<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T12:35:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து பயணத்தில் பெண்ணுக்கு நடந்த சம்பவம்; சாரதி நடத்துநருக்கு குவியும் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praise-jaffna-point-pedro-depot-employees-gold-1787569530"></link>
            <id>https://jvpnews.com/article/praise-jaffna-point-pedro-depot-employees-gold-1787569530</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும் அதனை உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>



இந்தச் சம்பவம் நேற்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சாரதி மற்றும் நடத்துநரின் நேர்மைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50372268-d931-47ab-b007-16aaa4fd4924/26-6a8c26265ab4d.webp' /></p><h2>10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை</h2><p>
</p><p>


பருத்தித்துறை வீதியிலிருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் 767ஆம் வழித்தடத்தைச் சேர்ந்த 4241 இலக்க இ.போ.ச.பேருந்தின் மதிய சேவையில் குறித்த பெண் பயணித்துள்ளார்.



வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், மற்றுமொரு உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>



அங்கு சென்ற பின்னரே தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவர் அவதானித்துள்ளார். 



சங்கிலியை வழியெங்கும் தேடியும் கிடைக்காத நிலையில்,மீண்டும் வட்டுக்கோட்டையிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிப்பதற்காக அதே பேருந்தில் ஏறியுள்ளார்.</p><p></p><p>



இதன்போது தனது தங்கச் சங்கிலி காணாமல் போனதை பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதற்கு அவர்கள், “நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமாக வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்து, சங்கிலியை உடனடியாக உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>



இதனையடுத்து பேருந்து பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் சுத்தம் செய்யப்பட்டபோது, சங்கிலியின் ‘எஸ்’ வடிவ இணைப்புப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 



அதனையும் உரிய பெண்ணிடம் ஒப்படைத்து, நகையின் அனைத்து பகுதிகளும் முழுமையாக அவரிடம் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p></p><p>



இவ்வாறு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் செயற்பாடு பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.</p><p>



பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த காலத்திலும், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த இந்த இரு ஊழியர்களின் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயம் பாராட்டுக்குரியது என பயணிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு; இலங்கை பெண்ணின் வெளிநாட்டு கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078"></link>
            <id>https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் தலங்கம, வெலி பாரா பகுதியைச் சேர்ந்த 58 வயது&nbsp; சிவில் பொறியாளர் ஆவார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர், இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வெலி பாரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f01d99-be87-4374-b401-78b050bd6cf0/26-6a8bf4d7df1a9.webp' /></p><h2>வாக்குவாதத்தின்போது தாக்குதல்</h2><p>
</p><p>
 தென் கொரியாவிற்குச் செல்ல விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இவர் கொரிய மொழியைக் கற்பித்து வருகிறார். </p><p>

உயிரிழந்த பொறியாளரும் சந்தேகநபரான கொரிய நாட்டவரும் அண்டை வீட்டார்களாக இருந்ததாகவும், ஒரு சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கொரிய நாட்டவர்&nbsp; பொறியாளரைத் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவில் பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>கைது செய்யப்பட்ட கொரிய நாட்டவர் குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்தவர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-death-of-person-who-fell-from-a-tree-1787573342"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-death-of-person-who-fell-from-a-tree-1787573342</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். 

சுமார் 35 அடி உயரமுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் நேற்று (23) ஏறிஅ அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3539ff95-4aeb-4b78-b5ea-af001d998c84/26-6a8c34605f8a6.webp' /></p><p> </p><p>

தவறி வீழ்ந்தவர் பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.</p><p> 

மரங்களை வெட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ் குறித்த நபர் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்களை கரம்பிடிக்க பாகிஸ்தானின் இருந்து வந்த 150 மணப்பெண்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553"></link>
            <id>https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049c940-6cc3-4f26-a80f-725444aa0859/26-6a8c19db09f36.webp' /></p><h2>நீண்ட நாள் காத்திருப்பு&nbsp; முடிவுக்கு வந்துள்ளது</h2><p> </p><p>

கடந்த 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.</p><p></p><p> 

</p><p>தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது. </p><p>

இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.</p><p></p><p>மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள 'ஷடானி தர்பார்' சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.</p><p>

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, "இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.</p><p></p><p> 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.</p><p> 

எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர். </p><p>

நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவிக்கையில், 

"நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.</p><p> நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T11:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகன் முப்பாட்டனா .... சீமானுக்கு குட்டு வைத்த யாழ் சிறுவன்; நாடு கடந்து வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643</id>
            <summary type="text">&amp;nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளான். </p><p>

