<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-11T13:26:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும்&nbsp; &nbsp;வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329"></link>
            <id>https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு இன்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1352e55-566e-4f32-af99-d7c86fc977f0/26-6aa3fe2aeb6bc.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p></p><p>

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்துகளை பறிமுதல் செய்யவும் ; இசைஞானி இளையராஜாவுக்கு நோட்டீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-high-court-issues-notice-to-ilaiyaraaja-1789129756</id>
            <summary type="text">&amp;nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இசைஞானி இளையராஜா நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. </p><p>

அந்த மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவை சிவில் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dd6375-51bb-4b85-80fc-7031cd48a75f/26-6aa3f41debffe.webp' /></p><h2>சொத்துகளை பறிமுதல் செய்யவும்....&nbsp;</h2><p> </p><p>

 பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 ஆம் திகதி டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.</p><p></p><p> </p><p>

இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜூலை 1 ஆம் திகதி அந்த உத்தரவை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாக ‘சரிகம’ தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்தத் தடையையும் மீறி, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் மற்றும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்பு பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப் பெற்று வருகின்றன என்று சரிகம குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><p> 
 சரிகம நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T12:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கல்வி சீர்திருத்தம்; மாணவர்களின் புத்தகப்பை எடை குறைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516"></link>
            <id>https://jvpnews.com/article/reducing-weight-schoolbags-2027-1789128516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
 புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும்</h2><p>
</p><p>
வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். </p><p>இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.</p><p>

 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

 தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் எச்சரிகையுடன் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-ampitiye-sumanarathana-thero-1789127916"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-ampitiye-sumanarathana-thero-1789127916</id>
            <summary type="text">&amp;nbsp; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் மட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று (11) பிணையில் விடுவித்தார்.
</p><p>
கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரத்ன தேரர் 4 பேருடன் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/398b2a3e-ae9b-404e-84aa-ddf4b3ced348/26-6aa3ecedebc25.webp' /></p><h2>&nbsp;வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு</h2><p>
</p><p>


இதையடுத்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்து இன்று 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p></p><p>



 தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தேரருடன் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது , தேரரை இனிமேல் எந்த அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறு அச்சுறுத்தல் செய்யக்கூடாது, இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது என்று நீதிவான் தெரிவித்தார்.</p><p></p><p>



சம்பவத்துடன் தொடர்பட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதனை மீறும் பட்சத்தில் இந்த வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நிபந்தனைகளுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுத்தார்.</p><p></p><p>



அதேவேளை,இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இருவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடுத்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T11:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402"></link>
            <id>https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244" target="_blank">&nbsp; முல்லைத்தீவில்</a> கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d103d733-b534-4cc2-a12a-827a56a76282/26-6aa3d140aed02.webp' /></p><p></p><p> </p><p>இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு தசையை கடித்து குதறிய முதலை ; இறுதியில் இளைஞன் செய்த செயலால் வியப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crocodile-attacks-young-man-his-brave-escape-1789126180"></link>
            <id>https://jvpnews.com/article/crocodile-attacks-young-man-his-brave-escape-1789126180</id>
            <summary type="text">பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
முதலையின் தாக்குதலில் கை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயமடைந்த இளைஞர், தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2425a0-783e-45fe-8540-896bc7ea2fff/26-6aa3e7e677120.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify;">
மாலை வேளையில் குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வந்த இளைஞர், தனது சோப்பை எடுப்பதற்காக மீண்டும் குளத்தின் படிகளில் இறங்கியுள்ளார். இதன்போது, நீரில் இருந்த முதலை அவரது காலை கவ்வி நீருக்குள் இழுத்துள்ளது.</p><p style="text-align: justify;">


குளத்தின் படியை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட இளைஞர், முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க போராடியபோது, முதலை அவரது தோள்பட்டையையும் கவ்வியுள்ளது.
</p><p style="text-align: justify;">
இதையடுத்து, தைரியமாகப் போராடிய அவர், தனது கையை முதலையின் வாய்க்குள் செலுத்தி அதன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கரைக்கு ஏறியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
முதலையின் தாக்குதலில் முதுகில் சதைப்பகுதி துண்டிக்கப்பட்ட போதிலும், சுயநினைவுடன் இருந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify;">
பின்னர் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
இதேவேளை, சுமார் 13 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று குறித்த குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

