<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T08:50:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>



2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவிருந்த நிலையில், இன்று இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ea170b-7a4a-40fd-bd8e-82fe07a3c737/26-6a59c7406d22d.webp' /></p><p></p><h2>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்</h2><p>சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகின் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது.</p><p> 

இச்சட்டம் போட்டி மோசடி , ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் ஏனைய முறைகேடுகளைக் குற்றச்செயல்களாக வரையறுப்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறிழைப்பவர்களுக்கு கணிசமான அபராதங்களும் சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>&nbsp;</p><p>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-tobacco-betel-sellers-1784276912"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-tobacco-betel-sellers-1784276912</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், </p><p> 



2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1bf3c8-ce85-4cc8-91a5-2b2e42e06465/26-6a59e7b27add4.webp' /></p><h2>புகையற்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை</h2><p>



2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


வெற்றிலை விற்பனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை எனவும், மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
</p><p>


இலங்கையில் வருடாந்தம் 1,750 முதல் 1,900 வரையான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



எதிர்காலத்தில் சட்டத்தை மீறி வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


இதுவரை கலாசார காரணிகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாகவும், மக்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T08:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பதிவில் கோடிகளில் வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jana-nayagan-rakes-in-crores-in-advance-booking-1784276062"></link>
            <id>https://jvpnews.com/article/jana-nayagan-rakes-in-crores-in-advance-booking-1784276062</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடைபெற்ற முன்பதிவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
</p><p>
இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b92fcd1-8f10-4fc7-9a5c-99151b543271/26-6a59e46036840.webp' /></p><p>
</p><p>
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 23-ஆம் திகதி வெளியாகவுள்ளது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகாமல் இந்த படம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
</p><p>
இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.



எதிர்வரும் காலங்களிலும் வசூலில் மாபெரும் சாதனையை ஜனநாயகன் திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-17T08:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனையில் பிடிபட்ட சாரதிகள் ; சேவையிலிருக்கும் போது போதைப்பொருள் பாவனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drivers-caught-during-sudden-police-inspection-1784272477"></link>
            <id>https://jvpnews.com/article/drivers-caught-during-sudden-police-inspection-1784272477</id>
            <summary type="text">கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் நால்வர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95924a77-c8e9-46f9-ba9f-2abc8265ebb5/26-6a59d65e7fd57.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">பரிசோதனை</h2><p> </p><p style="text-align: justify; "> 

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், வைத்தியர்&nbsp; தலைமையிலான குழுவினர், குறித்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பஸ் வண்டியினுள் வைத்து இப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "> 

பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் அற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 


நேற்று காலை நடத்தப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுமார் 150 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கடுமையான சட்ட நடவடிக்கை சாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துக்களைக் குறைக்கவும் இவ்வாறான விசேட செயற்திட்டங்கள் அத்தியாவசியமானவை என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியான ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பொது சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

 போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் உறுதி செய்வதற்காக மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T07:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பிறப்பு நாளிலும் யாழில் மக்கள் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-by-people-in-jaffna-valikamam-north-1784271671"></link>
            <id>https://jvpnews.com/article/protest-by-people-in-jaffna-valikamam-north-1784271671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
</p><p>வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f731ecc-b6f7-48b3-b974-50a8728dfb78/26-6a59d3392f065.webp' /></p><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.</p><p></p><p>

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர் ; விசாரணைகளில் வெளியான பரபரப்பு தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-found-dead-after-being-killed-in-canal-1784271122"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-found-dead-after-being-killed-in-canal-1784271122</id>
            <summary type="text">ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">


இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2d40ea-ef95-4dab-a976-98f130e15d78/26-6a59d113a2849.webp' /></p><h2 style="text-align: justify; ">பிரேத பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே, பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலமான வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் வாடகை சவாரி ஒன்றிற்காக நபர் ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ஏலக் காணியொன்றினுள் வைத்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கொலையாளிகள் அந்த நபரைத் தடுத்து நிறுத்திக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்க மாலை, கைத்தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

