<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T09:34:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-petition-filed-by-suresh-sallay-1784020042"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-petition-filed-by-suresh-sallay-1784020042</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக சுரேஷ் சலே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d3a2bc-d6a1-4a85-89ed-5fca882dc57f/26-6a55fc4b89893.webp' /></p><p>
</p><p>
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சலே, தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதின்ம வயது பேத்தியை தொடர்ச்சியாக வன்புனர்ந்த தாத்தா; சிறுநீரகத் தொற்றால் அம்பலத்துக்கு வந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051</id>
            <summary type="text">&amp;nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கம்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

54 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐந்து புதல்வர்களின் தந்தை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபரின் புதல்வர்களில் ஒருவரின் மகள் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8efc140-d683-49ab-9d20-dbb41d61c295/26-6a55c98d3c1a5.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயார்&nbsp; வெளிநாட்டில்</span></p><p>
</p><p>
 

வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளைப் பொலிஸார், சிறுமியின் தாத்தாவைக் கைது செய்து கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். </p><p>அவரை ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,</p><p></p><p> </p><p>சிறுமியின் தாயார் சுமார் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாகச் சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது, அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p> 
இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, தனது தாத்தா நீண்டகாலமாகத் தன்னைத் துன்புறுத்தி வருவதாகச் சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் பணிப்புரையின் பேரில், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் நீதிமன்றம் வந்தவர் திடீர் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-who-came-to-court-with-his-wife-dies-suddenly-1784018463"></link>
            <id>https://jvpnews.com/article/man-who-came-to-court-with-his-wife-dies-suddenly-1784018463</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மனைவியுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மனைவியுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 உயிரிழந்தவர், நயபட அரப்பலகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மாடசாமி சந்திர மோகன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6dc3a06-ba09-4777-af88-3fef059bd770/26-6a55f62121c7d.webp' /></p><p>
</p><p>
 தனது மனைவியின் பெயரில் இருந்த வழக்கு விசாரணைக்காக, அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். </p><p>

அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் மத்துகம வஹத்தேவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

சடலம் மீதான மரண விசாரணை மத்துகம அவசர கால மரண விசாரணை அதிகாரி அசங்க உதய பண்டார லியனகேயேனால்மேற்கொள்ளப்பட்டது. </p><p>மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி கே.எம்.பி.எம். குணதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T08:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்த நபர்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930"></link>
            <id>https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c56f90-ab75-454a-88fd-b76ad321a274/26-6a55f40c09595.webp' /></p><h2>நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது தற்கொலை</h2><p>
</p><p>
பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p></p><p>

அவசர கால அழைப்பு இலக்கமான ‘119’ இற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ; மகிழ்ச்சியில் தாய்மார்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-maternal-uncle-gold-ring-scheme-1784015037"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-maternal-uncle-gold-ring-scheme-1784015037</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcb3ad2-9d76-434e-9465-daa39c3f12a1/26-6a55e8bf6f3ea.webp' /></p><h2>செப்டம்பர் 15ஆம் திகதி தாய்மாமன் தங்க மோதிரம்</h2><p>
</p><p>


ஒரு கிராம் தங்கத்தின் கொள்முதல் விலை ரூ.5,725 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை 14 முதல் ஓகஸ்ட் 17 வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தமிழர் பாரம்பரியத்தில் உள்ள 'தாய்மாமன் சீர்' மரபை பிரதிபலிக்கும் வகையில் அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
</p><p>


இந்தத் திட்டத்தின் பயன் 2026 ஜூன் 22 முதல் அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T08:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-named-among-world-s-top-50-food-1784013639"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-named-among-world-s-top-50-food-1784013639</id>
            <summary type="text">&amp;nbsp; &#039;ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்&#039; (Travel and Tour World) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சிறந்த 50 உணவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 'ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
</p><p>
இந்தத் தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a26f60-54f5-493b-a87e-32f4febaa677/26-6a55e34c082f1.webp' /></p><p> </p><p>

அதேவேளை இலங்கை இந்தப் பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உணவு கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவுகளின் பன்முகத்தன்மை, வீதி உணவுக் கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள்,</p><p></p><p> நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக 'ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T07:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சிறைச்சாலை மேல் “ட்ரோன்” பறக்க விட்டவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-flying-a-drone-over-jaffna-prison-1784013080"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-flying-a-drone-over-jaffna-prison-1784013080</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது.

 “ட்ரோன்” பறப்பதை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது.

