<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T14:30:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்; மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216"></link>
            <id>https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&amp;nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

 
 தற்போதைய காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
 
 தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும். 

 அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது..

ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f202c3a-9260-467e-b4c9-fe1321cb0db2/26-6aa9454a6b44b.webp' /></p><h2>மனிதர்களை விட வேகமாக செயலபடும்&nbsp; AI&nbsp;</h2><p> Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று. ஆனாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது

 AI மனித குலத்திற்கு எதிரானது.</p><p> AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் கருகின்றார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா ‘ ( Satya Nadella ) ,</p><p></p><p> மனிதகுலத்திற்கு உதவாத மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை. Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.</p><p> அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை நாளை மக்களின் கருத்துக்காக வெளியிடவிருக்கிறோம்.</p><p>]</p><p> 

அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும்’ என அவர்&nbsp; ( Satya Nadella )&nbsp; கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயை சீண்டிய விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-sethupathi-took-dig-at-cm-vijay-on-bigg-boss-1789478759</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்கள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 என்பது அதன் கட்டமைக்கப்பட்ட வடிவம், பிரத்யேக கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டு சூழலுக்குள் மட்டுமே நடத்தப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/943c5883-ca2d-405b-b4e5-0aad075beddb/26-6aa94769a90ca.webp' /></p><h2>&nbsp;விஜய் டிவி&nbsp; அறிக்கை</h2><p> </p><p>
 
மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் வெளிப்பாடுகள் அனைத்தும் அந்தந்த தருணங்களின் கதைப்போக்கிற்கு உட்பட்டவையே தவிர, அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியில் உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p> 
அத்துடன் நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமும் அல்லது தொடர்பும் தங்களால் உத்தேசிக்கப்பட்டதும் இல்லை, அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை என்றும் விஜய் டிவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143"></link>
            <id>https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e92c4a-5039-4f12-a7d6-7fa5735001de/26-6aa93d30c42c0.webp' /></p><h2>&nbsp;ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்</h2><p> 

மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
</p><p>
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
</p><p>
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.</p><p> காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர். </p><p>இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>

சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது . </p><p>உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLPP கூட்டத்தில் LTTE கருத்து; விசாரணை TID க்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158"></link>
            <id>https://jvpnews.com/article/regarding-the-ltte-slpp-meeting-investigation-tid-1789475158</id>
            <summary type="text">&amp;nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c10db7-d345-4b98-b544-100b007b8a02/26-6aa939583cb99.webp' /></p><h2>பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்</h2><p>
</p><p>
 பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, "ஒன்றிணைந்த எதிர்க்கட்சி" என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p>

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.</p><p></p><p>
</p><p>
 பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு "புலி" எனக் குறிப்பிட்டதுடன், "நரியை" ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><p>
</p><p>
 அதேசமயம் , மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710"></link>
            <id>https://jvpnews.com/article/remand-extended-for-pillaiyan-1789476710</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56525197-e94a-4da9-859e-104bcc1a2a94/26-6aa93f67a0951.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஐவர் கொலை சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135"></link>
            <id>https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் , 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும் (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a928412-0d14-4d43-b7b7-3dd2cefca974/26-6aa935593d346.webp' /></p><h2>வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>
 கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.
</p><p>
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p></p><p>

இதனையடுத்து , குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சற்று குறைந்த தங்கம் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625</id>
            <summary type="text">&amp;nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea88d05-5518-4960-8abf-fb2f99ea8f5b/26-6aa927a30573a.webp' /></p><p>

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T11:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d2aec7-d1c8-4bd1-a055-f79cb84a343f/26-6aa922058dc24.webp' /></p><p> 

சந்தேகநபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதுடன், மற்றைய நபர் திருடப்பட்ட பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767"></link>
            <id>https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
</p><p>


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a8237b-5b97-4067-b0cd-425b3b4af57d/26-6aa92060a7e08.webp' /></p><p></p><h2>சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை</h2><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


