<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-17T21:25:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் சாமி அம்மாவின் அருள்தேடி வந்த லிமினி ராஜபக்‌ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008"></link>
            <id>https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு கேட்பதற்காக நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ அவர்கள் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p></p><p>இந்நிகழ்வில் அன்னாரும் அவருடைய குடும்பத்தினரும் சாமி அம்மாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866e67e3-9f68-409f-8163-194705de30d3/26-6aac1721d472e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T20:04:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை ; நாகமுத்து பிரதீபராஜா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><p>குறித்த தாழமுக்கம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில், பங்களாதேஷ் வழங்கியுள்ள ‘அர்னாப்’ (Arnap) என்ற பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>&nbsp;தாழமுக்கம்</h3><p> எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1809b230-a8e5-4b5a-bd68-99dd0e2400ad/26-6aac47c674979.webp' /></p><p>இந்தத் தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனால் இலங்கைக்கு நேரடியான புயல் தாக்கம் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும், அதன் மறைமுக தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் நிறைந்த காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக செப்டெம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், செப்டெம்பர் 20 முதல் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfc74e4-1721-4cb0-af60-38efde4c1812/26-6aac47c729878.webp' /></p><p>இதனிடையே, எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கத்தால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை பல்வேறு வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால் பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் கடல் நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T20:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் மேடையில் தொடங்கிய சர்ச்சை ; அரசியல் களத்தில் வெடித்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-in-political-arena-bigg-boss-stage-1789674487"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-in-political-arena-bigg-boss-stage-1789674487</id>
            <summary type="text">பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தலைமைத்துவம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தலைமைத்துவம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரிடம் தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, பிரச்சினைகள் வரும்போது களத்தை விட்டு விலகுவது ஒரு தலைவருக்கு அழகல்ல என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.</p><p> அவரது இந்தப் பேச்சு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27afb211-a2bf-472e-9e26-1ac5d2aee6ab/26-6aac43f8ccc9b.webp' /></p><p>இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர். </p><p>இதற்கு விளக்கமளித்த விஜய் தொலைக்காட்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் நிகழ்ச்சியின் கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குள் நடைபெறுபவை என்றும், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள தனிநபர், அமைப்பு அல்லது அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதி திமுகவைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஒரு தனியார் நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக அரசியல் தலைவர்களை பயன்படுத்துவது தவறானது என்றும், அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்த விஜய் சேதுபதி, பின்னர் திமுக ஆட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த ஆட்சியைப் பாராட்டிப் பேசியதாகவும் மோகன் ஜி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தற்போது தவெக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் விஜய் சேதுபதியின் அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மத்தியில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><p> இவை அனைத்தும் மோகன் ஜி முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டுகளாகும்.

இதனிடையே, விஜய் சேதுபதியின் பிக் பாஸ் பேச்சு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து அரசியல் விவாதமாக மாறியுள்ளது. </p><p>அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T19:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெலியில் மறைந்த கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/26th-memorial-day-of-the-late-kathirkamathambi-1789673679"></link>
            <id>https://jvpnews.com/article/26th-memorial-day-of-the-late-kathirkamathambi-1789673679</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றாளருமான கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம் இன்று (16) அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றாளருமான கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம் இன்று (16) அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்டவர்களுடன் கதிர்காமத்தம்பியும் உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c674ae69-b3ca-432c-b02a-bf050d5a96a8/26-6aac40d149d50.webp' /></p><p>அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் வீரமுனை மண்ணில் 1951ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பிறந்த கதிர்காமத்தம்பி, தனது இளமைப் பருவத்திலேயே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அவரது நினைவு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட அவர், பின்னர் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
</p><p>
1977 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியதுடன், அக்காலகட்டத்தின் பல முக்கிய தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களுடனும் அவர் தொடர்புகளைப் பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் கதிர்காமத்தம்பி முக்கிய பங்காற்றியதாக அவரது அரசியல் பயணம் தொடர்பான பதிவுகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாகப் போட்டியிட்ட அவர், 1989 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விகிதாசாரத் தேர்தல்களிலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றிய கதிர்காமத்தம்பி, இந்தியாவில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டதுடன், பலருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவரை நினைவுகூரும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T19:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணச்சீட்டு பெற முடியவில்லையா? இணையத்தில் பெற புதிய வசதி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649"></link>
            <id>https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649</id>
            <summary type="text">ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 'pravesha' அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042706c9-37d3-437c-8e1b-d0c676f201ec/26-6aac31137e433.webp' /></p><p>இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று (17) வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. </p><p>

ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.</p><p> 

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.</p><p> 

ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இதன் காரணமாக இன்று காலை ரயில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.</p><p> 

பணிப்புறக்கணிப்பு அமுலில் உள்ள போதிலும், இன்று (17) காலையைப் போன்றே பிற்பகலிலும் வழக்கம்போல் ரயில்களை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவு விவகாரம் ; கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248</id>
            <summary type="text">சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>முன்னதாக அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியானதாகக் கூறப்படும் மேன்முறையீட்டு தீர்ப்பிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c677df5-4fba-41c5-9a1b-2abb6322bfdf/26-6aac2f8280714.webp' /></p><p>சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் சவுதி அதிகாரிகளால் அனோஜன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னைய செய்திகள் தெரிவித்திருந்தன. </p><p>அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆரம்ப தண்டனையில் சிறைத்தண்டனை, 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த நிலையில், தண்டனையை குறைப்பதற்காக சட்ட ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தகைய முயற்சிகளுக்கு மத்தியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அனோஜனின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, அனோஜனுக்காக அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது சவுதி அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படும் வரை, மரண தண்டனை குறித்த தகவலை “விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்ற அடிப்படையிலேயே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.</p><p>

முன்னதாக அனோஜனுக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் தொடர்பான தகவலை இலங்கைத் தூதரகம் குடும்பத்தினருக்கு அறிவித்ததாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு ; நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e05c736-7e38-4daf-a42b-d22c0dc8eeaa/26-6aac1a8b4b751.webp' /></p><p>

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[$1 பில்லியன் பணத்தை வெளியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966"></link>
            <id>https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தனியார் வங்கி அதிகாரிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதன்படி ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7825bd65-108d-49f4-a76a-7f28fae81e20/26-6aac131041a66.webp' /></p><p>எனினும், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். </p><p>

மேலும், குறித்த வங்கி அதிகாரிகள் அவர்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடை செய்து மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் ஜிப்ரி என்ற வர்த்தகரின் பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் மற்றொரு சந்தேகநபரை வரும் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் நடத்தியவரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835"></link>
            <id>https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p> 

இந்தக் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.</p><h4>மேலதிக விசாரணை</h4><p> </p><p>

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் மேற்பார்வையில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f7639b-3448-4472-8d9c-dfbb39955162/26-6aac0ea5cf324.webp' /></p><p>இவ்வாறான பின்னணியில் கைது செய்யப்பட்ட, கைக்குண்டு தாக்குதலை நடத்திய நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார். </p><p>

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 2025 ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

பின்னர் அவர் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி இரத்மலானையில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். </p><p>

அதற்காக போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு 5 இலட்சம் ரூபாய் பணமும் 10 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். </p><p>

அதனைத் தொடர்ந்து தெஹிவளை வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல் நடத்தும் ஒப்பந்தத்தையும் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோரே தன்னிடம் ஒப்படைத்ததாக அவர் கூறியுள்ளார். </p><p>

அதன்படி தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குரிய வீட்டைக் காட்டுவதற்காக அதில் மற்றொரு நபர் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0020574c-7425-4946-bb24-941aca49ef06/26-6aac0ea6a09cb.webp' /></p><p>இருப்பினும், அந்த நபர் தனக்குக் காட்டியது தவறான வீடு என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p>

குறித்த தாக்குதலின் பின்னர் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை வழங்கி, பிபிலை பகுதிக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> 

பிபிலையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவரிடம் நடத்திய விசாரணையில், அதற்காக அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் இருபதாயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:00:44+00:00</updated>
        </entry>
    </feed>
