<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-31T15:35:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-defence-secretary-faces-death-penalty-1785510938"></link>
            <id>https://jvpnews.com/article/former-defence-secretary-faces-death-penalty-1785510938</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99bf49a-22ba-4c90-bac7-56f61f2f375a/26-6a6cbc1c0e3c3.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்&nbsp;</h2><p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;&nbsp;இவ்வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நீதிபதிகள் குழாத்தின் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் தமது பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். </p><p>
</p><p style="text-align: justify; ">பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதே குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T15:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கைதிகள் இடமாற்றம்; கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-drug-colombo-to-batticaloa-1785504594"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-drug-colombo-to-batticaloa-1785504594</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காகக் கொழும்பில் இருந்து வந்து உணவகத்தில் தங்கியிருந்த இருவர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காகக் கொழும்பில் இருந்து வந்து உணவகத்தில் தங்கியிருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மட்டக்களப்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் ஒருவர் குறித்த கைதியின் சகோதரர் என்பதோடு, மற்றையவர் அவரது நண்பராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7526034c-3f74-4d18-b14a-90ecc172236c/26-6a6ca354b0677.webp' /></p><h2>&nbsp;விமான நிலையத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர்&nbsp;</h2><p>
</p><p>


கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.5 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் வியாபாரியும் அடங்குவார்.</p><p></p><p>
</p><p>


மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்ட தனது சகோதரனைப் பார்ப்பதற்காக, அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து சென்று கல்லடிப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>


கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை (29) இரவு அந்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
</p><p>
 சோதனையின் போது அறையிலிருந்த இருவரிடமிருந்தும் 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>


கைது செய்யப்பட்ட கைதியின் சகோதரர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அண்மையில்தான் பிணையில் விடுதலையாகியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>



கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்; பெரும் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spain-sees-49-000-migrant-arrivals-in-24-hours-1785503691"></link>
            <id>https://jvpnews.com/article/spain-sees-49-000-migrant-arrivals-in-24-hours-1785503691</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c4b25ef-8b6f-4400-a6d3-14b8504bcc55/26-6a6c9fcc82af4.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது.</p><p></p><p> </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை முன்னறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/department-of-meteorology-special-weather-forecast-1785503984"></link>
            <id>https://jvpnews.com/article/department-of-meteorology-special-weather-forecast-1785503984</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e4eb00-80b2-4a0d-96d1-f5167b1fac34/26-6a6ca0f1c642a.webp' /></p><p> </p><p>

இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. </p><p>

மாத்தளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் புகையிரதத்தில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை; 5 லட்சம் அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-bottles-inflated-prices-train-5-lak-fine-1785493922"></link>
            <id>https://jvpnews.com/article/water-bottles-inflated-prices-train-5-lak-fine-1785493922</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாவை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தண்டப்பணமாக விதித்துள்ளது. </p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்டப் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1340eee3-25cc-40ad-beed-ff0750ab101d/26-6a6c79a39581f.webp' /></p><p>
</p><h2>விசேட திடீர் சோதனை</h2><p>
கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனையின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதிகபட்ச சில்லறை விலையாக ரூ. 120 எனக் குறிப்பிடப்பட்ட 1,000 மில்லி (1 லீட்டர்) குடிநீர் போத்தல் ஒன்று, புகையிரத்தில் ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
</p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 96 ஆம் இலக்க உத்தரவை மீறியதற்காகக் குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
புகையிரதங்களின் நடமாடும் சிற்றுண்டிச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகையிரத திணைக்களத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முறைப்படியாக அறிவித்துள்ளது.</p><p>

நுகர்வோர் சட்டங்களை மீறியதற்காக இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்னரும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

எதிர்காலத்திலும் குறித்த நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், மீண்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்து்ளளது.</p>]]></content>
            <updated>2026-07-31T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் ; பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752</id>
            <summary type="text">&amp;nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்து மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><p>&nbsp;பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb8df78-7a7b-42b9-bc33-bfbc8d9431bb/26-6a6c906981504.webp' /></p><h2>&nbsp;புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும்&nbsp; தாக்குதலைத் தடுக்கத் தவறியமை</h2><p>&nbsp;போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

2022 ஆம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:28:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் விவகாரம் ; பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகக் கடவத்தை பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞர், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கடவத்தை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea65810-b6fe-49fb-941d-d0cf899701f6/26-6a6c8dbe61978.webp' /></p><p>
</p><p>
தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும்&nbsp; மூவரை&nbsp; கடவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>&nbsp; சம்பவம் காதல் விவகாரம் தொடர்பான தகராறினால் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் இலங்கை பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-inflation-rose-to-7-3-percent-in-july-1785503188"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-inflation-rose-to-7-3-percent-in-july-1785503188</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாக காணப்பட்டது.
</p><p>
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்தது.

