<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T23:40:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-adulterated-ghee-30-000-per-person-1784322770</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. </p><p>பரிசோதனை முடிவில் அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டதுடன், போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்ற உரிமையாளர் தொடர்பான தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என விசாரணையில் தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e67a50-ca65-4495-ad4f-9f58c3d973c9/26-6a5a9ad377f68.webp' /></p><p>இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p>

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
</p><p>
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய் போத்தல்கள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-50-1784321927</id>
            <summary type="text">நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f54b97-b49f-4167-805f-1f11ef1e08c1/26-6a5a9788d89c8.webp' /></p><p>தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு ; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157"></link>
            <id>https://jvpnews.com/article/resurgent-covid-19-cases-four-deaths-1784321157</id>
            <summary type="text">இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>

இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd6afe3-3efb-48ff-9dc9-396bc94301ae/26-6a5a948688946.webp' /></p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/renovation-work-begins-nuwara-eliya-post-office-1784319888"></link>
            <id>https://jvpnews.com/article/renovation-work-begins-nuwara-eliya-post-office-1784319888</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளம் அஞ்சல் சேவைகள், முத்திரைப் பிரிவு, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை மையம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5430442-62ce-4ac8-a647-9ffb1d2bcbbf/26-6a5a8f9241370.webp' /></p><p>அத்துடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கட்டிடத்தின் மேல் தளத்தை சுற்றுலா மையமாக மாற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
</p><p>
இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும், இலங்கை சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் துறைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:26:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நலன்புரித் திட்டம் பெறுபவர்களுக்கான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-aswesuma-welfare-scheme-recipients-1784318264"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-aswesuma-welfare-scheme-recipients-1784318264</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து பண மோசடி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளர்களை குறிவைத்து பண மோசடி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயனாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அழைத்து, தங்களை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என பொய்யாக அறிமுகப்படுத்தி, தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b745c79f-8393-42b4-ac74-e301979466d7/26-6a5a893a6e242.webp' /></p><p>

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>எனவே, இதுபோன்ற போலி தொலைபேசி அழைப்புகள் அல்லது மோசடி முயற்சிகள் தொடர்பாக எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நலன்புரி நன்மைகள் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஹரக்கட்டா' இலஞ்ச வழக்கு ; நீதிமன்றில் அம்பலமான பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harakatta-bribes-high-ranking-police-officers-1784316407"></link>
            <id>https://jvpnews.com/article/harakatta-bribes-high-ranking-police-officers-1784316407</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான &#039;ஹரக்கட்டா&#039;வின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1,200 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1,200 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d6bfdc-5b4b-459d-99ed-d9c8f39d627f/26-6a5a81f89c5a6.webp' /></p><p>
</p><p>
ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி மஹேஷிகா மதுவந்தி வழங்கிய வீடியோ வாக்குமூலம் மற்றும் சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஆதாரங்கள் தற்போது விசாரணை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்த இலஞ்ச விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கிடையில் 1,300-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு சென்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். </p><p>குறித்த பிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முழுமையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb4710d-3846-4726-9f37-8f52b3ab2f26/26-6a5a81f94b165.webp' /></p><p>

அத்துடன், இந்த மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் ஒரு இலஞ்ச முறைப்பாடும் கிடைத்துள்ளதால் அதுகுறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.&nbsp;</p><p>
இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை முன்வைத்து பிணை கோரினர். </p><p>இருப்பினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணை மனுக்கள் தொடர்பான உத்தரவை ஜூலை 28 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்து, அதுவரை மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/intensive-investigation-into-death-of-former-igp-1784314221"></link>
            <id>https://jvpnews.com/article/intensive-investigation-into-death-of-former-igp-1784314221</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 

சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இன்று (17) காலை மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b839779-5aca-4549-8235-1153361e5df1/26-6a5a796f47628.webp' /></p><p>எவ்வாறாயினும், சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p> 

இன்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். </p><p>

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்துள்ளார்.</p><p>

சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி. விக்

ரமரத்ன, உயிரிழக்கும் போது 63 வயதாகும்.</p><p></p><p> 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். </p><p>

அதன்பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பதவிக் காலம் நீடிக்கப்பட்டதன் காரணமாக, மேலும் 08 மாதங்கள் வரை அவர் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றினார். </p><p>

இதன்படி, சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T18:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பந்து அளவிலான ஆலங்கட்டி மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ball-sized-hailstorm-hits-france-1784312461"></link>
            <id>https://jvpnews.com/article/ball-sized-hailstorm-hits-france-1784312461</id>
            <summary type="text">பிரான்சின் சில பகுதிகளில் பெய்த கடுமையான ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், மின்கம்பிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் சில பகுதிகளில் பெய்த கடுமையான ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், மின்கம்பிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறிப்பாக ஆர்டெஷ் (Ardèche) பகுதி இந்த மோசமான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26586006-f75a-450b-b6c1-afd550f7a27d/26-6a5a728f3de6b.webp' /></p><p>அங்கு பந்து அளவிலான ஆலங்கட்டிகள் பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.</p><p>ஆலங்கட்டி மழையால் மின்கம்பிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 600 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>
மேலும், ஆர்டெஷ் பகுதியில் உள்ள பல திராட்சைத் தோட்டங்களும் ஆலங்கட்டி மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளன. </p><p>சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T18:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிசில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் கணிசமாக வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/asylum-applications-switzerland-drop-significantly-1784311091"></link>
            <id>https://jvpnews.com/article/asylum-applications-switzerland-drop-significantly-1784311091</id>
            <summary type="text">கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட புகலிட விண்ணப்பங்களின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட புகலிட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்துள்ளதாக மாநிலக் குடிவரவுச் செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>SEM வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 9,734 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 1,777 புகலிட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகவும், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781f5236-e695-4d24-bdc2-65482b829414/26-6a5a6d34795cf.webp' /></p><p>தெற்கு இத்தாலி வழியாக சுவிட்சர்லாந்தை நோக்கி வரும் குடியேற்ற வருகைகள் குறைந்திருப்பதும், துருக்கியைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறைந்திருப்பதும், இந்த ஆண்டுக்கான மொத்த சரிவுக்கான முக்கிய காரணங்களாக SEM குறிப்பிட்டுள்ளது.
</p><p>
ஜூன் மாதத்தில் அதிகளவில் புகலிட விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 456 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.</p><p> அதனைத் தொடர்ந்து எரித்திரியாவிலிருந்து 222, அல்ஜீரியாவிலிருந்து 175, துருக்கியிலிருந்து 140 மற்றும் சோமாலியாவிலிருந்து 139 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.</p><p>

அதே மாதத்தில், SEM மொத்தம் 2,235 புகலிட விண்ணப்பங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளது. </p><p>இதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வழக்குகளுக்கு மட்டுமே புகலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மாதத்தில் 872 பேர் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியுள்ளனர். </p><p>இவர்களில் 527 பேர் தன்னார்வமாக வெளியேறிய நிலையில், 345 பேர் தங்களது சொந்த நாடுகளுக்கோ அல்லது மூன்றாம் நாடுகளுக்கோ அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பப்பட்டதாக SEM தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T17:58:26+00:00</updated>
        </entry>
    </feed>
