<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-25T17:24:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 பேர் இதுவரை இலங்கைக்கு ;பொலிஸ் ஊடகப் பேச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608"></link>
            <id>https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608</id>
            <summary type="text">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் ஊடகப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c5fc6e-4acf-4b31-a1be-4e16aae0da7a/26-6a8dcc951ab36.webp' /></p><h2 style="text-align: justify; ">சிவப்பு எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">
நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர அரச பொறிமுறை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மாஅதிபரின் நேரடி மேற்பார்வையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">அதன்படி, சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
மேலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேக நபர்களையும் எதிர்வரும் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765"></link>
            <id>https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>


குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527fcd05-9958-49f3-a26d-57530dd13326/26-6a8d77f0313e7.webp' /></p><h2>அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறை&nbsp;</h2><p> 

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர்கள் மிகுந்த அவதானம் ; குழந்தைகளுக்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்யுள்ளார்</p><p style="text-align: justify;">
 

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdbc85-d2e5-4396-a208-cf4a2d252f8a/26-6a8dc5b41526b.webp' /></p><h2 style="text-align: justify;">பாதுகாப்பு நடவடிக்கை</h2><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p style="text-align: justify;">

 

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p style="text-align: justify;">

 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.
</p><p style="text-align: justify;">
 

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-25T16:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி சாரதிக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் ; அமைச்சரின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719"></link>
            <id>https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719</id>
            <summary type="text">&amp;nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/950970b4-f9c6-407a-83de-d9f4bdb888c3/26-6a8dbc792b19d.webp' /></p><h2 style="text-align: justify; ">தொழிற்கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த நிலையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.</p><p style="text-align: justify; ">

அரசாங்கம் உரிய பரிசீலனைகளை மேற்கொண்டதன் பின்னர், நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T16:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; கோரப்பட்ட விண்ணப்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்தப் பரீட்சைக்காக இன்று (25) முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3cff23-da60-4400-abe3-0800a986bc4e/26-6a8db79629eba.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T15:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722"></link>
            <id>https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d07b62-bd78-4320-8ae3-15a3614a8401/26-6a8d8d9c4231c.webp' /></p><p>
அரசாங்க சம்பள விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
</p><p></p><p>
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணிநேரம் காதலி கொடுத்த 3,400 முத்தம்; காதலனுக்கு வினையானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509"></link>
            <id>https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூபா 5,500 அபராதம் விதித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. </p><p> 

வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abc407e-4f04-4298-ae31-5efbc3a3003c/26-6a8d94972f39c.webp' /></p><h2>&nbsp;வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரல்</h2><p> காதலிக்கு கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். 

உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். </p><p>முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. 

உடனே வீதியில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பொலிஸாரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a41edd7-6378-45cd-90d3-40c46281a0f2/26-6a8d9497dfab9.webp' /></p><p> 

மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூபா 5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p></p><p>. 

தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த பொலிஸார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொண்டையில் பலூன் சிக்கி சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-balloon-gets-stuck-in-throat-1787661393"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-balloon-gets-stuck-in-throat-1787661393</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் பகுதியில், பலூனை விழுங்கியதால் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பெற்றோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் பகுதியில், பலூனை விழுங்கியதால் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p>
பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, குறித்த சிறுவன் மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1d168f-8d92-4184-a575-897c46c2e108/26-6a8d8c52d90bc.webp' /></p><h2>சிறுவர்கள் விளையாடும்போது&nbsp;கூடுதல் கண்காணிப்பு&nbsp; அவசியம்</h2><p>

இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.</p><p></p><p>

சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தொண்டையில் பலூன் சிக்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

பலூன் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே சிறுவன் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

இன்னிலையில் சிறுவர்கள் விளையாடும்போது இதுபோன்ற பொருட்களை வழங்கும்போது பெற்றோர் கூடுதல் கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்</p>]]></content>
            <updated>2026-08-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியியல் வழக்குகளில் புதிய சட்டத் திருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-case-testimony-via-online-link-remote-1787662464"></link>
            <id>https://jvpnews.com/article/civil-case-testimony-via-online-link-remote-1787662464</id>
            <summary type="text">&amp;nbsp; குடியியல் வழக்குகளில், இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் செவிப்புல–கட்புல இணைப்பு மூலம் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்குவதற்கு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குடியியல் வழக்குகளில், இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் செவிப்புல–கட்புல இணைப்பு மூலம் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் குடியியல் வழக்குக் கோவையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>


