<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-24T21:45:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சேவைகள் இடைநிறுத்தம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814</id>
            <summary type="text">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (E...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451cd42e-5f5b-4719-a99f-2bfdbf3a4408/26-6a63d8384b051.webp' /></p><h2 style="text-align: justify; ">பொதுச் சேவைகள்</h2><p> </p><p style="text-align: justify; ">இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு&nbsp; மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு (Digital EPF System) ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களிலும் உதவித்தொகை வழங்குதல், பதிவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பெற முடியாது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், இந்நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தங்களுக்கு உரிய தொழிலாளர் அலுவலகத்திற்கு வருகை தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T21:25:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக் கறைகளுடன் கிடந்த சடலம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-covered-in-blood-stains-1784925247"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-covered-in-blood-stains-1784925247</id>
            <summary type="text">கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;வியாழக்கிழமை (23) கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecb44f2-07a0-423e-83de-1c949b18b8ac/26-6a63cc4116713.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சடலத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நபரின் மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T20:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் நடவடிக்கை ; வசமான பிடிபட்ட 2,36,280 சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nationwide-operation-nets-236-280-suspects-1784923899"></link>
            <id>https://jvpnews.com/article/nationwide-operation-nets-236-280-suspects-1784923899</id>
            <summary type="text">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 236,280 சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 236,280 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த வருடம் (2025) ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dba3b05-3e01-44ea-95f7-d9fddd474cdd/26-6a63c6fc91bd9.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றிவளைப்பு நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify; "> அதற்கமைய வியாழக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 688 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

நாடு முழுவதும் சுமார் 688 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கைதான சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துகுவிப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 4 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது,</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

அத்தோடு கடந்த ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 280 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; "> 

அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 236,897 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2253 கிலோ கிராம் ஹெரோயின், 2639 கிலோ கிராம் ஐஸ் , 7496 கிலோ கிராம் கஞ்சா, 291 கிலோ கிராம் கொக்கைன், 1637 கிலோ கிராம் குஷ், 351 கிலோ கிராம் ஹசிஸ், 865 கிலோ கிராம் மதனமோதகம், 440 கிலோ கிராம் மாவா மற்றும் 3,642,833போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதேவேளை சட்டவிரோத சொத்துகுவிப்பு தொடர்பில் 376 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3267 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2308 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T20:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இனி வீட்டிலேயே சிறை ; நெரிசலை குறைக்க புதிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-introduces-home-detention-program-1784921380"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-introduces-home-detention-program-1784921380</id>
            <summary type="text">இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று (24) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981b1c75-f517-46b9-87de-7c6c408b0e6a/26-6a63bd25c3dc9.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, தற்போது 10,375 பேரையே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதைப்போல் நான்கு மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

இக்காரணங்களினால் சில குழுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமே இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் ஹர்ஷண நாணயக்கார வலியுறுத்தினார். </p><p style="text-align: justify; ">

இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் சிறைச்சாலை நெரிசலுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், திணைக்களத்தின் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான மனிதவளம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி அந்த நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தற்போது தலையிட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக்காவல் (House Arrest) போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T19:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487"></link>
            <id>https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487</id>
            <summary type="text">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7bf1b03-86d9-46be-aa29-4825733a0b73/26-6a63ba0bc1f63.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த இளம் பெண்ணுக்கு ஆண் பொலிஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான பொலிஸ் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
இந்த விவகாரம் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான பொலிஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T19:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை துறந்த பங்களாதேஷ் ஜனாதிபதி ; மீண்டும் வரும் ஷேக் ஹசீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bangladesh-president-steps-down-1784916951"></link>
            <id>https://jvpnews.com/article/bangladesh-president-steps-down-1784916951</id>
            <summary type="text">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p style="text-align: justify;">

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7154f10e-c5b5-43a2-9748-8a035bdddc84/26-6a63abd9633e6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;இராஜினாமா தீர்மானம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify; ">

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T18:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273</id>
            <summary type="text">2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. </p><p>

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த கொடுப்பனவிற்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73da8ed0-3192-476b-bd9e-01834db31118/26-6a639d7b5a385.webp' /></p><h2>இணையவழி பதிவு&nbsp;</h2><p> </p><p>

அதற்கமைய, அப்பட்டியலில் பெயர்கள் அடங்கியுள்ள மாணவர்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர்<a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank"> https://mahapola.lk/BankApp2025/</a> என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி பதிவை நிறைவு செய்ய வேண்டும்.</p><p></p><p> 

2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் மேல்முறையீடுகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்கள் ஊடாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579"></link>
            <id>https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரான ரன்னுளு சந்திரசிறி டி சொய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட <a href="https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577" target="_blank">முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரா</a>ன ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) பிணையில் விடுவித்தது.</p><p style="text-align: justify; ">

அதற்கமைய தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து நீதிவான் பிணை வழங்கி வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிவான் இதன்போது பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2484e216-0cc0-48bd-8270-3568eb41cd30/26-6a639ac589eb8.webp' /></p><h2 style="text-align: justify; ">பிணையில் விடுதலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டில் 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தென் மாகாணத்தின் பொது தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
குறித்த திட்டத்தின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயற்பட்டமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T17:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 1200 கைதிகளிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70f31df-74c7-4151-877f-2f8d73547359/26-6a6394df3a5f0.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify;">விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. </p><p style="text-align: justify;">கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல,


போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.

</p><p style="text-align: justify;">
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. </p><p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 ஆயிரத்தை கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை ; ஆபத்தாகும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131"></link>
            <id>https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8c903-dfd2-49ed-ba4c-d1262efbc39b/26-6a638d4ca6229.webp' /></p><h2 style="text-align: justify; "><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நோயாளர்கள் எண்ணிக்கை</span></p></h2><p> </p><p style="text-align: justify; ">இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மாத்திரம் 198 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம். டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலை நாடி சிகிச்சை பெறுவதும் அவசியம்.
</p><p style="text-align: justify; ">
வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:05:37+00:00</updated>
        </entry>
    </feed>
