<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-24T00:30:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9179da6b-2e2b-4bc3-a64d-e0963ab43cca/26-6a8b8f73c157f.webp' /></p><h2 style="text-align: justify;">அபராதம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் மற்றும் மதுபான விற்பனையகம் ஒன்றுக்கு 300,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 268,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">&nbsp;வர்த்தக அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் அறிவிக்க முடியும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-24T00:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போலி மருத்துவர்கள் இருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923"></link>
            <id>https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923</id>
            <summary type="text">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான்&nbsp; உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa07c6ac-ef29-4628-959e-b629283ed6d1/26-6a8b8516a2ec9.webp' /></p><h2 style="text-align: justify;">விசேட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது தெரியவந்தது.</p><p>
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T23:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடுபுகுந்து நடத்தப்பட்ட சம்பவம்; பெண்ணுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079"></link>
            <id>https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து <a href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280" target="_blank">கொள்ளைச் சம்பவங்களில்</a> ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைதான சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea060171-f577-47a4-be1b-e95f6d7361a3/26-6a8b6451275c0.webp' /></p><h2>விளக்கமறியல்&nbsp;உத்தரவு</h2><p>கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். </p><p>

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்தன.</p><p> 

ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>

கைதான சந்தேகநபர்கள்&nbsp; சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p> 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T23:05:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றிவளைப்பில் சிக்கிய 1,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582</id>
            <summary type="text">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரும், கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மற்றோரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சனிக்கிழமை (22) ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமகல பகுதியில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8b81a2-6bb2-42df-b83e-9bf81f1a5011/26-6a8b6a3057828.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது, 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபரும், 54,096 கஞ்சாச் செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஹம்பகமுவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதம்பலாவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T22:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான SLS முத்திரை ; 8,500 குடிநீர்ப் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116"></link>
            <id>https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116</id>
            <summary type="text">அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இந்தப் போத்தல்கள் தயாரிக்கப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aacf8c-efbd-492b-a2d4-43f4c01bb662/26-6a8b608e49d00.webp' /></p><h2>ஆரம்பக் கட்ட விசாரணை</h2><p>
</p><p>


அத்துடன், பல்வேறு அளவிலான குடிநீர்ப் போத்தல்களில் போலியான முறையில் SLS தரச் சான்றிதழ் முத்திரையும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் இடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p>இந்தத் குடிநீர்த் தொகுதி இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. எனினும் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



சுற்றிவளைப்பின்போது, சுமார் 8,500 போத்தல்களையும் சீல் வைத்து அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
</p><p>


மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361</id>
            <summary type="text">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p style="text-align: justify;">ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள்&nbsp; முதல் இவரை காணவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44921db-97d1-42ce-bf03-9fec9dbf89ff/26-6a8b32a2a507a.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.</p><p style="text-align: justify;">

விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"> எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.</p><p style="text-align: justify; ">&nbsp;தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.</p><p style="text-align: justify;"> எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார். </p><p style="text-align: justify;">அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-23T21:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா வந்தவரின் உயிரை பறித்த பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223"></link>
            <id>https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இந்த விபத்தில் இரத்தினபுரியில் இருந்து சுற்றுலா வருகை தந்த 46 வயதுடைய&nbsp; நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c5de94-f81f-4168-b2d9-5ed21bf8e14f/26-6a8b5929d257f.webp' /></p><p style="text-align: justify; ">



கண்டி பகுதியில் இருந்து&nbsp; நுவரெலியாவிக்கு சுற்றுலா வருகை தந்த பேருந்தில் தடையாளி இயங்காமை காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>


விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலியா

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330"></link>
            <id>https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330</id>
            <summary type="text">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">



இதற்கமைய, சங்கத்தின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்துதல்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ccc389-b0e1-4c3f-8fe0-f207bfd4027f/26-6a8b55ac6a305.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைநிறுத்துதல்.</h2><p style="text-align: justify; ">



இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 



இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">



இந்த விவகாரம் குறித்து, ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



எனவே, பி.எச்.மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது குறித்து நியாயமான விசாரணையை நடத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். </p><p style="text-align: justify; ">



இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">



எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T20:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதன மோதகம் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை ; மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட &#039;மதன மோதகம்&#039; தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட 'மதன மோதகம்' தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">


இச் சோதனையின் போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629e707b-bb1f-4609-8113-2b507dda8955/26-6a8b4ec9ad2cf.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன் போது, 270 கிலோகிராம் 994 கிராம் எடையுடைய மதன மோதகம், உற்பத்திக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் 500 கிராம் மதன மோதகக் கலவை, விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்ட 30 இலட்சம் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 11,133 மதன மோதகப் பொதிகள் மற்றும் 430 கிராம் கஞ்சா மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செவனகல மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 26, 36 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவர்கள் தயாரித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக அம்பலாந்தோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T19:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca432deb-5263-4ecd-9cab-6df916aaf83a/26-6a8b407fb8bff.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; "> 

இதனிடையே, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,562 எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 366,114 ஆகும்.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஆண்டின் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T19:00:43+00:00</updated>
        </entry>
    </feed>
