<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-14T13:34:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டேலாவுடன் ஒப்பிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ ; வலுக்கும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685</id>
            <summary type="text">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத்திற்கும் இடையே எந்தவொரு ஒப்பீடும் செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை குறிப்பிட்டு நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed5a898-7bdf-4b5e-af9b-14e7d22fb4cc/26-6aa7f3471970a.webp' /></p><p style="text-align: justify; ">"சிலரை கஷ்டங்கள் உடைத்துவிடும், ஆனால் சிலரை அது வலிமையாக்கும்" என்ற மண்டேலாவின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நஜித் இந்திக, தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருடன் நாமல் ராஜபக்ச தன்னை ஒப்பிட்டுக்கொள்வது பொருத்தமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நெல்சன் மண்டேலா அடக்குமுறைக்கும் இனவெறி முறைமைக்கும் எதிராக போராடியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் சுட்டிக்காட்டிய நஜித் இந்திக, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதுர்த்தியில் 601 கிலோ பிரம்மாண்ட லட்டு ; வியக்கவைத்த விநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713"></link>
            <id>https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48448870-4019-4265-b8d2-ce26daa06818/26-6aa7eb9317da4.webp' /></p><p style="text-align: justify; ">

மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு லட்டைக் காண, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

601 கிலோ எடையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லட்டு, அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17222359-ca44-401c-8fde-412fca777ab5/26-6aa7e65b10c33.webp' /></p><h2 style="text-align: justify; ">கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p style="text-align: justify; "> 

இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றுக்குள் அரங்கேறிய தகாத செயல் ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349"></link>
            <id>https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "> 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a940893-40b6-4c7f-a421-fcebf77d1249/26-6aa7de6f5cb47.webp' /></p><h2 style="text-align: justify; ">கசிப்பு உற்பத்தி</h2><p style="text-align: justify; "> 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; ">அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9வது வகுப்பு மாணவி கர்ப்பம் ; பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்; அதிபர் உள்ளிட்டோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647"></link>
            <id>https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647</id>
            <summary type="text">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">உடல்நலக் றைவு காரணமாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ccdfd24-58bb-4848-98bd-14d84114989b/26-6aa7dbb10e99b.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாடசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சமையற்காரராக பணிபுரிந்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

 
மாணவியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட தீவிர பற்றாக்குறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கருத்திற்கொண்டு, பள்ளியின் தலைமை ஆசிரியை, விடுதி காப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
பழங்குடியினர் மாணவிகள் தங்கிப் பயிலும் இதுபோன்ற விடுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சிறுமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களில் இது போன்ற பாலியல் குற்றங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T11:34:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைக்குள் அதிகாரி செய்த செயல் ; காலணிக்குள் இருந்த ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831"></link>
            <id>https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.



கிடைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96514428-9d26-4e27-9a8f-e6616d0eb3f8/26-6aa7d8810fbe3.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை காவலர் ஒருவராவார்.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16.7 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 



கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176"></link>
            <id>https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176</id>
            <summary type="text">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">



இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3976fad6-b530-4ba6-8749-24a6fd6217b2/26-6aa7d20a10a64.webp' /></p><p style="text-align: justify; ">இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T10:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா ; வெற்றிடமான எம்.பி பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208"></link>
            <id>https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை தொடர்பில் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccc9342-c7c5-4dab-8202-b48a091d02d3/26-6aa7cfa9650a2.webp' /></p><h2 style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர் பதவி</h2><p>
</p><p style="text-align: justify;">
அப்துல் வாஹித்தின் இராஜினாமா 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">


இதனையடுத்து, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

இந்நிலையில், ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T10:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம் ; வலையில் சிக்கிய 300 கிலோ மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mannar-fishermen-s-lucky-break-1789379339"></link>
            <id>https://jvpnews.com/article/mannar-fishermen-s-lucky-break-1789379339</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. </p><p style="text-align: justify; ">

சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c3bf40-4ab9-40bf-a2ad-96c4cc0add00/26-6aa7c30d72fcf.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-14T09:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வயோதிப பெண்ணுக்கு சொந்த வீட்டிலேயே அரங்கேறிய பயங்கரம் ; அதிகாலையில் கேட்ட அலறல்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-faces-horror-in-her-own-jaffna-home-1789367453"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-faces-horror-in-her-own-jaffna-home-1789367453</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04ee9b92-c195-4323-b840-0454bcac6a04/26-6aa7949ed4c90.webp' /></p><h2 style="text-align: justify; ">அலறல் சத்தம்</h2><p style="text-align: justify; ">

புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, அருகாமையிலுள்ள வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று பார்த்தபோதே, அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T09:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் இருக்கும் ஷிரந்திக்கு காத்திருக்கும் சிக்கல் ; ஆரம்பாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789378155"></link>
            <id>https://jvpnews.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789378155</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5e0610-c406-433c-b6b4-732e6a05cfcc/26-6aa7be6ca70a9.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அரச வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி குறித்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படாமல் என்ன ஆனது என்பது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

