<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T07:46:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் அதிபர், மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093"></link>
            <id>https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். </p><p>அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f54689-64cc-46e3-914e-78642da6e1e3/26-6a54951eae891.webp' /></p><h2>&nbsp;வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த மாணவன்</h2><p> 

 இதேவேளை கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த&nbsp; &nbsp;மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Zoom தொழில்நுட்பம் ஊடாக நீர்கொழும்பு கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-proceedings-for-negombo-prisoners-via-zoom-1783927762"></link>
            <id>https://jvpnews.com/article/court-proceedings-for-negombo-prisoners-via-zoom-1783927762</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப &#039;சூம்&#039; (Zoo...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


நீதிமன்ற விசாரணைகளை சூம்' (Zoom) இணையவழியில் நடத்துவதற்கு உரிய நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய செயற்பட எதிர்பார்ப்பதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae44d23-3162-4f1d-b4e3-45fb06bfc756/26-6a5493d3c90a5.webp' /></p><h2>&nbsp;29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்</h2><p>


 அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பல கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் வழக்கு விசாரணைகளுக்காக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன</p><p>.



மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்னும் சுமார் 600 கைதிகள் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T07:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்...நடிகை ஹன்சிகா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-not-speak-personal-life-actress-hansika-motwani-1783925907"></link>
            <id>https://jvpnews.com/article/do-not-speak-personal-life-actress-hansika-motwani-1783925907</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது கணவர் சோஹைல் கட்டாரியாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.

 இ ந் நிலையில் நடிகை ஹன்சிகா, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c68bdb-b8e3-4fe8-9b53-714a7929533d/26-6a548c94958c6.webp' /></p><h2>&nbsp;தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள்</h2><p>

தாம் தொடர்பில் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகள் தொடர்பாக ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,</p><p></p><p> </p><p>"பொதுவாக பிரபலங்கள் என்றாலே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பிரபலங்களுக்கும் மனம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>

வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் போது, அவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் உணர வேண்டும்," என்று தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார சிக்கல்; தள்ளிப்போகும் இளம் வயதினர் திருமணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/economic-marriage-among-young-adults-postponed-1783925463"></link>
            <id>https://jvpnews.com/article/economic-marriage-among-young-adults-postponed-1783925463</id>
            <summary type="text">நாட்டில்&amp;nbsp; இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது என்றும் , மாறாக தற்போதைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில்&nbsp; இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது என்றும் , மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கை மக்கள் தொகை சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க தெரிவித்துள்ளார்.</p><p>

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64e236a0-eb16-477b-a29d-c3f5f4620bf0/26-6a548ad885dbd.webp' /></p><h2>வாழ்க்கைச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை</h2><p>
</p><p>
நாட்டில் தற்போது குறைந்து வரும் கருத்தரிப்பு விகிதம், மக்கள் தொகையின் முதுமை, இளைஞர்களின் அதிகப்படியான புலம்பெயர்வு மற்றும் மாறிவரும் குடும்ப அமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க மக்கள் தொகை மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இளம் தலைமுறையினர் தற்போது மிக வேகமாக மாறிவரும் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் ரீதியான நிச்சயமற்ற தன்மை, மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதில் உள்ள சிரமங்கள், </p><p>தொழில் வளர்ச்சியில் உள்ள கடும் போட்டி ஆகிய காரணங்கள், திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்குவது குறித்து அவர்களின் முடிவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>

எனவே, இளைஞர்களுக்கு உதவும் வகையில் தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்,
மலிவு விலையில் வீட்டு வசதி மற்றும் தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத்திற்கு ஏற்ற அலுவலகச் சூழலை உருவாக்குதல் ஆகிய கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T06:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி சென்னையில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215"></link>
            <id>https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215</id>
            <summary type="text">&amp;nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083d9f21-b147-4622-b49c-874384ab923f/26-6a546aa0a5cee.webp' /></p><h2>போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியல்</h2><p>

 தம்பதிகள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியானது.

