<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-18T11:45:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த யுவதி; பட்டப்பகலில் வாலிபர் அரங்கேற்றிய கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207"></link>
            <id>https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207</id>
            <summary type="text">&amp;nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்கேரிய ஈசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

இந்தியா கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd1a0f2-7449-43f1-af65-7dd0ead84796/26-6a5b3cb0c0c4d.webp' /></p><p></p><h2>காதலை ஏற்க மறுத்த யுவதி....</h2><p> </p><p>

இவர் தினமும் வேலைக்கு பஸ்சில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் லாவண்யாவை தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். </p><p>அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் சேத்தன் அவரை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால், சேத்தனை, லாவண்யா திட்டியதுடன் தனது பின்னால் சுற்ற வேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.</p><p></p><p> </p><p>நேற்று (16) வழக்கம் போல வேலைக்கு சென்ற லாவண்யா, மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் காக்யபாதவி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் சேத்தன் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் சேத்தன், லாவண்யா அமர்ந்திருந்த பஸ்சில் ஏறி,&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட் டார். </p><p>ஆத்திரம் அடைந்த சேத்தன், தான் பையில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்தார். அதிர்ச்சி அடைந்த லாவண்யா பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். 

ஆனாலும் சேத்தன் அவரை விடாமல் அரிவாளை கையில் வைத்தப்படி பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.</p><p></p><p> </p><p>ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்துக்குள் தவறி விழுந்த லாவண்யாவை அவர் அரிவாளால் பலமுறை கொடூரமாக வெட்டியதில்&nbsp; &nbsp;பலத்த காயம் அடைந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>அரிவாளை பஸ் நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் பஸ் நிலையத்தின் நடுவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.</p><p></p><p>சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் பொலிஸார் கொலையான லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன்&nbsp; தப்பி ஓடிய சேத்தனை வலைவீசி தேடி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T11:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580"></link>
            <id>https://jvpnews.com/article/mother-of-baby-dies-of-electrocution-in-jaffna-1784374580</id>
            <summary type="text">யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/696e7192-709f-4958-909c-dd52d4bc19c5/26-6a5b653608f8a.webp' /></p><p> </p><p>

இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் , பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் இதனால் மின் கம்பிகள் அப்பகுதி வீடுகளின் மேல் விழுந்து பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T11:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-10-quizzed-in-ex-police-chief-death-probe-1784374009"></link>
            <id>https://jvpnews.com/article/over-10-quizzed-in-ex-police-chief-death-probe-1784374009</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">
63 வயதான அவர், வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8686cfba-04fb-438a-9a6b-2c2785d6df28/26-6a5b62fae8dfb.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இச்சம்பவம் நடந்த போது, வீட்டில் இருந்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த மரணம் குறித்து முறையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">

இதற்கமைய, கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரால் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதற்கு மேலதிகமாக, நுகேகொட கோட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணையொன்றை மேற்கொண்டு வருகிறார்.
</p><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் இன்று(19) பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">
அதன் பின்னர், அவரது உடலம் மீதான இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T11:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் நீதிபதியின் பணி இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspension-of-angunakolapelessa-female-judge-1784372064"></link>
            <id>https://jvpnews.com/article/suspension-of-angunakolapelessa-female-judge-1784372064</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ&amp;nbsp; நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ&nbsp; நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரது பணியை இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56ca70b-d844-455e-9708-d4d9346e1f8a/26-6a5b5b6221fbe.webp' /></p><p>
</p><p>கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பல நீதிபதிகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T11:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடு கடலில் ஆபத்தில் சிக்கிய மீனவர் ; இலங்கை கடற்படையினரால் காப்பற்றப்பட்ட உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-navy-rescues-fisherman-at-sea-1784371317"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-navy-rescues-fisherman-at-sea-1784371317</id>
            <summary type="text">இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">
பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd887e7-c850-40d2-ac29-2b92c32e9e26/26-6a5b5877320e9.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

இதன்போது நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், 2026 ஜூலை 17 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cccd4d-9cda-49d8-ae1d-83614d45a68f/26-6a5b5877e222f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீனவர் அவரது மீன்பிடி படகில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு' மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T10:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை; கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-marriage-foreign-women-china-warns-1784370250"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-marriage-foreign-women-china-warns-1784370250</id>
            <summary type="text">&amp;nbsp; சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கபப்டும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கபப்டும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>


கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். </p><p>இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது.

சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர் சீனா​வில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa1cb22b-99f9-40dd-9e14-f59ab45669ae/26-6a5b544b889da.webp' /></p><h2>சீன ஆண்​கள் பணத்​தைக் கொடுத்து திரு​மணம்</h2><p> </p><p>

பெரும்​பாலான வழக்​கு​களில், சீன ஆண்​கள் ஆயிரக்​கணக்​கான யுவான் பணத்​தைக் கொடுத்து திரு​மணம் செய்த வெளி​நாட்​டுப் பெண்கள் சில நாட்​களி​லேயே காணா​மல் போய்​விடு​வ​தாக​வும், சில இடங்​களில் வெளி​நாட்​டுப் பெண்​கள் கடத்​தப்​பட்டு சீன ஆண்களைத் திரு​மணம் செய்ய வற்​புறுத்​தப்​படு​வ​தாக​வும் புகார்கள் எழுந்​துள்​ளன.
</p><p>
இதன் காரண​மாக, வங்க தேசம் தவிர ஏற்​கெனவே வியட்​நாம், மியான்​மர், லாவோஸ், பாகிஸ்​தான் மற்​றும் நேபாளம் ஆகிய நாடு​களி​லும் உள்ள சீனத் தூதரகங்​கள் திருமண மோசடி குறித்து எச்​சரிக்​கைகளை விடுத்​துள்​ளன.</p><p></p><p> </p><p>

இந்த நிலை​யில், சீனாவைச் சேர்ந்த ஆண்​கள் பலர் வங்​க தேசத்​திற்கு வந்​து, இடைத்​தரகர்​கள் மூலம் பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து வங்க தேசத்​தில் உள்ள சீன தூதரகம் கூறியுள்ள​தாவது,</p><p> வங்​கதேச சட்​டத்​தின்​படி மனிதக் கடத்​தல் வழக்​கு​களில் மிகக் கடுமை​யான குற்​றங்​களுக்கு ஆயுள் தண்டனை அல்​லது மரண தண்​டனை வரை விதிக்​கப்பட வாய்ப்புள்​ளது. 

இக்​குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்​குக் குறைந்தபட்சம் 7 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை​யும், சுமார் ரூ.3.95 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படும்.</p><p></p><p>
</p><p>
மேலும், திரு​மணக் கடத்​தல் குற்​றங்​களுக்​குத் தூண்​டு​தலாகவோ அல்​லது உடந்​தை​யாகவோ இருப்​பவர்​களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, ரூ.15,600 அபராத​ம் விதிக்​கப்​படும். திருமணங்​கள் உண்​மை​யான அன்​புட​ன் அமைய வேண்​டும். </p><p>

பெண்​களைப் பணம் கொடுத்து வாங்​கு​வது பிற்​காலத்​தில் கடுமை​யான நிதி இழப்​புக்​கும், உயிருக்கே ஆபத்​தான சூழ்நிலைகளுக்​கும்​ வழி​வகுக்​கும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ கூறியுள்​ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T10:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிப்பு போத்தல்களால் பரபரப்பான விமான நிலையம் ; 9 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-on-alert-over-candy-bottles-1784369037"></link>
            <id>https://jvpnews.com/article/airport-on-alert-over-candy-bottles-1784369037</id>
            <summary type="text">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் "பசுமை வழி" (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d905187-06b0-4762-9345-49a7d88f384b/26-6a5b4f8f0a618.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் தொகை</h2><p> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொப்பி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T10:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி வாங்கித்தர மறுத்த தந்தை ; ஆத்திரத்தில் மாணவர்கள் செய்த தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631"></link>
            <id>https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631</id>
            <summary type="text">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் நேற்று (17)&nbsp; எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கடந்த 4ஆம் திகதி அதிகாலை எப்பாவெல நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff93cfe-0876-423e-907a-a065d513d2da/26-6a5b33d123c13.webp' /></p><h2 style="text-align: justify;">பிரிவெனா மாணவர்கள்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவெல, எந்தகல பகுதியிலுள்ள பிரிவெனா ஒன்றில் தங்கிப் படித்து வரும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் தலாவ - நபடவெவ மற்றும் எப்பாவெல - ரொட்டவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் குறித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திருடப்பட்ட தொலைபேசிகளின் IMEI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை (Signals) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

