<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-25T05:43:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahapola-scholarship-for-the-2024-2025-batch-1784957927"></link>
            <id>https://jvpnews.com/article/mahapola-scholarship-for-the-2024-2025-batch-1784957927</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறும் பல்கலை மாணவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறும் பல்கலை மாணவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி உதவித்தொகை நிதியம் கூறியுள்ளது.</p><p>


இதனை லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் அறிவித்துள்ளது.

 தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17க்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51845434-ecc9-43a8-aa93-5507340b4147/26-6a644be8e0e07.webp' /></p><h2>உதவி தொகை கிடைக்காத&nbsp; மாணவர்கள் மேன்முறையீடு&nbsp; செய்யலாம்</h2><p>
</p><p>
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.</p><p>


இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் , 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>


பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-25T05:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னந்தோட்டத் தொழிலாளி அடித்துப்படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234"></link>
            <id>https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd48a49b-d751-430e-87de-d70a0edbc61c/26-6a6449344aae4.webp' /></p><p>

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் பணியாற்றி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

 சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ள அவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு குழந்தைகள் பிறந்தும் நாமல் ராஜபக்க்ஷவை துரத்தும் பிரச்சனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற<a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-warning-electric-bill-issue-1691557217" target="_blank"> நாமல் ராஜபக்‌சவின் திருமண விழா</a>விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d47b12-264f-4e44-88f2-786a7193f802/26-6a6445c8a4243.webp' /></p><h2>எனக்கு மட்டும் பாராபட்சம் ஏன்?</h2><p>
</p><p>
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T05:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579929b8-740c-42d9-b1c7-28614c7b0796/26-6a643f0ae7592.webp' /></p><p>
</p><p>


இராமநாதபுரம்&nbsp; தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>


ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. </p><p>இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.
</p><p>


அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp;கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என&nbsp; சந்தேகம்&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் பெயர்ச்சியால் உச்சத்திற்கு செல்லும் ராசிகள் இவர்கள் தான் ; உங்க ராசி இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-will-rise-due-to-rahu-transit-1784941827"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-will-rise-due-to-rahu-transit-1784941827</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் ராகு பகவான் பார்க்கப்படுகிறார். ராகு பகவான் ஒரு ராசியைக் மற்றொரு ராசிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் ராகு பகவான் பார்க்கப்படுகிறார். ராகு பகவான் ஒரு ராசியைக் மற்றொரு ராசிக்கு மாற ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். </p><p style="text-align: justify;">

அந்த வகையில் தற்போது சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், வரும் ஆகஸ்ட் 2ம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகமும், அதிர்ஷ்டமும் அடிக்கப் போகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb10b7d9-cf1b-431f-af31-b0c4d8dad3e0/26-6a640d0544def.webp' /></p><p> </p><h2 style="text-align: justify;">
அது எந்தெந்த ராசிகள்
</h2><p style="text-align: justify;"><b>

மேஷம்: </b>உங்களது தன்னம்பிக்கையும் தைரியமும் வழக்கத்தை விட அதிகரிக்கும். நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற புதிய பொறுப்புகள் தேடி வரும்.
புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும் என்பதால் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும், உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"><b>

கன்னி: </b>உங்களது பொருளாதார நிலை அதிரடியாக உயரும். தடைபட்ட பண வரவுகள் எளிதாக உங்களை வந்தடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வீடு, நிலம், நகை அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>
தனுசு: </b>வாழ்க்கையில் ஏற்படும் மாறுபட்ட அனுபவங்கள் மூலம் உங்களுக்குப் புதிய பக்குவம் உண்டாகும். மனதில் புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்களைப் பழுதுபார்த்துச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் கல்வியில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்குக் கூடுதல் நற்பெயர் கிடைக்கும்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-25T01:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளை மிரள வைத்த 79 வயது பொறியியலாளர் ; தாமதமாக வந்த பயணபொதியால் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553</id>
            <summary type="text">பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னை இலங்கைக்குள் கடத்த முயன்ற 79 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு, அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c0e038a-91f8-4c04-95d6-ac46e91aa876/26-6a63f8d1ecb93.webp' />'</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரது முதன்மைப் பயணப்பெட்டி&nbsp; அதே விமானத்தில் வரவில்லை.
</p><p>
நேற்று (ஜூலை 24) மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தினர் .
</p><p>
இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அவை சுமார் ரூ. 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம், கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டது.
</p><p>
தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்தபோதிலும், சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம்&nbsp; ஒப்படைக்கப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T01:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவு ; யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-delivers-major-ruling-1784939143"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-delivers-major-ruling-1784939143</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனு (24) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; ">


இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bf77d17-3ec8-47bd-a49b-07f574567cd3/26-6a64028946b2b.webp' /></p><p style="text-align: justify; ">

மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-25T01:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் ; மெலோனியின் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567"></link>
            <id>https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567</id>
            <summary type="text">உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து வருவது, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5530eb-4d51-45c1-9ed4-ed3155da3ceb/26-6a63e8d8cf1d1.webp' /></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>

இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். </p><p>அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.</p><p></p><p>
</p><p>&nbsp;நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.&nbsp;</p><p> மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது "அன்பிற்குரிய நண்பரான" மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது பேசுபொருளாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T01:15:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சேவைகள் இடைநிறுத்தம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814</id>
            <summary type="text">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (E...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451cd42e-5f5b-4719-a99f-2bfdbf3a4408/26-6a63d8384b051.webp' /></p><h2 style="text-align: justify; ">பொதுச் சேவைகள்</h2><p> </p><p style="text-align: justify; ">இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு&nbsp; மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு (Digital EPF System) ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களிலும் உதவித்தொகை வழங்குதல், பதிவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பெற முடியாது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், இந்நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தங்களுக்கு உரிய தொழிலாளர் அலுவலகத்திற்கு வருகை தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-25T01:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இனி வீட்டிலேயே சிறை ; நெரிசலை குறைக்க புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-introduces-home-detention-program-1784921380"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-introduces-home-detention-program-1784921380</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று (24) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981b1c75-f517-46b9-87de-7c6c408b0e6a/26-6a63bd25c3dc9.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, தற்போது 10,375 பேரையே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதைப்போல் நான்கு மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

இக்காரணங்களினால் சில குழுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமே இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் ஹர்ஷண நாணயக்கார வலியுறுத்தினார். </p><p style="text-align: justify; ">

இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் சிறைச்சாலை நெரிசலுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், திணைக்களத்தின் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான மனிதவளம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி அந்த நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தற்போது தலையிட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக்காவல் (House Arrest) போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-25T01:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு நேர்ந்த கதி ; நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guardian-jailed-for-assaulting-14-year-old-girl-1784940180"></link>
            <id>https://jvpnews.com/article/guardian-jailed-for-assaulting-14-year-old-girl-1784940180</id>
            <summary type="text">2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயது பாதுகாவலர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயது பாதுகாவலரை, வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி “குற்றவாளி” என அறிவித்து நேற்று (24) தீர்ப்பளித்தார்.
</p><p style="text-align: justify;">
பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்றமையைத் தொடர்ந்து பொலிஸ் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பிரகாரம், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30397874-c2cd-48c3-b924-f0007438f3cc/26-6a6406964dde5.webp' /></p><h2 style="text-align: justify;">வழக்கு விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
அதனை தொடர்ந்து, 2023இல் சந்தேக நபருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார். அதனையடுத்து, சந்தேக நபர் முன்னிலையாகாத இவ்வழக்கானது சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணியால் நெறிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify;">

இவ்வழக்கு விசாரணைகளின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, வழக்கு தொடுத்தவர் தரப்பானது சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபித்ததால் அந்த நபர் “குற்றவாளி” என அறிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 


அத்தோடு, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். </p><p style="text-align: justify;">

இந்த குற்றச்செயலின்போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், சிறுமி கருவுற்றமை, குற்றவாளி வழக்கு விசாரணைகளிலிருந்து தலைமறைவானமை, சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்றவை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளன என மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-25T01:13:10+00:00</updated>
        </entry>
    </feed>
