<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T09:38:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330</id>
            <summary type="text">கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b36508-2b0a-4748-88fe-d1af31feba2a/26-6a8abd53a8378.webp' /></p><p>வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
</p><p>


இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.
</p><p>


அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


விபத்தில் தொடர்புடைய ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637</id>
            <summary type="text">நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef67f89-f6c6-4126-93b4-e72b229d72b3/26-6a8aba9f351a3.webp' /></p><p>நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
</p><p>
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.
</p><p>
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி விமானப்படை சீருடையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320</id>
            <summary type="text">விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76ad008d-e4bb-48a3-8d56-12e66271ec4b/26-6a8aa9c18bac2.webp' /></p><p>

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
விசாரணைகளின்போது, சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணியாற்றுவதாகக் கூறி, தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அவர்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்து பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை நம்பிய பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை விற்று கிடைத்த 60 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேகநபரிடம் வழங்கியுள்ளார்.
</p><p>
குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடை அணிந்து வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் குருநாகல் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 7 கோடி பெறுமதியான 1,044 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-1-044-kg-of-ganja-worth-7-crore-1787467654</id>
            <summary type="text">மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50361c87-f6d5-4feb-a86a-d0fac51296e1/26-6a8a978816860.webp' /></p><p>அங்கிருந்து 1044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையின் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

இதேவேளை, அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
 

வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557"></link>
            <id>https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557</id>
            <summary type="text">அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b4e92e-03f2-46a7-ab00-2e889c07ae1d/26-6a8a7bceb3197.webp' /></p><p>கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அவருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

தகராறு முற்றிய நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதமொன்றால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-23T06:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ; இரவு நேரத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-nighttime-accident-losing-control-speed-1787465299"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-nighttime-accident-losing-control-speed-1787465299</id>
            <summary type="text">அம்பாறை களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடப்பதற்காக வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97bd5379-3c22-4c7d-ba2e-89bc0cd12307/26-6a8a8e550e666.webp' /></p><p> இச்சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

 

கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த ஜெகநாதன் கிஷோர் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

சம்பவத்தினமான நேற்று இரவு 9.30 மணியளவில், குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காக மூன்று சிறுவர்கள் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.</p><p> 

 

இதன்போது வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். </p><p>

 

காயமடைந்தவர்கள் உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் ; பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-scholarship-differently-abled-stude-jaffna-1787464545"></link>
            <id>https://jvpnews.com/article/special-scholarship-differently-abled-stude-jaffna-1787464545</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி நிதியத்தின் உதவிகள் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd23af26-4154-404d-9262-21dcaf1e2027/26-6a8a8b62e7a55.webp' /></p><p>வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்தகால யுத்தத்தின் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று எனத் தெரிவித்த அவர், மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p>
மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் வெற்றிக் கதைகள் ஏனையோருக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக ஜனாதிபதி நிதியத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-who-wen-swimming-with-friends-drowned-and-died-1787463988"></link>
            <id>https://jvpnews.com/article/man-who-wen-swimming-with-friends-drowned-and-died-1787463988</id>
            <summary type="text">இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><h3>முதற்கட்ட விசாரணை</h3><p>
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3f64eb2-efcb-4934-b884-82a35d9a6ab4/26-6a8a8936689cd.webp' /></p><p>உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவம் தொடர்பாக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் செப்டம்பர் 5 முதல் பிரம்மாண்ட மக்கள் பேரணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/massive-public-rallies-led-president-september-5-1787463527"></link>
            <id>https://jvpnews.com/article/massive-public-rallies-led-president-september-5-1787463527</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9c5e9f-d645-4f7c-947f-c25b6a594705/26-6a8a8768561d5.webp' /></p><p>களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.</p><p>

 

"ஜி.எல். பீரிஸின் வீட்டில் இரவோடு இரவாகச் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்காமல் வீதியில் இறங்கிச் செய்யச் ​சொல்லுங்கள். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் கூட்டங்களை நடத்துமாறு கூறுங்கள்.</p><p>அதை விடுத்து கோட்டாபயவை விட ஒன்று இருக்கிறது, ரணில் விக்கிரமசிங்கவை விட ஒன்று இருக்கிறது, அங்கு ஒன்று இருக்கிறது, இங்கு ஒன்று இருக்கிறது என்று பேசுவதில் பயனில்லை. வார்த்தைகளில் பயனில்லை.
</p><p>
 

நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைத்து வருகிறோம்.</p><p>

 

வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்டங்களில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளன. </p><p>அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுமானால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கூறுகிறோம்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:38:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி நகரில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல் ; வீதி உலா வரும் முதலாவது ரந்தோலி பெரஹரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-transportation-plan-implemented-in-kandy-1787462927"></link>
            <id>https://jvpnews.com/article/special-transportation-plan-implemented-in-kandy-1787462927</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வரவுள்ளது.
</p><p>
 

