<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-20T21:45:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளால் பல்கலைக்கழகத்தை கைவிடும் மாணவர்கள் ; பேராசிரியர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-dropping-out-of-university-due-to-drugs-1787260023"></link>
            <id>https://jvpnews.com/article/students-dropping-out-of-university-due-to-drugs-1787260023</id>
            <summary type="text">பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.</p><p> 

பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565c108a-4bbf-4acb-ad46-da344ff39f72/26-6a876c78df04c.webp' /></p><p>பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார். </p><p>

நபர்கள் தொடர்ந்து போதைப்பொருளை நாடிச் செல்வது அதிலிருந்து கிடைக்கும் ஏதேனுமொரு மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல, மாறாக போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளை (withdrawal symptoms) கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். </p><p>

தொடர்ச்சியாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலுக்குள் ஏற்படும் இந்தத் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் தேவை காரணமாகவே மாணவர்கள் உட்பட எந்தவொரு நபரும் தொடர்ந்து போதைப்பொருட்களைப் பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள் என்றும் அமில இசுரு மேலும் தெரிவித்தார். </p><p>

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்கு கடத்தல்காரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் இதன்போது கூறினார். </p><p>

மேலும், பாடசாலை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பினுள்ளும் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படும் மற்றும் அடிமையாகும் அதிக போக்கு காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார். </p><p>

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராசிரியர் அமில அவர்கள்: 

"எந்தவொரு நபரும் தொடர்ச்சியாக போதைப்பொருளைப் பயன்படுத்துவது போதைப்பொருளிலிருந்து கிடைக்கும் என்பதாக அவர்கள் கூறும் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல.</p><p> </p><p></p><p>போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவர்கள் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். </p><p>இப்போது நமது பல்கலைக்கழகத்தில் தமது பாடநெறியைத் தொடர முடியாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையானவர்களுக்கு அந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானமையே ஆகும்.</p><p> இலங்கையில் தற்போது நமது பிள்ளைகளை போதைப்பொருளுக்கு அடிமையாக்க இந்த போதைப்பொருள் வியாபாரிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.</p><p> பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படுவதில் ஒருவித போக்கு காணப்படுவதைக் காட்டுகின்றன.</p><p> பல்கலைக்கழகங்களில் உள்ள பிள்ளைகளை போதைப்பொருளுக்குப் பழக்குவதிலும் ஒருவித போக்கு காணப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது" எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-imposed-company-selling-substandard-helmets-1787258920"></link>
            <id>https://jvpnews.com/article/fine-imposed-company-selling-substandard-helmets-1787258920</id>
            <summary type="text">தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f22f69ed-bf52-4051-b8e9-51fef856f15e/26-6a876829d408d.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்திலிருந்து SLS 517 தரச்சான்று முத்திரை இல்லாத LSS ரக மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

குறித்த தலைக்கவசங்கள் 1,800 ரூபா விலையில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியான நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் 200,000 ரூபா அபராதத்தை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T20:48:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் ; நாடாளுமன்றில் அரச்சுனா எழுப்பி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/muslim-nurses-clothing-issue-arjuna-raise-question-1787258114"></link>
            <id>https://jvpnews.com/article/muslim-nurses-clothing-issue-arjuna-raise-question-1787258114</id>
            <summary type="text">அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ce4174-2788-4b5f-b5a3-c1b5e87c5239/26-6a876504972f6.webp' /></p><p>அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் தாதியர்கள், தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிக்கு வந்தபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளது.</p><p>

தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T20:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seizure-illegal-ginger-cardamom-pesticide-bottles-1787256008"></link>
            <id>https://jvpnews.com/article/seizure-illegal-ginger-cardamom-pesticide-bottles-1787256008</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள் தலவில கடற்கரையில் வைத்து கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p> 

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப் பகுதியில் இன்று (20) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1d388f-6f2f-4e80-b7ad-767fb17c5069/26-6a875cca5ad6d.webp' /></p><p>இதன்போது கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

அந்தப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 591 கிலோகிராம் உலர் இஞ்சித் துண்டுகள், 75 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய 300 போத்தல்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன. </p><p>

இதற்கமைய, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்தப் பொருட்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T20:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/releasing-lands-to-the-people-of-the-north-1787252142"></link>
            <id>https://jvpnews.com/article/releasing-lands-to-the-people-of-the-north-1787252142</id>
            <summary type="text">கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக இன்று (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2280218b-623d-479c-a838-1d9f3cf6822b/26-6a874dafce180.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார். </p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். </p><p>

