<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-07T04:47:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய மெகசின் சிறையில் மோதல் ; 11 கைதிகள் காயம் ; உறவினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601"></link>
            <id>https://jvpnews.com/article/11-inmates-injured-in-new-magazine-prison-clash-1786077601</id>
            <summary type="text">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1f122-2c73-497a-b8ea-4368840d3a3c/26-6a7561a2d9fd6.webp' /></p><h2 style="text-align: justify;">சிறைச்சாலை பாதுகாப்பு</h2><p> </p><p style="text-align: justify;">

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify;">

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify;">

இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T04:39:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை ; இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199"></link>
            <id>https://jvpnews.com/article/guruvita-prison-faces-tense-situation-1786077199</id>
            <summary type="text">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e986c191-4c47-409b-b4b1-ca8fbbd09fea/26-6a756010d742f.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இந்த நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"> 

இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p style="text-align: justify;">

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T04:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளத்தொடர்பு சந்தேகம் ; மனைவியின் தொடர்பை அறிந்த கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409</id>
            <summary type="text">இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற தொழிலதிபர், தனது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதியான முகேஷ் யாதவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தொடர்பை மனைவியின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d62bea-8dea-4361-b870-02135383bf03/26-6a74ef9bf3c3f.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் மனைவியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, ராஜேந்திர பிரசாத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>காவல்துறை தகவல்களின்படி, அவர் மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாக கவிதா சர்மா கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில் கவிதாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ உதவியை நாடி, அதை இயற்கையான மரணம் போன்று காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, கவிதாவின் தொலைபேசி தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன.</p><p>மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், இதையடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9fc2c55-59c2-422e-94ba-9dac31d16d5d/26-6a74ef9b4e213.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் சாரதி முகேஷ் யாதவிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:44:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; வாழ்வில் வெற்றியடையக்கூடிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500"></link>
            <id>https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சக்திவாய்ந்த பல ராஜயோகங்கள் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, 'மகாலட்சுமி ராஜயோகம்' என்பது மிகவும் மங்களகரமான கிரக அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797b282-4ec5-4519-9908-94938ed9d546/26-6a751706d738c.webp' /></p><p>இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ஆதாயம், தொழில் முன்னேற்றம், அங்கீகாரம் மற்றும் வெற்றியைத் தரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb7bd-b370-4929-8f65-63be5a0a109f/26-6a7517063562b.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, அவர்களின் சொந்த ராசியில் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இதனால் அவர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் வணிக முன்னேற்றத்தைக் கொண்டுவரும். இந்த யோகத்தால் அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd53617-d9f0-42e0-8fe1-74108cfd9177/26-6a751707862ad.webp' /></p><h3>கன்னி</h3><p>
கன்னி ராசிக்காரர்கள் இந்த சக்திவாய்ந்த கிரக அமைப்பின் மூலம் வலுவான நிதி நிலை மற்றும் புதிய வருமான வழிகளைப் பெறக்கூடும். இந்த யோகத்தால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.&nbsp;இந்த மகாலட்சுமி யோகம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் பொன்னான வாய்ப்புகளைத் தரும், மேலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d912a07c-704c-4f72-88a7-1b5765335e90/26-6a7517083558c.webp' /></p><h3>மகரம்
</h3><p>மகர ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமி ராஜயோகம் நிதி ஆதாயங்களையும் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f92e41b-eba1-44d5-92b4-1b1dd949eb41/26-6a751708dbb11.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T23:22:02+00:00</updated>
        </entry>
    </feed>
