<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T05:00:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக விளம்பரங்களால் இலங்கை இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-ads-pose-youth-risks-1784176691"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-ads-pose-youth-risks-1784176691</id>
            <summary type="text">தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் தவறான விளம்பரங்களும் வழிகாட்டுதல்களுமே இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரொஹன தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் ஊடாகவே போதைப்பொருள் பழக்கம் பரவியிருந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் இடம்பெறும் தவறான பிரசாரங்களே இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f22d95-d711-4b9a-b390-6180ed303582/26-6a586034ed6c3.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருட்களின் விலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இலங்கையில் தற்போது இரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை போதைப்பொருட்களின் (Synthetic Drugs) பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
செயற்கை போதைப்பொருட்களின் விலை உயர்வால், ஒரு நாளில் இருமுறை போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவருக்கு சுமார் 8,000 ரூபா வரை செலவாகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்படி மாதத்திற்கு சுமார் 240,000 ரூபா தேவைப்படுவதால், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்தல், பெண்களின் நகைகளைத் திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப் பாகங்களைத் திருடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், போதைப்பொருள் பாவனை குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக எச்சரித்த அஜித் ரொஹன, இதனால் எப்போது வேண்டுமானாலும் பாரிய சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T04:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் மூன்று அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ; அதிகாரிகளின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mannar-legal-action-against-three-institutions-1784175511"></link>
            <id>https://jvpnews.com/article/mannar-legal-action-against-three-institutions-1784175511</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c2ad-de1a-4947-9852-bc7ca85d7250/26-6a585b98d3c18.webp' /></p><h2>அதிரடி நடவடிக்கை</h2><p>
</p><p>
"சட்டம் அனைவருக்கும் சமமானது" என்பதை நிரூபிக்கும் வகையில், தனியார் இடங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி சுகாதார துறை மற்றும் முப்படை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735ff10a-0504-477a-96d6-8a41a1eaf842/26-6a585db07b387.webp' /></p><p>

மன்னார் நகர சபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,பொது சுகாதார பரிசோதகர்கள் ,முப்படையின் இணைந்து விசேட வேலைத்திட்டம் நேற்று (15) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>

நேற்றைய தினம் அரச அலுவலகங்கள் , விடுதிகள்,வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் போது டெங்கு நுளம்பு பெறுகுவதற்கு காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-mayor-resigns-from-office-1784174797"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-mayor-resigns-from-office-1784174797</id>
            <summary type="text">நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்றைய தினம் பகல், நீர்கொழும்பு மாநகர சபையில் மாநகர சபை உறுப்பினர்களுடன் மேயர் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7524677-e0ac-4ebe-884f-2a9dcf4e0c85/26-6a5858ce84d7e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீர்மானம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஜூட் பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.</p><p style="text-align: justify; ">

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளர் நுவனி சுதுசிங்க மற்றும் மாநகர சபையின் அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேயர் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
</p><p style="text-align: justify; ">
அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேயர் ரொபர்ட் ஹின்கெந்த, தனது இராஜினாமா ஒரு தனிப்பட்ட தீர்மானம் என்று தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அதிகார அமைப்பினால் தான் எவ்வாறு மேயராக நியமிக்கப்பட்டாரோ, அதேபோன்று எதிர்காலத்தில் நீர்கொழும்பு நகரத்திற்கு புதிய மேயர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

தாம் பதவியேற்றபோது இருந்த நிலையை விட, மக்கள் நலன் சார்ந்த பாரிய மாற்றங்களை நகரத்தில் ஏற்படுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">தான் மேயராக பணியாற்றிய ஒரு வருடம் மற்றும் ஒன்றரை மாதங்கள் (13.5 மாதங்கள்) காலப்பகுதிக்குள், மாநகர சபையிலும் ஒட்டுமொத்த நீர்கொழும்பு நகரத்திலும் பல மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்க முடிந்தமை குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.

</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T04:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று தீவுகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-three-islands-face-major-change-1784172275"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-three-islands-face-major-change-1784172275</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை &#039;பசுமை சக்தித் தீவுகளாக&#039; (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை 'பசுமை சக்தித் தீவுகளாக' (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System - HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acd93fd-19c6-44a7-9db2-ff1dec749af4/26-6a584ef471c80.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T03:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை மிரள வைத்த ஆபத்தான நபருக்கு நேர்ந்த கதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974</id>
            <summary type="text">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


உப்புவெளி மின்சார நிலைய வீதியில் வைத்து&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ff38a-a1bf-42e6-99fd-aba6b4ff1244/26-6a5845fce7722.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify;">இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">


ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இக்குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">&nbsp;சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T03:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் இரு இளைஞர்கள் செய்த செயல் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-arrested-on-expressway-in-sri-lanka-1784170913"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-arrested-on-expressway-in-sri-lanka-1784170913</id>
            <summary type="text">2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபரெக்க கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேக நபர்கள் அந்த இடத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கு முயன்றபோது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64d5433-491e-4bd5-b56f-03fabdc7cea2/26-6a5849a36eb65.webp' /></p><p style="text-align: justify; ">மேலதிக விசாரணை</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி, 2 சந்தேக நபர்களும், போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மேலதிக விசாரணைக்காக திஹகொடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய பொரெல்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

