<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T21:30:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018</id>
            <summary type="text">இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.</p><h3>பொலிஸார் தீவிர விசாரணை</h3><p>

இதன்போது, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b72d6e9-528b-4ec5-8bf4-c92498e7bdc6/26-6aaad6dc53213.webp' /></p><p>

நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த தகவலை மறைத்து குறித்த இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதைத் தொடர்ந்து, நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. </p><p>தொடர்ந்து கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>
</p><h3>மேலதிக சிகிச்சை</h3><p>இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>எனினும், அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ ஆலோசனையின்றி இளம்பெண்ணுக்கு மருந்து வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நாகசாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524</id>
            <summary type="text">பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1a0d37-25a6-452a-a064-83e393481bb6/26-6aaae48e20d43.webp' /></p><p>மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355</id>
            <summary type="text">கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.முதலாம் இணைப்பு&amp;nbsp;விபத்து இடம்பெற்ற இடத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><h4>முதலாம் இணைப்பு&nbsp;</h4><p>விபத்து இடம்பெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து அகற்றி, சம்பவ இடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0fde52-b93d-4e36-89b9-ef6d5e1efbe0/26-6aaae1edc672f.webp' /></p><p>விபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் வாகனத்தை தாக்கி தீ வைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p>

விபத்தில் படுகாயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/025d002f-7d4c-4453-a06b-62a0368805c6/26-6aaacad1ef725.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01202cc-e0fb-49a1-a3d8-c6d5553e236e/26-6aaacad2aad4d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f876a3ce-3ac3-4ea7-9c6f-20ee660ee26a/26-6aaacad360cbe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09ba8a2-42c0-4189-a1c0-fdc6d7abedde/26-6aaae1ed1acaf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382f8518-7d74-4167-8aef-58b4c24503f4/26-6aaae1ec619af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T18:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் ; பிசிசிஐ அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-ipl-auction-return-india-bcci-bold-decision-1789578894"></link>
            <id>https://jvpnews.com/article/2027-ipl-auction-return-india-bcci-bold-decision-1789578894</id>
            <summary type="text">2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.</p><p> </p><p></p><p>கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. 

2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0229e23-c24f-429d-b1a9-176f35d54d2a/26-6aaace8fa8225.webp' /></p><p> அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. 

2024-ம் ஆண்டு டுபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. </p><p>

தற்போது 2027-ம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. </p><p>இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது. 

பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அணிகளின் நிர்வாகத்துக்கும் வெளிநாட்டு பயணச் சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T17:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தில் ; மண்சரிவு குறித்து புதிய அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-landslide-warning-in-sri-lanka-1789577529"></link>
            <id>https://jvpnews.com/article/new-landslide-warning-in-sri-lanka-1789577529</id>
            <summary type="text">&#039;டிட்வா&#039; சூறாவளியைத் தொடர்ந்து நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன், இதுவரை பாதுகாப்பானவை எனக் கருதப்பட்ட பகுதிகளும் தற்போது மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bed7561-cd8f-400c-99fd-4239964b7c59/26-6aaac93b068c5.webp' /></p><p>உண்மையான மண்சரிவு ஏற்படாத போதிலும், மண் மற்றும் பாறைகள் ஏற்கனவே நகர்ந்துள்ள பகுதிகளில் கனமழை தொடருமாயின், மீண்டும் மண்சரிவு அபாயம் தீவிரமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சூறாவளி நிலையைத் தொடர்ந்து புதிதாக 16,793 உயர் அபாயமுள்ள குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கடந்த 15 ஆண்டுகளில் இனங்காணப்பட்ட சுமார் 15,000 குடும்பங்களுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 30,000 ஐக் கடந்துள்ளதாகவும் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
</p><p>
ஏற்கனவே இனங்காணப்பட்ட குடும்பங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றன.
</p><p>
கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ள அவர், "சூறாவளிக்குக்குப் பிறகு, நாம் பாதுகாப்பானவை எனக் கருதிய இடங்கள் கூட பாதுகாப்பற்றவையாக மாறியுள்ளன" எனக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6898f2-e663-44f5-a8d7-0fe2dd05b07f/26-6aaac93bade35.webp' /></p><p>

எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், மண்சரிவு ஏற்படும் பகுதிகளைப் பார்வையிடவோ அல்லது காணொளி பதிவு செய்யவோ அருகில் செல்ல வேண்டாம் என்றும், அது உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் உலா வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பின்பற்றாமல், அரச நிறுவனங்களால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளை மட்டுமே பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T16:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tiktok-founder-overtak-adani-top-list-asia-richest-1789576328"></link>
            <id>https://jvpnews.com/article/tiktok-founder-overtak-adani-top-list-asia-richest-1789576328</id>
            <summary type="text">டிக்டொக் (TikTok) செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் (Zhang Yiming), இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிக்டொக் (TikTok) செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் (Zhang Yiming), இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் சுட்டெண்ணின் (Bloomberg Billionaires Index) படி, சீனாவின் ஸாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c68de8-eb6b-495f-bcf3-0b0e6714ac5a/26-6aaac48a70460.webp' /></p><p>

மார்ச் 2019 இல் ப்ளூம்பெர்க் இவரது சொத்துக்களைக் கணக்கிடத் தொடங்கிய போது 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
</p><p>
பைட்டான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்தமை மற்றும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள 'டூபாவ்' (Doubao) சொட்பொட், 'சீடான்ஸ்' (Seedance) காணொளி உருவாக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்புமே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.</p><p>

அமெரிக்காவில் டிக்டொக் செயலி தீவிர சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும், ஸாங் யிமிங் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.
</p><p>
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டொக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அந்தச் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் தணிந்தது.
</p><p>
முன்னதாகச் சீனாவில் முதன்மை செல்வந்தராக திகழ்ந்த ஸாங் யிமிங், தற்போது ஆசியாவின் முன்னணி செல்வந்தராக மாறியுள்ளதுடன், ஆசிய செல்வந்தர்களின் சொத்து மதிப்பிலும் தரவரிசையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த மாற்றம் வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T16:32:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிலிருந்து நாடு திரும்பிய சில வாரங்களில் கொலை ; ‘பூத கழுவா’ வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-details-in-the-bootha-kazhuva-case-1789573957"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-details-in-the-bootha-kazhuva-case-1789573957</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற ‘பூத கழுவா’ வெட்டிக் கொலை செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற ‘பூத கழுவா’ வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 21 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள், நான்கு வாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் நான்கு கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50cfa683-6c8e-493d-bdec-d61f468477ad/26-6aaabb47663d6.webp' /></p><p>கடந்த 7ஆம் திகதி அதிகாலை சுமார் 1.45 மணியளவில் முகங்களை மூடிய நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று முச்சக்கரவண்டியில் வந்து, ‘பூத கழுவா’ தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.
</p><p>
அவர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கொலை செய்யப்பட்ட தமித் பிரசாத் பொன்சேகா, தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவர் ‘கொஸ்மல்லி’ என்பவருடன் டுபாயில் சில வருடங்கள் தங்கியிருந்ததுடன், அங்கு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில வாரங்களுக்கு முன்னரே இலங்கைக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் புகைப்படம் CCTV காட்சிகளின் ஊடாக பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பதிவு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.</p><h4>மேலதிக விசாரணை</h4><p>
</p><p>
குறித்த புகைப்படம் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுமார் 65 சதவீதம் ஒத்துப்போவதாக குற்றப் பதிவு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6aaa6d1-0a79-4d3b-b81e-e00603bc0024/26-6aaabb4820cfd.webp' /></p><p>அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவத்திற்காக தன்னுடன் மேலும் நால்வர் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அவர்களில், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சாண்டோ’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான உதவியாளர் என சந்தேகிக்கப்படும் தெலவல வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த ‘சஞ்சு’ என்பவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
‘சஞ்சு’ கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பெரிய வாள்கள் மற்றும் மிதிவண்டியின் பாகங்களைப் பயன்படுத்தி குற்றக் கும்பல் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட கூர்மையான ஆயுதம் உள்ளிட்டவை, அவர் வசிக்கும் வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், இக்குற்றச் செயலுக்காக கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 50,000 ரூபாய் வாடகைக்கு முச்சக்கரவண்டி பெறப்பட்டதுடன், அதற்கு போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டு கொலைச் சம்பவத்தை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த முச்சக்கரவண்டியை ஓட்டி வந்தவர் தெலவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகே தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T15:52:44+00:00</updated>
        </entry>
    </feed>
