<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-03T11:41:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த குடும்பத் தகராறு ; மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-in-law-arrested-for-stabbing-father-law-death-1788434420"></link>
            <id>https://jvpnews.com/article/son-in-law-arrested-for-stabbing-father-law-death-1788434420</id>
            <summary type="text">கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



பாலுகடுமெட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று புதன்கிழமை (02) கிடைத்த தகவலையடுத்து, கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>



உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d331c15-98fd-416d-abe5-6877f83a1125/26-6a9957f59dd5c.webp' /></p><p>நேற்று இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபரான மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்க விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-increase-sharply-sri-lanka-single-day-1788433422"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-increase-sharply-sri-lanka-single-day-1788433422</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,&nbsp;இன்று அதன் விலை ரூ.377,000 ஆக குறைவடைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/750cc754-8219-4b78-97aa-033741b03405/26-6a99540fa1feb.webp' /></p><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006"></link>
            <id>https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. </p><p> 

அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70154aa3-f7a6-4162-8a08-684daa448886/26-6a994a9f9b348.webp' /></p><h2>பதில் சொல்கிறேன் ...&nbsp; யாரும் ஓடக்கூடாது</h2><p> 


இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p></p><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.</p><p> இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. 

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.</p><p></p><p>அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். </p><p>வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.</p><p>

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.</p><p></p><p>ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T10:55:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூர் நீர்க் கண்காட்சி; பலரது கவனத்தை ஈர்த்த விழிப்புணர்வு நாடகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-water-exhibition-play-nallur-festival-jaffna-1788432623"></link>
            <id>https://jvpnews.com/article/the-water-exhibition-play-nallur-festival-jaffna-1788432623</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் 02.03.2026 நல்லூர் நீர்க் கண்காட்சி மூன்றாவது முறையாக ஆரம்பமானது. </p><p>

குறித்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான் நீரே தான்" நாடக ஆற்றுகை பலரது கவனத்தையும் ஈர்த்தது. வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட நீர்வள அதிகாரிகள், நீர் ஆர்வலர்கள் குறித்த நாடகத்தை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ef7e3d-eb0f-49a6-85e3-a154edd641fd/26-6a9950f0d4fc5.webp' /></p><h2>கடல் நீர் உட் புகும் அபாயம்</h2><p> </p><p> 

பொதுக் கிணறுகளில் ஊரிலுள்ள குடும்பங்கள் தண்ணீரை பகிர்ந்து அளவாக பயன்படுத்திய காலம் போய், வீட்டுக்கொரு கிணறு மூலம் அளவாக வாளிகளில் தண்ணீரை அள்ளிய காலமும் கடந்து,</p><p></p><p> இன்று காணிகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து ஒவ்வொரு காணிக்கும் ஒரு குழாய்க்கிணறு அடித்து சமூகப் பொறுப்பின்றி நிலத்தடி நீரை வேண்டியளவுக்கு உறிஞ்சுவதால் கடல் நீர் உட் புகும் அபாயம்&nbsp; தொடர்பிலும், அதனூடாக வரும் விளைவுகளையும் தத்ரூபமாக குறித்த நாடகம் பதிவு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26503b25-9e25-4917-b8e8-e73611369d8a/26-6a9950f1976dc.webp' /></p><p> </p><p>

நாடகம் முடிவடைந்த பின் குறித்த நாடக உருவாக்கத்தினை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

குறித்த நீர்க் கண்காட்சியின் பாரம்பரிய ஊருணி அரங்கில் 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7 மணி முதல் பல்வேறு கலை நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17570c70-ebe6-4071-8902-ac6d5f48cf6d/26-6a9950f2581d2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு நீண்ட நாளாக போக்கு காட்டிய கொம்பனித்தெரு குடு நோனா கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479"></link>
            <id>https://jvpnews.com/article/kompannavidiya-kudu-nona-arrested-1788422479</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>


செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a398e9b4-27d3-4f22-91bb-5979248d4295/26-6a992950a9395.webp' /></p><h2>நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்த நோனா</h2><p>
</p><p>


கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொம்பன்னவீதி மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் முன்னர் வசித்து வந்த சந்தேகநபர், கடந்த காலத்திலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.</p><p>முன்னதாக, 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><p>



நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பிலும் கிரிபத்கொட பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சுட்டி உக்குங்’ என்பவரின் சிறிய தாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அவரது கணவரான ‘கூம்பிகெலே சுட்டி’, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:48:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788432083"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788432083</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான இவ்வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2de946-d585-49a4-a0ba-17f6e85767ea/26-6a994ed470b62.webp' /></p><p> 

