<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-04T14:33:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினரின் கல்லறையை தோண்டும் மர்ம நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046"></link>
            <id>https://jvpnews.com/article/digging-up-the-grave-of-an-underworld-gang-1788525046</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைத் தோண்டப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> 



கடந்த 2ஆம் திகதி உயிரிழந்த நபரின் உறவினர்களால் மத்தேகொட பொலிஸில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbad65d-a7e4-4c2a-841e-46570300c435/26-6a9ab9f8b1c85.webp' /></p><h2>பாதாள உலகக் குற்றச்செயல்கள்</h2><p>
</p><p>


போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரிப்டீன் என்பவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது. </p><p>



ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபராக அடையாடப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>
</p><p>


கடந்த ஓகஸ்ட் 06ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.</p><p>



உயிரிழந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மத்தேகொட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. </p><p>எனினும், உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழியின் கால் பகுதி அமைந்திருந்த பக்கத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ தோண்டியிருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எவ்வித அறிவிப்பும் வழங்காமல், சில பணியாளர்கள் குழியை மீண்டும் மூடியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 



மத்தேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக குமாரவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 வரை எல் நினோ காலநிலை; உலக மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-conditions-until-2027-warning-global-1788525765"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-conditions-until-2027-warning-global-1788525765</id>
            <summary type="text">&amp;nbsp; உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகின் பல நாடுகளைப் பாதித்து வரும் எல் நினோ காலநிலை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>

எல் நினோ தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தொடர்வதற்கான சாத்தியம் சுமார் நூறு சதவீதத்திற்கு அண்மித்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922ba50-3109-439b-ae57-6448dca7683e/26-6a9abcc746c8a.webp' /></p><h2> மிகத் துல்லியமான முன்னறிவிப்பு</h2><p>
</p><p>
இவ்வாறான மிகத் துல்லியமான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p>

அத்துடன், உலக வானிலை அமைப்பின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில், அத்தகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
வெப்பமண்டல பசுபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உருவாகும் எல் நினோ, எதிர்வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
பூமி முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலைக்குள் நுழைந்து வருவதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆபத்தான காலநிலை நிலைமை உருவாகி வருவதாகவும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை இலங்கையிலும் எல் நினோ காலநிலை பின்னணியில், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்கள் முதல் பாரிய நீர்த்தேக்கங்கள் வரையிலான பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
</p><p>
 
நீர் பற்றாக்குறையால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>


வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0bf0d2-8d84-44f9-803d-2fb8e716c512/26-6a9ac9c0a0b0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T13:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4a50c3-a272-4192-b605-0d070d238c9b/26-6a9ab609664c4.webp' /></p><p>
</p><p>



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-urgent-warning-issued-to-fishermen-1788527087"></link>
            <id>https://jvpnews.com/article/weather-urgent-warning-issued-to-fishermen-1788527087</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, குறித்த கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என&nbsp; திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eef45f5-be38-49ed-8875-0f7f00ff5203/26-6a9ac1f118c50.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><h2>&nbsp;இளைஞர் மற்றும் சிறுமி&nbsp; &nbsp;காவல்துறையின் பாதுகாப்பில்..</h2><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T12:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்ல ; சஜித் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constitutional-reforms-narrow-political-objectives-1788521978"></link>
            <id>https://jvpnews.com/article/constitutional-reforms-narrow-political-objectives-1788521978</id>
            <summary type="text">அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், ஜனநாயகக் கோட்பாடுகள், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், ஜனநாயகக் கோட்பாடுகள், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அடிப்படைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேசிய உரையாடல் அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திருவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்பு நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b032bed0-7f86-4ea2-bfc8-5a91d5951ee6/26-6a9aadfc3a971.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் அரசியல் தேவைகளுக்காக மாத்திரமன்றி, அரசியல் அதிகாரம் கைமாறும் சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பான வகையில் இவை திட்டமிடப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதித்துறையின் சுதந்திரம், வினைத்திறன் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியன ஒன்றுக்கொன்று வலுசேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச அளவுகோலாக ‘லேட்டிமர் ஹவுஸ்’ (Latimer House) கோட்பாடுகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இலங்கைக்கு விசேட அரசியலமைப்பு நீதிமன்றம் அல்லது மீளாய்வுப் பொறிமுறை ஒன்று தேவையா என்பது தொடர்பில் நீண்டகால அடிப்படையில் பரிசீலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது சுற்றாடல் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட ‘சுற்றாடல் சாசனம் 2.0’ இன் கீழ், சிறப்பு சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது தொடர்பான கொள்கை ரீதியான முன்மொழிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சுற்றாடல் நீதி மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீதிமன்றமா, தீர்ப்பாயமா அல்லது இரண்டின் அம்சங்களையும் கொண்ட அமைப்பா பொருத்தமானது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294"></link>
            <id>https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

