<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T17:45:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகளுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063"></link>
            <id>https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c24a88-69b3-465e-ac9e-4606d5680583/26-6a91c511066fa.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிரிழப்புகள்</h2><p style="text-align: justify; ">

இதில், 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, ரயில் விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; ">

விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13733759-edb2-45d2-b4ef-48f6ebff17c9/26-6a91bf2e80abb.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p style="text-align: justify; ">



இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.</p><p style="text-align: justify;">



அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><p style="text-align: justify;">


இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-28T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 2 நாட்களில் பல கோடி ரூபாய் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404"></link>
            <id>https://jvpnews.com/article/revenue-earned-from-expressways-in-two-days-1787934404</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள அதிவேகப் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் 124.57 மில்லியன் ரூபாவுக்கும் (12.45 கோடி) அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd250c1-fd05-4417-897a-8836e2bffb36/26-6a91b73d4017e.webp' /></p><h2 style="text-align: justify; ">வருமானம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">26ஆம் திகதி E01, E 02, E 03 மற்றும் E 04 ஆகிய அதிவேகப் பாதைகளில் மொத்தம் 163,763 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 60.41 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதில் E 01 மற்றும் E 02 பாதைகளிலேயே அதிகளவிலான போக்குவரத்து பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">இங்கு 97,149 வாகனங்கள் பயணித்ததன் மூலம் 35.61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அதேவேளையில், E 03 பாதையில் 45,942 வாகனங்கள் மூலம் 18.90 மில்லியன் ரூபாவும், E 04 பாதையில் 20,672 வாகனங்கள் மூலம் 5.90 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">&nbsp;27ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தியுள்ளன. இதன் மூலம் 64.16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது முந்தைய நாளை விடச் சுமார் 3.75 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

அன்றைய தினம் E 01 மற்றும் E 02 பகுதிகளில் 102,027 வாகனங்கள் மூலம் 41.14 மில்லியன் ரூபாவும், E 03 பகுதியில் 35,004 வாகனங்கள் மூலம் 15.99 மில்லியன் ரூபாவும், E 04 பகுதியில் 24,522 வாகனங்கள் மூலம் 7.03 மில்லியன் ரூபாவும் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், ஒட்டுமொத்த வருமானமாக 124,574,925 ரூபா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-28T16:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-rank-among-low-pay-countries-1787932289</id>
            <summary type="text">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக &#039;விசுவல் கேப்பிட்டலிஸ்ட்&#039; (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக 'விசுவல் கேப்பிட்டலிஸ்ட்' (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளுக்கு அமைவாக, நாடுகளில் நிலவும் மாதச் சம்பளம் மற்றும் அந்த நாடுகளின் வாங்கும் திறனை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f08232c-5782-4e10-9327-ac2ba6151754/26-6a91afdd9a6d9.webp' /></p><h2 style="text-align: justify; ">குறைந்தபட்ச மாதச் சம்பளம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, இலங்கைக்கு கீழே நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">

இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்துடன் வாங்கும் திறனைப் பொருத்தும்போது, ​​குறித்த தொகையானது 200 அமெரிக்க டொலர்களாக தொடர்புடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது இலங்கைப் பண மதிப்பில் சுமார் 66,000 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

ஆசியாவில் அதிகூடிய குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளுக்கு மத்தியில் தென் கொரியா முன்னிலையில் உள்ளதுடன், அங்கு அந்த மதிப்பு 2366 அமெரிக்க டொலர்களாகும். </p><p style="text-align: justify;">

இந்த தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து குறைந்தபட்ச சம்பளமாக 3804 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T15:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673"></link>
            <id>https://jvpnews.com/article/praggnanandhaa-wins-first-grand-chess-tour-title-1787921673</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
</p><p>
 அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc617ef1-2dad-478b-9dc8-a8aa8ddc6cb9/26-6a91850b03f6d.webp' /></p><h2>&nbsp;முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை</h2><p>
</p><p>
ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.</p><p> இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.</p><p></p><p>இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை&nbsp; பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை&nbsp; பாராட்டி&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர்&nbsp; ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம்; சுற்றி வளைத்த பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774"></link>
            <id>https://jvpnews.com/article/secret-surveillance-tower-in-poonakary-kilinochchi-1787923774</id>
            <summary type="text">&amp;nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc6f139-adb0-4286-9c7a-ab61ef71a737/26-6a918d4046c5c.webp' /></p><h2>&nbsp;238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம்</h2><p> </p><p>



''கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> 



அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p></p><p> 



இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும் நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை. </p><p>



இந்நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம் ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்களிடம் விடயத்தை வினவிய போது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க வந்ததாக தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>


நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத் தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்கள்.


காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
அந்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12 காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட உள்ளது.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள் ,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில் மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.</p><p>

ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-is-one-of-the-top-20-ports-world-1787922388</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89141911-6eb9-4eb3-b2d8-7f737806dcd5/26-6a9187d57a18c.webp' /></p><h2>கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ,ஐரோப்பா</h2><p> 

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும்.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது.</p><p></p><p> 

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

அத்துடன் வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409"></link>
            <id>https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05dc0ae5-41d1-4d1a-b24e-4c027c19b286/26-6a917462d5e80.webp' /></p><p></p><h2>&nbsp;உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது</h2><p>



பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888"></link>
            <id>https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹ_ருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/004122c2-504f-4ac5-b7ce-7b4ff71785b5/26-6a9189c9db55b.webp' /></p><p>
</p><p>
அதேநேரம், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், இன்றைய நாளிலும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை செல்சியஸ் 39 முதல் 45 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.92 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 20,207 நோயாளர்களும், கொழும்பில் 18,794 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eee746e-9220-41f6-8abe-0cc23e3910cd/26-6a91805f5c5a7.webp' /></p><p>



மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 நோயாளர்கள் பதிவாகியுள்ளது.



நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T12:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T11:47:28+00:00</updated>
        </entry>
    </feed>
