<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-16T15:42:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரோவில் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-120-scientists-resign-from-isro-1784203700"></link>
            <id>https://jvpnews.com/article/over-120-scientists-resign-from-isro-1784203700</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



இதில் எல்.வி.எம் 3 மற்றும் ஸ்பேடெக்ஸ் திட்ட இயக்குநர்கள், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்துதல் பிரிவு மேலாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22db1603-dd58-4423-8cdf-fc0297652c1e/26-6a58c9b599436.webp' /></p><p></p><h2>&nbsp;பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில்</h2><p>
</p><p>


மத்திய அரசு விண்வெளித் திட்டங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து வருவதால், வளர்ந்து வரும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தங்கள் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேடி ஈர்க்கின்றன.</p><p> அதிக வாய்ப்புகள் காரணமாகப் பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.</p><p></p><p>



மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய விண்வெளித் துறை தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.
</p><p>


மத்திய விண்வெளித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் 'குழு ஏ' பிரிவு ஊழியர்களின் விருப்ப ஓய்வு மற்றும் இராஜினாமா கோரிக்கைகள் இனி வழக்கம் போல எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>



 அத்துடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எஸ்.ஜி மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களின் கோரிக்கைகள் இறுதி முடிவுக்காக உரிய பரிந்துரைகளுடன் மத்திய விண்வெளித் துறைக்கே நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/job-opportunities-in-lithuania-agents-fraud-alert-1784205345"></link>
            <id>https://jvpnews.com/article/job-opportunities-in-lithuania-agents-fraud-alert-1784205345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுற்றுலா விசாக்கள் மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று வேலை பெறலாம் எனக் கூறி, சில நபர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுற்றுலா விசாக்கள் மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று வேலை பெறலாம் எனக் கூறி, சில நபர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணம் வசூலிப்பதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள லிதுவேனியா குடியரசின் கௌரவ கொன்சலேட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
</p><p>
சுற்றுலா விசா மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று அங்கு சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள கொன்சலேட் அலுவலகம், இவ்வாறான போலிப் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea87d43-147e-4c15-8797-5d1a35770e7a/26-6a58d02290a49.webp' /></p><h2>சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது</h2><p>
</p><p>
 வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட முகவராண்மைகள் ஊடாக மட்டுமே சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொன்சலேட் பணிப்பாளர் காஞ்சன கொடிதுவக்கு, புதுடில்லியிலுள்ள லிதுவேனியா தூதரகத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டல்களின்படி கொன்சலேட் அலுவலகம் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், லிதுவேனியாவில் உயர்கல்வி, சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு அல்லது பிற சட்டபூர்வ திட்டங்களைத் தேடும் இலங்கையர்களுக்குச் சரியான வழியைக் காட்டத் தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் எந்தவொரு பணத்தையும் செலுத்துவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவமனைகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expired-items-in-private-hospitals-1784206110"></link>
            <id>https://jvpnews.com/article/expired-items-in-private-hospitals-1784206110</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, காலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டிற்கு தகுதியற்ற மருத்துவ ஆய்வகப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.</p><p>

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தேசிய மட்டத்தில் 52 விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a0de05-d533-4a12-b49a-930e66cfb7d0/26-6a58d3202fc2c.webp' /></p><h2>பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்</h2><p>

இந்த ஆய்வுகளின் போது, பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் உள்ள பொருட்களுடன் சேர்த்து காலாவதியான ஆய்வகப் பொருட்களையும் அவை சேமித்து வைத்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 கைப்பற்றப்பட்ட தகுதியற்ற பொருட்களில், குருதி குளுக்கோஸ் பரிசோதனை கருவிகள் (Blood Glucose Testing Kits), ஆய்வக இரசாயனங்கள்,</p><p></p><p> டெங்கு கண்டறிதல் சோதனை கருவிகள் (Dengue Diagnostic Test Kits), இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் (Gels), சாயக் கரைசல்கள் (Dye Solutions) மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் இதர ஆய்வகப் பொருட்கள் அடங்குகின்றன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