நிலக்கரி ஏற்றிச் சென்ற ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளம் கடற்பரப்பை வந்தடைந்துள்ள நிலையில், நிலக்கரியை இறக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சரக்கை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f677ec9e-2850-4720-a690-b34e9dc2c76a/26-6a9aab4f5ee7c.webp' /></p><p>இந்நிலையில், ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு மற்றும் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று (04) காலை மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
</p><p>
இதன்போது, அடுத்த சில நாட்களுக்கு மின் நிலையத்தை இயக்குவதற்குத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பில் இருப்பதை அமைச்சர் அவதானித்துள்ளார்.
</p><p>
மேலும், மின் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களை சந்தித்த அமைச்சர், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் மின்சார உற்பத்திக்காக அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிலக்கரி விநியோகம் மற்றும் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757"></link>
            <id>https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

எவ்வாறாயினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட ஒகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,962 பேரும் பதிவாகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b837d2c-8d0f-40fc-a551-ae151d7e871e/26-6a9aa54f4c95e.webp' /></p><p>இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இக்காலப்பகுதியில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,760 ஆகும். </p><p>

தென் மாகாணத்தில் 13,931 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,788 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,910 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,444 ஆகும். </p><p>

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 19,008 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,043 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,154 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,181 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p> 

நாடளாவிய ரீதியில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதி-அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6db0888-ff13-46cd-9bb1-0b64ae960c44/26-6a9aa7ccb9990.webp' /></p><p></p><h2>சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு</h2><p> </p><p>இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p></p><p>ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், அதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc20b296-9b3c-4bd9-a40e-c0083a234678/26-6a9a8b2c53bf2.webp' /></p><p>வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போன கடற்படை அதிகாரியின் உடல் என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770"></link>
            <id>https://jvpnews.com/article/body-suspected-missing-naval-officer-recovered-1788517770</id>
            <summary type="text">அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல், இன்று (04) காலை கடற்படை நீர்மூழ்கிக் குழுவினரால் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>



அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
</p><p>


கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa08ac-cdc0-434d-9d76-75183adc6d16/26-6a9a9d8c42c5f.webp' /></p><p>இந்நிலையில், கடல் மற்றும் நீருக்கடியில் நிலவிய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் விசேட நீர்மூழ்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் இன்று மீட்க்கப்பட்டது. </p><p>



குறித்த படகு சுமார் 80 அடி ஆழத்தில் காணப்பட்டதுடன், நீருக்கடியில் பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p> 



மேலும், படகின் உள்ளகப் பகுதிகள் மிகவும் குறுகலாக இருந்ததால், நீர்மூழ்கி வீரர்களுக்கு மீட்பு நடவடிக்கையின்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.</p><p>



சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியை மீட்பதே இலங்கை கடற்படையின் பிரதான முன்னுரிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>


காணாமல் போன அதிகாரியைத் தேடும் நடவடிக்கைகள் பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
</p><p>


தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் கடற்படை ஒருங்கிணைந்து செயற்பட்டதுடன், கிடைக்கக்கூடிய கடல் மற்றும் வான்வழி வளங்களும் பயன்படுத்தப்பட்டன.
</p><p>


மேலும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை விரிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் கண்டறிவதற்கான விசாரணையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:29:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961"></link>
            <id>https://jvpnews.com/article/boat-capsizes-in-batticaloa-waters-one-dead-1788517961</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் , ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். 

