<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-28T23:32:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலமான சட்டவிரோத செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220</id>
            <summary type="text">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">வியாழக்கிழமை (27)&nbsp; வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062f00b7-3478-40a0-8bcc-9056b3500018/26-6a92042f280cb.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத மதுபானம்</h2><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T23:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு ; ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486"></link>
            <id>https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d62d7d2-11bf-4a42-94ec-4b89a89bc17c/26-6a920150dd256.webp' /></p><h2 style="text-align: justify; ">திருத்தங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்படுவதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இதன்போது, ​​இது நிறைவேற்றுத்துறையின் தலையீடு இன்றி இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைப்பதும் தாமதங்களைக் குறைப்பதும் இத்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T22:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்காக பறிபோன உயிர்கள் ; வைரலான காணொளி; விசாரணையில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. </p><p>அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3ca4e1-a935-4c25-9db8-c80b1a3fab85/26-6a91e4d163447.webp' /></p><h2>&nbsp;ஐபோன்</h2><p>
</p><p>
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். </p><p>முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..

gunal
அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். </p><p>ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது..</p><p></p><p> ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். </p><p> பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
</p><p>
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. </p><p>ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T22:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754"></link>
            <id>https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754</id>
            <summary type="text">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'நவோதயா புரம்' வீட்டுத்திட்டம்&nbsp; வெள்ளிக்கிழமை (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7306a834-9a62-4f8c-b0ad-a5a327de8f7f/26-6a91fe742f311.webp' /></p><h2 style="text-align: justify; ">இலங்கை அகதிகள்</h2><p style="text-align: justify; ">

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

</p><p style="text-align: justify; ">
யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்த சகல தடைகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளேன். அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.</p><p style="text-align: justify; ">&nbsp;அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T21:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634"></link>
            <id>https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832572e0-ca57-4b86-b533-191dc5f6b582/26-6a91f62bc5cb6.webp' /></p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>

இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களில் அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-rejects-help-from-foreign-rescue-teams-1787946780"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-rejects-help-from-foreign-rescue-teams-1787946780</id>
            <summary type="text">பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தானே நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாகவும், இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியைப் பெற வேண்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தானே நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாகவும், இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அனர்த்த நிலைகளின் போது வெளிநாடுகள் உதவி வழங்க முன்வருவது இயல்பானது என்றபோதிலும், நேபாள பாதுகாப்புப் படையினர் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aebf6c-30fe-4cae-8ac3-e3d5c42eee3d/26-6a91e71e69eaa.webp' /></p><h2 style="text-align: justify; ">வெளிநாட்டு உதவிகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, தற்போது அத்தகைய வெளிநாட்டு உதவிகள் தேவைப்படவில்லை என்று அவர் மேலும் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், இலங்கை, இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமது தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புவதற்கான அனுமதியைக் கோரியிருந்ததாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. </p><p style="text-align: justify; ">

பாதிக்கப்பட்ட சீனா எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா (Rasuwa) மாவட்டம் உட்பட ஏனைய பகுதிகளில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T20:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடிப்படையினரிடம் சிக்கிய கடத்தல்காரர் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725"></link>
            <id>https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725</id>
            <summary type="text">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு Iஇன் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (27) கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹடவில - பொத்துவட்டன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eced449-65c8-4252-9e15-3a390fa858e1/26-6a91d35f37fb4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் கஹடவில, பொத்துவட்டன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">
16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மது மற்றும் போதைப்பொருள் பாவிப்போரின் கவனத்திற்கு ; மிரளவைக்கும் தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651"></link>
            <id>https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460e4cf8-c59f-4e09-949f-3a2afab6c88d/26-6a91cb4547c61.webp' /></p><h2>சட்டவிரோத போதைப்பொருள்</h2><p> 

இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p> 

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். </p><p>இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:54:21+00:00</updated>
        </entry>
    </feed>
