<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-01T12:47:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;ஹேமசிறி வெளிப்படுத்திய தகவல்; சிக்கப்போகும் மைத்ரிபால சிறிசேன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-hemasiri-maithripala-trouble-1785571429</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>

ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>

தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
நீதிபதி விராஜ் வீரசூரிய இவருடைய வழக்கிலும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஹேமசிறி பெர்னாண்டோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c0e7258-2bec-4350-9d37-4f2e9c7289c5/26-6a6da8666114d.webp' /></p><h2>புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்</h2><p>
</p><p>
ஆயினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டுடன் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பெர்னாண்டோ, கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது,
</p><p>
 “எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.

நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை; ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. 'பாதுகாப்புச் செயலாளர்' என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது 'பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்' பதவியாகும்.

அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். </p><p>செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும்; அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு; அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர்.</p><p></p><p> </p><p>நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். 'நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார்.</p><p>நானும் அதையே செய்தேன்.

எனக்கு எந்தவித எழுத்துமூலமான அறிக்கையும் கிடைக்கவில்லை, வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் இரண்டும் மட்டுமே கிடைத்துள்ளன.

புலனாய்வுத் தலைவருக்கு வந்த ஆவணத்தை அவர் எனக்கு வழங்கியபோது, நாளைய கூட்டத்தில் இதனை முன்வைக்குமாறு அவரிடம் கூறினேன். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதி கூட்டம் தொடங்கியது. இறுதியில் சிசிர அந்தக் கடிதத்தை எனக்குக் காட்டினார்.</p><p> அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்க்குமாறு விபரங்களைக் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு குழுவை அனுப்பி கிழக்கு மாகாணத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்குவதாகக் கூறினார்கள்; ஆனால் செயலாளர் அவரிடம் சென்று அந்த அறிக்கையைக் கேட்பதில்லை, அந்த அறிக்கையைக் கொண்டுவந்து சேர்ப்பது அவருடைய பொறுப்பாகும். அந்த அறிக்கை இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர் 16ஆம் திகதி காத்தான்குடியில் உந்துருளி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அது குறித்து 17ஆம் திகதியே நிலந்த எனக்குத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி 12ஆம் திகதி மட்டக்களப்பு விஜயத்துக்காக எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார், நிலந்த அதற்கு அனுமதி வழங்கினார்.</p><p> அவர் அவ்வாறு பயிற்சி பெற்றுச் செயற்படுகிறார் என்றால், ஒரு குடிமகனாகிய எனக்கு மட்டும் ஏன் இந்த அநீதிகள் இழைக்கப்பட வேண்டும்?

எனக்கு இறுதியாகத் தகவல்கள் கிடைத்தவை மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரையிலான காலப்பகுதிக்கு உட்பட்டவை ஆகும். </p><p>அந்த அறிக்கை பற்றி வாராந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. எனக்கு வந்த வாட்ஸ்அப் (WhatsApp) செய்தியைப் பார்த்தபோது, எதிர்வரும் நாட்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரிப்பதற்காக நான் உடனடியாக நிலந்தவைத் தொடர்புகொண்டேன்.</p><p></p><p>
</p><p>
அப்போது, தகவலைத் தெரிவித்த தரப்பு நம்பகமானதாகவும் தகவலின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நிலந்த என்னிடம் தெரிவித்தார்; அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் எனக்குக் கூற வேண்டும். இந்தச் செயற்பாட்டுக்கு வெறும் 12 மணித்தியாலங்களே இருந்தன. அந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முந்தைய நாளும் தாக்குதல் நடத்தப்பட்ட விருந்தகங்களிலேயே தங்கியிருந்தனர்</p><p>.

காவல்துறையினரைக் கூப்பிடுங்கள், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; என்னால் அவற்றைச் செய்ய முடியாது. இந்தத் தாக்குதலைத் தடுத்துச் செயற்படுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஏப்ரல் 9ஆம் திகதி இருந்தது, ஆனால் நிலந்த அதனைத் தவிர்த்துவிட்டார்.

8ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை; 16ஆம் திகதியில்தான் அவர் நாடு திரும்பினார். </p><p>சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், நிலந்தவுக்கு அறிவுறுத்தி தேசியப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்க முடியும்; அவற்றுள் எதுவுமே செய்யப்படவில்லை.

