<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T16:50:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-increase-across-the-country-1787588859"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-increase-across-the-country-1787588859</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bead44a1-4ade-4bc4-a4c5-97894362bb49/26-6a8c70fcdddad.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள்</h2><p style="text-align: justify; ">அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T16:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-for-easter-attack-case-verdict-announced-1787587621"></link>
            <id>https://jvpnews.com/article/date-for-easter-attack-case-verdict-announced-1787587621</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகள், தங்களுடைய தற்காப்பு வாதங்களை முன்வைப்பதை கடந்த (17) கொழும்பு திரிபுடை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பித் தொடங்கினர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f2c3c8-b2b0-4b4a-a32e-aea0e0d86ff3/26-6a8c6cf3f07a9.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

 

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே இவ்விசாரணைகள் இடம்பெற்றன.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-08-24T16:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றத்திற்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/past-reasons-for-electricity-tariff-changes-1787585896"></link>
            <id>https://jvpnews.com/article/past-reasons-for-electricity-tariff-changes-1787585896</id>
            <summary type="text">கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்குக் நடவடிக்கை எடுத்தால், மின்சாரக் கட்டண மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07ee86da-dcec-433d-b6d3-998640619a15/26-6a8c6670a7963.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சார கொள்வனவு&nbsp;</h2><p style="text-align: justify; ">

 

பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைவதுடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T15:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெல்போர்ன் – கொழும்பு இடையில் புதிய நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-direct-flight-between-melbourne-to-colombo-1787572452"></link>
            <id>https://jvpnews.com/article/new-direct-flight-between-melbourne-to-colombo-1787572452</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), நாளை (25) மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை தொடங்குகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), நாளை (25) மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை தொடங்குகின்றது.</p><p>

இந்த விமான சேவையின் முதல் விமானமானது நாளை (25) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a1b170-88eb-478f-b4a8-b68211968ce8/26-6a8c30e5c6896.webp' /></p><p></p><h2>&nbsp;வாரத்திற்கு மூன்று முறை</h2><p>
</p><p>
அதன்படி, JQ5 என்ற முதல் விமானம் மெல்போர்னிலிருந்து நாளை நண்பகல் 12:00 மணிக்குக் புறப்பட்டு, மாலை 5:50 மணிக்குக் கொழும்பை வந்தடையும் 

வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

திரும்பும் பயணமான JQ6 விமானம் கொழும்பிலிருந்து இரவு 7:50 மணிக்குக் புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு மெல்போர்னை சென்றடையும்.</p><p>

போயிங் 787-8 ட்ரீம்லைனர் (Boeing 787-8 Dreamliner) ரக விமானங்களைப் பயன்படுத்தி, இந்த புதிய சேவை வாரத்திற்கு மூன்று முறை – செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் – இயக்கப்படும். </p><p>

மெல்போர்ன்-கொழும்பு வழித்தடமானது, தெற்காசியாவிற்கான ஜெட்ஸ்டாரின் முதல் நேரடிச் சேவையாகவும், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான அந்த நிறுவனத்தின் முதல் செயல்பாடாகவும் அமைகிறது.</p><p></p><p> இலங்கைவிளையாட்டு

மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையே அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண நேரடிச் சேவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>

ஹெய்லிஸ் ஏவியேஷன் (Hayleys Aviation) இலங்கையில் ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனத்தின் பொது விற்பனை முகவராக (GSA) செயல்பட்டு, உள்ளூர் சந்தையில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிரதிநிதித்துவ நடவடிக்கைகளைக் கையாள்கிறது.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-08-24T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 இலட்சம் ரூபாய் பணத்தை கடித்து வைத்த எலிகள்; கண்ணீரில் தம்பதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014"></link>
            <id>https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.</p><p>

 


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நகைகள் வாங்குவதற்காக தனது கணவருக்குத் தெரியாமல் பரண் மீது இருந்த பெட்டியில் பணத்தை சேமித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d0a37c0-935b-4177-9b47-5c07cc8e1a16/26-6a8c469fb2aa1.webp' /></p><h2>எட்டு ஆண்டுகள் சேமித்த&nbsp; பணம்</h2><p>
</p><p>
எட்டு ஆண்டுகள் கழித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நகை வாங்க முடிவு செய்த அவர், பரண் மீது இருந்த பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்துள்ளார்.</p><p>

அத்தனை வருடங்கள் தான், குருவி போல் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தாள்களை எலிகள் துண்டு துண்டாக கடித்துப் போட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதன் பின்னர், விடயத்தைத் தன் கணவரிடம் கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பிறகு அவர், அந்த கிழிந்த பணத்தாளை எண்ணிப் பார்த்தபோது, அதில் 12 இலட்சம் ரூபாய் இருந்துள்ளது.</p><p>

எலிகள் கடித்துக் கிழித்துப் போட்ட பணத்தாள்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் முதாலாளி பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434"></link>
            <id>https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
 தாக்குதலுக்குள்ளான பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65241fb-eb02-4083-ae9c-4396ac0cc812/26-6a8c38a38d924.webp' /></p><p> </p><p>

