<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T02:25:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரகசிய தகவலில் சிக்கிய இளம் பெண் ; நீண்டகாலமாக அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-arrested-by-police-1785976467"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-arrested-by-police-1785976467</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டத்தின் இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "மது" என்றழைக்கப்படும் பெண் ஒருவர் விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இங்ஹினியாகல பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c125f6e9-d3e9-488b-a8de-6261f0330c04/26-6a73d6958cdbb.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சந்தேகநபரின் வசமிருந்து தலா 10 கிராம் அளவிலான 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோகித்து வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேலும், அவருடைய கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் தற்போது விளக்கமறியலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; ">இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் மேற்பார்வையிலும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-06T01:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி ; இவர்களுக்கு பொற்காலம் ஆரம்பம் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-star-shift-brings-golden-fortune-1785978903"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-star-shift-brings-golden-fortune-1785978903</id>
            <summary type="text">&amp;nbsp;சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமின்றி நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமின்றி நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார், சனிபகவான் அக்டோபர் 09 ஆம் திகதி வரை நிலைத்திருக்கப் போகிறார். </p><p style="text-align: justify; ">

சனி பகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவது சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c2d3c98-a5a2-43dd-b00c-62e56ff3abe9/26-6a73e01926d47.webp' /></p><h2 style="text-align: justify; "> 

எந்தெந்த ராசிக்காரர்கள் </h2><p style="text-align: justify; "><b>

மிதுனம்: </b>இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிநிலையில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்த பெயர்ச்சி வெற்றிக்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். நிதி நிலை மேம்படும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம், இது திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அவர்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>

துலாம்:</b> இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். சனிபகவான் இந்த காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதைகளை காட்டுவார். தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்குவார். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>

கும்பம்: </b>இந்த காலகட்டத்தில், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட சில பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொண்டுவரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-06T01:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மின்தடை நேரத்தில் அரங்கேறிய சம்பவம் ; வீட்டுக்குள் மர்ம நபர்களின் அட்டூழியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-during-power-outage-in-jaffna-1785977625"></link>
            <id>https://jvpnews.com/article/incident-during-power-outage-in-jaffna-1785977625</id>
            <summary type="text">அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,தங்க ஆபரணங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c912faf8-7497-40cf-94be-6815434ea352/26-6a73db1b1a2cb.webp' /></p><h2 style="text-align: justify; ">தங்க ஆபரணங்கள் கொள்ளை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நேற்று முன்தினம்&nbsp; மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த கும்பலானது முகங்களை மூடி காட்டியவாறு வந்ததால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. </p><p style="text-align: justify; ">வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-06T01:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை குறைப்பு முதல் சரும பொலிவு வரை ; கொய்யா இலைகளில் இவ்வளவு நன்மைகளா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/amazing-health-benefits-of-guava-leaves-1785974521"></link>
            <id>https://jvpnews.com/article/amazing-health-benefits-of-guava-leaves-1785974521</id>
            <summary type="text">கொய்யா இலை என்பது இயற்கை மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். பழங்காலத்திலிருந்தே இதன் மருத்துவ பயன்பாடு பல்வேறு நோய்களுக்கு உதவியாக பய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொய்யா இலை என்பது இயற்கை மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். பழங்காலத்திலிருந்தே இதன் மருத்துவ பயன்பாடு பல்வேறு நோய்களுக்கு உதவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">தினசரி வாழ்க்கையில் இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa47c6b-dce2-4cd4-9665-9d1e9b1d4adc/26-6a73cf0148309.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ பயன்பாடு&nbsp;</h2><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரத்த சர்க்கரை:
</b>கொய்யா இலை தேநீர் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் சர்க்கரை உறிஞ்சும் வேகத்தை குறைக்க உதவுகிறது. அதனால் diabetes உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
</p><p style="text-align: justify; "><b>
இதய ஆரோக்கியம்:</b>
கொய்யா இலைகள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
</p><p style="text-align: justify; "><b>
சரும அழகு:
</b>Guava leaves ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தவை. இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதிர்ச்சி அடைதல் ஆகியவற்றை குறைக்க உதவலாம். முகப்பரு குறைக்கவும் உதவுகிறது. இயற்கையான glow கிடைக்க உதவும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்:</b>
கொய்யா இலைக் கஷாயம் வாயில் பயன்படுத்தும்போது ஈறு வீக்கம், பல் வலி மற்றும் பாக்டீரியா வளர்ச்சி குறைய உதவுகிறது. இது mouth hygieneக்கு மிகவும் பயனுள்ளது.
</p><p style="text-align: justify; "><b>
மாதவிடாய் வலி:
</b>சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொய்யா இலை தேநீர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது உடலை சாந்தமாக வைத்திருக்க உதவலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
நோய் எதிர்ப்பு சக்தி:
</b>Guava leaves வைட்டமின் C மற்றும் antioxidants கொண்டதால் உடல் immunity system-ஐ வலுப்படுத்த உதவலாம். இதனால் சாதாரண நோய்கள் வராமல் தடுப்பதில் உதவுகிறது.
</p><p style="text-align: justify; "><b>
செரிமானம் &amp; எடை குறைப்பு:
</b>இவை digestion system-ஐ மேம்படுத்தி வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவலாம். மேலும் metabolism-ஐ சீராக்கி weight management க்கு உதவுகிறது. இவை அனைத்தும் இயற்கை மற்றும் பாரம்பரிய தகவல்கள் மட்டுமே. எந்த ஒரு health issue இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.</p>]]></content>
            <updated>2026-08-06T01:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை வளாகத்தில் ஆசிரியைக்கு நடந்த சம்பவம் ; 27 முறை குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-faces-brutal-incident-at-school-1785960235"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-faces-brutal-incident-at-school-1785960235</id>
            <summary type="text">இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779c9066-6e0a-479b-b784-50b2c338ff37/26-6a73972cd0e7a.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p> </p><p>

