<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-11T00:55:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905"></link>
            <id>https://jvpnews.com/article/third-aspect-of-saturn-falling-on-mars-zodiac-sign-1783726905</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஜூலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக சனி பகவான் ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2480450-1511-40eb-b77c-5701995c7776/26-6a51833bb8c09.webp' /></p><p> அதே வேளையில் இம்மாதத்தில் தான் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான உறவால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. இந்த சிறப்பு பார்வை ஆகஸ்ட் 2 வரை நீடித்திருக்கும். இப்போது செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c83947-b178-4195-936e-8ee611d21c69/26-6a51833c6719a.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>சனியின் பார்வை செவ்வாய் மீது விழுவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2ae56f8-3656-4819-8062-f2475e96f9e1/26-6a51833d13d12.webp' /></p><h3>கன்னி</h3><p>
சனியின் மூன்றாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும் மற்றும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc97eca0-9e64-4587-b7ac-9edbaaee8782/26-6a51833dba6ae.webp' /></p><h3>மகரம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனைப் பெறக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb259af-a94b-4321-8ec6-81e756720f68/26-6a51833e6a05e.webp' /></p><h3>கும்பம்
</h3><p>செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கும்ப ராசிக்காரர்கள் ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் லாபத்தை அள்ளித் தருவதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6194a3a9-08e5-4407-b9c4-7993d825eedb/26-6a51833f17d56.webp' /></p>]]></content>
            <updated>2026-07-11T00:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் மருத்துவ மாணவி மரணம் ; விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-dies-abroad-new-information-investigation-1783729017"></link>
            <id>https://jvpnews.com/article/student-dies-abroad-new-information-investigation-1783729017</id>
            <summary type="text">இந்தியா கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் உஸ்பெகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஹர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் உஸ்பெகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த பசந்த்–மினி தம்பதியின் மகள் சாகர்யா (21), உஸ்பெகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.</p><p>

அதே கல்லூரியில் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் கல்வி பயின்று வந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd107bf-2059-4d16-ad0d-cc3ccfb3b359/26-6a518b7b52856.webp' /></p><p>இருவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி சாகர்யா மடிக்கணினியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>இதையடுத்து அவர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சாகர்யாவை மதம் மாறுமாறு வற்புறுத்தி சாதருள் அனாம் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p> இதனையடுத்து, அவரை உஸ்பெகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சாகர்யாவின் உடல் விமானம் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு கொண்டு வரப்பட்டது.</p><p>உறவினர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், சாகர்யாவின் உடல் அவரது சொந்த வீட்டுத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது அவரது சகோதரர் சாவந்த் சிதைக்கு தீ மூட்டினார்.</p><p>

இதேவேளை, சாகர்யாவின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சாதருள் அனாமுக்கு எதிராக ஹரிப்பாடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசாங்கம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/previous-gove-approval-companies-issue-online-visa-1783730215"></link>
            <id>https://jvpnews.com/article/previous-gove-approval-companies-issue-online-visa-1783730215</id>
            <summary type="text">ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (10.07.2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>

கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a283aaf-8a54-471f-93c4-dd8f8b4cd777/26-6a5190290c258.webp' /></p><p>பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><p>
இதன்போது, ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய்வதற்காக தற்போதைய அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

குறித்த குழு தற்போது விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதன் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இதன்போது மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், தற்போதைய அரசாங்கம் குறித்த பரிவர்த்தனையை ரத்து செய்ய தீர்மானித்திருந்தாலும், மனுவை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

மேலும், தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இதனையடுத்து, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T00:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-riot-shocking-information-autopsy-1783721649"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-riot-shocking-information-autopsy-1783721649</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கலவரம் தொடர்பில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>
</p><p></p><p>பிரேதப் பரிசோதனையின் போது, சில அதிகாரிகளின் உடல்களில் கடுமையான தாக்குதலுக்கான அடையாளங்கள் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> உடலில் பலத்த காயங்கள், தாக்குதலால் ஏற்பட்டதாகக் கருதப்படும் காயத் தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மேலும், சில உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களில் கடுமையான உடல் துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டக்கூடிய காயங்கள் பதிவாகியுள்ளதாகவும், விசாரணைகளின் ஒரு பகுதியாக அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதேவேளை, கலவரத்தின் போது காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. </p><p>அதன்படி, குறைந்தது 14 கைதிகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணி, கலவரம் ஏற்பட்ட சூழ்நிலை, உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமான நிகழ்வுகள் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பிலான முழுமையா தகவல்களை இந்த காணொளி மூலம் காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-10T23:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ; அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466"></link>
            <id>https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466</id>
            <summary type="text">இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p><p>

நேற்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இது குறித்து தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6a5b8e-3458-48a7-b9d9-0c97f878d294/26-6a515a7373339.webp' /></p><p>

அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் (பென்ஷன்) பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.
</p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ. 2.1 மில்லியனை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31-ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p>

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டசபையில் செம்மணி விவகாரம் ; கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
செம்மணி போன்ற சம்பவங்களின் சாட்சியங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2c1fe0-24de-4866-bd1c-bad2f04178a2/26-6a5155347454a.webp' /></p><p>மேலும், தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் அச்சிடல் ; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111"></link>
            <id>https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 2017ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa5c9f5e-787d-442c-9bc7-1a86b45c4475/26-6a515140a3027.webp' /></p><p>இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.</p><p>

குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்த மன்று, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
</p><p>
இதன்போது, குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சிறைத்தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டது.
</p><p>
இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதைக் கருத்தில் கொண்டு, விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031</id>
            <summary type="text">கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 21,765.56 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb864a4-d93d-4d8b-be16-fdbbe42a62ec/26-6a514d08d3139.webp' /></p><p>மேலும், இன்றைய நாளாந்தப் புரள்வு 02 பில்லியன் ரூபாவாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:50:39+00:00</updated>
        </entry>
    </feed>
