<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-21T21:52:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல ரெப் பாடகர் கைது ; தமிழக முதல்வர் விஜய் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163"></link>
            <id>https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
</p><p>
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45489ec1-a3ed-40ba-b2ec-a69e84f6a7a8/26-6a5fa2928c6a0.webp' /></p><h2>கடும் கண்டனம்</h2><p>

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.</p><p>
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே&nbsp; சந்திப்பு நடைபெற்றது.</p><p></p><p> </p><p>நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>ரெப் பாடகர் "அறிவு" கைது செய்யப்பட்டமைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனின் உயிரை பறித்த விபத்து ; பேருந்து சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-driver-arrested-after-fatal-crash-1784668206"></link>
            <id>https://jvpnews.com/article/bus-driver-arrested-after-fatal-crash-1784668206</id>
            <summary type="text">ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்றுமுன் தினம் (20) காலை புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்றுமுன் தினம் (20) காலை புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் உரியாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fa3df52-1449-4036-8a00-c6ad5bcf2307/26-6a5fe03033945.webp' /></p><p style="text-align: justify; "> 

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில்&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T21:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கடைக்குள் சோதனை ; போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inspection-carried-out-at-local-shop-1784667021"></link>
            <id>https://jvpnews.com/article/inspection-carried-out-at-local-shop-1784667021</id>
            <summary type="text">இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த 'மூக்குத்தூள்' எனப்படும் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தீகாயு நிறுவனமும், கல்முனை பொலிஸாரும் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடையொன்றும் வீடொன்றும் சோதனையிடப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f5581a-bdf6-49bb-88d2-9f1ccb0bd228/26-6a5fdb8f46f16.webp' /></p><p style="text-align: justify;"> இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பது (30) கிலோகிராமிற்கும் அதிகமான 'மூக்குத்தூள்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுச் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-21T21:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-for-visitors-to-children-s-hospital-1784665461"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-for-visitors-to-children-s-hospital-1784665461</id>
            <summary type="text">தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் கடுமையான நெரிசலுக்கு மத்தியிலும் சிறுவர்களுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்குப் பெற்றோர்களினதும் பாதுகாவலர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளதாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df74ef7-f79b-4079-a96b-8a01827f3b9f/26-6a5fd576c23f3.webp' /></p><h2>பூரண ஒத்துழைப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, சிகிச்சைகள் அல்லது கிளினிக் விஜயங்களுக்காக (Clinic Visits) சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் 5 ஆவணங்களையும் கட்டாயமாக எடுத்து வருமாறு பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>தனிப்பட்ட சுகாதார இலக்கம் அல்லது பார்ஃகோட் அட்டை</p><p>சிறுவர் சுகாதார வளர்ச்சிப் பதிவுப் புத்தகம் / நிறை பதிவுப் புத்தகம்&nbsp;</p><p>மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பற்றிய விபரங்கள்&nbsp;</p><p>கிளினிக் புத்தகங்கள்&nbsp;</p><p>வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் அல்லது நோயறிதல் அட்டைகள்&nbsp;</p><p>

பொதுமக்கள் இது தொடர்பில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, மேலதிக விபரங்கள் ஏதேனும் தேவைப்படின் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அலுவலகத்தின் 011 2693711 ( நீடிப்பு 307) என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-bank-unveils-dairy-farmer-1784663871"></link>
            <id>https://jvpnews.com/article/world-bank-unveils-dairy-farmer-1784663871</id>
            <summary type="text">டித்வா&#039; அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டித்வா' அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75d31b8-625f-4abf-9b38-0f5ecc3effae/26-6a5fcf4154dd1.webp' /></p><h2 style="text-align: justify; ">பால் உற்பத்தி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் கட்டப் பணிகளும் வெற்றி கரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை கள அளவில் விரைவாகச் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

விலங்கு தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரம், உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துதல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்துவதும், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T19:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை ; அதிகரிக்கும் டெங்கு அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-56-1784662176"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-56-1784662176</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 77,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332d19a6-d917-4704-99ab-b3fd4d005708/26-6a5fc8a224676.webp' /></p><h2>ஆபத்து நிறைந்த வலயங்கள்</h2><p>
நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் உள்ள 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிக ஆபத்து நிறைந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
மாதாந்த நிலவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் 21,650 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>

தற்போது நோயாளர் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
மாகாண ரீதியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.
இது மொத்த நோயாளிகளில் 52.67% ஆகும். </p><p>அந்த மாகாணத்தில் இந்த வருடத்தில் 40,573 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், தென் மாகாணத்தில் 11,867 நோயாளர்களும் (15.41%), மத்திய மாகாணத்தில் 6,492 நோயாளர்களும் (8.43%) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-arrest-former-state-minister-s-son-1784656858"></link>
            <id>https://jvpnews.com/article/police-arrest-former-state-minister-s-son-1784656858</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். 


