<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-18T21:34:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465"></link>
            <id>https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465</id>
            <summary type="text">பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சுமார் 300 டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa896a7-7645-4ffd-b4b3-dc987301c9ca/26-6aadab4315d1a.webp' /></p><p>இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், வலி. வடக்கு பிரதேச சபை பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>

கீரிமலையில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியே உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று கீரிமலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760cbfde-4bcd-4f70-b300-5ddb90ba0ff2/26-6aadab43c1610.webp' /></p><p>இவ்வாறான நிலையில், வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கீரிமலை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பொதி செய்யப்பட்ட நிலையில் பெருமளவிலான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு மாதங்களாக கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி ஆணையாளரும் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T21:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அத்துமீறி நுழைந்து ஒலிபெருக்கி சாதனங்களை பிடுங்கி சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394"></link>
            <id>https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394</id>
            <summary type="text">தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யும் போது பொலிஸாரின் வாகனத்தினுள் சிவில் உடையில் இருந்த பெண்ணொருவர் அவற்றை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அதேவேளை வேலணை பகுதியில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் ஒலிபெருக்கி சாதனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் , உடுவில் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரும் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed53ff3-1f52-4967-b61a-5e84e5fb1cc6/26-6aada32bb1cd8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc8afbd-e25e-4504-9830-6ef1dea11c6d/26-6aada32c6718d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c24bdc-8ee2-4ed7-bffd-f8159f0fe151/26-6aada32d1c13a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b548af1-68db-4c95-abbe-276439cb91b7/26-6aada32dc5b7a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T20:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்களின் 48 மணி நேர போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253"></link>
            <id>https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253</id>
            <summary type="text">ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த தகவலை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e173b8e-71d2-49bd-9442-ee162df847ca/26-6aad9eb6dc910.webp' /></p><p>
</p><p>
குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், கடந்த காலங்களில் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அல்லது சதி நோக்கத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தமது சங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இந்த அடையாள வேலைநிறுத்தத்தின் பிரதான நோக்கம் எனவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், வேலைநிறுத்தம் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893"></link>
            <id>https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்று கூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.</p><p> 

சுதந்திர செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e160bc-ef45-42f3-8e2f-76044f2389e0/26-6aad9d4e6a5e7.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நொடியில் மாறிய ஹனிமூன் கனவு ; புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277"></link>
            <id>https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
</p><p>
திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூனை கொண்டாடுவதற்காக புதுமணத் தம்பதி டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><p></p><p>அங்கு உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த விடுதியில் விருந்தினர்களுக்காக பார்பிக்யூ (Barbecue) செய்து கொடுக்கும் வசதி இருந்துள்ளது.</p><p> இதையடுத்து சவுவிக் தாஸ் மற்றும் நிகிதா சாஹா ஆகியோர் பார்பிக்யூ தயாரிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57fb5682-7210-4039-b2e6-bc269a869924/26-6aad9ae759c00.webp' /></p><p>

அங்கு விடுதி ஊழியர் ஒருவர் அடுப்பில் பார்பிக்யூ தயாரித்துக் கொண்டிருந்த நிலையில், புதுமணத் தம்பதி அந்த அடுப்பிற்கு மிக அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதன்போது, அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்த திரவத்தை ஊழியர் ஒருவர் அடுப்பில் ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பிலிருந்து திடீரென தீப்பிழம்பு எழுந்துள்ளது.
</p><p>
அருகில் அமர்ந்திருந்த நிகிதா சாஹாவின் உடலில் அந்த தீ பற்றியதுடன், சில நொடிகளிலேயே அவரது உடல் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைக் கண்ட அவரது கணவர் சவுவிக் தாஸ், தனது மனைவியின் உடலில் பற்றிய தீயை அணைக்க உடனடியாக முயன்றுள்ளார். </p><p>அதேவேளை, அங்கிருந்த விடுதி ஊழியரும் தனது சட்டையை கழற்றி தீயை அணைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த சம்பவத்தில் நிகிதா சாஹாவுக்கு பாரிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
சம்பவம் தொடர்பாக சவுவிக் தாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின்படி, விடுதியில் தீயை அணைப்பதற்கான உரிய உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>மேலும், தீக்காயமடைந்த தனது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் விடுதி நிர்வாகத்தினர் போதிய உதவி வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a80d55f-efb3-4e77-b7c4-890f66dcf16a/26-6aad9ae80ffa4.webp' /></p><p>
</p><p>
சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்த பின்னரே மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, நிகிதாவை சிலிகுரி நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>சுமார் மூன்று மணி நேரம் நீடித்த அந்த பயணத்தின்போது, தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வலியில் அவர் துடித்துக் கொண்டிருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவரது உடலில் சுமார் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தனவா, தீயை ஏற்படுத்தியதாக கூறப்படும் திரவம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, விபத்துக்குப் பின்னர் அவசர மருத்துவ உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354"></link>
            <id>https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354</id>
            <summary type="text">சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ரஜமஹா விகாரையின் பினர மகா பெரஹரா நாளை (19) ஆம் திகதி இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0509e816-eb29-4e8b-b2f0-6f1a20680602/26-6aad83c3da204.webp' /></p><p>அதற்கமைய, பெரஹரா சிலாபம் - குருநாகல் வீதியில் பயணிக்கவுள்ளதால், அக்காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278</id>
            <summary type="text">தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da7c166c-b345-4d81-b440-42964f768e1c/26-6aad73d75ce7b.webp' /></p><p>தொடருந்து திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், தொடருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு உத்தரவிற்கான திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நீண்ட பரிசீலனைகளின் பின்னர் வாய்மொழிச் சமர்ப்பணங்களை முன்வைப்பது இன்று (18) நிறைவுற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49205dbf-e3dc-40e4-894a-44d258d1f7b2/26-6aad710e26d46.webp' /></p><p>இன்றைய தினம் மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் பதில் வாய்மொழிச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டன.</p><p> 

அதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> 

அதன் பின்னர், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற உத்தரவும் இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் தொடர்பான உத்தரவும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T16:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு ; இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226"></link>
            <id>https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ae1c6e-db96-414c-9196-b928f2d5e9c4/26-6aad640472f8e.webp' /></p><p> </p><p>

இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. </p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:17:14+00:00</updated>
        </entry>
    </feed>
