<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T14:55:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் காணொளிகளை 'லைக்' செய்தால் 500 ரூபாய் பணம் வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732"></link>
            <id>https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732</id>
            <summary type="text">&amp;nbsp; யூடியூப் காணொளிகளுக்கு &#039;லைக்&#039; செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிருக்கும் இத்தகைய மோசடிக்காரர்களிடம் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc2a9e2-6fed-4602-b2c2-25264aad2ab3/26-6a50ee1dd33a7.webp' /></p><p></p><h2>500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி&nbsp;</h2><p>
</p><p>
எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும், மக்கள் தமது பொது அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துச் செயற்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு யூடியூப் காணொளிக்கு 'லைக்' இடுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி என்பதைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; அரசாங்கத்தை பாராட்டிய ரஞ்சன் ராமநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> 


 இன்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, 

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81b49df-14e6-4fd9-b47c-f25432782081/26-6a50e83a6146d.webp' /></p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்&nbsp; யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை</h2><p> </p><p>

இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், தானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவதாகவும், தானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

 சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்று வாதிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

 இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><p>


இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், "நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்" என்று தைரியமாக முன்வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம் என கூறிய ரஞ்சன் ராமநாயக்க, உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இன்று (10) பிற்பகல் இந்த மோதல் சம்பவ,ம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1ec8d3-1006-44a5-a23d-7792c4e2afea/26-6a50e02e035ef.webp' /></p><p></p><p> சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் 28 பேர் உயிர்ழந்ததுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; பிரபாஷ் மண்டல் உடலை பெற தாய் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435"></link>
            <id>https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/13-year-old-girl-32-men-4-hotels-rajasthan-crime-1783593062" target="_blank">&nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் </a>செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1bfb5b-14f2-49ec-aebd-35104a638d59/26-6a50d5855f4f6.webp' /></p><h2>&nbsp;அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனை</h2><p>

 மகனின் மரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகனின் செயலைத் தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும், அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துவிட்டது என்றும் ஆவேசமாகக் கூறினார்.</p><p></p><p>

காவல்துறையினர் இருவர் தங்கள் வீட்டிற்கு வந்து தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறினர். தன் கணவர் சுகவீனமாக இருப்பதால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையை அனுபவித்துவிட்டான்.</p><p></p><p>
அவனது உடலை தான் வீட்டிற்கு எடுத்து வரமாட்டேன். அவன் எவ்வித நன்மையும் செய்யவில்லை. அவன் செய்தது பெரும் குற்றம், அதற்கான தண்டனையை அவன் பெற்றுவிட்டான். </p><p>அவனுக்கு எதைச் செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை," என உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரபாஷ் மண்டலின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் &quot;கொமோண்டோ&quot; பங்களா முன்பாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687"></link>
            <id>https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ&quot; பங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (10) 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதிகளில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad65b075-2fe3-4c5d-b31e-95c470231169/26-6a50f1d9a02dc.webp' /></p><p> </p><p>

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/madras-high-court-stays-by-elections-in-tamil-nadu-1783687913"></link>
            <id>https://jvpnews.com/article/madras-high-court-stays-by-elections-in-tamil-nadu-1783687913</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாடு சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. </p><p>

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை இராஜினாமா செய்தார். </p><p>

மறுபுறம் உட்கட்சி மோதல் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5d607ab-ddf9-418d-8cd9-6bb08b58d305/26-6a50eaeb4090d.webp' /></p><p></p><h2>பொதுநல வழக்கு மனு ஒன்று தாக்கல்</h2><p> </p><p>

 தொடர்ந்து தமிழ் நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p></p><p> </p><p>

இதந் காரணமாக மேற்படி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. </p><p>

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பா செல்வோரின் அந்தரங்கங்க காணொளி வெளி நாட்டுக்கு விற்பனை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-video-trafficking-spa-center-police-raid-1783673208"></link>
            <id>https://jvpnews.com/article/secret-video-trafficking-spa-center-police-raid-1783673208</id>
            <summary type="text">&amp;nbsp; பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

 எல்லபகுதியில் இயங்கி வந்த இந்த ஸ்பா மையத்தில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர் போல வேடமணிந்த சென்று சட்டவிரோதச் செயல்பாட்டை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7154de85-272d-4537-ae82-71dc804e6c7b/26-6a50b17a0eee2.webp' /></p><h2>&nbsp;4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணம்</h2><p>
</p><p>
இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னெடுத்த முக்கிய சந்தேக நபர்களாக, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணும், மினுவாங்கொடப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
அங்குள்ள அறைகளில் தந்திரமாகப் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளைப் படம்பிடித்து, அவற்றை வெளிநாட்டுத் தரப்பினருக்குப் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, விபச்சாரம் மற்றும் பாலியல் காணொளி விற்பனைச் செயல்பாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
சந்தேகத்திற்குரிய ஜோடியைத் தவிர, ஜா-எல, மினுவாங்கொட, மாத்தளை மற்றும் வெலிமடைப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் இந்தச் சோதனையின் போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் அலைபேசிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
</p><p>
உவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்ஸிரி விஜேரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரவளைப் பிரிவு விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை ; பிரபல நிறுவனத்தின் காருக்குள் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-abducted-stripped-and-tortured-1783679180"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-abducted-stripped-and-tortured-1783679180</id>
            <summary type="text">திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">


 யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார்&nbsp; குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe420bd-a47c-4c58-94d3-5b15aa82de79/26-6a50c8cdd068c.webp' /></p><h2 style="text-align: justify;">கடத்தல் சம்பவம்&nbsp;</h2><p style="text-align: justify;">
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், 

யாழ். இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c3e8a2-8872-48ec-831e-52611bfc898f/26-6a50c8ce88959.webp' /></p><p style="text-align: justify;">

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ். பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இந்நிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.

சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
இதனை அடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதேவேளை பொலிஸாரின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன், தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T12:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று தொடர்பில் விசேட எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-warning-regarding-strong-winds-1783684766"></link>
            <id>https://jvpnews.com/article/special-warning-regarding-strong-winds-1783684766</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பில் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, ஹம்பாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டின் சில கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பில் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.</p><p>

அதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் மற்றும் மன்னார் முதல் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58f5063-9a5e-4fd5-a73c-fcfb90720301/26-6a50de9fb94d8.webp' /></p><p>

இந்த எச்சரிக்கை நாளை (11) முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

 எனவே கடற்றொழிலாளர்கள் குறித்த கடல் பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T11:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகள் கவனிக்கவும் ; மூன்று புகையிரத கடவைகள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-railway-crossings-closed-in-kandy-1783684517"></link>
            <id>https://jvpnews.com/article/three-railway-crossings-closed-in-kandy-1783684517</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை தொடருந்து மார்க்கத்தின், பேராதனை மற்றும் கண்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில், அமைந்துள்ள முல்கம்பொல புகையிரத கடவை, புனரமைப்புப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை தொடருந்து மார்க்கத்தின், பேராதனை மற்றும் கண்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில், அமைந்துள்ள முல்கம்பொல புகையிரத கடவை, புனரமைப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
</p><p> 

இருவழிப் தொடருந்து பாதைக்கு ஏற்ப இந்த தொடருந்து கடவையைத் தரமுயர்த்தும் நோக்கில் குறித்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0429ed32-c71b-4185-8533-8c636e34ffe7/26-6a50dda6b9e87.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இன்று (10) மாலை 6 மணி முதல் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த தொடருந்து கடவை வாகனப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
</p><p>
கெட்டம்பே - கண்டி மேல்பாதை மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தையை இணைக்கும் குறித்த முல்கம்பொல தொடருந்து கடவை மூடப்படுவதால், குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் கோரியுள்ளது.</p><p></p><p>
மேலும் குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மற்றும் போக்குவரத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T11:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 ஆவது சீசன் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-vijay-tv-bigg-boss-season-10-1783679907"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-vijay-tv-bigg-boss-season-10-1783679907</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

 

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
</p><p>
 

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ccf8aa-fa50-49ac-92fb-a965ec80377c/26-6a50cd092f44f.webp' /></p><p> </p><p>

கடைசியாக ஒளிபரப்பான 9 ஆவது சீசனில் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா கணேஷ் வென்றார். </p><p>

ஆனால் மக்கள் வெற்றியாளராக கானா வினோத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அவர் இடையில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து திவ்யா கணேஷ் வெற்றிப் பெற்றார்.</p><p> 

 இந் நிலையில் செப்டம்பர் 6 முதல் பிக்பாஸ் 10 ஆவது சீசன் ஆரம்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உச்சம் தொட்ட கறுவாப்பட்டையின் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cinnamon-prices-hike-in-sri-lanka-1783678831"></link>
            <id>https://jvpnews.com/article/cinnamon-prices-hike-in-sri-lanka-1783678831</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1cde15-4fc7-413a-9470-3697f449dbb3/26-6a50c7716154e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை கறுவாப்பட்டைக்கான அதிக கேள்வி மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T10:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1783678612"></link>
            <id>https://jvpnews.com/article/no-confidence-motion-against-justice-minister-1783678612</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c9df94-bc8b-40dd-8174-2ce845bac6a5/26-6a50c69576a09.webp' /></p><p> </p><p>

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டல் அறைக்குள் அத்துமீறிய மட்டக்களப்பு உறுப்பினர்! அம்பலமான சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kattankudy-urban-council-member-misbehaves-woman-1783665020"></link>
            <id>https://jvpnews.com/article/kattankudy-urban-council-member-misbehaves-woman-1783665020</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயது இளம் தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகரசபை உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயது இளம் தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
திருமணம் முடித்து கணவரைப் பிரிந்து வாழும் அப்பெண், தனது வாழ்வாதாரத்திற்காக குறித்த ஹோட்டலில் 40,000 ரூபாய் சம்பளத்திற்குச் சுத்திகரிப்புப் பணியில் இணைந்துள்ளார். 