பொருட்கள் வாங்குவதற்காக இக்கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், இப்பெண் காயமடைந்திருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>
அதனைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகன் முப்பாட்டனா .... சீமானுக்கு குட்டு வைத்த யாழ் சிறுவன்; வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643</id>
            <summary type="text">&amp;nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளான். </p><p>

அதுமட்டுமல்லாது முருகன் தனது முப்பாட்டன் என கூறும் சீமானுக்கும் போற போக்கில் ஒரு டொக்கு வைத்து விட்டான் யாழ் சிறுவன்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812aefb-233e-42d2-9e05-94e4e275bdd6/26-6a8c12652be39.webp' /></p><h2>நாடு கடந்து வைரலாகும்&nbsp; காணொளி..</h2><p>வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சன்னதி&nbsp; ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில்&nbsp; ஆலயத்தில் இடம்பெற்ற சிறுவனின்&nbsp; இந்த பேச்சானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1092978783085202%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தமிழ் தேசியம் என கூறி சைவர்களை சிலர் பித்தலாட்டம் செய்து வழிமாற்றி வருகின்றதாகவும் சிறுவன் எச்சரித்துள்ளார்.
</p><p>
அத்துடன் முருகனை முப்பாட்டன் என கூறும்&nbsp; சீமான் ,சைமன், செபஸ்ரியான் போன்றவர்களின் போலி புழுகுகளை நம்பவேண்டாம் என்றும் சிறுவன் சீமானின் காலையும் வாரியுள்ளார்.</p><p></p><p>இத்தனை சிறிய வயதில் சிறுவனின்&nbsp; இந்த&nbsp;பேருரை சைவ மக்களை மெய் சிலிர்க்க&nbsp; வைத்துள்ளது.&nbsp;இந் நிலையில் சிறுவன் உருவில் வந்து முருகன் முப்பாட்டனா இறைவனா சிறப்பான பேருரையை வழங்கியது அந்த முருகனா என சமூகவலைத்தளங்களில் முருக பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஆலயத்தில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p> 



இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(24) இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d617507-8011-4fd1-bc4c-a83570ce5c8c/26-6a8c498557e2a.webp' /></p><p>



திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. 



மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>


இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில் 1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 3 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p>

குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.






குறித்த ஆலய திருவிழாவின் போது, மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக குறித்த பெண் ஆலயத்தில்மாம்பழத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து பயணத்தில் பெண்ணுக்கு நடந்த சம்பவம்; சாரதி நடத்துநருக்கு குவியும் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praise-jaffna-point-pedro-depot-employees-gold-1787569530"></link>
            <id>https://jvpnews.com/article/praise-jaffna-point-pedro-depot-employees-gold-1787569530</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும் அதனை உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>



இந்தச் சம்பவம் நேற்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சாரதி மற்றும் நடத்துநரின் நேர்மைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50372268-d931-47ab-b007-16aaa4fd4924/26-6a8c26265ab4d.webp' /></p><h2>10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை</h2><p>
</p><p>


பருத்தித்துறை வீதியிலிருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் 767ஆம் வழித்தடத்தைச் சேர்ந்த 4241 இலக்க இ.போ.ச.பேருந்தின் மதிய சேவையில் குறித்த பெண் பயணித்துள்ளார்.



வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், மற்றுமொரு உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>



அங்கு சென்ற பின்னரே தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவர் அவதானித்துள்ளார். 



சங்கிலியை வழியெங்கும் தேடியும் கிடைக்காத நிலையில்,மீண்டும் வட்டுக்கோட்டையிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிப்பதற்காக அதே பேருந்தில் ஏறியுள்ளார்.</p><p></p><p>



இதன்போது தனது தங்கச் சங்கிலி காணாமல் போனதை பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதற்கு அவர்கள், “நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமாக வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்து, சங்கிலியை உடனடியாக உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>



இதனையடுத்து பேருந்து பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் சுத்தம் செய்யப்பட்டபோது, சங்கிலியின் ‘எஸ்’ வடிவ இணைப்புப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 



அதனையும் உரிய பெண்ணிடம் ஒப்படைத்து, நகையின் அனைத்து பகுதிகளும் முழுமையாக அவரிடம் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p></p><p>



இவ்வாறு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் செயற்பாடு பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.</p><p>



பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த காலத்திலும், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த இந்த இரு ஊழியர்களின் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயம் பாராட்டுக்குரியது என பயணிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டிற்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-of-school-exam-dates-for-2027-1787577033"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-of-school-exam-dates-for-2027-1787577033</id>
            <summary type="text">&amp;nbsp;2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
</p><p>
 

இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/635d376a-4edf-494c-b15b-805f911a04a7/26-6a8c42cb64ef5.webp' /></p><p>
 

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

 

