<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T17:41:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268"></link>
            <id>https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.</p><p> </p><p></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62da2927-eb59-4a40-94c3-e9333ad5e8c2/26-6a53ce9561db0.webp' /></p><p>கட்டாரின் முன்னாள் மன்னராக இருந்த ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி தமது 74 வது வயதில் காலமானார். </p><p>

இந்நிலையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்.</p><p> 

அவரது தொலைநோக்குத் தலைமையும், கட்டார் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும். </p><p>

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அரச குடும்பத்தினருக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவி துஸ்பிரயோகம், மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் ; இறுதியில் தந்தைக்கு கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575</id>
            <summary type="text">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
</p><p style="text-align: justify; ">
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ce6d1-602b-482b-ba6f-1010d5466a7c/26-6a5391487be31.webp' /></p><h2 style="text-align: justify; ">கொடூரக்கொலை&nbsp;</h2><p style="text-align: justify; ">இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "> தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க&nbsp; திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்&nbsp; சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
 மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T17:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மூன்றாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783874176"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783874176</id>
            <summary type="text">உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையின்படி, இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையின்படி, இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. </p><p>நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca4b710-5232-4bbb-9855-68207d1054f0/26-6a53c28177d7f.webp' /></p><p>Numbeo நிறுவனம் பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது. ஒரு நாட்டின் போக்குவரத்து நிலையை மதிப்பிட பின்வரும் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>

நேர செலவீட்டு குறியீடு (Time Expenditure Index): ஒரு வழிப் பயணம் 25 நிமிடங்களுக்கு மேல் செல்லும்போது பயணிகளுக்கு ஏற்படும் அதிருப்தி மற்றும் சோர்வை இது கணக்கிடுகிறது.
</p><p>
திறமையின்மை குறியீடு (Inefficiency Index): பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு குறைவு மற்றும் தனிப்பட்ட வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை இது காட்டுகிறது.
</p><p>
CO2 வெளியேற்ற குறியீடு (CO2 Emission Index): தினசரி பயணத்தின் போது ஒரு பயணி வெளியிடும் காபனீரொட்சைட்டு அளவு இதன் மூலம் மதிப்பிடப்படுகிறது.
</p><p>
இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T16:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு கை மற்றும் கால்களை மூடும் விதத்திலான ஆடைகளுக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-are-allowed-wear-clothes-cover-arms-1783872434"></link>
            <id>https://jvpnews.com/article/students-are-allowed-wear-clothes-cover-arms-1783872434</id>
            <summary type="text">நாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/727e658b-bb73-42c0-bd9b-08375b3526cc/26-6a53bbb46095f.webp' /></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது பாடசாலை மாணவர்களிடையே டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தத் தீர்மானம் தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தேவையான விளக்கங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை மற்றும் மேலதிக வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன், மாணவர்கள் தரநிலைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், பாடசாலை வளாகங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T16:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-case-hearing-update-released-1783863122</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. </p><p>

அதற்கமைவாக, நாளை (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6d1473-a9ec-4af2-bbf1-d27b7608de22/26-6a53975382b98.webp' /></p><h2>சிறைக்கைதிகள்&nbsp;</h2><p> </p><p>

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அங்குள்ள சிறைக்கைதிகள் சிலரை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. </p><p>

அவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

எனவே, சம்பந்தப்பட்ட கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.</p><p> 

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராகலையில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் ; சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-assured-for-6-evicted-families-1783862876</id>
            <summary type="text">இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.
</p><p>

கடந்த ஜூலை 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீண்டகாலமாக வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து இந்த மலையகக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b160ac4b-c14c-4e4b-a9c1-9a1d6628b32c/26-6a53965e0d74c.webp' /></p><h2>தவறான விமர்சனங்கள்</h2><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதியமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