</p><p style="text-align: justify; ">குற்றம் நடந்ததாகக் கருதப்படும் காணியை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து உயிரிழந்த நபர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகளையும், ஒரு 20 ரூபா பணத்தாளையும் கண்டெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T06:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்தெனியவில் மருத்துவர் கொலை; சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doctor-s-murder-in-teldeniya-remand-of-suspects-1784271022"></link>
            <id>https://jvpnews.com/article/doctor-s-murder-in-teldeniya-remand-of-suspects-1784271022</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர்&amp;nbsp; கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியாவில்<a href="https://jvpnews.com/article/women-doctor-murder-in-teldeniya-court-order-1783587718" target="_blank"> பெண் உடலியல் சிகிச்சை நிபுணர்&nbsp; கொலை </a>செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நேற்று (16) சிறைச்சாலை அதிகாரிகளினால் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb42455-caa3-48f5-8351-fc111f7bd6c2/26-6a59d0afae8cd.webp' /></p><p>

நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, சந்தேகநபருக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியும், மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகரும் அடங்குகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லசந்த விக்ரமதுங்க படு கொலை விசாரணையுடன் தொடர்புபட்ட உயரதிகாரி உயிர்மாய்ப்பு ; துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487"></link>
            <id>https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf518e7-00f9-443e-adfc-7971b90066ee/26-6a5997e8d6495.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"> 

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.</p><p style="text-align: justify;">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 



</p><p style="text-align: justify;">



இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;">சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பிலும் இடம்பெறும் விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தொடர்புபட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.</p>]]></content>
            <updated>2026-07-17T06:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் QR முறைமை; வௌியானது புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-qr-system-cpc-announcement-1784270342"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-qr-system-cpc-announcement-1784270342</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. </p><p>

உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f395f6-62cf-4173-8222-4f96d769b60f/26-6a59ce08334ae.webp' /></p><h2>டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்&nbsp;</h2><p> </p><p>

QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மாத்திரமன்றி டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p> </p><p>

மீண்டும் மத்திய கிழக்கில் யுத்த நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் ஏற்படுவதையும், அதன் மூலம் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதையும் தடுப்பதற்காக QR நடைமுறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.</p><p></p><p> </p><p>

அத்துடன், வளைகுடா யுத்த நிலைமை காரணமாக நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், எரிபொருள் சந்தையில் விலைகள் மீண்டும் அதிகரிக்குமா என்பது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:37:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னைதானே சுட்டு உயிரை மாய்த பொலிஸ் அதிகாரி ; விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-dies-after-self-inflicted-gunshot-1784268755"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-dies-after-self-inflicted-gunshot-1784268755</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; "><a href="https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487" target="_blank">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன</a> இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">

மாலபே, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிரை மாய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a0c067-a778-46bb-9613-544af04c3f6d/26-6a59c7d4da982.webp' /></p><h2 style="text-align: justify; ">மரண பரிசோதனை&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
சம்பவத்தை அடுத்து அவர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர், இது தொடர்பான மரண பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">

அத்துடன், நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் இந்த மரணம் குறித்த பின்னணி மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-17T06:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த தகவல்களை வழங்க வேண்டாம் ; அஸ்வெசும பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/welfare-board-warns-aswesuma-beneficiaries-1784267405"></link>
            <id>https://jvpnews.com/article/welfare-board-warns-aswesuma-beneficiaries-1784267405</id>
            <summary type="text">&#039;அஸ்வெசும&#039; நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">'அஸ்வெசும' நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad63c2-2f33-4450-9988-1f6a9edee92e/26-6a59c28f6ce94.webp' /></p><h2 style="text-align: justify; ">தொலைபேசி அழைப்புகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களைப் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; ">

பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறியோ அல்லது வேறு ஏதேனும் போலியான காரணங்களைக் குறிப்பிட்டோ, பயனாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை இந்த மோசடியாளர்கள் கோரி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் சபையின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிச் செயல்களாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இவ்வாறான போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக அது குறித்துப் பயனாளிக்கு மிக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
இத்தகைய அழைப்புகளைப் பெற்ற பயனாளர்கள், அந்தந்தப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் புகார் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இது குறித்து தீவிரக் கண்காணிப்புடன் இருக்குமாறு சபை அறிவுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி விபரங்களையோ அல்லது பணத்தையோ அறியாத நபர்களுக்குத் தொலைபேசி வழியே வழங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T05:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது 14 மகன்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருமணம்; இணையத்தில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897"></link>
            <id>https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897</id>
            <summary type="text">&amp;nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

ஆண்டுதோறும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. </p><p>

ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து காப்பாற்ற அவர் எடுத்த இந்த முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae6dfb5-6bb1-4e76-9921-985238536644/26-6a59c09273ad9.webp' /></p><h2>ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு...</h2><p>

 இந்த திருமணத்தில் வழக்கமான சொகுசு கார்களுக்குப் பதிலாக, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்-டிராலிகளில் 14 மணமகன்களும், மற்றொரு டிராக்டரில் 14 மணப்பெண்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
இந்தத் தனித்துவமான ஊர்வலக் காணொளி இணையவாசிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

 14 தனித்தனி திருமணங்களை நடத்தினால் மண்டபம், உணவு, போக்குவரத்து எனப் பல மில்லியன் ரூபாய் செலவாகியிருக்கும்.</p><p></p><p>
</p><p>
ஆனால், அனைத்தையும் ஒரே மேடையில் முடித்ததால் பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்கிறது அந்தக் குடும்பம். நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், இணையத்தில் ஒரு பெரும் விவாதமே வெடித்துள்ளது.
</p><p>
ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு, சிக்கனம் மற்றும் நடைமுறைத் தீர்வுகளே மிக முக்கியம் என்ற செய்தியை இந்தத் திருமணம் உரக்கச் சொல்லியிருக்கிறது .</p><p>ஆடம்பரத்தை விட அன்பும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்வுமே முக்கியம் என்ற அந்த விவசாயியின் நோக்கம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.</p><p></p><p>
</p><p>
லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாக மாறும் இந்தத் திருமணக் கலாச்சாரத்திற்கு மத்தியில், மத்திய பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்த ஒரு விவசாயி செய்த இந்த செயல் இந்தியா முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-17T05:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் அதிரடி காட்டிய STF ; பாழடைந்த கட்டிடத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stf-conducts-night-operation-in-jaffna-1784266444"></link>
            <id>https://jvpnews.com/article/stf-conducts-night-operation-in-jaffna-1784266444</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c12be183-ce42-44d7-896e-81630127f4a2/26-6a59bece0f4c6.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">



ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



இதன்போது, குறித்த கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளை கைப்பற்றிய அதிரடிப்படையினர், அவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T05:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784265539"></link>
            <id>https://jvpnews.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784265539</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c32ebb2-963b-4f5b-b7ca-c68b3d0afef7/26-6a59bb4564298.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T05:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டிக்குள் ட்ரம்ப்; உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த் ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trump-in-a-coffin-iran-shocks-the-world-1784265001"></link>
            <id>https://jvpnews.com/article/trump-in-a-coffin-iran-shocks-the-world-1784265001</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .சர்வதேச அளவில் அதிர்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .</p><p>சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்தமையுடன், மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2941711-5379-434c-8b7f-9ec740c2d1e9/26-6a59b92b2ee7c.webp' /></p><p>

 ஈரானின் ஆன்மீக தலைவர் கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். </p><p>மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T05:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி சலசலப்பு ; அர்ச்சுனா எம். பிக்கு வக்காலத்து வாங்கும் ரஜீவன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rajeevan-mp-speaks-out-over-arjuna-s-removal-1784264306"></link>
            <id>https://jvpnews.com/article/rajeevan-mp-speaks-out-over-arjuna-s-removal-1784264306</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாகஅவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bbcce3-246c-432f-bbd3-c6855a917331/26-6a59b67465b15.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், </p><p style="text-align: justify;">



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகக் கூறினார். அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதைத் தடுப்பது ஜனநாயகத்துக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">


மேலும், கூட்டத்தில் இருந்து அருச்சுனாவை வெளியேறுமாறு கூறுவதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



