<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-19T23:45:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672"></link>
            <id>https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&amp;nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.</p><p>கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் புதன் நுழைவது மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.இந்த கிரக மாற்றத்தால் இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9836114-ca87-4a5a-8da2-4b36b5d8a502/26-6a863e51c32a0.webp' /></p><h3>மேஷம் </h3><p>மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் அவர்களின் கவலையை அதிகரிக்கும். எதிரிகளின் வலிமை அதிகரிப்பதால் இந்த காலகட்டம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7ed623-597c-4a00-a9ef-022db98c926d/26-6a863e5272fef.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த கிரக மாற்றத்தால் பெரும்பாலும் வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1edca05f-3fb2-4f4c-8c29-d35e86cf42a9/26-6a863e532271d.webp' /></p><h3>விருச்சிகம்
</h3><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சாதகமான விளைவுகளை அளிக்கப்போவதில்லை. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385a2522-3a33-4bab-b4d1-18ba340f6107/26-6a863e53c5331.webp' /></p>]]></content>
            <updated>2026-08-19T23:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA சர்வதேச நடுவராக பணியாற்றிய ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787178563"></link>
            <id>https://jvpnews.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787178563</id>
            <summary type="text">சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜென் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0543344c-6c32-449b-86e5-0e5fe7cad349/26-6a862e4535dee.webp' /></p><p>சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர். </p><p>2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். </p><p>சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.
</p><p>
சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜென் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p>&nbsp;ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜென் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T22:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/37-petitions-filed-high-court-again-22nd-amendment-1787176435"></link>
            <id>https://jvpnews.com/article/37-petitions-filed-high-court-again-22nd-amendment-1787176435</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்றுமுன்தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3404afaf-9451-42dd-bec8-7accfaaf6aca/26-6a8625f555d91.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினமே, அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேசிய பலய கட்சி மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த னுக்களை விசாரிக்க பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

இந்த மனுக்களில் 22 ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் உள்ளதோடு, அதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T21:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் மாணவர்களிடம் பாலியல் சேட்டை ; பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-insper-arrested-sexually-harassing-students-1787174488"></link>
            <id>https://jvpnews.com/article/health-insper-arrested-sexually-harassing-students-1787174488</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பாலியல் சேட்டை புர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்ததாகக் கூறப்படும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc2a9433-fec9-45c9-be3f-700c38f8aecc/26-6a861e5a12e9d.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரான PHI தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளும் போது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T21:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நெருக்கடியின் தாக்கம் ; அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-price-increases-for-essential-commodities-1787171131"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-price-increases-for-essential-commodities-1787171131</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13a5aec-8953-43fd-80f9-28e2c8c84f2f/26-6a86113d65a82.webp' /></p><p>இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்வடையக்கூடும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்த சர்வதேச சந்தை மாற்றங்களின் பிரதிபலிப்பாக, கடந்த சில நாட்களில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனியின் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-95-lakh-social-media-accounts-suspended-5-months-1787170640"></link>
            <id>https://jvpnews.com/article/1-95-lakh-social-media-accounts-suspended-5-months-1787170640</id>
            <summary type="text">மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672d090e-2678-4f96-b72d-76dfccfd3b14/26-6a860f516fd74.webp' /></p><p>அதிகபட்சமாக இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு சுமார் ஒரு இலட்சம் முடக்க உத்தரவுகளும், முகநூல் கணக்குகளுக்கு 80 ஆயிரம் உத்தரவுகளும், யூரியூப் கணக்குகளுக்கு 15 ஆயிரம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>


இந்தக் கணக்குகள் முடக்கப்படும்போது, அவற்றில் பதிவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


இணையதள முடக்கத்திற்கான உத்தரவுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன. </p><p>இந்தப் பிரிவின் கீழ், அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து அபராதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6701c0b7-3feb-4f8b-9406-bf57a22b3686/26-6a85fa64af620.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:48:12+00:00</updated>
        </entry>
    </feed>
