<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-12T23:57:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளக்காதலனுக்காக கணவரை சிறைக்கு அனுப்ப போட்ட திட்டம் ; மனைவியின் பயங்கர சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277"></link>
            <id>https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277</id>
            <summary type="text"> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&amp;nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த இளைஞர் கோழிப்பண்ணை நடத்தி வருவதுடன், அதே பகுதியில் இறைச்சிக் கடையொன்றையும் நடத்தி வருகிறார். </p><p>இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது முகவரிக்கு கூரியர் பார்சல் ஒன்று வந்துள்ளது. </p><p>அதனைத் திறந்து பார்த்தபோது, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கந்தர்பால் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்சலை கைப்பற்றியதுடன், கோழிப்பண்ணை உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
</p><p>
விசாரணையின்போது, தனக்கு பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது குறித்து எதுவும் தெரியாது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குறைந்த விலையில் கோழித் தீவனம் வழங்குவதாகவும், அதற்கான மாதிரிகளை அனுப்புவதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனை நம்பியே பார்சலைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தனது திருமணத்திற்கு முன்னரும் அதே தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், திருமணத்தை நிறுத்துமாறு தன்னை மிரட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, பொலிஸார் அவரது மனைவியின் தொலைபேசி தொடர்பு விபரங்களை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்போது, திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கும் ஸ்ரீநகரின் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்ற அரசு ஊழியருக்கும் தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பெற்றோரின் வற்புறுத்தலால் குறித்த பெண் கோழிப்பண்ணை உரிமையாளரை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பின்னரும் தாரிக் அகமதுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கணவரை போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான வழக்கில் சிக்கவைத்து நீண்ட காலம் சிறையில் அடைக்கச் செய்வதற்கு, குறித்த பெண்ணும் அவரது காதலனும் திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h3>போதைப்பொருட்கள்</h3><p>

இதற்காக தாரிக் அகமது, கான்பூரில் உள்ள தனது நண்பர் அரீப் என்பவரின் உதவியுடன் போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை கோழித் தீவனம் எனக் கூறி பார்சல் மூலம் கணவரின் முகவரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1e62f1-4825-40cc-9b2f-e780f7d1eb63/26-6a7cf5c731ef3.webp' /></p><p>பின்னர், பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி, கணவரை கையும் களவுமாக சிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த வழக்கில் கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரீப் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T22:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கீரிமலையில் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854"></link>
            <id>https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில், சுண்ணக்கல் அகழ்வினால் உருவான பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அகற்றுமாறு கோரி, வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்தனர்.</p><p>எனினும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று, குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>

இதன்போது, குறித்த குப்பைக் குவியல்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>மேலும், விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டார்.
</p><p>
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவது வழக்கமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p>அத்துடன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் கீரிமலைப் பகுதியை ஊடறுத்து தீர்த்தமாடச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இதனைக் கருத்திற்கொண்டு, ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னதாக கீரிமலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இதனால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, எதிர்காலத்தில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb98231a-7eb8-44ff-8069-a824c637c4b8/26-6a7cf03927878.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e88f0b4-c07e-4c90-83a0-95840e71edb9/26-6a7cf039cd24d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T22:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் ; இலங்கைக்கு ஐ.நா. விசேட கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891"></link>
            <id>https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5005b1-c254-4535-84a7-bb61d5c19a5d/26-6a7cb91e31ecb.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவசரமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நியாயமான விசாரணைக்கான உரிமைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தாமல், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3565a721-deef-446f-97dc-5abbf0cc704e/26-6a7cb5c50961d.webp' /></p><p>மேலும், நீதித்துறை தொடர்பான முக்கியமான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உரிய கலந்தாலோசனைகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

முறையான கலந்தாலோசனைகள் இன்றி இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவதுடன், நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான காரணங்கள், அதன் சட்டரீதியான அடிப்படை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முக்கியமான சர்வதேச கவனமாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 வாகனங்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-vehicles-involved-sand-mining-seized-kilinochchi-1786568351"></link>
            <id>https://jvpnews.com/article/6-vehicles-involved-sand-mining-seized-kilinochchi-1786568351</id>
            <summary type="text">கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (12) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>



வேறு பகுதியைச் சேர்ந்த மணல் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af2c559-3e0d-4271-8524-916307868a8f/26-6a7cdea13afde.webp' /></p><p>இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