 “ட்ரோன்” பறப்பதை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7883ded8-8e8d-4bbd-8540-4b3499a5bdcb/26-6a55e1198933f.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்வதற்காக , வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் , சிறைச்சாலைக்கு அருகில் வீதியில் அமைக்கப்படும் பாலத்தை காணொளி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் ட்ரோன் ஊடாக எடுத்த காணொளிகளை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T07:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் விரைவில் ஆரம்பமாகும் பயணிகள் ட்ரோன் சேவை; பறக்க தயாராகுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passenger-drone-service-in-sri-lanka-soon-1784012524"></link>
            <id>https://jvpnews.com/article/passenger-drone-service-in-sri-lanka-soon-1784012524</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் (CAA) திட்டமிட்டுள்ளது. </p><p> 

இலங்கையில் பயணிகள் ட்ரோன்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAA) ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புவெல்ல தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f64e384-2d17-4bad-bba8-c1be56288162/26-6a55deee0fbb0.webp' /></p><h2>&nbsp;ஆறு பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன்</h2><p>
</p><p>
ஒவ்வொரு ட்ரோனும் ஆறு பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார்.</p><p>

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இது போன்ற பயணிகள் ட்ரோன் சேவைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொள்வதற்கு முன்னதாக ஒரு முன்னோடித் திட்டத்தின் மூலம் இத்தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தமிந்த ரம்புவெல்ல குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
பெரிய அளவிலான செயல்பாட்டிற்கு முன்னதாக, பயணிகள் ட்ரோன் சேவைகள் தேவையான விமானப் போக்குவரத்துத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யும் வகையில், அவற்றின் செயல்பாட்டு, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மதிப்பிடுவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயும் தந்தையும் கொலை ; மகன் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-murdered-son-arrested-embilipitiya-1784010415"></link>
            <id>https://jvpnews.com/article/parents-murdered-son-arrested-embilipitiya-1784010415</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதால் இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76337a4-dfc6-4bac-8cae-ee650d575ab3/26-6a55d6b07960a.webp' /></p><p> </p><p>

 சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இச்சம்பவம் குறித்து எம்பிலாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656"></link>
            <id>https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c731986-290b-485d-9a32-2c7d2cedc4b1/26-6a55bc4a43166.webp' /></p><h2>60 மில்லியன் ரூபாய் பெறுமதி</h2><p> 

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:08:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-386-shampoo-sachets-seized-in-mannar-1784009289"></link>
            <id>https://jvpnews.com/article/5-386-shampoo-sachets-seized-in-mannar-1784009289</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட 'தம்மென்னா' கப்பலுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த சாம்பூ பக்கெட்டுகள் கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7922815f-1f0a-4bda-839b-fbc182ab1993/26-6a55d24b01e87.webp' /></p><p>



கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பறிமுதல் செய்யப்பட்ட 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள டெங்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நடப்பாண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



அதன்படி, நேற்று (13) வரை மொத்தமாக 69,951 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> கடந்த 12ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கை 68,672 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 1,279 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a009cd05-c458-4703-8ace-1f8d45d3b0c5/26-6a55cb8305978.webp' /></p><p>



இந் நிலையில் டெங்கு பாதிப்பு அதிகளவில் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு மொத்தம் 33,127 நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>



மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,464 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 14,004 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அதன்படி 21,538 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-14T05:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரை ; ஒரே வாரத்தில் மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880</id>
            <summary type="text">&amp;nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட 'கஜபா வெட்டை' எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

சம்பவத்தில் ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb992652-ca1a-4dd6-aa06-80e16b04473f/26-6a55c4fa42edb.webp' /></p><p>
மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற யாத்திரிகர் உயிரிழந்திருந்த நிலையில் , கடந்த 8ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் பொத்துவில், குண்டுமடு பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்றுள்ள மூன்றாவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஐஸ் வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐஸ்&#039; போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&amp;nbsp; மன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐஸ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&nbsp; மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8841afbd-6096-4753-bece-a51477920707/26-6a55c2ae7b694.webp' /></p><p>

மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் போது, குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர். </p><p>

அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p>

வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். 

 தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்</p>]]></content>
            <updated>2026-07-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்; மீண்டும் அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a2172-1218-42e1-8555-b1341446a8ae/26-6a55bdd6e41ab.webp' /></p><h2>சவுதி அரேபியா&nbsp; வான்வழித் தாக்குதல்</h2><p> </p><p>

இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது.</p><p> 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:40:09+00:00</updated>
        </entry>
    </feed>
