<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T05:34:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ; வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585"></link>
            <id>https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585</id>
            <summary type="text">16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒரே நாளில் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
முதல் வழக்கில், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் தனது வீட்டில் வைத்து 14 வயது சிறுமியின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b69e45a-06a5-477d-94eb-1ff9872f2488/26-6a9a5682d7f62.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் மற்றுமொரு நபர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மூன்றாவது வழக்கில், கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் 2022ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதிமன்வயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T05:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547"></link>
            <id>https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fac342-e503-4bba-8491-2a677787f815/26-6a9a5274992e0.webp' /></p><p>அத்துடன், 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் புதிய விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம், ஊழல் ஆணைக்கழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b645cc-c83e-4dad-9180-51be7ca9596a/26-6a9a50246b7e2.webp' /></p><p>இதன்படி, அவர் சற்றுமுன்னர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
அவரிடம் எந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
இந்நிலையில், ஆணைக்குழுவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249"></link>
            <id>https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. </p><p>

இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
</p><p>
எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c7f88-8faf-4a97-a59a-ed701f0521f0/26-6a9a4d62dadf0.webp' /></p><p>இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. </p><p>

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.
</p><p>
"பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். </p><p>

போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
</p><p>
 இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. </p><p>

மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். 

இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb64e-edbd-4124-921e-9167844df1de/26-6a9a4d638f39c.webp' /></p><p>சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. </p><p>

குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p>

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.</p><p>

பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் ; நல்லூரில் 18ஆம் திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232"></link>
            <id>https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை திருவிழா நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.</p><p></p><p>

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p>

தொடர்ந்து, சுவாமி பூஞ்சப்பரத்தில் ஆலயத்தின் வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p>

திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் வெளிவீதிகளில் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கார்த்திகை திருவிழா, பக்தி மற்றும் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் முக்கிய திருவிழாக்களிலும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0067d82-44b5-4b55-9556-f6615fec2bcf/26-6a9a496ab01e4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bfad8e3-d8f0-4bd0-a1b3-c702b11c9c0b/26-6a9a4a471a2c9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b361824c-6eca-45ed-b5c7-1ea51cc95888/26-6a9a4a47e321a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28104e7-dfa8-4eac-8d2b-6dea8e989d42/26-6a9a4a4899e4e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T04:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் குறித்து சுகாஷ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561"></link>
            <id>https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய தூண் எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94914dc-30fb-475d-bcde-12ba0721f315/26-6a9a46ca7253d.webp' /></p><p>அத்துடன், பிரபாகரன் டிலக்சன் என்ற ஊடகவியலாளர் அரச ஆதரவுடன் அழுத்தங்களுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சிசிடிவி கமராவை சேதப்படுத்திய சம்பவத்தில் பொலிஸார் சட்ட நடைமுறைகளை மீறி அவரை விடுவித்ததாகவும் சுகாஷ் குற்றம்சாட்டினார்.
</p><p>
தமிழர் தாயகப் பகுதிகளில் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறிய அவர், தமிழர்களின் இருப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192"></link>
            <id>https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80200c9-8f89-4bdf-8f7f-6f696418a16f/26-6a9a455959db2.webp' /></p><p>இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.</p><p>

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279"></link>
            <id>https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279</id>
            <summary type="text">நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.</p><p> </p><p></p><p>அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb28f60-12f9-44f5-8e2d-9796452b1e2a/26-6a9a41c89cdd3.webp' /></p><p>அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படும் அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறவுள்ளது.</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f60fdb7-754b-46e4-b724-7cbae21d92b3/26-6a9a39c8565d6.webp' /></p><p>எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d929c50-dab5-4ec4-9f91-48b7566000bd/26-6a9a377970e25.webp' /></p><p>இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு தலா ஒருவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. </p><p>

அதேநேரம் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் இரண்டாவது முறையாகவும் கைதாகியிருந்த நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>

இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162</id>
            <summary type="text">பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.</p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f988d3ea-5a43-47d8-a60f-9576c8bee199/26-6a9a359c61f29.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர் முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து, பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையிலேயே இந்தச் செயலைச் செய்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T03:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய துயரம் ; பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் பறிபோன சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955</id>
            <summary type="text">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d3016-3c97-4cf7-80d8-0c38a19d6844/26-6a9a0dbca725d.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பின் விஷம் பட்ட நாவற்பழம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

</p><p style="text-align: justify; ">இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசிக்குள் நுழையும் கேது ; 18 வருஷத்திற்கு பிறகு மிகப்பெரிய அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695"></link>
            <id>https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695</id>
            <summary type="text">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் உயர்ந்த முன்னேற்றம் ஆகியவைற்றை வழங்கக்கூடியவர் கேது பகவான்.
</p><p style="text-align: justify; ">
அந்த வகையில், கேது பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது. அதாவது கடகத்தில் கேது பகவான் சுமார் 18 மாதம் இருக்கப்போகிறார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e429a91-b997-4cf9-a649-4bfbd3264723/26-6a9a1c58614ef.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்த ராசியினர்&nbsp;</h2><p style="text-align: justify; ">


இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில்&nbsp; அதிர்ஷ்டமும், திடீர் வாய்ப்புகள் தேட வரப்போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம்:</b>
ரிஷப ராசிக்கு கேதுவின் இந்த மாற்றம் இவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த காலகட்டங்களில் எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் தடை இன்றி நடக்கும். மேலும், பூர்வீக தொடர்பான தடைகள் எல்லாம் இவர்களுக்கு விலகி செல்லும்.</p><p style="text-align: justify; "><b>துலாம்:</b> துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் புகழும் கிடைக்கபோகின்றது. வேலையில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பெறவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தேடி வரப்போகிறது. இருப்பினும் வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகளை போக்கப்போகிறது.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது. இருப்பினும் பொருளாதார தொடர்பான விஷயங்களில் மிகவும் நிதானமாக கையாள்வது அவசியம்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831"></link>
            <id>https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad76f21-4dca-4138-bec0-d89ecc7cd46c/26-6a9a18f8bf4ec.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; ">இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொள்ளுப்பிட்டியில் 6வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில்&nbsp; பெண் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588</id>
            <summary type="text">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02734a6b-0143-47e1-91d3-4054d1c33f39/26-6a9a141dc5029.webp' /></p><p style="text-align: justify; ">கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய&nbsp; இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T00:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்டு மாத கர்ப்பிணிக்கு கணவன் செய்த கதி கலங்க வைக்கும் செயல் ; 45 நிமிடத்தில் பொலிஸாரின் அதிரடி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-murders-eight-month-pregnant-wife-1788480055"></link>
            <id>https://jvpnews.com/article/husband-murders-eight-month-pregnant-wife-1788480055</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c326fa57-57aa-4830-8c6c-d0fcd491e003/26-6a9a0a39a88d4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> சம்பவத்தில் உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான&nbsp; கர்ப்பிணித் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">[ZNJFWPQ ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T00:01:03+00:00</updated>
        </entry>
    </feed>
