<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-21T03:39:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து ; ஐந்து பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679</id>
            <summary type="text">மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில், கும்புக்கன களுப்பாலம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b417b2c2-f812-413e-9a08-52b36e7424a0/26-6a87a5b977af2.webp' /></p><p>
</p><p>
வெல்லவாய நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம், எதிர்திசையில் இருந்து வந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

விபத்தின்போது டிரெய்லரில் 10 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்களாவர். அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மேலும் மூவர் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் டிராக்டர் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T01:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞர் ; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-peeked-girl-taking-bath-incident-ensued-1787264396"></link>
            <id>https://jvpnews.com/article/man-peeked-girl-taking-bath-incident-ensued-1787264396</id>
            <summary type="text">இந்தியாவில் நெல்லை அம்பை அருகே சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் நெல்லை அம்பை அருகே சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞனின் தந்தை சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>தகராறில் சித்தப்பாவுக்கு கத்திக்குத்து</h3><p>
</p><p>
தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்திமேடு தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜூவின் மகன் சதீஷ் (18). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876e0da3-ef1f-418f-8254-14f0d891d6f2/26-6a877d8e0c597.webp' /></p><p>சம்பவத்தன்று அருகிலுள்ள கிராமத்திற்கு சென்ற சதீஷ், அங்குள்ள வீட்டின் பின்புறம் சென்று குளியலறையில் 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. </p><p>இதை கவனித்த சிறுமி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
</p><p>
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உறவினர்களுடன் சதீஷின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜூ சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
</p><p>
காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
</p><p>
இதுகுறித்த கல்லிடைக்குறிச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். </p><p>இதற்கிடையே, சிறுமியை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சதீஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி பகவானால் வாழ்வில் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/astrology-sani-bhagavan-valvil-utcham-thotum-rasi-1787272288"></link>
            <id>https://jvpnews.com/article/astrology-sani-bhagavan-valvil-utcham-thotum-rasi-1787272288</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவார். அவர் அக்டோபர் 9-ஆம் திகதி வரை இப்பாதத்தில் சஞ்சரிப்பார். இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d582c9-3326-4c7a-9458-6beaf6f34b2b/26-6a879c62499b1.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
சனி பகவான் தற்போது ரிஷப ராசியின் 11-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு லாபம், வருமானம் மற்றும் லட்சியங்களின் நிறைவேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த திட்டங்கள் இப்போது இறுதியாக வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c1860e-4094-46ea-9e78-e6cb7ccd307c/26-6a879c6303115.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம், மேலும் அவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76fde4a6-89e9-475d-9da7-9bbbac12eade/26-6a879c645a7e1.webp' /></p><h3>மகரம்</h3><p>
ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மகர ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், நீண்ட காலமாக மனதில் நீடித்து வரும் சில வலிகள் இப்போது மறையும், மேலும் மனம் வலிமையாக மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3e6ca17-ed04-4ffe-98e4-222b7e91b4f6/26-6a879c63a793a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T00:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு ; நாமல் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-s-move-to-raise-retirement-age-judges-1787270825"></link>
            <id>https://jvpnews.com/article/government-s-move-to-raise-retirement-age-judges-1787270825</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570c985e-52e9-4a1d-95ff-d62540433a1a/26-6a8796abacee1.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-protest-to-remove-the-jaffna-liquor-store-1787268362"></link>
            <id>https://jvpnews.com/article/people-protest-to-remove-the-jaffna-liquor-store-1787268362</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.</p><p>

இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca396190-cc4c-4f06-9615-31316440749a/26-6a878d0c617c8.webp' /></p><p>இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
</p><p>
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுவதால், இதனால் சமூக ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது மதுபானப் பாவனையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும், கிராமத்தின் சமூகச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன், மக்களின் எதிர்ப்பையும் சமூகத்தின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p>

இந்தக் கண்டனப் போராட்டத்தில் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:26:10+00:00</updated>
        </entry>
    </feed>
