<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-10T01:33:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374"></link>
            <id>https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&amp;nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.</p><p>இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8921cf8d-863d-4ff1-a4c6-c7623b50b217/26-6aa2066f81304.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f715f73-0930-4e69-8537-43678f3cbe5c/26-6aa2067034678.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5008c5b8-9f79-4098-b478-fb3cb6adaf86/26-6aa20670e03c0.webp' /></p><h3>துலாம்</h3><p>
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d5164d-290d-48ca-a0c3-7f2fcbc42858/26-6aa2067191fa7.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b762505-26de-46cc-982e-c67d392b6a6d/26-6aa2067244bb4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T01:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893"></link>
            <id>https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் &#039;எதெர திரிய&#039; (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p>

அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e115925-8c77-49c4-a082-7babe17075d7/26-6aa200a68356e.webp' /></p><p>இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும்.
</p><p>
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p>

வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084</id>
            <summary type="text">2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.
கொழும்பு, நீர்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.</p><p>
</p><p></p><p>கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3290c5ad-d692-4b2c-8bcd-933da5f58016/26-6aa1d28598308.webp' /></p><p>

அரசுத் தரப்பு 249 நாட்கள் சாட்சியங்களை முன்வைத்த நிலையில், பட்டியலிடப்பட்ட 2,309 சாட்சிகளில் 547 பேர் மட்டுமே நீதிமன்றில் சாட்சியமளித்தனர். </p><p>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்ததுடன், 584 பேர் காயமடைந்தனர். </p><p>24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702"></link>
            <id>https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702</id>
            <summary type="text">நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.</p><p> </p><p></p><p>இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ff2434-2248-4a75-a955-a8a4821f3d0d/26-6aa1cd202b1ce.webp' /></p><p>இந்த ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அக்குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. </p><p>இதனையடுத்து, தற்போது கப்பல்களில் அவசியமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:19:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234"></link>
            <id>https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a270f557-2a7c-44db-b5da-46f955d57e81/26-6aa18ccba912e.webp' /></p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">போலி இலக்கத் தகடுகள்&nbsp;</span></h3><p>ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29fe8e-6597-4c6c-aa55-19d2e3347706/26-6aa18ccc678f1.webp' /></p><p>கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T20:32:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803"></link>
            <id>https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803</id>
            <summary type="text">Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp;amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

கெமரா, செயல்திறன், மின்கல ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் இந்த புதிய கைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>புதிய ப்ரோ மாதிரிகளில் 2-நனோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எப்பளின் 'ஏ20 ப்ரோ' (A20 Pro) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் 7-கோர் ஜிபியு (GPU) ஆனது முந்தைய ஏ19 ப்ரோ சிப்பை விட 40 சதவீதம் வரை வேகமான செயல்திறனை வழங்கும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த புதிய மாதிரிகளில் கெமரா பிரிவில் மிகப்பெரிய மாற்றமாக, ஐபோனில் முதல்முறையாக 'மாறிவரும் துளை' (Variable Aperture) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 மெகாபிக்சல் பியூஷன் முதன்மைக் கெமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c949434-8866-47e5-9695-9bbc7271ed4c/26-6aa1b9fd66fe2.webp' /></p><p>ஒளியமைப்பு மற்றும் ஆழத்துக்கு ஏற்ப இந்த கெமரா தானாகவே துளை அளவை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது.</p><p> மேலும், படங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக 'எப்பள் ரெஃபரன்ஸ் இமேஜ்' (Apple Reference Image) என்ற புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் புதிய சிறிய அளவிலான டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) ஒரே நேரத்தில் மூன்று நேரடி செயற்பாடுகளை (Live Activities) காட்டும் திறன் கொண்டது.</p><p>

ஐஓஎஸ் 27 (iOS 27) இயங்குதளத்தில் இயங்கும் இதில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புரிந்து கொண்டு செயல்படும் புதிய 'சிறி ஏஐ' (Siri AI) வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><p>

மின்கல (Battery) வசதியைப் பொறுத்தவரை, ஐபோன் 18 ப்ரோ 36 மணி நேரமும், ப்ரோ மெக்ஸ் 45 மணி நேரமும் காணொளி பிளேபேக் வழங்கும். மேலும், வயர் மூலம் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்.</p><p>

கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இவற்றின் ஆரம்ப விலை அமெரிக்காவில் 1,199 டொலர்களில் தொடங்குகிறது.</p><p> செப்டம்பர் 12ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படவுள்ள இந்த கைபேசிகள், செப்டம்பர் 18ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T19:56:57+00:00</updated>
        </entry>
    </feed>
