<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T19:43:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505</id>
            <summary type="text">நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

நேற்று (23) நுவரெலியா பொலிஸாரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dec2ef2e-eadb-477e-a2a2-5c09fb081647/26-6a8c9a92a5b0f.webp' /></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
 

நுவரெலியா மேல் ஏரி வீதி மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பில் ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேகநபர்களைக் கைது செய்த போது, கம்பிகளிலிருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், 344 அடி செப்பு அல்லாத கம்பிகள், செப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருந்த இறப்பர் உறைகளின் தொகுதி மற்றும் கம்பிகளை அறுப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்கள் கந்தப்பளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய இருவராவர்.</p><p></p><p>
</p><p>
 

கைப்பற்றப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை கணப்பிடப்படவில்லை என்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவற்றின் பெறுமதியைக் கணப்பிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் இன்று (24) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
 

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:35:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966</id>
            <summary type="text">மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (23) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a3fc6e-d84e-4a7f-a293-88ec3aebc727/26-6a8c8cc07bc62.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோத மதுபானம்</h2><p>
</p><p>
இதன்போது 112 லீற்றர் 500 மில்லி லீற்றர் (150 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெலிசரை, ராகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வட குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366"></link>
            <id>https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார். 68 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.</p><p> 68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969e4dca-ff83-41c3-a094-f2c4f371105e/26-6a8c8a67b1daf.webp' /></p><h2>&nbsp;கோடிக்கணக்கில் பணம்?&nbsp;</h2><p>இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். </p><p>மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.</p><p> ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T18:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வால் இலங்கைக்கு கிடைத்த வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-import-relaxation-boosts-sri-lanka-revenue-1787592253"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-import-relaxation-boosts-sri-lanka-revenue-1787592253</id>
            <summary type="text">&amp;nbsp;பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92e15595-82f3-4406-83db-bfe05a07d482/26-6a8c7e3f0a816.webp' /></p><h2 style="text-align: justify; ">மொத்த வருமானம்</h2><p style="text-align: justify; ">

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.
</p><p style="text-align: justify; ">
இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-a-family-man-in-tamil-area-1787590591"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-a-family-man-in-tamil-area-1787590591</id>
            <summary type="text">அம்பாறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீரன் கெட்டகொட சந்தைக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீரன் கெட்டகொட சந்தைக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது. </p><p style="text-align: justify; ">


இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db36bc7e-ee6e-4fb7-8766-1e9813283328/26-6a8c77c1c4425.webp' /></p><h2 style="text-align: justify; ">வேன் சாரதி கைது</h2><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் வீரன் கெட்டகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.</p><p style="text-align: justify; ">வேனில் பயணித்த இருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T17:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஆலயத்தில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p> 



இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(24) இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d617507-8011-4fd1-bc4c-a83570ce5c8c/26-6a8c498557e2a.webp' /></p><p>



திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. 



மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>


இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில் 1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 3 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p>

குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.






குறித்த ஆலய திருவிழாவின் போது, மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக குறித்த பெண் ஆலயத்தில்மாம்பழத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T17:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-increase-across-the-country-1787588859"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-increase-across-the-country-1787588859</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bead44a1-4ade-4bc4-a4c5-97894362bb49/26-6a8c70fcdddad.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள்</h2><p style="text-align: justify; ">அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T16:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-for-easter-attack-case-verdict-announced-1787587621"></link>
            <id>https://jvpnews.com/article/date-for-easter-attack-case-verdict-announced-1787587621</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகள், தங்களுடைய தற்காப்பு வாதங்களை முன்வைப்பதை கடந்த (17) கொழும்பு திரிபுடை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பித் தொடங்கினர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f2c3c8-b2b0-4b4a-a32e-aea0e0d86ff3/26-6a8c6cf3f07a9.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

 

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே இவ்விசாரணைகள் இடம்பெற்றன.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-08-24T16:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றத்திற்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/past-reasons-for-electricity-tariff-changes-1787585896"></link>
            <id>https://jvpnews.com/article/past-reasons-for-electricity-tariff-changes-1787585896</id>
            <summary type="text">கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்குக் நடவடிக்கை எடுத்தால், மின்சாரக் கட்டண மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07ee86da-dcec-433d-b6d3-998640619a15/26-6a8c6670a7963.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சார கொள்வனவு&nbsp;</h2><p style="text-align: justify; ">

