<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-19T16:41:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965</id>
            <summary type="text">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b43e6d-00be-467f-8e2c-9589ac34a5d5/26-6aae746e868b1.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">குறித்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p style="text-align: justify; ">
 

இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T16:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது ; நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயங்காது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ், அங்கு பணியாற்றி வந்த அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதால் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் எனக் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927877a-b6ad-452d-93e5-2b161c1e2fd0/26-6aaeb33ea57e1.webp' /></p><p>இது தொடர்பாக விடயப்பரப்பிற்குரிய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p> இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயல்வதாகவும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எது எவ்வாறாயினும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ள அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரம்: மோடியின் உதவியை நாடுங்கள் ; ஜனாதிபதிக்கு மனோ எம்.பி. கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anoj-an-case-seek-modi-s-assistance-1789825583"></link>
            <id>https://jvpnews.com/article/anoj-an-case-seek-modi-s-assistance-1789825583</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>



அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf88b1e-6eb0-496f-8e4d-846876cbca27/26-6aae9230ebab5.webp' /></p><h2>மோடியிடம் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>


எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>


மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T14:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolboy-missing-after-drowning-at-payagala-beach-1789824532"></link>
            <id>https://jvpnews.com/article/schoolboy-missing-after-drowning-at-payagala-beach-1789824532</id>
            <summary type="text">பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

இவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>
 

இவ்வாறு காணாமல் போனவர் சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13429da5-67e9-47e9-8726-126ae8738133/26-6aae8e164d8cd.webp' /></p><h2>விசேட நடவடிக்கை</h2><p>

 

குறித்த மாணவன் மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக்கொண்டிருந்த போது, நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வேனுக்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-unfolds-inside-van-in-tamil-area-1789822156"></link>
            <id>https://jvpnews.com/article/incident-unfolds-inside-van-in-tamil-area-1789822156</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரை வேனுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed28630-3146-4e05-ae8a-af1f01cb8878/26-6aae84cdae425.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T13:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியவை உலுக்கிய கொடூரம் ; பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட சிறுமியின் உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-inflicted-on-delhi-girl-1789823236"></link>
            <id>https://jvpnews.com/article/horror-inflicted-on-delhi-girl-1789823236</id>
            <summary type="text">இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify; ">டில்லியின் ஸ்வரூப் நகரில், திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், முதலில், உடல் ஆணுடையது என காவல்துறையினர் தவறுதலாக கருதியது தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029680a7-2cf7-427b-a89b-c91b5bb33a24/26-6aae8905dfddd.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மூன்று சிறார்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.



</p><p style="text-align: justify; ">முதற்கட்ட விசாரணையில்தான், கண்டெடுக்கப்பட்ட உடல், சிறுமியுடையது என்றும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டதும் தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; ">
முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் எலும்புகள் வெளியே தெரிவதாகவும், வலது கை காணாமல் போயிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
</p><p style="text-align: justify; ">
முதலில், உடலைக் கண்டதும், அது பெண்ணுடையது என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">மண்டை ஓடு, விலா எலும்பு வெளியே தெரிந்தது, நாங்கள் பார்த்தபோது, அது ஒரு நடுத்தர ஆணின் உடல் என்று நினைத்தோம் என்கிறார்கள்.</p><p style="text-align: justify; ">
ஆனால் உடல் கூராய்வுக்குப் பிறகே, அது பெண் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">பிறகுதான், கையில் ஓரிடத்தில் மூன்று நட்சத்திரங்களை பச்சைக் குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">பிறகு, காணாமல் போன பெண்கள் குறித்து புகார் அளித்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அதில் ஒருவர் வைத்திருந்த பெண்ணின் புகைப்படத்தில் அதே மூன்று நட்சத்திரம் பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்தான் காணாமல் போனவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குத்திக் கொலை செய்து வயலில் வீசியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மூன்று சிறார்கள் உள்பட நான்கு பேருக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு டெம்ரோ வாகனத்தில் குற்றவாளிகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிபரின் உயிரைப் பறித்த விபத்து ; பேருந்து சாரதி அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-claims-principal-s-life-1789821696"></link>
            <id>https://jvpnews.com/article/accident-claims-principal-s-life-1789821696</id>
            <summary type="text">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9465b370-aecf-43e0-b07c-b474208074b8/26-6aae8301cfbfe.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">&nbsp; தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காரை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மயானத்தை துப்பரவு செய்ய சென்ற ஊரவர்களுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519"></link>
            <id>https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519</id>
            <summary type="text">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

கந்தபுரம் மயானப் பகுதியில் அப்பகுதி கிராம மக்கள் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e9dbff-0e81-4f4b-91f6-1edfeb96fc93/26-6aae7a811503f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது குறித்து உடனடியாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிஸார், அங்கு கண்டெடுக்கப்பட்ட 06, ரி-56 ரக துப்பாக்கிக்க மகசின்களையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த மகசின்கள் யாரால், எப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்தும், அப்பகுதியில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[245 முறைப்பாடுகள் ; இரு இளம் பெண் உயரதிகாரிகள் செய்த செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339</id>
            <summary type="text">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறித்த நிறுவனம் தொடர்பாக 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்த மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த இரு யுவதிகள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e3aae8-c973-4f33-9f20-de0d1340b0f2/26-6aae6e147c6ef.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்ட இருவரும் அந்நிறுவனத்தின் முதன்மை விற்பனை முகாமையாளராகவும், செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களிடம் இருந்த 04 சொகுசு கார்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இவர்கள் இருவரையும் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரும் வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிகான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T11:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஓயாவில் 3 யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372"></link>
            <id>https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372</id>
            <summary type="text">படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de98442d-23db-4701-b624-8f638c09462c/26-6aae6a4deb860.webp' /></p><p>
</p><p>
 

இவர்கள் அனைவரும் 25 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

 

காணாமல் போனவர்களைத் தேடி பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:58:38+00:00</updated>
        </entry>
    </feed>
