<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-23T05:33:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி நகரில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல் ; வீதி உலா வரும் முதலாவது ரந்தோலி பெரஹரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-transportation-plan-implemented-in-kandy-1787462927"></link>
            <id>https://jvpnews.com/article/special-transportation-plan-implemented-in-kandy-1787462927</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா இன்று (23) மாலை 6.44 மணிக்குக் குறிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் வீதி உலா வரவுள்ளது.
</p><p>
 

இந்தப் பெரஹரா தளதா வீதி,விகாரை வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொட்டுகொடல்ல வீதி, குறுக்கு வீதி , டி.எஸ். சேனாநாயக்க வீதி, ராஜா வீதி வழியே சென்று மேல்நோக்கி வந்து முதலாவது ரந்தோலி பெரஹரா நிறைவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc98822-0f8e-4be3-8e25-1319eb7e682b/26-6a8a8510f32b3.webp' /></p><p>

 

இந்தக் காலப்பகுதியில் கண்டி நகரத்திற்குள் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
</p><p>
 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீதித் தடைகள் அமைத்தல், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை வழங்குதல் போன்ற விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><h4>முதலாவது ரந்தோலி பெரஹரா விபரங்கள்</h4><p>
 

2026.08.23 ஆம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹரா மாளிகையிலிருந்து ஆரம்பமாகும். இது தலதா வீதி, பன்சல் வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, கொடுகொடெல்ல வீதி, குறுக்கு வீதி (Cross Street), டி.எஸ். சேனநாயக்க வீதி, ரஜ வீதி வழியாகச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடையவுள்ளது. 

 

பெரஹரா மாலை 06.44 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பெரஹரா பயணிக்கும் மொத்தத் தூரம் 1 கிலோற்றர் 860 மீற்றர்கள் ஆகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f7d45f-a5f4-4847-aa6c-8141d4f5e5e0/26-6a8a8511a6e01.webp' /></p><h4>நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுப் போக்குவரத்துத் திட்டங்கள்</h4><p>
 

கடுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகருக்கு வரும் கனரக வாகனங்கள்: மஹியாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரை வந்தடையலாம். </p><h5> 

 

கடுகஸ்தோட்டை பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள்</h5><p>டி.எஸ். சேனநாயக்க வீதி ஊடாக வந்து, குறுக்கு வீதி வழியாக யட்டிநுவர வீதியை அடைந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் பள்ளிவாசல் அருகில் இடதுபுறமாகப் பயணித்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாகச் செல்லலாம். </p><p> 

 

கடுகஸ்தோட்டை நோக்கி வெளியேறும் வாகனங்கள்: பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக மஹியாவ நோக்கிச் செல்ல முடியும். </p><p> 

 

தென்னகும்புர மற்றும் அம்பிட்டிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: சங்கராஜ மாவத்தை ஊடாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பி போகம்பரை, ரயில் நிலையம் அருகில் செல்லலாம். </p><p>அங்கிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.</p><p>அத்துடன் ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி ஊடாக கண்டி நகருக்குள் நுழைய முடியும்.</p><h5> 

 

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் செல்லும் வாகனங்கள்</h5><p>மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி ஊடாக வந்து, குயின்ஸ் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயில் அருகில் உள்ள ஜோய் படகு சேவையைத் தாண்டி சங்கராஜ மாவத்தை ஊடாகப் பயணிக்கலாம்.</p><p> </p><p></p><p>மேலும், போகம்பரை சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் சங்கராஜ மாவத்தை ஊடாக அம்பிட்டிய மற்றும் தென்னகும்புர நோக்கிச் செல்ல முடியும்.
</p><p>
 

கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையவும் வெளியேறவும்: </p><p>வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதியை இரு திசைகளிலும் பயணிக்கப் பயன்படுத்த முடியும்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fedcdb5-8627-421d-9d9d-e4822e01850f/26-6a8a81a44da12.webp' /></p><p>இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.</p><p>

 

அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p>
 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது.</p><p> கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.</p><p>

