<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T08:39:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773"></link>
            <id>https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

வாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வரவேற்றார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு, ஏனைய அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ccb7fa-837d-4f66-baf1-456a97f36b35/26-6a72f14f41048.webp' /></p><p>
</p><p>
இந்த விஜயமானது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே நடைபெற்று வரும் உயர்மட்டத் தொடர்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு ; 1 கிராம் தங்க மோதிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. </p><p> 

குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aca5215-b10d-4802-987c-ef54d769fa6a/26-6a72efce5d261.webp' /></p><p>
</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T08:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் 'ஹாஷிஷ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கொனஹேன முகாமின் விசேட அதிரடிப்படை உளவுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c647f4-7d66-4fc2-a24e-e21a0a619f7d/26-6a72ecca6c515.webp' /></p><p>
</p><p>
மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேகநபரை வழிமறித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 06 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் முதலில் கைப்பற்றப்பட்டது.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 06 கிலோகிராம் ஹாஷிஷ் கண்டெடுக்கப்பட்டது.</p><p>

கைப்பற்றப்பட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T07:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா பயணிகளை கவரும் திருகோணமலை மான்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து, அங்குள்ள மான்களுடன் பொழுதைக் கழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46009c7a-2f5a-43d5-b861-c1b2650c2b88/26-6a72e30121ea5.webp' /></p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.</p><p>

இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe07cc9-c9ed-4606-8e4b-058a71d091a2/26-6a72e2fef20f4.webp' /></p><p>

அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
</p><p>
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்காவும் சான்று பகிர்கின்றன. 

 மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e8518e3-50f6-46f0-8298-c27dc6ac1c89/26-6a72e2ffac9d7.webp' /></p><h3>&nbsp;மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை&nbsp;</h3><p>

அதேசமயம் மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. </p><p>

 எனவே சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef4697f-0164-4246-8f2c-4faff57268ab/26-6a72e30068d71.webp' /></p><p> </p><p>

அத்துடன், திருகோணமலையில் உள்ள மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார் நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இதுபோன்ற விடயங்களை மக்கள் மத்தியில் விழிப்பூட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுப் பேருந்துக்கு தீவைத்த விசமிகள் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779</id>
            <summary type="text">&amp;nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&amp;nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப்&nbsp; பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e445d6b-0d80-4dc6-bbf4-7e6536eec109/26-6a72c274eb69a.webp' /></p><h2>சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் சேதம்&nbsp;</h2><p>
</p><p>
 

அத்துடன், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>
 

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என&nbsp; கூறியுள்ள&nbsp;&nbsp;கடுவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் இரகசிய தகவலால் சிக்கிய மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-individuals-nabbed-ampara-area-tip-off-1785912923"></link>
            <id>https://jvpnews.com/article/3-individuals-nabbed-ampara-area-tip-off-1785912923</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாறை மாவட்டத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாறை மாவட்டத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f9a3803-5354-47aa-af99-5933f1b76709/26-6a72de5c9b61d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, அம்பாறை பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்களில் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முதல் சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
இருவருக்கும் போதைப்பொருளை விநியோகித்த பொல்வக காலனியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதான சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T06:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திடீர் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-gold-and-silver-prices-rising-today-1785912531"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-gold-and-silver-prices-rising-today-1785912531</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி , ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,132.03 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 60.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf1cf74-d43d-4628-8c6a-d0ae6cf6bd57/26-6a72dcd519f8f.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
</p><p>
 அதேசமயம் டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T06:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kotmale-reservoir-spill-gates-opened-warning-1785911351"></link>
            <id>https://jvpnews.com/article/kotmale-reservoir-spill-gates-opened-warning-1785911351</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


மேலும் ஒவ்வொரு நீர் வெளியேற்றும் கதவிலிருந்தும் வினாடிக்கு 30 கன மீட்டர் நீர், கொத்மலை ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff048104-cf96-4cbe-88b9-6e65487f98e4/26-6a72d838900a4.webp' /></p><p>



தொடர்ச்சியாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை தொடருமானால், எஞ்சிய வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-minister-akila-viraj-appears-bribery-commission-1785910607"></link>
            <id>https://jvpnews.com/article/ex-minister-akila-viraj-appears-bribery-commission-1785910607</id>
            <summary type="text">&amp;nbsp; வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

 

அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் கரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477252e1-b859-43a2-931b-5d579d00c88d/26-6a72d5507f684.webp' /></p><p>அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-warning-issued-by-department-of-meteorology-1785910071"></link>
            <id>https://jvpnews.com/article/red-warning-issued-by-department-of-meteorology-1785910071</id>
            <summary type="text">&amp;nbsp; பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbbfd3f7-e37e-48c1-adfe-8f5c8306ee31/26-6a72d3390d701.webp' />]</p><p>

 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p>

 

எனவே, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T06:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஷீந்திர ராஜபக்ஷ வழக்கு; நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shasheendra-rajapaksa-case-court-order-1785909652"></link>
            <id>https://jvpnews.com/article/shasheendra-rajapaksa-case-court-order-1785909652</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு அழைக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a932c9a7-75a8-4cfd-bdf7-91937900adc5/26-6a72d1960218b.webp' /></p><p>
</p><p>
 

இதன்பின்னரே, முன்வைக்கப்பட்ட கருத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T05:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்தில் சடலம்; சேவைகள் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-on-gampaha-main-railway-line-1785906037"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-on-gampaha-main-railway-line-1785906037</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

 

கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான ரயில் பாதையில் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108c033c-6074-460c-b8e1-0750bfa0f808/26-6a72c377357dc.webp' /></p><p> </p><p>

 

 சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை அப்புறப்படுத்தும் வரை ரயில் சேவைகள் தாமதத்துடன் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T04:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-thrown-at-a-house-in-ratmalana-1785905308"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-thrown-at-a-house-in-ratmalana-1785905308</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்போது வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d29777-ef06-4733-82d5-01ed011572a8/26-6a72c09e4c96b.webp' /></p><h2>&nbsp;உலகக் குழுவின் தொடர்புகள்...&nbsp;</h2><p>நடத்தப்பட்ட&nbsp;கைக்குண்டுத் தாக்குதல்&nbsp; &nbsp;தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
 

இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>தாக்குதலினால் வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.

 
 வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன</p>]]></content>
            <updated>2026-08-05T04:46:21+00:00</updated>
        </entry>
    </feed>