</p><p style="text-align: justify;">
அத்துடன், அந்த முதலை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T11:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சூடான தேநீர், கோப்பியாால் மூன்று மடங்காகும் புற்றுநோய் அபாயம் ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-hot-tea-and-coffee-may-pose-health-risks-1789123015"></link>
            <id>https://jvpnews.com/article/very-hot-tea-and-coffee-may-pose-health-risks-1789123015</id>
            <summary type="text">ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">International Journal of Cancer இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலமே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e832f9c7-22c3-4fd3-b4a1-47695288e30e/26-6aa3db76d2ea5.webp' /></p><h2 style="text-align: justify; ">உணவுக்குழாய் புற்றுநோய்</h2><p> </p><p style="text-align: justify;">

மிதமான சூட்டில் பானங்களை அருந்துபவர்களுடன் ஒப்பிடுகையில், "அதிக சூட்டில்" பானங்களை விரும்பிக் குடிப்பவர்களுக்கு 'எசோபேகியல்ஸ்குவாமஸ் செல் கார்சினோமா'வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகும்.

</p><p style="text-align: justify;">
பானங்களை "மிக அதிக சூட்டில்" குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கிறது.

உணவுக்குழாய்&nbsp; என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவையும் பானங்களையும் கொண்டு செல்லும் தசைநார் குழாயாகும்.</p><p style="text-align: justify;">

வெப்பநிலையைக் கருத்திற் கொண்ட பின்னரும் கூட, ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் சூடான பானங்களைக் குடிப்பவர்களுக்கு, 6 தடவைகளுக்கும் குறைவாகக் குடிப்பவர்களை விட இந்நோய் ஏற்படும் ஆபத்து 71% அதிகமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">[<span style="text-align: left;"></span></p><p style="text-align: justify;">சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் 65°C க்கும் அதிகமான வெப்பநிலையில் குடிக்கப்படும் பானங்களை "மிக அதிக சூடான பானங்கள்" என வரையறுத்துள்ளதுடன், இவற்றை அருந்துவது மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டது எனவும் வகைப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;">அதேவேளை, பொதுமக்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும், இந்த ஆய்வு முடிவுகள் சூடான பானங்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றனவே தவிர, சூடான பானங்களே நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T10:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய பால்மாவில் புழு; பிரபல நடிகை பகீர் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-bipasha-basu-tiny-tiny-worms-milk-powder-1789123649"></link>
            <id>https://jvpnews.com/article/actress-bipasha-basu-tiny-tiny-worms-milk-powder-1789123649</id>
            <summary type="text">ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 நுகர்வோர் வாங்கும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9a71d2-149d-4496-82b3-65c46aaab46a/26-6aa3dc42dcd78.webp' /></p><h2>விற்பனை நிலையங்களில் ஆய்வு</h2><p>
</p><p>
பிபாஷா பாசுவின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்போது, பால் மற்றும் பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><p>

மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாததாகக் கண்டறியப்பட்ட சில நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T10:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு; ஈடுசெய்ய முடியாத இழப்பு ; இலங்கை அரசியல்வாதி இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solomon-pappaiah-passes-away-senthil-thondaman-1789122577"></link>
            <id>https://jvpnews.com/article/solomon-pappaiah-passes-away-senthil-thondaman-1789122577</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும் சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
</p><p>


சாலமன் பாப்பையா தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் தமிழ் மீதான ஆழ்ந்த பற்றின் மூலம் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5b33fc-8014-4808-95fd-713fadfc80d4/26-6aa3d8130f75c.webp' /></p><h2>&nbsp;ஈடுசெய்ய முடியாத இழப்பு</h2><p>
</p><p>


அவரது மறைவு தமிழ் இலக்கியத்துக்கும் பட்டிமன்ற உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



தமிழை எளிமையாகவும் சுவையாகவும் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும் .</p><p></p><p>அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.</p><p>



அத்துடன், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகளுக்கும் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hindu-worship-allowed-at-veddikunarimalai-1789120804"></link>
            <id>https://jvpnews.com/article/hindu-worship-allowed-at-veddikunarimalai-1789120804</id>
            <summary type="text">வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், இருதரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், இருதரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு கூடுவதால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பௌத்த தேரர் தரப்பினர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b102e89d-38d8-4292-9be4-787ef0353bbe/26-6aa3d1264ddcb.webp' /></p><h2 style="text-align: justify; ">வழிபாடுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும், புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமலும் வழிபாடுகளை நடத்த வேண்டும் என நீதிமன்றம் இருதரப்பினருக்கும் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
அன்றைய தினம் சைவ மக்களின் வழிபாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என பொலிஸார் மற்றும் தேரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், வெடுக்குநாறிமலையில் வழிபடும் உரிமைக்கு தடையிட முடியாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, 12ஆம் திகதி சைவ மக்களும் வழமையான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T10:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; ஈடுசெய்ய முடியாத இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302"></link>
            <id>https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302</id>
            <summary type="text">

