<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-30T13:40:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894"></link>
            <id>https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c03cba5-0e20-4eb6-887c-eb8d32078db9/26-6a6b4cbfddf75.webp' /></p><h2>முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறையும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.
</p><p>
அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆனால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
</p><p>
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
</p><p>

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்கலாம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
</p><p>
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

இவர்களை நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-30T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் வண்டியினுள் சாரதி உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134"></link>
            <id>https://jvpnews.com/article/driver-takes-his-own-life-inside-the-bus-colombo-1785418134</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு செய்துள்ளார்.
</p><p>
அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2152f98-5e70-4138-bea6-fa876576209f/26-6a6b5198270cd.webp' /></p><p>
</p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இன்று வியாழக்கிழமை (30) யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பஸ் வண்டிக்குள் ஏறி இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decision-made-to-hear-pillayan-high-court-1785404337"></link>
            <id>https://jvpnews.com/article/decision-made-to-hear-pillayan-high-court-1785404337</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p> 


அதற்கமைவாக, பிள்ளையான் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவை 2027 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35fd553-2591-4939-8cfe-b5d87f22f5c4/26-6a6b1bb28456d.webp' /></p><p></p><h2>தொடர் விளக்கமறியலில்&nbsp;பிள்ளையான் </h2><p>முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஏப்ரல் 8, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார். </p><p>அவர் மீது 2006 கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன வழக்கு மற்றும் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>கிழக்கில் ஐவர்&nbsp; கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சரித் அபேசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charith-abeysinghe-released-from-prison-1785412650"></link>
            <id>https://jvpnews.com/article/charith-abeysinghe-released-from-prison-1785412650</id>
            <summary type="text">&amp;nbsp; பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி காலை பிணை வழங்கி உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61bae6b3-4ce3-47b6-9e2e-67109c859095/26-6a6b3c2bdf199.webp' /></p><p>
</p><p>
 

ரக்கித ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையினால் அவர்களைச் சிறைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.</p><p>

 

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அவர் மீண்டும் சிறைப் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோகினி நீர்வீழ்ச்சி விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirl-injured-mohini-waterfall-accident-death-1785410639"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirl-injured-mohini-waterfall-accident-death-1785410639</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த 22ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளான காயமடைந்த மாணவி உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த 22ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளான காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.</p><p>

கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளார் என நல்லத்தண்ணிப் பொலிசார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216d5672-0c73-4583-8f9a-dceed7476b1b/26-6a6b34516ba26.webp' /></p><p></p><h2>முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும் மற்றுமொருவரும் ஸ்தலத்தில் பலி</h2><p>
</p><p>
 

 உயிரிழந்த பாடசாலை மாணவி, மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்தவராவார்.
</p><p>
 

முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p></p><p> </p><p>

 

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும் ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
</p><p>
 

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நல்லத்தண்ணிப் பொலிசார், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

 மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் - கொழும்பு வீதியில் பயங்கர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-on-the-chilaw-colombo-road-1785409287"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-on-the-chilaw-colombo-road-1785409287</id>
            <summary type="text">&amp;nbsp; சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து வைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

இன்று (30) நண்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8929cb-fde1-45c7-bdbb-9c17be577768/26-6a6b2f0853552.webp' /></p><p>
</p><p>
 

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி , வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T10:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appreciation-sri-lankan-rupee-against-dollar-1785406205"></link>
            <id>https://jvpnews.com/article/appreciation-sri-lankan-rupee-against-dollar-1785406205</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (30) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.



அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (30) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது.
</p><p>


அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.4820 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 340.5936 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342e7bfb-5d2c-4e3d-af8a-c599d30a1d8b/26-6a6b22fe6c27b.webp' /></p><p>
</p><p>


அதேசமயம் அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளன</p>]]></content>
            <updated>2026-07-30T10:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்தெனிய பெண் மருத்துவர் கொலை சம்பவம்; நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-case-of-female-physiotherapist-teldeniya-1785405911"></link>
            <id>https://jvpnews.com/article/murder-case-of-female-physiotherapist-teldeniya-1785405911</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து உடலியல் சிகிச்சை நிபுணர் சடலமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து உடலியல் சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



குறித்த வழக்கு இன்று (30) நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12fac979-5291-4d77-ba12-283fffaed2d9/26-6a6b21d9801ae.webp' /></p><p>
</p><p>


இதற்கமைய, பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் இருவர் உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


நாரம்மல பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராம் காதலனால் 24 வயது பெண் எரித்துக் கொலை; சம்பவத்தால் ஷாக் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-burned-to-death-over-illicit-affair-erode-1785402349"></link>
            <id>https://jvpnews.com/article/woman-burned-to-death-over-illicit-affair-erode-1785402349</id>
            <summary type="text">&amp;nbsp; இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாக அவரை பிரிந்து தனது பெற்றோரின் வீட்டில் அருகே மற்றொரு வீட்டில் வினோதினி மகனுடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896faa5e-2ec3-4e93-875c-867a61668b35/26-6a6b13ef26587.webp' /></p><h2>இன்ஸ்டாகிராம் மூலம்&nbsp;&nbsp;பழக்கம் </h2><p>
</p><p>
இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடையை சேர்ந்த நவநீதி கிருஷ்ணன்(26) என்பவரோடு வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. </p><p> 

 கடந்த சில நாட்களாக நவநீத கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் வினோதினி அவரிடம் சரியாக பேசவில்லை. எனவே, வினோதினி தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பழகி வருகிறார் என நவநீத கிருஷ்ணன் சந்தேகம் ஏற்பட்டது.
</p><p>
சம்பவத்தன்று நள்ளிரவு ஈரோட்டுக்கு வந்த நவநீத கிருஷ்ணன் வினோதினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரமடைந் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை வினோதினியின் உடல் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். </p><p>அப்போது நவநீதகிருஷ்ணன் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அங்கிருந்த அவர் தப்பி ஓடிவிட்டார்.

வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரின் பெற்றோர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p>

ஈரோடு கூடுதல் மகளிர் நீதிபதி நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி முன்னிலையில் நவநீதகிருஷ்ணன் என்னை ஊற்றி கொலை செய்யப்பட்டார் என வாக்குமூலம் கொடுத்துவிட்டு வினோதினி இறந்துவிட்டார். </p><p>

 போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நவநீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
இன்னிலையில் கள்ளக்காதலால் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T09:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்று நடைபெற்றது சட்டத்தரணிகள் சங்க கூட்டமா .....அரசியல் தலைவர்களின் கூட்டமா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
</p><p>
உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர,சாகர காரியவசம் போன்றவர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் என்றால்அது எவ்வாறுபட்ட கூட்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08e97d5-3197-4650-937e-c5fbc260b096/26-6a6b0b49e8593.webp' /></p><h2>&nbsp;எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள்?</h2><p>இந்த உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் சட்டதரணி என்று சொல்கிறார்கள் இவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.
</p><p>
தயாசிறி ஜயசேகர சொல்வதை போன்று ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பதால் அப்படி என்ன ஜனநாயகம் செத்திடும்.</p><p></p><p> கடந்த காலங்களில் நீதி துறையில் மாத்திரமல்ல முத்துறைகளிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையிலும் அரசியல் தலையீடுகள் இருந்த போது ஜனநாயகம் வாழ்ந்ததா? என்ற கீள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணிக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902"></link>
            <id>https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.



யாழ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce92a96-f80d-4acd-af04-a3890f139509/26-6a6b06780979d.webp' /></p><p>



 'மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்' 'செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்' 'உலகமே செம்மணியை மறந்து விடாதே!' உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>



இதன்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மறை மாவட்டத்தின் சாராபாக கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:06:26+00:00</updated>
        </entry>
    </feed>
