<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T15:43:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியில் மேலும் 06 என்பு கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-more-skeletons-identified-chemmani-mass-grave-1784377109"></link>
            <id>https://jvpnews.com/article/six-more-skeletons-identified-chemmani-mass-grave-1784377109</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (18) 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p> 
 இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்பு கூடு உள்ளடங்கலாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3900627-1f5b-431f-b673-94e3f06d261b/26-6a5b6f16e67a9.webp' /></p><h2>&nbsp;பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல்</h2><p>
</p><p>
வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>

ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக கிண்ணஇறுதிப்போட்டி; நடுவர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-2026-world-cup-final-umpire-announcement-1784374153"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-2026-world-cup-final-umpire-announcement-1784374153</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக கிண்ண இறுதிப்போட்டிக்கான நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

உலகமே எதிர்பார்க்கும் 23ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (19) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. 



அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d8eee0-7be6-4f07-9756-cbc0ade67303/26-6a5b638b492e8.webp' /></p><p> இறுதிப்போட்டியில் நடுவராக பணியாற்றும் அதிர்ஷ்டம் சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான சிலாவ்கோ வின்சிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

உதவி நடுவர்களாக தாமஸ் கிளான்ஸ்னிக், ஆன்ட்ராஸ் கோவாசிச் ஆகியோர் செயல்படுவார்கள். 4ஆவது நடுவராக ஆதாம் மகாத்மேவும், மாற்று உதவி நடுவராக முகமது அல்கலாப்பும் இருப்பார்கள்.



'பிபா' நடுவர் குழுவின் தலைவர் பியர்லூகி கொலினோ இதனை அறிவித்தபோது, சிலாவ்கோ வின்சிச் இன்ப அதிர்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் பதற்றம்; குவைத் விமான நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/war-tensions-kuwait-airport-operations-suspended-1784379355"></link>
            <id>https://jvpnews.com/article/war-tensions-kuwait-airport-operations-suspended-1784379355</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான 'குவைத் எயார்வேஸ்' தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98c8a06-f36b-4089-be48-1fb635568e0e/26-6a5b77dd59547.webp' /></p><p></p><p>

 

இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-elder-affected-by-kidney-disease-1784381339"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-elder-affected-by-kidney-disease-1784381339</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் முதியோர் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் முதியோர் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

 

இது தவிர, இந்நாட்டில் இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பெருமளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85d37175-0a13-4194-94dd-7065997fa7fd/26-6a5b7f9ce22af.webp' /></p><h2>சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள்</h2><p>

 

சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டிலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் கூறினார்.</p><p>

 

இது சதவீத அடிப்படையில் 25% ஆகும் எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறுவதால் மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பதை விளக்கியுள்ளார்.
</p><p>
 

மேலும், இதற்கு மேலதிகமாக உயர் குருதி அழுத்தம் , இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுதல் போன்ற நிலமைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

இதன் காரணமாக, தற்போது பதிவாகியுள்ள 10% சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25% வரை உயரக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அது 30% முதல் 40% வரை கூட அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
</p><p>
 

சிறுநீரக நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இளைஞர்களும் இனங்காணப்பட்டதாகக் கூறிய வைத்தியர், அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின்படி, உடற்கட்டமைப்பு (Bodybuilding) மற்றும் சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் பயன்பாடே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T13:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580"></link>
            <id>https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580</id>
            <summary type="text">யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/696e7192-709f-4958-909c-dd52d4bc19c5/26-6a5b653608f8a.webp' /></p><p> </p><p>

இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் , பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் இதனால் மின் கம்பிகள் அப்பகுதி வீடுகளின் மேல் விழுந்து பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோரை பலி எடுக்கும் மின்னல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-people-die-from-lightning-strikes-every-year-1784378909"></link>
            <id>https://jvpnews.com/article/50-people-die-from-lightning-strikes-every-year-1784378909</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.



