<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-23T20:36:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 இலட்சம் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opportunity-awaits-250-000-sri-lankans-1784837082"></link>
            <id>https://jvpnews.com/article/opportunity-awaits-250-000-sri-lankans-1784837082</id>
            <summary type="text">நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை பிரதான இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை பிரதான இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைகளுக்கு மத்தியிலும், இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான நாடுகளைக் கண்டறிந்து, அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்தப் பணியகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d006213b-2f98-4e65-a299-09e02662264a/26-6a6273dbe1379.webp' /></p><h2 style="text-align: justify;">சிறிய வீழ்ச்சி</h2><p>
</p><p style="text-align: justify;">
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
அதற்கமைய இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,873 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதேபோன்று தென் கொரியாவுக்கு 8,000 தொழிலாளர்களை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,794 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
அரசாங்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,43,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். 92,590 ஆண் தொழிலாளர்களும், 50,497 பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.</p><p style="text-align: justify;"> 73,623 பேர் திறன் சார்ந்த வேலைகளுக்காகவும், 69,494 பேர் திறனற்ற பணிகளுக்காகவும் சென்றுள்ளனர்.

</p><p style="text-align: justify;">இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்குப் அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T20:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; இரவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில், மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa584de8-c02a-4372-8996-7257cf551ded/26-6a62681748bf8.webp' /></p><p> </p><p>இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635</id>
            <summary type="text">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423236e5-2a29-424b-9014-ecc1bd072bfd/26-6a626285680ed.webp' /></p><h2 style="text-align: justify; ">விபரீத முடிவு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

இந்த நிலையில் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்த போது நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, தொழிலதிபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T18:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் மற்றொரு அபாயம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531"></link>
            <id>https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531</id>
            <summary type="text">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb954-a7f5-40c1-a257-c4e384e6fd49/26-6a62565d1b337.webp' /></p><h2 style="text-align: justify;">தொற்று நோய்கள்</h2><p style="text-align: justify;">

நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify;">
குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T17:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் சற்று முன் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841ed905-1aa3-4a03-a8d6-c2516806b2ce/26-6a624ba3147b1.webp' /></p><p> </p><p>

 

பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் மருத்துவர் என நம்பி பெரும் தொகையை இழந்த பெண்; தமிழர் பகுதியில் சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504"></link>
            <id>https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான &#039;வெளிநாட்டு வைத்தியர்&#039; ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6aabb1-9371-417d-b398-b6c0e3db7a73/26-6a620ff16a9f7.webp' /></p><h2>சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி அப்பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கி வரும் சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். </p><p>

லண்டனைச் சேர்ந்த வைத்தியர் 'டான்' பல இலட்சம் ரூபாய் பெறுமதியான விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு (Clearance) 87,000 ரூபாய் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிவழியே செலுத்துமாறும் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதனை உண்மையென நம்பிய அப்பெண், 17ஆம் திகதி உடனடியாக 87,000 ரூபாயை அனுப்பியுள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, பொதியை விடுவிக்க மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படவே, அதனையும் வைப்புச் செய்துள்ளார். 

பின்னரும் பணம் கோரப்பட்டதால், அப்பெண்ணின் தாயார் மேலும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக "இன்னும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே பார்சல் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், "இனிமேல் பணம் தர முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த மோசடி கும்பலைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
</p><p>
 இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இந் நிலையில் முகநூல் வாயிலாக இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் பலர் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பறப்கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், அறிமுகமில்லாத முகநூல் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T16:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/education-ministry-issues-notice-for-students-1784823607"></link>
            <id>https://jvpnews.com/article/education-ministry-issues-notice-for-students-1784823607</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை (24) நிறைவடையவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

பாடசாலை மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5451df93-b5a9-4a53-a9e8-5a57ab68a442/26-6a623f38b0ff0.webp' /></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஜூலை 31 ஆம் திகதி நிறைவடைவதுடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T16:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-scholarship-exam-applicants-1784822293"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-scholarship-exam-applicants-1784822293</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e9023d-8439-4399-9762-102c6ed3b768/26-6a623a17e7b11.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய,<a href="www.doenets.lk" target="_blank"> www.doenets.lk </a>என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்குள் பிரவேசித்து “எங்கள் சேவைகள்” (Our Services) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” ஊடாகவோ அல்லது <a href="onlineexams.gov.lk" target="_blank">onlineexams.gov.lk</a> என்ற இணையவழிப் பரீட்சை சேவை முறைமை ஊடாகவோ சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை மையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T15:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-incident-reported-in-dematagoda-1784821258"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-incident-reported-in-dematagoda-1784821258</id>
            <summary type="text">தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். </p><p>

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861b1f1e-3286-4842-8d68-b6bde2bcab42/26-6a62360c25875.webp' /></p><p> 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இச்சம்பவம் குறித்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decline-opening-letters-of-credit-vehicle-imports-1784812715"></link>
            <id>https://jvpnews.com/article/decline-opening-letters-of-credit-vehicle-imports-1784812715</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1f7ba0-98da-4255-8b91-03d07df8989a/26-6a6214acacb07.webp' /></p><h2>ஆறு மாதங்களில் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>
</p><p>
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
</p><p>
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>

கூடுதல் தீர்வை வரி அமுலுக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-07-23T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