இந்தப் பெரஹரா தளதா வீதி,விகாரை வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொட்டுகொடல்ல வீதி, குறுக்கு வீதி , டி.எஸ். சேனாநாயக்க வீதி, ராஜா வீதி வழியே சென்று மேல்நோக்கி வந்து முதலாவது ரந்தோலி பெரஹரா நிறைவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc98822-0f8e-4be3-8e25-1319eb7e682b/26-6a8a8510f32b3.webp' /></p><p>

 

இந்தக் காலப்பகுதியில் கண்டி நகரத்திற்குள் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
</p><p>
 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீதித் தடைகள் அமைத்தல், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை வழங்குதல் போன்ற விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><h4>முதலாவது ரந்தோலி பெரஹரா விபரங்கள்</h4><p>
 

2026.08.23 ஆம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹரா மாளிகையிலிருந்து ஆரம்பமாகும். இது தலதா வீதி, பன்சல் வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொடுகொடெல்ல வீதி, குறுக்கு வீதி (Cross Street), டி.எஸ். சேனநாயக்க வீதி, ரஜ வீதி வழியாகச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடையவுள்ளது. 

 

பெரஹரா மாலை 06.44 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பெரஹரா பயணிக்கும் மொத்தத் தூரம் 1 கிலோற்றர் 860 மீற்றர்கள் ஆகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f7d45f-a5f4-4847-aa6c-8141d4f5e5e0/26-6a8a8511a6e01.webp' /></p><h4>நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்கள்</h4><p>
 

கடுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகருக்கு வரும் கனரக வாகனங்கள்: மஹியாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரை வந்தடையலாம். </p><h5> 

 

கடுகஸ்தோட்டை பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள்</h5><p>டி.எஸ். சேனநாயக்க வீதி ஊடாக வந்து, குறுக்கு வீதி வழியாக யட்டிநுவர வீதியை அடைந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் பள்ளிவாசல் அருகில் இடதுபுறமாகப் பயணித்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாகச் செல்லலாம். </p><p> 

 

கடுகஸ்தோட்டை நோக்கி வெளியேறும் வாகனங்கள்: பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக மஹியாவ நோக்கிச் செல்ல முடியும். </p><p> 

 

தென்னகும்புர மற்றும் அம்பிட்டிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: சங்கராஜ மாவத்தை ஊடாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பி போகம்பரை, ரயில் நிலையம் அருகில் செல்லலாம். </p><p>அங்கிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.</p><p>அத்துடன் ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி ஊடாக கண்டி நகருக்குள் நுழைய முடியும்.</p><h5> 

 

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் செல்லும் வாகனங்கள்</h5><p>மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி ஊடாக வந்து, குயின்ஸ் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயில் அருகில் உள்ள ஜோய் படகு சேவையைத் தாண்டி சங்கராஜ மாவத்தை ஊடாகப் பயணிக்கலாம்.</p><p> </p><p></p><p>மேலும், போகம்பரை சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் சங்கராஜ மாவத்தை ஊடாக அம்பிட்டிய மற்றும் தென்னகும்புர நோக்கிச் செல்ல முடியும்.
</p><p>
 

கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையவும் வெளியேறவும்: </p><p>வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதியை இரு திசைகளிலும் பயணிக்கப் பயன்படுத்த முடியும்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fedcdb5-8627-421d-9d9d-e4822e01850f/26-6a8a81a44da12.webp' /></p><p>இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.</p><p>

 

அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p>
 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது.</p><p> கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.</p><p>

 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360"></link>
            <id>https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360</id>
            <summary type="text">பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

"MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 தொன் இரும்புத் தாது கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f44885-27bd-43ae-8f2a-6b4ce09712bd/26-6a8a7ef1c07ef.webp' /></p><p>

 

கப்பல் விபத்துக்குள்ளான போது அதில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 20 பேர் சீனக் குடிமக்கள், மூவர் மியான்மர் குடிமக்கள் மற்றும் ஒருவர் பங்களாதேஷ் குடிமகன் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்தியாவின் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) ஓகஸ்ட் 23 அன்று இரவு 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

பின்னர், தேடல் மற்றும் மீட்பு உதவிக்கான கோரிக்கையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
 

கப்பல் விபத்துக்குள்ளான செய்தி அறிந்தவுடனேயே, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.</p><p>

 

அதன்படி, தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மூன்று கடலோரக் காவல் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

இருப்பினும், கப்பலின் பணியாளர்களில் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. </p><p>

 

விபத்துக்குள்ளான கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஏனைய கப்பல்களுக்கும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:03:05+00:00</updated>
        </entry>
    </feed>
