<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T05:54:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/compensation-considered-for-20-deceased-officers-1783835331"></link>
            <id>https://jvpnews.com/article/compensation-considered-for-20-deceased-officers-1783835331</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 500,000 ரூபா ஆரம்பகட்ட இழப்பீடு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 மில்லியனுக்கும் அதிக தொகையை மொத்த இழப்பீடாக வழங்குவது குறித்து திணைக்களம் தற்போது பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed1507c-f2d6-4fe1-8d18-43e9a34dda6c/26-6a532ac58332e.webp' /></p><h2 style="text-align: justify; ">இழப்பீடு</h2><p style="text-align: justify; ">

உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிச் சடங்குச் செலவுகள் அனைத்தையும் சிறைச்சாலைகள் திணைக்களமே ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இழப்பீடு வழங்குவது குறித்தும் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T05:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் குடும்பத்தினருடன் சென்ற 11 வயது சிறுவன் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-boy-11-dies-during-family-trip-1783834504"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-boy-11-dies-during-family-trip-1783834504</id>
            <summary type="text">மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் நேற்று (10) குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் நேற்று (10) குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; ">



இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த&nbsp; 11 வயதுவர் என தெரியவருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/301b4077-dd64-4721-9a74-01504b08d69a/26-6a532789846f3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மரண விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,&nbsp; </p><p style="text-align: justify; ">குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முயற்சித்தபோது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p style="text-align: justify; ">


உயிரிழந்த சிறுவனின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T05:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு இடையே வெடித்த மோதல் ; விரைந்து செயற்பட்ட இலங்கை பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-during-football-match-1783833686"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-during-football-match-1783833686</id>
            <summary type="text">ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்&#039; கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'யங் மேட்ஸ்' மற்றும் 'நோர்வூட் சன்ரைஸ்' அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9fdffa-fb0e-451b-b0d9-a28c89acc895/26-6a5324580f96f.webp' /></p><h2 style="text-align: justify; ">முறைப்பாடு</h2><p style="text-align: justify; "> 

போட்டி முடிவதற்கு 7 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்த மோதல் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

அந்த நேரத்தில் 'யங் மேட்ஸ்' அணி 3 கோல்களையும், 'நோர்வூட் சன்ரைஸ்' அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்த நிலையில், மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் மைதானத்திற்குச் சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T05:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் போலி நாணய தாள்கள் வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-court-orders-over-fake-currency-case-1783833044"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-court-orders-over-fake-currency-case-1783833044</id>
            <summary type="text">வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p style="text-align: justify;">

வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4182c2-2f50-45b9-9b24-14066795f575/26-6a5321d5e0341.webp' /></p><p style="text-align: justify;"> 

இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால் வழக்கு தொடுனர் தரப்பினரால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை எனும் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தார். </p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-12T05:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக பிடிபட்ட இளம் பெண் ; சோதனையில் அம்பலமான விடயம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-shocking-discovery-made-1783832032"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-shocking-discovery-made-1783832032</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e667965b-315d-43ac-9ce5-39e885c75ff1/26-6a531de15bde7.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

சந்தேக நபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T04:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; பாம்பு தீண்டியதில் நேர்ந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&amp;nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

பண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f067d083-8359-44e2-9d57-cc03c0b3f8a9/26-6a531b5695fe7.webp' /></p><p style="text-align: justify; "> 

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது. </p><p style="text-align: justify; ">

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T04:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ; கோமகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/question-mark-safety-tamil-political-prisoners-1783818186"></link>
            <id>https://jvpnews.com/article/question-mark-safety-tamil-political-prisoners-1783818186</id>
            <summary type="text">நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் தலைவர் கோமகன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை நிலைமை தொடர்பில் கடும் கவலை வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c533abed-9649-467f-8a47-6890f93264b3/26-6a52e7cb7b4a3.webp' /></p><p>சிறைச்சாலைகளில் "கைதிகளும் மனிதர்களே" என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் கைதிகள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகள் அரங்கேற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், கைதிகள் எந்தக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றார்.</p><p>

தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் வன்முறைச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் இருப்பதாக அச்சம் வெளியிட்ட கோமகன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>
மேலும், சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியப் போக்கையும், அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T01:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கும் எல் நினோ ; யாழ். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-jaffna-nagamuthu-pratheeparaja-warns-1783812767"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-jaffna-nagamuthu-pratheeparaja-warns-1783812767</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், இதன் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், இதன் தாக்கம் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தீவிரமடையக்கூடும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், எல் நினோவால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.</p><p>

பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை வறட்சியான காலநிலையும் அதிக வெப்பமும் நிலவுகின்றன. </p><p>இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள், முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் மற்றும் வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே நீர் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf4f4cb-e14b-4ee9-8ea1-a91342ce6f1b/26-6a52d2a14208e.webp' /></p><p>கடந்த 60 நாட்களில் இந்தப் பகுதிகளில் வெறும் 12 மில்லிமீற்றர் மழை மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் 288 மில்லிமீற்றருக்கும் அதிகமான நீர் ஆவியாகியுள்ளதாகவும், இதனால் நீர் வளங்கள் வேகமாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் அதிகரிப்பதால் வெப்பநிலை மேலும் உயர்ந்து, ஆவியாக்கமும் பல மடங்கு அதிகரிக்கும். மழையற்ற வறண்ட காலநிலை நீடிப்பதால் தற்போது உள்ள நீர்நிலைகளே மக்களின் பிரதான நீர் ஆதாரங்களாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

எனவே, தற்போதுள்ள நீர் வளங்களை வீணாக்காமல் பாதுகாப்பதுடன், சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை அரசாங்கமும் மக்களும் இணைந்து உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>

மத்திய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ உருவாகியுள்ளது அனைத்து காலநிலை மாதிரிகளாலும் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜூலை 10 ஆம் திகதி நிலவரப்படி எல் நினோ 3.4 பிராந்தியத்தின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1.4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் 2 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அதன் தாக்கம் இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கைக்கு அருகில் விரிவடையும் என்றும் அவர் கூறினார். </p><p>மேலும், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலையும் தற்போதைய நிலையை விட சுமார் 1.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8a9476-4699-4d0a-9d86-33fb08ad1cc8/26-6a52d2a1e8ed0.webp' /></p><p>எல் நினோவுடன் தொடர்புடைய வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் எதிர்பாராத காட்டுத்தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் மழை பெய்யும் சாத்தியமும் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
</p><p>
அரசாங்க திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு, நீர் பாதுகாப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்தால் மட்டுமே இந்த எல் நினோ காலநிலை சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:58:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-shine-benefits-jupiter-s-star-transit-1783817348"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-shine-benefits-jupiter-s-star-transit-1783817348</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.&amp;nbsp;ஜோதிடரீதியாக இந்த கிரக மாற்றம் மிகவும் மங்களகரமானதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.&nbsp;ஜோதிடரீதியாக இந்த கிரக மாற்றம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் பொதுவாக 27 நட்சத்திரங்களின் அரசனாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fba3af9-c303-44b6-9447-ca046b35ba60/26-6a52e488980ad.webp' /></p><p>இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f142cfd-d146-44b5-9841-d47da37fabc9/26-6a52e487e39ab.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு, குருபகவான் பூச நட்சத்திரத்தில் நுழைவது நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடங்கியிருந்த அவர்களின் பணம் இப்போது திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும், இதன் மூலம் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொழில்ரீதியாக, இந்த நேரத்தில் அவர்களின் பொருளாதார நிலை வலுவடையும். வேலை மாறத் திட்டமிடுபவர்களுக்கு இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும். அதேவேளையில், பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0ae62c-14f4-43dd-ad22-47adb6027c00/26-6a52e485e5bef.webp' /></p><h3>கடகம்</h3><p>
குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமானப் பலன்களை அளிக்கும் என்று கருதப்படுகிறது. கடக ராசியில் குருபகவான் ஏற்கனவே வலுவான நிலையில் இருப்பதால், இந்த மாற்றம் பணியிடத்திலும் சமூகத்திலும் அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. அவர்களின் புத்திசாலித்தனமும், முடிவெடுக்கும் திறனும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெற்றுத்தரும்.</p><p>வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது முக்கியமான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கோ அல்லது தற்போதைய தொழிலை விரிவுபடுத்துவதற்கோ மிகச் சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. இதனால் அவர்களின் பொருளாதார நிலையும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களை வாட்டிக்கொண்டிருந்த மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களை அதிக ஆற்றலுடனும் நேர்மறையான மனநிலையுடனும் உணரச் செய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6830fb38-dea8-491e-9d2e-e85bb0313c96/26-6a52e48692a27.webp' /></p><h3>தனுசு
</h3><p>தனுசு ராசியின் அதிபதியே குருபகவான் என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாக நிலுவையில் இருந்த பணிகள் இறுதியாக வெற்றிகரமாக முடிவடையும், மேலும் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்கள் வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைய இந்த நட்சத்திர மாற்றம் அவர்களுக்கு உதவும்.</p><p>இந்த காலம் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்ட இது சிறந்த காலகட்டமாக இருக்கும். மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5742e84-1571-4c42-b508-4be5a62422b4/26-6a52e487403be.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T00:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராமில் AI புகைப்பட வசதிக்கு எதிர்ப்பு ; மெட்டா எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-photo-feature-instagram-meta-s-sudden-decision-1783816022"></link>
            <id>https://jvpnews.com/article/ai-photo-feature-instagram-meta-s-sudden-decision-1783816022</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராம் (instagram) தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.
insta...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராம் (instagram) தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>instagramஇன் தாய் நிறுவனமான மெட்டா, 'மியூஸ் இமேஜ்' (Muse Image) என்ற புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
</p><p>
இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இருக்கும் instagram கணக்குகளில் உள்ள புகைப்படங்களைக் கொண்டு, எவரும் AI மூலம் புதிய படங்களை உருவாக்க முடியும்.

