<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-26T22:33:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirl-suicide-after-making-wrong-decision-1785105086"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirl-suicide-after-making-wrong-decision-1785105086</id>
            <summary type="text">ஹட்டன் பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரியவருகையில், பொகவந்தலாவை மோரார் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66e0030a-2563-40c3-934b-bd82d84fad93/26-6a668ac06d68f.webp' /></p><p>குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து பொகவந்தலாவை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும் மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T22:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல் நினோ ; இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/intensifying-el-ni-o-severe-drought-sri-lanka-1785103218"></link>
            <id>https://jvpnews.com/article/intensifying-el-ni-o-severe-drought-sri-lanka-1785103218</id>
            <summary type="text">நாட்டில் தற்போது &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு, முன்னர் 63% ஆக இருந்த சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80% ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ நிலைமை ஏற்படுமாயின், எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாட்டில் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a49fa19-5904-49f3-bf9e-e352d1a66de9/26-6a6683749c5ee.webp' /></p><p>இதேவேளை, எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
</p><p>
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் தற்போது தீவிர வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகச் சரிவடைந்துள்ளது.
</p><p>
பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆரம்பித்துள்ள எல் நினோ நிலைமை, தற்போது உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>இதன் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன.
</p><p>
இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது உருவெடுக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T22:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்ணய விலையை மீறி குடிநீர் விற்பனை ; நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selling-drinking-water-fixed-price-fined-10-lakh-1785099766"></link>
            <id>https://jvpnews.com/article/selling-drinking-water-fixed-price-fined-10-lakh-1785099766</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4052360a-5d34-49fe-9c3a-09a47197c371/26-6a6675f8adb3e.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wildlife-department-officials-attacked-kilinochchi-1785098405"></link>
            <id>https://jvpnews.com/article/wildlife-department-officials-attacked-kilinochchi-1785098405</id>
            <summary type="text">கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இதற்கமைய, கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4289810d-340c-429c-ac9f-58c453629e48/26-6a6670a6e4023.webp' /></p><p>முன்னதாக, கிளிநொச்சி - முட்கொம்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சட்டவிரோதமான முறையில் அழித்துத் துப்புரவு செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இதன்போது, சம்பவ இடத்திலிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>

இந்த மோதலில் காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 04 அதிகாரிகள் காயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டமையால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106"></link>
            <id>https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. 

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. </p><p>

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852a48e9-1d24-4b3e-aa99-804eadfb3ce1/26-6a6667ac033bf.webp' /></p><p>தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். </p><p>

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. </p><p>

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் இரு பெண்களை மோதிய பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160</id>
            <summary type="text">ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் காரைச் செலுத்தி இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரின் தகவலின்படி, நேற்று முன்தினம் (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையிலான காலப்பகுதியில், ஹைலெவல் வீதியில் உள்ள மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், வட்டரக்க 20ஆம் கட்டை பகுதியிலும் அடுத்தடுத்து இந்த இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b516b-944f-4cfc-85ca-bd5457c4fa19/26-6a665c29c45da.webp' /></p><p>விபத்துகளை ஏற்படுத்திய பின்னர் காரில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைப் பரிசோதனையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை ; வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195"></link>
            <id>https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4ae97c-af18-44bd-b276-2ecb8af5f09b/26-6a665864b7afd.webp' /></p><p>கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.
</p><p>


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தினால் அந்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838</id>
            <summary type="text">கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னெடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூன் 19ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 'சோமிரச' என்ற மீன்பிடிப் படகில் பயணித்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோரே பங்களாதேஷ் கடற்பரப்பில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த மீனவர் ஒருவர் மற்றொரு படகின் உதவியுடன் கரையை அடைந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdfa297-5ce4-4e71-8580-1bc84e7808d0/26-6a664f2fd5076.webp' /></p><p>எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
படகில் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
</p><p>
எனினும், கடல் நீரோட்டத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு படகு தொலைதூரப் பகுதிகளுக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பை அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், அந்நாட்டு மீனவர்கள் குழுவொன்றினால் தந்தையும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் முதற்கட்டமாக ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதுடன், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இருவரையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T18:17:25+00:00</updated>
        </entry>
    </feed>
