<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T13:16:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-tv-actress-chaitra-reddy-getting-a-divorce-1786020358"></link>
            <id>https://jvpnews.com/article/is-tv-actress-chaitra-reddy-getting-a-divorce-1786020358</id>
            <summary type="text">பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில், பிரபல&amp;nbsp; சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில், பிரபல&nbsp; சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது.&nbsp;</p><p>சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ,தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><p>கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சைத்ரா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.&nbsp;</p><p>இதனால் சைத்ரா தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறார் என தகவல் பரவி&nbsp; வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-06T12:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிஷோர் பதவி பறிப்பு; நீதிமன்றின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kishore-stripped-of-post-court-order-1786018399"></link>
            <id>https://jvpnews.com/article/kishore-stripped-of-post-court-order-1786018399</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் நேற்று (05) தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை வழங்காமல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p>வட மாகாண ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருந்த ஞானப்பிரகாசம் கிஷோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>மனுதாரர் மற்றும் பதிலாளிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.</p><p>எனினும், நேற்று நடைபெற்ற அமர்வில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால், ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா என்பது தொடர்பான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T12:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (07) ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.&nbsp; முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடைகிறது.&nbsp;</p><p>அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடைகிறது.&nbsp;</p><p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர)ப் பரீட்சை ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T12:22:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேயொரு தமிழ் பாடசாலையை பாதுகாக்க பெரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945"></link>
            <id>https://jvpnews.com/article/anuradhapura-struggle-save-a-single-tamil-school-1786018945</id>
            <summary type="text">அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையான விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் காணியைப் பாதுகாப்பதற்காகப் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இது குறித்து அந்த பாடசாலையில் பழைய மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p>1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் நிலப்பரப்பு, காலத்துக்கு காலம் பல்வேறு அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p>இந்நிலையில், பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி உட்பட சுமார் ஒரு ஏக்கர் காணியை, அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடமொன்றை அமைப்பதற்காகக் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>பாடசாலை நிர்வாகத்திற்கோ, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கோ அல்லது அதிபருக்கோ எவ்வித முன் அறிவித்தலும் வழங்கப்படாமல், பாடசாலை வளாகத்துக்குள் நுழைந்து குறித்த காணி திடீரென சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.</p><p>இது அப்பகுதி தமிழ் சமூகத்தினர் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தநிலையில், வலயக் கல்வி அலுவலகத்தை இந்த பாடசாலைக் காணியில் அமைப்பதற்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வட மத்திய மாகாண ஆளுநரைச் சந்தித்து அமைதியான முறையில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.</p><p>ஏற்கனவே பாடசாலையின் கணிசமான காணிகள் வேறு அரச நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள காணியை வேறு தேவைகளுக்குக் கையகப்படுத்தக் கூடாது எனவும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி மற்றும் கட்டட விரிவாக்க நடவடிக்கைகளுக்காக இந்த காணியைப் பாதுகாத்துத் தருமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T12:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத லிட்ரோ எரிவாயு விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/august-litro-gas-price-1786015346"></link>
            <id>https://jvpnews.com/article/august-litro-gas-price-1786015346</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்துக்கான எரிவாயு விலையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே விற்பனை செய்யப்படும் வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்துக்கான எரிவாயு விலையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ஏற்கனவே விற்பனை செய்யப்படும் விலையிலேயே எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய முடியும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் நான்காயித்து 465 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 792 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 835 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T11:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-former-dmk-minister-ponmudi-1786011091"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-former-dmk-minister-ponmudi-1786011091</id>
            <summary type="text">திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.&nbsp;</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.&nbsp;</p><p>அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.&nbsp;</p><p>இந்த புகார் மனு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு நிலுவையில் உள்ளது.&nbsp;</p><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணை மற்றும் வழக்கை இரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து&nbsp; &nbsp;வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.&nbsp;</p><p>இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.&nbsp;</p><p>அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உணர் நீதிமன்றம் நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.&nbsp;</p><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் நீதிபதி வழக்கில் இன்று ஆஜராதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில்&nbsp; பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது.&nbsp;</p><p><br></p><p>பொன்முடியை செப்டம்பர் 2ஆம் திகதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த பொலிஸாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணை செப்டம்பர் 2 திகதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898"></link>
            <id>https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898</id>
            <summary type="text">திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் துர்நாற்றம்; பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foul-odor-from-waste-in-kalmunai-1786010420"></link>
            <id>https://jvpnews.com/article/foul-odor-from-waste-in-kalmunai-1786010420</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து,&nbsp; பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p>குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>அத்துடன் பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வாகனப் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.</p><p>இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களோ இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p>எனவே சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு கடலில் 11 இந்திய மீனவர்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109"></link>
            <id>https://jvpnews.com/article/11-indian-fishermen-rescued-sea-off-delft-island-1786005109</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&amp;nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&amp;nbsp;நெடுந்தீவு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை&nbsp; இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.&nbsp;</p><p>நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.&nbsp;</p><p>இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில்குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்தது.&nbsp;</p><p>நீண்ட முயற்சியின் பின்னர் இன்றைய தினம் குறித்த 11 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் மீட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வந்தனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேவேளை, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-08-06T08:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக பாதீடு அறிக்கை;புயலைக் கிளப்பிய விவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tvk-led-government-s-maiden-revised-budget-1786003491"></link>
            <id>https://jvpnews.com/article/tvk-led-government-s-maiden-revised-budget-1786003491</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசின் பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசின் பாதீடு அறிக்கை தாக்கலின்போது நிதி அமைச்சர் ஜெபமாலையுடன் வந்தது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல் விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை அரசியல் சர்ச்சையாக மாற்றக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார்.</p><p>இதனையடுத்து, அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் பதிலளித்து, "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இராமர் சிலையுடன் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ வந்தாலும் இதையே சொல்வீர்களா சேர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புகளிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T08:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக சேர்க்கை பதிவுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-university-admission-registration-begins-1786003086"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-university-admission-registration-begins-1786003086</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் .</p><p>இதனை&nbsp; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289"></link>
            <id>https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289</id>
            <summary type="text">யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;ஒழுங்காக படிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>ஒழுங்காக படிக்கவில்லை என அவரின் தாய் கண்டித்ததால் அவர்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக சொல்லப்படுகிறது.&nbsp;</p><p>இது தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொர்க்கத்தில் என் தாய் மகனை பார்த்துக்கொள்வார் என சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.</p><p>டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சவுக்கு சங்கர் யுடியூப்பில் தொடர்ந்து அரசியல் தொடர்பான விவாதங்களை செய்து வந்தார்.&nbsp;</p><p>குறிப்பாக 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>2026 தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தபின் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசி வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T07:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-red-alert-for-12-districts-1786002053"></link>
            <id>https://jvpnews.com/article/weather-red-alert-for-12-districts-1786002053</id>
            <summary type="text">தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்&amp;nbsp; 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்&nbsp; 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை நாளை (07) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:41:09+00:00</updated>
        </entry>
    </feed>
