<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T06:57:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது துப்பாகிச்சூடு; 20 வயதுடைய இளைஞர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weeraketiya-house-gun-fired-youth-injured-1786690047"></link>
            <id>https://jvpnews.com/article/weeraketiya-house-gun-fired-youth-injured-1786690047</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அம்பாந்தோட்டை வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அம்பாந்தோட்டை வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
காயமடைந்த நபர் உடனடியாக வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8962e28-d864-49cf-9a83-c083d0ff5416/26-6a7eba0196280.webp' /></p><p> </p><p> 

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வீரகெட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை பகிர்ந்த நபர் ; செய்த மோசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-nude-photography-whatsapp-man-arrest-1786689100"></link>
            <id>https://jvpnews.com/article/woman-nude-photography-whatsapp-man-arrest-1786689100</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வட்ஸ்அப் ஊடாகப் பகிர்ந்த சந்தேகநபர் ஒருவர் ஆணமடுவை பொலிஸ் பிரிவில் வைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வட்ஸ்அப் ஊடாகப் பகிர்ந்த சந்தேகநபர் ஒருவர் ஆணமடுவை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, அப்பிரிவின் அதிகாரி குழுவினால் நேற்று (13) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693f202e-3c58-4680-8435-f2c596d4b84d/26-6a7eb64d93d55.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் மாம்பூரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spider-woman-hopped-around-selling-drugs-ampara-1786688540"></link>
            <id>https://jvpnews.com/article/spider-woman-hopped-around-selling-drugs-ampara-1786688540</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
40 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், நீண்டகாலமாக 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266e3257-d928-4b2b-aaf6-76528d4d24fc/26-6a7eb41ddb258.webp' /></p><h2>&nbsp;மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர்&nbsp;</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்ய முற்பட்டபோது, மாடிகளிலிருந்து தொடர்ச்சியாகக் குதித்ததன் காரணமாக பெண்ணின் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணை போதைப்பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T06:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599"></link>
            <id>https://jvpnews.com/article/ishara-sewwandi-transferred-prison-1786682599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றின் திறந்த நீதிமன்றக் கூண்டிற்குள் வைத்து, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5169610d-f830-488e-8fa7-e2b5b030ab70/26-6a7eacb9b8bd6.webp' /></p><p>

இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த அவரை, விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று கைது செய்து நாட்டிற்கு அழைத்து வந்தது. </p><p>

அதன் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T05:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி; சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்கிக்கொண்ட பிரிட்டிஷ்-இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரிட்டிஷ் ஊடகங்களின் தகவல்படி, நீரில் சிக்கிக்கொண்ட மூவருக்கு உதவ அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயதுடைய அந்த இளைஞர் கடலிலிருந்து மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e822b1-a1c3-4ac1-98c4-0ba5277af7ec/26-6a7eac812bf1d.webp' /></p><h2>லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்&nbsp;</h2><p> மருத்துவக் குழுவினரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்டவர் 24 வயதுடையவர் என்று காவல்துறை முதலில் தெரிவித்திருந்தாலும், பின்னர் அவரது வயது 18 என்று தெளிவுபடுத்தியது. 16 வயது சிறுவன் மற்றும் 24 வயதுடைய நபர் என மற்ற இருவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பினர்.</p><p></p><p>
</p><p>
ஒருவருக்கொருவர் அறிமுகமான அந்த மூவரும் லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.

கடலோரக் காவல் படை, பெட் லெவல் (Pett Level) உயிர்காக்கும் படகுப் பிரிவு மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் இந்தச் சம்பவத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.</p><p>

அந்தப் பகுதியில் அவசர சேவைக் குழுவினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இறப்பில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான சூழலும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி (coroner) மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-08-14T05:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333"></link>
            <id>https://jvpnews.com/article/20th-commemoration-of-the-sencholai-massacre-1786685333</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>

இதன்போது உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் நான்கு பணியாளர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/261182ce-9cc2-4de8-b59b-96214c581ff0/26-6a7ea796db117.webp' /></p><p>



புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி. குகநேசனின் ஏற்பாட்டில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
</p><p>


 உயிரிழந்தவர்களின் நினைவாக சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>


நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T05:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047"></link>
            <id>https://jvpnews.com/article/indian-youth-dies-in-sea-off-galle-bentota-1786685047</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

நணபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார்.</p><p>

நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97417d93-a68d-45e7-be45-c68d30e491ad/26-6a7ea6795e030.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தியாவின் பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 24 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T05:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் ஆடிப்பூரம் இன்று; பெண்கள் இதை செய்ய மறக்காதீர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409"></link>
            <id>https://jvpnews.com/article/today-is-aadi-pooram-goddess-amman-bangle-ceremony-1786684409</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். 

இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்படுகிறது.
</p><p>
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c04f2-e7da-4198-8461-d5a34624121a/26-6a7ea3fb3a80d.webp' /></p><h2>&nbsp;அம்மனுக்கு வளைகாப்பு&nbsp;</h2><p> </p><p>

பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.</p><p> 

ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e35a20-effc-4b5b-be4f-93b61f06419e/26-6a7ea3fbe94c0.webp' /></p><p> </p><p>உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். 

சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். </p><p>

அது மட்டுமல்லாமல் ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9abb61-7fa4-4420-af95-3583ec01e867/26-6a7ea3fca1204.webp' /></p><p>
</p><p>
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
</p><p>
 பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்</p>]]></content>
            <updated>2026-08-14T05:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வேலை செய்து சொத்து குவித்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343"></link>
            <id>https://jvpnews.com/article/woman-amassed-wealth-by-smuggling-drugs-1786683343</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பில் போதைப்பொருட்களை கடத்தி அதன்மூலம் சொத்துக்களை வாங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e58f20-db79-4c35-821f-4e477f254778/26-6a7e9fd18d707.webp' /></p><p>
குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள்,</h2><p>&nbsp; &nbsp;ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி- 14 இலட்சம் ரூபாய்</p><p> 

06 வங்கிக் கணக்குகளில் இருந்த பணம்- 59 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் 03 கடைகள்- 225 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மேலும் ஒரு கடை- 75 இலட்சம் ரூபாய் </p><p>

கொழும்பு 14 பகுதியில் மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணி - 200 இலட்சம் ரூபாய் </p><p>

இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலேயே பெறப்பட்டவை என விசாரணைகளில் தெரிவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:53:20+00:00</updated>
        </entry>
    </feed>
