<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-29T14:35:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தை ;இருவேறு பெற்றோர்... டிவிஸ்ட் கொடுத்த DNA!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577"></link>
            <id>https://jvpnews.com/article/queensland-mum-biologically-unrelated-dna-twins-1788005577</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்காகத் தன்னார்வ மாற்றுத்தாயாகச் செயல்படச் சம்மதித்தார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் தம்பதியின் கரு, இவரின் கருப்பையில் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8389fc-c722-4020-9640-1012a400a156/26-6a92ccca9d257.webp' /></p><p>

எனினும், அதே காலப்பகுதியில் இவர், தனது கணவருடன் இயல்பான முறையிலும் கருத்தரித்துள்ளார்.</p><h2>குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள்</h2><p>

கரு மாற்றப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், அவர் இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது கண்டறியப்பட்டது.</p><p></p><p>

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில், பெண் குழந்தை மாற்றுத்தாய்மை கோரிய தம்பதிக்கும், ஆண் குழந்தை குறித்த பெண்ணுக்கும் (மாற்றுத்தாய்) மற்றும் அவரது கணவருக்கும் சொந்தமானது என்பது உறுதியானது.</p><p>

2025 ஆம் ஆண்டு நவம்பரில் இவ்விரு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. எவ்வித சிக்கல்களும் இன்றி, இரு தம்பதியினரும் தங்களின் உயிரியல் குழந்தைகளை ஏற்று வளர்த்து வருகின்றன.</p><p></p><p>

இதேவேளை, ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை வேறு வேறு பெற்றோரின் உரிமைகளின் கீழ் பிரிப்பதைத் தடுக்கும் வகையில் குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள் அமைந்துள்ளன. </p><p>இதனால் இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு குயின்ஸ்லாந்து சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரும் ஒரே கர்ப்ப காலத்தில் வளர்ந்த "கர்ப்பகால இரட்டையர்கள்" (Gestational Twins) மட்டுமே என்றும், தற்போதைய தனித்துவமான சூழலைக் கருத்திற் கொண்டு மாற்றுத்தாய்மைச் சட்டத்தின் கீழ் இவர்கள் "பிறப்பு உடன்பிறப்புகள்" (Birth Siblings) ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, சட்டப்பூர்வமாகப் பெற்றோர் உரிமைகளை அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்க வழிவகுத்தது.</p><p></p><p>
</p><p>
குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும் பட்சத்தில், அவர்களைப் பிரித்து வளர்ப்பது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சுயாதீன ஆலோசகரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

குழந்தைகள் வளரும்போது அவர்களின் பிறப்புக்குப் பின்னாலுள்ள உண்மைச் சூழலைத் தகுந்த வயதில் புரியவைக்கவும், இரு குடும்பங்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தீர்மானித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்புரவுக் கருவி மூலம் மனைவியை வேவு பார்த்த கணவனுக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318"></link>
            <id>https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318</id>
            <summary type="text">தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

 வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை மற்றும் கண்காணிப்பு காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தென்பட்டமை அவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4491a569-0ff4-4039-9502-7eacced884dc/26-6a92cfafc7e29.webp' /></p><h2>கணவருக்கு எதிராக தீர்ப்பு</h2><p>

இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த வீட்டில் இருந்த ரோபோ துப்புரவுக் கருவியை செயலி மூலம் தொலைதூரத்திலிருந்து இயக்கியுள்ளார்.</p><p>

அதிலிருந்த நேரலைக் காட்சி மூலம், தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த அவர், அந்தக் காட்சியை பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது மனைவி மற்றும் குறித்த ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணவர், 20 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாகக் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில், இருவரும் திருமண உறவின் எல்லையை மீறியதாக நீதிமன்றம் தீர்மானித்து, மனைவிக்கு 5 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
</p><p>
எனினும், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p>

சிவில் வழக்கில் அந்தக் காணொளி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தனியுரிமையை மீறி பதிவு செய்யப்பட்ட செயலை நியாயப்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சட்டவிரோதமாக தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 1.5 இலட்சம் தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட அல்லது நெருக்கமான நடவடிக்கைகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த ReeCha ; பிரபலம் பகிர்ந்த பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது.
</p><p>நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமாக ReeCha சுற்றுலாதலம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/056a2d3c-4ef0-4969-bd51-cd2ed7dacfb5/26-6a92c613a52bc.webp' /></p><h2>40 ஆண்டுகள் கழித்து ஆசை நிறைவேறியுள்ளது</h2><p>

இன்னிலையில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான B.H. அப்துல் ஹமீத் அவர்கள் ReeCha சென்ற நிலையில் தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,</p><p> 

