<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T12:44:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-students-at-a-school-hospital-poisonous-seeds-1784543290"></link>
            <id>https://jvpnews.com/article/22-students-at-a-school-hospital-poisonous-seeds-1784543290</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06596c04-6556-4274-a299-322e4aa0c3a7/26-6a5df83bdf7a7.webp' /></p><p></p><h2>&nbsp;20 மாணவர்கள் 02 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
 

மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.

ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் என மருத்துவ அத்தியட்சகர் குறிப்பிட்டார்.</p><p>
கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த மாணவன் வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்குக் கொண்டுசென்று பகிர்ந்து உண்பது வழமை எனவும் இன்றைய தினம் (20) சூரியகாந்தி விதைகள் என நினைத்து சூரியகாந்தி விதைகளுடன் வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் கொண்டுசென்று பகிர்ந்து உண்டுள்ளார்.</p><p>இதனாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந் நிலையில் இந்த சம்பவத்தால் அங்க்கு பரப்பான நிலைமை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-20T12:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் தடம் புரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/derailment-of-a-train-bound-for-rambukkana-1784549636"></link>
            <id>https://jvpnews.com/article/derailment-of-a-train-bound-for-rambukkana-1784549636</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. 



இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. </p><p>



இன்று திங்கட்கிழமை (20) மாலை 4:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த 1164 இலக்கமுடைய ரயில், மேடையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாலை 4:35 மணியளவில் தடம் புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ef74f3-1658-4f40-aa6e-1d3f9df4a612/26-6a5e11059c869.webp' /></p><p> </p><p>

ரயிலின் ஒரு பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகியதால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகள் மறிக்கப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த ரயில் கடந்த ஜூலை 7-ஆம் திகதியும் தடம் புரண்டிருந்தது. ஒரே ரயிலுக்குள் ஒரு மாத கால இடைவெளியில் இருமுறை விபத்து ஏற்பட்டுள்ளமை பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தற்போது ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டும் குறித்த ரயில் தடம் புரளும் இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T12:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் பிணையில் விடுதலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p> 

தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த பாதிப்பின் வலியை, பிணை வழங்கிய, நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7570ab1-a774-4591-af10-324fc17a25fd/26-6a5e097b97d7a.webp' /></p><h2>கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது</h2><p>

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது என்பதுடன் தற்போது 41 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காகக் காத்திருந்தபோது, அவர் தனது இளமைப் பருவத்தின் பொன்னான காலத்தை சிறையில் கழித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>

நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி.குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.</p><h3>&nbsp;குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள்&nbsp;</h3><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

 தம்பையா பிரகாசிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>
விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதே ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போயுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேசமயம் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி; சந்தைப்படுத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-first-dengue-qdenga-tak-003-vaccine-approval-1784545956"></link>
            <id>https://jvpnews.com/article/india-first-dengue-qdenga-tak-003-vaccine-approval-1784545956</id>
            <summary type="text">இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான &#039;கியூடெங்கா&#039;வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான 'கியூடெங்கா'வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>

இந்தியாவின் தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fb66ab-27d9-479c-add8-31289f426291/26-6a5e02a642925.webp' /></p><h2>பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை</h2><p>
</p><p>
முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை 3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக இது செலுத்தப்படுகிறது.

உலக அளவில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளதுடன், அங்கு டெங்குவின் 4 வகைகளும் பரவி வருகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாகேடாவின் சர்வதேச அளவிலான மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், நான்கு வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதேசமயம் ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தகுதிச்சான்றைப் பெற்றுள்ள கியூடெங்கா தடுப்பூசி, 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் 43 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டு, 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியை தாக்கிய அர்ஜென்டினா ; மைதானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82d0c00-d3f5-4eea-bbd9-1006648c151a/26-6a5dce2f911a6.webp' /></p><p></p><h2>மைதானத்தில் பரபரப்பு</h2><p> </p><p>

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர். </p><p>

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.</p><p></p><p> </p><p>

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார். 