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருதாவது,
</p><p>
உயர்நிலைப் பாடசாலையில் குறித்த ஆசிரியையை முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார். </p><p>

ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.</p><p>முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p></p><p> </p><p>

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>முன்னதாக, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை பொலிஸில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பாடசாலை வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>

சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் சந்தேகநபரைத் பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206</id>
            <summary type="text">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ade9d7-4125-405b-89e2-f2e2ad5ade87/26-6a735c77882ef.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத செயல்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் அதனைப் பரப்புவதும் அச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் குற்றமும் சட்டவிரோதமான செயலுமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்காகத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அந்த இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-06T01:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் காசாளர் மீது துப்பாக்கிச்சூடு ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138"></link>
            <id>https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138</id>
            <summary type="text">மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெல வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த வருடம் நவம்பர் (17) இரவு 8.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இருவர் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e89f315-651d-48c8-b136-8599351d2401/26-6a7367eb71e14.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
சம்பவத்தில் படுகாயமடைந்த 48 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்ற உணவகத்தில் காசாளராகக் குறித்த பெண் பணியாற்றி வந்தவராவார்.</p><p>


சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு, கந்தர மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும் பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தால் பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதற்கமைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோருகின்றனர். படத்தில் உள்ள சந்தேகநபர் உபுல் குமார எனும் ஜம்பு என்பவராவார்.</p><p></p><p> 39 வயதுடைய 871254385V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவராவதோடு, உடுமுல்ல ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p> குறித்த நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறியக்கிடைக்கும் பட்சத்தில் மீட்டியாகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591481 மற்றும் பொலிஸ் நிலையம் 0912260423 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T01:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுமுழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள் ; பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-raids-conducted-at-471-pharmacies-1785968753"></link>
            <id>https://jvpnews.com/article/special-raids-conducted-at-471-pharmacies-1785968753</id>
            <summary type="text">நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின்கீழ் 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcca73a0-778d-470f-ba91-ee9136822d72/26-6a73b8734548b.webp' /></p><h2>சோதனைகள்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 362 மருந்தகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.</p><p> அண்மைய சோதனைகளுடன் சேர்த்து, இவ்வருடத்தில் நடத்தப்பட்ட விசேட மருந்தக சோதனைகளின் மொத்த எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துகள், நுகர்வோர் தகவல்களுக்கான விதிகளை மீறியமை, அத்துடன் மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T22:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சோதனையில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-held-with-drugs-and-weapons-in-raid-1785964793"></link>
            <id>https://jvpnews.com/article/youth-held-with-drugs-and-weapons-in-raid-1785964793</id>
            <summary type="text">பொரலஸ்கமுவை, லேக் வீதி பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்&amp;nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொரலஸ்கமுவை, லேக் வீதி பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால்&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து 23.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், ஒரு வாள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2acdf82-a5e7-4bc8-af29-428bf37b8cb9/26-6a73a8faccb1d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரதான பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்&nbsp; ஒருவர் சார்பில் உள்ளூர் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இவர் நடத்தி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
கூர்மையான ஆயுதங்களுடன் வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர், நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞனுக்கு எதிராகக் கடத்தல், தாக்குதல் நடத்துதல், கூர்மையான ஆயுதங்களால் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொரலஸ்கமுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T21:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் ; உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேர் தொடர்பில் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-order-against-udaya-and-six-1785961819"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-order-against-udaya-and-six-1785961819</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (05) திறந்த நீதிமன்றத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளர்.</p><p style="text-align: justify;">



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளைப் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ab9997-a1cd-4090-a103-0c9b11a5c228/26-6a739d5d0ad7c.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தண்டனைக்குரிய குற்றம்</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களாக முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


அத்துடன், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக அமையக்கூடும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



மேலும் கடந்த ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் திருத்தப்படாத (Unedited) காணொளிகளை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T20:30:26+00:00</updated>
        </entry>
    </feed>
