<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-12T04:46:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் நிகழும் மிக அரிய சூரிய கிரகணம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647"></link>
            <id>https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&nbsp;</p><p>உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.</p><p>இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது .சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே 'முழு சூரிய கிரகணம்' எனப்படுகிறது.</p><p>இதன்போது, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல ஒளிரும் காட்சியே இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.</p><p>இருப்பினும், இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 11:16 மணிக்கு இந்த கிரகணம் நிகழ உள்ளதால், இரவு நேர காரணமாக இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இதை நேரடியாகக் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முழு சூரிய கிரகணத்தின் முதன்மைப் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.</p><p>வடக்கு ஸ்பெயினில் சூரிய மறைவு நேரத்திற்கு மிக அருகில் கிரகணம் நிகழு என்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனோடு இணைந்த அரிய காட்சியை அங்கே காண முடியும்.</p><p>ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப்பகுதிகளிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.</p><p>முழு கிரகணம் தென்படாத ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, அலாஸ்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இது 'பகுதி சூரிய கிரகணமாக'க் காட்சியளிக்கும்.</p><p>அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆனால், அந்த கிரகணமும் இலங்கையில் இருந்து தென்படாது என்றும்; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளில் இருந்தே அதைக் காண முடியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T04:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் தங்கையின் கணவன் கைது - நிதி மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434"></link>
            <id>https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434</id>
            <summary type="text">சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை விசேட குற்ற விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கேகாலை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கேகாலை - ஹமுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி</b></h2><p>கடந்த நாட்களில் நடைபெற்ற அரசாங்கத்தின் வாகன ஏலத்தின் மூலம் வாகனம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3905c48-8465-4085-a84d-7b4ca20c40a1/26-6a7bdeba6250d.webp' /></p><p>கைது செய்யப்பட்டுள்ளவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சரொருவரின் மனைவியின் தங்கையின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சந்தேக நபர் பள்ளந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். தான் பெற்றுக் கொண்ட பணமோ அல்லது ஏல வாகனமோ தனக்குக் கிடைக்காமையின் காரணமாக குறித்த வர்த்தகர் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2><b>
சட்ட நடவடிக்கை
</b></h2><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e0a77f7-8bc1-42d1-9ef1-8a78b530279c/26-6a7bde2fa015c.webp' /></p><p>சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் சகோதரியின் கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அநுர அரசாங்கத்தில் சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T03:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071"></link>
            <id>https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T02:51:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை நாளான இன்று மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680</id>
            <summary type="text">என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எந்த ஒரு திதி கொடுக்காவிட்டாலும், இந்த அமாவாசையில் காரியம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318fb8d-e62a-4c6d-8d82-88fdfadcc750/26-6a7ba76ad8d9e.webp' /></p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை இன்றைய நாளான ஆகஸ்ட் 12 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பது நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. எவ்வாறான விடயங்களை ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00fc842-3f1c-465c-af7d-ea619b81f284/26-6a7ba76a32e33.webp' /></p><h4>தர்ப்பணத்திற்கு முன் கோலம் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளானது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்யும் நாளாகும். இந்நாளில் தர்ப்பணம் செய்வதற்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. எனவே ஆடி அமாவாசை நாளில் வீட்டில் திதி அல்லது தர்ப்பணம் செய்யும் வரை கோலம் போடாதீர்கள்.</p><h4>சுப காரியங்களைத் தவிர்க்கவும்
</h4><p>அமாவாசை நாளானது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள் என்பதால், இந்நாளில் சுப காரியங்களான திருமண பேச்சு வார்த்தை, புதுமனை புகுவிழா நடத்துவது, புதிய தொழிலை தொடங்குவது, வீடு, வாகனம் வாங்குவது போன்ற சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய நடைமுறை.</p><h4>அசைவ உணவுகள் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அல்லது அசைவ உணவை வெளியில் வாங்கி உண்பது போன்றவற்றை தவிர்ப்பது வழக்கம். அதேப் போல் சைவ உணவை உண்பவர்கள் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர், முருங்கை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் தாமச குணம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.</p><h4>ஷேவிங் மற்றும் முடி வெட்டுவது</h4><p>கூடாது
ஆடி அமாவாசை நாளில் ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, ட்ரிம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. சில வீடுகளில் தாய் தந்தை உள்ளவர்கள் அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதைத் தவிர்ப்பார்கள்.</p><h4>உணவை வீணாக்கக்கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஏதாவது ஒரு வடிவில் நம்மை சுற்றி வருவார்கள் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட நாளில் காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அதை விடுத்து அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்த உணவை வீணாக்காமல் அளவாக சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை சாதம் மீந்து போனால், பசியுடன் இருப்பவர்களுக்கு அதை கொடுங்கள்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:51:32+00:00</updated>
        </entry>
    </feed>