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:54:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி தங்கச் சங்கிலி திருட முயற்சி ; மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர் நையப்புடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-steal-gold-coin-sprinkling-chili-powder-1787245783"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-steal-gold-coin-sprinkling-chili-powder-1787245783</id>
            <summary type="text">கொழும்பு கடுவெல,பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கடுவெல,பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த நபர், கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக மிளகாய்த்தூள் அடங்கிய பையுடன் வந்ததாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741755df-d80c-436d-a338-98d3a2439f21/26-6a8734d8b2da5.webp' /></p><p>உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளைத் தூவி, தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bill-passed-regarding-employment-of-children-1787249242"></link>
            <id>https://jvpnews.com/article/bill-passed-regarding-employment-of-children-1787249242</id>
            <summary type="text">பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று (20) நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.</p><p> </p><p>இன்று (20) நாடாளுமன்றத்தில் இச்சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13fd255-3caf-47f1-a69e-f2950dc89c5b/26-6a8745aa86287.webp' /></p><p>1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள தண்டப் பணத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு இத்திருத்தச் சட்டமூலம் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p> 

1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டமானது, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலையிலும் அமர்த்துவதை முற்றாகத் தடை செய்துள்ளது. </p><p>

அத்துடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களை வேலையில் அமர்த்தும்போது முதலாளிமார்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய பல விசேட ஒழுங்குமுறைகளையும் நிபந்தனைகளையும் இச்சட்டம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகி நந்தா மாலினி மறைவு ; தேசிய துக்க தினமாக பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-day-national-mourning-beg-sri-lanka-tomorrow-1787249903"></link>
            <id>https://jvpnews.com/article/three-day-national-mourning-beg-sri-lanka-tomorrow-1787249903</id>
            <summary type="text">இலங்கையில் நாளை (21) முதல்&amp;nbsp;மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதுஇதன்படி, நாளை 21ஆம் திகதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை (21) முதல்&nbsp;மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது</p><p>இதன்படி, நாளை 21ஆம் திகதி மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb64295-d94c-4690-ac17-73530b6a0052/26-6a8744f14ca4b.webp' /></p><p>

துக்க தினம் 
பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவையொட்டி குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. </p><p>

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guarding-gnanasara-thero-s-temple-shot-dead-1787248437"></link>
            <id>https://jvpnews.com/article/guarding-gnanasara-thero-s-temple-shot-dead-1787248437</id>
            <summary type="text">கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். </p><p>

குறித்த உத்தியோகத்தர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e71068c-8737-41b9-93f9-7d926e08dce3/26-6a873f3745dd3.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T17:54:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/famous-sinhala-singer-nanda-malini-passes-away-1787243751"></link>
            <id>https://jvpnews.com/article/famous-sinhala-singer-nanda-malini-passes-away-1787243751</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். 

தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். 

தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>

1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறுவயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3e8871d-5904-4164-83c9-c7e77366fc6a/26-6a872ce961353.webp' /></p><p>தனது வளரிளம் பருவத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதிக்கு வருகை தந்த அவர், ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தில் இணைந்தார். </p><p>அங்கு அவரது பாடும் திறமையைக் கண்டறிந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவருக்கு இசைத் துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.</p><p> 

கவிதைப் போட்டியொன்றில் அவரது திறமையைக் கண்டறிந்த ஆசிரியை ஒருவர், கருணாரத்ன அபேசேகரவால் நடத்தப்பட்ட அன்றைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியான "லமா மண்டபய"விற்கு நந்தா மாலினியை அறிமுகப்படுத்தினார். </p><p>

அங்கு அவர் பாடிய "புது சாது" என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவரது இசைப் பயணத்தில் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்! கொதித்தெழுந்த பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636"></link>
            <id>https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>
குறித்த பயணி அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரப் பயணத்துக்காக ஆசனங்களை முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7604fbc-3de7-4bef-b921-4076c1fb39a7/26-6a86edf694527.webp' /></p><h2>&nbsp;பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தல்</h2><p>

 எனினும், நள்ளிரவு 2.00 மணியளவில் கெப்பிட்டிகொல்லாவ அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு , பொலிஸார் சோதனையிட்ட போது, "திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறுமாறு" பேருந்தில் இருந்த&nbsp; பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p> 

 பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பேருந்துக்கு உரிய வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து பொலிஸார் அப்பேருந்தை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைத்து, பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p><p>

இறுதியில் மற்றுமொரு பேருந்து மூலம் பயணிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், போதிய ஆசனங்கள் இன்மையால் பயணிகள் சிலர் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த பயணி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>&nbsp;பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களின் அலட்சியப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பயணிகளின் அவசரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்தை இயக்கியமை மிகப்பெரிய தவறாகும் என&nbsp; பயணி&nbsp; சாடியுள்ளார்.</p><p>

அதேவேளை, சட்டப்படி தலையிட்டு நள்ளிரவில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் செயலை அவர் பாராட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655</id>
            <summary type="text">2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படுதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a038c6-23de-439a-8ec8-bb1518846d82/26-6a8724b8cdc89.webp' /></p><p>இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் 130 பாடநெறிகளின் கீழ் பட்டப்படிப்பு அல்லது தேசிய மட்டத்திலான டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். </p><p>

இலங்கை முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3 ஆம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.</p><p> 

அதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்வதாக களுத்துறை மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:01:04+00:00</updated>
        </entry>
    </feed>
