<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T19:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம் ; நீதிமன்றத்தில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80680f2-942d-4b37-9acd-ba933caaa070/26-6a68f611c3992.webp' /></p><p>

இதனிடையே, குறித்த பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் தங்களது அலுவலக வருகையை பதிவு செய்த பின்னர், கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் பயணத்தை இலகுபடுத்த புதிய போக்குவரத்து நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357"></link>
            <id>https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், அத்துடன் டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6fe76b-8774-467c-ba3b-631b67e7a794/26-6a68ed325dcb6.webp' /></p><p>மேலும், தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் ; புதிய நடைமுறை ஒக்டோபரில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341"></link>
            <id>https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341</id>
            <summary type="text">காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d4ef6f9-b3a0-4695-9551-e2c029e1d495/26-6a68e937109c9.webp' /></p><p>அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்துவது அவசியமானது சுட்டிக்காட்டிய அவர், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>
 

டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
</p><p>
 

வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக எவரது வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

 

LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் (Online) சமர்ப்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
</p><p>
 

புதிய நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இறையாண்மை கடன் தரவரிசையில் மாற்றமில்லை ; S&amp;P உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-change-in-sri-lanka-s-sovereign-credit-rating-1785259659"></link>
            <id>https://jvpnews.com/article/no-change-in-sri-lanka-s-sovereign-credit-rating-1785259659</id>
            <summary type="text">இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை &#039;CCC+/C&#039; ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&amp;am...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை 'CCC+/C' ஆக எஸ்டி அண்ட் பீ குளோபல் ரேட்டிங்ஸ் (S&amp;P Global Ratings) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னோக்கிய 6 முதல் 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி ஒருங்கிணைப்பிற்கும் ஆதரவளிக்கும் நிலைமைகள் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக S&amp;P குறிப்பிட்டுள்ளது.
</p><p>
 

இருப்பினும், வெளிவாரி தேவை அழுத்தங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் சவாலான நிதியளிப்பு நிலைமைகள் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்கள் தொடர்ந்து நிலவுவதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0237d9-7821-4169-8ab8-edf9029ab8f6/26-6a68e68ceccb7.webp' /></p><p>இதேவேளை, நாட்டின் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மற்றும் வெளிநாட்டு நாணயமாக மாற்றுவது தொடர்பான அபாய மதிப்பீட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் Transfer and Convertibility Assessment தரவரிசையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக உயர்த்தியுள்ளது.
</p><p>
 

'CCC+' கடன் தரவரிசையானது இலங்கையின் கடன் நிலைமை மேலும் அபாயகரமான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன், நாட்டின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் சாதகமான பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என்றும் S&amp;P தெரிவிக்கிறது.
</p><p>
 

இருப்பினும், இலங்கை அரசாங்கம் அண்மைய காலத்தில் உடனடி நிதி அல்லது கொடுப்பனவு நெருக்கடியைச் சந்திக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

 

இலங்கையின் உயர் பொதுக் கடன் சுமை தொடர்ந்து பிரதான சவாலாக இருப்பதுடன், அரசாங்கத்தின் வட்டிப் கொடுப்பனவுகள் அரசாங்க வருவாயில் சுமார் 45 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிவாரி அழுத்தங்கள் காரணமாக இலங்கையின் வெளிவாரி மற்றும் நிதிச் சமநிலைகளில் தற்காலிக அழுத்தம் ஏற்பட்டதாகவும் S&amp;P சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 

இருப்பினும், உத்தியோகபூர்வ நிதி உதவிகள், தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் காரணமாக இலங்கைக்கு தனது நிதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், நிதி மற்றும் வெளிவாரி நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என S&amp;P எதிர்பார்க்கிறது.
</p><p>
 

