<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T05:28:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரை ; ஒரே வாரத்தில் மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880</id>
            <summary type="text">&amp;nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட 'கஜபா வெட்டை' எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

சம்பவத்தில் ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb992652-ca1a-4dd6-aa06-80e16b04473f/26-6a55c4fa42edb.webp' /></p><p>
மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற யாத்திரிகர் உயிரிழந்திருந்த நிலையில் , கடந்த 8ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் பொத்துவில், குண்டுமடு பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்றுள்ள மூன்றாவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஐஸ் வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐஸ்&#039; போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&amp;nbsp; மன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐஸ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&nbsp; மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8841afbd-6096-4753-bece-a51477920707/26-6a55c2ae7b694.webp' /></p><p>

மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் போது, குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர். </p><p>

அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p>

வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். 

 தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்</p>]]></content>
            <updated>2026-07-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்; மீண்டும் அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a2172-1218-42e1-8555-b1341446a8ae/26-6a55bdd6e41ab.webp' /></p><h2>சவுதி அரேபியா&nbsp; வான்வழித் தாக்குதல்</h2><p> </p><p>

இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது.</p><p> 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656"></link>
            <id>https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c731986-290b-485d-9a32-2c7d2cedc4b1/26-6a55bc4a43166.webp' /></p><h2>60 மில்லியன் ரூபாய் பெறுமதி</h2><p> 

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-14T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423"></link>
            <id>https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423</id>
            <summary type="text">இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60d2c22d-c10e-44fd-bcbd-c6c099da5585/26-6a557ce184a50.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சம்பவம் தொடர்பாக இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T01:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழக போராசியர் தொடர்பான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பேராசிரியர் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது எனவும் இடைக்கால கட்டளை வழங்கி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குறித்த வழக்கின் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b82c7a-9fa0-4e6b-a3d2-ae85235b79e8/26-6a559085af6b3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
இதன்போது முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரைக்கும் அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றில் முன்னிலையாகி, தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் குற்றவாளிகளாக அவர்கள் கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை மனுதாரருடைய சட்டத்தரணி முன்வைத்த வாதத்தில் மூன்றாவது எதிர்மனுதாரரான பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த முகப்புத்தகத் தளத்தில் நீதவான் நீதிமன்றினையும், நீதவானையும் அவதூறு செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தமையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த எதிர் மனுதாரரின் பதிவு நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன் நீதவானின் இறையாண்மையை பாதிப்பதாகவும் கருதிய மன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரரின் சட்டத்தரணி குற்றவியல் சட்டத்தின் கீழ் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-14T01:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124"></link>
            <id>https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac80c9ad-6203-4768-8a37-a829812ec3c2/26-6a558d06d24d0.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-14T01:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் மருத்துவ மாணவி ; வைரலான உருக்கமான கதையின் பொய் அம்பலமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570"></link>
            <id>https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;"><a href="https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791" target="_blank">நீர்கொழும்பு சிறைச்சாலை</a>யில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என 'உண்மைக் கண்டறியும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,</p><p style="text-align: justify;">
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6341aa4b-1cde-42f6-977b-ed2f02ee31ce/26-6a55815bdf0b8.webp' /></p><h2 style="text-align: justify;">பெண் கைதி</h2><p> </p><p style="text-align: justify;">

இந்த பதற்றமான சூழ்நிலையின் போது, சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி கைதிகள் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">


இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்த ஒரு பெண் கைதியின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து, சமூக வலைத்தளங்களில் ஒரு சோகமான கதை வேகமாகப் பரப்பப்பட்டது.
</p><p style="text-align: justify;">
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் அனுதாபத்தையும் ஏற்படுத்திய நிலையில், 'உண்மைக்கண்டறியும் அமைப்பொன்று இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">


