<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T01:53:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய துயரம் ; பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் பறிபோன சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955</id>
            <summary type="text">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d3016-3c97-4cf7-80d8-0c38a19d6844/26-6a9a0dbca725d.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பின் விஷம் பட்ட நாவற்பழம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

</p><p style="text-align: justify; ">இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசிக்குள் நுழையும் கேது ; 18 வருஷத்திற்கு பிறகு மிகப்பெரிய அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695"></link>
            <id>https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695</id>
            <summary type="text">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் உயர்ந்த முன்னேற்றம் ஆகியவைற்றை வழங்கக்கூடியவர் கேது பகவான்.
</p><p style="text-align: justify; ">
அந்த வகையில், கேது பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது. அதாவது கடகத்தில் கேது பகவான் சுமார் 18 மாதம் இருக்கப்போகிறார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e429a91-b997-4cf9-a649-4bfbd3264723/26-6a9a1c58614ef.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்த ராசியினர்&nbsp;</h2><p style="text-align: justify; ">


இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில்&nbsp; அதிர்ஷ்டமும், திடீர் வாய்ப்புகள் தேட வரப்போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம்:</b>
ரிஷப ராசிக்கு கேதுவின் இந்த மாற்றம் இவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த காலகட்டங்களில் எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் தடை இன்றி நடக்கும். மேலும், பூர்வீக தொடர்பான தடைகள் எல்லாம் இவர்களுக்கு விலகி செல்லும்.</p><p style="text-align: justify; "><b>துலாம்:</b> துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் புகழும் கிடைக்கபோகின்றது. வேலையில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பெறவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தேடி வரப்போகிறது. இருப்பினும் வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகளை போக்கப்போகிறது.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது. இருப்பினும் பொருளாதார தொடர்பான விஷயங்களில் மிகவும் நிதானமாக கையாள்வது அவசியம்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831"></link>
            <id>https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad76f21-4dca-4138-bec0-d89ecc7cd46c/26-6a9a18f8bf4ec.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; ">இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொள்ளுப்பிட்டியில் 6வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில்&nbsp; பெண் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588</id>
            <summary type="text">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02734a6b-0143-47e1-91d3-4054d1c33f39/26-6a9a141dc5029.webp' /></p><p style="text-align: justify; ">கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய&nbsp; இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T00:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்டு மாத கர்ப்பிணிக்கு கணவன் செய்த கதி கலங்க வைக்கும் செயல் ; 45 நிமிடத்தில் பொலிஸாரின் அதிரடி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-murders-eight-month-pregnant-wife-1788480055"></link>
            <id>https://jvpnews.com/article/husband-murders-eight-month-pregnant-wife-1788480055</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c326fa57-57aa-4830-8c6c-d0fcd491e003/26-6a9a0a39a88d4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> சம்பவத்தில் உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான&nbsp; கர்ப்பிணித் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">[ZNJFWPQ ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T00:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலை 6 மணிக்கு மேல் இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதிங்க ; காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/never-eat-these-foods-after-6-pm-1788477458"></link>
            <id>https://jvpnews.com/article/never-eat-these-foods-after-6-pm-1788477458</id>
            <summary type="text">பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. குறிப்பாக&amp;nbsp; 6:00 மணிக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. </p><p>குறிப்பாக&nbsp; 6:00 மணிக்கு மேல் போண்டா, பஜ்ஜி, சமோசா, பர்கர், பீட்சா போன்ற உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் சிற்றுண்டிகளை பலரும் சாப்பிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789aec63-b26e-4d87-9a16-6ac59c52fbeb/26-6a9a0014b434b.webp' /></p><h2>&nbsp;என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது</h2><p> </p><p>ஆனால் இவை எல்லாமே உடலின் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மாலை 6 மணிக்கு மேல் நாம் சாப்பிடும் வடை, பஜ்ஜி, சமோசா, பக்கோடா போன்ற உணவுகள் செரிமானத்தை பாதிப்பதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p>அதேபோல் உடலில் கொழுப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே, மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
</p><p>&nbsp;பீட்சா, பாப்கான் அதிக சக்கரை கொண்ட இனிப்பு தின்பண்டங்கள், பானி பூரி, பேல் பூரி போன்ற தெரு உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து ரத்த சக்கரை அளவு சீர்குலைத்து விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8db8aeeb-24cc-4cfb-9b97-52dce23fa55c/26-6a9a0013f294a.webp' /></p><p> </p><p>இந்த உணவுகள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட கொழுப்புகளை உற்பத்தி செய்யும்.</p><p>

