<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-28T12:39:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை; சஜித் பிரேமதாச சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை என்றும், மேன்முறையீட்டு நடைமுறை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமிந்த விஜேசிறிக்கு இறுதியில் நீதி கிடைக்கும் என நம்புவதாக ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8054a06d-0fc6-4443-928e-b64b5184d53e/26-6a68a1668115c.webp' /></p><h2>&nbsp;நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்</h2><p> 



 சமிந்த விஜேசிறி பதுளை மாவட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் ஒரு தூணாக திகழ்கிறார். அவர் தனது அரசியல் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் மூலம் குடிமக்களுக்காக அச்சமின்றி பல தீவிரமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்.</p><p> நாங்கள் அவருடன் நிற்பதுடன், நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.



பதுளை மேல் நீதிமன்றம் இன்று சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><p> பொலிஸ் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துதல், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றங்களில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>



2019 ஆம் ஆண்டு பண்டாரவளை வட்டாரத்திற்கு அருகில், பொலிஸ் ஜீப் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றது தொடர்பான சம்பவமே இந்த வழக்கிற்குக் காரணமாகும். </p><p>அப்போது ஏற்பட்ட மோதல் முற்றியதால், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக அரச தரப்பு வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர்.



நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, விஜேசிறியைக் குற்றவாளியாக அறிவித்து சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-killed-in-a-horrific-accident-in-jaffna-1785240178"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-killed-in-a-horrific-accident-in-jaffna-1785240178</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாவற்குழி பகுதியை சேர்ந்த கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். </p><p>யாழ்ப்பாணச் செய்திகள்

நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் , இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை , அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa083f4a-fe38-4203-9009-cd81fb188e11/26-6a689a749de0d.webp' /></p><p></p><p> </p><p>

படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து சம்பவம் தொடர்பில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T12:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 இந்தச் சம்பவம் ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeed1c79-d613-4018-abc2-e6a614730c5d/26-6a686c3deda1d.webp' /></p><h2>வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் , அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p> 
இந் நிலையில் , பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ரயிலில் இலங்கை தமிழ் இளைஞர் அட்டகாசம்; கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7c3b30-a2fb-41d8-9ab7-bfcfd5d003ad/26-6a688d4d87e99.webp' /></p><p></p><h2>&nbsp;கொடூரமான தாக்குதலை நடத்திய&nbsp;சரணீஸ் சிவகுமார்</h2><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.
</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chavakachcheri-urban-council-selected-by-lot-1785239077"></link>
            <id>https://jvpnews.com/article/chavakachcheri-urban-council-selected-by-lot-1785239077</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd1a008-9d20-4507-ab77-0320a474e9e0/26-6a68962736a09.webp' /></p><p> </p><p> வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும் ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
</p><p>
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பனரும் வாக்களித்தனர். இலங்கைசுற்றுலா

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்&nbsp; &nbsp; .</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:42:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி; ஜீவனாம்ச தொகையும் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996"></link>
            <id>https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் தொகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதற்குப் பதிலாக, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சம் ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந் நிலையில் ரவி மோகன் தனது மகன்களை சந்திப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ab5656-cb24-4978-9b51-66ab54230956/26-6a688635cdc2a.webp' /></p><p>

வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பான தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527"></link>
            <id>https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கப் வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ec0a0b-43af-4495-83e4-22dac8b016e9/26-6a688078800e4.webp' /></p><p>
</p><p>
மஹிந்திரா Bolero ரக கப் வாகனம் குறித்த வாகனங்களில் மோதிய பின்னரும், அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

விபத்தின் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளன.</p><p>

குறித்த CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச்சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T10:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-two-killed-in-elephant-attack-1785233136"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-two-killed-in-elephant-attack-1785233136</id>
            <summary type="text">&amp;nbsp;ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந்த 68 வயதான எச்.எம். காமினி சத்துகுமார ஆவார்.
</p><p>
 ஒரு யானை தனது தோட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்த அவர், யானையை விரட்டுவதற்காக தனது வீட்டின் முன்பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c3538f-52ac-4b5e-9130-a7dd6cb2a733/26-6a687ef246307.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வீட்டுக்காரர் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் இருந்த யானை, திடீரென வீட்டை நோக்கிப் பாய்ந்தது.
</p><p>
அந்த நேரத்தில், யானை அவரைத் தாக்கி, சுமார் 100 அடி தூரம் இழுத்துச் சென்று மிதித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
யானையின் தந்தங்களால் அவரது உடல் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக ஆனமடுவ , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் குறித்து ஆனமடுவ பொலிஸார், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் ரிட் மனு மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-saley-s-writ-petition-adjourned-again-1785230905"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-saley-s-writ-petition-adjourned-again-1785230905</id>
            <summary type="text">&amp;nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb696e1-7234-4c21-9def-ea29523f6778/26-6a68763aefe2b.webp' /></p><p> </p><p>

இந்த மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. 

