<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T14:14:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sale-s-petition-adjourned-1784640512"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sale-s-petition-adjourned-1784640512</id>
            <summary type="text">ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இம்மனு இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6bee499-8000-4c53-8eb0-043664da4386/26-6a5f740183587.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T13:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை ; நெகிழ வைத்த இறுதி நாட்டியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895"></link>
            <id>https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895</id>
            <summary type="text">இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>மட்டக்களப்பில் பரதகலாலயா என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நடத்தி வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சுபித்ரா கிருபாகரன், இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p>பல தசாப்தங்களாக கலைப் பணியில் ஈடுபட்ட அவர், தனது மாணவர்கள் மூலம் பரதக் கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்.
</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக அவர் காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. </p><p>இதன்போது, அவரது மாணவ, மாணவிகள் தமது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கண்ணீருடன் நாட்டிய சமர்ப்பணத்தை நிகழ்த்தினர்.
</p><p>
குருவின் நினைவாக இடம்பெற்ற இந்த நாட்டியாஞ்சலி, அங்கு கூடியிருந்த அனைவரையும் உருகச் செய்ததுடன், அதன் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
</p><p>
இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p><p>
பரதக் கலையின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த சுபித்ரா கிருபாகரனின் கலைச் சேவை, அவரது மாணவர்களின் மூலம் என்றும் தொடரும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af4c1de-bfa8-45f0-bd9a-985d77dce650/26-6a5f3319aecf8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516871e0-b710-4813-9ec4-8e1b6182cddf/26-6a5f331a5ffe6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14588538-b750-497d-925b-b34345c8972c/26-6a5f331b1331b.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T13:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சி நீங்க வினோத வழிபாடு ; தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த கிராமத்துப் பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strange-ritual-relieve-drought-village-women-frogs-1784638628"></link>
            <id>https://jvpnews.com/article/strange-ritual-relieve-drought-village-women-frogs-1784638628</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியைத் தொடர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிராம மக்கள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியைத் தொடர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>குறித்த மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d12728a-3994-40fb-be62-7f0b51a8db83/26-6a5f6ca5bf131.webp' /></p><p>

குடிநீரைப் பெறுவதற்காக பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் நீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலையில், கிராமத்தில் மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வழிபாட்டை நடத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது இரண்டு தவளைகளைப் பிடித்து அவற்றுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். </p><p>தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>

இது தொடர்பில் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில், வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது தமது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
தற்போது நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்நிலை பொருள் கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை ; புதிய மோசடி குறித்து அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-to-online-buyers-notification-of-new-scam-1784637318"></link>
            <id>https://jvpnews.com/article/warning-to-online-buyers-notification-of-new-scam-1784637318</id>
            <summary type="text">நிகழ்நிலை (Online) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிகழ்நிலை (Online) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>

வாடிக்கையாளர்கள் நிகழ்நிலை ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும் போது மூன்றாம் தரப்பினரால் ஏற்படுத்தப்படும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுருத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863c8042-d69c-4f09-856a-623782f0199b/26-6a5f67878692a.webp' /></p><p>இவ்வாறான மோசடிகளில், போது குறித்த பதிவு செய்யாத செய்யப்படாத பொருளை இரத்து செய்ய வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செயலி ஊடாக இணைய இணைப்பு ஒன்றினை அனுப்பிவைக்கப்படுவதாகவும், குறித்த இணைப்பை அனுகுவதன் மூலம் இரகசியக் குறியீட்டைப் பெற்று, தரவுகளை கையாளக் கூடிய செயலிக் கோப்புகளைப் மோசடி காரர்கள் பதிவிறக்கம் செய்ய வைப்பதன் மூலம் தொலைபேசி , கணினியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.
</p><p>
அத்தோடு, போலியான விநியோக முகவர்களும் நேரடியாக வந்து, பொருள் கொள்வனவுக்கான பதிவை இரத்து செய்வதாகக் கூறி இணைப்பை அனுகுமாறு தெரிவித்து, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் மோசடிகாரர்கலால் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p>ஆகையால், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை அனுகுவதையோ, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் பின் எண்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

மேலும் சந்தேகத்திற்கிடமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாமெனவும், விநியோக முகவரின் அடையாளத்தை நேரடியாக உறுதிப்படுத்துமாறும், மோசடி தொடர்பில் சந்தேகம் ஏற்படின் உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிரடி மாற்றம் ; 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dramatic-change-to-the-sri-lanka-transport-board-1784636596"></link>
            <id>https://jvpnews.com/article/dramatic-change-to-the-sri-lanka-transport-board-1784636596</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குளிரூட்டப்பட்ட (Deluxe) புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p></p><p>

2026ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 - 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd19013-e2b3-428c-aa1b-5bbce7e7a323/26-6a5f64b5e5f86.webp' /></p><p>