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார். </p><p>

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.</p><p></p><p> 

இதனையடுத்து நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T10:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இ.போ.ச ​பேருந்து மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-corporal-killed-being-hit-by-an-sltb-bus-1784540886"></link>
            <id>https://jvpnews.com/article/army-corporal-killed-being-hit-by-an-sltb-bus-1784540886</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.</p><p> 

உயிரிழந்தவர் ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆரச்சி எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p> 

திருகோணமலை பிரதேசத்தில் நடைபெற்ற நீண்ட இராணுவ பயிற்சியின் பின்னர் நேற்று (19) வீடு திரும்பிய அவர், இன்று மீண்டும் பணிக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003ea43e-3054-4842-9e22-bd3b4534ecbf/26-6a5deed7c1583.webp' /></p><p> </p><p>

இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் ஆனமடுவ கன்னங்கர மகா வித்தியாலயத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போதே அவர் இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>
 
 புத்தளத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் இ.போ.ச டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கோப்ரல் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

 பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> 
 
 விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை விபத்து இடம்பெற்ற இடமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அடிக்கடி கோர வாகன விபத்துக்கள் நிகழும் பகுதியென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3abbf0-9c87-461b-92bb-f39ff9bb2a74/26-6a5ded3bc8e17.webp' /></p><p>
</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி கொடுத்தாலும் வேண்டாம்; சமூகவலைத் தளங்களை வெறுக்கும் பிரபல நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் என அவர் கூறியுள்ளமை ரசிகர்களுக்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd22f7e-d6fc-41e6-ad7e-87713c7226c0/26-6a5de49a09712.webp' /></p><p> "என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது.

யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்.</p><p> இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது" எனவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக டெல்லி தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-least-expensive-city-in-the-world-for-dating-1784535761"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-least-expensive-city-in-the-world-for-dating-1784535761</id>
            <summary type="text">&amp;nbsp; உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Deutsche Bank மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Deutsche Bank மேற்கொண்ட ஆய்வின்படி, டெல்லியில் ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.9,920 (இந்திய மதிப்பில்) மட்டுமே செலவாகிறது.
</p><p>
 அதேவேளை , உலகின் மிக அதிக செலவுடைய நகரமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.45,750 வரை செலவிட வேண்டியிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5596bacd-77cf-43ae-81ce-cfbd85edf947/26-6a5ddad388e98.webp' /></p><p>

இந்த ஆய்வு, உலகின் பல்வேறு நகரங்களில் உணவு, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட டேட்டிங் தொடர்பான செலவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T08:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிரதம் மோதி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-killed-after-being-hit-by-a-train-colombo-1784535102"></link>
            <id>https://jvpnews.com/article/person-killed-after-being-hit-by-a-train-colombo-1784535102</id>
            <summary type="text">கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அளுத்கமவிலிருந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2253f56-b343-4a56-9a20-9ce0fe3812b1/26-6a5dd840463e4.webp' /></p><p>

உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T08:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945"></link>
            <id>https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் &#039;குங்பூ ருவான்&#039; என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d3ee84-867d-4f02-9045-b6881bc698de/26-6a5dacab3d4da.webp' /></p><h2>வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், 

நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p></p><p> </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'குங்பூ ருவான்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.</p><p></p><p> 

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T07:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடகு வைக்கப்படும் பெருமளவு தங்க நகைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/quantities-of-gold-jewelry-being-pledged-sri-lanka-1784531356"></link>
            <id>https://jvpnews.com/article/quantities-of-gold-jewelry-being-pledged-sri-lanka-1784531356</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டு மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் 351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டு மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் 351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். </p><p>


இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்றும் பேராசிரியர் வசந்த அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a634cdf5-77de-4cb7-b487-666a46f52235/26-6a5dc99db09a8.webp' /></p><p>
</p><p>


2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.</p><p>

 

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p></p><p>



அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.



 நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T07:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-companies-for-non-payment-of-taxes-1784530116"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-companies-for-non-payment-of-taxes-1784530116</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இது தொடர்பான தகவலை, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da6b402-b214-4d7b-9e5b-9a757edf0a7e/26-6a5dc4c65d2c8.webp' /></p><p>
</p><p>


வரி நிலுவையை வசூலிக்கும் நோக்கில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T06:46:59+00:00</updated>
        </entry>
    </feed>