எனினும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட பலவீனமான நிதி அல்லது வெளிவாரி செயற்பாடுகள் அல்லது புதிய நிதி மற்றும் பணப்புழக்க அழுத்தங்கள் ஏற்பட்டால், இலங்கையின் கடன் தரவரிசையைக் குறைக்கக்கூடும் என S&amp;P Global Ratings எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-ratmalanai-saima-arrested-in-malaysia-1785259085"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-ratmalanai-saima-arrested-in-malaysia-1785259085</id>
            <summary type="text">பாதாள உலக குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படும் &quot;ரத்மலான சைமா&quot; என்ற போதைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படும் "ரத்மலான சைமா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர், மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>மலேசிய காவல்துறையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de3a73c-e23e-4b45-a2aa-38f4cab56c52/26-6a68e44f68247.webp' /></p><p>இதற்கிடையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை வழிநடத்தி வருவதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக, சர்வதேச குற்றப் புலனாய்வு அமைப்பான இன்டர்போல் ஏற்கனவே சிவப்பு அறிவிப்பை (Red Notice) வெளியிட்டுள்ளது.
</p><p>
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான், வெளிநாடுகளில் இருந்து தனது குற்றவியல் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல், பணப்பரிவர்த்தனை மற்றும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஒருங்கிணைத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில், அவரது முக்கிய கூட்டாளிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நிதி வலையமைப்புடன் தொடர்புடையவர்களை இலக்காகக் கொண்டு இலங்கை மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இணைந்து பல்வேறு விசேட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.</p><p>

மலேசியாவில் இடம்பெற்றுள்ள இந்தக் கைது, கஞ்சிபானி இம்ரானின் சர்வதேச குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என பாதுகாப்பு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-of-tourists-sri-lanka-crossed-1-3-million-1785257099"></link>
            <id>https://jvpnews.com/article/number-of-tourists-sri-lanka-crossed-1-3-million-1785257099</id>
            <summary type="text">ஜனவரி மாதம் தொடக்கம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி மாதம் தொடக்கம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,313,974 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 167,401 என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fc3384-3183-4a77-b45a-605f3b57d3d0/26-6a68dc8d9a55c.webp' /></p><p>ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,785 ஆகும்.
</p><p>
 

இரண்டாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,419 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நெதர்லாந்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 10,540 ஆகும்.
</p><p>
 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.
</p><p>
 

மேலும், இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு பெருமை; சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706</id>
            <summary type="text">எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்கள் தற்போது STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
</p><p>
இத்திட்டத்தின் ஒரு விசேட நிகழ்வாக, மிகவும் கடுமையான தேர்வு முறைக்குப் பிறகு, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Gunawardena) 'ShakthiSAT International Mission' சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aeb262-d3e4-4a34-84a8-7002de96a41b/26-6a68b00bb531e.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள்</h2><p>
</p><p>
இந்த அதிகாரப்பூர்வத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்த பல்கலைக்கழகத்தில் (Gautam Buddha University) நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயணம் ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமரும் இந்தியக் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பிரதிநிதியாகச் செனீசாவும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-train-passengers-1785256190"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-train-passengers-1785256190</id>
            <summary type="text">களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல - நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனிவெளி வீதியில் ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாவல - நாரஹேன்பிட்டி ரயில் கடவையை மூடுவது குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

 

நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள நாவல - நாரஹேன்பிட்டி வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d2bda7-4f45-4800-b393-af86003f5fbd/26-6a68d8ff88339.webp' /></p><p>

 

இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை களனிவெளி பாதையில் கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடை ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது.
</p><p>
 

மேலும், அன்றைய தினம் பிற்பகலிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் ரயில் இயங்கும் நேரங்கள் குறித்தும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை சூரியனை உருவாக்கி சீனா வரலாற்று சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/china-achieves-a-historic-creating-artificial-sun-1785244095"></link>
            <id>https://jvpnews.com/article/china-achieves-a-historic-creating-artificial-sun-1785244095</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 
சுத்தமான மற்றும் எல்லையற்ற ஆற்றலை உருவாக்கும் அணுக்கரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. </p><p>
சுத்தமான மற்றும் எல்லையற்ற ஆற்றலை உருவாக்கும் அணுக்கரு இணைவு திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய அதிவிம்மின் கடத்துத்திறன் கொண்ட காந்தத்தை சீனா வெற்றிகரமாக தயாரித்து சோதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6ac7d9-373e-4202-9558-56cf531e9fca/26-6a68a9c17b8e7.webp' /></p><h2>உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்ற&nbsp;சாதனை</h2><p> 

சுமார் 2030 ஆம் ஆண்டுக்குள் இணைவு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இலக்கை நோக்கி சீனா உறுதியாக முன்னேறி வருகிறது.
</p><p> 
சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான டி- வடிவ காந்தம், 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 டன் எடையும் கொண்டது.</p><p></p><p> 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமுடைய பிளாஸ்மாவை கட்டுப்படுத்த இந்த சக்திவாய்ந்த காந்தம் பயன்படுகிறது. 