பாதுகாப்புச் செயலாளரோ அல்லது காவல்துறை மாஅதிபரோ எவருமே தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய உச்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.</p><p> அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகினேன். நான் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதியிடம் பேசினேன்; 'புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் எனக்குக் கூறினீர்களா இல்லையா?' என்று கேட்டேன்; அதற்கு 'இந்தத் தகவல்களை நிலந்த உங்களுக்கு அறிவிக்கவில்லையா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.

ஐயா, இது மிகப்பெரிய அநீதியாகும்; ஆனாலும் இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. </p><p>இதனைச் செய்வதற்கு எனக்கு எந்தவிதமான விருப்பமும் இருக்கவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற வேண்டும் என்ற தேவை இருவருக்கு இருந்தது; அவர்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலந்தவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும்தான்.</p><p>

எனக்கு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் என்றாவது ஒரு நாள் என்னை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யும்" எனவும் ஹேமசிறி பெர்னாண்டோ, தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T12:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை ; பூஜித் ஜயசுந்தர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-not-committed-any-injustice-pujith-1785584132"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-not-committed-any-injustice-pujith-1785584132</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df742f1f-c8bf-4653-96a9-830878248404/26-6a6dda0539a4f.webp' /></p><p></p><h2>&nbsp;பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்</h2><p>

இதன்போது அவர் "நான் நினைத்து எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. காவல்துறைக்கு இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். </p><p>நான் பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்துதான் பணியாற்றினேன்.

பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களின் நான் மிகுந்த வேதனை உள்ளானேன்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்துக்கு பிறகு இன்றுவரை அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் எனது மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை. நான் பின்பற்றும் மதத்தின்படி, இதனை எனது முற்பிறவி வினையின் பயன் என்றே கருதுகிறேன்.

தயவுசெய்து கனிவோடு என்னைக் குறித்துப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p></p><p> </p><p>நாட்டின் காவல்துறை மாஅதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T12:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மாலனையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-ratmalana-shooting-1785586900"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-ratmalana-shooting-1785586900</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்மலானை - கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்மலானை - கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2fbe42-cbe4-400a-964c-0a0920faa4dd/26-6a6de4d64a575.webp' /></p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் பதற்ற நிலை; களத்தில் பொலிஸ் அதிரடிப்படை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449"></link>
            <id>https://jvpnews.com/article/tension-at-mahara-prison-1785586449</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சிறைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e04295-9490-4ce4-98f4-eede94fc5a36/26-6a6de3134edd7.webp' /></p><p> </p><p> 

அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார்</p><p>.

அதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சில பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி ; வளிமண்டலவியல் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rainfall-expected-tonight-depart-meteorology-1785586052</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2812c9-8d0b-4856-a15d-3d15691798d4/26-6a6de1860b616.webp' /></p><p>
</p><p>
எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T12:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் வீடொன்றில் தீ; மோட்டார் சைக்கிள் உட்பட பல பொருட்கள் தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-a-house-in-batticaloa-motorcycle-destroyed-1785585381"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-a-house-in-batticaloa-motorcycle-destroyed-1785585381</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளது. </p><p>


இன்று காலை வேளையில் அவ்வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். 

பின், அவ்வீட்டினரும் அயலவர்களும் இணைந்து நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7aa26ab-7087-4b83-8251-527ff0cb043e/26-6a6ddee6af38a.webp' /></p><p></p><h2>உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை</h2><p>
</p><p>
இருப்பினும், இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், பல உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் முதலியவை முற்றாகத் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.</p><p>அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T11:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதியை 36 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-exports-target-to-increase-36-billion-1785582589"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-exports-target-to-increase-36-billion-1785582589</id>
            <summary type="text">2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வர்த்தக, வாணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0373079a-d8cb-42ae-b556-97255aecfb1a/26-6a6dd3fead73d.webp' /></p><p>அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறமையான தொழிலாளர் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக நடைமுறையிலுள்ள செயற்திட்டங்களை மறுஆய்வு செய்வதும், எதிர்கால முன்னுரிமைகள் குறித்து ஆராய்வதும் இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.
</p><p>
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சர்வதேச சந்தைகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
</p><p>
சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் அளவிடக்கூடிய பெறுபேறுகளை அடைய அதிகாரிகள் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்த்தும் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கேற்ப தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:09:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-taken-against-those-buses-kerosene-1785581036"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-taken-against-those-buses-kerosene-1785581036</id>
            <summary type="text">பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது.

டீசலுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது.</p><p></p><p>

டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாட்டின் பல இடங்களில் பொலிஸார் இவ்விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
</p><p>
இந்த நடவடிக்கையின்போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

மேலும் சந்தேகத்திற்குரிய பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a98b670-1b6d-492c-ba09-236dcd1b16b9/26-6a6dcded9e8fb.webp' /></p><p>டீசல் லீட்டர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால் கூடுதல் லாபத்துக்காக பல பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.
</p><p>
இந்த சட்டவிரோதச் செயலால் பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. </p><p>இலாப நோக்கம் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
</p><p>
கேன்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ துணை போகக்கூடாது என பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

அண்மையில் கூட கல்முனை தலைமையக பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 3 பயணிகள் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>இது தவிர கொரோனா காலப்பகுதி மற்றும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காலப்பகுதிகளில் கல்முனை பிராந்தியத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து முதல் தனியார் கனரக வாகனங்கள் மண்ணெண்ணெய் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p>
இது தவிர பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து வாகனங்கள் திடீர் சோதனைகளின்போது சட்டவிரோதமாக 100 லீற்றருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைக்கு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-who-went-fishing-falls-victim-to-wild-elephant-1785580429"></link>
            <id>https://jvpnews.com/article/man-who-went-fishing-falls-victim-to-wild-elephant-1785580429</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார் கூறியுள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் பதுளுவெலவை சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார் கூறியுள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். </p><p>

குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல வெவவில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே, இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af6f40d8-2893-4d78-a70b-0a0b95b0aa8a/26-6a6dcbed11516.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பில் தும்பகல்ல பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T10:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில் வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-sudumalai-amman-temple-case-dismissed-1785577634"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-sudumalai-amman-temple-case-dismissed-1785577634</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் திருப்பணிப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/jaffna-important-progr-sudumalai-amman-temple-case-1785277926" target="_blank">யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் திருப்பணிப் பணிகள்</a> தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளது.</p><p></p><p>

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவிலின் திருப்பணிப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை நேற்று (31) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbfc590-c9cb-4f3c-a0c0-8b221a6b4110/26-6a6dc0a48a322.webp' /></p><p>மனுதாரர்கள், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றவும், திருப்பணிப் பணிகளைத் தொடரத் தடை விதிக்கும் இடைக்காலக் கட்டளையைப் பிறப்பிக்கவும் கோரியிருந்தனர்.</p><p>

விசாரணையின்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கட்டட அனுமதி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கே உரியது என்றும், அவற்றை இடிக்க உத்தரவிடும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் வாதிட்டார்.
</p><p>
மேலும், பிரதேச சபையால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரர்களின் விண்ணப்பம் முன்கூட்டியதாக (Premature) அமைந்துள்ளதாகவும், முறைசாரான அறிவித்தலுடன் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.</p><p>

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளை கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது <a href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047" target="_blank">தந்தை விஜய் குறித்து </a>இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு&nbsp; &nbsp;மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.</p><p>

 ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deda9d0-9b30-4fbc-8497-4a7e686cc876/26-6a6d7a7556061.webp' /></p><h2>வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....</h2><p>
</p><p>
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><p>சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T09:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-for-illegally-hoarding-conch-shells-1785576506"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-for-illegally-hoarding-conch-shells-1785576506</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர்.</p><p></p><p>



வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜூலை 30ஆம் திகதி கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7309ae1-527b-4a02-a764-3be71ea0968c/26-6a6dbc3beeaf0.webp' /></p><p>இதன்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு வீடுகள் சோதனையிடப்பட்டதில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 70 மில்லிமீட்டர் சுற்றளவை விடக் குறைவான சங்குகள் அடங்கிய 46 மூடைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
</p><p>


கைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 54 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சங்கு தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:28:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி; இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-corruption-two-female-officials-arrested-1785576553"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-corruption-two-female-officials-arrested-1785576553</id>
            <summary type="text">&amp;nbsp; அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p> 

கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் 2025ம் ஆண்டு முதல் இதுவரை காலப்பகுதியில் 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e679a8a-ace6-4a1d-9350-dea1e10639b2/26-6a6dbc6ac026f.webp' /></p><h2>அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள்&nbsp;</h2><p>
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுகம்பே விடுதியில் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; விசேட அதிரடிப்படையினர் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stole-from-three-russian-travelers-arugam-bay-1785572190"></link>
            <id>https://jvpnews.com/article/stole-from-three-russian-travelers-arugam-bay-1785572190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். </p><p> 

