<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-20T15:26:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரை; நாசாவின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முட்டைக்கோஸ் மற்றும் வசாபி கடுகு கீரைகளை வெற்றிகரமாக விளைவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1c93d9-6e1b-46ff-bb84-ae0150792b4c/26-6a86e03dad1ce.webp' /></p><p>

இந்நிலையில், அந்த கீரைகளை இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் அனில் மேனன் சாப்பிடும் காணொளி தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி ; பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727"></link>
            <id>https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bfea72-258f-4485-81ea-1a06628f9647/26-6a86f620deda4.webp' /></p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை - பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
</p><p>
தாக்குதலுக்கு இலக்கான 04 வயதுடைய பெண் குழந்தையும் 07 வயதுடைய ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

இந்த தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்கும், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பின்னவலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயோத்தி ராமர் கோவிலின் பிரசாதம்; Amazon நிறுவனத்துக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-imposed-on-amazon-over-ayodhya-ram-prasad-1787226459"></link>
            <id>https://jvpnews.com/article/fine-imposed-on-amazon-over-ayodhya-ram-prasad-1787226459</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

'சந்து டிரேடிங் கம்பனி' எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீகாரி பிரதர்ஸ்' என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f657a7d-ee5b-4e6b-811d-fbe93046b558/26-6a86e95c9af9a.webp' /></p><p> </p><h2>நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா&nbsp;</h2><p>

நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகளின் விபரக் குறிப்புகளில் 'அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்' என்றும், 'ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்' என்றும் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இதனை உண்மை என நம்பி ஏராளமான நுகர்வோர்கள் கொள்வனவு கட்டளை செய்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இவை எதுவும் உண்மையான கோவில் பிரசாதங்கள் அல்ல என்பது விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்தது.</p><p> இதனையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அமேசன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.

அதோடு, "நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே எனக் கூறிக்கொண்டு இவ்வாறான தவறான விற்பனைப் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது" எனவும் அமேசன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு' அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T13:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்! கொதித்தெழுந்த பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636"></link>
            <id>https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>
குறித்த பயணி அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரப் பயணத்துக்காக ஆசனங்களை முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7604fbc-3de7-4bef-b921-4076c1fb39a7/26-6a86edf694527.webp' /></p><h2>&nbsp;பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தல்</h2><p>

 எனினும், நள்ளிரவு 2.00 மணியளவில் கெப்பிட்டிகொல்லாவ அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு , பொலிஸார் சோதனையிட்ட போது, "திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறுமாறு" பேருந்தில் இருந்த&nbsp; பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p> 

 பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பேருந்துக்கு உரிய வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து பொலிஸார் அப்பேருந்தை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைத்து, பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p><p>

இறுதியில் மற்றுமொரு பேருந்து மூலம் பயணிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், போதிய ஆசனங்கள் இன்மையால் பயணிகள் சிலர் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த பயணி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>&nbsp;பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களின் அலட்சியப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பயணிகளின் அவசரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்தை இயக்கியமை மிகப்பெரிய தவறாகும் என&nbsp; பயணி&nbsp; சாடியுள்ளார்.</p><p>

அதேவேளை, சட்டப்படி தலையிட்டு நள்ளிரவில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் செயலை அவர் பாராட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜகிரிய பகுதியில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691</id>
            <summary type="text">&amp;nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், குறித்த அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2da605a-214e-4e5f-8c91-26760d53848d/26-6a86fdccd967b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T13:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் பியூமி ஹன்சமாலிக்கு தொடர்பு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428"></link>
            <id>https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி ஹன்சமாலி கடுமையாக மறுத்துள்ளார்.
</p><p>


தாம் இலங்கையில் இல்லாத நிலையில், சில முகநூல் பக்கங்கள் தம்மை தொடர்புபடுத்தி போலியான செய்திகளைப் பரப்புவதை அறிந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d71969d-00b5-4cc6-9db8-fb7a28bfd02e/26-6a86f8ddb0af5.webp' /></p><p></p><h2>ஷிரான் பாசிக்&nbsp; யார் என்றே&nbsp; தெரியாது...&nbsp;</h2><p>
</p><p>


ஷிரான் பாசிக் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள பியூமி ஹன்சமாலி, டுபாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கெஹெல்பத்தர பத்மேவை மாத்திரமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தான் உழைத்த பணமே தன்னிடம் இருப்பதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் ஊடாகவே முன்னேறியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், போதைப்பொருள் அல்லது கருப்புப் பணம் தனக்குத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மேலும், தன்னைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் பியூமி ஹன்சமாலி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T12:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் ; சூடாகி கனிமொழி கூறிய பதில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.</p><p> 

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம், தவெக தரப்பு முன்வைக்கும் இந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec890fd-3f55-44d4-94bd-a514cfb6b05f/26-6a86cb13b1400.webp' /></p><h2>&nbsp;தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இதற்கு பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் எந்த குறிக்கோளும் இல்லை என்றார்.</p><p></p><p> 
 
மேலும், கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோது, ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்பே மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p> 
தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெளியாகும் போது காங்கிரஸ் தரப்புதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