</p><p style="text-align: justify;">

கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 06 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5000 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று, சில நவீன கையடக்க தொலைபேசிகளின் விலைகளைக் கேட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர் தனக்கு ஒரு கையடக்க தொலைபேசியை வாங்கித் தருமாறு அவர் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். </p><p style="text-align: justify;">எனினும், தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வந்து இந்த கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

பின்னர், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் இரண்டு கையடக்க தொலைபேசிகளை தங்களது பாவனைக்காக வைத்துக்கொண்டு, ஏனைய நவீன கையடக்க தொலைபேசிகளை பிரிவெனாவின் தேரர் ஒருவருக்கும், தந்தைக்கும், மேலும் சில மாணவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அதன்பின்னர், இந்த மாணவர்கள் திருடப்பட்ட கைபேசி ஒன்றில் தேரருக்கு சொந்தமான சிம் அட்டையைப் (SIM card) பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமையவே, சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொலிஸாருக்கு வழிவகை கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify;">&nbsp;கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளையும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எப்பாவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T09:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழக்கும் சர்ச்சை சம்பவங்களின் சாட்சியாளர்கள் ; நளின் பண்டார எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/witnesses-in-mystery-cases-die-mysteriously-1784367082"></link>
            <id>https://jvpnews.com/article/witnesses-in-mystery-cases-die-mysteriously-1784367082</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்திய முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d555b083-153e-4063-87d6-b2ec86c0ef0e/26-6a5b47ebdd77b.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலை</h2><p style="text-align: justify; ">
குருநாகல் பகுதியில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை வரலாற்றில் முதன்முறையான சேவையில் இருந்த பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டமை இதுவே முதன்முறையாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அச்சுறுத்தலானது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை ஒன்று குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; ">அவ்வாறான பின்னணியில் இந்த மரணத்தை தற்கொலை என்று அடையாளப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; ">
தற்போது சேவையில் உள்ள அரச சேவையாளர்களுக்கும், ஓய்வுப்பெற்ற சேவையாளர்களுக்கும் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது முறையற்றதொரு செயற்பாடாகும். அரசாங்கம் இதற்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T09:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் வீடொன்றுக்குள் 25 க்கும் மேற்பட்ட கும்பல் அராஜகம்; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718"></link>
            <id>https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0261c99-4bf9-4faf-894e-99e1c167362c/26-6a5b18291e7ed.webp' /></p><h2>&nbsp;யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்</h2><p>
</p><p>
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T08:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள்களுடன் பிடிபட்ட 16 சாரதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-nab-16-modified-motorcycle-riders-1784363790"></link>
            <id>https://jvpnews.com/article/police-nab-16-modified-motorcycle-riders-1784363790</id>
            <summary type="text">ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">


ஹோமாகம பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f18927-ae7c-4ada-b981-243e218c6ae4/26-6a5b3b0fc61ad.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify;">

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இந்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T08:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-price-increases-in-sri-lanka-today-1784363242"></link>
            <id>https://jvpnews.com/article/gold-price-increases-in-sri-lanka-today-1784363242</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e24427f-1fd3-4dd5-812f-3925cd0b585b/26-6a5b38ebe8cf7.webp' /></p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவிற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை; ஒரு மில்லியன் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rice-sold-at-an-inflated-price-one-million-fine-1784362502"></link>
            <id>https://jvpnews.com/article/rice-sold-at-an-inflated-price-one-million-fine-1784362502</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசின் மொத்த சில்லறை விலையை விடவும் ஐந்து கிலோ எடைகொண்ட கீரி சம்பா அரிசி பொதி 1775 ரூபா என்ற கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a43c670-d1b7-4789-b592-6763d0d8a2a5/26-6a5b360833285.webp' /></p><p></p><p>

