<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T23:42:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775</id>
            <summary type="text">எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>பாபா வங்கா என அறியப்படும் வங்கேலியா குஷ்டெரோவா, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தொன்றில் பார்வையை இழந்ததாகவும், அதன் பின்னர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவருக்கு கிடைத்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனது கணிப்புகளை நேரடியாகவும் தெளிவாகவும் கூறாமல், உருவகங்கள் மற்றும் மறைமுகமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் பாபா வங்கா, தனது 30ஆவது வயதுக்குள் பெரும் புகழைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h3>

2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் 3 கணிப்புகள்
</h3><p>
பாபா வங்காவின் பெயரில் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்குள் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabadadb-204b-4797-bc56-48b626a8ea27/26-6a779ca184743.webp' /></p><p>

அவற்றில் முதலாவது, பூமிக்கு மிகப்பெரிய விண்கலம் ஒன்று வருகை தரும் என்ற கணிப்பாகும்.
</p><p>
இரண்டாவது, மூன்றாம் உலகப் போர் தொடங்கும் எனக் கூறப்படும் கணிப்பு.

மூன்றாவது, ரஷ்யாவின் அரசியல் தலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்ற கணிப்பு.
</p><p>
இந்த மூன்று சம்பவங்களும் 2026ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் என பாபா வங்கா கணித்ததாக பல்வேறு இணையதளங்களிலும் சமூக வலைத்தளப் பதிவுகளிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
உலகளவில் ஏற்பட்ட சில முக்கிய சம்பவங்களை பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அவரது கணிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், இந்தக் கணிப்புகள் அனைத்தும் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே தெளிவாகப் பதிவு செய்யப்பட்டவை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>
பாபா வங்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனது எதிர்காலக் கணிப்புகளை முறையாக எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வைத்துச் சென்றதாக உறுதியான தகவல்கள் இல்லை.</p><p>

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரைச் சந்தித்தவர்களிடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களே பின்னர் தொகுக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, காலப்போக்கில் அவரது பெயரில் பல்வேறு கணிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், சில கணிப்புகள் நிறைவேறாதபோது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
</p><h3>
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பரபரப்பு
</h3><p>
2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் இந்த கணிப்புகள் தொடர்பில் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக மூன்றாம் உலகப் போர் மற்றும் விண்கலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>எவ்வாறாயினும், பாபா வங்காவின் பெயரில் வெளியாகும் இந்தக் கணிப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னறிவிப்புகள் அல்ல என்பதுடன், அவை பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
</p><p>
எனவே, 2026ஆம் ஆண்டுக்குள் குறித்த சம்பவங்கள் இடம்பெறும் என்ற தகவல்களை உறுதியான செய்தியாகக் கருதாமல், சரிபார்க்கப்படாத கணிப்புகளாகவே அணுக வேண்டியது அவசியமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T21:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc66cc-e921-4cd4-a5b7-f1375a0b11a8/26-6a777be6ad408.webp' /></p><p>

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
</p><p>
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6091aafd-8258-4ce8-a034-1ddb0989c355/26-6a777ea074154.webp' /></p><p>
இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32065a2c-4a51-46a5-811e-338a9af58c93/26-6a77750b86760.webp' /></p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
</p><p>
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி ; கிண்ணத்தை தட்டிச் சென்ற கோல் கெலன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706"></link>
            <id>https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706</id>
            <summary type="text">2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14180e89-f72f-4290-9fde-ab5230060467/26-6a777013a0663.webp' /></p><p>

அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு கோல் கெலன்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். </p><p>இதன் காரணமாக அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.</p><p>

இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி முன்னேறியது.
</p><p>
அந்த அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
</p><p>
இதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.</p><p>

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்து LPL கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:06:14+00:00</updated>
        </entry>
    </feed>
