<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T23:26:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712"></link>
            <id>https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712</id>
            <summary type="text">எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இதற்கு நீண்டகாலத் தீர்வொன்றை அரசாங்கம் முன்னெடுக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2374b7-f1de-4e44-9b26-4707d3128b6c/26-6a88da719a6d7.webp' /></p><p>இதற்கு பதிலளித்த பிரதமர், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த ஆண்டும் அரசாங்கத்தினால் நிவாரணத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன் கீழ், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில துறைகளுக்கு எரிபொருள் நிவாரணம் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சில நடைமுறைகள் மற்றும் சலுகைக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி அதிகாரி எனக் கூறி விடுதியில் மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-public-help-finding-mysterious-person-1787353106"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-public-help-finding-mysterious-person-1787353106</id>
            <summary type="text">விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதி ஒன்றுக்கு சென்ற குறித்த சந்தேகநபர், தன்னை தனியார் வங்கியொன்றின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1570da-a444-4696-8b9a-b1254845d889/26-6a88d814291fd.webp' /></p><p>இதன்போது, இரவு விருந்து உபசரிப்புக்காக பின்னர் ஒரு குழுவினர் வருகை தரவுள்ளதாகக் கூறிய அவர், விடுதியில் பெருமளவு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.</p><p>

விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவில் காணப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர், அங்கிருந்த பல பொருட்களை திருடிக்கொண்டு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் விடுதி நிர்வாகத்தினரால் ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், இதே நபர் சினமன் கார்டன்ஸ், பேலியகொட மற்றும் நுண்கொடை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்ற திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சந்தேகநபரை அடையாளம் காணும் வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த நபரின் அடையாளம் அல்லது அவர் தங்கியிருக்கும் இடம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான தகவல்களை ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591561 என்ற தொலைபேசி இலக்கத்திலும் அல்லது ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 011-2433829 ஊடாகவும் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, விடுதி உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வளாகங்களுக்கு வருகை தரும் பரிச்சயமற்ற நபர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, தங்களை வங்கி அதிகாரிகள் அல்லது ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே முக்கியமான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபரை விரைவில் கைது செய்து, இதுபோன்ற சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:58:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வறட்சி அச்சுறுத்தல் ; நீர் விநியோகத்தில் புதிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-threatens-drought-measures-in-water-supply-1787352069"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-threatens-drought-measures-in-water-supply-1787352069</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை இந்த வறட்சியான வானிலை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1144ff9-5bee-4a9a-bb5d-2909c495a0de/26-6a88d406d15fa.webp' /></p><p>எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் எழக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, தடங்கலின்றி நீரை வழங்குவதையும் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சினால் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
போத்தல் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 6 லீட்டரிலிருந்து 15 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக தற்போது 324 நீர் பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
</p><p>
தேவைக்கு ஏற்ப பிரதேச செயலாளர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரின் நீர் பௌசர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த வறட்சியினால் ஏற்படும் பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இனிவரும் காலத்தில் ஏற்படக்கூடிய மழைக்கால நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/human-rights-commission-hospital-uniform-issue-1787351468"></link>
            <id>https://jvpnews.com/article/human-rights-commission-hospital-uniform-issue-1787351468</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், "குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b71099-5fb5-4711-8c91-2899eaf8872d/26-6a88d1ae32174.webp' /></p><p> அவ்வாறாயின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை தொழிற்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள் காட்டி அதிகாரிகள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இப் பிரச்சினை விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தரக் கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், இச் சம்பவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திச் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-sets-record-diamond-league-javelin-throw-1787350946"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-sets-record-diamond-league-javelin-throw-1787350946</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் (Diamond League) ஈட்டி எறிதல் போட்டியில், 88.14 மீட்டர் தூரம் எறிந்து இலங்கையின் ருமேஷ் தரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் (Diamond League) ஈட்டி எறிதல் போட்டியில், 88.14 மீட்டர் தூரம் எறிந்து இலங்கையின் ருமேஷ் தரங்க முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். </p><p>

இந்தப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ea843c-6c48-42f6-af26-e1048b1948ec/26-6a88cfa42002c.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>



கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec335d3c-7f5c-4687-9768-e567cf08c43c/26-6a88b3c77f1c0.webp' /></p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>



இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
</p><p>


எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. </p><p>



எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்,

இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளை தாக்கிய தந்தை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-beats-children-because-wife-does-send-money-1787350400"></link>
            <id>https://jvpnews.com/article/father-beats-children-because-wife-does-send-money-1787350400</id>
            <summary type="text">பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dd2014-f6f9-41ea-b93f-63e0a61e999a/26-6a88cd81e34e3.webp' /></p><p>

பின்னர், அந்தத் தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய தந்தை ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் இறுதி உரை ; அரசியல் விமர்சனத்துடன் பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8d697c-67e0-400a-9312-f1781c1cd78b/26-6a88ab2252955.webp' /></p><p>அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:46:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை அன்னாசிப்பழங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984</id>
            <summary type="text">இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d32500-a0a4-480b-b54d-bfdd64c9aeac/26-6a88a8ba6cb07.webp' /></p><p>பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு நிலவுவதுடன், அவர்கள் ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கின்றனர்.</p><p>

தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் திருவிழாவில் விபரீதம் ; வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9cfc12-6528-4a42-be4e-98505c3997aa/26-6a888b4cdc6db.webp' /></p><p>

இதன்போது அங்கிருந்த பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அங்கு திரண்டிருந்த சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், சில ஆலய நிர்வாகங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, திருவிழா மற்றும் மத நிகழ்வுகளை பொறுப்புடன் நடத்த வேண்டும் என அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான தீ விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நவாலி அந்திரான் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சிங்கள பாடகியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730</id>
            <summary type="text">காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.</p><p> 

நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். </p><p>

நந்தா மாலினியின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் நாளை (22) பொரளை பொது மயானத்தில் பி.ப 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc69c7ec-317d-4dd1-8e80-98915dc2f175/26-6a88a3d39cb66.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d9dc20-3d30-42fa-8648-fc61ec3e086d/26-6a88a17fd9446.webp' /></p><p> 

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:05:41+00:00</updated>
        </entry>
    </feed>
