<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-20T09:45:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3abbf0-9c87-461b-92bb-f39ff9bb2a74/26-6a5ded3bc8e17.webp' /></p><p>
</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியை தாக்கிய அர்ஜென்டினா ; மைதானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82d0c00-d3f5-4eea-bbd9-1006648c151a/26-6a5dce2f911a6.webp' /></p><p></p><h2>மைதானத்தில் பரபரப்பு</h2><p> </p><p>

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர். </p><p>

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.</p><p></p><p> </p><p>

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார். 

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார். </p><p>

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Argentina players even fighting after the game, can’t believe people supported this Nazi, racist and THUGGERY team. So embarrassing <a href="https://t.co/DnxaHGR9iX">pic.twitter.com/DnxaHGR9iX</a></p>&mdash; Chiesa🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 (@Hazariio) <a href="https://x.com/Hazariio/status/2078965246216020295?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இதனையடுத்து நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T09:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி கொடுத்தாலும் வேண்டாம்; சமூகவலைத்தளங்களை வெறுக்கும் பிரபல நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் என அவர் கூறியுள்ளமை ரசிகர்களுக்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd22f7e-d6fc-41e6-ad7e-87713c7226c0/26-6a5de49a09712.webp' /></p><p> "என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது.

யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்.</p><p> இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது" எனவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக டெல்லி தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-least-expensive-city-in-the-world-for-dating-1784535761"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-least-expensive-city-in-the-world-for-dating-1784535761</id>
            <summary type="text">&amp;nbsp; உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Deutsche Bank மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Deutsche Bank மேற்கொண்ட ஆய்வின்படி, டெல்லியில் ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.9,920 (இந்திய மதிப்பில்) மட்டுமே செலவாகிறது.
</p><p>
 அதேவேளை , உலகின் மிக அதிக செலவுடைய நகரமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.45,750 வரை செலவிட வேண்டியிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5596bacd-77cf-43ae-81ce-cfbd85edf947/26-6a5ddad388e98.webp' /></p><p>

இந்த ஆய்வு, உலகின் பல்வேறு நகரங்களில் உணவு, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட டேட்டிங் தொடர்பான செலவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T08:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிரதம் மோதி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-killed-after-being-hit-by-a-train-colombo-1784535102"></link>
            <id>https://jvpnews.com/article/person-killed-after-being-hit-by-a-train-colombo-1784535102</id>
            <summary type="text">கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அளுத்கமவிலிருந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2253f56-b343-4a56-9a20-9ce0fe3812b1/26-6a5dd840463e4.webp' /></p><p>

உயிரிழந்தவர் பிலியந்தலவைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T08:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945"></link>
            <id>https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் &#039;குங்பூ ருவான்&#039; என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d3ee84-867d-4f02-9045-b6881bc698de/26-6a5dacab3d4da.webp' /></p><h2>வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், 

நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p></p><p> </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'குங்பூ ருவான்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.</p><p></p><p> 

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T07:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடகு வைக்கப்படும் பெருமளவு தங்க நகைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/quantities-of-gold-jewelry-being-pledged-sri-lanka-1784531356"></link>
            <id>https://jvpnews.com/article/quantities-of-gold-jewelry-being-pledged-sri-lanka-1784531356</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டு மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் 351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டு மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் 351.45 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். </p><p>


இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்றும் பேராசிரியர் வசந்த அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a634cdf5-77de-4cb7-b487-666a46f52235/26-6a5dc99db09a8.webp' /></p><p>
</p><p>


2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.</p><p>

 

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p></p><p>



அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.



 நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T07:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-companies-for-non-payment-of-taxes-1784530116"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-companies-for-non-payment-of-taxes-1784530116</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இது தொடர்பான தகவலை, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da6b402-b214-4d7b-9e5b-9a757edf0a7e/26-6a5dc4c65d2c8.webp' /></p><p>
</p><p>


வரி நிலுவையை வசூலிக்கும் நோக்கில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T06:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dmk-mla-death-threat-to-chief-minister-vijay-1784529549"></link>
            <id>https://jvpnews.com/article/dmk-mla-death-threat-to-chief-minister-vijay-1784529549</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p> 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததுடன், அவர் மீது கடுமையான மிரட்டல் தொனியில் பேசி இருந்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40c630f-4a3c-41ff-8af0-1c3e7a7372df/26-6a5dc28e64171.webp' /></p><h2>பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனம்</h2><p>அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியது.
 
இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ-வை கைது செய்தனர்.</p><p></p><p> </p><p>

எம்எல்ஏ-வை கைது செய்ததை அடுத்து கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. </p><p>

பின்னர், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p></p><p> </p><p> 

திமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வரையே மிரட்டும் வகையில் பேசியதும், அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T06:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நஷ்டஈடு கொடுக்கச் சென்றவர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-murdered-ahangama-pay-compensation-1784528442"></link>
            <id>https://jvpnews.com/article/man-murdered-ahangama-pay-compensation-1784528442</id>
            <summary type="text">&amp;nbsp;காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f44ecf5-0309-49f7-a264-1d24826709a7/26-6a5dbe4652402.webp' /></p><p>

 அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, நஷ்டஈடு வழங்கச் சென்றவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.</p><p> 

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T06:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை இறுக்கும் இந்தியா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-rule-1784527664"></link>
            <id>https://jvpnews.com/article/india-tightens-sri-lanka-tax-treaty-rule-1784527664</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. </p><p>

இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று ( 19) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aea6e7c-8ffd-45c3-8ec6-a4fd57cff4f3/26-6a5dbb3253337.webp' /></p><h2>&nbsp;நேற்று ( 19) முதல் நடைமுறைக்கு...</h2><p> </p><p>

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய முதலீட்டு கட்டமைப்புகளை வரி அதிகாரிகள் இனி வித்தியாசமாக மதிப்பீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

முக்கியமாக, வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே சில கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து, அத்தகைய வரி ஏய்ப்பைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க இந்திய நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஈட்டப்படும் வருமானத்திற்கே இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த புதிய PPT விதிமுறையின் கீழ், வெறும் சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதாக கருதப்படமாட்டாது. 

நிறுவனங்கள், தாங்கள் அமைத்துள்ள ஹோல்டிங் கம்பெனிகள் அல்லது விசேட நோக்கத்திற்குரிய வாகனங்கள் (SPVs) உண்மையான வணிகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும்.</p><p></p><p> 

வரிச் சலுகையைப் பெறுவது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தால், ஒப்பந்தத்தின் பலன்களை மறுக்க வரி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. </p><p>

எனவே, முதலீட்டாளர்கள் இனி தங்கள் குறுக்கு-எல்லை ஏற்பாடுகளுக்குத் தெளிவான வணிகக் காரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இது நிறுவனங்களுக்கு தங்கள் வரி மற்றும் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் அளிக்கிறது</p><p>இந்தியா மற்றும் இலங்கை இடையே செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்கள் வணிகத்தின் உண்மையான நோக்கத்திற்கான ஆவணங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும்.</p><p></p><p> </p><p>

அதன்படி வரிக் கணக்குத் திட்டமிடலுக்கு மேலும் தெளிவைத் தரும் வகையில், 'முக்கிய நோக்கம்' என்பதை நிரூபிப்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் குறித்த மத்திய நேரடி வரிகள் அதிகார சபையின் வழிகாட்டுதல்களைக் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T06:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைக்கு உட்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528"></link>
            <id>https://jvpnews.com/article/public-transport-vehicles-undergoing-inspection-1784526528</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cad345-4e98-402f-8fc6-e41ecd719273/26-6a5db6c1d6e2e.webp' /></p><p>
</p><p>
நாட்டில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளே முக்கிய காரணங்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p>

இந்த நிலை சோதனைப் பணிகளை மேற்கொள்வதற்குத் தகுதியான தொழில்நுட்ப அதிகாரிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கான தொடர்புடைய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணி ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T05:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 76,000 ஐ கடந்த எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் <a href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553" target="_blank">டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை </a>76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f7efda-4b39-446d-9f2d-ad5aa931e1d4/26-6a5db21be3245.webp' /></p><p> </p><p>

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>

அதேவேளை 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிட்டு போன வெற்றி ; கதறி அழுத லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், நடப்புச் செம்பியனான ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbc1d65-3f65-4eee-a08c-c5f4830e6c12/26-6a5da94c26db7.webp' /></p><p>
</p><p>


தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தநிலையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர், நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி" என்று உருக்கமாகத் பதிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T04:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு; ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; கலங்கும் முன்னாள் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627"></link>
            <id>https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டார்.
</p><p>


உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2064925a-8ab6-4c22-bd81-a696e347b68a/26-6a5da784c8c37.webp' /></p><p>
</p><p>


 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். </p><p>மிகவும் நேர்மையான, வெளிப்படையான, நல்ல குணத்துடன் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டவர்.



பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான நிலைப்பாட்டு மோதல்களால் பொலிஸ் மா அதிபருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் செயற்பட்டார்.</p><p></p><p> </p><p>ஆர்ப்பாட்டக்காலத்திலும் கூட மிக அமைதியாகவே செயற்பட்டார்.



இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் அவரும் எனது நண்பரொருவரும் சந்தித்தோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்பட சிறிது நேரத்துக்கு முன்பு, “சேர் உங்களின் வீட்டுக்கும் வர வேண்டும் என்றுகூட தெரிவித்தார்.&nbsp;</p><p>அரசியலுக்கு அப்பால் சமய, தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தோம். அவ்வாறிருக்கையில், அவரின் இறப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>



இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கூற முடியாது. விசாரணைகளினூடாகவே புரியும். அதனால், இதுபோன்று பெறுமதிமிக்க அதிகாரிகளை பொலிஸ் மட்டுமல்ல ஏனைய சேவைப்பிரிவுகளுக்கும் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரம் அவர். இவரை போன்றவர்கள் நாட்டுக்கு அவசியமானவர்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T04:42:12+00:00</updated>
        </entry>
    </feed>
