<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T13:50:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466"></link>
            <id>https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின்<a href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893?itm_source=parsely-api" target="_blank"> பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த</a> பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4178078a-e6ef-41f5-b7af-bc18193907d1/26-6a5a1ca39adda.webp' /></p><h2>உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு&nbsp;</h2><p> 

இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T13:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[9.5 மில்லியன் ரூபா கையூட்டல் ; மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-2026-team-co-owner-manjot-kalra-arrested-1784295065"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-2026-team-co-owner-manjot-kalra-arrested-1784295065</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2c5903-390f-4f4e-9275-e6b06c5fc39a/26-6a5a2e9b36ec1.webp' /></p><h2>வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபா&nbsp;கையூட்டல்</h2><p>
</p><p>
போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.

சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். </p><p>பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-07-17T13:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sexual-assault-secretly-filmed-a-woman-bathing-1784293292"></link>
            <id>https://jvpnews.com/article/sexual-assault-secretly-filmed-a-woman-bathing-1784293292</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த இளைஞனை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவில் மனைவி குளிப்பதை ரகசியமாக வீடியோ பதிவு செய்த இளைஞனை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவிக்கையில், </p><p>


இந்தியா குஜராத்தில் ஒரு பெண் குளிப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு வாலிபர் தன்னுடைய செல்போனில் படம் எடுத்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/960e8937-054f-41c3-a71a-8d9a2f0a0ee2/26-6a5a27add581f.webp' /></p><p>
</p><p>&nbsp;இளைஞனின் மிரட்டலை&nbsp; அந்தப் பெண் தனது கணவரிடம் சொல்லி விடவே இருவரும் சேர்ந்து அந்த வாலிபரை கொலை செய்ய திட்டமிட்டனர். 

அதன்படி அந்த இளைஞனை வீட்டுக்கு வரவழைத்த அந்த பெண்ணும், கணவரும்&nbsp; இளைஞனை கொலை செய்திருக்கிறார்கள்.</p><p></p><p> </p><p>

மேலும் அவரது செல்போனை உடைத்து சாலையில் வீசியதாக&nbsp; கூறப்படுகின்றது.

இதையடுத்து அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&nbsp; எனினும்&nbsp; கணவன், மனைவி&nbsp; இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில்&nbsp; அவர்களை&nbsp; &nbsp;பொலிஸார்&nbsp; வலைவவீசி தேடிவருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-17T12:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் கொவிட்-19 ; 12 பேருக்கு தொற்று உறுதி; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835"></link>
            <id>https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கொவிட்-19 தொற்றினால் , சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f616e2-caac-437d-9214-50d7ebfc7dee/26-6a59f31d4ccbb.webp' /></p><p></p><h2>&nbsp;உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள்</h2><p>
உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p></p><p>

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 எனவே பொது இடங்களில் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரமரத்ன மரணம்; குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-ex-dgp-wickramaratne-case-handed-over-cid-1784287060"></link>
            <id>https://jvpnews.com/article/death-ex-dgp-wickramaratne-case-handed-over-cid-1784287060</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e0127b3-58bc-4958-aaff-24f0971e5eb8/26-6a5a1063a49d6.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியே உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன, கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T11:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ஷவு வழக்கு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-court-order-issued-today-1784285942"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-case-court-order-issued-today-1784285942</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றதுடன், முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c388ceaa-306e-4bde-a06b-fd709f2c5c18/26-6a5a0bdf5a824.webp' /></p><p>
</p><p>


யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார்.</p><p>



வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இம்மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T10:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவர்க்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு; விசேட வர்த்தமானி வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-regulations-for-soaps-special-gazette-issued-1784283513"></link>
            <id>https://jvpnews.com/article/new-regulations-for-soaps-special-gazette-issued-1784283513</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய ஒழுங்குவிதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeb17f85-5194-487d-945c-7a0b554d42a4/26-6a5a017ae75c2.webp' /></p><h2>&nbsp;விசேட வர்த்தமானி அறிவித்தல்</h2><p>
</p><p>
உற்பத்தியின் பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும். மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 உற்பத்தியில் உள்ள மொத்தக் கொழுப்பு உள்ளடக்கம் சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். 

இந்த எழுத்துக்கள் 2 மில்லிமீற்றருக்குக் குறையாத அளவில் தடித்த எழுத்துக்களில் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த ஒழுங்குவிதிகள் குழந்தை சவக்காரம், குளியல் சவக்காரம், சவர சவக்காரம் , கார்போலிக் சவக்காரம், சலவை சவக்காரம் மற்றும் மென் சவக்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குப் பொருந்தும்.
</p><p>
இந்த வர்த்தமானி அறிவித்தல் 2027 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T10:17:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>



2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவிருந்த நிலையில், இன்று இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ea170b-7a4a-40fd-bd8e-82fe07a3c737/26-6a59c7406d22d.webp' /></p><p></p><h2>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்</h2><p>சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகின் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது.</p><p> 

