<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T05:01:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த கடற்படை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293"></link>
            <id>https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293</id>
            <summary type="text">&amp;nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். </p><p>

குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256398a7-e6a8-4efe-bd7a-27730c3e0a81/26-6a546ed73bf14.webp' /></p><p> 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தங்காலை பொலிஸார் , முதியவரின் இளைய மகனான ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்துள்ளனர்.</p><p> 

குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, அதீத போதையில் காணப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T04:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி சென்னையில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215"></link>
            <id>https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215</id>
            <summary type="text">&amp;nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083d9f21-b147-4622-b49c-874384ab923f/26-6a546aa0a5cee.webp' /></p><p>

 தம்பதிகள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியானது.

 நேற்று முன்தினம் இருவரும் இலங்கை வருவதற்காக , சென்னை வானூர்தி நிலையம் சென்றபோது கைதாகியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T04:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761</id>
            <summary type="text">&amp;nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



தீ விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e59c529-00f9-43b5-b6d7-815e3be76c36/26-6a5468dac1b38.webp' /></p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-13T04:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T01:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&amp;nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef134-df9c-4792-a1f8-80fea7d926ca/26-6a541eeb321bb.webp' /></p><p>அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்.&nbsp;இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fe9914-5bd0-4115-8dc7-068c8a3db572/26-6a541eebd6b77.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் காணக்கூடும். ஊடகம், கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சில் தாக்கம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5d25a1-b910-4070-9e7a-86dcc6560a68/26-6a541eec858c3.webp' /></p><h4>கன்னி</h4><p>
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8df9e7-d6dc-4b67-b066-eacf0a5cb29a/26-6a541eed334a4.webp' /></p><h4>விருச்சிகம்
</h4><p>விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். இது வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு இருந்தால், குருவின் அருளால் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d1e078b-654e-4ca9-af65-bca456a896f5/26-6a541eee846a9.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பண வரவு அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a84f0d4-dd15-4d80-9078-0530449e03d5/26-6a541eef330fb.webp' /></p><h4>மீனம்
</h4><p>மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். குரு அருளால் எதிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f500b4c-e317-41ae-adf5-3dbacb8a2415/26-6a541eefd8b4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-13T00:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799"></link>
            <id>https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799</id>
            <summary type="text">சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p> </p><p></p><p>நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f7004ff-a1ea-4732-aae4-8c187731bec7/26-6a542a830406f.webp' /></p><p>சிறுநீரக கல் நோய் இலங்கையில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் 30 க்கும் மேற்பட்ட விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுகள் விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் பணியாற்றினாலும், சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. 

குறிப்பாக, உள்கட்டமைப்பின் குறைவான வளங்கள், குறைவான அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பத்திற்கான குறைவான வளங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. </p><p>

இலங்கையில் சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் தற்போது 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் இந்த நாட்டின் சுகாதார சேவையில் ஒரு தீர்க்கமான மற்றும் மாபெரும் முன்னேற்றமாகும் என்றும், சுகாதாரத் துறை மட்டுமின்றி பல தரப்பினரையும் உள்ளடக்கி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.</p><p> 

நாட்டில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த மையம் நாட்டு மக்களுக்கும், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சுகாதார சேவைக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்றும் தெரிவித்தார். </p><p>

இந்த நாட்டின் சுகாதார சேவையில் பல சமயங்களில் காத்திருப்போர் பட்டியல்கள் உள்ளன என்றும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே அந்தக் காத்திருப்போர் பட்டியல்களைத் தாண்டி சிகிச்சை சேவைகளைப் பெறும் நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p> 

மாறாக, முழு மக்களும் ஆரோக்கியமாக இருக்க சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் போர்வையில் சேவைகள் பராமரிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்குப் பலன் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>

முறையான திட்டமிடல் திட்டத்தைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் நாட்டின் சுகாதார சேவையில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும், அந்த உபகரணங்கள் மூலம் சேவைகள் முழுத் திறனில் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். </p><p>

சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:00:13+00:00</updated>
        </entry>
    </feed>
