<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-12T21:52:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-us-1783892868"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-us-1783892868</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் (57) குடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் (57) குடும்பத் தகராறின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஜார்ஜியா மாநிலத்தின் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஷீத்தல், குடும்பத் தகராறின்போது அவரது கணவர் கிர்க் வர்செசியனால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ccbe277-581e-4b04-a3d2-e667c138f18f/26-6a540b8597bef.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குண்டுக் காயங்களுடன் ஷீத்தலையும் அவரது மகன் ஜேசனையும் மீட்டனர்.</p><p>

இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஷீத்தல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>அவரது மகன் ஜேசன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஷீத்தலின் கணவர் கிர்க் வர்செசியன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் ஜேசனின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் கானா ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளார். </p><p>1994ஆம் ஆண்டு ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற அவர், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்த பின்னர் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
</p><p>
தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஷீத்தலின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரியான தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-father-sexually-abused-daughter-1783892300"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-father-sexually-abused-daughter-1783892300</id>
            <summary type="text">தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (III) பி.யு.பி. மானியம்கமவினால், குறித்த பொலிஸ் சார்ஜன்டின் சேவை கடந்த 11ஆம் திகதி முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறு சேவை இடைநிறுத்தப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் கே.ஜி. சமந்த ருவன் குமார என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e46277a7-f144-4dc2-afc3-527fb4a9299c/26-6a54094d87d15.webp' /></p><p>

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் தனது மூத்த மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறுமியின் தாயார் 2021ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், வேறு ஒருவருடன் சிறுமி காதல் தொடர்பில் இருந்ததாக கூறி சந்தேகநபர் அவரை தாக்கியதாகவும், அதில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது, தந்தையினால் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில் வைத்தியரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து வைத்தியசாலைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பின்னர் அவர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிணிகே தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-12T21:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லுக்கு நிர்ணய விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209</id>
            <summary type="text">நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51dc8181-b850-47c5-b347-e72edde9c58f/26-6a53f182a2fff.webp' /></p><p>அம்பாறை, உகன பிரதேசத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதற்கமைய, ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
</p><p>
இதனிடையே, நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெருமளவிலான நெல் இருப்பு காணப்படுவதால், இந்தத் தடவை எதிர்பார்க்கப்படும் அறுவடையில் சுமார் 2 சதவீதமான நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலநிலை மாற்றம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது ; சஜித் பிரேமதாச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/climate-change-is-related-national-security-sajith-1783885383"></link>
            <id>https://jvpnews.com/article/climate-change-is-related-national-security-sajith-1783885383</id>
            <summary type="text">காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் நலன் கருதிய கடமையாகும். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, உணவு மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் நலன் கருதிய கடமையாகும்.</p><p> </p><p></p><p>இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கும் மிக அவசியமான ஒன்றாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேரவையை விளித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c0ff6a-f5ce-400a-9fe3-ed3c26d688f9/26-6a53ee48cd070.webp' /></p><p>இந்த பேரவையின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் அபேவிக்ரம ஆகியோர் செயற்படுகின்றனர்.
</p><p>
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்ட கட்டுப்பாடுகளை நோக்கிச் செல்ல பல்வேறு தரப்பினருடன் பொதுவான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்களுக்குள், இந்த பேரவை ஒரு நாள் கூட வேண்டும். </p><p>இது ஒரு தனிநபரின் பணியல்ல. காலநிலை ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் சுயாதீன ஆலோசனைக் குழுக்கள் எனப் பலதரப்பட்டோர் இதில் இணைவதால், கட்சி அரசியல் பேதமின்றி இந்த பேரவை செயற்படுகிறது என்று அவர் கூறினார்.
</p><p>


காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும்.</p><p></p><p>

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து கட்சி பேதமின்றி, விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் தகவல்களை மையமாகக் கொண்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே அதற்கேற்ப தயாராக இருக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே இந்த பேரவையின் முக்கிய நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை மாற்றங்கள் குறித்தும், அவை அடுத்தடுத்த பருவ காலங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எமக்கு அறிமுகமில்லாத காலநிலை மாற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த நிகழ்வில் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன, பேராசிரியர் புத்தி மாரம்பே, பேராசிரியர் இனோகா குடவிதாரண, கலாநிதி அண்ட்ரூ கீட்டில், ருக்ஷான் ஜயவர்தன, அஞ்சலி வாட்சன், துஷ்யந்த சில்வா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு ; பொத்துவிலில் 38°C வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/highest-temperature-recorded-in-the-country-38-c-1783882877"></link>
            <id>https://jvpnews.com/article/highest-temperature-recorded-in-the-country-38-c-1783882877</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, பொத்துவிலில் 38.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. </p><p>இந்த வெப்பநிலை, அப்பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி வானிலை கண்காணிப்பு நிலையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bf6390-d40d-4429-b742-1b7ec475bc04/26-6a53e47ea00b0.webp' /></p><p>இதேவேளை, இன்றைய தினத்தில் நாட்டின் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பொலன்னறுவை பகுதியில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><p>

