</p><p> 

இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-23T09:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increased-elephant-movement-urgent-warning-issued-1784799012"></link>
            <id>https://jvpnews.com/article/increased-elephant-movement-urgent-warning-issued-1784799012</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>யானை வேலிகள் சேதப்படுத்தப்பட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால், மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4923b2f3-b22d-450e-be6e-035fea3670a8/26-6a61df25ba501.webp' /></p><p>



இந்நிலையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில், இன்று பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் அமைக்கப்பட்டு, யானைகளை விரட்டும் தற்காலிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், இரவு 6.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தேவையற்ற வெளிச்செல்லல்களை தவிர்க்குமாறும், யானைகள் தென்பட்டால் அவற்றிற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


அத்துடன், டோர்ச் விளக்கு, பட்டாசு உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>



இதற்கிடையில், யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, குறித்த யானைகளை மாவட்ட எல்லையை கடந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerala-cannabis-2-motorcycles-seized-kilinochchi-1784798089"></link>
            <id>https://jvpnews.com/article/kerala-cannabis-2-motorcycles-seized-kilinochchi-1784798089</id>
            <summary type="text">கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 

6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கல்லாறு பகுதியில் 

6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.</p><p></p><p> 



தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 

கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது. </p><p>



இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் பொலிஸார் மீட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33a27c6-2f24-4b6a-bcf8-97d40ad525b8/26-6a61db8aa22d5.webp' /></p><p>அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p> எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>


கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய ஆங்கில மொழியிலான மேடைப்பேச்சு ; லண்டனில் இலங்கை மாணவனின் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-student-s-achievement-in-london-1784796966"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-student-s-achievement-in-london-1784796966</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.</p><p></p><p>

கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச போட்டியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1daa78d7-a85d-4841-a5ca-f105dd6489ba/26-6a61d7276861c.webp' /></p><p>

கடும் போட்டிக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒமர் ஹசாரி, தனது சிறப்பான பேச்சுத் திறமையால் நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றினார்.
</p><p>
இப்போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் இடத்தையும், உகாண்டாவைச் சேர்ந்த மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.</p><p>

இறுதிச் சுற்றில், தனது சிறுவயது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒமர் ஹசாரி ஆற்றிய உரை நடுவர்களை பெரிதும் கவர்ந்தது. </p><p>பாடசாலைப் பருவத்தில் எதிர்கொண்ட கேலி, அவமதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட திக்குவாய் குறைபாட்டை பிறரின் ஆதரவுடன் எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார் என்பதை அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.</p><p>

அத்துடன், பாடசாலைகளில் இடம்பெறும் கொடுமைப்படுத்தலுக்கு (Bullying) எதிராக தனது பாடசாலையில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்த அனுபவத்தையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
</p><p>
இந்த வெற்றியின் மூலம், உலகளாவிய மேடைப்பேச்சு போட்டியில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஷேன் தசநாயக்க உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.</p><p>

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் இலங்கை மாணவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை இளைஞர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத் திறனுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் ; பொலிஸ் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103</id>
            <summary type="text">கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p> பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரனின் கூற்றுப்படி, அவர் தனது காரில் ஏறுவதற்காகச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00b92d4-5747-40c6-8ed2-50a567cc78b6/26-6a61d3c929da9.webp' /></p><p>அதன்பின்னர் தாமாகவே கீழே இறங்கியபோது, அவரை இழுத்து தாக்கியதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தி உயிர் அச்சுறுத்தலும் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், காரின் சாவியைப் பறித்துக்கொண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இந்தச் சம்பவத்தால் உடல் உபாதைகளும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பில் கொட்டகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை நினைவுகூர்ந்த தமிழ் எம்பிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர்.</p><p> 

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66ca2e8-03af-4ddd-9fdb-3eb4cca5321b/26-6a61d3576d4c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468"></link>
            <id>https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468</id>
            <summary type="text">கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>

சமூகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba6c1eee-b4ef-46fd-90a3-8a45ebe54d50/26-6a61cd65dfa4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126"></link>
            <id>https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
</p><p>


இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7cafa4-e57a-40de-9a02-6acf576104be/26-6a61cc0fd7373.webp' /></p><p>
</p><p>


இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 9ஆம் திகதி நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசீலனைக்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>



கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று தொடரவுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F901592169693205%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் நேற்று (22) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேசமயம் நேற்று (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.378,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79c9ec3-a0c7-4c0a-a26d-6b22d303d39b/26-6a61ca2fb973d.webp' /></p><p>
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T07:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்ற வேண்டாம் ; அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>
</p><p></p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப முற்பட்ட அர்ச்சுனா இராமநாதன், கேள்வியை முன்வைப்பதற்கு முன்னரே அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்ததுடன், நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ca2c25-9921-4662-a2ff-669de863ec58/26-6a61c8d55a537.webp' /></p><p>சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.
</p><p>
நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>அத்துடன், அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட அவருடன் அருகில் அமர முடியாது எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அவரால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
மேலும், கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தனிப்பட்ட முறையில் சபாநாயகரை இலக்காகக் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை எனவும் அவர் கூறினார்.
</p><p>
இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அமர்வு பரபரப்பாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shots-fired-at-police-officer-s-house-beliatta-1784791980"></link>
            <id>https://jvpnews.com/article/shots-fired-at-police-officer-s-house-beliatta-1784791980</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாந்தோட்டை - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாந்தோட்டை - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>



குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1b2a5e-f22c-4738-b539-dd322dd41fdf/26-6a61c3ae49c23.webp' /></p><p> 



 அவரது வீட்டின் வாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T07:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்; அமெரிக்க வாழ் தமிழர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-1500-hoax-bomb-threats-us-based-tamil-arrest-1784790887"></link>
            <id>https://jvpnews.com/article/india-1500-hoax-bomb-threats-us-based-tamil-arrest-1784790887</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த சம்பவத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p><p> 
 
விபிஎன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததாக&nbsp; குறித்த நபர்&nbsp; &nbsp;மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30bb110-c1fe-4ed2-b582-2b495d8d6205/26-6a61bf6989611.webp' /></p><h2>சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு&nbsp;</h2><p> </p><p>

விசாரணையின் போது, அவர் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிய ஒரு சிறிய கவனக்குறைவான பதிலால் போலீசாரிடம் அவர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p> 
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சில சர்வதேச குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

 இந்த செய்தி வெளிவந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>
 
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போலி மிரட்டல்களை விடுத்து வந்த இவரை கைது செய்துள்ள காவல்துறையினர், இவருக்கு பின்னால் வேறு யாரேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெப்பம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorological-department-warns-risin-temperatures-1784790057"></link>
            <id>https://jvpnews.com/article/meteorological-department-warns-risin-temperatures-1784790057</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.</p><p></p><p>

அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9828ce-0680-493f-93ac-b061b87824c9/26-6a61bc2b31dd3.webp' /></p><p>அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருந்த அனுமான் ; கோடிக்கணக்கில் பணமோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-hanuman-statue-in-jaffna-financial-fraud-1784787370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-hanuman-statue-in-jaffna-financial-fraud-1784787370</id>
            <summary type="text">&amp;nbsp; மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அனுமான் சிலை தொடர்பில் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

