<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T07:53:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடரும் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள்; எழும் சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள் க்ருத்து வெளியிட்டுள்ளனர். </p><p> 


இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. 

 யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது போலீஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன நேற்றையதினம் (17) அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d452db-3a9d-45bb-afef-512e0e79ddee/26-6a5b22903190c.webp' /></p><h2>அடுத்தடுத்து&nbsp; ராஜபக்சர்களுக்கு&nbsp; நெருக்கமானவர்களின் மரணங்கள்</h2><p>

கபில சந்திரசேனவை தொடர்ந்து முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன மரணங்க்கள் பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
</p><p> 
நிழல் அரசு பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற மற்றும் போலீஸ் விசாரணைகளை உற்றுநோக்குபவர்களுக்கும் இந்த மரணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எளிதில் புரியும் என&nbsp; அவதானிகாள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

ராஜபக்ச குடும்பத்திற்கு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் மிகவும் விசுவாசமான ஒரு அதிகாரியாகவே செயல்பட்டவர் உயிரிழந்த IGP சிடி.விக்ரமரத்ன.</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஆட்சி அதிகாரத்தை பிடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் போலீஸ் மா அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபாயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44478f42-e86c-4ddf-afea-4d6992238f2f/26-6a5b228f6c773.webp' /></p><p> 

அன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்கவும் ராஜபக்சக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்களை அடித்துத் துன்புறுத்தவுமே இந்த நீடிப்புகள் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மிகத் தீவிரமாக விசாரித்த CID பணிப்பாளர் ஷானி அபயசேகர விக்ரமரத்னவின் பரிந்துரையின் பேரிலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டு பின்னாளில் கைதும் செய்யப்பட்டார். 

மேலும் ஈஸ்டர் பயங்கரம் குறித்து விசாரித்த 20 க்கும் மேற்பட்ட திறமையான CID அதிகாரிகள் விசாரணைப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதுடன் 700 க்கும் அதிகமான போலீஸ் மற்றும் CID அதிகாரிகளுக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
</p><p>
அதேவேளை ஈசடர் தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸாரா ஜெஸ்மினின் சர்ச்சைக்குரிய மூன்றாவது டீ என் ஏ பரிசோதனையின் ரிப்போர்ட்டை எடுக்க சுரேஷ் சலேயுடன் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றவர் முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன.</p><p> 
 
கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் மரணமடைந்திருந்தார். </p><p>

இந் நிலையில் கபில சந்திரசேனவை தொடர்ந்து சிடி. விக்ரமரத்ன மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்களை விதைக்கிறது</p>]]></content>
            <updated>2026-07-18T07:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யால் பிரபல்யமடைந்த கேக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-cake-made-famous-by-chief-minister-vijay-1784359750"></link>
            <id>https://jvpnews.com/article/the-cake-made-famous-by-chief-minister-vijay-1784359750</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய &#039;மேங்கோ வெண்ணிலா கேக்&#039; (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய 'மேங்கோ வெண்ணிலா கேக்' (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் 'சிஎம் கேக்' (CM Cake) என்றே அழைக்கப்பட்டு பெருமளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.
</p><p>
 
முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட மேங்கோ வெண்ணிலா கேக்' தான் இவ்வளவு பிரபல்யமாகியுள்ளது.

இந்நிலையில், அந்த நிழற்படத்தில் இடம் பிடித்திருந்த மாம்பழ கேக் தற்போது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87432d5f-5ec0-4991-9ca2-b1807b098f32/26-6a5b2b475b377.webp' /></p><h2>&nbsp;இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக்&nbsp;முன்பதிவு</h2><p>
</p><p>
அந்த கேக்கை தயாரித்த பெண் கூறுகையில், விஜய்யின் பிறந்தநாள் நிழற்படத்துக்குப் பின்னர் அந்த கேக்கிற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும், சிலர் அதனை CM கேக் என அழைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக்குகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு நிழற்படம், குறிப்பிட்ட கேக்கிற்கு எதிர்பாராத அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T07:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-sri-lanka-1784358843"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-sri-lanka-1784358843</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92b29be6-b797-47af-8a42-d6178e4ec9df/26-6a5b27bd45fcf.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T07:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[jaffna kings அணியில் இடம்பெற்ற மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-kings-fraud-court-issues-order-1784357688"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-kings-fraud-court-issues-order-1784357688</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியின் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர்கள் Jaffna kings அணியின் உரிமையாளரான மஞ்சோட் கல்ரா மற்றும் குறித்த சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக கூறப்படும் இந்திய பிரஜையான யுவராஜ் புஷ்பா ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61434822-1ad6-42e7-903e-dd767cb4ae8c/26-6a5b2339d198b.webp' /></p><h2 style="text-align: justify; ">போட்டி முறைகேடு&nbsp;</h2><p style="text-align: justify;">

