<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T03:44:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய தாக்குதலில் பலியான அமெரிக்கர்கள்.. சுட்டுவீழ்த்தப்பட்ட பாரிய போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784405570"></link>
            <id>https://jvpnews.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784405570</id>
            <summary type="text">அல்-அஸ்ராக் (Al-Azraq) தளத்திலிருந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்-அஸ்ராக் (Al-Azraq) தளத்திலிருந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.</p><p>ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்&nbsp; தாக்குதல்களில்&nbsp;இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.&nbsp;</p><p></p><p>ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், இந்தத் தாக்குதலின் போது ஜோர்டான் வான்பரப்பில் நுழைந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் இராணுவம் கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T00:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்.. சங்கானையில் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-young-man-found-inside-house-sanganai-1784400247"></link>
            <id>https://jvpnews.com/article/body-young-man-found-inside-house-sanganai-1784400247</id>
            <summary type="text">மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். </p><p>அப்போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும்
சிரிஞ்சும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4f2146-c280-4f2c-98a7-5de6b7bfbfa3/26-6a5bd16149c27.webp' /></p><p>
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே
உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்
சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T00:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பொருளாதார நெருக்கடி: நகைகளை அடகு வைக்கும் கடன் தொகை 35,145 கோடி ரூபாயாக உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-pawaning-increaed-1784396661"></link>
            <id>https://jvpnews.com/article/gold-pawaning-increaed-1784396661</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு 35,145 கோடி ரூபாயினால் மிக அதிவேகமாக அதிகரித்துள்ளதாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு 35,145 கோடி ரூபாயினால் மிக அதிவேகமாக அதிகரித்துள்ளதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் ஆய்வுத் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். </p><p>
இது சதவீத அடிப்படையில் 54 சதவீத என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 66,000 கோடி ரூபாயாகக் காணப்பட்ட தங்க நகை அடகுக்கடன் அளவு, இந்த ஆண்டின் மார்ச் மாதமளவில் 101,100 கோடி ரூபாய் வரை மிக மோசமாக உயர்வடைந்துள்ளது.
</p><p>நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார பணவீக்கம் காரணமாக, அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்யவும், அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பொதுமக்கள் இவ்வாறு தங்களின் தங்க ஆபரணங்களை அடகு வைக்கத் தள்ளப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
பல்வேறு நிதி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, தங்களின் தங்க நகைகளை விற்பனை செய்ததன் காரணமாகவோ அல்லது அவற்றை அடகு வைத்ததன் காரணமாகவோ, இலங்கையிலுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் தற்போது எந்தவொரு தங்க ஆபரணமும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
</p><p>அதிகரித்து வரும் கடுமையான வாழ்க்கைச் செலவுகள் காரணமாக, பெருமளவிலான இலங்கையர்கள் தங்களின் தங்க நகைகளை விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளனர்.
</p><p>இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் அளவு குறித்த துல்லியமான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மட்டும் தங்கம் அடகு வைப்பு மூலமான கடன்கள் 35,600 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T21:45:48+00:00</updated>
        </entry>
    </feed>
