<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-26T22:48:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் காத்திருக்கும் ஆபத்து ; பெண்கள் குழந்தைகள் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672"></link>
            <id>https://jvpnews.com/article/danger-lurking-on-social-media-1787782672</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்யும் இணையவழி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு&nbsp; தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் இந்த நிலைமை தொடர்பில் பயனர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e2323b-c8ed-44d7-ac7d-30c014c6013a/26-6a8f66122aafb.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த சமூக ஊடகக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, தமது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இவ்வாறு பகிர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனவே, குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலிருந்தபடியே இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறான இணையவழி மோசடிக்கு இலக்காகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது அவதானிக்கப்பட்டால், அவர்களை உளவியல் மற்றும் சமூக ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முழுமையான கவனம் செலுத்தி வருவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T22:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414"></link>
            <id>https://jvpnews.com/article/family-woman-death-sparks-intensive-investigation-1787781414</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பருடன் மோதி படுகாயமடைந்தார்.</p><p style="text-align: justify; "> கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d6de36-296a-4f67-9ec1-c7fedc2cc3b5/26-6a8f61280c5df.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ் விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்.</p><p style="text-align: justify; ">
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T21:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888"></link>
            <id>https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. 

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125" target="_blank">திடீர் வெள்ளப் பெருக்கினால்</a> உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5212d84-341b-4491-93d3-d630995d3b88/26-6a8f05421939d.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரும்பாலான பயணிகள் இந்தியா மற்றும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியிலேயே இருந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T21:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது ; அமைச்சர் விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/epal-disaster-deeply-concerning-foreign-minister-1787778491"></link>
            <id>https://jvpnews.com/article/epal-disaster-deeply-concerning-foreign-minister-1787778491</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் தமது எக்ஸ் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ecb1773-82de-4dbd-88ea-94746d8b12c0/26-6a8f55bd49d80.webp' /></p><h2>&nbsp;மீட்புப் பணிகள்</h2><p> </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்தச் சவாலான காலத்தை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் முயற்சிகளையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.</p><p></p><p> 

இந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து செல்லும் நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையான ஆதரவுடனும் தோழமையுடனும் நிற்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-with-ice-drugs-1787774182"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-with-ice-drugs-1787774182</id>
            <summary type="text">நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

நவகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகக் கொரதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4326b5bd-94dc-4d15-be3d-59baea36640b/26-6a8f44e84d206.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் கைது</h2><p style="text-align: justify; "> 01 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் வெல்லம்பிட்டி பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, 60 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட பின்னவல - வக பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இக் கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T20:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப்பொழுதில் அரங்கேறிய அசம்பாவிதம்; பாதுகாப்பு தரப்பினர் உட்பட 579 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88bac5c-5bcc-49f6-9cfd-a92a2d9c1b7c/26-6a8f423664086.webp' /></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T19:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638"></link>
            <id>https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638</id>
            <summary type="text">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாகவே இந்த முதலிடத்தைப் அவரால் பெற முடிந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3393a9-32ed-4fa2-93c1-8b6cb16bf39d/26-6a8f3327c0915.webp' /></p><h2 style="text-align: justify; ">புதிய தரவரிசை</h2><p> </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று ருமேஷ் தரங்க வெற்றி பெற்றார். </p><p style="text-align: justify; ">

புதிய தரவரிசையின்படி, ருமேஷ் தரங்க 1,363 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுடன், இதுவரை முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத் திறமையை வெளிப்படுத்தி ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740</id>
            <summary type="text">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இப்பலோகம பொலிஸ் பிரிவின் குஷலானகம பகுதியில் நேற்று (25) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4cf9c96-3f46-48d1-88fc-a7732965ed79/26-6a8f2bbef2e7b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஓட்டமாவடி பகுதியில் வசித்துவந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், இரண்டு பின் இருக்கை பயணிகளும் கலவேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின் இருக்கை பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இப்பலோகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927"></link>
            <id>https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b6eea8-e9a0-4db0-b919-5029786b7dbb/26-6a8f24a932bef.webp' /></p><h2 style="text-align: justify;"><span style="text-align: left;">எச்சரிக்கை</span></h2><p style="text-align: justify;">இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p style="text-align: justify;">
மின்னஞ்சல்: <a href="slemb.kathmandu@mfa.gov.lk" target="_blank">slemb.kathmandu@mfa.gov.lk</a>
</p><p style="text-align: justify;">
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-26T17:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-in-sri-lanka-1787763206"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-in-sri-lanka-1787763206</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 72 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாடுதழுவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை (25) வரையான காலப்பகுதியில் சுமார் 94 ஆயிரத்து 292 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9b6c47-adcd-4a07-b34a-e73999d13b47/26-6a8f1a084a9c6.webp' /></p><h2 style="text-align: justify; ">அதி உயர் டெங்கு அபாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள போதும், நாளொன்றில் 200 க்கும் அதிகளவான நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; ">

இந்த வருடத்தில் கடந்த மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> இம்மாதத்தில் கடந்த 25 நாட்களில் 8,551 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மேல் மாகாணத்தில் 52.962 சதவீதமானோரும் (49,901), தென் மாகாணத்தில் 20,779 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உட்பட கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது. </p><p style="text-align: justify; "> இந்நிலையில் 76 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T16:53:35+00:00</updated>
        </entry>
    </feed>
