<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-13T09:11:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவை கொண்டாட ATM அட்டை திருடிய 26 வயது யுவதி! இலங்கையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408"></link>
            <id>https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408</id>
            <summary type="text">&amp;nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவதி ஒருவர் அத்துருகிரியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் போது, குறித்த வர்த்தகரின் கட்டிட நிர்மாணப் பணித்தளத்தில் மேசனாகப் பணியாற்றிய அவரது காதலனின் திட்டம் மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdc9248-39d6-4ec6-81e8-9cb48b193c35/26-6a7d6791acbaa.webp' /></p><h2>வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவு</h2><p>

கொழும்புக்கு வரவிருந்த தனது காதலிக்கு ஒரு இரவு தங்குவதற்கு இடமளிக்குமாறு அந்த மேசன் வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>அதற்கு வர்த்தகர், "தான் வீட்டில் தனியாக வசிப்பதால், அந்த யுவதியுடன் அவரது தாயாரும் வந்தால் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து, மேசன் தனது மனைவியையும் மனைவியின் தாயாரையும் வர்த்தகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வர்த்தகரின் ATM அட்டைகளைத் திருட காதலிக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
மறுநாள் காலை, இருவரும் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு ATM அட்டைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி, குறித்த மேசனைச் சந்தித்துள்ளனர்.</p><p> பின்னர், அந்த ATM அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் 50,000 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, இருவரும் திருமணத்தைப் பதிவுசெய்து கொண்டு, வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவைக் கொண்டாடியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், வெலிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபரான மேசன், திறந்த பிடியாணை ஒன்றின் அடிப்படையில் வெலிகமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். </p><p>

அவரைக் கைதுசெய்த சந்தர்ப்பத்தில், அவரிடம் சட்டவிரோதப் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாத்தறை பகுதிக்குச் சென்ற யுவதி, திருடிய ATM அட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணத்தைப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தின் மூலம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் தங்க நகைகளையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அத்துருகிரியப் பொலிஸார், வங்கிக் கிளைகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகநபரான யுவதியை அடையாளம் கண்டு கைது செய்தனர். </p><p>

கைதான ஹம்பாந்தோட்டை, சிரிபுரப் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி ஒரு குழந்தையின் தாய் என கூறியுள்ள பொலிஸார் மீலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e37440d-d471-4e97-9462-b2d4a3b97901/26-6a7d89262458b.webp' /></p><p>
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
 சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கீட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் வேலைவாய்ப்பு ; ஏமாற்றிய இருவருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341"></link>
            <id>https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 சந்தேகநபர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b102a5-48d7-4814-bfe7-0361fc39c431/26-6a7d82a73c438.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் படலமா? பேக்கோ சமனின் தாய் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/f-revenge-murder-of-backhoe-saman-mother-1786608742"></link>
            <id>https://jvpnews.com/article/f-revenge-murder-of-backhoe-saman-mother-1786608742</id>
            <summary type="text">&amp;nbsp; பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற பேக்கோ சமனின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா பிரசங்கா என்ற பேக்கோ சமனின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரண்டேனியே சுத்தா குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea1fc2cf-70c9-4edf-832c-0811b8a68062/26-6a7d7c6829de0.webp' /></p><h2>இந்தோனேசியாவில் கெஹல்பத்ர பத்மேவுடன் பேக்கோ சமந் கைது</h2><p>
</p><p>
இந்தோனேசியாவில் கெஹல்பத்ர பத்மேவுடன் பேக்கோ சமந் கைது செய்யப்பட்ட பின்னர் , அவரும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
</p><p></p><p>கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் கொலைக்காகவும் பேக்கோ சமன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், மாத்தறையின் பொல்வத்த, தம்பஹால பகுதியில் இன்று காலை (13)ஊருபொக்க பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
நேற்று (12) மாலை சுமார் 6 மணியளவில், உலஹித்தியாவ, மித்தெனியவின் படலங்கல கெதர பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p></p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச் சூடு சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. 9 மி.மீ. ரக துப்பாக்கியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பில் துப்பாக்கிதாரிகள் சுமார் 7 முறை சுட்டபின்னர் துப்பாக்கிதாரிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேகொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமியம் லீற்றருக்கு பத்து ரூபாய்; புதிய திட்டம் அறிமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874"></link>
            <id>https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f425b4a1-1d07-4b64-9fc8-4130b0e7d02e/26-6a7d6d4b90313.webp' /></p><h2>15 கிராமங்களில் சோதனை முறை</h2><p> 

இந்நிலையில் அங்கு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் இருந்து ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> </p><p>

முதற்கட்டமாக, 15 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நாளாந்தம் சுமார் 500 லீற்றர் கோமியம் சேகரிக்கப்படுகிறது. 

இந்த கோமியத்தை பயன்படுத்தி, இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாய உரங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இந்த சோதனை வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என உபி அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T07:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணுக்குத் தொடர் தொல்லை; இளைஞர்கள் மீது தீவைப்பு; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015"></link>
            <id>https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015</id>
            <summary type="text">&amp;nbsp; புலத்சிங்ஹல&amp;nbsp; &amp;nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புலத்சிங்ஹல&nbsp; &nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், திருமணமான தம்பதியினர் உட்பட மூவர் புலத்சிங்ஹல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கடந்த 10-ஆம் தேதி இரவு நடந்த இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் புலத்சிங்ஹலவின் பஹல வெல்கம&nbsp; (Pahala Welgama) பகுதியைச் சேர்ந்தவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da40b13d-edb2-4f50-b45c-28e1bf112461/26-6a7d71c10869a.webp' /></p><h2>&nbsp;கணவருடன்&nbsp; சென்று கொண்டிருந்தபோது&nbsp;பெண்ணுக்குத் தொல்லை</h2><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதான தம்பதியினரும், அந்தப் பெண்ணின் 19 வயதுடைய சகோதரரும் அடங்குவர்.

