<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T07:34:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார்.
</p><p>
வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d71a82-bd2d-40db-8a15-ce00b4405d0b/26-6a9fb891d8913.webp' /></p><h2>&nbsp;23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p>

இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும், தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T07:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562"></link>
            <id>https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6718938b-ce3a-4057-a44e-f2248ce1b098/26-6a9fad9c181b0.webp' /></p><h2>&nbsp;424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள்</h2><p>

இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ​​’லங்கா சதொச’ நிறுவனம் 24 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

அக்காலகட்டத்தில், அந்நிறுவனம் 11 பில்லியன் ரூபா கடனையும், 5 பில்லியன் ரூபா வங்கி மேலதிக பற்று வசதியையும் கொண்டிருந்ததாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986"></link>
            <id>https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda7366f-e821-4687-8631-f8217f670c38/26-6a9fa38c37c48.webp' /></p><h2>&nbsp;விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14,&nbsp; முதல்&nbsp; &nbsp;18&nbsp; வரை</h2><p> </p><p>

இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது.</p><p>

 இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
</p><p>
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது.
</p><p>
 இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. </p><p>

விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563"></link>
            <id>https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>

சந்தேக நபர்களிடம் சுமார் ரூ.5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b13c24-b646-4fbf-974d-b1b0cd61e20a/26-6a9fa9b57020c.webp' /></p><h2>இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய&nbsp;தாய்லாந்து பிரஜைகள்</h2><p>
</p><p>


தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (08) விமானம் மூலம் இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரும், விமான நிலைய வருகை முனையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக போதைப்பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>



அவர்களது இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்,&nbsp; கறுப்பு திராட்சைத் துகள்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T06:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p> 

 கைதான அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.</p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-09-08T06:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் அமளிதுமளி; திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/marshals-forcibly-removed-dmk-members-assembly-1788845711"></link>
            <id>https://jvpnews.com/article/marshals-forcibly-removed-dmk-members-assembly-1788845711</id>
            <summary type="text">நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து &amp;nbsp; முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து &nbsp; முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். </p><p>ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bbbae6-d17c-4fef-89e0-8ce12c85199a/26-6a9f9e909d161.webp' /></p><h2>தர்ணாவில் ஈடுபட்ட&nbsp; திமுக உறுப்பினர்கள் </h2><p> </p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து&nbsp; திமுக உறுப்பினர்கள்&nbsp; தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.</p><p></p><p>
</p><p>
 

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவையில் பேசியதாகவும், ஏற்கனவே பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கை குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும் ஏ.வா. வேலு குற்றம்சாட்டினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: <br><br>Assembly marshals arrived and escorted the protesting DMK members out of the House. <a href="https://t.co/GAW99uRnuK">pic.twitter.com/GAW99uRnuK</a></p>&mdash; Actor Vijay Team (@ActorVijayTeam) <a href="https://x.com/ActorVijayTeam/status/2097188571677692205?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதையடுத்து, தனது இருக்கையைச் சுற்றி நின்று தொடர்ந்து முழக்கமிட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>உடனடியாக அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.</p>]]></content>
            <updated>2026-09-08T05:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096"></link>
            <id>https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>

இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35cd1de0-106c-4903-9b97-065d70689495/26-6a9f9c29e4ed8.webp' /></p><p>

குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p><p>

எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302"></link>
            <id>https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளார். </p><p>

அவர் இன்று (08) காலை 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். 

ஏயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d95733-eb09-4412-bbc3-f724448be747/26-6a9f991069233.webp' /></p><p>
 </p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.</p><p></p><p>அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18, 2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் போர்க் குற்றவாளி அல்ல; சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692"></link>
            <id>https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692</id>
            <summary type="text">&amp;nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
</p><p>
அத்துடன் தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da394b57-565f-4704-85e6-1767ec5f6bea/26-6a9f96ae09300.webp' /></p><h2>இலங்கை அரசாங்கங்கள் சரியானபடி விளக்கமளிக்கவில்லை</h2><p>
</p><p>
இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>

புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சாடினார்.</p><p></p><p>
</p><p>
 இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.</p><p>

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவன் கொலை சம்பவத்தில் மனைவி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601"></link>
            <id>https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.</p><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8812b318-862d-4162-afca-af675a344a73/26-6a9f926abf70b.webp' /></p><h2>எட்டு வருடங்களின் பின் கைதான&nbsp; மனைவி</h2><p> </p><p>

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

 சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:40:13+00:00</updated>
        </entry>
    </feed>