அது, 2026 ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d764f6f-b595-422a-ac05-c5460d373579/26-6a6c9dd5ddd3d.webp' />]</p><p>
</p><p>
அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 8.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

அதில் 2026 ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் சோகம்; மற்றுமொரு பழம்பெரும் பின்னணி பாடகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200</id>
            <summary type="text">&amp;nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218f6766-e949-4ee9-94be-43082b1cfa05/26-6a6c6731e253c.webp' /></p><p></p><h2>பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த ஜமுனா ராணி</h2><p>

நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p></p><p>
</p><p>
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-07-31T11:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528"></link>
            <id>https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528</id>
            <summary type="text">&amp;nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



அதன்படி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c1535d-03aa-48c3-b7b4-eaa794f9ff70/26-6a6c83d23fcab.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் ; நீதிமன்றத்திற்கு வந்தடைந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372"></link>
            <id>https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தனர்.</p><p></p><h3>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்&nbsp;</h3><p>

உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தபோதிலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்புக்காகவே வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57fa12a-cc60-4983-a9ad-acb6900a3008/26-6a6c8335a4793.webp' /></p><p>

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அறிவிக்கப்படவுள்ளது.</p><p>

குறித்த இருவருக்கும் எதிரான வழக்கின் விசாரணை அண்மையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972"></link>
            <id>https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972</id>
            <summary type="text">அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த ஆய்வு மையத்தின் நிறுவல், இலங்கையின் சைபர் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்த பின்னர் பதிலளிக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து விலகி, உளவுத்தகவல் அடிப்படையிலான முன்கூட்டிய அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.</p><p>

நாட்டில் டிஜிட்டல் அரச சேவைகளும் இணையவழி அரச தளங்களும் விரிவடைந்து வரும் நிலையில், 'பிஷிங்' தாக்குதல்கள், தரவுக் கசிவுகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு அமைப்புகளின் பலவீனங்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf04c8b-23f6-4cc4-bbe5-d57399831987/26-6a6c72060620e.webp' /></p><p>

தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) தற்போது மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், முன்கூட்டியே அச்சுறுத்தல்களை கண்டறிந்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் தனித்திறன் கொண்ட அமைப்பின் தேவை காரணமாகவே MATH Lab நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆய்வு மையம், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக Proactive Threat Hunting உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்கி, வலையமைப்புகளுக்குள் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை சேதம் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் திறனை வழங்கும்.</p><p>

மேலும், அரச நிறுவனங்களின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு சொத்துக்களை External Attack Surface Monitoring (EASM) தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு குறைபாடுகள், தவறான கட்டமைப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் நுழைவு வாயில்களை அடையாளம் காண்பதும் இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, தேசிய சைபர் அச்சுறுத்தல் உளவுத்தகவல் (Cyber Threat Intelligence – CTI) பகிர்வு அமைப்பின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, உரிய நேரத்தில் பகிர்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38cc5d83-7377-44a3-bdf0-9525ba2dd8ab/26-6a6c7206aeb70.webp' /></p><p>

அரச அமைப்புகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, உளவுத்தகவல் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் அச்சுறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தாக்குதலாளர்கள் அமைப்புகளுக்குள் நீண்டகாலம் நிலைத்திருப்பதைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான சைபர் தாக்குதல்கள் உருவாகுமுன் அவற்றை முறியடித்தல் ஆகியவை இந்த ஆய்வு மையத்தின் பிரதான நோக்கங்களாகும்.</p><p>MATH Lab, 250-க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒருங்கிணைந்த, உளவுத்தகவல் சார்ந்த தேசிய சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்கவுள்ளது.</p><p>

மேலும், மால்வேர் பகுப்பாய்வு மற்றும் சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் துறைகளில் உள்நாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், சிக்கலான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, இலங்கையின் சுயாதீன சைபர் திறன்களை வலுப்படுத்தும் என்றும் இலங்கை CERT தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், அரசின் டிஜிட்டல் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான நீண்டகால முதலீடாக இந்த ஆய்வு மையம் அமையும் எனவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசின் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை CERT குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T10:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571"></link>
            <id>https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p>

பிணை நிபந்தனைகளாக தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன. </p><p>எனினும், பிணை நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d94f28-4ca7-4878-93a9-8fd2eaf58e63/26-6a6c6c8d18919.webp' /></p><p>மேலும், வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகியோருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
</p><p>
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, "துர்கா" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதலாளர், கொழும்பு இராணுவத் தலைமையக நுழைவாயிலுக்கு அருகே தாக்குதல் நடத்தியிருந்தார். </p><p>இந்தத் தாக்குதலில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சார்ஜென்ட் ஒருவரும், மூன்று கொமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு மேலாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்குகளும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
</p><p>
பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தொடர்பான வழக்கில் பிணை மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660"></link>
            <id>https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை இராணுவத்தின் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார். </p><p> 

இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f54639b-71ee-462f-8472-b209b1a98e28/26-6a6c6ce6864bb.webp' /></p><p>
</p><p>
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.</p><p></p><p>
</p><p>
இப்பதவியை ஏற்கும் முன்னர் சிரேஷ்ட அதிகாரி பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தற்போதைய படைத் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:35:43+00:00</updated>
        </entry>
    </feed>
