<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-08T19:28:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993"></link>
            <id>https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.
இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca6adbf-28c7-4f82-ae41-b21ed035d243/26-6aa05f1368512.webp' /></p><p>

நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், மெட்ரோ பேருந்து சேவையின் மொத்த எண்ணிக்கை இந்த மாதத்தில் 122 ஆக உயரும்.</p><p>

மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065</id>
            <summary type="text">மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணை

இந்தத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e14aca-f524-4ec0-9b5e-db11b226dfb4/26-6aa05b733baea.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம் ; செப்டெம்பர் 19 முதல் கடும் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9ccd4a-e10e-438c-8cbe-2a7805d7c781/26-6aa0510aa8925.webp' /></p><p>வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
</p><p>
இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561"></link>
            <id>https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561</id>
            <summary type="text">சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab770edd-f185-4664-a1bf-8200ef074096/26-6aa04dc37381e.webp' /></p><p>

தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணிகளுக்கு இலகுவான சேவை ; தனியார் துறைக்கும் ஆன்லைன் பருவச்சீட்டு வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154"></link>
            <id>https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154</id>
            <summary type="text">தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும்.</p><p>

 

இதுவரை அரச துறைக்கு மட்டுமே நடைமுறையிலிருந்த இந்த வசதியைத் தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b9e86e-ef13-478a-8cd9-40a7893e05ab/26-6aa04074448a7.webp' /></p><p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பற்றிய பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கலந்துகொண்டார்.
</p><p>
 

மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களைக் குறைப்பதே இந்த புதிய முறையின் நோக்கமாகும். </p><p>இதற்கு முன்னர் பருவச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட நேரத்திற்குள்ளேயே அந்தச் சேவையைப் பெற வேண்டியிருந்தது.
</p><p>
 

புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் (User account) சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பருவச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, இலங்கைத் ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
</p><p>
 

ரயில் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் இலகுவான சேவையை வழங்குவதற்கான மற்றொரு கட்டமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையப்படுத்தி ஸ்மார்ட் டிக்கெட் (Smart ticket) முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ரயில் ஆசனங்களை இணையவழியில் முன்பதிவு செய்யும் வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428"></link>
            <id>https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428</id>
            <summary type="text">இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><p>

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be71e49c-4e5d-4a5b-b01b-eab88e704612/26-6aa03d9de3626.webp' /></p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>
மேலும், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் சாடினார்.
</p><p>
அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.
</p><p>
குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260"></link>
            <id>https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. </p><p> 



குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும்&nbsp; தெரிவிக்கபப்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fdee48-96f7-4444-b9cb-a25d2b3ea31a/26-6aa0064604f7d.webp' /></p><h2>&nbsp;நில மட்டத்திற்கு மேலே தண்ணீர்&nbsp;</h2><p>



அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><p>
</p><p>
நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.



இது குறித்து பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,</p><p></p><p>



குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும். </p><p>



இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றும் அவர்கள்&nbsp; கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929"></link>
            <id>https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a2d5de-d03a-4a30-82b5-72c55df1d78d/26-6aa033dac7157.webp' /></p><p>

அவரது பதிலுரையில் தி.மு.க. தொடர்பான விமர்சனங்கள் இடம்பெற்றதாகவும், குறிப்பாக மிசா சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் மற்றும் சர்க்காரியா ஆணைய அறிக்கை உள்ளிட்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
</p><p>
இதன்போது முதலமைச்சரின் சில உடல்மொழி தொடர்பில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
உருவ கேலி செய்யும் வகையில் யார் பேசினாலும் அது கண்டனத்திற்குரியது என்றும், சட்டமன்றம் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
அதில், சட்டமன்றத்தில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்தவொரு உள்நோக்கமும் கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344</id>
            <summary type="text">இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbb641cc-7cd5-4044-952a-87bab990a63a/26-6aa0319218255.webp' /></p><p>குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>

இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:02:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187</id>
            <summary type="text">கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b8aadd-9522-4044-ae8f-773fedb54912/26-6aa02d0d83853.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரத்தில் அரங்கேறிய சம்பவம்; மடக்கிப்பிடித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-time-sand-smuggling-in-jaffna-1788872670"></link>
            <id>https://jvpnews.com/article/night-time-sand-smuggling-in-jaffna-1788872670</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>


 கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f980cae-78ad-4f14-8415-ce1423739ffd/26-6aa007dfc1fa9.webp' /></p><p></p><h2>பொலிஸாருக்கு இரகசிய தகவல்</h2><p>
</p><p>


இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p></p><p>
</p><p>


இதன்போது, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>


உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கோவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன் விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் வயிற்றில் 14 பேனா... 5 கரண்டிகள்; மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709"></link>
            <id>https://jvpnews.com/article/14-pens-and-5-spoons-found-in-a-woman-stomach-1788871709</id>
            <summary type="text">&amp;nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

ஆந்திரா , பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a2ee60-3935-4a32-9cf1-5524f5ce2eab/26-6aa0041f807b3.webp' /></p><p></p><h2>10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பு</h2><p> </p><p>

வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது.</p><p> 

ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.</p><p></p><p> </p><p>

வைத்தியர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக 'லாப்ரோஸ்கோபி' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். </p><p>

வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>

வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p> தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார். 

அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது.</p><p></p><p> மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

 உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருமண மேடையில் ஒன்று சேர்ந்த முக்கிய பிரபலங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078"></link>
            <id>https://jvpnews.com/article/prominent-figures-come-together-wedding-jaffna-1788871078</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
அந்தவகையில் ஐபிசி ஊடகம் மற்றும் ரீச்சா நிறுவுனரும் புலம்பெயர் தொழில் அதிபருமான கந்தையா- பாஸ்கரன் , யாழ்ப்பாணம் இந்திய தூதரக துணைத்தூதுவர் சாய் முரளி, மற்றும் இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b00f7b-9fb9-4a4f-8f22-f88f261b8004/26-6aa001a7a899d.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 இல் மனிதர்கள் 'சூப்பர் ஹியூமனாக மாற்றம்; வைரலாகும் பாபா வங்காவின் கணிப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-2027-prophecy-on-superhuman-1788873975"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-2027-prophecy-on-superhuman-1788873975</id>
            <summary type="text">&amp;nbsp; 2027-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான நோய் அல்லது மரபணு சோதனைகள் (Genetic Mutations) மூலமாக சில மனிதர்களுக்கு &#039;சூப்பர் ஹியூமன்&#039; (Superhuman) எனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2027-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான நோய் அல்லது மரபணு சோதனைகள் (Genetic Mutations) மூலமாக சில மனிதர்களுக்கு 'சூப்பர் ஹியூமன்' (Superhuman) எனப்படும் அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றது.
</p><p>

பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா 1996-ஆம் ஆண்டே காலமானார். அவர் தனது கணிப்புகளை எங்கும் எழுதி வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9011ac20-4b7b-4de6-a21c-7a06435c2233/26-6aa00cf96bacb.webp' /></p><h2>&nbsp;அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும்</h2><p> </p><p>அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வாய்மொழியாகக் கூறியவற்றின் அடிப்படையிலேயே இத்தகைய கணிப்புகள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ஆனால்&nbsp; &nbsp; அறிவியல் பூர்வமான உண்மை அல்ல:</p><p> மரபணு மாற்றங்கள் அல்லது நோய்கள் மூலம் மனிதர்கள் ஒரே வருடத்தில் சூப்பர் ஹியூமன்களாக மாறுவது என்பது அறிவியல் ரீதியாகச் சாத்தியமற்றது.</p><p></p><p>இது வெறும் கற்பனையான அறிவியல் புனைகதை (Science Fiction) போன்றது மட்டுமே ஆகும்

இது தவிர, வரும் ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்களைச் சந்திப்பார்கள், உலகப் போர் ஏற்படும், செயற்கை நுண்ணறிவு (AI) உலகை ஆக்கிரமிக்கும் போன்ற கணிப்புகளும் பாபா வங்காவின் கணிப்புகள் என்ற பெயரில் உலா வருகின்றன.
</p><p>
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் 9/11 தாக்குதல்கள் குறித்த கணிப்புகளைச் சரியாக வெளியிட்டதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா(Baba Vanga), தற்போது அடுத்த ஆண்டுக்கான ஒரு திடுக்கிடும் கணிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p>

முன்னதாக, 2025-ஆம் ஆண்டில் வேற்றுக்கிரக உயிரினங்கள் பூமியில் தரையிறங்கும் என்று 2024-ல் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.
</p><p>
பார்வையற்ற அந்த பல்கேரியப் பாட்டி இறந்து சுமார் மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர் இறப்பதற்கு முன் கூறிய கணிப்புகள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
