<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T18:44:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-02T18:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-colombo-mayor-s-son-arrested-1788371852"></link>
            <id>https://jvpnews.com/article/former-colombo-mayor-s-son-arrested-1788371852</id>
            <summary type="text">கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கட்டடக் கட்டுமானத் திட்டமொன்றுக்குச் செலுத்த வேண்டியிருந்த சுமார் 36 மில்லியன் ரூபாய் பணத்தை செலுத்தத் தவறியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7aab2e-13b6-48a9-a58c-30b9e5ec1b81/26-6a98638e1fff3.webp' /></p><p>&nbsp;கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-02T17:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca6bf7e-c120-4da4-b678-4ef547b230b6/26-6a9859e1ed5da.webp' /></p><h2 style="text-align: justify; ">வெட்டுப்புள்ளி</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T17:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் பிரதமரை சந்தித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861"></link>
            <id>https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் கலந்துகொள்வதற்காகப் பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். </p><p style="text-align: justify; ">

இந்த சந்திப்பானது திம்பு நகரில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96926090-d87e-4b4a-830d-3d5885e9c06c/26-6a9853f68e18b.webp' /></p><h2 style="text-align: justify; ">இருதரப்பு உறவுகள்</h2><p style="text-align: justify; ">இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பரந்த துறைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதன்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமிக்க பல்வேறு துறைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T17:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><h2>சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை</h2><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-icc-women-s-champions-trophy-moves-to-india-1788366264"></link>
            <id>https://jvpnews.com/article/2027-icc-women-s-champions-trophy-moves-to-india-1788366264</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்ட முதலாவது ஐசிசி மகளிர் சேம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்ட முதலாவது ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடருக்கான கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய குறித்த தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c440d8-3cdf-4f21-95e2-6ba9d909015a/26-6a984db9cc071.webp' /></p><h2 style="text-align: justify; ">சீர்திருத்தங்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">

ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் நடைபெறவுள்ளன. </p><p style="text-align: justify; ">

இத்தொடர் இருபதுக்கு 20 போட்டிகளாக விளையாடப்படவுள்ளது. </p><p style="text-align: justify; ">

இத்தொடர் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எனினும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இத்தொடர் தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இத்தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை ஐசிசி தனது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் கீழ் பரிசீலித்த பின்னரே, மாற்றீடாக இந்தியாவைப் பரிந்துரைத்தது. </p><p style="text-align: justify; ">

இந்த முடிவை செப்டம்பர் 1ஆம் திகதி ஐசிசி நிர்வாகக் குழு உறுதி செய்தது என ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T16:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-to-be-credited-to-bank-accounts-1788364854"></link>
            <id>https://jvpnews.com/article/money-to-be-credited-to-bank-accounts-1788364854</id>
            <summary type="text">2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cb40b2-a939-477e-be16-2ee7f5656f07/26-6a98483794e6a.webp' /></p><h2>நலன்புரி நன்மைகள் சபை&nbsp;</h2><p> </p><p>

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p></p><p> 

உரிய பயனாளிகள் நாளை (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான பெறுபேறுகள் ; பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871"></link>
            <id>https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c72dbe-8b94-445c-b60d-498d22578936/26-6a984078e6284.webp' /></p><h2 style="text-align: justify; ">தண்டனைக்குரிய குற்றம்</h2><p style="text-align: justify; "> 

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏழு தாழ்வான தள பேருந்துகள் நன்கொடை வழங்க்கிய ஜப்பான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.
</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45809b8a-df37-48ea-ba0b-7e194068c36b/26-6a98204c565ae.webp' /></p><p>

ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இசொமாட்டாவின் (Akio Isomata) பங்குபற்றலுடன் இடம்பெற்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரில் பில் செலுத்தவில்லை; இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த' நிர்வாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலையை மொட்டொ போட்ட சம்பவம் சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 ஆகஸ்ட் 25 ஆம் திகதி 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ad2ed2-e2e5-44bb-966a-63b48c5d0b45/26-6a981d6fb9f63.webp' /></p><h2>பெரிய தொகை பில்</h2><p> </p><p>

