<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-14T13:49:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மருத்துவ துறையின் மைல்கல் ; AI உதவியுடன் அறுவை சிகிச்சை வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-assisted-robotic-surgery-success-in-sri-lanka-1784034596"></link>
            <id>https://jvpnews.com/article/ai-assisted-robotic-surgery-success-in-sri-lanka-1784034596</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் அறுவை சிகிச்சை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோ தொழில்நுட்பத்தின் உதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் அறுவை சிகிச்சை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மருத்துவக் குழுவொன்று மேற்கொண்டுள்ளது.</p><p>

 

இந்த விசேடமான இரண்டு அறுவை சிகிச்சைகளும் அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந் நிலையில் இது இலங்கையின் சுகாதார சேவையை ஒரு புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச் செல்லும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d0fbef-7459-44b9-893d-90267875884b/26-6a563526030e8.webp' /></p><p>
</p><p>
 

இங்கு மருத்துவ நிபுணர்கள் இருவர் ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்று இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

 

அவற்றில் ஒன்று சுமார் 50 வயதுடைய பெண் ஒருவரின் கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையாகும். </p><p>மற்றைய அறுவை சிகிச்சை சிறுநீரகம் சார்ந்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>

 

 Robotic Surgery</h2><p>

 

இந்த தொழில்நுட்பத்தின் கீழ், அறுவை சிகிச்சையானது ரோபோவினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதில்லை</p><p> மாறாக, அறுவை சிகிச்சை வைத்தியரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே மேற்கொள்ளப்படுகிறது.

 

வைத்தியர் ஒரு விசேட கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி ரோபோ கைகளைக் கட்டுப்படுத்துவதுடன், ரோபோ அமைப்பானது அந்த அசைவுகளை மிகத் துல்லியமாக நோயாளியின் உடலினுள் செயல்படுத்துகிறது.</p><p>

 

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன நிரலாக்க (Programming) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், மனிதக் கைகளால் செய்ய கடினமாக இருக்கும் மிக நுண்ணிய அசைவுகளைக் கூட துல்லியமாகச் செய்யும் ஆற்றல் இந்த அமைப்பிற்கு உள்ளது.</p><p>

இலங்கை சுகாதாரத் துறைக்கு ஒரு புதிய படி,

 

AI மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தின் இணைவோடு இலங்கையின் அறுவை சிகிச்சை துறையை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

 

எதிர்காலத்தில் மேலும் பல வைத்தியசாலைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிந்தால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, இலங்கையை இப்பிராந்தியத்தின் ஒரு நவீன அறுவை சிகிச்சை சேவை மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பும் உருவாகும்.</p>]]></content>
            <updated>2026-07-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுறோட்டில் பொலிஸ் அதிகாரியின் வெறிச்செயல் ; பிறந்தநாளன்று துடிதுடித்து பிரிந்த மனைவியின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>

டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாநது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4749da60-e0fe-4f79-8ae6-6b6b47e97e19/26-6a562ba26edf5.webp' /></p><p></p><h2>அடிக்கடி குடும்ப தகராறு&nbsp;</h2><p>
</p><p>
 எனினும் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார். </p><p>

இந்நிலையில், நேற்று (13) பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்றபோது&nbsp; கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வைத்தியசாலை அருகே கடுமையான வாக்குவாதம்&nbsp; ஏற்பட்டது.</p><p></p><p>
</p><p>
இதன்போது , மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். </p><p>

இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T13:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிர்சாதன பெட்டியில் உருவான சிவலிங்கம்; பார்க்க படையெடுக்கும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ice-shivling-in-an-agra-fridge-agra-uttar-pradesh-1784035694"></link>
            <id>https://jvpnews.com/article/ice-shivling-in-an-agra-fridge-agra-uttar-pradesh-1784035694</id>
            <summary type="text">இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதன பெட்டியின் (ஃப்ரிட்ஜ்) உள்ளே பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்கம் போல் உருவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதன பெட்டியின் (ஃப்ரிட்ஜ்) உள்ளே பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்கம் போல் உருவானது.</p><p> 

அமர்நாத் பனி லிங்கத்தை போன்றே காட்சியளிக்கும் இந்த அதிசயத்தைக் காண அப்பகுதி மக்கள் திரண்டு, மந்திரங்களை முழங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e32ac5b-332b-49ea-8191-e7ae08bc4b2b/26-6a56397050beb.webp' /></p><h2>ஏராளமான மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு</h2><p>
</p><p>
இந்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் அந்த வீட்டிற்குச் சென்று பனிக்கட்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
</p><p>
 குளிர்சாதன பெட்டிக்குள் தோன்றிய இந்த பனி வடிவம் சிவபெருமானின் அருள் என்று கருதி அப்பகுதி மக்கள் 'ஹர ஹர மகாதேவ்' என்று முழக்கமிட்டு சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.</p><p>

 சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T13:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/patient-ward-jaffna-tellippalai-cancer-hospital-1784034958"></link>
            <id>https://jvpnews.com/article/patient-ward-jaffna-tellippalai-cancer-hospital-1784034958</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியை இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6a7916-c53f-4236-a26d-bdebaefeb87d/26-6a5636902f6bd.webp' /></p><p> கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.</p><p></p><p>

இறப்பிற்கு முன் தமது இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக மருத்துவர்களின் பரிந்துரையுடன் கூடிய இந்த விடுதியில், யாழ்.மாவட்டத்தில் எந்த பகுதியில் உள்ளவர்களும் இவ்வசதியை பயன்படுத்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T13:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcyclist-dies-in-accident-on-a9-road-1784033864"></link>
            <id>https://jvpnews.com/article/motorcyclist-dies-in-accident-on-a9-road-1784033864</id>
            <summary type="text">&amp;nbsp; மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
 விபத்தில் வஹமாலு கொல்லேவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e7984b-36c0-4c54-9fdf-542685a3b007/26-6a563249bc137.webp' /></p><h2>&nbsp;வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு&nbsp; திரும்பிய போது அனர்த்தம்</h2><p>
</p><p>
ஹட்டன், கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொரி ஒன்றும், மதவாச்சியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வஹமாலு கொல்லேவ பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு, மதவாச்சியவிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்போது, திடீரென மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் எதிர் திசைப் பாதைக்குச் சென்றதால், எதிரே வந்த லொரியுடன் பலமாக மோதியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

விபத்தைத் தொடர்ந்து லொரியின் ஓட்டுநரை மதவாச்சிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைகாளையும் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T12:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளக்கமறியல் நீடிப்பு; யாழில் சிறை உத்தியோகத்தர் மீது கைதி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007f8ef3-ec93-4a19-89e2-ef5a3e7fe8d2/26-6a56100f4e605.webp' /></p><p></p><p>
</p><p>
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் (13) நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.</p><p>

தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T12:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய மாணவனை தாக்கிய ஆசிரியர்; பெற்றோர் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-assaulted-a-student-with-special-needs-1784029387"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-assaulted-a-student-with-special-needs-1784029387</id>
            <summary type="text">&amp;nbsp; மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள &#039;சுபாக்யா&#039; விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள 'சுபாக்யா' விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இன்னிலைல் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d27b4aac-e995-4cf7-a1d6-6c4e7c3cc1c5/26-6a5620cd021bf.webp' /></p><p></p><h2>பெற்றோர்&nbsp; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>

சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய டி.எம். சஹான் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>

குறித்த பாடசாலையில் தங்கி பயின்று வந்த இந்த மாணவன், தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p></p><p> இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T11:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூடு நடத்திய நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு இடமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-officer-fire-death-threats-abroad-1784027540"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-officer-fire-death-threats-abroad-1784027540</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்குத் தொடர் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் அவசரமாகப் பாதுகாப்பானதொரு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/135c9dc2-ba9b-4bbb-93ab-fac5e3385700/26-6a56199566e04.webp' /></p><p>
</p><p>
 மோதல் சம்பவத்தின் போது இந்த அதிகாரி தனது உயிரையும் பொருட்படுத்தாது, கைதிகளின் அராஜகத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சக அதிகாரிகளை மீட்டெடுத்ததோடு சிறைச்சாலைத் திணைக்களத்தின் நற்பெயரையும் காப்பாற்றியிருந்தார்.</p><h2>கைதிகளின் அராஜகத் தாக்குதல்</h2><p>

 இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்குப் பாதாள உலகக் குழுவினரால் கடுமையான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த மரண அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
</p><p>
தொடர்ச்சியாக விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அந்த அதிகாரியின் உயிருக்குக் கடும் ஆபத்து நிலவுவதை உணர்ந்த சிறைச்சாலைத் திணைக்கள உயர் அதிகாரிகள், அவரது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவைக் கொண்ட வேறொரு சிறைச்சாலைக்கு அவரைச் சேவை இடமாற்றம் செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் கடமை உணர்வுடன் செயற்பட்ட இந்த துணிச்சலான அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் முறையான மற்றும் நிரந்தரமான விசேட பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்</p>]]></content>
            <updated>2026-07-14T11:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்த நபர்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930"></link>
            <id>https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c56f90-ab75-454a-88fd-b76ad321a274/26-6a55f40c09595.webp' /></p><h2>நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது தற்கொலை</h2><p>
</p><p>
பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p></p><p>

அவசர கால அழைப்பு இலக்கமான ‘119’ இற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோவாக களமிறங்கும் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297</id>
            <summary type="text">தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&amp;nbsp;&amp;nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&amp;nbsp; இந்திய&amp;nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&amp;nbsp;&amp;nbsp; விஜய் நடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&nbsp;&nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p> விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார் ஜேசன் சஞ்சய் . அப்ப பெரிய நடிகராக இருந்ததால் எப்படியும் பின்னாளில் ஜேசன் சஞ்சய் நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792348d2-96a7-4d48-93b7-56cf1f26ba70/26-6a560ceb2fc4f.webp' /></p><p>
</p><p>
ஆனால், அவரோ இயக்குனராக களமிறங்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கினார் ஜேசன் சஞ்சய்.</p><p></p><p> </p><p>