இன்று (18) கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்தால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>


இன்று (18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மின்னல் விபத்துகளால் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகள் மட்டுமன்றி, சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பாரிய சேதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b4f4ad-613b-4494-adcd-a8e50b2231d3/26-6a5b761ec791d.webp' /></p><p>



மின்னல் தாக்கம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரம்-1 ; வரலாறு படைத்த இந்தியாவின் முதல் தனியார் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vikram-1-india-first-private-rocket-history-1784378129"></link>
            <id>https://jvpnews.com/article/vikram-1-india-first-private-rocket-history-1784378129</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய விண்வெளித்துறையில் முதல் தனியார் ரொக்கெட்டான, விக்ரம்-1 இன்று (18) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய விண்வெளித்துறையில் முதல் தனியார் ரொக்கெட்டான, விக்ரம்-1 இன்று (18) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியத் தனியார் நிறுவனம் தனது சொந்த விண்கலத்தை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8629a7e-8aab-414a-b304-9b7a67b09dd1/26-6a5b73133e22e.webp' /></p><h2>&nbsp;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை</h2><p> </p><p>விக்ரம்-1 ரொக்கெட்டின் இந்த பிரம்மாண்ட வெற்றி, இந்தியத் தனியார் விண்வெளித்துறையில் ஒரு புதிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப்பட்ட இந்த முதல் விண்வெளிப் பயணத் திட்டம், திட்டமிட்டபடி இன்று (18) நண்பகல் 11:30 மணிக்கு ஏவப்பட இருந்தது. </p><p>ஆனால், ரொக்கெட் புறப்பட சரியாக 4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்தபோது, எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரக் கணிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏவுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> 

எனினும், அங்குள்ள விண்வெளி பொறியாளர்கள் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு தொழில்நுட்பக் கோளாறை விரைவாகச் சரிசெய்துள்ளனர்.



 தொடர்ந்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நண்பகல் 12:06 மணிக்கு விக்ரம்-1 ரொக்கெட் தீப்பிழம்புகளைக் கக்கியபடி கம்பீரமாக விண்ணில் பாய்ந்தது. </p><p>புவி ஈர்ப்பு விசையைக் கடந்து, திட்டமிட்ட பாதையில் பயணித்த இந்த ரொக்கெட் பூமிக்கு மேலே சுமார் 450 கிலோமீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையில் தனக்குள் இருந்த பல ஆய்வு கருவிகளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>


ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’நிறுவனம் இந்த ரொக்கெட்டை முழுமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது.



முழுவதும் காபன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரொக்கெட் 7 மாடிகள் உயரமும், பல நிலைகளையும் கொண்டது.</p><p>



இது சுமார் 350 கிலோ எடை வரையிலான செயற்கைக் கோள்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் அதிநவீனத் திறன் கொண்டது.



இந்திய மண்ணிலிருந்து, ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் தனது சொந்த விண்கலத்தை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T12:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி சோதனையில் ஒரே நாளில் 706 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/706-people-arrested-in-a-single-day-1784377795"></link>
            <id>https://jvpnews.com/article/706-people-arrested-in-a-single-day-1784377795</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடு தழுவிய சோதனை நடவடிக்கையின் கீழ் நேற்று (17) மட்டும் 706 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடு தழுவிய சோதனை நடவடிக்கையின் கீழ் நேற்று (17) மட்டும் 706 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் நடத்தப்பட்ட 708 சோதனைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒரு சந்தேக நபருக்கு எதிராக சட்டவிரோத உடைமை தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a580e8a-19da-470e-8376-c06d53cd56d7/26-6a5b71c5220bc.webp' /></p><p>

தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

மேலும் நான்கு பேரை மறுவாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த யுவதி; பட்டப்பகலில் வாலிபர் அரங்கேற்றிய கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207"></link>
            <id>https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207</id>
            <summary type="text">&amp;nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்கேரிய ஈசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

இந்தியா கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd1a0f2-7449-43f1-af65-7dd0ead84796/26-6a5b3cb0c0c4d.webp' /></p><p></p><h2>காதலை ஏற்க மறுத்த யுவதி....</h2><p> </p><p>

இவர் தினமும் வேலைக்கு பஸ்சில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் லாவண்யாவை தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். </p><p>அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் சேத்தன் அவரை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால், சேத்தனை, லாவண்யா திட்டியதுடன் தனது பின்னால் சுற்ற வேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.</p><p></p><p> </p><p>நேற்று (16) வழக்கம் போல வேலைக்கு சென்ற லாவண்யா, மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் காக்யபாதவி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் சேத்தன் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் சேத்தன், லாவண்யா அமர்ந்திருந்த பஸ்சில் ஏறி,&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட் டார். </p><p>ஆத்திரம் அடைந்த சேத்தன், தான் பையில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்தார். அதிர்ச்சி அடைந்த லாவண்யா பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். 

