<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T12:24:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான <a href="https://www.doenets.lk/examresults" target="_blank">https://www.doenets.lk/</a> ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e2e025-c45e-454e-9cb6-82c9a496b988/26-6a97ff14b5b22.webp' /></p><p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான 5 ஆம் தர பரீட்சை பேறுபேறுகள் ; 56,000 மாணவர்கள் சித்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978"></link>
            <id>https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மஆணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மஆணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f841452f-c86d-474d-9535-cca8af70ef88/26-6a981203c284a.webp' /></p><p> 

இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கைது... அமெரிக்காவில் விசாரணை; கதை அளந்துவிடும் சீமான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355</id>
            <summary type="text">&amp;nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்&amp;nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643" target="_blank">சீமான்</a>&nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
சமீபத்தில் மதுரையில் பேசிய சீமான், அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரிகள் தன்னை "பாஸ்" (Boss) என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdc1c25-d8b5-40cb-84aa-b3ec620a9644/26-6a980baca6379.webp' /></p><h2>அளந்துவிடும் கதைகள்</h2><p> </p><p>அத்துடன் தன்னிடம்&nbsp; முறையான விசா இருந்தபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் சீமான தெரிவித்தார் .</p><p></p><p>அதேவேளை&nbsp; 2009-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற தமிழ் சமூகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது,&nbsp;விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி &nbsp; கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>அதேவேளை&nbsp; கடந்த காலங்களில்&nbsp; &nbsp;மக்கள் மத்தியில் பெரும்&nbsp; செல்வாக்கு&nbsp; பெற்ற&nbsp; நபராக இருந்த&nbsp; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்&nbsp; சீமான் தற்போது&nbsp; அவரது&nbsp; அளந்துவிடும் கதைகளால்&nbsp; கடுமையாக&nbsp; விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியவன்னா ஓயா மாசுபாட்டைக் கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டம் அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964"></link>
            <id>https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964</id>
            <summary type="text">தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.</p><p> </p><p></p><p>உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7fedbcf-87ad-4b9c-a685-b9d1356dec1f/26-6a980a25bdadb.webp' /></p><p>இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது. </p><p>

இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495"></link>
            <id>https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>


இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த மகிழுந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9b7e3b-9a35-4bd0-b586-c3c497718d55/26-6a980851a1099.webp' /></p><p>



விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தடுமாறிய தமிழ் உச்சரிப்பு ; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810"></link>
            <id>https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p></p><p>இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, அறிக்கையை வாசித்தபோது சில தமிழ் சொற்களைத் தடுமாறி உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

அமைச்சர் சில சொற்களைத் தவறாக உச்சரித்ததாகக் கூறப்படும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f950096-6bdb-4506-a6c2-c8e5fe196b12/26-6a9805a3a18d9.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சை விமர்சிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. </p><p>அமைச்சரின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் தவறான மருந்தா... இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a1f8b8-d89c-434a-92cf-0f14c4a1854d/26-6a97c16555f11.webp' /></p><p></p><h2>&nbsp;வழங்கப்பட்ட மருந்துகள்&nbsp; தொடர்பில் சந்தேகங்கள்</h2><p> </p><p>உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில், </p><p> 

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p></p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T10:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை தருவதாக கூறி மோசடி ; ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006</id>
            <summary type="text">ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>

மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e81009-4ff9-4582-8a5e-abf469cca43a/26-6a97fab017279.webp' /></p><p>சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
</p><p>
தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் உடல்நிலை ; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338"></link>
            <id>https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் மேலதிக சிகிச்சை தேவையா என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae005d5-f5e9-4de9-94c6-62e130fa0b2c/26-6a97f42c151f2.webp' /></p><p>

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 24 மணி நேர தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>
நாளை வியாழக்கிழமை (03) இரவு 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a7ddd6-4f63-48ea-be00-f811f439b8e6/26-6a97f0d66f834.webp' /></p><h2>24 மணி நேர நீர் விநியோகத் தடை&nbsp;</h2><p>

நுஹேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இந்திபெத்த, கடுபெத்த, கல்தேமுல்ல, முகத்துவாரம், கொரளவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்விநியோகம் தடைப்படும். 

மேலும் சேத்சிறிபாய, ஹிம்புடான,</p><p></p><p> உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தை வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய வீதிகளும் பாதிக்கப்படும்.</p><p>


நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் சபை, இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, குறித்த காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சன் கிளாஸ்; பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268"></link>
            <id>https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
</p><p>
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்றையதினம் மேட்டூர் அணையை திறப்பதற்காக மேட்டூருக்கு சென்றார். 

 மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5e19bd-81bf-4a6f-b583-c805266f6960/26-6a97e05e7ddc9.webp' /></p><h2>பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி&nbsp;</h2><p> அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.</p><p></p><p>

அந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாயில் ,30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இன்னிலையில் முதலமைச்சரிடம் சண்கிளாஸ் வாங்கிய மூதாட்டியுடன் பலரும் புகைப்படங்க்கள் எடுத்து வெளியிட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் அந்த மூதாட்டி வைரலாகியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழ விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683"></link>
            <id>https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683</id>
            <summary type="text">பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a750851-0722-462b-9f21-80d9806c4046/26-6a97e1fcb8912.webp' /></p><p>

இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>விவசாயிகள் அடிப்படை காப்புறுதித் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான காப்புறுதிக் கட்டணத்தை செலுத்தி இந்தப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சி மற்றும் புழுத் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
</p><p>
அத்துடன், காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.</p><p>

பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படலாம் என சபை தெரிவித்துள்ளது.
</p><p>
விவசாய அபாயங்களை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும், பழப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுகடங்காத வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான ஆலயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528"></link>
            <id>https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
</p><p>
 அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பால் அடிப்பகுதி பலவீனமடைந்து நொடிகளில் இடிந்து ஆற்றில் முழுவதும் மூழ்கியது. பல தலைமுறைகள் வழிபட்ட இந்த கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3222e6c5-f04c-447c-8f09-ce4819dec2ca/26-6a97dd7a48c94.webp' /></p><h2>கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரம்</h2><p> 

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது.</p><p></p><p> </p><p>

 கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி சரிந்து விழுந்தது.</p><p>

பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892"></link>
            <id>https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892</id>
            <summary type="text">&amp;nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fcb00-2483-4940-b79f-f0d51c25530f/26-6a97cb5e54782.webp' /></p><h2>பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>

இந்தச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


 எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
</p><p>


2018ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குள் மர்ம நபர்களால் சீலரத்ன தேரர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331</id>
            <summary type="text">ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விகாரையொன்றில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa1f382-fffa-4f30-809d-4dfe39ab3194/26-6a97d8cd33938.webp' /></p><p>இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் ; கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c600dba0-9163-4382-9b36-f22109937ce8/26-6a97d38dc9ff3.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தாக்கல் ; 8 பேருக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lawsuit-filed-against-the-university-of-colombo-1788333469"></link>
            <id>https://jvpnews.com/article/lawsuit-filed-against-the-university-of-colombo-1788333469</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>

பல்கலைக்கழகத்தின் பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e3c297-5321-41db-bd64-74c2d15b1910/26-6a97cd9e9ad6e.webp' /></p><h2>&nbsp;8 பேருக்கு அழைப்பாணை</h2><p>

 பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் கையூட்டல் கோரியமை போன்ற குற்றச்சாட்டுக்களை மனுதாரர் முன்வைத்துள்ளார்.
</p><p>
நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T07:14:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கொலைகள்; லண்டனில் உள்ள பிள்ளையான் சகாவிற்கு பிடிவிறாந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767" target="_blank">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை</a> செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி கட்டளையிட்டுள்ளது.</p><p>

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8047d0-aab0-42d7-bc96-9f0896ea3472/26-6a97ac34b98aa.webp' /></p><h2>&nbsp;லண்டனில் வசிக்கும் காத்தான்குடி ‘பொலிஸ் பாய்ஸ்’</h2><p>

கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.</p><p></p><p>ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.</p><p></p><p>மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p></p><p>

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T06:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யால தேசிய பூங்கா; வறண்டு போயுள்ள நீர் வளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yala-national-park-affected-by-severe-drought-1788331743"></link>
            <id>https://jvpnews.com/article/yala-national-park-affected-by-severe-drought-1788331743</id>
            <summary type="text">&amp;nbsp; கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீரை வழங்கும் நோக்கில், யால தேசிய பூங்காவில் மேலதிக குளங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வனவிலங்கு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
</p><p>
பழைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களும் புனரமைக்கப்பட்டு வருவதாகப் பூங்கா காப்பாளர் ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.
மாணிக் கங்கையிலிருந்து தாங்கிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd43dc8-8baf-43dd-aae0-5b4bcd85f987/26-6a97c6e0c575f.webp' /></p><h2>காடுகளில்&nbsp;வறண்டு போயுள்ள நீர் வளங்கள்</h2><p>

இதேவேளை, ஒக்கம்பிட்டிய மற்றும் மாளிகாவில வனக்காப்பகங்களில் உள்ள காட்டு யானைக் கூட்டங்கள், குடிநீருக்காக இரவும் பகலும் இலுக்பிட்டிய குளத்திற்கு வந்து செல்கின்றன.</p><p></p><p>

எனினும், அந்த குளம் வறண்டு போயுள்ளதுடன், அதன் நடுப்பகுதியில் சேற்றுக்குளம் ஒன்று மாத்திரமே எஞ்சியுள்ளது.</p><p>

இன்னிலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகளில் உள்ள அனைத்து நீர் வளங்களும் வறண்டு போயுள்ளதோடு, இதனால் வனவிலங்குகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். ரவீந்திர தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச T20 தரவரிசையில் உச்சத்தை தொட்ட சமரி அத்தபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/samari-reaches-top-the-international-t20-rankings-1788330710"></link>
            <id>https://jvpnews.com/article/samari-reaches-top-the-international-t20-rankings-1788330710</id>
            <summary type="text">இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்.</p><p></p><p>

அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைக்கான தரவரிசைகளில் ஒரே நேரத்தில் தனது அதிகபட்ச நிலையை அடைந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb06dcd-d57c-4e22-9740-764fdaa01681/26-6a97c2d7d426d.webp' /></p><p>நேற்று (01) வெளியிடப்பட்ட மகளிர் இருபதுக்கு இருபது தரவரிசையில், அவர் துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சுத் தரவரிசையில் 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.</p><p>இதேவேளை, மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.
</p><p>
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8:00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:33:18+00:00</updated>
        </entry>
    </feed>