பறிமுதல் செய்யப்பட்ட தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af2c559-3e0d-4271-8524-916307868a8f/26-6a7cdea13afde.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49987b70-1809-43fc-acd8-fcf09f40f211/26-6a7cdea1e1d0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f38c59-509a-45b4-a872-469884ffc40f/26-6a7cdea29771f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T20:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தகராறில் பெண்ணின் காதை கடித்த நபர் ; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-bites-off-woman-s-ear-over-land-dispute-1786567041"></link>
            <id>https://jvpnews.com/article/man-bites-off-woman-s-ear-over-land-dispute-1786567041</id>
            <summary type="text">நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காதைக் கடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc69981d-93bb-4c58-a798-fed91473a2a9/26-6a7cd9830c812.webp' /></p><p>

இதனையடுத்து, ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்று சுமார் ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என ‘United Human Rights Organization’ அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச அதிகாரிகள் எந்தவிதமான மதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு ; வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-yala-national-park-one-hunter-injured-1786561498"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-yala-national-park-one-hunter-injured-1786561498</id>
            <summary type="text">யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>மொனராகலை - தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர், நேற்று(11) யால காப்பகத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4197768-2e2f-4838-b6cf-740afc23bb3e/26-6a7cc3dc66cfb.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டின் போது இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், திஸ்ஸமஹாராம - எல்லகல இடதுகரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T19:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் 22ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-strongly-opposes-government-22nd-amendment-1786559660"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-strongly-opposes-government-22nd-amendment-1786559660</id>
            <summary type="text">அரசாங்கம் நீதித்துறையை முடக்கி, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் நீதித்துறையை முடக்கி, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p>

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d6d23c-cb10-4c66-9cf2-525b469346ac/26-6a7cbcadccd9f.webp' /></p><p>

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தையும் செயற்பாட்டுத் திறனையும் பலவீனப்படுத்தக்கூடியதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அரசாங்கம் நீதித்துறையைச் செயலிழக்கச் செய்வதன் ஊடாக நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை பலவீனப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிக்கான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனம் ஜனநாயக ஆட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், அதனைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உரிய விளக்கங்களை வழங்க வேண்டும் எனவும், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள் ; சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-deaths-on-the-rise-in-sri-lanka-1786558403"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-deaths-on-the-rise-in-sri-lanka-1786558403</id>
            <summary type="text">யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானமிக்கதாக விளங்கும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் உலகத்தின் அவதானம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பல வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகள் மற்றும் யானை வழித்தடங்கள் தடைப்பட்டதால், பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94cdc204-80e5-4150-977e-210c31eb1ec5/26-6a7cb7c4c0973.webp' /></p><p>

உலக யானைகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது யானைகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 199 யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
</p><p>
இவற்றில் பெரும்பாலான மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பிகளில் சிக்குதல் மற்றும் பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுதல் ஆகியவற்றினாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளரான சுற்றாடலியலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-woman-in-sri-lanka-s-civil-aviation-sector-1786557272"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-woman-in-sri-lanka-s-civil-aviation-sector-1786557272</id>
            <summary type="text">இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு புதிய மைல்கல்லாக, வசந்தி முருகேசு விமான நிலையம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு புதிய மைல்கல்லாக, வசந்தி முருகேசு விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் (AASL) முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் நீண்டகாலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பெண்ணொருவர், அதிலும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பாதுகாப்பு மார்ஷல் பதவியை வகிப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளில் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்வதில் பாதுகாப்பு மார்ஷல்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f832e9b-7080-47c8-a587-0eeb26afab7a/26-6a7cb359aac2e.webp' /></p><p>பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதில் இப்பதவி முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கியதாகும்.
</p><p>
இந்நிலையில், பாரம்பரியமாக ஆண்கள் அதிகளவில் பிரதிநிதித்துவம் பெற்றுவந்த இத்துறையில் வசந்தி முருகேசுவின் நியமனம், பெண்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
கடுமையான பொறுப்புகள் மற்றும் சவால்கள் நிறைந்த விமானப் பாதுகாப்புத் துறையில் பாலினத் தடைகளைத் தாண்டி அவர் பெற்றுள்ள இந்த நியமனம், இலங்கையின் தொழில்துறை மற்றும் அரச நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.
</p><p>
மேலும், விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் ஏனைய சவாலான துறைகளில் எதிர்காலத்தில் சாதிக்க விரும்பும் இளம் பெண்களுக்கு வசந்தி முருகேசுவின் பயணம் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நியமனத்தின் மூலம், திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பாலினம் தடையாக இருக்கக்கூடாது என்பதையும், பெண்களுக்கும் சவாலான மற்றும் பொறுப்புமிக்க பதவிகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வசந்தி முருகேசுவின் சாதனை எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:05:53+00:00</updated>
        </entry>
    </feed>
