<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-10T23:54:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-riot-shocking-information-autopsy-1783721649"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-riot-shocking-information-autopsy-1783721649</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>
</p><p></p><p>பிரேதப் பரிசோதனையின் போது, சில அதிகாரிகளின் உடல்களில் கடுமையான தாக்குதலுக்கான அடையாளங்கள் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> உடலில் பலத்த காயங்கள், தாக்குதலால் ஏற்பட்டதாகக் கருதப்படும் காயத் தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மேலும், சில உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களில் கடுமையான உடல் துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டக்கூடிய காயங்கள் பதிவாகியுள்ளதாகவும், விசாரணைகளின் ஒரு பகுதியாக அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதேவேளை, கலவரத்தின் போது காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. </p><p>அதன்படி, குறைந்தது 14 கைதிகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணி, கலவரம் ஏற்பட்ட சூழ்நிலை, உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமான நிகழ்வுகள் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பிலான முழுமையா தகவல்களை இந்த காணொளி மூலம் காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-10T23:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905"></link>
            <id>https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2480450-1511-40eb-b77c-5701995c7776/26-6a51833bb8c09.webp' /></p><p> அதே வேளையில் இம்மாதத்தில் தான் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான உறவால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. இந்த சிறப்பு பார்வை ஆகஸ்ட் 2 வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c83947-b178-4195-936e-8ee611d21c69/26-6a51833c6719a.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2ae56f8-3656-4819-8062-f2475e96f9e1/26-6a51833d13d12.webp' /></p><h3>கன்னி</h3><p>
சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc97eca0-9e64-4587-b7ac-9edbaaee8782/26-6a51833dba6ae.webp' /></p><h3>மகரம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb259af-a94b-4321-8ec6-81e756720f68/26-6a51833e6a05e.webp' /></p><h3>கும்பம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தருவதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6194a3a9-08e5-4407-b9c4-7993d825eedb/26-6a51833f17d56.webp' /></p>]]></content>
            <updated>2026-07-10T23:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ; அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466"></link>
            <id>https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466</id>
            <summary type="text">இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p><p>

நேற்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இது குறித்து தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6a5b8e-3458-48a7-b9d9-0c97f878d294/26-6a515a7373339.webp' /></p><p>

அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் (பென்ஷன்) பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.
</p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ. 2.1 மில்லியனை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31-ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p>

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டசபையில் செம்மணி விவகாரம் ; கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
செம்மணி போன்ற சம்பவங்களின் சாட்சியங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2c1fe0-24de-4866-bd1c-bad2f04178a2/26-6a5155347454a.webp' /></p><p>மேலும், தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் அச்சிடல் ; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111"></link>
            <id>https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 2017ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa5c9f5e-787d-442c-9bc7-1a86b45c4475/26-6a515140a3027.webp' /></p><p>இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.</p><p>

குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்த மன்று, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
</p><p>
இதன்போது, குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சிறைத்தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டது.
</p><p>
இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதைக் கருத்தில் கொண்டு, விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031</id>
            <summary type="text">கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 21,765.56 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb864a4-d93d-4d8b-be16-fdbbe42a62ec/26-6a514d08d3139.webp' /></p><p>மேலும், இன்றைய நாளாந்தப் புரள்வு 02 பில்லியன் ரூபாவாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997"></link>
            <id>https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997</id>
            <summary type="text">இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f6442f-f277-45b7-af2a-19b23c9d85c6/26-6a513d46c9bdc.webp' /></p><p>இதன்போது, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் ; அரசின் உடனடி தலையீட்டை கோரும் ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040</id>
            <summary type="text">மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன் திருட்டுச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eec4f84-0cc8-4c02-b477-7938caba3f8c/26-6a51398a6fe34.webp' /></p><p>
கடலில் சட்டவிரோதமான முறையில் நிகழும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளையினால் இந்த மூன்று மாவட்ட கடற்றொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

வாகரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மீன் திருட்டுச் சம்பவங்கள் இதற்கு சான்றாகும்.</p><p>
கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே நின்றிருந்த இளைஞரை கார் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, நாவற்குழி பகுதியில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72a7651-5fa1-4045-b77c-f3506a73ab4b/26-6a51350abbb08.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞரை மீண்டும் காரில் அழைத்து வந்து, யாழ்ப்பாணம் போஸ்கோ கல்லூரி அருகே வீதியோரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தை அருகில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவதானித்ததைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
</p><p>
காரைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு கூரிய வாள்கள், இரத்தக் கறை படிந்த டி-ஷர்ட் மற்றும் சுமார் 2.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd4aa17-780b-42e6-b39b-d65ec5d3b870/26-6a51350c1cde8.webp' /></p><p> </p><p>மேலும், காரின் உட்பகுதியிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, வீதியோரத்தில் காயமடைந்த நிலையில் கிடந்த இளைஞரை பொலிஸார் மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-10T18:10:50+00:00</updated>
        </entry>
    </feed>