தவறிழைத்த நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே இப்படியா... பெண் பொலிஸுக்கு ஆண் பொலிஸ் பாலியல் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893"></link>
            <id>https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்&nbsp; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 தம்புள்ளை 'கம் உதாவா' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது. சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலும்&nbsp; தெரியவருகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04da5904-f5b7-4a7f-9023-3c3b65672287/26-6a58b6ef50235.webp' /></p><p></p><h2>மது போதையில் வந்த மற்றுமொரு காவலர் பாலியல் தொல்லை</h2><p>
பாதுகாப்புப் பணியின் போது, அந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மற்றுமொரு காவலர், பெண் காவலரின் மடியில் வலுக்கட்டாயமாக அமர்ந்து அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.</p><p></p><p>

 இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலரும் அதே மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.</p><p> 

 கைது செய்யப்பட்ட காவலர், நீதிமன்ற மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடும் மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சக பணியாளருக்கே இத்தகைய இழிவான செயலைச் செய்த அந்த காவலர் மீது தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறும் இத்தகைய செயல்கள், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;</p><p>பாதுகாப்புப் பணியின் போது சக பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T13:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணக் கால்பந்து; தண்ணீர் போத்தலில் இரகசியக் குறிப்பு ; மெஸ்ஸி ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-world-cup-secret-note-on-water-bottle-england-1784207547"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-world-cup-secret-note-on-water-bottle-england-1784207547</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகக்கிண்ணக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட், ஆர்ஜென்டினா வீரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகக்கிண்ணக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட், ஆர்ஜென்டினா வீரர்களை எதிர்கொள்ள இரகசியக் குறிப்புகளைத் தனது தண்ணீர் போத்தலில் எழுதி வைத்துள்ளார்.
</p><p>


அவர் இந்த சுவாரசியமான இரகசிய உத்தியைக் கையாண்டது போட்டிக்குப் பிறகு தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecca13db-383c-4527-86cc-3ef4b9fe02c1/26-6a58d8bcc3e9f.webp' /></p><h2>ஆர்ஜென்டினா வீரர்கள்&nbsp;ஆச்சரியம்</h2><p> </p><p>போட்டி ஒருவேளை பெனால்டி ஷூட்-அவுட் முறைக்குச் சென்றால் ஆர்ஜென்டினா வீரர்கள் எந்தெந்தப் பக்கங்களில் பந்தை அடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்துள்ள நிலையிலேயே இந்த உத்தியைக் கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இருப்பினும், போட்டி முடிந்த பிறகு அவர் அந்தத் தண்ணீர் போத்தலை மைதானத்திலேயே விட்டுச் சென்றதால், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட ஆர்ஜென்டினா வீரர்கள் அந்த இரகசியக் குறிப்புகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.</p><p></p><p>



இருப்பினும், போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. ஆனால், போட்டியின் கடைசி 5 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேர இடைவெளியில் ஆர்ஜென்டினா அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அதிரடி வெற்றிபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-16T13:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர் தந்த எனர்ஜி; இயக்குநர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047</id>
            <summary type="text">&amp;nbsp; தான் சினிமா துறையில் காலடி எடுக்கப்போவதாக அறிவித்தபோது, தனது பெற்றோர், தங்கை மற்றும் நண்பர்கள் வழங்கிய ஊக்கம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தான் சினிமா துறையில் காலடி எடுக்கப்போவதாக அறிவித்தபோது, தனது பெற்றோர், தங்கை மற்றும் நண்பர்கள் வழங்கிய ஊக்கம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக முதலமைச்சர் விஜயின் மகன் , இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் அவர்கள் காட்டிய நேர்மறையான அணுகுமுறை, தன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ccb4055-a864-422e-a0b9-b9e9191b8a5d/26-6a58d6c9544ab.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூரி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் தன்னை வாழ்த்தி ஆசீர்வதித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T13:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆடிப்பிறப்பு; தமிழர்களின் விசேட பண்டிகை நாள்! சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-pirappu-special-tamils-kolukattai-kul-1784194722"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-pirappu-special-tamils-kolukattai-kul-1784194722</id>
            <summary type="text">&amp;nbsp; ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும்.
</p><p>
இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் , கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார் உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணல் என்பன வழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a322fe5-5d54-475c-8ad3-c63abc923c1f/26-6a58a6a3e8fb0.webp' /></p><h2>அனைத்து இடங்களிலும், தமிழர்களின் பண்டிகை</h2><p>
</p><p>

 ஆடிப்பிறப்பானது வீடுகளில் மாத்திரமன்று ஆலயங்கள், பாடசாலைகள், வேலை செய்யும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும், தமிழர்களின்&nbsp; &nbsp;பண்டிகை&nbsp; கொண்டாடப்படுகிறது.</p><p>

சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். </p><p>இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். 

தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.
</p><p>
அந் தவகையில் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என யாழ்ப்பாணம் மானிப்பாய், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய பாடல் தமிழ் மக்களிந் ஆடிப்பிறப்பு கொண்டாத்தின் இனிமையை எடுத்து சொல்கின்றது.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f478922f-976b-4c12-a6d0-d965f9ba6123/26-6a58a84b0a9f2.webp' /></p><h3>சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை
</h3><p><b>
ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்</b></p><p> 750 கிராம் பனங்கட்டி

 1 ¼ கப் </p><p>சிவப்பு பச்சை அரிசி

 ½ கப் </p><p>முழுப் பயறு

 ½ கப் </p><p>வறுத்த உளுத்தம் மா

 ½ கப் </p><p>தேங்காய் சொட்டு ,&nbsp; தேங்காய்ப்பால் , தேவையான&nbsp; அளவு தண்ணீர் ,&nbsp; சிறிது&nbsp; மிளகு,&nbsp; தேவையான அளவு&nbsp; உப்பு</p><p><b>

 செய்முறை,&nbsp;</b></p><p>அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 

மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c237418-c6de-4ec6-8a8f-7413abd286dd/26-6a58aba89cc75.webp' /></p><p> </p><p>தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும்.

 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். </p><p>பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும்.

 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f876ebd-89ee-4aee-b730-0e9eb6b53955/26-6a58a91751002.webp' /></p><p> </p><p>

 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். </p><p>பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 

அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். </p><p>சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். சுவையான ஆடிக் கூழ் தயார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T12:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rough-seas-department-of-meteorology-warning-1784204587"></link>
            <id>https://jvpnews.com/article/rough-seas-department-of-meteorology-warning-1784204587</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74218096-399f-46ea-b5cf-3c688bb1870d/26-6a58cd2c9598a.webp' /></p><p>
</p><p>


மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T12:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.11 இலட்சம் வருமானம் ஈட்டும் பெண் ஒருவரின் திருமண எதிர்பார்ப்பு; சமூகவலைத்தளத்தில் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/marriage-expectations-a-woman-income-rs-11-lakhs-1784201434"></link>
            <id>https://jvpnews.com/article/marriage-expectations-a-woman-income-rs-11-lakhs-1784201434</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.11 இலட்சம் (இந்திய மதிப்பில்) வருமானம் ஈட்டும் 28 வயது பெண் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையாக வருபவர் ஆண்டுக்கு ரூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.11 இலட்சம் (இந்திய மதிப்பில்) வருமானம் ஈட்டும் 28 வயது பெண் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையாக வருபவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுபவராகவு, அந்த&nbsp; நபர்&nbsp; &nbsp;பெங்காலி பிராமணராக இருக்க வேண்டும் என முன்வைத்த நிபந்தனை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.</p><p>
இந்தத் தகவலைப் பகிர்ந்த பிரபல திருமண ஒருங்கிணைப்பாளர் ஒந்த்ரிலா கபூர், குறித்த பெண்ணின் எதிர்பார்ப்பு "நியாயமற்றது" என விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/020440b8-8a3b-4caf-b9bd-b20c7434e579/26-6a58c0dc80976.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தக் கோரிக்கையின் காரணமாக அந்தப் பெண்ணை தனது வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம்&nbsp; தற்போதைய தலைமுறையின்&nbsp; &nbsp;திருமண எதிர்பார்ப்புகள், வருமானம் மற்றும் வாழ்க்கைத் துணைத் தெரிவு தொடர்பான&nbsp; விவாதத்தை&nbsp; ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:52:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-teacher-job-applicants-in-sri-lanka-1784201221"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-teacher-job-applicants-in-sri-lanka-1784201221</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து விலகி வரலாற்றில் முதன்முறையாக பாடசாலைகளில் நிலவும் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து விலகி வரலாற்றில் முதன்முறையாக பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாட வெற்றிடங்களை இலக்காகக் கொண்டு (பாட அடிப்படையில்) ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முறையான ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், நீண்டகாலமாக நிலவி வரும் கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக அந்தந்த பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையே இந்த புதிய முறையின் கீழ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa6b4b4b-e314-4885-a8de-5a8f6cbe1d58/26-6a58c0072a6c7.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">ஆசிரியர் சேவை</h2><p>
</p><p style="text-align: justify; ">

