<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-22T20:31:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைதான குற்றவாளிகள் ; இலங்கை அதிகாரிகளுக்கு வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-arrested-in-dubai-for-alleged-crimes-1787428550"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-arrested-in-dubai-for-alleged-crimes-1787428550</id>
            <summary type="text">டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

இதற்கமைய, பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46766eb7-2006-4db8-8999-2e48483e3ae6/26-6a89ffef35739.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை&nbsp; குற்றம்</h2><p style="text-align: justify; ">

 

டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
</p><p style="text-align: justify; ">
 

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
 

இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify;">
 

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-22T20:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதி உயர் மின் கம்பத்தில் மோதிய கார் ; தூக்க கலக்கதால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-crashes-into-high-voltage-power-pole-in-jaffna-1787426762"></link>
            <id>https://jvpnews.com/article/car-crashes-into-high-voltage-power-pole-in-jaffna-1787426762</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது.
</p><p>


அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91700c56-993e-408b-a1ef-c012d90d72a8/26-6a89f8f9dc5d1.webp' /></p><h2>பெரும் சேதம்</h2><p>
</p><p>


விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>



எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே&nbsp; விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T19:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 1,749 பேரின் உயிரை பறித்த விபத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accidents-in-sri-lanka-claimed-1-749-lives-1787422924"></link>
            <id>https://jvpnews.com/article/accidents-in-sri-lanka-claimed-1-749-lives-1787422924</id>
            <summary type="text">நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
இது குறித்து வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e445ddba-2005-499f-a0e9-d5a1494daead/26-6a89e8ce52745.webp' /></p><h2 style="text-align: justify; ">விபத்துகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p style="text-align: justify; ">

இந்த விபத்துகள் காரணமாகக் கடுமையான காயங்களுக்குள்ளாகி 4,556 பேரும், சிறிய விபத்துகள் காரணமாக 7,295 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 3,232 சொத்துச் சேதங்களும் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

மேலும், இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 617 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 576 பாதசாரிகளும், 139 வாகன ஓட்டுநர்களும், 173 பயணிகளும், 122 மோட்டார் சைக்கிள் பின் இருக்கை பயணிகளும் மற்றும் 119 மிதிவண்டி ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-22T18:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T18:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம் ; விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371</id>
            <summary type="text">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீட்டில் காத்திருந்து பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; ">புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028f6e34-24fe-42f7-884a-2007988cb6b9/26-6a89d8ad81610.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மது போதை</h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த நபர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">இதனால் ஆத்திரமடைந்த மனைவி , வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது மூன்று குழந்தைகளும் நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
கணவர் உயிரிழந்த பின்னரும் மனைவி வீட்டிலேயே இருந்து, அவரது சடலத்தின் அருகில் விடிய விடிய காத்திருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
பொலிஸாரிடம், கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாமல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்&nbsp; தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். </p><p style="text-align: justify;">மேலும், வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T17:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற மூவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதலேகம பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df1a3a9-796a-4b07-bd68-9850015ebe23/26-6a89d274e310e.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த 37, 52 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் புலத்சிங்கள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோவால் 80000 மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761"></link>
            <id>https://jvpnews.com/article/in-sri-lanka-81-000-people-affected-by-el-ni-o-1787414761</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66b6af8-8d0d-4d10-9895-6c5395845fa9/26-6a89c9de3110d.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் விநியோகம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்குமான வேலைத்திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:11:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437"></link>
            <id>https://jvpnews.com/article/police-clearance-certificate-waiting-notice-1787412437</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் தரவு அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அதன்படி, பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் வழக்கம் போல் சமர்ப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a563759a-9e2b-414c-87d6-902da1493dda/26-6a89bfd72f241.webp' /></p><p>
</p><p>
 

இதற்கு முன்னர் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தற்காலிக வழிமுறையைப் பின்பற்றுவதற்கு வாய்ப்புளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>

 

எனவே, தரவு அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கம் போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையின் ஊடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் அடுத்தடுத்து சிக்கும் இலங்கை குற்றவாளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/criminal-bus-lalith-arrested-in-dubai-1787404704"></link>
            <id>https://jvpnews.com/article/criminal-bus-lalith-arrested-in-dubai-1787404704</id>
            <summary type="text">&amp;nbsp; துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லலித் கன்னங்கரா, அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p> 
அதன்படி, வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f23828d-ec60-4fb5-b540-ef74a00c0e6b/26-6a89a1a1a4325.webp' /></p><h2>தொடர் கொலை...</h2><p>

ரவிந்து சங்க டி சில்வா என்ற “பூருமுனா” என்பவர் மீது, 2022-ல் ஹன்வெல்லாவில் ஒரு முஸ்லிம் தொழிலதிபரையும், 2023 செப்டம்பர் 30 அன்று ஹன்வெல்லாவின் நெலுவத்துவ பகுதியில் மற்றொரு தொழிலதிபரையும் கொலை செய்ததாகவும், 2023-ல் மன்னா ரொஷன் மற்றும் அவரது நண்பரைக் கொலை செய்ததாகவும்,</p><p> 2024-ல் ஹன்வெல்லாவில் வஜிரா நிஷாந்தா மற்றும் முன்னர் கொலை செய்யப்பட்ட மன்னா ரொஷனின் சகோதரர் ஒருவரைக் கொலை செய்ததாகவும், 2025 ஆகஸ்ட் 12 அன்று ஹோமகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முடுன்கொட்டுவ என்ற பானா மந்திரியைச் சுட்டுக் கொலை செய்ததாகவும்,</p><p> 2025 ஜூலை 6 அன்று கொழும்பில் உள்ள ஒரு இரவு விடுதியில் கொத்தஹேர பொட்டா மற்றும் தெமட்டகொட ருவன் ஆகியோரைக் கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