2025–2026 வீதி பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில், நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் மிகவும் பொருத்தமானவை என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமைவாக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த யோசனையை பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் ; பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-year-old-girl-tragically-dies-of-dengue-1784636073"></link>
            <id>https://jvpnews.com/article/4-year-old-girl-tragically-dies-of-dengue-1784636073</id>
            <summary type="text">டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்தார்.</p><p> </p><p></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bad05af-59d2-4d9b-a928-8cefd6e66b0e/26-6a5f62aa8d101.webp' /></p><p> 

கடும் காய்ச்சல் காரணமாக முதன்முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளார்.</p><p> 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அச்சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p>

காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலை திறப்பு ஏற்பாட்டுக்கு எதிராக வழக்கு ; நீதிமன்று கொடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-statue-unveiling-arrangement-court-1784635023"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-statue-unveiling-arrangement-court-1784635023</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வழக்கு நேற்று (20) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e01c6f75-b263-4473-b80c-392eeb6884d4/26-6a5f5e906b88d.webp' /></p><p>

இதன்போது, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் அதன் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்களின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள், ஜூலை 25 மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் இருந்த ஏனைய கைதிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கும் சொகுசு வாகனங்கள் ; வாகனத்தை கைவிட்ட இறக்குமதியாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-vehicles-pile-up-at-hambantota-port-1784633176"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-vehicles-pile-up-at-hambantota-port-1784633176</id>
            <summary type="text">அதிகபடியான தாமதக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகபடியான தாமதக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> இலங்கைகலாச்சார நிகழ்வுகள்



ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தற்போது சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல வாகனங்கள் நீண்டகாலமாக துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085174de-155a-457a-ba95-c5b39f785b17/26-6a5f5759ccb9d.webp' /></p><p>



மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட வாகனங்களும் இதே தாமதக் கட்டண சிக்கலுக்கு முகங்கொடுத்து வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இந்நிலையில், சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்றை விடுவிக்க முயன்ற இறக்குமதியாளர் ஒருவர், அதற்காக சுமார் 5 கோடி ரூபாய் தடுத்துவைப்பு கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


குறித்த வாகனம் சுமார் ஆறு ஆண்டுகளாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக, வாகனத்தின் மொத்த செலவு சுமார் 7 கோடி ரூபாயாக அதிகரித்ததுடன், அதன் ஆரம்ப பெறுமதியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான தொகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதையடுத்து, குறித்த இறக்குமதியாளர் வாகனத்தை மீட்கும் முயற்சியை கைவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>



இதேபோன்ற காரணங்களால் பல இறக்குமதியாளர்கள் தங்களது வாகனங்களை துறைமுகங்களில் இருந்து மீட்காமல் கைவிட்டு வருவதால், நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதாகவும், தாமதக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784632725"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784632725</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><p>

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48b0ae1-17de-464e-aa14-8631ec1f1826/26-6a5f55967cad5.webp' /></p><p>

இந்த வழக்கில் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை உத்தரவு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
</p><p>
இதேவேளை, குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் சேவைக் கால நீட்டிப்பு குறித்து சுஜீவ சேனசிங்க அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opposition-to-extension-of-judges-service-term-1784632177"></link>
            <id>https://jvpnews.com/article/opposition-to-extension-of-judges-service-term-1784632177</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்தால், தாம் உடனடியாக தனது நாடாளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்லது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்தால், தாம் உடனடியாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3326cc0c-38f1-426a-b67c-fc09c3f05073/26-6a5f5372f2074.webp' /></p><p>அரசமைப்புக்கு முரணான வகையிலோ அல்லது முறையற்ற நடைமுறையிலோ நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தாம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான தீர்மானங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுஜீவ சேனசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாமின் யமாலின் வெற்றிக்குப் பின்னால் நின்ற தாய் ; தியாகம் எழுதிய வெற்றிக் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-mother-behind-lamin-yamal-s-success-a-story-1784631301"></link>
            <id>https://jvpnews.com/article/the-mother-behind-lamin-yamal-s-success-a-story-1784631301</id>
            <summary type="text">உலகக் கால்பந்தின் இளம் சூப்பர் நட்சத்திரமாக திகழும் லாமின் யமாலின் வெற்றிக்குப் பின்னால், அவரது தாய் ஷீலா எபானாவின் தியாகமும் விடாமுயற்சியும் முக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கால்பந்தின் இளம் சூப்பர் நட்சத்திரமாக திகழும் லாமின் யமாலின் வெற்றிக்குப் பின்னால், அவரது தாய் ஷீலா எபானாவின் தியாகமும் விடாமுயற்சியும் முக்கிய பங்கு வகித்துள்ளன.</p><p>
</p><p></p><p>எக்குவடோரியல் கினியாவின் பாடா நகரில் பிறந்த ஷீலா எபானா, சிறந்த வாழ்க்கையைத் தேடி இளம் வயதிலேயே ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார். </p><p>பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில் வாழ்க்கையை முன்னெடுத்த அவர், லாமினுக்கு மூன்று வயதாக இருந்தபோது கணவரிடமிருந்து பிரிந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e310b7-e4e0-48ca-b2e9-5041c8b85559/26-6a5f5006853a8.webp' /></p><p>அதன் பின்னர், தனியாகவே மகனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்.