"இந்த வெளியேற்ற நடவடிக்கையானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பாகவே அமைந்திருந்தது.</p><p> எனினும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது முற்றிலும் பிழையானதொரு கண்ணோட்டமாகும்." எனத் தெளிவுபடுத்தினார்.
</p><p>
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை முழுமையாக ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="margin-left: 25px;"></p><p> </p><p>பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் பின்னர் அவர்களுக்கு மிக விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>


அத்துடன், அமைச்சர் லால்காந்த அவர்களுடனும் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடிச் சரியானதொரு தீர்வை எட்டவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய குடியிருப்புகளை வழங்குவதற்குத் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக முன்னின்று செயற்படும் என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன்போது மேலும் தெரிவித்தார்.</p><p>

இந்தக் கள விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; அவசர எச்சரிக்கைகளால் அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868"></link>
            <id>https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b53c56dc-2987-4b55-bb9c-512d0cd6fec9/26-6a539a3d52de0.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110"></link>
            <id>https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224e183e-0065-493b-a433-99168343eb16/26-6a538b901dd9a.webp' /></p><p> 

அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரையிலும், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வருடங்களாக கோமாவில் கணவர் ; காலை கடித்து சரி பண்ணிய மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182"></link>
            <id>https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182</id>
            <summary type="text">கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.  இந்நிலையில்தான் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. </p><p> இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebeb51fb-bfc6-4a41-b610-c996e312f7eb/26-6a53746793d92.webp' /></p><h2>நெகிழ்ச்சி சம்பவம்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.</p><p>கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.</p><p>


தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.</p><p></p><p> </p><p>அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். </p><p>சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685</id>
            <summary type="text">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான &#039;அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவல்படி, பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை - 'எச்சரிக்கை'&nbsp; நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d165534-efe1-450d-9fc1-c23fea19b6c9/26-6a5385feee112.webp' /></p><h2 style="text-align: justify;">வெப்பச் சுட்டெண்</h2><p style="text-align: justify;">



வெப்பச் சுட்டெண் என்பது ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடல் உணரும் வெப்பத்தை பிரதிபலிக்கிறதே தவிர, அது முன்னறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அல்ல என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
</p><p style="text-align: justify;">


கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலில் இருக்கவும், அதிகளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T12:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474"></link>
            <id>https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474</id>
            <summary type="text">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீண்டும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c43fa8-d97e-4e81-a271-d6df905e2456/26-6a53814395667.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு</h2><p> </p><p style="text-align: justify;">&nbsp;போதைப்பொருள் மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வின்படி, புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்கள் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தபோது பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">அதன்படி, 47 சதவீத புனர்வாழ்வு முடித்தவர்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாலேயே மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக பிரதான காரணமாக உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
மேலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலின் தாக்கம், காரணமாக 24.5 சதவீதமானோர், குடும்பத்தினரின் முறையான அரவணைப்பும் கவனமும் கிடைக்காததால் 23 சதவீத பேரும், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழல் காரணமாக 22 சதவீத பேரும், காதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர காரணங்களால் 4 சதவீதமானவர்கள் மீண்டும் போதைப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கின்றனர்.
</p><p style="text-align: justify;">

இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, பெரும்பாலானவர்கள் தங்களின் 11 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிப் பருவத்திலேயே முதன்முதலில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றுக்கு அடிமையாகி, பின்னரே கடுமையான போதைப்பொருட்களுக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 76 சதவீத பேர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்களாவர். மாறாக, உயர் தரம் வரை கல்வி கற்றவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக, அதாவது 13 சதவீத ஆக மட்டுமே உள்ளது. </p><p style="text-align: justify;">இதன் காரணமாக, பிள்ளைகளை சாதாரண தரத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களை உயர் கல்வி நோக்கி ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்கும் உண்டு.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இளம் தலைமுறையினரை இந்த போதையிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேரைச் சென்றடையும் வகையில் 1,050 விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"> நடப்பு ஆண்டில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு 1,278 விழிப்புணர்வு திட்டங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 660 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 62,000 பேர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:58:01+00:00</updated>
        </entry>
    </feed>
