<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-20T14:29:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425"></link>
            <id>https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425</id>
            <summary type="text">மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&amp;nbsp;இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று (20) திறக்கப்பட்டதாக கடைமை நேர பொறியியலாளர் திசர பண்டார தெரிவித்தார்.</p><p>திறக்கப்பட்டுள்ள 05 வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 21,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.</p><p>மழை மேலும் தீவிரமடைந்தால் அனைத்துக் கதவுகளையும் திறக்க வேண்டி வரலாம் என்பதால், பொல்கொல்ல அணைக்குக் கீழ் பகுதியில் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911</id>
            <summary type="text">நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யும்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;</p><p>இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தற்போது எரிபொருள் விலையானது ஏற்கனவே உயர்வான மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.&nbsp;</p><p>பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.&nbsp;</p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.&nbsp;</p><p>எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.&nbsp;</p><p>அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்.&nbsp;</p><p>ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.&nbsp;</p><p>அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p>ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தில் நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657"></link>
            <id>https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657</id>
            <summary type="text">எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p>அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581"></link>
            <id>https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.</p><p>இதன் தொடர்ச்சியாக, ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்ப்பாணம்&nbsp; நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.</p><p>இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் கைதான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849"></link>
            <id>https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடவுச்சீட்டுகள் மற்றும் நாணயத்தாள்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்க்கப் பயன்படும் ஒரு போலி இயந்திரம் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவையும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.</p><h2>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபா</h2><p>தூதரகம் ஒன்றின் ஊடாக விசா பெறுவதற்கு ஒருவருக்கு உதவுவதற்காக, கடுவெலவின் இஹல பொமிரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தின் பிரிவுசார் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இத்தகவலின் அடிப்படையில், நவகமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பரிசோதகர் சுசந்த ஜயநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், நவகமுவ பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p>விசாரணையின்போது, ​​தான் சுமார் ஐந்து ஆண்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அதன் பின்னர் அவர் பத்தரமுல்லையில் உள்ள ஆட்சேர்ப்பு முகமை ஒன்றில் பணியாற்றியதாகவும், அங்கிருந்தே இந்தக் கடவுச்சீட்டுகளைப் பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.</p><p>விசாரணைகளின்படி, சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருப்பதாகத் தூதரகங்களுக்குத் தோற்றமளிக்கும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்களை நீராவி மூலம் அகற்றி, அவற்றை புதிய கடவுச்சீட்டுகளில் கவனமாக ஒட்டியதாகச் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபாயை அறவிட்டதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்கள் அகற்றப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், 70 வயதான இந்தச் சந்தேக நபர் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T12:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் மரண தண்டனை; அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி தீபமேந்தி பிரார்த்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sentence-in-saudi-candlelight-prayer-urging-anojan-1789906482"></link>
            <id>https://jvpnews.com/article/sentence-in-saudi-candlelight-prayer-urging-anojan-1789906482</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>&nbsp;நிகழ்வில்,&nbsp; ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.</p><p>அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T12:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சட்டசபை; பல்டி அடித்த விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p><p>அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என நினைத்த அவர்கள் விஜய் சேதுபதி முகம் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.</p><p>விஜய் சேதுபதி திமுகவின் ஆதரவாளர் கடந்த திமுக ஆட்சியில் அவர் எதுவுமே வாய்ஸ் பேசவில்லை ஆனால் தற்போது பேசுகிறார் என அவர்கள் கருத்து தெரிவித்தனர் .</p><p>சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்.</p><p>இந்நிலையில், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி ‘நான் பேசும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. வெளியில் இருக்கும் ஒரு தனி நபரையோ, அல்லது அமைப்பையோ சாராது.</p><p>நான் சொல்லாமலே இது மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன்.&nbsp; ஆனால் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050"></link>
            <id>https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050</id>
            <summary type="text">கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அனர்த்த முகாமைத்துவ நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும்; நடிகை ஸ்ருதி ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273"></link>
            <id>https://jvpnews.com/article/men-should-menstruate-shruti-haasan-pray-1789899273</id>
            <summary type="text">ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&amp;nbsp; கூறியுள்ளார்.தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன்&nbsp; கூறியுள்ளார்.</p><p>தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome) பாதிப்பு இருப்பதால், மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியை அனுபவித்து வருவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;Podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான சிரமங்கள் மற்றும் அதற்கான பணிச்சூழல் ஆதரவு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டால், அதற்கான அதிகாரபூர்வ விடுமுறை நடைமுறைக்கு வந்திருக்கும் என தான் பலமுறை பிரார்த்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், “அப்படி நடந்திருந்தால், வேலை ஒப்பந்தத்திலேயே மாதவிடாய் விடுமுறை இடம்பெற்றிருக்கும்” என ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் கடும் மழை; முறிந்து விழுந்த பாரிய மரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-hill-massive-tree-collapses-kandy-1789896747</id>
            <summary type="text">மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358" target="_blank">மலையகத்தின் பல்வேறு</a> இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.</p><p>கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.</p><p>இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, பெத்தேகம, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.</p><p>மரம் முறிந்து விழுந்தபோது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்க்குழாயின் மீது விழுந்துள்ளதாகவும், இதனால் நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு பெருமளவில் நீர் கசிந்து வீதியில் பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.பன்விலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><div><br></div>]]></content>
            <updated>2026-09-20T09:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777"></link>
            <id>https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789893777</id>
            <summary type="text">செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு, இன்று (20) அதிகாலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p>இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காகக் குவைத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p>ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.</p><p>அவர்கள் குவைத் நகரிலிருந்து ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் அதிகாலை 3:10 மணிக்கு வந்தடைந்தனர்.</p><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தாயகம் திரும்பியவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிதியுதவியையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கியது</p>]]></content>
            <updated>2026-09-20T09:26:48+00:00</updated>
        </entry>
    </feed>
