<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-17T01:38:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-applications-for-national-school-teachers-1784250251"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-applications-for-national-school-teachers-1784250251</id>
            <summary type="text">2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
</p><p>
இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/301c1507-ea1f-4807-adc2-066b2741e8ee/26-6a597f8cf1b77.webp' /></p><p>

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T01:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதுளைப்பழம் சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pomegranate-lover-dont-make-mistake-while-eating-1784249684"></link>
            <id>https://jvpnews.com/article/pomegranate-lover-dont-make-mistake-while-eating-1784249684</id>
            <summary type="text">மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும். ஆனால் அதை நீங்கள் தப்பா தான் சாப்பிடறீங்கனு உங்களுக்கு தெரியுமா? மாதுளை பழம் சாப்பிடும்போது பொதுவாக செய்யும் 5 தவறுகள் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f11297-9549-48f4-a4d2-9c55119960d6/26-6a597d560c417.webp' /></p><p>நிறைய பேர் மாதுளை பழத்தை நறுக்கும்போது ஒழுங்காக நறுக்கத் தெரியாமல் அதன் சாறு முழுக்க கீழே சிந்திவிடுவார்கள். அதிலேயே பாதி சத்துக்கள் வீணாகி போய்விடும். அதோடு பழத்தை மென்று விட்டு அதன் விதைகளை தூக்கி கீழே வீசி விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.
</p><p>
மாதுளை பழத்தை பொறுத்தவரை அதன் விதைகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அதில்தான் நிறைய ஆண்டி அக்கிட்சிட்டுங்கள் இருக்கின்றன.

குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு விதைகளோடு சாப்பிட கற்றுக் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகள் விதைகளை துப்பி விடுகிறார்கள்.</p><p>மாதுளை சாப்பிடும்போது செய்யும் இரண்டாவது தவறு என்னவென்றால் மாதுளையின் மேல் பகுதி தோலை உரித்தவுடன் அதன் உட்புறத்தில் இருக்கும் மெலிதான வெள்ளை நிற தோல்களை நீக்கிவிட்டு மாதுளையின் முத்துக்களை மட்டும் சாப்பிடுவார்கள். அது மிக மிகத் தவறு.
</p><p>
மாதுளையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய தோலில் உள்ள துவர்ப்புத் தன்மை தான் அந்த பழத்தின் ஒட்டுமொத்த பயன்களையுமே தாங்கி இருக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் தான் நார்ச்சத்து இருக்கிறது. அது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவி செய்யும். அதை நீக்கிவிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக நீங்கிவிடும்.</p><p>மாதுளை பழம் மட்டுமல்ல எந்த வகை பழமாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும்.</p><p>

குறிப்பாக மாதுளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதிலும் சிலருக்கு குடல் சென்சிடிவிட்டி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இந்த அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.</p><p>மற்ற பழங்களையாவது நறுக்குவதற்கு முன்போ பின்போ கழுவிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் நன்கு யோசித்துப் பாருங்கள். மாதுளை பழத்தை நாம் கழுவுவதே கிடையாது.

மாதுளை முத்துக்கள் உள்ளுக்குள் தானே இருக்கிறது என்று உரித்து அப்படியே சாப்பிடுகிறோம். அப்படி செய்யக்கூடாது. </p><p>மாதுளை பழத்தின் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அதேபோல பழங்களில் நிறைய பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருப்பார்கள்.

அதனால் மாதுளை வெட்டுவதற்கு முன் பழத்தை நன்கு கழுவிவிட்டு தான் நறுக்க வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-07-17T00:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&amp;nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் என அனைத்து முக்கிய கிரகங்களும் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன.</p><p>சில ராசிக்காரர்கள் அபரிமிதமான வளர்ச்சியையும், நேர்மறையான பலன்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69898cb7-918e-4477-80b3-32f0550cd996/26-6a597a0480a91.webp' /></p><h4>மேஷம்
</h4><p>ஆடி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்</p><h4>கடகம்
</h4><p>கடக ராசியில் சூரியன் நிலை பெற்றிருப்பதால் ஆடி மாதம் அவர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. சூரியனின் ஆசியால் இந்த மாதத்தில், அவர்கள் தங்கள் வார்த்தைகளை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள், மேலும் இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை மேம்படும், மேலும் நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><h4>கன்னி
</h4><p>கன்னி ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது நிலையாக இருக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.</p><h4>மீனம்
</h4><p>மீன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் நேர்மறையான மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அவர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை பெரிதும் மேம்படும். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும், மேலும் குடும்ப விவகாரங்களில் முழு உற்சாகத்துடன் பங்கேற்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-17T00:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த கதி ; இளைஞனின் விபரீத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209"></link>
            <id>https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209</id>
            <summary type="text">இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>

உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தவர். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதான சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6829db17-674c-478c-a9f4-f55bc3a31efa/26-6a596fc29141d.webp' /></p><p>அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சமீர் தாஸ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பலத்த காயமடைந்த மாணவி வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
</p><p>
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்தின் புதிய மையமாக இந்தியப் பெருங்கடல் ; சிங்கப்பூரில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832</id>
            <summary type="text">ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற Global Economic Cooperation, East Summit மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகம் தற்போது "இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டை" நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cc3a78-fe74-4bb8-b6e1-fe53c4b0e706/26-6a5962920e12d.webp' /></p><p>

இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு முக்கிய தசாப்தத்தை மட்டுமல்ல, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தால் வரையறுக்கப்படும் ஒரு புதிய நூற்றாண்டிற்குள் நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மில்கன் நிறுவகத்தின் மூத்த ஆய்வாளர்கள் குழுத் தலைவர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் கர்டிஸ் எஸ். சின் உடன் இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையின் பங்கு குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
</p><p>
இலங்கை, முக்கிய பிராந்தியங்களை இணைக்கும் நம்பகமான பாலமாக உருவெடுப்பதுடன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
"பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி அது எதிர்காலத்தையும் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வேகமாக மாறிவரும் உலக பொருளாதார சூழலில் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயார்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம் ; அபராதத்துடன் இழப்பீடும் வழங்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 ( Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.</p><p>குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa48c759-5d24-4f69-b7dc-a0c1adf2ccaf/26-6a595e2ac46c2.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732"></link>
            <id>https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50abf134-0f55-407c-b346-8ce49e23e712/26-6a593b1dc3893.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T21:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவர்க்கார பொதிகளில் புதிய தகவல்கள் கட்டாயம் ; நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189</id>
            <summary type="text">சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf8cf91d-ce61-4f1b-aa73-6efc554a3fbe/26-6a594c86b9723.webp' /></p><p>இதன்படி, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிமுறைகளுக்கு அமைய, சவர்க்காரத்தின் உற்பத்திப் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளிலும் பிரதான சட்டகத்தில் (Main Panel) தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
மூன்றாவது மொழியில் உள்ள தகவல் பொதியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பொதியிடப்படும் போது குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த புதிய விதிமுறைகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடலுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல வகையான சவர்க்காரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு தயாரிப்பு தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குவதையும், சந்தையில் தரநிலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தான் தூக்கிய குழந்தையே தனக்கு எதிராக களமிறங்கும் என மெஸ்ஸி நினைத்திருப்பாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235"></link>
            <id>https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235</id>
            <summary type="text">கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கிய குழந்தை இன்று அவருக்கே எதிராக களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>2007 ஆம் ஆண்டு 20 வயதான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற ஒரு தொண்டு நிகழ்வின் போது ஐந்து மாத குழந்தையான லமின் யமாலை கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்த சம்பவம் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அந்த புகைப்படங்கள் உண்மையானவை எனவும், அவை 2008 ஆம் ஆண்டுக்கான தொண்டு நாட்காட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b71598-6bc4-470a-b342-9b951573246e/26-6a5948cc31ba4.webp' /></p><p>உள்ளூர் ஸ்பெயின் செய்தித்தாளான டயாரியோ ஸ்போர்ட், யுனிசெஃப் (UNICEF) உடன் இணைந்து இந்த தொண்டு முயற்சியை முன்னெடுத்திருந்தது. நிதி திரட்டும் நோக்கில் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களை உள்ளூர் குழந்தைகளுடன் இணைத்து புகைப்பட அமர்வு நடத்தப்பட்டது.
</p><p>
அந்த நிகழ்வில் பங்கேற்க லமின் யமாலின் குடும்பமும் வாய்ப்பு பெற்றது. மியாட்டரோவின் ரோகாஃபோண்டா பகுதியைச் சேர்ந்த யமாலின் குடும்பம், சீரற்ற முறையில் நடைபெற்ற தெரிவு முறையின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமால், எதிர்பாராத விதமாக மெஸ்ஸியுடன் இணைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸிக்கு குழந்தையுடன் எவ்வாறு பழகுவது என்பது தெரியாமல் சற்று தயக்கமாக இருந்ததாக புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் பின்னர் தெரிவித்திருந்தார்.</p><p>

மெஸ்ஸி அப்போது மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததாகவும், குழந்தையை எவ்வாறு தூக்குவது என்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p> பின்னர் யமாலின் தாயார் ஷீலா எபானா உதவி செய்து அந்த தருணத்தை எளிதாக்கியுள்ளார்.

காலப்போக்கில் அந்த புகைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் போது அவை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானது.
</p><p>
லமின் யமாலின் தந்தை மௌனீர் நஸ்ராவி, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதன் பின்னர் ரசிகர்கள், மெஸ்ஸி அப்போது அந்தக் குழந்தைக்கு தனது கால்பந்து திறமையின் "ஆசீர்வாதத்தை" வழங்கியதாக நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.</p><p>

இன்று ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள லமின் யமால், தனது இளம் வயதிலேயே உலக கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.</p><p> மறுபுறம், அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

ஒரு காலத்தில் மெஸ்ஸியின் கைகளில் இருந்த குழந்தை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கால்பந்து மேடையில் அவருக்கு எதிரான போட்டியாளராக நிற்பது, விளையாட்டு உலகின் மறக்க முடியாத சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குற்றச்சாட்டு ; முல்லைத்தீவு செய்தியாளர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-employment-allegations-journalist-arrested-1784232569</id>
            <summary type="text">வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்புவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff745788-1e63-45a6-bd3b-0f245e250ed1/26-6a593a7aa6fee.webp' /></p><p>வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து சுமார் 60 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
</p><p>
இதற்கமைய, முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் மற்றும் மற்றைய நபர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:09:39+00:00</updated>
        </entry>
    </feed>
