<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-31T14:26:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 பவுண் நகை.... ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288"></link>
            <id>https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288</id>
            <summary type="text">70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5df4364-6d86-450f-8a11-7315993b6ae0/26-6a957f11dc514.webp' /></p><h2>தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை</h2><p>கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புவனேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p> 
எம்.எஸ்சி., பி.எட். படித்திருந்த புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், 50 சவரன் தங்க நகைகள் வழங்கியதாகவும், மணமகனுக்கு 20 சவரன் நகைகள் கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
 
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் தங்கச்சங்கிலி வழங்கியதை தொடர்ந்து பிரச்சினை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டெய்னருக்குள் சிக்கிய 420 கிலோ 'ஐஸ்; மாட்டினார் பிரபல தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486"></link>
            <id>https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052" target="_blank">&nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்</a> ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedf3a17-9f88-400d-88d6-a36e1f5b2bd0/26-6a957808487ba.webp' /></p><p>
</p><p>
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8665cf96-66ff-402d-912a-fd5e76084d03/26-6a95805ddce85.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து அடாவடி ; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166"></link>
            <id>https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166</id>
            <summary type="text">&amp;nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p>

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10bd686-b9b6-4202-a936-a1781315dabb/26-6a95345fd6910.webp' /></p><h2>கைது செய்த&nbsp; பொலிஸார்&nbsp;</h2><p>அத்துடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். </p><p>

பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.</p><p></p><p> 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனெல்ல பகுதியில் விபத்து; நால்வர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594</id>
            <summary type="text">&amp;nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


அரநாயக்க திசையிலிருந்து இன்று (31) பிற்பகல் மாவனெல்ல நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்ல நகரத்திலிருந்து உஸ்ஸாப்பிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab944d8-80fe-4ff3-bf89-4128625f77a1/26-6a9568d3874d8.webp' /></p><p>
</p><p>
 

வேனில் பயணித்த நால்வரே விபத்தில் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p>


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் உரிய அனுமதியுடன் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



விபத்து தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T11:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

 

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76369583-e6b5-431a-8c79-313ce3e3c746/26-6a955d64741c6.webp' /></p><h2>&nbsp;இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p></p><p>

 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><p></p><p>
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

 

மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும் (279,328 பயணிகள்).</p>]]></content>
            <updated>2026-08-31T10:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு படகு வழங்கிய யாழ்ப்பாண நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986"></link>
            <id>https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986</id>
            <summary type="text">&amp;nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214e2746-a384-40a7-9ed3-55fb3d0fcb5f/26-6a955abc37b8a.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
மேலும், இஷாரா செவ்வந்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள்; வெளிநாட்டில் இருந்து வந்த கொள்கலனால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.

 

கைப்பற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.</p><p>

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c820dfdd-1f9f-4d13-b66d-e519a668fab4/26-6a95571628528.webp' /></p><p>

 

பாகிஸ்தானில் இருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் விலை 10 ரூபாவால் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bread-price-increased-by-10-rupees-srilanka-1788168897"></link>
            <id>https://jvpnews.com/article/bread-price-increased-by-10-rupees-srilanka-1788168897</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன, கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc71713-de4f-48c9-998a-7ccb6b709243/26-6a954ac29f8dd.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். </p><p>

 அதேவேளை , ஏனைய <a href="https://jvpnews.com/article/bakery-product-prices-rise-decision-1788152006" target="_blank">பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை</a>களை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T09:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் எம்.பி பதவி ; உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archchuna-ramanathan-mp-seat-petition-high-court-1788167948"></link>
            <id>https://jvpnews.com/article/archchuna-ramanathan-mp-seat-petition-high-court-1788167948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இம்மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90dbb8de-ca3e-4079-94fc-7dbebb2e32f1/26-6a95470e342ec.webp' /></p><p></p><p> 

எனினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய நேபாள பேரழிவு; 1,643 மாணவர்களின் உயிர்காத்த ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-floods-teacher-saves-lives-of-1-643-students-1788166961"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-floods-teacher-saves-lives-of-1-643-students-1788166961</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கையின் சீற்றத்தால் நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் போது, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்டிய துரிதமான மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கையின் சீற்றத்தால் நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் போது, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்டிய துரிதமான மற்றும் சாதுரியமான செயலால் 1,643 மாணவ-மாணவிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p> நேபாளத்தின் தாதிங் (Dhading) மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சகன்னியா இடைநிலைப் பள்ளியில் (Shree Panchakanya Secondary School) இந்த வீரம் மற்றும் அர்ப்பணிப்பு சம்பவம்&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e668f1d1-4de6-46dd-affb-a76ed9607770/26-6a95433313e0d.webp' /></p><h2>ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம்</h2><p>

