<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T19:24:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089"></link>
            <id>https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6920ce-0cce-4bb7-867a-842b6ba8f5cb/26-6a7f4ab4272c6.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T17:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் சொத்து தகராறால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை..! வவுனியாவில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725695"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725695</id>
            <summary type="text">வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>பெறுமதியான பொருட்கள்</h2><p>

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.</p><p>

 இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர்.</p><p>
 வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee82fa8-8ced-4c9a-a6f3-426df4dbc307/26-6a7f45f4b2ac1.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f29eb1e8-4550-49af-9a2f-158c9733f2da/26-6a7f45f565d18.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T17:03:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடியால் தாக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110</id>
            <summary type="text">குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம் திகதி பொலிஸ் அதிகாரிக்கும் வேறு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d026496a-4658-42fc-ac3c-ddf87695cc71/26-6a7f3f114b1aa.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன் காரணமாக கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1516d37-2c2c-42a9-81b2-b55c62fbed12/26-6a7f3177816ad.webp' /></p><p> </p><p>

அத்துடன், நாளை (15) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T15:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளி - இலங்கைக்கு இழுத்துவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960"></link>
            <id>https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 52 வது நாளான இன்று (14) புதிதாக 2 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f01205-07bd-494b-a685-e1512da52309/26-6a7f1381d9524.webp' /></p><p></p><p>

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 554மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 547 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

2 குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படாத 6 குழிகள் 1 மீற்றர் அகலமும் 1 மீற்றர் நீளமும் கொண்டவை தோண்டப்பட்ட தில், 3 குழிக்குள் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக நண்பிகள்; டிவிஸ்ட் கொடுத்த டி.என்.ஏ சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211"></link>
            <id>https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84205643-724e-4387-b449-f9f94ac75938/26-6a7f0cad842e0.webp' /></p><h2>கண்ணீர் மல்க&nbsp; மகிழ்ச்சி</h2><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p></p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரப்ரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706"></link>
            <id>https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.

சம்பவத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.
</p><p>
சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள் நுழைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e1fdd3-5bca-47e9-ab61-0dbe8061e89e/26-6a7f06cb8045a.webp' /></p><p></p><p> இதனையடுத்து, அந்த முதலை&nbsp; வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தகைய காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாகப் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959</id>
            <summary type="text">&amp;nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>


மதிப்பீட்டுப் பணிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட அதிகாரிகளுக்கு இயலுமாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4209f9f4-bbff-4713-b9d1-6d3c5720d826/26-6a7f0f9e0f30c.webp' /></p><p></p><p>
</p><p>


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் இப் பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
