<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T12:37:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135"></link>
            <id>https://jvpnews.com/article/wife-issues-death-threat-to-police-1789474135</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் , 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும் (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a928412-0d14-4d43-b7b7-3dd2cefca974/26-6aa935593d346.webp' /></p><h2>வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகம்</h2><p>
</p><p>
 கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.
</p><p>
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p></p><p>

இதனையடுத்து , குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சற்று குறைந்த தங்கம் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625</id>
            <summary type="text">&amp;nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea88d05-5518-4960-8abf-fb2f99ea8f5b/26-6aa927a30573a.webp' /></p><p>

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T11:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d2aec7-d1c8-4bd1-a055-f79cb84a343f/26-6aa922058dc24.webp' /></p><p> 

சந்தேகநபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதுடன், மற்றைய நபர் திருடப்பட்ட பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767"></link>
            <id>https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
</p><p>


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a8237b-5b97-4067-b0cd-425b3b4af57d/26-6aa92060a7e08.webp' /></p><p></p><h2>சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை</h2><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


 இந்நிலையில் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குநருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569"></link>
            <id>https://jvpnews.com/article/murder-thunnalai-jaffna-prime-suspect-surrenders-1789462569</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645" target="_blank">&nbsp;யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை </a>செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (14) பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4158f368-f6c7-4f27-95a8-1e2cdd067140/26-6aa9082b6c468.webp' /></p><h2>இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை</h2><p> </p><p>

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு குறித்த நபர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11 ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp; &nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர் 

மேலும் கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-robbed-puttalam-1789465882</id>
            <summary type="text">&amp;nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புத்தளம் கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரினால் களவாடப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி கற்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்தாலியின் பஜெட் (Paget) நகரைச் சேர்ந்த வெளிநாட்டவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்துள்ளதுடன், இம்மாதம் 17 ஆம் திகதி வரை தங்கியிருக்க அவர் திட்டமிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525b7b26-b0db-4a8f-8b27-ac893dc4c660/26-6aa9151c0035a.webp' /></p><p> 

இந்நிலையில் கற்பிட்டி பகுதிக்கு வருகை தந்த குறித்த சுற்றுலா பயணி, கண்டல்குழி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தார். </p><p>

கடந்த 13 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில், கண்டல்குழி கடற்கரையில் தனியாக உலாவிக்கொண்டிருந்த போது, அந்த சமயம் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் அவரது கைப்பையை அவரிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;மர்ம நபரை அடையாளங்காண&nbsp; தீவிர விசாரணை</h2><p> </p><p>

குறித்த பையினுள் சுமார் 1,000 யூரோ பெறுமதியான உயர்தர கைக்கடிகாரம், 10,000 இலங்கை ரூபாய் பணம், மூக்குக் கண்ணாடி மற்றும் சுற்றுலா வழிகாட்டி கையேடு என்பன இருந்ததாக அவர் கற்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட குறித்த மர்ம நபரை அடையாளங்கண்டு, அவரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தை அலங்கரிக்கும் ஆவாரம் பூக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172"></link>
            <id>https://jvpnews.com/article/senna-auriculata-flowers-adorning-the-hill-country-1789465172</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் இருபுறங்களிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்குவது அப்பகுதிகளின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.
</p><p>


குறிப்பாக பொகவந்தலாவ, ஹட்டன், வெளிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75777e93-9fc2-478e-8acd-a6f1dd3760e0/26-6aa912560387e.webp' /></p><p></p><p> </p><p>



வீதியோரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் காணப்படும் ஆவாரம் பூக்கள், மலையகத்தின் இயற்கை எழிலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
</p><p>


அதேசமயம் விஜயதசமி பூஜை காலப்பகுதியில் அலங்காரங்களுக்காகவும் ஆவாரம் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-15T09:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி யூரோ நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-counterfeit-euro-banknotes-1789464816</id>
            <summary type="text">&amp;nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹட்டன் நகரில் போலி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


ஹட்டன் நகரில் போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர் வரவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (14) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf85b0-d69d-4714-8691-7a6387aecd0d/26-6aa910f1768ba.webp' /></p><p>
</p><p>


 சந்தேகநபரிடம் இருந்து 200 யூரோ பெறுமதியான 9 போலி நாணயத்தாள்களும், 100 யூரோ பெறுமதியான 7 போலி நாணயத்தாள்களும் உட்பட மொத்தம் 16 போலி யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