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2027 டிசம்பர் 07 முதல் 2027 டிசம்பர் 17 வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:07:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு; இலங்கை பெண்ணின் வெளிநாட்டு கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078"></link>
            <id>https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் தலங்கம, வெலி பாரா பகுதியைச் சேர்ந்த 58 வயது&nbsp; சிவில் பொறியாளர் ஆவார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர், இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வெலி பாரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f01d99-be87-4374-b401-78b050bd6cf0/26-6a8bf4d7df1a9.webp' /></p><h2>வாக்குவாதத்தின்போது தாக்குதல்</h2><p>
</p><p>
 தென் கொரியாவிற்குச் செல்ல விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இவர் கொரிய மொழியைக் கற்பித்து வருகிறார். </p><p>

உயிரிழந்த பொறியாளரும் சந்தேகநபரான கொரிய நாட்டவரும் அண்டை வீட்டார்களாக இருந்ததாகவும், ஒரு சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கொரிய நாட்டவர்&nbsp; பொறியாளரைத் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவில் பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>கைது செய்யப்பட்ட கொரிய நாட்டவர் குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்தவர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-death-of-person-who-fell-from-a-tree-1787573342"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-death-of-person-who-fell-from-a-tree-1787573342</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். 

சுமார் 35 அடி உயரமுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் நேற்று (23) ஏறிஅ அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3539ff95-4aeb-4b78-b5ea-af001d998c84/26-6a8c34605f8a6.webp' /></p><p> </p><p>

தவறி வீழ்ந்தவர் பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.</p><p> 

மரங்களை வெட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ் குறித்த நபர் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்களை கரம்பிடிக்க பாகிஸ்தானின் இருந்து வந்த 150 மணப்பெண்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553"></link>
            <id>https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049c940-6cc3-4f26-a80f-725444aa0859/26-6a8c19db09f36.webp' /></p><h2>நீண்ட நாள் காத்திருப்பு&nbsp; முடிவுக்கு வந்துள்ளது</h2><p> </p><p>

கடந்த 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.</p><p></p><p> 

</p><p>தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது. </p><p>

இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.</p><p></p><p>மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள 'ஷடானி தர்பார்' சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.</p><p>

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, "இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.</p><p></p><p> 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.</p><p> 

எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர். </p><p>

நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவிக்கையில், 

"நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.</p><p> நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T11:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரமற்ற மின் கம்பி விற்பனை; அங்காடிக்கு 2 இலட்சம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-substandard-electrical-wires-fined-2-lakh-1787571807"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-substandard-electrical-wires-fined-2-lakh-1787571807</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர பல்பொருள் அங்காடி ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அனுராதபுரம் 11-ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த கடையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே இந்தச் சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f93784-bb1c-47cd-a2c8-f8ebfe0851c6/26-6a8c2e611d860.webp' /></p><h2>சட்டவிரோத விற்பனை</h2><p>
</p><p>
மின் சாதனங்களுக்கான SLS தரநிலைகளைப் பின்பற்றுவது நுகர்வோரின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது எனவும், தரமற்ற மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மின்கசிவு, மின் அதிர்ச்சி மற்றும் ஆபத்தான தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

எனவே, பொதுமக்கள் மின்சாரக் கம்பி வடங்கள் மற்றும் மின் சாதனங்களைக் கொள்முதல் செய்யும்போது SLS தரச்சான்றிதழ் முத்திரை மற்றும் உற்பத்தி விபரங்களைச் சரிபார்த்து வாங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
 சந்தையில் தரம் குறைந்த அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தகவல் தெரிந்தால், ‘1977’ என்ற நுகர்வோர் அவசர உதவி இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T11:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த பெண் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-rescues-woman-who-fell-diyawanna-oya-river-1787570397"></link>
            <id>https://jvpnews.com/article/navy-rescues-woman-who-fell-diyawanna-oya-river-1787570397</id>
            <summary type="text">பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>தியவன்னா ஓயாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்தஉயிர்காக்கும் குழுவினர், கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் பெண்ணொருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1126c3b5-ec4f-4e5e-a249-c360fd7c3c0c/26-6a8c28df1dd76.webp' /></p><p>



இதையடுத்து, கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அதிவேக அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், குறித்த பெண்ணை பாதுகாப்பாக நீரில் இருந்து மீட்டுள்ளனர்.</p><p>



மீட்கப்பட்ட பெண் நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம் ; நாட்டில் மின்வெட்டு அபாயம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-impact-risk-of-power-outages-in-country-1787569341"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-impact-risk-of-power-outages-in-country-1787569341</id>
            <summary type="text">எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/960bd088-4a77-44ba-b345-45a8b3ba0a3a/26-6a8c24bf3a450.webp' /></p><p>புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:02:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளின் பின் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relaxation-of-restrictions-on-vehicle-imports-1787569211"></link>
            <id>https://jvpnews.com/article/relaxation-of-restrictions-on-vehicle-imports-1787569211</id>
            <summary type="text">&amp;nbsp; பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9552c1d3-8049-471d-bce3-f6abe2bf7685/26-6a8c24821b63b.webp' /></p><p>
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.

இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p></p><p>.

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:58:41+00:00</updated>
        </entry>
    </feed>