 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360"></link>
            <id>https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360</id>
            <summary type="text">பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

"MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 தொன் இரும்புத் தாது கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f44885-27bd-43ae-8f2a-6b4ce09712bd/26-6a8a7ef1c07ef.webp' /></p><p>

 

கப்பல் விபத்துக்குள்ளான போது அதில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 20 பேர் சீனக் குடிமக்கள், மூவர் மியான்மர் குடிமக்கள் மற்றும் ஒருவர் பங்களாதேஷ் குடிமகன் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்தியாவின் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) ஓகஸ்ட் 23 அன்று இரவு 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

பின்னர், தேடல் மற்றும் மீட்பு உதவிக்கான கோரிக்கையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
 

கப்பல் விபத்துக்குள்ளான செய்தி அறிந்தவுடனேயே, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.</p><p>

 

அதன்படி, தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மூன்று கடலோரக் காவல் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

இருப்பினும், கப்பலின் பணியாளர்களில் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. </p><p>

 

விபத்துக்குள்ளான கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஏனைய கப்பல்களுக்கும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557"></link>
            <id>https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557</id>
            <summary type="text">அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b4e92e-03f2-46a7-ab00-2e889c07ae1d/26-6a8a7bceb3197.webp' /></p><p>கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அவருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

தகராறு முற்றிய நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதமொன்றால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-23T04:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c490340-73b4-41d6-8aea-d5e126cf3cdc/26-6a8a4409b6f9d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவங்கதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-will-live-royally-1787447889</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.</p><p style="text-align: justify; "> இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf07ce-1306-402b-ab1d-c4a8b82a6824/26-6a8a4a5398410.webp' /></p><h2 style="text-align: justify; ">நட்சத்திர பெயர்ச்சி</h2><p style="text-align: justify; ">சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். </p><p style="text-align: justify; "><b>&nbsp;மேஷம் :</b>&nbsp;நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.</p><p style="text-align: justify; "><b>

விருச்சிகம் : </b>வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.&nbsp; அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>
மீனம்:</b>&nbsp; இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-of-girls-in-jaffna-1787444377</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c9170-f00c-40d2-8395-6bb325f32907/26-6a8a3d6f8760e.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். </p><p style="text-align: justify; ">அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானி போல நடித்து பெண் அரங்கேற்றிய செயல் ; பேருந்தை விற்று வழங்கப்பட்ட பல இலட்சம் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207"></link>
            <id>https://jvpnews.com/article/woman-pretends-to-be-a-pilot-and-does-this-1787443207</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d73460c-dfa0-44b7-af0f-aac55918733d/26-6a8a3808a5c3b.webp' /></p><h2 style="text-align: justify;">முறைப்பாடு</h2><p style="text-align: justify;">

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.</p><p style="text-align: justify;">

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify;">

தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;">

அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் முறைப்பாடு செய்தார்.
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.</p><p style="text-align: justify;">

மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? இதையும் கவனிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100"></link>
            <id>https://jvpnews.com/article/watch-out-for-this-when-eating-mangoes-1787442100</id>
            <summary type="text">&amp;nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.



தினமும் 1 அல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.</p><p style="text-align: justify;">



தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f471949-7aa8-490e-9583-56bccf131109/26-6a8a33b6b1c0d.webp' /></p><h2 style="text-align: justify; ">இதை எவ்வாறு சாப்பிடலாம்.</h2><p style="text-align: justify; ">



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
</p><p style="text-align: justify;">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.
</p><p style="text-align: justify; ">
தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify;">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த இடியாப்ப வியாபாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247"></link>
            <id>https://jvpnews.com/article/string-hoppers-seller-who-shocked-officials-1787437247</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை&nbsp; அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a410fa8f-72ed-4423-9ad9-c027a8113846/26-6a8a218d0899f.webp' /></p><h2 style="text-align: justify; ">சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; ">



அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,&nbsp; மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T01:19:31+00:00</updated>
        </entry>
    </feed>