போர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அனுமான் சிலை தொடர்பில் கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது.
</p><p>
போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை ஒன்று, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜா-எல - மெல்வத்த பகுதிக்கு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டதாக இந்த மோசடிக் கும்பல் பிரசாரம் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8368e63c-6448-4bd3-a415-11b8cdba9ec1/26-6a61b1ab7b612.webp' /></p><h2>நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள&nbsp; சிலை</h2><p>
</p><p>
நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை, இந்தியாவில் உள்ள ஒரு பூசாரிக்கு ரூபாய் 2,500 கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் இணையவழியில் தகவல்களைப் பரப்பியுள்ளனர்.
</p><p>
 இந்தச் சட்டவிரோத வர்த்தகத்திற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகலவின் முழுமையான ஆதரவு இருப்பதாகக் கூறி மக்களை நம்ப வைக்க முயன்றுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
புதைக்கப்பட்டுள்ள சிலையைத் தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் இடைக்காலச் செலவுகளுக்காக ரூபாய் 2 கோடி தேவைப்படுவதாகக் கூறி, செல்வந்த தொழிலதிபர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
</p><p>
"இது ஒரு சிறந்த வணிகம், இதில் முதலீடு செய்தால் உடனடியாகப் பெருந்தொகை இலாபமாகக் கிடைக்கும்" எனக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்க இந்த கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.</p><p></p><p>

இத்தகைய பின்னணியில் தனது பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இந்த மோசடி குறித்துத் தகவலறிந்த பிரதி அமைச்சர் சுனில் வடகல, காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் உடனடியாக முறைப்பாடு அளித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட காவல்துறையினர், கொழும்பு பகுதியில் மற்றொரு நபரிடம் இந்த அனுமான் சிலை குறித்துப் பேசிப் பணத்தைப் பறிக்க முயன்றபோது, பிரதான சந்தேகநபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபரின் கையடக்கத்தொலைபேசியைச் சோதனையிட்டதில், வாட்ஸ்அப் மூலமாகப் பலருக்கு இந்த மோசடி தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-23T06:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-ranking-in-the-global-passport-index-1784787347"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-ranking-in-the-global-passport-index-1784787347</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலை வெளியிடும் 2026 ஆம் ஆண்டுக்கான &#039;ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94ஆவது இடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலை வெளியிடும் 2026 ஆம் ஆண்டுக்கான 'ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94ஆவது இடத்திற்கு முன்னேறி, அண்மைய ஆண்டுகளில் தனது மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளது.</p><p></p><p>கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 96 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 2 இடங்கள் முன்னேறி 94 ஆவது இடத்தை அடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d46264-bb18-40c2-940c-fa1e61f5f4ae/26-6a61b19464d74.webp' /></p><p>முன்னர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய இடங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் இப்பட்டியலில் இலங்கை படிப்படியாக முன்னேறி வருகிறது.
</p><p>
இப்பட்டியலானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகள் மற்றும் 227 பயண இடங்களை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.</p><p>

சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. (192 நாடுகளுக்கு முன்வீசா இன்றிப் பயணிக்கலாம்).
</p><p>
ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2ஆம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
</p><p>
ஆப்கானிஸ்தான் 104வது இடத்தில் தரவரிசையின் இறுதியில் உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் ; யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019</id>
            <summary type="text">தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.</p><p> 

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f583057b-8258-4873-8612-f636ac2d9a79/26-6a61893c90845.webp' /></p><p>இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. </p><p>

இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p> 

மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p> 

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்.</p>]]></content>
            <updated>2026-07-23T06:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-ruling-on-the-advanced-level-examination-1784786422"></link>
            <id>https://jvpnews.com/article/court-ruling-on-the-advanced-level-examination-1784786422</id>
            <summary type="text">அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாக ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb6d96b-c1c1-4433-b4e0-f4b4f0bc0754/26-6a61adf7e3236.webp' /></p><p>பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டு, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>
எனினும், குறித்த கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-died-after-being-attacked-with-sharp-weapon-1784785901"></link>
            <id>https://jvpnews.com/article/person-died-after-being-attacked-with-sharp-weapon-1784785901</id>
            <summary type="text">அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p></p><p>

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149f48c9-26db-46b6-a22d-e833bdf6ebd8/26-6a61abee9ca3b.webp' /></p><p>தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:52:24+00:00</updated>
        </entry>
    </feed>
