<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T13:10:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம ஆலயத்திற்கு விசேட பேருந்து சேவைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-bus-services-to-the-kataragama-temple-1783775264"></link>
            <id>https://jvpnews.com/article/special-bus-services-to-the-kataragama-temple-1783775264</id>
            <summary type="text">


கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கொழும்பில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
 கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையிலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமம் வரையிலும் இந்த விசேட பேருந்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49196811-ef3a-4f4b-8bc4-f81c2619bc29/26-6a5240221bd2d.webp' /></p><p>
</p><p>
பயணிகளின் நலன் கருதி, கதிர்காமம் பேருந்து நிலையத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக இரண்டு விசேட முன்பதிவு நிலையங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன.

 கதிர்காம உற்சவத்திற்குச் செல்லும் பக்தர்கள் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T13:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டன் கறி இல்லை... கோழி இறைச்சி பரிமாறியதால் களேபரமான திருமண வீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/where-s-mutton-clash-bihar-bride-groom-families-1783773209"></link>
            <id>https://jvpnews.com/article/where-s-mutton-clash-bihar-bride-groom-families-1783773209</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பான மோதலில் 12 பேர் காயமடைந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பீகாரில் நடைபெற்ற திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பான மோதலில் 12 பேர் காயமடைந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><p>
திருமண விருந்தில் மட்டன் (ஆட்டிறைச்சி) பரிமாறப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக சிக்கன் பரிமாறப்பட்டதால் மணமக்களின் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f32f404-e796-4f8b-bde7-e1b81f98451b/26-6a52381a5c0c2.webp' /></p><p></p><h2>&nbsp;மணமகன் தரப்பில் பலர் காயம்</h2><p>மணமகன் தரப்பினருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மட்டனுக்குப் பதிலாக கோழி இறைச்சி பரிமாறப்பட்டபோது இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. திருமண விழா முடிந்த பிறகு அவர்கள் உணவு உண்ண அமர்ந்தபோது இது தொடங்கியது.
</p><p>
உணவுப் பட்டியல் குறித்த கருத்து வேறுபாடு விரைவில் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பாக மாறியது.</p><p></p><p>

இந்த வாய்மொழி வாக்குவாதம் மோதலாக மாறியது, இரு தரப்பினரும் கைகளாலும் தடிகளாலும் தாக்கிக்கொண்டதில், மணமகன் தரப்பைச் சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
இந்த வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசித் தாக்கி மோதிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
உணவுக்காகத் திருமண வீட்டையே போர்க்களமாக மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T12:32:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/r-sampanthan-s-second-death-anniversary-1783771413"></link>
            <id>https://jvpnews.com/article/r-sampanthan-s-second-death-anniversary-1783771413</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0542f0-7825-4156-be91-1187a9d6a99f/26-6a52311687001.webp' /></p><p>இவ்நினைவேந்தலின் போது அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>
</p><p>


இதில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 வயது காதலியுடன் லாட்ஜில் தங்கிய 19 வயது காதலனுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-boy-stayed-in-a-lodge-die-chhattisgarh-1783750885"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-boy-stayed-in-a-lodge-die-chhattisgarh-1783750885</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம்&nbsp; தொடர்பில் இந்திய ஊடகங்கள்&nbsp; தெரிவித்துள்ளதாவது,&nbsp;</p><p> 

சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் பிலாயின் 'கேம்ப்-1' பகுதியைச் சேர்ந்த , 19 வயது ஷதாப் ஷேக் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9856cc1-982c-44e0-a3aa-e4ea7dc51f1d/26-6a51e0e68497a.webp' /></p><h2>கொலையா? தற்கொலையா? என விசாரணை&nbsp;</h2><p> </p><p>

ஸ்மிருதி நகர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோஹ்கா பகுதியில் உள்ள 'ஹோட்டல் குனால்' என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>

ஷதாப் மற்றும் அவரது 23 வயது காதலி கடந்த 8 ஆம் திகதி மாலை&nbsp; &nbsp;லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இருவரும் அறையில் வைத்து மது அருந்திய போது ஷதாப்பிற்கு அவரது முன்னாள் காதலியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய காதலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.</p><p></p><p> 

 வாக்குவாதம் தீவிரமடைய மதுபோதையிலிருந்த அந்தப் பெண் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் மயக்கமடைந்ததாகவும் தெரிகிறது. </p><p>இந் நிலையில் காதலியின் ஸ்கார்ஃப் துணியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை அறிந்த ஷதாப்பின் நண்பர்கள் சிலர், இரவு 11 மணியளவில் ஹோட்டலுக்கு வந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். 

