<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-29T06:51:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T06:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-caught-in-police-encirclement-with-drugs-1785306388"></link>
            <id>https://jvpnews.com/article/woman-caught-in-police-encirclement-with-drugs-1785306388</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>முல்லேரியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43758d0b-82fc-4b97-9fc0-4cac9a0d02c2/26-6a699d1697b93.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T06:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலை பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-security-officer-attacked-jaffna-hospital-1785304843"></link>
            <id>https://jvpnews.com/article/female-security-officer-attacked-jaffna-hospital-1785304843</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
</p><p>

போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை யுவதியொருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் , குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19727685-336a-4a9e-8310-3b3ccbab1801/26-6a69970d49d21.webp' /></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
 அந்த யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் , 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர். </p><p>

இதன் போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் , யுவதியின் தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார். 

 யுவதியின் உறவினர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தருடன் முரண்பட்டு , அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>அதற்கு பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு உத்தியோகஸ்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர் அவரை தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். </p><p>

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T05:58:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப தகராறில் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-in-a-family-dispute-1785304046"></link>
            <id>https://jvpnews.com/article/murder-in-a-family-dispute-1785304046</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று (28) இரவு இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று (28) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.</p><p>

 

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b805e3a-8aae-4abc-8f2b-07abf6c58d27/26-6a6993f016dcd.webp' /></p><p>
</p><p>
 காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T05:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்கள்; அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jellyfish-at-panadura-beach-urgent-warning-1785302457"></link>
            <id>https://jvpnews.com/article/jellyfish-at-panadura-beach-urgent-warning-1785302457</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia - blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798#google_vignette" target="_blank"> &nbsp;பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன்</a> (Physalia - blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce14900e-14d6-41d2-90fc-f89322149b5a/26-6a698dbabf64d.webp' /></p><h2>அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வை</h2><p>
</p><p>
கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p><p>

நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.</p><p></p><p>
</p><p>
பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T05:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் மற்றுமொரு சோகம்; பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710"></link>
            <id>https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710</id>
            <summary type="text">&amp;nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&amp;nbsp;&amp;nbsp;


திருமதி செல்வம், சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&nbsp;&nbsp;</p><p>


திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ab9fb7-8410-418d-a688-3fdcd18ab786/26-6a698acfc60c2.webp' /></p><p> </p><p> 

முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

மேலும், சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களை இயக்கியுள்ளார்.</p><p></p><p> இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.


அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும், சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T05:06:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constable-commits-suicide-by-shooting-himself-1785300994"></link>
            <id>https://jvpnews.com/article/constable-commits-suicide-by-shooting-himself-1785300994</id>
            <summary type="text">&amp;nbsp; பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 உயிரிழந்தவர் பேராதனைப் பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 உயிரிழந்தவர் பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6784473-1d70-487f-8b6b-00119a1add5a/26-6a6988040db33.webp' /></p><p>
</p><p>
 

இன்று (29) அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து இவர் தனது T-56 ரகத் துப்பாக்கியால் இவ்வாறு சுட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T04:54:39+00:00</updated>
        </entry>
    </feed>
