<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T23:35:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6c4ad8-27a0-43b0-b7bf-d6fdcb7498b9/26-6aab1ec71e5a1.webp' /></p><p>

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T23:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246"></link>
            <id>https://jvpnews.com/article/vimal-weerawansa-questions-vasantha-samarasinghe-1789598246</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகநபர்கள் என அரசாங்கம் விமர்சித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் நின்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பிணையில் உள்ளவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என அரசாங்கம் சித்தரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb49ddd-af63-4fd2-965d-e4a7c0cb2496/26-6aab1a2755d75.webp' /></p><p>அதேவேளை, அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலையில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகநபரா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்தார்.
</p><p>
தங்களுக்கு அரசியல் ரீதியாக சவால் விடுக்கக்கூடியவர்களை பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையில் அடைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.</p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையதாகத் தாம் கூறும் ‘கிரிப்டோகரன்சி சொத்துக்கள்’ மற்றும் ‘மூன்று மாடி வீடுகள்’ தொடர்பிலும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><p>

விமல் வீரவன்ச முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் கருத்துக்களாகும். அவை தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பிலான பதில் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு தீப்பெட்டியால் நேர்ந்த கொடூரம் ; இளைஞர் கத்தியால் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027"></link>
            <id>https://jvpnews.com/article/horror-sparked-by-matchbox-youth-stabbed-to-death-1789597027</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் டெல்லியின் கேசவ்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த புவனி (30) என்பவர் தனது நண்பரான ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b803b2-5e39-481d-bd7f-04cd760a60d6/26-6aab15655859c.webp' /></p><p>இதன்போது, மதுபானக் கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்காக புவனியிடம் தீப்பெட்டி கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புவனி தீப்பெட்டியை வழங்க மறுத்துள்ளார்.</p><p>இதனால் அவருக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராம் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
</p><p>
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புவனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
</p><p>
விசாரணையின் அடிப்படையில் நரேஷ், தருன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். துன்னாலை வாள்வெட்டு சம்பவம் ; வெளியான புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-thunnalai-sword-attack-incident-new-twist-1789596421</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஜெயசீலன் ஜெனஜதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 9ஆம் திகதி இரவு பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p> இந்தக் கொலை, துன்னாலை தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையிலான நீண்டகால மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad17ff0-e578-445f-be67-fd007da9fe2b/26-6aab130764530.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி நேற்று பருத்தித்துறை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p>
அவரை இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
CCTV காட்சிகளின் அடிப்படையில், நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இருவர் வாள்களுடன் இறங்கி தாக்குதல் நடத்தியமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கம் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018</id>
            <summary type="text">இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.</p><h3>பொலிஸார் தீவிர விசாரணை</h3><p>

இதன்போது, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b72d6e9-528b-4ec5-8bf4-c92498e7bdc6/26-6aaad6dc53213.webp' /></p><p>

நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த தகவலை மறைத்து குறித்த இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதைத் தொடர்ந்து, நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. </p><p>தொடர்ந்து கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>
</p><h3>மேலதிக சிகிச்சை</h3><p>இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>எனினும், அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ ஆலோசனையின்றி இளம்பெண்ணுக்கு மருந்து வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நாகசாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524</id>
            <summary type="text">பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1a0d37-25a6-452a-a064-83e393481bb6/26-6aaae48e20d43.webp' /></p><p>மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355</id>
            <summary type="text">கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.முதலாம் இணைப்பு&amp;nbsp;விபத்து இடம்பெற்ற இடத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><h4>முதலாம் இணைப்பு&nbsp;</h4><p>விபத்து இடம்பெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து அகற்றி, சம்பவ இடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0fde52-b93d-4e36-89b9-ef6d5e1efbe0/26-6aaae1edc672f.webp' /></p><p>விபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் வாகனத்தை தாக்கி தீ வைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p>

விபத்தில் படுகாயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/025d002f-7d4c-4453-a06b-62a0368805c6/26-6aaacad1ef725.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01202cc-e0fb-49a1-a3d8-c6d5553e236e/26-6aaacad2aad4d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f876a3ce-3ac3-4ea7-9c6f-20ee660ee26a/26-6aaacad360cbe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09ba8a2-42c0-4189-a1c0-fdc6d7abedde/26-6aaae1ed1acaf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382f8518-7d74-4167-8aef-58b4c24503f4/26-6aaae1ec619af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T18:37:46+00:00</updated>
        </entry>
    </feed>
