<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T18:45:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909"></link>
            <id>https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909</id>
            <summary type="text">எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p> 

சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த இன்று (15) அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15e9641-8868-4729-85b4-c62bdbac9aba/26-6a57d46f39724.webp' /></p><p>

முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>

இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462"></link>
            <id>https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ecc8d-9f5e-4b07-8369-b1498677ee1b/26-6a57d2b015c29.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லையா? சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1145ad-8278-4fff-b072-52f92849b186/26-6a57d02345751.webp' /></p><p>அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c010187-0c0a-47c2-bdd4-592ba0aef80d/26-6a57d02290435.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354</id>
            <summary type="text">கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d350b8-cba9-4889-bd35-c401a05a1738/26-6a57ca73c3341.webp' /></p><p>அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.</p><p> 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p> 

இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். </p><p>

அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347"></link>
            <id>https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய &#039;பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை&#039; அறிமுகப்படுத்தும் தேசிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை' அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பொது மக்கள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரத்தியேகமான பாலியல் தகவல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/230ee418-b5f9-4f9e-96dd-33f715d40f5b/26-6a5780348a09f.webp' /></p><p>

 இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழிற்பயிற்சித் துறையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூழலாக மாற்றும் நோக்கில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
</p><p>
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் சரியான முறையில் கொண்டு செல்வதற்கும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணியில் இன்றும் சிறு குழந்தைகளின் எலும்பு கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343"></link>
            <id>https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 02 மனித எச்சங்களின் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

 எனினும் இன்றையதினம் மனித எலும்புக்கூடுகள் எவையும் அகழந்து எடுக்கப்படவில்லை என சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8e8f80-3ce2-43fb-b398-4bde8113d6ac/26-6a5784188f1fd.webp' /></p><h2>மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்</h2><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p></p><p>

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.</p><p></p><p>

முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/open-warrant-issued-kapila-chandrasena-wife-1784118950"></link>
            <id>https://jvpnews.com/article/open-warrant-issued-kapila-chandrasena-wife-1784118950</id>
            <summary type="text">&amp;nbsp; கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்ற விடயம் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேக நபராக கபில சந்திரசேனவின் மனைவி உள்ளார்.
</p><p>
இந் நிலையில் சந்தேக நபரான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவைக் கைது செய்வதற்காக, கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (15) சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab2f520-9b6a-400d-bdb2-0153df843a71/26-6a577ea80ca92.webp' /></p><p> </p><p>

ஸ்ரீ லங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆவார்.</p><p></p><p>
</p><p>

சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச பொலிஸார் உள்ளிட்ட வெளிநாட்டு விசாரணைகளுக்கான உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆங்கில மொழி திறந்த பிடியாணை அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-rupee-depreciates-further-1784122138"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-rupee-depreciates-further-1784122138</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.



இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>


இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 331.50 இலிருந்து ரூ. 331.62 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c4e5d6-d473-4c1d-af37-8838721b27be/26-6a578b1b718dd.webp' /></p><p>
</p><p>


அதேபோல், அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் ரூ. 340.92 இலிருந்து ரூ. 340.98 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

வளைகுடா நாட்டு நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசிக்காரர்கள் கூட இருந்தால் பணமும், அதிர்ஷ்டமும் கொட்டுமாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-attract-money-and-good-fortune-1784105358</id>
            <summary type="text">&amp;nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிலரது ராசிப்படி அவர்களை விட அவர்களுடன் இருப்பவர்களுக்கு யோக பலன்களை அள்ளித் தரும். சில ராசிக்காரர்கள் உடன் இருந்தாலே, அந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். </p><p>

அப்படி மற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e009dc9f-c96c-4f8a-a1d2-3620999c3dfc/26-6a57498fecbce.webp' /></p><h2>அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள்&nbsp;</h2><p> </p><p><b> 

