<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-10T23:03:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் அக்டோபர் 9 வரை அது நீடிக்கும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரக நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed509a35-6d46-4819-b33f-4ba90d86cff7/26-6a7a4bea7eb06.webp' /></p><p>அனைத்து ராசிக்காரர்களும் இதன் தாக்கத்தை உணரக்கூடும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சவாலான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ceb9a-c761-4192-bb72-3b9cc5b447c8/26-6a7a4be9cbd1d.webp' /></p><h3>கடகம்</h3><p>
சனி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கடக ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகளால் அவர்கள் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும், அதே சமயம் பணியிடங்களில் ஏற்படும் உரையாடல்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மன அமைதியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.</p><p></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. முன்னேற்பாடும், சரியான திட்டமும் இல்லாமல் எந்த விஷயத்தையும் தொடங்குவதைத் தவிர்க்கவும், முதலீடுகள் மற்றும் தேவையற்ற செலவினங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், தங்கள் துணையுடன் சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><h3>மகரம்</h3><p>மகர ராசிக்குச் சனி பகவான் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும், முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும், குடும்ப உறவுகளில் இணக்கமான சூழலைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். அவர்களின் எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அவர்கள் சில விபத்துக்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன..? அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170"></link>
            <id>https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170</id>
            <summary type="text">கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான CCTV காணொளிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மற்றும் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.</p><p>இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

மேலும், இது தொடர்பில் நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்கமும், சம்பவத்தின் பின்னணி தகவல்களும் இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T21:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி மனிதப் புதைகுழி ; மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.</p><p>
</p><p></p><p>இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3927c4d6-d4e1-4ee3-b840-4a0e7a479a35/26-6a7a3f123f49b.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் 48ஆவது நாளான இன்றைய தினம் 09 புதிய எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> 

 

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 எலும்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
 

இன்றைய அகழ்வுப் பணியின் போது, சான்றுப் பொருட்களாக மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்று மற்றும் கைவளையல் ஒன்று ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இலங்கை ; 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது அந்த ஆறு நாட்களில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 18 சதவீதமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8fb4b3-576a-4532-8a1e-6ac544520467/26-6a7a3c6940ab0.webp' /></p><p>அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

இதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.</p><p>இதேவேளை, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதில் இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக காணப்படுகிறது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 346,057 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
மொத்த வருகை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக காணப்படுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பங்கு சுமார் 9.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749"></link>
            <id>https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749</id>
            <summary type="text">கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.
</p><p>
குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ்–கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6caae7-dfb8-40ed-a4d9-106463178185/26-6a7a387f5c1a7.webp' /></p><p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.</p><p>

இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு ; இன்னும் 4 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்படுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843"></link>
            <id>https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843</id>
            <summary type="text">இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தூதுவரும் ஹொலிவுட் நடிகையுமான ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று (10) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவை சந்தித்தபோது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ca3a96b-b27c-485e-b93b-ee6f17b2e431/26-6a7a359102dd3.webp' /></p><p>இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர் கேட்டறிந்ததுடன், சர்வதேச தரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>

எஞ்சியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற 500 படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இராணுவத்தினரால் மாத்திரம் வருடாந்தம் 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கண்ணிவெடிகளிலிருந்து விடுவிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்ணிவெடிகளை அகற்றுவது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மட்டுமல்ல எனவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முக்கிய தேசிய பணியாகும் எனவும் ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555"></link>
            <id>https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555</id>
            <summary type="text">நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

தாயினால் கைவிடப்பட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f1dd94-c860-414b-8600-11b9682421e4/26-6a7a24359a1f7.webp' /></p><p>சிறுமியின் தந்தையின் நண்பரான 36 வயதுடைய குறித்த நபரே இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>எனினும், வழக்கு நடவடிக்கைகளின் போது குறித்த எதிரி தலைமறைவாகியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன் காரணமாக, எதிரி இன்றிய நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
</p><p>
வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.</p><p>இதனையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecae823e-4a67-468a-a0e4-f2532b0374de/26-6a7a24364a08b.webp' /></p><p>அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>

மேலும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p>
இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020"></link>
            <id>https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020</id>
            <summary type="text">பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மேலும் ஒரு நடமாடும் மருத்துவ பேருந்து சுகாதார அமைச்சினால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பேருந்து இன்று (10) சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d611f0f2-399a-4b8c-8e19-fd541c6a5b29/26-6a7a2dd658e33.webp' /></p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபர்ட் பெரேராவிடம் பேருந்து கையளிக்கப்பட்டது.
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான இருவருட மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் திடீர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.</p><p>

