<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T15:37:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970"></link>
            <id>https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970</id>
            <summary type="text">&amp;nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேலும் மூவர் புனர்வாழ்வளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871b1310-7f00-4ea3-b214-0cd8eb5e4bec/26-6a884ed42da4f.webp' /></p><p>



நேற்று (20) வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில் 753 போதைப்பொருள் கைப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


இதன்போது, ஹெரோயின் 231 கிலோ 255 மில்லிகிராம், ஐஸ் 1 கிலோ 304 மில்லிகிராம், கஞ்சா 546 கிலோ 142 கிராம், கஞ்சா செடிகள் 43,122, குஷ் 1 கிலோ 52 கிராம், ஹஷீஷ் 11 கிராம், மெத்தம்பிட்டமின் 174 கிராம், மெத்தடோன் 257 கிராம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>



நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளி நாடொன்றில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்கள்; கிடைத்த வெகுமதியால் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318</id>
            <summary type="text">&amp;nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கையர்களால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8435a161-ea87-4247-bf27-9e64fc73c283/26-6a88485fc95ac.webp' /></p><p></p><h2>&nbsp;நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமை</h2><p> </p><p>

விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட இவர்கள், தாங்கள் சேவையாற்றிய கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன் கடலில் விழுந்த இரு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> 

விபத்து இடம்பெற்ற வேளையில் இந்த இலங்கையர்கள் தென் கொரியாவின் தொழில் அனுமதி முறைமையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசா அனுமதிப்பத்திரத்துடன் சேவையாற்றிக் கொண்டிருந்தனர். </p><p>

பொதுவாக அந்த விசா வகையின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளியொருவர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p></p><p> 

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு மற்றும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி, தென் கொரிய நீதி அமைச்சினால் குறித்த இரு இலங்கையர்களுக்கும், மீண்டும் மீண்டும் விசாவை நீட்டிக்கத் தேவையின்றி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமைகாட்டும் இந்த நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அதேவேளை இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்றைய இலங்கையரும் ஏற்கனவே நீண்டகால விசாவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-21T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் பிரதேச சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினர்! திடீரென நுழைந்ததால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641"></link>
            <id>https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>



மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c7b432-8ea7-4612-af61-0136af749475/26-6a8849a3074b8.webp' /></p><h2>கல்லூண்டாய் குப்பை மேடு -&nbsp;கடுமையான சுகாதாரப் பிரச்சினை</h2><p> </p><p>இதன்போதே உறுப்பினர் நா. பகீரதன் நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்தார்.



கல்லூண்டாய் குப்பை மேடு அடிக்கடி தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


குப்பை மேட்டில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் ஏற்படும் புகையைச் சுவாசிப்பதன் மூலம் மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>



இந்தப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும், மானிப்பாய் பிரதேச சபையிலும் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>


கல்லூண்டாய் குப்பை மேட்டில் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே நெருப்பு சட்டியுடன் சபைக்குள் வந்ததாகவும் உறுப்பினர் நா. பகீரதன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334"></link>
            <id>https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3c31ff-b7f2-4225-ba50-2667664ab443/26-6a8838d02f835.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத் திருவிழா அனர்த்தம்; 235 பேர் சிகிச்சை! நிரம்பிவழியும் மருத்துவமனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-mishap-in-jaffna-235-treated-eyes-1787319434</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1f01346-1e9f-4f47-8e41-4b31f0913443/26-6a88548be1069.webp' /></p><h2>&nbsp;அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்</h2><p> </p><p>

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/100d8353-c0b4-4b21-918f-65d294c871b6/26-6a88548c9ad6e.webp' /></p><p> 

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p> </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95fa16b-0d09-4f52-acf1-2042203cfec5/26-6a88548d633d3.webp' /></p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்</b></p><p><a href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452" target="_blank">யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்</a></p><p><a href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941" target="_blank">யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்</a><b></b></p>]]></content>
            <updated>2026-08-21T13:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு; முதலமைச்சர் விஜய் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/s-sowcar-janaki-passes-away-cm-vijay-condolences-1787317272"></link>
            <id>https://jvpnews.com/article/s-sowcar-janaki-passes-away-cm-vijay-condolences-1787317272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.எண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/actress-sowcar-janaki-passes-away-1787303794" target="_blank">&nbsp; &nbsp;பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி </a>உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a330c71-c37f-44e7-97a6-170f1c795fe3/26-6a884c19be81a.webp' /></p><h2>எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய&nbsp; &nbsp;கலைப்பணி</h2><p>



“பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை இரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
</p><p>


திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.</p><p></p><p> தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p></p><p>



சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வங்கி அதிகாரி பிரபல ஹோட்டலில் செய்த காரியம்; பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.</p><p>

கடந்த 03 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டலுக்கு வருகை தந்த நபரொருவர், தான் ஒரு முன்னணி தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ec5568-ba92-40ce-a2a0-373b1a7c4da7/26-6a8843d98b721.webp' /></p><h2>பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு ஓட்டம்</h2><p>
</p><p>
 தனது வங்கி ஊழியர்கள் இரவு விருந்திற்காக வருகை தரவுள்ளதாகக் கூறி, பெருமளவிலான உணவுகளை ஓடர் செய்ததை தொடர்ந்து, ஹோட்டலில் ஊழியர்கள் பணியில் தீவிரமாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p> 

இச் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், இச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கருவாத்தோட்டம், பேலியகொடை மற்றும் நுகேகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதே பாணியில் மோசடிகளைச் செய்து திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>

சந்தேகநபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளடன், இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (கொம்பனிவீதி): 071-8591561

கொம்பனிவீதி பொலிஸ் நிலையம்: 011-2433829&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452"></link>
            <id>https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது.</p><p>
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910deef-2b2a-44c8-8dbd-ff8acea46d1d/26-6a87feae4d898.webp' /></p><p>
</p><h2>&nbsp;கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்</h2><p>இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.</p><p>
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083bad8-0591-43ff-a5be-7c09f2afc38a/26-6a8819a638212.webp' /></p><p></p><p>
</p><p>
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9460aa-bcd0-40f5-b8f2-2bdee99fcca0/26-6a882fa75c52b.webp' /></p><p>
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>அதேவேளை&nbsp; ஆலய திருவிழாக்கள்&nbsp; தற்போது&nbsp; கேளிக்கை கூடமாக மாறி வருவதாக&nbsp; சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f19575-ed0e-4587-95e0-7f7ce4d44099/26-6a882fa839241.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகாளுக்கு இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது. </p><p>

இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeb11805-f070-48c9-b3ec-4be3e13c491b/26-6a8836d4877c7.webp' /></p><h2>&nbsp;அக்ஹார காப்பீட்டுத் தொகை</h2><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p> 

இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது. </p><p>

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, இவ்வாறான எதிர்பாராத சந்தர்ப்பங்களில், குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தையும் முழுமையாகப் பெறாமல், இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை மிக விரைவாகவும் துரிதமாகவும் வழங்க காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.</p><p> 

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மாத்திரமன்றி, மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T11:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6d1da-b07c-47e9-b6c8-49a9842a3ea9/26-6a8823beca16d.webp' /></p><p> </p><p>

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86c828c-38eb-4529-b83e-f050220a1eb1/26-6a882ffca7165.webp' /></p><h2>&nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்&nbsp;&nbsp;அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc3a2f3-d94d-48ad-ba98-fba942116361/26-6a882ffd979b0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T10:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் தொடர்பில் தற்காலிக நடைமுறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282"></link>
            <id>https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹுருபாய' கட்டிடத்தின் 17வது மாடியில் இயங்கி வரும் சான்றளிப்புப் பிரிவின் கணினி முறைமை, நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயலிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49df860a-1700-492a-91a0-4a533580d06c/26-6a88212bbeb09.webp' /></p><p>
</p><p>
இக் கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை பொதுமக்கள் பின்வரும் தற்காலிக நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk என்ற முகவரிக்குச் சென்று, "Download Application" என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p></p><p>இலங்கை அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் ஒளிப்ப பிரதிகளை clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
இத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது தற்போதைக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இவ்வாறாக மின்னஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்குரிய பின்னணி அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
முறைமை சீரமைக்கப்பட்ட பின்னர், இத் தற்காலிக வழியில் விண்ணப்பித்த அனைவரும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இணையவழி மூலமாக மீண்டும் ஒருமுறை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளவர்களில், சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளவர்களின் குறிப்பு எண்கள் பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.</p><p></p><p>
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17வது மாடிக்குச் சென்று வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினி அமைப்பு சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
</p><p>

அமைப்பை விரைவாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சீரமைக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T09:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584</id>
            <summary type="text">&amp;nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099" target="_blank">நாமல் ராஜபக்ஷ </a>அங்கிருந்து வௌியேறியுள்ளார். </p><p>

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (21) முற்பகல் அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeec952-5b06-49b4-a4d0-a2d1c6b17e23/26-6a881e7224338.webp' /></p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T09:43:48+00:00</updated>
        </entry>
    </feed>
