<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-16T15:49:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து திரும்பும் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-returning-from-london-1789564748"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-returning-from-london-1789564748</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் 10-ஆம் திகதி முதலமைச்சர் விஜய் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2101eac2-9a62-4bff-ac69-6edc4f358b8e/26-6aaa974e9ba32.webp' /></p><h2>உற்சாக வரவேற்பு அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு</h2><p>
</p><p>
இந் நிலையில் தனது லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.</p><p></p><p>
</p><p>
 தனது வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்டம்பர் 17) காலை அவர் சென்னைசர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைகிறார்.</p><p></p><p>

முதலமைச்சரின் வருகையையொட்டி வானூர்தி நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிறந்து நோர்வேயில் அமைச்சரான கம்சி குணரத்னம்; கடந்து வந்த பாதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-to-norway-cabinet-eelam-kamzy-gunaratnam-1789563232"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-to-norway-cabinet-eelam-kamzy-gunaratnam-1789563232</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கையில் பிறந்த அரசியல்வாதியான கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam), நார்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஈழ தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கையில் பிறந்த அரசியல்வாதியான கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam), நார்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஈழ தமிழர்களுக்கு உலகில் பெருமையை தேடி கொடுத்துள்ளது.</p><p>

 யாழ்ப்பாணத்திலிருந்து நார்வே அமைச்சரவை வரை நீண்ட அவரது அரசியல் பயணத்தில் இது மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.

ஜோன்-இவார் நைகார்டுக்கு (Jon-Ivar Nygård) பதிலாக, செப்டம்பர் 11 அன்று நார்வே அரசாங்கம் குணரத்னத்தை அதிகாரப்பூர்வமாக இந்தப் பதவியில் நியமித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b966c93d-0231-421f-8e99-2a368495b3a2/26-6aaa9161db0d6.webp' /></p><p> போக்குவரத்து அமைச்சராக, மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் அஞ்சல் சேவைகள் தொடர்பான கொள்கைகளுக்கு அவர் பொறுப்பாவார்.</p><h2>கம்சி குணரத்னம் கடந்து வந்த பாதை&nbsp;</h2><p>
1988-ல் இலங்கையில் 'கம்ஷஜினி குணரத்னம்' (Khamshajiny Gunaratnam) என்ற பெயரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் நார்வேக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் தொழிலாளர் கட்சியின் (Labour Party) ஊடாக நார்வே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.</p><p></p><p>
</p><p>
19 வயதில், 2007-ஆம் ஆண்டில் ஒஸ்லோ நகர சபைக்குள் நுழைந்த குணரத்னம், 2015 முதல் 2021 வரை ஒஸ்லோவின் துணை மேயராகப் பணியாற்றினார். 2021-ல் நார்வே நாடாளுமன்றமான 'ஸ்டோர்டிங்' (Storting)-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2025-2029 காலப்பகுதிக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம் ஒன்றின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலான, 2011-ஆம் ஆண்டு நடந்த 'உட்டோயா' (Utøya) படுகொலைச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.</p><p></p><p>
</p><p>
நார்வேயில் தனது அரசியல் பயணத்தின்போதும், இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து குணரத்னம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளார்.</p><p>

1988-ல் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்ததை நினைவுகூர்ந்த அவர், பிப்ரவரி 2026-ல் நார்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.</p><p></p><p>

மேலும், யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அவர் குறிப்பாகக் குறிப்பிட்டதுடன், மோதலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தினார்</p>]]></content>
            <updated>2026-09-16T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழம் வேண்டாம் ;அர்ச்சுனா எம்பி எம்முடன் இருப்பதில் தவறு இல்லை ; உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867"></link>
            <id>https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;இதன்போது அவர்&nbsp; மேலும்&nbsp; கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c65eaf4-241b-42b4-b250-a82de9217744/26-6aaa93dd3d756.webp' /></p><h2>தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம்</h2><p>அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை ஆதரிக்க வேண்டும்.</p><p></p><p>

அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் ” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T14:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தவொரு புதிய &quot;நாய் வரியையும்&quot; விதிக்கவில்லை; பரவும் வதந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888"></link>
            <id>https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;&#039;கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு&#039; (Veterinary and Animal Welfare Alliance), புதிய &#039;வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;'கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு' (Veterinary and Animal Welfare Alliance), புதிய 'வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச் சட்டம்' எந்தவொரு புதிய "நாய் வரியையும்" விதிக்கவில்லை என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களைச் சிறையில் அடைப்பதற்கான எந்தவொரு விதியும் இதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p> 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அக்கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினரான டாக்டர் சமித் நானயக்கார, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f684aa8-c0df-4aa8-b538-db10762c932c/26-6aaa883a92a67.webp' /></p><h2>பொதுமக்கள் தேவையற்ற அச்சம்</h2><p>

உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கனவே ஒரு சிறிய கட்டணத்தில் நடைபெற்று வருவதாகவும், இது இந்தச் சட்டத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

தற்போது இதற்காகக் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் 100 ரூபாயும், அனுராதபுரப் பகுதியில் 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு உள்ளூராட்சி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், கிராம மட்டத்தில் செயல்படுத்தப்படும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்களுடன் இணைந்தே இந்தப் பதிவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தெருநாய் ஒன்றுக்கு ஒருமுறையோ அல்லது அவ்வப்போதோ உணவளிப்பது மட்டும் ஒருவரை அந்த விலங்கின் சட்டப்பூர்வ உரிமையாளராக மாற்றிவிடாது என்று டாக்டர் நானயக்கார மேலும் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p> </p><p>

இருப்பினும், ஒருவர் தொடர்ந்து ஒரு விலங்குக்கு உணவளித்து அதனுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அந்த நாயைப் பராமரிப்பதற்கும், அதற்குத் தேவையான வெறிநாய் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கும் அவருக்கு ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது.
</p><p>
எந்தவொரு உரிமையாளரும் இல்லாத உண்மையான தெருநாய்களைப் பராமரிக்கும் பொறுப்பு தொடர்ந்து உள்ளூராட்சி அமைப்புகளிடமே உள்ளது. 

அவற்றிற்குத் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வது இந்த அமைப்புகளின் பணியாகும்.</p><p></p><p> மேலும், நாய்களைத் தன்னிச்சையாகக் கொல்வதற்கு எதிரான கடுமையான சட்ட விதிகளும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T13:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751</id>
            <summary type="text">முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&amp;nbsp; &amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&nbsp; &nbsp; கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (16)&nbsp; பிறப்பித்தார்.</p><p>

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கில் அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் ஜாமீன்தாரர்களாக ஆஜராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6d2220-c8e3-4f83-b7e2-d5cc96d3ed86/26-6aaa8b98a89da.webp' /></p><p></p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
 இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
 கபில சந்திரசேன&nbsp; அரவிந்த சில்வாவின் வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். சிசிடிவி மற்றும் பிற ஆதாரங்கள் இல்லாதபோதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7665c5fb-d62c-425e-8896-1c4805c95c04/26-6aaa8b99856a5.webp' /></p><p>
இதற்கிடையில், அரவிந்த டி சில்வாவின் தாயார் திருமதி ராணி டி சில்வா 14ஆம் தேதி காலமானார். </p><p>

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்தன. இறுதிச் சடங்கு காரணமாக அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இந்த&nbsp; நிலையிலேயே அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறபிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T13:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வைத்தியசாலை விரிவாக்கம்; ஜனாதிபதி அநுர குமார விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-kumara-visits-mannar-hospital-1789565846"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-kumara-visits-mannar-hospital-1789565846</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>


மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c2a007-c879-414e-82c0-09b5097bffb2/26-6aaa9b9dc6960.webp' /></p><p> </p><p>நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.



இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் அவசர விபத்துகள் மற்றும் ஏனைய நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். </p><p>



இதனுடன் இணைந்ததாக, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>


அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தை குவிக்கும் இலங்கை சுங்கம்! 2 டிரில்லியன் வருவாய் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-customs-rules-in-revenue-2-trillion-1789565591"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-customs-rules-in-revenue-2-trillion-1789565591</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவுசெய்து, ரூ. 2 டிரில்லியன் வருவாய் வசூல் என்ற இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவுசெய்து, ரூ. 2 டிரில்லியன் வருவாய் வசூல் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. </p><p> 

நேற்று ரூ. 2 டிரில்லியன் என்ற வரம்பு கடக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் அறிவித்ததுடன், இந்தச் சாதனையைத் தனது துறைக்கு ஒரு முக்கிய மைல்கல் என்றும் விவரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91194c6e-5e3e-4c56-9c47-7ab0e4f5791a/26-6aaa9a9930ac5.webp' /></p><p>
</p><p>
இந்த அண்மைய வருவாய் புள்ளிவிவரம், அரசாங்க வருவாய் வசூலுக்கு சுங்கத் திணைக்களத்தின் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசக் கடல் பரப்பில் இந்திய-பாகிஸ்தான் மோதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-between-indian-and-pakistani-naval-ships-1789565290"></link>
            <id>https://jvpnews.com/article/clash-between-indian-and-pakistani-naval-ships-1789565290</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>

பாகிஸ்தான் கடற்படைப் பிரிவினரின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு ஒவ்வாத செயல்பாடே இந்த மோதலுக்குக் காரணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a8c5bb-f17c-400e-a38f-53ea3f4c38cb/26-6aaa996c4c889.webp' /></p><h2>&nbsp;இந்தியக்&nbsp; கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை</h2><p> 

இந்த மோதலில் இந்தியக் கடற்படைக் கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், இராணுவப் பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் படைகளின் நடமாட்டம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 1991-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை, பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் செயல் நேரடியாக மீறும் வகையில் இருந்ததாக இந்தியா கூறியது.</p><p></p><p> </p><p>இந்தியகலாச்சாரம்

விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், சர்வதேசக் கடற்பரப்பில் செயல்படும்போது இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று இடையே குறைந்தபட்சம் மூன்று கடல் மைல் இடைவெளியைப் பேண வேண்டும் என்று இந்த விதிமுறை வலியுறுத்துகிறது.</p><p>

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி பாலியல் மிரட்டல் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/online-harassment-in-sri-lanka-announcement-public-1789559282"></link>
            <id>https://jvpnews.com/article/online-harassment-in-sri-lanka-announcement-public-1789559282</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SLCERT), &quot;பாலியல் மிரட்டல்&quot; (sextortion) எனப்படும் இணையக் குற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SLCERT), "பாலியல் மிரட்டல்" (sextortion) எனப்படும் இணையக் குற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. </p><p>

இதில், உணர்வுப்பூர்வமான அல்லது தனிப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்துவது அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e721ddd2-50dc-4834-aaf7-36733e00f283/26-6aaa81f45197f.webp' /></p><p></p><h2>இணைய அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
சமூக ஊடக வலைப்பின்னல்கள், செய்திப் பரிமாற்ற செயலிகள், டேட்டிங் செயலிகள் அல்லது இணைய விளையாட்டுகள் வழியாக உருவாகும் இந்த இணைய அச்சுறுத்தல், யாரையும் குறிவைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>இதில், குற்றவாளிகள் முதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பாக நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் அவர்களின் உணர்வுப்பூர்வமான புகைப்படங்கள் அல்லது தரவுகளைப் பெற்று, அதன்பிறகு பணம், கூடுதல் புகைப்படங்கள் அல்லது பல்வேறு இதர சலுகைகளைக் கேட்டு அவர்களை அச்சுறுத்துகின்றனர்.</p><p></p><p>

நவீன உருவாக்க செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றத்தால், குற்றவாளிகள் தனிநபர்களை அச்சுறுத்துவதற்காக போலியான, வெளிப்படையான டீப்ஃபேக்குகளை (deepfakes) உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
</p><p>
ஒருவர் இதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டால், குற்றவாளிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவர்களின் செய்திகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கான ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்குவதற்கு முன்பு உரிய உதவியை நாட வேண்டும் என்றும் SLCERT அறிவுறுத்துகிறது.</p><p></p><p>

