<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-09T14:38:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சம்பவங்கள்;அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-incidents-human-rights-commission-warns-1786277021"></link>
            <id>https://jvpnews.com/article/prison-incidents-human-rights-commission-warns-1786277021</id>
            <summary type="text">கடந்த நாட்களில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த நாட்களில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதற்கமைய, குறித்த கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்களப் பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றைச் செயற்படுத்த அரசாங்கம் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நிமல் ஜி.புஞ்சிஹேவா எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-weather-warning-jaffna-srilanka-1786276772"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-weather-warning-jaffna-srilanka-1786276772</id>
            <summary type="text">நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைய,இன்று காலை 6 மணி நிலவரப்படி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>காற்றின் வேகம் குறைவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையா? கொதிக்கும் அரசியல்வாதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-buddha-statue-walapane-muthumariamman-temple-1786278864"></link>
            <id>https://jvpnews.com/article/a-buddha-statue-walapane-muthumariamman-temple-1786278864</id>
            <summary type="text">நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன முரண்பாடுகள் நாட்டில் அமைதியின்மையையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.&nbsp;</p><h2>மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும்&nbsp;</h2><p>அதேநேரம், மலையகத்தில் இன மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.&nbsp;</p><p>இந்த நேரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த வாரம் சில இனவாதிகள் இரவு நேரத்தில் புத்தரின் சிலை ஒன்றை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத் தக்க விடயமாகும்.</p><p>கடந்த காலங்களில் மலையகக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தில் இருந்த நேரங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் எங்கும் நிகழவில்லை. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களினால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>அத்தோடு, தோட்டத்தில் உள்ள இந்து ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய நிலைமை மேலும் தொடருமானால் மலையகம் கொந்தளிக்கும் நிலை உருவாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.</p><p>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்துதான் மலையக மக்கள் தேர்தலில் அதிகமான வாக்குகளைக் கொடுத்து ஆதரவு தெரிவித்து ஆட்சி பீடம் ஏற்றி வைத்துள்ளர்கள். அந்த மகக்ளுக்கு துன்பங்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.&nbsp;</p><p>எனவே, புத்தர் சிலையை வைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து இத்தகையை சம்பவங்கள் ஏனைய இடங்களுக்கும் பரவாமல் இருக்க அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும் போது முளையிலேயே கிள்ளியெறிந்து தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை கட்டிக் காக்க முன்வர வேண்டும்.&nbsp;</p><p>மலையக மக்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்து வருகின்ற நேரத்தில் இனமுறுகல் ஏற்படுமாயின் அது நாட்டின் பொருளாதரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றும் குறிபிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T13:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rice-sold-at-an-excessive-price-rs-300-000-fine-1786276104"></link>
            <id>https://jvpnews.com/article/rice-sold-at-an-excessive-price-rs-300-000-fine-1786276104</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் வெல்லவாயவைச் சேர்ந்த இரு வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோகிராம் 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து கிலோகிராம் கீரி சம்பா அரிசிப் பொதி ஒன்றை ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 150,000 ரூபா அபராதம் விதித்தது.</p><p>மற்றொரு வழக்கில், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா ஜி.ஆர்11 அரிசியை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும் அதிகமாக, ஒரு கிலோகிராம் 260 ரூபாவிற்கு விற்ற வெல்லவாயவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த வர்த்தகருக்கும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-media-spokesperson-department-of-prisons-1786279125"></link>
            <id>https://jvpnews.com/article/new-media-spokesperson-department-of-prisons-1786279125</id>
            <summary type="text">சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லேதென்ன (Senaka Palletenna) நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் (09) முதல் நடைமுறைக்கு வரும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லேதென்ன (Senaka Palletenna) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இன்றைய தினம் (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு ஊடகப் பேச்சாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>பல்லேதென்ன இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகவும், சிறைச்சாலை திணைக்களத்தின் பயிற்சி பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.</p><p>காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்தடிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளார்.</p><p>மேலும், இந்தியாவின் கேரளாவில் திருத்தம் மற்றும் புனர்வாழ்வு மேலாண்மை குறித்த டிப்ளோமாவையும் முடித்துள்ளார். இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான பல டிப்ளோமாக்களையும் அவர் மேற்கொண்டுள்ளார்.</p><p>அவரது கல்வி மற்றும் தொழில்சார் அனுபவமானது, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், புனர்வாழ்வு மற்றும் திருத்த மேலாண்மை தொடர்பான பரந்த பயிற்சியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி ; இராணுவ அங்கியும் வெடிபொருளும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673"></link>
