<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T16:50:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து பேருந்தில் இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b44740-ea3a-409e-a1df-5f8114f2a488/26-6a5cfe751123c.webp' /></p><h2 style="text-align: justify; ">முதற்கட்ட விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறும் ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ளதாக நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலி நோக்கி பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடம்மாற்றல் பகுதியில் வௌியேற்றி சாதாரண வீதியூடாக பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T16:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முட்டையின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474"></link>
            <id>https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474</id>
            <summary type="text">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b854cdd-b356-4c66-82af-836ee1aaf412/26-6a5cf33bb4fe6.webp' /></p><h2 style="text-align: justify; ">முட்டை விலை அதிகரிப்பு</h2><p style="text-align: justify; "> 

முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p style="text-align: justify; ">

சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இல்லை என சரத் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">

சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார். </p><p style="text-align: justify; ">

இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை எனவும் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-19T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தில் தீப்பரவல் ; தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289</id>
            <summary type="text">தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p><br></p><p> 

குறித்த பேருந்து தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 20 க்கும் அதிகமானோர் அதில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

தற்சமயம் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-19T15:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சானிட்டரி நாப்கின்களுக்கு தரச்சான்றிதழ் கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/quality-certification-mandatory-sanitary-napkins-1784463981"></link>
            <id>https://jvpnews.com/article/quality-certification-mandatory-sanitary-napkins-1784463981</id>
            <summary type="text">இலங்கையில் விற்பனை செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களும் (sanitary towels), ஒக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விற்பனை செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களும் (sanitary towels), ஒக்டோபர் 8, 2026 முதல் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) தயாரிப்புச் சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.</p><p>2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உரிய SLS தரச் சான்றிதழ் பெறாத எந்தவொரு உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களையும் உற்பத்தி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதை உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு தடை செய்கிறது.</p><p>இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,</p><p>இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இறக்குமதி பரிசோதனைத் திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, அனுமதி பெற்ற பின்னரே உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விதிமுறையானது, ஒருமுறை பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கான இலங்கை தரநிலை (SLS 1732) மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் மிக மெல்லிய (Ultra-thin/Slim) சானிட்டரி நாப்கின்களுக்கான இலங்கை தரநிலை (SLS 1748) ஆகியவற்றின் கீழ் வரும் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.</p><p>இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் எதிர்காலத்தில் அந்தந்த தரநிலைகளில் கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு இந்த உத்தரவு உட்பட்டிருக்கும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் தலைவர் எஸ். எம். டி. சூரியகுமார சார்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் புற்றுநோயாளி மீது மருத்துவர் ஈவிரக்கமின்றி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doctor-ruthlessly-attacks-female-cancer-patient-1784458171"></link>
            <id>https://jvpnews.com/article/doctor-ruthlessly-attacks-female-cancer-patient-1784458171</id>
            <summary type="text">கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை இன்று (19) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குருந்துவத்த நகரில் பால் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணொருவர், கம்பளை மருத்துவமனை மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்ட நிலையில் குருந்துவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பெண் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதல் சம்பவத்தில், சந்தேகத்துக்குரிய மருத்துவரின் மனைவி, மாமியார் மற்றும் மகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளமை காணொளி ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகத்திற்குரிய மருத்துவர் இதற்கு முன்னர் குருந்துவத்த மருத்துவமனையில் பதில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் அங்கிருந்த நிரந்தர பொறுப்பதிகாரி மருத்துவருடன் ஏற்பட்ட தொழில்முறை முரண்பாடு காரணமாகவே அவர் கம்பளைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.</p><p>அதன் பின்னரும், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் தனியார் மருத்துவ சேவைகள் தொடர்பில் அவ்விரு மருத்துவர்களுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பகைமை இருந்து வந்துள்ளது.</p><p>நேற்று (18) காலை, குருந்துவத்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவரும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடைக்கு தேநீர் அருந்தச் சென்றபோது, அதற்கு அருகில் சந்தேகநபரான மருத்துவரின் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு அவமதித்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, கம்பளையிலிருந்து வாகனத்தில் விரைந்து வந்த சந்தேகநபரான மருத்துவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து கடையிலிருந்த பெண்ணுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;சம்பவத்தின் போதே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து குருந்துவத்த காவல்துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>சந்தேகநபரான மருத்துவர் இன்று (19) கம்பளை மருத்துவமனையில் கடமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள குருந்துவத்த காவல்துறை பொறுப்பதிகாரி நந்தன பண்டார, அவரது பணி நிறைவடைந்ததும் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-07-19T13:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA World Cup;வரலாற்றில் முதன்முறை 30 தங்க மோதிரங்கள்; வெல்லப்போவது யார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-world-cup-historic-first-championship-rings-1784463392"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-world-cup-historic-first-championship-rings-1784463392</id>