இந்தக் கதையைத் தனது பேஸ்புக் பக்கத்தில் முதன்முதலில் பதிவிட்ட நபர் "இது ஒரு உண்மைக் கதை அல்ல, பேஸ்புக் பக்கங்களில் பொழுதுபோக்கிற்காகவும், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நானே கற்பனையாக உருவாக்கிய கதை" என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify;">

அத்துடன், சிறைச்சாலைத் தரப்பினரிடம் இது குறித்து வினவிய போது, கைதிகளின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
எனவே, நீர்கொழும்பு சிறைக்கூரையின் மேல் போராடிய பெண் கைதி ஒரு வைத்திய மாணவி என்றும், காதலனால் ஏமாற்றப்பட்டு சிறை சென்றவர் என்றும் பரவும் செய்திகள் அனைத்தும் பேஸ்புக் பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட முற்றிலும் கற்பனையான வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T00:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காபி அதிகமாக குடித்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629"></link>
            <id>https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629</id>
            <summary type="text">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்கிறது. </p><p style="text-align: justify; ">ஆனால், அளவுக்கு மீறி காபி அருந்துவது உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411af053-c082-40fb-bcd3-c11d1a38f3d3/26-6a5575df311d6.webp' /></p><p>


</p><p style="text-align: justify; "><b>தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம்:
</b>காபியில் உள்ள கஃபீன் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் அதிகமாக காபி குடித்தால் தூக்கம் வராமல் போகலாம். தொடர்ந்து தூக்கமின்மை ஏற்பட்டால் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
</p><p style="text-align: justify; "><b>&nbsp;இதயத் துடிப்பு அதிகரிப்பு:
</b>அதிக அளவில் காபி அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம். சிலருக்கு இதயப் படபடப்பு, ரத்த அழுத்த உயர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே இதய நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p style="text-align: justify; "><b>வயிறு மற்றும் செரிமானக் கோளாறுகள்:
</b>காபி வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, வயிற்று வலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். வெறும் வயிற்றில் காபி குடிப்பது இந்தப் பாதிப்புகளை மேலும் அதிகரிக்கலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1d4186-8ec4-47ea-b89d-01a87ceb3492/26-6a5575dfdb754.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>&nbsp;எலும்பு ஆரோக்கியம் பாதிப்பு:
</b>அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் உடலில் இருந்து கால்சியம் வெளியேறும் அளவு அதிகரிக்கலாம். நீண்ட காலத்தில் இது எலும்பு அடர்த்தியைக் குறைத்து, குறிப்பாக பெண்களுக்கு எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>அடிமைத்தன்மை:
</b>தினமும் பல முறை காபி குடிக்கும் பழக்கம் கஃபீன் சார்புநிலையை உருவாக்கலாம். திடீரென காபியை நிறுத்தினால் தலைவலி, சோர்வு, கவனக்குறைவு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
</p><p style="text-align: justify; "><b>கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் கவனம்:
</b>கர்ப்ப காலத்தில் அதிக கஃபீன் உட்கொள்வது கருவின் வளர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே காபி அருந்துவது நல்லது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c1e50c-fcdd-4ece-afee-7ee4c5111a40/26-6a5575e096271.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>கவலை மற்றும் பதட்டம் அதிகரிப்பு:
</b>ஏற்கனவே கவலைக் கோளாறு உள்ளவர்களுக்கு அதிக கஃபீன் உட்கொள்வது பதட்டம், கைகள் நடுக்கம், வியர்வை, மன அமைதியின்மை போன்ற அறிகுறிகளை மோசமாக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>&nbsp;நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு:</b>
காபி லேசான சிறுநீர் பெருக்கும் தன்மை கொண்டது. அதிக அளவில் காபி மட்டுமே குடித்து, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிலருக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
</p><p style="text-align: justify; ">பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஒரு நாளுக்கு 400 மில்லிகிராம் கஃபீன் (சுமார் 3–4 கப் சாதாரண காபி) வரை பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வயது, உடல்நிலை, கர்ப்பம், பயன்படுத்தும் மருந்துகள் போன்ற காரணிகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T23:33:57+00:00</updated>
        </entry>
    </feed>
