<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T16:27:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e1018b-4d43-4965-9083-25bd110bbc75/26-6aa57cb84f26a.webp' /></p><p>இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.</p><p>இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு; ஐ.நா கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-kills-two-children-un-concerned-1789221051"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-kills-two-children-un-concerned-1789221051</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.</p><p>

 

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa637658-59c0-4373-9496-0bce5b247aec/26-6aa558bd0feb5.webp' /></p><h2>கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
 

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
 

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T14:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 4 சந்தேகநபர்கள் கைது ; விசேட தேடுதலில் வெளிவந்த சட்ட விரோத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-suspects-arrested-in-jaffna-1789220023"></link>
            <id>https://jvpnews.com/article/four-suspects-arrested-in-jaffna-1789220023</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று&amp;nbsp; (11) மேற்கொள்ளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று&nbsp; (11) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் இச் சோதனை நடவடிக்கை கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2031cd5e-942f-4a1b-825e-41a14e9dc94b/26-6aa554b910a15.webp' /></p><h2>மீன் தொகுதி பறிமுதல்</h2><p>

தடைசெய்யப்பட்ட ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே இவர்கள் சட்டத்தின் கைகளில் சிக்கியுள்ளனர்.</p><p>

3 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,900 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

</p><p>கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T14:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் </p><p>

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17068f16-31b6-4ac3-b470-32ab5babe4c7/26-6aa5176285ad4.webp' /></p><p> துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் சென்ற தமிழக முதல்வர் ; இரவு முழுவதும் காத்திருந்து ஈழத்தமிழ் பெண் செய்த செயலால் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-woman-waits-all-night-to-meet-vijay-1789219198"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-woman-waits-all-night-to-meet-vijay-1789219198</id>
            <summary type="text">அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.</p><p>

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு நேற்று சென்றடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5010948-1ea6-4ffa-b13d-47af1c1e8b5f/26-6aa5517fd9f50.webp' /></p><h2>பெண் வழங்கிய கடிதம்</h2><p>

முதலமைச்சர் விஜயை வரவேற்பதற்காக லண்டனில் வசிக்கும் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் விடுதி வளாகத்தில் திரண்டிருந்தனர். </p><p>அவர்கள் பூங்கொத்துகளை வழங்கி அவருக்கு தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.</p><p>

இதன்போது, முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்காக இரவு முழுவதும் காத்திருந்ததாகக் கூறப்படும் பிரித்தானியாவில் வசிக்கும் 19 வயதான ஈழத் தமிழ் பெண் ஒருவர், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதிய கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அந்தக் கடிதத்தை முதலமைச்சர் விஜய் அன்புடன் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், குறித்த சந்திப்பு மற்றும் இளம் பெண் வழங்கிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-father-of-four-on-street-1789217634"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-father-of-four-on-street-1789217634</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d58381a-b6dc-4dbf-ab58-8f0ce916eb7d/26-6aa54b6487695.webp' /></p><p>
</p><p>
பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தை இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.</p><p>

பாலமுனைப் பகுதியில் வைத்து எதிர்வந்த தனியார் பேருந்துடன் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியுள்ளது.</p><p>


இச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் ; சைவ பக்தர்களுக்கு இடையூறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845"></link>
            <id>https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845</id>
            <summary type="text">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fc7ebc-cf76-4683-81eb-c0b12b68fa84/26-6aa544677cf09.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;குவிக்கப்பட்ட பொலிஸார்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p style="text-align: justify; ">
அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை திருமணம் ; இன்று மணகனின் கண் முன்னே பறிபோன மணப்பெண்ணின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218"></link>
            <id>https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணப்பெண்ணை மணமகன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d031f0-13c4-4e14-9439-e4b85f6fa76c/26-6aa541f393f7f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
வாடிப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சிற்றூந்தின் டயர் திடீரென வெடித்ததாகவும், இதனால் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்த மணமகன்&nbsp; மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118"></link>
            <id>https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118</id>
            <summary type="text">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான சம்பத் மானம்பேரியை பிணையில் விடுவிக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தங்காலை மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(11) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159dd600-ac90-4fe1-8f30-1f7c0706a359/26-6aa53da7908f4.webp' /></p><p style="text-align: justify; ">

இதற்கமைய சந்தேகநபரை 10 000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 250 000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இராசயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே சந்தேகநபர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து அவரிடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மீதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:55:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393</id>
            <summary type="text">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை நேருக்கு நேர் மோதி இன்று சனிக்கிழமை (12) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7643cfb2-d408-46af-a276-1f9eb45420dd/26-6aa5330302fb3.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்களில் மூவர் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

இவ்வாறு எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்ததையடுத்து குறித்த இளைஞன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவ்விபத்தில தனமல்வில கல்வலயாய பகுதியைச் சேர்ந்த 16 18 19 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே காணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் தனமல்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T11:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151</id>
            <summary type="text">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், அங்குள்ள பெண்ணொருவரின் கைபேசி மற்றும் ரூபா 25,000 ரொக்கப் பணத்தைத் திருடித் தப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63736c44-9e4d-4f82-95ae-f902f2166884/26-6aa52f3175d13.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருடப்பட்ட கைபேசியைப் பயன்படுத்தி, அப்பெண் உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியை அவரின் தொலைபேசி தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பில் முதலில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பலனாகவே சந்தேகநபர் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T10:49:36+00:00</updated>
        </entry>
    </feed>