அவர்கள் அறையின் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.</p><p></p><p> மறுநாள் காலை, அந்தப் பெண் அறையிலிருந்து வெளியே வந்து ஷதாப் தூங்கிக்கொண்டிருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.</p><p> பின்னர் காலை 9 மணியளவில் ஷதாப்பின் நண்பர்கள் மீண்டும் வந்து அறைக்குள் சென்றபோது அவர் எந்த அசைவும் இன்றி கிடந்ததால் அவரை தனியார் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றனர். 

அங்கு உடலை பரிசோதித்த வைத்தியர்கள் ஷதாப் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>

 ஷதாப்பின் காதலியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞரின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:50:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை யுவதியின் இதயத்தை உருக்கும் உண்மைக் கதை; காதலனை நம்பியதால் கைநழுவிய மருத்துவ கனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791"></link>
            <id>https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் மீது நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளான நிலையில் ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் மீது நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளான நிலையில் யுவதி சிறை சென்றதன் பின்னனி கதை வெளிவந்துள்ளது.
</p><p>
மருத்துவராகி மக்களௌக்கு சேவை செய்யவேண்டிய யுவதி, காதலனை நம்பியதால் இன்று மப்பி எண்ணி கொண்டிருக்கின்றார்.

சட்டத்தின் பிடியில் சிக்கி, தங்கள் உரிமைக்காக கூரையின் மீது ஏறியிருந்த இளம் பெண்களில் ஒருவரின் முகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a14beb5-b98f-4c1a-a5e2-d4d71f838941/26-6a520b80a425a.webp' /></p><h2>இதயத்தை உருக்கும்&nbsp; வேதனையான&nbsp; வாழ்க்கைக் கதை&nbsp;</h2><p>
</p><p>
"இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் இப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார்?" என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.

 சமூக ஊடகங்களில் அந்த யுவதி தொடர்பில் பலரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த புன்னகையின் பின்னால் இதயத்தை உருக்கும் அளவுக்கு வேதனையான ஒரு வாழ்க்கைக் கதை மறைந்திருந்தது.</p><p></p><p>

 அவரின் வாழ்க்கையை ஆராய்ந்த சகோதர மொழி பத்திரிகையாளர் நாலிந்த தனரஞ்சன் ,&nbsp;இந்த சோகமான சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அவர் பகிர்ந்த விவரங்களின்படி, </p><p>அந்த கைதி ஒரு காலத்தில் பதுளையைச் சேர்ந்த, பிரகாசமான எதிர்காலம் கொண்ட, நம்பிக்கைக்குரிய மாணவர் தலைவராகவும் திறமையான வலைப்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e2bc9a-5b71-4324-b587-b15eb5bf7ba8/26-6a520b81598a3.webp' /></p><p>
</p><p>
அவர் தனது உயர் மட்டத் தேர்வுகளை முடித்து, நெகம்போவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது வாழ்க்கை மாறியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், வாட்ஸ்அப் மூலம் சந்தித்த தனது காதலன் மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.
</p><p>
அவரது வேண்டுகோளின் பேரில், ஒரு பார்சலைக் கொண்டு செல்ல அவர் ஒப்புக்கொண்டார். அந்த சம்பவத்தின்படி, அந்தப் பார்சலில் சட்டவிரோத போதைப்பொருள் இருந்தது அவருக்குத் தெரியாது. கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் அந்த பார்சலை இடைமறித்து, அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
அவர் சிறையில் இருந்தபோது இந்த சோகம் மேலும் ஆழமானது. தேசிய தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டபோது, அந்த இளம் பெண் மருத்துவ பீடத்தில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றிருப்பதை அறிந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
ஒரு மதிப்புமிக்க தொழில் வாழ்க்கைக்கு வழிவகுத்திருக்க வேண்டிய ஒரு மைல்கல், அதற்குப் பதிலாக ஒரே ஒரு முடிவால் சிதைக்கப்பட்ட எதிர்காலத்தின் வேதனையான நினைவூட்டலாக மாறியது.</p><p></p><p>

