<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T23:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264"></link>
            <id>https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264</id>
            <summary type="text">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள்.</p><p style="text-align: justify; "> ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db96fbe-f91c-4770-98f2-8ba9946bb973/26-6a9b532a18c7d.webp' /></p><h2 style="text-align: justify; ">ரத்த சர்க்கரை&nbsp;</h2><p style="text-align: justify; "> பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது. 
</p><p style="text-align: justify; ">
 
பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். </p><p style="text-align: justify; ">எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.</p><p style="text-align: justify; "> 
தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம். முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. </p><p style="text-align: justify; ">
 
அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். 

 
மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.</p>]]></content>
            <updated>2026-09-04T23:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளிக்கு சிறுத்தையால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663"></link>
            <id>https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே வெள்ளிக்கிழமை (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b1480c-f8b3-46bd-8501-9714ef8a90bc/26-6a9b4518cec6b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

குறித்த பெண் தொழிலாளி கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைப் பகுதியில் தாக்கியுள்ளது. 

</p><p style="text-align: justify; ">சிறுத்தையின் தாக்குதலால் அப்பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T22:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு; வெளிப்படும் வரலாற்றுச் சின்னம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-water-reveals-historic-landmark-1788558769"></link>
            <id>https://jvpnews.com/article/low-water-reveals-historic-landmark-1788558769</id>
            <summary type="text">பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
பராக்கிரமபாகு மன்னரால் உஷ்ண காலத்தில் வசிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த பகுதி, ஆண்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e0e2a9-2b9f-4133-a076-ac6d07ecb0ed/26-6a9b3db2af810.webp' /></p><p>
</p><p>
தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக சீதா மாளிகையின் பகுதிகள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.
</p><p>
எனினும், அந்த பகுதி முழுமையாக நீரிலிருந்து வெளிப்படுத்தப்படாததால், அங்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.</p><p>

சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்த பின்னரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தலத்தைப் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-04T21:38:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளை மிரள வைத்த இளம் பெண் ;சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-who-shocked-police-officers-1788552586"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-who-shocked-police-officers-1788552586</id>
            <summary type="text">கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e388fb4-b9c5-452f-a09a-df3f07436cd3/26-6a9b258b76ae5.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளி சமித்புர பகுதியைச் சேர்ந்தவராவார். </p><p>அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் (மதிப்பு ரூ. 2 இலட்சம்) கைப்பற்றப்பட்டன. 

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாள் மரணத்துடன் போராட்டம்; மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221"></link>
            <id>https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6279dd2-d2d5-4bbe-a494-a0b88c944738/26-6a9b1c4ed1fd1.webp' /></p><h2>தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை குலாமினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் அதிகமான இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403"></link>
            <id>https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403</id>
            <summary type="text">கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த இழப்பீட்டுத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4346721b-c382-4e80-b073-d128382e56fd/26-6a9b191d45d67.webp' /></p><p> </p><p>மேலும், அத்தொகை கொழும்பிலுள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு ஊடாக உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
 
ஓமானிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கைத் தூதரகம் நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் காரணமாகவே இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.</p><p></p><p>
</p><p> 
ஓமானில் பணியாற்றியபோது உயிரிழந்த ஏனைய இலங்கையர்களுக்காகக் கிடைக்கவேண்டிய நிலுவை இழப்பீட்டுத் தொகைகளை அறவிடும் நடவடிக்கைகளுக்காகவும் தூதரகம் தொடர்ந்து தீவிரமாகத் தலையிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T19:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026"></link>
            <id>https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026</id>
            <summary type="text">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p style="text-align: justify;">


இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f791100b-34d4-4701-badf-ade18b5fe72f/26-6a9b00343421e.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p> </p><p style="text-align: justify;">



தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில்&nbsp;இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T18:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882"></link>
            <id>https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882</id>
            <summary type="text">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வேங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff6b9e4-bef9-4159-977f-06cb10dc09b7/26-6a9b04647beee.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மனு தாக்கல்</h2><p>
</p><p style="text-align: justify;"> 

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify;"> 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;">
 
அந்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதற்கமைய அதனை செல்லுபடியற்றதாக்கி தண்டனை வழங்கி உத்தரவிடுமாறு கோரியும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

அம்மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மனு விசாரணையும் நிறைவடைந்தது.

 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார செய்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-04T17:44:48+00:00</updated>
        </entry>
    </feed>
