<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T05:49:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைக்கு உட்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528"></link>
            <id>https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cad345-4e98-402f-8fc6-e41ecd719273/26-6a5db6c1d6e2e.webp' /></p><p>
</p><p>
நாட்டில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளே முக்கிய காரணங்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த நிலை சோதனைப் பணிகளை மேற்கொள்வதற்குத் தகுதியான தொழில்நுட்ப அதிகாரிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கான தொடர்புடைய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணி ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-20T05:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 76,000 ஐ கடந்த எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் <a href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553" target="_blank">டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை </a>76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f7efda-4b39-446d-9f2d-ad5aa931e1d4/26-6a5db21be3245.webp' /></p><p> </p><p>

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அதேவேளை 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945"></link>
            <id>https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் &#039;குங்பூ ருவான்&#039; என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d3ee84-867d-4f02-9045-b6881bc698de/26-6a5dacab3d4da.webp' /></p><h2>வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், 

நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'குங்பூ ருவான்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிட்டு போன வெற்றி ; கதறி அழுத லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், நடப்புச் செம்பியனான ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbc1d65-3f65-4eee-a08c-c5f4830e6c12/26-6a5da94c26db7.webp' /></p><p>
</p><p>


தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தநிலையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர், நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி" என்று உருக்கமாகத் பதிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T04:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு; ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; கலங்கும் முன்னாள் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627"></link>
            <id>https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டார்.
</p><p>


உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2064925a-8ab6-4c22-bd81-a696e347b68a/26-6a5da784c8c37.webp' /></p><p>
</p><p>


 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். </p><p>மிகவும் நேர்மையான, வெளிப்படையான, நல்ல குணத்துடன் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டவர்.



பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான நிலைப்பாட்டு மோதல்களால் பொலிஸ் மா அதிபருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் செயற்பட்டார்.</p><p></p><p> </p><p>ஆர்ப்பாட்டக்காலத்திலும் கூட மிக அமைதியாகவே செயற்பட்டார்.



இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் அவரும் எனது நண்பரொருவரும் சந்தித்தோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்பட சிறிது நேரத்துக்கு முன்பு, “சேர் உங்களின் வீட்டுக்கும் வர வேண்டும் என்றுகூட தெரிவித்தார்.&nbsp;</p><p>அரசியலுக்கு அப்பால் சமய, தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தோம். அவ்வாறிருக்கையில், அவரின் இறப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>



இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கூற முடியாது. விசாரணைகளினூடாகவே புரியும். அதனால், இதுபோன்று பெறுமதிமிக்க அதிகாரிகளை பொலிஸ் மட்டுமல்ல ஏனைய சேவைப்பிரிவுகளுக்கும் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரம் அவர். இவரை போன்றவர்கள் நாட்டுக்கு அவசியமானவர்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T04:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் ; பல காலம் இளைஞன் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125"></link>
            <id>https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதுபற்றி தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42990249-3bf7-41d5-b187-fdc720932de1/26-6a5d6af7151de.webp' /></p><h2 style="text-align: justify; ">விளம்பரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு&nbsp; இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T01:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019"></link>
            <id>https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p>

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fdb6f57-224b-4a0d-a4d4-29b5ff9f8bf2/26-6a5d76444c9b0.webp' /></p><p> </p><h2>அது எந்தெந்த ராசிகள் </h2><p><b>
ரிஷபம்: </b>ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.</p><p></p><p>
</p><p><b>

சிம்மம்:</b> சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.</p><p></p><p> </p><p><b>

துலாம்:</b> துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p><b>
மகரம்:</b> மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091"></link>
            <id>https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"> ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e82a05-7ac8-479d-a26e-7f56a674a2ee/26-6a5d66ed61e95.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு குழுவினர், மது அருந்திவிட்டு வாகனத்தில் கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், அதே பாதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது மோதியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> விபத்தில் சிக்கிய துவிச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த நபர் அருகிலுள்ள காட்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர், ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருந்தது.</p><p style="text-align: justify;">இருப்பினும், விபத்து நடந்த இடத்தில் கிடந்த வாகனத்தின் உடைந்த உதிரிப்பாகங்களைக் கைப்பற்றிய பொலிஸார், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையின் பயனாக, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "> விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.&nbsp; இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T00:08:18+00:00</updated>
        </entry>
    </feed>
