<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-13T06:51:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி சென்னையில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215"></link>
            <id>https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215</id>
            <summary type="text">&amp;nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083d9f21-b147-4622-b49c-874384ab923f/26-6a546aa0a5cee.webp' /></p><h2>போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியல்</h2><p>

 தம்பதிகள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியானது.

 நேற்று முன்தினம் இருவரும் இலங்கை வருவதற்காக , சென்னை வானூர்தி நிலையம் சென்றபோது கைதாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு; இன்னும் குறையலாம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, </p><p>நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/002cda88-baae-4130-b091-c2afe099ed96/26-6a54879762f0b.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை </p><p>இந் நிலையில்&nbsp; &nbsp;தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T06:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இன்று தேசிய துக்க தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366"></link>
            <id>https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366</id>
            <summary type="text">&amp;nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (S...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50b97f-7f31-4925-9f3a-325e3eaa28c2/26-6a5482a81fc7d.webp' /></p><h2>&nbsp;தேசியக் கொடி&nbsp;&nbsp;அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்</h2><p>
</p><p>
மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, </p><p>அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.</p><p></p><p> </p><p>அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண் கலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் கீழே விழுந்ததில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51684204-389f-4bbe-b4ed-9823aa66bdcd/26-6a5480403073d.webp' /></p><p> </p><p>

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த போதிலும், இறுதியில் அவர் காலமானார்.

12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள் என ஒரு மிகப்பெரிய குடும்பப் பரம்பரையை கலுமெனிக்கே விட்டுச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சுஸ்மிதா பாஸ்கரன்; காதலன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285"></link>
            <id>https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவத்தில்&nbsp; பெண்ணின்&nbsp; &nbsp;முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d70a604-a5b1-402d-accf-87199487f422/26-6a547a866f863.webp' /></p><h2>இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா</h2><p> இந்தியாயாவை&nbsp; பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார்.</p><p>இதனையடுத்து&nbsp; ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுஸ்மிதா மற்றும் மார்ட்டின் கேரியர் ஆகியோருக்கு இடையே கடந்த 2010-ம் ஆண்டுகளில் இருந்து நீண்ட காலமாக ஒரு மோசமான உறவு இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இவர்கள் 2018-ஆம் ஆண்டு பிரிந்தாலும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.
</p><p>

2012-ஆம் ஆண்டு சுஸ்மிதா வீடு வாங்கிய போது கனேடிய குடியுரிமை இல்லாத காரணத்தால் மார்ட்டின் பெயரில் வீடு வாங்கப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு அந்த வீட்டை விற்று அதன் முழு பணத்தையும் மார்ட்டின் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். </p><p>இது தொடர்பாக 2024-இல் நீதிமன்றம் மார்ட்டினுக்கு சுஸ்மிதாவுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களை திருப்பி செலுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்ட்டின் கேரியரை அரசு வழக்கறிஞர்கள் ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>தற்போது சடலத்தை சிதைத்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் மீது கூடுதல் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக&nbsp; கனேடிய ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-13T05:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரவலால் மூடப்பட்ட பலகலைக்கழகம் மீண்டும் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-closed-due-to-dengue-outbreak-reopens-1783919953"></link>
            <id>https://jvpnews.com/article/university-closed-due-to-dengue-outbreak-reopens-1783919953</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் தொடங்கின.
</p><p>
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வந்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 2 ஆம் திகதி முதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு குறித்த பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15f8171-27b2-4e14-9c69-48d54ca3e9eb/26-6a54755299a73.webp' /></p><p>

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட, வளாகச் சூழலைச் சுத்தமாகப் பராமரிப்பதில் மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p></p><p>

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 68,071 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில் டெங்கு தொடர்பான 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T05:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த கடற்படை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293"></link>
            <id>https://jvpnews.com/article/navy-sailor-who-murdered-his-father-1783918293</id>
            <summary type="text">&amp;nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். </p><p>

குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256398a7-e6a8-4efe-bd7a-27730c3e0a81/26-6a546ed73bf14.webp' /></p><p> 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தங்காலை பொலிஸார் , முதியவரின் இளைய மகனான ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்துள்ளனர்.</p><p> 

குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, அதீத போதையில் காணப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T04:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916761</id>
            <summary type="text">&amp;nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



தீ விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின் கசிவு காரணமாக இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e59c529-00f9-43b5-b6d7-815e3be76c36/26-6a5468dac1b38.webp' /></p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-13T04:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T01:11:03+00:00</updated>
        </entry>
    </feed>