நெகம்போ சிறைச்சாலையில் வைரலான இந்தக் கதை, ஏமாற்றும் ஆன்லைன் உறவுகளின் ஆபத்துகள் குறித்த ஓர் எச்சரிக்கையாக மாறியுள்ளது. குற்றக் குழுக்கள், சந்தேகப்படாத மக்களைத் தூதுவர்களாகப் பயன்படுத்த, உணர்வுப்பூர்வமான பிணைப்புகளை அதிகளவில் சுரண்டுகின்றன என்று சட்ட அமலாக்க அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43dd143-af16-462a-8089-106f993b0ad7/26-6a522d41c0f12.webp' /></p><p>அறியாமலேயே நடந்த இந்தச் சம்பவம், காவல்துறைக்கு கிடைத்த தகவலால் முடிவுக்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அவர் இன்று நீர்கொழும்பு சிறையில், தனது உரிமைகளுக்காக மற்ற கைதிகளுடன் கூரையின் மீது நின்று குரல் கொடுக்கிறார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவு கண்ட கண்கள், இன்று சிறைச்சாலையின் வானத்தை நோக்கி கண்ணீருடன் நிற்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T11:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 600 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-decision-announced-on-600-negombo-prisoners-1783770138"></link>
            <id>https://jvpnews.com/article/major-decision-announced-on-600-negombo-prisoners-1783770138</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4a00582-edd6-47fe-b395-1cac062943ad/26-6a522c1b6d72c.webp' /></p><h2 style="text-align: justify;">மோதல் சம்பவம்</h2><p>
</p><p style="text-align: justify;">
அதேநேரம், இந்த மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">
இதேவேளை, இந்த மோதலின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் உடனடியாகப் பதவியுயர்வு மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக் கொண்டு கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அத்துடன், 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் இந்த மோதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-11T11:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 இந்தியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு விபத்து; 15 பேர் பலியானதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-boat-carrying-32-indians-accident-vietnam-1783770005"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-boat-carrying-32-indians-accident-vietnam-1783770005</id>
            <summary type="text">&amp;nbsp;வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று காலை 11.30 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b9c803-4bda-4727-bdbb-f8e6c7ba4e71/26-6a522b96c91ca.webp' /></p><h2>திடீரென படகு கவிழ்ந்து விபத்து</h2><p>
</p><p>
தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு அருகே கடலில் படகு சவாரிக்கு, இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்றுள்ளனர். சுற்றுலாப் படகில் அவர்களுடன் 3 ஊழியர்களும் இருந்தனர்.</p><p></p><p>
</p><p>


கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.







இதையடுத்து வியட்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndiaInVietnam%2Fposts%2Fpfbid02CyB4ugfhZEvDBPyjirbEJ6FENAR9sqnZaJv4QD35TJnNre2eUP2xiXbjvmpAUt6Al&show_text=true&width=500" width="500" height="277" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
</p><p>
 இந்திய மத்திய அரசு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும் ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T11:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த இணைப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-warned-not-to-download-these-links-1783768009"></link>
            <id>https://jvpnews.com/article/public-warned-not-to-download-these-links-1783768009</id>
            <summary type="text">அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. </p><p style="text-align: justify; ">

யாராவது அல்லது ஏதேனும் நிறுவனம் தனது தனிப்பட்ட தகவல்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டால், 101 என்ற இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து அறிவிக்குமாறும் அந்தச் குழு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5893573-7589-4b4c-badc-139c0d9dca52/26-6a5223ca7922c.webp' /></p><h2 style="text-align: justify; ">அவசர கடன்கள்&nbsp;&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

சமூக வலைதளங்களில் தற்போது அவசர கடன்களை பெற்றுக்கொள்ளலாம் எனப் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இந்தச் செய்திகளில், சில நிறுவனங்கள் 5,000 முதல் 150,000 ரூபாய் வரையிலும், வேறு சில நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கத் தயார் எனத் தெரிவிக்கின்றன. </p><p style="text-align: justify; ">

"ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை" என்பது இவர்களின் முக்கிய கவர்ச்சியாக உள்ளது. 

இந்த மோசடி நிறுவனங்களின் உண்மையான நோக்கம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகும். 

கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்யுமாறு அவர்கள் பணிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதை கிளிக் செய்தவுடன், அவர்கள் மோசடிகாரர்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். 