தற்போது இந்தத் திட்டம் நாட்டின் ஐந்து மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புதிதாக வழங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ பேருந்தின் உதவியுடன், தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை அதிகரித்து, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம், வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-s-keynote-issues-people-north-and-east-1786391032"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-s-keynote-issues-people-north-and-east-1786391032</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அந்தப் பகுதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அந்தப் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு தற்போது காணப்படும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0ac9663-62ca-4a09-8c61-e5f112c719c4/26-6a7a29f9aa0f5.webp' /></p><p>இதன்போது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாக தலையிடுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் டொராண்டோ திரைப்பட விழா ; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214"></link>
            <id>https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. </p><p>உலகம் முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களுக்கு தங்களது படைப்புகளை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இந்த விழா வழங்குகிறது.

இவ்விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகளின் இறுதித் திகதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சமூக மற்றும் இசை சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படங்கள் ஏற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8575465-c025-46fb-9ca6-e34321b0c232/26-6a7a1b0fc4848.webp' /></p><p>

தமிழ் திரைப்படங்களையும் உலகளாவிய சுயாதீன சினிமாவையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழா, தமிழ் மற்றும் பிற நாடுகளின் கலை, கலாசாரம், சமூக வாழ்வு மற்றும் பாரம்பரியங்களை பரிமாறிக் கொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது. </p><p>கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
</p><p>
சுமார் ஐந்து இலட்சம் கனேடியத் தமிழர்களை சென்றடையும் இந்த விழா, இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முக்கிய தமிழ் திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p> புதிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமைகிறது.
</p><p>
எனவே, www.ttff.ca என்ற இணையதளத்தின் ஊடாக உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆக்குனர்கள் தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 11-ம் திகதிக்குள் சமர்ப்பித்து, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T18:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768"></link>
            <id>https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினதும் சமர்ப்பணங்கள் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிணை உத்தரவைப் பிரகடனப்படுத்துவதை நீதவான் ஒத்திவைத்தார்.</p><p>இதற்கமைய, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4292787-45be-4906-b6c1-ce5df50cafc8/26-6a7a1182e0477.webp' /></p><p>இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சாகர காரியவசத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>

கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாகச் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
</p><p>

குறித்த விசாரணை தொடர்பான செய்திகள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காகச் சாகர காரியவசத்தை இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>

இதற்கமைய, இன்று முற்பகல் அப்பணியகத்திற்கு வருகை தந்த சாகர காரியவசமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p>


பின்னர் அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>

இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானே சைமா குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949"></link>
            <id>https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மலேசிய பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
41 வயதான குறித்த சந்தேகநபர் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் அவர் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h3>இரண்டு முக்கிய வழக்குகளில் பிரதிவாதி
</h3><p>
பொலிஸாரின் தகவல்களின்படி, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும், 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b586683-c7fd-4d7a-8871-f2d6a4f147b9/26-6a7a0e5015a74.webp' /></p><p>குறித்த இரண்டு வழக்குகளும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் அவர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதற்கு மேலதிகமாக, 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், கல்கிஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் நிதி நடவடிக்கைகளை கையாண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளையும் குறித்த சந்தேகநபர் நிர்வகித்து வந்ததாகவும், அவரது குரல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த ஆண்டு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் நபருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை “ரத்மலானே சைமா” ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பான மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதேவேளை, சில காலம் பிரான்ஸில் தங்கியிருந்த “குடு அஞ்சு” என அழைக்கப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாகவும் குறித்த சந்தேகநபர் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f444258-859c-41fc-ba91-b82a1cd62850/26-6a7a0e4f63364.webp' /></p><p>பின்னர் அவர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“குடு அஞ்சு” என்பவர் “ரத்மலானே சைமா”வை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அது தொடர்பில் கஞ்சிபானி இம்ரான் அவரை எச்சரித்த பின்னரே சைமா, கஞ்சிபானி இம்ரானுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>“ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நீண்ட காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர்கள் மீது குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? நாடு முழுவதும் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083"></link>
            <id>https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083</id>
            <summary type="text">இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p> 


குறித்த குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>


சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce197d8-0b1b-468b-ad22-16478190ac8b/26-6a7a0b4483dad.webp' /></p><p>தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

 

நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
</p><p>

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.
</p><p>

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. </p><p>புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:32:58+00:00</updated>
        </entry>
    </feed>