மடாரோ நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாளராகவும் சமையல்காரராகவும் நீண்ட நேரம் உழைத்த அவர், மகனின் கால்பந்து ஆர்வத்தை உணர்ந்ததும், அவரது கனவை நனவாக்கும் நோக்கில் தனது வாழ்க்கையையே மாற்றிக்கொண்டார்.</p><p>
லாமின் யமால் CF La Torreta கால்பந்து கழகத்தில் பயிற்சி பெற வசதியாக, தனது பணியிடத்தை கிரனோல்லர்ஸில் அமைந்திருந்த மற்றொரு மெக்டொனால்ட்ஸ் கிளைக்கு மாற்றிக்கொண்டார்.</p><p> அங்குதான், நான்கு வயதில் லாமின் தனது கால்பந்து வாழ்க்கையின் முதல் அடியை எடுத்து வைத்தார்.

பொருளாதார நெருக்கடிகள், கடுமையான வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், மகனின் கனவுக்காக ஷீலா எபானா ஒருபோதும் பின்வாங்கவில்லை. </p><p>அவர் செய்த ஒவ்வொரு தியாகமும், இன்று உலகக் கால்பந்தில் பிரகாசிக்கும் லாமின் யமாலின் வெற்றிப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
</p><p>
தற்போது உலகின் மிகச்சிறந்த இளம் கால்பந்து வீரர்களில் ஒருவராகப் போற்றப்படும் லாமின் யமால், தனது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தாயின் பங்களிப்பை எப்போதும் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

அதை வெளிப்படுத்தும் வகையில், அவர் ஒருமுறை கூறியிருந்தார்:

"என் அம்மாவிடம் நான் ஒருபோதும் மரியாதை குறைத்ததில்லை. </p><p>என் அம்மா பேசும்போது, எல்லோரும் கேட்பார்கள்."

ஒரு சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால், அவரை நம்பி தன்னலமின்றி போராடிய ஒருவரின் தியாகம் இருக்கும் என்பதை ஷீலா எபானாவின் வாழ்க்கையும், லாமின் யமாலின் வெற்றியும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி ஆணைக்குழுவில் புதிய முகங்கள் ; தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/finance-commission-appointment-members-chairman-1784629165"></link>
            <id>https://jvpnews.com/article/finance-commission-appointment-members-chairman-1784629165</id>
            <summary type="text">நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி நூர் றிசானா அனீஸை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி நூர் றிசானா அனீஸை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4832baf2-b357-46bb-af85-44a5e01cef0a/26-6a5f47af1d90d.webp' /></p><p>காலியை பிறப்பிடமாகக் கொண்ட நூர் றிசானா அனீஸ், நிதி அமைச்சில் நீண்டகாலமாக பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். </p><p>இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த அவர், 31 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் திருமதி ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க ஆகியோர் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நிதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e8245e-303d-4dad-9b53-fb1ed177e67d/26-6a5f47afc1a88.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4832baf2-b357-46bb-af85-44a5e01cef0a/26-6a5f47af1d90d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fe6d28b-fee3-420c-9555-4d73f6fcb281/26-6a5f47ae65fba.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T10:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பேருந்தில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-dies-the-spot-after-being-hit-by-private-bus-1784628463"></link>
            <id>https://jvpnews.com/article/girl-dies-the-spot-after-being-hit-by-private-bus-1784628463</id>
            <summary type="text">மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியின் தொடங்கொட - லுணுகலப்புவ சந்தியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியின் தொடங்கொட - லுணுகலப்புவ சந்தியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த, லுணுகலப்புவ பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
இன்று (21) காலை சிறுமி தனது தாய் மற்றும் முன்பள்ளிக்குச் செல்லும் சகோதரனுடன் திக்வெல்ல நகரத்துக்கு செல்வதற்காக மாத்தறை - மித்தெனிய பேருந்தில் ஏறச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f523d61-8973-46ba-8820-c0d166d1e538/26-6a5f44f0b1e43.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் தெரிவிக்கையில், தானும் தனது மகனும் முதலில் பேருந்தில் ஏறியதாகவும், சிறுமி பேருந்தில் ஏறும் போதே பேருந்து முன்னோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விபத்து நேர்ந்தவுடனேயே பேருந்தின் சாரதி பேருந்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் திக்வெல்ல திடீர் மரண விசாரணை அதிகாரி ஜயந்த சமரசிங்க வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பாக திக்வெல்ல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்த அரசியல் கைதிக்கு பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/political-prisoner-wh-remand-15-years-granted-bail-1784627764"></link>
            <id>https://jvpnews.com/article/political-prisoner-wh-remand-15-years-granted-bail-1784627764</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக விசாரணையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, கடுமையான நிபந்தனைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக விசாரணையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விசாரணை நடத்தப்படாமல் இவ்வளவு நீண்ட காலம் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பது, அவருக்கு பிணை வழங்குவதற்கான போதுமான "விசேட சூழ்நிலை" என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

