<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T12:53:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685</id>
            <summary type="text">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான &#039;அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவல்படி, பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை - 'எச்சரிக்கை'&nbsp; நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d165534-efe1-450d-9fc1-c23fea19b6c9/26-6a5385feee112.webp' /></p><h2 style="text-align: justify;">வெப்பச் சுட்டெண்</h2><p style="text-align: justify;">



வெப்பச் சுட்டெண் என்பது ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடல் உணரும் வெப்பத்தை பிரதிபலிக்கிறதே தவிர, அது முன்னறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அல்ல என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
</p><p style="text-align: justify;">


கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலில் இருக்கவும், அதிகளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T12:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474"></link>
            <id>https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474</id>
            <summary type="text">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீண்டும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c43fa8-d97e-4e81-a271-d6df905e2456/26-6a53814395667.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு</h2><p> </p><p style="text-align: justify;">&nbsp;போதைப்பொருள் மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வின்படி, புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்கள் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தபோது பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">அதன்படி, 47 சதவீத புனர்வாழ்வு முடித்தவர்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாலேயே மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக பிரதான காரணமாக உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
மேலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலின் தாக்கம், காரணமாக 24.5 சதவீதமானோர், குடும்பத்தினரின் முறையான அரவணைப்பும் கவனமும் கிடைக்காததால் 23 சதவீத பேரும், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழல் காரணமாக 22 சதவீத பேரும், காதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர காரணங்களால் 4 சதவீதமானவர்கள் மீண்டும் போதைப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கின்றனர்.
</p><p style="text-align: justify;">

இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, பெரும்பாலானவர்கள் தங்களின் 11 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிப் பருவத்திலேயே முதன்முதலில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றுக்கு அடிமையாகி, பின்னரே கடுமையான போதைப்பொருட்களுக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">&nbsp;புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 76 சதவீத பேர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்களாவர். மாறாக, உயர் தரம் வரை கல்வி கற்றவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக, அதாவது 13 சதவீத ஆக மட்டுமே உள்ளது. </p><p style="text-align: justify;">இதன் காரணமாக, பிள்ளைகளை சாதாரண தரத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களை உயர் கல்வி நோக்கி ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்கும் உண்டு.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இளம் தலைமுறையினரை இந்த போதையிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேரைச் சென்றடையும் வகையில் 1,050 விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"> நடப்பு ஆண்டில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு 1,278 விழிப்புணர்வு திட்டங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 660 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 62,000 பேர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c95cf1e-9d08-4440-bb2b-5eebe7462422/26-6a533274a1e68.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T11:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வருடங்களாக கோமாவில் கணவர் ; காலை கடித்து சரி பண்ணிய மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182"></link>
            <id>https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182</id>
            <summary type="text">கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.  இந்நிலையில்தான் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. </p><p> இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebeb51fb-bfc6-4a41-b610-c996e312f7eb/26-6a53746793d92.webp' /></p><h2>நெகிழ்ச்சி சம்பவம்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.</p><p>கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.</p><p>


தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.</p><p></p><p> </p><p>அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். </p><p>சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 68,000த்தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. </p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46348c0-2f99-4700-b528-7b36e4a40ba4/26-6a53780d5b929.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p> </p><p>

இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

டெங்கு நோய் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>அதிகப்படியான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். </p><p>

ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p>

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,823 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். </p><p>

தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,560 பேரும் என அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் வெளியே சென்ற பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-killed-after-going-out-at-night-1783851997"></link>
            <id>https://jvpnews.com/article/woman-killed-after-going-out-at-night-1783851997</id>
            <summary type="text">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

சனிக்கிழமை (11) இரவு குறித்த பெண் அருகிலுள்ள வீடொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3112f906-3390-4974-bad2-6c602e055fce/26-6a536bdeac23f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவர் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T10:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை தொடர்பில் வெளியான தகவல் ; அமைச்சரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/latest-update-on-irakkamam-tile-factory-1783851087"></link>
            <id>https://jvpnews.com/article/latest-update-on-irakkamam-tile-factory-1783851087</id>
            <summary type="text">திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். </p><p style="text-align: justify; ">

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7c671b-9c65-4e78-af9a-787260012059/26-6a5368514fa84.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விஷேட வர்த்தமானி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை உரையாற்றும் போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, வீரமுனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 25 விவசாயிகளின் 197 ஏக்கர் மற்றும் 3 ரூட் உறுதிக் காணி 1970 இல் இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அன்றைய அரசினால் விஷேட வர்த்தமானி மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இந்த காணிகளை மீளப்பெற்றுக் கொள்ளவென இந்த விவசாயிகளும் அவர்களது பரம்பரையினரும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கடந்த கால காணி அமைச்சர்கள், கைத்தொழில் அமைச்சு அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளை அவர்கள் பல தடவைகள் சந்தித்துள்ள போதிலும் இற்றை வரையும் அவர்களுக்கு குறித்த காணியோ அல்லது மாற்றுக் காணியோ அல்லது காணிக்குரிய நஷ்டஈடோ இற்றை வரையும் கிடைக்கப் பெறாதுள்ளது. </p><p style="text-align: justify; ">


இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி குறித்த விவசாயிகளுக்கு காணியை மீளப் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அக் காணிக்குரிய நஷ்டஈட்டை வழங்கவோ அல்லது மாற்று காணி வழங்கவோ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் லால் காந்த, இவ்விடயம் தொடர்பில் காணி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையில் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம், கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர் தனியார் காணி உரிமையாளர்களுடன் பல கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதோடு காணியை அடையாளம் காணும் விடயங்களுக்கான செலவினை நில அளவையாளர் திணைக்களத்திற்கு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்தும் அந்த தீர்மானம் செயற்படுத்தப்படாமல் உள்ளதாக காணி ஆணையாளர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
இதன்போது அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையின் காணி விவகாரம் தொடர்பில் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து அமைச்சர் லால் காந்தவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T10:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மீளத் திறக்கப்படும் கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visual-arts-university-reopens-tomorrow-1783850197"></link>
            <id>https://jvpnews.com/article/visual-arts-university-reopens-tomorrow-1783850197</id>
            <summary type="text">டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, 'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்திற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் புகைத்தல் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4c06e0-4671-4231-939e-ccf73d9444df/26-6a5364d703d45.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு பரவல்</h2><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

தற்போதைய சூழ்நிலையில், நுளம்புகள் பெருகுவதற்கான இடங்களைப் பேணுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தி வருவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

டெங்கு பரவலின் வேகமான அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,000-ஐத் தாண்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இச்சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்றும் (12) பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இதன்போது, நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள முதியோர் இல்லமொன்றின் மீது வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T09:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-pilgrim-s-tragedy-during-kataragama-journey-1783848970"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-pilgrim-s-tragedy-during-kataragama-journey-1783848970</id>
            <summary type="text">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3fb8483-30ef-4699-b27d-2d5f7a030f32/26-6a53600c44f6b.webp' /></p><h2 style="text-align: justify; ">யாத்திரிகர்</h2><p style="text-align: justify; ">இவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் குறித்து, லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னதாக, கடந்த 8ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து, பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. </p><p style="text-align: justify; ">அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T09:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையற்ற சிறுமிக்கு நடத்தப்பட்ட தகாத செயல் ; காதலனால் அரங்கேற்றப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/orphan-girl-faces-shocking-abuse-incident-1783847704"></link>
            <id>https://jvpnews.com/article/orphan-girl-faces-shocking-abuse-incident-1783847704</id>
            <summary type="text">15 வயது 4 மாத சிறுமி ஒருவர், சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கடந்த (11) ஆம் திகதி மொனராகலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">15 வயது 4 மாத சிறுமி ஒருவர், சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கடந்த (11) ஆம் திகதி மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11-ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்தச் சிறுமியின் பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில், அவர் தனது பாட்டி மற்றும் சித்தியின் பராமரிப்பில் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8f86e5-1069-40c4-8018-be285e775205/26-6a535b1a27d5f.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;பொலிஸில் முறைப்பாடு&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

அந்த இருவரும் சிறுமி குறித்து அதிக கவனம் செலுத்தாததால், அவர் அருகிலுள்ள ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். குறித்த வீட்டிற்கு தவறுதலாக அழைப்பை ஏற்படுத்திய நபருடன் சிறுமிக்குக் காதல் மலர்ந்துள்ளது</p><p style="text-align: justify;">&nbsp;அந்த நபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவராவார். பின்னர், அந்த இளைஞன் குறித்த வீட்டிற்கு வந்து, அங்கு சிறுமியுடன் தகாத முறையில் நடந்துக்கொண்டதை அறிந்த சித்தி சிறுமியைத் திட்டியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனைத் தொடர்ந்து, கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் திகதி, “நண்பர்களுடன் வெளியில் செல்கிறேன்” என்று பாட்டியிடம் கூறிவிட்டுச் சென்ற சிறுமி, காலி பகுதிக்குச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"> அங்கு காலி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த இளைஞன், சிறுமியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருடன் மீண்டும் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
சிறுமி வீட்டிற்குத் திரும்பியதும், இது குறித்து அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-12T09:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இவ்வகை பொருட்களை இறக்குமதி செய்ய தடை ; ஜனாதிபதியின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-bans-import-of-these-products-1783846664"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-bans-import-of-these-products-1783846664</id>
            <summary type="text">கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. </p><p style="text-align: justify;">

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e51ddd0-0fc7-441b-95fa-a230189a814d/26-6a53570956823.webp' /></p><h2 style="text-align: justify;">இறக்குமதி&nbsp;&nbsp;தடை</h2><p> </p><p style="text-align: justify;">