ஆனாலும் சேத்தன் அவரை விடாமல் அரிவாளை கையில் வைத்தப்படி பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.</p><p></p><p> </p><p>ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்துக்குள் தவறி விழுந்த லாவண்யாவை அவர் அரிவாளால் பலமுறை கொடூரமாக வெட்டியதில்&nbsp; &nbsp;பலத்த காயம் அடைந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>அரிவாளை பஸ் நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் பஸ் நிலையத்தின் நடுவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.</p><p></p><p>சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் பொலிஸார் கொலையான லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன்&nbsp; தப்பி ஓடிய சேத்தனை வலைவீசி தேடி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T11:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-10-quizzed-in-ex-police-chief-death-probe-1784374009"></link>
            <id>https://jvpnews.com/article/over-10-quizzed-in-ex-police-chief-death-probe-1784374009</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">
63 வயதான அவர், வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8686cfba-04fb-438a-9a6b-2c2785d6df28/26-6a5b62fae8dfb.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இச்சம்பவம் நடந்த போது, வீட்டில் இருந்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த மரணம் குறித்து முறையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">

இதற்கமைய, கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரால் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதற்கு மேலதிகமாக, நுகேகொட கோட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணையொன்றை மேற்கொண்டு வருகிறார்.
</p><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் இன்று(19) பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">
அதன் பின்னர், அவரது உடலம் மீதான இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T11:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பெண் நீதிபதி பணி இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspension-of-angunakolapelessa-female-judge-1784372064"></link>
            <id>https://jvpnews.com/article/suspension-of-angunakolapelessa-female-judge-1784372064</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ&amp;nbsp; நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ&nbsp; நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரது பணியை இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56ca70b-d844-455e-9708-d4d9346e1f8a/26-6a5b5b6221fbe.webp' /></p><p>
</p><p>கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பல நீதிபதிகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T11:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடு கடலில் ஆபத்தில் சிக்கிய மீனவர் ; இலங்கை கடற்படையினரால் காப்பற்றப்பட்ட உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-navy-rescues-fisherman-at-sea-1784371317"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-navy-rescues-fisherman-at-sea-1784371317</id>
            <summary type="text">இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">
பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd887e7-c850-40d2-ac29-2b92c32e9e26/26-6a5b5877320e9.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

இதன்போது நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், 2026 ஜூலை 17 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cccd4d-9cda-49d8-ae1d-83614d45a68f/26-6a5b5877e222f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீனவர் அவரது மீன்பிடி படகில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு' மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T10:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை; கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-marriage-foreign-women-china-warns-1784370250"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-marriage-foreign-women-china-warns-1784370250</id>
            <summary type="text">&amp;nbsp; சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கபப்டும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கபப்டும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>


கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். </p><p>இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது.

சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர் சீனா​வில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa1cb22b-99f9-40dd-9e14-f59ab45669ae/26-6a5b544b889da.webp' /></p><h2>சீன ஆண்​கள் பணத்​தைக் கொடுத்து திரு​மணம்</h2><p> </p><p>

பெரும்​பாலான வழக்​கு​களில், சீன ஆண்​கள் ஆயிரக்​கணக்​கான யுவான் பணத்​தைக் கொடுத்து திரு​மணம் செய்த வெளி​நாட்​டுப் பெண்கள் சில நாட்​களி​லேயே காணா​மல் போய்​விடு​வ​தாக​வும், சில இடங்​களில் வெளி​நாட்​டுப் பெண்​கள் கடத்​தப்​பட்டு சீன ஆண்களைத் திரு​மணம் செய்ய வற்​புறுத்​தப்​படு​வ​தாக​வும் புகார்கள் எழுந்​துள்​ளன.
</p><p>
இதன் காரண​மாக, வங்க தேசம் தவிர ஏற்​கெனவே வியட்​நாம், மியான்​மர், லாவோஸ், பாகிஸ்​தான் மற்​றும் நேபாளம் ஆகிய நாடு​களி​லும் உள்ள சீனத் தூதரகங்​கள் திருமண மோசடி குறித்து எச்​சரிக்​கைகளை விடுத்​துள்​ளன.</p><p></p><p> </p><p>