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு இணங்க, கடந்த மே மாதம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு பட்டதாரிகள் உட்பட 180,000 தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். </p><p style="text-align: justify; ">தற்போது அதன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள உரிய நிதியொதுக்கீடுகள் மற்றும் அனுமதிகளுக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சுமார் 30,000 ஆசிரியர்கள் அவசரமாக பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> இவற்றுக்கு மேலதிகமாக, அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவையின் விசேட கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய தீர்வுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T11:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சமூக ஊடக காணொளியால் சிக்கிய இளைஞர்கள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youths-caught-over-social-media-video-1784200230"></link>
            <id>https://jvpnews.com/article/youths-caught-over-social-media-video-1784200230</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்று (16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify;">


குறித்த வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் பயணித்ததுடன், வீதியை மறித்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டிருந்தமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வைரல் வீடியோ ஆதாரங்கள் மூலம் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3413ae-4e29-48c8-b3e7-7ad973cf6bb4/26-6a58bc27d4e9f.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;அத்துமீறிய நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
மேலும், இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சம்மாந்துறை நீதவானின் அதிகாரப்பூர்வ வாகனத்தின் முன்னிலையிலும் இவர்கள் இதேபோன்ற ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;">

இந்நிலையில், சந்தேகநபர்களின் இந்தச் செயற்பாடு பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளமை கருதி, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நூர்டீன் சர்ஜூன் விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சம்மாந்துறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிடமும் குறித்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி, அதற்கான எழுத்து மூலமான கடிதங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார். </p><p style="text-align: justify;">அத்துடன், அந்த மன்னிப்புக் கடிதங்களைச் சமர்ப்பித்த பின்னரே, இந்த வழக்கை மேலும் முன்னெடுக்க முடியும் என அறிவித்த நீதிபதி, வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T11:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்கு வந்தவரின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த CCTV]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/customer-s-misconduct-at-shop-stolen-mobile-cctv-1784199813"></link>
            <id>https://jvpnews.com/article/customer-s-misconduct-at-shop-stolen-mobile-cctv-1784199813</id>
            <summary type="text">&amp;nbsp; தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர், தனது கடைக்கு வந்த ஒருவர் மேசையில் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர், தனது கடைக்கு வந்த ஒருவர் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடிவிட்டதாக இன்று (16) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
</p><p>


கடைக்கு வந்தவர் கடையில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு அந்த நபர் ஒருமுறை கடையை விட்டு வெளியேறி, இரண்டாவது முறையாக கைபேசியைத் திருடியதை பாதுகாப்பு கேமரா சி.சி ரி.வி மூலம் தரவுகள் பதிவு செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8b5cd4-21eb-4bcd-923d-1b4d6cd47333/26-6a58ba87442e8.webp' /></p><p></p><p>



சந்தேக நபர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கடை உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T11:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பி ; இழுத்து வெளியேற்றிய பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-archuna-expelled-from-the-kilinochchi-1784183845"></link>
            <id>https://jvpnews.com/article/mp-archuna-expelled-from-the-kilinochchi-1784183845</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை&nbsp; பொலிஸார்&nbsp; கூட்டத்தில் இருந்து&nbsp; &nbsp; &nbsp;இழுத்து வெளியேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5022d5f-bccd-41a7-a64e-9d881683d65f/26-6a58838061d98.webp' /></p><h2>அமைச்சரை அடிக்க முயன்ற அருச்சுனா எம்பி</h2><p>&nbsp; &nbsp;இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
</p><p>
திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகத்தார்.</p><p></p><p>
</p><p>
 கூட்டத்தில் இருந்த சிறிதரன் எம்பி வெளியேஏரிய நிலையில் , அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரிசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
</p><p>&nbsp;கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள். அமைச்சர் இராமலிங்க்கம் சந்திரசேகருடன், அர்ச்சுனா எம்பி முரண்பட்டுள்ளார்.</p><p></p><p>அதோடு அமைச்சரை அடிக்கவும் அருச்சுனா எம்பி கை ஓங்கியாதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சமபையில் இருந்தவர்கள் அருச்சுனாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனையடுத்து அர்ர்சுனா எம்பி பொலிஸாரால் கூட்டத்தில் இருந்து அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநிறுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1669790280743469%2F&show_text=false&width=560&t=0" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-16T10:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஆனைவிழுந்தான் புகையிரத நிலயம் மீண்டும் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anawilundawa-railway-sub-station-reopen-1784197298"></link>
            <id>https://jvpnews.com/article/anawilundawa-railway-sub-station-reopen-1784197298</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த உப-நிலைய அதிபர் இராஜினாமா செய்ததை அடுத்து, புகையிரத திணைக்களம் அண்மையில் தற்காலிகமாக மூடத் தீர்மானித்திருந்தது. 