திஹகொடா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-16T03:01:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757"></link>
            <id>https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுவதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa1d100-6328-4531-b741-e8d46fed5264/26-6a5831974e948.webp' /></p><p>
</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். </p><p>இதன்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காரின் அருகே நடந்து சென்றதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், அந்த சிறுவனே காருக்கு தீ வைத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நேரடி சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து ; விசாரணையின் தற்போதைய நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ahmedabad-air-india-plane-crash-status-investigat-1784161849"></link>
            <id>https://jvpnews.com/article/ahmedabad-air-india-plane-crash-status-investigat-1784161849</id>
            <summary type="text">அஹமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா வானூர்தி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய மத்திய அரசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா வானூர்தி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய மத்திய அரசு உறுதியளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் வழங்கியுள்ளதுடன், இன்னும் ஆறு வாரங்களுக்குள் விபத்து தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b9d999-3de6-48d1-80da-bbff2aace11c/26-6a58263adeb6e.webp' /></p><p>விசாரணைப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன் பின்னர் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.</p><p>
அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்துக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரக மாற்றத்தால் கூடுதல் நன்மைகளை பெற போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-sign-that-will-benefit-planetary-changes-1784160723"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-sign-that-will-benefit-planetary-changes-1784160723</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</p><p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த சூரியப் பெயர்ச்சி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் கூடுதல் நன்மைகளை அனுவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் யார்யார் என பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18cf70b9-9c00-47cc-ab0a-4e257a9eae74/26-6a5821d4e0450.webp' /></p><h4>மேஷம்</h4><p>
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம். அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.</p><h4>கடகம்
</h4><p>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும், இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில், அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</p><h4>மகரம்</h4><p>
மகர ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும், இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அலுவலகத்தில் சூழ்நிலைகள் சாதகமானதாக மாறும், மேலும் அவர்கள் உயர் பதவிகளைப் பெறலாம். அவர்கள் நீண்ட காலமாக முடிக்காமல் இருந்த வேலைகள் இப்போது விரைவாக முடிவடையும்.</p>]]></content>
            <updated>2026-07-16T00:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365"></link>
            <id>https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
</p><p></p><p>கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f2019-35b1-43c2-b131-63274a2f3847/26-6a5814b746845.webp' /></p><p>இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
</p><p>
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.
</p><p>
கடந்த 10 ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p>

ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p><p>IBCE1</p><p>936BMZTF</p><p>QWLKUS</p>]]></content>
            <updated>2026-07-16T00:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/local-government-representative-holiday-circular-1784160012"></link>
            <id>https://jvpnews.com/article/local-government-representative-holiday-circular-1784160012</id>
            <summary type="text">உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கடந்த ஜூன் 22ஆம் திகதியன்று அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75bf2d95-893e-424c-993a-ce21bf16ce25/26-6a581f0e5760d.webp' /></p><p>இதன்படி, குறித்த பதவிகளை வகிக்கும் தகுதியுடைய அரச உத்தியோகத்தர்கள் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அல்லது குறித்த பதவியில் இருக்கும் காலப்பகுதியில், தேவைப்படின் ஊதியமற்ற விடுமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
</p><p>
உள்ளூராட்சி மன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forest-fires-in-many-areas-due-high-temperatures-1784159528"></link>
            <id>https://jvpnews.com/article/forest-fires-in-many-areas-due-high-temperatures-1784159528</id>
            <summary type="text">நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகக்கூடும் என வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f622bc6-4b22-4003-8cb4-272bfbbb327c/26-6a581d29c40e4.webp' /></p><p>

இதற்கிடையில், நக்கிள்ஸ் காட்டின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த தீ, தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலக நாடுகளைப் பாதித்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம் தற்போது இலங்கையின் வானிலையிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
உலகளாவிய முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமாக உள்ள இந்த 'எல் நினோ' நிலைமையானது, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 80 சதவீதத்திற்கு மேல் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி ; ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-telecom-court-order-2-5-million-fraud-1784159080"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-telecom-court-order-2-5-million-fraud-1784159080</id>
            <summary type="text">திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடியாகப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31de35a3-a6a7-4612-b0de-f8cb6b48790a/26-6a581b699bcd0.webp' /></p><p>இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கண்டெடுக்கப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்தட்டுக்கள் (Hard Disks), மேலதிக விசாரணைகளுக்காக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னைய நீதிமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தது.
</p><p>
இந்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்தின் மின்னஞ்சல் தரவுத் தொகுப்பின் பிரதிகள் அவசியமெனவும், அதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விசாரணைகளுக்காக குறித்த தரவுகளை தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506"></link>
            <id>https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506</id>
            <summary type="text">வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை வான்படை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டங்களின் நூல் அல்லது பட்டங்கள் வானூர்திகளின் பறப்பு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இத்தகைய செயல்கள் விமானப் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a24a21-1f9b-4aed-a6d3-c4f14db67001/26-6a58192c6e953.webp' /></p><p>குறிப்பாக, வானூர்திகள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில், ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வானூர்தி நிலையங்களுக்கு அண்மைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலும் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை வான்படை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விமானப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு பாதுகாப்பான வான்பயண சூழலை பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வான்படை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052"></link>
            <id>https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடின்பரோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584c05f-2405-4386-a0a8-0dc4f0872524/26-6a581765aadd5.webp' /></p><p>

இதன்போது, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருந்தாலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படும் வரை மற்றும் தேர்தல்கள் நடைபெறும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

குறிப்பாக, தேர்தல்களை "முடிந்தவரை விரைவில்" நடத்த வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நிர்வாகக் குளறுபடிகள் நீங்கி, முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:27:40+00:00</updated>
        </entry>
    </feed>