 இந்நிலையில் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குநருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569"></link>
            <id>https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645" target="_blank">&nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை </a>செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (14) பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4158f368-f6c7-4f27-95a8-1e2cdd067140/26-6aa9082b6c468.webp' /></p><h2>இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை</h2><p> </p><p>

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு குறித்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11 ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp; &nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர் 

மேலும் கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882</id>
            <summary type="text">&amp;nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரினால் களவாடப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி கற்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த வெளிநாட்டவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்துள்ளதுடன், இம்மாதம் 17 ஆம் திகதி வரை தங்கியிருக்க அவர் திட்டமிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525b7b26-b0db-4a8f-8b27-ac893dc4c660/26-6aa9151c0035a.webp' /></p><p> 

இந்நிலையில் கற்பிட்டி பகுதிக்கு வருகை தந்த குறித்த சுற்றுலா பயணி, கண்டல்குழி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தார். </p><p>

கடந்த 13 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில், கண்டல்குழி கடற்கரையில் தனியாக உலாவிக்கொண்டிருந்த போது, அந்த சமயம் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் அவரது கைப்பையை அவரிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;மர்ம நபரை அடையாளங்காண&nbsp; தீவிர விசாரணை</h2><p> </p><p>

குறித்த பையினுள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 இலங்கை ரூபாய் பணம், மூக்குக் கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு என்பன இருந்ததாக அவர் கற்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட குறித்த மர்ம நபரை அடையாளங்கண்டு, அவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தை அலங்கரிக்கும் ஆவாரம் பூக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172"></link>
            <id>https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.
</p><p>


குறிப்பாக பொகவந்தலாவ, ஹட்டன், வெளிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75777e93-9fc2-478e-8acd-a6f1dd3760e0/26-6aa912560387e.webp' /></p><p></p><p> </p><p>



வீதியோரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் காணப்படும் ஆவாரம் பூக்கள், மலையகத்தின் இயற்கை எழிலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
</p><p>


அதேசமயம் விஜயதசமி பூஜை காலப்பகுதியில் அலங்காரங்களுக்காகவும் ஆவாரம் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T09:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி யூரோ நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816</id>
            <summary type="text">&amp;nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹட்டன் நகரில் போலி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


ஹட்டன் நகரில் போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (14) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf85b0-d69d-4714-8691-7a6387aecd0d/26-6aa910f1768ba.webp' /></p><p>
</p><p>


 சந்தேகநபரிடம் இருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலி நாணயத்தாள்களும் உட்பட மொத்தம் 16 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனர் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னிடம் வழங்கியதாகவும், அவை போலியானவை என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களுக்கு ஞா. ஸ்ரீநேசன் எம்.பி. களவிஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194"></link>
            <id>https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று 15.09.2026 களவிஜயம் மேற்கொண்டார்.</p><p>

இதன்போது பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் வீதிகளை நேரில் பார்வையிட்டார். குறித்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>
</p><p>
பெரிய புல்லுமலை பகுதியில் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். </p><p>இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரியுடன் தொடர்புகொண்டு, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், பெரிய புல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்களின் அழைப்பின் பேரில் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>

எல்லைப் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரில் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நால்வரின் உயிரைப் பறித்த பிரிட்ஜ் ; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852"></link>
            <id>https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 கர்நாடகா மாநிலம் பெலகவி பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்திருக்கிறது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 
 வீட்டில் பாரதி, சாரதா, கங்கா, பிரியா ஆகிய நான்கு பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c58fe9f-2e65-458e-aee5-e03cf5220fd9/26-6aa901764a698.webp' /></p><h2>விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..</h2><p> அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே பிரிட்ஜ் இருந்துள்ளது.

நள்ளிரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்ஜ் வெடித்திருக்கிறது. </p><p>தீ கொழுந்து விட்டு எறிந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நான்கு பேரும் மரணமடைந்தனர்.

 மேலும் இருவர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><p>
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வந்ததால் ஃபிரிட்ஜ் வெடித்ததை அருகிலிருந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக நினைத்துவிட்டதாகவும் அதன்பின் விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-15T08:40:36+00:00</updated>
        </entry>
    </feed>
