<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-17T16:28:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப் பரிமாற்றம் தொடர்பில் இறைவரித் திணைக்களம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-workers-need-not-fear-taxes-1786982815"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-workers-need-not-fear-taxes-1786982815</id>
            <summary type="text">வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய இதனைத் தெரிவித்தார். </p><p>

இலங்கையின் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பிடவாசியாகக் (resident) கருதப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளிலிருந்து ஈட்டும் வருமானமும் இலங்கையிலிருந்து ஈட்டும் வருமானமும் வரிக்கு உட்படும் என அவர் கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7afd5d-3052-4458-a098-7721dca32d91/26-6a8331a1424ad.webp' /></p><p>இருப்பினும், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு ஒருவர் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

இதன்படி, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி தொடர்பில் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என ஹிரான் மெனேரிபிட்டிய வலியுறுத்தினார். </p><p>

வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும்போது, வங்கி அமைப்பின் ஊடாக அப்பணத்திற்காக தனியாக எந்தவொரு வரியும் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 

மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களால் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் நாட்டிற்கு அனுப்பி, அதைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

"வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வரிக்கு உட்படுவது, அவர்கள் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இருந்தால் மட்டுமே. அவ்வாறாயின், அவர்கள் வெளிநாட்டிலும் இலங்கையிலும் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்படும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a0e2902-d20b-4125-9326-d7d5f2cd90e7/26-6a8331a1e6a3d.webp' /></p><p>ஆனால், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு அந்த வெளிநாட்டு ஊழியர் இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது. </p><p>எனவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி குறித்து பயப்படத் தேவையில்லை.</p><p> பணத்தை அனுப்பும்போது வங்கி அமைப்பின் மூலம் அதற்காக எந்த வரியும் அறவிடப்படுவதில்லை. </p><p>அதேபோல், அவர்கள் வெளிநாட்டில் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், அது சட்டப்பூர்வமான வருமானம் என்பதை உரிய நிறுவனங்களுக்குத் தெரிவித்து அதை முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. </p><p>இதனால் வரி குறித்து அச்சமடைந்து சட்டவிரோதமான வழிகளில் பணத்தை அனுப்புவது இதற்குத் தீர்வாகாது" எனக் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரி வசூலில் புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-record-in-sri-lanka-govt-tax-collection-1786971650"></link>
            <id>https://jvpnews.com/article/new-record-in-sri-lanka-govt-tax-collection-1786971650</id>
            <summary type="text">&amp;nbsp; 2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் இதுவரை 61 சதவீதம் வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் இதுவரை 61 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.</p><p>



கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வரி வருவாய் வசூல் சுமார் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d5d24a-5b4d-4812-a2f3-0b64fd841dd9/26-6a83060467b2e.webp' /></p><p>
</p><p>


இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான முழுமையான வரி வருவாய் இலக்கை எட்ட முடியும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>


மேலும், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இதுவரை சுமார் 12 இலட்சம் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


அத்துடன், 1,30,000க்கும் அதிகமான நிறுவனங்கள் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attack-court-order-defense-witnesses-1786970619"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attack-court-order-defense-witnesses-1786970619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a59490-3860-4bb1-9559-64c895ed0cb5/26-6a8301fc8758c.webp' /></p><h2>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவு</h2><p>
</p><p>
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.</p><p></p><p>

அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
</p><p>
 ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது. ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரசத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாக உள்ளனர்</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-08-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-scam-targets-savings-fixed-deposits-slcert-1786971189"></link>
            <id>https://jvpnews.com/article/new-scam-targets-savings-fixed-deposits-slcert-1786971189</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தை மோசடியாகப் பெறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தை மோசடியாகப் பெறும் புதிய நிதி மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>&nbsp;மோசடிக்காரர்கள் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக&nbsp; பொதுமக்களை தொடர்புகொண்டு, வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db605f7-984b-460f-8072-22981e514400/26-6a8304375e698.webp' /></p><h2>விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்தல்</h2><p>
</p><p>


பின்னர், அந்தப் பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளதாக பொய்யான தகவலைத் தெரிவித்து, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்துகின்றனர்.</p><p>&nbsp;தொடர்ந்து, மத்திய வங்கியின் பெயர் மற்றும் இலச்சினையைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளுடன் போலியான கடிதங்களை அனுப்பி, குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த கணக்கு பொலிஸ் அதிகாரியொருவருக்குச் சொந்தமானது எனக் கூறி, ஆரம்பத்தில் வைப்புத் தொகையின் ஒரு பகுதியை மாற்றுமாறும், பின்னர் பணம் செலுத்தியதற்கான வங்கி பற்றுச்சீட்டை அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


மேலும், பொலிஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடியை உண்மையான அதிகாரிகளின் நடவடிக்கை போன்று காண்பிக்க முயற்சிப்பதாகவும் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நிதித் தகவல்கள் அல்லது பணப் பரிமாற்றங்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும்; நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920"></link>
            <id>https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ச இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d6a7d1-4333-4ea1-ba10-7118e17608cf/26-6a82ff421cc34.webp' /></p><h2>அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்பு&nbsp; வழங்குவது </h2><p>



நாட்டில் தற்போது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்புகளை வழங்குவது போன்று செயற்படுவதாகவும், நீதிமன்ற நீதிபதிகள் அல்லாமல் அரசியல்வாதிகள் நீதித்துறை தொடர்பான விடயங்களில் தலையிடுவதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதன் மூலம் நீதித்துறைக்கு அரசாங்கம் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கங்களும் சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த நாமல், இதன் காரணமாகவே சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.