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.</p><p>

தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e587906-c46b-45d5-8023-8d1e982b4656/26-6aa3bf5f5ee17.webp' /></p><p></p><h2>&nbsp;தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் பேரிழப்பு</h2><p> </p><p>கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார்

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p><p></p><p>கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர்.&nbsp;இதுவரை அவர் 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் சாலமன் பாப்பையா அவர்கள்</p><p> </p><p>அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி ; வசமாக பிடிபட்ட இரு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964</id>
            <summary type="text">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, பதுலுஓயா சந்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் முச்சக்கர வண்டியுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கந்தகெட்டியப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e7565d-d661-4f65-ae1a-f15a7024e2b9/26-6aa3cb705fdbf.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் கைது </h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி, மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சந்தேகநபரின் வீட்டில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சொரபொர இடதுகரைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மஹியங்கனை, தம்பறாவப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஆவர் எனப் பொலிஸார் கூறினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T09:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053"></link>
            <id>https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்றார்.</p><p>

இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae145df9-26d8-4fc5-82f9-7d9cd7c80667/26-6aa3ca4ee2137.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T09:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114"></link>
            <id>https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.



இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014b50ea-ac2f-4496-bc05-06ed86855069/26-6aa3c6aa45498.webp' /></p><p>
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.0476 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.0703 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் வரவேற்பு! மக்கள் ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390"></link>
            <id>https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8e7476-6fd5-4531-9dd4-e954fb5fea7b/26-6aa3a8780f406.webp' /></p><p></p><h2>&nbsp; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு</h2><p>

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார்.</p><p>

ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p></p><p>முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>

புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.</p><p></p><p>

 
முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assam-wild-elephant-wandered-tyre-around-neck-1789113505"></link>
            <id>https://jvpnews.com/article/assam-wild-elephant-wandered-tyre-around-neck-1789113505</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மனித - யானை மோதல்கள் அடிக்கடி நடைபெறும் கோலகாட் மாவட்டத்தின் மொரோங்கி வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த யானை நடமாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66c8da3-0295-439e-81a8-0de2e1786bf7/26-6aa3b4a24f029.webp' /></p><p></p><h2>உணவு தேடியவாறு உலா வந்த&nbsp; யானை</h2><p>
</p><p>
தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடியவாறு இந்த யானை உலா வந்த நிலையில், அதன் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்டிருக்கும் நிழற்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
<br></p><p>
சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், உடனடியாக செயற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானையின் கழுத்தில் இறுக்கமாக சிக்கியிருந்த டயரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்த யானை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-information-on-the-electricity-tariff-increase-1789112610"></link>
            <id>https://jvpnews.com/article/key-information-on-the-electricity-tariff-increase-1789112610</id>
            <summary type="text">அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46b6343-363b-43e3-a757-93d260e31bf4/26-6aa3b2aea8b85.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சாரக் கட்டண அதிகரிப்பு</h2><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை எனக் கூறிய அமைச்சர், அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் வலுசக்தி அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக எந்த வகையிலும் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, அடுத்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T07:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் வல்லிபுர ஆழ்வார் பெரும் திருவிழா ஆரம்பம்; இன்று கொடியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-vallipuram-alvar-festival-2026-1789112671"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-vallipuram-alvar-festival-2026-1789112671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று (11) கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று (11) கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
</p><p>
மகோற்சவத்தின் தேர் திருவிழா 25 ஆம் திகதியும் தீர்த்த திருவிழா 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bdb4b37-6295-462a-ad2f-55e4ab57f659/26-6aa3b16251b4c.webp' /></p><p> </p><p>16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும்.

வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற தலமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0a6f3b-96dc-4547-ae58-a82324020404/26-6aa3b1619461d.webp' /></p><p>
</p><p>
 வட பகுதியை நாகர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் நாகம், சூரியன் ஆகியவற்றை வழிபட்டதாகவும் அவர்கள் வசித்த பிரதேசங்களில் ஒன்றாக வல்லிபுரம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bdb4b37-6295-462a-ad2f-55e4ab57f659/26-6aa3b16251b4c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T07:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு ; இலக்கு தவறியதால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319</id>
            <summary type="text">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
பாதுக்க - பஹல போபே பகுதியில் இந்த முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617c4286-d649-4470-879c-f98399d1200d/26-6aa3acf14368e.webp' /></p><h2 style="text-align: justify; ">கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T07:26:34+00:00</updated>
        </entry>
    </feed>