அப்படியெனில், மாலையில் என்ன உணவுதான் சாப்பிடலாம் என்கிற கேள்வி எல்லோருக்கும் வரும் அதையும் பார்ப்போம்.</p><p></p><p>
</p><p>

எண்ணெய் இல்லாமல் பொரித்த மக்கனா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வேக வைத்த இனிப்பு சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டை கடலை, மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவில் வேக வைத்த மோமக்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். </p><p>இதைவிட்டுவிட்டு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதாலும் உடலில் செரிமானத்தை பாதிப்பதோடு இரவில் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-those-planning-to-go-abroad-1788473907"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-those-planning-to-go-abroad-1788473907</id>
            <summary type="text">அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">அத்துடன் நிவாரண திட்டத்தில் விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்யும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75dec98f-1725-4159-80d3-77f21267d038/26-6a99f2b355b06.webp' /></p><h2 style="text-align: justify;">வேலைவாய்ப்பு</h2><p style="text-align: justify;">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;">

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


உலகிலுள்ள பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரேயொரு வேலைவாய்ப்பு முகவர் நிலையமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">அதற்கமைய, மத்திய கிழக்கு, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பல வேலைவாய்ப்புகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணம், தொழிற்துறை மற்றும் திறமைசார் வேலைவாய்ப்புகள், சுகாதார சேவைகள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழிற்சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.</p><p style="text-align: justify;">குறைந்த கட்டணங்களின் கீழ் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஜப்பானிய வேலைவாய்ப்புகளில், குறிப்பாக ட்ரக் சாரதி வேலைவாய்ப்புகளுக்காக பாடசாலைகளை விட்டு விலகிய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். </p><p style="text-align: justify;">எனினும், அவர்களுக்கு ஜப்பானிய மொழித் திறமை அவசியமாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

</p><p style="text-align: justify;">வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் மேலதிக விபரங்களைப் www.slfea.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம். </p><p style="text-align: justify;">

மேலும் பயிற்சி பெற்ற, அரைவாசி பயிற்சி பெற்ற மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை இந்த வேலைவாய்ப்புகளுக்காக உள்வாங்க எதிர்பார்க்கிறோம். </p><p style="text-align: justify;">சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் ஈடுபடுத்துவதை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வேலைவாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
</p><p style="text-align: justify;">
இதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் விமான டிக்கெட் விற்பனை நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக புறப்படும் தொழிலாளர்கள், சந்தையில் காணப்படும் விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.</p>]]></content>
            <updated>2026-09-03T22:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் பிடிபட்ட கொழும்பு இளைஞன் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-youth-arrested-in-tamil-area-1788469134"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-youth-arrested-in-tamil-area-1788469134</id>
            <summary type="text">திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாம் அதிகாரிகளுக்குபுதன்கிழமை (02) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c1b5122-bedb-4cb8-8d34-66deef2b525e/26-6a99df907cb3a.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718</id>
            <summary type="text">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27402e49-8c00-4441-ba7e-d9b22b6c42a0/26-6a99b6df9b926.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.&nbsp; குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். </p><p style="text-align: justify; ">அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில்&nbsp; உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை
உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp; </p>]]></content>
            <updated>2026-09-03T21:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த இளைஞனின் சூட்சமம் ; வசமாக பிடிபட்ட சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-s-trick-that-shocked-authorities-1788463953"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-s-trick-that-shocked-authorities-1788463953</id>
            <summary type="text">பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல பகுதியில் வைத்து பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>


மஹியங்கனை, பிபில மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு போதைப்பொருள் பக்கற்றுகளை வைத்துச் சென்ற பின்னர், எல்ல மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் நோக்கில் பயணித்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571fa665-bdeb-4fb9-9fcd-1fa3c6fa3a5b/26-6a99cb52d1966.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 போதைப்பொருள் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கினால் கடும் நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-if-digital-insurance-cards-rejected-1788462319</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f6260a-ff41-4da7-9c6e-54971c19a284/26-6a99c4f15a699.webp' /></p><h2>சட்ட அங்கீகாரம்</h2><p> </p><p>

இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். </p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிசெய்து கொள்ள முடியும்:</p><p></p><p> 

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p> 

1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல். 

1338 உடனடி அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ளுதல். </p><p>

இதன் காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுதிகாரிகளின் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

யாதேனுமொரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.</p><p> 

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்தால் கடும் நடவடிக்கைஅவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T20:00:30+00:00</updated>
        </entry>
    </feed>