இதனையடுத்து அரியை விற்பனை செய்த அங்காடிக்கு ,களுத்துறை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளனது.
</p><p>
இதேவேளை பொருட்களை வாங்கும் போது அதில் உற்பத்தி தர விலை அச்சிடப்பட்டுள்ளதா என பரிசோதித்து கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p>

மேலும் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அது குறித்து 1977க்கு முறையிடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடரும் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள்; எழும் சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள் க்ருத்து வெளியிட்டுள்ளனர். </p><p> 


இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. 

 யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது போலீஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன நேற்றையதினம் (17) அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d452db-3a9d-45bb-afef-512e0e79ddee/26-6a5b22903190c.webp' /></p><h2>அடுத்தடுத்து&nbsp; ராஜபக்சர்களுக்கு&nbsp; நெருக்கமானவர்களின் மரணங்கள்</h2><p>

கபில சந்திரசேனவை தொடர்ந்து முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன மரணங்க்கள் பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
</p><p> 
நிழல் அரசு பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற மற்றும் போலீஸ் விசாரணைகளை உற்றுநோக்குபவர்களுக்கும் இந்த மரணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எளிதில் புரியும் என&nbsp; அவதானிகாள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p>

ராஜபக்ச குடும்பத்திற்கு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் மிகவும் விசுவாசமான ஒரு அதிகாரியாகவே செயல்பட்டவர் உயிரிழந்த IGP சிடி.விக்ரமரத்ன.</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஆட்சி அதிகாரத்தை பிடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் போலீஸ் மா அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபாயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44478f42-e86c-4ddf-afea-4d6992238f2f/26-6a5b228f6c773.webp' /></p><p> 

அன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்கவும் ராஜபக்சக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்களை அடித்துத் துன்புறுத்தவுமே இந்த நீடிப்புகள் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மிகத் தீவிரமாக விசாரித்த CID பணிப்பாளர் ஷானி அபயசேகர விக்ரமரத்னவின் பரிந்துரையின் பேரிலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டு பின்னாளில் கைதும் செய்யப்பட்டார். 

மேலும் ஈஸ்டர் பயங்கரம் குறித்து விசாரித்த 20 க்கும் மேற்பட்ட திறமையான CID அதிகாரிகள் விசாரணைப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதுடன் 700 க்கும் அதிகமான போலீஸ் மற்றும் CID அதிகாரிகளுக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை ஈசடர் தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸாரா ஜெஸ்மினின் சர்ச்சைக்குரிய மூன்றாவது டீ என் ஏ பரிசோதனையின் ரிப்போர்ட்டை எடுக்க சுரேஷ் சலேயுடன் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றவர் முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன.</p><p> 
 
கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் மரணமடைந்திருந்தார். </p><p>

இந் நிலையில் கபில சந்திரசேனவை தொடர்ந்து சிடி. விக்ரமரத்ன மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்களை விதைக்கிறது</p>]]></content>
            <updated>2026-07-18T07:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யால் பிரபல்யமடைந்த கேக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-cake-made-famous-by-chief-minister-vijay-1784359750"></link>
            <id>https://jvpnews.com/article/the-cake-made-famous-by-chief-minister-vijay-1784359750</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய &#039;மேங்கோ வெண்ணிலா கேக்&#039; (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய 'மேங்கோ வெண்ணிலா கேக்' (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் 'சிஎம் கேக்' (CM Cake) என்றே அழைக்கப்பட்டு பெருமளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.
</p><p>
 
முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட மேங்கோ வெண்ணிலா கேக்' தான் இவ்வளவு பிரபல்யமாகியுள்ளது.

