<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-15T05:37:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163"></link>
            <id>https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d1d448-3ddd-46f3-8f91-4920e62b80aa/26-6aa8d7b4626cd.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. </p><p>

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T05:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய பகை ...இருவர் கொலை; பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். </p><p>

நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265df11a-b15b-43c7-9a1c-0b480a3c5199/26-6aa8d09eb5044.webp' /></p><h2>தனிப்பட்ட தகராறு</h2><p> 

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 

இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p> 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். 

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T04:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661"></link>
            <id>https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
</p><p>
 முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/222928db-b87f-44c7-81a9-dc9fff0780b0/26-6aa8cdef56deb.webp' /></p><p>
</p><p>


அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.



அதன்பின்னர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p>&nbsp;நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூக செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;அதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T04:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469"></link>
            <id>https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469</id>
            <summary type="text">முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb924a7-6051-4f09-9f66-b585cedf6525/26-6aa882f6cb9e0.webp' /></p><p>

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.</p><p>

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-prison-sentence-man-sexually-daughter-1789435637"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-prison-sentence-man-sexually-daughter-1789435637</id>
            <summary type="text">மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (14) உறுதி செய்தது.

நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p> </p><p></p><p>இதன்போது பிரதிவாதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை என நீதிபதிகள் அமர்வு குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்திருந்தது.
</p><p>
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபாருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4703caca-dc2c-45a5-b456-5c51183cfff3/26-6aa89ef79966a.webp' /></p><p>இந்நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர், தண்டனைச் சட்டக் கோவையின் 364(3) பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்திருந்தது.
</p><p>

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 4 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.</p><p> அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் தலா 6 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.</p><p> </p><p> சம்பவம் இடம்பெற்ற நேரம் அல்லது திகதி தெளிவில்லையெனவும், மகளின் சாட்சியத்தை நம்ப முடியாது எனக் கூறியும் பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தார்.
</p><p>
எனினும், முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மிகவும் நம்பகமானவை எனத் தெரிவித்த நீதிபதி கலாநிதி சுமுது பிரேமசந்திர, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எவ்வித அடிப்படை காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டார். </p><p> அதற்கமைய குற்றவாளியின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 2025 ஜூலை 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை ; 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882</id>
            <summary type="text">மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மழையுடன் கூடிய காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d58be973-5d6a-47b4-82b0-96d97b67c51c/26-6aa89c03f2678.webp' /></p><p>மேலும், பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சுமி நாராயண ராஜயோகம் ; ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072"></link>
            <id>https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது.&nbsp;வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7861c63-79af-48ef-85ad-64fd56dc2b35/26-6aa898dac436f.webp' /></p><p>இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பர் இறுதியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a06d56-92d9-48ed-a2e0-d48b50af92f9/26-6aa898da14219.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8341a78-50d4-4133-a3a8-3d9f6240ac94/26-6aa898db889ae.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e67718f3-be0b-41d6-93ea-d9b8ca112898/26-6aa898dc40f26.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்தாலும், நிதி நிலை சிறப்பாகவே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ebce32-68c0-45d2-9b38-7025b95c9934/26-6aa898dcebfc7.webp' /></p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஊடகம், மார்கெட்டிங் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841bba2d-0a1e-4ad4-b344-fcc48c08868e/26-6aa898dda82a4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T01:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பை ; ரூ.320 மில்லியன் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675</id>
            <summary type="text">கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1a35a6-6d57-4ae2-b51f-f9f326a48ce8/26-6aa8936524024.webp' /></p><p>

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘குஷ்’ ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:38:12+00:00</updated>
        </entry>
    </feed>