நேற்றையதினம் (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4612356-965f-4cb8-ad08-9be60eb5f73e/26-6a6dab60076c6.webp' /></p><h2>குளிக்கச் சென்ற தந்தை மற்றும் அவரது இரு மகள்கள்</h2><p>

 தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p>

சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை ; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-sexually-harassed-through-instagram-1785574786"></link>
            <id>https://jvpnews.com/article/student-sexually-harassed-through-instagram-1785574786</id>
            <summary type="text">சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு வழங்கிய வழக்கில், இளைஞருக்கு 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு வழங்கிய வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பாண்டியராஜன் (எ) ஜான் ஒபெத் (24), கடந்த 2021ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191f0b00-89e3-4367-8b95-2ef44bca717a/26-6a6db584740af.webp' /></p><p>இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p>

வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
</p><p>
இதனையடுத்து, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சைகள் அடுத்த வாரம்; புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/al-and-grade5-scholarship-examination-date-1785573121"></link>
            <id>https://jvpnews.com/article/al-and-grade5-scholarship-examination-date-1785573121</id>
            <summary type="text">&amp;nbsp; கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93689fed-7423-4580-8080-104771c3d8be/26-6a6dafaa6dbe8.webp' /></p><h2>பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணி</h2><p> </p><p>

அதன்படி பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>
</p><p>
மேலும் அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T08:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; புலம்பும் அலி சப்ரி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238"></link>
            <id>https://jvpnews.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785561238</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பூஜித் ,ஜயசுந்தர மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அலி சப்ரி மபதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ee99cc9-6152-4d25-8737-f8b865914dd3/26-6a6d80978ecf9.webp' /></p><p></p><h2>&nbsp;பூஜித் , ஜயசுந்தர குற்றவாளி என&nbsp; தீர்ப்பு</h2><p>

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிறப்பு மூவர் அடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது உண்மை, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், இந்தத் தண்டனைத் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவேற்றம் செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T08:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ரயிலில் மோதுண்டு நபரொருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-dies-after-being-hit-train-in-vavuniya-1785571753"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-dies-after-being-hit-train-in-vavuniya-1785571753</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு, காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45920db7-0ab7-43f9-9cf6-cf3c3fbeb7a5/26-6a6da9aab4856.webp' /></p><p>இவ்விபத்தில் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015"></link>
            <id>https://jvpnews.com/article/breastfeeding-week-declared-in-sri-lanka-1785569015</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை &#039;தாய்ப்பால் வாரம்&#039; பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் , உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 'தாய்ப்பால் வாரம்' பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப நலப் பணியகத்தின் குழந்தை போசாக்குப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிரண்யா ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.</p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a7f1c3-11db-4be1-9f1c-6aa26b8bc6a2/26-6a6d9ef8d0671.webp' /></p><p>
</p><p>
தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது குறித்த தெளிவை வழங்குவதே இந்த வாரத்தின் பிரதான நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசாலை கடலில் மூழ்கி இளைஞர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143"></link>
            <id>https://jvpnews.com/article/youth-missing-after-drowning-in-pesalai-sea-1785568143</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (31) பதிவு செய்யப்பட்ட இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடலில் மூழ்கி காணாமல்போனவர் பேசாலை, காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37dd7c63-4fea-4e11-bcf9-b06d4652dbcf/26-6a6d9b90ad063.webp' /></p><p>
</p><p>
காணாமல்போன இளைஞர் மற்றொரு நபருடன் படகில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவிற்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962"></link>
            <id>https://jvpnews.com/article/president-congratulates-rumesh-winning-gold-medal-1785567962</id>
            <summary type="text">2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b332e60e-def5-4ed5-9fd6-2390a1979b10/26-6a6d9adb7c900.webp' /></p><p>அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே வென்ற தங்கப் பதக்கம், நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், "ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனவும் ஜனாதிபதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கைப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306"></link>
            <id>https://jvpnews.com/article/48-hour-flood-warning-for-kelani-river-areas-1785567306</id>
            <summary type="text">&amp;nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று (01) காலை 7.30 மணிக்கு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை, நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47d21c6f-60bf-42d2-95f7-232845c4553b/26-6a6d984bc7f95.webp' /></p><p>
</p><p>


இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தொடர்ந்தும் கனமழை பெய்யும் சாத்தியம் நிலவுவதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் எனவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:53:08+00:00</updated>
        </entry>
    </feed>