காவல்துறை விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட தம்பதியினரில் உள்ள பெண் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். </p><p>

10-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கி கணவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்ட அந்த இரு இளைஞர்களும் அப்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர்.</p><p></p><p>

 இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த இளைஞர்களைக் கண்டித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் வந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அப்பகுதிவாசிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அந்த இளைஞர்கள் மீது வீசி தீ வைத்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் முதலில் ஹொரணை (Horana) ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
 இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சந்தேக நபர்களின் வீட்டைத் தாக்கிச் சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இன்னிலையில் சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்ஹல பொலிஸர மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T07:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழுச் சூரிய கிரகணம் ; பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206"></link>
            <id>https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. </p><p>இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.



இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d1645f8-3419-487d-8371-87af5e5d1432/26-6a7d4f57da715.webp' /></p><h2>அரிய வானியல் நிகழ்வைக் காண குவிந்த&nbsp; கோடிக்கணக்கான மக்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>


கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.
</p><p>


சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.



ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.</p><p></p><p>
</p><p>


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.
</p><p>


பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.</p><p></p><p>



மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்வையிட்டுள்ளனர்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T06:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chaminda-kularatne-appears-bribery-or-corruption-1786602249"></link>
            <id>https://jvpnews.com/article/chaminda-kularatne-appears-bribery-or-corruption-1786602249</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8470eb04-af22-49d9-b473-b029b5d56379/26-6a7d630b3c1c4.webp' /></p><p><br></p><p> </p><p>

பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-grants-duty-exemption-sri-lankan-products-1786601677"></link>
            <id>https://jvpnews.com/article/india-grants-duty-exemption-sri-lankan-products-1786601677</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது என தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது என தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். </p><p>


 இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c13281d-ff12-4606-9e7d-1ff14bc9a490/26-6a7d61033696d.webp' /></p><p> </p><p>


வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது.
</p><p>


இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p> 



இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது.இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது.</p><p>



இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம். </p><p>

மேலும் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறதாகவும் லங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T06:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய மீனவர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-mannar-1786600652"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-mannar-1786600652</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் மற்றும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் மற்றும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். </p><p>

நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54575530-2693-4397-9e21-3c2bf1c9a6ba/26-6a7d5cce5faf8.webp' /></p><p> </p><h2>கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலம்</h2><p>

 இந்திய மீனவர்கள் , சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 'அடிமடி வலை' (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><p> 

இதன்படி, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.</p><p> 

மேலும், மன்னார் தீவு மற்றும் ஆதாம் பாலத்தை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் தொகுதி சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலமாகக் கருதப்படுவதுடன், இந்தப் பகுதி சிறப்பு மீன்பிடி முகாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பேணப்பட்டு வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T05:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130"></link>
            <id>https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு
ள்ளது.
</p><p>
ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb2a695-5e38-4d5f-9ea2-9d58241afec2/26-6a7d4b23a383b.webp' />]</p><p> </p><h2>18 வயதுடைய இலங்கை இளைஞர்&nbsp;&nbsp;கைது</h2><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p> </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்திகள்&nbsp; மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T05:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கொடியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-selva-sannithi-murugan-temple-festival-1786599668"></link>
            <id>https://jvpnews.com/article/2026-selva-sannithi-murugan-temple-festival-1786599668</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13) அதிகாலை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13) அதிகாலை பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் நடைபெற்ற விசேட பூசைகளுடன் 12.20 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p> 

இன்று அதிகாலை பக்தர்கள் புடைச்சூழ சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9acea679-73d5-4f79-86da-8070878a3bfe/26-6a7d58f6678bd.webp' /></p><h2>வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும்&nbsp;பரவசம்</h2><p>

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9da626-9875-4032-a877-d9a3e8f79254/26-6a7d58f7ce9f4.webp' /></p><p> </p><p>

வள்ளிக்கொடியை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர். 

யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் ஒன்றான செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற இக்கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92c23f4b-0c88-44d0-956e-77f347ed9285/26-6a7d58f72030c.webp' /></p><p> </p><p>

 

 தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் வருடாந்த மஹோற்சவம் இடம்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca1b9b3-f1cf-4790-95db-1dc6b3d489b3/26-6a7d58f886b9a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T05:38:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eric-meyer-the-new-us-ambassador-to-sri-lanka-1786597530"></link>
            <id>https://jvpnews.com/article/eric-meyer-the-new-us-ambassador-to-sri-lanka-1786597530</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். 

அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.</p><p> 

அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba55bb2f-478e-4cd8-9b4e-0ea01039486d/26-6a7d509c0b13e.webp' /></p><p> </p><p>

எரிக் மேயர் (Eric Meyer)&nbsp; , தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாவார். 

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார்.</p><p></p><p> 

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை&nbsp;(Eric Meyer)&nbsp; வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் (Eric Meyer)&nbsp; பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:03:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512"></link>
            <id>https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்துள்ளார்.</p><p>

சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48245d22-059d-4bb6-ad58-e69d14ab8de9/26-6a7d4ca238506.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:46:11+00:00</updated>
        </entry>
    </feed>