அதுமட்டுமல்லாது முருகன் தனது முப்பாட்டன் என கூறும் சீமானுக்கும் போற போக்கில் ஒரு டொக்கு வைத்து விட்டான் யாழ் சிறுவன்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812aefb-233e-42d2-9e05-94e4e275bdd6/26-6a8c12652be39.webp' /></p><h2>நாடு கடந்து வைரலாகும்&nbsp; காணொளி..</h2><p>வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சன்னதி&nbsp; ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில்&nbsp; ஆலயத்தில் இடம்பெற்ற சிறுவனின்&nbsp; இந்த பேச்சானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1092978783085202%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தமிழ் தேசியம் என கூறி சைவர்களை சிலர் பித்தலாட்டம் செய்து வழிமாற்றி வருகின்றதாகவும் சிறுவன் எச்சரித்துள்ளார்.
</p><p>
அத்துடன் முருகனை முப்பாட்டன் என கூறும்&nbsp; சீமான் ,சைமன், செபஸ்ரியான் போன்றவர்களின் போலி புழுகுகளை நம்பவேண்டாம் என்றும் சிறுவன் சீமானின் காலையும் வாரியுள்ளார்.</p><p></p><p>இத்தனை சிறிய வயதில் சிறுவனின்&nbsp; இந்த&nbsp;பேருரை சைவ மக்களை மெய் சிலிர்க்க&nbsp; வைத்துள்ளது.&nbsp;இந் நிலையில் சிறுவன் உருவில் வந்து முருகன் முப்பாட்டனா இறைவனா சிறப்பான பேருரையை வழங்கியது அந்த முருகனா என சமூகவலைத்தளங்களில் முருக பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரமற்ற மின் கம்பி விற்பனை; அங்காடிக்கு 2 இலட்சம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-substandard-electrical-wires-fined-2-lakh-1787571807"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-substandard-electrical-wires-fined-2-lakh-1787571807</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர பல்பொருள் அங்காடி ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அனுராதபுரம் 11-ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த கடையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே இந்தச் சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f93784-bb1c-47cd-a2c8-f8ebfe0851c6/26-6a8c2e611d860.webp' /></p><h2>சட்டவிரோத விற்பனை</h2><p>
</p><p>
மின் சாதனங்களுக்கான SLS தரநிலைகளைப் பின்பற்றுவது நுகர்வோரின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது எனவும், தரமற்ற மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மின்கசிவு, மின் அதிர்ச்சி மற்றும் ஆபத்தான தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

எனவே, பொதுமக்கள் மின்சாரக் கம்பி வடங்கள் மற்றும் மின் சாதனங்களைக் கொள்முதல் செய்யும்போது SLS தரச்சான்றிதழ் முத்திரை மற்றும் உற்பத்தி விபரங்களைச் சரிபார்த்து வாங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
 சந்தையில் தரம் குறைந்த அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தகவல் தெரிந்தால், ‘1977’ என்ற நுகர்வோர் அவசர உதவி இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T11:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த பெண் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-rescues-woman-who-fell-diyawanna-oya-river-1787570397"></link>
            <id>https://jvpnews.com/article/navy-rescues-woman-who-fell-diyawanna-oya-river-1787570397</id>
            <summary type="text">பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>தியவன்னா ஓயாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்தஉயிர்காக்கும் குழுவினர், கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் பெண்ணொருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1126c3b5-ec4f-4e5e-a249-c360fd7c3c0c/26-6a8c28df1dd76.webp' /></p><p>



இதையடுத்து, கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அதிவேக அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், குறித்த பெண்ணை பாதுகாப்பாக நீரில் இருந்து மீட்டுள்ளனர்.</p><p>



மீட்கப்பட்ட பெண் நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 

மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம் ; நாட்டில் மின்வெட்டு அபாயம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-impact-risk-of-power-outages-in-country-1787569341"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-impact-risk-of-power-outages-in-country-1787569341</id>
            <summary type="text">எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/960bd088-4a77-44ba-b345-45a8b3ba0a3a/26-6a8c24bf3a450.webp' /></p><p>புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:02:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல ஆண்டுகளின் பின் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relaxation-of-restrictions-on-vehicle-imports-1787569211"></link>
            <id>https://jvpnews.com/article/relaxation-of-restrictions-on-vehicle-imports-1787569211</id>
            <summary type="text">&amp;nbsp; பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9552c1d3-8049-471d-bce3-f6abe2bf7685/26-6a8c24821b63b.webp' /></p><p>
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.

இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p></p><p>.

