<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-20T01:38:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து ; பேருந்து சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435"></link>
            <id>https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435</id>
            <summary type="text">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d748790a-9513-4355-b5f3-c65a095b18da/26-6aaf2225befab.webp' /></p><p>தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தில் சிற்றூந்தை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சியால் பணமும், சொத்துக்களும் குவிய போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029"></link>
            <id>https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.&nbsp;இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்கிறது. இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9082e7b9-070b-4c9d-bde6-e054cf2d78b4/26-6aaf2477c9863.webp' /></p><p>முக்கியமாக இப்பெயர்ச்சி அனைவருக்கும் சிறப்பான பலனை தந்துவிடாது, சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் சொந்த வீடு, கார் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகத்தை பெறுகிறார்கள் என பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8adf65-85d8-4d1f-a950-f59136c52481/26-6aaf24771fd24.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். அதுமட்டுமின்றி பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd39cfb4-3c9c-4be0-be7c-3c1bdc5fd6a3/26-6aaf247881180.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வருவதோடு, அதன் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e6facc-2b01-43f8-8681-2c803e846460/26-6aaf247933887.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பரம்பரை சொத்து விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். சொல்லப்போனால் மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், ஆவணங்களை நன்கு படித்து பார்த்து, பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. புதிய வழிகளில் இருந்த பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c57dee-3727-48be-96f8-5afbac7eb261/26-6aaf2479dbc0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T01:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாக இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-man-arrested-in-canada-16-year-old-boy-1789865580"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-man-arrested-in-canada-16-year-old-boy-1789865580</id>
            <summary type="text">கனடாவின் விட்பி பகுதியில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விட்பி பகுதியில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ec64692-47dc-4c80-9556-42fa67b37a9b/26-6aaf2e6dd3d33.webp' /></p><p>குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேக நபர் மீது தகாத முறையில் செயற்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், குறித்த நபரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் முன்வந்து பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு டர்ஹாம் பிராந்திய பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிசோதனை கட்டணப் பட்டியல் போலியானது ; நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462"></link>
            <id>https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462</id>
            <summary type="text">பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் என பொதுமக்கள் கருத வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3605d829-56e0-4fd5-b15b-5bf6936a0050/26-6aaf2a0f98332.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, குறிப்பிட்ட சில மருத்துவப் பரிசோதனைகளுக்கே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி,
</p><p>
முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) – ரூ.400
</p><p>
டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை – ரூ.1,200
</p><p>
கொவிட்-19 PCR பரிசோதனை – ரூ.6,500
</p><p>
கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை – ரூ.2,000
</p><p>
மேற்கண்ட கட்டணங்கள் பரிசோதனை மற்றும் அறிக்கை ஆகியவற்றுக்கான அதிகபட்சக் கட்டணங்களாகும்.
</p><p>
இதற்கு மேலதிகமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல்களைப் பெற 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705"></link>
            <id>https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p></p><p>விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியுடன், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இரண்டு வருட காலத்துக்கு தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு, எவ்வித முன்னறிவிப்போ அல்லது உரிய நடைமுறையோ இன்றி தனது நியமனம் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aaf117-8fb1-4108-8dde-6aec5ff4c42f/26-6aaf271a58328.webp' /></p><p>தனது ஏனைய வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காகத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தீடீர் நீக்கம் காரணமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் இழக்கப்பட்டுப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது தொழில்முறை நற்பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் இடைக்கால குழுவிடமிருந்து 75 மில்லியன் ரூபாயை அவர் நட்டஈடாகக் கோரியுள்ளார்.
</p><p>
இந்த வழக்கில், அந்த குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் 9 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659"></link>
            <id>https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

 

"நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c272ba3-9d8c-46dc-b980-8e6e89c1dc2a/26-6aaef42504730.webp' /></p><p>என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். </p><p>ஆனால், இதுவரை அவர்களால் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. </p><p>ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழரசுத் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். </p><p>போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அதிகரித்துள்ளன.</p><p>எனவே, போதைப்பொருள் ஒழிப்புக்கும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். </p><p>மேலும், இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகு சேவைக்கான நிதி உதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037"></link>
            <id>https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037</id>
            <summary type="text">நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஓகஸ்ட் 2024-இல் இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசு வழங்கும் நிதியுதவியின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு இதுவாகும்.</p><p> பிராந்திய இணைப்புத் திறனை மேம்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீட்டிப்பு பிரதிபலிக்கிறது என்று உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d680606-1a80-4df2-ae8e-25a8ddaaa0b8/26-6aaeedcee9962.webp' /></p><p>ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி, ‘வியாபிலிட்டி கேப் ஃபண்டிங்’ (Viability Gap Funding – செயல்பாட்டுச் செலவு இடைவெளிக்கான நிதி) எனும் நடைமுறையின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், இச்சேவையை மலிவு விலையிலும் அதே சமயம் நிலையான செயல்பாட்டுத் திறனுடனும் பராமரிப்பதை இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 2024-இல் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இப்படக்ச் சேவை சுமார் 52,000 பயணிகள் பயணிக்க உதவியுள்ளது; இது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இச்சேவை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
</p><p>
டிசம்பர் 2024-இல் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் ஏப்ரல் 2025-இல் இந்தியப் பிரதமரின் இலங்கை பயணம் ஆகியவற்றின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கடல்வழி இணைப்பு குறித்த கூட்டு நோக்கத்துடனும் இந்த நிதியுதவி நீட்டிப்பு ஒத்துப்போகிறது.</p><p>

எதிர்காலத் திட்டங்களில், 65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீரமைத்தல் மற்றும் கடல்வழி இணைப்பை மேலும் விரிவுபடுத்தி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தக்கூடிய கூடுதல் வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331</id>
            <summary type="text">குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன &#039;பாசிவ் கூலிங்&#039; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன 'பாசிவ் கூலிங்' (Passive Cooling) முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் 'குளிர்விப்பு கூட்டமைப்பு' (Cool Coalition) இணைந்து கடந்த15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்தப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை A/C இயந்திரங்களின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9490583d-804c-40df-94b0-3cb5f3777e3f/26-6aaee72503916.webp' /></p><p>

உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.</p><p>

மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
</p><p>
கடுமையான வெப்பத்துக்குத் தீர்வு காண்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க குளிர்ச்சி அமைப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் பாசிவ் கூலிங் முறைகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாசிவ் கூலிங் (Passive Cooling) முறை என்பது மின்சாரம் அல்லது செயற்கையான குளிரூட்டிகள் (Air Conditioners / Fans) ஏதும் இன்றி, இயற்கை வழிகளிலேயே ஒரு கட்டடத்தின் உட்புற வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வடிவமைப்பு நுட்பமாகும்.
</p><p>
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:49:01+00:00</updated>
        </entry>
    </feed>