 

பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைவதுடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T15:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெல்போர்ன் – கொழும்பு இடையில் புதிய நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-direct-flight-between-melbourne-to-colombo-1787572452"></link>
            <id>https://jvpnews.com/article/new-direct-flight-between-melbourne-to-colombo-1787572452</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), நாளை (25) மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை தொடங்குகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), நாளை (25) மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை தொடங்குகின்றது.</p><p>

இந்த விமான சேவையின் முதல் விமானமானது நாளை (25) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a1b170-88eb-478f-b4a8-b68211968ce8/26-6a8c30e5c6896.webp' /></p><p></p><h2>&nbsp;வாரத்திற்கு மூன்று முறை</h2><p>
</p><p>
அதன்படி, JQ5 என்ற முதல் விமானம் மெல்போர்னிலிருந்து நாளை நண்பகல் 12:00 மணிக்குக் புறப்பட்டு, மாலை 5:50 மணிக்குக் கொழும்பை வந்தடையும் 

வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

திரும்பும் பயணமான JQ6 விமானம் கொழும்பிலிருந்து இரவு 7:50 மணிக்குக் புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு மெல்போர்னை சென்றடையும்.</p><p>

போயிங் 787-8 ட்ரீம்லைனர் (Boeing 787-8 Dreamliner) ரக விமானங்களைப் பயன்படுத்தி, இந்த புதிய சேவை வாரத்திற்கு மூன்று முறை – செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் – இயக்கப்படும். </p><p>

மெல்போர்ன்-கொழும்பு வழித்தடமானது, தெற்காசியாவிற்கான ஜெட்ஸ்டாரின் முதல் நேரடிச் சேவையாகவும், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான அந்த நிறுவனத்தின் முதல் செயல்பாடாகவும் அமைகிறது.</p><p></p><p> இலங்கைவிளையாட்டு

மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையே அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண நேரடிச் சேவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>

ஹெய்லிஸ் ஏவியேஷன் (Hayleys Aviation) இலங்கையில் ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனத்தின் பொது விற்பனை முகவராக (GSA) செயல்பட்டு, உள்ளூர் சந்தையில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிரதிநிதித்துவ நடவடிக்கைகளைக் கையாள்கிறது.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-08-24T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 இலட்சம் ரூபாய் பணத்தை கடித்து வைத்த எலிகள்; கண்ணீரில் தம்பதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014"></link>
            <id>https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.</p><p>

 


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நகைகள் வாங்குவதற்காக தனது கணவருக்குத் தெரியாமல் பரண் மீது இருந்த பெட்டியில் பணத்தை சேமித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d0a37c0-935b-4177-9b47-5c07cc8e1a16/26-6a8c469fb2aa1.webp' /></p><h2>எட்டு ஆண்டுகள் சேமித்த&nbsp; பணம்</h2><p>
</p><p>
எட்டு ஆண்டுகள் கழித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நகை வாங்க முடிவு செய்த அவர், பரண் மீது இருந்த பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்துள்ளார்.</p><p>

அத்தனை வருடங்கள் தான், குருவி போல் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தாள்களை எலிகள் துண்டு துண்டாக கடித்துப் போட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதன் பின்னர், விடயத்தைத் தன் கணவரிடம் கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பிறகு அவர், அந்த கிழிந்த பணத்தாளை எண்ணிப் பார்த்தபோது, அதில் 12 இலட்சம் ரூபாய் இருந்துள்ளது.</p><p>

எலிகள் கடித்துக் கிழித்துப் போட்ட பணத்தாள்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் முதாலாளி பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434"></link>
            <id>https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
 தாக்குதலுக்குள்ளான பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65241fb-eb02-4083-ae9c-4396ac0cc812/26-6a8c38a38d924.webp' /></p><p> </p><p>

பொருட்கள் வாங்குவதற்காக இக்கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், இப்பெண் காயமடைந்திருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>
அதனைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