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[74 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-capacity-74-reservoirs-drops-up-36-percent-1787568008"></link>
            <id>https://jvpnews.com/article/water-capacity-74-reservoirs-drops-up-36-percent-1787568008</id>
            <summary type="text">நாட்டின் ஈரவலயத்தில் அமைந்துள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றபோதிலும், உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஈரவலயத்தில் அமைந்துள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றபோதிலும், உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5edd35-1381-4f10-a705-1ac1904c49d6/26-6a8c1f8a2c222.webp' /></p><p>பொதுவாக ஒகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. </p><p>

இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது. </p><p>

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p> 

குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். </p><p>

இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுவதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>

மேலும், எதிர்கால காலநிலை மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில் எல் நினோ கணிப்புகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வுடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் நீர்ப்பாசன பணிப்பாளர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.</p><p> 

இதேவேளை, எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 

அந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. </p><p>

அத்துடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

இந்தத் தாக்கத்தின் காரணமாக 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைவாக, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதுளை போதனா வைத்தியசாலை மருத்துவர் மரணம் ; பொலிஸார் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-badulla-doctor-police-suspect-foul-play-1787562933"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-badulla-doctor-police-suspect-foul-play-1787562933</id>
            <summary type="text">&amp;nbsp;பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 

காணாமல் போயிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பதுளை போதனா வைத்தியசாலையின்<a href="https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462" target="_blank"> மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை</a> செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். </p><p>

காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfb5c15b-f03d-4b90-9480-07b269d1b265/26-6a8c0c0baa775.webp' /></p><h2>வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்?</h2><p> 

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். </p><p>

இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p>இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர்.</p><p>

இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p> 

சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>

அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:12:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கீரிமலை பகுதியில் விசமிகள் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/poisonous-activity-in-the-keerimalai-area-jaffna-1787560377"></link>
            <id>https://jvpnews.com/article/poisonous-activity-in-the-keerimalai-area-jaffna-1787560377</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில், கீரிமலை இந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில், கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.</p><p> 



குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b0720f-ba2b-4a94-b853-f653fecc6981/26-6a8c01bb54e2f.webp' /></p><p></p><p> </p><p>



அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள் காணப்படுவதானல், மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> அதனால் அவற்றினை அகற்றுமாறும் , மேலும் ஏனைய மூடிகளை உடைக்காது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T08:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-shock-jewelers-today-gold-rate-1787559985"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-shock-jewelers-today-gold-rate-1787559985</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த சனிக்கிழமை (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.384,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.2000 அதிகரித்து ரூ.386,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a594543-0d67-4659-90b0-46c54ea0e0a2/26-6a8c003291c32.webp' /></p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் புதைத்து, வவுனியாவில் அடகு வைத்த கொள்ளை நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/looted-jewelry-buried-jaffna-vavuniya-recovered-1787559439"></link>
            <id>https://jvpnews.com/article/looted-jewelry-buried-jaffna-vavuniya-recovered-1787559439</id>
            <summary type="text">வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>கடந்த 20ஆம் திகதி தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e29e882-aa2b-4e92-94b9-e4e8eeb6cc37/26-6a8bfe106c5dc.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>



இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>



கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர், கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்ததாகவும், மேலும் ஒரு தொகுதி நகைகளை வவுனியா நகரிலுள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.



மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சார்ஜென்ட் மீது வாகனத்தை ஏத்திய பேராசிரியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/professor-arrested-driving-police-officer-foot-1787559503"></link>
            <id>https://jvpnews.com/article/professor-arrested-driving-police-officer-foot-1787559503</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி ஸ்ரீ தலதா பெரஹெராவுக்கான சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் கால் விரலின் மீது வாகனம் ஏறிய விபத்து தொடர்பாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி ஸ்ரீ தலதா பெரஹெராவுக்கான சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் கால் விரலின் மீது வாகனம் ஏறிய விபத்து தொடர்பாக, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக&nbsp; பேராசிரியர் ஒருவர் கண்டி தலைமையகக் காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 இந்த விபத்து 22-ஆம் தேதி மாலையில் நிகழ்ந்தது; இதில் காயமடைந்த காவலர் தற்போது கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>பேராசிரியருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இச்சம்பவத்தில் காயமடைந்தவர் பிண்டெனியா காவல் நிலையத்தைச் சார்ஜென்ட் குமார் ஆவார். பெரஹெராவுக்கான சிறப்புப் பணிக்காக அவர் கண்டி தலைமையகக் காவல் நிலையத்தில் பணிக்கு ஆஜராகியிருந்தார். </p><p>

