<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T11:29:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம் ; பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040"></link>
            <id>https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


வீடு உடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளுக்காக குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd613546-b16e-4df7-9086-0528d31bd6a1/26-6a6f299a0fe2d.webp' /></p><p>



இன்று காலை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையின் பாதுகாப்பு மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>


மேலும், இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மதில் மீது ஏறி தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc8c3d7-04c4-4fbf-914d-b86187f8a511/26-6a6f27dc6d12e.webp' /></p><p> இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>



தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் வரலாறு குறித்து மறுபரிசீலனை கோரும் ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836"></link>
            <id>https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836</id>
            <summary type="text">இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>2000 ஆம் ஆண்டு தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையை தற்போது மீள்பகிர்ந்துள்ள அவர், அனுராதபுரம் தொடர்பாக நிலவி வரும் வரலாற்றுப் புரிதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அந்தக் கட்டுரையில், அனுராதபுரம் சிங்களர்களுக்கே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்ற பார்வை பெரும்பாலும் மகாவம்சம் உள்ளிட்ட பிற்கால வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a7d783-d4a8-4703-8532-81c11685ed96/26-6a6f20fda767c.webp' /></p><p> மேலும், மகாவம்சம் ஒரு தேரவாத பௌத்தப் பார்வையில் எழுதப்பட்ட நூலாக இருப்பதால், அதிலுள்ள தகவல்களை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தின் ஆரம்பகால அரசர்கள், அக்கால சமூகத்தின் மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்பாக பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் கல்வெட்டுகளையும் மேற்கோள் காட்டியுள்ள ஆசிரியர், அக்கால மக்களின் அடையாளம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
</p><p>
அதேபோல், எல்லாளன் – துட்டகைமுனு போர் குறித்து இன்று பரவலாக நிலவும் "தமிழர் – சிங்களர் மோதல்" என்ற விளக்கத்தை விட, அது பௌத்த அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்தை மையமாகக் கொண்ட மோதலாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7947af8a-5820-470b-8490-0807549524cb/26-6a6f20fe5a524.webp' /></p><p>பௌத்தம் இலங்கைக்கு வந்த விதம், தேரவாத மற்றும் மகாயான பௌத்தப் பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகள், தமிழகத்துடனான வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் அனுராதபுரத்தின் அரசியல் பரிணாமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இலங்கையின் வரலாற்றை இன அடிப்படையில் மட்டுமல்லாது, மதம், மொழி, அரசியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையிலும் மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அனுராதபுரத்தின் வரலாறு தொடர்பில் மேலும் ஆழமான கல்வியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிவா சின்னப்பொடி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

எனினும், இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் ஆசிரியரின் வரலாற்று ஆய்வு மற்றும் விளக்கங்களாகும். இவை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக் கருத்துகளும் கல்வியியல் விவாதங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515"></link>
            <id>https://jvpnews.com/article/17-containers-fall-into-sea-stranded-beach-galle-1785664515</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பலில் இருந்து குறித்த 17 வெற்று கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (01) அறிவித்திருந்தது.
</p><p>
நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, குறித்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரப் பகுதிகளை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028b5407-09b0-4795-b7cd-853fdfb81782/26-6a6f14051f07e.webp' /></p><p>

இதனையடுத்து, கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடலில் மிதந்து வந்த ஒரு கொள்கலன் இன்று காலி இந்துருவ, கைகாவல கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
</p><p>
கடலில் இருந்து கரை ஒதுங்கும் குறித்த கொள்கலன்களை பொதுமக்கள் தொடவோ அல்லது நகர்த்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவை தொடர்பில் அருகிலுள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், எஞ்சியுள்ள கொள்கலன்களின் நிலைமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு ; முன்னாள் ஜனாதிபதி குறித்து ஸ்ரீநேசன் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026"></link>
            <id>https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026</id>
            <summary type="text">ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>



மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள். </p><p>



ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20360168-cb66-4966-9ca7-548be81d331c/26-6a6eff24617bd.webp' /></p><p>500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p> 



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக் கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். </p><p>இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம் செலுத்தியவர் இருக்கின்றார். </p><p>



அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது சிந்திப்பார், ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என சிந்திப்பார்.
</p><p>


அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். </p><p>அவர்களுக்கும் கலக்கம். தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p> 



இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும்.</p><p> ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சுற்றுவட்டார பொலிஸ் ஊரடங்கு நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077</id>
            <summary type="text">ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று (1)பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717f08b9-17a3-4ecf-809a-d634247ae901/26-6a6f02aeb7e9c.webp' /></p><p> 

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. </p><p>

இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697"></link>
            <id>https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சிறைச்சாலை நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d92dd0-a8f2-4707-a058-a3109bc496ce/26-6a6f013322af9.webp' /></p><p>கைதிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

பூசா சிறைச்சாலை நாட்டின் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் உட்பட பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T08:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீற்றர் மழையும், லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் 183.3 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1e0548-2683-4c28-a891-b4e5e4725772/26-6a6eebf513f38.webp' /></p><p>மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால் அதன் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் எந்த நேரத்திலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edf587d3-4011-40c5-a321-50836696ae41/26-6a6eebf5b8752.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஞ்சியில் தோனி–ரிஷப் பண்ட் இணைந்து பயிற்சி ; வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989"></link>
            <id>https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சிக் கூடமொன்றில் தோனியுடன் இணைந்து ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்தப் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68600d83-7fae-4be8-9055-df4e983c6130/26-6a6ee6fe5fcd1.webp' /></p><p>சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட ரிஷப் பண்ட், 312 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
</p><p>
இதனிடையே, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில் இந்திய அணி தனது எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><p> இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/722da6e8-594b-44aa-b05a-438a95630d0b/26-6a6ee37f68340.webp' /></p><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591"></link>
            <id>https://jvpnews.com/article/2-lakh-to-the-family-youth-who-died-wall-collapse-1785649591</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதியுதவியும் வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேலையில்லா பட்டதாரியான டிலெக்ஸன், பகுதி நேர தச்சுத் தொழிலாளியாக பணியாற்றியபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0051ab-20d9-4f32-89dd-abc381660d32/26-6a6ed9b94658d.webp' /></p><p>இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றது நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்திற்கு அண்மையில் என்பதனால், பள்ளி நிர்வாகத்தின் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் ஆகஸ்ட் 1 ஆம் திகதி உயிரிழந்தவரின் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. </p><p>அத்துடன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

மேலும், கட்டாரில் தொழில் புரியும் காத்தான்குடியைச் சேர்ந்த சுஜா தலைமையிலான Q Cargo நிறுவனத்தின் சார்பிலும் ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் யசீர் அரபாத் (B.A), பள்ளிவாசல் இமாம் அல்-ஹாபிழ் மெளலவி முஸ்தகீம் பலாஹி, பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
</p><p>
நிகழ்வில் கருத்து தெரிவித்த அப்பகுதியிலுள்ள இந்து ஆலய குரு, இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மனிதாபிமான செயற்பாடாக இதனைப் பாராட்டியதுடன், பள்ளி நிர்வாகத்தின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:46:45+00:00</updated>
        </entry>
    </feed>
