<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-05T06:38:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214"></link>
            <id>https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>


எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது எனவும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07493e6-738b-491d-b633-4e557bdf1940/26-6a9bb4a0075d2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாங்க முடியாத பணிச்சுமை; வேலையைவிட்ட OIC!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவியை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கிடைத்த தகவல்களின்படி, அப்பிரிவு ஆய்வாளர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன் காவல் நிலையத் தகவல் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c68eee5-05e9-4ad0-b0ba-3abc08d359b4/26-6a9bb1f7f2ce3.webp' /></p><h2>&nbsp; இனிமேலும் சமாளிக்க முடியாது</h2><p>

 அதில், தனது கடமைகளுடன் தொடர்புடைய அதிக பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை இனிமேலும் சமாளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மவுண்ட் லாவினியா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அசோக குணசேகர, இது குறித்து விசாரணை நடத்துமாறு மவுண்ட் லாவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>.

இச்சம்பவம் ஏனைய பொலிஸ் அதிகாரிகளிடையே ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் அப்பிரிவைக் கண்காணிக்கும் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-05T06:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானிகள் அறையில் போதைப்பொருள்; ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249</id>
            <summary type="text">&amp;nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

 கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபூகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏ-320 ரக விமானம் நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/744a4ada-98ef-4e84-b8f7-d4e535d202aa/26-6a9bacf37add5.webp' /></p><h2>விமான விபத்து புலனாய்வுப் பணியகம்&nbsp; அறிக்கை</h2><p>
</p><p>
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4 அன்று ஒடிசா வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் (Green, Blue, Yellow Systems) அடுத்தடுத்துச் செயலிழந்தன.</p><p></p><p>
</p><p>
இதனால் தானியங்கி இயக்கம் (Autopilot) துண்டிக்கப்பட்டு, விமானம் சில வினாடிகளில் 372 அடி உயர்ந்து பின்னர் 292 அடி தடாலடியாகக் கீழே சரிந்தது. இதில் இருக்கைப் பட்டை அணியாதிருந்த 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பைலட்களுக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது அருந்தியதற்கான சான்றுகள் இல்லை.</p><p></p><p> </p><p>இருப்பினும், இரத்த மாதிரி பரிசோதனையில் 34 வயதான முதன்மைப் பைலட்டின் மாதிரியில் கஞ்சா (Marijuana) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.</p><p> இதைத் தீவிரப் பாதுகாப்புக் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய AAIB, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககமான DGCA-வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.</p><p></p><p>
</p><p>
 பரிந்துரையைத் தொடர்ந்து அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, “பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கூறிப் பைலட்டின் சேவையை ஏர் இந்தியா உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>

தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதா அல்லது போதையில் இருந்த பைலட்டின் தவறான வழிகாட்டலா என்பது குறித்துத் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இச்சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T05:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397"></link>
            <id>https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><h2>


புதிய விலை விபரம்,</h2><p>&nbsp;இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4781c911-20a8-4dae-bc31-0fc0c06978a5/26-6a9b9de6890a5.webp' /></p><p> </p><p>இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.</p><p></p><p>



அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T05:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு; தகாத உறவால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-killed-sharp-weapon-illicit-affair-1788584326"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-killed-sharp-weapon-illicit-affair-1788584326</id>
            <summary type="text">&amp;nbsp; புத்தளம் - கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புத்தளம் - கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம்(03) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

பாலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், தாக்குதலில் பலத்த காயமடைந்து கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தனது வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cada74c7-ba24-41d4-acfa-1a56feb5b16f/26-6a9ba188251e2.webp' /></p><h2>வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு</h2><p>

குறித்த பெண் தனது கணவரைப் பிரிந்து சந்தேகநபருடன் வசித்து வந்ததாகவும், நீண்டகாலமாக குடும்பத்தில் ஏற்பட்ட முறுகலே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

சம்பவம் நடந்து 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐஸ் (ICE) போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de68cacf-36e6-4dc5-a7ac-e24c12c5f062/26-6a9ba7689d211.webp' /></p><h2>&nbsp;பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு</h2><p>
</p><p>சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

 கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
 இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

 சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T05:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன பிரஜை படுகொலையில் மேலும் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-person-arrested-murder-chinese-national-1788584716"></link>
            <id>https://jvpnews.com/article/another-person-arrested-murder-chinese-national-1788584716</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>



கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbbc3c83-52fb-4ae9-a915-cd487dea509c/26-6a9ba30ddd259.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 04) கொழும்பு துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 54 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-in-the-zodiac-1788570802"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-in-the-zodiac-1788570802</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். 

அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் திகதி செவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். </p><p style="text-align: justify; ">

அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் திகதி செவ்வாய் பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். செவ்வாய் குருவின் நட்சத்திரத்திற்குள் செல்வதால் அதனுடைய தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2602bd70-c4a7-4bd2-bd89-f2e8b3e753c1/26-6a9b6cb4354e1.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>
மிதுனம்:
</b>மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் அமையும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கடன் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலமாக அமையப் போகிறது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:</b> மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் தேடி வர போகிறது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் நல்ல பலன்களை பெற போகிறார்கள். ஒருவருக்கு அரசு பதவிகள், அரசு மரியாதை இந்த காலகட்டங்களில் தேடி வரும்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலை அதிர வைத்த நாமலின் கைது ; வழக்கின் முழு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684"></link>
            <id>https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026" target="_blank">நாமல் ராஜபக்ஷ</a>வை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னரே அவர் இன்று கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23122e1-ba5c-4c09-88bf-36a94e65b5d5/26-6a9b646e0831d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

2013 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 விமானங்களை கொள்வனவு செய்த போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p style="text-align: justify; ">
 

அது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அது தற்கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157d6969-2380-4071-b1a7-930ceac73419/26-6a9b646eb36b9.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விமானக் கொள்வனவு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இன்று (04) முற்பகல் 9.15 மணியளவில் நாமல் ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

 

அதன்படி, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல் பிரதிநிதிகளும் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அங்கு சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்தது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளியின் கோப்புகள் மாயம் ; தாய்லாந்திற்குத் தப்பியோடிய நீதிமன்ற அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144"></link>
            <id>https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் &#039;குடு சளிந்து&#039;வுக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் 'குடு சளிந்து'வுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றத்தின் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்கான பொறுப்பு அதிகாரியாகக் கடமையாற்றிய அதிகாரி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறிப்பிட்ட வழக்குக் கோப்புகள் காணாமல்போனமை தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கடந்த 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab577e73-47e1-479e-b2df-cac5cce2d42c/26-6a9b5e6a2a1d0.webp' /></p><h2 style="text-align: justify; ">10 பேரிடம் வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் 'பி' அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களைஅறிக்கை செய்த பின்னர், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">
 

எனினும், நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது செப்டம்பர் 2 ஆம் திகதியன்றே குறித்த அதிகாரி தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

'குடு சளிந்து'வின் நெறிப்படுத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்குக் கோப்பு ஒன்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கு தொடர்பான கோப்பு ஒன்றுமே இவ்வாறு காணாமல்போயுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை பாணந்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் 07 பெண் ஊழியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-05T01:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264"></link>
            <id>https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264</id>
            <summary type="text">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள்.</p><p style="text-align: justify; "> ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db96fbe-f91c-4770-98f2-8ba9946bb973/26-6a9b532a18c7d.webp' /></p><h2 style="text-align: justify; ">ரத்த சர்க்கரை&nbsp;</h2><p style="text-align: justify; "> பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது. 
</p><p style="text-align: justify; ">
 
பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். </p><p style="text-align: justify; ">எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8439b5-ee4c-4e0f-9ca0-785694e8b3e9/26-6a9b544ece328.webp' /></p><p style="text-align: justify; "> 
தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "> முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். 

 
மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-05T01:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-05T01:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026"></link>
            <id>https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026</id>
            <summary type="text">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p style="text-align: justify;">


இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f791100b-34d4-4701-badf-ade18b5fe72f/26-6a9b00343421e.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p> </p><p style="text-align: justify;">



தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில்&nbsp;இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p> </p>]]></content>
            <updated>2026-09-05T01:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரை பறித்த சம்பவத்தால் பரபரப்பு ; கொந்தளிப்பில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-boy-s-death-shocks-1788569890"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-boy-s-death-shocks-1788569890</id>
            <summary type="text">மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.


</p><p style="text-align: justify;">பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cce35a-d23b-42fd-80aa-f18e3520aed1/26-6a9b69245ce87.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதுகாப்பற்ற குழி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
</p><p style="text-align: justify;">
இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்ததையடுத்து சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">&nbsp; &nbsp;இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இது தொடர்பாக ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;">

இதேவேளை இந்த பாலம் புனரமைப்பின் போது புனரமைப்பு பணியை மேற்கொண்டார்கள் அங்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாதலால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T00:58:22+00:00</updated>
        </entry>
    </feed>