 

இதன்போது, எதிர்பாராதவிதமாக வீசிய பாரிய அலை ஒன்றில் சிக்கி அத்தோணி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>

 

 சம்பவத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவரான 'நாகேந்திரன்' என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா நீரில் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc15ff1-0ccc-4f7c-adee-280ab3bfc546/26-6a9a9e4a6578b.webp' /></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

 

அதேவேளை, தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்ற மீனவர் அலையை எதிர்த்து நீந்திப் போராடிப் பாதுகாப்பாகக் கரையை வந்தடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

நீரில் மூழ்கியவர்களில் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

 

 எனினும், காணாமல்போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488"></link>
            <id>https://jvpnews.com/article/appreciation-of-the-rupee-against-the-us-dollar-1788516488</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. </p><p>அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437ரூபாய் 13 சதம், விற்பனைப் பெறுமதி 451ரூபா 63 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 388ரூபாய் 47 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0826d371-1ed8-4b05-8250-0642e56a0344/26-6a9a988a0007a.webp' /></p><p>
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 415 ரூபாய் 10சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 69 சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 45சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 34சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 08என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 14 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/valikamam-north-land-acquisition-gazette-1788515493"></link>
            <id>https://jvpnews.com/article/valikamam-north-land-acquisition-gazette-1788515493</id>
            <summary type="text">&amp;nbsp; கடந்தகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடந்தகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்தார்.</p><p> 

யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) 20 ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bbf0dd-9add-4254-93d2-47586ef7c2f9/26-6a9a94a72c449.webp' /></p><p>
</p><p>
வலி வடக்கு மக்களின் சுமார் 6,317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.

மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அனுரகுமார தலைமையிலான அரசாங்கமும் குறித்தவர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசுகளைப் போல் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.</p><p></p><h2>&nbsp;மூன்று இடங்களில் போராட்டங்கள்&nbsp;</h2><p> 


வலி வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவக்குமாறு கோரி மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.</p><p>

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.</p><p></p><p> </p><p>

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக வலி வடக்கு காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:48:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை தொடருந்தில் மோதி உயிரை மாய்த்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-loses-his-life-being-struck-train-trincomale-1788514761"></link>
            <id>https://jvpnews.com/article/man-loses-his-life-being-struck-train-trincomale-1788514761</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா தொடருந்து நிலையத்திற்கும் திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவராவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08eb908-b604-460b-8c94-28115a2e5e70/26-6a9a91cb03224.webp' /></p><p></p><p>&nbsp;இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு ; பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/details-revealed-background-kollupitiya-shooting-1788512310"></link>
            <id>https://jvpnews.com/article/details-revealed-background-kollupitiya-shooting-1788512310</id>
            <summary type="text">கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p>



கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியினர் சம்பவத்தையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8044c87-a747-43ef-b994-96e77200b1e3/26-6a9a883803a6f.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய சந்தேகநபர், பல துப்பாக்கிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான குறித்த திருமணமாகாத சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 12 போர் ரக துப்பாக்கி, அதற்கான இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாயு ரைபிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>



பொலிஸ் விசாரணைகளின்படி, காயமடைந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்த நெருங்கிய தொடர்பே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. </p><p>



மேலும், சம்பவத்துக்கு முந்தைய இரவு குறித்த பெண் மற்றொரு இளம் பெண்ணை சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குடியிருப்பு வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:58:41+00:00</updated>
        </entry>
    </feed>
