<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T19:57:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மேலும் இரு சங்கங்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-associations-22nd-constitutional-amendment-1788111214"></link>
            <id>https://jvpnews.com/article/two-associations-22nd-constitutional-amendment-1788111214</id>
            <summary type="text">உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p></p><p> 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91228245-3582-4f03-b4e7-eb4492ce072b/26-6a94696fb01a6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T17:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ; நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540</id>
            <summary type="text">இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0654cfb8-4752-4ebe-818d-423d5ae0d3d4/26-6a9466cdb238d.webp' /></p><p>அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். </p><p>

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில். மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 16 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-father-16-years-prison-abusing-daughter-1788109345"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-father-16-years-prison-abusing-daughter-1788109345</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

கோப்பாய் பகுதியில் கடந்த 200...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p> </p><p></p><p>அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdee8c00-229a-4a64-95b0-356dad2fcada/26-6a9462226e6c3.webp' /></p><p>அதன் போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்டா நீதிமன்று , 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று தீர்ப்பளித்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T16:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de887f7c-e10f-402c-9f61-fc3cf64c4ae5/26-6a94548fc020c.webp' /></p><p>இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:05:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502</id>
            <summary type="text">நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>


அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffa74ff-8842-42bf-badc-a7b2bc36060a/26-6a9437c7a37d1.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>



இந்த மொத்த எண்ணிக்கையில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை அங்கு 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p> 



தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p>



கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 72 மரணங்கள் பதிவாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-30T14:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492"></link>
            <id>https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492</id>
            <summary type="text">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

கடந்த 16 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகங்களினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b7ab4f-71ce-4b66-a9e0-26e50b38d28c/26-6a94149687358.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது 18 டிங்கிப் படகுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

திருகோணமலை இலக்கந்தை, நிலாவெளி, கல்குடா, கொக்குத்தொடுவாய், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளிட்ட பல கரையோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் கடற்படையினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிலாய், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித தொழிற்சாலையில் தீ விபத்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>


தீ பரவுவதைத் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beeab37-faec-4b8c-96f5-7a1d2c32491f/26-6a9427412dcd6.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
காகித தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
</p><p>
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T14:00:24+00:00</updated>
        </entry>
    </feed>
