<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T16:44:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் உயிரோடு வாழணும் ; 13 வயது குறைந்த இளைஞனுடன் தகாத உறவிலிருந்த மனைவிக்கு கணவன் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055"></link>
            <id>https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055</id>
            <summary type="text">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. அதுவும் பல இடங்களில் மனைவி கள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. </p><p style="text-align: justify;">அதுவும் பல இடங்களில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb37bd69-dfdc-47a7-b22b-2cc1e233c266/26-6a7724a15fb36.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சாக விருப்பம் இல்லை...&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில்தான் தனது மனைவிக்கு இன்னொரு காதல் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் மனைவியை அந்த காதலுடன் சேர்த்து வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. </p><p style="text-align: justify;">உத்தரப்பிரதேசம் சாண்ட் கபீர் நகரில் வசித்து வரும் கணவன் மனைவிக்கு திருமணம் ஆகி 21 வருடங்கள் ஆகிவிட் நிலையில் இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்தான் அவரை விட 13 வயது குறைந்த ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் இருவருக்கும் அவர் திருமணம் செய்து வைத்தார்

கணவன் முன்னிலையில் அவரது மனைவிக்கு அவரின் காதலர் குங்குமப்பொட்டை வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். </p><p style="text-align: justify;">

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில். </p><p style="text-align: justify;">
இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த நபர் ‘எனக்கு பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் அடைபட்டு சாக விருப்பம் இல்லை.. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள்இன்று (08) நண்பகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077da7de-4f1c-4a37-99bb-f615af446d6a/26-6a775c24582f2.webp' /></p><p>அவ்விடத்திலிருந்து சிறைச்சாலையினுள் 02 பொதிகளை வீசுவதற்கு இவர்கள் முயற்சித்த வேளையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

சந்தேகநபர்களிடமிருந்த 02 பொதிகளைச் சோதனையிட்ட போது, 22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஏஷ்' போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி தோடுகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447</id>
            <summary type="text">கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f8da31-072d-495b-aaa9-890128decb49/26-6a7751217f466.webp' /></p><p>எனினும், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சிறைச்சாலைகளில் மோதலில் ஈடுபட்ட கும்பல்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932"></link>
            <id>https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் நேற்று (07) மற்றும் அதற்கு முதல் நாள் (06) மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42085397-53fa-4b6b-8565-8ad09e329f25/26-6a774f1ea1758.webp' /></p><p> 

இச்சம்பவங்களில் 3 சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

இதனிடையே, குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் நேற்று (07) ஏற்படுத்திய பதற்றத்தின் போது, சிறைக்கூடங்களின் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தியமையால் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கைதிகளை அந்த இடங்களில் வைத்திருக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். </p><p>

இதற்கமைய, இன்றைய தினமும் (08) இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் தலையீட்டில் இது குறித்து ஆராயப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குறித்த மோதலின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

அத்துடன், அங்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:45:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குழப்பம் விளைவிக்க தெற்கிலிருந்து குழுவொன்று வருகை ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-group-heads-to-jaffna-to-cause-unrest-1786194627"></link>
            <id>https://jvpnews.com/article/southern-group-heads-to-jaffna-to-cause-unrest-1786194627</id>
            <summary type="text">திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழைத்து நோக்கி வரப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பவானி வீதி விடுவிப்புக்குத் தடைபோட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca10411-8518-4bb7-8937-bdcb46c2ef02/26-6a772ac53b1a0.webp' /></p><h2>கடும் விசனம்</h2><p>&nbsp;இதையடுத்தே, இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம் பரப்பப்படுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகின்றனர்.</p><p></p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும் விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என்று நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-sri-lankans-nationwide-1786193871"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-sri-lankans-nationwide-1786193871</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e02b20e3-766a-4914-b502-e3c9c304adb1/26-6a7727d1b2168.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர அவதானம்</h2><p> </p><p style="text-align: justify; ">

நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T13:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kuwait-colombo-srilankan-airlines-service-resumes-1786191248"></link>
            <id>https://jvpnews.com/article/kuwait-colombo-srilankan-airlines-service-resumes-1786191248</id>
            <summary type="text">குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இன்று (8) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இன்று (8) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பான தகவலை சிவில் விமான சேவை அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f686f5-7b2c-4965-acaa-4782828003fb/26-6a771d91bd0f1.webp' /></p><p>

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றுகை செய்யப்பட்ட டின் மீன் தயாரிப்பு நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canned-fish-factory-raided-by-authorities-1786190018"></link>
            <id>https://jvpnews.com/article/canned-fish-factory-raided-by-authorities-1786190018</id>
            <summary type="text">இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது.</p><p style="text-align: justify; "> 

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் போட்டித் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f811202-9997-4c34-ba8d-c14006d29a5a/26-6a7718c4737a5.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;டின் மீன்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p style="text-align: justify; "> 

தயாரிப்பு திகதியைக் குறிப்பிடாமை, அந்த டின் மீன்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் டின் மீன் கையிருப்பும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T12:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞன் ; விசாரணைக்குள் பல உயரதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-killed-in-police-shooting-incident-1786188708"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-killed-in-police-shooting-incident-1786188708</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (07) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c40dd23-f596-476d-bb64-d3b56bafa790/26-6a7713a5cc141.webp' /></p><h2 style="text-align: justify;">விரைவான விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.</p><p style="text-align: justify;"> 

இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது.
</p><p style="text-align: justify;">
அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">


முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். </p><p style="text-align: justify;">எனினும், அந்த ஹைஏஸ் வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T12:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல் ; உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185"></link>
            <id>https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185</id>
            <summary type="text">நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e904911-53c8-4c5b-aafd-8b486f5a57e2/26-6a7709cb1d91b.webp' /></p><p>

இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேத பரிசோதனைகள் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளன.
</p><p>
அமைதியின்மை மற்றும் மோதல்கள் பதிவான குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகள் உட்பட நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸார் , பொலிஸ்&nbsp; விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் ; துயரை ஏற்படுத்திய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். 

 

கண்டி மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். </p><p>

 

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42b7888-fe2a-4b5e-8093-e893f4025f1b/26-6a76cfc32762b.webp' /></p><h2>புற்றுநோய்&nbsp;</h2><p>
</p><p>
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:</p><p>

 

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
</p><p>
 

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><p></p><p> 

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

 

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-08T11:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்த முயன்ற 290 கிலோ கஞ்சா பறிமுதல் ; இரு இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090"></link>
            <id>https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090</id>
            <summary type="text">தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062e9403-b71a-4ac9-b0e1-de764c636e24/26-6a770d53db9dc.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு பொலிஸார் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். </p><p>

அப்போது அங்கு வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T11:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தலைக்கவசத்தால் சிக்கிய பலர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270"></link>
            <id>https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270</id>
            <summary type="text">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">

இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a79350-cf1a-4e85-8b89-ea1eed9461b0/26-6a770637c331e.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடிச் சோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
வருடாந்தம் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக 2,500 முதல் 2,700 வரையான நபர்கள் உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இந்த உயிரிழப்புகளில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே ஏற்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T10:50:00+00:00</updated>
        </entry>
    </feed>
