<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-14T01:51:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386"></link>
            <id>https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386</id>
            <summary type="text">சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3890b4d-7fe1-4611-bd7b-95f3d0aeb98e/26-6a7e368498356.webp' /></p><p>இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp;இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளார். இங்கு அக்டோபர் 09 ஆம் திகதி வரை இருப்பார்.&nbsp;இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff81b099-2797-4434-b616-3099253b6912/26-6a7e3685508b3.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குஙம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dda8fb47-997c-4615-af77-082bd258e747/26-6a7e36862092f.webp' /></p><h3>மிதுனம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57bfbe67-aec4-4652-aaf0-fb7736d1c422/26-6a7e3686e240f.webp' /></p><h3>கன்னி
</h3><p>சனி நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa191a2-f585-4a6e-9b60-8151c8f1695a/26-6a7e368798079.webp' /></p><h3>துலாம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதுவும் இந்த மாற்றமானது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நல்ல நிதி முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd7b2a4c-ba81-4438-9974-5b8816bdecd1/26-6a7e36884af87.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T23:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066"></link>
            <id>https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066</id>
            <summary type="text">தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 1 நெல்லிக்காய் எவ்வாறான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771ac955-c48b-4ddb-8b3d-c417505c3970/26-6a7e40fc74a7b.webp' /></p><h4>அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்</h4><p>அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bea593-ea0c-4410-ac1e-0c5781a004a1/26-6a7e40fff021c.webp' /></p><h4>தலைமுடி பிரச்சனை</h4><p>தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5a7356-770d-425d-aa59-1e71cad6c293/26-6a7e40ff48c3d.webp' /></p><h4>சரும பிரச்சனை&nbsp;</h4><p>பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a152027-687f-4b70-aab7-65a697f3a6b4/26-6a7e40fe98970.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்தி
</h4><p>அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3328619e-e801-418f-85da-f818b796758a/26-6a7e40fde6630.webp' /></p><h4>சர்க்கரை நோய் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18fc290-fbdd-45f0-8fd6-5e0a25c0a538/26-6a7e40fd358f9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T22:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொலை ; கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பழிவாங்கலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735"></link>
            <id>https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735</id>
            <summary type="text">பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><p> 

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர். </p><p>

கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b4efc0-ea95-485d-b014-fb713b118c35/26-6a7e2c29210ea.webp' /></p><p> 

அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் பெக்கோ சமனுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க பொலிஸாரால் மீட்கப்பட்டது. </p><p>

மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று (12) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. </p><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்குள்ள CCTV கெமராவிலும் பதிவாகியுள்ளது.</p><p> 

9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், துப்பாக்கிதாரிகள் அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

அதன் பின்னர் துப்பாக்கிதாரிகள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

பின்னர், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தோலிக்க சபையுடன் அரசாங்கம் முக்கிய கலந்துரையாடல் ; பாடசாலைகள் தொடர்பில் பல தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927"></link>
            <id>https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927</id>
            <summary type="text">விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p> </p><p></p><p>அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தந்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f1bc70-296a-428b-8f9b-d8aef1e300a4/26-6a7e26192d889.webp' /></p><p>மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

வருடத்திற்கு மூன்று தடவைகள் கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக இதன்போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். </p><p>

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் ஆராய வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார். </p><p>

எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:12:21+00:00</updated>
        </entry>
    </feed>