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p> 

அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-animation-artist-passes-away-1788431395"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-animation-artist-passes-away-1788431395</id>
            <summary type="text">இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார்.</p><p> </p><p></p><p>அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6c9dcd-6953-4fe7-b79b-a43decfc72db/26-6a994c24b770a.webp' /></p><p>அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதுடன், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். </p><p>

அனிமேஷன் துறையில் அவரது முன்னோடிப் பணி இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்கொட்டை சிக்கி 7 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-dies-after-getting-tamarind-pulp-stuck-throat-1788430437"></link>
            <id>https://jvpnews.com/article/girl-dies-after-getting-tamarind-pulp-stuck-throat-1788430437</id>
            <summary type="text">கண்டி கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான சனுதி லக்ஷானி என்ற 07 வயதுடைய சிறுமியாவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dae5bfd-eb63-4e2e-b6c6-044d4674c5f9/26-6a994a0b31f4d.webp' /></p><p>நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த சிறிதளவு புளியம்பழத்தை எடுத்து உண்ண சிறுமி முயற்சித்துள்ளார். </p><p>

இதன்போது புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் குறித்து அறிந்ததும், வீட்டில் இருந்த தாய் உட்பட உறவினர்கள் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் லொறி ஒன்றின் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p>

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நோக்கி இந்திய கப்பல் ஏற்றுமதி அதிரடி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788429430"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788429430</id>
            <summary type="text">இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><p> 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. </p><p>

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் அதிக மதிப்புள்ள கடல்சார் சொத்துக்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee95c17-8be1-46ac-94c0-c02f2a375e9f/26-6a994477de313.webp' /></p><p>இந்தியாவின் வழக்கமான ஏற்றுமதி இலக்குகளில் இலங்கை மிகக் கூர்மையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. </p><p>

இதன்படி, இலங்கைகான கப்பல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. </p><p>

எகிப்து, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மொசாம்பிக் மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகளில் புதிய கப்பல் ஏற்றுமதி இலக்குகள் உருவாகி வருவதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் கப்பல்கள் பரந்த சர்வதேச சந்தையைப் பெற்று வருகின்றன. </p><p>

இந்த மாற்றம் இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் விரிவான இருப்பை நிறுவத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.</p><p>இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளில் இலங்கையின் அமைவிடம் மற்றும் இந்தியாவுடனான அதன் நீண்டகால கடல்சார் தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளும்போது, இலங்கைக்கு இந்தப் போக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India’s tanker exports are reaching a wider set of markets across Asia, Africa and the Indian Ocean region.<br><br>The emergence of new destinations, along with higher shipments to Sri Lanka, reflects the growing acceptance of Indian-built tankers across diverse maritime markets.… <a href="https://t.co/vLHLhyNz36">pic.twitter.com/vLHLhyNz36</a></p>&mdash; Dept of Commerce, GoI (@DoC_GoI) <a href="https://x.com/DoC_GoI/status/2095400539756638518?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த வர்த்தக உறவுகளின் பலப்படுத்தலுக்கு மத்தியிலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இருதரப்பு சுதந்திர வர்த்தக கட்டமைப்பின் கீழ் விரிவடையும் வர்த்தகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கைகான இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக அந்தத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கை ஒரு அருகிலுள்ள ஏற்றுமதி சந்தையாகவும் மூலோபாய கடல்சார் அமைவிடமாகவும் திகழ்கிறது. </p><p>

அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியக் கப்பல் கட்டுபவர்களுடனான வலுவான தொடர்புகள் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைக்கான வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பெண்ணை தகாத உறவுக்கு அழைத்து கடிதம் அனுப்பிய மூன்று இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945"></link>
            <id>https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945</id>
            <summary type="text">&amp;nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937d4b6a-2662-4668-946a-4ff5f3754254/26-6a993ac2c32f6.webp' /></p><h2>&nbsp;தகாத உறவுக்கு அழைத்து கடிதம்</h2><p>
</p><p>
தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாலியல் அழைப்புக் குறிப்புகளைப் பெண்ணின் அறைக்கதவின் கீழ் திணித்துள்ளனர்.</p><p></p><p>

பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
மேலும் கைதான சந்தேகநபர்கள் மூவரும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூண்டை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எவையென உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-you-know-what-benefits-eating-garlic-at-night-1788426771"></link>
            <id>https://jvpnews.com/article/do-you-know-what-benefits-eating-garlic-at-night-1788426771</id>
            <summary type="text">சமையலில் சுவைக்காக மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பூண்டை உணவில் சேர்த்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமையலில் சுவைக்காக மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்ட சில உடல்நல அம்சங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d59798a7-36ef-42df-9492-b191db388fad/26-6a993a14f3af8.webp' /></p><p>பூண்டில் பல்வேறு இயற்கை சேர்மங்கள் காணப்படுகின்றன. அவை உடலின் இயற்கையான செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடும். குறிப்பாக பூண்டை நசைக்கும்போது உருவாகும் ‘அல்லிசின்’ (Allicin) என்ற சேர்மம், பூண்டின் முக்கிய உயிரியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.</p><p>

எனவே, பூண்டை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு ஏற்படும் மருத்துவ குணங்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ea08f4-ef78-4105-8498-9c9ab2163df6/26-6a993a15a98a2.webp' /></p><h4>செரிமானத்திற்கு உதவும்
</h4><p>இரவு உணவுக்குப் பிறகு அளவோடு பூண்டு எடுத்துக்கொள்வது செரிமானத்திற்கு உதவக்கூடும். பூண்டில் உள்ள சில சேர்மங்கள் செரிமானச் சாறுகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201763e5-b987-41d8-b66b-f83aa041779c/26-6a993b6377e0e.webp' /></p><h4>நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு
</h4><p>பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் பிற சேர்மங்கள் நுண்ணுயிர்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இதனால் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கு பூண்டு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98f3dba-66e5-44e0-90c4-d26d17c4b272/26-6a993b64423df.webp' /></p><h4>இதய ஆரோக்கியம்
</h4><p>பூண்டை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவு போன்ற சில இதயநலக் காரணிகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது எந்தவொரு மருத்துவ சிகிச்சைக்கும் மாற்றாக கருதப்படக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89257d9f-632b-4fab-b811-1e73d8a1dcae/26-6a993b65009ae.webp' /></p><h4>வீக்கத்தை குறைக்க உதவுமா?
</h4><p>பூண்டில் உள்ள சில ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b2cc124-58ed-4269-873a-c81499501ea6/26-6a993b65ad1dd.webp' /></p><h4>எடை குறைப்புக்கு உதவுமா?
</h4><p>பூண்டு மட்டும் உடல் எடையை குறைத்துவிடும் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. ஆனால் சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் பூண்டை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d349af0-2667-486d-8d4d-162316bd1e38/26-6a993b6679ce2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T09:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கான்ஸ்டபிள் பதவிக்கு பரிசோதனை; இளம் பெண்ணிடம் அத்துமீறிய பொலிஸ் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-sergeant-sexually-assaulted-a-woman-1788425955"></link>
            <id>https://jvpnews.com/article/police-sergeant-sexually-assaulted-a-woman-1788425955</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த இளம்பெண் எதிர்வரும் 9ஆம் திகதி மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ed8853-0b3c-4658-af06-372d9e010603/26-6a9936e495c78.webp' /></p><h2>அந்தரங்கப் பகுதியில்&nbsp; &nbsp;தழும்புகள்</h2><p> </p><p>

இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் திகதி சிவில் உடையில் அவரது வீட்டுக்குச் சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி, மருத்துவப் பரிசோதனைக்கு முன்னர் அவரது அந்தரங்கப் பகுதியில் உள்ள தழும்புகள் தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும் எனக் கூறியதாகவும், அந்த அறிக்கை இல்லையெனில் வேலை கிடைக்காது என அச்சுறுத்தியதாகவும் பொலிஸில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க அறையில் அமர்ந்த பின்னர், யுவதியின் அந்தரங்கப் பகுதியைத் தொட்டதால் அதிர்ச்சியடைத்த யுவதி , கையைத் தட்டிவிட்டு ஓடிச்சென்று தனது தாயிடம் சம்பவத்தைத் தெரிவித்ததாகவும் இளம்பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சம்பவத்தை அடுத்து பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-03T08:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தை யானை தாக்கியதில் 10 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/10-injured-after-elephant-attacks-bus-1788425332"></link>
            <id>https://jvpnews.com/article/10-injured-after-elephant-attacks-bus-1788425332</id>
            <summary type="text">கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p></p><p>இன்று காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5c901c-5844-4018-b5e3-75c8a3651381/26-6a99347612abb.webp' /></p><p> இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-1-1-million-in-jaffna-nagar-kovil-1788412966</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் நாகர்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தில் மாம்பழம் 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.

வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dbb8594-7018-45cf-8c31-7ebbecb73cd6/26-6a99042860ccd.webp' /></p><p></p><h2>கடந்த வருடம் 10 லட்சத்திற்கு&nbsp; ஏலம்</h2><p> 

கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தலைமறைவானவரின் பெரும் தொகை போதைப்பொருள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huge-narcotics-seized-from-fugitive-hiding-abroad-1788424112"></link>
            <id>https://jvpnews.com/article/huge-narcotics-seized-from-fugitive-hiding-abroad-1788424112</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

 வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (2) கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8419eef6-1f6a-4545-914b-ddfa5f1cb92d/26-6a992fb201c5a.webp' /></p><h2>4 கிலோ&nbsp; ஹெரோயின் மற்றும் 8 கிலோ&nbsp; ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேதவத்தை பகுதியில் சோதனை நடவடிக்க ஒன்றை முன்னெடுத்திருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p>



 விசாரணைகளின்போது, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் , சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T08:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக ஸ்டாலின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போட்ட நீதிபதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/madras-high-court-dismisses-mk-stalin-plea-1788423328"></link>
            <id>https://jvpnews.com/article/madras-high-court-dismisses-mk-stalin-plea-1788423328</id>
            <summary type="text">நடந்து முடிந்த&amp;nbsp; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்&amp;nbsp; சென்னை&amp;nbsp; கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக நீதிமன்றில் முக ஸ்டாலின் தொடந்த வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடந்து முடிந்த&nbsp; தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்&nbsp; சென்னை&nbsp; கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக நீதிமன்றில் முக ஸ்டாலின் தொடந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தொகுதியில் அவருக்கு எதிராக தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு என்பவர் போட்டியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2d2af9-2365-4c5f-b01b-7783f7777bdd/26-6a992ca1ec2d3.webp' /></p><h2>கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி</h2><p>ஆனால் கொளத்தூரில் முக ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். தவெக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார். </p><p>இதையடுத்து, பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.</p><p></p><p>

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது நிறைய முறைகேடு நடைபெற்றதாகவும், வாக்கு எந்திரத்தில் குளறுபடி இருந்ததால் இரண்டாம் இடத்தில் உள்ள தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அதில் அவர் கூறியிருந்தார்.</p><p></p><p>

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது முக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல’ என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T08:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-in-jaffna-mankumban-1788420618"></link>
            <id>https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-in-jaffna-mankumban-1788420618</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.

நேற்றையதினம் மண்கும்பான் ஜும்மா பள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.
</p><p>
நேற்றையதினம் மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0885643-1a51-4ef6-9869-4fee9dabd15e/26-6a99220c17a1e.webp' /></p><p>
</p><p>இந்த விடயம் ஊர்காவற்துறை பொலிஸாரால் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>

அதன்படி அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-s-opinion-on-namal-1788418981"></link>
            <id>https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-s-opinion-on-namal-1788418981</id>
            <summary type="text">குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167c786-d652-4848-a449-972b3d7de0d7/26-6a991ba72efc6.webp' /></p><p>எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்தச் சீர்திருத்தத்திற்குப் பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு என்றும், இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கோகுலாஷ்டமி ; குறையாத செல்வங்களை பெற கிருஷ்ணனை வழிபடுங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646"></link>
            <id>https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646</id>
            <summary type="text">&amp;nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத செல்வங்களையும் பல கோடி யாகங்கள் செய்த நற்பலன்களையும் தரும்.
</p><p>
 

இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக கிருஷ்ண அவதாரம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17396f0-c553-4d25-9d4d-12f21625fc38/26-6a97e9a841e19.webp' /></p><h2>கிருஷ்ணர் பிறந்த&nbsp; கிருஷ்ண ஜென்மாஷ்டமி&nbsp;</h2><p>
</p><p>
 அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட கிருஷ்ண பகவான் தோன்றுவார் என்ற அடிப்படை கருத்தின் அடிப்படையில் கிருஷ்ணர் பிறந்த இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p> 

வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். இவர் அவரது மாமனான கம்சன் மன்னரின் அழிவுக்கு காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90834654-d955-4e39-964e-8965b1ae9506/26-6a97e9e795538.webp' /></p><p> 

இதனால் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி – வசுதேவர் இருவரையும் கம்சன் சிறையில் அடைத்தான். ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார்.</p><h3>விரத வழிபாடு, சிறப்பு பூஜை&nbsp;</h3><p>