தற்போது அங்கு தற்காலிக நிலைய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பயணியர் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50bc34a-6c84-462e-b4bb-f60d4b2be598/26-6a58b0b3c4940.webp' /></p><h2> மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைகள்</h2><p>
</p><p>
கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த அக்குரல மற்றும் அன்ததொல ஆகிய புகையிரத உப-நிலையங்களின் சேவைகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. 

இன்றைய தினம் அல்லது நாளைய தினத்திற்குள் தற்காலிக நிலைய அதிபர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
</p><p>
இந்த தற்காலிக நியமனங்கள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>

நாட்டின் 25 உப-நிலையங்களுக்கு புதிய உப-நிலைய அதிபர்களை நியமிப்பதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. </p><p>எனினும், ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை.

திணைக்களத்தின் உயர் நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாகவே இந்த நியமனங்கள் தாமதமாகி வருகின்றன.</p><p></p><p>
</p><p>
 இதன் விளைவாக, தற்போது பணியில் உள்ள நிலைய அதிபர்களைக் கொண்டு கூடுதல் செலவில் இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-16T10:20:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; ஜூலை 30 வரை கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-teachers-1784196587"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-sri-lanka-teachers-1784196587</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. 

இதற்கமைய, தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை <a href="http://nstt.moe.gov.lk" target="_blank">http://nstt.moe.gov.lk</a> என்ற இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85fa8b9-2bb7-4855-afb9-2f2d45b03acf/26-6a58adec9dfc1.webp' /></p><h2 style="text-align: justify; ">இடமாற்றம் விண்ணப்பம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை 2026 ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T10:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாய் புற்றுநோயால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பு ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-die-daily-from-oral-cancer-in-sri-lanka-1784195376"></link>
            <id>https://jvpnews.com/article/three-die-daily-from-oral-cancer-in-sri-lanka-1784195376</id>
            <summary type="text">வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மரணங்கள் பதிவாகி வருவதாக வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86e13058-2f74-4301-a386-360ab981e5b1/26-6a58a931a7243.webp' /></p><h2 style="text-align: justify; ">வாய் புற்றுநோய்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன், இலங்கையில் ஆண்களுக்கு மத்தியில் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோய் வகையாக வாய் புற்றுநோய் காணப்படுவதோடு, இலங்கைப் பெண்களுக்கு மத்தியில் அதிகளவில் பதிவாகும் 10 புற்றுநோய் வகைகளுக்குள்ளும் வாய் புற்றுநோய் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானப் பயன்பாடு ஆகியவை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதோடு, குறிப்பாக வெற்றிலை மெல்லும்போது பயன்படுத்தப்படும் பாக்கில் அடங்கியுள்ள புற்றுநோய் காரணி மிகவும் ஆபத்தானது மற்றும் சக்தி வாய்ந்தது என வைத்தியர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தினசரி தொழில்களில் ஈடுபடும் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த சமூகத்தினர் இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்கள், மீனவச் சமூகம், மாணிக்கக்கல் மற்றும் சுரங்கத் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோர் இவர்களுள் அடங்குவர். </p><p style="text-align: justify; ">

தங்களது பணிச் சூழலில் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம், சோர்வு மற்றும் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக இவர்கள் பெருமளவில் வெற்றிலை மெல்லுதல், புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடுகளுக்குப் பழகியிருப்பதே இதற்கான அடிப்படைக் காரணம் என வைத்தியர் தனுஜா தக்ஷனி பதிராஜ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

எனவே, இந்த அழிவுகரமான பழக்கவழக்கங்களில் இருந்து விலகியிருக்குமாறும், வாயில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T09:50:01+00:00</updated>
        </entry>
    </feed>
