<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T21:52:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494"></link>
            <id>https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494</id>
            <summary type="text">&amp;nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
</p><p style="text-align: justify; ">


இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் இங்கு சுட்டிக் காட்டினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed0a312-658d-4c0a-ad5e-e24da7dbe08c/26-6a6d10500942a.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட கவனம்</h2><p style="text-align: justify; ">



அந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும், நிர்வாகத் துறையில் அது குறித்த ஒரு கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
</p><p style="text-align: justify; ">


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலில் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ec6309-96b3-4b89-97a0-350b72c6b7e9/26-6a6d1050b6806.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் பொது நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு என்பவற்றுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகள் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
</p><p style="text-align: justify; ">


அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக வழங்கக்கூடிய சேவைகள் குறித்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



அம்பாறை, மட்டக்களப்பு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்ட செயலக வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் களுத்துறை, பிடபெத்தர, அகுணுகொலபெலஸ்ஸ, இரத்மலானை, கோட்டை மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


நாடு முழுவதும் தற்போது 2,000க்கும் அதிகமான குறைவான பயன்பாட்டில் உள்ள கட்டிட நிர்மாணப் பணிகள் காணப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய அனைத்து நிர்மாணங்களின் தேவைகள் குறித்தும் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அவசியமான நிர்மாணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் கீழ் அரசாங்க நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கொழும்பு பெருநகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. </p><p style="text-align: justify; ">2015 ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைப் பிரதேசத்திற்கு உரிய ஒட்டுமொத்த வடிகாலமைப்புக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் 1927 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கடன் அபிவிருத்தி நிதியம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய கிராமிய சிறு பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்களின் இந்த வருடத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், கிராமிய சிறு பாலங்களின் அபிவிருத்திக்காக 2026/2029 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்கு 6,793 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் 29% முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> இத்திட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கிராமிய பாலங்களின் நிர்மாணத் திட்டங்களை மிகவும் பயனுள்ள வகையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது 750,000 அளவிலானோர் ஓய்வூதிய உரிமையைப் பெற்று வருவதாகவும் இங்கு தெரவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


அமைச்சர்களால் உத்தியோகபூர்வ வதிவிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பங்களாக்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக ஈடுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் முன்னேற்றத்தினையும் ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த வளங்களிலிருந்து முறையான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வருமானம் ஈட்டல் பணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "> ஏனைய பொது சேவைகளின் போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மேலும் முறைமைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான பொது வசதிகளை வழங்குதல் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சியினை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-31T21:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439</id>
            <summary type="text">&amp;nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc44a930-84a9-4bee-8155-0cdc9f326bd3/26-6a6d08490ae52.webp' /></p><h2 style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து</h2><p style="text-align: justify; ">



மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என்றார்.</p><p style="text-align: justify; ">



மேலும், எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகளுக்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T20:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு உள்ளான ஒருவர் பலி ; வைத்தியசாலையில் ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609"></link>
            <id>https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609</id>
            <summary type="text">லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>நேற்று&nbsp; காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a9ae1-8b66-46dd-852a-5e3faaea7906/26-6a6cf182a0b5e.webp' /></p><p> </p><p>

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997"></link>
            <id>https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997</id>
            <summary type="text">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e3f867-a2c4-4179-bcf0-43a8b6f67b67/26-6a6ceb36857be.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்டவிரோதச் சொத்துக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வேறு இடங்களில் கைதான இளைஞர்கள் ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440</id>
            <summary type="text">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் &#039;ஐஸ்&#039; போதைப்பொருட்களுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">யடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa89353d-7230-4640-8f26-1993b834506f/26-6a6ce5228d618.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது 100 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தூல்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">&nbsp;கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தம்பவின்ன பகுதியில் மேற்கொண்ட வீதிச் சோதனையின் போது, 130 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் வசமாக பிடிபட்ட இருவர் ; வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416"></link>
            <id>https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416</id>
            <summary type="text">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb928892-167f-400a-9433-6dfa9441544d/26-6a6cd951d7229.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T17:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-appeal-issued-to-sri-lankans-1785516972"></link>
            <id>https://jvpnews.com/article/important-appeal-issued-to-sri-lankans-1785516972</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, தற்போது பல மாவட்டங்களில் கணிசமான நீர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75918e20-0236-4985-b4bd-7d1e0fa5a3a8/26-6a6cd3ade502b.webp' /></p><h2 style="text-align: justify; "> நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு</h2><p style="text-align: justify; "> 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 40 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "> 

வரவிருக்கும் ஓகஸ்ட் மாதம் மற்றும் தற்போது நிலவும் 'எல் நினோ' நிலைமையினால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் ஆவியாகி கணிசமான அளவு இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பணிப்பாளர், மீண்டும் மழை பெய்யும் வரை நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை மிகவும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, நீர் வீணாகாமல் பயன்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய வறட்சியான வானிலையை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்றும் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T16:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pujith-and-hemasiri-fernando-taken-to-prison-1785514750"></link>
            <id>https://jvpnews.com/article/pujith-and-hemasiri-fernando-taken-to-prison-1785514750</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் இன்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f996fb8-2f40-4383-8324-f675aae6a94e/26-6a6ccb344f99a.webp' /></p><p style="text-align: justify;">

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-31T16:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கணிசமாக உயர்ந்த பணவீக்கம் ; புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inflation-sees-significant-increase-1785512855"></link>
            <id>https://jvpnews.com/article/inflation-sees-significant-increase-1785512855</id>
            <summary type="text">கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இது 2026 ஜூன் மாதத்தில் பதிவான 6.8% உடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதப் புள்ளிகள் உயர்வாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2229688f-8375-41d7-aa67-c837cbf0cffe/26-6a6cc399a923a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
அதேபோல், உணவுப் பணவீக்கமானது ஜூன் மாதத்தில் 3.6% ஆக இருந்து ஜூலை மாதத்தில் 6.3% ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இருப்பினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமானது ஜூன் மாதத்தில் 8.4% ஆக இருந்து ஜூலை மாதத்தில் 7.8% ஆகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T16:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-southern-sri-lanka-1785513295"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-southern-sri-lanka-1785513295</id>
            <summary type="text">மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dd0c6b-cc43-40aa-a65f-154e8b0d6854/26-6a6cc550d12e9.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இத்துப்பாக்கிச் சூட்டிற்கு 'ரிவோல்வர்' (Revolver) ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.</p><p></p><p> </p><p>

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:54:58+00:00</updated>
        </entry>
    </feed>
