<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-11T15:26:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-more-human-skeletons-identified-in-chemmani-1786455355"></link>
            <id>https://jvpnews.com/article/15-more-human-skeletons-identified-in-chemmani-1786455355</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆவது நாளான இன்று மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 49ஆவது நாளான இன்று மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>


இவற்றில் 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>


யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59128399-3955-4d07-b645-5ef31e20f403/26-6a7b253d58200.webp' /></p><p>
</p><p>
இதுவரை செம்மணி மனித புதைகுழியில் மொத்தமாக 539 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 524 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


மேலும், 516ஆவது இலக்கமிடப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் இடுப்புப் பகுதியில் இருந்து தாயத்து போன்ற பொருளொன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயமொன்றும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-11T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிட நீதித்துறை எடுத்த முடிவு கவலைக்குரியது என்றும்&nbsp; நீதிபதி&nbsp; குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38c8faa-1132-4aa4-bb93-7179c57a1da4/26-6a7b1f8bf1052.webp' /></p><h2>இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>

இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, 2024 நவம்பரில் நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்றில் அதானி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அதேவேளை அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாகும்.

இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான துறைமுகங்கள் முதல் சீமெந்து வரையிலும், எரிசக்தி முதல் ஊடகம் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சூரிய ஆற்றல் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களையும் வங்கிகளையும் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
</p><p>
 மேலும் அமெரிக்க நீதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு அமெரிக்காவின் சட்த்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113</id>
            <summary type="text">&amp;nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சு</p><p>ற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8857fc3-d2f1-4870-ac3e-795ed37e19cf/26-6a7b244b32867.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதத்தின் முதல் 06 நாட்கள் வரை மொத்தமாக 1,386,228 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
</p><p>
அத்துடன், அவர்களுள் இந்தியாவிலிருந்து 346,057 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலத்திலிருந்து பாய்ந்த பெண் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


கம்பளை பகுதியில் கடந்த 3ஆம் திகதி கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மதியம் கம்பளை பாலத்திலிருந்து பெண்ணொருவர் திடீரென பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e9a4b7-8c87-4071-8cad-559aa9fe05a1/26-6a7b267d3838f.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் இன்று கம்பளை – போத்தலாப்பிட்டிய களு பாலத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மற்றும் குற்றத்தடயப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c6666e-af18-46c0-a79b-3cf13ed7ee0c/26-6a7b1a066b9cc.webp' /></p><h2>நடமாடும் தூதரக&nbsp; சேவை</h2><p>
</p><p>
இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 29 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய திகதிகளில் 'Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern' என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.</p><p></p><p>
</p><p>
அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
கால அவகாசம் குறைவாக உள்ளமையினால் , இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும் , தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களும் காணலாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487"></link>
            <id>https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487</id>
            <summary type="text">&amp;nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.
</p><p>

 நாளை (12) அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5e2a89-e655-42c3-9d89-5088afe7637e/26-6a7b21d8cd37e.webp' /></p><h2>133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle</h2><p>
</p><p>
இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது அதிகாலை 4.30 மணிக்கும் 5.15 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்வையிட முடியும் என ஆதர் சி. கிளார்க் மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய் மற்றும் சனி கோள்களை மிகவும் எளிதாக அடையாளம் காண முடியும்.

இருப்பினும், புதன் மற்றும் வியாழன் கோள்கள் அடிவானத்திற்கு மிக அருகில் தோன்றுவதால் அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.
</p><p>
யுரேனஸைப் இருநோக்கிப் பெருக்கியையும் (binoculars) நெப்டியூனைப் தொலைநோக்கியையும் (telescope) பயன்படுத்தி பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை நிகழ்வினை பார்ப்பதற்கு வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானத்தை நோக்கித் தடைகளற்ற தெளிவான பார்வை கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
சுமார் 133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரத்தினால் விட்டுச்செல்லப்பட்ட விண்வெளிப் பொருட்களினாலேயே பெர்சீட்ஸ் எரிகல் மழை உருவாகிறது.
</p><p>
இந்த எரிகற்கள் ‘பெர்சியஸ்’ (Perseus) விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றுவது போல் காட்சியளிக்கும்.

இம்முறை எரிகல் மழையின் உச்சம் அமாவாசை நாளான நாளை வருவதால், இருண்ட வானம் எரிகற்களைப் பார்ப்பதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
தெளிவான வானிலை நிலவினால், ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வீழ்வதை மக்கள் பார்வையிட முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798</id>
            <summary type="text">றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது. </p><p>

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். 

அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில்,
 டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262d7f58-4f3c-4152-a593-7d70b0dd5d21/26-6a7affe866861.webp' /></p><h2>நெதர்லாந்தின்&nbsp; செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த&nbsp; ஈழத்தமிழர்</h2><p> நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான '<a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">Quote Net'</a> அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .</p><p></p><p> 
நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.
</p><p>அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d05f12-75c8-46a4-9eb8-72a2c2764e44/26-6a7b02b0b294b.webp' /></p><p>அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p>
இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . 
இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் . </p><p>
யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>
நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><h2>ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம்&nbsp;</h2><p> </p><p>தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 
2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார். </p><p>அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70fcddd-7cef-463a-8d18-81ab46fbdbe4/26-6a7b02b1b73e2.webp' /></p><p>ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் . </p><p>
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். </p><p>
அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை. </p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. 
அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். </p><p>இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது </p><p>. 
ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் . </p><p>
ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 
வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா&nbsp; என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112"></link>
            <id>https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p> 
 
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். 

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf08a62-e9c8-4a4e-8ded-fd4ebb6b47fa/26-6a7ada120aeec.webp' /></p><h2>என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை</h2><p> </p><p>
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p> 
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-rachitha-photo-indian-government-website-1786451081"></link>
            <id>https://jvpnews.com/article/actress-rachitha-photo-indian-government-website-1786451081</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் வெளியானமை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் வெளியானமை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
</p><p>
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ SIDCO இணையதளத்தில் கழக இயக்குனர் டாக்டர் அங்கிதா சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக அங்கே ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67470686-8b93-44e6-b24f-0a509b0d2cdc/26-6a7b148ae2dcc.webp' /></p><p>
</p><p>

இன்னிலையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வதளத்தில் இப்படி தவறாக வேறொருவரின் புகைப்படத்தை பதிவிடலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-while-out-flying-kites-with-friends-1786450274"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-while-out-flying-kites-with-friends-1786450274</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

இந்தச் சம்பவம் அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோடாமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

தோடாமடுவ, திறப்பனை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc18806-3787-4dce-bb90-a059b708ab35/26-6a7b11648167f.webp' /></p><p></p><p>
சம்பவத்தன்று குறித்த சிறுவன் தனது நண்பர்கள் சிலருடன் தோடாமடுவ வயல்வெளிக்குச் சென்று பட்டம் விட்டுக்கொண்டிருந்துள்ளார்.
</p><p>
இதன்போது, மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம், திறப்பனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T12:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடல்சீற்றம் ; வாடிகளுக்குள் புகுந்த வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rough-seas-in-mullaitivu-flood-enter-fishing-huts-1786448924"></link>
            <id>https://jvpnews.com/article/rough-seas-in-mullaitivu-flood-enter-fishing-huts-1786448924</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 

கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c4d520-51a7-4562-bbf2-f498fe4ce6dc/26-6a7b0c1e78280.webp' /></p><p>

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்தார் .</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278"></link>
            <id>https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>



அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மாதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே, 115 ஆவது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் வாகனங்களில் ஒன்று கவிழ்ந்ததுடன், இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa25c8a9-660e-4396-a945-c1ede4209c01/26-6a7af9f7beb8a.webp' /></p><p>&nbsp;மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T10:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் வெளிநாடு மோகத்தால் மாயமாகும் பெரும் தொகை பணம்; பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529"></link>
            <id>https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.</p><p>
 

இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d17cbe6-b4f5-45cc-aee3-397ba9b7c80b/26-6a7af70ae63fd.webp' /></p><h2>கனடா, பிரிட்டன் அனுப்புவதாகவே&nbsp; விளம்பரங்கள்</h2><p> </p><p>அதிகபட்சமாக நபரொருவர் ஒன்றரைக் கோடி ரூபாவை இழந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 கனடா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவே அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன.

 எந்தச் செலவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுகின்றனர்.
</p><p>
 காலப் போக்கில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் மோசடியாளர்கள் அவர்களின் வங்கித் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.</p><p></p><p> </p><p>

 
அதன் பின்னர் ஒரு தொகைப் பணத்தை வங்கியிலிட்டுக் காட்டுமாறு கூறிவிட்டு கடவுச்சொல்லைத் திருடி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 
எனவே மோசடியாளர்களிடம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-11T10:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>

 

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae3c77c-e3d7-4c23-afc2-81c2ee04b62a/26-6a7af1f31bc2f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யுத்த காலத்தில் நிலவிய சீரற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றி முறையான கடவுச்சீட்டின்றி இந்தியாவுக்குச் சென்ற பலர், அங்கு ஏதிலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4aff6a-43ba-4b3d-b9eb-5b957743b174/26-6a7aed171a0b5.webp' /></p><h2>UNHCR&nbsp; ஊடாகத்&nbsp; தாயகம் திரும்ப எதிர்பார்ப்பு</h2><p> இவர்கள் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
</p><p>
இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.</p><p></p><p>
</p><p>
இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.
</p><p>
தொடர்புடைய நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T09:34:40+00:00</updated>
        </entry>
    </feed>