            <id>https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், குறித்த அங்கி இராணுவத்தினர் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி எனத் தெரியவந்துள்ளது.</p><p>அந்த அங்கியில் நீண்ட காலமாக காணப்பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் இருந்தமையும் பொலிஸாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை; அரசியல்வாதியும் மனைவியும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438"></link>
            <id>https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஐஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>மேலும், சந்தேகநபர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-09T11:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-results-1786275426"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-results-1786275426</id>
            <summary type="text">இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில், 2,723 பரீட்சை நிலையங்களில் இன்று(9) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p><p>இதற்கிடையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p>மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T11:37:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழா இடைநிறுத்தம்! முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923</id>
            <summary type="text">கிளிநொச்சி-&amp;nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக&amp;nbsp; நிர்வாகம் அறிவித்துள்ளது.ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-&nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக&nbsp; நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>றீச்ஷாவில் ஓகஸ்ட் 7 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரம்மாண்டமான உணவுத் திருவிழா கோலகலமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்து.</p><h2>மீள் வழங்கப்படும்&nbsp; பணம்</h2><p>இந்தநிலையிலே, தவிர்க்க முடியாத காரணத்தினால், இன்றையதினமும்(9) நாளையதினமும் (10) நடைபெறவிருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>அத்தோடு, இன்றையதினமும், நாளையதினமும் உணவுத்திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்திய முழுத் தொகையும் நிகழ்நிலை வங்கி பரிமாற்றம் மூலம் மீளளிக்கப்படும் எனவும் றீச்சா நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் திட்டமிட்டு சிலர் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விசமத்தனமாக&nbsp; கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p>அதேசமயம்&nbsp; றீச்சா, வடக்கின் மாபெரும்&nbsp; சுற்றுலா தளமாக&nbsp; தற்போது&nbsp; மாறியுள்ளது.அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளையும் றீச்சா கவர்ந்துள்ளது என்பதை யாராலும்&nbsp; மறுக்க முடியாது.</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-09T10:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி வங்கியொன்றில் போலி நாணயத்தாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/counterfeit-banknote-at-a-kilinochchi-bank-1786268300"></link>
            <id>https://jvpnews.com/article/counterfeit-banknote-at-a-kilinochchi-bank-1786268300</id>
            <summary type="text">கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி&amp;nbsp; நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி&nbsp; நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டுவந்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;அது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே அவர்கள் நேற்று (08)&nbsp; கைது செய்யப்பட்டதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T10:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&amp;nbsp; கடந்த&amp;nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;கண்டி மாவட்டத்தைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&nbsp; கடந்த&nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.</p><p>இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.&nbsp;</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.மாணவியின் மரணம்அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T09:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறையை தூண்டிய குழுக்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981"></link>
            <id>https://jvpnews.com/article/sl-groups-that-incited-prisons-violence-identified-1786263981</id>
            <summary type="text">குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், வன்முறையின் போது கைதிகளால் சிறைச்சாலைக் கூரைகள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சிறைகளில் கைதிகளைத் தங்கவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இரத்தினபுரிப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் இன்று (08) சிறைச்சாலையில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, வன்முறையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், குறித்த சிறைச்சாலையில் பார்வையாளர் அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:12:36+00:00</updated>
        </entry>
    </feed>