இரண்டு கோடி ரூபாவை கொள்ளையடித்த விவகாரத்தில் இவர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">


இரண்டு கோடி ரூபாவை கொள்ளையடித்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec056e85-0f51-4bb6-a9b6-1d550adc7d1e/26-6a5fb3db8f108.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடையவர் ஆவர். </p><p style="text-align: justify; ">இவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி லூசன் சூரியபண்டாரவின் பணிப்புரையின் பேரில், கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T18:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தப்பிச்சென்ற லொறி சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-claims-woman-s-life-1784655677"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-claims-woman-s-life-1784655677</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று, முன்னால் சென்ற மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் வீதியில் நில்பானாகொட பகுதியில் மினுவாங்கொடையில் இருந்து திவுலப்பிட்டிய நோக்கிப் பயணித்த கொள்கலன் லொறி ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>

இவ்விபத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் பலத்த காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dedec7f-2bbc-4102-9833-062156d0c72d/26-6a5faf3f0be0c.webp' /></p><p>

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற கொள்கலன் லொறி மற்றும் அதன் ஓட்டுநர் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

இச்சம்பவங்கள் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T18:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று வாரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nalinda-warns-of-three-week-challenge-1784654647"></link>
            <id>https://jvpnews.com/article/nalinda-warns-of-three-week-challenge-1784654647</id>
            <summary type="text">அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

தற்போது டெங்கு நோய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்நிலைமை ஆபத்தான மட்டத்திலேயே இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce294c00-0055-49ff-9dcd-39849ede41c7/26-6a5fab3919269.webp' /></p><h2 style="text-align: justify; ">நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; ">

 

3 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">

 

"டெங்கு என்பது ஒரே நாளில் அனைவரும் வீதியில் இறங்கித் தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. நிலவும் மழைக்கால சூழ்நிலையால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; "> வீடுகளில் நாம் கவனிக்காத இடங்களில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம். 

 

அதனால், சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். </p><p style="text-align: justify; ">கொழும்பு மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் நோயாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், விழிப்புணர்வை கைவிடக் கூடாது.</p><p style="text-align: justify; ">அடுத்த 3 வாரங்களுக்கு இந்த அபாயம் நீடிப்பதால், பகுதிகளைச் சுத்தம் செய்து, சுகாதார பரிசோதகர்களின் (PHI / MOH) உதவியுடன் புகையூட்டல் (Fogging) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T17:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்து ; தொழில் பிரதி அமைச்சரின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-order-issued-following-homagama-fire-1784653253"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-order-issued-following-homagama-fire-1784653253</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (21) காலை சுமார் 9:45 மணியளவில் குறித்த மூன்று மாடி தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15b3a79-8b90-49dc-9040-5f106bd032da/26-6a5fa5c687ab7.webp' /></p><h2 style="text-align: justify; ">துரித விசாரணை</h2><p style="text-align: justify; "> 

 

80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தபோது பரவிய இந்தத் தீயில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

 

தீ மிகவேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

 

இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள், தொழிலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விபத்துக்கான பின்னணி குறித்து துரித விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T17:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் பேருந்து நிலையங்களைச் சூழவுள்ள கடைகளில் அதிரடி சோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nationwide-raids-at-shops-around-bus-stations-1784650805"></link>
            <id>https://jvpnews.com/article/nationwide-raids-at-shops-around-bus-stations-1784650805</id>
            <summary type="text">நுகர்வோர் விவகார ஆணையம் , நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய நீண்ட தூர பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நுகர்வோர் விவகார ஆணையம் , நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய நீண்ட தூர பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளைக் குறிவைத்து 112 சிறப்பு அவசர சோதனைகளை நடத்தியது.
</p><p style="text-align: justify;">
பொதுமக்களும் பயணிகளும் தொடர்ந்து கூடும் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் நிகழும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று நுகர்வோர் விவகார ஆணையம் கூறியது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a956e922-915e-4502-9547-e3b2e44d065f/26-6a5f9c3759877.webp' /></p><h2 style="text-align: justify;">சிறப்புச் சோதனை</h2><p>
</p><p style="text-align: justify;">
உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கரி பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தத் தவறுதல், பொட்டலமிடப்பட்ட பொருட்களில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களைக் குறிப்பிடத் தவறுதல், மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டன என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தக் குற்றங்களைச் செய்த வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மீது நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை வழங்கும் வியாபாரிகள் மீது, அவர்களின் தகுதி பேதமின்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், எதிர்காலத்திலும் நாடு முழுவதும் இதுபோன்ற சிறப்புச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

இதுபோன்ற நியாயமற்ற வர்த்தக முறைகேடுகள் குறித்த தகவல்களை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் தொடர்பு இலக்கம் 1977 வழியாக, அலுவலக நேரங்களில் புகார் பிரிவிடம் வழங்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T16:20:16+00:00</updated>
        </entry>
    </feed>
