<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-16T05:32:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்குள் சுற்றித் திரியும் மிகவும் ஆபத்தான நபர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-persons-roaming-the-country-1786856408"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-persons-roaming-the-country-1786856408</id>
            <summary type="text">2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p> சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை இதனை அறிவித்துள்ளது.</p><p>இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf940c0e-397a-4536-a746-5dad797beff4/26-6a8143d9c396c.webp' /></p><p>கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786855849"></link>
            <id>https://jvpnews.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786855849</id>
            <summary type="text">மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 

நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.</p><p>அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673cffa5-fe75-423a-be97-d5b7079f5a90/26-6a8141aacea2f.webp' /></p><p>
</p><p>
 

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் பாதிப்பு! அவசரமாக களமிறங்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786856075"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786856075</id>
            <summary type="text">இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அதன்படி எதிர்காலத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பேணுவதற்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாய அமைச்சு குறித்த திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>
இதற்காக ஒரு சாகுபடித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5e82a3-8fdc-4a2a-81e2-dfd4f75f96af/26-6a81428ceeb3e.webp' /></p><p>

நீரைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்து விவசாயிகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேவேளை இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம் ; சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/judicial-reforms-necessary-before-death-penalty-1786840166"></link>
            <id>https://jvpnews.com/article/judicial-reforms-necessary-before-death-penalty-1786840166</id>
            <summary type="text">இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மத்தியில், மரண தண்டனை பற்றிய விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ள நிலைமையைக் சுட்டிக்காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தவறான சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்த முடியும் என்றும், ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed5858bc-7dd8-4786-bae6-b1312beb1896/26-6a8104674da3d.webp' /></p><p>முன்னைய வழக்கு ஒன்றில், மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தனது அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
எனவே, மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர் பின்வரும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார், கைதுகள் மற்றும் சோதனைகளின் போது காவல்துறையினருக்கு உடல் கெமராக்களை (Body-worn cameras) கட்டாயமாக்குதல்.
</p><p>
வழக்கு விசாரணைகளில் கண்ணுற்ற சாட்சிகளை மட்டும் நம்பியிருக்காமல் மரபணு (DNA), கைரேகை மற்றும் சடப்பொருட்களின் அறிவியல் சான்றுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.</p><p>

வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்குத் தகுதியான இலவசச் சட்ட உதவிகளை அரசாங்கம் உறுதி செய்தல்.

போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்களை சோடித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வது.
</p><p>
விசாரணைக் குறைபாடுகள், சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் அல்லது நீதித்துறை தவறுகள் காரணமாக ஒரு அப்பாவி தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் அளவுக்குக் குற்றவியல் நீதித்துறை நம்பகமானதாக உள்ளதா என்பதை ஆராய்வதே தற்போதைய பிரதான தேவையாகும் என்றும், ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானத்தால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ; ரூ.81 பில்லியன் கூடுதல் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/liquor-causing-huge-losses-country-loss-81-billion-1786839491"></link>
            <id>https://jvpnews.com/article/liquor-causing-huge-losses-country-loss-81-billion-1786839491</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 335 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக மது மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 335 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது அதே ஆண்டில் மதுபான வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட மிக அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மதுபான வரியாக 254 பில்லியன் ரூபா மட்டுமே அரசாங்கத்தினால் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169b1cca-31bd-4302-99ff-f94b0d264683/26-6a8101c52a6a0.webp' /></p><p>இதற்கமைய, வரியாகக் கிடைத்த வருமானத்தை விட மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான செலவு 81 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் காணப்படுகின்றது.</p><p>

இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் - குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் ; உங்க ராசி இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-guru-inaippu-athirstam-perum-rasi-1786838669"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-guru-inaippu-athirstam-perum-rasi-1786838669</id>
            <summary type="text">நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருபகவான் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருபகவான் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbaba3e4-78f2-43a3-a88c-76df9ef35f0e/26-6a80fe905326f.webp' /></p><p>ஆகஸ்ட் 15 அன்று, புதனும்-குருபகவானும் இணைந்து சக்திவாய்ந்த கிரக சேர்க்கையை உருவாக்குகின்றன. இரண்டு சுப கிரகங்களின் இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் உறவுகளில் நேர்மறையான முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa50d7ec-b9e1-434d-b067-95ad7696e9f0/26-6a80fe9102b5c.webp' />&nbsp;</p><h4>ரிஷபம்</h4><p>
புதன் மற்றும் குருபகவானின் சேர்க்கையானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும். இக்காலகட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வருமான உயர்வு போன்ற நன்மைகளை அடையலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உணர்வதுடன், சமூகத்தில் பிறரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். அவர்களின் நீண்ட கால ஆசைகளில் சில இப்போது நிறைவேறலாம். </p><p>இது முதலீட்டுக்கு சிறந்த காலமாக இருக்கும்.

அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். புதன்-குருபகவானின் இணைப்பு மாற்றம் இவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியையும், முன்னேற்றத்தையும் தரப்போகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb5d17d-796b-4a7d-b70c-a1490ad7df63/26-6a80fe91a44e7.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன்-குரு சேர்க்கையானது, அற்புதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், புதிய பொறுப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகள் உருவாகலாம், மேலும் சமூகத்தில் அந்தஸ்தும், அங்கீகாரமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். குருபகவானின் தாக்கம் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கும்.</p><p>அவர்கள் வியாபாரத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் உருவாகும். வணிகர்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்த சிறந்த நேரமாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a688d5dd-8e36-4b21-b63d-6cf509316a80/26-6a80fe92563b5.webp' /></p><p>
</p><h4>மகரம்
</h4><p>இந்தக் கிரகச் சேர்க்கையின் விளைவாக, மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைச் சந்திக்கலாம். இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p>குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8033a5d1-fffe-4760-9c45-175492ba4ff6/26-6a80fe9305ad1.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T00:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை ; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509</id>
            <summary type="text">யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>26 வயதான குறித்த யுவதி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அதே பீடத்தில் கல்வி கற்ற இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதையடுத்து, பிரான்ஸில் தொழில் புரிந்து வந்த 35 வயது இளைஞருடன் கடந்த மாத தொடக்கத்தில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcd20f0-938e-4b28-966b-1bdf675cca8e/26-6a80ea6720ec4.webp' /></p><p> திருமணத்துக்குப் பின்னர் கணவன் யாழ்ப்பாணத்தில் மனைவியுடன் தங்கியிருந்ததாகவும், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த புதுமணப் பெண் யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் தனது பழைய காதலனுடன் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. </p><p>பொலிஸார் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தான் காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, திருமணத்துக்காக வழங்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> திருமணச் செலவுகள் மற்றும் நகைகள் தொடர்பாக கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:45:01+00:00</updated>
        </entry>
    </feed>