இதற்கான குடியியல் வழக்குக் கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதனை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5934443-867d-4b60-92be-d663ac6ce7e0/26-6a8d9081e6d7f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் வழக்கு ; முதலமைச்சர் விஜய்க்கு அபராதம் ; நீதிமன்றம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648"></link>
            <id>https://jvpnews.com/article/election-case-court-issues-warning-cm-vijay-1787659648</id>
            <summary type="text">&amp;nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956435be-4826-4b34-b940-175b90124ef8/26-6a8d85823c4ac.webp' /></p><h2>&nbsp;உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு</h2><p> 

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.
</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது. கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.</p><p></p><p>
</p><p>
இதைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், 'எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>

அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-25T13:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை; புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770"></link>
            <id>https://jvpnews.com/article/fireworks-at-festivals-jaffna-new-restrictions-1787658770</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் அதீத ஒளி மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளால் 500க்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ba57183-c247-4eb3-974e-b9767deae7d0/26-6a8d8213e9851.webp' /></p><h2>500க்கும் அதிகமானோர் கண் பாதிப்பு</h2><p>
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக தேவையான விதிமுறைகளை உருவாக்குவதுடன், மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>


மேலும், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கும்போது மின்விளக்குகள், ஒலியமைப்புகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423"></link>
            <id>https://jvpnews.com/article/government-hopes-hold-parliamentary-elections-soon-1787660423</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a684f2cd-3182-40f5-a454-e11bf305d86b/26-6a8d88885c028.webp' /></p><p>இவ்வருடத்தில் நாடாளுமன்றத்தினால் சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். </p><p>

தேர்தலை நடத்துவதற்கான சட்டமொன்று இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கமைய விரைவாகச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.</p><p> 

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். 

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும்​ என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம் ; இலங்கையில் QR எரிபொருள் முறைமை தொடருமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056"></link>
            <id>https://jvpnews.com/article/will-the-qr-fuel-system-continue-in-sri-lanka-1787659056</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
மத்திய கிழக்கு நெருக்கடியும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் உலகளாவிய எரிபொருள் விலைகளிலும் விநியோகத்திலும் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3d7786-c106-4424-9f69-041d824ab6b0/26-6a8d83314867a.webp' /></p><p>பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கே இந்த QR முறைமை தொடர்ந்து பராமரிக்கப்படும்.
</p><p>
QR முறைமையின் அமுலாக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் நுகர்வு ஓரளவு மட்டுமே குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய டீசல் நுகர்வு சுமார் 10 வீதமும், பெட்ரோல் நுகர்வு சுமார் 9 வீதமுமே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
அத்தியாவசியத் துறைகளுக்குத் தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் சூழல் சீரடையும் வரை இந்த QR முறைமை தற்காலிகமாகத் தொடர்ந்து செயற்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் - அரச பேருந்துகள் போட்டி; A/L பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் திண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897"></link>
            <id>https://jvpnews.com/article/buses-in-jaffna-leaves-al-exam-students-in-a-lurch-1787654897</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce24c3ba-a8bc-43a5-bdda-08f4447c8c32/26-6a8d72f26c411.webp' /></p><h2>மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் திண்டாட்டம்&nbsp;</h2><p>

இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
</p><p>
 இன்றைய தினம் (25) குறித்த பேருந்தானது வளமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதரா உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப் பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>

அதேவேளை நேற்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T11:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321"></link>
            <id>https://jvpnews.com/article/relatives-of-the-disappeared-jaffna-protest-tears-1787657321</id>
            <summary type="text">இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலக் கோரிக்கையான தங்களது உறவுகளின் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd22dc59-83f9-4b77-9a03-81f0e395c602/26-6a8d7c6a76e9b.webp' /></p><p>குறிப்பாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களும் தங்களுக்கு தேவையில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.</p><h3>

“எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?”
</h3><p>
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறி, அவர்களின் தற்போதைய நிலை குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
</p><p>
தமது உறவுகள் தொடர்பில் உண்மை மற்றும் நீதியே தங்களுக்கு தேவை எனவும், இழப்பீடு அல்லது மரணச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>
இதன்போது, தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி சிலர் கதறி அழுததால் போராட்டம் நடைபெற்ற பகுதியில் உணர்வுபூர்வமான சூழல் ஏற்பட்டதுடன், சிறிது நேரம் பதற்றமான நிலையும் காணப்பட்டது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சர்வதேச ரீதியிலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>
இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த மாநாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அவர்களின் உறவுகளின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:29:01+00:00</updated>
        </entry>
    </feed>