இணையத்தில் தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16) நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba07ac88-fc93-4f3e-8376-00a1f3a44d18/26-6aaa5060a6c10.webp' /></p><p>
</p><p>
 

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.</p><p></p><h2>மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்</h2><p>

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.</p><p></p><p>

 

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132"></link>
            <id>https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க - கொழும்பு வீதியில் அமைந்துள்ள&nbsp; உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d357a937-5b8d-4648-992c-734f45b838bc/26-6aaa75a675c94.webp' /></p><h2>அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு</h2><p>
</p><p>
 உணவகத்தின் மேல் தளத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகச் சீதுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் அந்த உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போயகனே, இசுருபெதெச, 3வது லேனைச் சேர்ந்த 48 வயதுடைய வீரசிங்க முதியன்சேலாகே பிரதீப் பிரியசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நேற்று இரவு (15) வேலையை முடித்த பிறகு அவர் உணவகத்தின் மேல் மாடியில் தனது அறையில் இருந்ததாகவும், உணவகத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு ஊழியர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

 இறந்தவருக்கும் அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஒன்று ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

எனினும், இந்த மரணம் நிகழ்ந்த சரியான விதமும் அதற்கான காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-by-unidentified-persons-dies-1789557359"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-by-unidentified-persons-dies-1789557359</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4476c107-cd98-48ac-8cfb-e70dfec42548/26-6aaa7a7197857.webp' /></p><p> </p><p>

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:12:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுக்கு பறந்த தாயார்; மீண்டும் சிறைக்கு அனுப்பட்ட நாமல் ராஜபக்ஷ !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991</id>
            <summary type="text">

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. </p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba539dbc-b101-48ea-99fe-ddea1c80d261/26-6aaa5da8e1dc6.webp' /></p><p> </p><p>

இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>&nbsp; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் வானூர்தி கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614" target="_blank">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்</a>ஷ, சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>

ஏற்கனவே கையூட்டல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p>அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>
ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராக வெண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் கைவிடப்பட்ட சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119"></link>
            <id>https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119</id>
            <summary type="text">கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சருமத்தைப் பொலிவாக்கும் முகப்பூச்சுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் கொண்டுவரப்பட்ட 6 பயணப் பைகளிலிருந்தே அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae08a21a-d4ff-44cb-99e3-6254552cff00/26-6aaa6dc99b8d5.webp' /></p><h2>மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா</h2><p>
</p><p>
6 பயணப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 111,400 சிகரெட்டுகளைக் கொண்ட 557 சிகரெட் கார்ட்டூன்களும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 125 முகப்பூச்சுப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் முறையான சுங்க விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த சிகரெட்டுகள் மற்றும் முகப்பூச்சுத் தொகையை அரசுடமையாக்கியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவற்றை அழிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
</p><p>
 இன்னிலையில் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவந்து கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்தின் மேற்கூரை பேனல்கள் உடைந்ததால் அலறிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554"></link>
            <id>https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கும் சக்கரப் பகுதி மற்றும் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb3a1c2-69ca-4254-a0b9-1375d50e36c8/26-6aaa67abf25a8.webp' /></p><h2>&nbsp;என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு</h2><p> </p><p>

இதனால் விமானம் மிகக் கடுமையாக அதிரத் தொடங்கியதில், பயணிகளின் பைகள் வைக்கும் அறைகள் திறந்து உடைமைகள் சிதறி விழுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறிய காணொளி சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே அவசரத் தரையிறக்கம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதேவேளை சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் புதிய விமானங்களையோ உதிரிப் பாகங்களையோ வாங்க முடியாததால், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கிக் கிடப்பதோடு, சுமார் 32 ஆண்டுகள் பழமையான விமானங்களே அங்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:52:34+00:00</updated>
        </entry>
    </feed>