இந்த இணைப்பின் மூலம் 'ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்' (RAT) எனப்படும் மென்பொருள் பயனரின் கைபேசிக்குள் நுழைகிறது. </p><p style="text-align: justify; ">இது கைபேசியின் கட்டுப்பாட்டை மோசடிகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. இதன் மூலம் கைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், நண்பர்களின் தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் அவர்களால் அணுக முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

முதலில் சிறிய கடன் தொகையை வழங்கி, பின்னர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்குப் பெரிய கடனாக மாற்றி, வட்டி மற்றும் நிபந்தனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை இவர்கள் அச்சுறுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; ">

நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், தங்களின் நண்பர்கள் முன்னிலையில் கடன் பெற்றுச் சிக்கலில் சிக்கியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். 

இலகுவான கடன் பெறச் சென்று இறுதியில் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T11:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-update-on-vehicle-imports-released-1783766470"></link>
            <id>https://jvpnews.com/article/key-update-on-vehicle-imports-released-1783766470</id>
            <summary type="text">&amp;nbsp;வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



நாட்டின் வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை வாகன இறக்குமதியால் கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c31c73-afc0-45ab-b048-62959db4efa0/26-6a521dc7f2899.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">இறக்குமதி கொள்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பது தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், அதிக இறக்குமதி வரிகளை தொடர்ச்சியாக விதிப்பதை விட, அரச செலவினங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் நாட்டின் வரி வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T10:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்பு பண்ணையில் புகுந்த வெள்ளம் ; தப்பியோடிய ராஜநாகங்கள் ; பிடித்து சென்ற மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-hits-snake-farm-in-china-1783764683"></link>
            <id>https://jvpnews.com/article/flood-hits-snake-farm-in-china-1783764683</id>
            <summary type="text">சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக்கு மத்தியில், பண்ணைகளில் இருந்து தப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக்கு மத்தியில், பண்ணைகளில் இருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
பாரம்பரிய மருத்துவத் தேவைகளுக்காகச் சுமார் 30 மில்லியன் பாம்புகள் வளர்க்கப்படும் சீனாவின் மிகப்பெரிய பாம்பு வளர்ப்பு மையமான குவாங்சியில், தற்போதைய வெள்ளத்தினால் கோப்ரா (Cobra) உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட கொடிய விஷமுள்ள பாம்புகள் பண்ணைகளில் இருந்து தப்பியோடி வெள்ள நீரில் மிதந்து வருவதாக சீன ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe2c7b1-85d3-4a1b-9422-bb711c7c1c77/26-6a5216cca71c8.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;6 பேர் பலி&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
வெள்ளத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பாம்புகளைப் பிடிப்பதற்காக விசேட மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அத்துடன், பாம்புக்கடிக்குள்ளாகுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இந்த பயங்கர புயல் மற்றும் வெள்ளப் பெருக்கினால் அணைகள் உடைந்ததில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
மேலும், வெள்ளப் பாதிப்பினால் பன்றிப் பண்ணைகள், மல்லிகைத் தோட்டங்கள் மற்றும் மர உற்பத்திப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், உள்ளூர் மிருகக்காட்சி சாலை ஒன்றிலிருந்து வரிக்குதிரைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளும் தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-11T10:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் திடீர் விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/judicial-service-association-president-resigns-sl-1783764415"></link>
            <id>https://jvpnews.com/article/judicial-service-association-president-resigns-sl-1783764415</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707033a0-37be-4a5e-8e1f-0cf7da3c4ceb/26-6a5215c09c78a.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடுவதற்காகவும், உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பொதுச் சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நீதிச் சேவை சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
நிர்ணயிக்கப்பட்டபடி சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று நடைபெறும் என்று செயலாளர் தனது கடிதத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-11T10:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ugc-issues-university-admission-cut-off-update-1783761132"></link>
            <id>https://jvpnews.com/article/ugc-issues-university-admission-cut-off-update-1783761132</id>
            <summary type="text">அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2113f876-a460-4ca8-a1b6-fb1587750d89/26-6a5208ee69064.webp' /></p><h2 style="text-align: justify; ">கல்வி நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து, மொத்தம் 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல புதிய பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் புதிய கல்வி நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T09:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் ஒருவரும் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/all-female-prisoners-at-negombo-prison-transferred-1783760505"></link>
            <id>https://jvpnews.com/article/all-female-prisoners-at-negombo-prison-transferred-1783760505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 166 பெண் கைதிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728dde83-777d-42c2-9f62-e66aca79b686/26-6a52067ab3a25.webp' /></p><p>

