<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T08:20:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256"></link>
            <id>https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.&nbsp;</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.&nbsp;</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.&nbsp;</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.&nbsp;</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.&nbsp;</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>இந்தநிலையில்,&nbsp; சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில்&nbsp; நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில்&nbsp; வெலியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T08:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secretly-gathered-information-prison-officials-1786781392"></link>
            <id>https://jvpnews.com/article/secretly-gathered-information-prison-officials-1786781392</id>
            <summary type="text">சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.&amp;nbsp;சந்தேகநபர், அண்மையில் புதிய மெகசின் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>சந்தேகநபர், அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவரின் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>அஸ்மான் என்பவரால் கடந்த ஆண்டு தெஹிவளை வட்ரப்பல வீதியில் நடத்தப்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.&nbsp;</p><p>சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'கொஸ் மல்லி' என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைபேசியைப் பரிசோதித்த போது, 'கொஸ் மல்லி' என்பவருடன் நடத்திய பல உரையாடல்களின் குரல் பதிவுகளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.&nbsp;</p><p>அந்த தொலைபேசி உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:09:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 மாதங்கள் கடலில் ; கடும் மன அழுத்தத்தில் அமெரிக்க கப்பலின் 5,000 மாலுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368"></link>
            <id>https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>கப்பலில் உள்ள சுமார் 5,000 மாலுமிகளும் வீரர்களும் 9 மாதங்களாகக் கப்பலிலேயே வசித்து வருவதுடன், தொடர்ந்து 250 நாட்களாகக் கரைக்கு வராமலும் இருந்துள்ளனர்.</p><p>மேலும், கப்பலில் மோசமான சுகாதார வசதிகள், பழுதடைந்த கழிப்பறைகள் மற்றும் அடிப்படை சுகாதாரப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்புடைய அறிக்கைகளின்படி, இந்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான பணி நீட்டிப்பு காரணமாக, பல மாலுமிகள் கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு ஒரு முடிவு எட்டப்படாததால், மத்திய கிழக்கு நடவடிக்கைகளிலிருந்து கப்பலைத் திரும்ப அனுப்புவது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-15T07:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T07:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13ஆவது முறை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833</id>
            <summary type="text">&amp;nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,&nbsp; நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.&nbsp;</p><p>தொடர்ந்து பிரதமர் முப்படை மற்றும் டில்லி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய விமானப்படை சார்பில் ஹெலிக்கொப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது.</p><p>சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.</p><p>நாட்டின் கனவுகளும் இலட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை நனவாக்குவதற்கான உறுதியும் வலுவான மனவலிமையும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான பாதையை கண்டறியும் திறனை வலுவான மன உறுதி வழங்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன் நாடு புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபத்தில் சந்தேகத்திற்கிடமான படகு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481"></link>
            <id>https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481</id>
            <summary type="text">இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.பாறைகளில் மோதியதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.</p><p>பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் படகில் காணப்படாத நிலையில், அதில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T06:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு ராஜபக்சவை அழைத்து வாருங்கள்; சிறிதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875"></link>
            <id>https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&amp;nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,&nbsp; அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை&nbsp; செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.&nbsp;</p><p>அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.</p><p>யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.</p><p>&nbsp;இதனை நாங்கள் சொல்லவில்லை; பாடசாலை மாணவியான&nbsp; கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச&nbsp; சொல்லியிருக்கிறார். ,</p><p>எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ&nbsp; வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-at-bus-stops-1786773739</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விடிக்கப்பட்டுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை; சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரக கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த&nbsp; 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.</p><p>மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் &nbsp;நேற்று (14) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.</p><p>பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>ஆனாலும்&nbsp; திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (14) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த&nbsp; சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan தலைமையில்&nbsp;</p><p>டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்த பெக்கோ சமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110"></link>
            <id>https://jvpnews.com/article/backhoe-saman-refused-final-respects-to-his-mother-1786773110</id>
            <summary type="text">வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>பெக்கோ சமன் தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீ​வவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்தியிருந்தனர்.&nbsp;</p><p>இதன்போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே&nbsp; கொலைக்கான மற்றொரு காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-15T05:52:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் - ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786755257</id>
            <summary type="text"> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

“நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f0db79-3aaa-46cd-be71-8538dc9efbfa/26-6a7fb9504e992.webp' /></p><p>
</p><p>
எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை.
மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.

எனினும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை.
</p><p>22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு ஆலோசனை</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கிறார்.

நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c32acb6-68b3-4b0b-9bd5-6f26440d9281/26-6a7fb94f9c294.webp' /></p><p>

22ஆவது திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T04:21:47+00:00</updated>
        </entry>
    </feed>