மருதானை மற்றும் சுதுவெல்ல வங்கி கிளைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நிதி மாற்றப்பட்டதாக வங்கியின் அப்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், குறித்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பல்வேறு சந்தேகத்துக்குரிய விடயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T09:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த மகளை வன்புணர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-acts-against-father-for-abusing-daughter-1789376728"></link>
            <id>https://jvpnews.com/article/court-acts-against-father-for-abusing-daughter-1789376728</id>
            <summary type="text">தன் சொந்த மகளை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஒருவரின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;.மேலும், ஹம்பாந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தன் சொந்த மகளை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஒருவரின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;.</p><p style="text-align: justify; ">மேலும், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம் அவருக்கு விதித்த 15 ஆண்டுகள் கடூழிய தண்டனையை உறுதி செய்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee352edd-f69e-40c0-8892-288ccb4b6b5d/26-6aa7b8da1e4d4.webp' /></p><h2 style="text-align: justify; ">குற்றப்பத்திரிகை</h2><p style="text-align: justify; ">நீதிபதிகளான அமல் ராகராஜா மற்றும் டாக்டர் சுமுது பிரேமச்சந்திரா ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தன் மகளுக்கு எதிரான உறவுமுறை வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் எந்தவிதமான நியாயமும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
</p><p style="text-align: justify; ">
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தனது சொந்த மகளுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் மூன்று பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
விசாரணைக்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றம், மீதமுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றவாளியை விடுவித்துத் தள்ளுபடி செய்தது; அதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 364(3) பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டில் 2025 ஜூலை 16, அன்று அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேல்நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது.</p><p style="text-align: justify; "> மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 400,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும், அபராதம் மற்றும் நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் கடூழிய தண்டனை அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">தற்கமைய, நீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.
</p><p style="text-align: justify; ">
இந்தத் தண்டனையானது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான 2025 ஜூலை 16 ஆம் திகதி, முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட அபராதத் தொகையும் நட்டஈட்டுத் தொகையும் மாற்றமின்றித் தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T09:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சகோதரர்களை பலியெடுத்த கைக்குண்டு தாக்குதல் ; சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-kills-two-brothers-1789375759"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-kills-two-brothers-1789375759</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் இருந்து 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94d194f7-b47a-4693-abf4-058b54ad9f06/26-6aa7b510e43f4.webp' /></p><h2 style="text-align: justify; ">வைத்தியசாலையில் சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p style="text-align: justify; ">

இந்நிலையில் தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, கடந்த 11 ஆம் திகதி பாதுக்க, இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T08:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமதி அழகிப் போட்டியில் புஷ்பிக்காவின் கிரீடத்தை பறித்தவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-over-pushpika-crown-snatching-incident-1789374394"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-over-pushpika-crown-snatching-incident-1789374394</id>
            <summary type="text">திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகிய பிரதிவாதிகளை குற்றமற்றவர்களென கருதி விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

குறிப்பிட்ட போட்டியானது கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17785888-9a67-47ce-a894-075f481b5d00/26-6aa7afbbd29ec.webp' /></p><h2 style="text-align: justify;">நீண்ட வழக்கு விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்தார். </p><p style="text-align: justify;">

தீர்ப்பை அறிவித்த மேலதிக நீதவான், பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அத்துடன், பிரதிவாதியான சூலா பத்மேந்திர தற்போது உயிரிழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் அதிர வைத்த பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு ; அம்பலமான சட்டவிரோத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-shocks-jaffna-in-midnight-shooting-1789373678</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு, புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதுடன், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இந்தச் சம்பவம் நேற்று (14) இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94694b7a-f877-45d7-806b-8394539d200c/26-6aa7acefa25cc.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கொடிகாமம், கெற்பேலி பகுதியில் இருந்து மூன்று டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்வதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர், மீசாலை – புத்தூர் வீதியில் பூதவராயர் கோவில் பகுதியில் குறித்த டிப்பர் வாகனங்களை வழிமறித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அதிரடிப்படையினரின் சமிக்ஞைகளை பொருட்படுத்தாத டிப்பர் வாகனங்கள், அதிரடிப்படையினரின் வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து டிப்பர் வாகனங்களின் சில்லுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு டிப்பர் வாகனங்களையும் தடுத்து நிறுத்திய விசேட அதிரடிப்படையினர், அவற்றின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இரண்டு டிப்பர் வாகனங்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


இதன்போது மற்றுமொரு டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T08:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-update-1789372798</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708411f0-d633-488c-ac4a-210871ef8b3a/26-6aa7a980d1291.webp' /></p><h2 style="text-align: justify; ">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலத்தைப் போல அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவது போன்ற பல வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். </p><p style="text-align: justify; ">

ஒவ்வொரு மாத இறுதியிலும் கனிய எண்ணெய் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போலவே, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">[&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-against-3-firms-for-consumer-law-breach-1789372038"></link>
            <id>https://jvpnews.com/article/order-against-3-firms-for-consumer-law-breach-1789372038</id>
            <summary type="text">நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.</p><p style="text-align: justify;">பயண வழிகாட்டிகளைப் படி

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கையினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f75b08-6590-40f3-afe0-54260b8902d3/26-6aa7a688188f2.webp' /></p><h2 style="text-align: justify; ">அபராதம்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">


கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு 03 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களே இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைத் தடுப்பதற்கும் விலை வெளிப்படைத்தன்மை அத்தியாவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் உணவு நச்சுத்தன்மை அல்லது ஒவ்வாமை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இறக்குமதியாளர் விபரங்கள் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் மற்றும் உரிய விதிமுறைகளின் கீழ் வரவிருக்கும் ஏனைய விபரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.
</p><p style="text-align: justify;">&nbsp;நுகர்வோர்கள் ஏதேனும் அநீதிகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-14T07:47:26+00:00</updated>
        </entry>
    </feed>