இதன்படி, குறித்த பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை, அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐ. நா கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-un-expresses-deep-concern-1783759816"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-un-expresses-deep-concern-1783759816</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடகப் பேச்சாளர்&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.
</p><p>
 சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐ. நா ஊடகப் பேச்சாளர் , </p><p>இம்மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பல டஜன் கணக்கானோரின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று தெரியவர வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1a5c-7e35-45f6-b9da-4e1048477641/26-6a5203c9e00b3.webp' /></p><h2> இலங்கையின் தடுப்புக்காவல் மையங்கள்</h2><p> </p><p>

"இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை நாம் வரவேற்கிறோம். அவ்விசாரணைகள் உடனடியாகவும், சுயாதீனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும். </p><p>இந்த வன்முறையானது, இலங்கையின் தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது</p><p> 

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருத்தல், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவான நெரிசல் மற்றும் அங்குள்ள போதிய வசதியின்மை போன்ற குறைபாடுகளும் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவே பெருமளவான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோருக்குச் சிறைத்தண்டனை வழங்குவதை விடுத்து, ஆரோக்கியம் சார்ந்த புனர்வாழ்வு அணுகுமுறைகளையே வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"</p><p>பாதிக்கப்பட்ட கைதிகள் மாற்றப்பட்ட ஏனைய சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்கள் உள்ளிட்ட நீர்கொழும்பு சிறைச்சாலைக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் எவ்வித தடங்களுமின்றிச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்க வேண்டும். </p><p>
ஏனெனில், மாற்றப்பட்ட கைதிகள் அங்கு சித்திரவதைகளுக்கும் ஏனைய மோசமான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன" என்றும் ஐநா ஊடகப் பேச்சாளர்&nbsp; வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T08:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையினர் சோதனையில் புதர்க்காட்டில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-items-seized-in-navy-surprise-raid-1783758065"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-items-seized-in-navy-surprise-raid-1783758065</id>
            <summary type="text">கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியிலும் மற்றும் சிலாபம் கருக்கப்பனைப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியிலும் மற்றும் சிலாபம் கருக்கப்பனைப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மருந்துப் பொருட்கள் மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 



அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனம் கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொதியானது சோதனையிடப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07b1f17-ef39-4ebd-891e-2a7fee441794/26-6a51fcf2f36ae.webp' />&nbsp;</p><h2 style="text-align: justify;">மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify;">







அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் எழுபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபது (71,960) மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர். </p><p style="text-align: justify; ">மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்பபண்ணி' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சிலாபம் கருக்கப்பனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பத்து (10) பொதிகள் சோதனையிடப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">


அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று ஒரு (401) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கடற்படையினர் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">



இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் மீட்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடமும், பீடி இலைகள் சிலாபம் மதுவரி திணைக்கள அலுவலகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T08:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் திகதி வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-date-of-vijay-jana-nayagan-announced-1783757154"></link>
            <id>https://jvpnews.com/article/release-date-of-vijay-jana-nayagan-announced-1783757154</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். 

பொங்கலுக்கு ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். </p><p>

பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் CBFC காலம் தாழ்த்திய நிலையில் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. 

தற்போது ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdbe979-3b15-44bc-a33f-5a638068eac2/26-6a51f9639faf5.webp' /></p><p> பல கட் மற்றும் மியூட் உடன் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

ஜனநாயகன் படம் ஜூலை 24 ஆம் திகதி ரிலீஸ் என்பதை UK-வில் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p> 

