<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-08T22:42:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775</id>
            <summary type="text">எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>பாபா வங்கா என அறியப்படும் வங்கேலியா குஷ்டெரோவா, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தொன்றில் பார்வையை இழந்ததாகவும், அதன் பின்னர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவருக்கு கிடைத்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனது கணிப்புகளை நேரடியாகவும் தெளிவாகவும் கூறாமல், உருவகங்கள் மற்றும் மறைமுகமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் பாபா வங்கா, தனது 30ஆவது வயதுக்குள் பெரும் புகழைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h3>

2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் 3 கணிப்புகள்
</h3><p>
பாபா வங்காவின் பெயரில் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்குள் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabadadb-204b-4797-bc56-48b626a8ea27/26-6a779ca184743.webp' /></p><p>

அவற்றில் முதலாவது, பூமிக்கு மிகப்பெரிய விண்கலம் ஒன்று வருகை தரும் என்ற கணிப்பாகும்.
</p><p>
இரண்டாவது, மூன்றாம் உலகப் போர் தொடங்கும் எனக் கூறப்படும் கணிப்பு.

மூன்றாவது, ரஷ்யாவின் அரசியல் தலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்ற கணிப்பு.
</p><p>
இந்த மூன்று சம்பவங்களும் 2026ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் என பாபா வங்கா கணித்ததாக பல்வேறு இணையதளங்களிலும் சமூக வலைத்தளப் பதிவுகளிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
உலகளவில் ஏற்பட்ட சில முக்கிய சம்பவங்களை பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அவரது கணிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், இந்தக் கணிப்புகள் அனைத்தும் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே தெளிவாகப் பதிவு செய்யப்பட்டவை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>
பாபா வங்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனது எதிர்காலக் கணிப்புகளை முறையாக எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வைத்துச் சென்றதாக உறுதியான தகவல்கள் இல்லை.</p><p>

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரைச் சந்தித்தவர்களிடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களே பின்னர் தொகுக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, காலப்போக்கில் அவரது பெயரில் பல்வேறு கணிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், சில கணிப்புகள் நிறைவேறாதபோது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
</p><h3>
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பரபரப்பு
</h3><p>
2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் இந்த கணிப்புகள் தொடர்பில் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக மூன்றாம் உலகப் போர் மற்றும் விண்கலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>எவ்வாறாயினும், பாபா வங்காவின் பெயரில் வெளியாகும் இந்தக் கணிப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னறிவிப்புகள் அல்ல என்பதுடன், அவை பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
</p><p>
எனவே, 2026ஆம் ஆண்டுக்குள் குறித்த சம்பவங்கள் இடம்பெறும் என்ற தகவல்களை உறுதியான செய்தியாகக் கருதாமல், சரிபார்க்கப்படாத கணிப்புகளாகவே அணுக வேண்டியது அவசியமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T21:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc66cc-e921-4cd4-a5b7-f1375a0b11a8/26-6a777be6ad408.webp' /></p><p>

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
</p><p>
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6091aafd-8258-4ce8-a034-1ddb0989c355/26-6a777ea074154.webp' /></p><p>
இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32065a2c-4a51-46a5-811e-338a9af58c93/26-6a77750b86760.webp' /></p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
</p><p>
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி ; கிண்ணத்தை தட்டிச் சென்ற கோல் கெலன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706"></link>
            <id>https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706</id>
            <summary type="text">2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14180e89-f72f-4290-9fde-ab5230060467/26-6a777013a0663.webp' /></p><p>

அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு கோல் கெலன்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். </p><p>இதன் காரணமாக அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.</p><p>

இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி முன்னேறியது.
</p><p>
அந்த அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
</p><p>
இதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.</p><p>

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்து LPL கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916"></link>
            <id>https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.</p><p>

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797d27d7-e053-4008-980e-c3f597c78e40/26-6a776a65d415e.webp' /></p><p>மேலும், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நாளை காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

அத்துடன், பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, 0113 - 66 81 19, 0113 - 66 80 26, 0113 - 66 80 32 மற்றும் 0113 - 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872</id>
            <summary type="text">பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான சன நெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h3>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்

</h3><p>உணவே மருந்து – மருந்தே உணவு’ என்ற ஆரோக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809137a5-7aac-4c9b-b8e6-4e380cc92735/26-6a776651da11f.webp' /></p><p>ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்திருந்தனர்.
</p><p>
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களும் பெருமளவில் விழாவில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா அண்மையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

விழா ஆரம்பமானதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் பெருமளவான மக்கள் றீச்ஷா வளாகத்தில் திரண்டிருந்தனர்.</p><p>
</p><h3>பாதுகாப்பு கருதி நிகழ்வுகள் இரத்து</h3><p>இந்நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் ஒரே நேரத்தில் விழா வளாகத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f9b857-0df1-4ece-a836-12e31db55bf7/26-6a7767a817793.webp' /></p><p>இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இன்று நடைபெற்று வந்த உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்பட்டதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என றீச்ஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
நுழைவுச்சீட்டுகளுக்காக செலுத்தப்பட்ட பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக முறையாக மீளச் செலுத்தப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா, எதிர்பாராத அளவிலான மக்கள் திரளால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848"></link>
            <id>https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848</id>
            <summary type="text">கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், &#039;கண்ணிவெடி ஆலோசனை குழுவின்&#039; (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8509dc-0430-4712-a65d-5b136b76afb4/26-6a776252666d7.webp' /></p><p>அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
</p><p>
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
</p><p>
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச்சடங்குக்கு வர மறுத்த 3 மகள்கள் ; வைரலாகும் சமூக வலைத்தள விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034"></link>
            <id>https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034</id>
            <summary type="text">மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்தவரின் மூன்று மகள்களும் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதாகவும், தந்தையின் இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள அவர்கள் மறுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தூரம் காரணமாக இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கிற்காக ரூ.5,100 பணத்தை இணையவழியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f420e3-be5a-4f75-8ad0-f9fa8596afe0/26-6a775f24004a4.webp' /></p><p>மேலும், தந்தையின் இறுதிச்சடங்கை அவர்கள் காணொளி அழைப்பு மூலம் பார்த்ததாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, இறுதிச்சடங்குக்குப் பின்னர் தந்தையின் அஸ்தியைக் கூட மகள்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மகள்களின் நடவடிக்கை குறித்து இணையவாசிகள் பலரும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
பெற்றோரின் இறுதி தருணங்களில் பிள்ளைகளின் பொறுப்பு என்ன என்பது தொடர்பிலும், தூரம் உள்ளிட்ட காரணங்களால் இறுதிச்சடங்கில் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
ஒரு பெற்றோரின் இறுதிச்சடங்கில் கூட பிள்ளைகள் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குடும்பத்தினரின் தரப்பு குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:54:12+00:00</updated>
        </entry>
    </feed>
