<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-15T20:55:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909"></link>
            <id>https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909</id>
            <summary type="text">எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p> 

சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த இன்று (15) அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15e9641-8868-4729-85b4-c62bdbac9aba/26-6a57d46f39724.webp' /></p><p>

முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>

இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462"></link>
            <id>https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ecc8d-9f5e-4b07-8369-b1498677ee1b/26-6a57d2b015c29.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லையா? சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1145ad-8278-4fff-b072-52f92849b186/26-6a57d02345751.webp' /></p><p>அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c010187-0c0a-47c2-bdd4-592ba0aef80d/26-6a57d02290435.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354</id>
            <summary type="text">கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d350b8-cba9-4889-bd35-c401a05a1738/26-6a57ca73c3341.webp' /></p><p>அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.</p><p> 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p> 

இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். </p><p>

அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347"></link>
            <id>https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய &#039;பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை&#039; அறிமுகப்படுத்தும் தேசிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை' அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பொது மக்கள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரத்தியேகமான பாலியல் தகவல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/230ee418-b5f9-4f9e-96dd-33f715d40f5b/26-6a5780348a09f.webp' /></p><p>

 இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழிற்பயிற்சித் துறையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூழலாக மாற்றும் நோக்கில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
</p><p>
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் சரியான முறையில் கொண்டு செல்வதற்கும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