 நேற்று முன்தினம் இருவரும் இலங்கை வருவதற்காக , சென்னை வானூர்தி நிலையம் சென்றபோது கைதாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு; இன்னும் குறையலாம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, </p><p>நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/002cda88-baae-4130-b091-c2afe099ed96/26-6a54879762f0b.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை</p><p></p><p> </p><p>இந் நிலையில்&nbsp; &nbsp;தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T06:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இன்று தேசிய துக்க தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366"></link>
            <id>https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366</id>
            <summary type="text">&amp;nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (S...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50b97f-7f31-4925-9f3a-325e3eaa28c2/26-6a5482a81fc7d.webp' /></p><h2>&nbsp;தேசியக் கொடி&nbsp;&nbsp;அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்</h2><p>
</p><p>
மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, </p><p>அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.</p><p></p><p> </p><p>அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண் கலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் கீழே விழுந்ததில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51684204-389f-4bbe-b4ed-9823aa66bdcd/26-6a5480403073d.webp' /></p><p> </p><p>

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த போதிலும், இறுதியில் அவர் காலமானார்.

12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள் என ஒரு மிகப்பெரிய குடும்பப் பரம்பரையை கலுமெனிக்கே விட்டுச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சுஸ்மிதா பாஸ்கரன்; காதலன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285"></link>
            <id>https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவத்தில்&nbsp; பெண்ணின்&nbsp; &nbsp;முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d70a604-a5b1-402d-accf-87199487f422/26-6a547a866f863.webp' /></p><h2>இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா</h2><p> இந்தியாயாவை&nbsp; பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார்.</p><p>இதனையடுத்து&nbsp; ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுஸ்மிதா மற்றும் மார்ட்டின் கேரியர் ஆகியோருக்கு இடையே கடந்த 2010-ம் ஆண்டுகளில் இருந்து நீண்ட காலமாக ஒரு மோசமான உறவு இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இவர்கள் 2018-ஆம் ஆண்டு பிரிந்தாலும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.
</p><p>

2012-ஆம் ஆண்டு சுஸ்மிதா வீடு வாங்கிய போது கனேடிய குடியுரிமை இல்லாத காரணத்தால் மார்ட்டின் பெயரில் வீடு வாங்கப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு அந்த வீட்டை விற்று அதன் முழு பணத்தையும் மார்ட்டின் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். </p><p>இது தொடர்பாக 2024-இல் நீதிமன்றம் மார்ட்டினுக்கு சுஸ்மிதாவுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களை திருப்பி செலுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்ட்டின் கேரியரை அரசு வழக்கறிஞர்கள் ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>தற்போது சடலத்தை சிதைத்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் மீது கூடுதல் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக&nbsp; கனேடிய ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-13T05:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரவலால் மூடப்பட்ட பலகலைக்கழகம் மீண்டும் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-closed-due-to-dengue-outbreak-reopens-1783919953"></link>
            <id>https://jvpnews.com/article/university-closed-due-to-dengue-outbreak-reopens-1783919953</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் தொடங்கின.
</p><p>
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 2 ஆம் திகதி முதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு குறித்த பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15f8171-27b2-4e14-9c69-48d54ca3e9eb/26-6a54755299a73.webp' /></p><p>

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட, வளாகச் சூழலைச் சுத்தமாகப் பராமரிப்பதில் மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p></p><p>

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 68,071 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில் டெங்கு தொடர்பான 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T05:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த கடற்படை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293"></link>
            <id>https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293</id>
            <summary type="text">&amp;nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். </p><p>

குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256398a7-e6a8-4efe-bd7a-27730c3e0a81/26-6a546ed73bf14.webp' /></p><p> 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தங்காலை பொலிஸார் , முதியவரின் இளைய மகனான ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்துள்ளனர்.</p><p> 

குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, அதீத போதையில் காணப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T04:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761</id>
            <summary type="text">&amp;nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



தீ விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e59c529-00f9-43b5-b6d7-815e3be76c36/26-6a5468dac1b38.webp' /></p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-13T04:24:34+00:00</updated>
        </entry>
    </feed>