விபத்து நடந்தபோது, ​​கண்டி ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மாவத்தையில் உள்ள படெனியா பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.</p><p></p><p>

KCC வாகன நிறுத்துமிடத்திலிருந்து கண்டி கடிகாரக் கோபுரத்தை (Clock Tower) நோக்கிச் சென்ற வாகனம், சார்ஜென்ட்டின் கால் விரலின் மீது ஏறியதாலேயே இந்த காயம் ஏற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

கண்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதான அப்பேராசிரியர் விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் ஓட்டிச் சென்ற வாகனமும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை கண்டி தலைமையகக் காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462"></link>
            <id>https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462</id>
            <summary type="text">காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். </p><p>

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf74ad4-32ae-462c-aa4a-4646628a949b/26-6a8bcf47dd5ea.webp' /></p><p>இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். </p><p>

இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை - மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாயில் விழுந்து இரண்டு வயது குழந்தை மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-year-old-child-dies-after-falling-into-canal-1787556008"></link>
            <id>https://jvpnews.com/article/two-year-old-child-dies-after-falling-into-canal-1787556008</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>நேற்று பிற்பகலில், வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என அக்குழந்தையின் தந்தை அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கலேவெல வீதி, கலேவெல பொலிஸ் பிரிவில், அப்பகுதி மக்களும் கலேவெல பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2084e2a-8ca9-44c5-86d5-424b31d9c387/26-6a8bf0a994d60.webp' /></p><p>

இதன்போது குழந்தையின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயின் பாலத்தில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன் கல்னேவ வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அக்குழந்தை உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.</p><p></p><p>&nbsp;குழந்தையின் சடலம் கல்னேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T07:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்; தவெக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-free-lpg-gas-per-year-cm-vijay-announces-1787554655"></link>
            <id>https://jvpnews.com/article/3-free-lpg-gas-per-year-cm-vijay-announces-1787554655</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (24) சட்டமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (24) சட்டமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும். </p><p>


இத்திட்டம் 2027 வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையிலிருந்து செயல்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9443b-2b45-4cff-bc74-c1ea5b10ff59/26-6a8beb613e332.webp' /></p><h2>&nbsp;ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாத குடும்பங்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த முக்கிய நலத்திட்டம், நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1.30 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிக்கவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாத குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.</p><p> 

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ரசீதுகளின் அடிப்படையில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டதும், அதற்கான செலவுத் தொகை திரும்பப் பெறப்பட்டு, குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.</p><p></p><p>
</p><p>
இந்த நிவாரண நடவடிக்கைக்குக் காரணமான பொருளாதாரச் சவால்களைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், </p><p>வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் ஏற்பட்ட உலகளாவிய விநியோகத் தடைகள் மற்றும் விலை உயர்வு ஆகியவை கடந்த நான்கு மாதங்களாகக் குடும்பங்கள் மீது கடுமையான நிதிச் சுமையைச் சுமத்தியுள்ளதாகவும், இதனால் பல குடும்பங்கள் மாற்று எரிபொருட்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>


இது தவிர சமூகப் பாதுகாப்பையும் பயண வசதியையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ஒக்டோபர் 2-ஆம் திகதி முதல், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்.</p><p></p><p>
</p><p>
விரிவுபடுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், பெருநகர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், லிமிடெட் ஸ்டாப் (LSS) மற்றும் டீலக்ஸ் வகையிலான அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளலாம். </p><p>

மாவட்டங்களுக்கு இடையிலான பயண வசதியை மேம்படுத்தும் வகையில், இவ்வசதி புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தைச் செயல்படுத்துவதால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

வருமான வரம்புகளோ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ இன்றி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T06:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dna-testing-to-identify-chemmani-skeletons-1787554121"></link>
            <id>https://jvpnews.com/article/dna-testing-to-identify-chemmani-skeletons-1787554121</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்தஇ நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1771d9d9-a588-4a48-b749-c8f6ba797e7c/26-6a8be94ab9e28.webp' /></p><p> மேலும் தெரிவிக்கையில்

செம்மணி மனிதப் புதைக்குழி மூன்று கட்டங்களாக இதுவரையில் 110 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற நிலையில் இதுவரையில் 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.</p><p>

குறித்த அகழ்வு பணிகளில் இதுவரையில் 584 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அடையாளம் காணும் பொருட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம் என மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-24T06:46:02+00:00</updated>
        </entry>
    </feed>