பள்ளி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள ஆற்றில் நீர்மட்டம் அபாயகரமான அளவில் உயர்ந்து கொண்டிருப்பதை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ் குமார் ஷ்ரெஸ்தா (Ganesh Kumar Shrestha) கவனித்தார்.</p><p></p><p>நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த ஆசிரியர் , சற்றும் தாமதிக்காமல் பள்ளி மணி அடித்து உடனடியாக அனைத்து வகுப்புகளையும் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.</p><p>

அப்பகுதியில் வழக்கமான தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்த போதிலும், தலைமை ஆசிரியர் தனது ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்புமிக்க அவசரகால மீட்புக் குழுவை அமைத்தார்.</p><p></p><p> </p><p>

வெள்ள நீர் பள்ளி வளாகத்தைச் சூழ்ந்து கொள்வதற்குள், அனைத்து மாணவர்களையும் வரிசையாக அருகிலுள்ள உயரமான மலைப்பகுதிக்கு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
</p><p>

அவரது இந்தத் துரிதமான முடிவால், சில நிமிடங்களிலேயே பள்ளி வகுப்பறைகளுக்குள் பல அடி உயரத்திற்குச் சீறிப்பாய்ந்த வெள்ள நீரிலிருந்து 1,643 குழந்தைகளும் எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பினர்.</p><p></p><p>

அதேசமயம் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் சூழலில், சுயநலமின்றிச் செயல்பட்டு அத்தனை குழந்தைகளின் உயிரையும் காத்த தலைமை ஆசிரியருக்கு நேபாள அரசு மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p>அதேவேளை நேபாள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 903 பேர் உயிரிழந்துள்ளதுடன்&nbsp; 4247 பேர் காணாமல் போயுள்ளதாக&nbsp; நேபாள&nbsp; அரசாங்க்கம்&nbsp; &nbsp;அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T08:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிககளை உங்கள் உடல் வெளிப்படுத்துகின்றதா! அப்போ அதன் அர்த்தம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-health-surprising-physical-signs-1788165869"></link>
            <id>https://jvpnews.com/article/good-health-surprising-physical-signs-1788165869</id>
            <summary type="text">&amp;nbsp; மனித உடல் எல்லா அறிகுறிகளையும் மனிதர்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் அதை சரியாக கவனிக்கமாட்டார்கள். ஆனால் நமது உடல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மனித உடல் எல்லா அறிகுறிகளையும் மனிதர்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் அதை சரியாக கவனிக்கமாட்டார்கள். ஆனால் நமது உடல் காட்டும் சில முக்கிய அறிகுறிகள் மூலம் சிறந்த ஆரோக்கியமாக உள்ளோம் என்பதை நாம் அறிந்துள்ள முடியும் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6145e8a-d5cc-4389-97ff-57fc9081505a/26-6a953eeeeca49.webp' /></p><p></p><p>
</p><h2>

முக்கிய அறிகுறிகள், </h2><p><b>
வயிற்றில் சத்தம் கேட்பது </b>; செரிமான மண்டலம் நன்றாக செயல்படுகிறது
</p><p><b>
குளிந்த நேரில் குளிக்க விருப்பம் </b>; ரத்த ஓட்டம் சீராக உள்ளது
</p><p><b>
அலாரம் இல்லாமல் காலையில் எழுவது ;</b> ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கிறது
</p><p><b>
சீக்கிரம் வியர்வை வருவது ;</b> உடல் டிடேக்ஸ் சரியாக நடக்கிறது</p><p><b>

வெயிலில் தும்மல் வருவது</b> ; நரம்பு மண்டலம் வலுவாக உள்ளதை காட்டுகிறது
</p><p><b>&nbsp;புண்கள் சீக்கிரம் ஆறுவது;</b> நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வேலை செய்கிறது
</p><p><b>
வாயில் அதிக சலிவு சுரப்பது ; </b>வாய் நீர் ஆரோக்கியத்தின் அடையாளம்
</p><p><b>
மலச்சிக்கலின்றி கழிவு&nbsp; வெளியேற்றுவது</b>; குடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T08:41:41+00:00</updated>
        </entry>
    </feed>
