<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T23:32:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் பயணத்தை இலகுபடுத்த புதிய போக்குவரத்து நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357"></link>
            <id>https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், அத்துடன் டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6fe76b-8774-467c-ba3b-631b67e7a794/26-6a68ed325dcb6.webp' /></p><p>மேலும், தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை அம்மன் ஆலய நிர்மாணப் பணி வழக்கில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-important-progr-sudumalai-amman-temple-case-1785277926"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-important-progr-sudumalai-amman-temple-case-1785277926</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>குறித்த ஆலயத்தின் மூலஸ்தானம், கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய கட்டடங்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், உரிய கட்டட அனுமதியின்றி ஆலயக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றுமாறு கோரி முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46654b65-c0cb-483b-a777-9d3d6c2ee767/26-6a692de78302a.webp' /></p><p>இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் வி. மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.
</p><p>
ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், கட்டட அனுமதிக்காக ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.</p><p> அதேவேளை, சம்பந்தப்பட்ட பிரதேச சபையும் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் விளக்கியது.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயக் கட்டடங்களை இடித்து அகற்றுமாறு கோரிய மனு தொடர்பான கட்டளையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வழங்க தீர்மானித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T22:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ; கண்காணிப்பு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-type-of-coronavirus-spreads-in-tamil-nadu-1785276760"></link>
            <id>https://jvpnews.com/article/new-type-of-coronavirus-spreads-in-tamil-nadu-1785276760</id>
            <summary type="text">இந்தியா தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த ஆர்.எப்-5 கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த ஆர்.எப்-5 கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரின் மாதிரிகள், மரபணு ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.</p><p> பரிசோதனை முடிவுகளில், அந்த 20 மாதிரிகளிலும் ஆர்.எப்-5 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aead5dc-e8d0-4f25-bb16-1b320391ae80/26-6a69295a8d8a5.webp' /></p><p>இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவிக்கையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றுக்காக 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>2026 ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024 ஆம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.</p><p> இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டவை என்றும், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே காணப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மரபணு ஆய்வில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் ஆர்.எப்-5 வகையைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வகை வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் சுகாதாரத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T22:12:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-southern-provincial-secretaries-granted-bail-1785274680"></link>
            <id>https://jvpnews.com/article/two-southern-provincial-secretaries-granted-bail-1785274680</id>
            <summary type="text">இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>2019 ஆம் ஆண்டில் ஆளுநரின் அனுமதியின்றி மீண்டும் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, காலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கைப்பிடிகளற்ற 408 பிளாஸ்டிக் நாற்காலிகளைப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1ab2e7-b9b0-4b17-88d6-4cbde06e570d/26-6a692139da276.webp' /></p><p>தென் மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (நிதி) மற்றும் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பம் ; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069"></link>
            <id>https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db962981-f812-4afd-9777-45e789c385d4/26-6a691aef13a39.webp' /></p><p>அதிக வெப்பநிலை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அதிக நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல், போதுமான அளவு நீர் அருந்துதல், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி ; இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423"></link>
            <id>https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p></p><p>

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பிற்கான சர்வதேச மையத்திற்கு (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c2abb7-2621-466f-8436-08bd3b863bae/26-6a690cb1b0260.webp' /></p><p>இவ்விஜயத்தின் போது, அக்குழு மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
</p><p>
இதில் மூங்கில் பயிர்செய்கை, மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வாக இலங்கையில் மூங்கில் உயிர் வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஆதரவை பிரதி அமைச்சர் ஜெயக்கொடி உத்தியோகபூர்வமாகக் கோரினார்.
</p><p>
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கச் சீனத் தரப்பு தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியது.</p><p>

மேலும், இத்திட்டம் யானை - மனித மோதலுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதோடு, மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனச் சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T20:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167"></link>
            <id>https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.</p><p></p><p>

இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e5bf8e-d73a-420c-b6ac-821c8a519934/26-6a6907c8ebd26.webp' /></p><p>இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.
</p><p>
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T19:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம் ; நீதிமன்றத்தில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80680f2-942d-4b37-9acd-ba933caaa070/26-6a68f611c3992.webp' /></p><p>

இதனிடையே, குறித்த பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் தங்களது அலுவலக வருகையை பதிவு செய்த பின்னர், கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் ; புதிய நடைமுறை ஒக்டோபரில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341"></link>
            <id>https://jvpnews.com/article/customs-service-to-be-fully-digitalized-1785260341</id>
            <summary type="text">காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள SEMA கட்டிட கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றதுடன், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d4ef6f9-b3a0-4695-9551-e2c029e1d495/26-6a68e937109c9.webp' /></p><p>அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசு சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்துவது அவசியமானது சுட்டிக்காட்டிய அவர், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை மிகவும் திறமையானதாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>
 

டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை கணினி அமைப்பினால் கண்டறிய முடியும் என்பதால் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
</p><p>
 

வர்த்தக அளவீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் காரணமாக எவரது வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

 

LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பை ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் (Online) சமர்ப்பிக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
</p><p>
 

புதிய நடைமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அதை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:39:09+00:00</updated>
        </entry>
    </feed>