பிணை மனுவை பரிசீலித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர் சுமார் 15 ஆண்டுகளாக சிறையில் இருந்ததையும், கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது மட்டுமே இருந்ததையும் சுட்டிக்காட்டியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a76da73-c989-41ef-8535-f2a4475cc57a/26-6a5f42361dca0.webp' /></p><p>விசாரணையை எதிர்பார்த்து தனது இளமையின் மிக முக்கியமான காலத்தை சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய விடயமாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.</p><p>
இந்த வழக்கின் மூன்றாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான தம்பையா பிரகாஷ் (தனுஷ்) என்பவருக்கு பிணை வழங்க மறுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவை ரத்து செய்து, நீதியரசர்களான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்னம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>

குறித்த நபர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
அதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகளும் என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், வழக்கில் 106 சாட்சிகளும் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><p>

2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B பிரிவு சேர்க்கப்பட்டு, விசேட சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பிணையை மறுத்த மேல் நீதிமன்றம் அந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தை உரிய முறையில் கவனத்தில் கொள்ளவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
மேலும், கைது செய்யப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்டவரின் மகளுக்கு ஒரு வயது மட்டுமே இருந்ததாகவும், நீண்டகால விளக்கமறியல் காரணமாக அவரது குடும்பத்தினர் பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய நான்கு சரீரப் பிணையாளர்கள், இரு வாரங்களுக்கு ஒருமுறை காவல்துறை தலைமையகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுதல், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணிகள் அருண் மதுஷங்க மற்றும் அஸ்திக தேவேந்திர ஆகியோர் முன்னிலையானதுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் அனூபா டி சில்வா ஆஜராகினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:56:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த மகளின் மரணம் தொடர்பில் தந்தை சந்தேகம் ; சுகாதார அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-suspicious-about-daughter-s-death-1784627168"></link>
            <id>https://jvpnews.com/article/father-suspicious-about-daughter-s-death-1784627168</id>
            <summary type="text">இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது தந்தை, மரணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது தந்தை, மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மருத்துவத் தரப்பினரின் அலட்சியம் காரணமாக தனது மகளின் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள தந்தை, இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, </p><p>நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 13ஆம் இலக்க வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573e7e20-b510-477a-b297-b6e9953461ba/26-6a5f3fe1850e0.webp' /></p><p>

எனினும், குடும்ப உறுப்பினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், மகளின் உடல்நிலை குறித்து ஆலோசகர் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி, வாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் கடும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுக்கும் உரிய மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று மகளின் ஒட்சிசன் அளவு 85 சதவீதமாகக் குறைந்ததாகவும், ஒட்சிசன் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், அந்த நிலைமை தொடர்பில் நிபுணத்துவ மருத்துவருக்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும் தந்தை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், மகளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, வார்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கிடையில், உடற்கூறாய்வு பரிசோதனைக்கான (Histopathological examination) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிக மரணத்திற்கான காரணமாக நியூமோனியா குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாகவும் தந்தை கூறியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த நிலையில், நோயாளியின் மருத்துவப் பதிவுகள், தாதியர் குறிப்புகள், கண்காணிப்பு அட்டவணைகள், மருந்துப் பதிவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யுமாறும், மருத்துவ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராயுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவத் தரநிலைகள் பேணப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிக்க சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.
</p><p>
தனது மகளின் மரணம் தொடர்பில் உண்மை வெளிக்கொணரப்பட்டு, உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இளம்பெண்ணின் தந்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் 13 வயது சிறுவனுக்கு நேரந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079"></link>
            <id>https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079</id>
            <summary type="text">ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரின் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b63d8a-ede0-41f0-ace4-50325bdbbb3b/26-6a5efd2069bd8.webp' /></p><p>திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியபோது, பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. </p><p>இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்க வாங்க காத்திருப்போருக்கான ஷாக் தகவல் ; தங்க விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-for-those-gold-prices-rise-again-1784621676"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-for-those-gold-prices-rise-again-1784621676</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa6a2e2d-25ab-4970-8904-276255e342ff/26-6a5f2a6e3d181.webp' /></p><p>தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:14:37+00:00</updated>
        </entry>
    </feed>