இச்சட்டம் போட்டி மோசடி , ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் ஏனைய முறைகேடுகளைக் குற்றச்செயல்களாக வரையறுப்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறிழைப்பவர்களுக்கு கணிசமான அபராதங்களும் சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>&nbsp;</p><p>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T09:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; இரு அதிகாரிகளின் இறுதிச்சடங்கு இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-funerals-of-two-officers-1784280635"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-funerals-of-two-officers-1784280635</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
25 வயதான சிறைச்சாலை காவலர் ஆர்.பி. மதுசார மற்றும் சிறைச்சாலை காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான 39 வயது சந்திக லஷான் குணவர்தன ஆகியோரே அண்மையில் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77a3a970-b565-446b-9080-758eea4599e1/26-6a59f63cc3c5b.webp' /></p><p></p><p>

இவர்களின் உடலங்களுக்கு வெலிகடை சிறைச்சாலையில் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T09:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 மகன்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருமணம்; இணையத்தில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897"></link>
            <id>https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897</id>
            <summary type="text">&amp;nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

ஆண்டுதோறும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. </p><p>

ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து காப்பாற்ற அவர் எடுத்த இந்த முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae6dfb5-6bb1-4e76-9921-985238536644/26-6a59c09273ad9.webp' /></p><h2>ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு...</h2><p>

 இந்த திருமணத்தில் வழக்கமான சொகுசு கார்களுக்குப் பதிலாக, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்-டிராலிகளில் 14 மணமகன்களும், மற்றொரு டிராக்டரில் 14 மணப்பெண்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
இந்தத் தனித்துவமான ஊர்வலக் காணொளி இணையவாசிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

 14 தனித்தனி திருமணங்களை நடத்தினால் மண்டபம், உணவு, போக்குவரத்து எனப் பல மில்லியன் ரூபாய் செலவாகியிருக்கும்.</p><p></p><p>
</p><p>
ஆனால், அனைத்தையும் ஒரே மேடையில் முடித்ததால் பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்கிறது அந்தக் குடும்பம். நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், இணையத்தில் ஒரு பெரும் விவாதமே வெடித்துள்ளது.
</p><p>
ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு, சிக்கனம் மற்றும் நடைமுறைத் தீர்வுகளே மிக முக்கியம் என்ற செய்தியை இந்தத் திருமணம் உரக்கச் சொல்லியிருக்கிறது .</p><p>ஆடம்பரத்தை விட அன்பும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்வுமே முக்கியம் என்ற அந்த விவசாயியின் நோக்கம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.</p><p></p><p>
</p><p>
லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாக மாறும் இந்தத் திருமணக் கலாச்சாரத்திற்கு மத்தியில், மத்திய பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்த ஒரு விவசாயி செய்த இந்த செயல் இந்தியா முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-17T09:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இப்படியும் மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-scam-like-this-in-sri-lanka-too-1784278699"></link>
            <id>https://jvpnews.com/article/a-scam-like-this-in-sri-lanka-too-1784278699</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் பேராதனை பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் சிலருடன் சேர்ந்து வாகனமொன்றில் வந்து, தொலைபேசி கம்பிகளை பழுதுபார்ப்பது போல் நடித்து மேற்படி திரட்டுச்சம்வத்தை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b51eb6-6ed2-4370-93fa-8b316d185673/26-6a59eead5a9b5.webp' /></p><p>
</p><p>
இவர்கள் நீண்டகாலமாக கெலிஓயா, உடபேராதனை, சங்கபோகம, மஹகந்த உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்தத் திருட்டுச் செயலைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர்.</p><p>

இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தொலைபேசி கம்பிகள் அனைத்தும் கம்பளை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது</p><p>.

 சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (16) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T08:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-tobacco-betel-sellers-1784276912"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-tobacco-betel-sellers-1784276912</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், </p><p> 



2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1bf3c8-ce85-4cc8-91a5-2b2e42e06465/26-6a59e7b27add4.webp' /></p><h2>புகையற்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை</h2><p>



2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


வெற்றிலை விற்பனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை எனவும், மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
</p><p>


இலங்கையில் வருடாந்தம் 1,750 முதல் 1,900 வரையான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>



எதிர்காலத்தில் சட்டத்தை மீறி வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>


இதுவரை கலாசார காரணிகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாகவும், மக்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T08:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பதிவில் கோடிகளில் வசூல் வேட்டை நடத்தும் ஜனநாயகன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jana-nayagan-rakes-in-crores-in-advance-booking-1784276062"></link>
            <id>https://jvpnews.com/article/jana-nayagan-rakes-in-crores-in-advance-booking-1784276062</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடைபெற்ற முன்பதிவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
</p><p>
இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b92fcd1-8f10-4fc7-9a5c-99151b543271/26-6a59e46036840.webp' /></p><p>
</p><p>
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் 23-ஆம் திகதி வெளியாகவுள்ளது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகாமல் இந்த படம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
</p><p>
இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.



எதிர்வரும் காலங்களிலும் வசூலில் மாபெரும் சாதனையை ஜனநாயகன் திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-17T08:13:03+00:00</updated>
        </entry>
    </feed>