அதேநேரம், அருச்சுனா எழுப்பும் கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் அல்லது விசாரணைக் குழு நியமிக்கப்படும் என உறுதியளித்தால், அதனை மக்கள் பிரதிநிதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">


கூட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர், கூட்டத்தை ஒழுங்காக கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify;">


நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் எனக் கூறிக்கொண்டு சிலர் நுழைந்ததாகவும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> கடந்த காலங்களிலும் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறும்போது அவரது ஆதரவாளர்களும் வெளியேறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தவறான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">


வடக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது நேரத்தையும் வளங்களையும் ஒதுக்கி கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சிறீதரனோ அல்லது அருச்சுனாவோ வெளியேறியிருந்தாலும், கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் கூட்டங்களை குழப்பும் நடைமுறைக்கு அது வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.</p><p style="text-align: justify;">



அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அவை குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் முன்னர் பொது இடங்களில் யாரையும் குற்றவாளி எனக் குற்றம்சாட்டுவது தவறானது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-17T05:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தகராறு ; மனைவியின் அண்ணன் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dispute-claims-life-of-young-family-man-1784262215"></link>
            <id>https://jvpnews.com/article/dispute-claims-life-of-young-family-man-1784262215</id>
            <summary type="text">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று&amp;nbsp; வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இராஜாங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று&nbsp; வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aacc20fe-4a0a-47cb-b42f-2bf1d63bf6fa/26-6a59ae4876189.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;படுகொலை</h2><p style="text-align: justify; ">



உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; ">மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த தந்தைக்கு நேர்ந்த கதி ; இறுதியில் நீதிபதி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306"></link>
            <id>https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306</id>
            <summary type="text">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்த வழக்கில் நேற்று (16) தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637ff3cf-0f8e-45ba-b8c1-41fc62759e23/26-6a599f0460d62.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலியல் வன்புணர்வு</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p style="text-align: justify; ">


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> 



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; ">&nbsp;தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமடையும் நிலைமை ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-becomes-major-threat-in-sri-lanka-1784261671"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-becomes-major-threat-in-sri-lanka-1784261671</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

நேற்று (16) வியாழக்கிழமை வரையான தரவுகளின்படி, டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 1,025 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b3c2c0f-cb0c-4864-8623-175518f98e6b/26-6a59ac2898232.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள்</h2><p style="text-align: justify; ">

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேற்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ள நிலையில், அங்கு 38,700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேற்கு மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,341 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டும் 18,076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டில் அதிகளவான மாதாந்த டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் 21,538 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களுக்கான சுகாதார துவாய்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் ; மீறுவோருக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-decision-announced-on-women-s-sanitary-pads-1784260741"></link>
            <id>https://jvpnews.com/article/new-decision-announced-on-women-s-sanitary-pads-1784260741</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் அதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c63fcd-c436-47b0-816a-4958a02b3817/26-6a59a8873d958.webp' /></p><h2 style="text-align: justify; ">SLS தரச்சான்றிதழ்</h2><p style="text-align: justify; "> 

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருந்தால் மட்டுமே அந்தத் தயாரிப்புகளை சந்தைக்கு வெளியிட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இந்த உத்தரவானது ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய சுகாதாரத் துவாய்கள் மற்றும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய மெல்லிய சுகாதாரத் அட்டைகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இறக்குமதி தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முறைமையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்காவிட்டால், அவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதும் தடைசெய்யப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் தொடர்புடைய தரநிலைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து திருத்தங்களுக்கும் கூட இக்கட்டளை பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379</id>
            <summary type="text">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a65f0d-70b3-4c28-a0e7-7ff4ab97671a/26-6a599b6537857.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்தவர்கள் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
மோதலில் பஸ் மற்றும் டிப்பர் வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; 26 வயது இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919"></link>
            <id>https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919</id>
            <summary type="text">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb56cb7-6a86-4646-aad2-a7330ead48bb/26-6a59999e3ccca.webp' /></p><p style="text-align: justify; ">

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T02:55:29+00:00</updated>
        </entry>
    </feed>