 இந்நாள் வெகுவிமரிசையாக விரத வழிபாடு, சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது.</p><p>&nbsp; காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை மனதார வழிபட வேண்டும்.&nbsp; குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாளிகை) அல்லது நாள் முழுதும் விரதம் இருப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeda2b1-72ef-4327-a203-e02eb854cc2c/26-6a97e9a8ee6ca.webp' /></p><p> முழுமையாக உணவு உட்கொள்ளாமல் இருக்க இயலாதவர்கள், அரிசி உணவைத் தவிர்த்து பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம்.</p><p>கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை அல்லது இரவில் பூஜை செய்வது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf255e99-34d6-43bf-a128-9a6aa19f6918/26-6a97e9a9aac01.webp' /></p><p>
</p><p><b>
பாத கோலம்: </b>வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவால் கிருஷ்ணரின் சிறிய பாதச் சுவடுகளை வரைய வேண்டும்.</p><p><b>அலங்காரம்:</b> கிருஷ்ணர் படத்திற்கு மஞ்சள் மலர்கள் மற்றும் துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும்.</p><p><b>நைவேத்தியம்:</b> கண்ணனுக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், மற்றும் பலகாரங்களைப் படைக்க வேண்டும்.</p><p><b>சிறப்பு நிகழ்வு:</b> வீடுகளில் குழந்தைகளைக் கிருஷ்ணர் மற்றும் ராதை போல அலங்கரித்து மகிழலாம்</p>]]></content>
            <updated>2026-09-03T06:43:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு படையெடுத்த நாடாளுமன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliamentary-officials-under-ciaboc-investigation-1788417268"></link>
            <id>https://jvpnews.com/article/parliamentary-officials-under-ciaboc-investigation-1788417268</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று (03) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று (03) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
</p><p>


முன்னாள் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் CIABOC ஆஜராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f8f5d7-2efb-4b49-8bec-4c90e5e91471/26-6a9914f5d0005.webp' /></p><p></p><p>



குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் பாராளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இந்த விவகாரம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புழக்கத்திற்கு வந்த ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trump-s-face-is-now-on-money-with-1-coins-1788416809"></link>
            <id>https://jvpnews.com/article/trump-s-face-is-now-on-money-with-1-coins-1788416809</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 1 டொலர் நாணயங்கள் அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்துள்ளன.</p><p>

அமெரிக்க நாணயத் துறை (US Mint) வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பு நாணயங்களை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c474ed4d-2147-4277-b3dd-a9dd5d0b77d7/26-6a99132ac83e6.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க நாணய வரலாற்றில் இதுவொரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படும் அதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க இந்த நாணயங்கள் சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன</p>]]></content>
            <updated>2026-09-03T06:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/israel-employme-website-new-opportunity-sri-lankan-1788416495"></link>
            <id>https://jvpnews.com/article/israel-employme-website-new-opportunity-sri-lankan-1788416495</id>
            <summary type="text">இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணைய முகப்பு இன்று வியாழக்கிழமை (03) காலை திறக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, இன்று 10,000 விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க முடியும். </p><p>இதில் 8,000 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 2,000 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6751c2f-40c9-49c0-8f81-e61daf538273/26-6a9911f0de1c5.webp' /></p><p>

இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகார சபையான பீபா அமைப்பின் அறிவிப்புக்கு அமைய, இந்த இணைய முகப்பு திறக்கப்படுவதோடு, குறிப்பிடப்பட்ட 10,000 விண்ணப்பதாரர்கள் பூர்த்தியானதும் இணைய முகப்பு தானாகவே மூடப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட, ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறனுடைய மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கொண்ட ஆண்களும் பெண்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
</p><p>

தோட்ட அலங்காரம் , மீள்சுழற்சி சேகரிப்பு சேவைகள், பொருட்கள் பொதியிடல், உணவு உற்பத்தி சார்ந்த பணிகள், பொருட்கள் கையாளுநர்கள் உட்பட மேலும் பல பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. </p><p>இந்த பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பணி அனுபவம் இருப்பது அவசியமாகும். </p><p>மேலும், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக முன்னர் ஏதேனும் இரண்டு துறைகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விபரங்களை பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திலும் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள குழுவினருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-providing-motorcycle-underworld-gang-1788414457"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-providing-motorcycle-underworld-gang-1788414457</id>
            <summary type="text">பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் &quot;போம்புவல சுத்தா&quot; என்ற புனைப்பெயரில் அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><p> 

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7216a0b0-6ff1-4bdd-9214-ab84f4cd5a76/26-6a9909facbe37.webp' /></p><p>கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p> 

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:47:48+00:00</updated>
        </entry>
    </feed>
