<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-26T18:59:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638"></link>
            <id>https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638</id>
            <summary type="text">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாகவே இந்த முதலிடத்தைப் அவரால் பெற முடிந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3393a9-32ed-4fa2-93c1-8b6cb16bf39d/26-6a8f3327c0915.webp' /></p><h2 style="text-align: justify; ">புதிய தரவரிசை</h2><p> </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று ருமேஷ் தரங்க வெற்றி பெற்றார். </p><p style="text-align: justify; ">

புதிய தரவரிசையின்படி, ருமேஷ் தரங்க 1,363 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுடன், இதுவரை முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத் திறமையை வெளிப்படுத்தி ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740</id>
            <summary type="text">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இப்பலோகம பொலிஸ் பிரிவின் குஷலானகம பகுதியில் நேற்று (25) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4cf9c96-3f46-48d1-88fc-a7732965ed79/26-6a8f2bbef2e7b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஓட்டமாவடி பகுதியில் வசித்துவந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், இரண்டு பின் இருக்கை பயணிகளும் கலவேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின் இருக்கை பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இப்பலோகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927"></link>
            <id>https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b6eea8-e9a0-4db0-b919-5029786b7dbb/26-6a8f24a932bef.webp' /></p><h2 style="text-align: justify;"><span style="text-align: left;">எச்சரிக்கை</span></h2><p style="text-align: justify;">இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p style="text-align: justify;">
மின்னஞ்சல்: <a href="slemb.kathmandu@mfa.gov.lk" target="_blank">slemb.kathmandu@mfa.gov.lk</a>
</p><p style="text-align: justify;">
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-26T17:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888"></link>
            <id>https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. 

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125" target="_blank">திடீர் வெள்ளப் பெருக்கினால்</a> உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5212d84-341b-4491-93d3-d630995d3b88/26-6a8f05421939d.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரும்பாலான பயணிகள் இந்தியா மற்றும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியிலேயே இருந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T17:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-in-sri-lanka-1787763206"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-in-sri-lanka-1787763206</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 72 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாடுதழுவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை (25) வரையான காலப்பகுதியில் சுமார் 94 ஆயிரத்து 292 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9b6c47-adcd-4a07-b34a-e73999d13b47/26-6a8f1a084a9c6.webp' /></p><h2 style="text-align: justify; ">அதி உயர் டெங்கு அபாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள போதும், நாளொன்றில் 200 க்கும் அதிகளவான நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; ">

இந்த வருடத்தில் கடந்த மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> இம்மாதத்தில் கடந்த 25 நாட்களில் 8,551 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மேல் மாகாணத்தில் 52.962 சதவீதமானோரும் (49,901), தென் மாகாணத்தில் 20,779 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உட்பட கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது. </p><p style="text-align: justify; "> இந்நிலையில் 76 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T16:53:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய வனத்தின் 2 வளாகங்கள் தற்காலிகமாக மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-zones-of-yala-park-temporarily-closed-1787760504"></link>
            <id>https://jvpnews.com/article/two-zones-of-yala-park-temporarily-closed-1787760504</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce96e0ed-8f9b-4d81-9925-b46e7ff95e47/26-6a8f0f7a60ddc.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்பகுதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-08-26T16:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளில் ஆரம்பமான வேலைத்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/programme-launched-at-vavuniya-and-jaffna-prisons-1787759541"></link>
            <id>https://jvpnews.com/article/programme-launched-at-vavuniya-and-jaffna-prisons-1787759541</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும்போது, பிரதேச ரீதியாக ஒருங்கிணைந்து அரச நிறுவனங்களுக்கு இடையே கூட்டுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும்போது, பிரதேச ரீதியாக ஒருங்கிணைந்து அரச நிறுவனங்களுக்கு இடையே கூட்டுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc30bf9-34de-4ffa-80d0-c1707e4c41ea/26-6a8f0bb6e29fa.webp' /></p><h2 style="text-align: justify; ">அவசர நிலைமைகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் உருவாகும் பட்சத்தில், பிரதேச மட்டத்தில் வலுவான ஒருங்கிணைப்பைப் பேணி விரைவாகச் செயற்படுவதும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.
</p><p style="text-align: justify; ">
தீவு முழுவதிலும் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் இக்கூட்டுக் கட்டமைப்பை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்நிகழ்வையடுத்து, வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அமைச்சர், கைதிகளின் தேவைகளைக் கேட்டறிந்தார்.</p><p style="text-align: justify; ">


இதன்போது பெண் பிரிவுகள், விளக்கமறியல் சந்தேக நபர்கள் தங்குமிடம் மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலையின் சமையலறை ஆகியவற்றை அவர் விசேடமாகப் பார்வையிட்டார்.
</p><p style="text-align: justify; ">
அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் நிலவும் பிரச்சினைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என அங்குள்ள கைதிகளைச் சந்தித்தபோது அமைச்சர் உறுதியளித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-08-26T15:52:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சின்ன முல்லைத்தீவில் ரகசிய தகவலால் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-caught-chinna-mullaitivu-following-a-tip-off-1787750420"></link>
            <id>https://jvpnews.com/article/man-caught-chinna-mullaitivu-following-a-tip-off-1787750420</id>
            <summary type="text">&amp;nbsp; அக்கரைப்பற்று - சின்ன முல்லைத்தீவு பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அக்கரைப்பற்று பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அக்கரைப்பற்று - சின்ன முல்லைத்தீவு பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>



அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் சாஜன் மாணமடு தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த 5050 மில்லி கிராம் கஞ்சாவையும்110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d145c-f81a-4420-9f33-d9b4e7df656c/26-6a8ee815f29cf.webp' /></p><p>
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்திய போது செப்டம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-death-if-water-nuwara-eliya-gregory-lake-1787749063</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.</p><p> 

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f7bea1-dc1e-4ea2-9882-0d8e19d42c39/26-6a8ee2c8d01b1.webp' /></p><h2>தற்போது &nbsp;மிகவும் மாசடைந்த கிரகரி வாவி</h2><p> </p><p>

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.</p><p></p><p> </p><p>

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும். 

இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடக பாவனைக்கு கட்டுப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-use-of-social-media-circular-1787749892</id>
            <summary type="text">&amp;nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>


பணி நேரங்களிலும், உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கிய தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/458b92da-7b82-4a8a-b32e-0c95353aa68c/26-6a8ee60571b18.webp' /></p><h2>&nbsp;சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>


சமூக ஊடகங்களில் ரயில்வே தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவது, ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கத்தை பாதிக்கக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>


புதிய சுற்றறிக்கையின்படி, ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர், உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே ரயில்வே தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கும் ஊடகங்களுக்கும் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



மேலும், சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125"></link>
            <id>https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர்.

சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd774e3a-47b4-4cd6-9c7b-1db61c69bf2a/26-6a8edb374426d.webp' /></p><h2>ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால்&nbsp;வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும். </p><p>அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
</p><p></p><p>
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.</p><p></p><h3>&nbsp;அவசர எண்கள் அறிவிப்பு</h3><p>மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுகா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.</p><p>&nbsp; நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T13:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை பேரிடர்; நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905"></link>
            <id>https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>



அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0eafd7-33ed-4d63-9ab1-fc004bfc834b/26-6a8ee9fa9db21.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி</h2><p>
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது'எக்ஸ்' வலைத்தளத்தில்,</p><p> “நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். 



இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்.</p><p></p><p> </p><p>



நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T13:25:45+00:00</updated>
        </entry>
    </feed>