“நாங்கள் நீதிமன்றத்தையே நம்புகிறோம்” எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; அதேவேளை நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்குத் தனது கட்சி பாடுபடும் என்று முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரையும், ஏனைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் சிறையில் அடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் கூறிய அவர், நாட்டின் ஒரே நம்பிக்கைக்குரிய நிறுவனமான நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கவும் ஆட்சியாளர்கள் முற்படுவதாகக் குற்றம் சாட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-17T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் மோசடி; நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479"></link>
            <id>https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நான்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, <a href="https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058" target="_blank">நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் </a>நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

 கைதான சந்தேக நபர்காள் நால்வரும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876469ad-348d-414f-aacb-21d724870fb7/26-6a8309415ec7d.webp' /></p><p> 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயினாதீவு படகு விபத்து; விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainativu-boat-accident-inquiry-begins-1786973203"></link>
            <id>https://jvpnews.com/article/nainativu-boat-accident-inquiry-begins-1786973203</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறியரகப் படகொன்று, நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறியரகப் படகொன்று, நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> எனினும், குறித்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47a7e68-e556-47b9-a260-e1b8813ade7d/26-6a830c14cd595.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு செல்வதற்காகக் காத்திருந்த சில பிரயாணிகளை ஏற்றியவாறு குறித்த சிறியரகப் படகு மாலை 3:30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறு புறப்பட்ட படகு, மாலை 3:45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. விபத்து நேர்ந்தவேளை குறித்த படகில் 10 பயணிகள் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினரின் மற்றும் மீனவர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். </p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T13:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் இறுதியில் எல்-நினோ நிலைமை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-el-ni-o-conditions-expected-by-year-end-1786968481"></link>
            <id>https://jvpnews.com/article/strong-el-ni-o-conditions-expected-by-year-end-1786968481</id>
            <summary type="text">&amp;nbsp; இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஏற்படக்கூடிய எல்-நினோ மிகவும் வலுவானதாக அமையக்கூடும் என உலகளாவிய முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8377fbfb-95cb-46fc-b222-a9bd2810c8f9/26-6a82f9a2df2d6.webp' /></p><h2>&nbsp;படிப்படியாக வலுப்பெற்று வரும்&nbsp; எல்-நினோ நிலைமை&nbsp;&nbsp;</h2><p>



எல்-நினோ நிலைமை தற்போது படிப்படியாக வலுப்பெற்று வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் அது மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதனிடையே, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 37 சதவீத நீர் மட்டுமே இருப்பதாகவும், தற்போதைய நீர்மட்டம் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களும் விவசாயிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



அதேவேளை, நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றின் அதிகபட்ச கொள்ளளவில் இயங்கி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. </p><p>வறட்சியான காலநிலை நிலவினாலும், தற்போதைக்கு குடிநீர் விநியோகத்தில் எந்தவிதக் குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சருக்காக அவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்; அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-apologized-in-the-assembly-1786967185"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-apologized-in-the-assembly-1786967185</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விதம் அவையில் பெரும் சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விதம் அவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விலையில் முதலமைச்சர் விஜய் சபையில் பகிரங்கமாக மன்னிபு கோரியமை அரசியல் வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. </p><p>
சட்டப்பேரவையில் அவர் உரையாற்றிய போது, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை விமர்சித்து கருத்துகளை முன்வைத்துத் விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7266266e-3a84-4b11-bda9-ac89ec0399bb/26-6a82f492b786f.webp' /></p><h2>கருணாநிதியின் பெயரை விமர்சித்து கருத்து</h2><p>

மேலும், கடந்த கால தேர்தல்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை குறித்து அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்துத் தி.மு.க உறுப்பினர்களை விமர்சித்து பேசினார்.</p><p></p><p>

 அமைச்சர் பேசிய இந்த பகுதி அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பேரவைத் தலைவர் உடனடியாக அறிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவரின் பெயரை சுட்டிக்காட்டி அமைச்சர் அவ்வாறு பேசியது தவறுதான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.</p><p> 
 
மேலும், விதி 110-ன் கீழ் அறிவிப்புக்கு முன்னர் பேசிய அவர், அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பில் தான் அவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

முதல்வரின் இந்த தெளிவான மற்றும் பக்குவமான அணுகுமுறை உடனடியாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T11:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ccid-obtains-90-day-detention-orderdrug-trafficker-1786965672"></link>
            <id>https://jvpnews.com/article/ccid-obtains-90-day-detention-orderdrug-trafficker-1786965672</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>



கடந்த மார்ச் மாதம் டுபாயில் கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக் நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca5795a-5797-4e01-b7c6-36b603707b3b/26-6a82eea9c7456.webp' /></p><h2>கடந்த மார்ச் மாதம் டுபாயில் கைது&nbsp;</h2><p>
</p><p>


ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, டுபாயில் வர்த்தக வளாகமொன்றில் இருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது தொலைபேசியில் ஈரான் தொடர்பான தாக்குதல் காணொளிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>



மேலும், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை டுபாய் பொலிஸார் ஈரானுடனான தொடர்புகள் குறித்து தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இந்நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-17T11:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058"></link>
            <id>https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ffc27cb-9d7c-4083-9b6e-a3bfa56fc747/26-6a82d8bb54279.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T10:34:45+00:00</updated>
        </entry>
    </feed>