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
2026ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">நான்கு போட்டிகளுக்காக 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்க திட்டமிடப்பட்டதாகவும், இதுதொடர்பான உரையாடல் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.</p><p style="text-align: justify;">

விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T06:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஐந்து பேருக்கு மரண தண்டனை ; 25 வருடங்களின் பின்னர் கிடைத்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-given-to-five-in-sri-lanka-1784355982"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-given-to-five-in-sri-lanka-1784355982</id>
            <summary type="text">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p style="text-align: justify; ">


2001 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி, ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d21a0ee-3459-47db-90ea-0e7dfad69f79/26-6a5b1c90334a1.webp' /></p><p style="text-align: justify; ">

இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சயங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T06:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-attacks-iran-for-the-seventh-consecutive-day-1784355556"></link>
            <id>https://jvpnews.com/article/us-attacks-iran-for-the-seventh-consecutive-day-1784355556</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் &quot;முடிவுக்கு வந்துவிட்டது&quot; என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் "கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை" தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415e7bd4-0a2a-4d5b-9df5-d2cebd56a145/26-6a5b1ae6169a5.webp' /></p><h2>இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள்</h2><p> </p><p>

 அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. </p><p>

"ஈரானிய ஆக்கிரமிப்பைத்" தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் "பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக&nbsp; குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இதேவேளை, ஒரே இரவில் தங்கள் வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T06:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் திருமண வாழ்க்கையால் விரக்தி ; மார்பில் சுட்டு உயிர் மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; வெளிவந்த பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385"></link>
            <id>https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p style="text-align: justify; ">
விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327447eb-c391-442a-a507-45dc97ce98df/26-6a5aeb5b9229e.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p style="text-align: justify; ">விக்ரமரத்னவின் மகனின் மனைவி, பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T06:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் வீடொன்றுக்குள் 25 க்கும் மேற்பட்ட கும்பல் அராஜகம்; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718"></link>
            <id>https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0261c99-4bf9-4faf-894e-99e1c167362c/26-6a5b18291e7ed.webp' /></p><h2>&nbsp;யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்</h2><p>
</p><p>
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T06:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-for-north-and-east-areas-1784354474"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-for-north-and-east-areas-1784354474</id>
            <summary type="text">நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f100a1f0-7247-4a63-9ebe-c9b2d1f5f687/26-6a5b16abcbdfe.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை மட்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த எச்சரிக்கையின்படி, பகல் பொழுதில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனால் பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T06:01:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-arrested-in-katunayake-airport-1784350098"></link>
            <id>https://jvpnews.com/article/women-arrested-in-katunayake-airport-1784350098</id>
            <summary type="text">அங்கோலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்கோலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 237 கிராம் கொக்கைன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>சந்தேகத்திற்கிடமான நடத்தை</b></h2><p>அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்று, அங்கிருந்து கட்டார் நாட்டின் டோஹா வழியாக இலங்கை வந்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ba1024-e1a8-4a00-b770-2e1ea472417e/26-6a5b0a77f19e6.webp' /></p><p>விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியின் உதவியுடன் பயணித்துள்ளார். </p><p>

அவரது சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து சுங்க அதிகாரிகளின் கவனம் திரும்பியது. </p><p>அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தம்மிடம் இருந்த 14 கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை அவரே முன்வந்து சுங்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். </p><p>

மேலும், தான் இன்னும் சில போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருப்பதாக அந்தப் பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

இந்தச் சம்பவம் குறித்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T05:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-chavakachcheri-urban-council-halted-1784351561"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-chavakachcheri-urban-council-halted-1784351561</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46af7016-6c01-46a5-a48b-603065691afb/26-6a5b0b4b4948e.webp' /></p><p> </p><p>

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார்.

 எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.</p><p></p><p>

 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.</p><p>

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர்மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார். </p><p>

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p></p><p> </p><p>

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T05:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் புனித தலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-on-kataragama-sacred-site-1784350928"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-on-kataragama-sacred-site-1784350928</id>
            <summary type="text">கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify;">

2026 ஆம் ஆண்டுக்கான காதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்கு இணையாக 'பொலித்தீன் அற்ற புனித வலயங்கள் - 2030' எனும் இந்த திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29bc72b-59a7-466a-bdac-e6ce70917e9f/26-6a5b08d742729.webp' /></p><h2 style="text-align: justify; ">பிளாஸ்டிக் மாசுபாடு</h2><p>
</p><p style="text-align: justify;">
வருடம் முழுவதும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">

வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகை தருவதுடன், ஆடிவேல் உற்சவ காலப்பகுதியில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடுகின்றது.
</p><p style="text-align: justify;">
இதனைக் கருத்திற்கொண்டு, பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்து பக்தர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்புகளுக்கு எதிரான சோதனைகளை பலப்படுத்தவும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T05:04:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் மீட்கப்பட்ட விரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/finger-with-a-ring-recovered-chemmani-mass-grave-1784351083"></link>
            <id>https://jvpnews.com/article/finger-with-a-ring-recovered-chemmani-mass-grave-1784351083</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca197dde-5dce-4380-94e4-af907b2400ca/26-6a5b096d17ef8.webp' /></p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T05:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பொலிஸ் உயரதிகாரி உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senior-police-officer-killed-in-tamil-area-1784350023"></link>
            <id>https://jvpnews.com/article/senior-police-officer-killed-in-tamil-area-1784350023</id>
            <summary type="text">வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55c34d2-95da-49c9-910d-080bcea81e24/26-6a5b05496e98c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "> எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T04:47:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்கர நாற்காலியில் வந்து அதிகாரிகளை மிரள வைத்த வெளிநாட்டு பெண் ; சினிமா பாணியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-woman-stuns-sri-lankan-officials-1784349018"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-woman-stuns-sri-lankan-officials-1784349018</id>
            <summary type="text">உடலுக்குள் இரகசியமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவந்த 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கட்டுநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடலுக்குள் இரகசியமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவந்த 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் 17ஆம் திகதி அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64555b36-7f1e-4a6b-8c07-145303e066cb/26-6a5b015bbd25d.webp' /></p><h2>விசாரணைகள்</h2><p>
</p><p>
விமான நிலையத்திற்குள் வரும் போது அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியவாறு பயணித்துள்ளார்.</p><p>
விமான நிலைய சுங்க அதிகாரிகளின் விசாரணைகளின் போது, தனது உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 14 மாத்திரைகளை அந்தப் பெண் சுயவிருப்பின் பேரில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
</p><p>

அத்துடன், மேலும் பல போதைப்பொருள் மாத்திரைகளைத் தான் விழுங்கியுள்ளதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதிகாரிகளால் மீட்கப்பட்ட 14 மாத்திரைகளிலும் சுமார் 237 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வெளிநாட்டுப் பெண்ணும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதேவேளை, அவரது உடலுக்குள் எஞ்சியுள்ளதாகக் கருதப்படும் ஏனைய போதைப்பொருள் மாத்திரைகளை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T04:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-man-dies-after-drinking-with-friends-1784347429"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-man-dies-after-drinking-with-friends-1784347429</id>
            <summary type="text">யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">&nbsp;இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு&nbsp; &nbsp;பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f05413-0209-4bee-98e4-cefa9712e2c1/26-6a5afb274c725.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக்காணப்படுவதை அவதானித்தனர்.

</p><p style="text-align: justify; ">
அதன்பின்னர், பொலிஸார் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-18T04:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாநகரசபை ஊழல் விசாரணை ; ரோசி சேனாநாயக்க வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118"></link>
            <id>https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். </p><p style="text-align: justify; ">ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமையவே அவர் சமூகமளித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd2b917-6d2f-4826-b4b0-a37502bdbfb3/26-6a5af220179ff.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; "> 

2022 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேவையுடைய மக்களுக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை விநியோகித்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வெளியில் வந்து இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அந்த வேலைத்திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தனர் என்றார்.</p><p style="text-align: justify; ">

கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்பட்ட பாரிய நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது ஸ்தாபிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">கொழும்பு 3. காலி வீதியில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதும் விசாரணை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்காக அதன் சேவைக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142"></link>
            <id>https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142</id>
            <summary type="text">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். 

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08eaabe9-b3c9-4ee4-841a-f50bf20d2a43/26-6a5aee503acbd.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:09:12+00:00</updated>
        </entry>
    </feed>