இன்னிலையில் கனிமொழியின் இந்த பதில் தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்தான விவாதங்களை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T12:31:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் தாயும் , சிறுமியும் சாரதியும் பலி; ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-child-and-driver-killed-in-accident-1787225641"></link>
            <id>https://jvpnews.com/article/mother-child-and-driver-killed-in-accident-1787225641</id>
            <summary type="text">&amp;nbsp;தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>பியகம பகுதியில் இருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, திடீரென வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஐவர் படுகாயமடைந்து&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐவர் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 39 வயதுடைய பெண்ணும் 7 வயதுடைய சிறுமியும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T11:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் – இணுவில் மதுபானசாலை மூட கோரி போராட்டம்; வீதிக்கு இறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-demanding-the-closure-inuvil-liquor-shop-1787223262"></link>
            <id>https://jvpnews.com/article/protest-demanding-the-closure-inuvil-liquor-shop-1787223262</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20) வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe68f0f8-b7eb-4412-abf8-c257bf30f689/26-6a86dcdfa353a.webp' /></p><h2>கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்</h2><p>
</p><p>
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, கிராமத்தில் மதுபானப் பாவனை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p>
</p><p>பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன் மதுபான சாலையை அகற்றுமாறு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T10:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர் தலைமையிலான குழு செம்மணி அகழ்வாய்வு களத்தை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e887b541-9a1a-4bd3-a7be-2bf9e6feab02/26-6a86a0f44ebfa.webp' /></p><p></p><h2>அனுமதி கிடைக்க காலதாமதம்</h2><p>
</p><p>
அதன் போது அவர்களிடம், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள், நீதிமன்ற அனுமதியினை கோரிய வேளை, தாம் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்ட நிலையில் , எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நங்கள் இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு , செல்வதற்கு முயற்சி செய்தோம் என கனடா நாட்டின் தூதுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

அதன் போது அங்கிருந்த சட்டத்தரணிகள் , செம்மணி அகழ்வாய்வு தளத்தை பார்வையிடுவதற்கு , அனுமதி கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்து , நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டாலே பார்வையிட முடியும் என எடுத்து கூறினார்கள்.</p><p></p><p>
</p><p>
அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T10:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொம்பனித் தெரு ஆலயத்தில் களவாடப்பட்ட நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jewelry-stolen-company-street-murugan-temple-1787221619"></link>
            <id>https://jvpnews.com/article/jewelry-stolen-company-street-murugan-temple-1787221619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும், ஆலய தர்மகர்த்தாக்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும், ஆலய தர்மகர்த்தாக்களின் நிதி உதவியின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஆலய தர்மகர்த்தாக்கள் இருவரும் தலா 12.4 மில்லியன் ரூபா தனிப்பட்ட நிதி நன்கொடை வழங்கியதையடுத்து, , அடகு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569e86c0-b1f4-47e6-8fff-d74a38b5deb5/26-6a86d67563a0e.webp' /></p><p></p><h2>&nbsp;வெளிநாடு செல்ல நீதவான் தடை உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
ஆலயத்தில் கடமையாற்றிய பிரதான குருக்கள் நகைப் பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

 தான் திருடிய நகைகளை, கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வங்கி மற்றும் அடகு நிலையங்கள் என மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் அடகுவைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
</p><p>

கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின்போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே நகை திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது. 

அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

 இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான பிரதான குருக்கள், வெளிநாடு செல்ல நீதவான் தடை உத்தரவு பிறப்பித்தார். </p><p>

அத்தோடு, சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T10:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/contraband-thrown-into-the-prison-1787220109"></link>
            <id>https://jvpnews.com/article/contraband-thrown-into-the-prison-1787220109</id>
            <summary type="text">&amp;nbsp; மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வீசப்பட்ட பொதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85bb0ff3-be51-49b9-939a-6900e4b66881/26-6a86d08f0bcb1.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T09:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டித்த பாடசாலை அதிபர்; வீடு தேடிச்சென்று மாணவன் அரங்கேற்றிய கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-murders-his-school-principal-for-money-1787216486"></link>
            <id>https://jvpnews.com/article/student-murders-his-school-principal-for-money-1787216486</id>
            <summary type="text">பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை பத்தாம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தெலுங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை பத்தாம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>

தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் பாடசாலை அதிபராக இருந்தவர் ரூபா ரெட்டி. இவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c083424-1d33-4c28-a605-1f39a8707d32/26-6a86c26826621.webp' /></p><h2>&nbsp;பணம் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர்</h2><p>

போலீசார் நடத்திய சோதனையில் கடைசியாக ரூபா தனது அத்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். பேசி முடிக்கும் போது யாரையோ பாபு என அழைத்து விட்டு போனை கட் செய்திருக்கிறார். </p><p>

எனவே, தனது பாடசாலையில் படிக்கும் மாணவனைத்தான் அவர் அப்படி அழைத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் மாணவர்களை அவர்கள் கண்காணித்தபோதுதான் அதில் இரண்டு பேர் பார்களுக்கு செல்வது, பப்களுக்கு செல்வது, பணத்தை அதிகமாக செலவு செய்து என இருந்து வந்தனர்.

 சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.</p><p> அப்போதுதான் அவர்கள் இருவரும் சேர்ந்து பள்ளி முதல்வரை கொலை செய்தது தெரிய வந்தது.

அதில் ஒரு சிறுவன் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது செல்போன் மற்றும் பணம் கையில் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர், சிறுவனை ஹாஸ்டலில் இருந்து நீக்கிவிட்டார்.</p><p></p><p> </p><p>

இந்த கோபத்தில் ரூபா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த சிறுவன் அவரின் வீட்டு சுவர் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். ஒரு மாணவர் வெளியே காத்திருந்தார்.
</p><p>
அந்த சிறுவனை பார்த்துதான் ரூபா ‘பாபு’ என அழைத்திருக்கிறார். அப்போது எடுத்துச் சென்ற கத்தியால் ரூபாவை சிறுவன் 27 முறை குத்தியதில் அவர் அங்கேயே மரணமடைந்தார்.
தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:30:46+00:00</updated>
        </entry>
    </feed>