இந்த வசதி, பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த வழிவகுப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df988212-4b59-4508-bb42-1a67ce218c7c/26-6a52df580bd52.webp' /></p><p>

குறிப்பாக, பயனர்கள் அனைவரும் முன்னிருப்பாகவே (Default) இதில் இணைக்கப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
</p><p>
இந்த தொழில்நுட்பம் தனியுரிமையை மீறுவதாக, Sag-Aftra மற்றும் 'Privacy International' போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
</p><p>
மக்களின் கருத்துகளைத் தவறாகக் கணித்துவிட்டதாக ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம், இந்த வசதியை உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
</p><p>
மேலும், இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:27:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/financial-scheme-university-students-special-needs-1783815241"></link>
            <id>https://jvpnews.com/article/financial-scheme-university-students-special-needs-1783815241</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
 
குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.</p><p></p><p>
 
குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.</p><p>இதன் முதற்கட்டமாக, நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்ற 'சரஸ்வி திரியோ அபிமான் 2026' நிகழ்வில், 236 மாணவர்களுக்கு இதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff4da33-76f3-4bc6-9b0f-cd7e2735ecce/26-6a52dc4ad2ca6.webp' /></p><p>

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவையுடையோர் என வகைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
</p><p>
விசேட தேவையுடைய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஸ்.ஜானகி மறைவு ; தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/s-janaki-passes-away-joseph-vijay-condoles-1783814359"></link>
            <id>https://jvpnews.com/article/s-janaki-passes-away-joseph-vijay-condoles-1783814359</id>
            <summary type="text">இந்திய திரையிசை உலகின் &#039;இசைக்குயில்&#039; என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய திரையிசை உலகின் 'இசைக்குயில்' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.</p><p> </p><p></p><p>அவரது மறைவு இந்திய இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ். ஜானகியின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1348b722-fcdc-4ba2-9e6d-fa26324e2aa9/26-6a52d8d8cf5fb.webp' /></p><p>
</p><p>
அதில், "தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ். ஜானகி. பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இந்திய இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். </p><p>அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எஸ். ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T23:59:30+00:00</updated>
        </entry>
    </feed>