இந்தத் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க உள்நாட்டுப் பொருட்களையே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p> 
இதன் மூலம் உலக நாடுகளுக்கு மத்தியில் தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் சீனா முன்னிலை வகிக்கிறது. 

எதிர்காலத்தில் எல்லையற்ற மின்சாரத்தைப் பெறும் நோக்கில் சீனாவின் இந்தச் சாதனை உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண அனுமன் சிலை இந்தியாவிற்கு விற்பனை; கம்பி எண்ணும் மோசடியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-hanuman-statue-sold-to-india-scammers-1785243605"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-hanuman-statue-sold-to-india-scammers-1785243605</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விலைமதிப்பற்ற உலோக அனுமன் சிலையை இந்தியாவிற்கு விற்பதாகக் கூறி, கோடிக்கணக்கான மோசடி செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்களைக் காவலில் வைக்க க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விலைமதிப்பற்ற உலோக அனுமன் சிலையை இந்தியாவிற்கு விற்பதாகக் கூறி, கோடிக்கணக்கான மோசடி செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்களைக் காவலில் வைக்க கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
தலபத்கொடை சுதுஹகூருவைச் சேர்ந்த ஜயந்த பண்டார அதுகொரல மற்றும் லயனல் ரணவீர ஆகியோரே இவ்வாறு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe21314-8c73-4b08-851d-21c40487e56f/26-6a68a7d7b2d1f.webp' /></p><h2>பிரதி அமைச்சர் சுனில் வடகலவின் பெயரைச் சேர்த்து மோசடி</h2><p>
</p><p>
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வடகலவின் பெயரைச் சேர்த்து இந்த மோசடி செய்யப்பட்டதாக சந்தேக நபர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
போரின் போது கண்டெடுக்கப்பட்ட மதிப்புமிக்க அனுமன் சிலை, 2016-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறி, வாட்ஸ்அப் சமூக ஊடகம் வழியாக காணொளிகளையும் படங்களையும் அனுப்பி சந்தேக நபர்கள் பண மோசடி செய்ய முயன்றதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 

அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு காணொளிக் காட்சியில் காட்டப்பட்டபடி, முதல் சந்தேக நபர் புகார்தாரரின் பெயரைப் பயன்படுத்தி அந்தப் பழம்பொருளை விற்றுப் பணம் திரட்ட முயன்றார் என்றும், அவர் மற்றொரு நபருக்குத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இரண்டாவது சந்தேக நபர் இந்த செயலுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதே அநுர அரசின் திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sending-rajapaksas-to-prison-plan-npp-govent-1785242943"></link>
            <id>https://jvpnews.com/article/sending-rajapaksas-to-prison-plan-npp-govent-1785242943</id>
            <summary type="text">&amp;nbsp; ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதே அநுர அரசின் திட்டம் முன்னஆல் ஜனதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதலவர் நாமல் ராகஜபக்ச கூறியுள்ளார்.


சிறிலங்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ராஜபக்சக்களை சிறைக்கு அனுப்புவதே அநுர அரசின் திட்டம் முன்னஆல் ஜனதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதலவர் நாமல் ராகஜபக்ச கூறியுள்ளார்.</p><p>


சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தி அவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed753d78-6d8e-4e26-9eef-36cf03734d52/26-6a68a5412f80f.webp' /></p><p>
</p><p>

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ரயிலில் இலங்கை தமிழ் இளைஞர் அட்டகாசம்; கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7c3b30-a2fb-41d8-9ab7-bfcfd5d003ad/26-6a688d4d87e99.webp' /></p><p></p><h2>&nbsp;கொடூரமான தாக்குதலை நடத்திய&nbsp;சரணீஸ் சிவகுமார்</h2><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.
</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T13:33:46+00:00</updated>
        </entry>
    </feed>