அதன்படி அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெரும் துயரம்; குழந்தைக்கு எமனான ஊஞ்சல் தடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-swing-bar-proves-fatal-for-child-1785229831"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-swing-bar-proves-fatal-for-child-1785229831</id>
            <summary type="text">&amp;nbsp; வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p>
நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce114b7-4e33-43d0-bfe6-4b12109b1b39/26-6a687208d7bd3.webp' /></p><p> 

இதன்போது படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.</p><p></p><p> </p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக (பிரேத பரிசோதனை) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T09:08:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சமூக ஊடக பதிவால் இலங்கையருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrim-dog-sri-lankan-prison-sentence-saudi-1785217245</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தகவல்களின்படி, கல்முனையில் இந்து பக்தர்களுடன் கதிர்காமம் நோக்கிப் பயணித்த நாயொன்றை நபரொருவர் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199f7a02-9f9b-4c04-8596-c9e3bf2c2076/26-6a6840df29131.webp' /></p><h2>இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்து</h2><p>

அதன் பின்னணியில், அனோஜன் என்ற தமிழர் ஒருவர் மற்றொரு மதத்தின் இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவூதி அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

இந்தத் தீர்ப்பு தொடர்பான தகவலை, அனோஜனின் சகோதரர் திங்கட்கிழமை (27) நண்பகலில் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 இந்தத் தீர்ப்பால் அனோஜனின் குடும்பத்தினர் கடும் மனவேதனையிலும் பாதிப்பிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் சவூதி நீதிமன்றம் அல்லது அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-28T08:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானம் மக்களே; பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/40-50-km-h-strong-wind-several-areas-srilanka-1785227830"></link>
            <id>https://jvpnews.com/article/40-50-km-h-strong-wind-several-areas-srilanka-1785227830</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

 தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4bb70cf-ebab-494d-ad4e-dca80fe7f3db/26-6a686a37cd29f.webp' /></p><h2>&nbsp;40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று</h2><p> 

 அதன்படி ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த எச்சரிக்கை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

 ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடலுக்கு அப்பாலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

 எனவே அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T08:35:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரஹெராவிற்கு சென்ற யானை விபத்தில் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-participating-perahera-injured-accident-1785226858"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-participating-perahera-injured-accident-1785226858</id>
            <summary type="text">&amp;nbsp; பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.</p><p> 

இந்த யானை கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fefe7a6c-161b-470c-bdad-4cff90395324/26-6a68666c604ce.webp' /></p><p> 

யானையைக் கொண்டு சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, யானையை அந்த வாகனத்தில் இருந்து இறக்கி வீதியோரத்தில் நிறுத்த முற்பட்டபோது , தம்புள்ளையில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.</p><p></p><p> 

டிப்பர் வாகனத்தில் மோதிய யானை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

 இந் நிலையில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a1589bc-3375-4951-a63c-5fbd2508e89a/26-6a6873986fd3c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T08:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர காவடி குழு உறுப்பினர்கள் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devinuwara-kavadi-troupe-arrested-with-narcotics-1785226419"></link>
            <id>https://jvpnews.com/article/devinuwara-kavadi-troupe-arrested-with-narcotics-1785226419</id>
            <summary type="text">&amp;nbsp; தெவிநுவர காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெவிநுவர காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த பெரஹெரா ஊர்வலம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (28) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ae334b2-f237-4fa6-b6d2-668c09bf7bd7/26-6a6864b540572.webp' /></p><h2> பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள்</h2><p> 

இந்த பெரஹெரா ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதில் கலந்துகொள்ளும் அனைத்து காவடி குழுக்களும் உடனடிப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.</p><p></p><p> </p><p>

தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவில் காவடி குழுக்களைப் பங்கெடுக்கச் செய்வது தொடர்பில் இரு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவு தீவிரமடைந்தது.</p><p> 

உருவான இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பதைத் தற்காலிகமாகக் இரத்துச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>

எனினும் இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது. </p><p>

கடந்த ஆண்டுகளில் காவடி நடனங்களில் ஈடுபட்ட அனைத்துக் குழுக்களுக்கும் இம்முறையும் அனுமதி வழங்குவதற்கு அங்கு தீர்மானிக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T08:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-arrested-accepting-a-bribe-of-20-lakh-1785223483"></link>
            <id>https://jvpnews.com/article/2-arrested-accepting-a-bribe-of-20-lakh-1785223483</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;20 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவருருமாக இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;20 இலட்சம் ரூபாய் லஞ்சமாக பணத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவருருமாக இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
</p><p>
பேராதனைப் போதனா மருத்துவமனைக்கு, 2027 ஆம் ஆண்டுக்காக உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு, தமது தந்தை மற்றும் மாமனாரின் பெயர்களில் விலைமனு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காகவும், அதன் மூலம் போட்டித்தன்மையைத் தவிர்ப்பதற்காகவும் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாவை முதலாவது சந்தேக நபர், முறைப்பாட்டாளரிடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27ac8d38-103a-46f2-b0c5-25a2dd29d671/26-6a68593cbe373.webp' /></p><p></p><h2>30 நிமிட இடைவெளிகளில் கைது</h2><p>
</p><p>
பின்னர் இந்த தொகை 25 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாய் கையூட்டலாக பெறப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து கையூட்டல் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றும் ஒருவரும் சுமார் 30 நிமிட இடைவெளிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:22:53+00:00</updated>
        </entry>
    </feed>