கொழும்பைச் சேர்ந்த தனது மைத்துனர் குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னிடம் வழங்கியதாகவும், அவை போலியானவை என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T09:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களுக்கு ஞா. ஸ்ரீநேசன் எம்.பி. களவிஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194"></link>
            <id>https://jvpnews.com/article/mp-srineshan-visits-the-border-areas-of-batticaloa-1789463194</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று 15.09.2026 களவிஜயம் மேற்கொண்டார்.</p><p>

இதன்போது பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் வீதிகளை நேரில் பார்வையிட்டார். குறித்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>
</p><p>
பெரிய புல்லுமலை பகுதியில் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். </p><p>இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரியுடன் தொடர்புகொண்டு, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், பெரிய புல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்களின் அழைப்பின் பேரில் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954d7ee4-89d4-47d8-8aff-66557b410f3d/26-6aa90a9be7ae0.webp' /></p><p>

எல்லைப் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரில் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நால்வரின் உயிரைப் பறித்த பிரிட்ஜ் ; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852"></link>
            <id>https://jvpnews.com/article/4-killed-in-house-refrigerator-explosion-karnataka-1789460852</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
 கர்நாடகா மாநிலம் பெலகவி பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்திருக்கிறது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 
 வீட்டில் பாரதி, சாரதா, கங்கா, பிரியா ஆகிய நான்கு பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c58fe9f-2e65-458e-aee5-e03cf5220fd9/26-6aa901764a698.webp' /></p><h2>விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..</h2><p> அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே பிரிட்ஜ் இருந்துள்ளது.

நள்ளிரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்ஜ் வெடித்திருக்கிறது. </p><p>தீ கொழுந்து விட்டு எறிந்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நான்கு பேரும் மரணமடைந்தனர்.

 மேலும் இருவர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><p>
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வந்ததால் ஃபிரிட்ஜ் வெடித்ததை அருகிலிருந்தவர்கள் பட்டாசு வெடித்ததாக நினைத்துவிட்டதாகவும் அதன்பின் விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-15T08:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி மீது தொற்றிக் கொண்ட வௌவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523"></link>
            <id>https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523</id>
            <summary type="text">நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வௌவால் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
வௌவால் தொற்றிக் கொண்டதும் அச்சுறுத்தும் அந்தச் சூழலிலும் பதற்றமடையாமல் அந்தப் பயணி அமைதியாக நின்ற விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58c50d1-cd36-43d6-b36b-6688c1ea73b9/26-6aa8f47531e29.webp' /></p><h2>இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி ஒன்றில்,சுற்றுலாப் பயணியின் மீது திடீரென வந்து அமர்ந்த வௌவால் அவரை விட்டு நகராமல் ஒட்டியுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், பயந்து ஓடாமல் குறித்த சுற்றுலாப்பயணி அமைதியாக ஒரே இடத்தில் நின்றார்.</p><p></p><p>
</p><p>
அருகில் இருந்த மற்றொருவர் அந்த வௌவாலை அகற்ற அவருக்கு உதவ முயன்றார்.

இந்தநிலையில்,"நீங்கள் இலங்கைக்குச் செல்லும் போது... பெட்மேனே உங்கள் மீது விழுந்தால்..." என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு 24 மணி நேரம் மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69720e08-3ff7-4a58-a646-e04f7ed1b87f/26-6aa8fda2c6da7.webp' /></p><p> 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535</id>
            <summary type="text">&amp;nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் இன்று (15) காலை 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3937e48c-4285-4020-b768-dfd4c0c4cb5f/26-6aa8fc5117929.webp' /></p><p> 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட தூர ஜெட் விமானம் சொந்தமாக வைத்துள்ள இலங்கையர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-sri-lankan-who-owns-a-long-range-jet-aircraft-1789454813"></link>
            <id>https://jvpnews.com/article/a-sri-lankan-who-owns-a-long-range-jet-aircraft-1789454813</id>
            <summary type="text">&amp;nbsp; தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்று முன்தினம் (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். </p><p>

கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச் நடத்தி வரும் ஓர் இலங்கை பில்லியனர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb535d-b4dd-417c-887a-ecbcb87c697b/26-6aa8e9df239ab.webp' /></p><p>
இவர் இலங்கைக்கு வருகை தந்த 'கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-5' (Gulfstream G-V) விமானமானது ஒரே தடவையில் 12,000 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>

இலங்கையின் முதலாவது தனியார் விமானமாக 1980 ஆம் ஆண்டுகளில் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'லியர்ஜெட் 35ஏ' (Learjet 35A) விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:43:35+00:00</updated>
        </entry>
    </feed>