            <summary type="text">பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.</p><p>வழக்கமாக சாம்பியன் அணிக்கு உலகக்கிண்ணமும், தங்கப் பதக்கங்களும் மட்டுமே வழங்கப்படும். ஆனால், வட அமெரிக்க கண்டத்தில் 19ஆம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணியினருக்கு மோதிரம் வழங்கும் பாரம்பரிய முறையை, பிபா தற்போது உலகக்கிண்ணத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>30 தங்க மோதிரங்கள்</h2><p>ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.</p><p>நடப்பு உலக செம்பியனான ஆர்ஜென்டினாவும், ஐரோப்பிய செம்பியனான ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சாம்பியன் அணியை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக இந்த மோதிரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இத்தொடரை முன்னிட்டு மொத்தம் 2,026 மோதிரங்கள் செய்யப்படுகின்றன. இதில் சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் 30 மோதிரங்கள் தவிர, மீதமுள்ளவை கால்பந்து இரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இருப்பினும், இந்த மோதிரங்களின் விலையை பிபா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.</p><p>இதற்கிடையே, உலகக்கிண்ணக் கால்பந்து ஈர்ப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மெஸ்ஸி, ஹாலந்த், நெய்மர், ரொனால்டோ, என்ஸோ மற்றும் எமலியானோ போன்ற முன்னணி கால்பந்து வீரர்களின் பெயர்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனறமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA இறுதிப்போட்டி ; நாளை விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-world-cup-final-holiday-tomorrow-kerala-1784462115"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-world-cup-final-holiday-tomorrow-kerala-1784462115</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளம் முழுவதும் நாளை (20) ஒருநாள் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேரள முதல்வர் வீ.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.</p><p>தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டி, இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியைக் காண தற்போது இந்தியாவிலேயே கால்பந்து இரசிகர்களின் சொர்க்கமாகத் திகழும் கேரள மாநிலம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.</p><p>இரசிகர்களின் உற்சாகத்தைக் கொண்டாடும் விதமாகவும், நள்ளிரவில் போட்டி நடப்பதைக் கருத்தில் கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரள கால்பந்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/skeleton-in-a-seated-position-chemmani-mass-graves-1784466251"></link>
            <id>https://jvpnews.com/article/skeleton-in-a-seated-position-chemmani-mass-graves-1784466251</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 37ஆவது நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் சிசுக்களின் என்பு கூடு உட்பட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்ட நிலையில். அதனை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போது , குறித்த என்பு கூடு, கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.&nbsp;</p><p>இன்றைய தினமும் குறித்த என்பு கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அது நாளைய தினம் திங்கட்கிழமை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>செம்மணியில் புதைகுழிக்குள் இருந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதியும் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் , புதைகுழிக்குள் இருந்து கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் மீட்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.</p><p>அதேவேளை&nbsp; நேற்றைய தினம்&nbsp; சனிக்கிழமை ஒரு பெரியவரின் என்பு கூட்டுடன் , சிறியவரின் என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் , அத்தனையும் சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அவையும் நாளைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>இதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 91 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,446 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 434என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-new-medical-guidelines-in-universities-1784465073"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-new-medical-guidelines-in-universities-1784465073</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.</p><p>அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T12:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433</id>
            <summary type="text">கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.</p><p>கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் இந்திய பிரஜைகள் இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-indian-nationals-arrested-colombo-airport-1784461534"></link>
            <id>https://jvpnews.com/article/two-indian-nationals-arrested-colombo-airport-1784461534</id>
            <summary type="text">கட்டுநாயக்க பண்டாரநாயக்க&amp;nbsp; &amp;nbsp;விமான நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க&nbsp; &nbsp;விமான நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை&nbsp; அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>காவல்துறை ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.</p><p>ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்றிரவு (18) வானூர்தி நிலைய வருகை முனையத்தில் இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.</p><p>25,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் (125 அட்டைப் பெட்டிகள்) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாவது சோதனையின்போது, ​​மற்றொரு சந்தேக நபர் 28,200 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் (141 அட்டைப் பெட்டிகள்) கைது செய்யப்பட்டார்.</p><p>கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 26 வயதுடைய இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வானூர்தி நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T11:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரவலைத் தடுக்க அதிரடி: 4,672 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengure-arrests-1784398403"></link>
            <id>https://jvpnews.com/article/dengure-arrests-1784398403</id>
            <summary type="text">இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், தங்களது இருப்பிடங்களைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், தங்களது இருப்பிடங்களைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், இதுவரையில் 4,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டில் டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்காகக் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து முன்னெடுத்து வரும் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் போதே காவல்துறை ஊடகப் பிரிவு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.</p><p>
இதன்படி, நாடு முழுவதுமுள்ள 48 காவல்துறைப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புச் சபைகள் ஊடாக, டெங்கு ஒழிப்புக்கான சிரமதானப் பணிகள், விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53baf9c-6bef-4b50-ae03-6b82e949ff37/26-6a5bc244e7a1c.webp' /></p><p><br></p><p>டெங்கு காரணமாக இதுவரையில் நாட்டில் 50 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T11:00:07+00:00</updated>
        </entry>
    </feed>
