<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-09T06:33:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858"></link>
            <id>https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858</id>
            <summary type="text">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5afecc5-8951-479c-829b-06b346eea03b/26-6aa0facb99236.webp' /></p><h2 style="text-align: justify; ">நெருக்கடி நிலை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அப்பால் ஈரானியக் கப்பல்கள் ; அமெரிக்க தூதரகத்தின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056"></link>
            <id>https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056</id>
            <summary type="text">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2246ba31-ff09-4f2d-9221-32b17e07a235/26-6aa0f4f713f60.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்காணிக்கப்படும் கப்பல்</h2><p style="text-align: justify; ">

குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொலிசார் என போலி விளம்பரங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190"></link>
            <id>https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், பொதுமக்கள் இவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929e3dc-ad50-4da1-999a-606964373f3c/26-6aa0f4475cc33.webp' /></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை அல்ல.</p><p></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன், 'Sri Lanka Police' இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தின் சோகம் மாறுவதற்குள் நள்ளிரவில் நிலநடுக்கம்; பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/earthquake-strikes-nepal-at-midnight-people-panic-1788930657"></link>
            <id>https://jvpnews.com/article/earthquake-strikes-nepal-at-midnight-people-panic-1788930657</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அங்க்குள்ள மக்களை அச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம், லோமன்தாங் பகுதியில் நேற்று இரவு 9.38 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அங்க்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae3a03fa-f4fe-41be-b8c5-e619e6f82b2e/26-6aa0ea62869e0.webp' /></p><p>

 இன்னிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-09T05:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனை கொன்று சடலத்தை தீ வைத்து எரித்த நண்பர்கள் ; இலங்கையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-kill-youth-and-burn-his-body-1788929816"></link>
            <id>https://jvpnews.com/article/friends-kill-youth-and-burn-his-body-1788929816</id>
            <summary type="text">கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


குறித்த இருவரும் உயிரிழந்த நபருடன் ஒன்றாக மதுபானம் அருந்திய பின்னர் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்ததுடன், எரிந்த உடல் பாகங்களை அப்பகுதியில் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891090f3-7bc2-4041-91ed-67a2a99974f3/26-6aa0e719b515d.webp' /></p><h2 style="text-align: justify; ">காட்டுப் பகுதியில் சடலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">&nbsp;கொலை செய்யப்பட்டவர்&nbsp; 29 வயதுடையவரென தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது இளைய சகோதரர் தலாத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "> 



இதனையடுத்து பொலிஸார் அவரைத் தேடி வந்த நிலையில், காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> 



இதன்போது உயிரிழந்த நபர் இறுதியாக தொடர்பில் இருந்த இருவர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.</p><p style="text-align: justify; ">



அதனடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



இதன்போது கொலை மற்றும் சடலத்தை அப்புறப்படுத்தியமை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எவ்வாறாயினும், இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை முழுமையாக வெளியாகாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பின்னணி குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களிடமும் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-airlines-diverted-to-frankfurt-as-uk-air-1788930212"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-airlines-diverted-to-frankfurt-as-uk-air-1788930212</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திற்குத் திருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 விமானம், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>

பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0e192d-0ab0-43c7-a47d-fc725301dc71/26-6aa0e8af2401d.webp' /></p><h2>&nbsp;தொழில்நுட்ப பிரச்சினை</h2><p>

வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 04:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், விமானங்கள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p><p>

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி தந்த அழகன் நல்லூர் கந்தன்- LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ள.</p><p>இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் கந்தன் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8289f5-2c00-45e6-ab72-aa9ccd97be24/26-6aa0e12310afe.webp' /></p><p> </p><p>கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது.
</p><p>&nbsp;நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசபட்ட 19 வயது இளைஞன் ; இறுதியில் நேர்ந்த துயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-man-thrown-from-motorcycle-1788927400"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-man-thrown-from-motorcycle-1788927400</id>
            <summary type="text">மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில்&amp;nbsp; 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில்&nbsp; 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில், கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் மாத்தறை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb646da9-047e-4106-89d4-2fe87b9dde89/26-6aa0ddaa35ef9.webp' /></p><h2 style="text-align: justify; ">சம்பவ இடத்திலேயே பலி</h2><p style="text-align: justify;"> 