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில்(Holland)ஒலிபரப்புத்துறைப் பயிற்சிக்காக சென்றிருந்த போது,The Hagueல் உள்ள-Madurodam-miniature parkல், உலக அதிசயங்கள், மற்றும் உலகப்புகழ்மிகு கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சின்னஞ்சிறு வடிவங்களில் அற்புதமாக படைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து வியந்தபோது, என்நெஞ்சில் ஒரு ஆசை எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f622484a-aaeb-488e-85bd-7129964a10dd/26-6a92c612e87a2.webp' /></p><p> </p><p>உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்று.</p><p> 
40 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
நேற்று யாழ் மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரன்(IBCபாஸ்கரன்)அவர்களது அன்பு அழைப்பினை ஏற்று, ‘இயக்கச்சி’யில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha”- இயற்கை வேளாண் கருத்துக்கருப் பூங்காவுக்குப் போயிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05da5c6-a479-45b3-9998-8f5a93bc5a17/26-6a92c61238e4e.webp' /></p><p> </p><p>
தரிசு நிலமாய்க் கடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன். </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும்,</p><p> தேச எல்லைகள் கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டுக் கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும், </p><p>குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். 
வெகு விரைவில் யாழ் மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென&nbsp; பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df705b5-6706-4077-82ed-fec065e9fa62/26-6a92d295e8810.webp' /></p><h2>26 வயதான குறித்த யுவதி</h2><p> </p><p>

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543"></link>
            <id>https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162ea02-bd30-472d-861a-a03e08f186d0/26-6a92dc48b149d.webp' /></p><p> </p><p>

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p> 

இது தவிர, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இருந்து யாழ் சென்ற லொறி; நெல் உமிக்குள் பிடிபட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408"></link>
            <id>https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். </p><p>

நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29900b72-f0c4-432f-a67d-02311ae79df8/26-6a92b899eb1fa.webp' /></p><p></p><p> </p><p>

இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534"></link>
            <id>https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4610db40-882b-4585-aa1a-05ff04d444cc/26-6a9299d81fc6d.webp' /></p><h2>தாக்குதல் நடத்தப்படும் அபாயம்</h2><p> 

 ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது.</p><p></p><p> 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். </p><p>

அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக&nbsp; &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவாரா... விஜயகாந் பிரேமலதா கமெண்ட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-become-pm-vijayakanth-premalatha-comment-1788001387"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-become-pm-vijayakanth-premalatha-comment-1788001387</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் , மக்களிடம் உள்ள செல்வாக்கு காரணமாக எதிர்காலத்தில் இந்திய பிரமராக வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் , மக்களிடம் உள்ள செல்வாக்கு காரணமாக எதிர்காலத்தில் இந்திய பிரமராக வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d8e72-f7e8-46a4-873c-290a79c3aef2/26-6a92bc6cba1e6.webp' /></p><h2>யாருக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது நடக்கும்</h2><p> ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, நம்பிக்கை இருக்கிறது, அடுத்த கட்டம் செல்வதற்கான உரிமை இருக்கிறது,&nbsp; அதுபற்றி எந்த ஒரு கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை&nbsp; ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு.. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ அது நடக்கும் என்பதே என் கருத்து’ எனக் கூறியிருக்கிறார்.</p><p></p><p>

நடிகராக இருந்த விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். </p><p> அவரின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது.</p><p></p><p>
</p><p>
 
தமிழகத்தில் மட்டுமல்லாமல் விஜய்க்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் மவுசு அதிகரித்து வருகிறது. அடிப்படையில் அவர் ஒரு நடிகர் என்பதால் ஒரு கவர்ச்சிகரமான ஒரு முதலமைச்சராகவே அவர் பார்க்கப்படுகிறார். </p><p>இதன் காரணமாக 2029 நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர்&nbsp; &nbsp;விஜய் முதல் பிரதமர் ஆவார் என பரவலாக பேசப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T11:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை பறிக்க சென்றவர் முதலைக்கு இரையானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-pluck-lotuses-fell-prey-to-a-crocodile-1788002375"></link>
            <id>https://jvpnews.com/article/man-pluck-lotuses-fell-prey-to-a-crocodile-1788002375</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெல்லன்வில ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பக்கவாட்டுக் கால்வாயில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபர் சடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெல்லன்வில ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பக்கவாட்டுக் கால்வாயில் தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 முதலை தாக்குதலுக்கு இலக்காகிக் ஹொரணை, கானன்வில பிரதேசத்தைச் சேர்ந்த மதுர ஜினேந்திரா என்பவரே உயிரிழந்தவராவார். </p><p>

கடந்த 27 ஆம் திகதி தாமரை மலர்களைப் பறிப்பதற்காகப் பெல்லன்வில ஏரியை ஒட்டிய கால்வாயில் இறங்கிய நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60514da-1207-4e85-9c33-bbf810fb05ed/26-6a92c048744f3.webp' /></p><h2>கால்வாய்ப் பகுதியில் சடலம்</h2><p>
</p><p>
இது தொடர்பாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், அன்றைய தினம் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், இன்று (29) பிற்பகல் சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாய்ப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகளால் தடயவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹரா; வீதிகளில் குவிந்த குப்பை; சீறும் சிங்கள இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kandy-esala-perahera-garbage-on-the-streets-1787996832"></link>
            <id>https://jvpnews.com/article/kandy-esala-perahera-garbage-on-the-streets-1787996832</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாரம்பரிய நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் &#039;தீர்த்தோற்சவம்&#039; வெள்ளிக்கிழமை (28) காலை கோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாரம்பரிய நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் 'தீர்த்தோற்சவம்' வெள்ளிக்கிழமை (28) காலை கோட்டம்பையிலுள்ள மகாவலி கங்கையில் முறைப்படி நடைபெற்றது.</p><p>

எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா வியாழக்கிழமை (27) கண்டி வீதிகளில் மிக விமரிசையாகப் பவனி வந்த நிலையில் எசல பெரஹரா நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீசிய குப்பைகள் வீதிகளில் குவிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e7adf1-9814-467e-a820-15257080f37d/26-6a92aaa1b9eaa.webp' /></p><h2>&nbsp;வீதிகளில் குவிந்துள்ள&nbsp;&nbsp;குப்பைகள்</h2><p>

மக்களின் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கை குறித்து சகோதர மொழி இளைஞன் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கடும் சீற்றத்தை பதிவிட்டுள்ளார்.</p><p>

நாம் புத்த பகவானை வழிபட வந்தோமா?

அல்லது கண்டி வீதிகளில் குப்பைகளை வீசவா? </p><p> 

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது என்னால் வெட்கித் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை.

இது ஸ்ரீ தலதா மாளிகையின் முன் நாம் செய்யும் 'பக்தி' அல்ல.

இது நமது 'பொறுப்பின்மை' மற்றும் 'மனிதாபிமானமின்மை'.</p><p></p><p>

2600 ஆண்டு கால வரலாறு கொண்ட, உலகம் முழுவதும் மதிக்கப்படும் தலதா மாளிகை.

அதன் முன், நாம் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக், பாட்டில்கள், மற்றும் உணவுக் கழிவுகளின் குவியல் உள்ளது.

நாம் மணிக்கணக்கில் வரிசையில் நின்றோம். நன்றியுணர்வுடன் திரும்பி வந்தோம்.

ஆனால், நாம் வந்தபோது நமக்கு நாமே என்ன செய்துகொண்டோம்?
</p><p>
பாட்டிலையும் உணவுக் கழிவுகளையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவ்வளவு கடினமா?

குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா?

அல்லது... 'இது நமது நாடு' என்று சொல்ல உங்களுக்குத் தோன்றவில்லையா?</p><p></p><p>
</p><p>
அடுத்த ஆண்டு, இது போன்றவர்களைக் கண்டிக்கு வர அனுமதிக்கும் எண்ணம் கூட வேண்டாம்.

நீங்கள் வர விரும்பினால், சுத்தமாக வந்து சுத்தமாக வீடு திரும்புங்கள்.

இன்றிலிருந்தே நாம் மாறுவோம்.

"நாங்கள் வழிபாடு சென்று, சாலைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பினோம்" என்று பதிவிடுவோம்.</p><p>ஒருவர் கூட வெட்கப்பட்டு மாறினால், அதுவும் ஒரு பெரும் புண்ணியமே.

ஏனென்றால் இது நமது தலதா மாளிகை.

இது நமது பாரம்பரியம். நாமே இதைப் பாதுகாக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T10:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ;பிரியாணி அண்டாவில் பெண் சடலம் ; வாலிபர் கைது... யுவதிக்கு வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-s-body-found-in-biryani-vessel-in-chennai-1787993785"></link>
            <id>https://jvpnews.com/article/woman-s-body-found-in-biryani-vessel-in-chennai-1787993785</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் , சந்தேக நபரான இளைஞர் மணிப்பூரில் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322" target="_blank">&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் </a>பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் , சந்தேக நபரான இளைஞர் மணிப்பூரில் கைது செய்யப்பட்ட நிலையில், யுவதி தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் ஒரு ரயிலில் ரத்தக்கரையுடன் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b7b977-f01f-4ed2-b4cd-748ccafb40ee/26-6a929ebb6116f.webp' /></p><h2>&nbsp;மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார் கைது</h2><p>அதிர்ச்சி அடைந்த&nbsp; பொலிஸார்&nbsp; சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
 
மேலும் அவர்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் தங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிரியாணி சமைக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு உடலோடு மாவு. காய்கறிகளை சேர்த்து அவர்கள் வேகவைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.</p><p></p><p>
</p><p>
விசாரணையில் அந்த இளம்பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த வாலிபரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த வீட்டில் அவருடன் தங்கியிருந்த ஹைதுல் நிஷா என்கிற பெண்ணை அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதோடு அவர்கள் இருவரும் ஒடிசாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, சென்னையில் இருந்து தனிப்பட்ட அங்கு சென்று அவர்களை தேடி வந்த நிலையில் அசாமை சேர்ந்த மாணிக் லஸ்கரை மணிப்பூரில் வைத்து தமிழக பொலிஸார்&nbsp; கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பெண்ணை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T09:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p></p><p> </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T09:01:15+00:00</updated>
        </entry>
    </feed>