இந்த நிலை​யில், சீனாவைச் சேர்ந்த ஆண்​கள் பலர் வங்​க தேசத்​திற்கு வந்​து, இடைத்​தரகர்​கள் மூலம் பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து வங்க தேசத்​தில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ள​தாவது,</p><p> வங்​கதேச சட்​டத்​தின்​படி மனிதக் கடத்​தல் வழக்​கு​களில் மிகக் கடுமை​யான குற்​றங்​களுக்கு ஆயுள் தண்டனை அல்​லது மரண தண்​டனை வரை விதிக்​கப்பட வாய்ப்புள்​ளது. 

இக்​குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்​குக் குறைந்தபட்சம் 7 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை​யும், சுமார் ரூ.3.95 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படும்.</p><p></p><p>
</p><p>
மேலும், திரு​மணக் கடத்​தல் குற்​றங்​களுக்​குத் தூண்​டு​தலாகவோ அல்​லது உடந்​தை​யாகவோ இருப்​பவர்​களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, ரூ.15,600 அபராத​ம் விதிக்​கப்​படும். திருமணங்​கள் உண்​மை​யான அன்​புட​ன் அமைய வேண்​டும். </p><p>

பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வது பிற்​காலத்​தில் கடுமை​யான நிதி இழப்​புக்​கும், உயிருக்கே ஆபத்​தான சூழ்நிலைகளுக்​கும்​ வழி​வகுக்​கும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ கூறியுள்​ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T10:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிப்பு போத்தல்களால் பரபரப்பான விமான நிலையம் ; 9 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-on-alert-over-candy-bottles-1784369037"></link>
            <id>https://jvpnews.com/article/airport-on-alert-over-candy-bottles-1784369037</id>
            <summary type="text">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் "பசுமை வழி" (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d905187-06b0-4762-9345-49a7d88f384b/26-6a5b4f8f0a618.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் தொகை</h2><p> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொப்பி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T10:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி வாங்கித்தர மறுத்த தந்தை ; ஆத்திரத்தில் மாணவர்கள் செய்த தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631"></link>
            <id>https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631</id>
            <summary type="text">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் நேற்று (17)&nbsp; எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கடந்த 4ஆம் திகதி அதிகாலை எப்பாவெல நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff93cfe-0876-423e-907a-a065d513d2da/26-6a5b33d123c13.webp' /></p><h2 style="text-align: justify;">பிரிவெனா மாணவர்கள்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவெல, எந்தகல பகுதியிலுள்ள பிரிவெனா ஒன்றில் தங்கிப் படித்து வரும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் தலாவ - நபடவெவ மற்றும் எப்பாவெல - ரொட்டவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் குறித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திருடப்பட்ட தொலைபேசிகளின் IMEI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை (Signals) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

</p><p style="text-align: justify;">

கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 06 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5000 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று, சில நவீன கையடக்க தொலைபேசிகளின் விலைகளைக் கேட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர் தனக்கு ஒரு கையடக்க தொலைபேசியை வாங்கித் தருமாறு அவர் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். </p><p style="text-align: justify;">எனினும், தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வந்து இந்த கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

பின்னர், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் இரண்டு கையடக்க தொலைபேசிகளை தங்களது பாவனைக்காக வைத்துக்கொண்டு, ஏனைய நவீன கையடக்க தொலைபேசிகளை பிரிவெனாவின் தேரர் ஒருவருக்கும், தந்தைக்கும், மேலும் சில மாணவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அதன்பின்னர், இந்த மாணவர்கள் திருடப்பட்ட கைபேசி ஒன்றில் தேரருக்கு சொந்தமான சிம் அட்டையைப் (SIM card) பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமையவே, சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொலிஸாருக்கு வழிவகை கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify;">&nbsp;கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளையும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எப்பாவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T09:48:07+00:00</updated>
        </entry>
    </feed>