மேலும் முன்பதிவை தொடங்கிய உடனே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🔥🔥 <a href="https://x.com/hashtag/JanaNayagan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayagan</a> — 24 JULY! 🔥🔥<br><br>Tickets ON SALE at <a href="https://x.com/cineworld?ref_src=twsrc%5Etfw">@cineworld</a> and the show count is ABSOLUTELY INSANE! <br><br>Years from now, people will ask if you were there. Make sure your answer is YES.<br><br>This isn’t just a film. It’s a goodbye to the man who gave us everything. UK 🇬🇧 — we need… <a href="https://t.co/8CvuAKIFA3">pic.twitter.com/8CvuAKIFA3</a></p>&mdash; Ahimsa Entertainment (@ahimsafilms) <a href="https://x.com/ahimsafilms/status/2075567125935129016?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-11T08:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ குறித்து வௌியான முக்கிய அறிவிப்பு ; ஏற்படவுள்ள மாற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-el-ni-o-update-sparks-weather-concerns-1783755798"></link>
            <id>https://jvpnews.com/article/key-el-ni-o-update-sparks-weather-concerns-1783755798</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த 'எல் நினோ' நிலை காரணமாக இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f257c37d-b6d6-489b-aa27-6afca1c6e145/26-6a51f4178c437.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;அதிக மழை வீழ்ச்சி&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரை 'எல் நினோ' நிலை மிகவும் தீவிரமடைவதற்கு 63% வாய்ப்புகள் உள்ளன. </p><p style="text-align: justify;">

இருப்பினும், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இது தீவிரமடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு (1/3) வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. </p><p style="text-align: justify;">

இந்த நிலையினால் தற்போதுள்ள தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் என்று சுட்டிக்காட்டிய மெரில் மெண்டிஸ், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விட அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறவுள்ள மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, நீரை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p style="text-align: justify;">

அதன்படி, விவசாய நடவடிக்கைகள், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதேவேளை, இந்தக் காலநிலை மாற்றத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக அனைத்து அமைச்சுகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"> 

'எல் நினோ' தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக, எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்குமாறு விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-11T07:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளுடன் கொழும்பில் 3 மணித்தியாலம் வட்டமிட்ட வெளிநாட்டு விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/istanbul-flight-hit-bird-emergency-landing-colombo-1783751993"></link>
            <id>https://jvpnews.com/article/istanbul-flight-hit-bird-emergency-landing-colombo-1783751993</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த <a href="https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363" target="_blank">துருக்கி நாட்டு பயணிகள் விமானம்</a> இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி விமானம் 3 மணித்தியாலங்களின் பின் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a673dde0-1ea6-423a-9c4e-3f67db871415/26-6a51e53a8b3b9.webp' /></p><h2>&nbsp;246 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்</h2><p>
</p><p>
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.</p><p></p><p>பறவை மோதியதால் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், நீர்கொழும்பு கலப்பு கடல் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தனது எரிபொருளைப் பயன்படுத்தி வந்தது.</p><p></p><p>
மேலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு முன்னதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசரக்கால மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, எவ்வித ஆபத்துகளுமின்றி விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து சென்ற வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-fish-jaffna-meets-with-an-accident-1783754600"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-fish-jaffna-meets-with-an-accident-1783754600</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று அதிகாலை இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம்&amp;nbsp;விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று அதிகாலை இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம்&nbsp;விபத்துக்குள்ளானது.</p><p>பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில்&nbsp; வாகனம் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c45b37d-104e-495c-b5ea-c5db83200428/26-6a51ef69d6807.webp' /></p><p></p><p>

வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>விபத்து&nbsp;சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-11T07:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ; கனடா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/threat-lives-of-tamil-political-prisoners-canada-1783754101"></link>
            <id>https://jvpnews.com/article/threat-lives-of-tamil-political-prisoners-canada-1783754101</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம்,&amp;nbsp; &amp;nbsp; கனடா டொரொண்டோ நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம்,&nbsp; &nbsp; கனடா டொரொண்டோ நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அந்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின், போகம்பரை மற்றும் கொழும்பு விளக்கமறியல் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715b4823-faab-4fd3-b96d-af0d8c7b5a24/26-6a51ed769b957.webp' /></p><h2>தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள்</h2><p>
</p><p>
நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுகிறது.</p><p></p><p>


1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவௌ படுகொலை போன்ற சம்பவங்கள் உட்பட சிறைச்சாலைகளில் வன்முறையான சூழல் உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.</p><p></p><p>

இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனித்துவமான பாதுகாப்பு வலயங்களை அமைத்தல், கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு தடையற்ற கண்காணிப்பு அனுமதி வழங்குதல் ஆகியன அவசியமாகும்.</p><p></p><p>
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>

 குறித்த அறிக்கை கனடா வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T07:13:37+00:00</updated>
        </entry>
    </feed>
