<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T22:43:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணி புதைகுழியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/481-skeletal-remains-recovered-at-chemmani-site-1785882845"></link>
            <id>https://jvpnews.com/article/481-skeletal-remains-recovered-at-chemmani-site-1785882845</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4b1adb-5ddc-4d5f-9fa6-9c7309b16c28/26-6a7268df41154.webp' /></p><p> </p><p>

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>இக்காலகட்டத்தில் மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 481 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T22:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666</id>
            <summary type="text">&amp;nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அந்த மாணவியை கர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;">அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a993d927-4ff2-4c11-915f-69a0cffb3277/26-6a723d341c819.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்குப்பதிவு</h2><p>
</p><p style="text-align: justify;">

விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.</p><p style="text-align: justify;">சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T22:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drivers-arrested-over-illegal-sand-transport-1785880589"></link>
            <id>https://jvpnews.com/article/drivers-arrested-over-illegal-sand-transport-1785880589</id>
            <summary type="text">அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை வீதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் ரக வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை வீதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, கடந்த திங்கட்கிழமை (03) அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0b2ea13-c531-40b4-8dbc-a18f3b0b2f28/26-6a72600fe6cb5.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றிய அதிரடிப்படையினர், அவற்றைச் செலுத்தி வந்த இரண்டு சாரதிகளையும் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சாரதிகளையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T21:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுக்க அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-child-rights-law-framework-1785877297"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-child-rights-law-framework-1785877297</id>
            <summary type="text">நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12aa713-392b-4119-9a6b-5b06b182d9df/26-6a72533375a32.webp' /></p><h2 style="text-align: justify; ">அமைச்சரவை அனுமதி</h2><p style="text-align: justify; ">



இதற்காக 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியின் அடிப்படையில் சட்ட வரைவாளர் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">


மேலும், ஆரம்பத்தில் ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த சட்டமூலத்தின் பெயரை ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, கருத்தாக்கப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய விடயங்களையும் இணைத்து சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T21:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு ; அதிரடி கைதான இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-after-house-surrounded-by-police-1785875332"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-after-house-surrounded-by-police-1785875332</id>
            <summary type="text">சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை (3) மாலை குறித்த இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c83a4-e63a-4f45-98e0-248889282146/26-6a724b860eb8b.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
இதன்போதே, மருத்துவப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
மேலும் சந்தேக நபரிடம் சாய்ந்தமருது பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் ; கிடைக்கப்பெற்ற அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-plans-home-detention-for-inmates-1785874071"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-plans-home-detention-for-inmates-1785874071</id>
            <summary type="text">சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f12de89-37bc-4ec7-8ee6-e5efe655377f/26-6a7246990cf02.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட ஏற்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p style="text-align: justify; ">

தடுப்புக் காவலில் வைத்தல் அல்லது சிறைப்படுத்தல் போன்றவற்றுக்கு மாற்று வழிமுறையாக பொருத்தமான வழக்கு நடவடிக்கைகளில் சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக அப்போதைய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு செயன்முறையை சட்டவரைஞர் ஆரம்பித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">


அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் மீளாய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு 2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு மேலும் உட்சேர்க்கப்படவேண்டிய ஏற்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து இச்சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T20:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982"></link>
            <id>https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982</id>
            <summary type="text">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf6646c-5666-4c35-b961-992fdf2a492b/26-6a7236a001a94.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜூலை மாதத்தில் மொத்தம் 1,96,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது கடந்த 2025 -ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7% குறைவு ஆகும்.</p><p style="text-align: justify; ">

நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 44,547 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 26% ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன்படி, பிரித்தானியாவிலிருந்து 21,834 பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, கடந்த ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் மொத்தம் 13,43,418 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையுலகில் மற்றுமொரு சோகம் ; பிரபல வில்லன் நடிகர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.</p><p>


குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், பல வெற்றிப் படங்களில் தனது வலுவான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41881202-3342-41e3-b19e-deec82e0c9de/26-6a722eb9cac69.webp' /></p><p>

74 வயதான நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை நிலைமை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918"></link>
            <id>https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (04) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88495986-2271-41b0-b860-a7a13389fe1c/26-6a7222d7a7315.webp' /></p><p style="text-align: justify; ">மேலும், இந்த அனர்த்தங்களினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த அனர்த்தங்களால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு ; போராடி தப்பிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fff588-39c4-4e65-a33e-70872111ad69/26-6a721f22d2d07.webp' /></p><p>

 

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
</p><p>
 

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
</p><p>
 

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி பல மணி நேரத்தின் பின் விடுதலையான உதயநிதி ஸ்டாலின் ; வெளியில் வந்து கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487</id>
            <summary type="text">&amp;nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உதயநிதி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு திசை திருப்பியுள்ளது என கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8e1c3af-4b33-46ec-86b3-9a58664b7efb/26-6a721d40c5403.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்டனம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,</p><p style="text-align: justify; ">
திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.

நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை பரப்பி உள்ளனர். </p><p style="text-align: justify; ">திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். .

தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை.

எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது.&nbsp;</p><p style="text-align: justify; ">அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T17:11:32+00:00</updated>
        </entry>
    </feed>