ரிஷபம் (சுக்கிரனின் குபேர வரம்)
</b></p><p>சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசியினர், தங்களின் பேராற்றலால் செல்வத்தை ஈர்க்கும் காந்தமாகச் செயல்படுவார்கள். இவர்களது குடும்பத்தினர் அல்லது தொழில் கூட்டாளிகள் மிகக் குறைந்த உழைப்பிலேயே அசுர வளர்ச்சியை எட்டுவார்கள். இவர்களது கை பட்ட பொருட்கள் யாவும் தங்கமாக மாறும் விசித்திர அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு.
</p><p><b>
சிம்மம் (சூரியனின் ஆளுமைப் பார்வை)
</b></p><p>சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இந்த ராசியினர், தங்களைச் சார்ந்தவர்களை ஒருபோதும் நடுத்தெருவில் விடமாட்டார்கள். இவர்களது ராசிப் பலன் உடன் இருப்பவர்களின் தடைகளைத் தவிடுபொடியாக்கும்.</p><p>இவர்களுடன் நட்பாகவோ அல்லது வர்த்தகத் தொடர்பிலோ இருப்பவர்களுக்கு, சமூகத்தில் மதிப்பும், எதிர்பாராத வழிகளில் பெரும் பணவரவும் வந்து சேரும்.</p><p></p><p><b>

விருச்சிகம் (செவ்வாயின் மறைமுக புதையல் யோகம்)</b></p><p>
கால புருஷ தத்துவத்தின் எட்டாம் ராசியான இவர்களுக்கு, ஆன்மிக ரீதியாகவே மற்றவர்களின் கர்ம வினைகளைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. </p><p>இவர்களது யோக திசைகள் தொடங்கும் போது, இவர்களுடன் இருப்பவர்களுக்கும் சேர்த்து அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும். முடங்கிக் கிடக்கும் தொழில்கள் கூட இவர்களது ஆலோசனையால் கோடிகளை அள்ளும்.
</p><p><b>
தனுசு (குருவின் ஞான தனப் பிராப்தி)
</b></p><p>குரு பகவானின் ஆசி பெற்ற இந்த ராசியினர், நடமாடும் அதிர்ஷ்டப் பெட்டகமாகத் திகழ்வார்கள். இவர்களது இருப்பு மட்டுமே ஒரு வீட்டின் வாஸ்து தோஷங்களையே போக்க வல்லது. </p><p>இவர்களைத் தங்களின் வாழ்க்கைத் துணையாகப் பெறுபவர்களுக்கு, வறுமை என்ற சொல்லே வாழ்வில் இருக்காது. தொடர் நஷ்டங்களைச் சந்திப்பவர்கள் கூட இவர்களின் வருகைக்குப் பின் பணமழையில் நனைவார்கள்.
</p><p><b>
மீனம் (அமுதக் கடலின் தன லாபம்)
</b></p><p>நீர் தத்துவத்தின் உச்ச ராசியான மீனம், அள்ள அள்ளக் குறையாத லக்ஷ்மி கடாட்சத்தைக் குறிக்கும். இவர்களது பிரார்த்தனைகளுக்குப் பிரபஞ்சத்தில் தனிச் சக்தி உண்டு. </p><p>தங்களின் சுய லாபத்தைக் கருதாமல் பிறர் வாழ நினைக்கும் இவர்களது குணமே, இவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தொடர் யோகங்களையும், எதிர்பாராத சொத்துச் சேர்க்கைகளையும் அள்ளித் தரும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devotees-reached-kataragama-traversing-forest-1784119770"></link>
            <id>https://jvpnews.com/article/devotees-reached-kataragama-traversing-forest-1784119770</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று சிறப்பு வாய்ந்த கதிர்காம கந்தனின் ஆடி வேல் விழாவை முன்னிட்டு பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று சிறப்பு வாய்ந்த கதிர்காம கந்தனின் ஆடி வேல் விழாவை முன்னிட்டு பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p> கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97dae181-5df2-43a6-9198-16161d9a087b/26-6a5781dc6db6e.webp' /></p><h2>வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை&nbsp;</h2><p>
</p><p>
முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர்.
</p><p>
வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் இன்று ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா பெரஹரா இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
</p><p>
தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, ஆடி வேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T12:47:59+00:00</updated>
        </entry>
    </feed>
