<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T21:14:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>



கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec335d3c-7f5c-4687-9768-e567cf08c43c/26-6a88b3c77f1c0.webp' /></p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>



இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
</p><p>


எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. </p><p>



எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்,

இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் இறுதி உரை ; அரசியல் விமர்சனத்துடன் பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8d697c-67e0-400a-9312-f1781c1cd78b/26-6a88ab2252955.webp' /></p><p>அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:46:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை அன்னாசிப்பழங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984</id>
            <summary type="text">இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d32500-a0a4-480b-b54d-bfdd64c9aeac/26-6a88a8ba6cb07.webp' /></p><p>பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு நிலவுவதுடன், அவர்கள் ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கின்றனர்.</p><p>

தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் திருவிழாவில் விபரீதம் ; வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9cfc12-6528-4a42-be4e-98505c3997aa/26-6a888b4cdc6db.webp' /></p><p>

இதன்போது அங்கிருந்த பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அங்கு திரண்டிருந்த சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், சில ஆலய நிர்வாகங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, திருவிழா மற்றும் மத நிகழ்வுகளை பொறுப்புடன் நடத்த வேண்டும் என அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான தீ விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நவாலி அந்திரான் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சிங்கள பாடகியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730</id>
            <summary type="text">காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.</p><p> 

நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். </p><p>

நந்தா மாலினியின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் நாளை (22) பொரளை பொது மயானத்தில் பி.ப 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc69c7ec-317d-4dd1-8e80-98915dc2f175/26-6a88a3d39cb66.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d9dc20-3d30-42fa-8648-fc61ec3e086d/26-6a88a17fd9446.webp' /></p><p> 

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னோடித் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199"></link>
            <id>https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199</id>
            <summary type="text">விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.</p><p> 

முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதலீடுகளும் உபகரணங்களும் வீணடிக்கப்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட திட்டத்தின் முன்னோடி கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் உரிய சவால்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f503fb5d-e712-46f4-92c9-ebf8e53478cc/26-6a888669dd920.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்மூலம் கிடைக்கும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஆரம்பக் கட்டத்தில் இனங்காணப்பட்ட குறைபாடுகளுடைய கற்கும் மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை முறையாக நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போது நடைமுறையிலுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படுவதுடன், அதன் ஆரம்பக் கட்டத்தில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. </p><p>

இதன்போது, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள பாடசாலைகள் அல்லது கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். </p><p>

இது தவிர, முறையான அடையாள மற்றும் பரிசோதனை முறைகளை நிறுவுதல், கல்வியலாளர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல் மற்றும் அணுபவ வசதிகள் தொடர்பான தரங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கனேடிய கடவுச்சீட்டுடன் பயணித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>

தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c2ed1c-daea-457b-bac2-b51de0abf59e/26-6a887e5960e09.webp' /></p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p>
இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனத் திருட்டுகள் குறித்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718"></link>
            <id>https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718</id>
            <summary type="text">மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e41d72d4-f871-402d-975d-8d77b158c9aa/26-6a8878cfbdb44.webp' /></p><p>அத்தகைய வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்குள் விடப்படும் விலைமதிப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்பவை காணாமல் போவது தொடர்பிலும் தற்போது பதிவாகியுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

சில சந்தர்ப்பங்களில், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே வேறு வேலைகளில் ஈடுபடுவதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாவிகளை அவற்றிலேயே விட்டுச் செல்வதன் மூலம் குற்றவாளிகள் உடனடியாக அவற்றைத் திருடிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

அத்துடன், தங்களது வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியை வீட்டின் திறந்த வெளியில் நிறுத்தி வைப்பதும், வீட்டின் வாயில் கதவுகளுக்கு பூட்டுப் போடாமல் இருப்பதன் மூலமும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது வாகனங்கள் திருடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடமும், வர்த்தக நிலைய வளாகத்தில் வாகனம் நிறுத்தப்பட்டால் அது தொடர்பான பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது வர்த்தக நிலையத்தின் கடமையில் உள்ள ஊழியரிடம் அது குறித்துத் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

அத்துடன், இரவில் இருண்ட பகுதியிலோ அல்லது தனிமையான இடத்திலோ மோட்டார் சைக்கிள் அல்லது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அது குற்றவாளி ஒருவருக்குக் குற்றம் இழைப்பதற்கு உதவி புரிவதாக அமையும் என்பதால், அது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

எவ்வாறாயினும், தங்களது வாகனம் திருடப்பட்டால், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்களான 119 / 118 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும், அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:12:06+00:00</updated>
        </entry>
    </feed>