 

இதன்போது தூக்கி வீசப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify;">
 

மற்றைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இவ்வாறு உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T04:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் செயலாளர் படுகொலை சம்பவம் ; நாடு கடத்தப்பட்ட 'கொண்ட ரஞ்சி’ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deported-konda-ranjie-arrested-1788926310"></link>
            <id>https://jvpnews.com/article/deported-konda-ranjie-arrested-1788926310</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcbf1d9-cc69-4ec7-929d-2acc18fe81f2/26-6aa0d968537bf.webp' /></p><h2 style="text-align: justify; ">டுபாயில் கைது</h2><p style="text-align: justify; ">

 

‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T03:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவத்தால் ஷாக் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663</id>
            <summary type="text">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ்&nbsp; குடும்ப பெண்&nbsp; செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c210c05-3d22-4ad3-9884-781eea5ecbd3/26-6aa0d2f9531ab.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T03:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த விபத்து ; விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crash-claims-police-officer-s-life-1788923591"></link>
            <id>https://jvpnews.com/article/crash-claims-police-officer-s-life-1788923591</id>
            <summary type="text">நேற்று (08) கொஸ்லந்த - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொஸ்லந்த - வெல்லவாய வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேற்று (08) கொஸ்லந்த - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">கொஸ்லந்த - வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில் வெல்லவாய திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265f43b6-f387-4272-83a0-b958469d9979/26-6aa0cec8b4815.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைகிள் செலுத்துனர் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு உயிரிழந்தவர் அல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவராவார்.</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பிடிபட்ட பிரபல போதை வர்த்தகரின் சகாக்கள் இலங்கையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-lord-s-aides-arrested-in-sri-lanka-1788921815"></link>
            <id>https://jvpnews.com/article/drug-lord-s-aides-arrested-in-sri-lanka-1788921815</id>
            <summary type="text">இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான &#039;பழனி ஷிரான் குரோரியன்&#039; என்பவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான 'பழனி ஷிரான் குரோரியன்' என்பவரின் முக்கிய சகாக்கள் நால்வர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
புறக்கோட்டை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b58e1c1-f786-44ea-aaad-530552e326b6/26-6aa0c7d9364b2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர்கள் மட்டக்குளி, கெசல்வத்தை, மாளிகாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பழனி ஷிரானின் போதைப்பொருட்களைக் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கும் பணியை அவர்கள் செய்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.</p><p style="text-align: justify; ">

அவர்கள், ஒரு நாளைக்கு 50 கிராம் போதைப்பொருளை விற்பனை செய்வதன் மூலம் 15,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T02:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275"></link>
            <id>https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலைத் தோட்டமொன்றைச் சொந்தமாக்கிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.</p><p>
'லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d271e30-98b8-45f8-b3b5-99bb9a3e220c/26-6aa0b61c624a3.webp' /></p><p> </p><p>
அவ்வமைப்பின் தலைவர் காமந்த துஷார என்பவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் உரிய ஆவணச் சான்றுகளுடன் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குச் சமூகமளிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:32:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474"></link>
            <id>https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e80780a1-398d-4c3a-9c26-6a5e3216bfd0/26-6aa0b2fccfd5c.webp' /></p><p>சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.&nbsp;இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae87b4b-25f9-4efe-96ab-120c7382ea3e/26-6aa0b2fe37aca.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdcfc042-4944-4f89-ae32-48909351c002/26-6aa0b2fedf63f.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48749e39-12d6-494a-b57f-d053c777efac/26-6aa0b2ff94457.webp' /></p><h4>துலாம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e224651d-861a-497b-9490-adfc0db1f186/26-6aa0b300472ce.webp' /></p><h4>கும்பம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe76160b-e764-4339-b6c6-306a43925c45/26-6aa0b300efe55.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரான் தேர் திருவிழா ; கந்தனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.</p><p>

தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p><p>ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியை தரிசிப்பதற்காக பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடவுள்ளதுடன், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றவுள்ளனர்.
</p><p>
இதனையொட்டி நல்லூர் ஆலயச் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா, இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b85a669-ebcb-4b03-b85b-7d53f95c8f51/26-6aa0afee25f13.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:01:56+00:00</updated>
        </entry>
    </feed>
