<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-06T12:35:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் நாளாந்த மின்சார தேவை வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553"></link>
            <id>https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553</id>
            <summary type="text">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb7d50ea-9445-44d4-8e54-40c7052b5c70/26-6a9d5bd302bf5.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மின்சாரத் தேவை</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 2,936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify;">

அத​ேமாதம் இரண்டாம் திகதி அந்தப் பெறுமதி 2,934 மெகாவோட்டாகப் பதிவாகியிருந்தது. </p><p style="text-align: justify;">

செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2,920 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-06T12:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் ; வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804"></link>
            <id>https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804</id>
            <summary type="text">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f10c23-2732-4bb6-9548-385fe490641c/26-6a9d58e617cd1.webp' /></p><p style="text-align: justify; ">

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T12:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு மர்ம நபர் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f0844a-0054-40d9-b748-4790c1000eb4/26-6a9d55090d98c.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணத் தடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362"></link>
            <id>https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362</id>
            <summary type="text">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f301e-79ee-49a5-b86a-4474774013ed/26-6a9d4b73636e3.webp' /></p><h2 style="text-align: justify; ">பயணத் தடை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p style="text-align: justify; "> 

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்தத் தண்டனைக்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டது. </p><p style="text-align: justify; ">

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அதனை இரத்து செய்து தண்டனை வழங்குமாறும் கோரி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T11:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&amp;nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f82c44-fc89-44e2-acf4-72409f8437d1/26-6a9d49b5e43a8.webp' /></p><h2>வாக்குவாதம்</h2><p> தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். </p><p>கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>&nbsp;ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. </p><p>இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p> இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>&nbsp;இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243"></link>
            <id>https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243</id>
            <summary type="text">எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திங்கட்கிழமை (07) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியால் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c3d5b8-2121-43ed-8a47-e8cb32d13866/26-6a9d432d44a7b.webp' /></p><p>

இந்த அறிவித்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T10:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorology-department-warns-of-lightning-strikes-1788688368"></link>
            <id>https://jvpnews.com/article/meteorology-department-warns-of-lightning-strikes-1788688368</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ee68f5-9df7-4d67-a21e-e3c55f6f8e59/26-6a9d37f1d6d8b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். </p><p style="text-align: justify; ">

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (06) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p>]]></content>
            <updated>2026-09-06T09:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கம் ஜனநாயக முறைமையை அடக்க முயற்சி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-government-trying-to-suppress-democracy-ranil-1788686756"></link>
            <id>https://jvpnews.com/article/npp-government-trying-to-suppress-democracy-ranil-1788686756</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc04be1f-2808-4b0a-92f4-6f1c051b7d35/26-6a9d31a643bc1.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

அத்துடன், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் விதிப்பதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகளைக் கைது செய்து ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T09:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்புக்கடிக்கு இலக்கான தமிழ் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-tamil-woman-bitten-by-snake-1788684972"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-tamil-woman-bitten-by-snake-1788684972</id>
            <summary type="text">புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்த&nbsp; சம்பவம் நேற்று (05.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83eeb455-5428-4afc-8bc2-8c71e7c42b5a/26-6a9d2aad782ce.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பு கடி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பெண், பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T08:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த 50 வயது பெண் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-year-old-woman-who-shocked-officials-1788683454"></link>
            <id>https://jvpnews.com/article/50-year-old-woman-who-shocked-officials-1788683454</id>
            <summary type="text">திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குறித்த மதுபானங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d98e7d1-1543-49c4-bc43-cf3cd025ba38/26-6a9d24c0392c1.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம் மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T08:31:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய உயரதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087"></link>
            <id>https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df261ca-b115-4766-bad6-4ad83012bcaa/26-6a9cece6255e2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
</p><p style="text-align: justify; ">
விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T08:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதாரக்கவின் நெருங்கிய சகா போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402"></link>
            <id>https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402</id>
            <summary type="text">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இரத்தமலானை, கொளுமட சந்தை பகுதியில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa297a4-3e26-4e40-9ecd-a6368456adc1/26-6a9d1cbb51ad8.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது அவரிடமிருந்து 6,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">


இரத்தமலானை, பங்களாவத்தை, ரஸ்டம் வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதான சந்தேகநபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘படோவிட்ட அஸங்க’ என்பவருக்காக வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் 'சுதாரக்க' என்பவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்சூடு ; அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664"></link>
            <id>https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "> 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bfad66-3a7a-452d-8317-e2777a6276ff/26-6a9ceee1f1959.webp' /></p><p style="text-align: justify; "> 

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த விபத்து ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-claims-police-officer-s-life-1788679890"></link>
            <id>https://jvpnews.com/article/accident-claims-police-officer-s-life-1788679890</id>
            <summary type="text">நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தனமல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


தனமல்வில, கடவத்த மற்றும் மொணராகலை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d56831e6-d053-4446-86f5-d33aeb2f6486/26-6a9d16d386d68.webp' /></p><p style="text-align: justify; ">



தனமல்வில – அம்பேகமுவ வீதியின் அரம்பேகெம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 43 வயதுடைய பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



கடவத்த நகர வெளிவட்ட வீதியில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">58 வயதுடைய குறித்த நபர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


மொனராகலை - பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T07:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ;அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c346e116-2441-4f9d-8ba2-e5e852f07387/26-6a9d13fbacd94.webp' /></p><h2>டெங்கு நோயாளிகள்</h2><p> ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


மாகாண ரீதியில் மேற்கு மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 50,851 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளிகளில் 52.84 சதவீதமாகும்.
</p><p>


மேலும், தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711"></link>
            <id>https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711</id>
            <summary type="text">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65c2552-ee10-4a57-9e55-0808dc540183/26-6a9d0a6851594.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T06:39:30+00:00</updated>
        </entry>
    </feed>
