<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-30T11:10:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T10:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த மனித தலை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062"></link>
            <id>https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062</id>
            <summary type="text">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; ">


உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட தலை, தச்சர் பட்டறை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/685ac326-02c2-47f0-80c5-be7d93f5c0de/26-6a94072f7d305.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 8 மணியளவில் குறித்த தச்சர் பட்டறையின் உரிமையாளர் இத் தலையைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனைத் தொடர்ந்து மொரட்டுமுல்லை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.

</p><p style="text-align: justify; ">
மீட்கப்பட்ட மனித தலை பெரிதும் அழுகிய நிலையில் மிருகங்களால் கடிக்கப்பட்டவாறு காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T10:34:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8687c614-329e-4347-918e-33b0b15cd391/26-6a93d15b86352.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் படை</h2><p style="text-align: justify; "><br></p><p>
</p><p style="text-align: justify; "> 
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. </p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.</p><p style="text-align: justify; "> உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "> மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிக்கான நீள் பயணம் ; உறவுகளுக்கான உணர்வுபூர்வ பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (30) நடைபெற்றது.
</p><p style="text-align: justify; ">
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4b2736-7362-4c23-a3b1-4ff38a818ba2/26-6a93f916815e7.webp' /></p><h2 style="text-align: justify; ">பேரணி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
</p><p style="text-align: justify; ">
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
</p><p style="text-align: justify; ">
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054"></link>
            <id>https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054</id>
            <summary type="text">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழமை (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/584a9c33-aa43-4c97-9e7a-fc4cd95f1953/26-6a93f3a01e12f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

இதன்போது, இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

குறிப்பாக, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சுகாதாரமான சேவைகளை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify; "> பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T09:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோரின் கவனத்திற்கு ; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-returnees-urged-to-stay-alert-1788078778"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-returnees-urged-to-stay-alert-1788078778</id>
            <summary type="text">&amp;nbsp;நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5151811-c8f1-4213-b869-87b3a54afd3f/26-6a93eabbc118e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று விசேட தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T08:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரதேச சபை அனுமதியின்றி பௌத்த மத்திய நிலைய கட்டுமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unauthorized-buddhist-center-construction-1788077322"></link>
            <id>https://jvpnews.com/article/unauthorized-buddhist-center-construction-1788077322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சுமார் 4 பரப்பு விஸ்தீரணமுடைய கந்தரோடை விகாரைக் காணியில், குறித்த பௌத்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8305df0-4017-4877-961e-b49edc444420/26-6a93e5c95ff6c.webp' /></p><h2>&nbsp;கட்டுமானப் பணி</h2><p>

அப்போது, பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி, கட்டுமானத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், தற்போது மீண்டும் குறித்த கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளியிலிருந்து கட்டுமானப் பணிகள் தென்படாத வகையில் உயரமான மறைப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சாதாரண பொதுமக்களின் கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இந்தக் கட்டுமானம் தொடர்பில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.</p><p></p><p>

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது, கட்டுமானத்தை நிறுத்துமாறு ஏற்கனவே சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
</p><p>
எனினும், தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால், இது தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்</p><p></p><p>.

உள்ளூர் ஆட்சி சட்டங்களுக்கு அமைவாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கட்டுமானத்துக்கான அனுமதியைப் பெறாமல் பணிகள் தொடருமானால், நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T08:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவனுக்கு அதிகாலையில் அரங்கேறிய கொடூரம் ; இளம் பெண்களுடன் பேசியதால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-incident-involving-student-at-dawn-1788074967"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-incident-involving-student-at-dawn-1788074967</id>
            <summary type="text">எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

முதற்கட்ட விசாரணைகளின்படி, சனிக்கிமை (29) மாலை ஆரப்பொலை பாடசாலைச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் இரு இளம் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு நபர் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d38016-6840-480b-9105-9057112434ea/26-6a93dbd911e1f.webp' /></p><h2 style="text-align: justify; ">சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகும் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று அதிகாலை மாணவனின் வீட்டிற்குச் சென்று, அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
படுகாயமடைந்த மாணவன் எஹலியகொட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T07:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; 700ஐ கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdd3df4-d62e-425f-939b-da0bc59ca77d/26-6a93d74a609cc.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;நிரம்பி வழியும்&nbsp;பிரேத அறைகள்</h2><p> </p><p style="text-align: justify;">

நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. </p><p style="text-align: justify;">

மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1fd3d9-8b67-4b90-abb3-32b33e77517c/26-6a93d74b1df78.webp' /></p><p> </p><p style="text-align: justify;">&nbsp;பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. 

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. </p><p style="text-align: justify;">இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. 

எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. </p><p style="text-align: justify;">

இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன.</p><p style="text-align: justify;">அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-30T07:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலர் பறிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4591a306-37d6-454c-97a2-5040b3d62caf/26-6a93ccd8c15ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T06:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்த நிவாரண சேவைகளுக்காக நேபாளம் செல்லும் இலங்கை பாதுகாப்புப் படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679"></link>
            <id>https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679</id>
            <summary type="text">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f2f919-8b49-49a4-9f95-246e8568a769/26-6a93c730a303e.webp' /></p><h2 style="text-align: justify; ">நிவாரணப் பணி</h2><p style="text-align: justify; "> 

அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

நேபாளத்தில் நடந்த சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">அத்துடன், அரசாங்கம் என்ற வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி ரீதியாக நிவாரணமாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழுக்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையம் என்பன உள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

இன்னமும் திட்டமிடப்பட்டு வருகிறதே தவிர, அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. </p><p style="text-align: justify; ">

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.</p>]]></content>
            <updated>2026-08-30T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயரதிகாரியின் மீது தாக்குதல் ; சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280</id>
            <summary type="text">கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், சனிக்கிழமை (29) இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db17ef1b-269f-4722-b030-cc911296d0a3/26-6a93c1b982630.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தாக்குதல் நடத்தல் ஆகிய சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கேகாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544</id>
            <summary type="text">கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தக் கொலை தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ce3899-57b9-47f3-898c-84ea91050ab2/26-6a93beda21c96.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> 

இதன்போது, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடைய கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் காதை வெட்டிய சக கைதி ; களுத்துறை சிறைச்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655"></link>
            <id>https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c289e6-8bc6-42d3-92b9-b7b8841cdd32/26-6a93bb60cc038.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அறுவை சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

</p><p style="text-align: justify; ">அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:04+00:00</updated>
        </entry>
    </feed>
