<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-15T22:40:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை ; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509</id>
            <summary type="text">யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>26 வயதான குறித்த யுவதி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அதே பீடத்தில் கல்வி கற்ற இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதையடுத்து, பிரான்ஸில் தொழில் புரிந்து வந்த 35 வயது இளைஞருடன் கடந்த மாத தொடக்கத்தில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcd20f0-938e-4b28-966b-1bdf675cca8e/26-6a80ea6720ec4.webp' /></p><p> திருமணத்துக்குப் பின்னர் கணவன் யாழ்ப்பாணத்தில் மனைவியுடன் தங்கியிருந்ததாகவும், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த புதுமணப் பெண் யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் தனது பழைய காதலனுடன் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. </p><p>பொலிஸார் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தான் காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, திருமணத்துக்காக வழங்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> திருமணச் செலவுகள் மற்றும் நகைகள் தொடர்பாக கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T22:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து கலாசார திணைக்களத்துக்கு 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771"></link>
            <id>https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771</id>
            <summary type="text">இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
</p><p>வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dd1e8e-44a8-4020-b542-58ac0963aa6d/26-6a80dfb562743.webp' /></p><p>இந்தத் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கான நிதி உதவிகள், பல்வேறு சமயச் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்தநிலையில் தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும், இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
</p><p>
எனவே வரவிருக்கும் நிதியொதுக்கீட்டின் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்தி, சமய மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் மீது அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472</id>
            <summary type="text">சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdc5a33-0a99-4a28-a728-4dfce3d12bfb/26-6a80daa286c09.webp' /></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:31:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண யூடியூப்பரின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ; சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638"></link>
            <id>https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>யூடியூப்பர் தனது வீடியோ எடிட்டிங் பணிகளுக்காக பாடசாலை நண்பரான ஒருவரை பணியமர்த்தியதாகவும், குறித்த எடிட்டர் கொக்குவில் பகுதியில் நடத்தி வந்த போட்டோ கடை எடிட்டிங் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9cdfd-94a7-4d56-8955-d4d894f23fab/26-6a80a497b44fd.webp' /></p><p>

மேலும், யூடியூப்பரின் காதலி அந்த இடத்திற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அவருக்கும் எடிட்டருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் பின்னர் யூடியூப்பருக்கு தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து யூடியூப்பர் இருவரிடமிருந்தும் விலகியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலித்தீனுக்கு மாற்றுப் பொருட்கள் அறிமுகம் ; அரசாங்கம் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631"></link>
            <id>https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631</id>
            <summary type="text">நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21420e04-1bb4-4179-b9d2-d3b75ab48e20/26-6a80d371039d0.webp' /></p><p>இந்தச் சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
</p><p>
அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் ; ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-requests-meeting-videos-1786822742"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-requests-meeting-videos-1786822742</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்தச் சங்கம், சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed28343f-cfa3-4dc2-b4b1-65f587261f34/26-6a80c05833d4b.webp' /></p><p>இந்தச் சந்திப்பின் போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதிய கலந்தாலோசனை இன்றி இதனை அவசரமாக அமுல்படுத்தக் கூடாது என்றும் தனது கவலைகளை முன்வைத்தார்.</p><p>

மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர். </p><p>இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தியதுடன், தலைவர் ரஜீவ் அமரசூரிய மேலதிக அவதானிப்புகளையும் முன்மொழிவுகளையும் வழங்கினார்.
</p><p>
எனினும், ஜனாதிபதி செயலகத்தினால் இதுவரை சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரியவின் ஆரம்ப உரையின் பதிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பெரிய பகுதி தெளிவற்றதாக இருப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் காரணமாக, சந்திப்பில் இடம்பெற்ற அனைத்து தலையீடுகள், அவதானிப்புகள் மற்றும் பதில்களை உள்ளடக்கிய திருத்தப்படாத முழுமையான காணொளிப் பதிவை உயர்தர ஒலியமைப்புடன் வழங்குமாறு கோரி ஆகஸ்ட் 14 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, சங்கத் தலைவரின் உத்தியோகபூர்வ உரையின் திருத்தப்படாத பதிவு ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன், ஏனைய பங்கேற்பாளர்களின் உரைகள் அடங்கிய பதிவுகள் தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எஞ்சிய பதிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு ஆதரவில் இலங்கை முதலிடம் ; பியூ ஆய்வில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-tops-in-support-india-pew-survey-reveals-1786821740"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-tops-in-support-india-pew-survey-reveals-1786821740</id>
            <summary type="text">சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக &quot;பியூ ஆராய்ச்சி மையம்&quot; (Pew Res...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p></p><p>உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deeb503f-b91e-4783-97be-cd3f9caafe44/26-6a80bc6dde3bd.webp' /></p><p>இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
</p><p>
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. </p><p>பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர்.</p><p> 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
</p><p>
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். </p><p>2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
</p><p>
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
</p><p>
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறைச்சி வாங்கியவருக்கு அதிர்ச்சி ; புழுக்களுடன் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meat-buyer-jaffna-shocked-chicken-meat-sold-worms-1786818995"></link>
            <id>https://jvpnews.com/article/meat-buyer-jaffna-shocked-chicken-meat-sold-worms-1786818995</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையொன்றில் வாங்கப்பட்ட இறைச்சியில் புழுக்கள் இருந்ததாக நுகர்வோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையொன்றில் வாங்கப்பட்ட இறைச்சியில் புழுக்கள் இருந்ததாக நுகர்வோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

வாங்கிய இறைச்சியைப் பார்த்தபோது அதில் புழுக்கள் இருப்பது தெரியவந்ததாகவும், பழைய இறைச்சியுடன் புதிய இறைச்சி கலக்கப்பட்டதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabc3899-5e33-4bce-a6e4-f0e7052f365b/26-6a80b1b54ade6.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக இறைச்சிக் கடை உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு அவருடன் பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சுகாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு ; சிகிச்சை பலனின்றி நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-killed-shooting-colombo-a-short-while-ago-1786816377"></link>
            <id>https://jvpnews.com/article/person-killed-shooting-colombo-a-short-while-ago-1786816377</id>
            <summary type="text">கொழும்பு மவுண்ட் லவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மவுண்ட் லவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h3>களுபோவில போதனா வைத்தியசாலை</h3><p>

இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1e2cb5-81cb-4fcb-b4fd-fe15c9aa7783/26-6a80a77b4c3d9.webp' /></p><p>

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p> சம்பவம் தொடர்பில் மவுண்ட் லவினியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T17:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T16:57:04+00:00</updated>
        </entry>
    </feed>