இதன்படி, ஜூலை 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் அல்லது முடிக்கப்படும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குவிதிகள் எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பதை அவ்வப்போது அமைச்சர் அறிவிப்பார் என குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அவை கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p style="text-align: justify;"> 

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் யோசனை முன்வைத்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதன்போது, இலங்கைக்கான பொருட்களுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க அமெரிக்க நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது. </p><p style="text-align: justify;">

கட்டாய உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கும், அந்தச் சட்டங்களைச் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஒழுங்குவிதியின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அல்லது முடிக்கப்படும் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-12T08:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வீழ்ச்சியை சந்தித்த சுற்றுலாத்துறை வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-tourism-revenue-faces-sharp-decline-1783843337"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-tourism-revenue-faces-sharp-decline-1783843337</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்து 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருமானமாகப் கிடைத்துள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add20704-cbe4-4114-9095-20c64a54445d/26-6a534a0a96444.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வருமானம்&nbsp;</h2><p style="text-align: justify;"> கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 

கடந்த மே மாதம் 155.7 மில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலா வருமானம், ஜூன் மாதத்தில் 151.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈட்டப்பட்ட 169.5 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க சரிவாகும். 

இதற்கிடையில், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திலும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">

மே மாதம் 847 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், ஜூன் மாதத்தில் 695 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 152 மில்லியன் டொலர் குறைவு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. </p><p style="text-align: justify;">

இருப்பினும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 3,738 மில்லியன் டொலர்களாக இருந்த இந்த வருமானம், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் 4,604.8 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 866.8 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-12T08:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த பொலிஸ் அதிகாரி ; காதல் தொடர்பிற்காக வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-accused-of-abusing-own-daughter-1783836340"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-accused-of-abusing-own-daughter-1783836340</id>
            <summary type="text">தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்&nbsp; நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fec07ca-78b0-4543-af14-8bd46c372f9e/26-6a532eb5d90a1.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலியல் துஷ்பிரயோகம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">சிறுமியின் தாய் எலி காய்ச்சல் காரணமாகக் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, தந்தையான சந்தேகநபர் இச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இச்சிறுமி மற்றொரு இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததால், ஆத்திரமடைந்த தந்தை அவரைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தை தன்னைத் துஷ்பிரயோகம் செய்த விபரத்தை வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட வைத்தியசாலைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர். </p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, சந்தேகநபர் இந்த மாதம் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T08:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவால் துயரில் தவிக்கும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-family-man-s-death-leaves-relatives-grieving-1783842591"></link>
            <id>https://jvpnews.com/article/young-family-man-s-death-leaves-relatives-grieving-1783842591</id>
            <summary type="text">மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராம்புத் தோட்டத்தில், அலுவலகக் காவலாளி ஒருவர் சனிக்கிழமை (11) மாலை 4 மணியளவில் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராம்புத் தோட்டத்தில், அலுவலகக் காவலாளி ஒருவர் சனிக்கிழமை (11) மாலை 4 மணியளவில் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.</p><p>&nbsp;“38 வயதுடைய, திருமணமான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9fa0d49-05b6-4fdf-8962-d08f3f891748/26-6a5347209a6da.webp' /></p><h2>குடும்பப் பிரச்சினை</h2><p>குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.. உடனடியாகக் காப்பாற்றும் நோக்கில் அவர் மீட்கப்பட்டு, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அவரது உடல் டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயுடன் தனித்திருந்த தந்தைக்கு இளைய மகன் நடத்திய கொடூரம் ; சந்தேக நபரின் அதிர்ச்சி பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-s-shocking-act-against-lonely-father-1783841015"></link>
            <id>https://jvpnews.com/article/son-s-shocking-act-against-lonely-father-1783841015</id>
            <summary type="text">தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால், படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவரின் சடலம் நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால், படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த&nbsp; 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a773a5ca-deb3-458c-8a2b-79877cc97b53/26-6a5340f8b5c99.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இவ்வதிகாரி தனது மனைவியுடன் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே, நேற்று இரவு 8.00 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீட்கப்பட்ட முதியவரின் சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், அவர் விழுந்து கிடந்த இடத்திலும் முகத்திலும் பலத்த இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> இதனால் இவர் யாரோ ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த முதியவரின் இளைய மகனான 48 வயதுடைய நபர் ஒருவர் தங்காலை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என்பதுடன், அவர் நேற்று (11) காலை 11.00 மணியளவில் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">அத்துடன் அவர் கைது செய்யப்படும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (SOCO) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T07:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-rough-seas-weather-alert-issued-1783840236"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-rough-seas-weather-alert-issued-1783840236</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதேவேளை, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கும், சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbbfbf5-3776-46fb-97a5-88bc282c237b/26-6a533dee3dbd3.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனால் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவித்தல்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T07:10:51+00:00</updated>
        </entry>
    </feed>
