<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T20:46:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1000 பஸ்கள் அனுமதிப் பத்திரமின்றி சேவையில் ; கெமுனு விஜேரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443"></link>
            <id>https://jvpnews.com/article/1000-buses-operating-without-permits-1784491443</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cd19d2-4623-4459-8fb7-e693f842295e/26-6a5d2db57c6f6.webp' /></p><p style="text-align: justify; ">இவ்வாறான பஸ் இயக்கத்தினால் முறையான அனுமதிப் பத்திரங்களை பெற்று சட்டப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுவதுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இதுவொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேலும், பெருந்தொகை முதலீடுகளைக் கொண்ட தனியார் பஸ் நிறுவனங்கள் ஒரே அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி பல சேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-19T20:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியை விட்டு கவிழ்ந்த கார் ; அதீத வேகத்தால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884"></link>
            <id>https://jvpnews.com/article/speeding-car-crashes-off-road-1784489884</id>
            <summary type="text">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">நேற்று (19) பிற்பகல் மொரட்டுவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு, கொழும்பிலிருந்து மொரட்டுவ நோக்கி பயணிக்கும் மற்றைய மருங்குக்குள் நுழைந்து இவ்வாறு கவிழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9e181b-c339-4196-8ec2-62fb9cc24f4a/26-6a5d279defa9b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த போது அதில் நான்கு பேர் பயணித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

விபத்தில் அவர்கள் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்து காரணமாக அந்த வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T20:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் முற்றுகையிடப்பட்ட வீடு ; சோதனையில் இளைஞன் செய்த தகாத செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-tip-leads-to-house-raid-1784488435"></link>
            <id>https://jvpnews.com/article/secret-tip-leads-to-house-raid-1784488435</id>
            <summary type="text">களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில், 18 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (18) மாலை வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே பெருமளவான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ec637a-815a-4e91-bdd6-043828e170e9/26-6a5d21f60acee.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
அதற்கமைய 18 கிலோ 716 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்திய மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">கைதான நபர் அளுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.</p><p style="text-align: justify;">

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ச்செயல்களில் ஈடுபடும் இரு நபர்களின் வழிகாட்டலின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிப்பதற்காகவே இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சந்தேகநபரை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-19T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T19:19:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-shooting-incidents-reported-across-sri-lanka-1784486213"></link>
            <id>https://jvpnews.com/article/18-shooting-incidents-reported-across-sri-lanka-1784486213</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. 

கடந்த 24 மணித்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0bbced-376d-4e36-bdba-1cdcc1dae352/26-6a5d19469259d.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T19:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உறவுகள் யாழில் தனித்திருந்த இளைஞனுக்கு பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-found-inside-locked-house-in-jaffna-1784485344"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-found-inside-locked-house-in-jaffna-1784485344</id>
            <summary type="text">மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d997cb70-b9d7-4638-9e49-a557d4769796/26-6a5d15e1b2b1f.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p>

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். </p><p>

அப்போது, 1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். </p><p>

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T18:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று ; 37 பெண்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-worsens-across-sri-lanka-1784481771"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-worsens-across-sri-lanka-1784481771</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். மேலும் இதுவரை அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "> மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f2f9a1-d0e2-4058-93b4-4abd2cab1c85/26-6a5d07ecc8ab6.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 18ஆம் திகதி சனிக்கிழமை (18) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 ஆயிரத்து 321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் 19,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் 39,667 (52.66 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 11,610 (15.41 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தொட்டை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக தற்போது வரை உயிரிழந்துள்ள நோயாளர்களில் 37 பேர் பெண்கள் எனவும் 5பேர் சிறுவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T17:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய லொறி ; ஒருவர் பலி ; அறுவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/truck-collides-head-on-with-luxury-vehicle-1784480322"></link>
            <id>https://jvpnews.com/article/truck-collides-head-on-with-luxury-vehicle-1784480322</id>
            <summary type="text">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தெவுந்தரவிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
</p><p style="text-align: justify; ">
தெவுந்தரவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி ஒன்றும், மாத்தறையிலிருந்து தெவுந்தர நோக்கிச் பயணித்த டிஃபெண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6821034c-822f-47d5-bd9a-cba4f5e7c850/26-6a5d02439a217.webp' /></p><h2 style="text-align: justify; ">ஒருவர் பலி</h2><p style="text-align: justify; ">

விபத்தின்போது டிஃபெண்டர் வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் டிஃபெண்டர் வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த ஏனைய ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T17:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-on-southern-expressway-1784479347</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து பேருந்தில் இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b44740-ea3a-409e-a1df-5f8114f2a488/26-6a5cfe751123c.webp' /></p><h2 style="text-align: justify; ">முதற்கட்ட விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறும் ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ளதாக நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலி நோக்கி பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடம்மாற்றல் பகுதியில் வௌியேற்றி சாதாரண வீதியூடாக பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T16:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முட்டையின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474"></link>
            <id>https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474</id>
            <summary type="text">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b854cdd-b356-4c66-82af-836ee1aaf412/26-6a5cf33bb4fe6.webp' /></p><h2 style="text-align: justify; ">முட்டை விலை அதிகரிப்பு</h2><p style="text-align: justify; "> 

முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p style="text-align: justify; ">

சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இல்லை என சரத் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">

சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார். </p><p style="text-align: justify; ">

இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை எனவும் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-19T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தில் தீப்பரவல் ; தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289</id>
            <summary type="text">தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p><br></p><p> 

குறித்த பேருந்து தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 20 க்கும் அதிகமானோர் அதில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

தற்சமயம் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-19T15:34:53+00:00</updated>
        </entry>
    </feed>
