<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-06T23:27:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; வாழ்வில் வெற்றியடையக்கூடிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500"></link>
            <id>https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சக்திவாய்ந்த பல ராஜயோகங்கள் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, 'மகாலட்சுமி ராஜயோகம்' என்பது மிகவும் மங்களகரமான கிரக அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797b282-4ec5-4519-9908-94938ed9d546/26-6a751706d738c.webp' /></p><p>இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ஆதாயம், தொழில் முன்னேற்றம், அங்கீகாரம் மற்றும் வெற்றியைத் தரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb7bd-b370-4929-8f65-63be5a0a109f/26-6a7517063562b.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, அவர்களின் சொந்த ராசியில் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இதனால் அவர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் வணிக முன்னேற்றத்தைக் கொண்டுவரும். இந்த யோகத்தால் அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd53617-d9f0-42e0-8fe1-74108cfd9177/26-6a751707862ad.webp' /></p><h3>கன்னி</h3><p>
கன்னி ராசிக்காரர்கள் இந்த சக்திவாய்ந்த கிரக அமைப்பின் மூலம் வலுவான நிதி நிலை மற்றும் புதிய வருமான வழிகளைப் பெறக்கூடும். இந்த யோகத்தால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.&nbsp;இந்த மகாலட்சுமி யோகம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் பொன்னான வாய்ப்புகளைத் தரும், மேலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d912a07c-704c-4f72-88a7-1b5765335e90/26-6a7517083558c.webp' /></p><h3>மகரம்
</h3><p>மகர ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமி ராஜயோகம் நிதி ஆதாயங்களையும் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f92e41b-eba1-44d5-92b4-1b1dd949eb41/26-6a751708dbb11.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T23:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளத்தொடர்பு சந்தேகம் ; மனைவியின் தொடர்பை அறிந்த கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409</id>
            <summary type="text">இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற தொழிலதிபர், தனது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதியான முகேஷ் யாதவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தொடர்பை மனைவியின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d62bea-8dea-4361-b870-02135383bf03/26-6a74ef9bf3c3f.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் மனைவியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, ராஜேந்திர பிரசாத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>காவல்துறை தகவல்களின்படி, அவர் மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாக கவிதா சர்மா கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில் கவிதாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ உதவியை நாடி, அதை இயற்கையான மரணம் போன்று காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, கவிதாவின் தொலைபேசி தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன.</p><p>மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், இதையடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9fc2c55-59c2-422e-94ba-9dac31d16d5d/26-6a74ef9b4e213.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் சாரதி முகேஷ் யாதவிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா–இலங்கை உறவில் மேலும் ஒரு இணைப்பு ; புதிய பால உதவி வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-sri-lanka-relations-bridge-assistance-provid-1786050316"></link>
            <id>https://jvpnews.com/article/india-sri-lanka-relations-bridge-assistance-provid-1786050316</id>
            <summary type="text">இருதரப்பு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 250 மெட்ரிக் தொன்னிற்கும் அதிக எடையைக் கொண்ட &#039;பெய்லி&#039; (Bailey) தற்காலிகப் பாலங்களின் புதிய தொக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருதரப்பு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 250 மெட்ரிக் தொன்னிற்கும் அதிக எடையைக் கொண்ட 'பெய்லி' (Bailey) தற்காலிகப் பாலங்களின் புதிய தொகுப்பினை இந்தியா இன்று (ஆகஸ்ட் 6) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.</p><p></p><p>

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய் கே, இந்த திட்டப் பொருட்களை இலங்கையின் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கையளித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c528618-8acc-440a-ab9d-9689142f2fc8/26-6a74f70d931c6.webp' /></p><p>இலங்கைக்கு இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மறுசீரமைப்பு உதவிக் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p>

இந்திய இராணுவப் பொறியாளர்களால் நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள இந்தப் பாலங்கள், நாட்டின் போக்குவரத்துப் பாதைகளைச் சீரமைப்பதுடன் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும்.

இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது உத்தியோகபூர்வ இலங்கை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
</p><p>
இந்த பயணத்தின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:05:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் எவையென தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-benefits-of-eating-pumpkin-seeds-1786046617"></link>
            <id>https://jvpnews.com/article/key-benefits-of-eating-pumpkin-seeds-1786046617</id>
            <summary type="text">ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் இ போன்ற சத்துக்களை கொண்டது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e469707a-d202-4bce-8c24-bbb547dd2a9e/26-6a74e89ae82c6.webp' /></p><p>
</p><h3>
ஆன்டி ஆக்சிடென்டுகள்
</h3><p>வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் பூசணி விதையில் அதிகம் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, செல்கள் சேதமடைவதை தடுக்க உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75567514-0faa-4de0-8a11-e4c119beb1e3/26-6a74e89b9aa8c.webp' /></p><p>
</p><h3>இதய ஆரோக்கியம்
</h3><p>பூசணி விதையில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5afc5ba0-e063-4898-a45d-70f8f32d33a1/26-6a74e89c4a912.webp' /></p><p>
</p><h3>நல்ல தூக்கம்
</h3><p>பூசணி விதைகளில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவுவதால், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59460006-a542-48f6-9aaf-bfbe0dc8b97e/26-6a74e89cef802.webp' /></p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">நோய் எதிர்ப்பு</span></h3><p>சக்தி
வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும். குறிப்பாக பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுகள் பரவும் காலங்களில் பூசணி விதையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5c57de-0de4-4590-b07c-b54df047ad6c/26-6a74e89d9eb93.webp' /></p><p>
</p><h3>
செரிமானம்
</h3><p>பூசணி விதையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffba0e98-b72e-40bc-bd98-e68f14546ecd/26-6a74e89e503a6.webp' /></p><p>
</p><h3>
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
</h3><p>சில ஆய்வுகளின்படி, பூசணி விதைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பூசணி விதையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88507850-997f-470a-854b-7db1fa0a8e53/26-6a74e89f02e45.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T20:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் ஓய்வு வயது உயர்வுக்கு UNP எதிர்ப்பு ; அரசின் சட்டத்திருத்தம் நிராகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unp-opposes-raising-the-retirement-age-of-judges-1786044127"></link>
            <id>https://jvpnews.com/article/unp-opposes-raising-the-retirement-age-of-judges-1786044127</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது இலங்கையின் நீதிமன்ற வழக்குத் தேக்கத்திற்குத் தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சிமுறை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையில் விசேட நீதிமன்றங்களை அமைத்தல், நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சட்ட நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் போன்ற பரிந்துரைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து பரிந்துரைக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4534b6f2-5eaa-4058-af0a-c6ad3d227496/26-6a74dee166dcc.webp' /></p><p>எனவே, முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T19:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலை ; STF களத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-magazine-prison-brought-under-control-1786042556"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-magazine-prison-brought-under-control-1786042556</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சுமார் 40 பேர் கொண்ட குழுவினருக்கிடையில் இந்த மோதல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414ee433-da14-47d6-b0c5-10c03b6d2e56/26-6a74d8be77e9a.webp' /></p><p>இந்தச் சம்பவத்தையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் சற்று முன்னர் திடீர் பதற்றம் ; பாதுகாப்பு படையினர் களத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845"></link>
            <id>https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845</id>
            <summary type="text">கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643d860d-46c0-4ba9-82d9-106fbefa78e2/26-6a74d20ed8910.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற நிலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளின் வசதிக்காக புதிய திட்டம் ; பேருந்துக் கட்டணத்தில் டிஜிட்டல் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371"></link>
            <id>https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371</id>
            <summary type="text">பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adf879-f0fe-4fd2-866e-cf7af12b1543/26-6a74d034bde08.webp' /></p><p>

பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைக்கவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நவீன கட்டணச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வறட்சி ; மொனராகலை மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாது வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விடயத்தை வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f736dde-4995-47b7-934e-516190035a7a/26-6a74cd9db2814.webp' /></p><p>மேலும், அந்தப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் நீர்ப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக கும்புக்கன் ஓயா (Kumbukkan Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த வறட்சி காரணமாக ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி புதைகுழியில் வெளிவரும் உண்மைகள் ; தொடரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p> மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் உத்தரவின்படி 56 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p>இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, மனித எச்சங்களுடன் சிறுவர்களின் ஆடைகளில் பயன்படுத்தப்படும் பொத்தான்கள் மற்றும் பழமையான நாணயக் குற்றி ஒன்று சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களைச் சேர்த்து இதுவரை மொத்தம் 99 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
அகழ்வாராய்ச்சியின் தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 494 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு மேலதிக நீதிமருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இந்த அகழ்வாராய்ச்சி, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியமான விசாரணையாகக் கருதப்படுவதால், அதன் முன்னேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65b9f52-9e9b-47d0-b4bc-45a7fdb12835/26-6a74c70f66af8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ecc1b1b-6d7f-4cb0-8b61-5a397be2ff29/26-6a74c710215b8.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T17:40:39+00:00</updated>
        </entry>
    </feed>