இந்நிலையில், அந்த நிழற்படத்தில் இடம் பிடித்திருந்த மாம்பழ கேக் தற்போது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87432d5f-5ec0-4991-9ca2-b1807b098f32/26-6a5b2b475b377.webp' /></p><h2>&nbsp;இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக்&nbsp;முன்பதிவு</h2><p>
</p><p>
அந்த கேக்கை தயாரித்த பெண் கூறுகையில், விஜய்யின் பிறந்தநாள் நிழற்படத்துக்குப் பின்னர் அந்த கேக்கிற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும், சிலர் அதனை CM கேக் என அழைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் சுமார் 400 கேக்குகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு நிழற்படம், குறிப்பிட்ட கேக்கிற்கு எதிர்பாராத அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T07:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-sri-lanka-1784358843"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-sri-lanka-1784358843</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92b29be6-b797-47af-8a42-d6178e4ec9df/26-6a5b27bd45fcf.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T07:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[jaffna kings அணியில் இடம்பெற்ற மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-kings-fraud-court-issues-order-1784357688"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-kings-fraud-court-issues-order-1784357688</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியின் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர்கள் Jaffna kings அணியின் உரிமையாளரான மஞ்சோட் கல்ரா மற்றும் குறித்த சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக கூறப்படும் இந்திய பிரஜையான யுவராஜ் புஷ்பா ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61434822-1ad6-42e7-903e-dd767cb4ae8c/26-6a5b2339d198b.webp' /></p><h2 style="text-align: justify; ">போட்டி முறைகேடு&nbsp;</h2><p style="text-align: justify;">

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
2026ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">நான்கு போட்டிகளுக்காக 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்க திட்டமிடப்பட்டதாகவும், இதுதொடர்பான உரையாடல் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.</p><p style="text-align: justify;">

விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T06:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஐந்து பேருக்கு மரண தண்டனை ; 25 வருடங்களின் பின்னர் கிடைத்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-given-to-five-in-sri-lanka-1784355982"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-given-to-five-in-sri-lanka-1784355982</id>
            <summary type="text">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p style="text-align: justify; ">


2001 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி, ஒரு குழுவினர் வெலகெதர, தியகவிட்டியிலுள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d21a0ee-3459-47db-90ea-0e7dfad69f79/26-6a5b1c90334a1.webp' /></p><p style="text-align: justify; ">

இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சயங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்தே ஐவரும் கொலைக் குற்றம் மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர்கள் ஐந்து பேருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T06:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-attacks-iran-for-the-seventh-consecutive-day-1784355556"></link>
            <id>https://jvpnews.com/article/us-attacks-iran-for-the-seventh-consecutive-day-1784355556</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் &quot;முடிவுக்கு வந்துவிட்டது&quot; என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் "கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை" தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415e7bd4-0a2a-4d5b-9df5-d2cebd56a145/26-6a5b1ae6169a5.webp' /></p><h2>இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள்</h2><p> </p><p>

 அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. </p><p>

"ஈரானிய ஆக்கிரமிப்பைத்" தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் "பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக&nbsp; குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இதேவேளை, ஒரே இரவில் தங்கள் வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T06:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் திருமண வாழ்க்கையால் விரக்தி ; மார்பில் சுட்டு உயிர் மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; வெளிவந்த பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385"></link>
            <id>https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p style="text-align: justify; ">
விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327447eb-c391-442a-a507-45dc97ce98df/26-6a5aeb5b9229e.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p style="text-align: justify; ">விக்ரமரத்னவின் மகனின் மனைவி, பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T06:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-for-north-and-east-areas-1784354474"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-for-north-and-east-areas-1784354474</id>
            <summary type="text">நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f100a1f0-7247-4a63-9ebe-c9b2d1f5f687/26-6a5b16abcbdfe.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை மட்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த எச்சரிக்கையின்படி, பகல் பொழுதில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனால் பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T06:01:26+00:00</updated>
        </entry>
    </feed>