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள வானிலை கண்காணிப்பு நிலையங்களில் இன்று மதிய வேளையில் பதிவான உச்ச வெப்பநிலைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்ப்பதுடன், போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல்நலத்தைப் பேணுமாறும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டப்பகலில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை ; தலைமறைவான கும்பலை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-hacked-death-mysterious-gang-broad-daylight-1783881261"></link>
            <id>https://jvpnews.com/article/youth-hacked-death-mysterious-gang-broad-daylight-1783881261</id>
            <summary type="text">இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32) என்பவர் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை திடீரென வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

அதனைத் தொடர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்துக் கொண்டு ஆவுடையப்பனை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d63651ce-7426-4564-8c09-ca4348e254c2/26-6a53de2ecd86c.webp' /></p><p>இந்த தாக்குதலில் அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
</p><p>
கொலைச் சம்பவத்தை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், நெல்லை டவுன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை ஆரம்பித்தனர். </p><p>முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஆவுடையப்பனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>எனினும், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவரது குடும்பத்தினரும் உறவினர்களும், உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனால் சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:34:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268"></link>
            <id>https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.</p><p> </p><p></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62da2927-eb59-4a40-94c3-e9333ad5e8c2/26-6a53ce9561db0.webp' /></p><p>கட்டாரின் முன்னாள் மன்னராக இருந்த ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி தமது 74 வது வயதில் காலமானார். </p><p>

இந்நிலையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்.</p><p> 

அவரது தொலைநோக்குத் தலைமையும், கட்டார் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும். </p><p>

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அரச குடும்பத்தினருக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவி துஸ்பிரயோகம், மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் ; இறுதியில் தந்தைக்கு கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575</id>
            <summary type="text">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
</p><p style="text-align: justify; ">
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ce6d1-602b-482b-ba6f-1010d5466a7c/26-6a5391487be31.webp' /></p><h2 style="text-align: justify; ">கொடூரக்கொலை&nbsp;</h2><p style="text-align: justify; ">இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "> தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க&nbsp; திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்&nbsp; சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
 மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T17:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மூன்றாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783874176"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783874176</id>
            <summary type="text">உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையின்படி, இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையின்படி, இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. </p><p>நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca4b710-5232-4bbb-9855-68207d1054f0/26-6a53c28177d7f.webp' /></p><p>Numbeo நிறுவனம் பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது. ஒரு நாட்டின் போக்குவரத்து நிலையை மதிப்பிட பின்வரும் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>

நேர செலவீட்டு குறியீடு (Time Expenditure Index): ஒரு வழிப் பயணம் 25 நிமிடங்களுக்கு மேல் செல்லும்போது பயணிகளுக்கு ஏற்படும் அதிருப்தி மற்றும் சோர்வை இது கணக்கிடுகிறது.
</p><p>
திறமையின்மை குறியீடு (Inefficiency Index): பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு குறைவு மற்றும் தனிப்பட்ட வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை இது காட்டுகிறது.
</p><p>
CO2 வெளியேற்ற குறியீடு (CO2 Emission Index): தினசரி பயணத்தின் போது ஒரு பயணி வெளியிடும் காபனீரொட்சைட்டு அளவு இதன் மூலம் மதிப்பிடப்படுகிறது.
</p><p>
இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T16:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களுக்கு கை மற்றும் கால்களை மூடும் விதத்திலான ஆடைகளுக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-are-allowed-wear-clothes-cover-arms-1783872434"></link>
            <id>https://jvpnews.com/article/students-are-allowed-wear-clothes-cover-arms-1783872434</id>
            <summary type="text">நாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/727e658b-bb73-42c0-bd9b-08375b3526cc/26-6a53bbb46095f.webp' /></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது பாடசாலை மாணவர்களிடையே டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தத் தீர்மானம் தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தேவையான விளக்கங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை மற்றும் மேலதிக வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன், மாணவர்கள் தரநிலைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், பாடசாலை வளாகங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T16:07:24+00:00</updated>
        </entry>
    </feed>