 பாரில் பெண் உணவருத்தியதுடன் , குடித்த செலவு சுமார் 60,000 தாய் பாட் ($1,800 அமெரிக்க டொலர்) என்ற பெரிய தொகை பில் வந்துள்ளது. </p><p>

 அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் பொலிஸார் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, பெண்ணிற்கு மொட்டையடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>
 
செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p><p> 

 இதனையடுத்து கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p><p>

பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108"></link>
            <id>https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>


இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba6efc-ced0-4446-a299-2cb0140dbe8d/26-6a981a55c0eea.webp' /></p><p>
</p><p>


யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் , கார் பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயம்; கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி சீனா – நேபாள எல்லைப் பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ddf6f9-88f2-4f78-a480-d5a5b481560e/26-6a97ee112d314.webp' /></p><h2>பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை</h2><p>
</p><p>
 சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 67 பேர் கொண்ட குழுவொன்று கயிலாய யாத்திரைக்காக சென்றிருந்த நிலையில், அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p>

அவர்களில் வெங்கட்ராம் அன்னம்தேவரா மற்றும் அனகா அன்னம்தேவரா தம்பதியும் அடங்குகின்றனர். இவர்களின் மகளான தன்வி, பெற்றோர் காணாமல் போன சோகத்திலும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார்.
</p><p>
 பெற்றோர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெரியாத நிலையிலும், தனது தந்தையின் விருப்பத்திற்காக தேர்வை எழுதச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னதாக அனுமதி அட்டையிலிருந்த தனது நிழற்படத்தைப் பார்த்தபோது தந்தையின் நினைவு ஏற்பட்டதாகவும், அந்த நிழற்படத்தைத் தனது தந்தையே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 தான் அழுதுகொண்டே இருந்ததாகவும், கண்ணீர் காரணமாக சில நேரங்களில் கேள்விகளைப் படிப்பதற்கும் சிரமமாக இருந்ததாகவும் தன்வி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னர் தனது தாய் வழக்கமாக தயிரும் சீனியும் வழங்குவதுடன், தந்தை வாழ்த்துவார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள தன்வி, அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் தன்னிடம் திரும்ப வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான 5 ஆம் தர பரீட்சை பேறுபேறுகள் ; 56,000 மாணவர்கள் சித்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978"></link>
            <id>https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டுக்கான<a href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131" target="_blank"> 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் </a>சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f841452f-c86d-474d-9535-cca8af70ef88/26-6a981203c284a.webp' /></p><p></p><h2>&nbsp;பரீட்சைக்கு தோற்றிய&nbsp; 289,867&nbsp; மாணவர்கள்</h2><p> 

இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயண முகவர் நிலையத்தில் 60 மில்லியன் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thalawathugoda-60-million-stolen-travel-agency-1788355005"></link>
            <id>https://jvpnews.com/article/thalawathugoda-60-million-stolen-travel-agency-1788355005</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு - தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு - தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>


நேற்று பிற்பகல் வேளையில் முகமூடி அணிந்த மூவர் குறித்த நிறுவனத்திற்குள் புகுந்து, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adcc2837-79f2-40a5-bac6-2d2cdad01d73/26-6a9821bf5e73b.webp' /></p><h2>தலவத்துகொட பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>


சிறிய வெள்ளை நிற காரில் வந்த இந்தக் கொள்ளைக் குழுவினர், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு அதே காரில் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>


சந்தேகநபர்கள் முதலில் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பின்னரே ரொக்கம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
</p><p>

இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதுடன், பொலிஸார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
கொள்ளையர்கள் 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள், மூன்று தங்க மோதிரங்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-02T13:13:50+00:00</updated>
        </entry>
    </feed>