அவருக்கு நடிப்பில் ஆரமில்லை என சொல்லப்பட்டாலும் சிக்மா படத்தின் புரமோஷன் பாடலில் பர்பாமன்ஸும் செய்திருந்தார் ஜேசன்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியாகும் எனத்தெரிகிறது.</p><p> 

இந்நிலையில்தான், எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T10:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP நகர சபை உறுப்பினர் பதவி ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426"></link>
            <id>https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426</id>
            <summary type="text">பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனிப்பட்ட காரணம் நிமித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
 

தனிப்பட்ட காரணம் நிமித்தமே அவர் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92aa7a2c-1459-40e1-8331-2d7024742bd8/26-6a5609840a919.webp' /></p><p>

 

இதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் புதிய நகர சபை உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க நேற்று (13) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-statements-recorded-from-200-1784022293"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-statements-recorded-from-200-1784022293</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். </p><p>

இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85260375-c8fe-415a-9798-f1ee09904546/26-6a56051790391.webp' /></p><p> </p><p>

மேலும் நீர்கொழும்பிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகக் கூறிய அமைச்சர், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-fall-further-1784021628"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-fall-further-1784021628</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
</p><p>
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 374,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52944679-50d9-4372-9399-a1f6bbd90282/26-6a56027d8f523.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T09:32:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-petition-filed-by-suresh-sallay-1784020042"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-petition-filed-by-suresh-sallay-1784020042</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக சுரேஷ் சலே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d3a2bc-d6a1-4a85-89ed-5fca882dc57f/26-6a55fc4b89893.webp' /></p><p>
</p><p>
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய சுரேஷ் சலே, தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியே இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதின்ம வயது பேத்தியை தொடர்ச்சியாக வன்புனர்ந்த தாத்தா; சிறுநீரகத் தொற்றால் அம்பலத்துக்கு வந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-repeatedly-raped-his-granddaughter-1784007051</id>
            <summary type="text">&amp;nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கம்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

54 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐந்து புதல்வர்களின் தந்தை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபரின் புதல்வர்களில் ஒருவரின் மகள் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8efc140-d683-49ab-9d20-dbb41d61c295/26-6a55c98d3c1a5.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயார்&nbsp; வெளிநாட்டில்</span></p><p>
</p><p>
 

வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளைப் பொலிஸார், சிறுமியின் தாத்தாவைக் கைது செய்து கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். </p><p>அவரை ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,</p><p></p><p> </p><p>சிறுமியின் தாயார் சுமார் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாகச் சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது, அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p> 
இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, தனது தாத்தா நீண்டகாலமாகத் தன்னைத் துன்புறுத்தி வருவதாகச் சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாங்க கன்னங்கர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தயால் இலங்கக்கோன் ஆகியோரின் பணிப்புரையின் பேரில், கம்பளைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் நீதிமன்றம் வந்தவர் திடீர் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-who-came-to-court-with-his-wife-dies-suddenly-1784018463"></link>
            <id>https://jvpnews.com/article/man-who-came-to-court-with-his-wife-dies-suddenly-1784018463</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மனைவியுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மனைவியுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 உயிரிழந்தவர், நயபட அரப்பலகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மாடசாமி சந்திர மோகன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6dc3a06-ba09-4777-af88-3fef059bd770/26-6a55f62121c7d.webp' /></p><p>
</p><p>
 தனது மனைவியின் பெயரில் இருந்த வழக்கு விசாரணைக்காக, அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். </p><p>

அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் மத்துகம வஹத்தேவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

சடலம் மீதான மரண விசாரணை மத்துகம அவசர கால மரண விசாரணை அதிகாரி அசங்க உதய பண்டார லியனகேயேனால்மேற்கொள்ளப்பட்டது. </p><p>மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி கே.எம்.பி.எம். குணதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T08:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ; மகிழ்ச்சியில் தாய்மார்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-maternal-uncle-gold-ring-scheme-1784015037"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-maternal-uncle-gold-ring-scheme-1784015037</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcb3ad2-9d76-434e-9465-daa39c3f12a1/26-6a55e8bf6f3ea.webp' /></p><h2>செப்டம்பர் 15ஆம் திகதி தாய்மாமன் தங்க மோதிரம்</h2><p>
</p><p>


ஒரு கிராம் தங்கத்தின் கொள்முதல் விலை ரூ.5,725 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை 14 முதல் ஓகஸ்ட் 17 வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


தமிழர் பாரம்பரியத்தில் உள்ள 'தாய்மாமன் சீர்' மரபை பிரதிபலிக்கும் வகையில் அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
</p><p>


இந்தத் திட்டத்தின் பயன் 2026 ஜூன் 22 முதல் அரசு வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T08:09:33+00:00</updated>
        </entry>
    </feed>
