<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-12T12:34:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் </p><p>

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17068f16-31b6-4ac3-b470-32ab5babe4c7/26-6aa5176285ad4.webp' /></p><p> துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் ; சைவ பக்தர்களுக்கு இடையூறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845"></link>
            <id>https://jvpnews.com/article/police-deployed-in-vavuniya-vedukkunari-hill-1789215845</id>
            <summary type="text">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fc7ebc-cf76-4683-81eb-c0b12b68fa84/26-6aa544677cf09.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;குவிக்கப்பட்ட பொலிஸார்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p style="text-align: justify; ">
அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை திருமணம் ; இன்று மணகனின் கண் முன்னே பறிபோன மணப்பெண்ணின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218"></link>
            <id>https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணப்பெண்ணை மணமகன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d031f0-13c4-4e14-9439-e4b85f6fa76c/26-6aa541f393f7f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
வாடிப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சிற்றூந்தின் டயர் திடீரென வெடித்ததாகவும், இதனால் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்த மணமகன்&nbsp; மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118"></link>
            <id>https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118</id>
            <summary type="text">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான சம்பத் மானம்பேரியை பிணையில் விடுவிக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தங்காலை மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(11) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159dd600-ac90-4fe1-8f30-1f7c0706a359/26-6aa53da7908f4.webp' /></p><p style="text-align: justify; ">

இதற்கமைய சந்தேகநபரை 10 000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 250 000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இராசயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே சந்தேகநபர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து அவரிடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மீதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:55:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393</id>
            <summary type="text">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை நேருக்கு நேர் மோதி இன்று சனிக்கிழமை (12) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7643cfb2-d408-46af-a276-1f9eb45420dd/26-6aa5330302fb3.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்களில் மூவர் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

இவ்வாறு எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்ததையடுத்து குறித்த இளைஞன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவ்விபத்தில தனமல்வில கல்வலயாய பகுதியைச் சேர்ந்த 16 18 19 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே காணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் தனமல்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T11:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151</id>
            <summary type="text">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், அங்குள்ள பெண்ணொருவரின் கைபேசி மற்றும் ரூபா 25,000 ரொக்கப் பணத்தைத் திருடித் தப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63736c44-9e4d-4f82-95ae-f902f2166884/26-6aa52f3175d13.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருடப்பட்ட கைபேசியைப் பயன்படுத்தி, அப்பெண் உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியை அவரின் தொலைபேசி தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பில் முதலில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பலனாகவே சந்தேகநபர் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T10:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-s-father-remanded-after-arrest-1789208508"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-s-father-remanded-after-arrest-1789208508</id>
            <summary type="text">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3ca1ed-e5dc-4554-b0cb-208993a80941/26-6aa527be08bbb.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தல்</h2><p style="text-align: justify; ">

 

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

ஷிரான் பாஸிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T10:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை அதிகாரிகள் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deer-hunt-inside-mattala-airport-premises-1789205606"></link>
            <id>https://jvpnews.com/article/deer-hunt-inside-mattala-airport-premises-1789205606</id>
            <summary type="text">மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகளையும் மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34adb82c-08db-4eb3-87d2-e45228cd2ddf/26-6aa51c678718b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தக் கைதைத் தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T09:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை 6 குண்டுத் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516"></link>
            <id>https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516</id>
            <summary type="text">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f9b0cd-b620-4020-818e-4dea5bb8e7a5/26-6aa5143e540f7.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதாள உலகக் குழுக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

யுத்த காலத்தில் பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், தெஹிவளை சிரிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T09:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகளை மிரள வைத்த பெண் ; நீண்ட காலம் அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-who-terrified-prison-officers-1789202081"></link>
            <id>https://jvpnews.com/article/woman-who-terrified-prison-officers-1789202081</id>
            <summary type="text">மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவல் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் போதைப் பொருளுடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவல் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் போதைப் பொருளுடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண் சிறைச்சாலை உணவகத்திற்குச் சென்று தான் கொண்டு வந்த உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் கைதியிடம் ஒப்படைக்க முயன்ற வேளையில் அவரின் நடவடிக்ககைளில் சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணின் உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் பரிசோதித்த போது குறித்த போத்தலில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db72bac-1fbd-4a3a-8856-356c64856e97/26-6aa50ea2b43b2.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப் பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உடனடியாக மொனராகலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் நடத்திய பரிசோதனையில் 4660 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்டவர் மொனராகலை வெலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மொனராகலை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்&nbsp; ஆலோசனையின் பேரில் தலைமைப் பரிசோதகர் செனவிரத்ன தலைலையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T08:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று ; பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த அறிவிப்பு இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2162483e-04ba-44ec-8e76-5635bd01aa87/26-6aa50ae536b95.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;கடற்போக்குவரத்து நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify;">

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். </p><p style="text-align: justify;">

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட நடவடிக்கையால் வடக்கு, கிழக்கில் சிக்கிய 65 பேர் கைது ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/65-arrested-in-north-east-operation-1789199613"></link>
            <id>https://jvpnews.com/article/65-arrested-in-north-east-operation-1789199613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1 முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1 முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள், வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 63 பேரும், காத்தான்குடி நகரில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட 44 மீன்பிடி வலைகளுடன் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6cae821-9809-422a-b99e-57107c338037/26-6aa504fe9262f.webp' /></p><h2 style="text-align: justify; ">தேடுதல் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், இந்த நடவடிக்கைகளின் போது 26 டிங்கி படகுகள், ஒரு கெப் வாகனம் மற்றும் 2 டிராக்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


திருகோணமலை ஜமாலியா, பவுல் பொயிண்ட், இலக்கந்தை, புறாத்தீவு, நதிதீவு, அலாஸ்வத்தை, நிலாவெளி, யாழ்ப்பாணம் கட்கைக்காடு, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் மற்றும் மட்டக்களப்பு அறுகம்பே உள்ளிட்ட கடற்பரப்புகளை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள், வாகனங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T07:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' நிறுவனத்தின் கடற்படையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் திட்டில் நபர் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12109707-4025-468e-a403-f9f1bc2eecd5/26-6aa4fbd1a35a2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p style="text-align: justify;">தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அச்சிறுவன் தென்னிந்தியப் பகுதியிலிருந்து படகு மூலம் வருகை தந்து, வழியறியாமல் மணல் திட்டில் சிக்கியது கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify;">

மீட்கப்பட்ட சிறுவன் கடற்படையினரால் 'தம்மென்னா' முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அச்சிறுவனை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி ஆலயத்தில் நள்ளிரவில் சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று&nbsp; இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3308bc-c33e-407d-afc0-9b008a0ac8b0/26-6aa4d61906cf4.webp' /></p><h2 style="text-align: justify; ">இரவு பூஜை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify;">

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். </p><p style="text-align: justify;">

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய பங்களதேஷ் இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665"></link>
            <id>https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தீர்வையின்றி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e6ea68-2ab3-430e-96b9-c481cd4ed364/26-6aa4f592e8c93.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து தீர்வையின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10,200 சிகரெட்டுகள் (51 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் பங்களதேச நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T06:47:53+00:00</updated>
        </entry>
    </feed>