சில காலமாகச் சம்பளம் வழங்கப்படாததால், அவர் பணிக்குச் செல்வதைத் தவிர்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0764d54-3ac9-4746-af1f-0e7e6430570b/26-6a50917e43721.webp' /></p><p></p><h2>ஹோட்டல் அறைக்குள் பாலியல் தொல்லை </h2><p> </p><p>இந்நிலையில், நிலுவைச் சம்பளத்தைத் தருவதாகக் கூறி உரிமையாளரான நகரசபை உறுப்பினர் 
பெண்ணை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளார்.
</p><p>
வியாழக்கிழமை (09) காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்த நகரசபை உறுப்பினர், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த அப்பெண், இது குறித்துக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நகரசபை உறுப்பினரைக் கைது செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வௌ்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட உள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p><p>
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T10:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண நகரில் யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை ; அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crackdown-launched-on-beggars-in-jaffna-city-1783677465"></link>
            <id>https://jvpnews.com/article/crackdown-launched-on-beggars-in-jaffna-city-1783677465</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா நட்பு சூழலை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8082ae3f-6644-4eb5-9d90-e469ba740cc3/26-6a50c21b443da.webp' /></p><h2 style="text-align: justify; ">முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டைச் சுற்றுவட்டம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சுற்றுப்பகுதிகளில் யாசகம் என்ற பெயரில் வியாபார நிலையங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72c029d4-86b9-475f-8fe4-66fdf3233ff6/26-6a50c299730ed.webp' /></p><p style="text-align: justify;">



இதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்பும் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அதன்படி, யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்புடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகத்தின் பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சொந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதாகவும், அவர்களின் பாதுகாவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழி பெறப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-10T09:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் பெரும் திருவிழா; விசேட ரயில் சேவைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/festival-nallur-kandaswamy-temple-spl-train-1783675264"></link>
            <id>https://jvpnews.com/article/festival-nallur-kandaswamy-temple-spl-train-1783675264</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) அன்று இடம்பெற்ற வினாநேரத்தின் போது,&nbsp; இரா. சாணக்கியன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85298cc1-ac23-4336-a5e3-8767e54d47c2/26-6a50b9823c284.webp' /></p><h2>திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவை</h2><p>

தற்போது வாரத்திற்கு 4 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவையை, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி சேவையாக அதிகரிக்க வேண்டும்.</p><p>

முப்படையினரின் முற்பதிவு காரணமாகப் பொதுமக்கள் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதால், வடக்கு நோக்கிய ரயில்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க வேண்டும் என சாணக்கியன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.</p><p></p><p>

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "மடு, நல்லூர் மற்றும் தலதா மாளிகை உற்சவங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. திருவிழாக் காலத்தில் விசேட ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். </p><p>

ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் பற்றாக்குறையினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நெருக்கடிகளுக்குக் கட்டம் கட்டமாகத் தீர்வு காண்போம்" என உறுதியளித்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னரே வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருவிழா 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் விமரிசையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T09:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-continues-to-rise-1783674228"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-continues-to-rise-1783674228</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

நாடு தழுவிய ரீதியில் இதுவரை 66,064 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக ஜீன் மாதம் மாத்திரம் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு,&nbsp; கடந்த 9 நாட்களில் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927e05a-ad94-4a76-b076-6661c1573ae6/26-6a50b576431e9.webp' /></p><h2 style="margin-left: 25px;">டெங்கு காய்ச்சல்</h2><p>


மேல் மாகாணத்தில் 34,828 (52.72 சதவீதம்) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென் மாகாணத்தில் 10,372 (15.70 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.</p><p></p><p>

டெங்கு பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T09:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தீவிரம்; பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்களை மூட வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-calls-close-schools-universities-1783674245"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-calls-close-schools-universities-1783674245</id>
            <summary type="text">&amp;nbsp; நா ட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நா ட்டில் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு, அரை-அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு உடனடியாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதனை 'மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்' தலைவர் சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d7c027-ca68-4431-bdcf-3f67424c2711/26-6a50b58753c3b.webp' /></p><h2>சுமார் 70,000 டெங்கு பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகள் பதிவாகும் பகுதிகளில் உள்ள கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கை பொருந்த வேண்டும் என்றும், மீண்டும் திறப்பதற்கு முன் அந்த வளாகங்கள் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
மேல் மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் சுமார் 70,000 டெங்கு பாதிப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.</p><p></p><p>
</p><p>
தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த பிறகு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது பலனளிக்காது என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சஞ்சீவ, நிலைமை மோசமடைவதற்கு முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
மருத்துவமனைகள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள் மற்றும் சிகிச்சை கோரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சோர்வுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
மருத்துவமனைப் படுக்கைகளின் பற்றாக்குறையால் சில நோயாளிகள் படுக்கைகளுக்கு அடியிலோ அல்லது மருத்துவமனை நடைபாதைகளிலோ தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p>

டெங்கு பரவல் தீவிரமடையும் வரை காத்திருப்பது அதைக் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்த டாக்டர் சஞ்சீவ, கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்</p>]]></content>
            <updated>2026-07-10T09:03:46+00:00</updated>
        </entry>
    </feed>
